-

Loading latest news...

வதந்தி – சீசன் 2’ இணையத் தொடர் விமர்சனம்

 வதந்தி – சீசன் 2’ இணையத் தொடர் விமர்சனம்


மதுரை மாவட்டத்தில், அரசு நிகழ்ச்சி ஒன்றுக்காக பள்ளம் தோண்டும் போது எலும்புக்கூடு ஒன்று கிடைக்கிறது. அரசு நிகழ்ச்சியின் போது கிடைத்ததால் ஒட்டுமொத்த ஊடகமும் அந்த சம்பவம் பற்றியே பேசிக்கொண்டிருக்க, அந்த எலும்புக்கூட்டின் பின்னணியை கண்டுபிடிக்கும் பொறுப்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சசிகுமாருக்கு வழங்கப்படுகிறது.


எந்த ஆதாரமும் இன்றி, ஒரு கை இல்லாமல், சிதைந்த நிலையில் இருக்கும் அந்த எலும்புக்கூட்டை வைத்துக்கொண்டு விசாரணையை தொடங்கும் சசிகுமார், அதே இடத்தில் மேலும் ஒரு எலும்புக்கூடு புதைக்கப்பட்டிருப்பதை கண்டுப்பிடிப்பதோடு, இரண்டு எலும்புக்கூடுகளும் பெண்கள் என்பதையும், அவர்கள் கொலை செய்யப்பட்டதையும் கண்டுபிடிக்கிறார்.


எலும்புக்கூட்டின் பிரச்சனை முடிந்ததால் மதுரை மாவட்ட காவல்துறை நிம்மதியடைய, சசிகுமார் அதன் பின்னணியில் இருக்கும் மர்மங்களையும், இரண்டு பெண்களை கொலை செய்த உண்மையான குற்றவாளி யார் ? என்பதையும் கண்டுபிடிக்க களத்தில் இறங்குகிறார். அவரது புலன் விசாரணை மூலம், பல புதிய மர்மங்கள் பூதாகரமாக உருவெடுக்க, அந்த மர்ம முடிச்சுகளை அவிழ்த்து உண்மையான கொலையாளியை சசிகுமார் கண்டுபிடித்தாரா?, கொலைக்கான காரணம் என்ன ? என்பதை விறுவிறுப்பாக சொல்வதே ‘வதந்தி – சீசன் 2’.


கிரைம் திரில்லர் இணையத் தொடர் என்றாலே, ஒரு விசயத்தை நேரடியாக சொல்லாமல் பல கிளைக்கதைகளுடன் சொல்வது தான் வழக்கமான பாணி. அதே பாணியில் இந்த தொடரும் பயணித்தாலும், கொலைக்கான காரணத்தை யூகிக்க முடியாதபடியும், கொலையாளி யார் ? என்ற பார்வையாளர்களின் யூகங்களை பொய்யாக்கும் விதத்திலும் இயக்குநர் ஆண்ட்ரூ லூயிஸ் திரைக்கதை எழுதியிருக்கிறார்.


முதல் அத்தியாசத்திலேயே பார்வையாளர்களை கதைக்குள் இழுத்துவிடும் இயக்குநர் ஆண்ட்ரூ லூயிஸ், எலும்புக்கூடு தொடர்பான விசாரணையை மிக சுவாரஸ்யமாக நகர்த்தி செல்வதோடு, அதற்கான தீர்வு தெரிந்த பிறகு, கொலையாளி யார் ? மற்றும் கொலைக்கான காரணத்தை மையமாக கொண்டு நகர்த்தியிருக்கும் திரைக்கதை கிரைம் திரில்லர் ஜானரை கடந்து, காதல், கணவன் – மனைவி உறவு, மதுரை இளைஞர்களின் ஜல்லிக்கட்டு மீதான பேரார்வம் ஆகியவற்றுடன் உலகளவில் பேசுப்பொருளாக இருக்கும் ஒரு விசயத்தையும் மிக நேர்த்தியாக கையாண்டிருப்பது தொடரின் தனிசிறப்பாகும்.


கதையின் நாயகனாக மூசா ராசா என்ற சப் இன்ஸ்பெக்டர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சசிகுமார், முதல் முறையாக காவல்துறை காக்கி உடை அணிந்திருந்தாலும், தனது உருவம் மற்றும் நடிப்பில் எந்தவித மாற்றத்தையும் வெளிக்காட்டவில்லை. ‘சுப்பிரமணியபுரம்’ முதல் ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ வரையிலான படங்களில் பார்த்த அதே சசிகுமாரை தான் பார்க்க முடிகிறது. அதிலும் இதில் அளவான நடிப்பை கொடுக்க முயற்சித்திருக்கும் சசிகுமார், முகத்திற்கு கீழே உடலில் எந்தவிதமான அசைவுகளையும் வெளிக்காட்டாமல் ரொம்பவே அளவாக நடித்திருக்கிறார்.


