-

Loading latest news...

அன்பில் அவன்’ படத்தின் ‘ஆசை வரமே’ ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியானது

 *‘அன்பில் அவன்’ படத்தின் ‘ஆசை வரமே’ ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியானது !! –*



*காதல் உணர்வை வருடும் அழகான மெலடி ‘அன்பில் அவன்’ படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ‘ஆசை வரமே’ !*


முன்னணி இளம் நடிகர் அசோக்செல்வன் நடிப்பில், ஆர். கார்த்திகேயன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘அன்பில் அவன்’ திரைப்படத்தின் முதல் பாடலான “ஆசை வரமே” வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.


அழகான காதல் கதையாக உருவாகி வரும் இப்படத்திற்காக இசையமைப்பாளர் கோவிந்த் வஸந்தா இசையில் உருவாகியுள்ள “ஆசை வரமே” பாடலை சின்மயி மற்றும் கோவிந்த் வஸந்தா இணைந்து பாடியுள்ளனர். பாடலாசிரியர் மெட்ராஷீ இப்பாடலுக்கான வரிகளை எழுதியுள்ளார்.


“நேர நதி தீரும் வரை, நீல அலை ஓயும் வரை” என தொடங்கும் இப்பாடல், காதலின் ஆழமான உணர்வுகளை மென்மையான இசையுடன் வெளிப்படுத்துகிறது.


இளம் காதலர்களின் அன்பு, நெருக்கம், ஊடல், செல்லச் சண்டைகள் என அவர்களின் காதல் உலகில் பயணிக்கும் உணர்வை பாடல் அழகாகக் கடத்துகிறது. குறிப்பாக கோவிந்த் வஸந்தாவின் மெலடி இசையும், சின்மயி மற்றும் கோவிந்த் வஸந்தாவின் குரல்களும் பாடலுக்கு கூடுதல் அழகை சேர்த்துள்ளன. காதலின் இனிமையான தருணங்களை நினைவுபடுத்தும் வகையில் உருவாகியுள்ள இந்த மெலடி, பாடல் வெளியானது முதலே ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.


‘அன்பில் அவன்’ திரைப்படத்தில் அசோக் செல்வன், ப்ரீத்தி முகுந்தன், சபு மோன், அப்துல் சமத், கதிர் பாலு, மஹா டெல்லி கணேஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.


இப்படத்தின் கதையை போர்த்தொழில் படப்புகழ் இயக்குநர் விக்னேஷ் ராஜா எழுதியுள்ளார். கௌதம் ராஜேந்திரன் ஒளிப்பதிவை மேற்கொள்ள, கோவிந்த் வஸந்தா இசையமைக்கிறார். படத்தொகுப்புப் பணிகளை ஆர்.கே. செல்வா கவனிக்கிறார். மணிகண்டன் ஸ்ரீனிவாசன் கலை இயக்கத்தை மேற்கொண்டுள்ளார்.


பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய அழகான காதல் கதையாக உருவாகியுள்ள இப்படத்தை ஐங்கரன் இன்டர்நேஷனல் மற்றும் ஹேப்பி ஹை பிக்சர்ஸ் நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் கே. கருணா மூர்த்தி, அசோக் செல்வன், அபிநயா செல்வம் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர்.


‘அன்பில் அவன்’ திரைப்படத்தை வரும் செப்டம்பர் மாதம் திரையரங்குகளில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.


தற்போது “ஆசை வரமே” பாடலுக்கு கிடைத்து வரும் வரவேற்பு, ‘அன்பில் அவன்’ திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகரித்துள்ளது. காதல், இசை மற்றும் இளமை உணர்வுகளை மையமாகக் கொண்ட இப்படம் ரசிகர்களுக்கு ஒரு அழகான காதல் அனுபவத்தை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


https://www.youtube.com/watch?v=xwUz3tSlMZ4

விஸ்வநாத் அண்ட் சன்ஸ் (Vishwanath And Sons) — திரை விமர்சனம்

சுருக்கம்: சூர்யா - மமிதா பைஜுவின் அட்டகாசமான கெமிஸ்ட்ரி மற்றும் மனதைத் தொடும் குடும்ப உணர்வுகளோடு வந்திருக்கும் ஒரு அழகான ஃபீல்-குட் (Feel-good) குடும்பத் திரைப்படம்!

கதைக்களம்:

2005-ல் 'கஜினி' சஞ்சய் ராமசாமியாக வசீகரித்த சூர்யா, இப்போது 2026-ல் சஞ்சய் விஸ்வநாத் ஆக மீண்டும் ஒரு ஸ்டைலான பிசினஸ் மேக்னட்டாக என்ட்ரி கொடுத்திருக்கிறார். 40 வயதிலும் முரட்டு சிங்கிளாக, துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் ஒலிம்பிக் பதக்கம் வென்ற ஒரு ஸ்போர்ட்ஸ்மேனாகவும் கலக்குகிறார்.

அம்மா நிர்மலா தேவி (ராதிகா சரத்குமார்) இவருக்குத் திருமணம் செய்து வைக்கத் தீவிரமாக முயல்கிறார். ஒரு கட்டத்தில் தாயின் உடல்நிலை காரணமாக, ஒரு வாரிசை உருவாக்க நினைக்கும் சஞ்சய், ஒரு வருடத்திற்குப் பிறகு ‘அபே’ என்ற குழந்தையுடன் சென்னை வருகிறார். அந்தக் குழந்தைக்கு உடல்நிலை சரியில்லாதபோது கதைக்குள் நுழைகிறார் 22 வயதான மேடி (மமிதா பைஜு). சஞ்சய் ஏன் திருமணத்தை வெறுக்கிறார்? அஞ்சலி (ரவீனா டாண்டன்) யார்? சஞ்சய் - மேடி இடையேயான அந்த வித்தியாசமான காதல் என்ன ஆகிறது என்பதே படத்தின் களம்.

படத்தின் ப்ளஸ் பாயிண்ட்ஸ் (Highlights):

  • சூர்யாவின் எவர்-கிரீன் நடிப்பு: சஞ்சய் கதாபாத்திரத்திற்கு சூர்யா அத்தனை கச்சிதமாகப் பொருந்தியிருக்கிறார். ஒரு பிசினஸ்மேன், பாசமான மகன், பொறுப்பான தந்தை என எல்லா பரிமாணங்களிலும் எஃபர்ட்லெஸ்ஸாக (effortless) ஸ்கோர் செய்கிறார். காமெடி டைமிங்கிலும் சூர்யாவின் முதிர்ச்சியான நடிப்பு அப்ளாஸ் அள்ளுகிறது.

  • மமிதா பைஜுவின் துள்ளலான எனர்ஜி: ‘மேடி’ கதாபாத்திரத்தில் மமிதா செம்ம க்யூட்! தன்னம்பிக்கை, காமெடி, எமோஷன் என அனைத்தையும் மிக இயல்பாக வெளிப்படுத்தி தியேட்டரைக் கவர்கிறார். சூர்யாவுக்கும் இவருக்குமான ஆன்-ஸ்கிரீன் கெமிஸ்ட்ரி ரொம்பவே ஃப்ரெஷ்ஷாக ஒர்க் ஆகியிருக்கிறது.

  • கலகலப்பான முதல் பாதி: இயக்குநர் வெங்கி அட்லூரி வழக்கமான குடும்பக் கதையாக இல்லாமல், ஒரு வித்தியாசமான லவ் டிராக்கை சுவாரஸ்யமாக நகர்த்தியுள்ளார். முதல் பாதியில் வரும் காமெடி, அம்மா-மகன் கலாட்டா மற்றும் குழந்தையின் எண்ட்ரி என படம் படு ஸ்பீடாகவும் கலகலப்பாகவும் போகிறது.

  • அனுபவ நடிப்பில் ராதிகா & ரவீனா: ராதிகா சரத்குமார் வழக்கம் போல தன் இயல்பான நடிப்பால் அம்மா கேரக்டருக்கு உயிர் கொடுத்துள்ளார். ரவீனா டாண்டனின் போர்ஷன் படத்திற்கு கூடுதல் பலம்.

  • சமூகக் கருத்துகள் & எமோஷன்ஸ்: பெற்றோரை மதிப்பது, விவசாயத்தின் முக்கியத்துவம், பணம் மட்டுமே வாழ்க்கை இல்லை போன்ற நல்ல விஷயங்களை உணர்வுபூர்வமாகப் பேசியிருப்பது படத்திற்கு கூடுதல் அழகு சேர்க்கிறது.

பாசிட்டிவ் பார்வை:

இரண்டாம் பாதியில் எமோஷனல் காட்சிகள் சற்று நீளமாகப் போனாலும், குடும்ப உறவுகளின் மேன்மையையும், பாசத்தையும் நேர்மையாகப் பேசிய விதத்தில் இயக்குநர் வெங்கி அட்லூரி கைதட்டல் பெறுகிறார்.

இறுதித் தீர்ப்பு:

'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' — குடும்பத்தோடு தியேட்டருக்குப் போய் ஜாலியாக சிரித்து, எமோஷனலாகக் கனெக்ட் ஆகிப் பார்க்கக்கூடிய ஒரு தரமான, நேர்த்தியான ஃபீல்-குட் பேமிலி என்டர்டெய்னர்! மிஸ் பண்ணாம பாருங்க!

பியார் பிரேமா கல்யாணம்’ டிரெய்லரை வெளியிட்ட Netflix – வித்தியாசமான ட்விஸ்டுடன் வரும் முழுமையான குடும்ப பொழுதுபோக்கு திரைப்படம்!

 *‘பியார் பிரேமா கல்யாணம்’ டிரெய்லரை வெளியிட்ட Netflix – வித்தியாசமான ட்விஸ்டுடன் வரும் முழுமையான குடும்ப பொழுதுபோக்கு திரைப்படம்!*



மாப்பிள்ளை மணமகள் வீட்டுக்கு வருகிறார்… காத்திருக்கும் மிகப்பெரிய ட்விஸ்ட்!

திருமணத்துக்குப் பிறகு மணமகள் புகுந்த வீட்டுக்குச் செல்வதுதான் வழக்கம். ஆனால், மணமகளுக்குப் பதிலாக மாப்பிள்ளை தனது பெட்டிகளை எடுத்துக்கொண்டு மணமகள் வீட்டுக்குச் சென்றால் என்ன ஆகும்? இந்த வித்தியாசமான கதைக்களத்துடன் உருவாகியுள்ள ‘பியார் பிரேமா கல்யாணம்’ திரைப்படத்தின் டிரெய்லரை Netflix இன்று வெளியிட்டுள்ளது.


இயக்குநர் இளன் இயக்கி, முதன்முறையாக கதாநாயகனாகவும் அறிமுகமாகும் இப்படம், வரும் ஆகஸ்ட் 21-ம் தேதி Netflix-ல் வெளியாகிறது.


டிரெய்லரில், பவி கதாபாத்திரத்தில் சான்வி மேக்னா  நடித்துள்ளார். தன்னம்பிக்கையும் தனித்துவமான சிந்தனையும் கொண்ட பவி, தான் வளர்ந்த வீட்டை விட்டு வெளியேற விரும்பாத ஒரு இன்ஃப்ளூயன்சர்.


இதனால், திருமணத்திற்குப் பிறகு அவரது கணவரான இளன், பவியின் வீட்டிற்கே குடியேறுகிறார். அங்கிருந்து தொடங்குகிறது ஒரு வித்தியாசமான குடும்ப வாழ்க்கை.


