-

Loading latest news...

*சாந்தனு பாக்யராஜ் - சீமான் இணைந்து நடிக்கும் “ஒரு கைதியின் டைரி” பட மோஷன் போஸ்டரை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வெளியிட்டார்

 *சாந்தனு பாக்யராஜ் - சீமான் இணைந்து நடிக்கும் “ஒரு கைதியின் டைரி” பட மோஷன் போஸ்டரை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வெளியிட்டார்!*



சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், சுசீந்திரன் இயக்கத்தில் சாந்தனு பாக்யராஜ் நாயகனாக நடிக்கும் ‘ஒரு கைதியின் டைரி’ திரைப்படத்தின் மோஷன் போஸ்டரை படக்குழு முன்னிலையில் வெளியிட்டார். இந்த நிகழ்வு படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.


KRG Kannan Ravi Group சார்பில் கண்ணன் ரவி மற்றும் தீபக் ரவி இணைந்து தயாரிக்கும் இப்படத்தில், சாந்தனு பாக்யராஜ் நாயகனாகவும், சீமான் முக்கிய கதாபாத்திரத்திலும் நடிக்கின்றனர். இப்படத்திற்கு சாம் சி எஸ் இசையமைக்கிறார்.



மதுரையை பின்னணியாகக் கொண்டு உருவாகும் இப்படம், அப்பா – மகன் உறவை மையமாகக் கொண்ட கதையாக உருவாகிறது. குடும்ப உறவுகளின் உணர்வுகளுடன் ஆக்சன் மற்றும் விறுவிறுப்பான சம்பவங்களும் இணைந்த கதைக்களமாக இப்படம் அமையவுள்ளது. மதுரையின் வாழ்வியலும், அப்பா – மகன் உறவில் ஏற்படும் உணர்வுப்பூர்வமான மாற்றங்களும் கதையின் முக்கிய அம்சங்களாக இடம்பெறுகின்றன.


வெளியாகியுள்ள மோஷன் போஸ்டரில் சீமான் மற்றும் சாந்தனுவின் தோற்றங்கள், பின்னணியில் இடம்பெற்றுள்ள மதுரை கோயில் கோபுரங்கள், கையெழுத்துப் பிரதியைப் போன்ற வடிவமைப்பு ஆகியவை படத்தின் கதைக்களம் குறித்த ஆர்வத்தை ஏற்படுத்துகின்றன. ‘ஒரு கைதியின் டைரி’ என்ற தலைப்பும், அப்பா – மகன் உறவை மையமாகக் கொண்ட கதையும் படத்தின் மீது எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.


தமிழ் திரையுலகில் தரமான வணிகப் படங்களுக்கு முக்கியத்துவம் அளித்து வரும் KRG Kannan Ravi Group சார்பில் கண்ணன் ரவி மற்றும் தீபக் ரவி இணைந்து தயாரிக்கும் 10வது திரைப்படம் இது. தயாரிப்பாளர் கண்ணன் ரவி, சமீப காலமாக தரமான கதைகளுக்கும் வலுவான படைப்பாளிகளுக்கும் முக்கியத்துவம் அளித்து, “தலைவர் தம்பி தலைமையில்” மற்றும் “TN 2026” முதலாக பல வெற்றிப் படங்களை வழங்கி வருகிறார். அந்த வரிசையில், இந்தப் படத்தையும் கதைக்கும் தயாரிப்பு தரத்திற்கும் முக்கியத்துவம் அளித்து உருவாக்கி வருகின்றனர். 


தமிழ் சினிமாவின் முன்னணி கமர்ஷியல் இயக்குநர்களில் ஒருவரான சுசீந்திரன், குடும்ப உணர்வுகள், ஆக்சன், கிரைம், எமோஷன் ஆகியவற்றை சரியான விகிதத்தில் கலந்து ரசிகர்களை கவரும் திறமையால் தனக்கென தனித்த அடையாளத்தை உருவாக்கியவர். நான் மகான் அல்ல, பாண்டியநாடு வெற்றிப் படங்களைப் போல அப்பா–மகன் உறவை மையப்படுத்தி, மீண்டும் அதே பாணியில் விறுவிறுப்பும் உணர்வுகளும் நிறைந்த கதையுடன் இந்தப் படத்தை உருவாக்குகிறார். இப்படத்தின் படப்பிடிப்பை ஒரே கட்டமாக முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளது.


சுசீந்திரன் – சாந்தனு பாக்யராஜ் கூட்டணி, சீமானின் முக்கிய கதாபாத்திரம், சாம் சி எஸ் இசை மற்றும் மதுரை பின்னணியில் உருவாகும் ‘ஒரு கைதியின் டைரி’, மோஷன் போஸ்டர் வெளியானதிலேயே ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. படத்தின் அடுத்தடுத்த அறிவிப்புகள் மற்றும் படப்பிடிப்பு குறித்த தகவல்கள் எதிர்பார்ப்பை மேலும் அதிகரிக்கும் என தெரிகிறது.

Supreme Hero Sai Durgha Tej, Rohith KP, K Niranjan Reddy, Chaitanya Reddy, Primeshow Entertainment’s Pan India Movie SYG (Sambarala Yeti Gattu) Shoot Wrapped Up, Set For Sankranthi Release On January 12, 2027

 *'மெகா சுப்ரீம் ஹீரோ' சாய் துர்கா தேஜ் நடிக்கும் 'சம்பராலா ஏடி கட்டு- SYG ' படத்தின் படப்பிடிப்பு நிறைவு : 2027 ஆம் ஆண்டு ஜனவரி 12ஆம் தேதி வெளியாகிறது*



'மெகா சுப்ரீம் ஹீரோ' சாய் துர்கா தேஜ் நடிப்பில் ரோஹித் கே. பி. இயக்கத்தில் பிரைம் ஷோ என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகும் 'சம்பராலா ஏடி கட்டு - SYG திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது. இந்த திரைப்படம் 2027 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 12ஆம் தேதி சங்கராந்தி பண்டிகையையொட்டி வெளியாகிறது


'மெகா சுப்ரீம் ஹீரோ' சாய் துர்கா தேஜ் நடிப்பில் பெரிதும் எதிர்பார்ப்பில் உள்ள பான் இந்தியா திரைப்படமான 'சம்பராலா ஏடி கட்டு- SYG திரைப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துள்ளது.


அறிமுக இயக்குநர் ரோஹித் கே. பி. இயக்கத்தில் பிரைம் ஷோ என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர்கள் கே. நிரஞ்சன் ரெட்டி மற்றும் சைதன்யா ரெட்டி ஆகியோர் இணைந்து தயாரித்து வரும் இந்த பிரம்மாண்டமான ஆக்சன் திரைப்படம்- தற்போது படப்பிடிப்புக்கு பிந்தைய பணிகளில் ( போஸ்ட் புரொடக்ஷன்) படக்குழுவினர் ஈடுபட்டிருக்கிறார்கள். இந்தத் திரைப்படம் 2027 ஆம் ஆண்டு சங்கராந்தி பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 12ஆம் தேதி வெளியாகும் என்றும் படக் குழுவினர் அறிவித்துள்ளனர். பண்டிகை கால வெளியீடு என்பதால்.. இப்படத்திற்கான எதிர்பார்ப்பு மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


தற்போது வெளியிடப்பட்டுள்ள போஸ்டரில் சாய் துர்கா தேஜ் மிகவும் தீவிரமான மற்றும் கரடு முரடான தோற்றத்தில் தோன்றுகிறார். உடல் முழுவதும் ரத்தம் மற்றும் காயங்களுடன் கையில் ஆயுதத்தை ஏந்தி ஆக்ரோஷமான முகபாவனையுடன் தீப்பிழம்புகள் சூழ்ந்த பின்னணியில் அவர் அச்சமின்றி நடந்து செல்வது போல் காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது. எரியும் கட்டிடங்கள்- புகை - பரபரப்பான சூழல் - ஆகியவை மோதல்கள் மற்றும் அதிரடி ஆக்சன் காட்சிகள் நிறைந்த ஒரு உலகத்தை பிரதிபலிக்கிறது.


