-

Loading latest news...

கான் சிட்டி’ திரைப்பட டிரெய்லர் வெளியீடு மற்றும் பத்திரிகையாளர் சந்திப்பு*

 *‘கான் சிட்டி’ திரைப்பட டிரெய்லர் வெளியீடு மற்றும் பத்திரிகையாளர் சந்திப்பு*



பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள “கான் சிட்டி” திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது. இந்நிகழ்வினில் படத்தின் டிரெய்லர் பத்திரிகை ஊடக நண்பர்களுக்கு பிரத்யேகமாக திரையிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து படக்குழுவினர் திரைப்படம் குறித்த பல்வேறு சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டனர்.


இந்நிகழ்வினில்  


நடிகர் மதன்  பேசியதாவது..,


 “வணக்கம் நண்பர்களே. ஒரு சில வார்த்தைகள் பேச விரும்புகிறேன். மேடைக்கு வருவதற்கு முன்பே எனக்கு நிறைய பில்ட்அப் கொடுக்கப்பட்டது. ஆனால் அந்த பில்ட்அப் எல்லாமே இந்தப் படத்திற்குத் தகுதியானதுதான். ஏனென்றால் இது அப்படியொரு நல்ல திரைப்படம்.

இந்தப் படத்தின் கதையிலும், அதில் சொல்லப்படும் கருத்துகளிலும் நிறைய புத்திசாலித்தனமான விஷயங்கள் இருக்கின்றன. டிரைலரையே நீங்கள் பார்த்திருப்பீர்கள். அது எவ்வளவு நகைச்சுவையாகவும் ரசிக்கும்படியாகவும் இருக்கிறது என்பதை அனைவரும் அறிவீர்கள். ஆனால் படம் அதைவிட இன்னும் சிறப்பாகவும், ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தமானதாகவும் இருக்கும். சுமாரான படங்களுக்குக் கூட பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடக நண்பர்கள் நல்ல ஆதரவு கொடுத்து மக்களிடம் கொண்டு சேர்க்கிறீர்கள். இது மிகவும் சிறப்பான திரைப்படம். இந்தப் படத்தையும் மக்களிடம் இன்னும் பிரமாண்டமாக கொண்டு சேர்ப்பீர்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது. அனைவருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். நன்றி  


நடிகர் லல்லு பேசியதாவது.., 


“இதுபோன்ற தருணங்கள் எப்போதும் மனதில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தும். இயக்குநர் ஹரிஷை இன்று இந்த மேடையில் பார்க்கும்போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. ஒரு புதிய இயக்குநராக சினிமாவில் சாதிக்க வேண்டும் என்ற கனவுடன் பயணத்தைத் தொடங்கியவர். அந்தக் கனவை நனவாக்குவதற்காக அவர் பல ஆண்டுகள் கடினமாக உழைத்துள்ளார். இன்று அவரது இயக்கத்தில் உருவாகியுள்ள ‘கான் சிட்டி’ திரைப்படம் வெளியாகவிருப்பது மிகவும் மகிழ்ச்சியான விஷயம்.அர்ஜூன் தாஸ் ஏற்கனவே ‘கைதி’, ‘மாஸ்டர்’ போன்ற முக்கியமான படங்கள் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். அவருடன் இணைந்து பயணித்த அனுபவமும் சிறப்பானது. இந்தப் படம் அவருக்கு மிகப்பெரிய திரையரங்கு வெற்றியாக அமையும் என்று நம்புகிறேன்.படத்தின் டிரைலர் மற்றும் பாடல்களைப் பார்த்தபோது மிகவும் பாஸிடிவான உணர்வு ஏற்பட்டது. குறிப்பாக இது ஒரு சிறந்த குடும்ப பொழுதுபோக்கு திரைப்படமாக உருவாகியுள்ளது. இயக்குநர் ஹரிஷ் மிகவும் சுவாரஸ்யமான மற்றும் ரசிக்கக்கூடிய திரைக்கதையை அமைத்திருக்கிறார். பாடல்களும் ஒவ்வொன்றும் தனித்துவமான பாணியில் அமைந்து மனதில் நிற்கின்றன.குடும்பத்துடன் திரையரங்கிற்கு வந்து ரசித்து பார்க்கக்கூடிய திரைப்படமாக ‘கான் சிட்டி’ இருக்கும். எனவே ரசிகர்கள் அனைவரும் திரையரங்குகளில் வந்து படத்தை ஆதரித்து, மிகப்பெரிய தொடக்கத்தையும் வெற்றியையும் கொடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.



கலை இயக்குநர் ராஜ்கமல் பேசியதாவது:


“வணக்கம். முதலில் இந்தப் படத்தில் பணியாற்றும் வாய்ப்பை எனக்கு வழங்கிய இயக்குநர் ஹரிஷுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.‘கான் சிட்டி’ திரைப்படத்தின் உலகத்தை உருவாக்குவதற்காக நாங்களும் எங்கள் குழுவினரும் மிகுந்த உழைப்பை செலுத்தியுள்ளோம். குறிப்பாக இந்தப் படத்தில் செட் அமைப்புகள் அதிகமாக இருந்ததால், அதற்காக பெரிய அளவில் திட்டமிட்டு வேலை செய்ய வேண்டியிருந்தது. என்னுடைய குழுவினர் அனைவரும் அர்ப்பணிப்புடனும் கடின உழைப்புடனும் பணியாற்றினர். அவர்களுக்கு எனது சிறப்பு நன்றிகள்.இந்தப் படத்தின் தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவருமே எனக்கு நண்பர்களைப் போன்றவர்கள். ஒவ்வொருவரும் தங்களுடைய துறையில் முழு ஈடுபாட்டுடன் செயல்பட்டனர். அதனால் வேலை மிகவும் சுவாரஸ்யமாகவும் மகிழ்ச்சியாகவும் அமைந்தது. படப்பிடிப்பு காலம் முழுவதும் நாங்கள் ஒரு குடும்பமாக இணைந்து பணியாற்றினோம். ‘கான் சிட்டி’ படத்தில் நாங்கள் உருவாக்கியுள்ள உலகத்தையும், காட்சியமைப்புகளையும் ரசிகர்கள் திரையரங்குகளில் ரசிப்பார்கள் என்று நம்புகிறேன். படத்திற்கு உங்கள் ஆதரவையும் வாழ்த்துகளையும் வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன். நன்றி.”


உடை வடிவமைப்பாளர் நவா பேசியதாவது..,  


“அனைவருக்கும் வணக்கம். முதலில் இந்தப் படத்தில் பணியாற்றும் வாய்ப்பை எனக்கு வழங்கிய தயாரிப்பாளருக்கும், இயக்குநர் ஹரிஷுக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இன்று இந்த மேடையில் நிற்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் இருக்கிறது. இந்த வாய்ப்பிற்காகவும், தொடர்ந்து எனக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி.


அர்ஜூன் தாஸ் அண்ணாவுடன் மீண்டும் பணியாற்றியது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. அவர் முழுமையான ஒத்துழைப்பை வழங்கினார். அதற்காக அவருக்கு எனது சிறப்பு நன்றிகள். அதேபோல் வடிவுக்கரசி அம்மாவுடன் பணியாற்றியது இந்தப் படத்தில் எனக்கு மிகவும் சிறப்பான அனுபவமாக அமைந்தது. அவருடன் பணியாற்றிய தருணங்கள் மறக்க முடியாதவை. இந்தப் படத்தில் நடித்துள்ள அனைத்து கலைஞர்களுடனும் இணைந்து பணியாற்றியதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். பல்வேறு கதாபாத்திரங்களுக்கு ஏற்றவாறு நிறைய உடை வடிவமைப்புகள் மற்றும் பல்வேறு தோற்றங்களை உருவாக்கியுள்ளோம். ரசிகர்கள் அதை திரையரங்குகளில் பார்த்து ரசிப்பார்கள் என்று நம்புகிறேன்.என்னுடைய முழு காஸ்ட்யூம் குழுவும் எனக்கு ஒரு குடும்பம் போன்றது. பல ஆண்டுகளாக என்னுடன் பயணித்து வரும் அவர்களின் உழைப்பும் அர்ப்பணிப்பும் இந்தப் படத்தில் பிரதிபலித்திருக்கிறது. அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.இப்படத்தின் தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவரும் மிகச் சிறப்பாக பணியாற்றியுள்ளனர். இசையமைப்பாளர் ஷான் ரோல்டன், கலை இயக்குநர் ராஜ்கமல், ஒளிப்பதிவாளர் அரவிந்த், ஸ்டண்ட் மாஸ்டர் சந்தோஷ் உள்ளிட்ட ஒவ்வொருவரும் தங்களது சிறந்த பங்களிப்பை வழங்கியுள்ளனர். படக்குழுவின் சார்பாக ரசிகர்கள் மற்றும் ஊடக நண்பர்கள் அனைவரிடமும் ஒரு வேண்டுகோள். திரையரங்குகளுக்கு வந்து ‘கான் சிட்டி’ திரைப்படத்தைப் பார்த்து உங்கள் ஆதரவையும் ஆசீர்வாதத்தையும் வழங்குங்கள்.


இறுதியாக, என்னுடைய உதவியாளர்கள் மற்றும் காஸ்ட்யூம் குழுவினருக்கு சிறப்பு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர்களின் ஆதரவு இல்லாமல் இந்தப் பயணம் சாத்தியமாகியிருக்காது. அனைவருக்கும் நன்றி.”


நடன இயக்குநர் சந்தோஷ் பேசியதாவது:


“அனைவருக்கும் வணக்கம். ‘கான் சிட்டி’ திரைப்படத்தில் பணியாற்றிய அனுபவம் மிகவும் சிறப்பானதாக இருந்தது. சமீபத்தில் வெளியான பாடல்களை நீங்கள் அனைவரும் பார்த்திருப்பீர்கள். அந்தப் பாடல்களின் காட்சியமைப்புகள் மற்றும் நடன வடிவமைப்புகள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

இயக்குநர் ஹரிஷ் ஒவ்வொரு பாடலுக்கும் தனித்துவமான ஐடியாக்களை பகிர்ந்து கொண்டார். அவர் கூறிய அணுகுமுறை மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது. அதனை அடிப்படையாகக் கொண்டு பாடல்களை உருவாக்கிய அனுபவம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது.


இந்தப் படத்தின் பாடல்களில் ஏராளமான நடனக் கலைஞர்கள் பங்கேற்றனர். அவர்களுடன் இணைந்து பணியாற்றியது மறக்க முடியாத அனுபவமாக இருந்தது. படப்பிடிப்பு தளத்தில் அனைவரும் மிகுந்த அர்ப்பணிப்புடன் உழைத்தனர்.


இயக்குநர் ஹரிஷின் மிகப்பெரிய பலம் அவரது பாஸிடிவான அணுகுமுறை. அவர் எப்போதும் உற்சாகத்துடனும் தெளிவான பார்வையுடனும் செயல்படுவார். படத்திற்கு என்ன தேவை என்பதை மிகவும் தெளிவாக அறிந்து அதற்கேற்ப குழுவை வழிநடத்தினார். அந்த நம்பிக்கையும் ஆற்றலும் முழுக் குழுவுக்கும் உற்சாகத்தை அளித்தது.


அர்ஜூன் தாஸ் உள்ளிட்ட அனைத்து கலைஞர்களும் மிகுந்த உழைப்பை தந்தனர். படப்பிடிப்பின் போது சோர்வு இருந்தாலும், ஒவ்வொருவரும் தங்களுடைய சிறந்த பங்களிப்பை வழங்கினர். இயக்குநர் குழு, ஒளிப்பதிவுக் குழு உள்ளிட்ட அனைவரும் மிகவும் ஒத்துழைப்புடன் செயல்பட்டனர்.


வடிவுக்கரசி அம்மாவுடன் பணியாற்றிய அனுபவமும் மிகவும் இனிமையானது. அவருடைய அனுபவமும் அர்ப்பணிப்பும் அனைவருக்கும் ஒரு ஊக்கமாக இருந்தது. குறிப்பாக பாடல்களில் வரும் சிறிய அசைவுகள் மற்றும் லிப்-சிங்க் காட்சிகளைக் கூட மிகவும் துல்லியமாகச் செய்தது அவரது அனுபவத்தை வெளிப்படுத்தியது.


இந்தப் படத்தின் அனைத்து பாடல்களும் தனித்தனி பாணியில் உருவாகியுள்ளன. ஒவ்வொரு பாடலிலும் ஒரு புதிய அனுபவமும் வித்தியாசமான உணர்வும் இருக்கும். ரசிகர்கள் திரையரங்குகளில் அதை ரசிப்பார்கள் என்று நம்புகிறேன்.


இந்த வாய்ப்பை வழங்கிய இயக்குநர் ஹரிஷ், தயாரிப்பாளர் மற்றும் படக்குழுவினருக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். அனைவருக்கும் நன்றி.”

எடிட்டர் அருள் மோசஸ் பேசியதாவது:


“அனைவருக்கும் வணக்கம். முதலில் இந்த வாய்ப்பை எனக்கு வழங்கிய இயக்குநர் ஹரிஷ் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.


‘கான் சிட்டி’ திரைப்படம் அனைவரின் வாழ்க்கையுடனும் எளிதாக தொடர்புபடுத்திக்கொள்ளக்கூடிய ஒரு கதையை பேசுகிறது. அதனால்தான் இந்தப் படம் அனைத்து தரப்பு ரசிகர்களிடமும் நல்ல வரவேற்பைப் பெறும் என்று நம்புகிறேன்.


இந்தப் படத்தில் பணியாற்றும் வாய்ப்பு எனக்கு கிடைத்ததற்கு முக்கிய காரணமாக இருந்த விஜய் அண்ணாவுக்கு நன்றி சொல்ல வேண்டும். அவருடைய நம்பிக்கையும் ஆதரவும்தான் என்னை இந்தப் பயணத்திற்கு அழைத்து வந்தது.


அதேபோல் என்னுடைய முக்கியமான வழிகாட்டியும், மென்டருமான செல்வா அண்ணாவையும் இந்த நேரத்தில் நினைவுகூர விரும்புகிறேன். இன்று நான் இந்த மேடையில் நிற்பதற்கும், இந்தப் படத்தில் பணியாற்றியதற்கும் அவருடைய பங்கு மிகவும் முக்கியமானது.இந்தப் படம் திரையரங்கில் வெளியாகும் என்னுடைய முதல் படைப்பாக இருப்பதால், இது எனக்கு மிகவும் சிறப்பானதாகும். படக்குழுவினர் அனைவரும் மிகுந்த அர்ப்பணிப்புடன் உழைத்திருக்கிறார்கள். ரசிகர்கள் அனைவரும் திரையரங்குகளில் படம் பார்த்து உங்கள் கருத்துகளையும் விமர்சனங்களையும் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். உங்கள் ஆதரவும் அன்பும் எங்களுக்கு மிகவும் முக்கியமானது. அனைவருக்கும் நன்றி.”


ஒளிப்பதிவாளர் அரவிந்த் விஸ்வநாதன் பேசியதாவது:


“அனைவருக்கும் வணக்கம். இந்த மேடையில் நிற்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. முதலில் இந்த வாய்ப்பை எனக்கு வழங்கிய இயக்குநர் ஹரிஷ் அண்ணாவுக்கு மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.


நம்மைப் போன்ற மிடில் கிளாஸ் பின்னணியில் இருந்து வந்து, இன்று ஒரு இயக்குநராகவும் தயாரிப்பாளராகவும் ஹரிஷ் அண்ணா இந்த நிலையை அடைந்திருப்பதை பார்க்கும்போது மிகவும் பெருமையாக இருக்கிறது. அவருடைய பயணத்தை நெருக்கமாக பார்த்தவன் என்பதால், இந்தப் படம் எனக்கு மிகவும் தனிப்பட்ட மற்றும் உணர்வுபூர்வமான படைப்பாக இருக்கிறது.


இந்தப் படத்தின் மூலம் அர்ஜூன் தாஸ், யோகி பாபு, அன்னா பென் உள்ளிட்ட திறமையான கலைஞர்களுடன் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது. அவர்களுடன் இணைந்து வேலை செய்த அனுபவம் மிகவும் சிறப்பானது.


இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் சார் படத்திற்கு அற்புதமான இசையை வழங்கியுள்ளார். சமீபத்தில் வெளியான பாடல்கள் மற்றும் இசைத்துணுக்குகளைப் பார்த்தபோது, படத்தின் உலகம் இன்னும் அழகாக உயிர்பெற்றிருப்பதை உணர முடிந்தது.படத்தின் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவரும் ஒரே குடும்பமாக இணைந்து பணியாற்றினோம். கலை இயக்குநர் ராஜ்கமல், உடை வடிவமைப்பாளர் நவா, எடிட்டர் அருள் மோசஸ், நடன இயக்குநர் சந்தோஷ் உள்ளிட்ட அனைவரின் பங்களிப்பும் படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளது.


குறிப்பாக உதவி இயக்குநர்கள், கேமரா குழுவினர் மற்றும் பின்னணியில் உழைத்த அனைத்து தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். பல மணி நேரங்கள் இடைவிடாமல் உழைத்து இந்தப் படத்தை சிறப்பாக உருவாக்கியுள்ளனர்.


‘கான் சிட்டி’ திரைப்படம் எங்கள் அனைவரின் உழைப்பின் வெளிப்பாடு. ரசிகர்கள் அனைவரும் திரையரங்குகளில் வந்து படத்தைப் பார்த்து ஆதரவு அளிக்க வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். நன்றி.”


பாடலாசிரியர் மோகன் ராஜன் பேசியதாவது..,


“அனைவருக்கும் வணக்கம். குறிப்பாக பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடக நண்பர்கள் அனைவருக்கும் எனது வணக்கங்கள். இந்தப் படம் எனக்கு மிகவும் முக்கியமானது. இந்தப் படத்தின் வெற்றிக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன். அதற்கான முக்கிய காரணம் இயக்குநர் ஹரிஷ்.


