-

Loading latest news...

எலிஃபன்டைன் எக்ஸ் (Elephantine X) நிறுவனத்தின் "ராஜாஸ் பிளேலிஸ்ட்" (Raja's Playlist) படப்பிடிப்பு நிறைவு: அறிமுக நடிகர் ஜெயனுடன் களமிறங்கும் திரைப்படம் தீவிரமாகத் தொடங்கியது போஸ்ட் புரடெக்ஷன் பணிகள்

 எலிஃபன்டைன் எக்ஸ் (Elephantine X) நிறுவனத்தின் "ராஜாஸ் பிளேலிஸ்ட்" (Raja's Playlist) படப்பிடிப்பு நிறைவு: அறிமுக நடிகர் ஜெயனுடன் களமிறங்கும் திரைப்படம் தீவிரமாகத் தொடங்கியது போஸ்ட் புரடெக்ஷன் பணிகள்!


மறைந்த மூத்த தயாரிப்பாளர் ஆர்.டி. பாஸ்கரின் மகன் ஜெயன் அறிமுகமாகும் திரைப்படம்; வெங்கட் பிரபு, யுவன் சங்கர் ராஜா, சுதா கொங்கரா மற்றும் தயாரிப்பாளர் ரமணன் பாலகங்காதரன் ஆகியோர் இணைந்திருக்கும் இசை சார்ந்த குடும்பத் திரைப்படம்!


எலிஃபன்டைன் எக்ஸ் தயாரிப்பில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள "ராஜாஸ் பிளேலிஸ்ட்" (Raja's Playlist) திரைப்படத்தின் முழு படப்பிடிப்பும் வெற்றிகரமாக நிறைவடைந்து, தற்போது பின்-தயாரிப்பு (Post-Production) பணிகள் தீவிரமாகத் தொடங்கியுள்ளன. இத்திரைப்படத்தின் மூலம் மறைந்த மூத்த தயாரிப்பாளர் ஆர்.டி. பாஸ்கரின் இளைய மகனும், இசைஞானி இளையராஜாவின் சகோதரர் மகனுமான ஜெயன் கதாநாயகனாக அறிமுகமாகிறார்.


மறைந்த தயாரிப்பாளர் ஆர்.டி. பாஸ்கர் மற்றும் அவரது குடும்பத்தின் மீதான நீண்டகால நட்பின் காரணமாக, தமிழ் சினிமாவின் முன்னணிப் பிரபலங்கள் சிலர் இத்திரைப்படத்திற்காக இணைந்துள்ளது தொடக்கம் முதலே பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது.

ஆர்.டி. பாஸ்கருடனான நட்பின் அடையாளமாக இத்திரைப்படத்தைத் தயாரிப்பாளர் ரமணன் பாலகங்காதரன் தயாரித்துள்ளார். இயக்குநர் வெங்கட் பிரபு கதையமைக்க, யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். மேலும், பிரபல இயக்குநர் சுதா கொங்கரா கிரியேட்டிவ் தயாரிப்பாளராகப் (Creative Producer) பங்களித்துள்ளார்.


விமர்சன ரீதியாகப் பாராட்டுக்களைப் பெற்ற 'குடும்பஸ்தன்' திரைப்படத்தின் ஒளிப்பதிவாளரான சுஜித் என். சுப்ரமணியம், வெங்கட் பிரபுவின் கதையைத் தழுவி திரைக்கதை எழுதி இத்திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.


படப்பிடிப்பு நிறைவு குறித்துத் தயாரிப்பாளர் ரமணன் பாலகங்காதரன் பேசுகையில்:

"ராஜாஸ் பிளேலிஸ்ட் படத்தின் படப்பிடிப்பை நிறைவு செய்திருப்பது எங்கள் அனைவருக்கும் மிகவும் நெகிழ்ச்சியான மற்றும் மனநிறைவான ஒரு தருணம். ஒரு அழகான கதையை உருவாக்கப் படக்குழுவின் ஒவ்வொரு உறுப்பினரும் மிகுந்த அர்ப்பணிப்புடன் உழைத்துள்ளனர்.

ஜெயன் தனது அறிமுகப் படத்திற்காகத் தனது முழு உழைப்பையும் தந்துள்ளார். ரசிகர்கள் அவரை மனதார வரவேற்பார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. தற்போது பின்-தயாரிப்பு பணிகளைத் தொடங்கியுள்ளோம். குடும்ப உறவுகள், உணர்வுகள் மற்றும் இசையின் ஆற்றலைக் கொண்டாடும் ஒரு நல்ல திரைப்படமாக இதை மக்களுக்குக் கொண்டு சேர்ப்பதில் மகிழ்ச்சியடைகிறோம்."

இத்திரைப்படத்தில் ஜெயனுடன் சோனா ஒலிகல் (Sona Olickal), வாகை சந்திரசேகர், குரு சோமசுந்தரம், ரோஜு, பிபியன், ஆர்யா லக்ஷ்மி, பிரகதீஸ்வரன் பூபாளம், இந்துமதி, ரேஷ்மி, ரஜினாத், ராம்குமார், மீனா மற்றும் திலகவதி ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.


தற்போது படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில், இசை, ஒளிப்பதிவு செப்பனிடுதல் உள்ளிட்ட தொழில்நுட்பப் பின்-தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.

நடிப்பு மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் விவரம்

நடிகர்கள்:

• ஜெயன் (அறிமுகம்)

• சோனா ஒலிகல்

• வாகை சந்திரசேகர்

• குரு சோமசுந்தரம்

• ரோஜு

• பிபியன்

• ஆர்யா லக்ஷ்மி

• பிரகதீஸ்வரன் பூபாளம்

• இந்துமதி

• ரேஷ்மி

• ரஜினாத்

• ராம்குமார்

• மீனா

• திலகவதி

தொழில்நுட்பக் குழு:

• தயாரிப்பு நிறுவனம்: எலிஃபன்டைன் எக்ஸ் (Elephantine X)

• தயாரிப்பாளர்: ரமணன் பாலகங்காதரன்

• கதை: வெங்கட் பிரபு

• இசை: யுவன் சங்கர் ராஜா

• கிரியேட்டிவ் தயாரிப்பாளர் (Creative Producer): சுதா கொங்கரா

• திரைக்கதை & இயக்கம்: சுஜித் என். சுப்ரமணியம்

• ஒளிப்பதிவு: சாய் முனீஷ்

• படத்தொகுப்பு: ஸ்ரீ வாட்சன்

• கலை இயக்கம்: ஷானு முரளிதரன்

• ஆடை வடிவமைப்பு: பூர்ணிமா ராமசாமி

• சண்டைப்பயிற்சி: பிசி ஸ்டண்ட்ஸ்

• ஒலி வடிவமைப்பு: அந்தோணி பி. ஜெயரூபன்

• VFX மேற்பார்வை: செந்தில் குமார்

• நிர்வாகத் தயாரிப்பாளர் (Executive Producer): உத்ரா மீனாட்சி

• மக்கள் தொடர்பு (PRO): ரேகா – ரான் டி ஆர்ட் (Raan T Art)

• விளம்பர வடிவமைப்பு (Publicity Design): வியாக்கி

Experience Refreshing Romantic Ride- Breezy Number Vaane Vaane From Dulquer Salmaan, Pooja Hegde’s Sri Sri Is Out Now*

 *துல்கர் சல்மான் - பூஜா ஹெக்டே நடிக்கும் 'ஸ்ரீ ஸ்ரீ' திரைப்படத்தின் இதமான காதல் பாடலான 'வானே வானே- Vaane Vaane' வெளியீடு*



பன்முகத் திறமை கொண்ட நட்சத்திரமான துல்கர் சல்மான்-  அறிமுக இயக்குநர் ரவி நெலகுதிடி இயக்கத்தில் தனது 41வது திரைப்படத்தின் படப்பிடிப்பில் மும்முரமாக ஈடுபட்டுள்ளார். எஸ் எல் வி சினிமாஸ் ( SLV Cinemas) நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் சுதாகர் செருகூரி தயாரிக்கும் இந்த திரைப்படம் - அந்நிறுவனத்தின் பத்தாவது பிரம்மாண்டமான திரைப்படமாக தயாராகிறது. இஷான் சக்சேனா இப்படத்தில் இணை தயாரிப்பாளராக பணியாற்றுகிறார். துல்கர் சல்மான் மற்றும் பூஜா ஹெக்டே முதன் முறையாக திரையில் இணையும் இத்திரைப்படமானது... காதல் - நகைச்சுவை மற்றும் நெகிழ்ச்சியான உணர்வுகள் நிறைந்த ஒரு புத்துணர்ச்சி தரும் காதல் படைப்பாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே வெளியான படப்பிடிப்பு தள காட்சிகள் மற்றும் கண்ணை கவரும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ஆகியவை... ரசிகர்களின் மனதை வென்ற நிலையில், தற்போது 'வானே வானே..' எனும் முதல் பாடலை வெளியிட்டு, இப்படத்தின் இசை பயணம் தொடங்கியுள்ளது. 


ரயில் நிலையத்தின் இருக்கை ஒன்றில் அமர்ந்திருக்கும் துல்கர் சல்மான்- பூஜா ஹெக்டே நடை மேடை( Platform) க்கு நுழையும் தருணத்தில்.. அவரைக் கண்டு முற்றிலும் மெய் மறந்து போவதுடன் இப்பாடல் தொடங்குகிறது. அதைத் தொடர்ந்து மகிழ்ச்சியான தருணங்கள் மற்றும் பலருடன் இணைந்து அவர்கள் மேற்கொள்ளும் அழகான பயணத்தின் காட்சிகள் இதமான தொகுப்பாக - மாண்டேஜஸ்ஸாக இடம்பெறுகின்றன. 


