-

Loading latest news...

பிளாஸ்ட்’ திரைப்பட விமர்சனம்

பிளாஸ்ட்’ திரைப்பட விமர்சனம்


  கராத்தே பயிற்சி ஆசிரியரான அர்ஜுன், சிறு வயது முதலே தனது மகளுக்கு கராத்தே பயிற்சி அளிப்பதோடு, எங்கு தப்பு நடந்தாலும், யாருக்கு நடந்தாலும் தட்டிகேட்க வேண்டும் என்று சொல்லி வளர்க்கிறார். அதன்படி, அவரது மகள் ப்ரீத்தி முகுந்தனும், எங்கு தப்பு நடந்தாலும் அதை அதிரடியாக தட்டி கேட்கிறார். இதனால் அவருக்கு சிறு சிறு பிரச்சனைகள் ஏற்பட, அம்மா அபிராமியின் அறிவுரையின்படி அமைதியாக இருக்க பழகுகிறார். இந்த நேரத்தில், அவரது தங்க சங்கிலியை பறிக்க ஒருவர் முயற்சிக்க, வழக்கம் போல் தனது அதிரடியால் அவரை மிரள வைத்து போலீஸில் பிடித்து கொடுக்கிறார்.சிறிய திருட்டு என்று நினைத்து அர்ஜுனும், ப்ரீத்தி முகுந்தனும் காவல் நிலையத்தில் புகார் கொடுக்க முடிவு செய்யும் போது, அது மிகப்பெரிய பிரச்சனையின் தொடக்கப் புள்ளி என்று தெரிய வருகிறது. அதனால், அர்ஜுன் குடும்பத்தினர் உயிருக்கே பேராபத்து ஏற்பட, அந்த ஆபத்தில் இருந்து தங்களை காத்துக் கொள்வதற்காக அமைதியாக இருக்க வேண்டும் என்று மகளுக்கு அறிவுரை சொன்ன அம்மா அபிராமியும் அதிரடியில் இறங்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது. ஒரு கட்டத்தில் இது தனது குடும்பத்திற்கான பிரச்சனை மட்டும் இல்லை, ஆயிரக்கணக்கான குடும்பங்களின் உயிர் பிரச்சனை என்பதை புரிந்துக் கொள்ளும் அர்ஜுன் குடும்பத்தினர், அந்த குடும்பங்களை காப்பாற்ற என்ன செய்தார்கள் ?, அந்த பிரச்சனை என்ன ? என்பதை முழுக்க முழுக்க ஆக்‌ஷன் மூலமாகவே சொல்லியிருப்பது தான் ‘பிளாஸ்ட்’. எந்தவிதமான லாஜிக்கும் பார்க்காமல் இரண்டு மணி நேரம் போனதே தெரியாமல் இருக்க வேண்டும், என்றால் நிச்சயம் அதற்கு இந்த படம் சரியான தேர்வு. அதே சமயம், ஹீரோக்களின் ஆக்‌ஷன் காட்சிகளை பார்த்து வியந்த ரசிகர்களுக்கு ஹீரோவின் மகள், மனைவி என்று ஒட்டுமொத்த குடும்பமே இணைந்து நடத்தும் அதிரடி ஆக்‌ஷன் காட்சிகள் மிகப்பெரிய ஆக்‌ஷன் விருந்தாக, வியக்க வைக்கும் என்பது உறுதி. கராத்தே மாஸ்டராக நடித்திருக்கும் அர்ஜுன், இந்த வயதிலும் இப்படி பிட்டாக இருப்பது எப்படி ? என்று யோசிக்க வைப்பதோடு, தனது ஸ்டைலிஷான ஆக்‌ஷன் காட்சிகள் மூலம், தமிழ் சினிமாவில் இவரது இடத்தை நிறப்ப மற்றொருவர் வருவது கடினம் என்பதை நிரூபித்திருக்கிறார். ஆக்‌ஷன் மட்டும் இன்றி, சிறு வயது முதலே தனது மகளுக்கு தைரியம், நம்பிக்கை ஆகியவற்றை சொல்லிக் கொடுத்து வளர்ப்பவர், ஒரு சிறந்த தந்தையாகவும் பார்வையாளர்கள் மனதில் பதிந்து விடுகிறார். அர்ஜுனின் மனைவியாக நடித்திருக்கும் அபிராமி, அமைதி மற்றும் பொறுப்பான அம்மாவாக அறிமுகமாகி திடீரென்று அதிரடியில் இறங்குவது திரையரங்கையே அதிர வைக்கிறது.


அர்ஜுன் – அபிராமி தம்பதியின் மகளாக கதையின் நாயகியாக நடித்திருக்கும் ப்ரீத்தி முகுந்தன், உண்மையான கராத்தே வீராங்கனை போன்று சண்டைக்காட்சிகளில் நடித்திருக்கிறார். அவரது ஒவ்வொரு அடியும் எதிராளிகள் மீது இடியாக விழுவது திரையில் தெரிவதோடு, கராத்தே பாணியிலான சண்டைக்காட்சிகள் ரசிக்கும்படி இருக்கிறது. ப்ரீத்தி முகந்தன் முழுமையான ஆக்‌ஷன் மற்றும் சாசக திரைப்படங்களுக்கான நாயகிக்கான சரியான தேர்வு. நிச்சயம் கதாநாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த படங்களை தேர்வு செய்தால் இவருக்கான தனி இடம் உறுதி. வில்லன்களாக நடித்திருக்கும் ஜான் கொக்கேன், அர்ஜுன் சிதம்பரம், பவன், பாலா ஹாசன், வினோத் சாகர் மற்றும் அர்ஜுன் தம்பியாக நடித்திருக்கும் விவேக் பிரசன்னா ஆகியோரது கதாபாத்திர வடிவமைப்பு மற்றும் அவர்களது திரை இருப்பு திரைக்கதைக்கு பலம் சேர்த்திருப்பதோடு, காட்சிகளின் விறுவிறுப்பை அதிகரிக்கச் செய்திருக்கிறது.

ஒளிப்பதிவாளர் அருண் ராதாகிருஷ்ணன் மற்றும் அவரது குழுவினரின் உழைப்பு திரையில் தெரிகிறது. படம் முழுவதும் ஆக்‌ஷன் காட்சிகள் இருந்தாலும் அதை பல கோணங்களில் படமாக்கி, ஒவ்வொரு ஆக்‌ஷன் காட்சியையும் ரசிக்க வைத்திருக்கிறார்கள்.


இசையமைப்பாளர் ரவி பஸ்ரூரின் பின்னணி இசை திரைக்கதையின் வேகம் மற்றும் காட்சிகளின் விறுவிறுப்புக்கு எக்ஸ்ட்ரா கியரை போட்டு அதிவேகத்தில் நகர்த்தியிருப்பதோடு, மென்மையான இசை மூலம் சண்டைக்காட்சிகளை ரசிக்க வைத்திருக்கிறார். சண்டைக்காட்சிகள் என்றாலே காதை கிழிக்கும் சத்தம் அதிகம் இருக்க வேண்டும் என்ற பழைய பாணியை மாற்றி, மெலோடி கலந்த பின்னணி இசை மூலம் சண்டைக்காட்சிகளையும் காதல் காட்சிகள் போல் கவித்துவமாய் காட்டியிருக்கிறார். இயக்குநர் கற்பனை செய்த காட்சிகளுக்கு உயீர் கொடுத்தவர்களின் முக்கியமானவர் சண்டைப்பயிற்சி இயக்குநர் பீனிக்ஸ் பிரபு. அர்ஹுனின் அறிமுக சண்டைக்காட்சி முதல், ஒட்டுமொத்த குடும்பமே இணைந்து மேற்கொள்ளும் ஆக்‌ஷன் வரை படத்தில் இடம்பெறும் அனைத்து ஆக்‌ஷன் காட்சிகளையும் மிரட்டலாக மட்டும் இன்றி வியக்க வைக்கும் விதத்தில் வடிவமைத்திருக்கிறார். குறிப்பாக ப்ரீத்தி முகுந்தன் மற்றும் அபிராமி ஆகியோரை பயன்படுத்திய விதம், அவர்களுக்கான சண்டைக்காட்சிகளை வடிவமைத்த விதம் பாராட்டுக்குரியது. இருவரும் நிஜமாகவே கராத்தே பயிற்சி பெற்றிருப்பார்களோ…!, என்று ஆச்சரியப்படும் அளவுக்கு அவர்களது சண்டைக்காட்சிகள் வியக்க வைக்கிறது படத்தொகுப்பாளர் பிரதீப் ஈ.ராகவ், வேகமான காட்சிகளை அதிவேகமாக நகர்த்தும்படி காட்சிகளை தொகுத்திருந்தாலும், அனைத்தையும் ரசிக்க வைக்கிறார். சண்டைக்காட்சிகள் தான் படத்தின் முக்கிய பலம் என்பதை உணர்ந்து பணியாற்றியிருப்பவர், தனது நுணுக்கமான படத்தொகுப்பின் மூலம் சண்டைக்காட்சிகளை ஒரு கதாபாத்திரமாகவே வலம் வர செய்திருக்கிறார்.