ஹரிஷ் முதன்முதலில் இந்தக் கதையை என்னிடம் கூறிய தருணத்திலிருந்தே அந்தக் கதையுடன் நான் பயணிக்கத் தொடங்கிவிட்டேன். ஒரு தேநீர் கடை பெஞ்சில் அமர்ந்து, இந்தப் படத்தில் யார் யார் நடிக்கப் போகிறார்கள், எப்படி உருவாகப் போகிறது என்று கனவுகளோடு பேசிய நாட்கள் இன்று நினைவுக்கு வருகின்றன.


அர்ஜூன் தாஸ் சார், நீங்கள் இந்தக் கதையைக் கேட்டவுடன் சொன்ன முதல் ‘ஓகே’தான் இன்று இந்தப் படம் இந்த மேடையில் நிற்பதற்குக் காரணம். அதற்காக உங்களுக்கு மனமார்ந்த நன்றி. ஹரிஷ் சார்பாகவும் ஒரு பெரிய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தக் கதையை எழுதிய நாள் முதல், இந்தக் கதாபாத்திரத்திற்கு அவர் நினைத்த ஒரே நடிகர் நீங்கள் மட்டும்தான். அந்த அளவுக்கு உங்கள் மீது அவருக்கு நம்பிக்கை இருந்தது.

இந்தப் படம் உங்களுக்கு ஒரு கதாநாயகனாக மிகப்பெரிய வெற்றியைத் தரும் என்று நம்புகிறேன். நான் இந்தப் படத்தை பல முறை பார்த்திருக்கிறேன். ஒவ்வொரு முறையும் புதிதாக ஏதோ ஒரு ஆச்சரியத்தை அளித்திருக்கிறது.


யோகி பாபு அண்ணா இந்தப் படத்தில் அசத்தலான நடிப்பை வழங்கியிருக்கிறார். அவருடைய கதாபாத்திரம் ரசிகர்களிடம் பெரிய வரவேற்பைப் பெறும். ஷான் ரோல்டன் எனக்கு மிகவும் சிறப்பானவர். அவருடன் இணைந்து பணியாற்றிய பிறகுதான் ஒரு பாடலாசிரியராக எனது பெயர் பரவலாக கவனிக்கப்பட்டது என்று நான் நம்புகிறேன். எங்களது கூட்டணியில் உருவான பல பாடல்கள் மற்றும் படைப்புகள் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன.


‘கான் சிட்டி’ திரைப்படத்தில் மொத்தம் ஏழு பாடல்கள் உள்ளன. அவை கதையோடு இயல்பாக இணைந்து பயணிக்கும். குறிப்பாக சில பாடல்களை பழைய தமிழ் தத்துவப் பாடல்களின் உணர்வில் உருவாக்கியுள்ளோம். அதற்கான ஐடியாவை வழங்கிய ஹரிஷுக்கு நன்றி. அவர் மிகவும் நம்பிக்கையுடன் செயல்படும் படைப்பாளி. அவருடைய அடுத்தடுத்த படங்களிலும் தொடர்ந்து இணைந்து பணியாற்ற வேண்டும் என்பது என்னுடைய விருப்பம்.

வடிவுக்கரசி அம்மாவும், யோகி பாபு அண்ணாவும் இணைந்த காட்சிகள் ரசிகர்களை மிகவும் கவரும். வடிவுக்கரசி அம்மாவின் நடிப்பு எங்களை ஆச்சரியப்படுத்தியது. ஏற்கனவே அவருடைய ரசிகனாக இருந்த நான், இந்தப் படத்திற்குப் பிறகு இன்னும் பெரிய ரசிகனாக மாறிவிட்டேன்.இந்தப் படத்தின் அனைத்து தொழில்நுட்பக் கலைஞர்களும் மிகச் சிறப்பாக உழைத்துள்ளனர். எங்கள் முழு குழுவும் ஒரு குடும்பம் போல இணைந்து பணியாற்றியது இந்தப் படத்தின் மிகப்பெரிய பலம். இந்தப் படம் வெற்றி பெற்று, ஹரிஷின் முகத்தில் அந்த மகிழ்ச்சியைப் பார்ப்பதற்காக காத்திருக்கிறேன். ஒரு அண்ணன் தனது தம்பி வெற்றி பெறுவதைப் பார்ப்பது போல அந்த மகிழ்ச்சி இருக்கும்.அனைவருக்கும் எனது நன்றிகள். இந்தப் படம் வெற்றி பெற்று, வெற்றி விழாவில் மீண்டும் அனைவரையும் சந்திப்போம் என்ற நம்பிக்கையுடன் விடைபெறுகிறேன். நன்றி.”



நடிகர் VTV கணேஷ் பேசியதாவது..,  


“அனைவருக்கும் வணக்கம். குறிப்பாக பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடக நண்பர்களுக்கு என் அன்பான வணக்கங்கள்.‘கான் சிட்டி’ எனக்கு மிகவும் வித்தியாசமான அனுபவமாக அமைந்த படம். இதற்கு முன்பு இதுபோன்ற கதைக்களத்தில் நான் நடித்ததில்லை. இயக்குநர் ஹரிஷ் என்னை அணுகிய விதமே மிகவும் தனித்துவமாக இருந்தது. பொதுவாக புதிய இயக்குநர்களுக்கு நான் எப்போதும் முன்னுரிமை கொடுப்பேன். ஏனெனில் அவர்களிடம் புதிய சிந்தனைகளும் புதிய பார்வைகளும் இருக்கும்.


ஹரிஷ் கதையை சொல்ல வந்தபோது, முதலில் நான் கேட்டது ‘தயாரிப்பாளர் யார்?’ என்பதுதான். இன்று ஒரு படத்தை ஆரம்பிப்பது எளிது. ஆனால் அதை முடித்து, திரையரங்குகளுக்கு கொண்டு வந்து சேர்ப்பது மிகப் பெரிய விஷயம். அந்த நம்பிக்கை இருக்கிறதா என்பதுதான் முக்கியம். ஹரிஷ் அந்த நம்பிக்கையையும் தைரியத்தையும் எனக்கு கொடுத்தார்.


அர்ஜூன் தாஸ், யோகி பாபு உள்ளிட்ட பல திறமையான கலைஞர்கள் படத்தில் இருப்பதாக சொன்னபோது மேலும் நம்பிக்கை ஏற்பட்டது. படத்தின் தயாரிப்பிலும், திட்டமிடலிலும் எந்த சமரசமும் இல்லாமல் செயல்பட்டார்கள். அதுவே என்னை இந்தப் படத்தில் இணைத்தது.


இந்தப் படத்தின் மிகப்பெரிய பலம் ஹரிஷின் தெளிவான பார்வை. அவருக்கு என்ன வேண்டும் என்பது தெளிவாக தெரியும். தேவையில்லாத விஷயங்களைச் செய்யாமல், காட்சிகளைத் துல்லியமாக திட்டமிட்டு எடுத்தார். ஒரு நாள் முன்னதாகவே என் பணிகளை முடித்து அனுப்பிய அளவுக்கு திட்டமிடல் இருந்தது.


படத்தில் உருவாக்கப்பட்டுள்ள ‘கான் சிட்டி’ உலகம் மிகவும் சுவாரஸ்யமானது. அது சாதாரண நகரம் அல்ல. அதன் உள்ளே என்ன நடக்கிறது, அங்கே இருக்கும் மனிதர்கள் எப்படி வாழ்கிறார்கள் என்பதைக் கற்பனை மற்றும் நகைச்சுவையுடன் சொல்லியிருக்கிறார் இயக்குநர். சில உண்மை சம்பவங்களையும் அடிப்படையாகக் கொண்டு அந்த உலகத்தை உருவாக்கியிருக்கிறார்.


ஒளிப்பதிவாளர் அரவிந்த் விஸ்வநாதனின் பணியை நான் குறிப்பாக பாராட்ட விரும்புகிறேன். அவருடைய அணுகுமுறை, காட்சிகளைப் பார்க்கும் விதம் மற்றும் படத்தின் தோற்றத்தை உருவாக்கிய விதம் மிகவும் சிறப்பாக இருந்தது. இன்றைய தலைமுறையின் திறமையான ஒளிப்பதிவாளர்களில் ஒருவராக அவர் வளர்வார் என்று நம்புகிறேன்.

அதேபோல் எடிட்டர் அருள் மோசஸ் முதல் படமென்று சொல்ல முடியாத அளவுக்கு அற்புதமாக பணியாற்றியிருக்கிறார். அவரது படத்தொகுப்பு மிகுந்த தரத்துடன் உள்ளது. படத்தின் வேகத்தையும், சுவாரஸ்யத்தையும் அவர் சிறப்பாக கையாண்டிருக்கிறார்.


அர்ஜூன் தாஸ் ஒரு நடிகராக தொடர்ந்து புதிய உயரங்களை அடைந்து வருகிறார். இந்தப் படம் அவருக்கு மிகப்பெரிய வெற்றியைத் தரும். யோகி பாபு, வடிவுக்கரசி அம்மா மற்றும் மற்ற அனைத்து நடிகர்களும் தங்களுடைய கதாபாத்திரங்களை சிறப்பாக உயிர்ப்பித்துள்ளனர்.

இன்று ஒரு திரைப்படத்தை உருவாக்குவதைக் காட்டிலும் அதை திரையரங்குகளில் வெளியிடுவது மிகப்பெரிய சவாலாக உள்ளது. அந்த சவாலை வென்று ‘கான் சிட்டி’ இன்று ரசிகர்களை சந்திக்க வருகிறது. அதற்காக ஹரிஷையும் படக்குழுவினரையும் மனதார பாராட்டுகிறேன்.


இந்தப் படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்று, படக்குழுவினரின் உழைப்புக்கு உரிய அங்கீகாரம் கிடைக்க வேண்டும். ரசிகர்கள் அனைவரும் திரையரங்குகளில் வந்து படம் பார்த்து ஆதரவு அளிக்க வேண்டும். அனைவருக்கும் நன்றி.”


நடிகர் அருள்தாஸ் பேசியதாவது:


“அனைவருக்கும் வணக்கம். ‘கான் சிட்டி’ படக்குழுவுடன் பணியாற்றிய அனுபவம் எனக்கு மிகவும் மகிழ்ச்சியானதாக இருந்தது. இந்தக் குழுவில் பெரும்பாலானோர் இளம் தலைமுறையைச் சேர்ந்தவர்கள். வெளியிலிருந்து பார்க்கும்போது ஒரு கல்லூரி ஆண்டு விழா குழுவைப் போல தோன்றலாம். ஆனால் அவர்கள் அனைவரும் அனுபவம் மிக்க, திறமையான தொழில்முறை கலைஞர்கள். அதுதான் இந்தக் குழுவின் மிகப்பெரிய பலம்.

இயக்குநர் ஹரிஷைப் பற்றி சொல்ல வேண்டுமென்றால், அவருக்கு என்ன தேவை என்பது மிகவும் தெளிவாகத் தெரியும். தேவையற்ற காட்சிகளை எடுக்காமல், கதைக்கு அவசியமானவற்றை மட்டும் துல்லியமாக படமாக்குவார். அதனால் படப்பிடிப்பு மிகவும் சீராகவும், கலைஞர்களுக்கு சோர்வில்லாமலும் நடைபெற்றது.


இன்றைய டிஜிட்டல் காலத்தில் ஒரே காட்சியை பல கோணங்களில் படமாக்குவது வழக்கமாகிவிட்டது. ஆனால் ஹரிஷ் அப்படியில்லை. கதைக்குத் தேவையானதை மட்டும் எடுத்து, நேரத்தை வீணாக்காமல் பணியாற்றினார். அதுதான் அவருடைய பலம்.

ஒளிப்பதிவாளர் அரவிந்த் விஸ்வநாதன், உடை வடிவமைப்பாளர் நவா மற்றும் மற்ற தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவரும் தங்களது பணியை மிகச் சிறப்பாகச் செய்துள்ளனர். ஒவ்வொருவரும் படத்தின் தரத்தை உயர்த்தியுள்ளனர்.


அர்ஜூன் தாஸுடன் இது எனது முதல் படம் அல்ல. ஏற்கனவே அவருடன் பணியாற்றிய அனுபவம் உள்ளது. இந்தப் படத்திலும் அவர் மிகுந்த அர்ப்பணிப்புடன் நடித்திருக்கிறார். ஹரிஷ் பல நல்ல திரைப்படங்களில் பணியாற்றி அனுபவம் பெற்றவர். அந்த அனுபவம் இந்தப் படத்தில் தெளிவாக வெளிப்பட்டிருக்கிறது.படப்பிடிப்பு மிகவும் ஒழுங்காக நடந்தது. திட்டமிட்ட காலக்கெடுவிற்குள் அனைத்து பணிகளும் முடிக்கப்பட்டன. டப்பிங் உள்ளிட்ட பணிகளும் விரைவாக நிறைவடைந்தன. படத்தைப் பார்த்தபோது எனக்கு முழுமையான திருப்தி கிடைத்தது.நான் எந்தப் படத்தில் நடித்தாலும், கதாபாத்திரம் பெரியதா, சிறியதா என்பதைப் பார்ப்பதில்லை. அந்தக் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் இருக்கிறதா என்பதைத்தான் பார்க்கிறேன். இந்தப் படத்தில் நான் ஒரு மின்வாரிய அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். அது மிகவும் சுவாரஸ்யமான மற்றும் கதைக்கு முக்கியத்துவம் வாய்ந்த பாத்திரமாக அமைந்துள்ளது.இந்தக் குழு தமிழ் சினிமாவின் எதிர்காலத்தில் முக்கியமான இடத்தைப் பிடிக்கும் என்று நம்புகிறேன். புதிய படைப்பாளிகளும், புதிய தொழில்நுட்பக் கலைஞர்களும் தொடர்ந்து வருவதால்தான் நம் சினிமா வளர்கிறது. ‘கான் சிட்டி’ திரைப்படம் அந்த வகையில் பல திறமைகளை வெளிக்கொண்டு வரும்.ஷான் ரோல்டன் மற்றும் மோகன் ராஜன் ஆகியோரின் கூட்டணி தொடர்ந்து சிறந்த படைப்புகளை வழங்கி வருகிறது. இந்தப் படத்திலும் அவர்கள் மிகச் சிறப்பாகப் பணியாற்றியுள்ளனர்.இந்தப் படம் மிகப்பெரிய வெற்றி பெற்று, இயக்குநர் ஹரிஷுக்கு தமிழ் சினிமாவில் ஒரு சிறந்த இயக்குநராகவும், தயாரிப்பாளராகவும் பெரிய அங்கீகாரத்தை பெற்றுத் தர வேண்டும் என்று மனதார வாழ்த்துகிறேன். அனைவருக்கும் நன்றி.”


இமான் அண்ணாச்சி பேசியதாவது:


“அனைவருக்கும் என்னுடைய அன்பான வணக்கங்கள். ‘கான் சிட்டி’ திரைப்படத்தில் நானும் ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். அந்தக் கதாபாத்திரத்திற்கு என்னைத் தேர்வு செய்த இயக்குநர் ஹரிஷுக்கு முதலில் என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.


படப்பிடிப்பு தளத்திற்கு முதன்முதலில் வந்தபோது, இளம் தலைமுறையினரின் ஆற்றல் நிறைந்த ஒரு சூழல் அங்கே இருந்தது. கேமராமேன் முதல் உதவி இயக்குநர்கள் வரை அனைவரும் மிகுந்த உற்சாகத்துடனும் அர்ப்பணிப்புடனும் பணியாற்றிக் கொண்டிருந்தார்கள். அந்த சூழலைப் பார்த்தபோது, ஒரு கல்லூரி வளாகத்தில் இருப்பது போன்ற உணர்வு ஏற்பட்டது.


ஒரு கட்டத்தில் இயக்குநரிடமே நான் கேட்டேன், ‘இந்தக் கதாபாத்திரத்திற்கு என்னைத் தேர்வு செய்தது சரியான முடிவா?’ என்று. அதற்கு அவர், ‘இந்தக் கதாபாத்திரத்தை எழுதும்போதே உங்களை மனதில் வைத்துத்தான் எழுதியிருக்கிறேன்’ என்று சொன்னார். அந்த வார்த்தை எனக்கு மிகுந்த மகிழ்ச்சியையும் நம்பிக்கையையும் அளித்தது.


அர்ஜூன் தாஸ் இந்தப் படத்திற்காக மிகுந்த அர்ப்பணிப்புடன் உழைத்திருக்கிறார். குறிப்பிட்ட சில காட்சிகளுக்காக அவர் எடுத்துக்கொண்ட முயற்சியும் பொறுமையும் பாராட்டத்தக்கது. எந்தவொரு தோற்றத்தையும், எந்தவொரு கதாபாத்திரத்தையும் முழுமையாக ஏற்று நடிப்பவர். இந்தப் படம் அவருக்கு மிகப்பெரிய வெற்றியைத் தரும் என்று நம்புகிறேன்.


வடிவுக்கரசி அம்மா, யோகி பாபு மற்றும் மற்ற அனைத்து நடிகர்களுடனும் இணைந்து பணியாற்றிய அனுபவம் மிகவும் மகிழ்ச்சியானது. படப்பிடிப்பு தளத்தில் எப்போதும் ஒரு குடும்ப உணர்வு இருந்தது.


இந்தப் படத்தின் தொழில்நுட்பக் குழுவினர் அனைவரும் கடினமாக உழைத்துள்ளனர். அவர்களின் உழைப்பும் அர்ப்பணிப்பும் படத்தின் ஒவ்வொரு காட்சியிலும் தெரியும். குறிப்பாக இயக்குநர் ஹரிஷின் முயற்சியும், இந்தப் படத்தை உருவாக்க அவர் எடுத்த உழைப்பும் பாராட்டப்பட வேண்டிய ஒன்று.


‘கான் சிட்டி’ திரைப்படம் ஒரு பவர்ஃபுல் எண்டர்டெயினராக ரசிகர்களை கவரும். மக்கள் அனைவரும் திரையரங்குகளுக்கு வந்து படத்தைப் பார்த்து ஆதரவு அளிக்க வேண்டும். இந்தப் படம் மிகப்பெரிய வெற்றி பெற்று, படக்குழுவினரின் உழைப்புக்கு உரிய பலனைப் பெற்றுத்தர வேண்டும் என்று மனதார வாழ்த்துகிறேன். அனைவருக்கும் நன்றி.”


