-

Loading latest news...

பாவனா ஸ்டுடியோஸின் அடுத்தபடம் 'பிக்னிக்' (Picnic): 'பிரேமலு' மற்றும் 'பெத்லகேம் குடும்ப யூனிட் 'புகழ் பிரபல கதாசிரியர் கிரண் ஜோசி இயக்குகிறார்

 *பாவனா ஸ்டுடியோஸின் அடுத்தபடம்   'பிக்னிக்' (Picnic): 'பிரேமலு' மற்றும் 'பெத்லகேம் குடும்ப யூனிட் 'புகழ் பிரபல கதாசிரியர் கிரண் ஜோசி இயக்குகிறார்!*



*அண்மையில் தங்கள் தயாரிப்பில் வெளிவந்து பெரிய வெற்றி பெற்ற 'பெத்லகேம் குடும்ப யூனிட்' படத்தைத் தொடர்ந்து புகழ் பெற்ற தயாரிப்பு நிறுவனமான பாவனா ஸ்டுடியோஸின் அடுத்த படமாக   'பிக்னிக்' (Picnic) உருவாகிறது.*


இந்தப் படத்தின் மூலம் 'பிரேமலு' மற்றும் 'பெத்லகேம் குடும்ப யூனிட்' படங்களின் இணை எழுத்தாளராகப் பணிபுரிந்த கிரண் ஜோசி இயக்குநராக அறிமுகமாகிறார். 


விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் சமீபத்தில் உலகளாவிய வெற்றி பெற்ற 'பெத்லகேம் குடும்ப யூனிட்' படத்தினைத் தொடர்ந்து, முன்னணித் தயாரிப்பு நிறுவனமான பாவனா ஸ்டுடியோஸ், சந்தீப் பிரதீப், இந்திரஜித் சுகுமாரன் மற்றும் திலீஷ் போத்தன் ஆகியோருடன் இணைந்து ஒரு பிரம்மாண்டமான  நகைச்சுவை கலந்த உணர்வுப்பூர்வமான குடும்பக் கதை கொண்ட திரைப்படத்தை உருவாக்க உள்ளது. இப்படம் 2027 ஜனவரி 14 ஆம் தேதி அன்று வெளியிடப்படவுள்ளது.


தொடர்ச்சியாக வெற்றிகரமான படங்களைத் தயாரிக்கும் பாவனா ஸ்டுடியோஸ் நிறுவனம், மிகுந்த எதிர்பார்ப்புக்குரிய தனது அடுத்த திரைப்படமான 'பிக்னிக்'-ஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.


 'பிரேமலு' மற்றும் 'பெத்லகேம் குடும்ப யூனிட்' ஆகிய படங்களின் வெற்றியைத் தொடர்ந்து, இந்நிறுவனத்தின் இந்த புதிய முயற்சி தென்னிந்தியா முழுவதும் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.


இயக்குநராக ஒரு முக்கிய அறிமுகம்!


 'பிரேமலு' மற்றும் 'பெத்லகேம் குடும்ப யூனிட்' போன்ற மாபெரும் வெற்றிப் படங்களுக்கு இணை எழுத்தாளராகப் பணியாற்றிய கிரண் ஜோசி, 'பிக்னிக்' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். சுவாரஸ்யமான, கலாச்சாரத்தோடு ஒன்றிப் போகும் படியான  பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த கதைகளை உருவாக்குவதில் சிறந்து விளங்கும் ஜோசி, முதன்முதலில் இயக்குநராகப் பொறுப்பேற்பது சமீப காலங்களில் மிகவும் எதிர்பார்க்கப்படும் ஒரு படைப்பு சார் நகர்வாக அமைந்துள்ளது. கேரளாவைத் தாண்டி, குறிப்பாகத் தெலுங்கானா மற்றும் ஆந்திரப் பிரதேச மாநிலங்களிலும் அவரது முந்தைய இரண்டு படங்களுக்கும் நல்ல வரவேற்பு கிடைத்திருப்பதால், அவர்  இயக்குநராக அறிமுகமாகும் படம் மீது மிகுந்த எதிர்பார்ப்பு நிலவுகிறது. 


சிறந்த நட்சத்திரக் கூட்டணி!


இப்படத்தில் சந்தீப் பிரதீப் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடிக்க, அவருடன் பன்முகத்தன்மை கொண்ட நடிகர் இந்திரஜித் சுகுமாரன் , தேசிய விருது பெற்ற திரைப்படத் தயாரிப்பாளரும் நடிகருமான திலீஷ் போத்தன்,சுஜினா ஸ்ரீதரன் மற்றும் அக்ஷதா அஜித் ஆகியோர் இணைந்து நடிக்கின்றனர்.இப்படத்திற்கு கோவிந்த் வசந்தா இசை அமைக்கிறார்.


திரைப்பட வகைமையும் விழாக்கால வெளியீடும்!


 அனைத்துத் தரப்பு ரசிகர்களையும் கவரும் வகையிலான ஒரு முழுமையான குடும்ப நகைச்சுவை மற்றும் உணர்வுப்பூர்வமான திரைப்படமாக 'பிக்னிக்' உருவாகிறது. இப்படம் 2027 ஜனவரி 14 அன்று, பண்டிகைக்காலத்தை முன்னிட்டு உலகம் முழுவதும் திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியிடத் திட்டமிடப்பட்டுள்ளது.


தென்னிந்தியா முழுவதும் வெளியீடு!


 தென்னிந்தியா முழுவதும் பாவனா ஸ்டுடியோஸின் படைப்புகளுக்கு அதிகரித்து வரும் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில், 'பிக்னிக்' திரைப்படம் மலையாளம், தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியாகவுள்ளது.


 தெலுங்கு பேசும் மாநிலங்களில் வலுவான திரையரங்கு வெளியீட்டை உறுதி செய்யும் ஒரு முக்கிய நடவடிக்கையாக, முன்னணித் தயாரிப்பு மற்றும் விநியோக நிறுவனமான 'ஃபியூச்சர் ரன்அப் ஃபிலிம்ஸ்' (Future Runup Films) இப்படத்தின் விரிவான வெளியீட்டுப் பணிகளை மேற்கொள்ள ஒப்பந்தம் செய்துள்ளது.


 பாவனா ஸ்டுடியோஸ் தயாரிக்கும் இப்படம் குறித்த கூடுதல் தகவல்கள் விரைவில் அறிவிக்கப்படும்.


*BHAVANA STUDIOS ANNOUNCES NEXT FILM PICNIC; CO WRITER OF PREMALU AND BETHLEHEM KUDUMBA UNIT KIRAN JOSEY TO MAKE DIRECTORIAL DEBUT*


*Following the massive global success of Bethlehem Kudumba Unit, the powerhouse production banner teams up with Sandeep Pradeep, Indrajith Sukumaran, and Dileesh Pothan for a grand family comedy drama releasing on January 14, 2027.*


Hitmaking production house Bhavana Studios has officially announced its next highly anticipated feature film, titled Picnic. Coming on the back of the success of Premalu and Bethlehem Kudumba Unit, the banner’s latest venture has already generated considerable buzz across South India.


A Major Directorial Debut


Picnic marks the directorial debut of Kiran Josey, the acclaimed writer who co- penned the sensational hits Premalu and Bethlehem Kudumba Unit. Having established a strong track record of creating engaging, culturally resonant and entertaining stories, Josey’s transition to the director’s chair is among the most anticipated creative moves in recent times.


With both of his previous writing ventures enjoying a strong following beyond Kerala, particularly in Telangana and Andhra Pradesh, expectations are high for his directorial debut.


Powerhouse Ensemble Cast


The film brings together a talented ensemble cast led by Sandeep Pradeep, alongside versatile actor Indrajith Sukumaran and National Award winning filmmaker and actor Dileesh Pothan.


Genre & Grand Festival Release


Positioned as a wholesome family comedy drama, Picnic is crafted to appeal to audiences across generations. The film is officially slated for a grand worldwide theatrical release during the festive season on January 14, 2027.


Pan South India Distribution


Catering to the growing demand for Bhavana Studios’ content across South India, Picnic will release simultaneously in Malayalam, Tamil, Telugu and Kannada.


In a strategic move to ensure a strong theatrical presence across the Telugu states, prominent production and distribution house Future Runup Films has partnered with the film to handle its extensive Tamil theatrical release.


Cast : Sandeep Pradeep, Dileesh Pothan, Indrajith Sukumaran, Sujina Sreedharan & Akshatha Ajith.

Written & Directed by Kiran Josey

Music : Govind Vasantha

Produced by Bhavana Studios 


Further updates regarding the film will be announced very soon

*#Love’ – அக்டோபர் 2 முதல் நெட்ஃப்ளிக்ஸில் மட்டும்

 *#Love’ – அக்டோபர் 2 முதல் நெட்ஃப்ளிக்ஸில் மட்டும்* 



*கெமிஸ்ட்ரியா... பொருத்தமா....பந்தயம் வைக்கும் 'லவ்" (#Love)*


இன்றைய காலகட்டத்தில் காதலும் உறவுகளும் பல்வேறு மாற்றங்களைச் சந்தித்து வருகின்றன. நேரில் சந்தித்து காதல் வளர்ந்த காலம் மாறி, டேட்டிங் ஆப்கள் மூலம் ஒருவரை ஒருவர் அறிமுகம் செய்துகொள்ளும் காலகட்டத்திற்கு நாம் வந்துவிட்டோம். ஸ்வைப், மேட்ச், மெசேஜ் என காதலின் தொடக்கமே தற்போது டிஜிட்டல் உலகில் இருந்து வருகிறது. இப்படியான நவீன காதல் மற்றும் உறவுகளை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளது புதிய தமிழ் வெப் சீரிஸ் ‘#Love’.


ஷோ-ரன்னர் , சௌந்தர்யா ரஜினிகாந்த்  தயாரிப்பாளராகவும் பணியாற்ற, பாலாஜி மோகன் இந்தத் தொடரை இயக்கியுள்ளார். அர்ஜுன் தாஸ் மற்றும் ஐஸ்வர்யா லட்சுமி இணைந்து நடித்துள்ள இந்தத் தொடரில், இருவருக்கும் இடையிலான உறவு கதையின் முக்கிய அம்சமாக அமைந்துள்ளது.


FOUND மற்றும் Find My Bae எனும் இரண்டு டேட்டிங் ஆப்களைச் சுற்றி கதை நகர்கிறது. மற்றவர்களுக்கான சரியான துணையைத் தேடிக் கொடுப்பதையே தங்கள் தொழிலாகக் கொண்டிருக்கும் இந்த இரண்டு ஆப்களின் நிறுவனர்களான தாரா மற்றும் மேத்யூ, தங்களுக்கான காதலை மட்டும் கண்டுபிடிக்க முடியாமல் இருக்கின்றனர். இதற்கிடையே உருவாகும் போட்டி, காதல் மற்றும் உறவுகள் தான் தொடரின் கதைக்களமாக அமைந்துள்ளது.


நெட்ஃப்ளிக்ஸ் இந்தியாவின் உள்ளடக்க துணைத் தலைவர் மோனிகா ஷெர்கில் கூறியதாவது :


“நெட்ஃப்ளிக்ஸுக்கு இந்தியாவைப் பொறுத்தவரை இந்த ஆண்டு மிகவும் முக்கியமான ஆண்டாக அமைந்துள்ளது. குறிப்பாக தென்னிந்தியக் கதைகளுக்கான எங்களது கவனத்தையும் முதலீட்டையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறோம். அந்த வகையில் ‘#Love’ தொடரை மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.


தமிழில் எங்களது படைப்புகளின் வரிசையை விரிவுபடுத்தி வரும் நிலையில், இன்றைய காலகட்டத்தின் காதல் மற்றும் உறவுகளை மையமாகக் கொண்ட இந்த நகைச்சுவை கலந்த காதல் கதை, ஒரு புதிய அணுகுமுறையை வழங்குகிறது.


போட்டியாளர்களாக இருக்கும் இரண்டு டேட்டிங் ஆப் நிறுவனர்கள், காதல் குறித்த தங்களது எண்ணங்களையும் நம்பிக்கைகளையும் ஒருவரை ஒருவர் சந்திப்பதன் மூலம் சோதித்துப் பார்க்கும் விதத்தில் இந்தக் கதை அமைந்துள்ளது.


பாலாஜி மோகனின் இயக்கமும், சௌந்தர்யா ரஜினிகாந்தின் ஷோ-ரன்னர் மற்றும் தயாரிப்புப் பணியும் தொடருக்கு தனித்துவமான அணுகுமுறையை வழங்குகியிருக்கின்றது. அர்ஜுன் தாஸ் மற்றும் ஐஸ்வர்யா லட்சுமி தங்களது நடிப்பு, நகைச்சுவை மற்றும் இயல்பான கெமிஸ்ட்ரி மூலம் கதையின் மைய உறவுக்கு உயிர் கொடுத்துள்ளனர்.