புதிய வீட்டில் முதல் சந்திப்பு முதல், குடும்பத்தினருடனான உரசல்கள், எதிர்பாராத சம்பவங்கள், கலகலப்பான தருணங்கள் என ஒவ்வொரு நாளும் புதிய அனுபவமாக மாறுகிறது.


“எப்போதுமே மணமகள்தான் வீட்டை விட்டுச் செல்ல வேண்டும் என்று யார் சொன்னது?” என்ற கேள்வியை மையமாக வைத்து, திருமணம் மற்றும் குடும்ப உறவுகள் குறித்த வழக்கமான எதிர்பார்ப்புகளை இப்படம் சுவாரஸ்யமாக மாற்றிப் பார்க்கிறது.


காதல், நகைச்சுவை, குடும்ப உணர்வுகள் என அனைத்தையும் கலந்து, ஒவ்வொருவருக்கும் பொருத்தமான வாழ்க்கையைத் தேர்ந்தெடுப்பதே முக்கியம் என்பதைச் சொல்லும் வகையில் ‘பியார் பிரேமா கல்யாணம்’ உருவாகியுள்ளது.


இளன் மற்றும் சான்வி மேகனாவுடன் ராதிகா சரத்குமார், யோகி பாபு, எம்.எஸ். பாஸ்கர், கீதா கைலாசம், இளங்கோ குமரவேல், செந்தில், மாறன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.


குடும்பக் காட்சிகளுக்கு கூடுதல் வலு சேர்க்கும் வகையில் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள பாடல்கள் இடம்பெற்றுள்ளன.


இயக்குநரும் கதாநாயகனுமான இளன் கூறுகையில்..,

 “‘பியார் பிரேமா கல்யாணம்’ மூலம் அனைவருக்கும் பரிச்சயமான ஒரு விஷயத்தை, அதே நேரத்தில் புதுமையான கோணத்தில் சொல்ல விரும்பினோம். திருமணம் குறித்த நீண்டகால எதிர்பார்ப்புகளுக்கு சவால் விடுக்கும் ஒரு உறவை இந்த டிரெய்லர் அறிமுகப்படுத்துகிறது.


குடும்பத்தின் தனித்துவத்தையும், அதில் இருக்கும் அன்பு, சிரிப்பு, ஒற்றுமை ஆகியவற்றையும் கொண்டாடும் கதையாக இது இருக்கும். எனது நடிப்பு அறிமுகத்தை எனக்கு மிகவும் நெருக்கமான ஒரு கதையின் மூலம் தொடங்குவது மிகவும் சிறப்பான அனுபவமாக இருந்தது. உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் இந்தப் படத்தை Netflix மூலம் ரசிப்பதற்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்” என்றார்.



பவி கதாபாத்திரத்தில் நடித்துள்ள சான்வி மேக்னா கூறுகையில்..,  

“பவி தன்னம்பிக்கையானவள், சுதந்திரமானவள். தனக்கென ஒரு தனித்துவமான அடையாளத்துடன் இருப்பவள். அதே நேரத்தில் தான் நேசிக்கும் மனிதர்களை ஒருபோதும் விட்டுக்கொடுக்காதவள்.


தனக்கு என்ன வேண்டும் என்பதில் அவள் தெளிவாக இருக்கிறாள். அதுதான் அந்தக் கதாபாத்திரம் என்னை ஈர்த்ததற்கான முக்கிய காரணம். டிரெய்லரில் பவியின் குணத்தை அழகாக வெளிப்படுத்தியிருக்கிறார்கள். காதலும், வாழ்க்கைத்துணை உறவும் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு புதிய கோணத்தை பவி காட்டுவதை ரசிகர்கள் ரசிப்பார்கள் என்று நம்புகிறேன்” என்றார்.



நடிகை ராதிகா சரத்குமார் கூறுகையில்.., “குடும்ப உறவுகளில் ஏற்பட்டு வரும் மாற்றங்களை எந்தவிதமான அழுத்தமும் இல்லாமல், நகைச்சுவையுடன் இந்தப் படம் பேசுவது எனக்கு மிகவும் பிடித்திருந்தது. ஒவ்வொரு தலைமுறையும் திருமணத்தை வெவ்வேறு விதமாகப் பார்க்கிறது.


அந்த வித்தியாசமான பார்வைகள்தான் பல சிரிப்பான, உணர்வுப்பூர்வமான மற்றும் நம் வாழ்க்கையுடன் தொடர்புபடுத்திக்கொள்ளக்கூடிய தருணங்களை உருவாக்குகின்றன” என்றார்.


நடிகர் யோகி பாபு கூறுகையில்..,  


“இந்த டிரெய்லர் நாங்கள் படப்பிடிப்பில் அனுபவித்த கலாட்டாவில் ஒரு சிறிய பகுதி மட்டுமே. அன்றாட குடும்ப வாழ்க்கையில் நடக்கும் சாதாரண விஷயங்களிலிருந்துதான் படத்தின் நகைச்சுவை உருவாகிறது. அதனால்தான் அது அனைவருடனும் எளிதாக கனெக்ட் ஆகும்.


ரசிகர்கள் எங்களுடன் சேர்ந்து சிரித்து, குடும்பத்துடன் இந்தப் படத்தை ரசிப்பதைப் பார்க்க ஆவலாக இருக்கிறேன்” என்றார்.


ஒரு திருமணம்… இரண்டு குடும்பங்கள்… எண்ணற்ற கலாட்டாக்கள்!


இந்த வீட்டுக்குள் வரப்போகும் புதிய மாப்பிள்ளை, அந்தக் குடும்பத்தின் வாழ்க்கையையே எப்படி மாற்றப் போகிறார் என்பதுதான் ‘பியார் பிரேமா கல்யாணம்’.


‘பியார் பிரேமா கல்யாணம்’ திரைப்படம் ஆகஸ்ட் 21 முதல் Netflix-ல் வெளியாகிறது.


*Netflix Unveils the Trailer of ‘Pyaar Prema Kalyanam’ – A Wholesome Family Entertainer with a Twist*


Coconuts break as the groom is welcomed into the bride’s family. A big twist awaits!


12 August, 2026: What happens when the maapillai (groom/ son-in-law) packs his bags instead of the bride? Netflix today unveiled the trailer for Pyaar Prema Kalyanam, a wholesome Tamil family entertainer that flips one of marriage's oldest traditions on its head. Directed by and starring Elan in his acting debut, the film premieres on Netflix on 21 August.


The trailer introduces Pavi (Saanvee Meghana), a spirited influencer who refuses to leave the home she's always known. Instead, her husband (Elan) moves into her house, stepping into a lively new family where every day is a fresh sambavam (experience). Between awkward first impressions, hilarious clashes and chaos, one question takes centre stage: who said the bride is always the one who has to leave?


As expectations are turned upside down, Pyaar Prema Kalyanam serves up romance, comedy and heartfelt moments in equal measure, proving that marriage is about finding what works for you.


Joining Elan and Saanvee Meghana is a powerhouse ensemble featuring Radhika Sarathkumar, Yogi Babu, M.S. Bhaskar, Geetha Kailasam, Elango Kumaravel, Senthil and Maran, bringing warmth, wit and full-on family kalatta to every scene. Complementing the laughter is Yuvan Shankar Raja's soulful soundtrack, adding heart to this refreshing take on love, family and happily ever after.


Sharing his excitement, director and debutant actor, Elan, said, "With Pyaar Prema Kalyanam, we wanted to tell a story that feels familiar yet refreshingly different. The trailer offers a glimpse into a marriage that challenges long-held expectations while celebrating the love, laughter and togetherness that make every family unique. Making my acting debut with a story so close to my heart has been incredibly special, and I can't wait for audiences across the world to experience it on Netflix."


Playing the feisty influencer Pavi, Saanvee Meghana said, "Pavi is confident, independent and unapologetically herself. She knows what she wants without ever losing sight of the people she loves, and that's what drew me to her. The trailer captures her spirit beautifully, and I hope audiences enjoy watching her redefine what love and partnership can look like."


Veteran actress Radhika Sarathkumar shared, "What I loved most about this film is how effortlessly it starts conversations about changing family dynamics without ever losing its humour. Every generation views marriage differently, and those differences create moments that are funny, emotional and deeply relatable."


Adding his trademark humour, Yogi Babu said, "The trailer is only a small taste of the fun we've had making this film. The comedy comes from everyday family situations, and that's what makes it connect. I can't wait for audiences to laugh along with us and enjoy it together with their families."

One wedding. Two families. Countless laughs. This veedu (house) is about to welcome its newest son-in-law!


Watch Pyaar Prema Kalyanam, premiering August 21, only on Netflix.


https://www.youtube.com/watch?v=n65bXlvrHlo

ஆகஸ்ட் 7 முதல் தமிழிலும் கிடைக்கும் ZEE5-இல் பிரம்மாண்ட டிஜிட்டல் பிரீமியருக்கு தயாராகும் ‘லெனின்

 *ஆகஸ்ட் 7 முதல் தமிழிலும் கிடைக்கும் ZEE5-இல் பிரம்மாண்ட டிஜிட்டல் பிரீமியருக்கு தயாராகும் ‘லெனின்’*



அகில் அக்கினேனியின் திரை வாழ்க்கையில் மிகப்பெரிய பிளாக்பஸ்டராக உருவெடுத்து, திரையரங்குகளில் மாபெரும் வெற்றிப் பயணம் கண்டுள்ள ‘லெனின்’ திரைப்படம், தற்போது அதன் ஆவலுடன் எதிர்பார்க்கப்படும் டிஜிட்டல் பிரீமியருக்குத் தயாராகி வருகிறது. இந்த அதிரடி நிறைந்த கிராமப்புற பொழுதுபோக்கு திரைப்படம் ஆகஸ்ட் 7 முதல் தெலுங்கு ZEE5-இல் பிரத்யேகமாக ஸ்ட்ரீமிங் ஆகத் தொடங்குகிறது. மேலும், தமிழிலும் கிடைக்கவுள்ளது. இதன் மூலம், இந்த ஆண்டின் மிகப்பெரிய தெலுங்கு வெற்றிப் படங்களில் ஒன்றை, பார்வையாளர்கள் தங்கள் இல்லங்களிலிருந்தே மீண்டும் அனுபவிக்கும் வாய்ப்பைப் பெறுகின்றனர்.


முரளி கிஷோர் அப்பூரு இயக்கியுள்ள ‘லெனின்’ திரைப்படத்தில், அகில் அக்கினேனி தனது திரை வாழ்க்கையை வரையறுக்கும் வகையிலான ஒரு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவருடன் பாக்யஸ்ரீ போர்ஸே இணைந்து நடித்துள்ளார். மேலும், சிவாஜி, சுனில், ஈஸ்வரி ராவ், பிரம்மாஜி, கெட்டப் ஸ்ரீனு, ராம்கி, பிரமோத் பஞ்சு மற்றும் பல புகழ்பெற்ற நடிகர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். நாகார்ஜுனா அக்கினேனி மற்றும் சூர்யதேவரா நாக வம்சி ஆகியோர் மனம் எண்டர்பிரைசஸ் மற்றும் சிதாரா எண்டர்டெயின்மென்ட்ஸ் நிறுவனங்களின் கீழ் இப்படத்தை தயாரித்துள்ளனர். தமன் எஸ். இசையமைத்துள்ள இப்படத்திற்கு லியோன் பிரிட்டோ ஒளிப்பதிவும், நவீன் நூலி படத்தொகுப்பும் செய்துள்ளனர்.