நடிகர் சதானந்த் பேசியதாவது..,


“அனைவருக்கும் மாலை வணக்கம். என் பெயர் சதானந்த். இது எனது முதல் திரைப்படம், முதல் மேடை அனுபவம். முதலில் டிரைலரைப் பார்த்து ஆதரவு அளித்த அனைவருக்கும் நன்றி.


இந்த வாய்ப்புக்காக நான் முதலில் நன்றி சொல்ல வேண்டியவர் இயக்குநர் ஹரிஷ். கடந்த மூன்றரை ஆண்டுகளாக அவரை எனக்குத் தெரியும். இந்தக் கதையின் பயணமும் ஆரம்பத்திலிருந்தே அவருடன் இருந்திருக்கிறது. ஒரு நாள் திடீரென்று என்னை அழைத்து, ‘இந்த ஸ்கிரிப்ட்டில் ஒரு கதாபாத்திரம் இருக்கிறது, நீ நடிக்கிறாயா?’ என்று கேட்டார். நான் உடனே சம்மதித்தேன். அப்படித்தான் இந்தப் படத்தில் என் பயணம் தொடங்கியது.


நடிப்பில் எனக்கு உதவியாக ஒரு தனிப்பட்ட பயிற்சியாளர் இருந்தார். படப்பிடிப்புக்கு முன்பு ஒரு வார காலம் வசனங்களைப் பயிற்சி செய்து, மனப்பாடம் செய்து தயாரானேன். ஆனால் படப்பிடிப்பு தளத்தில் சில நேரங்களில் புதிதாக வசனங்கள் கொடுக்கப்பட்டன. சில நிமிடங்களிலேயே அதை மனப்பாடம் செய்து நடிக்க வேண்டிய சூழல் இருந்தது. அது எனக்கு சவாலாக இருந்தாலும், மிகச் சிறந்த அனுபவமாக அமைந்தது.


அர்ஜூன் தாஸ் சார் என்னுடன் நடித்தபோது மிகவும் ஆதரவாக இருந்தார். ஒரு புதிய நடிகராக நான் வசதியாக உணரும்படி சூழலை உருவாக்கிக் கொடுத்தார். அதற்காக அவருக்கு என் நன்றிகள்.


இமான் அண்ணாச்சி சார், யோகி பாபு அண்ணா உள்ளிட்ட மூத்த கலைஞர்களுடன் இணைந்து பணியாற்றியதும் மறக்க முடியாத அனுபவமாக இருந்தது. யோகி பாபு அண்ணா எப்போதும் அன்பாகவும் ஊக்கமாகவும் பழகினார். அது எனக்கு தன்னம்பிக்கையை அதிகரித்தது.


இந்தப் படத்தில் பணியாற்றிய ஒவ்வொரு நாளும் எனக்கு ஒரு புதிய பாடமாக இருந்தது. இந்த வாய்ப்பை வழங்கிய இயக்குநர் ஹரிஷ் மற்றும் முழு படக்குழுவினருக்கும் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.


டிரைலருக்கு நீங்கள் கொடுத்த ஆதரவைப் போலவே, திரைப்படத்தையும் திரையரங்குகளில் பார்த்து ஆதரவு அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். பத்திரிகையாளர்கள், ஊடக நண்பர்கள் மற்றும் ரசிகர்கள் அனைவருக்கும் என் நன்றிகள். நன்றி.”


குழந்தை நட்சத்திரம் அகிலன் பேசியதாவது:


“அனைவருக்கும் வணக்கம். என் பெயர் அகிலன். ‘கான் சிட்டி’ திரைப்படத்தில் நான் ஒரு மிகவும் சுவாரஸ்யமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். அந்தக் கதாபாத்திரம் உங்களுக்கு பிடிக்கும் என்று நம்புகிறேன். படத்தைப் பார்த்துவிட்டு உங்கள் கருத்துகளை சொல்லுங்கள்.


இந்த வாய்ப்பை எனக்கு வழங்கிய இயக்குநர் ஹரிஷ் அங்கிளுக்கு என் மனமார்ந்த நன்றிகள். அதேபோல் இந்தப் படத்தில் நடித்த அனைத்து நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். படத்தை திரையரங்குகளில் பார்த்து ஆதரவு அளிக்குமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன். நன்றி.”


Maali & Manvi Movie Makers  தயாரிப்பாளர் சித்து நாயர் பேசியதாவது.., 


“அனைவருக்கும் இனிய மாலை வணக்கம். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடக நண்பர்கள் அனைவருக்கும் முதலில் எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.


இன்று பலரும் இந்தப் படம் தங்களுடைய முதல் அனுபவம் என்று கூறினார்கள். அதுபோல, ஒரு இணைத் தயாரிப்பாளராக இது எனக்கும் முதல் திரைப்பட அனுபவம். எங்கள் நிறுவனம் திரைப்படத் துறையில் இருந்தாலும், ஒரு திரைப்படத்தின் திரைக்கதையை நேரடியாகக் கேட்டு அதில் முதலீடு செய்வது எனக்கு இதுவே முதல் முறை.


ஒரு நாள் எனது குழுவினர் மூலமாக இயக்குநர் ஹரிஷைப் பற்றி கேள்விப்பட்டேன். அவர் ஒரு திரைப்படம் உருவாக்கிக் கொண்டிருக்கிறார், ஒரு இணைத் தயாரிப்பாளரைத் தேடுகிறார் என்று கூறினார்கள். அதன்பிறகு அவரைச் சந்திக்கச் சென்றேன். வாழ்க்கையில் முதல் முறையாக ஒரு திரைக்கதையை முழுமையாகக் கேட்கப் போகிறேன் என்ற அனுபவம் அது.


இரவு நேரத்தில் அவரது அலுவலகத்திற்கு சென்றோம். ஹரிஷ் கதையை விவரிக்கத் தொடங்கினார். முதல் பாதி கதையைச் சொல்லவே சுமார் 45 நிமிடங்கள் எடுத்துக்கொண்டார். நான் அப்போது அவரிடம், ‘பட்ஜெட் மற்றும் நிதி விஷயங்களைப் பற்றி பேசலாமா?’ என்று கேட்டேன். ஆனால் அவர், ‘இன்னும் இரண்டாம் பாதி இருக்கிறது. அதையும் கேட்ட பிறகு பேசலாம்’ என்றார்.


பொதுவாக பேச்சுவார்த்தைகளில் ஒருவருடைய ஆர்வத்தை வெளிப்படுத்தக்கூடாது என்று சொல்வார்கள். ஆனால் அந்தக் கதையை கேட்டபோது நான் மிகவும் ஈர்க்கப்பட்டேன். அது எனது முதல் திரைக்கதை அனுபவமாக இருந்தாலும், அந்தக் கதையில் இருந்த ஆழத்தை என்னால் உணர முடிந்தது. ஹரிஷின் சிந்தனையின் தெளிவும், கதையின் மீதான நம்பிக்கையும் என்னை மிகவும் கவர்ந்தது.


குறிப்பாக, இயக்குநராக மட்டுமல்லாமல் தயாரிப்பாளராகவும் அவர் இந்தப் படத்தில் ஈடுபட்டிருந்தது, தனது படைப்பின் மீது அவருக்கு இருந்த நம்பிக்கையை வெளிப்படுத்தியது. அதுவே எனக்கும் தைரியம் கொடுத்தது. அந்த இரவு நாங்கள் கைகுலுக்கி, இந்தப் பயணத்தை ஒன்றாகத் தொடங்க முடிவு செய்தோம்.


அதன்பிறகு ஒரு கேள்வி எனக்குள் இருந்தது. ‘கதையை இவ்வளவு நன்றாகச் சொல்கிறார். ஆனால் அதையே திரையில் வெற்றிகரமாக கொண்டு வர முடியுமா?’ என்பதுதான் அது. ஆனால் படப்பிடிப்பு தளத்திற்கு சென்றபோது அந்த சந்தேகம் முற்றிலும் நீங்கிவிட்டது. அங்கே இருந்த ஆற்றல், ஒழுங்கு, அர்ப்பணிப்பு மற்றும் தொழில்முறை அணுகுமுறை எனக்கு மிகுந்த நம்பிக்கையை அளித்தது.


அந்த தருணத்திலேயே இந்தப் படம் வெற்றி பெறும் என்று உறுதியாக நம்பினேன். பின்னர் படத்தின் முன்னோட்ட காட்சியை பார்த்தபோது நான் உண்மையிலேயே ஆச்சரியமடைந்தேன். படம் என்னுடைய எதிர்பார்ப்புகளைத் தாண்டி இருந்தது.


இந்தப் படம் ஒரு சிறந்த உள்ளடக்கத்துடன் உருவாகியிருக்கிறது. இதுபோன்ற திரைப்படங்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடக நண்பர்களின் பங்கு மிகவும் முக்கியமானது. ஒரு திரைப்படத்தின் எதிர்காலத்தை தீர்மானிப்பதில் நீங்கள் மிகப்பெரிய சக்தியாக இருக்கிறீர்கள். எனவே இந்தப் படத்தைப் பார்த்து, அதன் தரத்தை மக்களிடம் கொண்டு சேர்க்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். ரசிகர்கள் அனைவரும் இந்தப் படத்தை திரையரங்குகளில் பார்த்து மகிழ்வார்கள் என்று உறுதியாக நம்புகிறேன். மீண்டும் ஒருமுறை அனைவருக்கும் என் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். நன்றி.”


Klout Studios தயாரிப்பாளர் அருண் பிரஜித் மனோகரன்  பேசியதாவது:


“அனைவருக்கும் வணக்கம். பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடக நண்பர்கள் பலருக்கும் என்னை ஏற்கனவே தெரியும். கடந்த பல ஆண்டுகளாக திரைப்படங்களில் Executive Producer ஆகவும், தயாரிப்பு நிர்வாகப் பொறுப்புகளிலும் பணியாற்றி வருகிறேன். நடிகர்கள் மற்றும் தயாரிப்பு தொடர்பான பல பணிகளில் இருந்த அனுபவம் எனக்கு உள்ளது.


நீண்ட நாட்களாக ஒரு திரைப்படத்தைத் தயாரிக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. அப்படியொரு நேரத்தில் ஒரு நாள் இரவு ஹரிஷ் என்னை தொடர்புகொண்டு சந்திக்க வேண்டும் என்றார். முதலில் கதை கேட்கும் மனநிலையில் நான் இல்லை. ‘நான் கதை கேட்க மாட்டேன், கதையை மட்டும் படிக்க கொடு’ என்று சொன்னேன். ஆனால் அந்த சந்திப்பே இந்தப் படத்தின் தொடக்கமாக மாறியது.


ஹரிஷ் கதையை முழுமையாகச் சொன்ன பிறகு, நான் திட்டமிட்டு வைத்திருந்த பல விஷயங்களை மறந்துவிட்டு உடனடியாக ‘நான் இந்தப் படத்தில் இருக்கிறேன்’ என்று கூறிவிட்டேன். அந்த அளவுக்கு அந்தக் கதை என்னை ஈர்த்தது.


இந்தக் கதையின் மிகப்பெரிய பலம், அது அனைவருடைய வாழ்க்கையுடனும் தொடர்புபடுத்திக்கொள்ளக்கூடியதாக இருப்பதுதான். பணம் என்ற விஷயம் மனித வாழ்க்கையில் தவிர்க்க முடியாத ஒன்று. அதைப் பற்றியே படம் மிகவும் சுவாரஸ்யமாக பேசுகிறது. அதனால் இந்தக் கதை அனைவரையும் எளிதில் சென்றடையும் என்று நம்புகிறேன்.


படப்பிடிப்பு காலத்தில் நான் அடிக்கடி செட்டுக்குச் செல்லவே இல்லை. ஹரிஷ் மீது எனக்கு அந்த அளவுக்கு நம்பிக்கை இருந்தது. படத்தின் முன்னோட்டக் காட்சியை பார்த்த பிறகு அந்த நம்பிக்கை இன்னும் பல மடங்கு அதிகரித்தது. இந்தப் படம் நிச்சயமாக பெரிய வெற்றி பெறும் என்ற உறுதி எனக்கு ஏற்பட்டது.


அர்ஜூன் தாஸும் நானும் சுமார் பன்னிரண்டு ஆண்டுகளாக நண்பர்கள். கைதி படத்திற்கு முன்பே நாங்கள் சந்தித்து, நல்ல படங்கள் செய்ய வேண்டும் என்று கனவு கண்டவர்கள். அந்தப் பயணத்தில் இன்று ‘கான் சிட்டி’ போன்ற ஒரு படத்தில் இணைந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்தப் படம் அர்ஜூன் தாஸின் திரைப்பயணத்தில் மிக முக்கியமான மைல்கல்லாக இருக்கும். இதுவரை பார்த்திராத ஒரு புதிய அர்ஜூன் தாஸை ரசிகர்கள் இதில் காண்பார்கள். இந்தப் படம் அவருக்கு ஒரு மிகப்பெரிய வெற்றியைத் தரும் என்று நம்புகிறேன்.


வடிவுக்கரசி அம்மா, அகிலன், அருள்தாஸ், சதானந்த் மற்றும் மற்ற அனைத்து நடிகர்களும் அசத்தலான நடிப்பை வழங்கியுள்ளனர். ஒளிப்பதிவாளர் அரவிந்த் விஸ்வநாதன், கலை இயக்குநர் ராஜ்கமல், எடிட்டர் அருள் மோசஸ் உள்ளிட்ட தொழில்நுட்பக் குழுவினரின் உழைப்பு படத்தின் தரத்தை மேலும் உயர்த்தியுள்ளது.


இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் மற்றும் பாடலாசிரியர் மோகன் ராஜன் இணைந்து அற்புதமான பாடல்களை வழங்கியுள்ளனர். ஒவ்வொரு பாடலும் தனித்துவமாகவும் மனதில் நிற்கக்கூடிய வகையிலும் அமைந்துள்ளது.


‘கான் சிட்டி’ ஒரு குடும்பத்தோடு அமர்ந்து ரசிக்கக்கூடிய பொழுதுபோக்கு திரைப்படம். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ரசிக்கக்கூடிய அம்சங்கள் இதில் இருக்கின்றன. மேலும், இன்றைய சமூகத்தில் நடக்கும் பல விஷயங்களோடு இந்தக் கதை மக்களை எளிதில் இணைத்துக்கொள்ளும்.


நல்ல உள்ளடக்கம் கொண்ட படங்களுக்கு நீங்கள் எப்போதும் ஆதரவு அளித்து வருகிறீர்கள். அதேபோல் இந்தப் படத்தையும் மக்களிடம் கொண்டு சேர்ப்பீர்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது. ஜூன் 26ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் ‘கான் சிட்டி’ திரைப்படத்தை அனைவரும் ஆதரிக்க வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். அனைவருக்கும் நன்றி.”


டெல்டா ஸ்டுடியோஸ் முத்துக்குமார் ஐயப்பன் பேசியதாவது:


“அனைவருக்கும் வணக்கம். முதலில் இயக்குநர் ஹரிஷுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். படத்தைப் பார்த்த பிறகு எங்களுக்கு மிகவும் நம்பிக்கை ஏற்பட்டது. குறிப்பாக பிரிவியூ காட்சி பார்த்த மறுநாள் காலையிலேயே இந்தப் படத்தின் மீது முழு நம்பிக்கை உறுதியானது.


ஹரிஷின் உழைப்பும், படத்தின் தரமும் எங்களை மிகவும் கவர்ந்தது. இந்தப் படத்திற்கு அனைவரும் ஆதரவு அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். நன்றி.”


இது இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் பேசிய உரை.


இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் பேசியதாவது:


அனைவருக்கும் வணக்கம். பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடக நண்பர்கள் அனைவரையும் சந்திப்பதில் மிகுந்த மகிழ்ச்சி. ‘கான் சிட்டி’ பற்றி பேசுவதற்கு முன், முதலில் இயக்குநர் ஹரிஷைப் பற்றி பேச வேண்டும் என்று நினைக்கிறேன்.


பொதுவாக நான் மிகவும் டென்ஷன் ஆகும் மனிதன். ஒரு படத்தின் வெளியீடு என்றாலே எனக்கு அதிகமான பதற்றம் இருக்கும். ஆனால் ‘கான் சிட்டி’ குறித்து ஹரிஷ் முதன் முதலில் என்னிடம் பேசியபோது, எல்லோருக்கும் இருந்த சந்தேகங்களே எனக்கும் இருந்தன. ‘இதை உண்மையில் செய்ய முடியுமா? இவ்வளவு பெரிய கனவை நிறைவேற்ற முடியுமா?’ என்ற கேள்விகள் இருந்தன.


ஆனால் நான் வாழ்க்கையில் முதல் முறையாக ஒரு இயக்குநரை சந்தித்தேன்; அவர் கதை சொன்னபோது எந்த அளவுக்கு நம்பிக்கையுடன் பேசினாரோ, இறுதியில் படத்தைப் பார்த்தபோது அதே விஷயம் ஒரு அங்குலம் கூட மாறாமல் திரையில் இருந்தது. அவர் சொன்னதை அப்படியே நிறைவேற்றியிருந்தார். அதற்காக ஹரிஷை நான் மனதார பாராட்டுகிறேன்.


இயக்குநராக மட்டுமல்ல, தனது சொந்த கனவுக்காக தனது சொந்த முதலீட்டுடன் களம் இறங்கியவர் ஹரிஷ். ஒரு கனவு காண்பது எளிது. ஆனால் அந்தக் கனவுக்காக தனது பணத்தையும், வாழ்க்கையையும், நேரத்தையும் பணயம் வைத்து போராடுவது மிகவும் கடினம். அந்த தைரியம் எனக்கு மிகவும் ஊக்கமளித்தது. ஹரிஷ் எனக்கு ஒரு நண்பரைத் தாண்டி ஒரு இன்ஸ்பிரேஷன்.