எழுதி இயக்கியிருக்கும் சுபாஷ் கே.ராஜ், கமர்ஷியல் படம் என்றாலும் அதை பெண்களுக்கு நம்பிக்கையும், தைரியமும் கொடுக்கும் ஒரு படைப்பாக கொடுத்திருக்கிறார். அம்மா, அப்பா உட்பட யாரின் நிழலிலும் இருக்காமல் பெண்கள் தனித்து நிற்க வேண்டும், எந்த பிரச்சனையாக இருந்தாலும் அதை தனித்து சமாளிக்க வேண்டும் என்ற அவரது அறிவுரைக்காகவே தனியாக பாராட்டலாம்.


குடும்ப திரைப்படத்திற்குள் ஒரு அதிரடி ஆக்‌ஷன் திரைப்படம் என்று சொல்லும் அளவுக்கு, அதிரடியான ஆக்‌ஷன் காட்சிகளோடு முழு படத்தையும் ரசிக்க வைத்திருக்கும் இயக்குநர் சுபாஷ் கே.ராஜ், தொய்வில்லாத திரைக்கதை, விறுவிறுப்பான காட்சிகள் மூலம் இரண்டு மணி நேரம் எப்படி போனது, என்று தெரியாதவாறு பார்வையாளர்களின் கவனத்தை கட்டிப்போட்டு விடுகிறார்.


வியக்க வைக்கும் ஆக்‌ஷன் காட்சிகள், எதிர்பார்க்காத திருப்பங்கள் என முதல் பாதி படம் விறுவிறுப்பாக பயணித்தாலும், இரண்டாம் பாதி கொஞ்சம் லாஜிக் மீறலோடு பயணிப்பது படத்தின் சிறு குறையாக தெரிந்தாலும், அது படத்தை எந்தவிதத்திலும் பாதிக்காதவாறும், அதை மறந்தும் பார்வையாளர்கள் படத்தை கொண்டாட வைப்பது படத்தின் ஆக்‌ஷன் காட்சிகளும், அதை திரைக்கதையோடு இணத்து சொன்ன இயக்குநரின் புத்திசாலித்தனமும் தான்.


மொத்தத்தில், ‘பிளாஸ்ட்’ மாபெரும் வெற்றி உறுதி

காட்டாளன்’ திரைப்பட விமர்சனம்

 காட்டாளன்’ திரைப்பட விமர்சனம்


வரை தெரிகிறது. அதிலும், இப்படி ஒரு உலகத்தை உருவாக்கி தொடர்ந்து அதே பாணியிலான படங்களை இயக்கி வரும் ஒரு தமிழ் சினிமா இயக்குநரையே சிறப்பு தோற்றத்தில் தோன்ற வைத்து, அவர் மூலம் இரண்டாம் பாகம் இருக்கு, என்று சொல்லியிருக்கிறார்.


யானை தந்தம் கடத்தல் மற்றும் அதன் பின்னனியை கருவாக எடுத்துக் கொண்ட இயக்குநர் பவுல் ஜார்ஜ், அதைப் பற்றியும், அதனை சார்ந்த மக்களைப் பற்றியும் அழுத்தமாக பேசாமல், ஆக்‌ஷன் காட்சிகளையும், கதாபாத்திரங்களை ஸ்லோமோஷனில் நடக்க விட்டும் காட்சிகளை படமாக்கியிருப்பது படத்திற்கு எந்தவிதத்திலும் கைகொடுக்கவில்லை. இத்தகைய மேக்கிங்கை பார்வையாளர்கள் ஏற்கனவே பலமுறை பார்த்திருப்பதால், இவை அனைத்தும் பார்வையாளர்களை சலிப்படைய செய்கிறதே தவிர கவர வில்லை.


மொத்தத்தில், ‘காட்டாளன்’ கடுப்பேற்றுகிறான்.

எல்லோரையும் நம்பாதே" என்பது ரவி மோகன் தனது இளம் பருவ ரவி மோகனுக்கு அளிக்கும் அறிவுரை.

 "எல்லோரையும் நம்பாதே" என்பது ரவி மோகன் தனது இளம் பருவ ரவி மோகனுக்கு அளிக்கும் அறிவுரை.




SUN NXT டிஜிட்டல் தளத்தில் ஒளிபரப்பாகும் 'ஜாலி ஓ ஜிம்கானா' நிகழ்ச்சியின் ஐந்தாவது எபிஸோடில் அனைவரும் ரவி மோகனின் தன்மையான மற்றும் இனிமையான பழகும் இயல்பைக் கண்டு வியந்தனர், மேலும் ரவி மோகன் அந்த அரங்கில் இருந்த அனைவரின் இதயத்தையும் வென்றுவிட்டார் என்றே சொல்லலாம்.


எம்.குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி முதல் பொன்னியின் செல்வன் வரை, ரவி மோகன் பல வேடங்களில் நடித்திருக்கிறார், இப்போது அவர் திரைப்படத் தயாரிப்பாளராகவும் புதிய அவதாரம் எடுத்திருக்கிறார். ஆனால், மனதளவில் தான் எப்போதும் கற்றுக்கொண்டே இருக்கும் ஒரு திரைப்பட மாணவர் என்றே அவர் குறிப்பிடுகிறார். பள்ளிக்காலத்தில் அவர் முன்வரிசை மாணவராக இருந்திருக்காவிட்டாலும், கல்லூரிக்காலம் முற்றிலும் மாறுபட்டதாக அமைந்தது. "எனக்கு எதன் மீது உண்மையான ஆர்வம் இருக்கிறதோ, அதற்காக நான் எனது முழு உழைப்பையும் அர்ப்பணிப்பேன்; எனக்கு அந்த விஷயம் 'சினிமா'தான்," என்று, தன்னைத் தொடர்ந்து இயங்க வைக்கும் உந்துசக்தி குறித்துப் தொகுப்பாளர் ஜகனிடம் பகிர்ந்துகொண்டார்,


மேலும், திரையுலகில் தனது பயணம் ஒரு ஸ்பாட் பாயாக (spot boy) எவ்வாறு தொடங்கியது என்பதைப் பற்றி ஜெகனிடம் அவர் மனம் திறந்து பேசினார், அத்துடன் தான் வளரக் காரணமான சினிமாவுக்கு ஒரு நெகிழ்ச்சியான அஞ்சலியையும் செலுத்தினார். "என் தந்தை திரைப்படங்களை அவற்றின் சுவையை வைத்தே அடையாளம் காண்பார்," என்று ரவி மோகன் அன்போடு நினைவுகூர்ந்தார். ரவி மோகன் குறித்து இணையத்தில் எப்போதும் பலவிதமான கருத்துகள் பேசப்பட்டு வருகின்றன. அதிலிருந்து சில கமெண்டுகளுக்கு அவர் அளித்த பதில்கள் அனைவரையும் ஆச்சரியத்தில் வாயடைக்க வைத்தது என்றே கூறலாம். அதில் ஒரு கமெண்டுக்கு, "அவனை கொஞ்சம் இங்க வர சொல்லு'' என்று ரவி மோகன் கலகலப்பாக கூறினார்.


பின்னர் நிகழ்ச்சியின் ஸ்பைஸியான 'காரசாரம் சேலஞ்ச்' செக்மென்ட் வந்தது. அதில் ரவி மோகன் எந்தவித தயக்கமும் இல்லாமல் கலந்துகொண்டது மட்டுமல்லாமல், "எனக்கே கார சாப்பாடா?" என்று குறும்பாக கேட்ட விதம், உனக்கும் எனக்கும் திரைப்படத்தில் அவரது கதாபாத்திரத்தின் நினைவுகூறலாக அமைந்தது. ஆனால் அந்த எபிஸோட், ரவி மோகனால் மட்டுமே பதிலளிக்கக்கூடிய கேள்விகள் பலவற்றால் நிறைந்திருந்தது. 'தனி ஒருவன்' படத்தின் இரண்டாம் பாகத்தை (sequel) அவர் ஒருபோதும் உருவாக்காததற்கான ஒரே காரணம் என்ன? தன் படங்களில், இதில் ஏன் நடித்தோம் என்று அவர் வருந்தும் ஒரே படம் எது? மேலும், தான் ஒருபோதும் இணைந்து நடிக்கவே கூடாது என்று அவர் எண்ணும் ஒரே நடிகர் யார்? போன்ற சிக்கவைக்கும் பல கேள்விகளுக்கான பதில்களை அறிய, நீங்கள் அந்த அவசியம் இந்த எபிஸோடைப் பார்த்தே ஆக வேண்டும்.