ஆந்திரப் பிரதேசத்தின் கிராமப்புற பின்னணியில் அமைந்துள்ள ‘லெனின்’, அச்சமற்ற இளைஞன் ஒருவரின் கதையைச் சொல்கிறது. அவரது தனிப்பட்ட பயணம், பின்னர் அநீதிக்கு எதிரான மிகப்பெரிய போராட்டமாக மாறுகிறது. ஒரு உணர்ச்சிப்பூர்வமான காதல் கதையாகத் தொடங்கும் இந்த பயணம், குடும்ப பந்தங்கள், அதிகாரப் போட்டிகள் மற்றும் தன் மக்களை பாதுகாக்கும் உறுதியை மையமாகக் கொண்ட தீவிரமான மோதலாக விரிகிறது. அதிரடி, உணர்ச்சி, காதல், நகைச்சுவை மற்றும் வலுவான வணிகத் திரைப்பட அம்சங்களை ஒருங்கிணைக்கும் இப்படம், அனைத்து வயதினரையும் கவரும் முழுமையான திரை அனுபவத்தை வழங்குகிறது.


திரையரங்குகளில் வெளியானவுடன், இப்படம் உடனடியாக ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தது. அகில் அக்கினேனியின் வலிமையான திரைநிலை, முரளி கிஷோர் அப்பூருவின் மண்ணின் மணம் வீசும் கதை சொல்லல், தமன் எஸ். வழங்கிய சக்திவாய்ந்த பின்னணி இசை மற்றும் உணர்ச்சிமிக்க கதை அமைப்பு ஆகியவை பரவலான பாராட்டைப் பெற்றன. மறக்க முடியாத உயர்வுகள், பரபரப்பான அதிரடி காட்சிகள் மற்றும் மனதைத் தொடும் உணர்ச்சிமிக்க தருணங்களால் நிரம்பிய ‘லெனின்’, அகில் அக்கினேனியின் அதிக வசூல் செய்த திரைப்படமாக உருவெடுத்து, இந்த ஆண்டின் முக்கியமான தெலுங்கு பிளாக்பஸ்டர்களில் ஒன்றாக தன்னை உறுதியாக நிலைநிறுத்திக் கொண்டது.


பிளாக்பஸ்டர் திரைப்படங்கள், பாராட்டுப் பெற்ற ஒரிஜினல் படைப்புகள் மற்றும் பிராந்திய மக்களின் விருப்பமான பொழுதுபோக்கு உள்ளடக்கங்களால் நிரம்பிய நூலகத்துடன், ZEE5 பல மொழிகளில் தரமான உள்ளடக்கங்களை வழங்கும் முன்னணி தளங்களில் ஒன்றாக தனது நிலையை தொடர்ந்து வலுப்படுத்தி வருகிறது. குடும்ப பொழுதுபோக்கு திரைப்படங்கள், அதிரடி நாடகங்கள் முதல் விமர்சகர்களின் பாராட்டைப் பெற்ற ஒரிஜினல்கள் வரை, பல்வேறு வகையான கதைகளை தொடர்ந்து பார்வையாளர்களிடம் கொண்டு சேர்க்கிறது. இதன் மூலம், பிளாக்பஸ்டர் திரைப்படங்கள் எப்போது வேண்டுமானாலும், எங்கு வேண்டுமானாலும் பார்வையாளர்களை சென்றடைகின்றன. தமிழிலும் கிடைக்கும் ‘லெனின்’ திரைப்படத்தின் வருகை, ZEE5-இன் வலுவான உள்ளடக்க பட்டியலை மேலும் செழுமையாக்குகிறது. இதன் மூலம், தமிழ்நாட்டு பார்வையாளர்களும் திரையரங்குகளில் வெற்றி பெற்ற இந்த திரைப்படத்தை தளத்தில் அனுபவிக்கும் மேலும் ஒரு வாய்ப்பைப் பெறுகின்றனர்.


“அய்யாகாரு” உங்கள் திரைகளுக்கு வரத் தயாராக இருக்கிறார்!


ஆகஸ்ட் 7 முதல் தெலுங்கு ZEE5-இல் பிரத்யேகமாக ஸ்ட்ரீமிங் ஆகும் ‘லெனின்’ திரைப்படத்தின் டிஜிட்டல் பிரீமியரை தவறவிடாதீர்கள். இது தமிழிலும் கிடைக்கும்.

பியார் பிரேமா கல்யாணம்’ டிரெய்லர் வெளியீட்டு விழா !*

 *‘பியார் பிரேமா கல்யாணம்’ டிரெய்லர் வெளியீட்டு விழா !*



இயக்குநர் இளன் முதன்முறையாக கதாநாயகனாக அறிமுகமாகும் ‘பியார் பிரேமா கல்யாணம்’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா இன்று படக்குழுவினர் முன்னிலையில் நடைபெற்றது. ரைஸ் ஈஸ்ட் என்டர்டெயின்மென்ட் தயாரித்துள்ள இப்படத்திற்கு  இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். 


இன்று நடைபெற்ற டிரெய்லர் வெளியீட்டு நிகழ்வில் படக்குழுவினருடன், திரைப்பிரபலங்கள் கலந்துகொண்டு படக்குழுவை வாழ்த்தினர். 


இந்நிகழ்வினில்..,



இயக்குநர் வெற்றிமாறன் பேசியதாவது, 


ஒரு நடிகராக இருந்து இயக்குநராக மாறுவதற்கே நிறைய தைரியம் வேண்டும். அந்தத் தைரியம் இளனிடம் இருக்கிறது. அவருக்கும், அவருடைய ஒட்டுமொத்த படக்குழுவினருக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள். இப்படம் டிரெய்லர் நன்றாக இருக்கிறது.  இந்தப் படம் நிறைய ஃபன் ஆன விஷயங்களையும், சில நெருக்கமான தனிப்பட்ட விஷயங்களையும் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்க வைக்கிறது. இந்தப் படம் அனைவருக்கும் பிடித்து, நல்ல வெற்றியைப் பெற வேண்டும் என்று நம்புகிறேன். மீண்டும் படக்குழுவினருக்கும், Netflix-க்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள்.

டிரெய்லரில் இந்த சில நிமிடங்களிலேயே நம்மை நிறைய சிரிக்க வைக்கும் விஷயங்கள் இருந்தது. நான் நிறைய கூச்ச சுபாவம் கொண்டவன் என்னையே ஸ்டார் இரண்டு ஷாட் தான் என்று கூறி நடிக்க வைத்தார். அதில் அவர் மீது கோபம் தான்… இப்போது அவரே நடிகராகி விட்டார், படம் வெற்றி பெற வாழ்த்துக்கள். 



நடிகை ராதிகா பேசியதாவது:


“முதலில் இந்தப் படம் Netflix-ல் வெளியாக இருப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. அதுவும் படம் என் பிறந்தநாளன்று வெளியாகிறது. இது எனக்கு ஒரு நல்ல பிறந்தநாள் பரிசாக அமைந்திருக்கிறது. அதனால் மிகவும் சந்தோஷமாக இருக்கிறேன்.


இது ஒரு வித்தியாசமான காதல் கதையாக உருவாகியுள்ளது. அதே நேரத்தில் இதை குடும்பப் படம் என்று சொல்ல முடியாது. இன்றைய சமூகத்தில் ஒவ்வொருவருடைய மனநிலையும், வாழ்க்கையைப் பற்றிய பார்வையும் எப்படி மாறியிருக்கிறது என்பதையும், அந்த மாற்றத்துக்கு ஏற்ப அவர்கள் எப்படி செயல்படுகிறார்கள் என்பதையும் இப்படம் பேசுகிறது.


குறிப்பாக இன்றைய இளைஞர்களுக்கு காதல், திருமணம், வாழ்க்கை ஆகியவற்றைப் பற்றிய பார்வை முற்றிலும் வேறுபட்டிருக்கிறது. அவர்களுடைய எண்ணங்களை நாங்கள் எப்படி புரிந்துகொள்கிறோம், அதை எப்படி ஏற்றுக்கொள்கிறோம், அந்த மாற்றங்களை எப்படிக் கையாள்கிறோம் என்பதுதான் இந்தப் படத்தின் கதை.


படத்தில் பல விஷயங்களை மிகவும் நேர்மையாகக் கையாண்டிருக்கிறோம். அதனால் படம் சிறப்பாக வந்திருக்கிறது.  இயக்குநர் இளன் சிறப்பாக இயக்கி நடித்திருக்கிறார். கண்டிப்பாக அனைவருக்கும் படம் பிடிக்கும். 



நடிகர் இளங்கோ குமரவேல் பேசியதாவது:


“இந்தப் படத்தைப் பார்க்கும்போது, ‘நமக்கும் இதுபோல ஒரு மாமனார் கிடைக்க வேண்டும்’ என்று எல்லோரும் எதிர்பார்க்கும் அளவுக்கு, மாமனார் கதாபாத்திரத்தை மிகவும் அழகாக அமைத்திருக்கிறோம். இந்தக் கதாபாத்திரம் ரசிகர்களால் மிகவும் விரும்பப்படும் என்று நம்புகிறேன். இயக்குநர் என்னை சிறப்பாக பயன்படுத்தியுள்ளார். அனைவரும் இப்படத்தை ரசிப்பார்கள் நன்றி. 



நடிகர் செந்தில் பேசியதாவது.., 


“இந்தப் படத்தில் நடிகர் இளன் எப்படி இருக்கிறார், என்ன மாதிரியான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் என்பதைப் பார்க்கும்போது, நம்முடைய பாக்யராஜ் சார் நடித்த படங்களைப் பார்த்திருப்போம். அந்த மாதிரியான ஒரு கதாபாத்திரத்தை நினைவுபடுத்தும் வகையில் இந்தப் படத்தில் இளன் நடித்திருக்கிறார். அவரைப்போல திரைக்கதையிலும் இயக்கத்திலும் கலக்கியிருக்கிறார். அவரைப் பார்க்கும்போது எனக்கு இன்னொரு பாக்யராஜ் சார் மாதிரி தோன்றியது   .


அதேபோல், இந்தப் படத்தில் நடித்திருக்கும் கதாநாயகியும் மிகவும் இயல்பாக இருக்கிறார். அவருடைய தோற்றமும் நடிப்பும் மிகவும் இயற்கையாக இருக்கிறது. அவரை நான் மிகவும் பாராட்டினேன்.


இந்தப் படத்தில் பணியாற்றியிருக்கும் அனைவருமே என் கலைக் குடும்பத்தைச் சேர்ந்த நண்பர்கள் என்பதால், படத்தின் மீது இன்னும் ஒரு எதிர்பார்ப்பு இருக்கிறது. நான் டிரெய்லரைப் பார்த்தேன். அதில் வரும் காட்சிகள் மிகவும் சிறப்பாக இருக்கின்றன. இந்தப் படம் மிகச் சிறப்பாக வர வாழ்த்துகள். நன்றி.”


நடிகர் யோகிபாபு பேசியதாவது:

“ இளன், இந்தப் படத்தில் எனக்கு வாய்ப்பு கொடுத்ததற்கு முதலில் நன்றி. இந்தப் படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் என்னுடைய நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.


