-

Loading latest news...

தமிழ் மற்றும் மலையாளம் ஆகிய இரு மொழிகளில் உருவான ZEE5 ஒரிஜினல் சீரிஸ் ‘காக்கி சர்கஸ்’ ஏப்ரல் 10 முதல் ஸ்ட்ரீமிங்காகிறது!*

 *தமிழ் மற்றும் மலையாளம் ஆகிய இரு மொழிகளில் உருவான ZEE5 ஒரிஜினல் சீரிஸ் ‘காக்கி சர்கஸ்’ ஏப்ரல் 10 முதல் ஸ்ட்ரீமிங்காகிறது!*



*குற்றத்திற்கு எல்லைகளும் இல்லை, மொழி தடைகளும் இல்லை; அந்த உண்மையை எதிர்பாராத வகையில் உயிர்ப்பிக்கிறது ‘காக்கி சர்கஸ்’ -*


தமிழ் மற்றும் மலையாள ZEE5 இன்று தங்களது அடுத்த ஒரிஜினல் சீரிஸான ‘காக்கி சர்கஸ்’ ஐ அறிவித்துள்ளது. வித்தியாசமான நகைச்சுவை, அதிரடி, கற்பனை மற்றும் திரில்லர் அம்சங்கள் கலந்த இந்த ஏழு எபிசோடுகள் கொண்ட சீரிஸ், ஒரு சப்-ஜெயிலை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளது. தயாரிப்பு நிலையில் ஒன்ஸ் அப்பான் எ டைம் இன் காயம்குளம் ( ‘Once Upon a Time in Kayamkulam’ ) என்ற பெயரில் உருவான இந்த சீரிஸ், தற்போது ‘காக்கி சர்கஸ்’ என்ற புதிய பெயரில் பார்வையாளர்களை சந்திக்க வருகிறது. இந்த சீரிஸின் தனித்துவமான நகைச்சுவை, விசித்திரமான கதாபாத்திரங்கள் மற்றும் எதிர்பாராத திருப்பங்கள் நிரம்பிய உலகத்தை இந்த தலைப்பு அழகாக பிரதிபலிக்கிறது.


இந்த சீரிஸை அமீன் பாரிஃப் எழுதி இயக்கியுள்ளார். ரைஸ் ஈஸ்ட் என்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் சார்பில் ஸ்ரீநிதி சாகர் தயாரித்துள்ளார். மேலும், முனிஷ்காந்த், சுபாஷ் செல்வம், ராஜேஷ் மாதவன், கவுதமி நாயர், வின்சு ரேச், சவித்திரி, அம்ருதா, அப்துல் லீ, மருதுபாண்டியன், ராகேஷ் உஷார், விக்னேஷ்வர், அருண்குமார் பவும்பா மற்றும் சித்திரசேனன் உள்ளிட்ட பல திறமையான நடிகர்கள் இதில் நடித்துள்ளனர்.


தமிழ் டிரெய்லர் லிங்க் – https://www.youtube.com/watch?v=OAAEON0n5wE


அமைதியான ஒரு கடற்கரை நகரத்தில் நடைபெறும் விசித்திரமான குற்றச் சம்பவம், ஒரு சப்-ஜெயிலை முழுமையான குழப்பத்தில் ஆழ்த்துகிறது. காரணம், யாரோ ஒருவர் சிறையிலிருந்து தப்பிச் செல்லாமல், தடைகளை உடைத்து அதற்குள் நுழைகிறார் ! புத்தகங்களில் மூழ்கியிருக்கும் ஒரு ஜெயிலரும், அளவுக்கு மீறிய ஆர்வமுள்ள ஒரு கான்ஸ்டபிளும் இந்த புதிரை புரிந்துகொள்ள போராடும் நிலையில், மர்மமான திருடன் பல அடிகள் முன்னிலையில் இருந்து, தான் உருவாக்கிய இந்த குழப்பங்களை ரசித்தபடி இருக்கிறான். சாதாரண ஊர்மக்கள், தங்களைத் தாங்களே டிடெக்டிவ்களாக நினைக்கும் சிலர், தெரியாமலே இதற்குள் சிக்கிக்கொள்ளும் கைதிகள் — இவர்கள் அனைவரும் சூழ்நிலையை இன்னும் வினோதமாக மாற்ற, இந்த வழக்கு எதிர்பாராத திருப்பங்களுடன் கூடிய பரபரப்பான வேட்டையாக மாறுகிறது. இங்கே எதுவுமே எளிதல்ல, ஒவ்வொன்றும் இன்னும் பல விசித்திரமான உண்மையை மறைத்து வைத்திருக்கிறது.


இயக்குநர் அமீன் பாரிஃப் கூறுகையில்…,

“இந்த கதை என்னை மிகவும் கவர்ந்தது. ஏனெனில் இது நமக்குத் புதுமையான கதைக்களத்தில் விளையாடும் ஒரு அரிய வாய்ப்பை இது தந்தது — ஒரு பக்கம் நகைச்சுவை, ஒரு பக்கம் திரில்லர், இன்னொரு பக்கம் வித்தியாசமான கற்பனை, ஆனால் அதே சமயம் ஒரு சிறிய நகரத்தின் இயல்பான உண்மைத்தன்மையையும் இழக்காமல் கதை சொல்ல முடிந்தது. தயாரிப்பின் ஆரம்ப நிலையில் இருந்தபோதே, இந்த சீரிஸின் மையம் அதன் கதாபாத்திரங்கள்தான் என்பதை நாங்கள் உணர்ந்தோம். குழப்பத்தின் மத்தியில் அவர்கள் வெளிப்படுத்தும் விசித்திரமான, நகைச்சுவையான, மனித மனதின் இயல்பான குறைகளுடன் கூடிய உணர்வுகளே இக்கதையின் இதயம். இந்த கதையை அதன் அனைத்து தனிச்சிறப்புகளுடனும் சொல்ல ZEE5 எங்களுக்கு முழு சுதந்திரம் கொடுத்தது. நாங்கள் உருவாக்கிய இந்த ‘சர்க்கஸ்’ உலகத்தை பார்வையாளர்கள் ரசிப்பதைக் காண நான் ஆவலுடன் காத்திருக்கிறேன்.” என்றார்.


நடிகர் முனிஷ்காந்த் கூறுகையில்,

“நான் இதுவரை நடித்தவற்றில் இருந்து முற்றிலும் வேறுபட்ட அனுபவமாக இருந்தது ‘காக்கி சர்கஸ்’. இது கணிக்க முடியாத, வேகமாக நகரும், அதே நேரத்தில் நகைச்சுவையுடனும், நிஜத்தன்மையுடனும் நிறைந்த கதாபாத்திரங்களை கொண்ட ஒரு சீரிஸ். இதில் எனக்கு மிகவும் பிடித்தது — நகைச்சுவைக்கும் பதற்றத்துக்கும் இடையிலான அசாதாரண சமநிலை. ஒவ்வொரு காட்சியும் எந்த விதமாகவும் மாறிவிடும் என்ற உணர்வு இருக்கும். இது புதுமையானது, நம் மண்ணின் வாசனையுடன் கூடிய கதை, மிகவும் வேடிக்கையானதும் கூட. இப்படிப்பட்ட கதைகளுக்கு ZEE5 போன்ற தளம் கிடைப்பது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.” என்றார்.


பார்வையாளர்களுக்கு எதிர்பாராத சுவாரஸ்யங்களும், பரபரப்பும், வித்தியாசமான நகைச்சுவையும் கலந்த ஒரு விருந்தாக அமைய உள்ள ‘காக்கி சர்கஸ்’, தமிழ் மற்றும் மலையாள ZEE5 தளங்களில் ஏப்ரல் 10 முதல் ஒளிபரப்பாகவுள்ளது.


ZEE5 பற்றி:

ZEE5 என்பது பாரதத்தின் மிகப்பெரிய முன்னணி வீட்டு வீடியோ ஸ்ட்ரீமிங் தளமாகும். ZEE Entertainment Enterprises Limited (ZEEL) நிறுவனத்தின் ஒரு பகுதியாக செயல்படும் ZEE5, பல மொழிகளில் கதைகளை சொல்லும் தளமாக விளங்குகிறது. 4,071+ திரைப்படங்கள், 1,800+ டிவி நிகழ்ச்சிகள், 422+ வெப் ஒரிஜினல்ஸ், 4,492+ இசை வீடியோக்கள் மற்றும் 1.35 லட்சம் மணிநேரத்திற்கு மேற்பட்ட ஆன்-டிமாண்ட் உள்ளடக்கங்களை கொண்ட விரிவான நூலகத்தை இது வழங்குகிறது.

12 மொழிகளில் – இந்தி, தமிழ், தெலுங்கு, பெங்காலி, மலையாளம், கன்னடம், மராத்தி, ஆங்கிலம், ஒரியா, போஜ்புரி, குஜராத்தி மற்றும் பஞ்சாபி – தனிப்பயன் மற்றும் ஹைப்பர்-லோக்கல் சந்தா திட்டங்களுடன் உள்ளடக்கம் வழங்கப்படுகிறது.

உலகளாவிய டெக் கூட்டாளிகளுடன் உருவாக்கப்பட்ட வலுவான டீப்-டெக் கட்டமைப்பு, பல சாதனங்கள் மற்றும் இயக்க முறைமைகளில் தடையற்ற பார்வை அனுபவத்தை ZEE5 வழங்க உதவுகிறது.

Happy Raj movie review

 Happy Raj movie review


  Casting : GV Prakash, Sri Gouri Priya, Abbas, George Maryan, eetha Kailasam, Adhirchi Arun, Madurai Muthu, Devi Mahesh, Prarthana Nathan