இறுதியாக, மிகவும் சுவாரஸ்யமான ஒரு விஷயத்தைப் பகிர்ந்துகொண்டார்: எந்த ஒரு நடிகரின் நடிப்புத் திறன் அவருக்கு மகிழ்ச்சியையும், அதே சமயம் சற்றும் பொறாமையையும் ஏற்படுத்தும் என்ற கேள்விக்கு , ரவி மோகன் ஒரு கணம் கூடத் தயங்காமல் பதிலளித்தார். அந்த நடிகர் வேறு யாருமல்ல; அவருடைய மகனான ஆரவ் ரவிதான். திரையுலகைச் சேர்ந்த நண்பர்களில், அவர் முழுமையாக நம்பும் நண்பர் யார் என்ற கேள்வி எழுந்தபோது, அதற்கான பதிலும் அவரிடம் இருந்து மிக இயல்பாகவே வெளிவந்தது, அவர் வேறு யாருமல்ல, கார்த்திதான். "மேலும், என்னைப் பற்றியும் அவரும் இதே கருத்தைத்தான் கூறுவார் என்று நான் நம்புகிறேன்," என்று அவர் புன்னகையுடன் கூறினார்.


இரண்டு பதில்கள், அவை இரண்டும் அவர் மனதில் இருந்து வந்தவை, அப்படியே அவர் அந்த அறையில் இருந்த அனைவரின் இதயத்தையும் மீண்டும் ஒருமுறை உருக வைத்தார். தனது பிரபலமான ஹிப்-ஹாப் பாடலான 'மக்கமிஷி'யை ஒரு முழுமையான பரதநாட்டிய பெர்பாமென்ஸாக மாற்றி, பின்னர் தொகுப்பாளர் ஜெகனுக்கு அதே ஸ்டெப்களை பொறுமையாகக் கற்றுக் கொடுத்ததோடு, அந்த எபிஸோட் ஒரு இனிமையான தருணத்துடன் நிறைவடைந்தது. இது ரவி மோகனால் மட்டுமே சாத்தியம்.


உங்களுக்குப் பிடித்தமான பிரபலங்களான ரவி மோகன், மிர்ச்சி சிவா, பிரேம்ஜி, ஹரிஷ் கல்யாண், ஐஸ்வர்யா ராஜேஷ், டிஎஸ்பி ஆகியோரை SUN NXT-ல் பிரத்தியேகமாக ஒளிபரப்பாகும் 'ஜாலி ஓ ஜிம்கானா' எபிஸோட்களில் காணுங்கள். ஒவ்வொரு வியாழக்கிழமையும், SUN NXTஇல் மட்டும் இதன் புதிய எபிஸோட்கள் வெளியாகின்றன.


SUN NXT பற்றி...


SUN NXT என்பது நாடு முழுவதும் உள்ள பார்வையாளர்களின் விருப்பத்திற்குரிய பொழுதுபோக்கு தளவாகும். இது ஏழுக்கும் மேற்பட்ட மொழிகளில் நாலாயிரத்திற்கும் அதிகமான திரைப்படங்களையும், 44க்கும் மேற்பட்ட லைவ் டிவி சேனல்களையும் வழங்குகிறது. திரைப்படங்கள், தொலைக்காட்சித் தொடர்கள், லைவ் டிவி மற்றும் டிவிக்கு முன்பே பார்க்கும் வசதி கொண்ட நிகழ்ச்சிகள் என பல்வேறு வகையான உள்ளடக்கங்களைக் கொண்டுள்ள SUN NXT, உயர்தரமான தென்னிந்திய பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளின் தாயகமாக திகழ்கிறது.

*Peddi is an inspiring tale about rural empowerment and represents the True Indian Spirit on a grand canvas - Ram Charan at Peddi Delhi Press Conference*

 *இந்திய கிராமங்களின் ஆன்மாவை கொண்டாடும் படம் “பெத்தி” - ராம் சரண் !!*



இந்திய கிராமங்களின் திறமைகளையும், உண்மையான இந்திய ஆன்மாவையும் மிகப்பெரிய திரையில் கொண்டாடும் படம் தான் ‘பெத்தி’ - டெல்லி பத்திரிகையாளர் சந்திப்பில் ராம் சரண் பேச்சு


மெகா பவர் ஸ்டார் ராம் சரண் நடித்துள்ள கிராமத்து விளையாட்டு பின்னணியிலான பிரம்மாண்ட திரைப்படம் ‘பெத்தி’ நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. புச்சி பாபு சனா இயக்கத்தில், வெங்கட சதீஷ் கிலாரு மிகப்பெரிய பொருட்செலவில் தயாரித்துள்ள இப்படம் வரும் ஜூன் 4ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.


ஆஸ்கர் விருது பெற்ற இசையமைப்பாளர் ஏ. ஆர். ரஹ்மான் இசையமைத்த பாடல்கள் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளன. மேலும், சமீபத்தில் வெளியான டிரெய்லர், ஒரு கிராஸ் ஓவர் தடகள வீரரின் ஊக்கமூட்டும் மற்றும் உணர்ச்சிப்பூர்வமான பயணத்தை வலுவாக வெளிப்படுத்தி, படத்தின் மீதான எதிர்பார்ப்பை உச்சத்துக்கு கொண்டு சென்றுள்ளது.


இப்படத்தில் ஜான்வி கபூர் நாயகியாக நடித்துள்ளதுடன், கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார், திவ்யேந்து சர்மா, ஜகபதி பாபு மற்றும் போமன் இரானி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.


படத்தின் வெளியீட்டை முன்னிட்டு ‘பெத்தி’ படக்குழு நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ரசிகர்களை சந்தித்து வருகிறது. போபாலில் நடைபெற்ற மிகப்பெரிய விழாவிற்கு பிறகு, தற்போது டெல்லியில் பத்திரிகையாளர்களை சந்தித்து படத்தை பற்றி பகிர்ந்து கொண்டனர்.


நிகழ்ச்சியில் பேசிய போமன் இரானி, “இந்திய கிராமங்களில் மறைந்து கிடக்கும் உண்மையான திறமைகளை வெளிச்சத்திற்கு கொண்டு வரும் படம் தான் ‘பெத்தி’. இந்த படத்தை பார்த்த பிறகு ஒவ்வொரு இளைஞரும் ‘பெத்தி’ போல ஆக வேண்டும் என்ற ஊக்கத்தை பெறுவார்கள். இந்திய விளையாட்டுத் துறையில் மறைந்து கிடக்கும் திறமைகளுக்கு சரியான வாய்ப்புகள், பயிற்சி மற்றும் வழிகாட்டுதல் கிடைக்க வேண்டும் என்ற எண்ணத்தை இந்த படம் உருவாக்கும்,” என்றார். மேலும், இந்த படம் இந்திய சினிமா வரலாற்றில் இடம்பிடிக்கும் என்றும் கூறினார்.


திவ்யேந்து சர்மா பேசுகையில், “இவ்வளவு திறமையான கலைஞர்களுடன் ஒரே படத்தில் இணைந்து நடித்தது மகிழ்ச்சி அளிக்கிறது. ராம் சரண் உடன் பணியாற்றிய அனுபவம் மறக்க முடியாதது. ‘பெத்தி’ என்பது அடையாளத்திற்கான போராட்டத்தை சொல்லும் உயிர்ப்புடன் கூடிய ஒரு சர்வைவல் கதையாக இருக்கும்,” என்றார்.


தயாரிப்பாளர் வெங்கட சதீஷ் கிலாரு, “என் முதல் தயாரிப்பாக இப்படம் உருவாகுவது பெருமையாக உள்ளது. இந்திய கலாச்சார வேர்களை கொண்ட ஒரு உணர்ச்சிப்பூர்வமான மற்றும் அதேசமயம் விறுவிறுப்பான கதையாக ‘பெத்தி’ இருக்கும். குடும்பத்துடன் குழந்தைகளையும் திரையரங்கிற்கு அழைத்து வந்து இந்த படத்தை பார்க்க வேண்டும்,” என்று தெரிவித்தார்.