இந்தப் படத்தின் பயணத்தை ஆரம்பம் முதல் பார்த்திருக்கிறேன். இந்த மேடையில் நிற்கும்போது, டிரைலரைப் பார்க்கும்போது கூட எனக்கு உணர்ச்சிவசப்பட வைத்தது. ஏனெனில் அந்த சிரிப்பின் பின்னால் எத்தனை தூக்கமில்லா இரவுகள், எத்தனை போராட்டங்கள் இருக்கின்றன என்பது எனக்கு தெரியும்.


இந்தப் படம் இந்த அளவுக்கு உருவாகியதற்கு அர்ஜூன் தாஸ் மிக முக்கிய காரணம். இந்தக் கதைக்கு தேவையான பாரமும், ஆளுமையும் அவரிடம் இயல்பாகவே இருக்கிறது. நான் அவருடன் பணியாற்றியபோது ஒரு விஷயத்தை உணர்ந்தேன். இந்தத் துறையில் திறமைசாலிகள் பலர் இருக்கிறார்கள். ஆனால் சிலருக்கே ஒரு தனி இடம் கிடைக்கிறது. அதற்கு காரணம் அவர்களுடைய மனசாட்சியும் நேர்மையும். அர்ஜூனிடம் அந்தத் தூய்மை இருக்கிறது. இந்தப் படம் அவருக்கான அந்த அடுத்த கட்டத்தை உறுதிப்படுத்தும் என்று நம்புகிறேன்.


அன்னா பென் ஒரு அற்புதமான கலைஞர். வடிவுக்கரசி அம்மா ஒரு லெஜண்ட். 80களின் தமிழ் சினிமாவை நேசிக்கும் ஒருவராக, அவருடன் பணியாற்றியது எனக்கு மிகப்பெரிய மகிழ்ச்சி. திரையில் அவர் தோன்றும் ஒவ்வொரு காட்சிக்கும் ஒரு தனி எடை இருக்கிறது.


யோகி பாபு பற்றி சொல்ல வேண்டுமென்றால், அவரிடம் ஒரு தெய்வீகமான வரம் இருக்கிறது என்று நான் நம்புகிறேன். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை, யார் அவரைப் பார்த்தாலும் முகத்தில் சிரிப்பு வந்து விடுகிறது. அது சாதாரண விஷயம் அல்ல. அவர் இந்த இடத்தை அடைய எவ்வளவு கஷ்டப்பட்டார் என்பதை அவரிடமிருந்தே கேட்டிருக்கிறேன். அந்தப் பயணம் மிகவும் ஊக்கமளிக்கிறது.


இந்தப் படத்தில் நடித்த ஒவ்வொருவரும், சிறிய குழந்தை முதல் அருள்தாஸ் சார், இமான் அண்ணாச்சி, சதானந்த் என அனைவரும் தங்களுடைய முழு ஆற்றலையும் கொடுத்திருக்கிறார்கள். அந்த அர்ப்பணிப்பால்தான் இந்த இசையும், இந்த உலகமும் உயிர் பெற்றிருக்கிறது.


பாடலாசிரியர் மோகன் ராஜனுடன் சேர்ந்து இந்தப் படத்தில் பணியாற்றியது மிகப்பெரிய அனுபவம். இன்னும் வெளியாகாத இரண்டு பாடல்கள் இருக்கின்றன. அவற்றைப் பற்றி நான் மிகவும் பெருமைப்படுகிறேன். பழைய தமிழ் சினிமாவின் தத்துவப் பாடல்களின் ஆன்மாவை மீண்டும் கொண்டு வர வேண்டும் என்ற ஆசை எங்களுக்குள் இருந்தது. அந்த எண்ணத்தை ஹரிஷ் முன்வைத்தார். அதன் அடிப்படையில் உருவான அந்த இரண்டு பாடல்கள் எனது இசைப் பயணத்தில் மிகவும் முக்கியமானவை.


பதின்மூன்று ஆண்டுகளாக நான் தமிழ் சினிமாவில் இசையமைத்து வருகிறேன். ஆனால் இந்த இரண்டு பாடல்கள் குறித்து எனக்கு ஒரு தனிப்பட்ட பெருமை இருக்கிறது. அந்த பெருமையில் பாதி பங்கு மோகன் ராஜனுக்கும், பாதி பங்கு ஹரிஷுக்கும் சொந்தமானது.



“விஜய் பற்றி குறிப்பாக சொல்ல வேண்டும். அவர் ஒரு தனித்துவமான மனிதர். தனக்காக செய்யக்கூடிய விஷயங்களைத் தாண்டி, இன்று முழு சினிமா துறைக்காகவே பல நல்ல விஷயங்களைச் செய்ய முன்வந்திருக்கிறார். அவர் எங்கு இருந்தாலும் மகிழ்ச்சியையும் நேர்மறை எண்ணங்களையும் பரப்பக்கூடியவர். மிகவும் தூய்மையான மனம் கொண்டவர். நல்ல நோக்கங்களோடு செயல்படுபவர். அவருடன் இணைந்து பணியாற்றியது எனக்கு மகிழ்ச்சியான அனுபவம். மீண்டும் அவருடன் பணியாற்றப் போவதிலும் சந்தோஷமாக இருக்கிறேன்.


‘கான் சிட்டி’ ரசிகர்களுக்கு சிரிப்பையும், மகிழ்ச்சியையும், திருப்தியையும் தரும். அதே நேரத்தில் நாம் வாழும் சமூகத்தைப் பற்றியும் ஒரு சிந்தனையை ஏற்படுத்தும். பொழுதுபோக்குடன் ஒரு கருத்தையும் சொல்லக்கூடிய திரைப்படமாக இது இருக்கும்.  ‘கான் சிட்டி’ ஒரு சாதாரண திரைப்படம் அல்ல. இது பலருடைய கனவுகள், உழைப்பு, நம்பிக்கை ஆகியவற்றின் விளைவு. ஜூன் 26ஆம் தேதி திரையரங்குகளில் படம் வெளியாகிறது. அனைவரும் குடும்பத்துடன் வந்து படத்தைப் பார்த்து ஆதரவு அளிக்க வேண்டும். நன்றி.”


நடிகை வடிவுக்கரசி பேசியதாவது..,


“பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடக நண்பர்கள் அனைவருக்கும் என் வணக்கங்கள். நீங்கள் அனைவரும் இந்தப் படத்திற்காக இங்கே வந்திருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. ‘கான் சிட்டி’ என்ற விளக்கை ஏற்றி வைத்திருப்பது படக்குழு என்றால், அதை மக்களிடம் பிரகாசமாக கொண்டு சேர்க்கும் பொறுப்பு ஊடகங்களுக்கே சொந்தமானது. அந்தப் பொறுப்பை நீங்கள் சிறப்பாக செய்வீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.


இந்தப் படத்தில் நடிக்க என்னை அணுகியபோது இயக்குநர் ஹரிஷ் மிகவும் நேர்மையாகப் பேசினார். ‘இந்தக் கதாபாத்திரத்தை உங்களை மனதில் வைத்து எழுதவில்லை, ஆனால் இப்போது நீங்கள் இதைச் செய்தால் மிகவும் பொருத்தமாக இருக்கும் என்று நினைக்கிறேன்’ என்று வெளிப்படையாகச் சொன்னார். அந்த நேர்மை எனக்கு மிகவும் பிடித்தது.


அதன்பிறகு அவரது அலுவலகத்தில் அமர்ந்து முழுக் கதையையும் கேட்டேன். சுமார் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக அவர் மிகுந்த ஆர்வத்துடனும் உணர்வுடனும் கதையை விவரித்தார். கதையை கேட்டவுடன் இந்தப் படத்தில் கண்டிப்பாக நடிக்க வேண்டும் என்று முடிவு செய்தேன்.


படப்பிடிப்பு தளத்தில் இருந்த அனைவரும் இளம் தலைமுறையைச் சேர்ந்தவர்கள். ஆனால் அவர்கள் அனைவரிடமும் ஒரு அர்ப்பணிப்பும் தொழில்முறை அணுகுமுறையும் இருந்தது. அதனால் படப்பிடிப்பு மிகவும் மகிழ்ச்சியாக நடந்தது. புதிய தலைமுறை திரைப்படக் கலைஞர்களுடன் இணைந்து பணியாற்றிய அனுபவம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது.


யோகி பாபு, அர்ஜூன் தாஸ் உள்ளிட்ட அனைவருடனும் பணியாற்றியது மறக்க முடியாத அனுபவம். குறிப்பாக அர்ஜூன் தாஸின் அர்ப்பணிப்பும் உழைப்பும் என்னை மிகவும் கவர்ந்தது. அவர் இந்தப் படத்தின் மூலம் இன்னும் பெரிய உயரத்தை அடைவார் என்று நம்புகிறேன்.


இயக்குநர் ஹரிஷ் படப்பிடிப்பு முழுவதும் மிகவும் தெளிவாகவும் திட்டமிட்டும் செயல்பட்டார். அவருடைய நம்பிக்கையும் உறுதியும் இந்தப் படத்தின் மிகப்பெரிய பலம். இந்தப் படத்தில் பணியாற்றிய ஒவ்வொரு நாளும் எனக்கு ஒரு இனிய அனுபவமாக இருந்தது. முழுக் குழுவும் ஒரு குடும்பம் போல இணைந்து உழைத்தது. அதனால்தான் இந்தப் படம் இவ்வளவு சிறப்பாக வந்திருக்கிறது என்று நான் நம்புகிறேன்.


எனக்கு உடல்நலப் பிரச்சினைகள் இருந்தபோதும் இந்தப் படத்தில் நடித்தேன். படப்பிடிப்பு முடிந்த மறுநாளே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டிய நிலை ஏற்பட்டது. ஆனால் அந்தக் காலகட்டத்திலும் படக்குழுவினர் என்மீது காட்டிய அக்கறையை நான் மறக்க முடியாது.


அர்ஜூன் தாஸ், யோகி பாபு மற்றும் படக்குழுவில் இருந்த இளம் கலைஞர்கள் அனைவரும் மிகவும் அன்பாகவும் மரியாதையுடனும் நடந்துகொண்டார்கள். குறிப்பாக அர்ஜூன் தாஸ் எப்போதும் எனக்கு தேவையான உதவிகளை செய்து, மிகவும் அக்கறையுடன் பார்த்துக் கொண்டார்.


இந்தப் படத்தில் நடித்த ஒவ்வொருவரும் கடினமாக உழைத்திருக்கிறார்கள். வெளியில் இருந்து பார்க்கும்போது எல்லாமே எளிதாகத் தோன்றலாம். ஆனால் திரைக்குப் பின்னால் நிறைய உழைப்பும் அர்ப்பணிப்பும் இருக்கிறது. அந்த உழைப்பின் பலனை ரசிகர்கள் திரையில் பார்க்கப் போகிறார்கள்.


இயக்குநர் ஹரிஷ் மற்றும் அவரது சகோதரர் பரத் இருவரும் பல வருட அனுபவத்தை கொண்டவர்கள். பல்வேறு தயாரிப்பு நிறுவனங்களில் பணியாற்றி கற்றுக்கொண்ட அனுபவத்தை இந்தப் படத்தில் முழுமையாக பயன்படுத்தியிருக்கிறார்கள். அதனால்தான் படம் மிகவும் திட்டமிட்ட முறையில் உருவாகியுள்ளது.


கதை கேட்ட நாளிலிருந்தே இந்தப் படம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அந்த இரண்டு மணி நேரக் கதை சொல்லும் அனுபவமே என்னை முழுவதுமாக ஈர்த்துவிட்டது. அதே உணர்வை ரசிகர்களும் திரையரங்குகளில் அனுபவிப்பார்கள் என்று நம்புகிறேன்.


‘கான் சிட்டி’ வெறும் பொழுதுபோக்கு திரைப்படம் மட்டுமல்ல. மக்களை சிரிக்கவும் மகிழ்ச்சியாக இருக்கவும் வைக்கும் அதே நேரத்தில் ஒரு நல்ல கருத்தையும், சமூக விழிப்புணர்வையும் சொல்லும் படம். வாழ்க்கையில் பணம், ஆசை, முடிவுகள் ஆகியவற்றைப் பற்றி சிந்திக்க வைக்கும் அம்சங்களும் இதில் உள்ளன.


இந்தப் படத்தைப் பார்த்து ரசிகர்கள் இரண்டு மணி நேரம் தங்களுடைய கவலைகளை மறந்து மகிழ்ச்சியாக இருப்பார்கள். அதே சமயம் ஒரு நல்ல செய்தியையும் எடுத்துச் செல்வார்கள். இயக்குநர் ஹரிஷ் மற்றும் முழுப் படக்குழுவினரின் உழைப்புக்கு இந்தப் படம் மிகப்பெரிய வெற்றியைத் தர வேண்டும் என்று மனதார வாழ்த்துகிறேன். நன்றி.”


நடிகர் யோகி பாபு பேசியதாவது..,


“அனைவருக்கும் வணக்கம். இந்தப் படத்தில் நடிக்க வாய்ப்பு அளித்த இயக்குநர் ஹரிஷ், தயாரிப்பாளர்கள் மற்றும் முழுப் படக்குழுவினருக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.


அர்ஜூன் தாஸுடன் எனக்கு நல்ல நட்பு இருக்கிறது. தொடர்ந்து அவருடன் படங்களில் பணியாற்றி வருகிறேன். ஒரு ஹீரோவுக்கு நல்ல நண்பன் இருந்தாலே போதும், ஹீரோயின் கூட தேவையில்லை என்று நான் அடிக்கடி நகைச்சுவையாக சொல்வேன். அந்த அளவுக்கு எங்களுடைய நட்பு நெருக்கமானது.


ஹரிஷை நான் இன்றல்ல, பல வருடங்களாக அறிவேன். பல படங்களில் பணியாற்றிய காலத்திலிருந்தே அவருடைய உழைப்பையும், சினிமா மீதான அர்ப்பணிப்பையும் பார்த்திருக்கிறேன். அவர் இயக்குநராக வேண்டும் என்ற ஆசையை பல ஆண்டுகளாகவே வெளிப்படுத்தியிருந்தார். அப்போது கூட நான் அவரிடம், ‘நீ கண்டிப்பாக இயக்குநராக வேண்டும்’ என்று சொன்னவன்.


இன்று அவர் இயக்குநராக உருவாகி, அவரைப் பற்றி அனைவரும் இவ்வளவு பாராட்டிப் பேசுவதைப் பார்க்கும்போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இது ஆரம்பம் மட்டுமே. இதைத் தொடர்ந்து பெரிய நடிகர்களுடன், பெரிய படங்களை இயக்கி இன்னும் உயரங்களுக்கு செல்ல வேண்டும் என்று மனதார வாழ்த்துகிறேன்.


அர்ஜூன் தாஸ் இந்தப் படத்திற்காக மிகுந்த உழைப்பை செலுத்தியிருக்கிறார். அவரது அர்ப்பணிப்பும், தொழில்முறை அணுகுமுறையும் எப்போதும் என்னை கவர்கிறது. அவருடன் மீண்டும் இணைந்து பணியாற்றியது மகிழ்ச்சியான அனுபவம்.


இந்தப் படத்தின் முழுக் குழுவும் ஒரு குடும்பம் போல இணைந்து பணியாற்றியது. படப்பிடிப்பு தளத்தில் அனைவரும் ஒருவருக்கொருவர் உதவி செய்து, படம் சிறப்பாக வர வேண்டும் என்பதற்காக கடினமாக உழைத்தனர். அந்த ஒற்றுமை இந்தப் படத்தின் மிகப்பெரிய பலம்.


ஒளிப்பதிவாளர், இசையமைப்பாளர், கலை இயக்குநர், உடை வடிவமைப்பாளர், உதவி இயக்குநர்கள் என அனைவரும் தங்களுடைய சிறந்த பங்களிப்பை வழங்கியுள்ளனர். அவர்களுடைய உழைப்பின் பலன் திரையில் தெளிவாகத் தெரியும்.


இந்தப் படம் வெற்றி பெற வேண்டும் என்று நான் மனதார வேண்டிக்கொள்கிறேன். ‘கான் சிட்டி’ திரைப்படம் ரசிகர்களை மகிழ்விக்கும், குடும்பத்தோடு ரசிக்கக்கூடிய ஒரு சிறந்த பொழுதுபோக்கு படமாக இருக்கும். அனைவரும் திரையரங்குகளில் வந்து ஆதரவு அளிக்க வேண்டும்.


இந்தப் படத்திற்காக உழைத்த அனைத்து கலைஞர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள், தயாரிப்பாளர்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடக நண்பர்கள் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை நன்றி. ‘கான் சிட்டி’ மிகப்பெரிய வெற்றி பெற வேண்டும் என்று வாழ்த்துகிறேன். நன்றி.”


நடிகை அன்னா பென் பேசியதாவது.., 


“அனைவருக்கும் வணக்கம். நான் தமிழ் பேச முயற்சி செய்கிறேன். ஏதேனும் தவறு இருந்தால் மன்னித்துக் கொள்ளுங்கள். முதலில் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, ‘கான் சிட்டி’ திரைப்படத்திற்கு ஆதரவு அளிக்கும் பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடக நண்பர்கள் அனைவருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.


இது எனது இரண்டாவது தமிழ் திரைப்படம். ‘கொட்டுக்காளி’ படத்தில் மீனா என்ற கதாபாத்திரத்தில் நடித்தபோது நீங்கள் கொடுத்த அன்பும் பாராட்டும் எனக்கு மிகப்பெரிய ஊக்கமாக இருந்தது. அந்த மீனா கதாபாத்திரத்திற்கு முற்றிலும் எதிர்மாறான ஒரு வேடத்தில் தான் ‘கான் சிட்டி’ படத்தில் நடித்திருக்கிறேன்.


இயக்குநர் ஹரிஷ் முதன்முதலில் இந்தக் கதாபாத்திரத்தை என்னிடம் கூறியபோது எனக்கு மிகவும் பதற்றமாக இருந்தது. இதுவரை நான் நடித்திராத ஒரு புதிய பரிமாணத்தில் இருக்கும் கதாபாத்திரம் அது. நடிப்பு பாணியும், வெளிப்பாடும், கதாபாத்திரத்தின் அளவும் முற்றிலும் வித்தியாசமாக இருந்தது. அதனால் அது எனக்கு ஒரு பெரிய சவாலாக இருந்தது.