மதுரை மாவட்ட எஸ்.பி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அனகா, காவல்துறை உயர் அதிகாரி கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தியிருக்கிறார். காவல்துறை சீருடை அவருக்கு கச்சிதமாக பொருந்தியிருப்பதோடு, மிக சிறப்பான நடிப்பையும் வெளிப்படுத்தியிருக்கிறார்.


முடக்கத்தான் மணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அறிமுக நடிகர் யஷ்வந்த், மதுரை மாவட்ட இளைஞராக மிரட்டியிருக்கிறார். மாடு பிடிப்பதில் காட்டும் ஆர்வம், அதில் வெற்றி பெற்றதை நண்பர்களிடம் விளக்குவது, காதல் காட்சிகள் என்று மதுரை இளைஞராகவே வலம் வருபவர், தனது ஒவ்வொரு அசைவுகள் மூலமாகவும் கனவம் ஈர்க்கிறார்.


’டாடா’ என்ற வெற்றி படத்தில் நடித்தும் நீண்ட வருடங்களாகவே தமிழ் சினிமாவில் ஆளே காணாமல் போன அபர்ணா தாஸ், இந்த தொடர் மூலம் தலைக்காட்டியிருந்தாலும், மிக மிக சாதாரண கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். சசிகுமாரின் மனைவி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அவரது கதாபாத்திரத்திற்கு திரைக்கதையில் எந்தவிதமான முக்கியத்துவமும் இல்லை முடக்கத்தான் மணியின் காதலியாக நடித்திருக்கும் ரேவதி, ‘வதந்தி’ முதல் சீசனில் நடித்த அதே ராமர் கதாபாத்திரமாக பயணிக்கும் விவேக் பிரசன்னா ஆகியோரும் தங்களது பணியை குறையின்றி செய்திருக்கிறார்கள்.


ஒளிப்பதிவாளர் சரவணன் ராமசாமி, கிரைம் திரில்லர் என்பதால் அதிகமான இருளை பயன்படுத்தாமல், இயற்கையின் வெளிச்சத்தில் ரம்மியமான வண்ணத்தில் காட்சிகளை படமாக்கி ரசிக்க வைத்திருக்கிறார். கதைக்களம் மற்றும் கதாபாத்திரங்களையும் இயல்பு தன்மை மாறாமல் காண்பித்து கவனம் ஈர்க்கிறார்.


இசையமைப்பாளர் சைமன் கே.கிங் இசையில் பின்னணி இசை தொடருக்கு மிகப்பெரிய பலம் சேர்த்திருக்கிறது. ஒரு குறிப்பிட்ட இசையை எத்தனை முறை கேட்டாலும் சலிப்படைய செய்யாது. அப்படி ஒரு பீஜியமை கொடுத்து மர்ம முடிச்சுகள் அவிழும் காட்சிகளுக்கு மட்டும் இன்றி அதன் மூலம் அடுத்து என்ன நடக்கும், என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் காட்சிகளின் மீதும் தனது பின்னணி இசை மூலம் பார்வையாளர்களின் முழு கவனத்தையும் ஈர்த்து விடுகிறார்.


இணையத் தொடர்களில் படத்தொகுப்பாளர்களின் பணி மிக முக்கியமானது, அதிலும் கிரைம் திரில்லர் என்றால் ஒவ்வொரு அத்தியாயத்திலும் ஒரு சஸ்பென்ஸையாவது நிச்சயம் சொல்ல வேண்டும், என்ற சவாலை மிக சாமர்த்தியமாக எதிர்கொண்டிருக்கும் படத்தொகுப்பாளர் ரிச்சர்ட் கெவின்.ஏ, சஸ்பென்ஸ் காட்சிகளுடன் மதுரை மாவட்ட மக்களின் வாழ்வியலையும் ரசிக்கும்படி தொகுத்திருக்கிறார்.


கலை இயக்குநர் மீவின்னின் பணியும் கவனம் ஈர்க்கிறது. ஜல்லிக்கட்டு போட்டியை காட்சிப்படுத்திய விதம் மற்றும் பழைய காவல்துறை ஆகியவற்றை உண்மைக்கு நெருக்கமாக வடிவமைத்திருக்கிறார்.