ஜீ. வி. பிரகாஷ் குமார் மீண்டும் ஒருமுறை இதமான மற்றும் மனதை மயக்கும் மெல்லிசையை வழங்கி உள்ளார். இந்த பாடலைக் கேட்டவுடன் மனதை கவரும் வகையில் அமைந்துள்ளது. இனிமையான இசை அமைப்பு மற்றும் இசைக்கருவிகளின் நேர்த்தியான பயன்பாடு ஆகியவற்றுடன் இந்த பாடல் முதல் முறையிலேயே கேட்பவர்களின் மனதில் நீங்காத இடத்தை பிடிக்கிறது. பாடலாசிரியர் கே. ஆர். தரன்- ஆழமான காதலில் இருக்கும் ஒரு ஆணின் உணர்வுகளை அழகாக பதிவு செய்துள்ளார். கதாநாயகியின் நளினம்- அழகு- அவரை சுற்றியுள்ள மந்திரம் போன்ற வசீகரம் - ஆகியவற்றை கவித்துவமாக விவரித்துள்ளார். பின்னணி பாடகர் நகுல் அபயங்கர் - தனது உணர்வுபூர்வமான மற்றும் வெளிப்பாட்டு திறனுடன் இந்த பாடலை இனிமையான குரலில் பாடி அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றிருக்கிறார். அதே தருணத்தில் ராம் மாஸ்டரின் நடன அமைப்பும் கண்களுக்கு விருந்தளிக்கும் வகையில் அமைந்துள்ளது. 


இந்தப் பாடலின் மிகப்பெரிய சிறப்பம்சம் என்னவென்றால்...


 சந்தேகத்திற்கு இடமின்றி துல்கர் சல்மான் மற்றும் பூஜா ஹெக்டே ஆகியோருக்கு இடையிலான இயல்பான மற்றும் கச்சிதமான கெமிஸ்ட்ரி தான். திரையில் அவர்களின் வசீகரமான தோற்றம் மற்றும் இயல்பான புரிதல் ஆகியவை ஒவ்வொரு காட்சியை ரசிக்கும் படியாக மாற்றுகின்றன. அழகான இடங்களில் படமாக்கப்பட்ட காட்சிகள்... காதல் உணர்வை மேலும் மெருகூட்டி, பாடலை இன்னும் ஈர்க்கக் கூடியதாக மாற்றுகின்றன. கவரும் மெல்லிசை - பிரமிக்க வைக்கும் காட்சி அமைப்பு - ரசிக்கத்தக்க நடிப்பு - என அனைத்தும் கொண்ட இந்தப் பாடல்... அடுத்த 'வைரல் ஹிட்' பாடலாக மாறுவதற்கான அனைத்து அம்சங்களையும் கொண்டுள்ளது. 


இப்படத்தின் தொழில்நுட்பக் குழு மிகவும் வலுவானது. அனய் ஓம் கோஸ்வாமி ஒளிப்பதிவையும்,  ஜீ. வி. பிரகாஷ் குமார் இசையமைப்பையும்,  அவினாஷ் கொல்லா தயாரிப்பு வடிவமைப்பையும் ( Production Designer) மேற்கொள்கின்றனர். இவர்கள் அனைவரும் இணைந்து கண்களுக்கு விருந்தளிக்கும் வகையிலான மற்றும் உணர்வு பூர்வமான ஒரு திரைப்பட அனுபவத்தை வழங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 


பான் இந்திய திரைப்படமாக பிரம்மாண்டமாக வெளியிட திட்டமிடப்பட்டுள்ள 'ஸ்ரீ ஸ்ரீ' திரைப்படம்- தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. 


*நடிகர்கள்* :  துல்கர் சல்மான் - பூஜா ஹெக்டே 


*தொழில்நுட்பக் குழு :* 


எழுத்து & இயக்கம் : ரவி நெலகுதிடி

தயாரிப்பாளர் : சுதாகர் செருகூரி

தயாரிப்பு நிறுவனம் : எஸ் எல் வி சினிமாஸ் - SLV Cinemas

இணை தயாரிப்பாளர் : இஷான் சக்சேனா 

தலைமை நிர்வாக அதிகாரி ( CEO) : விஜய் குமார் சகாந்தி 

இசை:  ஜீ. வி. பிரகாஷ் குமார் 

ஒளிப்பதிவு : அனய் ஓம் கோஸ்வாமி

தயாரிப்பு வடிவமைப்பு : அவினாஷ் கொல்லா 

மக்கள் தொடர்பு : யுவராஜ் 

மார்க்கெட்டிங் : ஃபர்ஸ்ட் ஷோ


*Experience Refreshing Romantic Ride- Breezy Number Vaane Vaane From Dulquer Salmaan, Pooja Hegde’s Sri Sri Is Out Now*


 Versatile Star Dulquer Salmaan is currently busy filming his much-awaited 41st project, directed by debutant Ravi Nelakuditi. Backed by successful producer Sudhakar Cherukuri under the SLV Cinemas banner, the film also marks the production house's milestone 10th venture. Ishan Saksena serves as the co-producer. Marking the first-ever on-screen pairing of Dulquer Salmaan and Pooja Hegde, the film promises a refreshing romantic entertainer packed with love, humour, and touching emotions. After the previously released working stills won hearts by highlighting the lead pair's sparkling chemistry, followed by an eye-catching first-look poster, the makers have begun the musical journey with the release of first single Vaane Vaane

 

The song opens with Dulquer Salmaan seated on a bench at a railway station, completely captivated the moment Pooja Hegde walks onto the platform. What follows is a heartwarming montage of their beautiful journey together, filled with joyful moments and accompanied by a group of people.

 

GV Prakash Kumar scored yet another breezy and enchanting melody that charms instantly. With its soothing composition and elegant orchestration, the track leaves a lasting impression from the very first listen. Lyricist Anantha Sriram beautifully captures the emotions of a man deeply in love, poetically describing the heroine's grace, beauty, and the magical aura she carries. Kapil Kapilan elevates the number with his soulful and expressive vocals, while Ram Master's choreography adds a delightful visual appeal.

 

The biggest highlight of the song is undoubtedly the effortless chemistry between Dulquer Salmaan and Pooja Hegde. Their charming screen presence and natural camaraderie make every frame a treat to watch. Shot across picturesque locales, the visuals further enhance the romantic mood, making the song even more appealing. With its catchy tune, stunning visuals, and lovable performances, the track has all the ingredients to become the next viral chartbuster.

 

The film also boasts a strong technical crew, with Anay Om Goswamy handling cinematography, GV Prakash Kumar composing the music, and Avinash Kolla serving as the production designer. Together, they promise a visually rich and emotionally engaging cinematic experience.

 

Planned as a grand Pan-India release, Sri Sri is set to hit theatres in Telugu, Tamil, Hindi, Kannada, and Malayalam.

 

*Cast* : Dulquer Salmaan, Pooja Hegde

 

*Technical Crew:*


Writer, Director: Ravi Nelakuditi

Producer: Sudhakar Cherukuri

Banner: SLV Cinemas

Co-Producer: Ishan Saksena

CEO: Vijay Kumar Chaganti

Music: GV Prakash Kumar

DoP: Anay Om Goswamy

Production Designer: Avinash Kolla

PRO:Yuvraaj 

Marketing: First Show


https://www.youtube.com/watch?v=5r7Q5jS2gas

தென்னிந்திய திரைப்பட பத்திரிகை தொடர்பாளர்கள் யூனியன் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா

 *தென்னிந்திய திரைப்பட பத்திரிகை தொடர்பாளர்கள் யூனியன் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா*



*வெள்ளித்திரை -சின்னத்திரை- தமிழ் திரை விருதுகள் இனி ஆண்டுதோறும் வழங்கப்படும்' - அமைச்சர் ராஜ்மோகன்*


தென்னிந்திய திரைப்பட பத்திரிக்கை தொடர்பாளர்கள் சங்கத்தின் 2026-28 ஆம் ஆண்டிற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய நிர்வாகிகளின் பதவி ஏற்பு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவில் தமிழக பள்ளிக் கல்வி துறை - தமிழ் வளர்ச்சித் துறை மற்றும் செய்தி துறை அமைச்சரான திரு.ராஜ்மோகன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.    


தயாரிப்பு நிறுவனம் - தயாரிப்பாளர் - திரைப்படம் - நட்சத்திர கலைஞர்கள் - தொழில்நுட்ப கலைஞர்கள் - விளம்பரங்கள் - பத்திரிகையாளர்கள் - ஊடகவியலாளர்கள் - திரையரங்குகள் - ரசிகர்கள்- திரை ஆர்வலர்கள் - என ஒரு திரைப்படத்தின் பணிகள் தொடங்கிய தருணத்திலிருந்து அத்திரைப்படம் முழுவதுமாக தயாராகி, அது தொடர்பான தகவல்களை ஊடகங்கள் மூலமாக மக்களுக்கும், ரசிகர்களுக்கும்  சென்றடையச் செய்வதுடன்.. அப்படத்தின் வெற்றிக்குப் பிறகு அதனை முறையாக ஆவணப்படுத்தும் வரலாறு வரை தங்களுடைய பணிகளை செழுமையாக முழுமையான அர்ப்பணிப்புடன் முன்னெடுப்பவர்கள் தான் திரைப்பட பத்திரிக்கை தொடர்பாளர்கள்.  சமூக வலைதளங்களின் ஆதிக்கம் அதிகமாகியுள்ள இந்தத் தருணத்திலும் பத்திரிக்கை தொடர்பாளர்கள் டிஜிட்டல் தளத்தில் வெளியாக வேண்டிய செய்திகளையும்... சமூக வலைதளங்களில் வெளியாகும் எதிர்மறையான விமர்சனங்களுக்கு விளக்கங்கள் வெளியிடும் பொறுப்பினையும்.. ஏற்று அயராது உழைக்கும் பத்திரிகை தொடர்பாளர்களின் நலன்களுக்காக இயங்கும் சங்கத்திற்கு புதிதாக நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். பி யுவராஜ் தலைவராகவும், என். விஜய முரளி செயலாளராகவும், வீ. கே. சுந்தர் பொருளாளராகவும், எஸ். புவனேந்திரன் மற்றும் எஸ். சதீஷ்குமார் ஆகியோர் துணைத் தலைவர்களாகவும், பாலன் என்கிற ஜி. பாலசுப்பிரமணியன் மற்றும் ஆர். உதயகுமார் ஆகியோர் இணை செயலாளராகவும் பதவி ஏற்று கொண்டனர். இந்த நிகழ்வில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் - தமிழ் திரைப்படத்தின் நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் - தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சங்கம்- தமிழ் திரைப்பட இயக்குநர்கள் சங்கம்- தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கம்-  நடிகர்கள் அர்ஜுன் தாஸ் -அசோக் செல்வன்- தயாரிப்பாளரும், இயக்குநருமான சௌந்தர்யா ரஜினிகாந்த் - தயாரிப்பாளர் மகேஷ் ராஜ் பஸ்லியான் - தயாரிப்பாளர் ஜே. எம். பஷீர் உள்ளிட்ட ஏராளமான தமிழ் திரையுலக பிரபலங்களும் கலந்து கொண்டு, புதிய நிர்வாகிகளுக்கு வாழ்த்து தெரிவித்தனர். 