'அசுர ஆகமன'- Asura Aagamana எனும் முன்னோட்ட காட்சி மற்றும் பிற விளம்பரப்படுத்தப்பட்ட போஸ்டர்கள் மூலம் கிடைத்த சிறப்பான வரவேற்பின் ஊடாக இப்படம் ஏற்கனவே பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கி உள்ளது. தற்போது படப்பிடிப்பு வெற்றிகரமாக முழுமையாக நிறைவடைந்த நிலையில், படக் குழுவினர் போஸ்ட் புரொடக்ஷன் எனப்படும் படபிடிப்புக்கு பிந்தைய தொழில்நுட்ப பணிகளில் தீவிரமாக கவனம் செலுத்தி வருகின்றனர். ஒரு பிரம்மாண்டமான திரையரங்க அனுபவத்தை வழங்கும் வகையில் படத்தின் தொழில்நுட்ப மற்றும் காட்சி அம்சங்களுக்காக தீவிரமாக பணியாற்றி வருகின்றனர்.


மிகவும் பிரம்மாண்டமான முறையில் உருவாக்கப்பட்டுள்ள ' சம்பராலா ஏடி கட்டு- SYG' திரைப்படத்தின் படப்பிடிப்பு பல இடங்களில் நடைபெற்று உள்ளது. இதில் பிரம்மாண்டமான அரங்கங்கள் மற்றும் பெரிய அளவிலான ஆக்சன் காட்சிகள் ஆகியவை படத்தின் முக்கிய அம்சமாக அமைந்துள்ளன. நீண்ட தயாரிப்பு பயணம்... தற்போது வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. இது படக்குழுவினருக்கு ஒரு முக்கிய மைல்கல்லாக அமைந்துள்ளது.


சாய் துர்கா தேஜ் இதில் ஒரு சக்தி வாய்ந்த கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இது அவரை முற்றிலும் மாறுபட்ட தோற்றத்தில் வெளிப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. வலுவான- உணர்ச்சிகரமான- அம்சங்கள்... கண்களை கொள்ளை கொள்ளும் காட்சிகள்.... விறுவிறுப்பான ஆக்ஷன் காட்சிகள்... ஆகியவற்றை ஒருங்கிணைத்து ஒரு பிரம்மாண்டமான ஆக்சன் திரைப்படமாக இயக்குநர் ரோஹித் கே. பி. உருவாக்கி வருகிறார்.‌


பாலிவுட்டின் முன்னணி நடிகர் ஒருவர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இது இப்படத்தின் பான் இந்திய அளவிலான ரசிகர்களின் கவன ஈர்ப்பை மேலும் அதிகரிக்கிறது. இவர்களுடன் ஐஸ்வர்ய லெட்சுமி, ஜகபதி பாபு, சாய்குமார், ஸ்ரீகாந்த், அனன்யா நாகல்லா ஆகியோரும் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார்கள்.‌


இந்தத் திரைப்படத்தில் திறமை மிக்க தொழில்நுட்ப குழுவினரும் பங்களிப்பை வழங்கியுள்ளனர். வெற்றிவேல் பழனிச்சாமி ஒளிப்பதிவு செய்ய , பி. அஜனீஷ் லோக்நாத் இசையமைக்கிறார். நவின் விஜய் கிருஷ்ணா படத்தொகுப்பு பணிகளை கவனிக்க, காந்தி நதிக்குடிகர் தயாரிப்பு வடிவமைப்பாளராக பணியாற்றியுள்ளார். சண்டை பயிற்சி இயக்குநர்கள் பீட்டர் ஹெய்ன்- ராம் லக்ஷ்மன்- சேத்தன் - ப்ருத்வி ஆகியோர் பிரம்மாண்டமான ஆக்சன் காட்சிகளை வடிவமைத்துள்ளனர். இவர்கள் அனைவரும் படத்தின் பிரம்மாண்டத்திற்கு தங்களுடைய பங்களிப்பை முழுமையாக வழங்கி உள்ளனர்.


நடிகர்கள் : சாய் துர்கா தேஜ், ஐஸ்வர்யா லட்சுமி, ஜகபதி பாபு , சாய்குமார், ஸ்ரீகாந்த், அனன்யா நாகள்ள


தொழில்நுட்பக் குழு :


எழுத்து & இயக்கம் : ரோஹித் கே. பி.

தயாரிப்பாளர்கள் : கே நிரஞ்சன் ரெட்டி- சைதன்யா ரெட்டி

தயாரிப்பு நிறுவனம் : ப்ரைம் ஷோ என்டர்டெயின்மென்ட்

ஒளிப்பதிவு : வெற்றி பழனிச்சாமி

இசை : பி. அஜனீஷ் லோக்நாத்

படத்தொகுப்பு : நவின் விஜய் கிருஷ்ணா

தயாரிப்பு வடிவமைப்பாளர் : காந்தி நதிக்குடிகர்

சண்டை பயிற்சி இயக்குநர்கள்: பீட்டர் ஹெய்ன்- ராம் லக்ஷ்மன் - கேத்தன் - ப்ருத்வி

மக்கள் தொடர்பு : யுவராஜ்

மார்க்கெட்டிங் : ஹாஷ்டாக் மீடியா


*Supreme Hero Sai Durgha Tej, Rohith KP, K Niranjan Reddy, Chaitanya Reddy, Primeshow Entertainment’s Pan India Movie SYG (Sambarala Yeti Gattu) Shoot Wrapped Up, Set For Sankranthi Release On January 12, 2027*

 

Mega Supreme Hero Sai Durgha Tej’s much-awaited Pan-India film Sambarala Yeti Gattu (SYG) has successfully wrapped up its entire shooting. Directed by debutant Rohith KP and produced by K Niranjan Reddy and Chaitanya Reddy under the prestigious Primeshow Entertainment banner, the highly ambitious action drama is now racing through its post-production phase at a brisk pace. The makers have also announced to release the movie on January 12 for Sankranthi, 2027. The festival release is expected to further amplify the excitement around the project.

 

The release poster presents Sai Durgha Tej in an intense and rugged avatar. Covered in blood and bruises, the actor is seen walking fearlessly through a setting engulfed in flames, holding a weapon and sporting a fierce expression. The burning structures, smoke and dramatic atmosphere suggest a world filled with conflict and high-voltage action.

 

The film has already generated considerable anticipation with the impressive response to the Asura Aagamana glimpse and other promotional material. With the complete shoot now brought to a successful conclusion, the makers have shifted their focus towards post-production, working extensively on the film’s technical and visual aspects to deliver a grand cinematic experience.

 

Mounted on a lavish scale, Sambarala Yeti Gattu has been shot across multiple locations with elaborate sets and large-scale action episodes forming a major part of the film. The extensive production journey has now culminated in a complete wrap, marking a significant milestone for the team.

 

Sai Durgha Tej is set to appear in a powerful and intense role that promises to showcase him in a strikingly different avatar. Director Rohith KP is crafting Sambarala Yeti Gattu as an ambitious action drama that combines strong emotional elements with spectacular visuals and high-octane sequences.

 

A top Bollywood actor is playing a crucial role in the movie, further adding to its Pan-India appeal. Aishwarya Lekshmi, Jagapathi Babu, Sai Kumar, Srikanth and Ananya Nagalla are also part of the ensemble cast and will be seen in prominent roles.

 

The film boasts an accomplished technical crew. Vetrivel Palanisamy is handling the cinematography, while B Ajaneesh Loknath is composing the music. Editor Nawin Vijay Krishna, production designer Gandhi Nadikudikar and Fight Masters Peter Heins, Ram Lakshman, Chethan, Prudhvi are part of the key technical team, contributing to the film’s ambitious visual canvas.

 

Cast: Sai Durgha Tej, Aishwarya Lekshmi, Jagapathi Babu, Sai Kumar, Srikanth, Ananya Nagalla

 

Technical Crew:

Writer, Director: Rohith KP

Producers: K Niranjan Reddy, Chaitanya Reddy

Banner: Primeshow Entertainment

DOP: Vetri Palanisamy

Music: B Ajaneesh Loknath

Editor: Nawin Vijay Krishna

Production Designer: Gandhi Nadikudikar

Fights: Peter Heins, Ram Lakshman, Chethan, Prudhvi

Costume Designer: Ayesha Mariam

PRO: Yuvraaj 

Marketing: Haashtag Media

பிரபு தேவா, வடிவேலு கலக்கும் “பேங் பேங்” பட அதிரடி டீசர்

 *பிரபு தேவா, வடிவேலு கலக்கும் “பேங் பேங்” பட அதிரடி டீசர் !!* 



“பேங் பேங்” டீசர் – பிரபு தேவா, வடிவேலு இணையும் வித்தியாசமான ஜாம்பிகள் களம்!


KRG கண்ணன் ரவியின் தயாரிப்பில் பிரபு தேவா, வடிவேலு நடிக்கும் “பேங் பேங்” படத்தின் டீசர் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. 25 ஆண்டுகளுக்குப் பிறகு இருவரும் இணைந்திருப்பதால், படம் தொடக்கத்திலேயே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், டீசர் அந்த எதிர்பார்ப்பை மேலும் கூட்டியுள்ளது.