எழுதி இயக்கியிருக்கும் ஆண்ட்ரூ லூயிஸ், வதந்தி முதல் சீசனில் கொலையாளி யார் ? என்பதை தேடும் பயணத்தை விறுவிறுப்பாக நகர்த்தி சென்றது போல், இந்த இரண்டாம் சீசனில், கொலையாளியாக தண்டனைப் பெற்றவரை நிரபராதி என்பதை நிரூபிக்கும் பயணத்தை விறுவிறுப்பாக நகர்த்தி சென்றிருக்கிறார்.


அனைத்து அத்தியாயங்களும் எதாவது ஒரு விசயத்தின் மூலம் அடுத்தது என்ன நடக்கும் ? , கொலையாளி யார் ? ஆகிய கேள்விகளை பார்வையாளர்கள் மனதில் எழுப்புவதோடு, முடக்கத்தான் மணியின் மவுனம் பற்றியும் யோசிக்க வைக்கிறது.


இரத்தம், முகம் சுழிக்க வைக்கும் ஆபாசம், நெருட வைக்கும் கொடூரமான காட்சிகள் என கிரைம் திரில்லர் இணையத் தொடர்களின் அனைத்து அம்சங்களையும் தவிர்த்துவிட்டு, சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை என அனைத்து தரப்பினரும் பார்க்க கூடிய மிக அமைதியான அதே சமயம் சுவாரஸ்யமான கிரைம் திரில்லர் தொடராக இயக்கியிருக்கும் ஆண்ட்ரூ லூயிஸை பாராட்டி வரவேற்க வேண்டும்.


மொத்தத்தில், ‘வதந்தி – சீசன் 2’ அனைத்து தரப்பு பார்வையாளர்களையும் கவரும் கிரைம் திரில்லர் தொடர்.

போட்டோகிராபர்’ திரைப்பட விமர்சனம்

 போட்டோகிராபர்’ திரைப்பட விமர்சனம்


புகைப்பட கலைஞரான நாயகன் அஷ்ரப், இதுவரை யார் கண்ணுக்கும் புலப்படாத ஒரு அரிய மரத்தை புகைப்படம் எடுப்பதற்காக மேற்குத் தொடர்ச்சி வனப்பகுதியில் பயணிக்கிறார். அப்போது வழிதவறி ஆபத்து நிறைந்த வனப்பகுதிக்குள் சிக்கிக்கொள்கிறார். சென்றவர்கள் யாரும் திரும்பி வராத மிக ஆபத்தான அந்த வனப்பகுதியில் இருந்து வெளியேற வழி தெரியாமல் தடுமாறும் அஷ்ரப், பல ஆபத்தான சூழ்நிலைகளை எதிர்கொண்டு உயிருக்கு போராடுகிறார்.


காட்டில் பயணிக்கும் ஒவ்வொரு நிமிடமும் பல மர்மம் மற்றும் திகில் சூழல்களை எதிர்கொள்ளும் அஷ்ரப், அங்கிருத்து தப்பித்தாரா ?, அவர் புகைப்படம் எடுக்க நினைத்த மரத்தை பார்த்தாரா ? என்பதை திகில் மற்றும் உளவியல் கலந்து சொல்வதே ‘போட்டோகிராபர்’.


கதை எழுதி இயக்கி, கதையின் நாயகனாகவும் நடித்திருக்கும் அஷ்ரப், தனிமனித பயணத்தை கதைக்களமாக வைத்துக்கொண்டு மர்மம், திகில், அமானுஷ்யம், உளவியல் ஆகிய உணர்வுகளின் பயணமாக படத்தை கொடுக்க முயற்சித்திருக்கிறார்.


வீரா என்ற கதாபாத்திரத்தின் மூலம் நடிகராக முழு படத்தையும் சுமந்திருக்கும் அஷ்ரப், முதல் படத்திலேயே பல்வேறு உணர்வுகளை மிக நேர்த்தியாக வெளிப்படுத்தி நடிப்பில் ஸ்கோர் செய்திருக்கிறார். ஆரம்பத்தில் அவரது கதாபாத்திரமும், அவரது நடிப்பும் ஓவர் டோஸ் போல் இருந்தாலும், இரண்டாம் பாதியில் பயணிக்கும் திரைக்கதை மற்றும் காட்சிகள் மூலம் அவரது நடிப்பு பாராட்டை பெறுகிறது.


நாயகியாக நடித்தாலும் ஒரு சில காட்சிகளில் மட்டுமே வரும் அனனி சுவாமிநாதன் நிறைவாக நடித்திருக்கிறார்.


நாயகனின் நண்பராக நடித்திருக்கும் கருணாகரன், தனது எதார்த்தமான நடிப்பின் மூலம் படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறார். மற்றொரு நண்பராக நடித்திருக்கும் உறியடி சிவாவின் நடிப்பும் நன்று.