Directed By : Maria Raja Elanchezian

Music By : Justin Prabhakaran Produced By : Beyond Pictures - Jaivarda தனது உருவம் மற்றவர்கள் கேலி செய்யும் விதத்தில் இருந்தாலும் தன் மகன் ஜி.வி.பிரகாஷ், அம்சமாக இருப்பதை நினைத்து மகிழ்ச்சியடையும் ஜார்ஜ் மரியன், அவரை பொத்தி பொத்தி வளர்க்கிறார். ஆனால், உருவ கேலிக்கு ஆளாகும் தன் தந்தையால் தனக்கு அவமானம் ஏற்படுவதாக கருதும், ஜி.வி.பிரகாஷ், அவரை விட்டு விலகி, தனது அடையாளத்தை மறைத்து வாழ விரும்புகிறார். வேலைக்காக பெங்களூர் செல்லும் ஜி.வி.பிரகாஷ் அங்கு நாயகி ஸ்ரீ கெளரி பிரியாவை சந்திக்கிறார். இருவருக்கும் இடையே காதல் மலர்கிறது. பணக்காரரான ஸ்ரீ கெளரி பிரியாவின் தந்தை அப்பாஸ், மகள் காதலுக்கு பச்சைக்கொடி காட்டுகிறார். திருமண ஏற்பாடுகள் தொடங்கும் போது ஜி.வி.பிரகாஷின் தந்தை ஜார்ஜ் மரியனின் எளிமையான தோற்றம் மற்றும் எதார்த்தமான செயல்களை பார்த்து கோபமடையும் அப்பாஸ், அவரை அவமானப்படுத்தும் வகையில் பேசி விடுகிறார். உருவத்தை பார்த்து ஒருவரது தகுதியை தீர்மானிக்கும் அப்பாஸுக்கு, ஜார்ஜ் மரியன் சரியான பாடம் புகட்டுகிறார். இதனால், இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டு திருமணம் நின்று விடுகிறது.  தந்தை தான் காரணம் என்று நினைக்கும் ஜி.வி.பிரகாஷ், அவரை வைத்தே தனது காதலியின் தந்தையை சமாதானப்படுத்தி நின்ற திருமணத்தை மீண்டும் நடத்த முயற்சிக்கிறார். அவரது முயற்சி வெற்றியடைந்ததா? இல்லையா ? என்பதை சிரிக்கும்படியும், சிந்திக்கும்படியும் சொல்வதே ‘ஹேப்பி ராஜ்’. ஜி.வி.பிரகாஷ், தனது சுறுசுறுப்பான நடிப்பு மூலம் படம் முழுவதும் பார்வையாளர்களை ஹேப்பி மூடில் பயணிக்க வைத்தாலும், கிளைமாக்ஸ் நெருக்கத்தில் தனது அப்பாவை நினைத்து கண்ணீர் விடும் காட்சிகளில் கண்கலங்க வைத்து விடுகிறார். நடனம், உடை, உருவம் என அனைத்திலும் வித்தியாசத்தை காட்டியிருக்கும் ஜி.வி.பிரகாஷுக்கு இதுபோன்ற கதாபாத்திரம் பழக்கப்பட்டது என்றாலும், அப்பா மீதான கோபம் மற்றும் அன்பை வெளிக்காட்டும் காட்சிகளில் உணர்வுப்பூர்வமாக நடித்து அசத்தியிருக்கிறார். நாயகியாக நடித்திருக்கும் ஸ்ரீ கெளரி பிரியாவுக்கு அதிக வேலையோ, அழுத்தமான கதாபாத்திரமோ இல்லை. நாயகனை காதலிப்பது, அவருடன் நடனம் ஆடுவது என்று தனக்கு கொடுக்கப்பட்ட வழக்கமான பணியை நிறைவாக செய்திருக்கிறார். ஜி.வி.பிரகாஷின் தந்தையாக நடித்திருக்கும் ஜார்ஜ் மரியன், நகைச்சுவை நடிகர் என்ற பிம்பத்தை உடைத்து சிறந்த குணச்சித்திர நடிகர் என்ற அடையாளத்தை பெற்றிருக்கிறார். நாயகனுக்கு இணையான மக்கள் மனதில் இடம் பிடிக்கும் அளவுக்கு பலம் வாய்ந்த கதாபாத்திரத்தில் மிக சரியாக பொருந்தியிருக்கும் ஜார்ஜ் மரியன், தனது இயல்பான உடல் மொழி மற்றும் வசன உச்சரிப்பு மூலம் பார்வையாளர்களின் இதயங்களை வென்று விடுகிறார். நாயகியின் தந்தையாக நடித்திருக்கும் அப்பாஸ், கதாபாத்திரத்திற்கு பொறுத்தமான தேர்வாக இருப்பதோடு, தனக்கு கொடுக்கப்பட்ட வேலையை சரியாகவும் செய்திருக்கிறார்.  மதுரை முத்து மற்றும் அதிர்ச்சி மதன் ஆகியோர் வரும் காட்சிகள் கொஞ்சம் சிரிக்க வைக்கிறது. நாயகியின் அம்மாவாக நடித்திருக்கும் தேவி மகேஷ், ஜி.வி.பிரகாஷின் கல்லூரி காதலி பிரார்த்தனா நாதன் ஆகியோர் கொடுத்த வேலையை குறையின்றி செய்திருக்கிறார்கள். ஜஸ்டின் பிரபாகரன் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் கமர்ஷியல் அம்சங்களோடு பயணித்து திரைக்கதைக்கு பலம் சேர்த்திருக்கிறது மதன் கிரிஸ்டோபரின் ஒளிப்பதிவு காட்சிகளை கலர்புல்லாக படமாக்கி படத்தை பிரமாண்டமாக காண்பித்திருக்கிறது. குறிப்பாக கதாநாயகி மீது தனி கவனம் செலுத்தியிருக்கும் ஒளிப்பதிவாளர் அவரை பளபளப்பாக காட்டுவதில் அதிகம் மெனக்கெட்டிருக்கிறார். தந்தை - மகன் இடையிலான புரிதல் மற்றும் உணர்வுப்பூர்வமான உறவை நகைச்சுவை பின்னணியில் சொல்லியிருக்கும் இயக்குநர் மரியா ராஜா இளஞ்செழியன், உருவ கேலிக்கு ஆளாகும் நபர்களின் மன வலி மற்றும் அதனை தாண்டிய அவர்களுக்கான மகிழ்ச்சியை மிக சிறப்பாக பதிவு செய்திருக்கிறார். முதல் ஹீரோ அப்பா என்று சொன்னாலும், அந்த அப்பாக்களையே அவமானமாக பார்க்கும் சில பிள்ளைகளுக்கு சாட்டையடி அறிவுரை சொல்லியிருக்கும் இயக்குநர் மரியா ராஜா இளஞ்செழியன், அதை பாடம் சொல்வது போல் அல்லாமல், உணர்வுப்பூர்வமாகவும், கலகலப்பாகவும் சொல்லி அனைத்து தரப்பினரும் கொண்டாடும் ஒரு முழுமையான பொழுதுபோக்கு படமாக கொடுத்திருக்கிறார். மொத்தத்தில், ’ஹேப்பி ராஜ்’ அனைத்து தரப்பினரையும் மகிழ்விக்கும் 

காட்டான்’ இணையத் தொடர் விமர்சனம்

காட்டான்’ இணையத் தொடர் விமர்சனம்


Casting : VijaySethupathi, Abi Nakashatra, Risha Jacobs, Parvathy, Sindhu, Milind Soman, Muthu Kumar, Singampuli, Vadivel Murugan, Balaji Sakthivel, Irshad Ali, Sudev Nair, Aristo Suresh Sunitha Chandran R.Amarendran Sadhana

Directed By : M.Manikandan, B.Ajith Kumar

Music By : Rajesh Murugesan

Produced By : Vijay Sethupathi Productions  அதிகம் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் விஜய் சேதுபதியின் வெட்டப்பட்ட தலை கிடக்கிறது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வரும் காவல்துறை தலையை கைப்பற்றி உடலை தேடுகிறது. உடல் கிடைக்காத நிலையில், ஒரு கடிதமும், பணமும் அங்கிருந்து கைப்பற்ருகிறார்கள். அந்த கடிதத்தில் “என் தலையை அடக்கம் செய்துவிட்டு, இந்த பணத்தை எடுத்துக் கொள்ளுங்கள்” என்று எழுதப்பட்டிருக்கிறது. கொலை செய்யப்பட்டது யார்? என்ற தேடலை தொடங்கும் போது, விஜய் சேதுபதியின் பெயர் முத்து என்பது தெரிய வருகிறது. இந்த முத்து யார் ? என்ற கேள்வியை நோக்கி பயணிக்கும் காவல்துறைக்கு, அவரைப் பற்றிய பல ஆச்சரியமான தகவல்கள் தெரிய வருகிறது. அந்த தகவல்கள் உண்மையா ? என்ற கேள்வியை நோக்கி பயணிக்கும் போது, முத்து என்ற நபர் பற்றியும், அவரது பயணத்தின் பின்னணி பற்றியும், அறிந்துக் கொள்ளள்ளும் ஆவலை தூண்டும் வகையில், அடுத்தடுத்த அத்தியாயங்கள் பயணிக்கிறது. ஒவ்வொரு அத்தியாயம் முடியும் போது முத்துவின் செயல்கள் ஆச்சரியப்பட வைப்பதோடு, அவர் யார் ?, எதற்காக இப்படி செய்கிறார் ? ஆகிய கேள்விகளை பார்வையாளர்கள் மனதில் எழுப்பி, அனைத்து அத்தியாயங்களையும் உடனே பார்க்க வேண்டும் என்ற ஆர்வத்தையும் தொடர் ஏற்படுத்துகிறது. விஜய் சேதுபதி நடித்த முதல் மற்றும் தமிழில் உருவான மிகப்பெரிய இணையத் தொடர் என்ற அடையாளத்தோடு வெளியாகியிருக்கும் ‘காட்டான்’ தொடரின் முதல் அத்தியாயத்திலேயே வெட்டப்பட்ட தலையுடன் அறிமுகம் ஆகும் விஜய் சேதுபதி, அடுத்தடுத்த அத்தியாயங்களில், பல்வேறு அவதாரங்களில் பயணித்தாலும், ஏதோ பெரிதாக செய்யப் போகிறார், என்பதை உணர வைக்கும் விதத்தில் நடித்திருக்கிறார். பல ஊர்களில், பலவிதமான பணி செய்பவராக அறியப்படும் விஜய் சேதுபதி, அனைத்திலும் மனிதத்தை மதிக்கும் நபராக பிரதிபலிப்பது அவரது கதாபாத்திரன் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்கிறது. கைக்கடிக்கார பழுது நீக்கும் கடை பணியாளர், யானை பாகன், ஆதரவற்றோர் இல்லத்தின் மேலாளர், சரக்கு வாகன ஓட்டுநர், பெண் நடனக் கலைஞர்களின் பாதுகாவலர் என ஒவ்வொரு அத்தியாயத்திலும் ஒவ்வொரு கதாபாத்திர பின்னணியோடு வலம் வரும் விஜய் சேதுபதி, தனது இயல்பான நடிப்பால் அத்தனை கதாபாத்திரங்களிலும் கச்சிதமாக பொறுந்துவதோடு, அந்த கதாபாத்திரமாக வாழ்ந்திருக்கிறார். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் முத்துகுமார், காவலர்களாக நடித்திருக்கும் சிங்கம் புலி, வடிவேல் முருகன், பார்வதி, பாலாஜி சக்திவேல், ரிஷா ஜேக்கப், மிலிந்த் சோமன், அபி நக்‌ஷத்ரா, இர்ஷாத் அலி, சுதேவ் நாயர், அரிஸ்டோ சுரேஷ், சுனிதா சந்திரன், ஆர்.அமரேந்திரன், சாதனா என தொடரில் நடித்திருக்கும் அனைவரும் திரைக்கதையில் முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரங்களில் நடித்து கவனம் ஈர்க்கிறார்கள்.  ராஜேஷ் முருகேசனின் பின்னணி இசை தொடருக்கு மிகப்பெரிய பலம் சேர்த்திருக்கிறது. பல காலக்கட்டங்களில், பல்வேறு பகுதிகளில் பயணிக்கும் கதைக்கு தனது பின்னணி இசை மூலம் உயீரூட்டியிருக்கும் ராஜேஷ் முருகேசன், சில தனித்துவமான பீஜியம்கள் மூலம் பார்வையாளர்களின் கவனம் ஈர்க்கிறார் ஒளிப்பதிவாளர்கள் மது.என் மற்றும் என்.சண்முகசுந்தரம் இருவரது பணியும் தொடரை பிரமாண்டமாக காட்சிப்படுத்தியிருக்கிறது. கதை பல்வேறு பகுதிகளில் பயணித்தாலும், ஒரே மாதியான வண்ணங்களை பயன்படுத்தி காட்சிகளுடன் பார்வையாளர்களையும் பயணிக்க வைத்திருக்கிறார்கள். படத்தொகுப்பு செய்து இயக்கியிருக்கும் பி.அஜித் குமார், ஒவ்வொரு அத்தியாயத்தின் முடிவிலும் முத்து கதாபாத்திரத்தை மையப்படுத்திய ஒரு முடிச்சு போடுகிறார். அந்த முடிச்சியை அடுத்த அத்தியாயத்தில் அவிழ்ப்பார் என்று எதிர்பார்க்கும் பார்வையாளர்கள் ஏமாற்றம் அடையும் விதத்தில், அடுத்த அத்தியாயத்தில் புதிய முடிச்சு போடுகிறார். இப்படி மூன்று அத்தியாயங்கள் வரை, முத்து யார் ? என்ற கேள்விக்கு ஒரு தெளிவான பதிலை சொல்லவில்லை என்றாலும், அதை அறிந்துக் கொள்ளும் ஆர்வத்தை பார்வையாளர்களிடத்தில் ஏற்படுத்தி தொடரை சுவாரஸ்யமாக நகர்த்தி செல்கிறார். கதை எழுதி இயக்கியிருக்கும் மணிகண்டன், இணையத் தொடருக்கான சஸ்பென்ஸுடன் திரைக்கதையை நகர்த்திச் சென்றாலும், எளிய மனிதர்களின் வாழ்க்கையை பிரதிபலிக்கும் காட்சிகளின் மூலம் பல இடங்களில் கைதட்டல் பெறுகிறார்.  எளியவர்களுக்காக பயணிக்கும் முத்து என்ற நபர் எப்படி ‘காட்டான்’ ஆனார், அவரது வாழ்க்கைப் பயணம் எப்படிப்பட்டது, என்பது தான் கதையாக இருக்கும் என்று யூகித்தாலும், அதை சுவாரஸ்யமாக சொல்வதோடு, தனது வழக்கமான பாணியில் எளியவர்களின் வாழ்வியலாகவும், அதில் இருக்கும் சுவாரஸ்யங்களையும் மனதுக்கு நெருக்கமாக சொல்லியிருக்கிறார் இயக்குநர் மணிகண்டன். ஒவ்வொரு அத்தியாயமும், ஒவ்வொரு ஆச்சரியங்களோடு சுவாரஸ்யமாக பயணித்தாலும், விஜய் சேதுபதி கதாபாத்திரம் இடம்பெறாத காட்சிகளில் தொடர் மெதுவாக நகர்வது போன்ற உணர்வை கொடுக்கிறது. குறிப்பாக விஜய் சேதுபதியை தவிர்த்து தொடரில் இடம்பெற்றுள்ள பல கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருந்தாலும், அவர்களுக்கான பல காட்சிகள் திரைக்கதைக்கு தேவையில்லாததாக இருப்பதோடு, தொடரை சற்று தொய்வடைய செய்து விடுகிறது. இருந்தாலும், முத்து யார் ? என்ற கேள்வியும், அதற்கான பதிலாக விஜய் சேதுபதியின் பயணமும் தொய்வை நீக்கி தொடரை ரசிக்க வைத்து விடுகிறது.மொத்தத்தில், ‘காட்டான்’ காணும் ஆர்வத்தை தூண்டுகிறது.