எதிர்பாராத ஒருவரின் மீது காதல் ஏற்படும்போது உருவாகும் அந்தப் புதிய உணர்வை இந்தத் தொடர் நகைச்சுவையுடனும் அன்புடனும் பதிவு செய்கிறது. ஒரு மெசேஜுக்கு பதில் வராததைக்கூட நினைத்து நினைத்து குழம்பியிருப்பவர்களுக்கு இந்தக் கதை நிச்சயம் பரிச்சயமானதாக இருக்கும்.”



ஷோ-ரன்னரும் தயாரிப்பாளருமான சௌந்தர்யா ரஜினிகாந்த் கூறுகையில்:


“இன்றைய காலகட்டத்தில் உறவுகள் எப்படி மாறியிருக்கின்றன என்பதை இயல்பாகச் சொல்வதோடு, அதன் உணர்வுகளையும் அன்பையும் விட்டுவிடாமல் கதை சொல்லியிருப்பதுதான் ‘#Love’ தொடரின் மீது எனக்கு ஆர்வத்தை ஏற்படுத்தியது.


பாலாஜி உருவாக்கியிருக்கும் கதாபாத்திரங்கள் லட்சியங்களைக் கொண்டவர்களாகவும், குறைகளுடன் இருப்பவர்களாகவும் இருக்கிறார்கள். அதனால் அவர்களுடன் பார்வையாளர்கள் எளிதாகத் தங்களைப் பொருத்திப் பார்க்க முடியும். அர்ஜுனும் ஐஸ்வர்யாவும் இந்தக் கதாபாத்திரங்களுக்கு ஒரு புதிய உயிரோட்டத்தை வழங்கியுள்ளனர்.


இன்றைய தலைமுறையுடன் தொடர்புபடுத்திக் கொள்ளும் வகையிலான ஒரு கதையை நெட்ஃப்ளிக்ஸ் மூலம் பார்வையாளர்களிடம் கொண்டு செல்ல வேண்டும் என்ற எங்களது எண்ணத்துக்கு இந்தத் தொடர் சரியாகப் பொருந்துகிறது.”


இயக்குநர் பாலாஜி மோகன் கூறுகையில்:


“இன்றைய காலகட்டத்தைப் பிரதிபலிக்கும் ஒரு கதையைச் சொல்ல வேண்டும் என்பதுதான் ‘#Love’ உருவானதற்கான முக்கிய காரணம். காதல் மாறியிருக்கிறது, ஒருவர் மற்றொருவரைச் சந்திக்கும் விதமும் மாறியிருக்கிறது. ஆனால் உறவுகளுக்குள் இருக்கும் அடிப்படை உணர்வுகள் மட்டும் எப்போதும் மாறுவதில்லை.


இந்தத் தொடரில் இரண்டு பேர் காதலில் விழுவதை மட்டுமே சொல்லவில்லை. அவர்களது நட்பு, குடும்பம், லட்சியம் மற்றும் தங்களைப் பற்றிய புரிதலை வளர்த்துக்கொள்ளும் பயணம் ஆகியவையும் முக்கியமான பகுதிகளாக இடம்பெறுகின்றன.”


‘#Love’ தொடரை நிர்மல் வில்லியம்ஸ் எழுதியுள்ளார். ஷரதா சுப்ரமணியன் மற்றும் ஸ்வேதா சக்ரவர்த்தி இணை எழுத்தாளர்களாகப் பணியாற்றியுள்ளனர். May6 Entertainment Factory நிறுவனம் தொடரைத் தயாரித்துள்ளது.


காதலில் முக்கியமானது கெமிஸ்ட்ரியா… அல்லது கம்ஃபோர்ட்டா? அதற்கான பதிலை அக்டோபர் 2 முதல் நெட்ஃப்ளிக்ஸில் வெளியாகும் ‘#Love’ தொடரில் பார்க்கலாம்.


‘#Love’ – அக்டோபர் 2 முதல் நெட்ஃப்ளிக்ஸில் மட்டும்!


*Chemistry or Compatibility? ‘#Love’ Bets It All, Only on Netflix October 2* 


*Showrun and produced by Soundarya Rajinikanth, and directed by Balaji Mohan, #Love stars Arjun Das and Aishwarya Lekshmi in a refreshing new pairing premiering on October 2.*


17 September 2026: Chemistry or compatibility – which one actually wins? That's the question two rival dating-app founders are about to put everything on the line for, in Netflix's upcoming Tamil series #Love, premiering on October 2. Showrun and produced by Soundarya Rajinikanth, and directed by acclaimed filmmaker Balaji Mohan, this series stars Aishwarya Lekshmi and Arjun Das in a fresh on-screen pairing – and spoiler alert, their chemistry needs no algorithm to figure out!


And honestly, it hits close to home – "love" today comes with swipes, matches, unread messages, and occasionally, a full-blown rivalry – seri dhaane (translation: isn't that right)? Set against the vibrant world of rival dating apps FOUND and Find My Bae, #Love follows founders Tara and Matthew, who've built entire businesses matching everyone else... Except for themselves. 


Monika Shergill, Vice President, Content, Netflix India, said, “This has been a defining year for Netflix India, as we’ve deepened our investment in storytelling from the South of India — and #LOVE is a title we’re especially excited about. As we expand our slate across Tamil storytelling, this contemporary, feel-good rom-com stood out as a genre and that was ready for a fresh, confident take. #LOVE steps into that space with a modern, chemistry-driven love story about two rival dating-app founders who end up testing their own theories of love on each other. Director Balaji Mohan, together with showrunner and producer Soundarya Rajinikanth, brings a wonderfully playful perspective to the series, while Arjun Das and Aishwarya Lekshmi bring the central relationship to life with chemistry, warmth and humour. The series captures that giddy, unguarded feeling of falling for someone you never saw coming - funny, warm, and exhilarating to anyone who's ever overthought a text message.”


Speaking about the series, showrunner and producer Soundarya Rajinikanth said, "What drew me to #Love was how effortlessly it captures relationships today without losing its warmth and emotion. Balaji has created characters who are ambitious, flawed and incredibly easy to root for, and Arjun and Aishwarya bring such a refreshing energy to them. It's exactly the kind of contemporary story we were excited to bring to audiences with Netflix."


Echoing this, director Balaji Mohan added, "When we made #Love, we wanted to tell a story that feels like it belongs to today. Romance has evolved, the way we meet people has changed, but the emotions at the heart of relationships remain incredibly familiar and timeless. What I love about this series is that it isn't only about two people falling for each other – friendship, family, ambition and finding yourself are equally important parts of their journeys."


#Love is written by Nirmal Williams, with Sharada Subramanian and Shweta Chakravarty as co-writers, and produced by May6 Entertainment Factory. Chemistry or compatibility – which will you bet on? Get ready for a whole new kind of modern romance!


~ #Love premieres October 2, only on Netflix! ~

*'நேச்சுரல் ஸ்டார்' நானி நடிக்கும் 'தி பாரடைஸ்- The Paradise 'படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு

 *'நேச்சுரல் ஸ்டார்' நானி நடிக்கும் 'தி பாரடைஸ்- The Paradise 'படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு*



'நேச்சுரல் ஸ்டார்' நானி நடிப்பில் தயாராகி எதிர்வரும் 24 ஆம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் 'தி பாரடைஸ்' திரைப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. 


இயக்குநர் ஸ்ரீகாந்த் ஓடேலா இயக்கத்தின் உருவாகியுள்ள 'தி பாரடைஸ்' திரைப்படத்தில் நானி, கயாடு லோஹர், ராகவ் ஜூயால், சோனாலி குல்கர்னி, மோகன் பாபு, ஈஸ்வரி ராவ், சம்பூர்ணேஷ் பாபு, தணிகல பரணி, ராஜா ரவீந்திரா, ராம் ஜெகன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் நடிகை கீர்த்தி சுரேஷ் சிறப்பு தோற்றத்தில் தோன்றி, ஒரே ஒரு பாடலுக்கு நடனமாடி இருக்கிறார். சி. ஹெச். சாய் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். மாஸ் ஆக்சன் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஸ்ரீ லட்சுமி வெங்கடேஸ்வரா சினிமாஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் சுதாகர் செருகுரி தயாரித்திருக்கிறார். ஐவிஒய் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் இஷான் சக்சேனா படத்தின் இணை தயாரிப்பாளராக பணியாற்றியுள்ளார். இந்த திரைப்படத்தை தமிழகம் முழுவதும் திங்க் ஸ்டுடியோஸ் நிறுவனம் வழங்குகிறது. 


எதிர்வரும் 24 ஆம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய இந்திய மொழிகளில் பான் இந்திய திரைப்படமாக வெளியாகும் இந்த திரைப்படத்தினை விளம்பரப்படுத்தும் வகையில் சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் பிரத்யேக நிகழ்வு நடைபெற்றது. இதில் படத்தின் இயக்குநர் ஸ்ரீகாந்த் ஓடேலா- படத்தின் நாயகன் நடிகர் 'நேச்சுரல் ஸ்டார்' நானி - திங்க் ஸ்டுடியோஸ் ஸ்வரூப் ரெட்டி ஆகியோர் கலந்து கொண்டனர். 


*இந்நிகழ்வில் 'திங்க் ஸ்டுடியோஸ்' ஸ்வரூப் ரெட்டி பேசுகையில்,*


 '' நவராத்திரி திருவிழாவின் போது நானி நடித்திருக்கும் 'தி பாரடைஸ்' திரைப்படம் வெளியாகிறது. நானி நடித்திருப்பதால் இப்படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு இருக்கிறது. நாங்கள் நானி படத்திற்கு தொடர்ந்து ஆதரவளித்து வருகிறோம். இந்தப் படத்திற்கும் ரசிகர்களின் பேராதரவு கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம்'' என்றார். 


*இயக்குநர் ஸ்ரீகாந்த் வோடேலா பேசுகையில்,*


 '' எனக்கு தமிழ் தெரியாது. அடுத்த படத்தில் தமிழை கற்றுக்கொண்டு பேசுகிறேன். இந்த திரைப்படம் தாயை பற்றியும்... புரட்சியைப் பற்றியும்... பேசும் திரைப்படம். இந்த வகையிலான திரைப்படம் ரசிகர்களுடன் அதிகமாக எளிதில் தொடர்பு கொள்ளும் என நம்புகிறோம்'' என்றார். 


*நடிகர் நானி பேசுகையில்,*


 '' தி பாரடைஸ் திரைப்படம் 24ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. நான் நல்ல நடிகரா? இல்லையா? என்று எனக்குத் தெரியாது. ஆனால் எனக்கு ஒரு விசயம் மட்டும் தெரியும். நான் உங்களைப் போன்ற ஒரு நல்லதொரு பார்வையாளன். 


ஒரு பார்வையாளராக மாஸான திரைப்படத்தை பார்க்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. ஆனால் அது போன்றதொரு திரைப்படங்கள் வெளியாவது குறைவு. அப்படி ஒரு பிரம்மாண்டமான மாஸான திரைப்படத்தை திரையரங்குகளில் பார்த்து ரசிக்க வேண்டும் என ஆவலுடன் காத்திருக்கிறேன். அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் திரைப்படம் தான் 'தி பாரடைஸ்'.  



ஒவ்வொரு ரசிகர்களுக்கும், பார்வையாளர்களுக்கும் இது போன்றதொரு மாஸான திரைப்படம் அவசியம் தேவை.‌ இந்தப் படம் அப்படிப்பட்டதொரு திரைப்படம். இதை நான் நம்பிக்கையுடன் சொல்கிறேன். இதனை நீங்கள் 24 ஆம் தேதி திரையரங்குகளுக்கு வந்து, இந்த படத்தை பார்த்த பிறகு சொல்வீர்கள்.‌


இந்த படத்தில் அழுத்தமான எமோஷன்களை பற்றி பேசி இருக்கிறோம். அதே தருணத்தில் திரையரங்குகளில் பார்த்து ரசிக்கும் அற்புதமான அனுபவங்களையும் வழங்கி இருக்கிறோம். 