நாயகி ஜான்வி கபூர், டெல்லியின் வெப்பத்தை பற்றி நகைச்சுவையாக பேசிக்கொண்டே, தனது கதாபாத்திரம் இயக்குநர் புச்சி பாபு சனாவின் தனித்துவமான அணுகுமுறையால் ஈர்க்கப்பட்டதாக கூறினார். ராம் சரண் இன் அர்ப்பணிப்பு குறித்து பேசுகையில், “கேமரா ஆஃப் ஆனதும் அமைதியாக இருப்பார். ஆனால் ஷாட் ஆரம்பித்தவுடன் திரையே வெடிக்கும் அளவிற்கு ஆற்றலை வெளிப்படுத்துவார்,” என்று பாராட்டினார்.


மேலும், “இந்த படம் இந்தியாவின் புறக்கணிக்கப்பட்ட மக்களின் அடையாளப் போராட்டத்தை பேசும் ஒரு மாஸ் என்டர்டெய்னர். இந்த படம் உண்மையான உழைப்பு, அர்ப்பணிப்பு மற்றும் நல்ல நோக்கத்துடன் உருவாக்கப்பட்டுள்ளது,” என்றும் கூறினார்.


ராம் சரண் பேசுகையில், “கடந்த இரண்டரை ஆண்டுகளாக நாங்கள் இந்த படத்திற்காக உண்மையுடன் உழைத்துள்ளோம். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை திரையரங்கிற்கு அழைத்து வந்து இந்த படத்தை பார்க்க வேண்டும். இந்திய மண்ணின் வாசனையுடன் உருவாகும் கதைகளே உலகளவில் கொண்டாடப்படுகின்றன. ‘பெத்தி’ அப்படிப்பட்ட ஒரு கதை,” என்றார்.


மேலும், பிரதமர் நரேந்திர மோடி யை சந்தித்த அனுபவத்தையும் அவர் பகிர்ந்துகொண்டார். மேற்கு வங்கத்தை சேர்ந்த முகம்மது என்ற இளைஞர், தனது கிராமத்திலிருந்து மேலும் 80 பேரை இந்தியாவுக்காக விளையாட ஊக்குவித்த சம்பவத்தை பிரதமர் கூறியதாக தெரிவித்தார். “அப்படிப்பட்ட உண்மையான இந்திய ஆன்மாவையும், கிராமத்து மக்களின் உறுதியையும் ‘பெத்தி’ படம் கொண்டாடுகிறது,” என்றார்.


தனது மாறுபட்ட தோற்றங்கள் குறித்து பேசுகையில், “ஒவ்வொரு கதாபாத்திர மாற்றமும் சவாலானதே. குறிப்பாக மல்யுத்த வீரர் தோற்றம் மிகவும் கடினமாக இருந்தது. ஆனால் நான் கதையின் தேவையை மட்டுமே பின்பற்றினேன்,” என்றார்.


இறுதியாக, “உண்மையான இந்திய ஆன்மாவையும், போராட்ட மனப்பாங்கையும் கொண்ட ‘பெத்தி’ படத்தை உலகம் முழுவதும் ரசிகர்கள் திரையரங்குகளில் பார்த்து அனுபவிக்க வேண்டும்,” என்று ராம் சரண் அழைப்பு விடுத்தார்.


“பெத்தி” படம் வரும் ஜூன் 4ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் ரசிகர்களை மகிழ்விக்க வருகிறது


*Peddi is an inspiring tale about rural empowerment and represents the True Indian Spirit on a grand canvas - Ram Charan at Peddi Delhi Press Conference*


Mega Power Star Ram Charan is creating a huge wave of anticipation across Pan-India with his rural sports epic, Peddi. The movie, directed by Buchi Babu Sana and produced on a massive scale by Venkata Satish Kilaru, is set for a grand worldwide release on June 4th. Already, the movie’s songs composed by Oscar-winning composer AR Rahman have become huge chartbusters, while the trailer has pushed the buzz to sky-high levels by showcasing an immersive and inspiring journey of a crossover athlete. Janhvi Kapoor plays the leading lady, with Kannada superstar Shiva Rajkumar, Divyenndu Sharma, Jagapathi Babu, and Boman Irani in prominent roles.


The Peddi team has been travelling across the nation to further build excitement ahead of the release. After a hugely successful, record-breaking event in Bhopal that drew the attention of the national media towards Ram Charan’s craze in North India, the team interacted with the press in Delhi.


At the event, Boman Irani stated that Peddi is about the true talent found in the villages of India that often does not get opportunities to shine. He said every athlete would feel inspired to become like Peddi after watching the film and wished for the movie to become a grand success that sparks a movement in Indian sports, helping hidden talents receive proper platforms, guidance, and coaching to shine on the world stage. He added that the film would be etched in the history of Indian cinema.


Divyenndu Sharma echoed the same sentiment and said he was thrilled to share screen space with so many talented individuals in one film. He mentioned that his association with Ram Charan is memorable and that he would always cherish the memories of shooting for Peddi. He described the movie as a “survival tale of identity.”


Producer Venkata Satish Kilaru expressed that he is proud to be debuting with such a grand and culturally rooted film. He thanked the entire cast and crew for their fantastic work and cooperation. He described the movie as an emotional and highly entertaining story set in its own unique universe. Finally, he strongly insisted that audiences should take their children to watch the film, as it offers a great cinematic experience along with meaningful takeaways for families.


Leading lady Janhvi Kapoor joked about the heat in Delhi before explaining that she modelled her bold and “rowdy” character based on director Buchi Babu Sana’s unique attitude. She shared her amazement at working with Ram Charan, noting how he calmly conserved his energy off-camera only to deliver explosive energy during takes. She proudly described the movie as a mass entertainer that tells the story of overlooked Indians and their struggles for identity. She also shared a funny bonding moment with co-star Divyenndu Sharma during a turbulent flight and expressed her deep admiration for Boman Irani. She promised audiences that the film is inspiring and made with sincerity, hard work, commitment, and pure intentions.


Mega Power Star Ram Charan thanked the Delhi press for coming and supporting the team. He stated that they have worked sincerely over the past two and a half years to entertain and inspire audiences. He urged parents to bring their children to theatres to watch Peddi. He described the movie as a powerful and uplifting entertainer that brings the journeys of rooted individuals from Indian villages to the forefront. He noted that Indian cinema is celebrated for telling stories connected to the soil, and Peddi is one such story mounted on a grand canvas.


He also shared an anecdote about his meeting with Prime Minister Narendra Modi, revealing that he was thrilled to learn about Mohammad from West Bengal, who inspired 80 more athletes from his village to represent India. He wished for Peddi to become a grand success that would remain in the hearts of audiences for years to come. He dismissed the high praise for his efforts, stating that he simply followed the script’s demands, and described every transformation as challenging, with the wrestler role being the toughest. He concluded by inviting audiences across the globe to experience the True Indian Spirit and resilience in theatres.

பிரபல கேமராமேனும் தயாரிப்பாளருமான ரவியாதவ் பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாடிய "ரஞ்சன்" படக்குழு

 பிரபல கேமராமேனும் தயாரிப்பாளருமான ரவியாதவ் பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாடிய "ரஞ்சன்" படக்குழு.



இயக்குனர் தயாரிப்பாளர் நடிகர் தியாகராஜன் இயக்கத்தில் டாப் ஸ்டார் பிரஷாந்த் நடிப்பில் "ரஞ்சன்" படத்தின் படப்பிடிப்பு பரபரப்பாக நடைபெற்று வருகிறது.


இந்த படத்தில் சத்யராஜ், தேவயானி, ஆர்.கே.சுரேஷ், மோகன்ராம், ஆதிரா, மானஸ்வி, ஆதேஷ்பாலா, சந்தோஷ்பிரபாகர்,மோகன்லால் உட்பட பலர் நடிக்கிறார்கள்.


பிரபல தயாரிப்பாளர் கதிரேசன் மகன் ஹரியும், நடிகை தேவயானி மகள் பிரியங்காவும் இளம் ஜோடியாக அறிமுகம் ஆகிறார்கள்.


இளைஞர்களுக்கு போக்சோ சட்டத்தின் வீரியத்தை சொல்லும் விதமாக பரபரப்பாக கோர்ட் ஷூட்டிங் நடக்கும் போது கேமராமேன் ரவியாதவ் பிறந்த நாள் சர்ப்ரைஸ் நிகழ்வு நடைபெற்றது.


திடீரென செட்டுக்கு பெரிய கேக் வரவழைக்கப்பட்டு அனைத்து நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞ்ர்கள் முன்னிலையில் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. 