Nee Forever movie review

 Nee Forever movie review


  Casting : Sudharsan Govind, Archenaa Ravi, Prathu, Noble James, Vidya, Y Gee Mahendran, Nizhalgal Ravi, MJ Sriram, Rethika Srinivas
Directed By : Ashokkumar KalaivaniMusic By : Ashwin HemanthProduced By : Zhen Studios - Pugaz & Eden காதல் திருமணம் என்றாலே பிடிக்காத குடும்பத்தைச் சேர்ந்த நாயகன் சுதர்ஷன் கோவிந்த், காதல் மற்றும் காதலர்களுக்கான செயலி ஒன்றை உருவாக்க முயற்சிக்கிறார். ஆதரவற்றோர் இல்லத்தில் வளரும் நாயகி அர்ச்சனா ரவி, குடும்ப வாழ்க்கையை நம்பாமல் தனித்து வாழ விரும்புவதோடு, திரைப்பட இயக்குநராக வேண்டும் என்ற தனது லட்சியத்தை நோக்கி பயணிக்கிறார். இதற்கிடையே காதல் மற்றும் காதலர்களுக்கான செயலியை உருவாக்குவதற்கு, போலியாக ஒரு பெண்ணை காதலித்து அதன் மூலம் காதல் பற்றி தெரிந்துக்கொள்ள நாயகன் முடிவு செய்கிறார். அதே போல், நாயகியும் காதல் கதை எழுதுவதற்காக போலியாக ஒருவரை காதலிக்க முடிவு செய்கிறார். இப்படி போலியாக காதலிக்க நினைக்கும் இவர்கள் ஒருவரை சந்தித்துக்கொள்கிறார்கள். இவர்களது போலியான காதல் பயணம், இருவரது எண்ணங்களையும்,  வாழ்க்கையையும் எப்படி மாற்றுகிறது, என்பது தான் மீதிக்கதை.  நாயகனாக நடித்திருக்கும் சுதர்ஷன் கோவிந்த், ஆறடிக்கு மேலான உயரத்தில் ஆக்‌ஷன் ஹீரோவுக்கான அம்சங்களோடு இருந்தாலும், அப்பாவித்தனமான கதாபாத்திரத்தில் அளவான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். காதலுக்கு முன், காதலுக்குப் பின் என தனது தோற்றத்தில் மட்டும் இன்றி, நடிப்பிலும் வேறுபாட்டை காண்பித்திருக்கும் சுதர்ஷன் கோவிந்த், நடிப்பு, நடனம் என்று அனைத்திலும் தேர்ச்சி பெற்றவராக தெரிகிறார். நாயகியாக நடித்திருக்கும் அர்ச்சனா ரவி, நாயகனுக்கு பொறுத்தமான ஜோடியாக இருக்கிறார். நாயகனுக்கு இணையாக, திரைக்கதையில் முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரமாக இருந்தாலும், பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தாமல் பயணித்திருக்கிறார். ஒளிப்பதிவாளர் ராஜா பட்டர்ஜார்ஜி-யின் பணி காட்சிகளின் தரத்தை அதிகரிக்கச் செய்து காதலர்களின் உணர்வுகளை பார்வையாளர்கள் மனதில் கடத்தியிருக்கிறது.  அஸ்வின் ஹேமந்தின் இசையில் பாடல்கள் பெரிய அளவில் கைகொடுக்கவில்லை என்றாலும், கமர்ஷியல் அம்சங்களோடு கேட்க வைக்கிறது. பின்னணி இசை அளவு.

படத்தொகுப்பாளர் எஸ்.ஏ.நாகர்ஜுனின் பணி படத்திற்கு பெரிதும் கைகொடுத்திருக்கிறது.  காதல் மீது நாட்டம் இல்லாதவர்களிடம் காதல் எத்தகைய மாற்றங்களை ஏற்படுத்துகிறது என்பதை உணர்வுப்பூர்வமாக சொல்ல முயற்சித்திருக்கும் இயக்குநர் அசோக்குமார் கலைவாணி, திரைக்கதை மற்றும் காட்சியமைப்புகளை மிக எளிமையாக கையாண்டிருக்கிறார். காதலை மட்டுமே மையப்படுத்திய கதை என்றாலும், அதை குடும்ப உறவுகளின் பின்னணியோடு சொன்ன விதம் சுவாரஸ்யமாக இருந்தாலும், புதுமையான முயற்சிகள் இன்றி திரைக்கதை பயணிப்பது படத்தை சற்று பலவீனமடைய செய்கிறது. இருந்தாலும், போலியாக காதலிக்கும் இருவரது மனதில் இருக்கும் உண்மையான காதல் வெளிப்படும் காட்சிகள் படத்திற்கு பலமாக பயணித்திருக்கிறது. மொத்தத்தில், ‘நீ ஃபாரெவர்’ (Nee Forever) காதலர்களுக்காக...

சாத்தான் - தி டார்க்’ திரைப்பட விமர்சனம்

 சாத்தான் - தி டார்க்’


திரைப்பட விமர்சனம் கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் சாத்தான் வழிபாட்டின் மீது நம்பிக்கை வைப்பதோடு, சாத்தானுக்கு நரபலி கொடுத்தால் கேட்டது கிடைக்கும் என்ற நம்பிக்கையில், ஆடு, மாடு போன்ற ஜீவராசிகளை தாண்டி மனிதர்களையும் பலி கொடுக்கிறார்கள். இப்படிப்பட்டவர்கள் வாழ்ந்த ஒரு கிராமத்தில் பல வருடங்களுக்குப் பிறகு மீண்டும் அசம்பாவிதங்கள் நடக்கிறது. பலர் மர்மமான முறையில் இறக்கிறார்கள். இந்த மர்ம மரணங்கள் குறித்து விசாரிக்கும் காவல்துறை அதிகாரிக்கு பல திடுக்கிடும் உண்மைகள் தெரிய வருகிறது.  அதே சமயம், நாயகி ஐராவின் அம்மா மோன பத்ரே, விசித்திரமாக நடந்துக் கொள்வதோடு, தன்னை யாரோ இயக்குவதாக சொல்கிறார். திடீரென்று தனது உடலை காயப்படுத்திக் கொள்பவர், அந்த காயங்கள் ஆறுவதற்குள் பல அதிர்ச்சிகரமான சம்பவங்களில் ஈடுபடுகிறார். நாயகி ஏதோ பிரச்சனையில் சிக்கியிருப்பதை உணரும் நாயகன் எஃப்.ஜெ, அவரை காப்பாற்றுவதற்காக அவரது வீட்டுக்கு செல்லும் போது, அங்கு கொடூரமான உருவம் ஒன்றை பார்க்கிறார். அந்த உருவத்தை பார்த்த பிறகு அவரிடத்திலும் பல விசித்திரமான உணர்வுகள் ஏற்பட, மறுபக்கம் ஊரில் மர்ம மரணங்கள் தொடர்ந்து நிகழ்ந்துக் கொண்டிருக்கிறது இந்த நிலையில், மர்ம மரணங்களின் பின்னணியை அறிந்துக் கொள்ளும் காவல்துறை அதிகாரியும், நாயகனும் அதை தடுத்து நிறுத்துவதற்கான வழியை தெரிந்துக் கொள்கிறார்கள். அது என்ன ?, அதை வெற்றிகரமாக செய்து முடித்தார்களா? இல்லையா ?, ஐராவின் வீட்டில் இருக்கும் அந்த கொடூரமான உருவம் யார்?, அதற்கும் மர்ம மரணங்களுக்கும் என்ன தொடர்பு ? என்பது தான் படத்தின் மீதிக்கதை. நாயகனாக பள்ளி மாணவர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் எஃப்.ஜெ, தனது வேலையை சரியாக செய்திருக்கிறார். 

பள்ளி மாணவியாக கதாநாயகியாக நடித்திருக்கும் ஐரா, ஆபத்தான அம்மாவிடம் சிக்கிக்கொண்டு பறிதவிக்கும் காட்சிகளில் பார்வையாளர்களை பதற வைத்து விடுகிறார். ஐராவின் அம்மாவாக, மிக பலம் வாய்ந்த கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் மோன பத்ரே, அதிரடியான நடிப்பின் மூலம் பார்வையாளர்களை அலற வைக்கிறார். 

சாந்தினி தமிழரசன் கிளைமாக்ஸ் நெருங்கும் போது வந்தாலும், கதையின் மையப்புள்ளியே அவர் தான். ஆனால், முதல் பாகத்தைக் காட்டிலும் இரண்டாம் பாகத்தில் அவரது காட்சிகள் அதிகம் இருக்கும் என்று தெரிகிறது. காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கும் நடிகர், ஊர் மக்கள் என பலர் புதுமுகங்களாக இருந்தாலும் தங்களது பணியை சரியாக செய்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் பாலா ஜி.ராமசாமி, ஒரு வீட்டை வைத்தே பார்வையாளர்கள் மனதில் அச்சத்தை உருவாக்கி விடுகிறார். அஷ்வின் கிருஷ்ணாவின் இசை படத்திற்கு பெரும் பலமாக பயணித்தாலும், அதிக சத்தத்தோடு பயணித்து பார்வையாளர்களுக்கு தலைவலியை கொடுக்கிறது. இருந்தாலும் காட்சிகளுக்கு உயிரூட்டியிருக்கும் பின்னணி இசை பார்வையாளர்கள் நெஞ்சங்களை படபடக்கவும் வைக்கிறது.

 படத்தொகுப்பாளர்கள் ராஜ்குமார் மற்றும் கோவை அபிஷேக் இருவரும் பலவித குழப்பங்களோடு காட்சிகளை தொகுத்திருப்பது படம் முழுவதும் தெரிகிறது. படத்தின் துவக்கத்தில் சொல்லப்படும் கதைக்கும், நிகழ்காலத்தில் நடக்கும் சம்பவங்களுக்கும் தொடர்பு இருந்தாலும் அதை தெளிவாக சொல்ல தவறியிருக்கிறார்கள் படத்தின் ஆரம்பம் முதல் இறுதி வரை, என்ன நடக்கிறது, என்று புரியாமல் பார்வையாளர்கள் தவிக்கும் அளவுக்கு திரைக்கதை வெவ்வேறு பாதையில் பயணிக்கிறது. இறுதியாக கிளைமாக்ஸ் நெருங்கும் போது, மர்ம மரணங்களின் பின்னணியும், அதை தடுத்து நிறுத்துவதற்கான வழியையும் இயக்குநர் மணிகண்டன் ராமலிங்கம், புரியும்படி விவரித்தாலும், அதன் முழுமையான பின்னணி இரண்டாம் பாகத்தில் தொடரும், என்ற ரீதியில் படத்தை முடித்திருக்கிறார். பின்னணி இசை மற்றும் கொடூரமான இரத்தம் தெறிக்கும் காட்சிகள் மூலம் பார்வையாளர்களை பயப்பட வைத்திருக்கும் இயக்குநர் மணிகண்டன் ராமலிங்கம், அதை தெளிவாக செய்திருந்தால் படம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும். மொத்தத்தில், ‘சாத்தான்’ சாகடிக்கும்

 


 


 

CarmeniSelvam Press Meet

 சமுத்திரக்கனி - கௌதம் வாசுதேவ் மேனன் இணைந்து நடிக்கும்' கார் மேனி செல்வம்' படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு 



பாத்வே புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் அருண் ரங்கராஜுலு தயாரிப்பில் ராம் சக்ரி இயக்கத்தில் சமுத்திரக்கனி-கௌதம் வாசுதேவ் மேனன் நடிப்பில் தயாராகி, ஏப்ரல் மூன்றாம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் 'கார் மேனி செல்வம்' திரைப்படத்தை விளம்பரப்படுத்தும் நிகழ்வு சென்னையில் நடைபெற்றது.