தமிழ் திரைப்படங்கள் எனக்கு ஒரு பைபிள் மாதிரி. என்னுடைய சினிமா அறிவிற்கும்... என்னுடைய சினிமா மீதான ஆர்வத்திற்கும்.. என்னுடைய சினிமா மீதான காதலுக்கும்... சினிமா மீது பிரியம் வந்ததற்கும்... தமிழ் சினிமாவில் உள்ள கலைஞர்கள் தான் இன்ஸ்பிரேசன். அதிலும் கமல்ஹாசன்- மணிரத்னம்- பாக்கியராஜ்- பாரதிராஜா- என பல சாதனையாளர்களை குறிப்பிடலாம். 


நான் ஒவ்வொரு முறையும் சென்னைக்கு வருகை தரும் போதெல்லாம் என்னுடைய திரை குடும்பத்திற்கு வந்தது போன்று உணர்வு எழும். எனக்கும், கடந்த காலத்தில் சென்னைக்கும், தமிழ்நாட்டிற்கும் நிறைய தொடர்பு உண்டு. என் மீது தமிழ் ரசிகர்கள் மட்டும் அன்பும் அதிகம். அதனை நான் பல தருணங்களில் உணர்ந்திருக்கிறேன். 


நான் என்னுடைய படத்திற்கு தமிழில் பின்னணி குரலில் பேசுவதற்கு தமிழ் ரசிகர்கள் மீதான பேரன்பு தான் காரணம்.


என்னுடைய திரையுலக பயணத்தில் மிகவும் கடினமாக உழைத்த திரைப்படம் 'தி பாரடைஸ்'. என்னுடைய திரையுலக பயணத்தில் நான் பெரிதும் நம்பிக்கையுடன் எதிர்பார்க்கும் திரைப்படமும் இதுதான்.‌


நான் நம்பிக்கையுடன் சொல்கிறேன் 24ஆம் தேதி திரையரங்குகளில் உங்களுக்காக தரமான சம்பவம் காத்திருக்கிறது. 


அடுத்த முறை நான் என்னுடைய படத்தினை விளம்பரப்படுத்துவதற்காக சென்னைக்கு வரும்போது, ரசிகர்கள் அனைவரும் என்னை 'தி பாரடைஸ்' படத்தில் நடித்திருக்கும் 'ஜடல்' என்ற கேரக்டர் பெயரை சொல்லித்தான் அழைப்பீர்கள்'' என்றார். 


இதனைத் தொடர்ந்து பத்திரிக்கையாளர்களின் கேள்விகளுக்கு இயக்குநர் ஸ்ரீகாந்த் ஓடேலா- நடிகர் நானி ஆகியோர் பதிலளித்தனர். அத்துடன் சென்னையில் உள்ள நானியின் ரசிகர்களுக்காக 'தி பாரடைஸ்' படத்திற்கான பிரத்யேக காட்சிக்குரிய முதல் டிக்கெட்டையும் நானி அறிமுகப்படுத்தினார்.

என்ன விலை’ திரைப்பட விமர்சனம்

 என்ன விலை’ திரைப்பட விமர்சனம் 


ராமேஸ்வரம் தீர்த்தக்கரையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கும் போது, மக்கள் தண்ணீரில் போடும் காசுகளை கடலுக்குள் மூழ்கி எடுக்கும் பணியை செய்து வரும் கருணாஸுக்கு, அந்த கடலில் ஒரு பதக்கம் கிடைக்கிறது. அதை காவல்துறையிடம் ஒப்படைக்க முடிவு செய்ய, அதுவே அவரை பெரும் சிக்கலில் சிக்க வைக்கிறது.


அந்த பதக்கத்தை அபகரிக்க நினைக்கும் சில காவலர்கள் அது முடியாமல் போனதால், தப்பித்துக் கொள்வதற்காக கோவில் நகை கொள்ளை வழக்கில் கருணாஸை சிக்க வைத்க முயற்சிக்கிறார்கள். ஆனால் அது கோவில் நகை அல்ல, என்பது தெரிந்ததும் அவரை வேறு ஒரு திருட்டு வழக்கில் சிக்க வைத்து விடுகிறார்கள்.


சிறையில் இருக்கும் கருணாஸை காப்பாற்ற வழக்கறிஞர் நிமிஷா சஜயன், சட்டம் போராட்டம் நடத்துகிறார். அவரது வாதத்திறமையால் கருணாஸை நிரபராதி என்று நிரூபிக்கும் நிமிஷா சஜயன், எந்த தவறும் செய்யாமல் தண்டிக்கப்பட்ட சாமானியன் கருணாஸ் குரலாக நீதிமன்றத்தில் ஒரு கேள்வியை முன் வைக்கிறார். இதுவரை நீதித்துறையிடம் யாரும் முன்வைக்காத அந்த கேள்வியால் நீதிபதி அதிர்ச்சியடைய, பாதிக்கப்பட்டவருக்காக பணத்தை தாண்டிய இழப்பீடு ஒன்றையும் நிமிஷா கேட்கிறார்.


வழக்கறிஞர் நிமிஷா சஜயன் கேட்கும் அந்த இழப்பீடு அரசுக்கு எதிரானதாகவும், அரசு வழங்குவதற்கான சாத்தியம் இல்லை என்றாலும், அந்த கேள்வி நாட்டில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்துகிறது. மக்கள் அரசிடம் பல்வேறு கேள்விகளை முன் வைக்கிறார்கள். சாமானியன் கருணாஸ் கேட்ட அந்த கேள்வி என்ன ?, பாதிக்கப்பட்ட அவருக்காக வழக்கறிஞர் நிமிஷா கேட்ட இழப்பீடு என்ன ?, என்பதை அரசு எந்திரத்தை ஆட்டம் காணும் செய்யும் விதத்தில் சொல்வது தான் ‘என்ன விலை’.


எந்த தவறும் செய்யாமல் சட்டத்தின் மூலம் சாமானியர்கள் குற்றவாளிகளாக்கப்பட்டு தண்டிக்கப்படுவதும், சிலர் அதே சட்டத்தின் மூலம் போராடி தங்களை நிரபராதி என்று நிரூபிப்பதும் புதிதல்ல என்றாலும், பாதிக்கப்பட்ட சாமானியன் மிது விழுந்த அந்த வீண் பழியை போக்குவது அரசின் கடமை, என்று வாதிடும் இயக்குநர் சஜீவ் பழவூர், அதற்கான திரைக்கதை மற்றும் காட்சிகளை வீரியம் நிறைந்ததாக சொல்லி புதிய சட்டப்புரட்ச்சியை நிகழ்த்தியிருக்கிறார்.


கதையின் நாயகனாக தவசிமுத்து என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் கருணாஸ், தனது திரை இருப்பு மற்றும் உடல்மொழி மூலம் கதாபாத்திரத்திற்கு நியாயம் சேர்த்திருக்கிறார். குடும்பத்திற்காக கடுமையாக உழைக்கும் ஒரு சாதாரண மனிதர் மீது விழும் வீண் பழி அவரை எந்த அளவுக்கு பாதிக்கிறது, என்பதை தனது நடிப்பு மூலம் மிக நேர்த்தியாக வெளிப்படுத்தியிருக்கும் கருணாஸ், தனது அளவான நடிப்பு மற்றும் அழும் காட்சிகளில் பார்வையாளர்களை கண்கலங்க வைத்து விடுகிறார்.


வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நிமிஷா சஜயன், சொந்தமாக டப்பிங் பேசி நடித்திருக்கிறார். நீதிமன்ற காட்சிகளில், உணர்வுப்பூர்வமான வசனங்கள் பேசி நடித்திருக்கும் நிமிஷா சஜயன், தனது வாதத்திறமை மூலம் நீதிமன்றக் காட்சிகளுக்கு சுவாரஸ்யம் சேர்த்திருக்கிறார்.


கருணாஸின் மனைவியாக நடித்திருக்கும் விஜயலக்‌ஷ்மி வீரமணி, தங்கையாக நடித்திருக்கும் சாஷா ஆகியோர் இயல்பான முகம் மற்றும் நடிப்பு மூலம் திரைக்கதைக்கு பலம் சேர்த்திருக்கிறார்கள்.


வழக்கறிஞர்களாக நடித்திருக்கும் சுவாமிநாதன், கவிதாலயா கிருஷ்ணன், நீதிபதிகளாக நடித்திருக்கும் நிழல்கல் ரவி, பூர்ணிமா பாக்யராஜ், டி.எஸ்.ஆர்.ஸ்ரீனிவாசன், காவலர்களாக நடித்திருக்கும் மோகன் ராம், தர்ஷன் உள்ளிட்ட பலர் ஒரு சில காட்சிகளில் முகம் காட்டினாலும், திரைக்கதைக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரங்களாக பயணித்து பார்வையாளர்கள் மனதில் தங்கி விடுகிறார்கள்.


ஒளிப்பதிவாளர் ஆல்பி ஆண்டனி, இயற்கையான ஒளிகளை மட்டுமே பயன்படுத்தி கதைக்களத்தின் இயல்பு தன்மை மாறாமல் காட்சிகளை படமாக்கியிருக்கிறார். கதை மாந்தர் யார் ?, அவர் செய்யும் தொழிலில் இருக்கும் ஆபத்து என்ன ? போன்றவற்றை விளக்கிய காட்சிகள் கோப்புக் காட்சிகள் என்றாலும் அதை கையாண்ட விதம் மற்றும் நீதிமன்ற காட்சிகளை காட்சிப்படுத்திய விதம் படத்திற்கு பெரும் பலம் சேர்த்திருக்கிறது.


இசையமைப்பாளர் சாம்.சி.எஸ், தனது வழக்கமான பாணியில் இருந்து முற்றிலும் விலகி புதிய வடிவிலான ஒரு பின்னணி இசை மூலம் படத்திற்கு பெரும் பலம் சேர்த்திருக்கிறார்.


பதக்கம் மூலம் நாயகனுக்கு ஏற்படும் சிக்கல், வெவ்வேறு பாதையில் பயணிப்பதையும், அதன் மூலம் நிகழும் நீதிமன்ற வாதங்களையும் மிக நேர்த்தியாக தொகுத்து படத்தை வேகமாகவும், விறுவிறுப்பாகவும் நகர்த்தி சென்றிருக்கிறார் படத்தொகுப்பாளர் ஸ்ரீஜித் சாரங்.


பாதிக்கப்பட்டவருக்கு சட்டப் போராட்டத்தினால் சரியான நீதி கிடைத்தாலும், அவர் மீது சுமத்தப்பட்ட பழி மற்றும் அதனால் ஏற்படும் பாதிப்புகளுக்காக இயக்குநர் சஜீவ் பழவூர், சட்டத்துறையிடம் முன் வைத்திருக்கும் கேள்வி இதுவரை எந்த திரைப்படத்திலும் கேட்டிராத ஒன்று. அதே சமயம், பாதிக்கப்பட்டவருக்காக அவர் கேட்கும் இழப்பீடும் இதுவரை யாரும் கேட்டிராத ஒன்றாகவும், வழங்குவதற்கான சாத்தியம் இல்லாத ஒன்றாக இருந்தாலும், இத்தகைய கேள்வி மற்றும் இழப்பீடு மூலம் மக்களை மட்டும் இன்றி அரசுத் துறைகளை யோசிக்க வைத்திருக்கிறார்.


தற்போதைய காலக்கட்டத்தில் மீனவ கிராமங்கள் உள்ளிட்ட எங்கும் குடிசை வீடுகளே இல்லாத ஒரு சூழலில், ஓலை தட்டிகள் கொண்ட கருணாஸின் வீடு மிகவும் செயற்கைத்தனமாக இருக்கிறது.


சட்டப்போராட்டம் மற்றும் நீதிமன்ற வாதங்கள் படத்தின் பெரும்பாலான காட்சிகளாக இருந்தாலும் அதை திரைக்கதையில் மிக சுவாரஸ்யமாக கையாண்டிருக்கும் இயக்குநர் சஜீவ் பழவூர், பதக்கம் ஒன்றை மையக்கருவாக வைத்துக்கொண்டு சமூக பிரச்சனை பற்றி பேசியிருப்பதோடு, அதை தொய்வில்லாத திரைக்கதை மூலம் விறுவிறுப்பான திரைப்படமாகவும் கொடுத்து வெற்றி பெற்றிருக்கிறார்.


மொத்தத்தில், ‘என்ன விலை’ படம் பார்க்கும் பார்வையாளர்களின் பணம் வீண் விரயம் ஆகாது.



