-

Loading latest news...

*Vikkals Vikram and Arathy Krishna's Lightweight, Baby! unveils a fun and quirky first look*

 *Vikkals Vikram and Arathy Krishna's Lightweight, Baby! unveils a fun and quirky first look* 



 *Chennai, August 20:* Hitha Studios, the production house behind the upcoming Tamil romantic entertainer *Lightweight, Baby!,* has unveiled the film's first look, starring stand-up comedian Vikkals Vikram and fitness personality Arathy Krishna.


The first look offers a glimpse into the film's unique world, bringing together romance, comedy and competitive fitness in an unexpected way. Set against a vibrant gym backdrop, the poster features Vikkals Vikram in a playful situation as Arathy Krishna, in her element as a fitness personality, shares the frame with him. The contrasting personalities of the lead pair hint at the fun, chemistry and chaos that audiences can expect from the film.


The poster also brings the film's title to life with its playful visual treatment, reflecting the light-hearted and contemporary tone of the story.


For Vikkals Vikram, *Lightweight, Baby!* marks his first film as a leading man. Known for his stand-up comedy and his distinctive comic timing, Vikram also makes his writing contribution to the film as the dialogue writer. Arathy Krishna, who has built a strong presence in the fitness and bodybuilding community, makes her first major screen appearance as the female lead.


The unconventional pairing of a stand-up comedian and a fitness personality forms one of the film's key attractions. While the world of fitness provides the backdrop, *Lightweight, Baby!* explores the relationship between two people from very different worlds, bringing together romance, humour, family expectations and personal ambition.


 *CAST* 


Vikkals Vikram

Arathy Krishna


 *TECHNICAL CREDITS* 


 *Produced by:* Hitha Studios


 *Written & Directed by:* KC Guru


 *Co-Producer:* Sagara Sandesh


 *Director of Photography:* Pramod Kotiyan


 *Music:* Sarvanaa Subramaniam


 *Editor:* Harish Komme


 *Dialogues:* Vikkals Vikram


 *Co-Director:* Kiran Tumbakere


 *Executive Producer:* Sharath Kumar N


 *Art Director:* Shankaragouda


 *Assistant Directors:* Ahmad Varadharajan, Prem Chandran


 *PRO* : Navaneetha Krishnan

ஊடகங்களுக்கும், ரசிகர்களுக்கும் நன்றி தெரிவித்த தி ஒன் சூர்யாவின் 'விஸ்வநாத் & சன்ஸ்' படக்குழு

 *ஊடகங்களுக்கும், ரசிகர்களுக்கும் நன்றி தெரிவித்த தி ஒன் சூர்யாவின் 'விஸ்வநாத் & சன்ஸ்' படக்குழு !* 



சிதாரா என்டர்டெயின்மென்ட் & ஃபார்ச்சூன் ஃபோர் சினிமாஸ் ஆகிய நிறுவனங்களின் தயாரிப்பில் வெங்கி அட்லூரி இயக்கத்தில் தி ஒன் 'சூர்யா' நடிப்பில் தயாராகி ஆகஸ்ட் 14ஆம் தேதி வெளியான விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படம் - பிரம்மாண்டமான வெற்றியை பெற்று ரசிகர்களின் பேராதரவுடன் வசூலில் சாதனை படைத்து வருகிறது. இதனால் மகிழ்ச்சியடைந்த படக்குழுவினர், படத்தை வெற்றி பெறச் செய்த ரசிகர்களுக்கும், ஊடகங்களுக்கும் நன்றி தெரிவித்துள்ளனர். 


இதனை முன்னிட்டு, சென்னையில் படக்குழுவினர் பங்கேற்ற பிரத்யேக நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் விநியோகஸ்தர் ஹரிதா லிங்கசாமி, நடிகர் சுனில் ரெட்டி, பாடலாசிரியர் பாலாஜி வேணுகோபால், நடிகைகள் ராதிகா சரத்குமார், பவானி ஸ்ரீ, மமீதா பைஜூ, இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார், இயக்குநர் வெங்கி அட்லூரி ஆகியோர் கலந்து கொண்டனர். 


இந்நிகழ்வில் பாடலாசிரியர் பாலாஜி வேணுகோபால் பேசுகையில், 



'' கடந்த 23 வருடங்களாக பேச்சு தான் என் வாழ்க்கையாக இருந்திருக்கிறது. ஏனெனில் நான் ஒரு ஆர்ஜே (RJ). இதுவரை ஆயிரக்கணக்கான மேடை நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளேன்.‌ திரைப்பட இயக்குநராகவும் மேடை ஏறி இருக்கிறேன். இணைய தொடரை இயக்கியதற்காகவும் மேடை ஏறி இருக்கிறேன். ஆனால் முதன்முறையாக பாடலாசிரியராக இந்த முறை மேடை ஏறி இருக்கிறேன். இது எனக்கு மிக முக்கியமான மேடை ஆகும். இது எனக்கு மிகவும் சந்தோஷத்தை அளிக்கிறது.‌


இந்தப் படத்தில் நானும், அருண் ராஜா காமராஜும் முதன்முறையாக இணைந்து பாடல்களை எழுதி இருக்கிறோம். 



சினிமாவிற்காக எந்த மேடை ஏறினாலும் நான் முதலில் நன்றி சொல்வது ஜி வி பிரகாஷ் குமாருக்கு தான். 2003 ஆம் ஆண்டில் அவர் 'வெயில்' படத்திற்கு இசையமைத்துக் கொண்டிருந்தபோது, 'உருகுதே மருகுதே' பாடலை போட்டுக் காண்பித்து இந்தப் பாடல் ரீச்சாகுமா? என என்னிடம் கேட்டிருக்கிறார்.  ஆனால் இப்போது அவர் எந்த அளவிற்கு ரீச் ஆகி இருக்கிறார் என்பது அனைவருக்கும் தெரியும். மூன்று தேசிய விருதுகளை பெற்றிருக்கிறார்.ஜி வி என்னுடைய நண்பர் என்பதைவிட என்னுடைய ஆசான். தற்போதுள்ள இளம் தலைமுறை இசைக் கலைஞர்களிடையே இசையின் அனைத்து விசயங்களையும் , நுட்பங்களையும் தெரிந்து இந்தியாவில் தயாரான அனைத்து ஜானரிலான படங்களுக்கும் இசையமைத்த ஒரே இசையமைப்பாளர் ஜி. வி. பிரகாஷ் குமார் தான்.  எனக்கு இந்த திரைப்படத்தில் பாடல் எழுதுவதற்கு வாய்ப்பு வழங்கிய ஜிவிக்கும், இயக்குநர் வெங்கி அட்லூரிக்கும் நன்றி. 


ஜி.வி. பிரகாஷ் மூலமாக எனக்கு அறிமுகமான ஆகச் சிறந்த மனிதநேய பண்பாளர் தான் வெங்கி அட்லூரி.  நீங்கள் பார்த்து ரசித்த விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படம்-  வெங்கியுடைய ஆர்ட் அல்ல.... ஹார்ட்.‌ இந்த படத்தின் திரைக்கதையை நான் ஓராண்டுக்கு முன்பே வாசித்து விட்டேன். வாசிக்கும் போதே பல இடங்களில் கண்கலங்கினேன். அதை அப்படியே திரையில் நேர்த்தியாக கடத்தி இருக்கிறார். அவருக்கு மிகச் சிறந்த எதிர்காலம் இருக்கிறது. இந்த வாய்ப்பு வழங்கியதற்காக அவருக்கும் நன்றி. 


சூர்யாவை 2003 ஆம் ஆண்டில் 'கஜினி' படத்திற்காக நேர்காணல் செய்தேன். நேர்காணலுக்காக ஒப்புக்கொண்ட நேரத்தை விட ஐந்து நிமிடம் தாமதமாக வந்தார். அதற்கும் அவர் காரணம் இல்லை. எங்கள் அலுவலகத்தில் இருந்த - இயங்கிய லிஃப்ட் தான் காரணம். அதற்கு அவர் வந்தவுடன் வருத்தம் தெரிவித்தார். ஐந்து நிமிடம் தாமதமாக வந்ததற்கு மன்னிக்கவும் என்று சொன்ன அந்த பண்பு... என்னை வியக்க வைத்தது. அவருடைய அந்த மனித நேயம் தான் இன்றும் அவருக்கு ஏராளமான ரசிகர்கள் பின் தொடர்வதற்கு காரணம். அதுவும் இந்தப் படத்தில் மக்கள் சூர்யாவை அதிக அளவு நேசித்தார்கள், விரும்பினார்கள், ஒரு குடும்பஸ்தனாக சூர்யாவை திரையில் காண்பித்த இயக்குநர் வெங்கி அட்லூரிக்கு ஒரு நன்றி.


படத்திற்கு ரசிகர்களின் வரவேற்பைக் காண திரையரங்கத்திற்கு சென்ற போது அங்கு ரசிகர்களின் அன்பும், ஆதரவும் எங்களை உற்சாகப்படுத்தியது. தி ஒன் 'சூர்யா'  போன்ற மாபெரும்  நட்சத்திர நடிகர் இது போன்றதொரு ஜானரில் ஒரு படத்தில் நடிப்பதற்கு நிறைய துணிச்சல் வேண்டும். அது அவரிடம் இருக்கிறது. அதற்காக அவருக்கும் நன்றி'' என்றார். 


நடிகை பவானி ஸ்ரீ பேசுகையில், 


'' மிகவும் சந்தோஷமாக இருக்கிறேன். இந்தப் படத்தில் ஒரு சிறிய பங்காக நான் இருந்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். எனக்கு இந்த படத்தில் சிறிய கதாபாத்திரம் தான். ஆனால் அதையும் இயக்குநர் நன்றாக எழுதியிருந்தார். மேக்னா என்ற அந்த கதாபாத்திரத்தை வழங்கியதற்காக இயக்குநருக்கு நன்றி. 


சிறிய வயதிலிருந்து திரையில் பார்த்து வியந்த நட்சத்திர நடிகரான தி ஒன் சூர்யாவுடன் இணைந்து நடிக்கிறோம் என்றவுடன் எனக்குள் பயம் இருந்தது. ஆனால் படப்பிடிப்பு தளத்திற்கு வந்தவுடன் இயல்பாக பேசி, 'மேக்னா கதாபாத்திரம் நல்ல கதாபாத்திரம், அதில் சிறப்பாக நடிக்க வேண்டும்' என ஊக்கம் கொடுத்தார். அவர் அப்படி சொன்ன பிறகு, எனக்குள் இருந்த பயம் நீங்கி இயல்பாகி விட்டேன். அவருடன் இணைந்து பணியாற்றிய நாட்கள் மறக்க முடியாதது. 


இந்தப் படத்தில் ராதிகா சரத்குமார் - மமீதா பைஜூவும் இரண்டு பவர் ஹவுஸ். திரையில் பார்த்தபோது இவர்களுடன் இருக்க வேண்டும் என்ற உணர்வு எனக்குள் ஏற்பட்டது. அவர்கள் இருவரும் தோன்றும் ஒவ்வொரு காட்சியும் முத்துக்கள் போல் இருந்தது. ரவீனா மேடத்துடன் பணியாற்றியதும் நல்ல அனுபவமாக இருந்தது. ஊட்டியில் படப்பிடிப்பு நடைபெற்ற அனைத்து நாட்களும் மறக்க முடியாதவை. அனைவருக்கும் நன்றி'' என்றார். 