ராம் சக்ரி இயக்கத்தில் உருவாகியுள்ள 'கார் மேனி செல்வம்' திரைப்படத்தில் சமுத்திரக்கனி, கௌதம் வாசுதேவ் மேனன், லட்சுமி பிரியா சந்திரமௌலி, அபிநயா, கார்த்திக் குமார், படவா கோபி, மதுமிதா, அர்ஜுனன் , ஹரிதா பராகோட், கோதண்டம், கரண் சக்கரவர்த்தி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். யுவராஜ் தக்ஷ‌ன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு மியூசிக்லௌட் ஸ்டுடியோ & டெக்னாலஜி நிறுவனம் இசையமைத்திருக்கிறது.‌ ஃபீல் குட் ஃபேமிலி என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை பாத்வே புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் அருண் ரங்கராஜுலு தயாரித்திருக்கிறார்.

ஏப்ரல் மாதம் மூன்றாம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் இப்படத்தினை விளம்பரப்படுத்தும் வகையில் சென்னையில் நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில் படக்குழுவினருடன் எழுத்தாளர் செந்தமிழன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.‌ நடிகர் கோதண்டம், கிரியேட்டிவ் புரொடியூசர் ஸ்ரீ சரவணன், ஒளிப்பதிவாளர் யுவராஜ் தக்ஷ‌ன், இசையமைப்பாளர் ராமானுஜம், கலை இயக்குநர் சங்கர், பாடலாசிரியர் மணி அமுதவன், கரண் சக்கரவர்த்தி, தினேஷ்,  எடிட்டர் ஜெகன், படவா கோபி, நடிகர் சங்கரநாராயணன், நடிகை அபிநயா, தயாரிப்பாளர் அருண், நடிகை லட்சுமி பிரியா சந்திரமௌலி, இயக்குநர் ராம் சக்ரி, சமுத்திரக்கனி, நடன இயக்குநர் ஹரிஷ், ஆடை வடிவமைப்பாளர் ஸ்வேதா லட்சுமி, ஒலி வடிவமைப்பு கலைஞர் ராகவ் ரமேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

தயாரிப்பாளர் அருண் ரங்கராஜுலு பேசுகையில், "இது என்னுடைய இரண்டாவது திரைப்படம். இதற்கு முன்னதாக பத்து ஆண்டுகளுக்கு முன் 'குறையொன்றுமில்லை' என்ற திரைப்படத்தை தயாரித்தேன். இந்த திரைப்படம் ஒரு ஃபேமிலி டிராமா. அனைத்து தரப்பு ரசிகர்களிடமும் எளிதாக தொடர்பு கொள்ளும். இப்படத்திற்காக பணியாற்றிய நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவருக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்தத் திரைப்படம் ஏப்ரல் மூன்றாம் தேதி வெளியாகிறது.‌ அனைவரும் ஆதரவு தர வேண்டும்," என்றார்.

இசையமைப்பாளர் ராமானுஜம் பேசுகையில், "இந்த படத்திற்காக குழுவாக இணைந்து பணியாற்றி இருக்கிறோம். பாடல்கள், இசை, பின்னணி இசை என அனைத்தும் நன்றாக அமைந்திருக்கிறது. பாடலில் ஏ ஐ (AI) தொழில்நுட்பம் பயன்படுத்தப்படவில்லை. அனைத்து இசைகளும் நேரடியாக வாசிக்கப்பட்டிருக்கிறது. பாடல்களை கொச்சி, ஜெய்ப்பூர், மும்பை உள்ளிட்ட இடங்களுக்கு சென்று அங்குள்ள பிரபலமான இசை கலைஞர்களுடன் இணைந்து பதிவு செய்தோம். படமும் நன்றாக இருக்கிறது.  படம் வெற்றி பெற இறைவனை பிரார்த்திக்கிறேன்," என்றார்

கிரியேட்டிவ் புரொடியூசர் ஸ்ரீ சரவணன் பேசுகையில், "இங்கு வருகை தந்திருக்கும் சிறப்பு விருந்தினரான எழுத்தாளர் செந்தமிழனுக்கு நன்றி. நிகழ்விற்கு வருகை தந்த படக் குழுவினருக்கும் நன்றி. தயாரிப்பாளரும் , இயக்குநரும் எனக்கு 15 ஆண்டு காலமாக நெருங்கிய நண்பர்கள்.‌ அதனால் இந்தப் படத்தில் கிரியேட்டிவ் புரொடியூசராக பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது.‌  அவர்களுக்கும் நன்றி. 'கார் மேனி செல்வம்' ஏப்ரல் 3ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. அனைவரும் ஆதரவு தர வேண்டும்," என்றார். திரைப்படம் அதே மன நெருக்கடியை பதிவு செய்கிறது. அது ஆயுதப் போரினால் விளைவது அல்ல, சமூக உளவியல் போரினால் எழுவது.

இந்தத் திரைப்படம் ஒரு அடிப்படையான கேள்வியை எழுப்புகிறது. தமிழகத்திலிருந்து வளைகுடா நாடுகளுக்கோ அல்லது அது போன்ற வேறு நாடுகளுக்கோ வேலைக்கு செல்கிறார்கள். அப்படி செல்வதற்கு நியாயமான காரணங்கள் இருக்கின்றனவா என்ற கேள்வியை இந்த திரைப்படம், மிகவும் அழகாக, உணர்ச்சி அளவில் நேர்மையாக கேள்வி எழுப்புகிறது.

தமிழர்கள் 7000 ஆண்டுகளுக்கு முன்பே கடலோடிகள் தான். நாம் எல்லா நாடுகளுக்கும் சென்று இருக்கிறோம்.‌ சில நாட்கள் அங்கு தங்கி இருக்கிறோம். தமிழர்களுக்கு பல நாடுகளுக்கு சென்று பரவி வாழ்வது புதிதல்ல. குற்றமும் அல்ல. கேள்வி என்னவென்றால், நீங்கள் எங்கு இருந்தாலும், உடல் நலமும், மன நலமும் குன்றாமல் இருக்கிறீர்களா என்பதுதான். ஆம் என்றால் அது உன் ஊர். இல்லை என்றால் அது உன் ஊர் அல்ல.‌ சென்னை மாநகரில் இருப்பவர்களுக்கும் இந்த கேள்வி உரியது. இதற்கு அவர்களுடைய மனதில் பதில் இருக்கிறது, மனதிற்கு அவர்கள் பதில் அளித்துக் கொள்ளலாம். வெளியே என்ன பேசினாலும் உள்ளே ஒருவன் இருக்கிறான். அவன் உண்மையை உணர்த்துகிறான் அல்லது அவன் நம்மிடம் உண்மையை எதிர்பார்க்கிறான்.‌ நான் எங்கு இருந்தாலும் உடல் நலத்துடனும் மன நலத்துடனும் இருக்கிறேன் என்று உள்ளுக்குள் உரைக்க முடிந்தால் நீங்கள் உங்கள் ஊரில் இருக்கிறீர்கள்.

இந்தக் கருத்தின் சில சாயல்களை இந்த படத்தில் நான் பார்த்தேன்.‌ உண்மையில் ராம் சக்ரி எனும் இளைஞர் என்னிடம் இந்த கருத்துகளை கேட்டுவிட்டு படத்தை இயக்கவில்லை. இப்படத்தின் பணிகள் நிறைவடையும் தருணத்தில் நண்பர் சமுத்திரக்கனி மூலமாக என்னை சந்தித்தார். இதுவே இறைவனுடைய அரவணைப்பு தான் என இந்த மேடையில் பதிவு செய்கிறேன்.‌

இயக்குநர் ராம் சக்ரி பேசுகையில், "இந்த விழாவில் எழுத்தாளர் செந்தமிழன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றியது தான் இந்த படத்திற்கு கிடைத்த பாக்கியமாக நினைக்கிறேன்.
அவருடைய எழுத்துக்கள் மூலமாக நான் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறேன் என்பது எனக்கு கிடைத்த பாக்கியம் என நான் நினைக்கிறேன்.‌ இந்தப் படத்தில் நடித்த சிலர் சமுத்திரக்கனியின் 'ஸ்கூல் பஸ்' எனும் திரைப்படத்தில் நடித்திருக்கிறார்கள். இதற்காக அவர் எனக்கு நன்றி தெரிவித்திருக்கிறார். நான் இதற்கு முன் 'குறையொன்றுமில்லை' படத்தை கார்த்திக் என்ற பெயரில் இயக்கினேன். அதன் பிறகு திரையுலகில் நிறைய கார்த்திக் இருக்கிறார்கள் என்பதற்காக எனது பெயரை ராம் சக்ரி என மாற்றி வைத்துக் கொண்டிருக்கிறேன்.‌

என்னுடைய முதல் படத்தை கிரௌட் ஃபண்டிங் மூலம் 60 நபர்களிடம் நிதி திரட்டி உருவாக்கினேன்.‌ அவர்கள் அனைவருக்கும் இந்த தருணத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.‌

இப்படத்தின் ஸ்கிரிப்ட் நண்பர் ஸ்ரீராம் மூலமாக சமுத்திரக்கனியிடம் சென்றடைந்தது. அவர் திரைக்கதையை முழுவதுமாக படித்துவிட்டு எனக்கு போன் செய்து ஒரு மனிதன் நிம்மதியாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறாயா, இல்லை செல்வத்துடன் இருக்க வேண்டும் என்று நினைக்கிறாயா? இதில் நிம்மதியுடன் இருக்க வேண்டும் என்று தானே சொல்ல வருகிறாய் என்று சொல்லும் போது நான் சொல்ல நினைத்த விஷ‌யத்தை அவர் குறிப்பிட்டது எனக்கு மகிழ்ச்சியை அளித்தது. அத்துடன் நீ எப்போது தயாரோ அப்போது நானும் தயார் என்றார். அதன் பிறகு இரண்டு ஆண்டுகள் கழித்து நான் தயார் என்று அவரிடம் சொன்ன போது, உடனே ஓகே சொன்னார். என்னைப் பற்றி ஒரு வார்த்தை கூட கேட்காமல் அவர் என்னுடன் இணைந்து பயணித்தது எனக்கு தற்போது வரை வியப்பாக இருக்கிறது. என்னை நம்பி வாய்ப்பளித்த சமுத்திரக்கனிக்கு நன்றி.‌

புது முகங்களை வைத்து படமெடுப்பது ரிஸ்க். அது இன்றைய சூழ்நிலையில் மிகவும் கஷ்டமானது. படத்தின் பணிகள் தொடங்கிய தருணத்திலிருந்து படத்தின் வெளியீடு வரை பணம் இருக்க வேண்டும். ஃபர்ஸ்ட் ஆஃப் நன்றாக இருக்கிறது, செகண்ட் ஆஃப் நன்றாக இருக்கிறது, காமெடி ஒர்க் அவுட் ஆகவில்லை, என்ற விமர்சனங்களை விட படம் முழுவதும் நன்றாக இருக்கிறது. ஒவ்வொரு காட்சியிலும் பெட்டர்மென்ட் இருக்கிறது என்றால் தான் வணிக ரீதியாக திரையுலகில் சர்வைவல் ஆக முடியும்.‌

இந்த மூன்று விஷ‌யங்களையும் நான் கற்றுக் கொண்டிருக்கிறேன். இதுதான் என்னுடைய முதல் படத்திலிருந்து எனக்கு கிடைத்த புரிதல்.‌ முதல் காட்சியிலிருந்து உச்சகட்ட காட்சி வரை எந்தவித சமரசமும் இல்லாமல் எடுத்தால் தான் வெற்றி பெற முடியும் என்பதை தெரிந்து இப்படத்தை உருவாக்கியிருக்கிறேன்.