பாரத ரத்னா' எம் எஸ் சுப்புலட்சுமியின் சுய சரிதையான 'எம் எஸ் : எ லெகஸி ஆன் ஸ்கிரீன்- M.S. : A LEGACY ON SCREEN ' திரைப்படத்தின் தொடக்க விழா

 *'பாரத ரத்னா' எம் எஸ் சுப்புலட்சுமியின் சுய சரிதையான 'எம் எஸ் : எ லெகஸி ஆன் ஸ்கிரீன்- M.S. : A LEGACY ON SCREEN ' திரைப்படத்தின் தொடக்க விழா*



தயாரிப்பாளர்கள் அல்லு அரவிந்த்- ராக்லைன் வெங்கடேஷ்- பென்னி வாசு - கௌதம் தின்னனூரி- ராஷ்மிகா மந்தானா- அனிரூத் - கூட்டணியில் உருவாகும் 'எம் எஸ் : எ லெகஸி ஆன் ஸ்கிரீன்- M.S. : A LEGACY ON SCREEN ' படத்தின் தொடக்க விழா சென்னையில் நடைபெற்றது


'இசை மேதை', 'பாரத ரத்னா' எம். எஸ். சுப்புலட்சுமியின் வாழ்க்கை வரலாறை தழுவி தயாராகும் திரைப்படம் 'எம். எஸ்.: எ லெகசி ஆன் ஸ்கிரீன்-  M.S. : A LEGACY ON SCREEN ' படத்தின் பாரம்பரியமான தொடக்க நிகழ்வை மாநிலங்களவை உறுப்பினரும், இந்திய திரையுலகின் நட்சத்திர நடிகருமான கமல்ஹாசன் கிளாப் அடித்து, தொடங்கி வைத்தார்.


தேசிய விருதை வென்ற இயக்குநரான கௌதம் தின்னனூரி இயக்கத்தில் உருவாகும் 'எம். எஸ். : எ லெகசி ஆன் ஸ்கிரீன்- திரைப்படத்தில் எம். எஸ். சுப்புலட்சுமியாக 'நேஷனல் கிரஷ்' நடிகை ரஷ்மிகா மந்தானா நடிக்கிறார். அனிருத்  இசையமைக்கும் இந்த திரைப்படத்தை கீதா ஆர்ட்ஸ்- ராக் லைன் என்டர்டெய்ன்மென்ட் - பென்னி வாசு பிலிம்ஸ் - ஆகிய நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் அல்லு அரவிந்த் - ராக்லைன் வெங்கடேஷ்-  பென்னி வாசு ஆகியோர் இணைந்து தயாரிக்கிறார்கள். 


இப்படத்தின் தொடக்க விழா எம் எஸ் சுப்புலட்சுமியின் வாழ்க்கையில் தவிர்க்க முடியாத இசை அரங்கமாக திகழ்ந்த சென்னையில் உள்ள தி மியூசிக் அகாடமி அரங்கத்தில் நடைபெற்றது. இதில் எம் .எஸ். சுப்புலட்சுமியின் குடும்ப வாரிசுகளும் , அவருடைய நலம் விரும்பிகளும், திரை உலகத்தை சார்ந்த தயாரிப்பாளர்களும், முன்னணி நட்சத்திர நடிகர்களும் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். மேலும் இந்த விழாவில் எம். எஸ். சுப்புலட்சுமியின் இனிமையான குரலில் ஒலித்த பாடல்களை.. இசை கலைஞர்கள் ஒன்றிணைந்து இசைத்து, அவருக்கு இசையஞ்சலியும் நடத்தினர். 


இதனைத் தொடர்ந்து இப்படத்தின் இயக்குநரான கௌதம் தின்னனூரி பேசுகையில்,

 '' மரியாதைக்குரிய எம். எஸ். சுப்புலட்சுமி குடும்பத்தினருக்கு முதல் நன்றி. மதுரையில் இசையின் பின்னணியில் பிறந்து வளர்ந்த பத்து வயது சிறிய பெண். இசை துறையில் நுழைந்து தென்னிந்தியாவிற்கு உலகளாவிய பெருமை தேடி தந்தார். எம். எஸ். அம்மாவின் வாழ்க்கையை பார்க்கும்போது பாரத ரத்னா விருது - ஏராளமான தியாகங்கள்- மிகப் பெரிய மேடைகளில் இசை கச்சேரி நிகழ்த்தியது-  ஆகியவை அவருடைய வாழ்க்கையின் ஒரு பகுதியாகத்தான் இருந்தது. ஆனால் இதற்குப் பின்னணியில் அவர் மிகுந்த மனித நேயம் கொண்ட பெண்மணியாக திகழ்ந்தார். 


மகள்-  பாடகி- நடிகை-  பெண்மணி- கலைஞர்- என பன்முக ஆளுமை திறன் கொண்டவராக இருந்தாலும்.. அடுத்த தலைமுறைக்கான அழுத்தமான செய்திகளும் அவருடைய வாழ்க்கையில் இருக்கிறது 


எங்களுடைய படக் குழு-  அவர் மீது முழுமையான மரியாதையும், அன்பையும் வைத்திருக்கிறது. எம் எஸ் அம்மாவின் வாழ்க்கை வரலாறை திரைப்படமாக உருவாக்குவற்கு கிடைத்த வாய்ப்பிற்காக கடவுளுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். இங்கு வருகை தந்திருக்கும் அனைவரின் ஆசிகளுடனும், வாழ்த்துகளுடனும் எம் எஸ் அம்மாவின் அர்ப்பணிப்பு- பக்தி- ஆகியவற்றை அவர்களுடைய சுயசரிதையாக தயாராகும் இந்த படைப்பில் நேர்த்தியாக கொண்டு வருவதற்கு உண்மையாக உழைப்போம் '' என்றார்.  


பாடலாசிரியர் மதன் கார்க்கி பேசுகையில்,


 '' எம் எஸ் அம்மாவின் வாழ்க்கை வரலாறை திரைப்படமாக உருவாக்க வேண்டும் என்பது பலருடைய பல ஆண்டு கனவுகளாகும். அந்தக் கனவை நனவாக்கும் தயாரிப்பாளர்களுக்கு முதலில் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.


பொதுவாக வாழ்க்கை வரலாறு தொடர்பான திரைப்படங்களை உருவாக்கும் போது அதில் ஏராளமான சவால்கள் இருக்கும். ஏனெனில் ஒருவரது வாழ்க்கை மிகப்பெரிய வெற்றி பெற்ற வாழ்க்கையாக இருக்கும். 


எங்கள் அம்மா, நான் குழந்தையாக இருக்கும்போது குமுதம் பத்திரிக்கைக்காக எம் எஸ் அம்மாவை நேர்காணல் செய்தார். அப்போது அவர்களை நான் பார்த்திருக்கிறேன். அப்போது எனக்கு அவர்களைப் பற்றி தெரியாது. அவர்களைப் பற்றி நாம் எல்லோருக்கும் தெரிந்தது போல் 'குறை ஒன்றும் இல்லை' என்ற பாட்டை அவர்கள் பாடினார்கள் என்ற சில விவரங்கள் மட்டும்தான் எனக்கும் தெரியும்


அதன் பிறகு என்னுடைய நண்பர் ராஜீவ் மேனன் சில பாடல்களை உருவாக்கலாம் என விவாதித்தபோது, நான்- பாம்பே ஜெயஸ்ரீ- கார்த்திக் -ஆகியோர் இணைந்து ஒரு சில பாடல்களை உருவாக்கினோம். அது மறக்க இயலாத அனுபவம். அப்போதுதான் எம் எஸ் அம்மாவின் வாழ்க்கையைப் பற்றி தெரிந்து கொள்ள தொடங்கினேன். 


இயக்குநர் கௌதம் ஒரு திரைக்கதையை எழுதி அதை எனக்கு வாசிக்க கொடுத்தார். அதை வாசிக்கும் பொழுது தான் எவ்வளவு அழகான வாழ்க்கையை எம் எஸ் அம்மா வாழ்ந்திருக்கிறார் என்பது புரிந்தது. அழகான வாழ்க்கை மட்டுமல்ல... எவ்வளவு எதிர்ப்புகளுக்கு இடையே.. அதனை மீறி அவர்கள் சாதித்திருக்கிறார்கள் என்பதையும் தெரிந்து கொண்டேன். இந்த விழா நடைபெறும் சென்னை மியூசிக் அகாடமி அவர்களுடைய வாழ்க்கையில் எவ்வளவு முக்கியமான மேடையாக இருந்தது என்பதையும் தெரிந்து கொள்ள முடிந்தது. ஒவ்வொரு முறையும் தடைகளை உடைத்து அதனை கடந்திருக்கிறார்கள். அதனால் இந்த வாழ்க்கையை சொல்ல வேண்டும் என தோன்றியது. இதற்காக இயக்குநர் கௌதமிற்கு மீண்டும் ஒருமுறை நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அவர்களுடைய வாழ்க்கையை ஒரு கதையாக நேர்த்தியாக அவர் எழுதி இருந்தார்.  


இந்த திரைப்படத்தில் பணியாற்றும் ஒவ்வொருவருக்கும் மிகப்பெரிய சவால் காத்திருக்கிறது. உதாரணத்திற்கு இப்படத்தின் இயக்குநரை எடுத்துக் கொள்ளலாம். இதற்கு முன் எத்தனையோ இயக்குநர்கள் இருந்திருக்கிறார்கள். ஆனால் அவர்களால் செய்ய இயலாத ஒரு விசயத்தை இவர் செய்திருக்கிறார். அது எம் எஸ் அம்மாவின் வாழ்க்கை வரலாறை திரைப்படமாக உருவாக்குவது.  அந்த சவாலில் அவர் எப்படி வெற்றி பெறப் போகிறார்? என்ற எதிர்பார்ப்பும் இருக்கிறது.  


இந்தத் திரைப்படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். அவருக்கு இந்த படத்தில் மிகப்பெரிய சவால் இருக்கிறது. அந்த சவாலுக்கு சொந்தக்காரர்கள் ரசிகர்களாகிய நீங்கள் தான். அனைவரையும் திருப்திப்படுத்தும் வகையில் ஒரு மார்டன் மியூசிக்கை உருவாக்கி ரசிகர்களை வசீகரித்திருக்கிறார். அத்துடன் இந்தப் படத்தின் இசை மாண்பிணையும் அவர் காப்பாற்ற வேண்டும். அதனால் அவருக்கு மிகப்பெரிய சவால் காத்திருக்கிறது. 

அதேபோல் இந்தப் படத்தில் எம் எஸ் அம்மா கதாபாத்திரத்தில் ரஷ்மிகா மந்தனா நடிக்கிறார்கள். அவர் இதற்கு முன் எத்தனையோ கதாபாத்திரங்களில் நடித்திருக்கலாம். அவை அனைத்தையும் மறக்கடித்து விட்டு.. அவர் எம் எஸ் அம்மாவாக மாற வேண்டும் என்பது மிகவும் சவாலானது. 


இதில் ஒவ்வொருவருக்கும் சவால் இருக்கிறது. இந்த சவாலை கடந்து வரும் துணிச்சலையும் எம்எஸ் அம்மா தான் கொடுப்பார். ஏனெனில் அவர் எதிர்கொண்ட சவால்களை விட நாங்கள் எதிர்கொள்ளும் சவால்கள் குறைவுதான்.‌ இதனால் இந்த திரைப்படத்தில் பணியாற்றுவது மிக்க மகிழ்ச்சியை அளிக்கிறது'' என்றார்.  

தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ் பேசுகையில்,

'' திரையுலகில் இருந்து வருகை தந்திருக்கும் நண்பர்களான சிவக்குமார்- மகேந்திரன்- சமுத்திரக்கனி- தயாரிப்பாளர் கலைபுலி எஸ். தாணு- சுகாசினி - உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி.  


எம் எஸ் அம்மாவின் வாழ்க்கை வரலாறை திரைப்படமாக உருவாக்குவதற்காக கிட்டத்தட்ட ஏழு எட்டு ஆண்டுகளாக முயற்சி செய்து வருகிறோம். தற்போதைய சூழலில் ஒரு நல்ல கதை கிடைத்து, அதை திரைப்படமாக உருவாக்குவது என்பது கடினம். அதிலும் சுயசரிதையை திரைப்படமாக உருவாக்குவது என்பது மிகவும் கடினமானது. கடந்த ஏழு ஆண்டுகளாக பல ஆய்வுகளை செய்து, நான் -அல்லு அரவிந்த்- பென்னி வாசு- என மூவரும் இணைந்து இதற்காக திட்டமிட்டு உழைத்தோம்.  