நடிகை ராதிகா சரத்குமார் பேசுகையில், 


'' இந்தப் படத்தை வெற்றி பெறச் செய்த ஊடகத்தினருக்கும், ரசிகர்களுக்கும் நன்றி. 


இந்தக் காலத்தில் மற்றவர்களின் கவனத்தை கவர்ந்து அதை தக்க வைத்துக் கொள்வது என்பது குறைந்துவிட்டது. ஒரு நிமிடத்திற்கு மேல் யாரிடமும் பேச முடிவதில்லை. ஆனால்  ரசிகர்களை அன்பாலும் ... பாசத்தாலும்... ஒரே சிந்தனையுடன் இந்தப் படத்தை நிதானமாக கதையை சொல்லி.. அதில் ஒரு வெற்றியை பெற்று, அந்த மேடையில் நான் நின்று கொண்டிருக்கிறேன். இதை கேட்கும் போதும்... பேசும் போதும்... பெருமிதமாக இருக்கிறது. இந்த வெற்றியை அளித்த படக்குழுவினருக்கு என்னுடைய வாழ்த்துக்கள். 


இயக்குநர் வெங்கி இந்தப் படத்தின் கதையை ஒவ்வொரு காட்சியாக சொல்லும் போது அவரிடம், 'இந்த காட்சிகளில் எல்லாம் சூர்யா நடிக்க ஒப்புக்கொண்டாரா?' என கேட்டேன். அவர் இந்த காட்சிகளில் எல்லாம் சூர்யா நடிக்க ஒப்புக்கொண்டார் என என்னிடம் சொன்னார்.


அதன் பிறகு இயக்குநரிடம் 'இந்த படத்தில் ஹீரோயின் அழகாக இல்லை என்றால்... இந்த படம் ஓடாது' என்று சொன்னேன். அப்போது நாங்கள் அதற்காக பொருத்தமான நடிகையை தேடிக் கொண்டிருக்கிறோம் என்றார். அப்போது ஒரு நாள் 'டியூட்' படத்தின் படப்பிடிப்பு தளத்திற்கு சென்றிருந்தேன். அப்போது மமீதாவை அங்கு பார்த்தேன். அதன் பிறகு சரத்குமார் சார் மிகத் திறமையான பெண், நன்றாக நடிக்கிறார் எனச் சொன்னார். அதன் பிறகு இயக்குநர் வெங்கி அட்லூரி மமீதா தான் ஹீரோயின் என்று சொன்னவுடன் எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. 


இந்தப் படத்தை அனைவரும் பார்த்து இருக்கிறார்கள், ரசித்திருக்கிறார்கள். பல்வேறு விமர்சனங்களும் வந்திருக்கின்றன. அது மகிழ்ச்சியாக இருந்தது. இந்தப் படத்தை நானும், சரத் சார் திரையரங்கில் பார்த்தோம் . அவர் எந்த படத்தை பார்த்தாலும் ஏதாவது குறையை கண்டுபிடித்து அதனை இப்படி செய்திருக்கலாம். ..!அப்படி செய்திருக்கலாம் .. !என விமர்சனம் செய்வார். ஆனால் இந்த படத்தை பார்த்தவுடன் 'ஐ லவ் திஸ் மூவி. நன்றாக இருக்கிறது' என்றார். 


இந்தப் படத்தில் ஹீரோவிற்கு அவர்களுடைய அம்மா தான் உலகம். அம்மா உயிருடன் இருக்கும் வரை வேறு யாருடனும் பழகமாட்டார். ஆனால் அம்மா உயிரிழந்த உடன் அவருக்குள் ஏற்படும் அதிர்ச்சி... அடுத்த உறவுகளை நோக்கிய  அவரது பயணம்.. இந்த காட்சியில் வெங்கியை மனதார பாராட்டுகிறேன். அவருடைய 'லக்கி பாஸ்கர்' படத்தை பார்த்தேன். அது எனக்கு மிகவும் பிடித்திருந்தது. ஆனால் இந்தப் படத்தில் ஒரு புத்திசாலித்தனமான எழுத்து இருந்தது. 


கமல்ஹாசனை நேற்று கூட சந்தித்தேன். அப்போது அவர் புத்திசாலித்தனமாக எழுதுவது எப்படி? என்பது குறித்து பயிற்சியும் விவாதமும் நடத்தப்பட வேண்டும் என்றார். 


சினிமாவில் ஒவ்வொரு கதைக்கு பின்னால் ஒரு குடும்பம் இருக்கும். அந்த குடும்பத்தில் உள்ள அனைவரும் கஷ்டப்பட்டு வேலை செய்து வெற்றியடைய செய்ய வேண்டும் என்ற கனவு எல்லோருக்கும் இருக்கும். அந்த குடும்பத்திற்குள் ஒரு பந்தம் இருக்கும். அது சில படங்களில் முழுவதுமாக அமையும். அப்படி ஒரு திரைப்படம் தான் விஸ்வநாத் அண்ட் சன்ஸ். இந்த படத்தில் அனைவரும் ஒரு குடும்பமாகத்தான் இணைந்து பணியாற்றினார்கள்.


ஜிவி பிரகாஷ் குமார் ஒரு ஜீனியஸ்.சிவக்குமாருடன் ஒரு மணி நேரம் பேசிக் கொண்டிருந்தேன். இந்த திரைப்படம் 'அவன் அவள் அது' என்ற திரைப்படத்தின் வேறு ஒரு வெர்சன் என்று சொன்னேன். இதைப்போல் இந்தப் படத்தைப் பார்த்த ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வகையான நினைவுகளை தூண்டி இருக்கிறது. 


ஒரு நல்ல குடும்ப படம் என்று நான் பார்த்தது 'சூரியவம்சம்'. அது அந்த காலகட்டத்தில். அதற்குப் பிறகு நான் ரொம்ப ரசித்த படம் 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்'. இந்தப் படத்தில் நடித்திருக்கும் ஒவ்வொரு கதாபாத்திரங்களும் புத்திசாலித்தனமாக பேசும். ஒவ்வொரு கதாபாத்திரமும் தனக்கான நியாயத்துடன் நேர்மையாக பேசும். இதற்காக மீண்டும் ஒருமுறை வெங்கிக்கு நன்றி சொல்கிறேன். அவருக்கு சிறந்த எதிர்காலம் இருக்கிறது. அவர் தொடர்ந்து வெற்றி பெற வேண்டும் என வாழ்த்துகிறேன் '' என்றார். 


நடிகை மமீதா பைஜூ பேசுகையில், 


'' விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படக்குழுவினருக்கு வாழ்த்துக்கள். எனக்கு ஆதரவாக இருந்ததற்கும், வழிகாட்டியாக இருப்பதற்கும் நன்றி. சூர்யா சார்யை மிஸ் செய்கிறோம். இந்தப் படத்தை வெற்றி பெறச் செய்த ஊடகத்தினருக்கும் ரசிகர்களுக்கும் நன்றி. 


இதுவரை இந்தப் படத்தை பார்க்காதவர்கள் திரையரங்கத்திற்கு சென்று பாருங்கள் பார்க்க வேண்டும். இந்தப் படத்தை பார்த்துவிட்டு வெளியே வரும்போது மனதிற்குள் ஒரு மன நிறைவு ஏற்படும்'' என்றார். 


இசையமைப்பாளர் ஜி. வி. பிரகாஷ் குமார் பேசுகையில்,


 '' இந்தப் படத்திற்கு இசையமைக்கும் வாய்ப்பை வழங்கிய தயாரிப்பாளருக்கும், தயாரிப்பு நிறுவனத்திற்கும் நன்றி.


அடுத்த நன்றி இயக்குநர் வெங்கி அட்லூரி - க்கு அவருடன் 'வாத்தி' படத்தில் தான் முதன் முதலாக இணைந்தேன். அந்தப் படம் மிகப்பெரிய அளவில் வெற்றியைப் பெற்றது .அதற்குப் பிறகு அவருடன் இணைந்து லக்கி பாஸ்கரில் பணியாற்றினேன். அந்தப் படமும் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அதைத் தொடர்ந்து மூன்றாவது முறையாக 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' திரைப்படத்தில் இணைந்தேன். தொடர்ந்து மூன்று படங்களும் வெற்றி பெற்று,  ஹாட்ரிக் அடித்திருக்கிறார். இதற்காக அவருக்கு நன்றி.


'வாத்தி' திரைப்படத்தின் பாடல்- தமிழ், தெலுங்கு என இரண்டு மாநிலங்களிலும் வெளியானது. வெளியாகி வெற்றி பெற்றது. இதற்காக எனக்கு தேசிய விருதும் கிடைத்தது. அதன் பிறகு தெலுங்கு திரை உலகில் இருந்து ஏராளமான வாய்ப்புகள் வந்தது. இதற்கு வெங்கி தான் காரணம். 


தற்போது வேறொரு படத்தின் பணிக்காக ஹைதராபாத் சென்றிருந்தபோது என்னை சந்தித்த அனைவரும் 'விஸ்வநாத் & சன்ஸ்' படத்தின் இசை பிரமாதம் என பாராட்டினர்.  அவர்களாக முன் வந்து இப்படத்தின் இசையையும், அதில் என்னுடைய பணியையும் பாராட்டிய போது.. உண்மையில் பெருமிதமாக இருந்தது. இதுதான் உண்மையான வெற்றி என்றும் நான் கருதுகிறேன். 


இந்த திரைப்படம் வெளிநாடுகளில் மிகப்பெரிய வெற்றியை பெற்றிருக்கிறது. ஆந்திராவில் சூர்யா நடித்த படத்தின் வசூல் புதிய சாதனையை படைத்திருக்கிறது. இது சந்தோஷமாக இருக்கிறது. 


சூர்யாவிற்கு இது முக்கியமான வருடம். அடுத்தடுத்து இரண்டு பிளாக் பஸ்டர் ஹிட் படங்களை கொடுத்திருக்கிறார். மூன்றாவது திரைப்படத்தையும் விரைவில் வழங்குவார். தீபாவளி அல்லது இந்த ஆண்டின் இறுதிக்குள் வெளியாகும். இதற்காக சூர்யாவிற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். 'சூரரை போற்று' திரைப்படத்திற்கு பிறகு மீண்டும் சூர்யாவுடன் இணைந்து பணியாற்றிருக்கிறேன். மூன்றாவது படத்திலும் இணைந்திருக்கிறேன். எங்கள் ஜோடியும் ஹாட்ரிக் அடிக்கும் என நம்புகிறேன். 


படப்பிடிப்பு தளத்தில் நானும் ராதிகா மேடத்திடம் அடி வாங்கி இருக்கிறேன். அவர் ஒரு ரியல் இன்ஸ்பிரேஷன். சூர்யாவை போல் ராதிகா மேடத்திற்கும் இந்த ஆண்டு முக்கியமான ஆண்டு. அவர்களுடைய நடிப்பில் 'தாய்க்கிழவி' மிகப்பெரிய வெற்றி. அதைத் தொடர்ந்து விஸ்வநாத் அண்ட் சன்ஸ். இந்த படமும் வெற்றி. இந்த படத்தில் ராதிகா மேடம் நடித்த காட்சிகளை பின்னணி இசைக்காக பார்த்தபோது என்னையும் அறியாமல் நான் அழுதேன். 