நாயகனின் தந்தையாக நடித்திருக்கும் ஆடுகளம் நரேனின் அனுபவம் வாய்ந்த நடிப்பு படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது. நாயகனின் அம்மாவாக நடித்திருக்கும் தேவி மகேஷ், அழகு மற்றும் அளவான நடிப்பு மூலம் கவர்கிறார். ஒளிப்பதிவாளர் ரயீஷ் அஹ்மத், காட்டின் அமைதியையும், ஆபத்தையும் பார்வையாளர்கள் அச்சமடையும் வகையில் காட்சிப்படுத்த முயற்சித்திருக்கிறார். ஆனால், வனப்பகுதியின் பெரும்பாலான காட்சிகள் பகல் நேரத்தில் நடப்பதாலும், அடர்ந்த வனப்பகுதி அல்லாத இடங்களில் காட்சிகள் பயணிப்பதாலும் நம்மால் அச்சமடைய முடியவில்லை. கிராபிக்ஸ் காட்சிகள் மூலம் மேற்கொண்ட மிரட்டல் முயற்சிகளும் பெரும் தோல்வியடைந்திருக்கிறது.


ராஜ்குமார் சந்திரசேகரனின் பின்னணி இசை மற்றும் வித்தியாசமான ஒலிகள் கவனம் ஈர்க்கிறது. நாயகன் கதாபாத்திரம் மட்டுமே பயணிக்கும் இரண்டாம் பாதியில், பின்னணி இசை பார்வையாளர்களின் கவனத்தை கட்டிப்போடும் விதத்தில் பயணித்திருக்கிறது.


ஆபத்து நிறைந்த ஒரு பயண கதையை சுவாரஸ்யமாக சொல்ல முயற்சித்திருக்கும் இயக்குநருக்கு பெரும் துணையாக பயணித்திருக்கும் படத்தொகுப்பாளர் ஆர்.சி.பிரணவ், முதல் பாதி முழுவதையும் மிக மெதுவாக நகர்த்தியிருப்பது பார்வையாளர்களை சோர்வடைய வைக்கிறது. இருந்தாலும், இரண்டாம் பாதியில் கதையை வேகமாக விவரித்திருப்பதோடு, சில எதிர்பார்க்காத திருப்பங்கள் மூலம் படத்துடன் பார்வையாளர்களை ஒன்றிவிட செய்து விடுகிறார்.


இயக்குநர் அஷ்ரப், ஒரு புகைப்பட கலைஞரின் பயணத்தை கருவாக வைத்துக்கொண்டு, எழுதியிருக்கும் திரைக்கதை உயிர் பிழைக்கும் தனிமனித போராட்டத்தையும், சாகசத்தையும் காட்சி மொழியில் விவரிக்க முயற்சித்திருக்கிறது.


துவக்கம் முதலே மெதுவாக நகரும் படம், கதைக்குள் பயணிக்க தடுமாறுவதும், நேரத்தை கடத்துவதற்காக கையாளப்பட்ட காட்சிகள் திணிக்கப்பட்டவையாக இருப்பதால் முதல் பாதி படம் பார்வையாளர்களை சோர்வடைய வைத்து விடுகிறது. இரண்டாம் பாதியில் கதை தொடங்குவதும், இயற்கை, அம்மா – மகன் செண்டிமெண்ட், அதன் மூலம் ஏற்படும் உளவியல் பாதிப்பு ஆகியவற்றின் மூலம் திரைக்கதையில் சுவாரஸ்யம் தொற்றிக்கொண்டு படம் கவனம் ஈர்க்கிறது.


இருந்தாலும், நாயகனின் காட்டு பயணத்தையும், அதில் அவர் எதிர்கொள்ளும் மர்மங்களையும் பார்ப்பதற்கு அதிகம் பொறுமை தேவை.


மொத்தத்தில், ‘போட்டோகிராபர்’ சிறப்பு .

’ஜி.டி.என்’ திரைப்பட விமர்சனம்

 ’ஜி.டி.என்’ திரைப்பட விமர்சனம்


ஜி.டி.நாயுடு யார் ? என்பது பற்றி தமிழ் மற்றும் வரலாற்று பாடப்புத்தகங்களில் மேலோட்டமாக அல்லது பொது அறிவு சார்ந்த சிறு கட்டுரையாக படித்திருப்போம். ஆனால், ஜி.டி.நாயுடு என்ற சாதனையாளர் அந்த சிறு கட்டுரைக்குள் அடங்க கூடியவர் அல்ல, அவர் உலக நாடுகள் கொண்டாடிய மாபெரும் விஞ்ஞானி மற்றும் தொழில்துறை வல்லுநர் என்பதையும், அவரது கனவுகள் எப்படி சிதைக்கப்பட்டது, அவரது சாதனைப் பயணத்திற்கு இடையூறுகள் யாரால் வந்தது ? என்பதை உண்மைக்கு நெருக்கமாக சொல்வது தான் ‘ஜி.டி.என்’.