தயாரிப்பாளர் சங்க தலைவர் ஜி கே எம் தமிழ் குமரன் பேசுகையில், '' திரைப்படத் துறையில் முக்கியமான சங்கம்- தவிர்க்க முடியாத சங்கம்- பி.ஆர்.ஓ சங்கம். எண்ணற்ற சங்கங்கள் இருந்தாலும்... இந்த சங்கம் முக்கியமானது. தேர்தல் நடைபெற்று ,தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளுக்கு சான்றிதழ் வழங்கி சிறப்புரை நிகழ்த்த வருகை தந்திருக்கும் மாண்புமிகு அமைச்சர் ராஜ் மோகன் அவர்களுக்கு நன்றி. யுவராஜ் ஒரு துடிப்பான இளைஞர். அவரது தலைமையில் இந்த சங்கம் சிறப்பாக செயல்படும். இதற்கு நான் சார்ந்த தயாரிப்பாளர் சங்கத்தின் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். 


தமிழ் திரைப்படத் துறையில் எல்லா சங்கங்களுக்கும் ஒரு அலுவலகம் சொந்தமாக இருக்கிறது. தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திற்கு  என எந்த அலுவலகமும் இல்லை. இந்த அலுவலகம் வாடகையில் தான் இயங்கி வருகிறது. புதிதாக அலுவலகம் கட்டுவதற்கான இடத்தை தமிழக அரசு வழங்கினால்.. நாங்கள் கட்டடத்தை கட்டிக் கொள்கிறோம். இதனை வழங்கினால் சிஎம்முக்கும் , அமைச்சருக்கும் காலத்திற்கும் அழியாத நற்பெயர் கிடைக்கும். பெருமையாகவும் இருக்கும். 


2015 ஆம் ஆண்டில் இருந்து 2022 ஆம் ஆண்டு வரையில் சிறிய முதலீட்டு திரைப்படங்களுக்கான தமிழக அரசின் சார்பில் வழங்க வேண்டிய மானியங்கள் வழங்கப்படவில்லை. அதனை விரைவில் வழங்க வேண்டும் என தமிழக அரசை பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்'' என்றார் . 


அமைச்சர் ராஜ்மோகன் பேசுகையில், '' இந்த உலகத்துடன் ஒரு உறவு பாலமாய் தமிழ் சினிமாவை- இந்த கலைத்துறையை- இணைக்கக் கூடிய அத்தனை சினிமா பத்திரிக்கையாளர்கள் மற்றும் பத்திரிக்கை தொடர்பாளர்களுக்கும் நான் நெஞ்சார தலை வணங்குகிறேன் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள். நீங்கள் அனைவரும் நன்றாக இருக்க வேண்டும். 


இங்கு பணியாற்றும் அனைத்து பிஆர்ஓக்களிடமும் நான் எஃப் எம்மில் பணியாற்றிய போதும்.... சோசியல் மீடியாவில் பணியாற்றிய போதும்... தனியாக யூட்யூப் சேனலை தொடங்கிய போதும்.... திட்டு வாங்கிய ஒருவன் என்றால், அது நான் தான். கடந்த காலங்களில் இத்துறையில் பத்திரிகைகளுக்கும், வெப்சைட்களுக்கும் என பத்திரிக்கையாளர் சந்திப்புகளில் அனுமதிப்பது தொடர்பான சிக்கல்கள் உருவானது. அப்போதும் பொறுமையாக இருந்து விளக்கமும், ஆதரவும் அளித்தனர். அதன் பிறகு கால மாற்றத்தை -தொழில்நுட்ப மாற்றத்தை- உணர்ந்து ஆதரவை வழங்கத் தொடங்கினார். 


அத்துடன் அனைத்து பிஆர்ஓக்களுக்கும்... நல்ல தமிழில் குறைவான சம்பளத்தில் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க கூடிய தொகுப்பாளர் ஒருவர் தேவை என்றால்... உடனடியாக அவர்களுக்கு நினைவுக்கு வருவது நான் தான். மலிவு விலை தொகுப்பாளர் என்றால் ராஜ்மோகன் தான். அது நான்தான் என்பதை மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொள்கிறேன்.


ஐந்து ஆண்டுக்கு ஒரு முறை கொடுத்தால் அது விருது அல்ல. விருது என்றால் ஆண்டுதோறும் வழங்கப்பட வேண்டும். மாண்புமிகு தமிழக முதல்வரின் அனுமதியை பெற்று வெள்ளித்திரை- சின்னத்திரை- தமிழ் திரை- விருதுகள் இனி ஆண்டுதோறும் வழங்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். 


நல்ல படைப்புகள் தான் நமக்கு ஆக்சிஜன். தமிழ் சினிமாவில் தன் தலையை உண்மையிலேயே அடமானம் வைத்து முதலீடு செய்யும் முதலாளிகள் என்றால் ... அது நம்முடைய தயாரிப்பாளர்கள் தான். 


தயாரிப்பாளர்களால் சில தருணங்களில் ஒப்பந்தம் செய்யப்பட்ட ஊதியங்களை தர இயலாத போது.. அவர்களுக்கு பட வாய்ப்பையே வழங்கியுள்ளனர். அத்தகைய தாயுள்ளம் கொண்டவர்கள் தான் தயாரிப்பாளர்கள். தயாரிப்பாளர்கள் சங்கம் இல்லை என்றால் நாம் யாரும் இங்கில்லை.‌


தமிழ் சினிமாவில் கைகளாக இருப்பவர்கள் தான் பாடலாசிரியர்கள்- பாடகர்கள்- பாடகிகள்- இசையமைப்பாளர்கள்-. படத்திற்காக ஓடியதா? இளையராஜாவின் இசைக்காக ஓடியதா? என தெரியாத பல வொண்டர்ஃபுல் மேஜிக் தமிழ் சினிமாவில் உள்ளது. அவர்கள் இல்லை என்றால் நாம் இல்லை. 


தமிழ் சினிமாவை தாங்கிக் கொண்டு ஓடக்கூடிய கால்கள் என்றால்... ஃபைட் மாஸ்டர்ஸ் மற்றும் டான்ஸ் மாஸ்டர்ஸ் தான். இவர்கள் ரத்தத்தை வியர்வையாக கொட்டி ஓடி ஓடி உழைத்துக் கொண்டே இருப்பார்கள். 


தமிழ் சினிமாவின் வயிறாக திகழ்பவர்கள் புரொடக்ஷன். அஞ்சு பேர் இருந்தால்.. கேரவனில் சாப்பாடு. 50 பேர் இருந்தால் கேரவன் அருகே சாப்பாடு. 500 பேர் இருந்தால் சாப்பாட்டை எப்படியாவது வழங்கி விடுவார்கள். 'காந்தி' திரைப்படத்திற்காக கிளைமாக்ஸ் காட்சியில் ஒரு லட்சம் பேர் படப்பிடிப்பில் கலந்து கொண்டனராம். இந்தியாவில் படப்பிடிப்பு நடைபெற்று இருக்கிறது. அதில் கலந்து கொண்டவர்களுக்கு காலை உணவு மதிய உணவு எப்படி கொடுத்திருப்பார்கள்? எப்போது உணவு இடைவேளை வழங்கப்பட்டிருக்கும்? என்பதையெல்லாம் யோசித்துப் பார்க்கவே முடியாது.


இந்த சினிமாவின் நாடி நரம்புகளாக ஓடிக்கொண்டிருக்கும் தமிழ் சினிமாவின் முகம் தெரியாத நாயகர்களாக இருப்பவர்கள்... ரத்தமாக இருப்பவர்கள்... யார் என்றால் பி ஆர் ஓக்கள் ஆகிய நீங்கள் தான். நீங்கள் ஓடி ஓடி அங்கு செல்ல வேண்டும்.... இங்கு செல்ல வேண்டும்.. படத்தை விளம்பரப்படுத்த வேண்டும்.... என ஓடிக்கொண்டே இருப்பீர்கள்.


அப்படி என்றால் சினிமாவில் இதயம் யார்? உண்மையிலேயே தன்னுடைய இதயத்தை பற்றி கவலைப்படாத இயக்குநர்கள் தான். அவர்கள் தான் தங்களுடைய இதயத்தை பற்றி கவலைப்படாமல் எப்படியாவது ஒரு நல்ல படத்தை எடுத்து விட மாட்டோமா...! எடுத்து விட முடியாதா..! என 40 ஆண்டுகளுக்கும் மேலாக சாலிகிராமத்தின் காவேரி கார்னர் பகுதியில் சுற்றிக் கொண்டிருக்கும் ஏராளமான அண்ணன்களை  நான் அறிவேன். இந்த மொத்த சினிமாவின் உடலுக்கும் ஒரு அழகான ஸ்கின் வேண்டுமல்லவா.. அது நம்முடைய மேக்கப் டிபார்ட்மெண்ட். இப்படி எல்லாமே இருக்கும் சினிமாவில் ஆக்சிஜன் யார்? என்றால் துணை இயக்குநர்கள் தான் . இயக்குநர்கள் இல்லாமல் கூட இரண்டு மணி நேரங்களில் ஏதேனும் சில ஷாட்களை படமாக்கலாம். துணை இயக்குநர்கள் இல்லாமல் ஒரு ஷாட்டை கூட படமாக்க  முடியாது. இவர்களும் முகம் தெரியாத ஹீரோக்கள் தான். இப்படி எத்தனையோ முகம் தெரியாத ஹீரோக்கள் சினிமாவில் இருக்கிறார்கள். இப்படி அத்தனை நபர்களிடமும் பாரபட்சம் இல்லாமல் பழகக் கூடியவர்கள் இந்த பிஆர்ஓ க்கள்.