எங்களைப் போல் பலரும் எம்எஸ் அம்மாவின் வாழ்க்கை வரலாறை திரைப்படமாக உருவாக்க ஆசைப்பட்டார்கள். ஆனால் எங்கள் மூவரையும் எம். எஸ். அம்மா தான் தேர்வு செய்திருப்பார்கள் என நம்புகிறேன். எங்களை மட்டுமல்ல இயக்குநரையும் எம் எஸ் அம்மா தான் தேர்வு செய்தார்கள். இயக்குநர் கௌதம் தின்னனூரியிடம் பேச்சுவார்த்தை நடத்தும் போது, அவர் வேறு படத்தை இயக்குவதற்கான வாய்ப்பு கிடைத்தும் அதை ஏற்க மறுத்து, இந்தப் படத்தை தான் இயக்குவேன் என இப்படத்தை இயக்க ஒப்புக் கொண்டார்.  


எம் எஸ் அம்மாவாக நடிப்பதற்கு  நடிகைகளை தேர்வு செய்வது எளிதான விசயம் அல்ல. நிறைய யோசித்த பிறகு ரஷ்மிகாவிடம் கேட்டபோது, அவர் மனதார நடிக்க ஒப்புக்கொண்டார்.இவற்றையெல்லாம் விட இந்தப் படம் உருவாவதற்கு எம் எஸ் அம்மாவின் குடும்ப உறுப்பினர்களின் ஒத்துழைப்பும் பங்களிப்பும் தான் முதன்மையானது.‌ அவர்களுக்கும் எங்கள் நன்றி. '' என்றார்.


தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு பேசுகையில்,


 ''இசையரசி- கானக்குயில்- என் பல்வேறு பட்டங்களுடன் இசை உலகில் தனக்கென தனித்துவமான முத்திரையை பதித்த எம் எஸ் அம்மாவின் வாழ்க்கை வரலாறை திரைப்படமாக தயாரிக்கும் என்னுடைய இனிய நண்பர்களான தயாரிப்பாளர்கள் மூவருக்கும் என்னுடைய நன்றியும், வாழ்த்தும்.  


இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். அவருக்கு இது சவாலானது என்றாலும், அவருடைய தாத்தா ரமணனின் ஆசி அவருக்கு உண்டு. திரைப்படத்தின் இசையை அகில உலகம் போற்றும் வகையில் அவர் இசையமைப்பார். அத்தகைய இசை புரட்சியை இந்த திரைப்படம் உருவாக்கும். இந்தப் படம் நாளைய நம்பிக்கை. இந்த படத்தை இயக்கும் இயக்குநருக்கு என்னுடைய வாழ்த்துக்கள்.  


எம் எஸ் அம்மாவின் வாழ்க்கை வரலாறை திரைப்படமாக தயாரிக்க வேண்டும் என நான்- ராஜீவ் மேனன்- சுரேஷ் சக்கரவர்த்தி -ஆகியோர் முயற்சி செய்தோம். இது மிகப்பெரிய படைப்பு. எம் எஸ் அம்மா அம்மையார் ராஷ்டிரபதி பவனில் பாடி பெருமை சேர்த்திருக்கிறார். பாரத ரத்னா விருதையும் பெற்றிருக்கிறார். அவருடைய காலம் இசை உலகின் பொற்காலம்.  

அவர் நடிப்பில் வெளியான 'மீரா' திரைப்படத்தின் உரிமை சதாசிவம் உள்ளிட்ட அவருடைய குடும்ப உறுப்பினர்களிடம் தான் இருக்கிறது. அதை அவர்களிடம் இருந்து வாங்கி பெற்று, பார்த்து, அவர்களின் நடை- உடை மற்றும் உடல் மொழியை கவனிக்க வேண்டும் என படக் குழுவினருக்கு கேட்டுக் கொள்கிறேன். 


இந்த திரைப்படம் திரையுலகத்திற்கு கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷம். காலம் காலமாக இருக்கும் ஒரு புதையல். அனைவருக்கும் வாழ்த்துக்கள் '' என்றார்.


நடிகர் சமுத்திரக்கனி பேசுகையில்,


''எம் எஸ் அம்மாவின் 110 வது பிறந்த நாளில் அவருடைய சுயசரிதையை தழுவி தயாராகும் திரைப்படத்தின் தொடக்க விழா மேடையில் நிற்பதை பெருமிதமாக கருதுகிறேன்.தயாரிப்பாளர்கள் மூவரும் இணைந்து மிகப்பெரிய வரலாற்று படைப்பை உருவாக்க உள்ளார்கள். இதில் நானும்  சிறிய பங்களிப்பை செய்கிறேன் என்பதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி.இயக்குநர் கௌதமுடன் பேசும் வாய்ப்பு கிடைத்தது. அவர் எம் எஸ் அம்மாவை பற்றி பேசும் பல விசயங்கள் இப்படத்தை பல பாகங்களாக எடுக்கும் அளவிற்கு இருந்தது. அவ்வளவு விசயங்களை அவர் கடந்து வந்திருக்கிறார். அதை கேட்கும்போது எனக்கு பெரும் மகிழ்ச்சி ஏற்பட்டது. இந்தக் குழுவிற்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள். இந்தப் படம் மிகப்பெரிய வரலாற்றுப் பதிவாக இருக்கும்'' என்றார்.  


நடிகர் சிவகுமார் பேசுகையில்,

 '' உலகநாயகன் கமல்ஹாசன் முன்னிலையில் இப்படத்தின் தொடக்க விழா நடைபெறுகிறது. ஒரு வேடிக்கை என்னவென்றால், இந்த படத்தை தெலுங்கு திரையுலகை சேர்ந்தவர்கள் தயாரிக்கிறார்கள். நாம் செய்ய வேண்டிய விசயத்தை அவர்கள் செய்கிறார்கள். இதற்காக அவர்களுக்கு ஒரு சல்யூட். இது பெருமிதமாகவும் இருக்கிறது.

 

அவர்களுடைய வாழ்க்கையைப் பற்றி நான் சிறுவயதில் படித்திருக்கிறேன். அவர்களுடைய வீட்டில் பாட்டு கேட்பதற்கு ரேடியோ கூட இருக்காதாம். அருகிலுள்ள பூங்காவிற்கு சென்று தான் கேட்பார்களாம் என நான் கேள்விப்பட்டிருக்கிறேன். அப்படி இருந்த பெண்.. இது போன்ற சபாக்களில் பாடுவதற்கு எப்படியெல்லாம் சதாசிவம் உதவி செய்தார் என்பதையும் படித்திருக்கிறேன். அந்த மகத்தான அம்மாவை பற்றி சுயசரிதை திரைப்படத்தை உருவாக்குகிறார்கள் என்றவுடன் அதற்கு அனிருத் தான் இசையமைக்க உள்ளார் என்பதை கேள்விப்பட்டவுடன் மகிழ்ச்சியாக இருந்தது. அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்'' என்றார்.  


தயாரிப்பாளர் அல்லு அரவிந்த் பேசுகையில்,  


'' சிறப்பு விருந்தினராக வருகை தந்திருக்கும் கமல்ஹாசனுக்கு நன்றி. இந்த விழாவில் கலந்து கொள்ள வேண்டும் என கேட்டவுடன் எந்த மறுப்பும் சொல்லாமல் உடனே ஒப்புக் கொண்டதற்கும் நன்றி.இன்று காலை இந்த நிகழ்வு நடைபெறும் இடத்தை பார்வையிட்டேன். எம் எஸ் அம்மாவின் மிகப்பெரிய புகைப்படத்தை பார்த்தேன்.  அப்போது அவருடைய சுயசரிதையை நாங்கள் தயாரிக்கவில்லை. அவருடைய வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாக்குவதற்கு அவர்தான் எங்களை தேர்வு செய்திருக்கிறார் என்பதை உணர்ந்தேன். அந்த புகைப்படத்தை பார்த்தவுடன் உணர்வுபூர்வமாக இருந்தது.அதேபோல் அவருடைய கதாபாத்திரத்தில் ரஷ்மிகா நடித்திருப்பது அவருடைய தேர்வு தான்.எம் எஸ் அம்மாவின் வாழ்க்கை வரலாறை ஏன் திரைப்படமாக தயாரிக்க வேண்டும்? .. அவர் ஒரு இசைக் கலைஞர். அவர் ஒரு பாடகி. அவர் ஒரு சாதனையாளர்.. ஆகிய அடையாளங்களை எல்லாம் கடந்து அவருடைய வாழ்க்கையில் பல சம்பவங்கள் நடந்திருக்கிறது. அதுதான் அவர்களுடைய வாழ்க்கை வரலாறை திரைப்படமாக உருவாக்க வேண்டும் என்ற உந்துதலை ஏற்படுத்தியது.

அவர் வாழ்க்கையில் பின்பற்றிய கொள்கை- ஒழுக்கம்- நேர்மை- அர்ப்பணிப்பு -அதுவும் அவருடைய பத்தாவது  வயதிலிருந்து இருபது வயது வரையிலான வாழ்க்கையில், அதுவும் அவருடைய கடினமான தருணங்களில் தன்னுடைய தனித்துவத்தை விட்டுக் கொடுக்காமல் வாழ்ந்த வாழ்க்கை.. இசை மீது அவருக்கு இருந்த அசைக்க முடியாத நம்பிக்கையும், பற்றும்.. என பல விசயங்கள் இதில் உள்ளது. இதைப் பற்றி நான் மேலும் விரிவாக சொல்ல விரும்பவில்லை. அனைத்தும் இந்த திரைப்படத்தில் இடம் பிடித்திருக்கிறது.


இளம் வயதில் அவர் எவ்வளவு சங்கடங்களையும்... கடினமான தருணங்களையும்... எதிர்கொண்டிருக்கிறார் என்பது யாருக்கும் தெரியாது. இப்படத்தின் இயக்குநர் கௌதம் கடந்த ஓராண்டாக பல இடங்களுக்குச் சென்று ஆய்வு செய்து, பலரை சந்தித்து இப்படத்தின் திரைக்கதையை எழுதி இருக்கிறார். இதற்காக அவருக்கும், அவருடைய குழுவினருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.  


இயக்குநர் கௌதம் அவர் இயக்கிய முதல் திரைப்படத்திற்காக தேசிய  விருதினை வென்றவர். அவர் மிகப்பெரிய படத்தில் பணியாற்ற ஒப்புக்கொண்டிருந்தார். ஆனால் நாங்கள் எம் எஸ் அம்மாவின் சுயசரிதையை திரைப்படமாக தயாரிக்க உள்ளோம் என்றதும்.. அந்த படத்தில் இருந்து விலகி, இதில் பணியாற்ற மகிழ்ச்சியுடன் ஒப்புக்கொண்டார். 


தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ் கடந்த ஏழு ஆண்டுகளாக இப்படத்தை உருவாக்க வேண்டும் என்பதில் எங்களுக்கு தொடர்ந்து ஆதரவு அளித்து வருகிறார். எம் எஸ் அம்மாவின் வாழ்க்கை வரலாறை திரைப்படமாக உருவாக்குவதற்கு பலர் முயற்சி செய்திருந்தாலும் இதில் அவர் நம்பிக்கையுடன் இருந்தார். இறுதியில் அவர் எம் எஸ் அம்மாவின் குடும்ப உறுப்பினர்களிடம் திரைப்படமாக தயாரிக்கும் உரிமையை பெற்றார். இந்த திரைப்படம் உருவாகுவதற்கு எம் எஸ் அம்மாவின் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் தங்களின் மனமுவந்த ஆதரவை தெரிவித்துள்ளனர். இதற்காக அவர்கள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.  


இந்த திரைப்படத்திற்கு அனிருத் ஏன் இசையமைக்க வேண்டும்? இசைக்கு இந்த கால இளைய தலைமுறையினருக்கும்.. அடுத்த தலைமுறையினருக்கும் அனிருத் ஒரு இசை பாலமாக திகழ்கிறார். இவர்தான் ஜென் ஸீ தலைமுறையையும், கடந்த தலைமுறை இசையால் இணைக்கும் ஆற்றலை பெற்றிருக்கிறார்.  


ஒவ்வொரு நாளும் நாம் ஏராளமான இசைகளை கேட்கிறோம். ஆனால் ஒவ்வொரு நாளும் காலையில் எழுந்ததும் எம் எஸ் அம்மாவின் குரலில் ஒலிக்கும் சுப்ரபாதத்தை கேட்கிறோம். தற்போது சமூக ஊடகங்கள் மூலமாக ஏராளமான இசைகளை... இசை வடிவங்களை... நாம் கேட்கிறோம். இதில் நாம் எதனை ரீ கிரியேட் செய்கிறோம். ஆனால் நாங்கள் எம் எஸ் அம்மாவின் இசையை ரீ கிரியேட் செய்யவில்லை. செய்யவும் முடியாது.  