பரபரப்பாக நடைபெறும் இந்த படத்தில் சொல்லப்படும் கருத்து சமூகத்தில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Vishwanath & Sons Set For Grand Worldwide Release On August 14th

 *சூர்யாவின் ‘விஸ்வநாத் & சன்ஸ்’ ஆகஸ்ட் 14ஆம் தேதி உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியாகிறது !!*



சூர்யா மற்றும் வெங்கி அட்லூரி ( Venky Atluri) கூட்டணியில் உருவாகியுள்ள ‘விஸ்வநாத் & சன்ஸ்’ திரைப்படம் வரும் ஆகஸ்ட் 14ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாகிறது. குடும்ப உணர்வுகள், நகைச்சுவை மற்றும் மனதை வருடும் தருணங்கள் நிறைந்த முழுமையான ஃபேமிலி என்டர்டெய்னராக இப்படம் உருவாகியுள்ளது.


பிளாக்பஸ்டர் இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கியுள்ள இப்படத்தை சூர்யதேவர நாக வம்ஷீ மற்றும் சாயி சௌஜன்யா தயாரித்துள்ளனர். டீசர் மற்றும் டைட்டில் அறிவிப்பு வெளியான தருணத்திலிருந்தே ரசிகர்கள் மத்தியில் படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.


குறிப்பாக, சூர்யா ஒரு குழந்தையுடன் இடம்பெற்றிருந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள், நடிகர் சூர்யாவின் பழைய வசீகரமிக்க நடிப்பு பாணியை மீண்டும் நினைவூட்டியதுடன் குடும்ப ரசிகர்களிடையே உடனடி வரவேற்பைப் பெற்றது.


‘வாத்தி’, ‘லக்கி பாஸ்கர்’ போன்ற வெற்றி படங்களை தொடர்ந்து இயக்குநர் வெங்கி அட்லூரி, இந்தப் படத்தின் மூலம் குடும்ப உறவுகள், உணர்ச்சி மிக்க கதை சொல்லல் மற்றும் மனதை கவரும் தருணங்களுடன் ஒரு ஃபீல் குட் எண்டர்டெய்னரை வழங்க உள்ளார்.


இப்படத்தில் மமிதா பைஜு, ராதிகா சரத்குமார், ரவீனா டாண்டன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைக்க, நிமிஷ் ரவி ஒளிப்பதிவு செய்துள்ளார். நவீன் நூலி படத்தொகுப்பு பணிகளை கவனித்துள்ள நிலையில், பங்களன் தயாரிப்பு வடிவமைப்பாளராக பணியாற்றியுள்ளார்.


இந்த ஆண்டின் மிகவும் நேசிக்கப்படும் குடும்ப பொழுதுபோக்கு திரைப்படங்களில் ஒன்றாக ‘விஸ்வநாத் & சன்ஸ்’ உருவாகும் என எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.


தமிழ்நாட்டில் இப்படத்தை திங்க் ஸ்டூடியோஸ் நிறுவனம் வெளியிடுகிறது. இதன் மூலம் மாநிலம் முழுவதும் படத்திற்கு வலுவான திரையரங்கு வெளியீடு கிடைக்க உள்ளது.


சூர்யாவின் ‘விஸ்வநாத் & சன்ஸ்’ படத்தை ஆகஸ்ட் 14ஆம் தேதி திரையரங்குகளில் கொண்டாடலாம்.


*தொழில்நுட்பக் குழு:*


எழுத்து & இயக்கம் : வெங்கி அட்லூரி

தயாரிப்பாளர்கள் : சூர்யதேவர நாக வம்ஷீ & சாயி சௌஜன்யா

இசை : ஜி.வி. பிரகாஷ் குமார்

ஒளிப்பதிவு : நிமிஷ் ரவி

படத்தொகுப்பு : நவீன் நூலி

தயாரிப்பு வடிவமைப்பாளர் : பங்களன்

நிர்வாக தயாரிப்பாளர் : யலமஞ்சிலி கோபால கிருஷ்ணா (நானி)

சண்டை பயிற்சி : V. வெங்கட்

தயாரிப்பு நிறுவனங்கள் : சிதாரா எண்டர்டெயின்மெண்ட்ஸ் & ஃபார்ச்சூன் ஃபோர் சினிமாஸ்

வழங்குபவர் : ஸ்ரீகரா ஸ்டூடியோஸ்


*‘Vishwanath & Sons Set For Grand Worldwide Release On August 14th*


Suriya & Venky Atluri’s ‘Vishwanath & Sons’ Gears Up To Deliver a Perfect Family Entertainer This Independence Day Weekend.


Suriya’s much-awaited family drama Vishwanath & Sons is officially set for a grand worldwide theatrical release on August 14th. Directed by blockbuster filmmaker Venky Atluri and produced by Suryadevara Naga Vamsi & Sai Soujanya, the film is expected to offer audiences a wholesome entertainer packed with emotions, humour and heartwarming family moments.


Ever since the teaser & title announcement, the film has created tremendous excitement among audiences. The first look posters featuring Suriya alongside a child brought back the actor’s vintage charm and instantly connected with family audiences.


After delivering back-to-back successful films like Vaathi and Lucky Baskhar, director Venky Atluri once again promises a feel-good emotional entertainer with strong family values and memorable storytelling.


The film stars Mamitha Baiju, Radhika Sarathkumar, Raveena Tandon and others in key roles. Music is composed by G. V. Prakash Kumar, cinematography is by Nimish Ravi, editing by Navin Nooli and production design by Banglan.


The expectations are soaring high for Vishwanth & Sons to emerge as one of the most loved family entertainers of the year.


The film will be distributed in Tamil Nadu by Think Studios, ensuring a strong theatrical release across the state.


*Crew:*


Written and Directed by Venky Atluri

Producers: Suryadevara Naga Vamsi & Sai Soujanya

Music: G.V. Prakash Kumar

Director of Photography: Nimish Ravi

Editor: Navin Nooli

Production Designer: Banglan

Executive Producer: Yalamanchili Gopala Krishna (Nani)

Fight Master: VVenkat

Banners: Sithara Entertainments & Fortune Four Cinemas

Presenter: Srikara Studios

கேன்ஸ் திரைவிழாவில் மிரட்டிய “தாழ் திறவா” – திகில் கிளப்பும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியீடு*

 *கேன்ஸ் திரைவிழாவில் மிரட்டிய “தாழ் திறவா” – திகில் கிளப்பும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியீடு*



*அமானுஷ்ய மர்மங்களுடன் வரும் “தாழ் திறவா” – ரசிகர்களை ஈர்க்கும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள்!*


*வரவேற்பைக் குவிக்கும் “தாழ் திறவா” ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் !!*


*கேன்ஸ் திரைவிழாவில் கவனம் ஈர்த்த ஹாரர் திரில்லர் “தாழ் திறவா” பட டீசர் !!*


திகில் மற்றும் மர்மம் கலந்த கதைக்களத்தில் உருவாகி வரும் “தாழ் திறவா” திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன.


உலகளவில் திரை ரசிகர்களால் கொண்டாடப்படும் கேன்ஸ் திரைப்பட விழாவில், “தாழ் திறவா” படத்தின் டீசர் திரையிடப்பட்டு பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. Barman Pictures தயாரிப்பில், பரணி சேகரன் இயக்கத்தில், ஆதவ் கண்ணதாசன் மற்றும் வாணி போஜன் நடித்துள்ள இப்படம், மாறுபட்ட களத்தில் உருவாகும் ஹாரர் திரில்லராக அமைந்துள்ளது.


இப்படத்தின் டீசர் மே 19ஆம் தேதி கேன்ஸ் திரைப்பட விழாவின் இந்தியன் பவிலியனில் திரையிடப்பட்டு ரசிகர்களிடம் பாராட்டுகளை பெற்றுள்ளது. உலகளவில் மிக உயர்ந்த மதிப்பும் கவனமும் பெற்ற கேன்ஸ் திரைவிழாவில் ஒரு தமிழ்ப்படத்தின் டீசர் திரையிடப்பட்டு வரவேற்பைப் பெறுவது, தமிழ் சினிமாவிற்கே பெருமை சேர்க்கும் முக்கிய தருணமாக பார்க்கப்படுகிறது.


ஒரு கிராமத்தில் கண்டெடுக்கப்படும் பழமையான எழுத்துக்கள் மற்றும் அதன் பின்னணியில் மறைந்திருக்கும் மர்மமான ஆபத்துகளே இப்படத்தின் மையக் கதையாக அமைந்துள்ளது. தமிழில் அகழ்வாராய்ச்சியை மையமாகக் கொண்டு, அதனுடன் ஹாரர் மற்றும் அமானுஷ்ய அம்சங்களை இணைத்து உருவாகும் அரிய முயற்சியாக இப்படம் உருவாகியுள்ளது.