டீசரில் எரிமலை வெடித்து லாவா பாயும் வித்தியாசமான நிலப்பரப்பில் வித்தியாசமான தோற்றத்தில் பிரபு தேவாவும் வடிவேலுவும் தோன்றுகின்றனர். அவர்களை ஜாம்பிகளாக மாறிய மனிதர்கள் துரத்த, அவர்களிடமிருந்து தப்பிக்கும் ஆக்ஷன் காட்சிகள் பரபரப்பை ஏற்படுத்துகின்றன.


இந்த காட்சிகளுக்கு நடுவே வடிவேலுவின் காமெடியும் இருப்பது டீசரின் முக்கிய பலமாக தெரிகிறது. ஜாம்பிகள், எரிமலை, ஆபத்தான சூழல் என ஒரு பக்கம் பதற்றத்தை உருவாக்கினாலும், வடிவேலுவின் உடல்மொழியும் நகைச்சுவையும் அந்த டென்ஷனை உடைத்து சிரிப்பை வரவழைக்கிறது.


பிரபு தேவாவின் ஸ்டைலான தோற்றமும் ஆக்ஷன் காட்சிகளும் படத்திற்கு மாஸ் அம்சத்தை கொடுக்க, வடிவேலுவின் காமெடி அதற்கு நேர்மாறான சுவாரஸ்யத்தை சேர்க்கிறது. இந்த இருவரின் கூட்டணி ஜாம்பி கதைக்களத்துடன் எப்படி பயணிக்கிறது என்பதே படத்தின் மீதான முக்கிய எதிர்பார்ப்பாக இருக்கிறது.


பிரபு தேவா மற்றும் வடிவேலு இருவரும் இணைந்து நடித்த காலகட்டத்தில் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்ற கூட்டணியாக இருந்தனர். நீண்ட இடைவெளிக்குப் பிறகு இருவரும் மீண்டும் இணைந்திருப்பதால், “பேங் பேங்” படத்திற்கு இந்த கூட்டணி மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.


ஏற்கனவே வெளியான டைட்டில் டீசரில் ஜாம்பிகளுக்கு நடுவே துப்பாக்கியுடன் இருவரும் தோன்றிய காட்சிகள் கவனம் பெற்றிருந்தன. தற்போது வெளியாகியுள்ள டீசர், படம் ஆக்ஷன், ஹாரர், அட்வென்ச்சர் மற்றும் காமெடி கலந்த கமர்ஷியல் என்டர்டெய்னராக உருவாகியிருப்பதை காட்டுகிறது.


சாம் ரோட்ரிகஸ் எழுதி இயக்கும் இப்படத்தை KRG கண்ணன் ரவி தயாரிக்கிறார். தீபக் ரவி இணைத் தயாரிப்பில் உருவாகும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். H.C. வேணு ஒளிப்பதிவு செய்கிறார். சுரேஷ் ஸ்டண்ட் காட்சிகளை வடிவமைக்க, ஆண்டனி படத்தொகுப்பை கவனிக்கிறார். டான் பாலா கலை இயக்கம் செய்கிறார்.


இந்தோனேசியாவின் Mount Bromo எரிமலைப் பகுதி மற்றும் மலேசியாவில் படப்பிடிப்பு நடைபெற்றுள்ள நிலையில், படத்தின் முழு படப்பிடிப்பும் நிறைவடைந்துள்ளது. நடிகர் பப்லு பிரித்திவிராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.


மொத்தத்தில், பிரபு தேவா – வடிவேலு கூட்டணி, ஜாம்பி களம், எரிமலை பின்னணி, ஆக்ஷன் மற்றும் அதற்குள் கலக்கும் வடிவேலுவின் காமெடி என “பேங் பேங்” டீசர் படத்தின் மீதான ஆர்வத்தை அதிகரித்துள்ளது.


https://www.youtube.com/watch?v=bmDDRLXDoiE

Rebel Star Prabhas, Creative Director Hanu Raghavapudi, Prestigious Banner Mythri Movie Makers, T Series Presents’ Most-Awaited Pan India Project Fauzi New Poster Turns Independence Day Into A Tribute To Sacrifice

 *ரெபெல் ஸ்டார் பிரபாஸ், கிரியேட்டிவ் டைரக்டர் ஹனு ராகவபூடி, பிரபல தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ், டி-சீரிஸ் இணைந்து வழங்கும் மிகவும் எதிர்பார்க்கப்படும் பான் இந்தியா திரைப்படம் ‘ஃபௌஜி‘ – படத்திலிருந்து சுதந்திர தினத்தை தியாகத்திற்கு அர்ப்பணிக்கும் புதிய போஸ்டர் வெளியீடு !!*



பிரபாஸின் ஃபௌஜி – படத்திலிருந்து சுதந்திர தினத்தை தியாகத்திற்கு அர்ப்பணிக்கும் புதிய போஸ்டர் வெளியீடு


ரெபெல் ஸ்டார் பிரபாஸ் நடிப்பில் மிகவும் எதிர்பார்க்கப்படும் பான் இந்தியா திரைப்படமான ஃபௌஜி, 2026 டிசம்பர் 3 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.


கிரியேட்டிவ் திரைப்பட இயக்குநர் ஹனு ராகவபூடி இயக்கும் இப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. டி-சீரிஸ் வழங்கும் இப்படத்தை நவீன் யெர்னேனி, Y. ரவி சங்கர் மற்றும் பூஷண் குமார் ஆகியோர் தயாரிக்கின்றனர். டைட்டில் போஸ்டர், ப்ரீ-லுக், ஃபர்ஸ்ட் லுக் என இதுவரை வெளியான ஒவ்வொரு அப்டேட்டுகளும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.


ஃபௌஜி படக்குழு சுதந்திர தினத்தை முன்னிட்டு, வலுவான உணர்வையும் வரலாற்றுப் பின்னணியையும் கொண்ட புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளது. இந்தியா இன்று கொண்டாடி வரும் சுதந்திரத்தின் பின்னால் இருக்கும் தியாகத்தை மையப்படுத்தும் வகையில் இந்த தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நாளை படக்குழு பயன்படுத்தியுள்ளது.


பொதுவாக சுதந்திர தினம் கொண்டாட்டத்துடன் தொடர்புடையதாக இருக்கும் நிலையில், இந்த போஸ்டர் அதற்கு முற்றிலும் மாறாக, போரினால் சிதைந்த ஒரு சூழலுக்குள் பார்வையாளர்களை அழைத்துச் செல்கிறது. புகை, தீப்பிழம்புகள், சிதைந்த கட்டிடங்கள் மற்றும் சிதறிக் கிடக்கும் பொருட்கள் நிறைந்த அந்தக் காட்சியில், தொலைவில் சார்மினார் கம்பீரமாக இடம்பெற்றுள்ளது.


பிரபாஸின் முகம் இதில் காட்டப்படவில்லை என்றாலும், அவர் மிகவும் ஆக்ரோஷமான தோற்றத்தில் காட்சியளிக்கிறார். அவரது ஆடைகள் முழுதும் ரத்தமும் அழுக்கும் படிந்திருக்கின்றன. அவரது உடல் கடுமையாகத் தாக்கப்பட்டதைப் போன்று காட்சியளிக்கிறது. சிதைந்த தெருக்களின் வழியாக காலில் செருப்பு ஏதுமின்றி நடந்து வரும் அவர், இரு கைகளிலும் இரண்டு குறுகிய துப்பாக்கிகளை ஏந்தியிருக்கிறார். அவருக்கு முன்னால் பாரம்பரிய இந்திய உடையணிந்த மற்றொரு கதாபாத்திரம் நீண்ட கைத்தடியுடன் நடந்து செல்கிறது.


இந்தக் காட்சி, வன்முறை நிறைந்த ஒரு வரலாற்றுச் சம்பவத்தின் மத்தியில் சிக்கிக்கொண்ட ஒரு மனிதனின் உணர்வை வெளிப்படுத்துகிறது. படக்குழு வெளியிட்டுள்ள சுதந்திர தின செய்தியே இந்த போஸ்டரின் உணர்வுப்பூர்வமான மையமாக அமைந்துள்ளது:


“சுதந்திரம் கொண்டாட்டமாக மாறுவதற்கு முன்பு, அது ஒரு போராக இருந்தது!”


இன்றைய தலைமுறை அனுபவித்து வரும் சுதந்திரம், பல ஆண்டுகளாக நடைபெற்ற போராட்டம், துணிச்சல் மற்றும் தியாகத்தின் விளைவாக கிடைத்தது என்பதை இந்த வரிகள் நினைவூட்டுகின்றன.