நாங்கள் இசைக் கலைஞர் எம் எஸ் அம்மாவின் சுயசரிதையை திரைப்படமாக உருவாக்குகிறோம். அனிருத் வேறு திரைப்படங்களுக்கு இசையமைக்க ஒப்புக் கொண்டிருக்கலாம். இந்த திரைப்படத்திற்கு அவர் இசையமைக்கிறார் என்றவுடன் அவருடைய குடும்ப உறுப்பினர்கள் மட்டுமல்லாமல் இசை குடும்பத்தைச் சார்ந்த இசை ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் அவர் எந்த மாதிரி இசையை வழங்குவார் என்பதை கேட்பதற்கு காத்திருக்கிறார்கள். 

இந்த திரைப்படத்தின் தொடக்க விழாவிற்கு சிறப்பு விருந்தினராக யாரை அழைக்கலாம்? என்றபோது, எங்களுக்கு கமல்ஹாசனை தவிர வேறு யாரையும் யோசிக்க தோன்றவில்லை. இங்கு வருகை தந்து படத்தின் பாரம்பரியமான படப்பிடிப்பை கிளாப் அடித்து தொடங்கி வைத்ததற்காக அவருக்கு எங்கள் குழுவின் சார்பில் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.


இந்த அரங்கத்தில் நம்முடைய கண்களுக்கு புலப்படாமல் அமர்ந்து ரசிக்கும் எம் எஸ் அம்மாவின் ஆசி நம் அனைவருக்கும் இருக்கும் என்று நம்புகிறேன்'' என்றார். 


நடிகை ராஷ்மிகா மந்தானா பேசுகையில்,  


''எனக்கு தற்போது என்னுடைய மனதில் ஒரே ஒரு ஃபீலிங்ஸ் தான் இருக்கிறது. அது கிராட்டிடியூட் தான். எம் எஸ் அம்மாவின் சிறப்பு நாளான இன்று நீங்கள் அனைவரும் இங்கு ஒன்று கூடி இருப்பது சந்தோஷமாக இருக்கிறது. இதற்கு நன்றி. ஹாப்பி பர்த்டே எம் எஸ் அம்மா.இன்று நாங்கள் எம் எஸ் அம்மாவின் பிறந்த நாளை கொண்டாடுகிறோம். இதை பார்த்து இந்த அரங்கத்தில் எங்கேனும் அமர்ந்து ரசிப்பீர்கள் என்றும்.. உங்களிடத்தில் சிறிய அளவில் புன்னகை இருக்கும் என்றும்.. நம்புகிறோம். அதுவே எங்களுக்கு மகிழ்ச்சி.உங்களுடைய குரலில் தனித்துவமான தெய்வீக சக்தி இருக்கிறது. அதை கேட்கும் போதெல்லாம் எனக்கு கடவுள் முன் அமர்ந்திருப்பது போன்ற உணர்வு எழும்.அம்மா உங்களுடைய வாழ்க்கையில் சிறிய பகுதியாக இருப்பதற்கு என்னை தேர்வு செய்து இருக்கிறீர்கள். இதற்காக நான் எப்போதும் உங்களுக்கு நன்றி கடன் பட்டவராக இருப்பேன். உங்களுடைய ஆசீர்வாதம் - சதாசிவம் சாரின் ஆசீர்வாதம் - சண்முக வடிவு அம்மாவின் ஆசிர்வாதம்-  உங்களுடைய குடும்பம் மற்றும் உங்களுடைய நலம் விரும்பிகளின் ஆசீர்வாதமும், வாழ்த்தும் எங்களுக்கும், எங்கள் குழுவினருக்கும் தேவை. என்னுடைய சிறந்த பங்களிப்பை இந்த படைப்பிற்காக வழங்குவேன் என உறுதி கூறுகிறேன்'' என்றார்.  


நடிகர் கமல்ஹாசன் பேசுகையில்,


 '' நான் குழந்தை நடிகராக நடிக்கும்போது அந்த வாழ்க்கை அப்படியே தொடருமா? என்றெல்லாம் தெரியாது. வேடிக்கைக்காக என்னுடைய அப்பா சினிமாவிற்கு அனுப்பி வைத்தார். படிக்க வேண்டும் என்று சொன்னார். எனக்கு படிப்பு வரவில்லை. அதன் பிறகு தான் எனக்கு இசை என்றால் என்ன என்பது புரிய தொடங்கியது. படிப்பு வரவில்லை என்றதும்.. எது புரிந்ததோ..! அதை செய்யலாம் என்று எண்ணினேன். அதன் பிறகு இசை புரிந்ததால் அதைத் தொடர்ந்தேன். ஆனால் அதிலும் எனக்கு பிரமாதமாக வரவில்லை. அதன் பிறகு தேடித்தேடி டான்ஸ் கற்றுக் கொண்டேன். அதன் பிறகு டான்ஸ் அசிஸ்டன்டாக இருந்து, அசிஸ்டன்ட் டைரக்டர் ஆகி கிளாப் அடித்தேன். அதன் பிறகு இப்போது மீண்டும் கிளாப் அடித்திருக்கிறேன். இதற்காக நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். 


இந்த படத்தின் இயக்குநரை நான் சந்தித்திருக்கிறேன். அவர் எல்லீஸ் ஆர் டங்கன். இவர் தமிழ் சினிமாவின் முக்கியமான காட்ஃபாதர். அவர்  எண்பத்தியெட்டாவது வயதில் டாக்குமென்டரி படத்தை எடுப்பதற்காக இங்கு வந்தார். அப்போது அவரிடம் உதவி இயக்குநராக பணியாற்ற வேண்டும் என்ற ஆசை இருந்தது. அவரிடம் சென்று கையெழுத்தும் வாங்கினேன். ஆனால் அவரிடம் இணைந்து பணியாற்ற முடியவில்லையே..! என்ற வருத்தம் இருந்தது. அந்த வருத்தத்தை நீக்கியதற்காக இப்படத்தின் தயாரிப்பாளர்களுக்கு நன்றி. 


எம் எஸ் அம்மா - இசையின் ஒன்றிணைக்கும் சக்தி. அதிலும் குறிப்பாக தென்னிந்தியாவின் குரல். அவர் தமிழ், சமஸ்கிருதம், இந்தி, தெலுங்கு என பல மொழிகளில் பாடியுள்ளார். தமிழ்- தெலுங்கு- கன்னடம் என எல்லா மொழிகளிலும் அவருடைய உச்சரிப்பு உன்னதமானது. இது இன்றும் என்னைப் போன்றவர்களுக்கு பாடமாக இருக்கிறது.  


தமிழ்நாட்டில் அனைத்து வீடுகளிலும் அவர் குரலில் ஒலித்த 'ரங்க பூர்வ விஹாரா..' பாடலை கேட்டிருப்பார்கள். சுப்ரபாதத்தை ஆலயங்களில் தினமும் ஒலிக்க விடுகிறார்கள். லலிதா சகஸ்ரநாமம் என பல பாடல்களாக இருக்கட்டும். இவற்றையெல்லாம் விட 'ரங்கபூர்வ விஹாரா..' பாடலை கேட்கும் போது மனதிற்கு ஒரு சின்ன சந்தோஷ உணர்வு பரவும். அது எம் எஸ் அம்மாவை விட மூத்த இசைக்கலைஞர் ஒருவரின் கம்போசிங்கில் உருவானது. இருந்தாலும் அந்தப் பாடல் எம் எஸ் அம்மாவின் குரலில் பாடும்போது அந்த பாடலுக்கான கம்போசிங்கிற்கு என்ன வயதோ.. அதை விட.. அதை தன்னுடைய இனிய குரலில் பாடி அதன் வயதை மும்மடங்காக்கி விட்டார்கள். 


நான் அவர்களை ரசிகனாக தான் பார்த்திருக்கிறேன். அவர்களை அருகில் இருந்து பார்ப்பதற்கு அனுமதி இல்லை. எனக்கு அதற்கான அருகதையும் இல்லை.இந்த விழா அரங்கத்திற்கு அருகே சின்னதொரு மியூசிக் அகாடமி இருக்கிறது. அவர்தான் பாலமுரளி கிருஷ்ணா. அவரிடம் தான் நான் இசையை கற்றுக் கொண்டேன். அவர் பலமுறை எம்.எஸ். அம்மாவை பற்றி பேசுவதை கேட்டிருக்கிறேன். அப்போதுதான் எம் எஸ் அம்மாவின் பெருமையை புரிந்து கொள்ள முடிந்தது.பிறகு நான் 'ஹே ராம்' படத்தை உருவாக்கும் போது அவர்களை சந்திக்க நேர்ந்தது. சுயநலமாகத்தான் அவர்களை சந்தித்தேன். 'ஹே ராம்' படத்தின் பாடலை அவர்தான் பாட வேண்டும் என விரும்பினேன். ஏனெனில் என்னுடைய நாயகனான கரம் சந்த் காந்தியை பற்றிய படத்தில் அவருடைய குரல் இருக்க வேண்டும் என விரும்பினேன். ஆனால் அந்த விருப்பம் நிறைவேறவில்லை. ஏனென்றால் அவருக்கு அந்த தருணத்தில் உடல்நலக்குறைவு இருந்தது. அந்த வீட்டில் இருந்து கிடைத்த பரிந்துரையின் அடிப்படையில் தான் நான் டி கே பட்டம்மாளை சந்தித்தேன். அவர்களுக்கும் உடல் நலம் சரியில்லை. இருப்பினும் அவர்களை சக்கர நாற்காலியில் அமர வைத்து அவருடைய குரலை பதிவு செய்தோம்.நான் எம் எஸ் அம்மா-  டி கே பட்டம்மாள்-  எம்எல் வசந்தகுமாரி - ஆகிய மூன்று சக்தி வாய்ந்த ஐகானிக் பெண்மணிகளிடம் நெருங்கி பழகியுள்ளேன். இந்த மூவரும் என் தலையை தொட்டு ஆசீர்வதித்திருக்கிறார்கள். அதனால் தான் இவர்கள் கேட்டதும் இந்த நிகழ்ச்சிக்கு வர ஒப்புக்கொண்டேன். இது எனக்கு கிடைத்த கௌரவம்.இந்தப் படத்தை தயாரிக்கும் தயாரிப்பாளர்களுக்கும், இயக்குநருக்கும், இசையமைப்பாளருக்கும் குறிப்பாக அனிருத்துக்கும் வாழ்த்துக்கள்.  


எப்படி பாலச்சந்தருக்கு 'அரங்கேற்றம்' படத்தின் மூலம் திடீர் திருப்பம் ஏற்பட்டதோ...எப்படி இயக்குநர் கே விஸ்வநாத்திற்கு 'சங்கராபரணம்' படத்தின் மூலம் திடீர் திருப்பம் ஏற்பட்டதோ...இந்தப் படத்திற்கு இசையமைப்பதன் மூலம் அனிருத்தின் திரையிசை பயணத்திலும் மிகப்பெரிய மாற்றமும், திருப்புமுனையும் ஏற்படும். இந்தப் படத்தின் மூலம் மிகப்பெரிய மாற்றத்தை அனிருத் ஏற்படுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். ஏனெனில் அவர் தற்போது செல்லும் பாதையை நான் நன்கு அறிவேன்.இயக்குநர் கௌதமிற்கு இது மிகப்பெரிய பொறுப்பு.  இதற்காக நீங்கள் உயிரை கொடுக்க வேண்டாம். கடுமையாக உழைத்தால் போதும். இந்த படத்தில் தவறு நேராது. ஏனெனில் இப்படத்திற்கான திரைக்கதையை எம்எஸ் அம்மா எழுதிவிட்டு சென்றிருக்கிறார்கள். அதை மெருகேற்றினால் போதும். இயக்குநரின் பணியை எம்எஸ் அம்மா எளிதாக்கி விட்டு சென்றிருக்கிறார்.  

எம் எஸ் அம்மா பூஜைக்கு உரியவர்கள் என்பதை விட.. நம் அனைவரின் பிரியத்திற்கு உரியவர்கள்.  அதை நீங்கள் திரையில் காண்பிக்க வேண்டும். இங்கு அவர்களை வணங்குவதற்கு நிறைய பேர் உள்ளனர். அவர்கள் காட்டிய அன்பு - பாசம்-  அதைத்தான் திரையில் காண்பித்திட வேண்டும்.  


இந்தியாவின் பான் இந்திய லேடி சூப்பர் ஸ்டார் எம் எஸ் அம்மா தான். அவர்களிடம் ஏராளமான திறமை இருந்தது. அவர்கள் நடிகை மட்டுமல்ல வீணை வாசிப்பார்கள்... நடனம் ஆடுவார்கள்... 'மீரா' படத்தின் பாடல்கள் இன்றும் நம் அனைவரின் காதுகளிலும் ஒலித்துக்கொண்டே இருக்கிறது.  