‘ஸ்டார்’ படத்தில் இருந்தே நாங்கள் இருவரும் பேசிக்கொண்டிருக்கிறோம், ‘சார், நாம கண்டிப்பாக ஒரு படம் பண்ணுவோம்’ என்று இளன் என்னிடம் கூறியிருந்தார். அந்த வார்த்தையை இப்போது நிறைவேற்றி, இந்தப் படத்தில் எனக்கு வாய்ப்பு கொடுத்திருக்கிறார். அதற்காக அவருக்கு மிகவும் நன்றி.


அடுத்து நாங்கள் இணைந்து செய்யப்போகும் இன்னொரு படம் இருக்கிறது. அதில் நீங்கள் கேட்கும் வாட்ஸ்அப், யூடியூப் உள்ளிட்ட விஷயங்களை மையமாக வைத்து உருவாக்கப்படும் அந்தக் கான்செப்ட் மிகவும் நன்றாக வந்துள்ளது. அதற்காகவும் நன்றி. மிக்க நன்றி. அனைவருக்கும் என்னுடைய நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.”


நடிகை சான்வி மேக்னா பேசியதாவது.., 


“உண்மையாகச் சொன்னால், ஆரம்பத்திலிருந்தே நான் இளன் அடிக்கடி ஒரு விஷயத்தைக் கேட்டுக்கொண்டே இருப்பேன். ஒரே நேரத்தில் எப்படி ஒரு படத்தை இயக்கவும், அதில் நடிக்கவும் முடிகிறது என்று எனக்கு ஆச்சரியமாக இருக்கும். ஏனென்றால், எனக்கு அந்த அனுபவம் கிடையாது.


அதற்கு அவர், ‘நாம் நடிக்கும் காட்சிக்கு ஏற்ப முழுமையாக அதற்குள் சென்று நடிப்பேன். அதே நேரத்தில் இயக்குநராக இருக்கும்போது என்ன செய்ய வேண்டும் என்பதையும் தெளிவாக வைத்திருப்பேன்’ என்று சொல்வார்.


ஆரம்பத்தில் எங்களுக்கு ஒரு முக்கியமான உணர்வுப்பூர்வமான காட்சி இருந்தது. அந்தக் காட்சிக்கு முன்பு அவர் மிகவும் பதற்றமாக இருந்தார். நான் அவரிடம், ‘ஏன் இவ்வளவு பதற்றமாக இருக்கிறீர்கள்?’ என்று கேட்டேன். அதற்கு அவர், ‘நான் நடிகராக என்னுடைய முகத்தை மாற்றிக்கொள்ள முயற்சி செய்கிறேன். ஆனால், அடுத்ததாக என்ன காட்சியைப் படமாக்க வேண்டும் என்பதுதான் என் மனதில் ஓடிக்கொண்டிருக்கிறது’ என்றார்.


அதன் பிறகு அவர் ஒருபோதும் அந்த விஷயத்தைப் பற்றி என்னிடம் சொல்லவில்லை. ஆனால், படம் முழுவதும் அவருடைய செயல்பாட்டைக் கவனித்தபோது, இயக்குநர் நிலையிலிருந்து நடிகர் நிலைக்கும், நடிகர் நிலையிலிருந்து மீண்டும் இயக்குநர் நிலைக்கும் அவரால் மிக எளிதாக மாற முடிந்ததைப் பார்த்தேன்.


அவருக்கு அந்த அளவுக்கு சிறந்த புரிதலும், Presence of Mind-ம் இருக்கிறது. இந்தப் பயணத்தில் அவரிடமிருந்து நான் கற்றுக்கொண்ட மிக முக்கியமான விஷயங்களில் இதுவும் ஒன்று. மேலும், இந்தப் படத்தில் நான் முழுமையாக தமிழில்தான் டப்பிங் பேசியிருக்கிறேன். இந்தப்படம் எனக்கு மிகவும் நெருக்கமான படம். கண்டிப்பாக எங்களைப்போல ரசிகர்களும் இப்படத்தை கொண்டாடுவார்கள் நன்றி. 


நடிகர்,  இயக்குநர்  இளன் பேசியதாவது.., 

  

இப்படம் எனக்கும் மிகவும் முக்கியமான படம் இயக்குநராக மட்டுமில்லாமல், நடிகராகவும் களமிறங்கியிருக்கிறேன். இன்றைய இளைஞர்கள் ரசிக்கும்படியான ஒரு கதையை சொல்லியிருக்கிறேன். திரை ஆளுமைகள் ராதிகா மேம், செந்தில் சார் எல்லோரும் என்னை நம்பி இப்படத்தில் நடித்துள்ளார்கள் அவர்களுக்கு என் நன்றிகள். 


முக்கியமாக யுவன் சார் அற்புதமான இசையை தந்துள்ளார். அவர் இசை படத்திற்கு பெரும் பலம்.  “‘அட்ராசிட்டி’ பாடல் எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்றாக இருக்கிறது. இந்தப் பாடலை உருவாக்கிய விதமும், அதன் பின்னால் இருக்கும் யோசனையும் மிகவும் வித்தியாசமானது. இந்தப் படத்தின் முதல் பாடலாக ‘அட்ராசிட்டி’ வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.


பாடல் மற்றும் படத்தைப் பற்றி அதிகமாக சொல்லி, ரசிகர்களின் எதிர்பார்ப்பைக் குறைக்க நான் விரும்பவில்லை. அவர்கள் படத்தைப் பார்த்து, அதில் சொல்லப்பட்டிருக்கும் விஷயங்களையும், சம்பவங்களையும் தங்களுடைய அனுபவத்தோடு ஒப்பிட்டுப் புரிந்துகொள்ள வேண்டும் என்பதுதான் என்னுடைய விருப்பம்.


இந்தப் படத்தின் உருவாக்கப் பயணம் எனக்கு மிகவும் சுவாரஸ்யமான அனுபவமாக இருந்தது. ஒவ்வொரு விஷயத்தையும் மிகவும் கவனமாகச் செய்திருக்கிறோம். அனைவருக்கும் இப்படம் பிடிக்குமென நம்புகிறேன் நன்றி.




இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா பேசியதாவது.., 


“‘பியார் பிரேமா காதல்’ படத்தில் தொடங்கிய ஒரு விஷயம் இப்போதும் தொடர்கிறது. பொதுவாக ஒரு படத்தின் ஆரம்பத்தில் இரண்டு அல்லது மூன்று பாடல்களைத்தான் அறிவிப்பார்கள். ஆனால் படம் முடியும் நேரத்தில் 13, 14 டிராக்குகள் இருக்கும். ‘பியார் பிரேமா காதல்’ படத்தில் முதலிலேயே முழு டிராக் லிஸ்ட்டையும் அறிவித்தோம். அதே மாதிரியான விஷயத்தை இந்தப் படத்திலும் செய்திருக்கிறோம்.


இது இப்போது இளனுடன் இணைந்த ஒரு ட்ரெண்ட் மாதிரி ஆகிவிட்டது. பாடல்கள் தொடர்ந்து வெளியாகி, சமூக வலைதளங்களிலும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றன.


இந்தப் பாடலுக்கு ரசிகர்களிடமிருந்து வரும் அனைத்து ரியாக்ஷன்களும் மிகவும் பாசிட்டிவாக இருக்கின்றன. நான் கமெண்ட்ஸ் உள்ளிட்டவற்றைப் படித்துக்கொண்டிருக்கிறேன். ரசிகர்கள் காட்டும் அன்பைப் பார்க்கும்போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.


மேலும், இந்தப் படத்தை நான் முழுமையாகப் பார்த்துவிட்டேன். படம் மிகவும் சிறப்பாக வந்திருக்கிறது. ஒரு நல்ல என்டர்டெயினராக இருக்கிறது. குடும்பத்துடன் சேர்ந்து பார்த்து ரசிக்கக்கூடிய படமாக இது இருக்கும்.


இந்தப் படம் ரசிகர்களின் பிளேலிஸ்ட்டில் தொடர்ந்து இடம்பெறும் படமாகவும், மீண்டும் மீண்டும் பார்க்கத் தோன்றும் படமாகவும் இருக்கும் என்று நினைக்கிறேன். படம் மிகவும் அருமையாக வந்திருக்கிறது.” அனைவருக்கும் நன்றி. 



வித்தியாசமான கதைக்களத்துடன் உருவாகியுள்ள இப்படம், திருமணத்திற்குப் பிறகு தனது பெற்றோர் வீட்டை விட்டு செல்ல விரும்பாத மனைவியுடன் கணவரும் மனைவியின் வீட்டிலேயே சென்று வசிக்கும் சூழலை மையமாகக் கொண்டுள்ளது. இதன் மூலம் திருமண வாழ்க்கை, குடும்ப உறவுகள், காதல், எதிர்பார்ப்புகள் மற்றும் அதனால் உருவாகும் நகைச்சுவையான சம்பவங்களை புதிய கோணத்தில் சொல்ல முயற்சித்திருக்கிறது.


இளன் இயக்குநராக மட்டுமின்றி இப்படத்தின் மூலம் கதாநாயகனாகவும் அறிமுகமாகிறார். அவருடன் சான்வீ மேக்னா கதாநாயகியாக நடிக்க, ராதிகா சரத்குமார், யோகி பாபு, எம்.எஸ். பாஸ்கர், கீதா கைலாசம், இளங்கோ குமரவேல், செந்தில், மாறன், டீப்ஸ் சைரஸ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.


யுவன் சங்கர் ராஜாவின் இசையில் உருவாகியுள்ள இப்படத்தின் பாடல்களும் பின்னணி இசையும் காதல் மற்றும் குடும்ப உணர்வுகளுக்கு கூடுதல் வலு சேர்க்கும் வகையில் அமைந்துள்ளது. 


காதல், குடும்பம், நகைச்சுவை மற்றும் திருமண வாழ்க்கையின் எதிர்பாராத திருப்பங்களை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள ‘பியார் பிரேமா கல்யாணம்’ திரைப்படம் வரும் ஆகஸ்ட் 21 முதல் உலகம் முழுவதும் நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் ஸ்ட்ரீமிங் ஆகிறது .

‘சேயோன்’ திரைப்படம் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகி வருகிறது, அதன் இரண்டாவது கட்டப் படப்பிடிப்பு மதுரையில் இன்று அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியது

‘சேயோன்’ திரைப்படம் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகி வருகிறது, அதன் இரண்டாவது கட்டப் படப்பிடிப்பு மதுரையில் இன்று அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியது.



முதல் கட்டப் படப்பிடிப்பு வெற்றிகரமாக முடிந்ததைத் தொடர்ந்து, படக்குழுவினர் தற்போது புத்துணர்ச்சியுடனும், உத்வேகத்துடனும் படப்பிடிப்பை மீண்டும் தொடங்கியுள்ளனர். கதை அடுத்த அத்தியாயத்திற்கு முன்னேறுவதோடு, பல முக்கியக் காட்சிகள் இடம்பெறுவதால் படக்குழுவினர் அதன் தனித்துவமான உலகத்தை உயிர்ப்பிக்கவும் ஆவலுடன் காத்திருக்கின்றனர். 


சிவகார்த்திகேயன் நடிப்பில், சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் உருவாகும் ‘சேயோன்’ திரைப்படத்தில், சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். இத்திரைப்படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் டர்மெரிக் மீடியா நிறுவனங்கள் சார்பாக திரு.கமல்ஹாசன் மற்றும் ஆர். மகேந்திரன் ஆகியோர் தயாரிக்கின்றனர்.