“நமது நாளைக்காகப் போராடிய ஒவ்வொரு ஃபௌஜியின் வீரத்திற்கும் தலைவணங்குகிறோம்” என்ற வார்த்தைகள் இந்த அஞ்சலியை மேலும் வலுப்படுத்துகின்றன. இந்த வாசகம் படத்தின் தலைப்பையே, எதிர்காலத்தை உருவாக்கிய போராளிகளுக்கான உணர்வுப்பூர்வமான அஞ்சலியாக மாற்றுகிறது.


இப்படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக இமான்வி கதாநாயகியாக நடிக்கிறார். இப்படத்தில் மூத்த ஆளுமைகளான அனுபம் கேர், மிதுன் சக்ரவர்த்தி, ஜெயப்பிரதா மற்றும் பானு சந்தர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.


படத்தின் தொழில்நுட்பக் குழுவிலும் திறமையான கலைஞர்கள் இடம்பெற்றுள்ளனர். ஒளிப்பதிவை சுதீப் சட்டர்ஜி கையாள, விஷால் சந்திரசேகர் இசையமைக்கிறார். அனில் விலாஸ் ஜாதவ் தயாரிப்பு வடிவமைப்பை மேற்கொண்டுள்ளார். படத்தொகுப்பை கோடகிரி வெங்கடேஸ்வர ராவ் கவனித்துள்ளார்.


நடிகர்கள்:


பிரபாஸ், இமான்வி, மிதுன் சக்ரவர்த்தி, அனுபம் கேர், ஜெயப்பிரதா, பானு சந்தர் மற்றும் பலர்.


தொழில்நுட்பக் குழு:


எழுத்து, இயக்கம்: ஹனு ராகவபூடி

தயாரிப்பு நிறுவனம்: மைத்ரி மூவி மேக்கர்ஸ்

வழங்குபவர்கள்: குல்ஷன் குமார், பூஷண் குமார் & டி-சீரிஸ்

தயாரிப்பாளர்கள்: நவீன் ஏர்னேனி, ஒய். ரவி சங்கர் மற்றும் பூஷண் குமார்

ஒளிப்பதிவு: சுதீப் சட்டர்ஜி ISC

இசை: விஷால் சந்திரசேகர்

தயாரிப்பு வடிவமைப்பு: அனில் விலாஸ் ஜாதவ்

படத்தொகுப்பு: கோடகிரி வெங்கடேஸ்வர ராவ்

பாடல்கள்: கிருஷ்ண காந்த்

நடன இயக்கம்: பிரேம் ரக்ஷித்

ஆடை வடிவமைப்பு: ஷீத்தல் இக்பால் ஷர்மா, டி. விஜய் பாஸ்கர்

VFX: ஆர்.சி. கமலா கண்ணன்

பப்ளிசிட்டி டிசைனர்கள்: அனில்-பானு

PRO: யுவராஜ்

மார்க்கெட்டிங்: ஃபர்ஸ்ட் ஷோ


*Rebel Star Prabhas, Creative Director Hanu Raghavapudi, Prestigious Banner Mythri Movie Makers, T Series Presents’ Most-Awaited Pan India Project Fauzi New Poster Turns Independence Day Into A Tribute To Sacrifice*

 

Rebel Star Prabhas’s most-awaited Pan India Project Fauzi will be hitting the screens worldwide on December 3, 2026. The grand period action spectacle is directed by creative filmmaker Hanu Raghavapudi, produced by Mythri Movie Makers, and presented by T-Series, the film is bankrolled by Naveen Yerneni, Y. Ravi Shankar, and Bhushan Kumar. From the title poster to pre-look to first look, every promotional material has only heightened the anticipation surrounding the movie.

 

The makers of Fauzi have marked Independence Day with a poster that carries a strong emotional and historical undertone. The film has used the national occasion to spotlight the idea of sacrifice behind the freedom that India celebrates today. The poster presents a stark contrast to the festive spirit normally associated with Independence Day. Instead of showing celebration, it takes viewers into a landscape ravaged by conflict. Smoke, flames, ruined surroundings and scattered debris dominate the frame, while the Charminar stands prominently in the distance.

 

Although his face is not shown, Prabhas is presented in an extremely distructive avatar. His clothes are covered in blood and dirt, his body appears battered, and he walks barefoot through the destroyed streets while holding two short guns in both hands. Another character, dressed in traditional Indian attire, is seen walking ahead with a long stick in hand.

 

The image creates an immediate impression of a man caught in the middle of a violent historical conflict. The makers’ Independence Day message gives the poster its emotional core: “Before freedom became a celebration, it was a battle!” It is a reminder that the freedom enjoyed today came after years of struggle, courage and sacrifice.

 

The tribute is further strengthened by the words, “Saluting the spirit of every Fauzi who fought for our tomorrow.” The message transforms the film’s title into an evocative tribute to the fighters whose determination shaped the future.

 

Imanvi is the leading lady opposite Prabhas in the movie that also features veteran actors Anupam Kher, Mithun Chakraborty, Jaya Prada, and Bhanu Chandar in prominent roles.

 

The film boasts a strong technical lineup with cinematography handled by Sudeep Chatterjee, music scored by Vishal Chandrasekhar, production design by Anil Vilas Jadhav, and editing by Kotagiri Venkateswara Rao.

 

Cast: Prabhas, Imanvi, Mithun Chakraborty, Anupam Kher, Jaya Prada, Bhanu Chandar and others.

 

Technical Crew:

Writer, Director: Hanu Raghavapudi

Produced By: Mythri Movie Makers

Presented By: Gulshan Kumar, Bhushan Kumar & T-Series

Producers: Naveen Yerneni, Y Ravi Shankar, and Bhushan Kumar

DOP: Sudeep Chatterjee ISC

Music: Vishal Chandrasekhar

Production designer: Anil Vilas Jadhav

Editor: Kotagiri Venkateswara Rao

Lyrics: Krishna Kanth

Choreographer: Prem Rakshit

Costume Designers: Sheetal Iqbal Sharma, T Vijay Bhaskar

VFX: RC Kamala Kannan

Publicity Designers: Anil-Bhanu

PRO: Yuvraaj

Marketing: First Show

ஏழாண்டுகளுக்கு பிறகு தன் சமூக ஊடகத்தின் - (INSTA DP)- மாற்றியுள்ள பிரபாஸ்*

 *ஏழாண்டுகளுக்கு பிறகு தன் சமூக ஊடகத்தின் - (INSTA DP)- மாற்றியுள்ள பிரபாஸ்*



சமூக ஊடகங்களில் தனது அடையாளமாக திகழ்ந்த 'பாகுபலி' படத் தோற்றத்திலான சுயவிவர படத்தை ஏழு ஆண்டுகளாக தொடர்ந்து வைத்திருந்த பிரபாஸ்- இறுதியாக அதில் மாற்றம் செய்துள்ளார். இது ஒரு புதிய அத்தியாயத்தின் தொடக்கத்தை குறிப்பதாக ரசிகர்கள் கருதுகின்றனர். 


இந்தியா முழுவதும் கொண்டாடப்படும் பிரபாஸ் - 'ஃபௌஜி- Fauzi' படத்திற்கான தனது கவனத்தை ஈர்க்கக்கூடிய புதிய தோற்றத்தை INSTA DP படமாக இடம்பெறச் செய்துள்ளார். இது இணையத்தில் உடனடியாக பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது. 


சுதந்திர தின மாதம் தொடங்கும் வேளையில், இந்த மாற்றம் நிகழ்ந்திருப்பது... மிகுந்த எதிர்பார்ப்பிற்குரிய இப்படத்தின் தேச பக்தி சார்ந்த பின்னணியுடன் கச்சிதமாக பொருந்தி இருப்பதால்... இது மேலும் உற்சாகத்தை அதிகரிக்கச் செய்துள்ளது.‌ பல ரசிகர்களுக்கு இது சாதாரணமான சுய விவரப்பட மாற்றம் மட்டுமல்ல... ஒரு முக்கிய சகாப்தத்தில் இருந்து அடுத்த கட்டத்திற்கு நகர்வதை குறிக்கும் குறியீட்டு நிகழ்வாகவும் இது அமைந்துள்ளது. 


பிரபாஸின் தீவிரமான புதிய தோற்றம்-  ஃபௌஜி படத்திற்கான  முக்கியத்துவத்தை போற்றுவதாக இருக்கக்கூடும். இது தொடர்பான விவாதங்கள் சமூக வலைதளங்களில் நிரம்பி வழிகிறது. இணைய உலகம் இதற்கு உடனடியாகவும், உற்சாகத்துடனும் எதிர்வினையாற்றி வருகிறது. 