இந்தப் படத்திற்காக இறுதிக்கட்டத்தில் மூன்றே நாட்களில் இரண்டு பாடல்களை உருவாக்கினோம். அந்த இரண்டு பாடல்கள் தான் தற்போது மிகப்பெரிய வெற்றியை பெற்று, அனைவராலும் பகிர்ந்து கொள்ளப்படுகிறது. 


மேஜிக் மொமென்ட்ஸ் எப்போது வரும் என்று தெரியாது. இசையில் எப்போது வேண்டுமென்றாலும் அந்த மேஜிக் நிகழும். இதற்காக மீண்டும் ஒருமுறை வெங்கிக்கு நன்றி சொல்கிறேன். 


இந்தப் படத்திற்கு இதுவரை ஒரு எதிர்மறையான விமர்சனங்களும் வரவில்லை. அது இதன் மிகப்பெரிய சிறப்பம்சம். இது மிக அரிதாக நிகழக்கூடியவை. '' என்றார். 


இயக்குநர் வெங்கி அட்லூரி பேசுகையில், 


'' இந்தப் படத்தை வெற்றி பெறச் செய்த ரசிகர்களுக்கும், ஊடகத்தினருக்கும் நன்றி. இதற்கு முன் 'வாத்தி', 'லக்கி பாஸ்கர்' என இரண்டு படங்களுக்கும் எனக்கு ஆதரவு அளித்தீர்கள். இந்த படத்தை நான் முதன் முதலாக தமிழில் இயக்கியிருக்கிறேன். 


இந்தப் படத்திற்கான பத்திரிகையாளர் காட்சி திரையிடப்பட்டது. படம் நிறைவடைந்து பத்திரிகையாளர்கள் என்ன சொல்லப் போகிறார்களோ..? என்ற பதட்டத்தில் என் கால்கள் நடுங்கின. ஆனால் படம் முடிவடைந்ததும் ஒவ்வொருவரும் என்னை பாராட்டினார்கள். கை குலுக்கினார்கள். கட்டி அணைத்தார்கள். அவர்களுடைய அன்பை வெளிப்படுத்திக் கொண்டே இருந்தார்கள். இது என்னால் மறக்கவே இயலாது. இதற்காக அனைவருக்கும் நன்றி. 


இந்தப் படத்தில் நடித்த சுனில் ,பவானி ஸ்ரீ ,இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார், படத்தை விநியோகம் செய்த லிங்கசாமி, ராதிகா மேடம், மமீதா பைஜூ ஆகியோருக்கு நன்றி. 


மமீதா பைஜூ தூய ஆத்மா. எனக்குக் கிடைத்த தங்கை. சினிமாவை தவிர வேறு எதை பற்றியும் சிந்திக்காத அற்புதமான நடிகை. வாய்ப்பு கிடைத்தால் மீண்டும் அவருடன் இணைந்து பணியாற்றுவேன். 


ஜி வி பிரகாஷ் குமாருடன் 'வாத்தி' படத்திலிருந்து பயணிக்கிறேன். முதல் நாள் அவரை சந்தித்து, 'உங்களை...சார்..! ப்ரோ..! என எப்படி அழைக்க வேண்டும்?' என கேட்டேன். 'ப்ரோ' என்று கூப்பிடுங்கள் என்றார். ஆனால் இப்போது நாங்கள் உண்மையிலேயே சகோதரர்கள். நாங்கள் இருவரும் இணைந்து மூன்று படங்களில் பணியாற்றி விட்டோம். ஒரு பாடலை முழுமையாக நிறைவு செய்த பிறகும் அதை வேண்டாம் என்று சொன்னால்... சிறிது கூட முகம் சுழிக்காமல் மீண்டும் புதிதாக ஒரு பாடலை உருவாக்கித் தருவார். இதற்காக கட்டணம் எதையும் வாங்கவும் மாட்டார். அவர் நான் எதைக் கேட்டாலும் அதை மறுக்காமல் வழங்குவார். இந்த புரிதலுக்கு நன்றி.


'தி‌ ஒன்'  சூர்யா இப்போது இங்கே இல்லை. இருந்தாலும் அவருடைய அன்பும், ஆதரவும் அனைவருக்கும் இருக்கிறது. நான் அவரிடம் கதையை சொன்ன போது அவருடைய எதிர்பார்ப்பு குறித்து எதுவும் சொல்லாமல் இந்த குடும்பக் கதையை கேட்டு நடிக்க ஒப்புக்கொண்டார். இயல்பிலேயே அவருக்குள் இருந்த ஒரு துணிச்சல்தான் மிகப்பெரிய வெற்றிக்கு காரணம் என நான் நினைக்கிறேன். ரசிகர்கள் மீதும் அவர் வைத்திருக்கும் அன்பு எதனுடனும் ஒப்பிட முடியாதது. 


இப்போதுதான் திரையுலக வணிகர் ஒருவர் சூர்யாவின் 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' 150 கோடி ரூபாய் வசூலை கடந்திருக்கிறது என்றார். அதைக் கேட்கும் போது எனக்கு சிலிர்த்தது. 


சூர்யா ரசிகர்களுக்கு எப்போதும் புதுவிதமான விருந்தை வழங்குவதை தான் முக்கியமானதாக பார்க்கிறார். இதுவும் ரசிகர்கள் மீதான ஒரு வகையான அன்புதான்.


திரையரங்குகளில் விற்பனையாகும் ஒவ்வொரு டிக்கெட்டிற்கும்... படத்தை பார்க்கும் ரசிகர்களின் ஒவ்வொரு கரவொலிக்கும்.... நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். 'விஸ்வநாதன் அண்ட் சன்ஸ்' அல்ல.. விஸ்வநாதன் குடும்பத்தினருக்கு அனைவரும் தொடர்ந்து ஆதரவு வழங்குங்கள்'' என்றார்.

பெரிய நட்சத்திரங்கள். இன்னும் பெரிய கதைகள். தமிழ் ZEE5 வழங்கும் இதுவரையிலான மிகச் சிறப்பான உள்ளடக்கத் தொகுப்பு

 *பெரிய நட்சத்திரங்கள். இன்னும் பெரிய கதைகள். தமிழ் ZEE5 வழங்கும் இதுவரையிலான மிகச் சிறப்பான உள்ளடக்கத் தொகுப்பு.*



ஜனநாயகன் முதல் பிரபலமான ஃபிராஞ்சைஸ்களின் தொடர்ச்சி வரை, இன்றைய தமிழ் பொழுதுபோக்கை வரையறுக்கும் கதைகள், நட்சத்திரங்கள் மற்றும் அனுபவங்களை தமிழ் ZEE5-ன் புதிய உள்ளடக்கத் தொகுப்பு ஒன்றிணைக்கிறது 


தமிழ் உள்ளடக்கம் என்பது வெறும் பொழுதுபோக்கு மட்டுமல்ல; அது தமிழ் கலாச்சாரம் மற்றும் அன்றாட வாழ்க்கையின் ஒருங்கிணைந்த பகுதியாகும். கதைகள், கதாபாத்திரங்கள் மற்றும் நட்சத்திரங்கள் திரையைக் கடந்து, தலைமுறைகளைக் கடந்து பகிரப்பட்ட அனுபவங்கள், உரையாடல்கள் மற்றும் கலாச்சார அடையாளமாக மாறுகின்றன. தமிழ் ZEE5-ஐ பொறுத்தவரை, இந்த உறவின் ஒரு பகுதியாக இருப்பது மிகப்பெரிய பொறுப்புடன் கூடியதாகும். பார்வையாளர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்வதோடு மட்டுமல்லாமல், அர்த்தமுள்ள, உயர்தரமான கதைசொல்லல் மூலம் அவற்றை தொடர்ந்து உயர்த்துவதும் எங்கள் பொறுப்பாகும்.


இந்த உறுதிப்பாட்டை பிரதிபலிக்கும் வகையில், தமிழ் ZEE5-ன் புதிய உள்ளடக்கத் தொகுப்புக்கு இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும் படமான ஜனநாயகன் முன்னிலை வகிக்கிறது. முதலமைச்சர் C. ஜோசப் விஜய்யின் திரைப்பயணத்தில் ஒரு முக்கியமான மைல்கல்லாக அமையும் இப்படம், அவரது அரசியல் மாற்றத்திற்குப் பிறகு வெளியாகும் முதல் படமாகவும், அவரது இறுதி திரையரங்கத் தோற்றமாகவும் அமைகிறது. இந்த முக்கியமான படைப்பை உலகெங்கிலும் உள்ள பார்வையாளர்களிடம் கொண்டு சேர்ப்பதில் தமிழ் ZEE5 பெருமை கொள்கிறது. இந்த முக்கியமான படைப்புடன், ரசிகர்களின் விருப்பமான ஃபிராஞ்சைஸ்கள், புதிய ஒரிஜினல்கள், பிளாக்பஸ்டர் பிரீமியர்கள் மற்றும் இன்றைய தமிழ் பொழுதுபோக்கின் பன்முகத்தன்மையை பிரதிபலிக்கும் புதுமையான வடிவங்களையும் இந்த உள்ளடக்கத் தொகுப்பு ஒன்றிணைக்கிறது.


இந்த உள்ளடக்கத் தொகுப்பின் மூலம், தமிழ்நாட்டின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களான Dheeran Productions, Dream Warrior Pictures, KVM Productions, SS Group, 18 creators, Cocktail Cinemas, Passion Studios, Seven Screen Studios, Zee Studios, Drumsticks Production, Cinemum LLP மற்றும் Happy Unicorn ஆகியவற்றுடன் புதிய மற்றும் தொடர்ச்சியான கூட்டணிகளை தமிழ் ZEE5 அறிவிக்கிறது. திரையரங்க உள்ளடக்கத் தொகுப்பில் இந்த ஆண்டின் மிகப்பெரிய படைப்பும், பிளாக்பஸ்டருமான ஜனநாயகன் முன்னிலை வகிக்கிறது. இதனுடன், நயன்தாரா மற்றும் கவின் நடிப்பில் Hi; அருள்நிதி மற்றும் பிரியா பவானி சங்கர் நடிப்பில் Demonte Colony; கீர்த்தி சுரேஷ் நடிப்பில் Savithri; ஹரிஷ் கல்யாண் நடிப்பில் Nooru Kodi Vanavil; அக்‌ஷய் குமார் மற்றும் பாசில் ஜோசப் நடிப்பில் Raawadi ஆகிய முக்கியமான வெளியீடுகளும் இந்த வரிசையை மேலும் வலுப்படுத்துகின்றன. தமிழ் ZEE5-ன் மிகவும் விரும்பப்பட்ட ஒரிஜினல்களின் வெற்றியைத் தொடர்ந்து, பார்வையாளர்களின் விருப்பமான Koose Munisamy Veerappan 2, Regai 2, Vilangu 2, Thadayam 2 மற்றும் Sattamum 2 ஆகியவற்றின் தொடர்ச்சிகளும் இந்தத் தொகுப்பில் இடம்பெறுகின்றன. மேலும், Anand Neelakandan நடிப்பில் Ananthakaalam, நெல்சன் இயக்கத்தில் Mix FM, Cinemum-ன் Octopus மற்றும் Muthukumar, Adithya Joshi மற்றும் Lisha ஆகியோர் இடம்பெறும் Thaai Mann ஆகிய புதிய ஒரிஜினல்களும் அறிமுகப்படுத்தப்படுகின்றன. Thee Kural என்ற ரியாலிட்டி நிகழ்ச்சியும் தமிழ் ZEE5-ன் பொழுதுபோக்கு வழங்கலை மேலும் விரிவுபடுத்துகிறது.