அண்ணன் செல்வமணி பேசுகையில் பேமெண்ட் பென்டிங் பற்றி குறிப்பிட்டார். அது என்ன? என்பதை நான் கூறுகிறேன். கடந்த காலத்தில் எல்லா சங்கங்களும் சேர்ந்து முத்தமிழ் அறிஞர் கலைஞருக்கு  நூற்றாண்டு விழாவை கொண்டாடினர். அந்த விழாவில் தொகுப்பாளராக பணியாற்றுவதற்காக இயக்குநர் லிங்குசாமி -பாண்டிராஜ் -என பலரிடமிருந்து போன் கால்ஸ் வந்து கொண்டே இருந்தது. அப்போது எனக்கு இந்த நிகழ்ச்சிக்கான ஊதியம் கிடைக்குமா? கிடைக்காதா? என்ற சந்தேகம் இருந்தது. அதனால் நான் சமாளித்துக் கொண்டே பதில் அளித்தேன். அதன் பிறகு ஒரு பிஆர்ஓ போன் செய்து, 'ஒரு நிமிடம் ஆர் கே செல்வமணி உங்களிடம் பேச வேண்டும்' என்றார். அவர் போன் செய்தவுடன், 'நான் வந்து கொண்டிருக்கிறேன்' என சொல்லிவிட்டேன். அன்றிலிருந்து ஒரு மாதம் வரை எனக்குத் தெரிந்து யாரும் தூங்க கூடவில்லை. தொடர்ந்து அதற்காக உழைத்துக் கொண்டே இருக்கிறார்கள். ஏராளமான ஸ்கிரிப்டுகளை எழுதி எழுதி அதனை மாற்றிக் கொண்டே இருக்கிறார்கள். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் - கமல்ஹாசன் என தமிழ் சினிமாவின் மொத்த பேரும் வருகை தந்திருந்தனர். இப்படிப்பட்ட மனித உழைப்பு எனக்குத் தெரிந்து இதுவரை இல்லை என்றே சொல்லலாம். இப்படிப்பட்ட நேர்மையான உழைப்பை வழங்குவது திரை உலகம் தான். இவர்கள் அனைவரும் நடமாடும் உழைப்பாளர்கள் சிலைகள் தான். அப்படி இருக்கும்போது நீங்கள் உங்களுடைய கோரிக்கைகளை உரிமையுடன் கேட்கலாம். 


'தவமாய் தவமிருந்து' படத்தில் இடம்பெறும் ஒரு காட்சிக்காக இயக்குநர் சேரனுக்கு தேசிய விருதுகளை கொட்டிக் கொடுக்க வேண்டும். அப்படி ஒரு காத்திரமான படைப்பு.‌ நாங்கள்தான் உங்களுக்கு நன்றிக் கடன் பட்டிருக்கிறோம். உங்களுக்கு என்னென்ன தேவையோ...! அவை அனைத்தையும் மாண்புமிகு தமிழக முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்வேன்.


முதல் சந்திப்பில் தமிழக முதல்வர் என்னை அழைத்து, 'மானியத்திற்காக காத்துக் கொண்டிருக்கும் படங்கள் எதுவும் பெண்டிங் இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள். அரசு சார்பில் வழங்கப்படும் மானியங்களை வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை விரைவு படுத்துங்கள் ' என சொன்னார். இதற்காக தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.


ஒரு காலத்தில் தமிழ்நாடு தான் சினிமாவில் கேப்பிட்டல் ஆக இருந்தது. இங்கு தான் அனைத்து படப்பிடிப்புகளும் நடைபெறும். கொஞ்சம் கொஞ்சமாக வெவ்வேறு மாநிலங்கள் சென்றது. அதற்கு பலதரப்பட்ட காரணங்கள். அவற்றையெல்லாம் பகுப்பாய்வு செய்வதுதான் எங்களுடைய வேலை.


சூட்டிங் ஸ்பாட்டில் மேனேஜரோ... பி ஆர் ஓக்களோ... பர்மிஷனுக்காக பலருக்கு காசு கொடுக்க வேண்டியதிருந்தது. அதற்கு தற்போது 'நோ ' சொல்லப்பட்டிருக்கிறது. யார் கேட்டாலும் ஒரு ரூபாய் கூட கொடுக்க வேண்டாம். உங்களுடன் சிஎம் இருக்கிறார். புரொடக்ஷன் மற்றும் ஆர்டிஸ்டிகளுக்கு என்ன தேவையோ... அதை மட்டுமே பார்த்துக் கொள்ளுங்கள். 


உலகத்தில் வேலையை செய்வதற்காக யாரும் பாராட்ட மாட்டார்கள் ஏனெனில் நம்முடைய சிஸ்டம் அப்படி மாறிவிட்டது நாம் வேலையை செய்து கொண்டிருக்கிறோம். அதை சிறப்பாக செய்து கொண்டு இருக்கிறோம். அதை உண்மையாக செய்து கொண்டிருக்கிறோம். ஒளிவு மறைவு இல்லாமல்... வெளிப்படை தன்மையுடன் இயங்குவதற்கான ஒரு முயற்சிதான். ஏனெனில் சினிமா துறையில் தான் கருவாகி... உருவாகி... இன்று ஒரு மாமனிதர் முதலமைச்சர் ஆக கிடைத்திருக்கிறார். 


இந்த மேடையில் எங்களுடைய அண்ணன்கள் எதையெல்லாம் வேண்டுமென கேட்டார்களோ... அதை எல்லாம் செய்வதற்கு ஒரு பொன்னான வாய்ப்பு கிடைத்திருக்கிறது. 


முத்துக்காளை மனைவிக்கு ஒரு பிரச்சனை என்று போது.. என்னை அழைக்கவில்லை என்றாலும்.. நானாக சென்று, 'அவர்களை நடிகராக பார்க்காதீர்கள். ஒரு கல்வியாளராக பாருங்கள் 'என்று அறிவுறுத்தி முழுமையான மருத்துவ சிகிச்சையை கிடைக்கச் செய்தோம். 


பாவா லக்ஷ்மணன் அண்ணனுடன் நான் ஒரு படத்தில் கூட இணைந்து பணியாற்றியதில்லை. இருப்பினும் எம்எல்ஏ ஹாஸ்டலில் அவருக்கு இடம் கொடுத்துவிட்டேன். கேப்டன் இல்லையென்றால் என்ன.... கேப்டனின் படங்களை பார்த்து தான் நாங்கள் அனைவரும் வளர்ந்திருக்கிறோம். நீங்கள் வாருங்கள் என்று அவரை அன்புடன் அழைத்து அந்த விடுதி அறையை கொடுத்தேன். 


பாரதிராஜா- பாக்யராஜ்- மறைந்த போது ஓடோடி சென்று முழு அரசு மரியாதை வழங்கியது. அது எங்களுடைய கடமை. அவர்களுக்கு செய்யாமல் நாங்கள் வேறு யாருக்கு செய்யப் போகிறோம். 


நான் பள்ளி கல்வித்துறை அமைச்சராகவும் இருக்கிறேன். அரசு பள்ளியில் படிக்கும் ஆட்டிசம் குழந்தைகள்.. என்னுடைய அறைக்கு வந்தவுடன்.. அவர்களை ஒரு குட்டி நாற்காலியில் அமர வைப்பேன். சாக்லேட் தருவேன். அவர்களிடம் நீண்ட நேரம் உரையாடுவேன். அவர்களின் பெற்றோர்கள் தான் பதட்டமடைவார்கள்.  ஆனால் அவர்கள் கேட்கும் கேள்விக்கு பதில் அளிக்காமல் வேறு எங்கோ பார்த்துக் கொண்டிருப்பார்கள். இந்த நிலையை பார்த்து அவர்களுடைய பெற்றோர் கண்ணீர் சிந்துவார்கள். அப்போது ஒரு அதிகாரி நல்லதொரு ஐடியாவை கொடுத்தார். அதன்படி சென்னை பிலிம் இன்ஸ்டிடியூட்டில் உள்ள தியேட்டரில் சென்னையில் அரசு பள்ளியில் படிக்கும் ஆட்டிசம் பாதித்த குழந்தைகளை தேர்வு செய்து, அவர்களுக்கு உலக சினிமாவை திரையிட்டோம். அந்த பிள்ளைகள் அந்த சினிமாவை பார்த்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இதை பார்த்தவுடன் இத்தகைய முயற்சிகள் இனி மாதம் தோறும் மேற்கொள்ள வேண்டும் என முடிவெடுத்து அதை தொடங்கி விட்டோம்.


நாங்கள் பேசும்போது எங்களுடன் பேசாத அந்த குழந்தைகள்.... திரையில் தெரியும் மீனுடன் பேசுகிறது. மானுடன் பேசுகிறது. சிரித்து விளையாடினர். படத்தின் இடைவேளையின் போது குழந்தைகளுக்கு மட்டும் அல்ல அவர்களின் பெற்றோர்களும் தங்களுடைய பிள்ளைகளின் உற்சாகத்தை பார்த்து மகிழ்ச்சி அடைந்தனர். 