இன்று தமிழ் ரசிகர்களுக்காக இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளன.


வெளியான இரண்டு போஸ்டர்களிலும் திகில் நிறைந்த காட்சிகள் ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டியுள்ளன. முதல் போஸ்டரில், இருள் சூழ்ந்த அறையில் சுவரிலிருந்து நீளும் மர்மக் கைகள் வாணி போஜனை இழுத்துச் செல்ல முயல, அவரைக் காப்பாற்ற ஆதவ் கண்ணதாசன் பதட்டத்துடன் ஓடி வருவது போன்ற காட்சி இடம் பெற்றுள்ளது.


இரண்டாவது போஸ்டரில், பழமையான மாளிகை, மர்மம் நிறைந்த சூழல், அமானுஷ்ய சம்பவங்களை கண்டு அதிர்ச்சியடையும் குழந்தைகள் மற்றும் ஒரு ரகசிய கதவை திறக்க முயலும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன. பயத்துடனும் பதட்டத்துடனும் நிற்கும் கதாபாத்திரங்களின் தோற்றம், இப்படம் வித்தியாசமான ஹாரர் அனுபவத்தை தரப்போகிறது என்பதை உணர்த்துகிறது.


இப்படத்தில் ஆதவ் கண்ணதாசன், வாணி போஜன்ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளதுடன், சுரேஷ் மேனன், சுப்பு பஞ்சு, ஷ்யாம் பிரசாத் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். மேலும் குழந்தை நட்சத்திரங்களான லிஷா மற்றும் லலித் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் இடம்பெற்றுள்ளனர்.


படப்பிடிப்பு நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது இறுதிக்கட்ட பணிகள் பரபரப்பாக நடைபெற்று வருகின்றன. சர்வதேச அளவில் கவனம் பெற்றுள்ள இப்படத்தின் டீசர் மற்றும் இசை வெளியீடு விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகவுள்ளது.


தொழில்நுட்பக் குழு :


தயாரிப்பு - பார்மன் பிக்சர்ஸ்

இணை தயாரிப்பாளர் - விவேக் கே.ஆர்

கதை, திரைக்கதை, இயக்கம் - பரணி சேகரன்

இசை - ஓஷோ வெங்கட்

ஒளிப்பதிவு - சாலமன் போஸ் டி.எஸ் / ஜபெஸ் கே கணேஷ்

கலை இயக்கம் - K.A. ராகவ குமார்

எடிட்டிங் - மணிகண்டன் எஸ்

ஆடை வடிவமைப்பு - சுகிர்தா பி

உடை அலங்காரம் - கோபால்

மேக்கப் - வினோத் சுகுமாரன்

சண்டைக்காட்சிகள் - ரக்கர் ராம்

VFX - சோசோ ஸ்டுடியோ

VFX - மேற்பார்வை - வெங்கடேஷ்

SFX - சிங்க் சினிமா

DI - ஃபயர்ஃபாக்ஸ் ஸ்டுடியோஸ்

தயாரிப்பு மேற்பார்வை - சௌந்தரராஜன் / தமிழ்ச்செல்வன்

தயாரிப்பு நிர்வாகம் - முகேஷ் ஷர்மா

விளம்பர வடிவமைப்பு - நெக்ஸ்ட்ஜென் ஸ்டுடியோ

மக்கள் தொடர்பு - யுவராஜ்

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய “கான் சிட்டி” வரும் ஜூன் 26 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது !!*

 *பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய “கான் சிட்டி” வரும் ஜூன் 26 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது !!*



“கான் சிட்டி” திரைப்படத்தின் டீசர், முதல் மற்றும் இரண்டாம் சிங்கிள் பாடல்கள் ஏற்கனவே ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றிருந்த நிலையில், தற்போது வெளியாகியுள்ள ரிலீஸ் தேதி அறிவிப்பு ரசிகர்களை மேலும் உற்சாகப்படுத்தியுள்ளது. அர்ஜூன் தாஸ் நடிப்பில் உருவாகியுள்ள “கான் சிட்டி” திரைப்படம் வரும் ஜூன் 26 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதனை ஒரு அதிரடி போஸ்டருடன் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.


பவர் ஹவுஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் ஹரிஷ் துரைராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் அர்ஜூன் தாஸ், அன்னா பென், யோகி பாபு, வடிவுக்கரசி உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். பட அறிவிப்பின் ஆரம்பத்திலிருந்தே இப்படத்தின் வித்தியாசமான கதைக்களம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த நிலையில், வெளியான டீசரும் அதற்கான எதிர்பார்ப்பை அதிகரித்தது.


குறிப்பாக “ரா ரா ரங்கையா” முதல் சிங்கிள் பாடல் வெளியானவுடனே சமூக வலைதளங்களில் வைரலானது. அதைத்தொடர்ந்து வெளியாகிய “நான் தான் கிங்கு” பாடலும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. ஷான் ரோல்டன் இசையில் உருவான இந்தப் பாடல்கள், அதன் தனித்துவமான மேக்கிங் , ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருந்தது.


“கான் சிட்டி” படம் ஒரு மிடில் கிளாஸ் குடும்பத்தை மையமாக வைத்து பரபரப்பான கமர்ஷியல் எண்டர்டெயினராக உருவாகியுள்ளது. புதுமையான கதைக்களத்தில் உருவாகும் “கான் சிட்டி” படம், நகர வாழ்க்கையில் கடனில் சிக்கித் தவிக்கும் ஒரு மிடில் கிளாஸ் குடும்பத்தின் கதையை மையமாகக் கொண்டு, குடும்ப உணர்வுகள், நகைச்சுவை, பரபரப்பு ஆகிய அனைத்தும் கலந்த ஒரு முழுமையான ஃபேமிலி என்டர்டெயினராக உருவாகியுள்ளது.


மங்களூர், சென்னை, மும்பை உள்ளிட்ட பல பகுதிகளில் படமாக்கப்பட்டுள்ள இந்தப் படத்தின் டிஜிட்டல் உரிமையை Netflix நிறுவனம் கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.


டீசர், முதல் மற்றும் இரண்டாம் சிங்கிள் பாடல்கள் என தொடர்ந்து வெளியாகிய ஒவ்வொரு அப்டேட்டும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில், தற்போது வெளியான ஜூன் 26 ரிலீஸ் தேதி அறிவிப்பு “கான் சிட்டி” படத்தின் மீதான எதிர்பார்ப்பை இன்னும் அதிகரித்துள்ளது.


தொழில்நுட்ப குழு


எழுத்து, இயக்கம்: ஹரிஷ் துரைராஜ்

தயாரிப்பு: பவர் ஹவுஸ் பிக்சர்ஸ்

ஒளிப்பதிவு: அரவிந்த் விஸ்வநாதன்

எடிட்டிங்: அருள் மோசஸ்

இசை: ஷான் ரோல்டன்

கலை இயக்கம்: ராஜ் கமல்

உடை வடிவமைப்பு: நவா ராம்போ ராஜ்குமார்

ஸ்டண்ட்: ஆக்ஷன் சந்தோஷ்

மக்கள் தொடர்பு: யுவராஜ்

Kajal Aggarwal and Shreyas Talpade’s ‘The India Story’ Teaser To Be Out Soon; Film Set For July 24 Release*

 *காஜல் அகர்வால் மற்றும் ஷ்ரேயாஸ் தல்படே நடிக்கும் 'தி இந்தியா ஸ்டோரி (The India Story) படத்தின் டீசர் விரைவில் வெளியீடு : ஜூலை 24ஆம் தேதி திரைப்படம் வெளியாகிறது*



*MIG புரொடக்ஷன் & ஸ்டுடியோஸ் நிறுவனத்துடன் இணைந்து ஜீ ஸ்டுடியோஸ் இந்த திரைப்படத்தை வழங்குகிறது* .


அனைவரது கவனத்தையும் கவரும் வகையில் பிரத்யேக போஸ்டரை வெளியிட்டதை தொடர்ந்து, தற்போது 'தி இந்தியா ஸ்டோரி- The India Story ' படத்தின் தயாரிப்பாளர்கள்- அப்படத்தின் டீசர் விரைவில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். 