பல கமர்ஷியல் கதைகளை நான் இதற்கு முன் கேட்டிருந்தாலும், அந்த உலகத்தில் நான் எப்படி பொருந்துவேன் என்ற தயக்கம் இருந்தது. ஆனால் ஹரிஷ் என்மீது முழு நம்பிக்கை வைத்தார். ‘நீங்கள் இதைச் செய்ய முடியும். இது வித்தியாசமாகவும், யாரும் எதிர்பார்க்காத வகையிலும் இருக்கும்’ என்று தொடர்ந்து ஊக்கப்படுத்தினார். அந்த நம்பிக்கையே இந்தக் கதாபாத்திரத்தை செய்ய எனக்கு தைரியம் கொடுத்தது.


ஹரிஷிடம் நான் மிகவும் ரசித்த விஷயம் அவரது உறுதியான நம்பிக்கை. படப்பிடிப்பு தளத்தில் எந்த சவால் வந்தாலும், எந்த சந்தேகம் எழுந்தாலும், அவர் எப்போதும் அமைதியாகவும் நம்பிக்கையுடனும் அதை எதிர்கொண்டார். சினிமா மீதான அவரது காதலும் அர்ப்பணிப்பும் என்னை மிகவும் கவர்ந்தது.


இந்தப் படத்தை உருவாக்க அவர் எடுத்த உழைப்பு அளவிட முடியாதது. படம் தொடங்கிய நாளிலிருந்து ஜூன் 26 வெளியீடு வரை, ஒவ்வொரு கட்டத்திலும் சிறந்ததை கொடுக்க வேண்டும் என்பதில் அவர் உறுதியாக இருந்தார். பாடல்கள், விளம்பரங்கள், புரமோஷன்கள், வெளியீடு என அனைத்திலும் அவர் முழு ஈடுபாட்டுடன் செயல்பட்டார். அதற்காக அவருக்கு என் மனமார்ந்த வாழ்த்துகளும் நன்றிகளும்.


அர்ஜூன் தாஸுடன் பலமுறை இணைந்து பணியாற்ற முயற்சி செய்திருந்தேன். இந்தப் படத்தின் மூலம் அது நிறைவேறியுள்ளது. ஒரு நடிகராக அவர் திறமையானவர் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் ஒரு மனிதராகவும் அவர் மிகவும் எளிமையானவர், அன்பானவர். படப்பிடிப்பு தளத்தில் அனைவரையும் சமமாக மதித்து, மிகவும் ஒத்துழைப்புடன் பணியாற்றினார்.


வடிவுக்கரசி மேம் ஒரு லெஜெண்ட். அவருடன் பணியாற்றியது எனக்கு ஒரு கனவு நிறைவேறிய அனுபவம். மூத்த கலைஞர்களுடன் பணியாற்றும்போது அவர்கள் பகிரும் அனுபவங்கள் எனக்கு எப்போதும் மிகப்பெரிய பாடமாக இருக்கும். இந்தப் படப்பிடிப்பின் போது அவர் என்னுடன் நிறைய நேரம் செலவிட்டு, தனது அனுபவங்களை பகிர்ந்து கொண்டார். தமிழ் வசனங்களைப் பேசுவதில் எனக்கு ஆரம்பத்தில் இருந்த பயத்தை போக்கவும் உதவினார்.


யோகி பாபு சார் பற்றி சொல்ல வேண்டுமென்றால், அவர் என்னுடைய ஆயுளை பத்து வருடம் அதிகரித்திருப்பார் என்று நினைக்கிறேன். ஏனெனில் அவர் எப்போதும் அனைவரையும் சிரிக்க வைத்துக் கொண்டே இருப்பார். காட்சிக்கு நடுவிலும், கேமரா பின்னாலும் அவர் சொல்வதெல்லாம் நம்மை சிரிக்க வைக்கும். அவருடன் பணியாற்றியது மிகவும் மகிழ்ச்சியான அனுபவம்.


அகிலன் திரையில்  எனது மகன். மிகவும் திறமையான மற்றும் அன்பான சிறுவன். ஃபாக்ஸி மற்றும் மற்ற கலைஞர்களுடன் பணியாற்றிய அனுபவமும் மிகவும் இனிமையானது. இந்தப் படத்தில் பணியாற்றிய ஒவ்வொருவரும் எனக்கு மிகுந்த ஆதரவாக இருந்தனர்.


இசையமைப்பாளர் ஷான் ரோல்டனின் இசை இந்தப் படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளது. மேலும், இந்தப் படத்தில்தான் நான் முதன்முறையாக நடனமாடியிருக்கிறேன். அதற்காக சந்தோஷ் மாஸ்டருக்கு சிறப்பு நன்றி. சவாலான நடன அசைவுகளை நம்பிக்கையுடன் கற்றுக்கொடுத்து என்னை ஊக்கப்படுத்தினார்.


‘கான் சிட்டி’ திரைப்படத்தை அனைவரும் திரையரங்குகளில் பார்த்து ஆதரவு அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இந்த நிகழ்ச்சிக்கு வந்ததற்கும், தொடர்ந்து ஆதரவு அளிப்பதற்கும் அனைவருக்கும் நன்றி.”


நடிகர் அர்ஜூன் தாஸ் பேசியதாவது.., 


“அனைவருக்கும் வணக்கம். முதலில் இயக்குநர் ஹரிஷுக்கு என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஆரம்பத்திலிருந்தே மிகத் தெளிவான திட்டமிடலுடன், முழு நம்பிக்கையுடனும், உறுதியுடனும் இந்தப் படத்தை முன்னெடுத்து வந்திருக்கிறார். ஒரு இயக்குநராக அவர் காட்டிய அர்ப்பணிப்பும், உழைப்பும், தன்னம்பிக்கையும் மிகவும் பாராட்டத்தக்கது.


இந்தப் படத்தை இவ்வளவு பெரிய அளவில் மக்களிடம் கொண்டு சேர்க்க தயாரிப்பாளர்கள் எடுத்த முயற்சி மிகப் பெரியது. நகரம் முழுவதும் போஸ்டர்கள், பேனர்கள், விளம்பரங்கள் என இப்படத்திற்காக அவர்கள் செய்துள்ள புரமோஷன் என்னை மிகவும் மகிழ்ச்சியடைய வைத்துள்ளது. அதற்காக அனைத்து தயாரிப்பாளர்களுக்கும் எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.


அதேபோல் வெளியீட்டில் இணைந்துள்ள அபிஹிம்சா பிலிம்ஸ், டெல்டா ஸ்டுடியோஸ் மற்றும் படத்திற்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி. படத்தைப் பார்த்து பாராட்டியவர்களுக்கும் எனது நன்றிகள்.


‘கான் சிட்டி’ ஒரு குடும்பத்துடன், நண்பர்களுடன், உறவினர்களுடன் சேர்ந்து ரசிக்கக்கூடிய திரைப்படம். இதில் உணர்ச்சிகளும் இருக்கின்றன, நகைச்சுவையும் இருக்கிறது, அதே நேரத்தில் மனதைத் தொடும் ஒரு அழகான கதையும் இருக்கிறது.


இந்தப் படத்தில் நடித்துள்ள ஒவ்வொரு நடிகரும் தங்களது சிறந்த நடிப்பை வழங்கியிருக்கிறார்கள். அன்னா பென், வடிவுக்கரசி அம்மா, யோகி பாபு, அருள்தாஸ் மற்றும் மற்ற அனைத்து கலைஞர்களின் பங்களிப்பும் படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளது.


இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் அற்புதமான இசையை வழங்கியுள்ளார். தொழில்நுட்பக் குழுவின் உழைப்பும் படத்தின் தரத்தை உயர்த்தியுள்ளது.


இந்தப் படம் அனைவருக்கும் பிடிக்கும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. நம்பிக்கையுடன் திரையரங்குகளுக்கு வாருங்கள். படம் பார்த்துவிட்டு மகிழ்ச்சியுடன் வீடு திரும்புவீர்கள் என்று உறுதியாக நம்புகிறேன்.இந்தப் படத்தில் என்னுடன் இணைந்து பணியாற்றிய அனைத்து மூத்த கலைஞர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் முழு படக்குழுவினருக்கும் மீண்டும் ஒருமுறை என் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.


‘கான் சிட்டி’ திரைப்படத்திற்கு உங்கள் ஆதரவைத் தொடர்ந்து வழங்குங்கள். அனைவருக்கும் நன்றி.”


இயக்குநர் ஹரிஷ் துரைராஜ் பேசியதாவது..,


“அனைவருக்கும் வணக்கம். முதலில் இந்த மேடையில் நான் நன்றி சொல்ல வேண்டிய மிக முக்கியமான இரண்டு பேர் உள்ளனர். குனா ப்ரோ போஸ்ட் ஆபீஸ் மற்றும் விஜய் ப்ரோ (சில்வர் ட்ரீ ஸ்டுடியோஸ்). இவர்கள் இருவரும் இல்லையென்றால் ‘பவர்ஹவுஸ் பிக்சர்ஸ்’ என்ற நிறுவனமும், ‘கான் சிட்டி’ திரைப்படமும் உருவாகியிருக்காது. ஆரம்பம் முதல் இன்று வரை என்னுடன் நின்று உறுதுணையாக இருந்திருக்கிறார்கள்.


சினிமாவில் நான் எப்போதும் கடவுளிடம் வேண்டுவது நல்ல மனிதர்கள் என்னுடன் இருக்க வேண்டும் என்பதைத்தான். அந்த வகையில் எனது தயாரிப்பாளர்கள், பங்குதாரர்கள், நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.


இந்தப் படத்தின் இணைத் தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், ஆடியோ உரிமையை பெற்றவர்கள், ஓடிடி உரிமையாளர்கள் என அனைவரும் இந்தப் படத்தின் மீது மிகப்பெரிய நம்பிக்கை வைத்துள்ளனர். அவர்களின் ஆதரவு இல்லாமல் இந்தப் பயணம் சாத்தியமாகியிருக்காது.


என்னுடைய தொழில்நுட்பக் குழுவுக்கு நான் தனிப்பட்ட முறையில் நன்றி சொல்ல வேண்டும். ஒளிப்பதிவாளர் ஃபாக்ஸி, எடிட்டர் அருள் மோசஸ், கலை இயக்குநர் ராஜ், இசையமைப்பாளர் ஷான் ரோல்டன், நடன இயக்குநர் சந்தோஷ் மற்றும் முழு தொழில்நுட்பக் குழுவும் இந்தப் படத்தின் முதுகெலும்பாக இருந்துள்ளனர். வெறும் 55 நாட்களில் இந்தப் படத்தை முடிக்க அவர்களின் உழைப்பே காரணம்.


பாடலாசிரியர் மோகன் ராஜன் மற்றும் இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் ஆகியோரின் கூட்டணி இந்தப் படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளது. படத்தில் இடம்பெற்றுள்ள ஏழு பாடல்களும் எனக்கு மிகவும் சிறப்பானவை. குறிப்பாக இன்னும் வெளியாகாத பாடல்களையும் ரசிகர்கள் ரசிப்பார்கள் என்று நம்புகிறேன்.


நடிகர், நடிகைகள் பற்றி பேச வேண்டுமென்றால், ஒவ்வொருவரும் தங்களின் சிறந்த பங்களிப்பை அளித்துள்ளனர். வடிவுக்கரசி அம்மாவின் நடிப்பு படம் பார்த்த அனைவராலும் பாராட்டப்படுகிறது. இந்தக் கதாபாத்திரத்தில் அவரை தேர்வு செய்தது எனது வாழ்க்கையின் மிகச் சரியான முடிவுகளில் ஒன்று என்று சொல்லலாம்.


அன்னா பென் இந்தப் படத்தில் மிகச்சிறந்த நடிப்பை வழங்கியிருக்கிறார். அவருடைய கதாபாத்திரம் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தும். அதேபோல் யோகி பாபு அண்ணா எனக்கு மிகவும் தனிப்பட்ட ஆதரவாக இருந்துள்ளார். கடந்த ஐந்து ஆண்டுகளாக நான் படம் இயக்க வேண்டும் என்று தொடர்ந்து ஊக்கப்படுத்தியவர் அவர்தான். இந்தப் படத்திற்காக அவர் அளித்த ஒத்துழைப்பை நான் வாழ்நாள் முழுவதும் மறக்க மாட்டேன்.


அதேபோல் அர்ஜுன் தாஸ் சார் இந்தப் படத்திற்கு சம்மதம் சொல்லவில்லை என்றால் ‘கான் சிட்டி’ உருவாகியிருக்காது. மிகுந்த அர்ப்பணிப்புடனும் நேர்த்தியுடனும் நடித்துள்ளார். இந்தப் படம் அவரது திரைப்பயணத்தில் ஒரு முக்கியமான மைல்கல்லாக அமையும் என்று நான் நம்புகிறேன்.


இறுதியாக என் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் நன்றி. குறிப்பாக என் மனைவிக்கு நான் சிறப்பு நன்றி சொல்ல வேண்டும். நான் மாதம் பத்தாயிரம் ரூபாய் சம்பளம் வாங்கிய காலத்திலேயே என்னை நம்பி திருமணம் செய்து கொண்டார். கடந்த ஐந்து ஆண்டுகளாக என்னுடைய கனவுக்காக என்னுடன் இருந்து அனைத்து கஷ்டங்களையும் தாங்கி வந்திருக்கிறார். இன்று இந்த மேடையில் நான் நிற்பதற்கு அவருடைய ஆதரவும் ஒரு முக்கிய காரணம்.


ஜூன் 26ஆம் தேதி ‘கான் சிட்டி’ திரைப்படம் வெளியாகிறது. இந்தப் படத்தை குடும்பத்துடன் திரையரங்குகளில் பார்த்து ஆதரிக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். அனைவருக்கும் நன்றி.”


பவர் ஹவுஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் ஹரிஷ் துரைராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தில் அர்ஜூன் தாஸ், அன்னா பென், யோகி பாபு, வடிவுக்கரசி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 


கடனில் சிக்கித் தவிக்கும் ஒரு குடும்பத்தின் வாழ்க்கையில் எதிர்பாராத விதமாக ஒரு பணம் அச்சிடும் மெஷின் கிடைப்பதை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படம், அதன்பிறகு நடக்கும் சம்பவங்களை நகைச்சுவை மற்றும் பரபரப்புடன் சொல்லும் படமாக அமைந்துள்ளது.


மங்களூர், சென்னை, மும்பை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் படமாக்கப்பட்டுள்ள இந்த திரைப்படத்தின் டிஜிட்டல் உரிமையை Netflix நிறுவனம் கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.


படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்து வரும் நிலையில், ஜூன் 26ஆம் தேதி வெளியாகும் “கான் சிட்டி” திரைப்படத்தை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர்.


தொழில்நுட்ப குழு:


இயக்கம்: ஹரிஷ் துரைராஜ்

தயாரிப்பு: Power House Pictures

நடிப்பு: அர்ஜூன் தாஸ், அன்னா பென், யோகி பாபு, வடிவுக்கரசி

ஒளிப்பதிவு: அரவிந்த் விஸ்வநாதன்

எடிட்டிங்: அருள் மோசஸ்

இசை: ஷான் ரோல்டன்

கலை இயக்கம்: ராஜ் கமல்

உடை வடிவமைப்பு: நவா ராம்போ ராஜ்குமார்

ஸ்டண்ட்: ஆக்ஷன் சந்தோஷ்

மக்கள் தொடர்பு: யுவராஜ்

டார்க் ஜியண்ட்’ (Dark Giant) திரைப்பட விமர்சனம்

 டார்க் ஜியண்ட்’ (Dark Giant) திரைப்பட விமர்சனம்


நாயகன் ஆதர்ஷ் மதிகாந்த், தன் மனைவி மற்றும் தங்கையுடன் சென்னையில் வசித்து வருகிறார். கடன் பிரச்சனையில் சிக்கி தவிக்கும் ஆதர்ஷ் மதிகாந்தை தொலைப்பேசியில் தொடர்பு கொள்ளும் ஒருவர், கோவை மாவட்டத்தில் உள்ள கிராமம் ஒன்றில், அவரது தாத்தா இருப்பதாகவும், அவர் தனது சொத்துக்களை தன் பேரன், பேத்திக்கு கொடுக்க விரும்புவதாகவும் சொல்கிறார்.


சொத்து கிடைத்தால் தனது கடன் பிரச்சனை தீர்ந்துவிடும் என்ற எண்ணத்தில், தன் மனைவி மற்றும் தங்கையை அழைத்துக் கொண்டு அந்த கிராமத்துக்கு செல்லும் ஆதர்ஷ் மதிகாந்த், சொத்துக்காக படுத்த படுக்கையாக இருக்கும் தாத்தா உடன் சில நாட்கள் தங்க முடிவு செய்கிறார். அப்போது அந்த வீட்டில் எதிர்பார்க்காத சில பயங்கரமான சம்பவங்கள் நடப்பதோடு, அவர்களை கிராமத்திற்கு வரவைத்த நபரும், படுத்த படுக்கையாக இருந்த அவரது தாத்தாவும், பல வருடங்களுக்கு முன்பே இறந்துவிட்டனர் என்ற உண்மை தெரிய வருகிறது. அதன் பிறகு நடக்கும் சம்பவங்களையும், நாயகனின் குடும்பத்தை கிராமத்திற்கு வர வைத்ததற்கான பின்னணியையும், நெஞ்சம் பதறும் வகையில் சொல்வது தான் ‘டார்க் ஜியண்ட்’.தொடர்ந்து திகில் மற்றும் வித்தியாசமான அமானுஷ்ய கதைக்களங்களை தேர்வு செய்து நடித்து வரும் ஆதர்ஷ் மதிகாந்த், இந்த முறையும் சுவாரஸ்யமான ஒரு திகில் கதையில் தான் ஏற்றுக்கொண்ட கதாபாத்திரத்தை மிக சிறப்பாக கையாண்டுள்ளார். அவரது தலைமுடி அலங்கோலமாக இருந்தாலும், கடன் பிரச்சனையில் சிக்கி தவிப்பது, சாத்தான் தன் உடலில் புகுந்த பிறகு தன்நிலை மறந்து நடப்பது, பிறகு தன்நிலை அறிந்து கலங்குவது, என்று பல உணர்வுகளை அருமையாக வெளிப்படுத்தி பாராட்டு பெறுகிறார்.