கிட்டத்தட்ட நானும் அப்படித்தான்.. கிடைத்த வேலைகளை செய்து, எப்படியாவது ஒரு நிலைக்கு உயர்ந்திட வேண்டும் என உழைத்துக் கொண்டே இருந்தேன். இன்று இந்த இடத்திற்கு வந்து நிற்கிறேன் என்றால் ..இவை அனைத்தும் திரைக்கலை தந்த ஒரு வலிமை. இதயத்தை தொடக்கூடிய ஒரு உணர்வு. நல்ல படைப்புகளை பார்த்து... படித்து... கேட்டு... வளர்ந்தது. இதையெல்லாம் ...இப்படி எல்லாம் ... செய்ய வேண்டும் என்று நினைத்து, எனக்கு மாண்புமிகு முதல்வர் கொடுக்க நல்லதொரு வாய்ப்பு இது. அவர் என் மீது வைத்த நம்பிக்கை. என் மீது இங்கு உள்ள எல்லோரும் வைத்திருக்கும் நம்பிக்கை. இதனை நான் நிச்சயமாக காப்பாற்றுவேன். கடைசி மூச்சு வரை நேர்மையாக வேலை செய்து, உங்கள் அத்தனை பேரின் கோரிக்கையையும் மாண்புமிகு தமிழக முதல்வரின் கவனத்திற்கு எடுத்துச் சென்று, அவரின் ஆலோசனையும், அனுமதியும் பெற்று... என்னாலான அனைத்து முயற்சிகளையும் செய்வேன் என உறுதி அளிப்பதுடன்..வாழ்த்தி, வணங்கி விடைபெறுகிறேன்'' என்றார்.

உலகத் தரம் வாய்ந்த தொழில்நுட்பக் கலைஞர்களிலிருந்து சக்திவாய்ந்த நடிகர்கள் வரை, 'தி பிரைடு ஆஃப் பாரத்: சத்ரபதி சிவாஜி மகாராஜ்' படத்தில் பெலவாடி மல்லம்மாவாக இணைந்தார் பூமி சதீஷ் பெட்னேக்கர்

 *உலகத் தரம் வாய்ந்த தொழில்நுட்பக் கலைஞர்களிலிருந்து சக்திவாய்ந்த நடிகர்கள் வரை, 'தி பிரைடு ஆஃப் பாரத்: சத்ரபதி சிவாஜி மகாராஜ்' படத்தில் பெலவாடி மல்லம்மாவாக இணைந்தார் பூமி சதீஷ் பெட்னேக்கர்*



தி பிரைடு ஆஃப் பாரத்: சத்ரபதி சிவாஜி மகாராஜ் திரைப்படத்தின் நட்சத்திர பட்டியல் தொடர்ந்து விரிவடைந்து வருகிறது. இந்திய சினிமாவின் மிகப் பிரம்மாண்டமான வரலாற்றுத் திரைப்படங்களில் ஒன்றாக உருவாகி வரும் இந்தப் படத்தில், பாராட்டப்பட்ட நடிகர்களிலிருந்து உலகளவில் அங்கீகாரம் பெற்ற தொழில்நுட்பக் கலைஞர்கள் வரை பலர் தொடர்ந்து இணைந்து வருகின்றனர்.


இந்த சக்திவாய்ந்த நட்சத்திர அணியில் தற்போது நடிகை பூமி சதீஷ் பெட்னேக்கர் அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ளார். இந்த பிரம்மாண்டமான படைப்பில், அச்சமற்ற வீர ராணியாகவும், தனது துணிச்சல் மற்றும் அசைக்க முடியாத மன உறுதியால் நினைவுகூரப்படும் பெலவாடி மல்லம்மா என்ற கதாபாத்திரத்தில் அவர் நடிக்கிறார் என்பதை நாங்கள் பிரத்தியேகமாக அறிந்துள்ளோம். அவரது வருகை, புகழ்பெற்ற வீர மன்னர் சத்ரபதி சிவாஜி மகாராஜாக ரிஷப் ஷெட்டி முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் இந்த நட்சத்திர அணியை மேலும் வலுப்படுத்துகிறது. மேலும் அர்ஜுன் ராம்பால், விவேக் ஓபராய் மற்றும் பல முன்னணி நடிகர்களும் இதில் இடம்பெற்றுள்ளனர்.


இந்தப் படத்தில் இணைந்திருப்பது குறித்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்திய பூமி சதீஷ் பெட்னேக்கர் கூறியதாவது: "மகத்தான மராத்தா வீர மன்னர் சத்ரபதி சிவாஜி மகாராஜின் வாழ்க்கை மற்றும் பாரம்பரியத்தை மையமாகக் கொண்டு, இதுபோன்ற அளவில் உருவாகும் முதல் இந்திய திரை பிரம்மாண்டத்தின் ஒரு பகுதியாக இருப்பது எனக்கு மிகுந்த பெருமையாக உள்ளது. கர்நாடகத்தின் வீர ராணியான பெலவாடி மல்லம்மா கதாபாத்திரத்தில் நடித்து, அவரை திரையில் உயிர்ப்பிப்பது எனக்கு ஒரு பெரும் பாக்கியம். நான் காந்தாரா திரைப்படத்தின் மிகப்பெரிய ரசிகை. அதில் ரிஷப் ஷெட்டியின் அசத்தலான நடிப்பு என்னை மிகவும் கவர்ந்தது. அதனால், சந்தீப் இந்தக் கதையை என்னிடம் கூறிய தருணத்திலேயே என்னுள் இருக்கும் நடிகை உடனடியாக 'ஆம்' என்று கூறிவிட்டது. இதற்கு முன் நான் செய்த எந்தக் கதாபாத்திரத்தையும் போல இல்லாத ஒரு அனுபவம் இது. என்னை முற்றிலும் புதிய கோணத்தில் பார்த்து இந்த வாய்ப்பை வழங்கிய தயாரிப்பாளர்களுக்கு நான் மனமார்ந்த நன்றியைத் தெரிவிக்கிறேன்."


சந்தீப் சிங் இயக்கி தயாரிக்கும் தி பிரைடு ஆஃப் பாரத்: சத்ரபதி சிவாஜி மகாராஜ் திரைப்படம் மிகப் பிரம்மாண்டமான அளவில் உருவாக்கப்பட்டு வருகிறது. புகழ்பெற்ற மராத்தா வீர மன்னரின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவாகும் மிகப் பெரிய திரை பிரம்மாண்டங்களில் ஒன்றாக இது உருவாக்கப்பட உள்ளது.


இரண்டு பாகங்களாகத் திட்டமிடப்பட்டுள்ள இந்தத் திரைப்படத்திற்கு ரிஷி விர்மானி திரைக்கதை எழுதியுள்ளார். அமித் திரிவேதி இசையமைக்க, தேசிய விருது பெற்ற பாடலாசிரியர் பிரசூன் ஜோஷி பாடல் வரிகளை எழுதியுள்ளார். தொடர்ந்து விரிவடைந்து வரும் முன்னணி நடிகர்கள் மற்றும் உலகளவில் அங்கீகாரம் பெற்ற தொழில்நுட்பக் கலைஞர்களின் அணியுடன் உருவாகும் இந்த பிரம்மாண்ட திரைப்படம், இந்த ஆண்டு இறுதியில் படப்பிடிப்பைத் தொடங்க உள்ளது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க படைப்பை உயிர்ப்பிக்க விரிவான முன்தயாரிப்பு பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

தனுஷ் அவரது பிறந்த நாளை முன்னிட்டு அனைத்திந்திய தலைமை தனுஷ் நண்பர்கள் நற்பணி மன்றம் ஏற்பாடு செய்த மாபெரும் ரத்ததான முகாம் நேற்று (26/7/26)வேல்ஸ் மருத்துவமனை மற்றும் கல்லூரி ( Manjakaranai)

தனுஷ் அவரது பிறந்த நாளை முன்னிட்டு அனைத்திந்திய தலைமை தனுஷ் நண்பர்கள் நற்பணி மன்றம் ஏற்பாடு செய்த மாபெரும் ரத்ததான முகாம் நேற்று (26/7/26)வேல்ஸ் மருத்துவமனை மற்றும் கல்லூரி ( Manjakaranai) 


இந்திய சினிமா மட்டுமின்றி ஹாலிவுட் வரை கால் பதித்த நடிகர் தனுஷ் நாளை ஜூலை 28 தனது பிறந்த நாளை கொண்டாடுகிறார். தனுஷ் அவரது பிறந்த நாளை முன்னிட்டு அனைத்திந்திய தலைமை தனுஷ் நண்பர்கள் நற்பணி மன்றம் ஏற்பாடு செய்த மாபெரும் ரத்ததான முகாம் நேற்று (26/7/26)வேல்ஸ் மருத்துவமனை மற்றும் கல்லூரி ( Manjakaranai) 

 வளாகத்தில் இந்தியா முழுக்க உள்ள ரசிகர் மன்றத்தினர் முன்னிலையில் நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியில் ஏழை எளிய மாணவர்கள் 150 பேருக்கு கல்வி ஊக்கத்தொகை மற்றும் 30 மாவட்டங்களைச் சேர்ந்த ஏழை குடும்பத்திற்கு 30 ஆட்டோ வழங்கி உள்ளார் தனுஷ். 40க்கும் மேற்பட்ட மாவட்டங்களைச் சேர்ந்த ரசிகர் மன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டு ரத்த தானம் செய்தனர். மேலும் காலை, மதியம், இரவு என மூன்று நேரத்திற்கும் பந்தி வைத்து விருந்தளித்தார் தனுஷ்.