Zee 5 நிறுவனத்தின் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள மொழிகளுக்கான Business Head லாயிட் சேவியர் கூறுகையில், “ஜனநாயகனை தமிழ் ZEE5-க்கு கொண்டு வருவதில் நாங்கள் மிகுந்த பெருமை கொள்கிறோம். இது ஒரு பிளாக்பஸ்டர் படத்தைத் தாண்டி, மாண்புமிகு முதலமைச்சர் C. ஜோசப்பின் இறுதி திரையரங்கத் தோற்றம் என்பதால், கோடிக்கணக்கான ரசிகர்களுக்கு இது ஒரு உணர்வுபூர்வமான மைல்கல்லாகும். ரசிகர்கள் தங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் அந்த மறக்க முடியாத தருணங்களை மீண்டும் அனுபவிக்கும் வாய்ப்பை வழங்குவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். வரவிருக்கும் எங்கள் உள்ளடக்கத் தொகுப்பில் இடம்பெறும் பல்வேறு சுவாரஸ்யமான படைப்புகளுடன், ஜனநாயகனை அவர்களின் பார்வைப் பயணத்தின் நிரந்தரமான ஒரு பகுதியாக மாற்றுவதில் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம். நயன்தாரா மற்றும் கவின் நடிப்பில் மிகவும் எதிர்பார்க்கப்படும் Hi மற்றும் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் Savithri போன்ற படங்களிலிருந்து, Thadayam மற்றும் Koose Munisamy Veerappan ஆகியவற்றின் தொடர்ச்சிகள் மற்றும் Thee Kural போன்ற வடிவங்கள் வரை, வெவ்வேறு குரல்கள், கருத்துகள் மற்றும் கதை சொல்லும் முறைகளைக் கொண்ட கதைகளை நாங்கள் ஒன்றிணைக்கிறோம். தமிழ் பார்வையாளர்களிடையே ஆழமாக வேரூன்றியுள்ள ஆர்வமும், படைப்பாளர்களுக்கு துணிச்சலுடன் செயல்படவும், கதைசொல்லலின் எல்லைகளை விரிவுபடுத்தவும் தொடர்ந்து சுதந்திரத்தை வழங்குகிறது.”


தமிழ் உள்ளடக்கத் தொகுப்பு திரைப்படங்கள் மற்றும் ஒரிஜினல்களைத் தாண்டியும் விரிவடைந்து, Garuda, Vikram Vetal, Shiv Sati, Chandrakanta, Tirupati Balaji, Barbarik Narmada மற்றும் Ram Anjanay Yudh உள்ளிட்ட பல்வேறு AI தொழில்நுட்பம் சார்ந்த கதைசொல்லல் படைப்புகளையும், குழந்தைகளின் விருப்பமான Kundaka Mandakka போன்றவற்றையும் உள்ளடக்கியுள்ளது. இதனுடன் FIFA, Bundesliga, Coppa Italia, Supercoppa Italiana மற்றும் ILT20 ஆகியவற்றை உள்ளடக்கிய வலுவான நேரலை விளையாட்டு தொகுப்பும் இணைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பல்வேறு வகைகள் மற்றும் வடிவங்களில் பொழுதுபோக்கின் கலவையை பார்வையாளர்களுக்கு வழங்குகிறது.


இந்த விரிவுபடுத்தப்பட்ட வழங்கலின் மூலம், தமிழ் ZEE5, தமிழ் பார்வையாளர்களுக்கான முழுமையான பொழுதுபோக்கு அனுபவத்தை உருவாக்கி வருகிறது. பல்வேறு ஆர்வங்கள் மற்றும் பார்வை நேரங்களுக்கு ஏற்ற கதைகள், வடிவங்கள் மற்றும் அனுபவங்களை ஒன்றிணைக்கிறது. புராணங்கள் மற்றும் குழந்தைகளுக்கான பொழுதுபோக்கு முதல் புனைகதை, புனைகதை அல்லாத நிகழ்ச்சிகள் மற்றும் நேரலை விளையாட்டுகள் வரை, புதிய உள்ளடக்கத் தொகுப்பு, பிராந்தியம் முழுவதும் உள்ள பார்வையாளர்கள் இந்த தளத்தில் கண்டறியக்கூடிய உள்ளடக்கத்தின் பரந்த தன்மையையும் பன்முகத்தன்மையையும் பிரதிபலிக்கிறது.

பூந்தமல்லியில் ஜஸ்’ ஆன்கோவின் (Jus’ Onco) 4-வது புற்றுநோய் சிகிச்சை மையம் திறப்பு தரமான புற்றுநோய் சிகிச்சையை குறைந்த செலவில் மக்களுக்கு அருகில் கொண்டு சேர்க்கும் புதிய முயற்சி

 *பூந்தமல்லியில் ஜஸ்’ ஆன்கோவின் (Jus’ Onco) 4-வது புற்றுநோய் சிகிச்சை மையம் திறப்பு தரமான புற்றுநோய் சிகிச்சையை குறைந்த செலவில் மக்களுக்கு அருகில் கொண்டு சேர்க்கும் புதிய முயற்சி*



தரமான புற்றுநோய் சிகிச்சையை அனைவருக்கும் எளிதாகவும், குறைந்த செலவிலும் வழங்குவதை நோக்கமாகக் கொண்டு செயல்பட்டுவரும் ஜஸ்’ ஆன்கோ (Jus’ Onco), தனது நான்காவது புற்றுநோய் சிகிச்சை மையத்தை இன்று சென்னையின் பூந்தமல்லியில் திறந்து வைத்துள்ளது. இதன் மூலம் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள நோயாளிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு நிபுணத்துவமான புற்றுநோய் சிகிச்சையை இன்னும் அருகில் கொண்டு சேர்க்கும் தனது முயற்சியை ஜஸ்’ ஆன்கோ மேலும் வலுப்படுத்தியுள்ளது.


பூந்தமல்லி நெடுஞ்சாலை, லக்ஷ்மணஞ்சாவடி, JKJ Towers-ல் அமைந்துள்ள இந்த புதிய மையத்தின் திறப்பு விழா, KM Health Care Hospitals நிறுவனத்தின் நிறுவனர் டாக்டர் கே. பாலசுப்ரமணியன், நடிகரும் இயக்குநருமான திரு. சந்திரா லட்சுமணன், மற்றும் Sun News சிறப்பு செய்தியாளர் திரு. ராஜா திருவேங்கடம் ஆகியோரின் முன்னிலையில் நடைபெற்றது.


விழாவின் ஒரு பகுதியாக புற்றுநோயை வென்று மீண்டவர்களுக்கு பாராட்டு வழங்கப்பட்டது. புற்றுநோயை எதிர்கொண்டு வெற்றி பெற்ற அவர்களின் தைரியம், மன உறுதி மற்றும் நம்பிக்கையைப் போற்றும் வகையில் இந்த கௌரவிப்பு நடைபெற்றது.


குடும்பங்களுக்கான புற்றுநோய் சிகிச்சைச் செலவைக் குறைக்கும் முயற்சி


புற்றுநோய் சிகிச்சை என்பது நோயாளிகளுக்கும் அவர்களது குடும்பங்களுக்கும் குறிப்பிடத்தக்க நிதிச்சுமையை ஏற்படுத்தக்கூடியதாகும். புற்றுநோய் கண்டறியப்பட்டதால் ஏற்படும் மன அழுத்தத்துடன், மருத்துவ ஆலோசனை, பரிசோதனைகள், மருந்துகள், கீமோதெரபி, அறுவை சிகிச்சை, கதிர்வீச்சு சிகிச்சை மற்றும் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டிய மருத்துவ கண்காணிப்பு ஆகியவற்றுக்கான செலவுகளும் குடும்பங்களுக்கு பெரும் சவாலாக அமைகின்றன.


குறிப்பாக குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு இந்த நிதிச்சுமை சிகிச்சையைத் தாமதப்படுத்தவோ அல்லது இடையில் நிறுத்தவோ காரணமாக விடக்கூடும் என்பதை உணர்ந்து, நிபுணத்துவமான புற்றுநோய் சிகிச்சையை ஒப்பீட்டளவில் குறைந்த செலவில் வழங்கும் நோக்கில் ஜஸ்’ ஆன்கோ செயல்பட்டு வருகிறது.


அமைப்பின் நோக்கம் எளிமையானது:


“தரமான புற்றுநோய் சிகிச்சை. குறைந்த செலவில். இனி இன்னும் எளிதாக அணுகலாம்.”


பூந்தமல்லி மையத்தின் மூலம் பூந்தமல்லி, குமணஞ்சாவடி, போரூர், ஆவடி, திருமழிசை, மாங்காடு மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு சிறப்பு புற்றுநோய் சிகிச்சையை எளிதாகக் கிடைக்கச் செய்வதுடன், தொடர்ந்து மேற்கொள்ள வேண்டிய சிகிச்சை மற்றும் மருத்துவ கண்காணிப்புக்காக நீண்ட தூரம் பயணம் செய்ய வேண்டிய சிரமத்தையும் குறைக்க ஜஸ்’ ஆன்கோ நோக்கமாகக் கொண்டுள்ளது.


புற்றுநோய் விழிப்புணர்வு, மாஸ்டர் ஹெல்த் செக்கப் மற்றும் ஆரம்பகால கண்டறிதல்


திறப்பு விழா நிகழ்ச்சியில் புற்றுநோய் தடுப்பு, ஆரம்பகால கண்டறிதல் மற்றும் வழக்கமான உடல்நலப் பரிசோதனைகளின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியும் நடைபெற்றது.


விழாவில் கலந்து கொண்ட சிறப்பு விருந்தினர்கள், ஒவ்வொருவரும் தங்களது உடல்நலத்தில் அக்கறையுடன் செயல்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினர். வயது, உடல்நல ஆபத்து காரணிகள் மற்றும் குடும்ப மருத்துவ வரலாறு ஆகியவற்றின் அடிப்படையில் வழக்கமான மாஸ்டர் ஹெல்த் செக்கப் மற்றும் தேவையான புற்றுநோய் பரிசோதனைகளை மேற்கொள்ளுமாறும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தினர்.


புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிவது சிகிச்சையின் முடிவுகளை மேம்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கக்கூடும் என்றும், உடலில் தொடர்ந்து காணப்படும் அல்லது வழக்கத்திற்கு மாறான மாற்றங்களை அலட்சியப்படுத்தாமல் உடனடியாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும் என்றும் பேச்சாளர்கள் வலியுறுத்தினர்.