பல்வேறு சமூக வலைதளங்களில் இந்த விவாதம் தொடர்ந்து அதிகரித்து வலுப்பெற்று வருகிறது. இது வரவுள்ள இப்படத்தின் பிரம்மாண்டத்தையும்.. அதன் லட்சியத்தையும் ...இந்த மாற்றம் பிரதிபலிப்பதாகவே பலரும் கருதுகின்றனர். அதே தருணத்தில் சுதந்திர தின கொண்டாட்டத்தை தொடங்கி வைக்க இது ஒரு சிறந்த வழியாகவும் பார்க்கப்படுகிறது. எண்ணற்ற ரசிகர்களுக்கு உலகின் மிகச்சிறந்த நடிகர்களில் பிரபாஸ் ஒருவராக திகழ்கிறார். எளிமையானதாக தோன்றினாலும் குறியீட்டு முக்கியத்துவம் வாய்ந்த இந்த சுய விவர புகைப்பட மாற்றம்-  அடுத்து வரவிருப்பதைப் பற்றிய அவர்களின் ஆர்வத்தை மேலும் அதிகரிக்கச் செய்துள்ளது. 


பொழுதுபோக்கு சார்ந்த பக்கங்களிலும்... ரசிகர் மன்றங்களிலும்... இது தொடர்பான விவாதங்கள் வேகமாக பரவி வரும் நிலையில், இந்த சுய விவர பட மாற்றம் சாதாரண சமூக ஊடக அப்டேட் என்பதை கடந்து.. ஒரு முக்கிய நிகழ்வாக மாற்றம் பெற்றுள்ளது. இது பிரபாஸ் மீதான உற்சாகத்தை மீண்டும் எழுச்சி அடைய செய்துள்ளது. இது ஃபௌஜி- Fauzi படத்திற்கான எதிர்ப்பார்ப்பை மேலும் விரிவடைய செய்துள்ளது. அத்துடன் சூப்பர் ஸ்டாரின் திரைபயணத்தில் மற்றொரு முக்கிய மைல்கல்லாக அமையவிருக்கும் ஒரு புதிய அத்தியாயத்தின் வருகையை உணர்த்தும்... மறக்க முடியாத தருணத்தையும் ரசிகர்களுக்கு வழங்கி உள்ளது.


*After seven years of keeping his iconic Baahubali display picture across social media, Prabhas has finally made a change, and fans believe it signals the beginning of a brand-new chapter. The undisputed pan-India superstar has updated his display picture with a striking new look from Fauzi, creating an instant wave of excitement online*


The timing has only added to the buzz, with the change arriving at the start of Independence month, perfectly aligning with the patriotic backdrop of the much-awaited film. For many fans, this isn't just a profile picture update but a symbolic moment that marks the transition from one landmark era to another.


The internet was quick to react, with social media platforms flooding with excitement over Prabhas' intense new avatar and what it could mean for Fauzi.

 

The conversation has continued to gain momentum across platforms. Many believe the update reflects the scale and ambition of the upcoming film, while others see it as the perfect way to kick off the month of independence. For countless fans, Prabhas remains one of the greatest actors on the face of the earth, and this simple yet symbolic display picture change has only strengthened their excitement for what's next. 


As discussions continue to spread across entertainment pages and fan communities, the display picture change has become much more than a simple social media update. It has reignited excitement around Prabhas, strengthened anticipation for Fauzi, and given fans a memorable moment that signals the arrival of what they hope will be another defining chapter in the superstar's career.


#PrabhasDP https://www.instagram.com/actorPrabhas

51 Years of Super Star Rajinikanth Tamil

 *51 Years of Super Star Rajinikanth Tamil 



சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 51 ஆண்டுகாலப் பயணம்: 'தர்மன்' படப்பிடிப்புத் தளத்தில் கொண்டாடப்பட்ட ஒரு வரலாற்றுச் சாதனை


சென்னை, ஆகஸ்ட் 15, 2026


இந்தியத் திரையுலகில் ஆகஸ்ட் 15 ஒரு மிக முக்கியமான நாளாகும்; ஏனெனில், அன்றுதான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் திரைப்பட உலகில் தனது மறக்க முடியாத பயணத்தைத் தொடங்கினார். 1975-ஆம் ஆண்டு இதே நாளில் அபூர்வ ராகங்கள் திரைப்படம் வெளியானது. இது இந்தியத் திரையுலகின் மிகவும் புகழ்பெற்ற சூப்பர் ஸ்டாரை உருவாக்கிய ஒரு அற்புதமான திரைப்பயணத்தின் தொடக்கமாக அமைந்தது.


திரைத்துறையில் அவர் நுழைந்து 51 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு, 'தர்மன்' திரைப்படத்தின் படப்பிடிப்புத் தளத்தில் சிறப்பு கேக் வெட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் முன்னிலையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து மற்றும் 'தர்மன்' படக்குழுவினர் அனைவரும் இணைந்து, தொடரும் இந்தப் பயணத்தில் 'ரஜினியிசம்' எனும் உத்வேகம் அளிக்கும், மகிழ்விக்கும் மற்றும் வரலாறு படைக்கும் ஒரு மாபெரும் பாரம்பரியத்தை 'தர்மன்' படப்பிடிப்புத் தளத்தில் கொண்டாடி மகிழ்ந்தனர்.


சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் 'தர்மன்' திரைப்படத்தை, ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் டர்மெரிக் மீடியா ஆகிய நிறுவனங்களின் சார்பில் திரு. கமல்ஹாசன் மற்றும் ஆர். மகேந்திரன் ஆகியோர் இணைந்து தயாரிப்பது படப்பிடிப்புத் தளத்தில் நடைபெற்ற கொண்டாட்டத்தை மேலும் சிறப்பானதாக்கியது.


English Press Release 


51 YEARS OF SUPERSTAR RAJINIKANTH: A LEGACY CELEBRATED ON THE SETS OF DHARMAN



Chennai, August 15, 2026 


August 15 marks a landmark day in Indian cinema — the day Superstar Rajinikanth made his unforgettable entry into the world of films. On this day in 1975, Apoorva Raagangal released, marking the beginning of a remarkable cinematic journey that would go on to create one of the most celebrated superstar in Indian cinema.


Fifty-one years since his entry into cinema, the milestone was celebrated on the sets of DHARMAN with a special cake-cutting ceremony in the presence of Superstar Rajinikanth, and Director Ashwath Marimuthu joined with the entire cast and crew of DHARMAN in commemorating this iconic milestone. As the journey continues, the sets of DHARMAN witnessed a special moment in celebrating 51 years of Rajinism — a legacy that continues to inspire, entertain and create history.


DHARMAN, starring Superstar Rajinikanth, is produced by Thiru. Kamal Haasan and R. Mahendran under the banners of Raajkamal Films International and Turmeric Media, marking the celebration on the film's set all the more special.

அன்பில் அவன்’ படத்தின் ‘ஆசை வரமே’ ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியானது

 *‘அன்பில் அவன்’ படத்தின் ‘ஆசை வரமே’ ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியானது !! –*



*காதல் உணர்வை வருடும் அழகான மெலடி ‘அன்பில் அவன்’ படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ‘ஆசை வரமே’ !*


முன்னணி இளம் நடிகர் அசோக்செல்வன் நடிப்பில், ஆர். கார்த்திகேயன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘அன்பில் அவன்’ திரைப்படத்தின் முதல் பாடலான “ஆசை வரமே” வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.


அழகான காதல் கதையாக உருவாகி வரும் இப்படத்திற்காக இசையமைப்பாளர் கோவிந்த் வஸந்தா இசையில் உருவாகியுள்ள “ஆசை வரமே” பாடலை சின்மயி மற்றும் கோவிந்த் வஸந்தா இணைந்து பாடியுள்ளனர். பாடலாசிரியர் மெட்ராஷீ இப்பாடலுக்கான வரிகளை எழுதியுள்ளார்.


“நேர நதி தீரும் வரை, நீல அலை ஓயும் வரை” என தொடங்கும் இப்பாடல், காதலின் ஆழமான உணர்வுகளை மென்மையான இசையுடன் வெளிப்படுத்துகிறது.