நடிகை அபிநயா படப்பிடிப்பு தளத்திற்கு வந்தவுடன் ஒரு ஆன்மிக உணர்வு பரவும்.‌ படப்பிடிப்பு தளத்தில் அவர்கள் கேட்ட கேள்விகள் அந்த கதாபாத்திரத்தை மேலும் சிறப்பானதாக ஆக்கியது.

இந்த படத்திற்கு வித்தியாசமான தோற்றத்தை அளித்தவர் கௌதம் வாசுதேவ் மேனன். அவர் திரையில் தோன்றும் காட்சிகள் குறைவு என்றாலும் முழு ஒத்துழைப்பையும் வழங்கினார்.‌

இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் ராமானுஜம் பெரும் பங்காற்றியிருக்கிறார்.‌ அவர் இந்தியன் கிளாசிக்கல் இசையையும் கொடுப்பார், வெஸ்டர்ன் கிளாசிக்கல் இசையையும் கொடுப்பார். ஒரு படைப்பு என்பது கூட்டு முயற்சி தான். தனி ஒருவர் இதை நான் செய்தேன் என்று சொல்ல முடியாது. நடிகர்கள் முதல் தொழில்நுட்பக் கலைஞர்கள் வரை ஒவ்வொருவரின் பங்களிப்பும் இதில் இடம் பிடித்திருக்கிறது.‌ இசையை பொருத்தவரை ந‌மக்கு தெரிவதெல்லாம் இசையமைப்பாளர் -பாடலாசிரியர் - பாடகர்கள் - ஆகியோர்கள் மட்டுமே. ஆனால் இதற்கு பின்னால் பல இசைக் கலைஞர்களின் பங்களிப்பு இருக்கிறது.

இந்த படத்தின் இடம்பெற்ற பாடல்கள் மூலம் கிடைக்கும் வருவாயை இதில் உழைத்த அனைத்து கலைஞர்களுக்கும் கிடைத்திட வேண்டும் என்பதற்காகத்தான் ஒரு ஏற்பாட்டை செய்திருக்கிறோம். இது ஒரு முதல் முயற்சி.‌ இதனால்தான் இப்படத்திற்கு இசையமைப்பாளராக ராமானுஜம் அவர் தன்னுடைய பெயரை முன்னிறுத்தவில்லை. அவருடைய இசை நிறுவனத்தின் பெயரை வைத்திருக்கிறோம்.

இந்தப் படத்தில் சிங்கிள் ஷாட்டில் நடிகர் சமுத்திரக்கனி நடனமாடியிருக்கிறார். இதனை சாத்தியப்படுத்திய நடன இயக்குநருக்கு நன்றி. இந்த படத்தை பார்ப்பவர்கள் ஏதேனும் கடன் நெருக்கடியில் சிக்கி இருந்தால் அவர்கள் அதிலிருந்து மீண்டு வர வேண்டும் என இறைவனை பிரார்த்திக்கிறேன்," என்றார்.‌ நடிகர் சமுத்திரக்கனி பேசுகையில், "இந்தத் திரைப்படத்தில் பணியாற்றியது இறைவனின் அருள் என்றுதான் சொல்ல வேண்டும். என்னுடைய நண்பர் ஸ்ரீராம் மூலமாக இப்படத்தின் திரைக்கதை எனக்கு வந்தது.‌ கதையைப் படிக்கும் போதே அந்த இயக்குநரின் மனநிலை என்ன என்று தெரிந்துவிடும். அந்த மனசு தான் இயக்குநர் ராம் சக்ரியை என்னிடம் அழைத்து வந்தது. அவரை சந்தித்து இதைத்தானே சொல்ல வருகிறீர்கள் வாருங்கள் சேர்ந்து சொல்வோம் என்று இப்படத்தின் பணியை தொடங்கினோம். அவர் இப்போது என் வாழ்க்கையில் மிக முக்கியமான நண்பராக இருக்கிறார். இவரைப் போன்ற மனிதர்களை பார்ப்பது மிகவும் அரிது. இவரை எல்லாம் மிகவும் பத்திரமாக பாதுகாத்து வைத்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் நிறைய உண்மைகளுடனும் நிறைய எளிமைகளுடனும் நம்மால் இந்த சமூகத்திற்கு ஏதேனும் ஒரு பங்களிப்பு இருந்திட வேண்டும், எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் மிகவும் குறைவு. இப்படி இருப்பவர்களால் தான் உலகம் இயங்குகிறது என்று நான் நினைக்கிறேன். சக்ரி சார் நன்றி.

இந்தப் படத்தில் நடித்த நடிகர்கள், நடிகைகள் பணியாற்றிய தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவருக்கும் என் நன்றி. கே பி சார் பட்டறையில் பணியாற்றி கொண்டிருக்கிறோம். எல்லோரும் வருவார்கள். எழுதுவார்கள். ஆனால் செந்தமிழனின் எழுத்திற்கு நான் மிகப்பெரிய ரசிகன். 'மைக்ரோ தொடர்கள் மேக்ரோ சிந்தனைகள்' என்று ஒரு தொடர் சென்று கொண்டிருந்தது. கைலாசம் சார் செந்தமிழனை தொடர்ந்து எழுதச் சொல் என சொல்வார், அவ்வளவு தரமான ஒரு எழுத்தாளர் செந்தமிழன்.

மற்றவர்களின் உதவியை எதிர்பாராமல் தற்சார்பு வாழ்க்கையை யார் வாழ்கிறார்களோ அவர்கள்தான் மிகப்பெரிய செல்வந்தர்கள். அவர்கள் தான் மிகவும் சந்தோஷ‌மானவர்கள். இதை சொல்ல வருவது தான் இந்த 'கார்மேனி செல்வம்' படைப்பு.

இறைவனை நோக்கி காரைக்கால் அம்மையார் எழுதிய பாடல்களை அதே ஸ்ருதியில் இன்றும் பாடிக் கொண்டிருக்கிறார்கள். அப்படி ஒரு நிகழ்ச்சிக்கு நாங்களும் சென்றோம். அதைப் பார்த்த இயக்குநர் 'தேவலோகத்தில் இருக்கிறோமோ..!' என்று தன் உணர்வை பகிர்ந்து கொண்டார். நாங்கள் இருவரும் வேறு ஒரு உலகத்தில் மிதந்தோம்.

பணக்காரன் வேறு. செல்வந்தர் வேறு. பணக்காரன் பிரச்சனைகளோடு இருப்பவன். செல்வந்தர் மிகவும் மகிழ்ச்சியுடன் இருப்பவர். உங்கள் அனைவரையும் செல்வந்தர் ஆக்குவது தான் இந்தப் படம். இந்த படைப்பில் இது போன்ற நிறைய விஷ‌யங்களை பேசி இருக்கிறோம். கார் மேனி செல்வம்' சாதாரண திரைப்படம் மட்டுமல்ல. நாங்கள் இல்லாமல் போகலாம், ஆனால் இந்த படைப்பு இருக்கும். உங்களுடன் எப்போதும் இருக்கும்.

நிறைய சுமைகளை தூக்காதீர்கள். இ எம் ஐ என்ற பெயரில் சுமைகளை சுமக்காதீர்கள். அதன் பிறகு நடக்கக்கூட முடியாது. அந்த சுமையை சிறிது சிறிதாக இறக்கி வைத்து விட்டு, கை வீசி சந்தோஷமாக நடந்து பாருங்கள். மகிழ்ச்சியை உணர்வீர்," என்றார்.

KAATTAAN movie press meet

 *KAATTAAN movie press meet 


ஜியோ ஹாட்ஸ்டாரில் வெளியாகும் 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி நடிக்கும் 'முத்து என்கிற காட்டான்' இணையத் தொடருக்கான பத்திரிகையாளர் சந்திப்பு*



'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி நடிப்பில் மணிகண்டன் - பி. அஜித் குமார் இயக்கத்தில் ஜியோ ஹாட் ஸ்டார் டிஜிட்டல் தளத்தில் மார்ச் மாதம் 27 ஆம் தேதி முதல் வெளியாகும் 'முத்து என்கிற காட்டான்' பத்து அத்தியாயங்கள் கொண்ட இணையத் தொடரை விளம்பரப்படுத்தும் வகையில் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.


தேசிய விருது வென்ற படைப்பாளியான இயக்குநர் மணிகண்டன் மற்றும் இயக்குநரும், படத்தொகுப்பாளருமான பி. அஜித் குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள 'முத்து என்கிற காட்டான்' இணையத் தொடரில் விஜய் சேதுபதி, மிலிந்த் சோமன், சுதேவ் நாயர், முத்துக்குமார், சிங்கம் புலி, கலைவாணி பாஸ்கர், வி ஜே பார்வதி, ரிஷா ஜேக்கப், வடிவேல் முருகன், அபி நட்சத்திரா உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். மது நீலகண்டன் மற்றும் சண்முகசுந்தரம் இணைந்து ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த இணையத் தொடருக்கு ராஜேஷ் முருகேசன் இசையமைத்திருக்கிறார். ஜியோ ஹாட் ஸ்டார் டிஜிட்டல் தளத்திற்காக இந்த இணையத் தொடரை விஜய் சேதுபதி புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் நடிகர் விஜய் சேதுபதி தயாரித்திருக்கிறார்.


மார்ச் 27 ஆம் தேதி முதல் ஜியோ ஹாட் ஸ்டார் டிஜிட்டல் தளத்தில் வெளியாகும் இந்த இணையத் தொடரை விளம்பரப்படுத்தும் நிகழ்வு சென்னையில் நடைபெற்றது. இதில் இணையத் தொடர் குழுவினர் கலந்து கொண்டனர்.


இந்நிகழ்வில் ஜியோ ஹாட் ஸ்டார் நிறுவனத்தின் தென்னிந்திய பிரிவிற்கான தலைவர் கிருஷ்ணன் குட்டி பேசுகையில், '' முத்து என்கிற காட்டான் இணைய தொடரை வழங்குவதில் பெருமிதம் கொள்கிறோம். கடந்த மூன்று ஆண்டுகளில் ஜியோ ஹாட் ஸ்டார் தளத்தில் வெளியான 40 நிகழ்ச்சிகளுக்கு பொறுப்பேற்று இருக்கிறேன். அதில் முத்து என்கிற காட்டான் சீரிஸ் சிறப்பானது.‌ இந்த முயற்சி ஜியோ ஹாட் ஸ்டார் டிஜிட்டல் தளத்தின் அடுத்த கட்ட நகர்விற்கான முயற்சி என நம்புகிறோம். இதில் விஜய் சேதுபதியின் பங்களிப்பு மிகவும் ஸ்பெஷலானது. கதையின் முதல் அத்தியாயத்தில் ஹீரோவின் தலை மட்டும்தான் இடம்பெறும். இது வித்தியாசமானது.


இந்த குழுவினருடனான பயணம் மிகவும் நீண்டது. கிட்டத்தட்ட இரண்டரை ஆண்டு காலம் இவர்களுடன் பயணித்திருக்கிறோம். பயணம் முழுவதும் அன்பால் நிறைந்திருந்தது. விஜய் சேதுபதியின் தயாரிப்பு நிறுவனத்துடன் நாங்கள் முதல்முறையாக இணைந்திருக்கிறோம்.

விஜய் சேதுபதியுடன் ஏற்கனவே பிக் பாஸ் நிகழ்ச்சியில் இணைந்து பணியாற்றிருக்கிறோம். இதற்காக விஜய் சேதுபதிக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.


இந்த இணையத் தொடரை முன்னின்று இயக்கிய இயக்குநர் மணிகண்டனுக்கும் நன்றி. அவர்தான் இந்த இணைய தொடருக்கு முதுகெலும்பாக திகழ்ந்தார். இயக்குநர் அஜித்குமார், கதாசிரியர் ராஜ்குமாருக்குநன்றி. நடித்த நடிகர்கள் நடிகைகள் பணியாற்றிய தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவருக்கும் நன்றி. இந்த இணைய தொடர் நாடு கடந்து அனைத்து ரசிகர்களையும் சென்றடைந்து வெற்றி பெறும் '' என்றார்.