சாத்தியமான எச்சரிக்கை அறிகுறிகளை அறிந்து கொள்வது, சரியான நேரத்தில் மருத்துவ ஆலோசனை பெறுவது மற்றும் நோய் கண்டறிதல் மற்றும் சிகிச்சையில் தாமதம் ஏற்படாமல் இருப்பது ஆகியவற்றின் முக்கியத்துவமும் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் எடுத்துரைக்கப்பட்டது.


நிபுணத்துவமான சிகிச்சையை மக்களுக்கு அருகில் கொண்டு சேர்த்தல்


பல புற்றுநோய் நோயாளிகளுக்கு நீண்ட காலத்திற்கு தொடர்ந்து பலமுறை மருத்துவமனைக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்படுகிறது. நீண்ட தூரப் பயணம் ஏற்கனவே சவாலான புற்றுநோய் சிகிச்சைப் பயணத்தில் உடல், மனம் மற்றும் பொருளாதார ரீதியான கூடுதல் சுமையை ஏற்படுத்தக்கூடும்.


இதனால், பூந்தமல்லியில் புதிய மையத்தைத் தொடங்கியிருப்பது புற்றுநோய் சிகிச்சைக்கான புவியியல் ரீதியான அணுகலை அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல், நோயாளிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினரின் சிகிச்சைப் பயணத்தை மேலும் வசதியானதாகவும், எளிதாக அணுகக்கூடியதாகவும், குறைந்த செலவிலானதாகவும் மாற்றும் நோக்கத்தையும் கொண்டுள்ளது.


பூந்தமல்லி மையம், கோடம்பாக்கம், அண்ணா நகர் மற்றும் காஞ்சிபுரம் ஆகிய இடங்களில் செயல்பட்டு வரும் மையங்களைத் தொடர்ந்து, ஜஸ்’ ஆன்கோவின் நான்காவது மையமாக இணைகிறது.


மேலும், ஜஸ்’ ஆன்கோ தனது சேவைகளை விரிவுபடுத்தும் நோக்கில் OMR மற்றும் ஹைதராபாத் ஆகிய இடங்களில் புதிய மையங்களைத் தொடங்க திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் மேலும் பல சமூகங்களுக்கு நிபுணத்துவமான புற்றுநோய் சிகிச்சையை அணுகக்கூடியதாக மாற்றுவதே நிறுவனத்தின் நீண்டகால நோக்கமாகும்.


சிகிச்சையைத் தாண்டிய அர்ப்பணிப்பு


புற்றுநோய்க்கு எதிரான போராட்டம் சிகிச்சையில் இருந்து மட்டும் தொடங்குவதில்லை; விழிப்புணர்வு, தடுப்பு, ஆரம்பகால கண்டறிதல் மற்றும் சரியான நேரத்தில் மருத்துவ சிகிச்சை பெறுதல் ஆகியவற்றிலிருந்தே தொடங்குகிறது என்று ஜஸ்’ ஆன்கோ நம்புகிறது.


தனது விரிவடைந்து வரும் மையங்களின் மூலம், நோயாளிகள் நிபுணத்துவமான புற்றுநோய் சிகிச்சையைப் பெறுவதற்கு தூரமும், பொருளாதாரச் சுமையும் முக்கிய தடைகளாக இருக்காத ஒரு சுகாதாரச் சூழலை உருவாக்குவதில் பங்களிக்க ஜஸ்’ ஆன்கோ தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.


ஜஸ்’ ஆன்கோவின் நிறுவனர் மற்றும் இயக்குநர் டாக்டர் விஜயலட்சுமி பாலகிருஷ்ணன் கூறுகையில்:


“புற்றுநோய் என்பது ஏற்கனவே ஒரு குடும்பத்திற்கு உணர்வுபூர்வமாகவும் சவாலாகவும் இருக்கும் ஒரு பயணம். அந்தப் பயணத்தை நிதிச்சுமையும், நீண்ட தூரமும் மேலும் கடினமாக்கக் கூடாது. மக்களுக்கு நிபுணத்துவமான புற்றுநோய் சிகிச்சையை அருகில் கொண்டு செல்வதும், அதை மேலும் குறைந்த செலவில் வழங்குவதும் ஜஸ்’ ஆன்கோவின் நோக்கம்.


இதன் மூலம் அதிகமான நோயாளிகள் சரியான நேரத்தில் சிகிச்சையைப் பெற்று, நம்பிக்கையுடன் தங்களது சிகிச்சையைத் தொடர முடியும்.”


ஜஸ்’ ஆன்கோ பற்றி


ஜஸ்’ ஆன்கோ (Jus’ Onco) என்பது நிபுணத்துவமான புற்றுநோய் சிகிச்சையை அனைவருக்கும் எளிதாகவும், குறைந்த செலவிலும் கிடைக்கச் செய்வதை நோக்கமாகக் கொண்ட ஒரு பிரத்யேக புற்றுநோய் சிகிச்சை அமைப்பாகும்.


தொடர்ந்து விரிவடைந்து வரும் தனது சிகிச்சை மையங்களின் மூலம், சிறப்பு புற்றுநோய் சிகிச்சையை நோயாளிகளுக்கு அருகிலேயே கொண்டு சேர்ப்பதில் ஜஸ்’ ஆன்கோ கவனம் செலுத்துகிறது. அணுகல் மற்றும் குறைந்த செலவு ஆகியவை அதன் செயல்பாட்டின் முக்கிய அடிப்படைகளாக உள்ளன.

Sairaa Directs and Stars in the Upcoming Film ‘Hello Miss’*

 *சாய்ரா இயக்கி நடிக்கும் புதிய திரைப்படம் ‘ஹலோ மிஸ்’*



*‘ஹலோ மிஸ்’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு*




நமஹா மூவி மேக்கர்ஸ் நிறுவனம் சார்பில் என்.குமார்லால் நேரு தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘ஹலோ மிஸ்’.  இப்படத்தை சாய்ரா இயக்குவதுடன், கதாநாயகனாகவும் நடிக்கிறார். இப்படத்தின் மூலம் பிஸ்மி கதாநாயகியாக அறிமுகமாகிறார்.


இப்படத்தில் கே.எஸ்.ரவிக்குமார், கல்யாணி நடராஜன், கஜராஜா, ஜனகி சுரேஷ், ஜி.ஞானசம்பந்தன், செந்தில்குமாரி, புவனேஸ்வரி, பாலஹாசன், தினேஷ், KPY சரத், சுவாமிநாதன், சத்யன், பிர்லா போஸ், சிட்டிசன் மணி, மாறன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.


படத்தின் சண்டைக் காட்சிகளை S.R. ஹரி முருகன் கவனிக்கிறார். பிருந்தா மற்றும் தினேஷ் நடன இயக்குநர்களாக பணியாற்றுகின்றனர்.


பாடல்களுக்கு யுகபாரதி, விவேக், தாமரை, விவேகா ஆகியோர் பாடல்வரிகள் எழுதுகின்றனர். ஹரிச்சரண், ஸ்வேதா மோகன், பிரின்ஸ் ஜார்ஜ், சத்ய பிரகாஷ், கபில் கபிலன், அந்தோணி தாசன், ஸ்வேதா அசோக் ஆகியோர் பாடல்களைப் பாடியுள்ளனர்.


ஒளிப்பதிவை ஆர்.பி.குருதேவ் மேற்கொள்கிறார். இசையை பிரின்ஸ் ஜார்ஜ் அமைத்துள்ளார். வி. மாணிக்கவாசகம் தயாரிப்பு மேற்பார்வையாளராகவும், எஸ்.எம்.சேகர் நிர்வாக தயாரிப்பாளராகவும் பணியாற்றுகின்றனர்.


இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை, திருச்சி மற்றும் பாண்டிச்சேரி ஆகிய இடங்களில் நடைபெற்றுள்ளது. காதல், இளமை மற்றும் ரசனையான உணர்வுகளை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள ‘ஹலோ மிஸ்’, ரசிகர்களுக்கு ஒரு இனிமையான அனுபவத்தை வழங்கும் வகையில் உருவாகி வருகிறது. இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பு பெற்று வருகிறது.


English Press Release


*Sairaa Directs and Stars in the Upcoming Film ‘Hello Miss’*


*First Look Poster of ‘Hello Miss’ Released*


Produced by N. Kumarlal Nehru under the banner of Namaha Movie Makers, the upcoming film is titled ‘Hello Miss’. The film is directed by Sairaa, who also plays the lead role. Bismi makes her debut as the heroine with this film.


The film features an ensemble cast including K.S. Ravikumar, Kalyani Natrajan, Gajaraja, Janaki Suresh, G. Gnana Sambandhan, Senthil Kumari, Bhuvaneswari, Bala Hassan, Dinesh, KPY Sarath, Swaminathan, Sathyan, Birla Bose, Citizen Mani and Maran in important roles.


S.R. Hari Murugan has choreographed the stunt sequences, while Brinda and Dinesh are the choreographers.


The songs have been penned by renowned lyricists Yugabharathi, Vivek, Thamarai and Viveka. The songs are rendered by Haricharan, Swetha Mohan, Prince George, Sathya Prakash, Kapil Kapilan, Anthony Dasan and Swetha Ashok.


R.B.Gurudev is the Director of Photography, Prince George has composed the music, V. Manikkavasagam works as the Executive Producer, and S.M. Sekar works as the Production Executive.


The film has been shot across Chennai, Trichy and Puducherry.


Blending love, youthful emotions and feel-good elements, ‘Hello Miss’ is being crafted as an entertaining and refreshing experience for audiences.


The First Look Poster of ‘Hello Miss’ has now been released and is receiving a positive response from fans.

வாணவேடிக்கை படத்தின் 25 வது நாள் படப்பிடிப்பில் படப்பிடிப்பு தளத்திற்கு வருகை தந்து படக்குழுவினரோடு உணவருந்தி புகைப்படம் எடுத்துக்கொண்ட தயாரிப்பாளரும் எம்பியுமான எல்.கே. சுதீஷ்

 வாணவேடிக்கை படத்தின் 25 வது நாள் படப்பிடிப்பில் படப்பிடிப்பு தளத்திற்கு வருகை தந்து படக்குழுவினரோடு உணவருந்தி புகைப்படம் எடுத்துக்கொண்ட தயாரிப்பாளரும் எம்பியுமான எல்.கே. சுதீஷ்...



இன்று சென்னை ஈ சி ஆர் பகுதியில் உள்ள ஒரு நட்சத்திர பங்களாவில் வாணவேடிக்கை படத்தின் 25ஆம் நாள் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருந்தது.


இதில் நாயகன் சண்முக பாண்டியன், நாயகி சிவானி ராஜசேகரன் மற்றும் ஜே பி, சாரா, கும்கி அஸ்வின், பிக்பாஸ் சுபிக்ஷா ஆகியோர் இணைந்து நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டு கொண்டிருந்தது..


அப்போது சர்ப்ரைஸ் ஆக அங்கு வந்த தயாரிப்பாளர் எல் கே சுதீஷ் அவர்கள் இயக்குனர் திரு மற்றும் ஒளிப்பதிவாளர் ஆர்வி ஆகியோர் காட்சியை படமாக்கும் விதத்தை கண்டு ரசித்தார். 