இளம் காதலர்களின் அன்பு, நெருக்கம், ஊடல், செல்லச் சண்டைகள் என அவர்களின் காதல் உலகில் பயணிக்கும் உணர்வை பாடல் அழகாகக் கடத்துகிறது. குறிப்பாக கோவிந்த் வஸந்தாவின் மெலடி இசையும், சின்மயி மற்றும் கோவிந்த் வஸந்தாவின் குரல்களும் பாடலுக்கு கூடுதல் அழகை சேர்த்துள்ளன. காதலின் இனிமையான தருணங்களை நினைவுபடுத்தும் வகையில் உருவாகியுள்ள இந்த மெலடி, பாடல் வெளியானது முதலே ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.


‘அன்பில் அவன்’ திரைப்படத்தில் அசோக் செல்வன், ப்ரீத்தி முகுந்தன், சபு மோன், அப்துல் சமத், கதிர் பாலு, மஹா டெல்லி கணேஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.


இப்படத்தின் கதையை போர்த்தொழில் படப்புகழ் இயக்குநர் விக்னேஷ் ராஜா எழுதியுள்ளார். கௌதம் ராஜேந்திரன் ஒளிப்பதிவை மேற்கொள்ள, கோவிந்த் வஸந்தா இசையமைக்கிறார். படத்தொகுப்புப் பணிகளை ஆர்.கே. செல்வா கவனிக்கிறார். மணிகண்டன் ஸ்ரீனிவாசன் கலை இயக்கத்தை மேற்கொண்டுள்ளார்.


பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய அழகான காதல் கதையாக உருவாகியுள்ள இப்படத்தை ஐங்கரன் இன்டர்நேஷனல் மற்றும் ஹேப்பி ஹை பிக்சர்ஸ் நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் கே. கருணா மூர்த்தி, அசோக் செல்வன், அபிநயா செல்வம் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர்.


‘அன்பில் அவன்’ திரைப்படத்தை வரும் செப்டம்பர் மாதம் திரையரங்குகளில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.


தற்போது “ஆசை வரமே” பாடலுக்கு கிடைத்து வரும் வரவேற்பு, ‘அன்பில் அவன்’ திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகரித்துள்ளது. காதல், இசை மற்றும் இளமை உணர்வுகளை மையமாகக் கொண்ட இப்படம் ரசிகர்களுக்கு ஒரு அழகான காதல் அனுபவத்தை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


https://www.youtube.com/watch?v=xwUz3tSlMZ4

விஸ்வநாத் அண்ட் சன்ஸ் (Vishwanath And Sons) — திரை விமர்சனம்

சுருக்கம்: சூர்யா - மமிதா பைஜுவின் அட்டகாசமான கெமிஸ்ட்ரி மற்றும் மனதைத் தொடும் குடும்ப உணர்வுகளோடு வந்திருக்கும் ஒரு அழகான ஃபீல்-குட் (Feel-good) குடும்பத் திரைப்படம்!

கதைக்களம்:

2005-ல் 'கஜினி' சஞ்சய் ராமசாமியாக வசீகரித்த சூர்யா, இப்போது 2026-ல் சஞ்சய் விஸ்வநாத் ஆக மீண்டும் ஒரு ஸ்டைலான பிசினஸ் மேக்னட்டாக என்ட்ரி கொடுத்திருக்கிறார். 40 வயதிலும் முரட்டு சிங்கிளாக, துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் ஒலிம்பிக் பதக்கம் வென்ற ஒரு ஸ்போர்ட்ஸ்மேனாகவும் கலக்குகிறார்.

அம்மா நிர்மலா தேவி (ராதிகா சரத்குமார்) இவருக்குத் திருமணம் செய்து வைக்கத் தீவிரமாக முயல்கிறார். ஒரு கட்டத்தில் தாயின் உடல்நிலை காரணமாக, ஒரு வாரிசை உருவாக்க நினைக்கும் சஞ்சய், ஒரு வருடத்திற்குப் பிறகு ‘அபே’ என்ற குழந்தையுடன் சென்னை வருகிறார். அந்தக் குழந்தைக்கு உடல்நிலை சரியில்லாதபோது கதைக்குள் நுழைகிறார் 22 வயதான மேடி (மமிதா பைஜு). சஞ்சய் ஏன் திருமணத்தை வெறுக்கிறார்? அஞ்சலி (ரவீனா டாண்டன்) யார்? சஞ்சய் - மேடி இடையேயான அந்த வித்தியாசமான காதல் என்ன ஆகிறது என்பதே படத்தின் களம்.

படத்தின் ப்ளஸ் பாயிண்ட்ஸ் (Highlights):

  • சூர்யாவின் எவர்-கிரீன் நடிப்பு: சஞ்சய் கதாபாத்திரத்திற்கு சூர்யா அத்தனை கச்சிதமாகப் பொருந்தியிருக்கிறார். ஒரு பிசினஸ்மேன், பாசமான மகன், பொறுப்பான தந்தை என எல்லா பரிமாணங்களிலும் எஃபர்ட்லெஸ்ஸாக (effortless) ஸ்கோர் செய்கிறார். காமெடி டைமிங்கிலும் சூர்யாவின் முதிர்ச்சியான நடிப்பு அப்ளாஸ் அள்ளுகிறது.

  • மமிதா பைஜுவின் துள்ளலான எனர்ஜி: ‘மேடி’ கதாபாத்திரத்தில் மமிதா செம்ம க்யூட்! தன்னம்பிக்கை, காமெடி, எமோஷன் என அனைத்தையும் மிக இயல்பாக வெளிப்படுத்தி தியேட்டரைக் கவர்கிறார். சூர்யாவுக்கும் இவருக்குமான ஆன்-ஸ்கிரீன் கெமிஸ்ட்ரி ரொம்பவே ஃப்ரெஷ்ஷாக ஒர்க் ஆகியிருக்கிறது.

  • கலகலப்பான முதல் பாதி: இயக்குநர் வெங்கி அட்லூரி வழக்கமான குடும்பக் கதையாக இல்லாமல், ஒரு வித்தியாசமான லவ் டிராக்கை சுவாரஸ்யமாக நகர்த்தியுள்ளார். முதல் பாதியில் வரும் காமெடி, அம்மா-மகன் கலாட்டா மற்றும் குழந்தையின் எண்ட்ரி என படம் படு ஸ்பீடாகவும் கலகலப்பாகவும் போகிறது.

  • அனுபவ நடிப்பில் ராதிகா & ரவீனா: ராதிகா சரத்குமார் வழக்கம் போல தன் இயல்பான நடிப்பால் அம்மா கேரக்டருக்கு உயிர் கொடுத்துள்ளார். ரவீனா டாண்டனின் போர்ஷன் படத்திற்கு கூடுதல் பலம்.

  • சமூகக் கருத்துகள் & எமோஷன்ஸ்: பெற்றோரை மதிப்பது, விவசாயத்தின் முக்கியத்துவம், பணம் மட்டுமே வாழ்க்கை இல்லை போன்ற நல்ல விஷயங்களை உணர்வுபூர்வமாகப் பேசியிருப்பது படத்திற்கு கூடுதல் அழகு சேர்க்கிறது.

பாசிட்டிவ் பார்வை:

இரண்டாம் பாதியில் எமோஷனல் காட்சிகள் சற்று நீளமாகப் போனாலும், குடும்ப உறவுகளின் மேன்மையையும், பாசத்தையும் நேர்மையாகப் பேசிய விதத்தில் இயக்குநர் வெங்கி அட்லூரி கைதட்டல் பெறுகிறார்.

இறுதித் தீர்ப்பு:

'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' — குடும்பத்தோடு தியேட்டருக்குப் போய் ஜாலியாக சிரித்து, எமோஷனலாகக் கனெக்ட் ஆகிப் பார்க்கக்கூடிய ஒரு தரமான, நேர்த்தியான ஃபீல்-குட் பேமிலி என்டர்டெய்னர்! மிஸ் பண்ணாம பாருங்க!

பியார் பிரேமா கல்யாணம்’ டிரெய்லரை வெளியிட்ட Netflix – வித்தியாசமான ட்விஸ்டுடன் வரும் முழுமையான குடும்ப பொழுதுபோக்கு திரைப்படம்!

 *‘பியார் பிரேமா கல்யாணம்’ டிரெய்லரை வெளியிட்ட Netflix – வித்தியாசமான ட்விஸ்டுடன் வரும் முழுமையான குடும்ப பொழுதுபோக்கு திரைப்படம்!*



மாப்பிள்ளை மணமகள் வீட்டுக்கு வருகிறார்… காத்திருக்கும் மிகப்பெரிய ட்விஸ்ட்!