கோவையில் பிறந்த கோபால்சாமி துரைசாமி நாயுடு என்ற ஜி.டி.நாயுடுவின் இளம் வயது முதல் அவரது இறப்பு வரை பயணிக்கும் கதையில், அவர் மேற்கொண்ட சாதனைகள் மட்டும் இன்றி அவர் எதிர்கொண்ட சோதனைகளையும் திரை மொழியில் மிக சுவாரஸ்யமாக சொல்லியிருக்கிறார்கள்.


ஜி.டி.நாயுடுவின் கண்டுபிடிப்புகளை ஜெர்மன், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் அங்கீகரித்தாலும், இந்திய அரசு அவரை எந்தவிதத்திலும் அங்கீகரிக்காமல் இருந்ததோடு, அவரது கனவுகளை சிதைக்கும் செயல்களில் எப்படி ஈடுபட்டது, என்பதை தைரியமாக சொலியிருக்கும் இயக்குநர் கிருஷ்ணகுமார் ராம்குமார், நாம் அறிந்திராத பல விசயங்களை எளிமையான முறையில் சொல்லியிருக்கிறார்.


ஜி.டி.நாயுடு கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் மாதவன், தனது ஸ்டைலிஷ் மற்றும் கம்பீரமான தோற்றத்தின் மூலம் அந்த கதாபாத்திரத்திற்கு கூடுதல் பலம் சேர்த்திருக்கிறார். வீரபாண்டியன் கட்டபொம்மன் என்றால் எப்படி சிவாஜி கணேசன் நினைவு வருகிறதோ, அதுபோல் ஜி.டி.நாயுடு என்றால் முதலில் மாதவன் முகம் தான் நினைவுக்கு வரும். ஜி.டிநாயுடுவின் இளமைக்கால தோற்றம் மற்றும் முதுமைக்கால தோற்றம் என இரண்டிலும் தோற்றத்தில் மட்டும் இன்றி நடிப்பிலும் ஜி.டி.நாயுடு இப்படி தான் இருந்திருப்பாரோ…!, என்று பார்வையாளர்கள் வியக்கும் வகையில் மாதவன் நடித்திருக்கிறார்.


ஜி.டி.நாயுடு கதாபாத்திரத்திற்குப் பிறகு அம்பலவானா கிருஷ்ணன் என்ற வரித்துறை அதிகாரி வேடத்தில் நடித்திருக்கும் ஜெயராம் நடிப்பில் மிரட்டியிருக்கிறார். காமெடி கலந்த நடிகராக பார்த்த ஜெயராம், இதில் வில்லத்தனம் கலந்த நடிப்புடன், ஒரு நேர்மையான அதிகாரியின் கோபத்தையும் மிக நேர்த்தியாக வெளிப்படுத்தி பார்வையாளர்களிடம் பாராட்டு பெறுகிறார்.


ஜி.டி.நாயுடுவின் நண்பராக சிதம்பரம் பிள்ளை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சத்யராஜின் தோற்றம் மற்றும் நடிப்பு படத்திற்கு பெரும் பலம் சேர்த்திருக்கிறது.


துஷாரா விஜயன், பிரியா மணி, அதிதி பாலன், வினய் ராய், கருணாகரன், டீஜே அருணாச்சலம், மோகன் ராமன், தம்பி ராமையா, விஜய் யேசுதாஸ், ஷீலா ராஜ்குமார், பிரிகிடா சாகா, ஷில்பா ஸ்ரீகுமார் உள்ளிட்ட அனைத்து நட்சத்திரங்களும் கதாபாத்திரங்களுக்கு பொருத்தமான தேர்வாக பயணித்திருக்கிறார்கள்.


ஜி.டி.நாயுடு வாழ்ந்த காலக்கட்டத்திற்கு தன் கேமரா மூலம் பார்வையாளர்களை அழைத்துச் செல்லும் ஒளிப்பதிவாளர் அரவிந்த் கமலநாதன், ஜெர்மனி பயணம் மற்றும் ஹிட்லரிடம் விருது வாங்குவது போன்ற காட்சிகளை கிராபிக்ஸ் மூலம் மிக சரியாக கையாண்டு வியக்க வைத்திருக்கிறார்.ஜி.டி.நாயுடு வாழ்ந்த காலத்துச் சூழலை மீட்டெடுக்கும் விதமாகப் பழமை மாறாத கருவிகளின் ஒலியையும், நவீன முறையையும் இணைத்து இசையமைத்திருக்கும் கோவிந்த் வசந்தாவின் இசை காட்சிகளுக்கு உயிரூட்டியிருப்பதோடு, ஒரு கதாபாத்திரமாகவே படம் முழுவதும் வலம் வருகிறது. எந்த ஒரு இடத்திலும் இசையின் தனித்தன்மை தெரியாமல் பயணிக்கும் பின்னணி இசை படத்திற்கு பெரும் பலம் சேர்த்திருக்கிறது.