 

காஜல் அகர்வால், ஷ்ரேயாஸ் தல்படே ஆகியோர் முதன்மையான கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் இந்த சமூக மற்றும் தேசிய அளவிலான திரைப்படம்.. அதன் விறுவிறுப்பான கதைக் களம் மற்றும் ஈர்க்கக்கூடிய காட்சி அமைப்புகளுக்காக ஏற்கனவே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது.


MIG புரொடக்ஷன் & ஸ்டுடியோஸ் உடன் இணைந்து ஜீ ஸ்டுடியோஸ் வழங்கும் இந்த திரைப்படம் எதிர்வரும் ஜூலை மாதம் 24 ஆம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.


 சேட்டன் DK இயக்கத்தில், சாகர் B. ஷிண்டே கதை எழுதி தயாரித்துள்ள ‘தி இந்தியா ஸ்டோரி : ஸ்லோ பாய்சன் இன் ப்ராக்ரஸ்‘ (The India Story: Slow Poison in Progress) திரைப்படம், ரசாயன பொருட்களின் தவறான பயன்பாட்டினால் ஏற்படும் ஆபத்தான பக்க விளைவுகளை, குறிப்பாக பூச்சிக்கொல்லி மருந்து சார்ந்த விவசாயத்தில், அதன் தாக்கம் மற்றும் பொது சுகாதாரத்தின் மீதான விளைவுகளை பற்றி இப்படம் உரக்க பேசுகிறது. சமீபத்தில் வெளியான இப்படத்தின் போஸ்டர்- இப்படம் கையாளவிருக்கும் அதே தருணத்தில் மிகவும் முக்கியமானதும் மனதை உருக்கும் வகையில் அமைந்திருக்கும் விஷயங்களை பற்றிய ஒரு முன்னோட்டத்தை வழங்கியது.


ஒரு தனி நபரின் அல்லது ஒரு குடும்பத்தின் கதை என்ற எல்லையைக் கடந்து.. இப்படம் நாடு முழுவதும் உள்ள எண்ணற்ற மக்களின் வாழ்க்கையை பாதிக்கும் ஒரு மிகப்பெரிய நெருக்கடியை எதிரொலிக்கிறது. தொழில் துறை சார்ந்த அலட்சியத்தால் ஏற்படும் மறைமுகமான ஆபத்துகளையும்.. அது தொடர்பான விழிப்புணர்வு மற்றும் பொறுப்புணர்விற்கான அவசர தேவையையும்... இப்படம் முன்னிலை படுத்த முயற்சிக்கிறது.


தி இந்தியா ஸ்டோரி (The India Story) படத்தின் மூலம் விவரிக்கப்படும் அதி தீவிரமான உலகத்தை.. ரசிகர்கள் மேலும் அழுத்தமாக புரிந்து கொள்ளும் வகையில் டீசர் இருக்கும் என்றும், இது இப்படத்தின் முக்கியத்துவம் வாய்ந்த கதைக்களம் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரிக்கும் என்றும் தயாரிப்பாளர்கள் சூசகமாக தெரிவித்துள்ளனர். காஜல் அகர்வால் மற்றும் ஷ்ரேயாஸ் தல்படே ஆகியோர் முதன் முறையாக திரையில் இணைந்து நடித்துள்ளனர். இவர்கள் இருவரும் தங்களுடைய அழுத்தமான நடிப்பின் மூலம் கதைக்கு உணர்வு பூர்வமான ஆழத்தையும், தீவிரத்தையும் ரசிகர்களுக்கு கடத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


சுமித் பாகடே -அனிதா ஜாதவ்- விநாயக் சைதானி- கல்பேஷ் ஷா - தேவ்யானி கொராடே மற்றும் பிரேம் ஜோஷி ஆகியோர் இப்படத்திற்கு இணை தயாரிப்பாளர்களாக பங்களிப்பு செய்துள்ளனர். நிஷாந்த் பக்வத் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு மங்கேஷ் தாக்டே இசையமைத்திருக்கிறார். ஆஷிஷ் மாத்ரே படத்தொகுப்பு பணிகளையும், ஷகீல் அஜாமி பாடலாசிரியராகவும், அன்மோல் பாவே ஒலி வடிவமைப்பாளராகவும் பணியாற்றி இருக்கிறார்கள். மேலும் இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது. இதனை ஜீ ஸ்டுடியோஸ் உலக அளவில் வெளியிடுகிறது


*Kajal Aggarwal and Shreyas Talpade’s ‘The India Story’ Teaser To Be Out Soon; Film Set For July 24 Release*


*Presented by Zee Studios in association with MIG Production & Studios*


After unveiling an intense and thought-provoking poster, the makers of 'The India Story' have announced that the teaser of the film will be out soon. Starring Kajal Aggarwal and Shreyas Talpade in lead roles, the socio-national drama has already started creating buzz for its gripping theme and striking visuals. Presented by Zee Studios in association with MIG Production & Studios, the film is scheduled to release in cinemas on July 24, 2026.


Directed by Chettan DK and written and produced by Sagar B Shinde, The India Story: Slow Poison in Progress explores the alarming consequences of chemical misuse, particularly in pesticide farming and its impact on public health. The recently released poster offers a glimpse into the disturbing yet important subject that the film aims to address.


Moving beyond the story of an individual or a family, the narrative reflects a much larger crisis affecting countless lives across the country. The film intends to highlight the hidden dangers of industrial negligence and the urgent need for awareness and accountability.


The makers have hinted that the teaser will offer audiences a deeper look into the hard-hitting world of The India Story, building anticipation around the film’s socially relevant premise. Kajal Aggarwal and Shreyas Talpade, coming together on screen for the first time, are expected to bring emotional depth and intensity to the narrative with their impactful performances.


Backed by co-producers Sumit Bagade, Anita Jadhav, Vinayak Saidani, Kalpesh Shah, Devyani Khorate, and Prem Joshi, and further elevated by the work of DOP Nishant Bhagwat, music composer Mangesh Dhakde, editor Ashish Mhatre, lyricist Shakeel Azami, and sound designer Anmol Bhave, The film is all set to release in Hindi, Telugu and Tamil language.A Zee Studios Worldwide Release

மெகா ஸ்டார்' சிரஞ்சீவி நடிக்கும் #Chiru158 படத்தின் படப்பிடிப்பு நாளை தொடங்குகிறது*

 *மெகா ஸ்டார்' சிரஞ்சீவி நடிக்கும் #Chiru158 படத்தின் படப்பிடிப்பு நாளை தொடங்குகிறது*



'மெகா ஸ்டார்' சிரஞ்சீவி - இயக்குநர் பாபி கொல்லி - கே வி என் புரொடக்ஷன்ஸ்- கூட்டணியில் தயாராகும்' #ChiruBobby2- #Chiru158' திரைப்படத்தின் பிரம்மாண்டமான தொடக்க விழாவில் 'பவர் ஸ்டார்' பவன் கல்யாண் மற்றும் நாகபாபு ஆகியோர் கலந்து கொண்டனர். இப்படத்தின் படப்பிடிப்பு நாளை முதல் தொடங்குகிறது


திரையுலகில் சில கூட்டணிகள் உடனடியாக பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் 'மெகா ஸ்டார்' சிரஞ்சீவியும் , வெற்றிகரமான திரைப்பட இயக்குநர் பாபி கொல்லியும் மீண்டும் கூட்டணி அமைத்திருப்பது.. ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தும் முக்கிய நிகழ்வுகளில் ஒன்று என்பதில் ஐயமில்லை. இவர்களின் கூட்டணியில் உருவான 'வால்டர் வீரய்யா' திரைப்படம்- சிரஞ்சீவி அவரது உச்சகட்டமான 'மாஸ்' அவதாரத்தில் வெளிப்படுத்தி, ஒரு மிகப்பெரிய பிளாக் பஸ்டர் ஹிட் வெற்றி படமாக அமைந்தது. தற்போது இந்த ஜோடி மற்றொரு பிரம்மாண்டமான படத்திற்காக மீண்டும் இணைந்துள்ளனர்.


#ChiruBobby2 / #Chiru158 என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இந்தத் திரைப்படத்தை கே வி என் புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில் வெங்கட் கே. நாராயணா தயாரிக்கிறார். தமிழ், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் பிரம்மாண்டமான பட்ஜெட் படங்களை தயாரித்து வழங்கிய பிறகு கே வி என் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தெலுங்கில் தயாரிக்கும் முதல் திரைப்படம் இதுவாகும்.