*Prime Video Announces August 7 as the Global Premiere of Vadhandhi Season Two—The Mystery of Mani, the Highly Anticipated Second Season in the Franchise

 *Prime Video Announces August 7 as the Global Premiere of Vadhandhi Season Two—The Mystery of Mani, the Highly Anticipated Second Season in the Franchise*



Created, written, and directed by Andrew Louis and produced under the banner of Wallwatcher Films by Pushkar and Gayatri as creative producers, season 2 of the critically acclaimed franchise tells a riveting tale of guilt, secrets, rumors, and redemption


 Set against the backdrop of Madurai, the edge-of-your-seat suspense drama stars M. Sasikumar in the lead, alongside Yashwanth, Anagha Maruthora, Aparna Das, Vivek Prasanna, Revathy Sharma, and Arjun Nandhakumar in pivotal roles


Streaming exclusively on Prime Video, Vadhandhi Season Two—The Mystery of Mani will be available in Tamil, along with dubs in Telugu and Hindi, and subtitles in 15 languages, including English, across India and over 240 countries and territories worldwide on August 7 


CHENNAI, India—July 27, 2026—Prime Video, India’s most-loved entertainment destination, today announced August 7 as the global premiere of Vadhandhi Season Two—The Mystery of Mani, the highly anticipated second season of its critically acclaimed Tamil Original suspense thriller series created, written, and directed by Andrew Louis. Produced under the banner of Wallwatcher Films by Pushkar and Gayatri as creative producers, the eight-episode series stars M. Sasikumar in the lead as SI Moosa Raza, alongside Yashwanth, Anagha Maruthora, Aparna Das, Vivek Prasanna, Revathy Sharma, and Arjun Nandhakumar in pivotal roles. Vadhandhi Season Two—The Mystery of Mani will premiere exclusively on Prime Video in Tamil with dubs in Telugu and Hindi and subtitles in 15 languages, including English, across India and over 240 countries and territories worldwide on August 7.


Set against the culturally rich backdrop of Madurai, the narrative seamlessly intertwines tradition and investigation with the raw energy and essence of the iconic Jallikattu festival. Staying true to the franchise's core themes of rumor against reality, season 2 draws audiences into a gripping mystery through layered storytelling, complex characters, and emotionally charged relationships. The season introduces Sasikumar as SI Moosa Raza, an honest, relentless police officer whose pursuit of the truth collides with politics, media frenzy, and human frailty. When skeletal remains are unearthed during the inauguration of a highway project, the investigation takes unexpected turns, leading him to an elusive prisoner named Mani. 


"Stories from the South have received immense love and appreciation from audiences across the world, and Vadhandhi is a franchise we are incredibly proud of,” said Nikhil Madhok, Director & Head of Originals, Prime Video India. “The first season carved a unique space in the suspense crime drama genre by masterfully blurring the lines between rumor and reality, and we are thrilled to bring the second season to audiences worldwide. With Andrew Louis at the helm once again, and a gripping narrative set against the vibrant cultural landscape of Madurai, season 2 takes the franchise to new heights. It is a privilege to continue our collaboration with Pushkar and Gayatri, whose ability to craft compelling, culturally rooted stories with universal appeal is unmatched. We are confident this season will keep audiences on the edge of their seats."


Creative Producers Pushkar and Gayatri said, "Season 2 builds on the franchise's unique blend of suspense, truth, and perception while telling a story that is both emotionally compelling and deeply engaging. Andrew Louis has yet again brought this vision to life brilliantly, crafting a gripping narrative that stays true to the spirit of the franchise while taking it in an exciting new direction. Sasikumar and the entire cast have delivered exceptional performances that add tremendous depth to the story. We are grateful to Prime Video for continuing to support stories that are rooted in culture yet resonate with audiences everywhere, and we can't wait for audiences in India and across the world to experience Vadhandhi Season Two—The Mystery of Mani."


XXX


ABOUT PRIME VIDEO


Prime Video is India’s largest streaming service for exclusive Originals—a one-stop entertainment destination in India offering blockbuster Originals and exclusive titles included with Prime, in addition to the widest selection of movie rentals, and 30+ add-on subscriptions (Apple TV+, Lionsgate Play, Discovery+, Crunchyroll, BBC Player, Sony Pictures – Stream, MGM+ to name a few). With the integration of the free video streaming service ‘Amazon MX Player’ into Prime Video, the unified service now offers a deeper, richer selection for an even wider base of audiences in India, with a variety of Indian and international movies and shows across Hindi, English, Tamil, Telugu, Malayalam, Kannada, and more. Prime Video is home to fan-favorites like Mirzapur, The Family Man, Panchayat, Paatal Lok, Farzi, Raakh, Subedaar, Matka King, Call Me Bae, Dhootha, Inspector Rishi, Traitors, Rise & Fall, Sankalp, Jamnapaar, Aashram and Made In India: A Titan Story. Global hits include Project Hail Mary, Off Campus, The Boys, The Lord of The Rings: The Rings of Power, Jack Ryan, The Summer I Turned Pretty, amongst others. Prime Video offers every kind of entertainment, for every kind of viewer, all in one place. For more information on Prime Video, visit www.amazon.com/primevideo.


ABOUT WALLWATCHER FILMS


Founded and run by the writer, director and creative producer duo Pushkar & Gayatri, Wallwatcher Films has produced four long-format tentpole shows, Suzhal–The Vortex (Seasons 1 & 2), Vadhandhi –The Fable of Velonie, and Exam for Amazon Prime Video and a short titled ‘The Mask’, which is a part of the Putham Pudhu Kaali anthology series. The company has also produced the feature film ‘Aelay’, available on Netflix. Wallwatcher Films is all geared up for the launch of their upcoming Prime Video Original series, Vadhandhi–The Mystery of Mani. Pushkar & Gayatri curate all projects produced by Wallwatcher Films and mentor them as Creative Producers. Both seasons of Suzhal–The Vortex were written and created by Pushkar & Gayatri. 


https://www.wallwatcherfilms.com/


COMMUNICATIONS CONTACT:

Sarfme@amazon.com

pv-in-pr@amazon.com

 

SOCIAL MEDIA HANDLES:

@PrimeVideoIN

Netflix Unveils Pyaar Prema Kalyanam:*

 *“ஓடிப் போய் கல்யாணம் பண்ணுறதா? இல்ல கல்யாணம் பண்ணிட்டு ஓடிப் போறதா?” புதிய கோணத்தில் நெட்ஃப்ளிக்ஸ் வெளியிட்ட ‘பியார் பிரேமா கல்யாணம்’ புரமோ !*



“ஓடிப் போய் கல்யாணம் பண்ணுறது? இல்ல கல்யாணம் பண்ணிட்டு ஓடிப் போறது?”

சந்தோஷமான திருமண வாழ்க்கைக்கான விதிகளை தலைகீழாக மாற்றும் இந்த ஜோடியை சந்திக்க தயாராகுங்கள்! காதல், திருமணம், அதற்குப் பிறகான வாழ்க்கை என அனைத்தையும் புதுக்கோணத்தில் சொல்ல வரும் “ பியார்  பிரேமா கல்யாணம்” ஒரு வித்தியாசமான குடும்ப பொழுதுபோக்கு திரைப்படமாக உருவாகியுள்ளது.


இயக்குநர் இளன், இந்தப் படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகிறார். அவரது இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த ரொமான்டிக் குடும்ப பொழுதுபோக்கு திரைப்படத்தில் சான்வீ மேக்னா கதாநாயகியாக நடிக்கிறார்.


சமூக வலைதளங்களில் பிரபலமான இன்ஃப்ளூயன்சர் பவி என்ற கதாபாத்திரத்தில் சான்வீ மேக்னா நடிக்கிறார். திருமணத்திற்குப் பிறகும் தனது பெற்றோர் வீட்டை விட்டுச் செல்ல மறுக்கிறார். அதனால், வழக்கத்திற்கு மாறாக அவரது கணவரான இளன், மனைவியின் வீட்டிற்கே குடி பெயர்கிறார். இதன் பின்னர் தொடங்கும் குடும்ப கலாட்டா, கலாச்சார மோதல்கள், உறவுகளின் சிக்கல்கள் மற்றும் உணர்வுபூர்வமான தருணங்கள் என சிரிப்பும், சிந்தனையும் கலந்த பயணமாக படம் நகர்கிறது. இறுதியில், “சந்தோஷமாக வாழ்வதற்கான விதிகளை மற்றவர்கள் தீர்மானிக்க வேண்டியதில்லை” என்பதை படம் அழகாக எடுத்துரைக்கிறது.


இப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகும் இளன், தனது வழக்கமான நகைச்சுவை, உணர்ச்சி மற்றும் குடும்ப உறவுகளை மையமாகக் கொண்ட கதை சொல்லும் பாணியை மீண்டும் ஒருமுறை வெளிப்படுத்தியுள்ளார்.


படத்தில் இளன்,  சான்வி மேக்னா, ராதிகா சரத்குமார், யோகி பாபு, எம்.எஸ். பாஸ்கர், கீதா கைலாசம், இளங்கோ குமரவேல், செந்தில், மாறன், டீப்ஸ் சைரஸ் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இவர்களின் நடிப்பு படத்திற்கு கூடுதல் பலமாக அமைகிறது.


நெட்ஃப்ளிக்ஸ் இந்தியாவின் உள்ளடக்கப் பிரிவு துணைத் தலைவர் மோனிகா ஷெர்கில் கூறியதாவது ..


“மிகவும் சுவாரஸ்யமான காதல் கதைகள் என்பது விதிகளைப் பின்பற்றுபவை அல்ல; அவற்றைத் துணிச்சலாக மறுபடியும் எழுதுபவை. “பியார் பிரேமா கல்யாணம்” ஒரு எளிமையான ஆனால் துணிச்சலான கேள்வியுடன் தொடங்குகிறது: திருமணத்திற்குப் பிறகு, மணமகன் மணமகள் வீட்டிற்கே குடிபெயர்ந்தால் என்ன ஆகும்? அந்த ஒரு சிந்தனையே, நவீன உறவுகள், குடும்பம் மற்றும் தங்களுக்கான மகிழ்ச்சியான வாழ்க்கையைத் தேர்ந்தெடுக்கும் தைரியத்தை கொண்டாடும், புத்துணர்ச்சியூட்டும் நகைச்சுவை, மனதைத் தொடும் உணர்வுகள் மற்றும் அனைவரும் தொடர்புபடுத்திக்கொள்ளக்கூடிய ஒரு கதையாக விரிகிறது.


இயக்குநராகவும், நடிகராகவும் அறிமுகமாகும் இளன், இந்தப் படத்திற்கு புதியதொரு படைப்பாற்றல்மிக்க பார்வையை கொண்டு வந்துள்ளார். அவருடன் இணைந்திருக்கும் அற்புதமான நட்சத்திரக் குழுவும் ஒவ்வொரு தருணத்திலும் உணர்வுப்பூர்வமான நடிப்பையும், நகைச்சுவை மற்றும் இயல்பான நடிப்பையும் தந்து நம்மை ஈர்க்கின்றனர்.