நாயகனின் மனைவியாக நடித்திருக்கும் ஜோவிதா லிவிங்ஸ்டன், குடும்பபாங்கான கதாபாத்திரத்திற்கு பொறுத்தமான தேர்வாக இருக்கிறார். பயமும், பதற்றமும் கலந்த நடிப்பால் பார்வையாளர்களின் கவனம் ஈர்க்கிறார்.


கதையின் மையப்புள்ளியாக நடித்திருக்கும் அருவி மதன் மற்றும் சோனியா அகர்வால், குறைவான காட்சிகள் வந்தாலும் பார்வையாளர்கள் மனதில் நிற்கும் வகையில் நடித்திருக்கிறார்கள். நாயகனின் நண்பராக நடித்திருக்கும் அமுதவாணன், போலீஸ் இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் ரபிக் பாட்ஷா, சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கும் கே.பாக்யராஜ் மற்றும் லிவிங்ஸ்டன் ஆகியோர் திரைக்கதைக்கு பலம் சேர்க்கும் வகையில் பயணித்திருக்கிறார்கள்.


ஒளிப்பதிவாளர் சங்கீத் மணிகோபால் திகில் காட்சிகளை அச்சமூட்டும் வகையில் காட்சிப்படுத்தி பார்வையாளர்களை நெஞ்சை படபடக்க வைக்கிறார்.


விக்னேஷ் ராஜாவின் பின்னணி இசை காட்சிகளில் இருக்கும் பயங்கரத்தை பார்வையாளர்களிடம் கடத்தில் அச்சத்தை ஏற்படுத்துகிறது.


படத்தொகுப்பாளர் ஜி.ஜெ.திருச்செல்வம், பி.ஆர்.கிரியேஷன் ஸ்டுடியோஸின் வி.எஃப்.எக்ஸ் பணி, கலை இயக்குநர் பணி ஆகியவை படத்தின் தரத்தை பல மடங்கு அதிகரித்திருக்கிறது.


எழுதி இயக்கியிருக்கும் கே.எஸ்.கிஷான், திகில் கதைக்களத்தை சரியான முறையில் கையாண்டு பார்வையாளர்களை மிரள வைத்திருக்கிறார். ஒரு வீட்டில் நடக்கும் சம்பவங்கள் என்றாலும் அதை அச்சத்துடன் பார்க்க வைத்து பல காட்சிகளில் சீட் நுணியில் உட்கார வைத்து விடுகிறார்.


கதை சொல்லலில் சில குளறுபடிகளை செய்திருந்தாலும், திகில் காட்சிகளை தொழில்நுட்ப ரீதியாக தரமாக கொடுத்திருக்கும் இயக்குநர் கே.எஸ்.கிஷான், திகில் பட ரசிகர்களை ஓரளவு திருப்திப்படுத்தியிருக்கிறார்.


மொத்தத்தில், ‘டார்க் ஜியண்ட்’ தலைப்பு அளவுக்கு இல்லை என்றாலும், சிறிய அளவில் திகிலடைய வைக்கிறது

பாலன்’ திரைப்பட விமர்சனம்

 பாலன்’ திரைப்பட விமர்சனம்


சிறை தண்டனை அனுபவிக்கும் கர்ப்பிணியான ஃபர்சானா பலதிங்கல் சிறையில் குழந்தை பெற்றெடுக்கிறார். சில வருடங்களுக்குப் விடுதலையாகும் அவர், தன் வாழ்க்கையில் எதிர்கொண்ட வலியின் காரணமாக, யார் மீதும் நம்பிக்கை வைக்காமல் தன் மகனுடன் பல்வேறு அடையாளங்களில், பல இடங்களுக்கு பயணிக்கிறார். அப்போது தனியாக வசிக்கும் மூதாட்டி ஒருவரை பார்த்துக் கொள்ளும் வாய்ப்பு கிடைக்கிறது. அந்த பணியில் சேரும் அவர், அந்த இருப்பிடத்திலேயே நிரந்தரமாக வாழ முடிவு செய்து, தன் மகனை பள்ளியில் சேர்க்கிறார்.


வாழ்வதற்கு பாதுகாப்பான இடம் கிடைத்தாலும், எப்போதும் ஒரு வித அச்சத்தில் வாழும் அவர், பள்ளியில் இருந்து வரும் தன் மகனை தினமும் அழைத்துச் செல்லும் போது, குறிப்பிட்ட ஒரு இடத்தில் காத்திருக்க சொல்கிறார். எவ்வளவு நேரம் ஆனாலும், அந்த இடத்திலேயே காத்திருக்க வேண்டும், அம்மா நிச்சயம் வருவேன், என்று சொல்கிறார்.


ஒரு நாள் பள்ளியில் இருந்து வரும் மகன் அந்த இடத்தில் அம்மாவுக்காக காத்திருக்க, அவர் வரவில்லை. நீண்ட நேரமானதால் சிறுவனை பொதுமக்கள் காவல்துறையிடம் ஒப்படைக்கிறார்கள். பிரிந்த அம்மா- மகன் மீண்டும் சேர்ந்தார்களா ?, , அம்மா ஃபர்சானா பலதிங்கலுக்கு என்ன ஆனது ? என்பதை அம்மா, மகனின் உணர்வுப்பூர்வமான பயணமாக சொல்வது தான் ‘பாலன்’.


கதையின் நாயகியாக நடித்திருக்கும் ஃபர்சானா பலதிங்கல், வஞ்சிக்கப்பட்ட ஒரு பெண்ணின் மன போராட்டத்தையும், அச்சத்தையும் தன் கண்களின் மூலம் சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கிறார். எப்போதும் ஒருவித குற்ற உணர்ச்சியிலும், அச்சத்திலும் பயணிக்கும் அவரது எதார்த்தமான நடிப்பு மற்றும் திரை இருப்பு படத்திற்கு பெரும் பலம் சேர்த்திருக்கிறது.


சிறுவன் பாலனாக நடித்திருக்கும் ஆதிசேஷன் கே.ஆர், அம்மாவுக்கு இணையாக தன் உணர்வுகளை கண்கள் மூலம் வெளிப்படுத்தியிருப்பவர், எந்த ஒரு இடத்திலும் தான் யார் ? என்பதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் மவுனமாக இருந்தாலும், தன் அம்மாவின் தேடலையும், ஏமாற்றத்தையும் சிறப்பாக வெளிப்படுத்தி கனவம் ஈர்க்கிறார்.


வளர்ந்த பாலனாக நடித்திருக்கும் ஜினன், பிரிந்த அம்மாவை தேடும் பயணத்தில் உணர்ச்சிகரமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். காவலராக நடித்திருக்கும் ஜீன் பவுல் லால், பழிவாங்கும் தன் உணர்ச்சியை கச்சிதமாக வெளிப்படுத்தி பாராட்டு பெறுகிறார். சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கும் டோவினோ தாமஸின், திரை இருப்பு மற்றும் வித்தியாசமான தோற்றம் படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்திருக்கிறது.


சப்-இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் கிரிஷ் ஏ.டி உள்ளிட்ட அனைத்து நடிகர்களும் கதாபாத்திரங்களுக்கு பொறுத்தமான தேர்வு.


ஒளிப்பதிவாளர் ஷைஜு காலித், முதன்மை கதாபாத்திரத்தின் வடிவமைப்பு போல், அமைதியான சூழல்களில் காட்சிகளை படமாக்கி, லொக்கேஷன்களையும் ஒரு கதாபாத்திரமாக பயணிக்க வைத்திருக்கிறார். சுஷின் ஷாம் இசையில் பின்னணி இசை காட்சிகளில் இருக்கும் அழுந்தங்கள் மற்றும் பரபரப்பை அதிகரிக்கச் செய்கிறது. 

எங்கள் தங்கம்’ திரைப்பட விமர்சனம்

 எங்கள் தங்கம்’ திரைப்பட விமர்சனம்


காதலித்து திருமணம் செய்து கொண்ட சமந்தா, தன்னால் பிரிந்த தன் கணவர் குடும்பத்தை சமாதானப்படுத்துவதற்காக அவருடன் ஊருக்கு வருகிறார். கட்டுப்பாடு மிக்க அந்த குடும்ப நபர்களை கவர்வதற்காக தனக்கு தெரியாத பல்வேறு விசயங்களை செய்து நல்ல பெயர் வாங்க முயற்சிக்கிறார். இதற்கிடையே, சிறையில் தண்டனை அனுபவிக்கும் கொலை குற்றவாளி குல்ஷன் தேவய்யா, தப்பித்து சமந்தாவை தேடி வருகிறார். சமந்தாவை தன்னுடன் அழைத்துச் செல்ல முயற்சிக்கும் அவர், அதற்கு சம்மதிக்கவில்லை என்றால், மொத்த குடும்பத்தையும் அழித்து விடுவதாக மிரட்டுகிறார். தன் கணவர் குடும்பத்தை ஆபத்தில் இருந்து காக்கும் பணியில் ஈடுபடும் சமந்தா, அதில் வெற்றி பெற்றாரா?, அவரது உண்மையான பின்னணி என்ன ? என்பதை அமர்க்களமான ஆக்‌ஷனோடு சொல்வது தான் ‘எங்கள் தங்கம் பூ போல் அமைதியாக அறிமுகமாகும் சமந்தா, தன்னையும், தன் கணவர் குடும்பத்தையும் தாக்க வருபவர்களை எதிர்த்து நிற்கும் காட்சிகளில் புயலாக மாறி ஆக்‌ஷனில் அசத்துகிறார். தன் அழகான சிரிப்பு மற்றும் குறும்புத்தனமான நடிப்பு ஆகியவற்றை கடந்து ஆண்மைத்தனம் மிக்க நடை மற்றும் உடல்மொழி மூலம் மிரட்டுகிறார். குறிப்பாக, ஆக்‌ஷன் மற்றும் துப்பாக்கி சூடு காட்சிகளை பார்வையாளர்கள் வியக்கும் விதத்தில் கையாண்டிருக்கும் சமந்தா, புடவை கட்டிய பூலான்தேவியாக வலம் வந்து படத்திற்கு பெரும் பலம் சேர்த்திருக்கிறார். சமந்தாவின் கணவராக நடித்திருக்கும் திகந்த் மஞ்சாலே, மாமியாராக நடித்திருக்கும் கெளதமி, மாமனராக நடித்திருக்கும் ஆனந்த், பாட்டியாக நடித்திருக்கும் ஸ்ரீ லக்‌ஷ்மி, தோழியாக நடித்திருக்கும் மன்ஜூஷா, கொழுந்தனாக நடித்திருக்கும் சைதன்ய கிருஷ்ணா, கணவரின் தம்பி மனைவியாக நடித்திருக்கும் ஸ்ரீமுகி, கணவரின் தங்கையாக நடித்திருக்கும் நடிக என அனைத்து நடிகர், நடிகைகளும் தங்களது பணியை சரியாக செய்திருக்கிறார்கள்.


வில்லனாக நடித்திருக்கும் குல்ஷன் தேவய்யா, பெரிய அளவில் மிரட்டவில்லை என்றாலும், சமந்தா யார் ? என்ற உண்மையை வெளிக்கொண்டு வரும் கதாபாத்திரத்தில் கச்சிதமாக நடித்து திரைக்கதை பயணத்திற்கு பலம் சேர்த்திருக்கிறார். சந்தோஷ் நாராயணனின் சையில் பாடல்கள் கொண்டாட்ட மனநிலையை கொடுக்கிறது. பின்னணி இசை ஆக்‌ஷன் காட்சிகள் மற்றும் மாஸ் காட்சிகளுக்கு கூடுதல் பலம் சேர்க்கும் வகையில் பயணித்திருக்கிறது.


தமிழ் சினிமாவில் மட்டும் இன்றி இந்திய சினிமாவில் பல ஆண்டுகளாக, பல்வேறு வடிவங்களில் வெளியான சாதாரண ஆக்‌ஷன் கமர்ஷியல் மாஸ் கதை தான் என்றாலும், அதை குடும்பத்துடன் பார்க்கும்படியான மற்றும் பெண்களுக்கு பிடிக்கும் வகையிலான ஒரு கதையாக கதையாசிரியர்கள் ராஜ் நிடிமொரு, வசந்த் மரிம்கண்டி கொடுத்திருக்கிறார்கள். இவர்களது கதைக்கு திரைக்கதை அமைத்திருக்கும் ராஜ் நிடிமொரு, பரபரப்பான காட்சிகள் மூலம் படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்திருக்கிறார்.


சமந்தா ஏற்கனவே பல படங்களில் ஆக்‌ஷனில் மிரட்டியிருந்தாலும், இதில் அவரை வேறு ஒரு பரிணாமத்தில் ஆக்‌ஷன் நாயகியாக கொண்டாட வைத்திருக்கிறார் இயக்குநர் பி.வி.நந்தினி ரெட்டி.


சிறந்த மருமகளாக வேண்டும் என்பதற்காக சமந்தா செய்யும் குறும்புத்தனமான மோசடிகள் மற்றும் மருமகள்களுக்கு இடையே நிலவும் போட்டிகள் ஆகியவற்றின் மூலம் படத்தின் முதல் பாதியை கலகலப்பாக நகர்த்தி செல்லும் இயக்குநர் பி.வி.நந்தினி ரெட்டி, இரண்டாம் பாதியில் கலகலப்பை கலரவமாக மாற்றினாலும், அங்கேயும் குடும்பத்தாரை இணைத்து ஒரு முழுமையான குடும்ப ஆக்‌ஷன் பொழுதுபோக்கு படமாக கொடுத்து பார்வையாளர்களை திருப்திப்படுத்தி விடுகிறார். மொத்தத்தில், ‘எங்கள் தங்கம்’ பொதுழுபோக்குக்கு உத்தரவாதம்  

நூறுசாமி’ திரைப்பட விமர்சனம்

 நூறுசாமி’ திரைப்பட விமர்சனம்


  இளம் வயதில் விதவையான ஸ்வாசிகா, தன் மகன்கள் கல்லூரி முதலாம் ஆண்டு படிக்கும் போது, மறுமணம் செய்ய விரும்புகிறார். தன் எண்ணத்தை மூத்த மகன் அஜய் திஷானிடம் சொல்லும் போது அவர் பெரிய அளவில் எதிர்ப்பு தெரிவிக்க, அதிர்ந்து போய்விடுகிறார்.


நான்கு ஆண்டுகள் கழித்து தன் அம்மாவின் எண்ணத்திற்கு மதிப்பளிக்கும் அஜய் திஷான், அவருக்கு மறுமணம் செய்து வைக்க முடிவு செய்கிறார். அவரது முடிவுக்கு அவரது சகோதரரும் ஆதரவு தெரிவிக்க, இரண்டு பிள்ளைகளும் சேர்ந்து தனது அம்மாவுக்கு மறுமணம் செய்து வைக்க முயற்சிக்கிறார்கள். ஆனால், சொந்தமும், ஊர் மக்களும் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். அவர்களது எதிர்ப்பை மீறி தன் அம்மாவுக்கு மறுமணம் செய்து வைத்தார்களா? இல்லையா? என்பதே படத்தின் கதை. தற்போதைய காலக்கட்டத்திலும் பெண்களின் நியாயமான விருப்பம் நிறைவேறுவதற்கு தடையாக இருக்கும் சமூக கட்டமைப்புகளை தகர்த்தெரியும் படைப்பாக இயக்கியிருக்கும் இயக்குநர் சசி, உண்மை சம்பவத்தை மையமாக கொண்டு இன்னமும் அறியாமையில் மழுங்கி கிடக்கும் சமூகத்திற்கு சாட்டையடி கொடுத்திருக்கிறார்.


கதையின் நாயகியாக நடித்திருக்கும் ஸ்வாசிகா, செல்வி என்ற கதாபாத்திரத்தையும், அவரது மன போராட்டங்களையும் தன் நடிப்பில் மிக சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கிறார். மறுமணம் பற்றிய தனது விருப்பம், அதற்கு எதிர்ப்பு தெரிவித்த மகனின் செயலை கண்டு அதிர்ந்து போவது, பிறகு அதே பிள்ளைகளை பிரிய வேண்டிய சூழலை நினைத்து கதறுவது, தனிமையில் தன் ஆதங்கத்தை மின் விசிறியிடம் பரிமாறுவது என்று படம் முழுவதையும் தன் நடிப்பால் தாங்கிப் பிடித்திருக்கிறார். சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கும் விஜய் ஆண்டனியின் திரை இருப்பு படத்திற்கு பெரும் அடையாளத்தை கொடுத்திருக்கிறது. பெரிய அளவுக்கு அவரது கதாபாத்திரற்கான வாய்ப்பு இல்லை என்றாலும், சில வசனங்கள் மூலம் அவரது கதாபாத்திரமும் கவனம் பெறுகிறது.


ஸ்வாசிகாவின் மகன்களாக நடித்திருக்கும் அஜய் திஷான், சக்தி, பாடினி குமார், காவ்யா அனில், கருணாஸ், லிஜோமோல், பாலாஜி சக்திவேல், அருள்தாஸ், முனீஷ்காந்த், ஜென்சன் திவாகர், பக்ஸ், வினோதினி என அனைவரும் கொடுத்த வேலையை குறையின்றி செய்திருக்கிறார்கள். ஒளிப்பதிவாளர் எஸ்.பி.தர்ஷன் கிர்லோஷ் கதைக்களம் மற்றும் கதாபாத்திரங்களை உண்மைக்கு நெருக்கமாக காட்சிப்படுத்தியிருக்கிறார்.