   பூஜைக்கு பிறகு இன்று தான் இந்த படப்பிடிப்பு தளத்திற்கு வந்துள்ளேன் என்று கூறியவர் சுமார் ஒரு மாத காலம் டெல்லியில் நாடாளுமன்றத்தில் இருந்தேன் மீண்டும் படப்பிடிப்பு தளத்தை பார்ப்பது எனக்கு உற்சாகமாக உள்ளது என்றார், பிறகு படக் குழுவினரோடு அமர்ந்து மதியஉணவு உண்டு புகைப்படம் எடுத்துக் கொண்டார்..


பேனர்; கேப்டன் சினி கிரியேஷன்ஸ் 


தயாரிப்பாளர்; எல் கே சுதீஷ் MP. 

இயக்குனர்; திரு 


ஒளிப்பதிவாளர்; அர்வி 

இசை; சாம் சி எஸ் 


படத்தொகுப்பு; ரா.சுதர்சன்


கலை இயக்குனர்; ராஜ்கமல்

 

சண்டை பயிற்சியாளர்; ஆக்சன் சந்தோஷ்


ஸ்டில்ஸ்; சிற்றரசு


விளம்பர வடிவமைப்பு; செல்வா

 

ஆடை வடிவமைப்பு ; ஜீவ காருண்யா


எக்ஸிக்யூட்டிவ் ப்ரொடியூசர்; AG ராஜா,PR மோகன் 


PRO; கேப்டன்.MPஆனந்த்


நடிகர்கள்; 

நாயகன் ;

சண்முக பாண்டியன். 

 

நாயகி;

 ஷிவானி ராஜசேகர்.


மற்ற நடிகர்கள்; 

ஜெயப்பிரகாஷ், பருத்திவீரன் சரவணன், சாரா, அம்மா கிரியேஷன்ஸ் சிவா, கும்கி அஸ்வின், இந்துமதி, ஸ்டில்ஸ் பாண்டியன் மற்றும் பலர்..

*சாந்தனு பாக்யராஜ் - சீமான் இணைந்து நடிக்கும் “ஒரு கைதியின் டைரி” பட மோஷன் போஸ்டரை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வெளியிட்டார்

 *சாந்தனு பாக்யராஜ் - சீமான் இணைந்து நடிக்கும் “ஒரு கைதியின் டைரி” பட மோஷன் போஸ்டரை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வெளியிட்டார்!*



சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், சுசீந்திரன் இயக்கத்தில் சாந்தனு பாக்யராஜ் நாயகனாக நடிக்கும் ‘ஒரு கைதியின் டைரி’ திரைப்படத்தின் மோஷன் போஸ்டரை படக்குழு முன்னிலையில் வெளியிட்டார். இந்த நிகழ்வு படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.


KRG Kannan Ravi Group சார்பில் கண்ணன் ரவி மற்றும் தீபக் ரவி இணைந்து தயாரிக்கும் இப்படத்தில், சாந்தனு பாக்யராஜ் நாயகனாகவும், சீமான் முக்கிய கதாபாத்திரத்திலும் நடிக்கின்றனர். இப்படத்திற்கு சாம் சி எஸ் இசையமைக்கிறார்.



மதுரையை பின்னணியாகக் கொண்டு உருவாகும் இப்படம், அப்பா – மகன் உறவை மையமாகக் கொண்ட கதையாக உருவாகிறது. குடும்ப உறவுகளின் உணர்வுகளுடன் ஆக்சன் மற்றும் விறுவிறுப்பான சம்பவங்களும் இணைந்த கதைக்களமாக இப்படம் அமையவுள்ளது. மதுரையின் வாழ்வியலும், அப்பா – மகன் உறவில் ஏற்படும் உணர்வுப்பூர்வமான மாற்றங்களும் கதையின் முக்கிய அம்சங்களாக இடம்பெறுகின்றன.


வெளியாகியுள்ள மோஷன் போஸ்டரில் சீமான் மற்றும் சாந்தனுவின் தோற்றங்கள், பின்னணியில் இடம்பெற்றுள்ள மதுரை கோயில் கோபுரங்கள், கையெழுத்துப் பிரதியைப் போன்ற வடிவமைப்பு ஆகியவை படத்தின் கதைக்களம் குறித்த ஆர்வத்தை ஏற்படுத்துகின்றன. ‘ஒரு கைதியின் டைரி’ என்ற தலைப்பும், அப்பா – மகன் உறவை மையமாகக் கொண்ட கதையும் படத்தின் மீது எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.


தமிழ் திரையுலகில் தரமான வணிகப் படங்களுக்கு முக்கியத்துவம் அளித்து வரும் KRG Kannan Ravi Group சார்பில் கண்ணன் ரவி மற்றும் தீபக் ரவி இணைந்து தயாரிக்கும் 10வது திரைப்படம் இது. தயாரிப்பாளர் கண்ணன் ரவி, சமீப காலமாக தரமான கதைகளுக்கும் வலுவான படைப்பாளிகளுக்கும் முக்கியத்துவம் அளித்து, “தலைவர் தம்பி தலைமையில்” மற்றும் “TN 2026” முதலாக பல வெற்றிப் படங்களை வழங்கி வருகிறார். அந்த வரிசையில், இந்தப் படத்தையும் கதைக்கும் தயாரிப்பு தரத்திற்கும் முக்கியத்துவம் அளித்து உருவாக்கி வருகின்றனர். 


தமிழ் சினிமாவின் முன்னணி கமர்ஷியல் இயக்குநர்களில் ஒருவரான சுசீந்திரன், குடும்ப உணர்வுகள், ஆக்சன், கிரைம், எமோஷன் ஆகியவற்றை சரியான விகிதத்தில் கலந்து ரசிகர்களை கவரும் திறமையால் தனக்கென தனித்த அடையாளத்தை உருவாக்கியவர். நான் மகான் அல்ல, பாண்டியநாடு வெற்றிப் படங்களைப் போல அப்பா–மகன் உறவை மையப்படுத்தி, மீண்டும் அதே பாணியில் விறுவிறுப்பும் உணர்வுகளும் நிறைந்த கதையுடன் இந்தப் படத்தை உருவாக்குகிறார். இப்படத்தின் படப்பிடிப்பை ஒரே கட்டமாக முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளது.


சுசீந்திரன் – சாந்தனு பாக்யராஜ் கூட்டணி, சீமானின் முக்கிய கதாபாத்திரம், சாம் சி எஸ் இசை மற்றும் மதுரை பின்னணியில் உருவாகும் ‘ஒரு கைதியின் டைரி’, மோஷன் போஸ்டர் வெளியானதிலேயே ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. படத்தின் அடுத்தடுத்த அறிவிப்புகள் மற்றும் படப்பிடிப்பு குறித்த தகவல்கள் எதிர்பார்ப்பை மேலும் அதிகரிக்கும் என தெரிகிறது.

Supreme Hero Sai Durgha Tej, Rohith KP, K Niranjan Reddy, Chaitanya Reddy, Primeshow Entertainment’s Pan India Movie SYG (Sambarala Yeti Gattu) Shoot Wrapped Up, Set For Sankranthi Release On January 12, 2027

 *'மெகா சுப்ரீம் ஹீரோ' சாய் துர்கா தேஜ் நடிக்கும் 'சம்பராலா ஏடி கட்டு- SYG ' படத்தின் படப்பிடிப்பு நிறைவு : 2027 ஆம் ஆண்டு ஜனவரி 12ஆம் தேதி வெளியாகிறது*



'மெகா சுப்ரீம் ஹீரோ' சாய் துர்கா தேஜ் நடிப்பில் ரோஹித் கே. பி. இயக்கத்தில் பிரைம் ஷோ என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகும் 'சம்பராலா ஏடி கட்டு - SYG திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது. இந்த திரைப்படம் 2027 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 12ஆம் தேதி சங்கராந்தி பண்டிகையையொட்டி வெளியாகிறது


'மெகா சுப்ரீம் ஹீரோ' சாய் துர்கா தேஜ் நடிப்பில் பெரிதும் எதிர்பார்ப்பில் உள்ள பான் இந்தியா திரைப்படமான 'சம்பராலா ஏடி கட்டு- SYG திரைப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துள்ளது.


அறிமுக இயக்குநர் ரோஹித் கே. பி. இயக்கத்தில் பிரைம் ஷோ என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர்கள் கே. நிரஞ்சன் ரெட்டி மற்றும் சைதன்யா ரெட்டி ஆகியோர் இணைந்து தயாரித்து வரும் இந்த பிரம்மாண்டமான ஆக்சன் திரைப்படம்- தற்போது படப்பிடிப்புக்கு பிந்தைய பணிகளில் ( போஸ்ட் புரொடக்ஷன்) படக்குழுவினர் ஈடுபட்டிருக்கிறார்கள். இந்தத் திரைப்படம் 2027 ஆம் ஆண்டு சங்கராந்தி பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 12ஆம் தேதி வெளியாகும் என்றும் படக் குழுவினர் அறிவித்துள்ளனர். பண்டிகை கால வெளியீடு என்பதால்.. இப்படத்திற்கான எதிர்பார்ப்பு மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


தற்போது வெளியிடப்பட்டுள்ள போஸ்டரில் சாய் துர்கா தேஜ் மிகவும் தீவிரமான மற்றும் கரடு முரடான தோற்றத்தில் தோன்றுகிறார். உடல் முழுவதும் ரத்தம் மற்றும் காயங்களுடன் கையில் ஆயுதத்தை ஏந்தி ஆக்ரோஷமான முகபாவனையுடன் தீப்பிழம்புகள் சூழ்ந்த பின்னணியில் அவர் அச்சமின்றி நடந்து செல்வது போல் காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது. எரியும் கட்டிடங்கள்- புகை - பரபரப்பான சூழல் - ஆகியவை மோதல்கள் மற்றும் அதிரடி ஆக்சன் காட்சிகள் நிறைந்த ஒரு உலகத்தை பிரதிபலிக்கிறது.


'அசுர ஆகமன'- Asura Aagamana எனும் முன்னோட்ட காட்சி மற்றும் பிற விளம்பரப்படுத்தப்பட்ட போஸ்டர்கள் மூலம் கிடைத்த சிறப்பான வரவேற்பின் ஊடாக இப்படம் ஏற்கனவே பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கி உள்ளது. தற்போது படப்பிடிப்பு வெற்றிகரமாக முழுமையாக நிறைவடைந்த நிலையில், படக் குழுவினர் போஸ்ட் புரொடக்ஷன் எனப்படும் படபிடிப்புக்கு பிந்தைய தொழில்நுட்ப பணிகளில் தீவிரமாக கவனம் செலுத்தி வருகின்றனர். ஒரு பிரம்மாண்டமான திரையரங்க அனுபவத்தை வழங்கும் வகையில் படத்தின் தொழில்நுட்ப மற்றும் காட்சி அம்சங்களுக்காக தீவிரமாக பணியாற்றி வருகின்றனர்.