Made in Korea திரைப்படத்திற்குக் கிடைத்த சிறப்பான வரவேற்பைத் தொடர்ந்து, ஸ்ரீநிதி சாகர் மற்றும் Rise East Entertainment குழுவுடன் எங்களது கூட்டணியைத் தொடர்வதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம். உலகம் முழுவதும் உள்ள பார்வையாளர்கள் இந்த மகிழ்ச்சிகரமான குடும்பப் பொழுதுபோக்கு திரைப்படத்தைக் கண்டுகளிப்பதற்காக நாங்களும் ஆவலுடன் காத்திருக்கிறோம்.”


படம் பற்றி தயாரிப்பாளர் ஸ்ரீநிதி சாகர் கூறுகையில்..,


”‘மேட் இன் கொரியா’ திரைப்படத்திற்கு உலகம் முழுவதும் கிடைத்த வரவேற்பு, உண்மையான தமிழ் கதைகளும் உலகளாவிய ரசிகர்களை சென்றடைய முடியும் என்பதை நிரூபித்தது. அதுபோன்ற இதயப்பூர்வமான, நகைச்சுவை நிறைந்த மற்றும் அனைவரும் தொடர்புபடுத்திக் கொள்ளக்கூடிய இன்னொரு கதையை தேடிக் கொண்டிருந்தபோது, ‘ பியார் பிரேமா கல்யாணம்’ எங்களை உடனே கவர்ந்தது. நவீன உறவுகளின் சவால்களை, தமிழ் குடும்ப மதிப்புகளுடன் இணைத்து சொல்லும் இந்தப் படம் முழுமையான குடும்ப பொழுதுபோக்கு திரைப்படமாக இருக்கும். ரைஸ் ஈஸ்ட் என்டர்டெயின்மெண்ட் சார்பில், இந்தப் படத்தை நெட்ஃப்ளிக்ஸ் மூலம் ஆகஸ்ட் 21 முதல் உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களிடம் கொண்டு செல்லுவதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம்.”


படத்திற்கு இசையமைத்துள்ள யுவன் சங்கர் ராஜா, தனது மனதை வருடும் இசையின் மூலம் காதல், குடும்பம், தனித்துவம் மற்றும் வாழ்க்கையின் மகிழ்ச்சியை மேலும் அழகாக உணர வைக்கிறார்.


திருமணத்திற்குப் பிறகுதான் உண்மையான ஆச்சரியங்கள் தொடங்குகின்றன என்பதை நகைச்சுவையுடனும், மனதைத் தொடும் தருணங்களுடனும் சொல்ல வரும் ‘ப்யார் பிரேமா கல்யாணம்’, ஆகஸ்ட் 21 முதல் நெட்ஃப்ளிக்ஸில் உலகம் முழுவதும் வெளியாகிறது.


*Netflix Unveils Pyaar Prema Kalyanam:*


A Modern Tamil Family Entertainer With a Delightful Role Reversal 27 July, 2026: 'Oodi poi kalyanam pannuradhu' ille na 'Kalyanam pannitu oodi poradhu' (trans.: should we run away to get married, or get married and then run away)? Meet the couple rewriting the rules of happily ever after! Pyaar Prema Kalyanam is here to flip the script on love, marriage, and everything that comes after "I do."  


Directed by and starring Elan in his acting debut, the film follows Pavi (Saanvee Meghana), a popular influencer who refuses to leave her family home after marriage. Instead, it's her husband, Elan, who moves in with her, setting off a hilarious chain of culture clashes, family chaos, shifting expectations, and heartfelt self-discovery. As the newlyweds navigate their unconventional arrangement, they soon realise that perhaps the biggest tradition worth challenging is the idea that everyone else gets to define their happily ever after. 


Marking Elan's acting debut, Pyaar Prema Kalyanam also showcases his signature storytelling – blending humour, emotion, and relatable family dynamics into a thoroughly entertaining watch. Backing him is a powerhouse ensemble featuring Radhika Sarathkumar, Yogi Babu, M. S. Bhaskar, Geetha Kailasam, Elango Kumaravel, Senthil, Maran and deepz Cyrus whose performances bring warmth and plenty of laughs to the story. 


Monika Shergill, Vice-President Content, Netflix India said,  "The most interesting love stories aren't the ones that follow the rules, they are the ones that dare to rewrite them. Pyaar Prema Kalyanam begins with a wonderfully simple but bold question: what if, after marriage, the groom moved into the bride's home instead? That single idea unfolds into a refreshingly funny, heartfelt and deeply relatable celebration of modern relationships, family and finding the courage to choose your own happily ever after.. Elan has brought a wonderfully fresh creative vision to the film, both as a director and in his acting debut, alongside a phenomenal ensemble cast that brings warmth, humour and authenticity to every moment. Following the strong response to Made in Korea, we are delighted to continue our collaboration with Sreenidhi Sagar and the team at Rise East Entertainment, and can't wait for audiences everywhere to discover this joyful family entertainer."


Producer Sreenidhi Sagar shares, "Following the incredible response to Made in Korea, which proved that authentic Tamil stories can resonate with audiences around the world, we were looking for another story with that same universal appeal. From the moment we heard this story, we knew it had the perfect blend of heart, humour, and relatability. What makes Pyaar Prema Kalyanam special is the way it explores modern relationship dynamics through a refreshing premise while remaining deeply rooted in family values and Tamil culture. It is a wholesome entertainer. At Rise East Entertainment, we are passionate about backing stories that feel both relevant and universal, and we're thrilled to partner with Netflix to bring this film to audiences across the world on August 21." Adding to the film's emotional resonance is a soulful soundtrack by Yuvan Shankar Raja, whose music beautifully complements its themes of love, family, individuality, and finding happiness on your own terms. 


Get ready for a romcom where the groom moves in, the bride stands her ground, and the biggest wedding surprise begins only after the wedding is over. ~ This August 21, witness a wedding that breaks every rule – except entertaining you on Netflix ~



https://www.instagram.com/reel/DbSOKDpqeMY/?igsh=MWhmem1zcXR6ajZlOQ==

The Wedding Song" From Vishwanth & Sons Is Out Now ~ Suriya & Mamitha Baiju Light Up the Screens

 *சூர்யா – மமிதா பைஜு கலக்கும் “விஸ்வநாத் & சன்ஸ்”  படத்தின் இரண்டாவது சிங்கிள் “தி வெட்டிங் சாங்” (The Wedding Song ) வெளியானது!*



*சூர்யா குரலில் “தி வெட்டிங் சாங்” (The Wedding Song ) வெளியீடு! “விஸ்வநாத் & சன்ஸ்” கொண்டாட்டம் தொடங்கியது!*


“பட்டாம்பூச்சி / நேனோ பட்டர்ஃப்ளை” என்ற முதல் சிங்கிள் மூலம் இசை ரசிகர்களின் மனதை வென்ற “விஸ்வநாத் & சன்ஸ்” திரைப்படக் குழு, தற்போது மற்றொரு உற்சாகமான இசை விருந்தாக “தி வெட்டிங் சாங்” பாடலை வெளியிட்டுள்ளது. வெளியான சில நிமிடங்களிலேயே ரசிகர்களின் வரவேற்பைப் பெற்று, இந்த சீசனின் கொண்டாட்டப் பாடலாக இது பேசப்பட்டு வருகிறது.


முழுக்க முழுக்க திருமணக் கொண்டாட்டத்தின் மகிழ்ச்சி, உற்சாகம் மற்றும் குடும்ப பாசத்தை வெளிப்படுத்தும் இந்த பாடலில், சூர்யா மற்றும் மமிதா பைஜு தங்களது உற்சாகமான நடன அசைவுகளால் திரையை வண்ணமயமாக்கியுள்ளனர். குடும்பத்தின் பிரம்மாண்டமான  திருமணத்தின் கொண்டாட்ட மனநிலையை அப்படியே ரசிகர்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில் இந்த பாடல் உருவாகியுள்ளது.


இந்தப் பாடலின் சிறப்பு அம்சமாக, நடிகர் சூர்யா தானே தனது குரலில் பாடியிருப்பது ரசிகர்களுக்கு இனிய ஆச்சரியமாக அமைந்துள்ளது. அவரது குரலும், திரையில் வெளிப்படும் உற்சாகமான நடிப்பும் இணைந்து பாடலுக்கு கூடுதல் உயிர் கொடுத்துள்ளன.


இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார், மீண்டும் ஒருமுறை தனது துள்ளலான மற்றும் கொண்டாட்ட மனநிலையை பிரதிபலிக்கும் இசையால் அனைவரையும் கவர்ந்துள்ளார். பாடலாசிரியர் கென் கருணாஸ் எழுதிய வரிகள், திருமண விழாவின் மகிழ்ச்சியையும் குடும்ப உறவுகளின் உணர்வுகளையும் அழகாக வெளிப்படுத்துகின்றன.


ஏற்கனவே “பட்டாம்பூச்சி / நேனோ பட்டர்ஃப்ளை” மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற நிலையில், தற்போது வெளியாகியுள்ள “தி வெட்டிங் சாங்” பாடலும் அதே வரிசையில் ரசிகர்களின் பிளேலிஸ்டில் இடம்பிடித்துள்ளது. தொடர்ச்சியாக இரண்டு வெற்றிப் பாடல்கள் வெளியாகியுள்ளதால், “விஸ்வநாத் & சன்ஸ்” திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.


இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கியுள்ள இந்த குடும்ப பொழுதுபோக்கு திரைப்படத்தை சூர்யதேவரா நாக வம்சி மற்றும் சாய் சௌஜன்யா ஆகியோர்சிதாரா எண்டர்டெயின்மெண்ட்ஸ் (Sithara Entertainments) மற்றும் ஃபார்ச்சூன் ஃபோர்  ( Fortune Four Cinemas )   சினிமாஸ் நிறுவனங்களின் சார்பில் தயாரித்துள்ளனர். ஸ்ரீகரா ஸ்டூடியோஸ் நிறுவனம் படத்தை வழங்குகிறது.