English Press Release 


SEYON – SECOND SCHEDULE COMMENCES TODAY


RAAJKAMAL FILMS INTERNATIONAL & TURMERIC MEDIA

PRESENT


KAMAL HAASAN

PRESENTS


SIVAKARTHIKEYAN

“SEYON”


DIRECTED BY SIVAKUMAR MURUGESAN

MUSIC BY SANTHOSH NARAYANAN

PRODUCED BY KAMAL HAASAN – R. MAHENDRAN



The second schedule of #Seyon has officially commenced today at Madurai, August 11, 2026, marking the next phase in the journey of the much-awaited film.


Following the successful completion of its first schedule, the team has now resumed filming with renewed energy and momentum. The second schedule will feature several important sequences as the story progresses into its next chapter.


Starring Sivakarthikeyan and directed by Sivakumar Murugesan, Seyon brings together a promising creative team, with music by Santhosh Narayanan. The film is produced by Kamal Haasan and R. Mahendran, under the banners of RaajKamal Films International and Turmeric Media.


With the second schedule now underway, the team looks forward to continuing the journey of Seyon and bringing its distinctive world to life.


The journey continues.

#Seyon – Schedule 2 is now underway.

இந்த சுதந்திர தினத்தில், 26/11 பயங்கரவாத தாக்குதலின்போது தைரியமாக நின்று போராடிய பெயரிடப்படாத நாயகர்களின் சொல்லப்படாத கதையை கொண்டுவருகிறது இந்தி ZEE5-இன் பாரத் பாக்ய விதாதா

 *இந்த சுதந்திர தினத்தில், 26/11 பயங்கரவாத தாக்குதலின்போது தைரியமாக நின்று போராடிய பெயரிடப்படாத நாயகர்களின் சொல்லப்படாத கதையை கொண்டுவருகிறது இந்தி ZEE5-இன் பாரத் பாக்ய விதாதா*



~ கங்கனா ரணாவத், கிரிஜா ஓக் மற்றும் ஸ்மிதா தாம்பே நடித்துள்ள பாரத் பாக்ய விதாதா, தியாகமும் வீரமும் நிறைந்த ஊக்கமூட்டும் கதையாக அமைந்துள்ளது. இந்த சுதந்திர தினத்தில் தவறாமல் பார்க்க வேண்டிய படைப்பு ~


தேசியம், ஆகஸ்ட் 7, 2026: இந்த சுதந்திர தினத்தில், தைரியம், மனவலிமை மற்றும் தன்னலமற்ற சேவை மனப்பான்மையை கொண்டாடும் வகையில், ஆகஸ்ட் 14 அன்று பாரத் பாக்ய விதாதா திரைப்படத்தின் பிரத்யேக டிஜிட்டல் பிரீமியரை இந்தி ZEE5 பார்வையாளர்களுக்கு வழங்குகிறது. இந்தியா முழுவதும் உள்ள பார்வையாளர்களுக்கு துணிச்சலான, ஊக்கமூட்டும் மற்றும் கலாச்சார ரீதியாக ஒத்திசைவான கதைகளை வழங்கும் தனது உறுதிப்பாட்டைத் தொடர்ந்து, நாட்டை வரையறுக்கும் மதிப்புகளை பிரதிபலிக்கும் அசாதாரண வீரச் செயல்களை வெளிப்படுத்திய பெயரிடப்படாத நாயகர்களின் மீது இந்த தளம் ஒளி பாய்ச்சுகிறது. மனோஜ் தபாடியா எழுதி இயக்கியுள்ள இப்படம், PEN Studios, Manikarnika Films மற்றும் Paramhans Creations ஆகிய நிறுவனங்களால், Eunoia Films LLP மற்றும் Floating Rocks Entertainment Pvt Ltd நிறுவனங்களுடன் இணைந்து தயாரிக்கப்பட்டுள்ளது. பாரத் பாக்ய விதாதா திரைப்படத்தில் கங்கனா ரணாவத், கிரிஜா ஓக், ஸ்மிதா தாம்பே உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.


முக்கிய விவரங்கள்:


தலைப்பு: பாரத் பாக்ய விதாதா

மொழி: இந்தி

வகை: த்ரில்லர் / டிராமா

பிரீமியர்: ஆகஸ்ட் 14, 2026

எழுத்தாளர் - இயக்குநர்: மனோஜ் தபாடியா

தயாரிப்பு: PEN Studios, Manikarnika Films மற்றும் Paramhans Creations, Eunoia Films LLP மற்றும் Floating Rocks Entertainment Pvt Ltd நிறுவனங்களுடன் இணைந்து

நடிகர்கள்: கங்கனா ரணாவத், கிரிஜா ஓக், ஸ்மிதா தாம்பே மற்றும் பலர்

ஸ்ட்ரீமிங்: இந்தி ZEE5


பாரத் பாக்ய விதாதா எதைப் பற்றியது?


26/11 மும்பை பயங்கரவாத தாக்குதல்களின் பேரழிவு பின்னணியில் அமைந்துள்ள பாரத் பாக்ய விதாதா, இந்திய வரலாற்றின் மிக இருண்ட அத்தியாயங்களில் ஒன்றை மீண்டும் நினைவூட்டுகிறது. எண்ணற்ற உயிர்களை காப்பாற்றிய பெயரிடப்படாத நாயகர்களின் தைரியத்தையும் தன்னலமற்ற சேவையையும் முன்னிறுத்துகிறது. மும்பையின் காமா மற்றும் ஆல்ப்லெஸ் மருத்துவமனையை மையமாகக் கொண்ட இந்த திரைப்படம், செவிலியர்கள், வார்டு பாய்கள், தூய்மை பணியாளர்கள், பாதுகாப்பு ஊழியர்கள் மற்றும் மருத்துவமனை பணியாளர்களின் அசாதாரண செயல்பாடுகளைப் பின்தொடர்கிறது. அவர்கள் பராமரித்த நோயாளிகளுக்கான முதல் பாதுகாப்பு வரியாக மாறினர்.


தாக்குதலாளர்கள் மருத்துவமனை வளாகத்திற்குள் நுழைந்தபோது, சாதாரண மனிதர்கள் அசாதாரண சூழ்நிலைகளில் உயர்ந்து நின்றனர். தங்களை பாதுகாத்துக்கொள்ள மிகக் குறைந்த வசதிகள் இருந்தபோதிலும், தங்கள் கடமை உணர்வை தளர்த்தாமல், தங்கள் உயிர்களை விட நோயாளிகளின் உயிர்களுக்கு முன்னுரிமை அளித்தனர். அவர்களின் அசாதாரண தைரியம் மற்றும் தன்னலமற்ற செயல்கள் வழியாக, இந்த திரைப்படம் தியாகம், கருணை மற்றும் மனவலிமை போன்ற கருப்பொருட்களை ஆராய்கிறது. கற்பனைக்கெட்டாத சவால்களை எதிர்கொள்ளும் மனித மனத்தின் வலிமையை கொண்டாடுகிறது.


ஏன் பாரத் பாக்ய விதாதா உங்கள் வாட்ச் லிஸ்டில் இருக்க வேண்டும்?


● உண்மை சம்பவங்களால் ஈர்க்கப்பட்டது: இந்தியாவின் மிக முக்கியமான தருணங்களில் ஒன்றை, அசாதாரண தைரியம் வெளிப்படுத்திய மருத்துவப் பணியாளர்களின் பார்வையில் சொல்லும் பரபரப்பான கதை.


● அன்றாட நாயகர்களுக்கான சக்திவாய்ந்த அஞ்சலி: செய்தித் தலைப்புகளில் பெரிதாக இடம்பெறாத செவிலியர்கள், வார்டு பாய்கள் மற்றும் மருத்துவமனை பணியாளர்களின் வீரத்தை கொண்டாடுகிறது.


● புதிய தோற்றத்தில் கங்கனா ரணாவத்: கிரிஜா ஓக் மற்றும் ஸ்மிதா தாம்பே ஆகியோருடன் இணைந்து உணர்ச்சிமிக்க கதையில் நட்சத்திர அணியை வழிநடத்துகிறார்.


● பயத்தை விட தைரியத்தின் கதை: வெறும் த்ரில்லர் அல்ல; மனவலிமை, தியாகம் மற்றும் நிலைத்த மனித உணர்வின் நினைவூட்டல்.


● இந்த சுதந்திர தினத்திற்கான சிறந்த பார்வை அனுபவம்.


அதிகாரப்பூர்வ கருத்துகள்:


இந்தி ZEE5 வணிகத் தலைவர் மற்றும் &TV தலைமை சேனல் அதிகாரி காவேரி தாஸ் கூறுகையில், “ஒவ்வொரு சக்திவாய்ந்த கதையின் மையத்திலும், அதை வித்தியாசமாகச் சொல்லும் தைரியம் உள்ளது. பாரத் பாக்ய விதாதா அந்த உணர்வை பிரதிபலிக்கிறது. இது இந்தி ZEE5-இன் துணிச்சலான மற்றும் அர்த்தமுள்ள கதைகளின் பட்டியலில் முக்கியமான சேர்க்கையாகும். 26/11 சம்பவங்கள் பல கோணங்களில் சொல்லப்பட்டிருந்தாலும், இந்த திரைப்படம் காமா மருத்துவமனையின் மருத்துவர்கள், செவிலியர்கள், வார்டு பணியாளர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்களின் அசாதாரண தைரியத்தை வெளிச்சம் போடுகிறது. அவர்கள் தங்களை விட மனிதநேயத்தையும், பயத்தை விட கடமையையும் உயர்வாகக் கருதினர். அவர்களின் அமைதியான வீரச் செயல்கள் மனவலிமை, கருணை மற்றும் தன்னலமற்ற சேவையின் வலுவான சான்றாக உள்ளன. சுதந்திர தினத்தை முன்னிட்டு, இந்த ஊக்கமூட்டும் கதையை இந்தி ZEE5-இல் பார்வையாளர்களிடம் கொண்டு வருவதில் பெருமை கொள்கிறோம். உண்மையான வீரத் தன்மை போர்க்களங்களில் மட்டுமல்ல, மனிதர்களின் அன்றாட செயல்களிலும் இருப்பதை நினைவூட்டிய பெயரிடப்படாத நாயகர்களை கௌரவிக்கிறோம்” என்றார்.