ஜியோ ஹாட் ஸ்டார் டிஜிட்டல் தளத்தின் கன்டென்ட் பிரிவின் மூத்த துணைத் தலைவர் பிரதீப் பேசுகையில், '' இந்த ப்ராஜெக்டை இயக்குநர் மணிகண்டன் எங்களிடம் முதன் முதலாக சொன்ன போது எங்கள் அனைவருக்கும் பிடித்திருந்தது. அதன் பிறகு விஜய் சேதுபதியை சந்தித்தோம். அப்போது அவர் இந்த கதையை நான் ஆத்மார்த்தமாக செய்கிறேன். எனக்கு இதைப் பற்றி நன்றாகத் தெரியும். இதை குறிப்பிட்ட நாளில் நிறைவு செய்ய இயலாது. இந்தப் ப்ராஜெக்ட் எத்தனை நாட்கள் நடைபெற்றாலும் நான் முழுமையான ஒத்துழைப்பை வழங்குவேன் என வாக்குறுதி அளித்தார். ஒரு நட்சத்திர நடிகரிடம் இருந்து இப்படி ஒரு வாக்குறுதி கிடைப்பது பெரிய விசயம். அந்த நம்பிக்கை எங்களை ஊக்கப்படுத்தியது. நாங்கள் இதுவரை தயாரித்த தயாரிப்புகளில் இதுதான் மிகப்பெரிய பட்ஜெட்.


பணிகளை தொடங்கினோம். ஆனால் தடங்கல் வேறு வடிவத்தில் வந்தது. இதன் படப்பிடிப்பு 20 நாட்கள் வரை நடந்த பிறகு பட்ஜெட் காரணமாக தயாரிப்பாளர்கள் பலரும் பின் வாங்கினர். இதனால் இந்த ப்ராஜெக்ட் நின்று விடுமோ..! என்ற நிலை ஏற்பட்டபோது.. நான் விஜய் சேதுபதியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினேன்.‌ இந்த ப்ராஜெக்ட்டை நீங்கள் தயாரிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டேன். சிறிது நேரம் யோசித்து விட்டு பிறகு நடிகராகவும் தயாரிப்பாளராகவும் மாறினார்.


இதை நான் ஏன் பகிர்ந்து கொள்கிறேன் என்றால் நாங்கள் கர்ப்பரேட் உலகத்தில் உள்ளவர்கள். அங்கு கோடு போட்ட இடத்தில் கையெழுத்து போட்டுவிட்டால் அதன் பிறகு எதுவும் செய்ய முடியாது. இந்த சூழலை புரிந்து கொண்டு எங்களுக்கு இறுதி வரை உறுதுணையாக நின்றார் விஜய் சேதுபதி. இதற்காக அவருக்கு மீண்டும் ஒரு முறை நன்றியை சொல்கிறேன்.


தமிழில் மிகப்பெரிய பட்ஜெட்டில் தயாராகி வெளியான இணைய தொடர் இதுதான் என்பதை எங்களால் உறுதியாக சொல்ல முடியும். இந்த கதை தொடங்கும் போது பார்வையாளராக பார்ப்பது கதையின் நாயகனுடைய வெட்டப்பட்ட தலை மட்டும்தான். இன்றைக்கு இந்தியாவில் இருக்கும் எந்த துறையிலும் மிகப்பெரிய நட்சத்திர நடிகர் இது போன்றதொரு கதைக்கு ஆம் என்று சொல்லவே மாட்டார்கள். அதை சொல்லும் தைரியம் விஜய் சேதுபதிக்கு மட்டும்தான் இருக்கிறது. அதுதான் இந்த இணைய தொடரின் பிரம்மாண்டம். அந்த வெட்டுப்பட்ட தலையை பார்த்த பிறகு இந்த கதையை யாராலும் முழுமையாக பார்க்காமல் இருக்க முடியாது.


அத்துடன் இந்த இணையத் தொடரில் தமிழகத்திலிருந்து மட்டுமல்லாமல் கேரளாவில் இருந்தும் மும்பையில் இருந்தும் நிறைய நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். அதனால் இது பான் இந்திய அளவிலான ப்ராஜெக்ட் தான் '' என்றார்.


இயக்குநர் - படத்தொகுப்பாளர் பி. அஜித் குமார் பேசுகையில், '' விஜய் சேதுபதி- இயக்குநர் மணிகண்டன் -ஜியோ ஹாட்ஸ்டார் ஆகியோருக்கு முதலில் நன்றி. நான் முதலில் பட தொகுப்பாளராகத்தான் பணியாற்றினேன். முதல் கட்ட படப்பிடிப்பிற்கு பிறகு.. இயக்குநருடனான கதை விவாதம் தொடர்ந்து நடைபெற்றது. பிரதீப் குறிப்பிட்டதை போல் இதற்கு தடங்கல் ஏற்பட்ட போது நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் எங்களுக்கு உறுதுணையாக ஆதரவளித்தார்கள். ஜியோ ஹாட்ஸ்டார் நிறுவனம் எங்களுக்கு முழுமையான ஒத்துழைப்பை தொடர்ந்து வழங்கியது. அதிலும் குறிப்பாக படைப்பு தரமானதாக இருக்க வேண்டும் என்பதற்காக விஜய் சேதுபதி தயாரிப்பு நிறுவனம் முழுமையான பங்களிப்பை வழங்கியது.


இணைந்து பணியாற்றிய தொழில்நுட்ப கலைஞர்கள் ஒவ்வொரு வரும் திறமைசாலிகள். ஒவ்வொரு வரும் கடுமையாக உழைத்தனர். இதில் இடம்பெறும் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்த நடிகர்கள் கூட தங்களின் அர்ப்பணிப்புடன் கூடிய உழைப்பை வழங்கினர்.

இந்த இணைய தொடருக்கான மணிகண்டனின் ஐடியா மிகவும் அருமையானதாக இருந்தது. இதனை நாங்கள் அனைவரும் ஒன்றிணைந்து பேசி இன்று அனைவரும் பார்த்து ரசிக்கும் வகையிலான படைப்பாக வழங்கி இருக்கிறோம். இதற்காக உழைத்த அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த இணையத் தொடர் அனைத்து தரப்பு ரசிகர்களுக்கும் பிடிக்கும் என்று உறுதியாக நம்புகிறேன்'' என்றார்.


நடிகர் மிலிந்த் சோமன் பேசுகையில், '' இந்த மேடையில் நிற்பதற்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. தமிழில் தயாராகும் இணைய தொடரில்,இதில் தான் முதன் முதலாக நடித்திருக்கிறேன். இதற்காக விஜய் சேதுபதி மணிகண்டன் ஜியோ ஹாட் ஸ்டார் அடங்கிய இந்த குழுவினருக்கு என் முதல் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.


இந்த கதை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அதிலும் குறிப்பாக இந்த கதையின் தொடக்கம் முன்னணி நட்சத்திர நடிகர் ஒருவரின் வெட்டப்பட்ட தலையில் இருந்து தொடங்குகிறது. இதுவே எனக்கு ஆச்சரியத்தை தந்தது. இந்தப் படத்தில் இடம்பெற்ற அந்த கதாபாத்திரத்திற்கு நான் ஏன்? என்ற கேள்வியை இயக்குநரிடம் கேட்டபோது , அவர் அதற்கான விளக்கத்தை முழுமையாகவும், நேர்த்தியாகவும் அளித்தார். என் மீது நம்பிக்கை வைத்து அந்த கதாபாத்திரத்தை வழங்கியதற்காக இயக்குநருக்கு மீண்டும் ஒருமுறை நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.


என் கதாபாத்திரம் மட்டுமல்ல இந்த தொடரில் பணியாற்றிய அனைவரும் ஒன்றிணைந்து குழுவாக பணியாற்றினார்கள். அதுவும் என்னை கவர்ந்தது. இதற்காகவும் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்'' என்றார்.


ஒளிப்பதிவாளர் சண்முகசுந்தரம் பேசுகையில், '' விஜய் சேதுபதியுடன் இணைந்து பணியாற்றும் மூன்றாவது படைப்பு இது. மணிகண்டன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்த 'ஆண்டவன் கட்டளை' படத்தில் பணியாற்றினேன். அதன் பிறகு விஜய் சேதுபதி நடித்த' 96 'படத்தில் பணியாற்றினேன். இந்த ரெண்டு படமும் ஹிட். தற்போது மூன்றாவது முறையாக இணைந்து இருக்கிறோம். இதுவும் வெற்றி பெறும்.  


இதுபோன்ற திரைக்கதைகளை மணிகண்டனால் தான் கையாள முடியும். காக்கா முட்டை படத்திற்கு முன் வின்ட்‌ ( Wind) என்றொரு குறும்படத்தை அவர் இயக்கி இருந்தார். அதில் இரண்டே கதாபாத்திரங்கள் தான். ஒன்று சடலம் . மற்றொன்று விஜய் சேதுபதி.‌ அது ஒரு குறும்படம் போல் இருக்காது. திரைப்படம் போல் இருக்கும். அதைப் பார்த்து நான் வியந்திருக்கிறேன்.


'கடைசி விவசாயி' படத்தை பார்த்துவிட்டு விஜய்யிடம் பேசினேன். ஒவ்வொரு பிரேமையும் உங்கள் இருவரது உழைப்பையும் பார்த்து ரசித்தேன் என்றேன். இந்த இணையத் தொடரில் விஜய் சேதுபதி ஆக்சன் திரில்லர் ஜானரில் நடித்திருக்கிறார். இதில் மிகப்பெரிய ஆக்சன் காட்சிகள் இருக்கிறது. அது அனைவருக்கும் மிகவும் பிடிக்கும்'' என்றார்.


ஒளிப்பதிவாளர் மது நீலகண்டன் பேசுகையில், '' திறமையான நட்சத்திரங்களுடனும் அற்புதமான தொழில்நுட்ப கலைஞர்களுடனும் இணைந்து பணியாற்றிய இந்த படைப்பில் என்னுடைய பங்களிப்பும் இருந்ததை பெருமிதமாக நினைக்கிறேன்'' என்றார்.


இசையமைப்பாளர் ராஜேஷ் முருகேசன் பேசுகையில், '' இந்த குழுவினருடன் இணைந்து பயணித்த அனுபவம் மகிழ்ச்சியானதாக இருந்தது. மணிகண்டன் கதையை சொன்ன தருணத்திலிருந்து இதில் வேலை செய்தது மறக்க முடியாத அளவிற்கு திரில்லிங்காக இருந்தது. எனக்கு மிகவும் பிடித்த நடிகரான விஜய் சேதுபதியுடன் இணைந்து பணியாற்றுவதும் சந்தோஷமாக இருந்தது. முதலில் ஒவ்வொரு அத்தியாயத்திலும் குட்டி குட்டியான பாடல்களை இடம்பெற வைக்கலாம் என்றுதான் விவாதித்தோம். ஆனால் திரைக்கதை நிறைவாகும் போது மூன்று பாடல்கள் மட்டுமே இடம்பெற்றது. அதில் ஒரு பாடலுக்கான மெட்டை உருவாக்கியது விஜய் சேதுபதி தான். படப்பிடிப்பு தளத்தில் அவர் அந்த சூழலில் உச்சரித்தது எனக்கு பிடித்திருந்தது. அதையே மெருகேற்றி பாடலாக உருவாக்கினோம்'' என்றார்.


கதாசிரியர் ஆர். ராஜ்குமார் பேசுகையில், '' இதில் இயக்குநர் மணிகண்டனுடன் இணைந்து திரைக்கதை உருவாக்கத்தில் பங்கு பெற்றேன். அந்த அனுபவம் சிறப்பானதாக இருந்தது. இயக்குநர் மணிகண்டன் சிறந்த நண்பர். காக்கா முட்டை படத்திற்கு முன்பிருந்தே பழக்கம். ஒரு பத்து பதினைந்து ஆண்டு கால நண்பர். அந்த தருணத்தில் இருந்து என்னுடைய திரைக்கதைக்கு அவர் உதவி செய்வார். அவருடைய திரைக்கதைக்கு நான் உதவி செய்வேன்.