திருமணத்துக்குப் பிறகு மணமகள் புகுந்த வீட்டுக்குச் செல்வதுதான் வழக்கம். ஆனால், மணமகளுக்குப் பதிலாக மாப்பிள்ளை தனது பெட்டிகளை எடுத்துக்கொண்டு மணமகள் வீட்டுக்குச் சென்றால் என்ன ஆகும்? இந்த வித்தியாசமான கதைக்களத்துடன் உருவாகியுள்ள ‘பியார் பிரேமா கல்யாணம்’ திரைப்படத்தின் டிரெய்லரை Netflix இன்று வெளியிட்டுள்ளது.


இயக்குநர் இளன் இயக்கி, முதன்முறையாக கதாநாயகனாகவும் அறிமுகமாகும் இப்படம், வரும் ஆகஸ்ட் 21-ம் தேதி Netflix-ல் வெளியாகிறது.


டிரெய்லரில், பவி கதாபாத்திரத்தில் சான்வி மேக்னா  நடித்துள்ளார். தன்னம்பிக்கையும் தனித்துவமான சிந்தனையும் கொண்ட பவி, தான் வளர்ந்த வீட்டை விட்டு வெளியேற விரும்பாத ஒரு இன்ஃப்ளூயன்சர்.


இதனால், திருமணத்திற்குப் பிறகு அவரது கணவரான இளன், பவியின் வீட்டிற்கே குடியேறுகிறார். அங்கிருந்து தொடங்குகிறது ஒரு வித்தியாசமான குடும்ப வாழ்க்கை.


புதிய வீட்டில் முதல் சந்திப்பு முதல், குடும்பத்தினருடனான உரசல்கள், எதிர்பாராத சம்பவங்கள், கலகலப்பான தருணங்கள் என ஒவ்வொரு நாளும் புதிய அனுபவமாக மாறுகிறது.


“எப்போதுமே மணமகள்தான் வீட்டை விட்டுச் செல்ல வேண்டும் என்று யார் சொன்னது?” என்ற கேள்வியை மையமாக வைத்து, திருமணம் மற்றும் குடும்ப உறவுகள் குறித்த வழக்கமான எதிர்பார்ப்புகளை இப்படம் சுவாரஸ்யமாக மாற்றிப் பார்க்கிறது.


காதல், நகைச்சுவை, குடும்ப உணர்வுகள் என அனைத்தையும் கலந்து, ஒவ்வொருவருக்கும் பொருத்தமான வாழ்க்கையைத் தேர்ந்தெடுப்பதே முக்கியம் என்பதைச் சொல்லும் வகையில் ‘பியார் பிரேமா கல்யாணம்’ உருவாகியுள்ளது.


இளன் மற்றும் சான்வி மேகனாவுடன் ராதிகா சரத்குமார், யோகி பாபு, எம்.எஸ். பாஸ்கர், கீதா கைலாசம், இளங்கோ குமரவேல், செந்தில், மாறன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.


குடும்பக் காட்சிகளுக்கு கூடுதல் வலு சேர்க்கும் வகையில் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள பாடல்கள் இடம்பெற்றுள்ளன.


இயக்குநரும் கதாநாயகனுமான இளன் கூறுகையில்..,

 “‘பியார் பிரேமா கல்யாணம்’ மூலம் அனைவருக்கும் பரிச்சயமான ஒரு விஷயத்தை, அதே நேரத்தில் புதுமையான கோணத்தில் சொல்ல விரும்பினோம். திருமணம் குறித்த நீண்டகால எதிர்பார்ப்புகளுக்கு சவால் விடுக்கும் ஒரு உறவை இந்த டிரெய்லர் அறிமுகப்படுத்துகிறது.


குடும்பத்தின் தனித்துவத்தையும், அதில் இருக்கும் அன்பு, சிரிப்பு, ஒற்றுமை ஆகியவற்றையும் கொண்டாடும் கதையாக இது இருக்கும். எனது நடிப்பு அறிமுகத்தை எனக்கு மிகவும் நெருக்கமான ஒரு கதையின் மூலம் தொடங்குவது மிகவும் சிறப்பான அனுபவமாக இருந்தது. உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் இந்தப் படத்தை Netflix மூலம் ரசிப்பதற்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்” என்றார்.



பவி கதாபாத்திரத்தில் நடித்துள்ள சான்வி மேக்னா கூறுகையில்..,  

“பவி தன்னம்பிக்கையானவள், சுதந்திரமானவள். தனக்கென ஒரு தனித்துவமான அடையாளத்துடன் இருப்பவள். அதே நேரத்தில் தான் நேசிக்கும் மனிதர்களை ஒருபோதும் விட்டுக்கொடுக்காதவள்.


தனக்கு என்ன வேண்டும் என்பதில் அவள் தெளிவாக இருக்கிறாள். அதுதான் அந்தக் கதாபாத்திரம் என்னை ஈர்த்ததற்கான முக்கிய காரணம். டிரெய்லரில் பவியின் குணத்தை அழகாக வெளிப்படுத்தியிருக்கிறார்கள். காதலும், வாழ்க்கைத்துணை உறவும் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு புதிய கோணத்தை பவி காட்டுவதை ரசிகர்கள் ரசிப்பார்கள் என்று நம்புகிறேன்” என்றார்.



நடிகை ராதிகா சரத்குமார் கூறுகையில்.., “குடும்ப உறவுகளில் ஏற்பட்டு வரும் மாற்றங்களை எந்தவிதமான அழுத்தமும் இல்லாமல், நகைச்சுவையுடன் இந்தப் படம் பேசுவது எனக்கு மிகவும் பிடித்திருந்தது. ஒவ்வொரு தலைமுறையும் திருமணத்தை வெவ்வேறு விதமாகப் பார்க்கிறது.


அந்த வித்தியாசமான பார்வைகள்தான் பல சிரிப்பான, உணர்வுப்பூர்வமான மற்றும் நம் வாழ்க்கையுடன் தொடர்புபடுத்திக்கொள்ளக்கூடிய தருணங்களை உருவாக்குகின்றன” என்றார்.


நடிகர் யோகி பாபு கூறுகையில்..,  


“இந்த டிரெய்லர் நாங்கள் படப்பிடிப்பில் அனுபவித்த கலாட்டாவில் ஒரு சிறிய பகுதி மட்டுமே. அன்றாட குடும்ப வாழ்க்கையில் நடக்கும் சாதாரண விஷயங்களிலிருந்துதான் படத்தின் நகைச்சுவை உருவாகிறது. அதனால்தான் அது அனைவருடனும் எளிதாக கனெக்ட் ஆகும்.


ரசிகர்கள் எங்களுடன் சேர்ந்து சிரித்து, குடும்பத்துடன் இந்தப் படத்தை ரசிப்பதைப் பார்க்க ஆவலாக இருக்கிறேன்” என்றார்.


ஒரு திருமணம்… இரண்டு குடும்பங்கள்… எண்ணற்ற கலாட்டாக்கள்!


இந்த வீட்டுக்குள் வரப்போகும் புதிய மாப்பிள்ளை, அந்தக் குடும்பத்தின் வாழ்க்கையையே எப்படி மாற்றப் போகிறார் என்பதுதான் ‘பியார் பிரேமா கல்யாணம்’.


‘பியார் பிரேமா கல்யாணம்’ திரைப்படம் ஆகஸ்ட் 21 முதல் Netflix-ல் வெளியாகிறது.


*Netflix Unveils the Trailer of ‘Pyaar Prema Kalyanam’ – A Wholesome Family Entertainer with a Twist*


Coconuts break as the groom is welcomed into the bride’s family. A big twist awaits!


12 August, 2026: What happens when the maapillai (groom/ son-in-law) packs his bags instead of the bride? Netflix today unveiled the trailer for Pyaar Prema Kalyanam, a wholesome Tamil family entertainer that flips one of marriage's oldest traditions on its head. Directed by and starring Elan in his acting debut, the film premieres on Netflix on 21 August.


The trailer introduces Pavi (Saanvee Meghana), a spirited influencer who refuses to leave the home she's always known. Instead, her husband (Elan) moves into her house, stepping into a lively new family where every day is a fresh sambavam (experience). Between awkward first impressions, hilarious clashes and chaos, one question takes centre stage: who said the bride is always the one who has to leave?


As expectations are turned upside down, Pyaar Prema Kalyanam serves up romance, comedy and heartfelt moments in equal measure, proving that marriage is about finding what works for you.


Joining Elan and Saanvee Meghana is a powerhouse ensemble featuring Radhika Sarathkumar, Yogi Babu, M.S. Bhaskar, Geetha Kailasam, Elango Kumaravel, Senthil and Maran, bringing warmth, wit and full-on family kalatta to every scene. Complementing the laughter is Yuvan Shankar Raja's soulful soundtrack, adding heart to this refreshing take on love, family and happily ever after.