பாலாஜி ஸ்ரீராம் இசையில் பின்னணி இசை காட்சிகளுக்கும், கதாபாத்திரங்களுக்கும் உயிரூட்டியிருக்கிறது.


ஹரிஷ் யுவராஜின் நேர்த்தியான படத்தொகுப்பு மற்றும் கலை இயக்குநர் வி.சசிகுமாரின் பணி படத்திற்கு பலம் சேர்க்கும் வகையில் பயணித்திருக்கிறது. உண்மை சம்பவத்தை மையமாக கொண்ட கதை என்றாலும், அதை சினிமா பாணியில் மிக சிறப்பாக கையாண்டிருக்கும் இயக்குநர் சசி, பிள்ளைகள் பெரியவர்களான பிறகு நடக்கும் மறுமணங்களுக்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்களையும் ஏற்றுக்கொள்ளும்படி திரைக்கதை மற்றும் காட்சிகளை வடிவமைத்திருக்கிறார்.


முதல் பாதி சோகமாகவும், அதிகமான வசனங்கள் நிறைந்ததாகவும் பயணிப்பது படத்தை சற்று தொய்வடைய செய்தாலும், இரண்டாம் பாதியில் கதாபாத்திரங்களின் உணர்வுப்பூர்வமான நடிப்பு மற்றும் கிளைமாக்ஸ் காட்சியை நகைச்சுவையாக கையாண்ட விதம் ஆகிவை குறைகளை மறந்து படத்தை பாராட்ட வைக்கிறது. மொத்தத்தில், ‘நூறுசாமி’ பெண்களின் குல சாமி

கோபம், வஞ்சம், வெற்றி – மனதின் போராட்டத்தை சொல்லும் “வஞ்சம் தீர்” பாடல்!*

 *கோபம், வஞ்சம், வெற்றி – மனதின் போராட்டத்தை சொல்லும் “வஞ்சம் தீர்” பாடல்!*



புஷ்பநாதன் புரடக்சன்ஸ் மற்றும் அக்ஷயா பிக்சர்ஸ் LLPஇணைந்து தயாரித்திருக்கும்  “வஞ்சம் தீர்” ஆல்பம் பாடல் வெளியாகி வரவேற்பைப் பெற்று வருகிறது!

மனித மனத்தில் ஒளிந்திருக்கும் கோபம், ஏமாற்றம் மற்றும்பழிவாங்கும் உணர்வுகளின் பிரதிபலிப்பாக உருவாகியுள்ள “வஞ்சம் தீர்” ஆல்பம் பாடல் தற்போது யூடியூபில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

 

“ஒவ்வொருவரின் மனதிற்குள்ளிருக்கும் சாத்தான் வேதம் சொன்னால் என்னவாக இருக்குமென்ற?” சிந்தனையை மையக் கருவாக  உருவாகியுள்ள இந்த பாடல், கோபத்தையும்,வஞ்சத்தையும் நேர்மறை சக்தியாக மாற்றி வெற்றியை நோக்கி பயணிக்க வேண்டும் என்ற உன்னத கருத்தை பொட்டில் அடித்தாற் போல் பேசுகிறது. “வாழ்ந்து காட்டி வஞ்சம் தீர்” என்ற மையக் கருத்து, பாடலின் ஒவ்வொரு காட்சியிலும், வரிகளிலும் வலிமையாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது.


புஷ்பநாதன் ஆறுமுகம் எழுதி, இயக்கியுள்ள இந்த பாடல், வாழ்க்கையில் சந்திக்கும் அவமானங்களும், வலிகளும், நிராகரிப்புகளும் நம்மை பழிவாங்க இயக்குபவையல்ல. மாறாக, வெற்றி பெற்று வாழ்ந்து காட்டுவதுதான் உண்மையான பதில் என்ற வலுவான கருத்தை எடுத்துரைக்கிறது.


முன்னணி இயக்குநர் நிதிலன் சுவாமிநாதனிடம், மகாராஜா திரைப்படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றிய புஷ்பநாதன் ஆறுமுகம், தனது தனிப்படைப்பாக இந்த பாடலை எழுதி, தயாரித்து, இயக்கியுள்ளார். தனது வாழ்க்கையில் சந்தித்த அனுபவங்கள், போராட்டங்களிலிருந்து பெற்ற புரிதல்களை அடிப்படையாகக் கொண்டு இந்த படைப்பை உருவாக்கியுள்ளார்.

 

பிரபல இயக்குநரும், நடிகருமான அருண் ராஜா காமராஜ், இந்த பாடலை பாடியிருப்பதுடன், முற்றிலும் மாறுபட்ட “சாத்தான்” வேடத்தில் நடித்துள்ளார். சிவப்பு நிற உடையுடன், சாத்தானை பிரதிபலிக்கும் வித்தியாசமான தோற்றமானது, பாடலை பார்த்து முடித்த பின் நம் மனதுடன் நாமே பேசும் உணர்வை உருவாக்கியுள்ளது, ரசிகர்களிடையே பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது.


இசையமைப்பாளர் டோனி பிரிட்டோ இந்த பாடலுக்கு இசையமைத்துள்ளார். பாடலின் கருத்துக்கு ஏற்ற துள்ளல்இசையும், துடிப்பான பின்னணி ஒலிகளும் பாடலின் உணர்வை மேலும் உயர்த்தியுள்ளன.

ஒளிப்பதிவை விஷ்ணு மணி வடிவு, படத்தொகுப்பை தின்சா, கலை இயக்கத்தை எஸ்.ஜி. திவாகர் கவனித்துள்ளனர். நடன அமைப்பை சுரேந்திரன் ஜோ மேற்கொண்டுள்ளார். மாங்கோ போஸ்ட் நிறுவனம் கலர் கோர்ப்பு பணியையும், ரேமேக்ஸ் ஸ்டுடியோ மற்றும் பிக் செல் பேக்டரி நிறுவனம் அனிமேசன் பங்களிப்பை மிகச் சிறப்பாக செய்துள்ளனர். படக்குழுவின் தொழில்நுட்ப பங்களிப்பு பாடலின் உணர்வை உலக தரத்திற்கு உயர்த்தியுள்ளது. ஐஸ்வர்யா ரகுநாத் ஆடை வடிவமைப்பிலும், ரதி ராதிகா சாத்தானாகவே அருண்ராஜா காமராஜை மேக்கப்பின் மூலம் உருவாக்க உழைத்திருப்பது கூடுதல் கவனம் பெறுகிறது.


மொத்தத்தில், “வஞ்சம் தீர்” ஆல்பம் பாடல் பழிவாங்கும் எண்ணத்தை வெற்றியாக மாற்றும் வாழ்க்கைப் பாடத்தை வித்தியாசமான காட்சியமைப்பிலும் சக்திவாய்ந்த இசையிலும், வீரியமிக்க வரிகளிலும் உருவாகியுள்ளது. வெளியான குறுகிய காலத்திலேயே சமூக வலைதளங்களில் நல்ல வரவேற்பைப் பெற்று வரும் இந்த பாடல், இளைஞர்கள் மத்தியில் கவனம் பெற்ற படைப்பாக மாறியுள்ளது.


🔗https://youtu.be/6cY-B-GDYoo

சென்னையில் நடைபெற்ற “எங்கள் தங்கம்” படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு!*

 *சென்னையில் நடைபெற்ற “எங்கள் தங்கம்” படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு!*



“தமிழ் சினிமாவில் இன்னும் நிறைய படங்களில் நடிக்க வேண்டும் என்பதே என் ஆசை!” – ‘எங்கள் தங்கம்’ விழாவில் சமந்தா


நடிகை சமந்தா முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ள “எங்கள் தங்கம்” திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னை நகரில் நடைபெற்றது.


“This GOLD is BLOODY BOLD” என்ற அதிரடியான டேக் லைனுடன் உருவாகியுள்ள இப்படம் வரும் ஜூன் 19, 2026 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.


பிரபல படைப்பாளரும் தயாரிப்பாளருமான ராஜ் நிடிமொரு உருவாக்கியுள்ள இந்தத் திரைப்படத்தை திறமையான இயக்குநர் பி.வி. நந்தினி ரெட்டி இயக்கியுள்ளார். ட்ரலாலா மூவிங் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தை ராஜ் நிடிமொரு, சமந்தா மற்றும் ஹிமாங்க் ரெட்டி துவ்வுரு ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர்.


நேற்று நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில், படக்குழு கலந்துகொண்டு படம் குறித்த சுவாரஸ்ய தகவல்களைப் பகிர்ந்துகொண்டனர்.


ஒளிப்பதிவு இயக்குநர் ஓம் பிரகாஷ் பேசியதாவது,


இந்தப் படத்தில் பணியாற்றியதற்கு மிகவும் மகிழ்ச்சி. இது எங்களுக்கு மிகவும் ஸ்பெஷலான திரைப்படம். சில ஆண்டுகளுக்கு முன்பு நந்தினி ரெட்டி என்னை தொடர்பு கொண்டு, சமந்தாவை மையமாக வைத்து ஒரு புதிய படத்தை எடுக்கப் போவதாக கூறினார். அதைக் கேட்டவுடன் எனக்கு மிகுந்த ஆர்வம் ஏற்பட்டது.


பொதுவாக நந்தினி ரெட்டி என்றாலே அழகான காதல் மற்றும் குடும்பக் கதைகளை நினைப்போம். ஆனால் இந்த முறை அவர் முற்றிலும் மாறுபட்ட ஒரு உலகத்தை உருவாக்கியிருக்கிறார். குறிப்பாக சமந்தா இப்படத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு ஹார்ட்கோர் ஆக்‌ஷன் காட்சிகளில் நடித்துள்ளார். அவருடைய அர்ப்பணிப்பும் உழைப்பும் படப்பிடிப்பு முழுவதும் எங்களை ஊக்கப்படுத்தியது.


டிரெய்லரில் நீங்கள் பார்த்த அந்த எனர்ஜி மற்றும் விறுவிறுப்பு முழுப் படத்திலும் இருக்கும். ரசிகர்களுக்கு இது ஒரு முழுமையான பொழுதுபோக்கு அனுபவமாக இருக்கும் என்று நம்புகிறேன். எங்கள் மீது நம்பிக்கை வைத்து இந்த வாய்ப்பை வழங்கிய தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குநருக்கு மனமார்ந்த நன்றி” என்றார்.


நடிகை கௌதமி பேசியதாவது,


“ஒரு திரைப்படத்தின் மூலம் உங்களைச் சந்திப்பது எப்போதுமே மகிழ்ச்சியான விஷயம். அதிலும் ‘எங்கள் தங்கம்’ போன்ற ஒரு சிறப்பான படத்திற்காக இந்த மேடையில் நிற்பது எனக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கிறது.


இந்தப் படத்தில் நடித்த அனுபவம் மிகவும் இனிமையானது. படப்பிடிப்பு எப்போது தொடங்கி எப்போது முடிந்தது என்பதே தெரியவில்லை. படம் முடிந்துவிட்டதா, இன்னும் சில நாட்கள் படப்பிடிப்பு தொடர்ந்திருக்கலாமே என்று நினைக்க வைத்த அளவுக்கு மகிழ்ச்சியாக இந்தப் பயணம் இருந்தது.


சமீப காலமாக நான் அதிகமான படங்களை ஏற்றுக் கொள்ளவில்லை. ஆனால் இந்தப் படத்தை ஒப்புக்கொண்டதற்கு முக்கியக் காரணம் இதன் பின்னால் இருந்த மனிதர்கள் தான். தயாரிப்பாளரும் இயக்குநரும் ஒரு படத்தின் மிக முக்கியமான தூண்கள். இந்தப் படத்தில் அந்த இரண்டு பொறுப்புகளையும் ஏற்றிருக்கும் சமந்தா மற்றும் நந்தினி ரெட்டி மீது எனக்கு மிகுந்த அன்பும் மரியாதையும் உள்ளது.


இருவரும் மிகவும் தன்னம்பிக்கை மிக்கவர்கள், வலிமையானவர்கள், அதே நேரத்தில் கண்ணியமானவர்கள். அவர்களுடைய பணித்திறன் மற்றும் அர்ப்பணிப்பை நான் எப்போதும் மதித்து வந்திருக்கிறேன். அவர்களுடன் இணைந்து பணியாற்றியது எனக்கு ஒரு பெருமையாக இருக்கிறது.


பலர் இதை ‘உமன் பவர்’ என்று கூறலாம். ஆனால் எனது பார்வையில் இது ‘டாலண்ட் பவர்’. இந்தப் படத்தின் வெற்றிக்கு காரணம் பாலினம் அல்ல, இதில் பணியாற்றிய அனைவரின் திறமையும் உழைப்பும் தான். சிறந்த கதை, அருமையான இயக்கம், தரமான தயாரிப்பு, அற்புதமான நடிப்பு மற்றும் இசை என ஒவ்வொரு அம்சமும் மிகச் சிறப்பாக அமைந்துள்ளது.


சமந்தாவுக்கும், நந்தினி ரெட்டிக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள். அவர்கள் நினைக்கும் உயரங்களை அடைந்து, அதையும் தாண்டி இன்னும் பெரிய வெற்றிகளை பெற வேண்டும். அவர்களுடைய பயணம் பலருக்கும் உத்வேகமாக அமைய வேண்டும். இந்தப் படம் பிடிக்கும் என்று நான் நம்புகிறேன் என்று சொல்ல மாட்டேன். ‘எங்கள் தங்கம்’ கண்டிப்பாக அனைவருக்கும் பிடிக்கும். இது ஒரு அழகான, மனதை தொடும் திரைப்படம்” என்றார்.


நடிகை சமந்தா பேசியதாவது,


“சென்னைக்கு வருவது எப்போதுமே எனக்கு வீட்டிற்கு வருவது போன்றது தான். சத்யம் திரையரங்கம் அமைந்துள்ள இந்த பகுதி எனக்கு மிகவும் நெருக்கமானது. கல்லூரி காலத்தில் நான் இங்கேயே வாழ்ந்திருக்கிறேன். இன்று இங்கே நிற்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.


எனக்கு எப்போதுமே ஒரு வருத்தம் உண்டு. தமிழ் சினிமாவில் நான் இன்னும் அதிகமான படங்கள் நடித்திருக்க வேண்டும் என்று அடிக்கடி நினைப்பேன். அந்த வருத்தம் இன்னும் இருக்கிறது. ஆனால் இன்னும் காலம் இருக்கிறது. நல்ல கதைகளும், நல்ல கதாபாத்திரங்களும் வந்தால் கண்டிப்பாக தமிழ் படங்களில் தொடர்ந்து நடிக்க விரும்புகிறேன்.


இன்று இங்கு வந்திருக்கும் பத்திரிகை நண்பர்களுக்கும், பல ஆண்டுகளாக என்னை ஆதரித்து வரும் ரசிகர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி. பல வருடங்களாக அதிக தமிழ் படங்கள் செய்யவில்லை, அதிக வெளியீடுகளும் இல்லை. இருந்தாலும் ரசிகர்களின் அன்பும் ஆதரவும் குறையவில்லை. அதற்காக நான் என்றும் நன்றியுடன் இருப்பேன்.


‘எங்கள் தங்கம்’ திரைப்படத்தில் நடிகையாக மட்டுமல்லாமல் தயாரிப்பாளராகவும் பணியாற்றியுள்ளேன். ஒரு திரைப்படத்தை உருவாக்குவதும், அதை வெளியிடுவதும் எவ்வளவு கடினமான வேலை என்பதை இந்தப் படம் எனக்கு முழுமையாக உணர்த்தியது. குறிப்பாக படத்தின் இறுதிக்கட்ட பணிகள் மிகவும் சவாலானதாக இருந்தன. ஆனால் அந்த உழைப்பின் பலனாக ஒரு நல்ல படத்தை உருவாக்கியிருக்கிறோம் என்ற நம்பிக்கை இருக்கிறது.


இந்தப் படத்திற்காக உழைத்த முழுக் குழுவினருக்கும் நான் நன்றி கூற விரும்புகிறேன். ஒளிப்பதிவாளர் ஓம் பிரகாஷ் சார், எங்கள் சிறிய படத்திற்கு ஒப்புக்கொண்டு பணியாற்றியதற்கு நன்றி. உங்கள் ஒளிப்பதிவின் மாயாஜாலம் படத்தின் ஒவ்வொரு காட்சியிலும் தெரிகிறது. நடிகை கௌதமி மேம், படத்தில் இணைந்ததற்கும், உங்கள் அற்புதமான நடிப்பிற்கும் நன்றி. டிரெய்லரில் வரும் எங்கள் காட்சிகளை பார்க்கும் ஒவ்வொரு முறையும் எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.


வரும் ஜூன் 19ஆம் தேதி ‘எங்கள் தங்கம்’ உலகம் முழுவதும் வெளியாகிறது. நடிகையாகவும் தயாரிப்பாளராகவும் எங்களால் முடிந்த சிறந்த முயற்சியை கொடுத்திருக்கிறோம். இந்தப் படம் உங்களை பெருமைப்படுத்தும் என்று நம்புகிறேன். தமிழ் திரையுலகம் என் வீடு. அந்த வீட்டிற்கு பெருமை சேர்க்கும் படமாக இது அமைய வேண்டும் என்பதே என் விருப்பம்,” என்றார்.


ஒரு வித்தியாசமான கதைக்களத்துடன், குடும்பம், உணர்வுகள் மற்றும் அதிரடி அம்சங்கள் கலந்த ஒரு முழுமையான பொழுதுபோக்கு படமாக இப்படம் உருவாகியுள்ளது.


ஒளிப்பதிவை ஓம் பிரகாஷ் ISC மேற்கொண்டுள்ள நிலையில், இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசை ரசிகர்களுக்கு புதிய அனுபவத்தை வழங்கியுள்ளார். திரைக்கதையை ராஜ் நிடிமொரு மற்றும் வசந்த் மாரிங்கண்டி இணைந்து எழுதியுள்ளனர். கூடுதல் திரைக்கதையை பிரகாஷ் பொப்புடி கவனித்துள்ளார்.