இந்த இணைய தொடருக்காக மணிகண்டனின் ஐடியா ஸ்பெஷல் ஆக இருந்தது. இது மணிகண்டனின் அப்பாவின் வாழ்க்கையில் நடைபெற்ற ஒரு உண்மை சம்பவம். அதை விவாதித்து விரிவு படுத்தலாம் என பேசத் தொடங்கினோம். மாதக்கணக்கில் விவாதித்தோம். தலை கிடைத்து விட்டது முண்டம் எங்கே? அவன் நல்லவனா? கெட்டவனா? கொலைகாரனா ?கொள்ளைக்காரனா? என விசாரிப்பது போல் ஏராளமான கிளை கதைகளை உருவாக்கி, சுவாரசியமான புதிய எதிர்பாராத திருப்பங்களுடன் இதனை உருவாக்கினோம். இது ஒரு வகையான புது முயற்சி. இதற்கு வாய்ப்பளித்த மணிகண்டனுக்கு நன்றி.


நாங்கள் இருவரும் பேசிய விசயங்களை வைத்து இன்னும் இரண்டு இணைய தொடர்களை உருவாக்கலாம். அந்த அளவிற்கு கதாபாத்திரங்களை பற்றி பேசி இருக்கிறோம்.


இந்த கதையை விஜய் சேதுபதி தேர்வு செய்தது மிகப்பெரிய விசயம். எந்த ஒரு மாஸ் ஹீரோவும் இதை ஒப்புக்கொள்ள மாட்டார்கள். ஆனால் விஜய் சேதுபதி இந்த ஸ்கிரிப்டை பெரிதாக நம்பினார். இதற்காக அவருக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.‌


இந்த இணைய தொடர் ஒரு புது முயற்சி புது முயற்சியை எப்போதும் தமிழ் ரசிகர்கள் கொண்டாடுவார்கள்'' என்றார்.


நடிகை அபி நட்சத்திரா பேசுகையில், '' இந்த படைப்பில் ஒரு பகுதியாக இருந்ததற்கு மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். இந்தக் குழு மிகப் பெரியது. இந்த படைப்பும் பிரம்மாண்டமானது. நான் மிகவும் துறுதுறுவென இருக்கும் சிட்டு எனும் கேரக்டரில் நடித்திருக்கிறேன்.‌ இந்த கேரக்டர் அனைவருக்கும் பிடிக்கும். விஜய் சேதுபதி சார் எனக்கு நிறைய முறை மோட்டிவேஷன் கொடுத்திருக்கிறார். இந்த இணைய தொடர் ரசிகர்களின் ஆதரவுடன் பெரிய அளவில் வெற்றி பெறும்'' என்றார்.


நடிகை வி ஜே பார்வதி பேசுகையில், '' இந்த நாளிற்காக நிறைய ஆண்டுகள் காத்திருந்தேன். இயக்குநர் மணிகண்டனின் குழுவில் இருந்து பேசிய போது நான் முதலில் நம்பவில்லை. அதன் பிறகு மணிகண்டனுடன் இணைய வழியிலான சந்திப்பிற்குப் பிறகு நம்பிக்கை வந்தது. ஏனெனில் அவருடைய படைப்புகளை பார்த்து தான் நான் வளர்ந்திருக்கிறேன். உசிலம்பட்டிக்கு வர சொன்னார்கள், நான் நவீன உடையில் சென்றிருந்தேன். அங்கு சென்ற பிறகு காஸ்டியூம் டிசைனர் எனக்கு மதுரை பெண் கதாபாத்திரத்திற்கான ஆடையை வழங்கினார். எந்தவித மேக்கப்பும் இல்லாமல் அந்த டிரஸ்ஸை அணிந்து போட்டோ சூட்டுக்காக நின்ற போதுதான் நான் லலிதா எனும் கதாபாத்திரமாகவே தெரிந்தேன். அதை நான் என்னுடைய பாக்கியமாகவும், எனக்கு கிடைத்த ஆசீர்வாதமாகவும் கருதுகிறேன். விஜய் சேதுபதி - மணிகண்டன் கூட்டணி என்றால் எல்லோருக்கும் பெரிய எதிர்பார்ப்பு இருக்கும். இதில் லலிதாவாக நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. நிச்சயம் என்னை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தும்'' என்றார்.


நடிகை ரிஷா ஜேக்கப் பேசுகையில், '' கொஞ்சம் பதற்றமாக இருக்கிறது. நிறைய மேடைகளில் பேசி இருக்கிறேன். ஆனால் இந்த மேடை எனக்கு மிகவும் புதிதாக இருக்கிறது. மிகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறேன். கலவையான உணர்விலும் இருக்கிறேன். இந்தப் படத்தில் எனக்கு நடிக்க வாய்ப்பு அளித்ததற்காக விஜய் சேதுபதி சார்க்கும்

இந்த இணைய தொடரின் படப்பிடிப்பில் கலந்து கொண்டதன் மூலம் நான் நிறைய விசயங்களை கற்றுக் கொண்டேன். எதை... எதுவரை செய்யலாம்... எதை செய்யக்கூடாது... என்பதை எல்லாம் இதில் கற்றுக் கொண்டேன். என்னுடன் இணைந்து பணியாற்றிய ஒட்டுமொத்த குழுவினருக்கும் நன்றி'' என்றார்.


நடிகர் விஜய் சேதுபதி பேசுகையில், '' முத்து என்கிற காட்டான் இந்த வெப்சீரிசை தொடங்கியதிலிருந்து இந்த தருணம் வரை இதற்கு பின்னால் நடைபெற்ற விசயங்களை வைத்து இரண்டு மூன்று தொடர்களை உருவாக்கலாம். அனைத்தையும் கடந்து இன்று இந்த இணைய தொடர் வெளியாவதற்க்காக உழைத்த அனைவருக்கும் நன்றி. குறிப்பாக ஜியோ ஹாட் ஸ்டார் நிறுவனத்திற்கு பெரிய நன்றி.


நான் அவர்களுக்கு ஆதரவளித்ததாக அவர்கள் சொல்லலாம். ஆனால் அவர்கள் என் மீது வைத்த நம்பிக்கை தான் இதற்கு முக்கிய காரணம். நான் இங்கு வந்த பிறகுதான் தெரிந்து கொண்டேன். தமிழில் உருவான மிகப்பெரிய வெப் சீரிஸ் இதுதான் என்று. இந்த அனுபவத்தில் என்னுடன் இருந்த பிரதீப்பிற்கு மிக்க நன்றி. பிக் பாஸ் ஆக இருந்தாலும் இந்த இணைய தொடராக இருந்தாலும் அவரின் பங்களிப்பு சிறப்பானது.


ஒரு நாள் நான் அலுவலகத்தில் இருந்தேன் பிரதீப் வந்தார். சோபாவில் சாய்ந்து அமர்ந்தார். என்னையும் சாய்ந்து அமரும்படி சொன்னார். நானும் சாய்ந்து அமர்ந்தேன். நான் உங்களிடம் ஒன்று கேட்பேன் அதற்கு நீங்கள் மறுப்பு தெரிவிக்க கூடாது என்று பேசத் தொடங்கினார். அது எனக்கு மேரேஜ் ப்ரோபோசல் போலிருந்தது. அவர் என்ன கேட்பார் ? என்பது குறித்து யோசித்துக் கொண்டே இருந்தேன். அவர் பிக் பாஸில் நீங்கள் தான் தொகுப்பாளராக பணியாற்ற வேண்டும் என சொன்னார். சொன்னவுடன் நான் என்ன சார் அதில் பெரிதாக செய்யப் போகிறேன். அதை பற்றி எனக்கு எதுவும் தெரியாது. நான் அதை பார்த்தது கூட கிடையாது. சிம்பு அல்லது சூர்யாவிடம் கேட்டுப் பாருங்கள் சிம்புவுக்கு இதில் ஏற்கனவே அனுபவம் இருக்கிறது என்று சொன்னேன். ஆனால் பிரதீப் நீங்கள் செய்யுங்கள் என்று கேட்டார்.


இதுபோல் பல சமயங்களில்... இன்று நான் வாழ்க்கையில் ஓரளவிற்கு இந்த நிலையில் இருக்கிறேன் என்றால் நான் பெரிதாக அனுபவம் இல்லாத ..அறிமுகம் இல்லாத.. ஏதோ ஒரு காரணத்தால் என் மீது வைத்திருக்கும் நம்பிக்கைதான் என்னை முன்னால் அழைத்துச் சென்று இருக்கிறது. என் மீது எனக்கு பெரிதாக நம்பிக்கை இருந்ததில்லை.


ஒரு வேலை செய்து அதை மற்றவர்கள் பார்த்து பாராட்டும் போது தான் எனக்கு தெரியவரும் 'ஓ இந்த வேலையை என்னால் சிறப்பாக செய்ய முடியும்' என்று. அதற்கு முன் எனக்குத் தெரியாது. ஆனால் அதற்கு முன் என் மீது நம்பிக்கை வைக்கும் மனிதர்கள் இருக்கிறார்கள். இதுதான் எனக்கு மிகப்பெரிய ஆச்சரியம். இதில் மணிகண்டனும் அப்படித்தான் இருந்தார். இப்படி பலர் என் வாழ்க்கையில் இருந்திருக்கிறார்கள். என் மேல் நம்பிக்கை வைத்து நண்பர்கள் இருந்திருக்கிறார்கள். இருக்கிறார்கள். 

இதுபோல் பலர் என்னை நம்பியதால் தான் நான் என்னை நம்பத் தொடங்கினேன். அந்த வகையில் என் மீது நம்பிக்கை வைத்த பிரதீப் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி.


மணிகண்டனுக்கும் எனக்குமான அறிமுகமும் நட்பும் எதேச்சையாக ஒரு நாள் நடந்தது. அவருடைய நண்பர் வினோத் என்பவர் மூலமாக மணிகண்டனின் குறும்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அது இன்று இங்கு வரை அழைத்து வந்திருக்கிறது.‌


மணிகண்டனின் அறிவு எனக்கு எப்போதும் ஆச்சரியத்தை தரும். ஒவ்வொரு விசயத்தையும் அவர் பார்க்கும் கோணங்கள் வித்தியாசமாக இருக்கும். இங்கு அவருடன் பணியாற்றியவர்கள் அனைவருக்கும் தெரியும் ..அவர் ஒரு விசயத்தை பார்த்தவுடன் மிக விரைவாக புரிந்து கொள்வார். அவர் நடிகர்களிடமிருந்து மிக எளிதாக நடிப்புத் திறனை வாங்கி விடுவார். சில சமயங்களில் நடித்து முடித்த பிறகு தான் அவர் அந்த காட்சியில் அவ்வளவு விசயங்களை யோசித்து வைத்திருக்கிறார் என்பது புரியும். அப்படி என்னை எப்போதும் ஆச்சரியப்படுத்தும் மனிதர்தான் அவர்.


2008 முதல் இப்போது வரை அவரை எனக்குத் தெரியும். அவர் எழுதுவது எல்லாம் சுவாரசியமாக இருக்கும். ஆச்சரியமாகவும் இருக்கும். இந்த வெப் சீரிஸ் உள்பட பல அற்புதமான படங்களை வழங்கி இருக்கிறார் அற்புதமான பாடல்களையும் அளித்திருக்கிறார். இதற்காக அவருக்கு இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.


மணிகண்டனால் தொடர்ந்து பணியாற்ற முடியாத ஒரு சூழல் வந்த போது எடிட்டராக பணியாற்றிய அஜித்குமார் இயக்கினார். இந்த வெப் சீரிஸ் எப்படி செல்லும் என்ற ஒரு கேள்வி எனக்குள் இருந்தபோது.. அஜித் அதை அழகாக அவருடைய கையில் எடுத்துக்கொண்டு தெளிவாக நிறைவு செய்தார். இதற்காக அவருக்கும் நன்றி.


ஒரு கட்டத்தில் மணிகண்டன் இல்லாத போது அஜித் குமார் இதை இயக்கும்போது நான்தான் அவருக்கு உதவியாக இருக்கும் என்று 'உடன் பால்' படத்தினை இயக்கிய இயக்குநர் கார்த்திக்கை அழைத்து இதில் பணியாற்றுமாறு கேட்டுக் கொண்டேன். நம்ம ஊரைப்பற்றி உணர்வுபூர்வமாக தெரிந்தவர் என்பதால் அவரிடம் உரிமையுடன் கேட்டேன். என் அழைப்பை ஏற்று இதில் பணியாற்றியதற்காக அவருக்கும் நன்றி.