நடிகையும் தயாரிப்பாளருமான கங்கனா ரணாவத் கூறுகையில், “சில கதைகள் சொல்லப்பட வேண்டியவை என்பதால் உங்களைத் தேர்ந்தெடுக்கின்றன. பாரத் பாக்ய விதாதா அப்படிப்பட்ட ஒரு திரைப்படம். நடிகையாகவும் தயாரிப்பாளராகவும், 26/11 தாக்குதலின்போது பயங்கரவாதத்திற்கும் மனிதநேயத்திற்கும் இடையில் அச்சமின்றி நின்ற சுகாதாரப் பணியாளர்களின் சொல்லப்படாத கதைகளை உயிர்ப்பிப்பது எனக்கு மிகவும் முக்கியமானதாக இருந்தது. அவர்களின் தைரியம் அங்கீகாரத்தால் இயக்கப்படவில்லை; அசைக்க முடியாத கடமை உணர்வும் கருணையும் தான் அதற்கு காரணம். சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்த திரைப்படம் வெளியாகிறது என்பது அதன் செய்தியை மேலும் அர்த்தமுள்ளதாக மாற்றுகிறது. இந்தியாவின் ஆன்மா, எல்லைப் பாதுகாப்பில் நிற்பவர்களால் மட்டுமல்ல, நெருக்கடியான தருணங்களில் அசாதாரண சவால்களை எதிர்கொள்ளும் சாதாரண குடிமக்களாலும் வரையறுக்கப்படுகிறது என்பதை இது நினைவூட்டுகிறது. இந்தி ZEE5-இல் இந்த திரைப்படத்தை பார்க்கும் பார்வையாளர்கள், அவர்களின் தியாகங்களுடன் இணைந்து, இந்த கதைக்கு ஊக்கமளித்த எண்ணற்ற உண்மையான நாயகர்களை நினைவுகூருவார்கள் என்று நம்புகிறேன்” என்றார்.


எழுத்தாளர் - இயக்குநர் மனோஜ் தபாடியா கூறுகையில், “ஆரம்பத்திலிருந்தே, 26/11 கதையை இதுவரை ஆராயப்படாத ஒரு கோணத்தில் சொல்ல வேண்டும் என்பதே எங்கள் நோக்கம். நாடு முழுவதும் பாதுகாப்புப் படைகளின் வீரத்தை நினைவுகூரும் நிலையில், அந்த இரவு காமா மருத்துவமனைக்குள் சம அளவிலான அசாதாரண வீரச் செயல்களும் நடைபெற்றன. மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவமனை பணியாளர்கள், தங்களைச் சுற்றியிருந்த பெரும் ஆபத்துகளுக்கு மத்தியிலும் நோயாளிகளை தொடர்ந்து பராமரித்தனர். பாரத் பாக்ய விதாதா அவர்கள் காட்டிய மனவலிமை, மனிதநேயம் மற்றும் அமைதியான வீரத்திற்கான எங்கள் அஞ்சலியாகும். இந்த சுதந்திர தினத்தில் இந்தி ZEE5 வழியாக இந்த திரைப்படம் நாடு முழுவதும் உள்ள பார்வையாளர்களை சென்றடைவதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்” என்றார்.


பாரத் பாக்ய விதாதா திரைப்படம் ஆகஸ்ட் 14, 2026 அன்று இந்தி ZEE5-இல் பிரத்யேகமாக பிரீமியர் ஆகிறது.

First Song from Dulquer Salmaan's I Am Game Released; Film Set for Worldwide Release on August 20

 *துல்கர் சல்மானின் 'ஐ ம் கேம்- I Am Game' திரைப்படத்தின் முதல் பாடல் வெளியீடு ஆகஸ்ட் 20ஆம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் !*



துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகி வரும் ' ஐ ம் கேம்' திரைப்படத்தின் முதல் பாடல் வெளியாகி உள்ளது. 'அருகே அருகே' ( Arugey Arugey..) என பெயரிடப்பட்டுள்ள இப்பாடலுக்கு ஜேக்ஸ் பிஜாய் இசையமைத்துள்ளார். பாடலை பாடலாசிரியர் விக்னேஷ் ராமகிருஷ்ணா எழுத, பின்னணி பாடகர் அர்மான் மாலிக் பாடியுள்ளார். இந்தப் பாடல் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளிலும் வெளியிடப்பட்டுள்ளது. மலையாள பதிப்பிற்கு பாடலாசிரியர் ஷார்பு எழுத, பின்னணி பாடகர் அர்மான் மாலிக் பாடியிருக்கிறார். தெலுங்கு பதிப்பின் பாடலை சனாரே எழுத, அர்மான் மாலிக் பாடியுள்ளார். இந்தி பதிப்பின் பாடலை நுமன் கோகர் எழுத, அர்மான் மாலிக் பாடியுள்ளார். கன்னட பதிப்பின் பாடலை ஹிருதயா சிவா எழுத, பாடகர் அனிருத் சுஸ்வரம் பாடியுள்ளார். 


ரசிகர்கள் மற்றும் திரைப்பட ஆர்வலர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள :ஐ அம் கேம்' திரைப்படம் - ஆகஸ்ட் 20ஆம் தேதி ஓணம் பண்டிகையை முன்னிட்டு உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. துல்கர் சல்மானின் வேஃபரர் ஃபிலிம்ஸ் - Wayfarer Films தயாரிப்பில் உருவாகும் இந்த பிரம்மாண்டமான ஃபேண்டஸி திரில்லர் திரைப்படம்-  துல்கரின் திரை பயணத்திலேயே மிக பெரிய படமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தை நஹாஸ் ஹிதாயத் இயக்குகிறார். வேஃபரர் பிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர்கள் துல்கர் சல்மான் மற்றும் ஜோம் வர்கீஸ் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். இப்படத்திற்கு சஜீல் பாபா - இஸ்மாயில் அபுபக்கர் மற்றும் பிலால் மொய்து ஆகியோர் இணைந்து திரைக்கதை எழுதியுள்ளனர். வசனங்களை சஜீல் பாபா - ஆதர்ஷ் சுகுமாரன் மற்றும் ஷபாஸ் ரஷீத் ஆகியோர் இணைந்து எழுதியுள்ளனர். 


'அருகே அருகே..' எனத் தொடங்கும் இந்த பாடல் வெளியான உடனேயே ரசிகர்களின் மனதை கவர்ந்து சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அத்துடன் இப்படம் குறித்த ரசிகர்களின் எதிர்பார்ப்பை இப்பாடல் மேலும் அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.‌ முன்னதாக இப்படத்தின் ட்ரெய்லர் பார்வையாளர்களிடம் அமோக வரவேற்பை பெற்றது. தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி மற்றும் கன்னட மொழிகளில் வெளியான இந்த ட்ரெய்லர் இந்தியா முழுவதும் பெரும் கவனத்தை ஈர்த்தது. 


அற்புதமான காட்சிகள் - பிரமிக்க வைக்கும் சண்டைக் காட்சிகள்-  விறுவிறுப்பான சேசிங் காட்சிகள்-  என படத்தின் ட்ரெய்லர் ஆரம்பம் முதல் இறுதி வரை பார்வையாளர்களை இருக்கையின் நுனிக்கு வரவழைக்கும் வகையில் அமைந்திருந்தது. தமிழ் மற்றும் மலையாள திரையுலக ரசிகர்கள் இதுவரை கண்டிராத வகையில் ஒரு ஸ்டைலான ஃபேண்டஸி திரில்லர் படமாக இது அமையும் என்றும்  உறுதியளிக்கப்படுகிறது. இதில் துல்கர் சல்மான் மிகவும் ஸ்டைலான மற்றும் மாஸான தோற்றத்தில் தோன்றுகிறார். இது ரசிகர்கள் மற்றும் திரைப்பட ஆர்வலர்களின் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது. தென்னிந்தியாவில் நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ள ' ஐ அம் கேம்' மலையாள திரையுலகின் மிகப்பெரிய வெளியீடுகளில் ஒன்றாக அமைய உள்ளது. இப்படத்தின் ஸ்டைலான போஸ்டர்களுக்கும் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. 


துல்கர் சல்மானின் 40 வது திரைப்படமாக உருவாகும் இந்த பிரம்மாண்ட பட்ஜெட்டிலான ஃபேண்டஸி திரில்லர் திரைப்படத்தில் ஆண்டனி வர்கீஸ், மிஷ்கின், கயாடு லோஹர், கதிர், பார்த் திவாரி, சம்யுக்தா விஸ்வநாதன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்தின் இசை உரிமையை ஜீ மியூசிக் நிறுவனம் பெற்றுள்ளது. இப்படத்தின் ட்ரெய்லர் மற்றும் புதிதாக வெளியான பாடல் ஆகியவை ஜேக்ஸ் பிஜாயின் இசை - ஜிம்ஷி காலீத்தின் ஒளிப்பதிவு மற்றும் அன்பறிவ் மாஸ்டர்களின் சண்டைக் காட்சிகள் - ஆகியவை படத்தின் முக்கிய சிறப்பம்சங்களாக அமையும் என்பதை உணர்த்துகின்றன. 


மாபெரும் வெற்றி படமான லோகா ( Lokah) படத்தை தொடர்ந்து வேஃபரர் பிலிம்ஸ் ( Wayfarer Films) தயாரிக்கும் அடுத்த படம் இதுவாகும். அதே போல் பிளாக் பஸ்டர் ஹிட் படமான 'RDX -ஆர் டி எக்ஸ்' படத்திற்குப் பிறகு இயக்குநர் நஹாஸ் ஹிதாயத் இயக்கும் அடுத்த படமாகவும் இது அமைந்துள்ளது. இப்படம் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் இந்தியா முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. 


லைன் புரொடியூசர் : பிபின் பெரும்பில்லி 

ஒளிப்பதிவு : ஜிம்ஷி காலீத் 

இசை : ஜேக்ஸ் பிஜாய் 

படத்தொகுப்பு : சமன் சாக்கோ 

தயாரிப்பு வடிவமைப்பு : அஜயன் சாலிசேரி

தயாரிப்பு கட்டுப்பாட்டாளர் : தீபக் பரமேஸ்வரன் 

VFX : தௌஃபீக் ( Eggwhite) 

மக்கள் தொடர்பு : யுவராஜ்

மார்க்கெட்டிங் ஹெட் : விஜித் விஸ்வநாதன்


*First Song from Dulquer Salmaan's I Am Game Released; Film Set for Worldwide Release on August 20*


The first song from Dulquer Salmaan's upcoming film I Am Game has been released. Titled "Arugey Arugey," the song has been composed by Jakes Bejoy. The Malayalam version is sung by Armaan Malik, with lyrics penned by Sharfu. The track has been released in Malayalam, Tamil, Telugu, Kannada, and Hindi. The Tamil version features vocals by Armaan Malik with lyrics by Vignesh Ramakrishna. The Telugu version has lyrics by Sanare and is also sung by Armaan Malik. In Hindi, the lyrics are written by Numan Khoker, with Armaan Malik lending his voice, while the Kannada version features lyrics by Hrudaya Shiva and vocals by Aniruddh Suswaram.


One of the most anticipated films among fans and movie lovers, I Am Game is scheduled for a worldwide theatrical release as an Onam release on August 20, 2026. Produced by Dulquer Salmaan's Wayfarer Films, the big-budget fantasy thriller is being touted as the biggest film of Dulquer's career. The film is directed by Nahas Hidayath. Produced by Dulquer Salmaan and Jom Varghese under the Wayfarer Films banner, the screenplay has been written by Sajeer Baba, Ismail Aboobacker, and Bilal Moidu, while the dialogues are jointly penned by Sajeer Baba, Adarsh Sukumaran, and Shabaz Rasheed.


The song has instantly struck a chord with audiences and has gone viral across social media soon after its release. It is also noteworthy that the track further elevates the audience's expectations for the film. Earlier, the film's trailer received a phenomenal response from viewers. Released in Malayalam, Tamil, Telugu, Hindi, and Kannada, the trailer attracted widespread pan-Indian attention.


The gripping trailer kept audiences hooked from start to finish with its stunning visuals, breathtaking action, and high-octane chase sequences. The film promises to be a stylish fantasy thriller unlike anything Malayalam cinema audiences have witnessed before. Dulquer Salmaan appears in a mega-stylish mass avatar that has generated tremendous excitement among fans and moviegoers. Shot across more than 100 locations in South India, I Am Game is set to become one of the biggest releases in Malayalam cinema. The film's stylish posters have also received an overwhelming response.