தனிமனிதனின் வாழ்க்கை வரலாறு கதை என்றாலும், அதை முழுக்க முழுக்க கமர்ஷியல் சினிமா பாணியில் பயணிக்க வைத்திருக்கும் படத்தொகுப்பாளர்கள் பிஜித் பாலா மற்றும் கே.சசி குமார் ஆகியோரது பணி சிறப்பு.


தயாரிப்பு வடிவமைப்பாளர் சிரில் குருவில்லா மற்றும் ஆடை வடிவமைப்பாளர் ஜிஷாத் சம்சுதீன் ஆகியோரது பணி படம் முழுவதும் பேச வைக்கிறது. பழைய வாகனங்கள் முதல் கதாபாத்திரங்கள் அணிந்திருக்கும் ஆடை, அவர்களது பின்னணியில் பயன்படுத்தப்பட்ட பொருட்கள் என அனைத்தையும் மிக கவனமாக கையாண்டிருப்பவர்கள் கடினமாக உழைத்திருப்பது படம் முழுவதும் தெரிகிறது.


கிருஷ்ணகுமார் ராம்குமார் மற்றும் ஆர்.மாதவன் ஆகியோரது திரைக்கதை ஜி.டி.நாயுடு பற்றிய பல விசயங்களை திரைமொழியில் மிக நேர்த்தியாக சொல்லியிருக்கிறது. ஜி.டி.நாயுடுவின் பயணம் மற்றும் சாதனையோடு, அவர் எதிர்கொண்ட பிரச்சனைகளை திரை மொழியில் சுருக்கமாகவும், சுவாரஸ்யமாகவும் சொல்லியிருக்கும் திரைக்கதையாசிரியர்கள், வரித்துறை சம்பவங்களை திரும்ப திரும்ப பேசுவதும், அது தொடர்பான காட்சிகளை ரிப்பீட் மோடில் கையாண்டிருப்பது படத்தை சற்று தொய்வடைய செய்கிறது.


இயக்குநர் கிருஷ்ணகுமார் ராம்குமார், பல்வேறு பயணங்களை கொண்ட ஜி.டி.நாயுடுவின் வாழ்க்கையை எளிமையான முறையில் சொல்லியிருந்தாலும், காட்சிகளை கவனமாக கையாண்டு ஒரு நேர்த்தியான படமாக கொடுத்திருக்கிறார்.


ஜி.டி.நாயுடுவின் சாதனைகளும், சோதனைகளும் ஒரு பக்கம் இருந்தாலும், இறுதியில் தன் சொத்துக்களை காப்பாற்றிக் கொள்வதற்காக அவர் போடும் திட்டம் சற்று நெருடலாக இருக்கிறது. அதே சமயம், வெற்றிக்காக எதையும் செய்ய தயாராக இருக்கும் தொழிலதிபர்களுக்கு மத்தியில் தனது கனவுகள் சிதைக்கப்பட்டாலும் சரி, தனது சாதனைப் பயணம் தடுத்து நிறுத்தப்பட்டாலும் சரி, ”தவறான வரியை செலுத்தி, எதிர்கால தலைமுறைக்கு தவறான முன்னுதாரணமாக இருக்க மாட்டேன்”, என்ற கொள்கையுடன் வாழ்ந்த ஜி.டி.நாயுடுவை இந்த படம் மூலம் இந்தியாவும் கொண்டாடும்.


மொத்தத்தில், ‘ஜி.டி.என்’ நிச்சயம் பார்க்க வேண்டிய படம்.

DC. Movie Review tamil

 DC. Movie Review tamil


சூழ்நிலை காரணமாக குற்றவாளியாகி சிறைக்கு செல்லும் நாயகன் லோகேஷ் கனகராஜின் சாதாரண வாழ்க்கையை சிறைவாசம் அசாதாரணமானதாக மாற்றுகிறது. தொடரும் அவரது குற்ற செயல்களால் காவல்துறை அவரை விரட்டுகிறது. காவல்துறையிடம் இருந்து தப்பித்து ஓடும் பயணத்தில், சஞ்சனா ஏ.கே-வை சந்திக்கிறார். அவருடனான நட்பு அவரது மனநிலையை மாற்றும் நேரத்தில், போலீஸின் துப்பாக்கி சூட்டுக்கு அவர் பலியாகி விடுகிறார். அங்கிருந்து தப்பித்து ஓடும் லோகேஷ் கனகராஜ், தனக்கு பிடிக்காத வாழ்க்கை வாழும் வாமிகா கபியை சந்திக்கிறார். அவரது நரக வாழ்க்கையை புரிந்துக்கொண்டு அதில் இருந்து அவரை காப்பாற்றுகிறார்.