மைக்கேல் ஜாக்சனின் படத்தை உருவாக்கும்போது அந்த நடிகருக்கு எவ்வளவு பதட்டம் இருந்திருக்கும். அந்த பதட்டம் ரஷ்மிகாவிற்கும் இருக்கும். அதனை களைவதற்கு அருமையான குழுவும் இருக்கிறது. அவர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள்.  

என்னால் 'அவ்வை சண்முகி' போன்ற வேடத்தை போட்டு நடிக்க முடியும். ஆனால் எம்.எஸ். அம்மாவாக ஒருபோதும் நடிக்க முடியாது. அதனால் இந்த கதாபாத்திரத்தை நீங்கள் ஏற்று தைரியமாக நடியுங்கள். 

எம் எஸ் அம்மா இந்தியாவின் சக்தி வாய்ந்த பெண்மணி. குறிப்பாக தென்னிந்தியாவின் சக்தி வாய்ந்த பெண்மணி. 

இந்த திரைப்படக் குழுவினரை எல்லீஸ் ஆர் டங்கன் சார்பாக வாழ்த்துகிறேன். அவர்தான் என்னை இங்கு சென்று படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்துவிட்டு வா என்றார். இதெல்லாம் நம்முடைய எமோஷன். 


இந்த அரங்கம் ஏராளமான இசை கலைஞர்களையும், இசை ரசிகர்களையும் உருவாக்கியது. இங்கு இந்த விழா நடைபெறுவது தான் பொருத்தமானது. எம் எஸ் அம்மாவின் புகைப்படம் இங்கு மட்டுமல்ல திருப்பதியிலும் இருக்கும்... ஐக்கிய நாடுகள் சபையிலும் இருக்கும்.... அவருடைய புகைப்படம் இல்லாத இடமே இல்லை.  


எனக்கு எல்லீஸ் ஆர் டங்கன் தான் ஹீரோ. எங்கிருந்தோ இங்கு வந்து தமிழில் படத்தை இயக்கியிருக்கிறார். அதே மரியாதையை நான் இப்படத்தின் தயாரிப்பாளர்களான அல்லு அரவிந்த் -ராக்லைன் வெங்கடேஷ்- பென்னி வாசு- ஆகியோருக்கு கொடுக்க வேண்டும். ஏனெனில் நான் கனவு கண்ட தென்னிந்தியா... கடந்த காலத்தில் அப்படித்தான் இருந்தது. சென்னை ஒரு ஹப்பாக இருந்தது. தற்போது மீண்டும் அது உருவாகிக்கொண்டிருக்கிறது. அது ஒரே ஊரில் மட்டும் இல்லாமல் பெங்களூருவாகவும்... ஹைதராபாத் ஆகவும்... சென்னை ஆகவும்... இருக்க வேண்டும். நாம் அனைவரும் ஒரே குடும்பம். இதை எப்போதும் மறந்து விடக் கூடாது. தற்போது ஒவ்வொரு படங்களும் அந்தந்த மொழிகளில் வெளியாகி வெற்றி பெற போகிறது.  


இதை நான் எப்படி சொல்கிறேன் என்றால் ...நான் 'மரோ சரித்ரா' படத்தின் நாயகன். நான் மட்டுமல்ல எனக்கு முன்னாடியே மற்றொரு ஹீரோவும் இருக்கிறார். அவர் நாகேஸ்வரராவ். அவர் நடித்த 'தேவதாஸ்' இங்கு வெற்றி பெற்றிருக்கிறது. அதனால் நாம் அனைவரும் ஒன்றிணைந்த திராவிட குடும்பம். இதில் அரசியலை நுழைத்து குழப்பிக் கொள்ள வேண்டாம்.  

இசை அனைவரையும் ஒன்றிணைக்கும் ஆற்றல் வாய்ந்தது. அதிலும் எம் எஸ் அம்மாவின் குரல் அனைவரையும் ஒன்றிணைக்கும் ஆற்றல் பெற்றது . அவரது சுயசரிதையை உருவாக்குவதால் இந்தியா பெருமை கொள்கிறது. குறிப்பாக தமிழகமும் பெருமை கொள்கிறது. இந்தப் படத்தின் தொடக்க விழாவில் கலந்து கொண்டதை நான் இந்தியனாகவும் பெருமிதம் கொள்கிறேன்'' என்றார்.

*சைமா (SIIMA) விருதுகளில் அசத்திய ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ – 6 விருதுகளை வென்று குவித்தது

 *சைமா (SIIMA) விருதுகளில் அசத்திய ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ – 6 விருதுகளை வென்று குவித்தது!*



தென்னிந்திய திரையுலகின் சிறந்த படைப்புகள் மற்றும் கலைஞர்களை கௌரவிக்கும் முக்கியமான விருது விழாக்களில் ஒன்றாகத் திகழும் சைமா (SIIMA) விருதுகள், ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு மொழித்திரைப்படங்களில் சிறந்து விளங்கிய கலைஞர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களை அங்கீகரித்து வருகிறது. 


அந்த வகையில் 2026ம் ஆண்டுக்கான சைமா விருது விழாவில், ரசிகர்களின் வரவேற்பைப் பெற்ற ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ திரைப்படம் மொத்தம் 6 விருதுகளை வென்று சாதனை படைத்துள்ளது.


சசிகுமார் – சிம்ரன் நடிப்பில், அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான ‘டூரிஸ்ட் ஃபேமிலி’, தமிழகத்தில் அடைக்கலமாகும் ஈழ அகதிகளின் வாழ்வியலை மையமாகக் கொண்டு உருவான திரைப்படம். நகைச்சுவை, குடும்ப உணர்வு, மனிதநேயம் என பல்வேறு அம்சங்களை அழகாக இணைத்து உருவாக்கப்பட்ட இப்படம், திரையரங்குகளில் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றதுடன், அதன் வித்தியாசமான கதை சொல்லும் முறையாலும் பாராட்டுகளைப் பெற்றது.


இப்படத்தின் வெற்றிக்கு மேலும் சிறப்பு சேர்க்கும் வகையில், தற்போது சைமா விருதுகளில் விமர்சகர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறந்த திரைப்படம், சிறந்த அறிமுக இயக்குநர், சிறந்த நடிகர்,  சிறந்த நடிகை, சிறந்த பின்னணிப் பாடகர் – ஆண் மற்றும் சிறந்த நகைச்சுவை நடிகர் என மொத்தம் 6 விருதுகளை ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ வென்றுள்ளது.


குறிப்பாக, அறிமுக இயக்குநராக களமிறங்கிய அபிஷன் ஜீவிந்திற்கு சிறந்த அறிமுக இயக்குநர் விருது கிடைத்திருப்பது அவரது முதல் படைப்புக்கு கிடைத்துள்ள முக்கியமான அங்கீகாரமாக அமைந்துள்ளது. அதேபோல் சசிகுமார் மற்றும் சிம்ரன் ஆகியோரின் நடிப்பிற்கும் விமர்சகர்கள் பிரிவில் விருதுகள் கிடைத்துள்ளன. படத்தின் நகைச்சுவை அம்சத்திற்காக யோகிபாபுவிற்கு சிறந்த நகைச்சுவை நடிகர் விருதும், இசைப் பங்களிப்பில் விஜய் யேசுதாஸ் பாடிய பாடலுக்காக சிறந்த பின்னணிப் பாடகர் – ஆண் விருதும் கிடைத்துள்ளன.


‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார், அரவிந்த் விஸ்வநாதன் ஒளிப்பதிவு செய்துள்ளார். பரத் விக்ரமன் படத்தொகுப்பை மேற்கொண்டுள்ளார். சசிகுமார், சிம்ரன், யோகி பாபு, மிதுன் ஜெய் சங்கர், கமலேஷ், எம். எஸ். பாஸ்கர், ரமேஷ் திலக் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்தை மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் மற்றும் எம்.ஆர்.பி என்டர்டெயின்மென்ட் நிறுவனங்கள் சார்பில் நாசரேத் பசிலியான், மகேஷ் ராஜ் பசிலியான்  மற்றும் யுவராஜ் கணேசன் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர்.


திரையரங்குகளில் ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றதுடன், தற்போது சைமா விருது விழாவிலும் 6 விருதுகளை வென்று ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ தனது வெற்றிப் பயணத்தை மேலும் சிறப்பாக்கியுள்ளது. இந்த விருதுகள் படக்குழுவினருக்கு பெரும் மகிழ்ச்சியையும் பெருமையையும் அளித்துள்ள நிலையில், உண்மையான சினிமா ரசிகர்களுக்கு இது கொண்டாட்டமான தருணமாக அமைந்துள்ளது. ஒரு நல்ல கதை, சிறந்த நடிப்பு, இசை மற்றும் புதிய படைப்புத் திறமை ஆகியவற்றுக்கு கிடைத்துள்ள இந்த அங்கீகாரம், ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படத்தின் பயணத்தில் மேலும் ஒரு முக்கியமான மைல்கல்லாக அமைந்துள்ளது.

‘பைசன் காளமாடன்’ படத்திற்காக சைமா சிறந்த நடிகர் விருது வென்ற துருவ் விக்ரம் – இளம் நடிகருக்கு கிடைத்த மிகப்பெரிய பெருமை

 *‘பைசன் காளமாடன்’ படத்திற்காக சைமா சிறந்த நடிகர் விருது வென்ற துருவ் விக்ரம் – இளம் நடிகருக்கு கிடைத்த மிகப்பெரிய பெருமை!*



தென்னிந்திய திரையுலகில் சிறந்து விளங்கும் கலைஞர்களின் திறமையை அங்கீகரிக்கும் முக்கியமான விருது விழாக்களில் ஒன்றாக சைமா (SIIMA) விருதுகள் திகழ்கின்றன. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான சைமா விருது விழாவில், ‘பைசன் காளமாடன்’ திரைப்படத்தில் சிறப்பான நடிப்பை வழங்கியதற்காக துருவ் விக்ரம் சிறந்த நடிகர் விருதை வென்றுள்ளார். இளம் நடிகராக தனது திரைப்பயணத்தில் துருவ் விக்ரமுக்கு கிடைத்துள்ள இந்த அங்கீகாரம், அவரது திறமைக்கு கிடைத்துள்ள மிகப்பெரிய பெருமையாக அமைந்துள்ளது.


தனது முதல் படத்திலிருந்தே மாறுபட்ட கதாபாத்திரங்களைத் தேர்ந்தெடுத்து ,நடிப்பில் கவனம் செலுத்தி வரும் துருவ் விக்ரம், ஒவ்வொரு படத்திலும் தன்னை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் வகையில் தனது நடிப்பை மெருகேற்றி வருகிறார். இந்நிலையில், தனது மூன்றாவது திரைப்படத்திலேயே சைமா விருதுகளில் சிறந்த நடிகர் என்ற அங்கீகாரத்தைப் பெற்றிருப்பது அவரது இளம் திரைப்பயணத்தில் குறிப்பிடத்தக்க சாதனையாக அமைந்துள்ளது.


இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவான ‘பைசன் காளமாடன்’ திரைப்படத்தில், துணிவும் போராட்ட குணமும் நிறைந்த ஒரு விளையாட்டு வீரனின் கதாபாத்திரத்தை துருவ் விக்ரம் ஏற்றிருந்தார். கதாபாத்திரத்திற்கேற்ப தனது தோற்றம், உடல்மொழி மற்றும் நடிப்பு என பல்வேறு அம்சங்களில் அவர் மேற்கொண்ட மாற்றங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தன. குறிப்பாக கதாபாத்திரத்தின் உணர்வுகளையும், வாழ்க்கைப் போராட்டங்களையும் திரையில் வெளிப்படுத்திய விதத்தில் துருவ் விக்ரமின் நடிப்பு, படத்தின் முக்கிய அம்சமாக அமைந்தது.


ஒரு இளம் நடிகருக்கு மூன்றாவது திரைப்படத்திலேயே சிறந்த நடிகர் என்ற விருது கிடைப்பது, அவரது திரைப்பயணத்தில் மறக்க முடியாத தருணமாக அமைந்துள்ளது. குறிப்பாக ‘பைசன் காளமாடன்’ போன்ற அழுத்தமான கதாபாத்திரத்தில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டு நடித்ததற்குக் கிடைத்துள்ள இந்த அங்கீகாரம், துருவ் விக்ரமின் நடிப்புப் பயணத்தில் மேலும் ஒரு முக்கியமான அடையாளமாக மாறியுள்ளது.