Sharing his excitement, director and debutant actor, Elan, said, "With Pyaar Prema Kalyanam, we wanted to tell a story that feels familiar yet refreshingly different. The trailer offers a glimpse into a marriage that challenges long-held expectations while celebrating the love, laughter and togetherness that make every family unique. Making my acting debut with a story so close to my heart has been incredibly special, and I can't wait for audiences across the world to experience it on Netflix."


Playing the feisty influencer Pavi, Saanvee Meghana said, "Pavi is confident, independent and unapologetically herself. She knows what she wants without ever losing sight of the people she loves, and that's what drew me to her. The trailer captures her spirit beautifully, and I hope audiences enjoy watching her redefine what love and partnership can look like."


Veteran actress Radhika Sarathkumar shared, "What I loved most about this film is how effortlessly it starts conversations about changing family dynamics without ever losing its humour. Every generation views marriage differently, and those differences create moments that are funny, emotional and deeply relatable."


Adding his trademark humour, Yogi Babu said, "The trailer is only a small taste of the fun we've had making this film. The comedy comes from everyday family situations, and that's what makes it connect. I can't wait for audiences to laugh along with us and enjoy it together with their families."

One wedding. Two families. Countless laughs. This veedu (house) is about to welcome its newest son-in-law!


Watch Pyaar Prema Kalyanam, premiering August 21, only on Netflix.


https://www.youtube.com/watch?v=n65bXlvrHlo

ஆகஸ்ட் 7 முதல் தமிழிலும் கிடைக்கும் ZEE5-இல் பிரம்மாண்ட டிஜிட்டல் பிரீமியருக்கு தயாராகும் ‘லெனின்

 *ஆகஸ்ட் 7 முதல் தமிழிலும் கிடைக்கும் ZEE5-இல் பிரம்மாண்ட டிஜிட்டல் பிரீமியருக்கு தயாராகும் ‘லெனின்’*



அகில் அக்கினேனியின் திரை வாழ்க்கையில் மிகப்பெரிய பிளாக்பஸ்டராக உருவெடுத்து, திரையரங்குகளில் மாபெரும் வெற்றிப் பயணம் கண்டுள்ள ‘லெனின்’ திரைப்படம், தற்போது அதன் ஆவலுடன் எதிர்பார்க்கப்படும் டிஜிட்டல் பிரீமியருக்குத் தயாராகி வருகிறது. இந்த அதிரடி நிறைந்த கிராமப்புற பொழுதுபோக்கு திரைப்படம் ஆகஸ்ட் 7 முதல் தெலுங்கு ZEE5-இல் பிரத்யேகமாக ஸ்ட்ரீமிங் ஆகத் தொடங்குகிறது. மேலும், தமிழிலும் கிடைக்கவுள்ளது. இதன் மூலம், இந்த ஆண்டின் மிகப்பெரிய தெலுங்கு வெற்றிப் படங்களில் ஒன்றை, பார்வையாளர்கள் தங்கள் இல்லங்களிலிருந்தே மீண்டும் அனுபவிக்கும் வாய்ப்பைப் பெறுகின்றனர்.


முரளி கிஷோர் அப்பூரு இயக்கியுள்ள ‘லெனின்’ திரைப்படத்தில், அகில் அக்கினேனி தனது திரை வாழ்க்கையை வரையறுக்கும் வகையிலான ஒரு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவருடன் பாக்யஸ்ரீ போர்ஸே இணைந்து நடித்துள்ளார். மேலும், சிவாஜி, சுனில், ஈஸ்வரி ராவ், பிரம்மாஜி, கெட்டப் ஸ்ரீனு, ராம்கி, பிரமோத் பஞ்சு மற்றும் பல புகழ்பெற்ற நடிகர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். நாகார்ஜுனா அக்கினேனி மற்றும் சூர்யதேவரா நாக வம்சி ஆகியோர் மனம் எண்டர்பிரைசஸ் மற்றும் சிதாரா எண்டர்டெயின்மென்ட்ஸ் நிறுவனங்களின் கீழ் இப்படத்தை தயாரித்துள்ளனர். தமன் எஸ். இசையமைத்துள்ள இப்படத்திற்கு லியோன் பிரிட்டோ ஒளிப்பதிவும், நவீன் நூலி படத்தொகுப்பும் செய்துள்ளனர்.


ஆந்திரப் பிரதேசத்தின் கிராமப்புற பின்னணியில் அமைந்துள்ள ‘லெனின்’, அச்சமற்ற இளைஞன் ஒருவரின் கதையைச் சொல்கிறது. அவரது தனிப்பட்ட பயணம், பின்னர் அநீதிக்கு எதிரான மிகப்பெரிய போராட்டமாக மாறுகிறது. ஒரு உணர்ச்சிப்பூர்வமான காதல் கதையாகத் தொடங்கும் இந்த பயணம், குடும்ப பந்தங்கள், அதிகாரப் போட்டிகள் மற்றும் தன் மக்களை பாதுகாக்கும் உறுதியை மையமாகக் கொண்ட தீவிரமான மோதலாக விரிகிறது. அதிரடி, உணர்ச்சி, காதல், நகைச்சுவை மற்றும் வலுவான வணிகத் திரைப்பட அம்சங்களை ஒருங்கிணைக்கும் இப்படம், அனைத்து வயதினரையும் கவரும் முழுமையான திரை அனுபவத்தை வழங்குகிறது.


திரையரங்குகளில் வெளியானவுடன், இப்படம் உடனடியாக ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தது. அகில் அக்கினேனியின் வலிமையான திரைநிலை, முரளி கிஷோர் அப்பூருவின் மண்ணின் மணம் வீசும் கதை சொல்லல், தமன் எஸ். வழங்கிய சக்திவாய்ந்த பின்னணி இசை மற்றும் உணர்ச்சிமிக்க கதை அமைப்பு ஆகியவை பரவலான பாராட்டைப் பெற்றன. மறக்க முடியாத உயர்வுகள், பரபரப்பான அதிரடி காட்சிகள் மற்றும் மனதைத் தொடும் உணர்ச்சிமிக்க தருணங்களால் நிரம்பிய ‘லெனின்’, அகில் அக்கினேனியின் அதிக வசூல் செய்த திரைப்படமாக உருவெடுத்து, இந்த ஆண்டின் முக்கியமான தெலுங்கு பிளாக்பஸ்டர்களில் ஒன்றாக தன்னை உறுதியாக நிலைநிறுத்திக் கொண்டது.


பிளாக்பஸ்டர் திரைப்படங்கள், பாராட்டுப் பெற்ற ஒரிஜினல் படைப்புகள் மற்றும் பிராந்திய மக்களின் விருப்பமான பொழுதுபோக்கு உள்ளடக்கங்களால் நிரம்பிய நூலகத்துடன், ZEE5 பல மொழிகளில் தரமான உள்ளடக்கங்களை வழங்கும் முன்னணி தளங்களில் ஒன்றாக தனது நிலையை தொடர்ந்து வலுப்படுத்தி வருகிறது. குடும்ப பொழுதுபோக்கு திரைப்படங்கள், அதிரடி நாடகங்கள் முதல் விமர்சகர்களின் பாராட்டைப் பெற்ற ஒரிஜினல்கள் வரை, பல்வேறு வகையான கதைகளை தொடர்ந்து பார்வையாளர்களிடம் கொண்டு சேர்க்கிறது. இதன் மூலம், பிளாக்பஸ்டர் திரைப்படங்கள் எப்போது வேண்டுமானாலும், எங்கு வேண்டுமானாலும் பார்வையாளர்களை சென்றடைகின்றன. தமிழிலும் கிடைக்கும் ‘லெனின்’ திரைப்படத்தின் வருகை, ZEE5-இன் வலுவான உள்ளடக்க பட்டியலை மேலும் செழுமையாக்குகிறது. இதன் மூலம், தமிழ்நாட்டு பார்வையாளர்களும் திரையரங்குகளில் வெற்றி பெற்ற இந்த திரைப்படத்தை தளத்தில் அனுபவிக்கும் மேலும் ஒரு வாய்ப்பைப் பெறுகின்றனர்.


“அய்யாகாரு” உங்கள் திரைகளுக்கு வரத் தயாராக இருக்கிறார்!


ஆகஸ்ட் 7 முதல் தெலுங்கு ZEE5-இல் பிரத்யேகமாக ஸ்ட்ரீமிங் ஆகும் ‘லெனின்’ திரைப்படத்தின் டிஜிட்டல் பிரீமியரை தவறவிடாதீர்கள். இது தமிழிலும் கிடைக்கும்.