இதில் பணியாற்றிய ஒளிப்பதிவாளர்கள், இசையமைப்பாளர், நடிகர்கள், நடிகைகள், மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவருக்கும் நன்றி. முத்து என்கிற காட்டான் இணைய தொடர் மார்ச் 27 ஆம் தேதி ஜியோ ஹாட்ஸ்டார் இல் வெளியாகிறது. எல்லோருக்கும் பிடிக்கும் என்று நம்புகிறேன்'' என்றார்

Kasthuri Raja BRINGS EXPERIENCE AND CREATIVE GUIDANCE TO “HABEEBI

 *'ஹபீபி’ திரைப்படத்திற்கு தனது அனுபவம் மூலம் வழிகாட்டி வலுசேர்த்துள்ளார் கஸ்தூரி ராஜா!*



ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது ‘ஹபீபி’ திரைப்படம். வலுவான கதை சொல்லல், ஆழமான உணர்வுகள் மற்றும் கலாச்சாரத்தை மையமாகக் கொண்ட கதைக்களத்தோடு மறக்க முடியாத சினிமா அனுபவத்தையும், மொழிகளை தாண்டி பல தரப்பட்ட ரசிகர்களையும் ஈர்க்கும் படமாகவும் இது உருவாகி வருகிறது. 


’ஹபீபி’ திரைப்படத்தில், திரைத்துறையில் அனுபவம்மிக்க இயக்குநர் கஸ்தூரி ராஜா இணைந்திருப்பது படத்தின் தரத்தை மேலும் உயர்த்தியுள்ளது. அவரது நீண்டகால அனுபவமும், வழிகாட்டுதலும் ஆதரவும் இந்தப் படத்தை மேலும் செழுமைபடுத்தியுள்ளதோடு படக்குழுவினருக்கும் பெரும் பலமாக மாறியுள்ளது. 


படத்தில் தனது பங்களிப்பு குறித்து கஸ்தூரி ராஜா பகிர்ந்து கொண்டதாவது, “’ஹபீபி’ திரைப்படத்தில் எனது பங்கு படக்குழுவினரை ஆதரித்து அவர்களை மேலும் வலுப்படுத்தியதுதான். ஒரு நல்ல கதை எப்போதும் தனது பார்வையாளர்களை கண்டடையும் என்று நான் நம்புகிறேன். இந்த திரைப்படத்தில் அந்த உண்மைத்தன்மை உள்ளது” என்றார்.


இயக்குநர் மீரா கதிரவன் பகிர்ந்து கொண்டதாவது, “’ஹபீபி’ படத்தில் கஸ்தூரி ராஜா சார் இணைந்தது எங்களுக்கு மிகப்பெரிய பலமாக அமைந்தது. அவரது அனுபவமும் கதை பற்றிய புரிதலும் எங்கள் பயணத்திற்கு தெளிவும் நம்பிக்கையும் அளித்தது. மத வேறுபாடுகளைத் தாண்டி சமூகத்தில் மூத்தவர்களுக்கு நாம் அளிக்கும் மரியாதையை அவரது கதாபாத்திரம் இந்தப் படத்தில் பிரதிபலிக்கும். ஒற்றுமை, கண்ணியம் மற்றும் உணர்வுப்பூர்வமான தருணங்கள் கொண்டதாகவும் அவரது இருப்பு இருக்கும். திரைத்துறையிலும் வயதிலும் அவர் மூத்தவராக இருந்தாலும் அதை வெளிப்படுத்தாமல் எங்கள் அனைவருடனும் மிக எளிமையாக பழகினார்” என்றார்.


இந்தத் திரைப்படத்தை ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் விநியோகம் செய்கிறது. தரமான மற்றும் கருத்துள்ள படங்களை ஆதரித்து வரும் இந்த நிறுவனம், திறமையான விளம்பரம், மார்க்கெட்டிங் மற்றும் விநியோகத்தின் மூலம் நல்ல திரைப்படங்களை அதிக பார்வையாளர்களிடம் கொண்டு செல்லும் வலுவான தளமாக திகழ்கிறது.


கலை நேர்மை மற்றும் வணிக நுணுக்கம் ஆகியவற்றின் பிரதிபலிப்பாக ’ஹபீபி’ திரைப்படம் இருக்கும். இன்றைய மாறிவரும் சினிமா உலகில் படைப்பாற்றல், அனுபவமிக்க வழிகாட்டுதல் மற்றும் வலுவான விநியோக ஆதரவு ஆகியவற்றின் முக்கியத்துவத்தை இந்தப் படம் உணர்த்தும். நீண்ட நாட்களுக்கு ரசிகர்கள் மனதில் இந்தப் படம் நீங்கா இடம் பிடிக்கும். ‘ஹபீபி’ வெறும் திரைப்படம் மட்டுமல்ல. ஆர்வம், ஒற்றுமை மற்றும் வலுவான கதை சொல்லலுடன் உருவான மிகச்சிறந்த அனுபவம். Kasthuri Raja BRINGS EXPERIENCE AND CREATIVE GUIDANCE TO “HABEEBI”


The much-anticipated film Habeebi continues to generate strong buzz across the industry, emerging as a cinematic experience rooted in powerful storytelling, emotional depth, and cultural resonance. With its engaging narrative and universal appeal, Habeebi is poised to connect with audiences across regions.


Enhancing the film’s creative strength is the association of veteran filmmaker Kasthuri Raja, whose experience and storytelling insight add meaningful depth to the project. His presence serves as a guiding force, supporting the vision of the film while preserving its core creative identity.


Sharing his thoughts on his role, Kasthuri Raja said, “My role in Habeebi has been to support and strengthen the vision of the team. I believe honest storytelling always finds its audience, and this film holds that sincerity.”


Director Meera Kathiravan, speaking about the collaboration, expressed, “Having Kasthuri Raja sir associated with Habeebi has been a great strength for us. His experience and understanding of storytelling brought clarity and confidence to our journey. The character he represents reflects the immense respect we hold for elders in our society—individuals who command admiration beyond religious differences. His presence brings a sense of unity, dignity, and emotional depth that truly connects with the soul of the film. Despite his seniority and immense acumen in storytelling, he showed no sense of superiority, which made everyone in the unit feel extremely comfortable.”


Backing this content-driven venture is Romeo Pictures, an emerging force in the distribution sector. The company has marked its presence by supporting films of quality and substance, providing a strong platform through effective promotion, marketing, and distribution, ensuring that meaningful cinema reaches a wider audience.


Habeebi reflects a seamless blend of artistic integrity and commercial sensibility. The film’s journey highlights the importance of collaborative creativity, experienced mentorship, and strong distribution support in today’s evolving cinematic landscape.


With compelling content, seasoned guidance, and strategic backing, Habeebi is set to leave a lasting impression.


“Habeebi” is not just a film—it is an experience shaped by passion, unity, and powerful storytelling.

Roll Time Studios* - தயாரிப்பில் ரியோ ராஜ் - சானியா ஐயப்பன் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் கோலாகலமாக தொடங்கியது.

 *Roll Time Studios* - தயாரிப்பில் ரியோ ராஜ் - சானியா ஐயப்பன் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் கோலாகலமாக தொடங்கியது. 



*Roll Time Studios* தயாரிப்பில் புதிய திரைப்படமான "movie title" இன்று சிறப்பு பூஜையுடன் அதிகாரப்பூர்வமாக தொடங்கியது. இந்தத் திரைப்படத்தை கலை அரசு தயாரிக்குகிறார். அறிமுக இயக்குனரான கார்த்திகேயன் BK இப்படத்தினை இயக்குகிறார். இவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உடன் இணை இயக்குனராக பணிபுரிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


ஆண் பாவம் பொல்லாதது, ஸ்வீட் ஹார்ட், ஜோ போன்ற வெற்றி படம் மூலம் ரசிகர்களை கவர்ந்த ரியோ ராஜ் கதாநாயகனாக நடிக்கிறார். இருகப்பற்று, சொர்க்கவாசல் படத்தின் நாயகியாக நடித்த சானியா ஐயப்பன் இப்படத்தின் கதாநாயகியாக நடிக்கின்றார். 


படத்தில் முக்கிய காதாபாத்திரங்களில் அஜூ வர்கீஸ் , சிங்கம்புலி,மிர்ச்சி விஜய், கார்த்திகா. உள்ளிட்டோர் முக்கிய காதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். 


இசையமைப்பாளர் திபு நிநான் தாமஸ் இசை அமைக்கிறார். பிரவீன் போத்தன் பட ஒளிப்பதிவாளராக அறிமுகமாகிறார். மேலும் படத்தொகுப்பை லாரண்ஸ் கிஷோர் மேற்கொள்கிறார். அறிமுக கலை இயக்குனராக பிரதீப் ராஜ் பணிபுரிகிறார். உடை வடிவமைப்பை பிரியா ரவி செய்கிறார். 


நடிகர் சிவகார்த்திகேயன் கிளாப் போர்டு அடித்து நடிகர் சூரி ரோலிங் சொல்லி இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அக்சன் சொல்லி படப்பிடிப்பு இனிதே தொடங்கியது.


இந்த படைப்பு அனைத்து தரப்பு ரசிகர்களும் ரசிக்கும் படமாக இருக்கும்.முக்கியமாக இளைஞர்களை கவரும் திரைப்படமாக உருவாகிறது. 


திரைப்படத்தின் மற்ற நடிகர்கள், கதை விவரங்கள், மற்றும் வெளியிட்டுத் திட்டங்கள் குறித்த அறிவிப்புகள் தயாரிப்பாளர் தரப்பிலிருந்து விரைவில் வெளியாகும்.

பாணா காத்தாடி' போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய பிரபல இயக்குனர் பத்ரி வெங்கடேஷ், சேப்பாக்கம்

 பாணா காத்தாடி' போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய பிரபல இயக்குனர் பத்ரி வெங்கடேஷ், சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களின் பிரம்மாண்டமான 'ரோர் 26' (Roar 26) நிகழ்ச்சியின் இயக்குனராகப் பொறுப்பேற்று வெற்றிகரமாக நடத்தியுள்ளார்.



இந்த நிகழ்ச்சியில் எம்.எஸ். தோனி, ருதுராஜ் கெய்க்வாட், மைக் ஹசி மற்றும் சுரேஷ் ரெய்னா போன்ற ஜாம்பவான்களுடன், தமிழ் நடிகர் சிவகார்த்திகேயனும் கலந்து கொண்டு சிஎஸ்கே அணிக்குத் தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.


ஆர்.ஜே. பாலாஜி, அனிருதா ஸ்ரீகாந்த், அர்ஜுன் தாஸ் மற்றும் ஆர்.கே. (எ) ராதாகிருஷ்ணன் ஆகியோர் தொகுப்பாளர்களாக இருந்து நிகழ்ச்சியை விறுவிறுப்பாக நடத்தினர்.


சைமா (SIIMA) மற்றும் மிர்ச்சி மியூசிக் அவார்ட்ஸ் போன்ற உயர்மட்ட நிகழ்ச்சிகளை இயக்கிய தனது அனுபவத்தைக் கொண்டு, பத்ரி வெங்கடேஷ் 'ரோர் 26' நிகழ்வை ஒரு மறக்க முடியாத இரவாக மாற்றினார்.


ஏற்கனவே மூன்று தமிழ்ப் படங்களை இயக்கியுள்ள அவர், தற்போது தனது அடுத்த படத்திற்கான பணிகளில் ஈடுபட்டுள்ளார்.


Badri Venkatesh, the acclaimed director behind hits like "Baana Kaathadi", took the reins as the show director for the star-studded 'Roar 26' event, Chennai Super Kings' fan interaction extravaganza at Chepauk Stadium!


The event saw the likes of M.S. Dhoni, Ruturaj Gaikwad, Mike Hussey, and Suresh Raina rubbing shoulders with Tamil actor Sivakarthikeyan, who wished the CSK squad good luck. R.J. Balaji, Anirudha Srikanth, Arjun Das, and R.K. a.k.a Radhakrishnan kept the energy high as hosts. With his expertise in directing high-profile events like SIIMA and Mirchi Music Awards, Badri Venkatesh ensured 'Roar 26' was a memorable night. He's currently working on his next film, adding to his impressive portfolio of three Tamil films