அப்ளாஸ் என்டர்டெயின்மென்ட் (Applause Entertainment) சார்பில் சமீர் நாயர், தீபக் சேகல், அதிதி ஆனந்த் மற்றும் நீலம் ஸ்டுடியோஸ் சார்பில் பா. ரஞ்சித் ஆகியோர் தயாரிப்பில் உருவான ‘பைசன் காளமாடன்’ படத்தில் அனுபமா பரமேஸ்வரன், இயக்குநர் ஆமீர், இயக்குநர் லால், பசுபதி, ரஜிஷா விஜயன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மாறுபட்ட களத்தையும், அழுத்தமான கதைக்களத்தையும் கொண்ட இப்படத்தில் துருவ் விக்ரம் வெளிப்படுத்திய நடிப்பு, அவரது நடிப்புத் திறனை மேலும் அழுத்தமாக வெளிக்கொண்டு வந்துள்ளது.


துருவ் விக்ரமின் இந்த சைமா விருது, அவரது ரசிகர்களுக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியையும், இளம் நடிகருக்கு பெருமையையும் சேர்த்துள்ளது. தொடர்ந்து மாறுபட்ட கதாபாத்திரங்களில் தன்னை நிரூபித்து வரும் துருவ் விக்ரம், அடுத்ததாக ‘ஜாக்கி – நோ ரீடேக்ஸ் அலவுட்’ எனும் ஆக்‌ஷன் திரைப்படத்தில் நடித்து வருகிறார். Mythri Movie Makers தயாரிப்பில் உருவாகும் இப்படத்தை கரண் அரவிந்த் குமார் இயக்குகிறார். சைமா விருது மூலம் கிடைத்துள்ள இந்த புதிய அங்கீகாரத்தைத் தொடர்ந்து, ஆக்‌ஷன் களத்தில் துருவ் விக்ரம் வெளிப்படுத்தவுள்ள அடுத்தகட்ட பரிமாணத்தைக் காண ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.

அர்ஜுன் தாஸ் நடிக்கும் புரொடக்ஷன் No.1 (Production No.1) – பூஜையுடன் படப்பிடிப்பு தொடக்கம்!*

 *அர்ஜுன் தாஸ் நடிக்கும் புரொடக்ஷன் No.1 (Production No.1) – பூஜையுடன் படப்பிடிப்பு தொடக்கம்!*



*சில்வர் ட்ரீ ஸ்டுடியோஸ் ( Silver Tree Studios) தயாரிக்கும் முதல் திரைப்படம் – ரஞ்சித் ஜெயக்கொடி (Ranjit Jeyakodi) இயக்கத்தில் உருவாகிறது!*


விஜய் எம்.பி. புதிதாகத் தொடங்கியுள்ள தயாரிப்பு நிறுவனம் Silver Tree Studios. படைப்பாற்றல் மற்றும் கதைகளுக்கு முக்கியத்துவம் அளித்து, பல்வேறு களங்களில் சுவாரஸ்யமான படைப்புகளை உருவாக்கும் நோக்கத்துடன் தொடங்கப்பட்டுள்ள இந்த நிறுவனத்தின் முதல் திரைப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்ற பூஜையுடன் தொடங்கியுள்ளது.


சில்வர் ட்ரீ ஸ்டுடியோஸ் (Silver Tree Studios) வழங்கும் – புரொடக்ஷன் no.1 (Production No.1), POP Entertainment நிறுவனத்துடன் இணைந்து உருவாகிறது. இப்படத்தில் அர்ஜுன் தாஸ் கதாநாயகனாக நடிக்க, படத்தை ரஞ்சித் ஜெயக்கொடி இயக்குகிறார். ஷான் ரோல்டன் இசையமைக்கிறார்.


இப்படத்தின் மூலம் ப்ரீத்தி பகதாலா (Preethi Pagadala) கதாநாயகியாக தமிழ் திரையுலகில் அறிமுகமாகிறார். குடும்பம் மற்றும் உறவுகளை மையமாகக் கொண்டு உருவாகும் இப்படம், காதல், குடும்ப உணர்வுகள், நகைச்சுவை மற்றும் வலுவான கதாபாத்திரங்களை உள்ளடக்கிய ஃபேமிலி ரொமான்ஸ் டிராமாவாக உருவாகிறது.


மேலும் இப்படத்தில் கே. எஸ். ரவிக்குமார், சரவணன், யோகி பாபு, பாலா சரவணன், அஷ்வினி நம்பியார், மோனா பெட்ரே, ஜெகன் கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.


இப்படத்தை விஜய் எம்.பி. மற்றும் சண்முக பிரியன் இணைந்து தயாரிக்கின்றனர். POP Entertainment நிறுவனத்தின் சார்பில் பர்வீன் பானு இணை தயாரிப்பாளராகப் பணியாற்றுகிறார்.


தங்களது முதல் தயாரிப்பிலேயே வித்தியாசமான கதைக்களம் மற்றும் திறமையான கலைஞர்களுடன் களமிறங்கியுள்ள Silver Tree Studios, தொடர்ந்து வலுவான கதைகள், புதிய யோசனைகள் மற்றும் திறமையான படைப்பாளர்களை இணைத்து தரமான பொழுதுபோக்கு படைப்புகளை வழங்கும் நோக்கத்துடன் பயணத்தைத் புரொடக்ஷன் no.1 ‘Production No.1’ மூலம் இன்று பூஜையுடன் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளது.

*நவம்பர் 20-ம் தேதி பிரமாண்டமாக வெளியாகும் துல்கர் சல்மானின் ‘AOT

 *நவம்பர் 20-ம் தேதி பிரமாண்டமாக வெளியாகும் துல்கர் சல்மானின் ‘AOT’


*


மிகவும் எதிர்பார்க்கப்படும் துல்கர் சல்மான் நடிக்கும் ஆகாசம்லோ ஓக தாரா ‘AOT’ திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதியைப் படக்குழு இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. துல்கர் சல்மான், சாத்விகா வீரவல்லி மற்றும் ஸ்ருதி ஹாசன் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ள இப்படத்தை பவன் சாதினேனி இயக்கியுள்ளார். லைட்பாக்ஸ் மீடியா சார்பில் சந்தீப் குண்ணம் மற்றும் ரம்யா குண்ணம் இணைந்து தயாரித்துள்ளனர். இப்படத்தை ஸ்வப்னா சினிமா மற்றும் கீதா ஆர்ட்ஸ் நிறுவனங்கள் வழங்குகின்றன.


‘AOT’ திரைப்படம் வரும் நவம்பர் 20-ம் தேதி திரையரங்குகளில் பிரமாண்டமாக வெளியாகவுள்ளது. இப்படத்தை அனைத்து தரப்பு ரசிகர்களிடமும் கொண்டு சேர்க்கும் வகையில், படக்குழு சிறப்பான புரமோஷன் பணிகளைத் திட்டமிட்டு வருகிறது. சமீபத்தில் வெளியான இப்படத்தின் முதல் பாடல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று, தொடர்ந்து கேட்கத் தூண்டும் பாடலாக மாறியுள்ளது. தேசிய விருது பெற்ற இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.


படத்தின் ஒவ்வொரு அப்டேட்டும் வெளியாகும் போதும், ‘AOT’ திரைப்படத்தைச் சுற்றியுள்ள நேர்மறையான எதிர்பார்ப்பும், படத்தின் வெளியீட்டுத் தேதி குறித்த உற்சாகமும் அதிகரித்து வருகிறது.


துல்கர் சல்மான் தொடர்ந்து அர்த்தமுள்ள கதைகளைத் தேர்ந்தெடுத்து நடித்து வருவதும், இயக்குநர் பவன் சாதினேனியின் தனித்துவமான படைப்பாற்றலும், முன்னணி தயாரிப்பு நிறுவனங்களின் ஆதரவும் இணைந்து ‘AOT’ திரைப்படத்தை ரசிகர்கள் எதிர்பார்க்கும் முக்கியமான படைப்பாக உருவாக்கி வருகிறது.


திறமையான ஒளிப்பதிவாளர் சுஜித் சாரங் இப்படத்தின் ஒளிப்பதிவைக் கவனிக்கிறார். ஸ்வேதா சாபு சிரில் தயாரிப்பு வடிவமைப்பை மேற்கொள்கிறார். வலுவான தொழில்நுட்பக் குழுவும், திறமையான நட்சத்திரப் பட்டாளமும் இணைந்துள்ளதால், ‘AOT’ ஆகாசம்லோ ஓக தாரா திரைப்படம் தெலுங்கு, தமிழ், இந்தி மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகி ரசிகர்களிடம் கவனம் ஈர்க்கத் தயாராகி வருகிறது.


*நடிகர்கள்:* துல்கர் சல்மான்,சாத்விகா வீரவல்லி, ஸ்ருதி ஹாசன் மற்றும் பலர்


*தொழில்நுட்பக் குழு:*


இயக்கம்: பவன் சாதினேனி

கதை: கங்கராஜு குன்னம்

இசை: ஜி.வி. பிரகாஷ் குமார்

ஒளிப்பதிவு: சுஜித் சாரங்

தயாரிப்பு வடிவமைப்பு: ஸ்வேதா சாபு சிரில்

தயாரிப்பாளர்கள்: சந்தீப் குண்ணம், ரம்யா குண்ணம் – லைட்பாக்ஸ் மீடியா

வழங்குபவர்கள்: கீதா ஆர்ட்ஸ், ஸ்வப்னா சினிமா


*DULQUER SALMAAN'S AOT GRAND RELEASE ON NOVEMBER 20TH*


The makers of AOT announced the release date of most awaited Dulquer Salmaan film today. Starring Dulquer Salmaan, Satvika Veeravalli and Shruti Haasan in lead roles. The film is directed by Pavan Sadineni, produced by Sandeep Gunnam and Ramya Gunnam under Lightbox Media. The film is presented by Swapna Cinema and Geetha Arts.


AOT is all set for grand release in cinemas this November 20th. The team is planning solid promotions with a plan to reach everyone with this beautiful film. Recently released the first single slowly became an addiction for everyone. National Award winning composer GV Prakash Kumar is scoring the music for this film. Every time an asset comes out the warmth and positivity surrounding the project along with the excitement around its release date make it even more exciting to look forward to in the coming days.


With Dulquer’s consistent track record of choosing meaningful stories and director Pavan Sadineni’s creative vision, and esteemed banners presenting it AOT is shaping up to be a significant and memorable project.


Talented Sujith Sarang is handling the cinematography while Shwetha Sabu Cyril is taking care of Production Design. With such a strong team and exciting cast, AOT is poised to make a significant impact in Telugu, Tamil, Hindi and Malayalam.



*Cast:* Dulquer Salmaan, Satvika Veeravalli, Shruti Haasan and others


*Technical Team:*


Director: Pavan Sadineni

Writer: Gangaraju Gunnam

Music: GV Prakash

DOP: Sujith Sarang

Production Designer: Shwetha Sabu Cyril

Producers: Sandeep Gunnam, Ramya Gunnam under Lightbox Media

Presented by - Geetha Arts, Swapna Cinema

பல நூறு திரைப்படங்களுக்கு பாடல்கள் எழுதிய இசைஞானி

பல நூறு திரைப்படங்களுக்கு பாடல்கள் எழுதிய இசைஞானி திரு. இளையராஜா அவர்களையும், மூன்று திரைப்படங்களுக்கு கதை, வசனம் எழுதிய திரு. சரத்குமார் அவர்களையும் தலைவர் சேரன், பொதுச்செயலாளர் பட்டுக்கோட்டை பிரபாகர், பொருளாளர் ஆர். சுந்தர்ராஜன், துணைத் தலைவர் சினேகன், இணைச் செயலாளர் பாஸ்கர் சக்தி, செயற்குழு உறுப்பினர் நவீன் ஆகியோர் சந்தித்தோம்.



“நீங்கள் நமது சங்கத்தில் உறுப்பினராக இருப்பது சங்கத்திற்குப் பெருமை” என்ற எங்களது வேண்டுகோளை இருவரும் உடனடியாக ஏற்றுக்கொண்டு, விண்ணப்பப் படிவத்தில் மிகுந்த உற்சாகத்துடன் கையெழுத்திட்டார்கள். எழுத்தாளர்கள் சங்கத்தின் சார்பில் இருவருக்கும் ஒரு பேனா அன்புடன் வழங்கப்பட்டது.


நமது தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தில் இணையும் தகுதியுடன் கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எனத் தொடர்ந்து தமிழ் சினிமாவுக்குப் பங்களித்து வரும் பிரமுகர்களைச் சந்தித்து, அவர்களைச் சங்கத்தில் இணைக்கும் நமது பணி தொடர்ந்து நடைபெறும். 


#SWAN