காப்பாற்றப்பட்ட வாமிகா கபி, எங்கு செல்வது என்று தெரியாமல் லோகேஷ் கனகராஜுடன் பயணிப்பதுடன், தன்னை சீரழித்த மருத்துவரை கொலை செய்கிறார். இதனால் போலீஸ் இருவரையும் சேர்த்து துரத்துகிறது. போலீஸிடம் இருந்து தப்பிக்க முயற்சிக்கும் இவர்களது பயணத்தை, காவல்துறைக்கும் – குற்றவாளி கும்பலுக்கும் இடையே நடக்கும் மோதலாக சொல்வது தான் ‘டிசி’.


தவறு செய்பவர்களை போலீஸ் தட்டிகேட்பார்கள், ஆனால் அந்த போலீஸே தவறு செய்தால், அவர்களது பாணியில் தட்டிகேட்பவர்களுக்கு ரவுடி மற்றும் குற்றவாளி முத்திரை குத்தப்படும். அப்படிப்பட்ட அடையாளத்துடன் பயணிக்கும் நாயகன், போலீஸால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு பழி தீர்க்க களம் இறங்க, இரு தரப்புக்கும் இடையே நடக்கும் மோதலை அதிரடியாக மட்டும் இன்றி ரசிக்கும்படியாகவும் இயக்குநர் அருண் மாதேஸ்வரன் காட்சி மொழியில் சொல்லியிருக்கிறார்.


நாயகனாக அறிமுகமாகியிருக்கும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ், தேவதாஸ் என்ற கதாபாத்திரத்தில் அதிரடியாக அறிமுகமாகியிருக்கிறார். கதபாத்திரத்திற்கு பொறுத்தமான தேர்வாகவும், அளவான நடிப்பின் மூலமாகவும் கவனம் ஈர்ப்பவர், ஆக்‌ஷன் காட்சிகளில் மிரட்டுகிறார்.


நாயகியாக நடித்திருக்கும் வாமிகா கபி, தனது நரக வாழ்க்கையை தன் உடல்மொழி மூலமாகவே நேர்த்தியாக பிரதிபலித்திருக்கிறார். மற்றொரு நாயகியாக நடித்திருக்கும் சஞ்சனா.ஏ.கே, அதிகப்படியான ஒப்பனையோடு அறிமுகமாகி சில காட்சிகள் தலைகாட்டினாலும், அவரது முடிவு பார்வையாளர்கள் மனதை கனக்க செய்கிறது.


தலைவாசல் விஜய், கஸ்தூரி ராஜா, கிரிஷ் ட்ய்ஹயால், அவினாஷ் ரகுதேவன், ஜவஹர் சக்தி, ஷரத் ரவி, பிரணவ் தியோஃபைன், ஏ.ராஜரிஷி, பாலாஜி தேவிபிரசாத், அட்டுல் உள்ளிட்ட அனைத்து நடிகர்களும் கதாபாத்திரங்களுக்கு பொறுத்தமான தேர்வு. ஒளிப்பதிவாளர் முகேஷ்.ஜி, ஆக்‌ஷன் காட்சிகளை ரசிக்கும்படி காட்சிப்படுத்தியிருப்பதோடு, படம் முழுவதும் ஒரே வண்ணத்தை பயன்படுத்தி பார்வையாளர்களின் கவனத்தை எளிதில் ஈர்த்து விடுகிறார். வித்தியாசமான கோணங்கள் மற்றும் வேகமான கேமரா பயணம் ஆகியவற்றின் மூலம் சாதாரண காட்சிகளை கூட பார்வையாளர்கள் கவனிக்கும்படி செய்திருக்கிறார்.


அனிருத்தின் இசை தான் படத்தின் மிகப்பெரிய பலம். அதிரடியான ஆக்‌ஷன் காட்சிகளை கூட நெருடல் இல்லாமல் ரசிக்க முடிகிறது என்றால் அது அனிருத்தின் பின்னணி இசை தான். படத்தின் ஆரம்பம் முதல் முடிவு வரை அனிருத்தின் பின்னணி இசை ஒவ்வொரு காட்சிக்கும் கூடுதல் பலம் சேர்த்திருக்கிறது.