Marking Dulquer Salmaan's 40th film, the big-budget fantasy thriller features an ensemble cast including Antony Varghese, Tamil actor-director Mysskin, Kayadu Lohar, Kathir, Parth Tiwari, and Tamil actress Samyuktha Viswanathan, among others. Zee Music has acquired the film's music rights. The trailer and the newly released song hint that Jakes Bejoy's music, Jimshi Khalid's visuals, and the action choreography by Anbariv Masters will be among the film's biggest highlights.


I Am Game is also the next production from Wayfarer Films following the mega blockbuster Lokah. It also marks director Nahas Hidayath's next film after the blockbuster RDX. The film will have a pan-Indian theatrical release in Malayalam, Tamil, Telugu, Hindi, and Kannada.


Line Producer: Bibin Perumbilly, Cinematography: Jimshi Khalid, Music: Jakes Bejoy, Editing: Chaman Chacko, Production Heads: Sujoy James, Devadevan, Production Designer: Ajayan Chalissery, Makeup: Ronex Xavier, Costume: Mashar Hamsa, Production Controller: Deepak Parameswaran, Associate Director: Rohith Chandrasekhar, Lyrics: Manu Manjith, Vinayak Sasikumar, VFX: Thoufeeq (Eggwhite), Poster Design: Ten Point, Sound Design: Sync Cinema, Sound Mix: Kannan Ganapathy, Stills: SBK, Marketing Head: Vijith Viswanathan.


 https://www.youtube.com/watch?v=ubEBotsVatU

Arka Mediaworks and Showing Business' Don't Trouble the Trouble Electrifying First Single "Cakeu Walku" Music Video ft. Fahadh Faasil, Kaala Bhairava, Vaasi is out now*

 *அர்கா மீடியா ஒர்க்ஸ் மற்றும் ஷோயிங் பிசினஸ் நிறுவனங்களின் “டோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள்  ”  ( Don’t Trouble the Trouble )  மின்னல் வேக ஃபர்ஸ்ட் சிங்கிள் “கேக்கு வாக்கு” ( Cakeu Walku )  இசை வீடியோ வெளியாகியுள்ளது.*



பன்முகரி திறமை கொண்ட நடிகர் ஃபஹத் பாசில், ‘பாகுபலி’ போன்ற மாபெரும் வெற்றிப் படங்களை உருவாக்கிய தயாரிப்பு நிறுவனமான அர்கா மீடியா ஒர்க்ஸ் மற்றும் தொலைநோக்கு படைப்பாளி  இயக்குநர் எஸ்.எஸ். ராஜமௌலி ஆகியோரின் கூட்டணி இணையும் போது, ‘Don’t Trouble the Trouble’ போன்ற ஒரு மாயாஜாலமான படைப்பு உருவாகிறது. 


ஷோயிங் பிசினஸ் பேனரின் கீழ் தனது முதல் விநியோக முயற்சியான ‘பிரேமலு’ மூலம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற தயாரிப்பாளர் எஸ்.எஸ். கார்த்திகேயா, தற்போது இந்தியாவின் பெருமைக்குரிய ‘பாகுபலி’ திரைப்படத் தொடரைத் தயாரித்த புகழ்பெற்ற அர்கா மீடியா ஒர்க்ஸ் இணைந்து இந்த பிரம்மாண்டமான படைப்பை உருவாக்கி வருகிறார்.


“டோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள்”  ( Don’t Trouble the Trouble ) எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை அறிமுக இயக்குநர் ஷஷாங்க் எலெட்டி இயக்குகிறார். ஃபஹத் பாசில் இப்படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். பாராட்டுகளைப் பெற்ற தயாரிப்பாளர்களான ஷோபு யர்லகட்டா மற்றும் பிரசாத் தேவினேனி, எஸ்.எஸ். கார்த்திகேயாவுடன் இணைந்து இந்த சுவாரஸ்யமான படைப்பை தயாரிக்கின்றனர். ரசிகர்களிடையே எதிர்பார்ப்பையும் ஆர்வத்தையும் ஏற்படுத்திய டீசரைத் தொடர்ந்து, தற்போது “கேக்கு வாக்கு” ( Cakeu Walku )  வீடியோ பாடலை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.


கால பைரவா இசையமைத்துள்ள இந்தப் பாடல், சூரி கதாபாத்திரத்தையும் அவரது வித்தியாசமான பைத்தியக்காரத்தனத்தையும் ஒரு தனித்துவமான பின்னணியில் அறிமுகப்படுத்துகிறது. 


கால பைரவா, ஃபஹத் பாசில்  மற்றும் சாரா ஆகியோர் இடம் பெறும் சிறப்பு இசை வீடியோவை படக்குழுவினர் உருவாக்கியுள்ளனர். ஆரம்பத்தில் கூலான பாடலாகத் தொடங்கும் இது, கால பைரவா தனது துள்ளல் நிறைந்த இசையுடன் களமிறங்கியதும் முழுக்க முழுக்க வித்தியாசமான உற்சாகமான அனுபவமாக மாறுகிறது. இளம் இசையமைப்பாளரின் மின்னல் வேக இசையமைப்பும், அவரது நடன அசைவுகளும் ரசிகர்களை கவர்கின்றன.


கால பைரவா மற்றும் வாசி இணைந்து இந்தப் பாடலுக்கான கவர்ச்சிகரமான வரிகளை எழுதியுள்ளனர். சூரியின் துணிச்சலான தன்மையையும், எந்தவொரு சவாலான பணியாக இருந்தாலும் அது அவருக்கு மிகவும் எளிதானது என்பதையும் பாடல் வரிகள் எடுத்துக்காட்டுகின்றன. இவர்களே பாடலையும் மிகுந்த உற்சாகத்துடன் பாடியுள்ளனர். பகத் பாசிலின் எனர்ஜியும், அவரது வைப்பும் ‘ஆவேசம்’ படத்தின் ரங்கா சேட்டாவை அனைவருக்கும் நினைவூட்டுகிறது. அவரது அழகான நடன அசைவுகள், அனைவரையும் கவரும் புன்னகை மற்றும் வசீகரம் ஆகியவை பார்ப்பதற்கு விருந்தாக அமைந்துள்ளன. சாராவும் இந்த வேடிக்கையான இசை வீடியோவில் இணைந்து, பாடலை மேலும் சிறப்பாக்குகிறார்.


மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த ஆல்பத்தின் தொடக்கமே ஒரு சார்ட்பஸ்டர் வெற்றியாக அமைந்துள்ளது. “டோன்ட் டிரபிள் த டிரபிள்”  ( Don’t Trouble the Trouble )  திரைப்படம் ஒரு வித்தியாசமான ஃபேண்டஸி என்டர்டெய்னராக உருவாகியுள்ளது. இப்படம் 2026 செப்டம்பர் 11ஆம் தேதி பிரம்மாண்டமாக வெளியாகத் தயாராகி வருகிறது. 


*நடிகர்கள்:*


ஃபஹத் பாசில் , சாரா, சௌரப் சச்தேவா மற்றும் பலர்


*தொழில்நுட்பக் குழு:*


இயக்கம்: ஷஷாங்க் எலெட்டி

பேனர்கள்: Arka Mediaworks & Showing Business

தயாரிப்பாளர்கள்: ஷோபு யர்லகட்டா, பிரசாத் தேவினேனி, எஸ்.எஸ். கார்த்திகேயா

இசை: கால பைரவா


*Arka Mediaworks and Showing Business' Don't Trouble the Trouble Electrifying First Single "Cakeu Walku" Music Video ft. Fahadh Faasil, Kaala Bhairava, Vaasi is out now*


When the most versatile actor, Fahadh Faasil, meets the mighty industry-hit Baahubali makers and maverick director S.S. Rajamouli, a magical phenomenon like "Don't Trouble the Trouble" happens. Passionate producer SS Karthikeya, who tasted massive success with his debut distribution venture Premalu under the Showing Business banner, is now bringing this ambitious project in association with Arka Media Works, the renowned producers of India's pride and joy, the Baahubali franchise.


The film, titled "Don't Trouble the Trouble," is helmed by debutant Shashank Yeleti. Versatile actor Fahadh Faasil plays the lead role in this fantasy entertainer. Acclaimed producers Shobu Yarlagadda and Prasad Devineni have joined hands with SS Karthikeya to produce this exciting, content-rich film. After the entertaining and curiosity-raising teaser, the makers unveiled Cakeu Walku video song.


This song, composed by Kaala Bhairava, introduces the character of Suri and his madness in a unique setup. The makers have created a special music video featuring Kaala Bhairava, Fahadh Faasil, and Ssara. What begins as a cool song turns into full-on whacky mode when Kaala Bhairava kicks in with thumping beats. It’s an electrifying composition by the young music director, and his moves also impress.


Kaala Bhairava and Vaasi penned catchy lyrics for the song, highlighting Suri’s daredevil nature and how every task is a cakewalk for him. They also sing the song with great energy. Fahadh Faasil’s energy and vibe remind everyone of Ranga Chetta from Aavesham. His graceful moves, infectious smile, and charm make it an absolute eye feast. Even Ssara joins the fun music video and makes it even more special.


This is a chartbuster start to what promises to be one of the most exciting albums. Don't Trouble the Trouble" promises a fantasy entertainer and is gearing up for grand release on September 11th, 2026. The film's music will be composed by Kaala Bhairava.


*Starring* : Fahadh Faasil, Ssara, Saurabh Sachdeva and others


*Technical Team:*


Directed by: Shashank Yeleti.

Banners: Arka Mediaworks & Showing Business

Producers: Shobu Yarlagadda , Prasad Devineni, SS Karthikeya

Music: Kaala Bhairava


 https://www.youtube.com/watch?v=JNzRlQSpAtA

விஜய் சேதுபதி நடிக்கும் 'ஸ்லம் டாக் : 33 டெம்பிள் ரோடு' திரைப்படத்தில் நடிகை தபுவின் 'கேரக்டர் கிளிம்ப்ஸ்’ வெளியீடு

 *விஜய் சேதுபதி நடிக்கும் 'ஸ்லம் டாக் : 33 டெம்பிள் ரோடு' திரைப்படத்தில் நடிகை தபுவின் 'கேரக்டர் கிளிம்ப்ஸ்’ வெளியீடு*



*விஜய் சேதுபதி - பூரி ஜெகன்நாத் கூட்டணியில் தயாராகி, பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் ஆக்சன் டிராமா 'ஸ்லம் டாக்: 33 டெம்பிள் ரோடு'.*


இப்படத்தில் சக்தி வாய்ந்த அதிகாரி கௌரி ஹெக்டேவாக நடிக்கும் நடிகை தபு கதாபாத்திரத்தை, சுவராசியமான பிரத்யேக முன்னோட்டத்தின் மூலம் படக்குழு அறிமுகப்படுத்தி இருக்கிறது.


துடிப்பான திரைப்பட இயக்குநர் பூரி ஜெகன்நாத்தையும், புகழ் பெற்ற நடிகரான 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதியையும் முதல் முறையாக ஒன்றிணைத்துள்ள பான் இந்திய ஆக்சன் என்டர்டெய்னர் படமான 'ஸ்லம் டாக் : 33 டெம்பிள் ரோடு' திரைப்படம் - உண்மையான உணர்ச்சிகள் - அதிரடியான சண்டைக் காட்சிகள்-  புதிரான மர்மம்-  ஆகியவற்றின் கலவை என உறுதியளிக்கிறது. 