படத்தின் நிர்வாக மேற்பார்வையை சீதா R மேனன், படத்தொகுப்பை தர்மேந்திர ககராலா, கலை இயக்கத்தை உல்லாஸ் ஹைடூர் மேற்கொண்டுள்ளனர். அதிரடி காட்சிகளுக்காக சர்வதேச புகழ்பெற்ற லீ விட்டேக்கர் மற்றும் ஏஜாஸ் குலாப் ஆகியோர் பணியாற்றியுள்ளனர்.


சமந்தாவின் புதிய தோற்றமும், படத்தின் வித்தியாசமான கான்செப்ட்டும் ரசிகர்களிடையே ஏற்கனவே ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், “எங்கள் தங்கம்” திரைப்படம் இந்த கோடையின் முக்கிய வெளியீடாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படம் வரும் ஜூன் 19 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது

Vishwanath And Sons First Single "Pattampoochi" Emerges as the Next Big Musical Sensation.*

 *“விஸ்வநாத் & சன்ஸ்” முதல் சிங்கிள் “பட்டாம்பூச்சி” இசை ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது !*



தற்போது ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பையும் உற்சாகத்தையும் ஏற்படுத்தியுள்ள கூட்டணிகளில் ஒன்றான, சூர்யா நடிப்பிலும் வெங்கி அட்லூரி இயக்கத்திலும் உருவாகியுள்ள “விஸ்வநாத் & சன்ஸ்” திரைப்படம், 2026 ஆகஸ்ட் 14 ஆம் தேதி உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.


சமீபத்தில் இப்படத்தின் முதல் சிங்கிளான “பட்டாம்பூச்சி / நேனோ பட்டர்ஃப்ளை” பாடலை படக்குழு வெளியிட்டது. இந்தப் பாடலுக்கு ரசிகர்களிடமிருந்து மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. முதல் முறை கேட்கும்போதே மனதை கவரும் இனிமையான மெட்டும் புத்துணர்ச்சியூட்டும் உணர்வும் கொண்ட இந்தப் பாடல், இந்த சீசனின் மிகவும் நம்பிக்கைக்குரிய இசை வெளியீடுகளில் ஒன்றாக மாறியுள்ளது. ஆரம்பகட்ட வரவேற்பைப் பார்க்கும்போது, வரும் நாட்களில் இசை ரசிகர்களின் மிகப்பெரிய விருப்பப் பாடலாக இது உருவெடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


மெலடி பாடல்களை சிறப்பாக உருவாக்குவதில் ஜி.வி. பிரகாஷ் குமார் எப்போதும் தவறுவதே இல்லை. இந்த முறையும் அவர் தனது மாயாஜாலமான இசையால் அனைவரையும் கவர்ந்துள்ளார். இயக்குநர் வெங்கி அட்லூரியுடன் அவரது வெற்றிகரமான கூட்டணி மீண்டும் ரசிகர்களின் பாராட்டைப் பெற்று, படத்தின் முழு இசை ஆல்பத்திற்கான எதிர்பார்ப்பை மேலும் உயர்த்தியுள்ளது.


இந்தப் பாடலை பாடியுள்ள சுபலக்ஷினி, சமீபத்திய பிளாக்பஸ்டர் பாடல்களின் வெற்றியால் இன்று மிகவும் பாராட்டப்படும் பாடகிகளில் ஒருவராக திகழ்கிறார். மேலும், இயக்குநர் அருண்ராஜா காமராஜ் எழுதிய வரிகள் காதலின் அப்பாவித்தனம், உற்சாகம் மற்றும் உணர்வுகளை அழகாக வெளிப்படுத்தி பாடலுக்கு கூடுதல் பலம் சேர்த்துள்ளன.


அறிவிக்கப்பட்ட நாளிலிருந்தே “விஸ்வநாத் & சன்ஸ்” திரைப்படம் ரசிகர்கள் மற்றும் வர்த்தக வட்டாரங்களில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. இதுவரை வெளியிடப்பட்ட ஒவ்வொரு புரமோஷனல் அப்டேட்டும் ரசிகர்களிடையே பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது. பிரம்மாண்டமான அளவில் உருவாகி வரும் இந்த திரைப்படம், குடும்பம், உணர்வுகள் மற்றும் மனதை நெகிழவைக்கும் தருணங்களால் நிறைந்த முழுமையான பொழுதுபோக்கு அனுபவமாக அமையும் என்ற எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.


இந்தப் படத்தை சூர்யதேவரா நாக வம்சி மற்றும் சாய் சௌஜன்யா ஆகியோர், சிதாரா எண்டர்டெயின்மெண்ட்ஸ் (Sithara Entertainments)  நிறுவனத்தின் சார்பில் ஃபார்ச்சூன் ஃபோர் சினிமாஸ் ( Fortune Four Cinemas )  நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கின்றனர். ஸ்ரீகரா ஸ்டுடியோஸ் (Srikara Studios)  நிறுவனம் படத்தை வழங்குகிறது. வாத்தி மற்றும் லக்கி பாஸ்கர் போன்ற வெற்றிப்படங்களை தயாரித்ததன் மூலம் பெரும் பாராட்டுகளை பெற்ற நாக வம்சி, மீண்டும் ஒரு பிரம்மாண்டமான திரையரங்கு கொண்டாட்டத்திற்குத் தேவையான அனைத்து அம்சங்களும் கொண்ட சக்திவாய்ந்த கூட்டணியை ஒன்றிணைத்துள்ளார்.


2026 ஆம் ஆண்டில் வெளியாகவுள்ள மிகப்பெரிய மற்றும் அதிகம் கொண்டாடப்படும் குடும்ப பொழுதுபோக்கு திரைப்படங்களில் ஒன்றாக “விஸ்வநாத் & சன்ஸ்” உருவாகி வருகிறது.


இந்தப் படத்தில் சூர்யா, மமிதா பைஜு, ராதிகா சரத்குமார் மற்றும் ரவீனா டாண்டன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.


தொழில்நுட்பக் குழு:


எழுத்து & இயக்கம் : வெங்கி அட்லூரி

தயாரிப்பாளர்கள் :  சூர்யதேவர நாக வம்ஷீ & சாய் சௌஜன்யா

இசை : ஜி.வி. பிரகாஷ் குமார்

ஒளிப்பதிவு : நிமிஷ் ரவி

படத்தொகுப்பு : நவீன் நூலி

கலை இயக்கம் : பங்களன்

நிர்வாக தயாரிப்பாளர் : யலமஞ்சிலி கோபால கிருஷ்ணா (நானி)

சண்டை பயிற்சி : V. வெங்கட்

தயாரிப்பு நிறுவனங்கள் : சிதாரா எண்டர்டெயின்மெண்ட்ஸ் & ஃபார்ச்சூன் ஃபோர் சினிமாஸ்

வழங்குபவர் : ஸ்ரீகரா ஸ்டூடியோஸ்


*Vishwanath And Sons First Single "Pattampoochi" Emerges as the Next Big Musical Sensation.*


One of the most anticipated and exciting combinations today, Vishwanath And Sons starring Suriya and directed by Venky Atluri has officially locked August 14, 2026 for its grand worldwide theatrical release.


The makers recently unveiled the film's first single Pattampoochi / Neno Butterfly and the response has been overwhelmingly positive. From the very first listen, the song strikes a chord with its infectious melody and refreshing vibe making it one of the most promising musical releases of the season. Going by the early response, the song is expected to create a strong impact and grow into a major favorite among music lovers in the coming days.


When it comes to melodies, GV Prakash Kumar never misses the mark and once again he has delivered a magical composition. His successful collaboration with director Venky Atluri continues to impress audiences further raising expectations for the film's musical album.


Sung by Subhalashini whose impressive run with recent blockbuster tracks has made her one of the most sought after voices today. Adding further depth to the composition are the lyrics penned by Arunraja Kamaraj perfectly capturing the innocence, excitement and emotions of love.


Ever since its announcement, Vishwanath And Sons has generated tremendous positivity and excitement across audiences and trade circles alike. Every promotional asset released so far has managed to create a strong impact emerging as a talking point among movie lovers. The anticipation surrounding the film continues to grow as audiences eagerly await what promises to be a wholesome, emotional and heartwarming experience mounted on a grand scale.


The film is produced by Suryadevara Naga Vamsi along with Sai Soujanya under the banners of Sithara Entertainments in association with Fortune Four Cinemas and Presented Srikara Studios. Naga Vamsi who has earned widespread acclaim for backing successful films such as Vaathi and Lucky Baskhar once again brings together a powerful combination with all the ingredients of a grand theatrical celebration.


Vishwanath And Sons is shaping up to be one of the biggest and most celebrated family entertainers to watch out for in 2026.


The film stars Suriya, Mamitha Baiju, Radhika Sarathkumar and Raveena Tandon in prominent roles.


Written & Directed by Venky Atluri

Produced by Suryadevara Naga Vamsi & Sai Soujanya

Music: G.V. Prakash Kumar

Director of Photography: Nimish Ravi

Editor: Navin Nooli

Production Designer: Banglan

Banners: Sithara Entertainments, Fortune Four Cinemas 

Presenter: Srikara Studios


https://www.youtube.com/watch?v=Bm9lLpmPM0A

விக்டரி வெங்கடேஷ், நந்தமூரி கல்யாண் ராம், அனில் ரவிபுடி, சாஹு கரபாட்டி, ஷைன் ஸ்கிரீன்ஸ் வழங்கும் #VenkyAnil5 #NkrAR2, சுரேஷ் புரொடக்ஷன்ஸ், ஜீ ஸ்டூடியோஸ், சுமதி. அர்ச்சனா வழங்கும் திரைப்படம் பிரம்மாண்டமாக துவக்கம்*

 *விக்டரி வெங்கடேஷ், நந்தமூரி கல்யாண் ராம், அனில் ரவிபுடி, சாஹு கரபாட்டி, ஷைன் ஸ்கிரீன்ஸ் வழங்கும் #VenkyAnil5 #NkrAR2, சுரேஷ் புரொடக்ஷன்ஸ், ஜீ ஸ்டூடியோஸ், சுமதி. அர்ச்சனா வழங்கும் திரைப்படம் பிரம்மாண்டமாக துவக்கம்*



சம்கிராந்தி 2027-ஐ குறிவைத்து ஒரு அதிரடி கூட்டணி உருவாகியுள்ளது. விக்டரி வெங்கடேஷ், நந்தமூரி கல்யாண் ராம் மற்றும் ஹிட் மெஷின் அனில் ரவிபுடி இணையும் முழுநீள கொண்டாட்ட பொழுதுபோக்கு திரைப்படமான #VenkyAnil5 & #NkrAR2 தற்போது உருவாகி வருகிறது. ஷைன் ஸ்கிரீன்ஸ் நிறுவனத்தின் சார்பில் சாஹு கரபாட்டி தயாரிக்கும் இந்தப் படத்தை, சுரேஷ் புரொடக்ஷன்ஸ், சுமதி. அர்ச்சனா மற்றும் ஜீ ஸ்டூடியோஸ் வழங்குகின்றன. கீர்த்தி சுரேஷ் மற்றும் கிருத்தி ஷெட்டி கதாநாயகிகளாக நடிக்கின்றனர்.


படத்தின் பிரம்மாண்டமான முஹூர்த்த விழா மற்றும் பூஜை நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினருடன் பல சிறப்பு விருந்தினர்களும் கலந்து கொண்டனர்.


தயாரிப்பாளர்கள் தில் ராஜு மற்றும் ஷிரிஷ் ஆகியோர், இயக்குநர் அனில் ரவிபுடி மற்றும் தயாரிப்பாளர் சாஹு கரபாட்டியிடம் திரைக்கதையை வழங்கி நிகழ்வை தொடங்கி வைத்தனர். முஹூர்த்த காட்சிக்காக, விக்டரி வெங்கடேஷ், கல்யாண் ராம், கீர்த்தி சுரேஷ் மற்றும் கிருத்தி ஷெட்டி இடம்பெற்ற முதல் காட்சிக்கு அல்லு அரவிந்த் கிளாப் அடித்தார். சுரேஷ் பாபு கேமராவை இயக்கி வைத்தார். புகழ்பெற்ற இயக்குநர் கே. ராகவேந்திர ராவ் முதல் காட்சியை இயக்கினார்.


#VenkyAnil5 & #NkrAR2 திரைப்படம், அனில் ரவிபுடியின் பாணியில் உருவாகும் முழுமையான சங்கராந்தி கொண்டாட்ட திரைப்படமாக இருக்கும். அதிரடியான நகைச்சுவை மற்றும் பொழுதுபோக்கை மையமாகக் கொண்டு உருவாகும் இப்படத்தில் வெங்கடேஷ் மற்றும் கல்யாண் ராம் இணையும் தனித்துவமான கூட்டணி ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.


அறிவிக்கப்பட்ட சில நாட்களிலேயே இப்படம் பெரிய அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது. இதற்கு அனில் ரவிபுடியின் தொடர்ச்சியான வெற்றி சாதனைகள், வித்தியாசமான நட்சத்திர கூட்டணி மற்றும் திரையுலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களின் ஆதரவு ஆகியவை முக்கிய காரணங்களாக அமைந்துள்ளன.


தொழில்நுட்பக் குழுவிலும் முன்னணி கலைஞர்கள் இணைந்துள்ளனர். இசையமைப்பாளர் G.V பிரகாஷ் குமார் இசையமைக்க, சமீர் ரெட்டி ஒளிப்பதிவை கவனிக்கிறார். தம்மிராஜு படத்தொகுப்பாளராகவும், A.S. பிரகாஷ் கலை இயக்குநராகவும் பணியாற்றுகின்றனர். S. கிருஷ்ணா நிர்வாக தயாரிப்பாளராக செயல்படுகிறார். விரைவில் படத்தின் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது.


நடிகர்கள்:

விக்டரி வெங்கடேஷ், நந்தமூரி கல்யாண் ராம், கீர்த்தி சுரேஷ், கிருத்தி ஷெட்டி


தொழில்நுட்பக் குழு:

கதை, இயக்கம்:அனில் ராவிபூடி

தயாரிப்பாளர்:சாஹு காரபாட்டி

வழங்குபவர்கள்: சுரேஷ் புரொடக்ஷன்ஸ், ஜீ ஸ்டூடியோஸ், சுமதி. அர்ச்சனா

இசை: G.V பிரகாஷ் குமார்

நிர்வாக தயாரிப்பாளர்: S.கிருஷ்ணா

ஒளிப்பதிவாளர்: சமீர் ரெட்டி

படத்தொகுப்பு: தம்மிராஜு

கலை இயக்குநர்: A.S. பிரகாஷ்

மக்கள் தொடர்பு - யுவராஜ்

மார்க்கெட்டிங்: ஹாஷ்டேக் மீடியா


*Victory Venkatesh, Nandamuri Kalyan Ram, Anil Ravipudi, Sahu Garapati, Shine Screens’s #VenkyAnil5 #NkrAR2, Presented By Suresh Productions, Zee Studios, Smt Archana Launched Grandly*


A crazy combination is gearing up for Sankranthi 2027 as Victory Venkatesh, Nandamuri Kalyan Ram, and Hit Machine Anil Ravipudi join forces for a full-fledged festive entertainer, #VenkyAnil5 & #NkrAR2. Produced by Sahu Garapati under the Shine Screens banner, the project is presented by Suresh Productions, Smt. Archana and Zee Studios. Keerthy Suresh and Krithi Shetty play the female leads. The film was officially launched with a grand muhurtham ceremony and pooja, attended by the core team along with several special guests.


Dil Raju and Shirish formally handed over the script to director Anil Ravipudi and producer Sahu Garapati, to start the proceedings. For the grand muhurtham ceremony, Allu Aravind sounded the clapboard for the first shot featuring Victory Venkatesh, Kalyan Ram, Keerthy Suresh, and Krithi Shetty, while Suresh Babu switched on the camera. Legendary filmmaker K Raghavendra Rao directed the inaugural shot.


#VenkyAnil5 & #NkrAR2 promises to be a quintessential Anil Ravipudi-style Sankranthi entertainer packed with nonstop fun and laughter. The exciting combination of Venkatesh and Kalyan Ram adds further weight to the project, making it one of the most anticipated festive releases in the making.


Despite being only recently launched, the film has already generated strong buzz, thanks to Anil Ravipudi’s impressive blockbuster track record, the unique star combination, and the backing of some of the industry's most prominent production houses.


The film boasts a top-notch technical team, with leading music director GV Prakash Kumar composing the soundtrack, Sameer Reddy handling the cinematography, Tammiraju taking care of the editing, and AS Prakash overseeing the art direction. S Krishna serves as the executive producer. Preparations are underway to commence the regular shoot soon.


Cast: Victory Venkatesh, Nandamuri Kalyan Ram, Keerthy Suresh, Krithi Shetty


Technical Crew:

Writer, Director: Anil Ravipudi

Producer: Sahu Garapati

Presents: Suresh Productions, Zee Studios, Smt Archana

Music: GV Prakash Kumar

Executive Producer: S Krishna

Cinematographer: Sameer Reddy

Editor: Tammiraju

Art Director: AS Prakash

PRO: Yuvraaj

Marketing: Haashtag Media

samantharuthprabhuoffI When I landed in Chennai going to meet our CM.

samantharuthprabhuoffI When I landed in Chennai going to meet our CM.

today, I felt this immense sense of happiness. I
was going to meet our CM.
l've always felt that Vijay sir was never meant to
be just a hero on screen. His energy, his presence
and the way people respond to him always felt like
he was meant for something bigger.
What inspires me most is the courage it takes to
step into a completely new arena. To leave behind
what you have already mastered and take on a
challenge where the stakes are so much higher.
Not because it is easy, but because you believe
you can make a difference.
I think all of us, at some point in our lives, are
called to do more. To look beyond ourselves and
ask how we can contribute. Very few people
actually answer that call.
I have a feeling Vijay sir will surprise even the
people who already believe in him. Not because of
the position he holds, but because of the intent
with which he approaches it
Wishing him strength, wisdom and the courage to
stay the course.
And for every young person watching, may this be
a reminder that life can be so much bigger than
the dream you started with.
Ecmotamilnadu less
See translation
samantharuthprabhuoffl