மிகவும் பிரம்மாண்டமான முறையில் உருவாக்கப்பட்டுள்ள ' சம்பராலா ஏடி கட்டு- SYG' திரைப்படத்தின் படப்பிடிப்பு பல இடங்களில் நடைபெற்று உள்ளது. இதில் பிரம்மாண்டமான அரங்கங்கள் மற்றும் பெரிய அளவிலான ஆக்சன் காட்சிகள் ஆகியவை படத்தின் முக்கிய அம்சமாக அமைந்துள்ளன. நீண்ட தயாரிப்பு பயணம்... தற்போது வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. இது படக்குழுவினருக்கு ஒரு முக்கிய மைல்கல்லாக அமைந்துள்ளது.


சாய் துர்கா தேஜ் இதில் ஒரு சக்தி வாய்ந்த கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இது அவரை முற்றிலும் மாறுபட்ட தோற்றத்தில் வெளிப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. வலுவான- உணர்ச்சிகரமான- அம்சங்கள்... கண்களை கொள்ளை கொள்ளும் காட்சிகள்.... விறுவிறுப்பான ஆக்ஷன் காட்சிகள்... ஆகியவற்றை ஒருங்கிணைத்து ஒரு பிரம்மாண்டமான ஆக்சன் திரைப்படமாக இயக்குநர் ரோஹித் கே. பி. உருவாக்கி வருகிறார்.‌


பாலிவுட்டின் முன்னணி நடிகர் ஒருவர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இது இப்படத்தின் பான் இந்திய அளவிலான ரசிகர்களின் கவன ஈர்ப்பை மேலும் அதிகரிக்கிறது. இவர்களுடன் ஐஸ்வர்ய லெட்சுமி, ஜகபதி பாபு, சாய்குமார், ஸ்ரீகாந்த், அனன்யா நாகல்லா ஆகியோரும் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார்கள்.‌


இந்தத் திரைப்படத்தில் திறமை மிக்க தொழில்நுட்ப குழுவினரும் பங்களிப்பை வழங்கியுள்ளனர். வெற்றிவேல் பழனிச்சாமி ஒளிப்பதிவு செய்ய , பி. அஜனீஷ் லோக்நாத் இசையமைக்கிறார். நவின் விஜய் கிருஷ்ணா படத்தொகுப்பு பணிகளை கவனிக்க, காந்தி நதிக்குடிகர் தயாரிப்பு வடிவமைப்பாளராக பணியாற்றியுள்ளார். சண்டை பயிற்சி இயக்குநர்கள் பீட்டர் ஹெய்ன்- ராம் லக்ஷ்மன்- சேத்தன் - ப்ருத்வி ஆகியோர் பிரம்மாண்டமான ஆக்சன் காட்சிகளை வடிவமைத்துள்ளனர். இவர்கள் அனைவரும் படத்தின் பிரம்மாண்டத்திற்கு தங்களுடைய பங்களிப்பை முழுமையாக வழங்கி உள்ளனர்.


நடிகர்கள் : சாய் துர்கா தேஜ், ஐஸ்வர்யா லட்சுமி, ஜகபதி பாபு , சாய்குமார், ஸ்ரீகாந்த், அனன்யா நாகள்ள


தொழில்நுட்பக் குழு :


எழுத்து & இயக்கம் : ரோஹித் கே. பி.

தயாரிப்பாளர்கள் : கே நிரஞ்சன் ரெட்டி- சைதன்யா ரெட்டி

தயாரிப்பு நிறுவனம் : ப்ரைம் ஷோ என்டர்டெயின்மென்ட்

ஒளிப்பதிவு : வெற்றி பழனிச்சாமி

இசை : பி. அஜனீஷ் லோக்நாத்

படத்தொகுப்பு : நவின் விஜய் கிருஷ்ணா

தயாரிப்பு வடிவமைப்பாளர் : காந்தி நதிக்குடிகர்

சண்டை பயிற்சி இயக்குநர்கள்: பீட்டர் ஹெய்ன்- ராம் லக்ஷ்மன் - கேத்தன் - ப்ருத்வி

மக்கள் தொடர்பு : யுவராஜ்

மார்க்கெட்டிங் : ஹாஷ்டாக் மீடியா


*Supreme Hero Sai Durgha Tej, Rohith KP, K Niranjan Reddy, Chaitanya Reddy, Primeshow Entertainment’s Pan India Movie SYG (Sambarala Yeti Gattu) Shoot Wrapped Up, Set For Sankranthi Release On January 12, 2027*

 

Mega Supreme Hero Sai Durgha Tej’s much-awaited Pan-India film Sambarala Yeti Gattu (SYG) has successfully wrapped up its entire shooting. Directed by debutant Rohith KP and produced by K Niranjan Reddy and Chaitanya Reddy under the prestigious Primeshow Entertainment banner, the highly ambitious action drama is now racing through its post-production phase at a brisk pace. The makers have also announced to release the movie on January 12 for Sankranthi, 2027. The festival release is expected to further amplify the excitement around the project.

 

The release poster presents Sai Durgha Tej in an intense and rugged avatar. Covered in blood and bruises, the actor is seen walking fearlessly through a setting engulfed in flames, holding a weapon and sporting a fierce expression. The burning structures, smoke and dramatic atmosphere suggest a world filled with conflict and high-voltage action.

 

The film has already generated considerable anticipation with the impressive response to the Asura Aagamana glimpse and other promotional material. With the complete shoot now brought to a successful conclusion, the makers have shifted their focus towards post-production, working extensively on the film’s technical and visual aspects to deliver a grand cinematic experience.

 

Mounted on a lavish scale, Sambarala Yeti Gattu has been shot across multiple locations with elaborate sets and large-scale action episodes forming a major part of the film. The extensive production journey has now culminated in a complete wrap, marking a significant milestone for the team.

 

Sai Durgha Tej is set to appear in a powerful and intense role that promises to showcase him in a strikingly different avatar. Director Rohith KP is crafting Sambarala Yeti Gattu as an ambitious action drama that combines strong emotional elements with spectacular visuals and high-octane sequences.

 

A top Bollywood actor is playing a crucial role in the movie, further adding to its Pan-India appeal. Aishwarya Lekshmi, Jagapathi Babu, Sai Kumar, Srikanth and Ananya Nagalla are also part of the ensemble cast and will be seen in prominent roles.

 

The film boasts an accomplished technical crew. Vetrivel Palanisamy is handling the cinematography, while B Ajaneesh Loknath is composing the music. Editor Nawin Vijay Krishna, production designer Gandhi Nadikudikar and Fight Masters Peter Heins, Ram Lakshman, Chethan, Prudhvi are part of the key technical team, contributing to the film’s ambitious visual canvas.

 

Cast: Sai Durgha Tej, Aishwarya Lekshmi, Jagapathi Babu, Sai Kumar, Srikanth, Ananya Nagalla

 

Technical Crew:

Writer, Director: Rohith KP

Producers: K Niranjan Reddy, Chaitanya Reddy

Banner: Primeshow Entertainment

DOP: Vetri Palanisamy

Music: B Ajaneesh Loknath

Editor: Nawin Vijay Krishna

Production Designer: Gandhi Nadikudikar

Fights: Peter Heins, Ram Lakshman, Chethan, Prudhvi

Costume Designer: Ayesha Mariam

PRO: Yuvraaj 

Marketing: Haashtag Media

பிரபு தேவா, வடிவேலு கலக்கும் “பேங் பேங்” பட அதிரடி டீசர்

 *பிரபு தேவா, வடிவேலு கலக்கும் “பேங் பேங்” பட அதிரடி டீசர் !!* 



“பேங் பேங்” டீசர் – பிரபு தேவா, வடிவேலு இணையும் வித்தியாசமான ஜாம்பிகள் களம்!


KRG கண்ணன் ரவியின் தயாரிப்பில் பிரபு தேவா, வடிவேலு நடிக்கும் “பேங் பேங்” படத்தின் டீசர் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. 25 ஆண்டுகளுக்குப் பிறகு இருவரும் இணைந்திருப்பதால், படம் தொடக்கத்திலேயே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், டீசர் அந்த எதிர்பார்ப்பை மேலும் கூட்டியுள்ளது.


டீசரில் எரிமலை வெடித்து லாவா பாயும் வித்தியாசமான நிலப்பரப்பில் வித்தியாசமான தோற்றத்தில் பிரபு தேவாவும் வடிவேலுவும் தோன்றுகின்றனர். அவர்களை ஜாம்பிகளாக மாறிய மனிதர்கள் துரத்த, அவர்களிடமிருந்து தப்பிக்கும் ஆக்ஷன் காட்சிகள் பரபரப்பை ஏற்படுத்துகின்றன.


இந்த காட்சிகளுக்கு நடுவே வடிவேலுவின் காமெடியும் இருப்பது டீசரின் முக்கிய பலமாக தெரிகிறது. ஜாம்பிகள், எரிமலை, ஆபத்தான சூழல் என ஒரு பக்கம் பதற்றத்தை உருவாக்கினாலும், வடிவேலுவின் உடல்மொழியும் நகைச்சுவையும் அந்த டென்ஷனை உடைத்து சிரிப்பை வரவழைக்கிறது.


பிரபு தேவாவின் ஸ்டைலான தோற்றமும் ஆக்ஷன் காட்சிகளும் படத்திற்கு மாஸ் அம்சத்தை கொடுக்க, வடிவேலுவின் காமெடி அதற்கு நேர்மாறான சுவாரஸ்யத்தை சேர்க்கிறது. இந்த இருவரின் கூட்டணி ஜாம்பி கதைக்களத்துடன் எப்படி பயணிக்கிறது என்பதே படத்தின் மீதான முக்கிய எதிர்பார்ப்பாக இருக்கிறது.


பிரபு தேவா மற்றும் வடிவேலு இருவரும் இணைந்து நடித்த காலகட்டத்தில் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்ற கூட்டணியாக இருந்தனர். நீண்ட இடைவெளிக்குப் பிறகு இருவரும் மீண்டும் இணைந்திருப்பதால், “பேங் பேங்” படத்திற்கு இந்த கூட்டணி மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.


ஏற்கனவே வெளியான டைட்டில் டீசரில் ஜாம்பிகளுக்கு நடுவே துப்பாக்கியுடன் இருவரும் தோன்றிய காட்சிகள் கவனம் பெற்றிருந்தன. தற்போது வெளியாகியுள்ள டீசர், படம் ஆக்ஷன், ஹாரர், அட்வென்ச்சர் மற்றும் காமெடி கலந்த கமர்ஷியல் என்டர்டெய்னராக உருவாகியிருப்பதை காட்டுகிறது.


சாம் ரோட்ரிகஸ் எழுதி இயக்கும் இப்படத்தை KRG கண்ணன் ரவி தயாரிக்கிறார். தீபக் ரவி இணைத் தயாரிப்பில் உருவாகும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். H.C. வேணு ஒளிப்பதிவு செய்கிறார். சுரேஷ் ஸ்டண்ட் காட்சிகளை வடிவமைக்க, ஆண்டனி படத்தொகுப்பை கவனிக்கிறார். டான் பாலா கலை இயக்கம் செய்கிறார்.


இந்தோனேசியாவின் Mount Bromo எரிமலைப் பகுதி மற்றும் மலேசியாவில் படப்பிடிப்பு நடைபெற்றுள்ள நிலையில், படத்தின் முழு படப்பிடிப்பும் நிறைவடைந்துள்ளது. நடிகர் பப்லு பிரித்திவிராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.