கௌரி ஹெக்டேவாக நடிக்கும் தபுவின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட பிறகு, படக் குழுவினர் தற்போது அவரது ஆளுமை மிக்க கதாபாத்திரத்தை மேலும் விவரிக்கும் வகையில்... ஒரு ஆற்றல் பெற்ற பிரத்யேக முன்னோட்டத்தை வெளியிட்டுள்ளனர். 


நகரின் சேரி பகுதிகளை பின்னணியாகக் கொண்ட இந்த முன்னோட்டம்.. படத்தின் கடினமான உலகத்தை நிலை நிறுத்த தொடங்கி, பின்னர் தபுவை ஒரு குறிப்பிடத்தக்க விதத்தில் அறிமுகப்படுத்துகிறது. அவர் ஒரு காரில் வந்து சிகரெட்டை பற்ற வைத்து.. உடனடியாக நிலைமையை கட்டுப்பாட்டிற்கு கொண்டு வருகிறார். ஒரு உள்ளூர் ரவுடிக்கு அவர் விடுத்த கடுமையான எச்சரிக்கையும்... அதைத் தொடர்ந்து அவர் கொடுத்த 'பளார்' என்ற அறையும்... கௌரி ஹெக்டே அதிகாரத்தைத் தேடுபவர் அல்ல... அதை கோருபவள் என்பதை உடனடியாக பிரதிபலிக்கிறது. 


அந்த கதாபாத்திரம் - ஒரு சக்தி வாய்ந்த அதிகாரியாக மட்டுமல்லாமல் முற்றிலும் அச்சம் ஏதும் இல்லாத மற்றும் சமரசம் ஏதும் இல்லாத ஒருவராகவும் காட்சிப்படுத்தப்படுகிறார். கௌரி ஹெக்டே - தெருக்களின் நடுவில் விரோத மனப்பான்மை கொண்ட உள்ளூர் மக்களையும், ரவுடிகளையும் எதிர்கொள்கிறார். அவர்களை உடல் ரீதியாக தாக்கி சூழலை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர ஒரு மரத்தடியை பயன்படுத்துகிறார். காவல்துறையினரும், கூட்டமும் அவரை சூழ்ந்து இருந்தாலும்... அவர் சற்றும் கலங்காமல் தனது அதிகாரத்தை எதிர்ப்பவர்களை ஆக்ரோஷமாக அடக்குகிறார். 


அந்தக் காட்சி முழுவதும் மின்னும் 'ஒரு அச்சமற்ற பெண்', 'சக்தி வாய்ந்த அதிகாரி', 'இரக்கமற்றவர் ', 'கருணையற்றவர்', 'துறையின் பிசாசு' போன்ற வார்த்தைகள் அவரது கதாபாத்திரத்தின் தன்மையை தெளிவாக உணர்த்துகின்றன. இறுதியில் அவர் தன்னை முழு அதிகாரத்துடன் அறிமுகப்படுத்திக் கொள்ளும் போது தான் இதன் உச்சக்கட்டம் வெளிப்படுகிறது. 'கௌரி ஹெக்டே, துணை ஆணையர், வருமான வரித்துறை' எனும் அந்த அறிமுகம்... ஒரு மிகச்சிறந்த பூரி ஜெகன்நாத் பிரத்யேகமாக வடிவமைக்கும் கதாபாத்திரத்திற்கே உரிய வீரியத்தையும், கம்பீரத்தையும் கொண்டுள்ளது. இந்த முன்னோட்டத்தில் விஜய் சேதுபதியின் சில காட்சிகளும் இடம் பெற்றுள்ளன. 


தபு கம்பீரமாகவும், மிடுக்காகவும் தோன்றுகிறார். தனது திரை தோற்றத்தில் அந்த கதாபாத்திரத்தை முழுமையாக தனதாக்கிக் கொள்கிறார். அவர் கௌரி ஹெக்டே கதாபாத்திரத்திற்கு ஒரு தனித்துவமான அதிகாரத்தையும், அச்சுறுத்தலையும் கொண்டு வருகிறார். இது அந்த கதாபாத்திரத்தை உடனடியாக காண வேண்டும் என்ற ஆர்வத்தை தூண்டுவதாக மாற்றுகிறது. பூரி ஜெகன்நாத் - மறக்க முடியாத கதாபாத்திரங்களை வடிவமைத்து அவற்றை தாக்கத்தை ஏற்படுத்து வகையில் அறிமுகப்படுத்துவதில் எப்போதுமே ஒரு தனித்துவமான திறமை கொண்டவர். மேலும் கௌரி ஹெக்டே-  அவரின் மற்றொரு வசீகரிக்கும் புதிய வரவாக தோன்றுகிறார். 


இந்த படத்திற்கான நடிகர் குழுவும் படத்திற்கு கூடுதல் பலம் சேர்க்கிறது. சம்யுக்தா நாயகியாக நடிக்க, துனியா விஜய் வில்லனாக நடிக்கிறார். பிரம்ஹாஜீ மற்றும் விடிவி கணேஷ் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.‌


இப்படத்தின் இருண்ட மற்றும் யதார்த்தமான கதைக் களத்திற்கு ( Dark & Gritty World) தொழில்நுட்பக் குழுவினர் மிகச் சிறந்த பங்களிப்பை வழங்கி உள்ளனர்.  சாம் கே. நாயுடு ஒளிப்பதிவையும், ஹர்ஷவர்தன் ராமேஸ்வர் இசையமைப்பையும், சந்தோஷ் நூஜில்லா படத்தொகுப்பையும் மேற்கொள்கின்றனர். 


'ஸ்லம்டாக் : 33 டெம்பிள் ரோடு' திரைப்படத்தை பூரி கனெக்ட்ஸ் நிறுவனத்தின் சார்பில் பூரி ஜெகன்நாத் மற்றும் சார்மி கவுர் ஆகியோர், ஜே பி மோஷன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளரான ஜே பி நாராயண ராவ் கொண்ட்ரோல்லாவுடன் இணைந்து தயாரிக்கின்றனர். 


டைட்டில் லுக்- ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்-  டீசர் - தற்போது வெளியாகி கவனம் ஈர்க்கக்கூடிய கிளிம்ப்ஸ்- ஆகியவற்றின் மூலம் இப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக கதாபாத்திரங்கள் மற்றும் அவற்றின் உலகம் குறித்த ஆர்வத்தை இவை மேலும் தூண்டுகிறது. 


இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய இந்திய மொழிகளில் இந்தியா முழுவதும் பான் இந்திய திரைப்படமாக வெளியாக தயாராகி வருகிறது. 


நடிகர்கள் :


விஜய் சேதுபதி, சம்யுக்தா, தபு, துனியா விஜய் குமார்,பிரம்ஹாஜீ,விடிவி கணேஷ் .


தொழில்நுட்பக் குழு : 


எழுத்து & இயக்கம் : பூரி ஜெகன்நாத் 

தயாரிப்பாளர்கள் : பூரி ஜெகன்நாத் - சார்மி கவுர் & ஜே பி நாராயணன் ராவ் கொண்ட்ரோல்லா 

வழங்குபவர் : சார்மி கவுர் 

தயாரிப்பு நிறுவனம்: பூரி கனெக்ட்ஸ் 

CEO :  விஷ்ணு ரெட்டி 

இசை:  ஹர்ஷவர்தன் ராமேஸ்வர்

ஒளிப்பதிவு : சாம் கே. நாயுடு 

படத்தொகுப்பு : சந்தோஷ் நூஜில்லா 

 VFX : அனில் பாடூரி 

மக்கள் தொடர்பு : யுவராஜ் 

மார்க்கெட்டிங் : ஹாஷ்டாக் மீடியா

*Introducing Tabu As A Powerful Officer Gowri Hegde From Vijay Sethupathi, Puri Jagannadh’s Highly Anticipated Action-Drama Slum Dog, Through Intriguing Glimpse*

 

Bringing together dynamic filmmaker Puri Jagannadh and acclaimed actor Vijay Sethupathi for the first time, the pan-India action drama Slum Dog: 33 Temple Road promises a mix of raw emotion, hard-hitting action and mystery. After unveiling Tabu’s first look as Gowri Hegde, the makers have now released a powerful glimpse that offers a closer look at her commanding character.

 

Set against the backdrop of the city’s slums, the glimpse opens by establishing the gritty world of the film before introducing Tabu in a striking manner. She arrives in a car, lights a cigarette and immediately takes charge of the situation. Her stern warning to a local goon, followed by a slap, instantly establishes Gowri Hegde as a woman who demands authority rather than seeks it.

 

The character is not merely shown as a powerful officer but as someone who is completely fearless and uncompromising. Gowri Hegde confronts hostile locals and goons in the middle of the streets, taking them on physically and using a wooden baton to bring the situation under control. Even with police personnel and a crowd surrounding her, she remains unfazed, aggressively subduing those who challenge her authority.

 

The words flashed throughout the glimpse- One Fearless Woman, Powerful Officer, Ruthless, Merciless and Devil In The Department, offer a clear indication of the nature of her character. The highlight arrives towards the end when she introduces herself with complete authority: “Gowri Hegde, Deputy Commissioner, Income Tax.” The introduction has the punch and swagger of a quintessential Puri Jagannadh character. The glimpse also offers brief glimpses of Vijay Sethupathi.

 

Tabu looks commanding and intense, completely owning the character with her screen presence. She brings a distinct sense of authority and menace to Gowri Hegde, making the character instantly intriguing. Puri Jagannadh has always had a knack for designing memorable characters and introducing them with impact, and Gowri Hegde appears to be another fascinating addition.

 

The supporting cast further strengthens the project. Samyuktha plays the female lead, while Duniya Vijay takes on a negative-shaded role. Brahmaji and VTV Ganesh are also part of the prominent cast.

 

The technical team complements the film’s dark and gritty world. Sam K Naidu handles the cinematography, Harshavardhan Rameshwar is composing the music, and Santosh Noozilla is responsible for the editing.

 

Slum Dog: 33 Temple Road is produced by Puri Jagannadh and Charmme Kaur under the banner of Puri Connects, in association with JB Narayan Rao Kondrolla’s JB Motion Pictures. The film has been steadily building anticipation with its title announcement, first-look poster, teaser and now this striking glimpse, which further elevates curiosity around the characters and their world.

 

The film is gearing up for a pan-India release in Telugu, Tamil, Kannada, Malayalam and Hindi.

 

Cast: Vijay Sethupathi, Samyuktha, Tabu, Duniya Vijay Kumar, Brahmaji, VTV Ganesh

 

Technical Crew:

Writer, Director: Puri Jagannadh

Producers: Puri Jagannadh, Charmme Kaur, JB Narayan Rao Kondrolla

Presents: Charmme Kaur

Banner: Puri Connects

CEO: Vishu Reddy

Music: Harshavardhan Rameshwar

DOP: Sam K Naidu

Editing: Santosh Noozilla

VFX: Anil Paduri

PRO: Yuvraaj

Marketing: Haashtag Media


https://www.youtube.com/watch?v=Ia5k1u4ExlI&list=PLAJYBWGrOvf8