இந்த படத்தைப் பற்றிய தொடர்ச்சியான அறிவிப்புகள் மூலம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய நிலையில்.. இன்று அப்படத்தின் தொடக்க விழா பிரம்மாண்டமான பூஜையுடன் ஹைதராபாத்தில் நடைபெற்றது. இதில் 'பவர் ஸ்டார்' பவன் கல்யாண்- நாக பாபு ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு சிறப்பித்தனர். இதன் காரணமாக இந்த விழா 'மெகா' நிகழ்வாக மாறியது. இந்த மூன்று மெகா நட்சத்திரங்களும் ஒரே மேடையில் தோற்றமளித்தது ... ரசிகர்களுக்கு ஒரு கண் கொள்ளா காட்சியாக அமைந்தது.


பவன் கல்யாண் 'கிளாப் போர்டு' - ( Clap Board) அடித்து, படப்பிடிப்பை தொடங்கி வைத்தார். சுஸ்மிதா கொணிதெல கேமராவை இயக்கி வைத்தார். முதல் காட்சியை இயக்கும் கௌரவத்தை வி வி விநாயக் ஏற்றார். பி. கோபால் - கோதண்டராமி ரெட்டி மற்றும் நாகபாபு ஆகியோர் இப்படத்தின் திரைக்கதையை தயாரிப்பு குழுவினரிடம் வழங்கினர். இவ்விழாவில் திரையுலகை சார்ந்த பல முக்கிய இயக்குநர்களும் , தயாரிப்பாளர்களும் கலந்து கொண்டு படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தனர். கே வி என் புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தை சார்ந்த லோகித் மற்றும் அவரது குழுவினரும் இவ்விழாவில் பங்கேற்றனர்.


வெகுஜன மக்களின் ரசனையை மிகத்துல்லியமாக புரிந்து கொண்ட இயக்குநர் பாபி கொல்லி - இம்முறை இன்னும் பிரம்மாண்டமான ஒரு கதையை உருவாக்கியுள்ளார். இது மிகப்பெரிய வீச்சையும்.. தீவிரத்தையும்.. கண் கவர் காட்சிகளையும் வழங்கும் என உறுதி அளிக்கிறது. பல ஆண்டுகளாக எண்ணற்ற மறக்க முடியாத கதாபாத்திரங்களில் நடித்து புகழ்பெற்ற 'மெகா ஸ்டார்' சிரஞ்சீவி - இத்திரைப்படத்தில் தனது கதாபாத்திரத்தில் தீவிரத் தன்மையுடன் தோன்ற உள்ளார். இதற்காக அவர் ஜிம்மில் உடற்பயிற்சி செய்யும் வீடியோ ஒன்று அண்மையில் வெளியானது. இதில் அவரது உடல் தோற்றத்தில் ஏற்பட்டுள்ள மாற்றத்தையும் வெளிப்படுத்தியது. அவரது இந்த முயற்சி.. இந்த திரைப்படத்திற்காக அவர் எந்த அளவு அர்ப்பணிப்புடன் உழைத்து வருகிறார் என்பதை அனைவருக்கும் உணர்த்துகிறது.


இந்த திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க.. மலையாள நடிகை அனஸ்வரா ராஜன் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்.


#ChiruBobby2- திரைப்படத்தில் மிகச்சிறந்த தொழில்நுட்ப கலைஞர்களும் இணைந்துள்ளனர். விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவு செய்ய, எஸ். தமன் இசையமைக்கிறார். அவினாஷ் கொல்லா தயாரிப்பு வடிவமைப்பாளராகவும், ஆண்டனி ரூபன் பட தொகுப்பாளராகவும் பொறுப்பேற்றிருக்கிறார்கள். திரைக்கதையை கோனா வெங்கட் மற்றும் கே. சக்கரவர்த்தி ரெட்டி எழுதியுள்ளனர். கூடுதல் திரைக்கதையை எழுத்தாளர்களான ஹரி மோகன கிருஷ்ணா மற்றும் வினீத் பொட்லூரி ஆகியோர் எழுதியுள்ளனர். பானு- நந்து ஆகியோர் நகைச்சுவை பகுதிக்கான உரையாடல்களை எழுதியுள்ளனர்.


இப்படத்தின் வழக்கமான படப்பிடிப்பு நாளை முதல் ஹைதராபாத்தில் தொடங்குகிறது.


நடிகர்கள் : 'மெகா ஸ்டார்' சிரஞ்சீவி , அனஸ்வரா ராஜன்


தொழில்நுட்பக் குழு :


எழுத்து& இயக்கம் : பாபி கொல்லி


தயாரிப்பாளர் : வெங்கட் கே. நாராயணா


தயாரிப்பு நிறுவனம் : கே வி என் புரொடக்ஷன்ஸ்


இசை : எஸ். தமன்


திரைக்கதை : கோனா வெங்கட் & கே. சக்கரவர்த்தி ரெட்டி


கூடுதல் திரைக்கதை : ஹரி மோகன கிருஷ்ணா & வினீத் பொட்லூரி


ஒளிப்பதிவு : விஜய் கார்த்திக் கண்ணன்

 

படத்தொகுப்பு : ஆண்டனி ரூபன்


தயாரிப்பு வடிவமைப்பு : அவினாஷ் கொல்லா

 

VFX மேற்பார்வையாளர் : யுகாந்தர் .டி


வசனங்கள் - பானு & நந்து

 

நிர்வாக தயாரிப்பாளர் : சரண்யா பொட்லா


மக்கள் தொடர்பு : யுவராஜ்


மார்க்கெட்டிங் : ஹேஷ்டேக் மீடியா


*A Mega Launch In The Mega Presence Of Power Star Pawan Kalyan & Nagababu For Megastar Chiranjeevi, Most Successful Director Bobby Kolli, Leading Production House KVN Productions’ #ChiruBobby2 / #Chiru158, Regular Shoot Commences Tomorrow*


Some collaborations create instant excitement, and the reunion of Megastar Chiranjeevi with successful filmmaker Bobby Kolli is undoubtedly one of them. Their first outing, Waltair Veerayya, was a sensational blockbuster that showcased Chiranjeevi in peak mass form. Now, the duo is back with another massive project- #ChiruBobby2 / #Chiru158, to be mounted on a prestigious manner by producer Venkat K Narayana under the KVN Productions banner. The film also marks KVN Productions’ maiden Telugu venture after delivering several big-scale projects in Kannada, Tamil, and Hindi.


After back-to-back announcements that fuelled tremendous buzz, the film has been officially launched today with a grand pooja ceremony. The event turned truly mega with the presence of Power Star Pawan Kalyan and Nagababu, who graced the occasion as chief guests. It was a visual delight for fans to witness the mega trio sharing the stage. Pawan Kalyan sounded the clapboard, while Sushmita Konidela switched on the camera. VV Vinayak has done the honours of directing the first shot. B Gopal, Kodandarami Reddy, and Nagababu handed over the script to the makers. The event also saw the presence of several prominent directors and producers. Lohith from KVN Productions, along with the team, also attended the event.


Director Bobby Kolli, who understands the pulse of the masses like few others, crafted an even bigger story this time, promising scale, intensity, and spectacle. Chiranjeevi, known for countless iconic characters over decades, will be seen in one of his most intense roles yet. His recent gym session video, showcasing his remarkable fitness transformation, already hints at the dedication he is pouring into the film.


Malayalam actress Anaswara Rajan has been finalized for a crucial role in the film.


#ChiruBobby2 boasts a powerhouse technical lineup. The in-form composer S Thaman is scoring the music, while acclaimed cinematographer Vijay Karthik Kannan is crafting the film’s rich visual palette. Production design is helmed by Avinash Kolla, with editing by Antony Ruben. The screenplay is penned by Kona Venkat and K Chakravarthy Reddy, supported by additional screenplay writers Hari Mohana Krishna and Vineeth Potluri. The successful duo Bhanu–Nandu, known for their hilarious writing, take charge of the dialogues.


The regular shoot of the movie commences tomorrow in Hyderabad.


Cast: Megastar Chiranjeevi, Anaswara Rajan


Technical Crew:

Writer, Director: Bobby Kolli

Producer: Venkat K Narayana

Banner: KVN Productions

Music: Thaman S

Screenplay Writers: Kona Venkat, K Chakravarthy Reddy

Additional Screenplay Writers: Hari Mohana Krishna, Vineeth Potluri

DOP: Vijay Kartik Kannan

Editor: Antony Ruben

Production Design: Avinash Kolla

VFX Supervisor: Yugandhar T

Dialogues: Bhanu-Nandu

Chief Co-Directors: Bellamkonda Sathyam, Poosala Radhakrishna

Co-Director: V Kranthi Chakravarthi

Executive Producer: Saranya Potla

PRO: Yuvraaj

Marketing: Haashtag Media