மொத்தத்தில், பிரபு தேவா – வடிவேலு கூட்டணி, ஜாம்பி களம், எரிமலை பின்னணி, ஆக்ஷன் மற்றும் அதற்குள் கலக்கும் வடிவேலுவின் காமெடி என “பேங் பேங்” டீசர் படத்தின் மீதான ஆர்வத்தை அதிகரித்துள்ளது.


https://www.youtube.com/watch?v=bmDDRLXDoiE

Rebel Star Prabhas, Creative Director Hanu Raghavapudi, Prestigious Banner Mythri Movie Makers, T Series Presents’ Most-Awaited Pan India Project Fauzi New Poster Turns Independence Day Into A Tribute To Sacrifice

 *ரெபெல் ஸ்டார் பிரபாஸ், கிரியேட்டிவ் டைரக்டர் ஹனு ராகவபூடி, பிரபல தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ், டி-சீரிஸ் இணைந்து வழங்கும் மிகவும் எதிர்பார்க்கப்படும் பான் இந்தியா திரைப்படம் ‘ஃபௌஜி‘ – படத்திலிருந்து சுதந்திர தினத்தை தியாகத்திற்கு அர்ப்பணிக்கும் புதிய போஸ்டர் வெளியீடு !!*



பிரபாஸின் ஃபௌஜி – படத்திலிருந்து சுதந்திர தினத்தை தியாகத்திற்கு அர்ப்பணிக்கும் புதிய போஸ்டர் வெளியீடு


ரெபெல் ஸ்டார் பிரபாஸ் நடிப்பில் மிகவும் எதிர்பார்க்கப்படும் பான் இந்தியா திரைப்படமான ஃபௌஜி, 2026 டிசம்பர் 3 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.


கிரியேட்டிவ் திரைப்பட இயக்குநர் ஹனு ராகவபூடி இயக்கும் இப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. டி-சீரிஸ் வழங்கும் இப்படத்தை நவீன் யெர்னேனி, Y. ரவி சங்கர் மற்றும் பூஷண் குமார் ஆகியோர் தயாரிக்கின்றனர். டைட்டில் போஸ்டர், ப்ரீ-லுக், ஃபர்ஸ்ட் லுக் என இதுவரை வெளியான ஒவ்வொரு அப்டேட்டுகளும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.


ஃபௌஜி படக்குழு சுதந்திர தினத்தை முன்னிட்டு, வலுவான உணர்வையும் வரலாற்றுப் பின்னணியையும் கொண்ட புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளது. இந்தியா இன்று கொண்டாடி வரும் சுதந்திரத்தின் பின்னால் இருக்கும் தியாகத்தை மையப்படுத்தும் வகையில் இந்த தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நாளை படக்குழு பயன்படுத்தியுள்ளது.


பொதுவாக சுதந்திர தினம் கொண்டாட்டத்துடன் தொடர்புடையதாக இருக்கும் நிலையில், இந்த போஸ்டர் அதற்கு முற்றிலும் மாறாக, போரினால் சிதைந்த ஒரு சூழலுக்குள் பார்வையாளர்களை அழைத்துச் செல்கிறது. புகை, தீப்பிழம்புகள், சிதைந்த கட்டிடங்கள் மற்றும் சிதறிக் கிடக்கும் பொருட்கள் நிறைந்த அந்தக் காட்சியில், தொலைவில் சார்மினார் கம்பீரமாக இடம்பெற்றுள்ளது.


பிரபாஸின் முகம் இதில் காட்டப்படவில்லை என்றாலும், அவர் மிகவும் ஆக்ரோஷமான தோற்றத்தில் காட்சியளிக்கிறார். அவரது ஆடைகள் முழுதும் ரத்தமும் அழுக்கும் படிந்திருக்கின்றன. அவரது உடல் கடுமையாகத் தாக்கப்பட்டதைப் போன்று காட்சியளிக்கிறது. சிதைந்த தெருக்களின் வழியாக காலில் செருப்பு ஏதுமின்றி நடந்து வரும் அவர், இரு கைகளிலும் இரண்டு குறுகிய துப்பாக்கிகளை ஏந்தியிருக்கிறார். அவருக்கு முன்னால் பாரம்பரிய இந்திய உடையணிந்த மற்றொரு கதாபாத்திரம் நீண்ட கைத்தடியுடன் நடந்து செல்கிறது.


இந்தக் காட்சி, வன்முறை நிறைந்த ஒரு வரலாற்றுச் சம்பவத்தின் மத்தியில் சிக்கிக்கொண்ட ஒரு மனிதனின் உணர்வை வெளிப்படுத்துகிறது. படக்குழு வெளியிட்டுள்ள சுதந்திர தின செய்தியே இந்த போஸ்டரின் உணர்வுப்பூர்வமான மையமாக அமைந்துள்ளது:


“சுதந்திரம் கொண்டாட்டமாக மாறுவதற்கு முன்பு, அது ஒரு போராக இருந்தது!”


இன்றைய தலைமுறை அனுபவித்து வரும் சுதந்திரம், பல ஆண்டுகளாக நடைபெற்ற போராட்டம், துணிச்சல் மற்றும் தியாகத்தின் விளைவாக கிடைத்தது என்பதை இந்த வரிகள் நினைவூட்டுகின்றன.


“நமது நாளைக்காகப் போராடிய ஒவ்வொரு ஃபௌஜியின் வீரத்திற்கும் தலைவணங்குகிறோம்” என்ற வார்த்தைகள் இந்த அஞ்சலியை மேலும் வலுப்படுத்துகின்றன. இந்த வாசகம் படத்தின் தலைப்பையே, எதிர்காலத்தை உருவாக்கிய போராளிகளுக்கான உணர்வுப்பூர்வமான அஞ்சலியாக மாற்றுகிறது.


இப்படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக இமான்வி கதாநாயகியாக நடிக்கிறார். இப்படத்தில் மூத்த ஆளுமைகளான அனுபம் கேர், மிதுன் சக்ரவர்த்தி, ஜெயப்பிரதா மற்றும் பானு சந்தர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.


படத்தின் தொழில்நுட்பக் குழுவிலும் திறமையான கலைஞர்கள் இடம்பெற்றுள்ளனர். ஒளிப்பதிவை சுதீப் சட்டர்ஜி கையாள, விஷால் சந்திரசேகர் இசையமைக்கிறார். அனில் விலாஸ் ஜாதவ் தயாரிப்பு வடிவமைப்பை மேற்கொண்டுள்ளார். படத்தொகுப்பை கோடகிரி வெங்கடேஸ்வர ராவ் கவனித்துள்ளார்.


நடிகர்கள்:


பிரபாஸ், இமான்வி, மிதுன் சக்ரவர்த்தி, அனுபம் கேர், ஜெயப்பிரதா, பானு சந்தர் மற்றும் பலர்.


தொழில்நுட்பக் குழு:


எழுத்து, இயக்கம்: ஹனு ராகவபூடி

தயாரிப்பு நிறுவனம்: மைத்ரி மூவி மேக்கர்ஸ்

வழங்குபவர்கள்: குல்ஷன் குமார், பூஷண் குமார் & டி-சீரிஸ்

தயாரிப்பாளர்கள்: நவீன் ஏர்னேனி, ஒய். ரவி சங்கர் மற்றும் பூஷண் குமார்

ஒளிப்பதிவு: சுதீப் சட்டர்ஜி ISC

இசை: விஷால் சந்திரசேகர்

தயாரிப்பு வடிவமைப்பு: அனில் விலாஸ் ஜாதவ்

படத்தொகுப்பு: கோடகிரி வெங்கடேஸ்வர ராவ்

பாடல்கள்: கிருஷ்ண காந்த்

நடன இயக்கம்: பிரேம் ரக்ஷித்

ஆடை வடிவமைப்பு: ஷீத்தல் இக்பால் ஷர்மா, டி. விஜய் பாஸ்கர்

VFX: ஆர்.சி. கமலா கண்ணன்

பப்ளிசிட்டி டிசைனர்கள்: அனில்-பானு

PRO: யுவராஜ்

மார்க்கெட்டிங்: ஃபர்ஸ்ட் ஷோ


*Rebel Star Prabhas, Creative Director Hanu Raghavapudi, Prestigious Banner Mythri Movie Makers, T Series Presents’ Most-Awaited Pan India Project Fauzi New Poster Turns Independence Day Into A Tribute To Sacrifice*

 

Rebel Star Prabhas’s most-awaited Pan India Project Fauzi will be hitting the screens worldwide on December 3, 2026. The grand period action spectacle is directed by creative filmmaker Hanu Raghavapudi, produced by Mythri Movie Makers, and presented by T-Series, the film is bankrolled by Naveen Yerneni, Y. Ravi Shankar, and Bhushan Kumar. From the title poster to pre-look to first look, every promotional material has only heightened the anticipation surrounding the movie.

 

The makers of Fauzi have marked Independence Day with a poster that carries a strong emotional and historical undertone. The film has used the national occasion to spotlight the idea of sacrifice behind the freedom that India celebrates today. The poster presents a stark contrast to the festive spirit normally associated with Independence Day. Instead of showing celebration, it takes viewers into a landscape ravaged by conflict. Smoke, flames, ruined surroundings and scattered debris dominate the frame, while the Charminar stands prominently in the distance.

 

Although his face is not shown, Prabhas is presented in an extremely distructive avatar. His clothes are covered in blood and dirt, his body appears battered, and he walks barefoot through the destroyed streets while holding two short guns in both hands. Another character, dressed in traditional Indian attire, is seen walking ahead with a long stick in hand.

 

The image creates an immediate impression of a man caught in the middle of a violent historical conflict. The makers’ Independence Day message gives the poster its emotional core: “Before freedom became a celebration, it was a battle!” It is a reminder that the freedom enjoyed today came after years of struggle, courage and sacrifice.

 

The tribute is further strengthened by the words, “Saluting the spirit of every Fauzi who fought for our tomorrow.” The message transforms the film’s title into an evocative tribute to the fighters whose determination shaped the future.

 

Imanvi is the leading lady opposite Prabhas in the movie that also features veteran actors Anupam Kher, Mithun Chakraborty, Jaya Prada, and Bhanu Chandar in prominent roles.

 

The film boasts a strong technical lineup with cinematography handled by Sudeep Chatterjee, music scored by Vishal Chandrasekhar, production design by Anil Vilas Jadhav, and editing by Kotagiri Venkateswara Rao.

 

Cast: Prabhas, Imanvi, Mithun Chakraborty, Anupam Kher, Jaya Prada, Bhanu Chandar and others.

 

Technical Crew:

Writer, Director: Hanu Raghavapudi

Produced By: Mythri Movie Makers

Presented By: Gulshan Kumar, Bhushan Kumar & T-Series

Producers: Naveen Yerneni, Y Ravi Shankar, and Bhushan Kumar

DOP: Sudeep Chatterjee ISC

Music: Vishal Chandrasekhar

Production designer: Anil Vilas Jadhav

Editor: Kotagiri Venkateswara Rao

Lyrics: Krishna Kanth

Choreographer: Prem Rakshit

Costume Designers: Sheetal Iqbal Sharma, T Vijay Bhaskar

VFX: RC Kamala Kannan

Publicity Designers: Anil-Bhanu

PRO: Yuvraaj

Marketing: First Show