இந்தியா முழுவதும் சுதந்திர தின வார இறுதி கொண்டாட்டத்தை முன்னிட்டு, 2026 ஆகஸ்ட் 14 ஆம் தேதி “விஸ்வநாத் & சன்ஸ்” திரைப்படம் உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.


*The Wedding Song" From Vishwanth & Sons Is Out Now ~ Suriya & Mamitha Baiju Light Up the Screens*


After the massive success of the chartbusting first single Pattampoochi, the Vishwanth & Sons team is back with another treat for fans "The Wedding Song" is out now and it's already being hailed as the perfect celebration anthem of the season.


A high-energy, festive number, the song sees Suriya and Mamitha Baiju light up the screen with their infectious dance moves, capturing the joy and warmth of a big fat family wedding. Adding a special touch, Suriya himself has lent his voice to the track, making it an even more personal and heartfelt musical moment.


The music is composed by G. V. Prakash Kumar, with lyrics penned by Ken Karunas giving the song its distinct festive and celebratory flavour.


With two back-to-back chartbusters Pattampoochi  and now The Wedding Song, expectations for Vishwanth & Sons continue to soar. 


Directed by Venky Atluri and produced by Suryadevara Naga Vamsi and sai soujanya under Sithara Entertainments and Fortune Four Cinemas. Presented by Srikara Studios, the family entertainer is all set for a grand worldwide theatrical release this Independence Day weekend on August 14th.


https://www.youtube.com/watch?v=rfza9kCybEs

*இயற்கை விவசாயிகளுக்கு விருது வழங்கிய நடிகர் சௌந்தரராஜா

 *இயற்கை விவசாயிகளுக்கு விருது வழங்கிய நடிகர் சௌந்தரராஜா* 



நடிகரும் சமூக ஆர்வலருமான சௌந்தரராஜா, தனது "மண்ணுக்கும் மக்களுக்கும் அறக்கட்டளை" சார்பில், ஒவ்வொரு ஆண்டும் நம்மாழ்வாரின் பிறந்த நாளை முன்னிட்டு நேர்மையாக இயற்கை விவசாயம் செய்யும் விவசாயிகளுக்கு விருதுகளையும் ரொக்க பரிசுகளையும் வழங்கி வருகிறார். அந்த வகையில் இந்த ஆண்டு தஞ்சாவூர் மாவட்டத்தில் 11 இயற்கை விவசாயிகளுக்கு நம்மாழ்வார் விருதும், தலா ரூ.5,000 ரொக்கப் பரிசும் வழங்கி கவுரவித்தார்.


இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது:


"நம்மாழ்வாரின் பிறந்த நாளை முன்னிட்டு தஞ்சாவூரைச் சேர்ந்த 11 இயற்கை விவசாயிகளுக்கு எனது மண்ணுக்கும் மக்களுக்கும் அறக்கட்டளை மூலம் விருதும் ரொக்கப் பரிசும் வழங்கி, அவர்களுக்கான எனது நன்றியை வெளிப்படுத்தியுள்ளேன். இதை எனது வாழ்க்கையின் மிகப்பெரிய அர்த்தமுள்ள தருணங்களில் ஒன்றாகக் கருதுகிறேன்.


கடந்த ஆண்டு மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் 11 விவசாயிகளுக்கு விருதுகளும் ரொக்கப் பரிசுகளும் வழங்கினோம். அப்போது கிடைத்த வரவேற்பும், விவசாயிகளின் மகிழ்ச்சியும் இந்த ஆண்டும் இந்நிகழ்வை நடத்துவதற்கு ஊக்கமாக அமைந்தது. கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.



இவ்விழாவில் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்ட தஞ்சாவூர் சட்டமன்ற உறுப்பினர் திரு. இரா. விஜய் சரவணன் அவர்களுக்கும் இயற்கை விவசாயம் பற்றி சிறப்புரை வழங்கிய வேளாண் செம்மல் திரு.கோ.சித்தர் அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் நம்மாழ்வாரின் அண்ணன் மகன் பூமிநாதன் அவர்களும் கலந்து கொண்டது மகிழ்ச்சியாக கருதுகிறேன்.


இன்றைய இளைஞர்கள் விவசாயத்தின் முக்கியத்துவத்தை உணர வேண்டும். உணவை உருவாக்கும் விவசாயிகளை மதிக்கும் மனப்பான்மை சமூகத்தில் வளர வேண்டும். இயற்கை விவசாயம் என்பது வெறும் விவசாய முறை மட்டுமல்ல; அது மண்ணையும், மனிதர்களின் ஆரோக்கியத்தையும் பாதுகாக்கும் வாழ்க்கை முறையாகும்.


தற்போதைய "முதலமைச்சர் திரு.ஜோசப் விஜய் அவர்கள் அடுத்த ஜென்மம் என்று இருந்தால் நான் விவசாய மகனாக பிறப்பேன்" என்று கூறியிருந்தார். அதனால் கண்டிப்பான முறையில் விவசாயிகளுக்கு அவர் நல்லது செய்வார் என்று எனக்கு மிகப்பெரிய நம்பிக்கை இருக்கிறது.


விவசாயிகளைப் பாதுகாப்பதும், இயற்கை விவசாயத்தை மீட்டெடுப்பதும் நமது கடமையாகும். அதிகளவில் மரங்களை நட வேண்டும், நீர்நிலைகளைப் பாதுகாக்க வேண்டும், நடப்பட்ட மரங்களை முறையாகப் பராமரிக்க வேண்டும். சுற்றுச்சூழலை காக்கும் பணிகளில் அனைவரும் பங்கேற்க வேண்டும் என்பதே எங்களின் நோக்கம்.


எனது மண்ணுக்கும் மக்களுக்கும் அறக்கட்டளை மூலம் வருங்காலங்களிலும் விவசாயிகள், மாணவர்கள் மற்றும் சமூக நலன் சார்ந்த பல்வேறு திட்டங்கள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும்" என்றார்.


இந்நிகழ்வில் மண்ணுக்கு மக்களுக்கும் அறக்கட்டளையின் தஞ்சாவூர் மாவட்ட உறுப்பினர்கள், மற்றும் அனைத்து மாவட்ட உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

நயன்தாரா- கவின் இணைந்து நடித்திருக்கும் 'ஹாய்' திரைப்படத்தின் இரண்டாவது பாடல் வெளியீடு

 *நயன்தாரா- கவின் இணைந்து நடித்திருக்கும் 'ஹாய்' திரைப்படத்தின் இரண்டாவது பாடல் வெளியீடு* 



நயன்தாரா, கவின் இருவரும் முதன் முதலாக இணைந்து நடித்திருக்கும் 'ஹாய்' திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள 'ரசகுல்லா..' எனத் தொடங்கும் இரண்டாவது பாடலும், பாடலுக்கான காணொளியும் வெளியிடப்பட்டிருக்கிறது.


அறிமுக இயக்குநர் விஷ்ணு எடவன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'ஹாய்' திரைப்படத்தில் நயன்தாரா, கவின், கே. பாக்யராஜ், பிரபு, ராதிகா சரத்குமார், வி டி வி கணேஷ், சத்யன், 'ஆதித்யா' கதிர், குரேஷி உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள்.


ராஜேஷ் சுக்லா ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு ஜென் மார்ட்டின் இசையமைத்திருக்கிறார். எஸ். கண்ணன் கலை இயக்கத்தை மேற்கொள்ள பிலோமின் ராஜ் படத்தொகுப்பு பணிகளை கையாண்டிருக்கிறார்.


ஃபீல் குட் ஃபேமிலி என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஜீ ஸ்டுடியோஸ்- தி ரவுடி பிக்சர்ஸ் - செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ ஆகிய நிறுவனங்கள் சார்பில் நயன்தாரா- விக்னேஷ் சிவன்- எஸ். எஸ். லலித்குமார் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். வினோத் சி.ஜே. மற்றும் கே.எஸ். மயில் வாகனன் ஆகியோர் இணை தயாரிப்பாளர்களாகவும், வி.கே. குபேந்திரன் கிரியேட்டிவ் புரொடியூசராகவும் பொறுப்பேற்றிருக்கிறார்கள்.


ஆகஸ்ட் மாதம் 14ஆம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருப்பதால்.. இப்படத்தினை விளம்பரப்படுத்தும் பணிகளில் படக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.


இந்நிலையில் இப்படத்தில் இடம்பெற்ற ' கன்னக் குழியா..' என்ற முதல் பாடல் ஏற்கனவே வெளியாகி, ஏறத்தாழ மூன்று மில்லியன் டிஜிட்டல் பார்வைகளை பெற்று சாதனை படைத்த நிலையில்.. தற்போது 'ரசகுல்லா..' எனத் தொடங்கும் இரண்டாவது பாடலும், பாடலுக்கான காணொளியும் வெளியிடப்பட்டிருக்கிறது.


இந்தப் பாடலை படத்தின் இயக்குனர் விஷ்ணு எடவன் எழுத அனிருத் பாடியிருக்கிறார். இந்தப் பாடலுக்கான நடனத்தை பிருந்தா மாஸ்டர் வடிவமைத்திருக்கிறார். ஜென் மார்ட்டினின் மெலோடியான மெட்டு- 'ரசகுல்லா' என்ற இனிப்பான சொல்- கலர்ஃபுல்லான நயன்தாரா - கம்பீரமான கவின்- இருவரது ஸ்கிரீன் கெமிஸ்ட்ரி- பிருந்தா மாஸ்டரின் நேர்த்தியான கலாச்சார நடன பின்னணி- ஆகியவை ரசிகர்களை கவரும் வகையில் இடம் பிடித்திருப்பதால், இந்த பாடல் தற்போது இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது



https://www.youtube.com/watch?v=FF05kDJOgLk