படம் முழுவதும் வன்முறை காட்சிகள் நிறைந்திருந்தாலும், அதை கதையோடு பயணிக்க வைத்து பார்வையாளர்களையும் படத்துடன் பயணிக்க வைத்திருக்கிறார் படத்தொகுப்பாளர் ஜி. கே. பிரசன்னா.


இயக்குநர் அருண் மாதேஸ்வரனின் அக்மார்க் இரத்தமும், சதையும் கலந்த திரைக்கதையும், காட்சியமைப்புகளும் கொண்ட படம் தான் என்றாலும், இதில் சற்று வித்தியாசமாக வன்முறை காட்சிகளை அனிருத்தின் அபாரமான பின்னணி இசையோடு ரசிக்கும்படி கொடுத்திருக்கிறார்.


படம் முழுவதும் இரத்தம் தெறிப்பதும், உடல் பாகங்கள் துண்டாக்கப்படுவதும் தூக்கலாக இருந்தாலும், தேவதாஸ் – சந்திரா ஜோடியின் காதல் அரும்பும் காட்சிகள் மூலம் அத்தனை வன்முறை காட்சிகளையும் மறந்துவிட்டு, பார்வையாளர்களை காதலில் மூழ்கடித்து விடும் அருண் மாதேஸ்வரன், அடக்குமுறைக்கு ஆளாகும் எளியவர்கள் திருப்பியடிப்பது வன்முறை என்றாலும் அதை தொடர்ந்து செய்ய வேண்டும் என்ற தனது மெசஜையும் இதிலும் ஆழமாக பதிவு செய்திருக்கிறார்.


மொத்தத்தில், ‘டிசி’ காதலும், வன்முறையும் சேர்ந்த கலவை.

வரவேற்பைக் குவிக்கும் ‘மாஸ்டர் பிளான்’ ஃபர்ஸ்ட் லுக் !!*

 *வரவேற்பைக் குவிக்கும் ‘மாஸ்டர் பிளான்’ ஃபர்ஸ்ட் லுக் !!* 



*நகைச்சுவை,ஃபேண்டஸி கலந்த ‘மாஸ்டர் பிளான்’ ஃபர்ஸ்ட் லுக் ரசிகர்களிடம் வரவேற்பு!*


உத்ரா புரொடக்ஷன்ஸ் மற்றும் டிஜே இன்டர்நேஷனல் மற்றும் தியா ஃபிலிம்ஸ் இணைந்து தயாரிக்க, செ. ஹரி உத்ரா எழுதி, இயக்கி, தயாரிக்கும் ‘மாஸ்டர் பிளான்’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. பிளாக் ஹூமர், ஃபேண்டஸி மற்றும் குடும்ப பொழுதுபோக்கு அம்சங்கள் கலந்த படமாக உருவாகி வரும் இப்படம் மீதான எதிர்பார்ப்பை இந்த ஃபர்ஸ்ட் லுக் மேலும் அதிகரித்துள்ளது.


தற்போது வெளியாகியுள்ள ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில், பொன்னிற ஒளி வீசும் மர்மப் பெட்டியை கையில் ஏந்தியபடி வயதான பாட்டி மற்றும் சிறுவன் நிற்கிறார்கள். சுற்றி குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் ஆச்சரியம், பயம், பதற்றம் கலந்த முகபாவனையுடன் அந்தப் பெட்டியை நோக்கி நிற்கும் காட்சி, கதையின் மையமாக இந்த மாயப் பெட்டி அமையப்போகிறது என்பதை உணர்த்துகிறது. பழமையான வீட்டின் பின்னணி, சிதறிக் கிடக்கும் பணக்கட்டுகள், துப்பாக்கி உள்ளிட்ட காட்சிகள், திரில் நிறைந்த குடும்பக் கதைக்கான எதிர்பார்ப்பை ஏற்படுத்துகின்றன. வித்தியாசமான காட்சியமைப்பால் சமூக வலைதளங்களிலும் இந்த ஃபர்ஸ்ட் லுக் கவனம் ஈர்த்து வருகிறது.


தகுதிக்கு மீறிய வாழ்க்கையை வாழ விரும்பும் ஒரு நடுத்தர குடும்பம், அதனால் உருவாகும் பிரச்சனைகளில் இருந்து, ஃபேண்டஸி மற்றும் நகைச்சுவை அம்சங்கள் கலந்து எப்படி மீண்டு வருகிறது என்பதையே இப்படம் சுவாரஸ்யமாக சொல்லவுள்ளது. கோலமாவு கோகிலா, டாக்டர், டூரிஸ்ட் ஃபேமிலி போன்ற படங்களின் பாணியில் பிளாக் ஹூமர் கலந்த குடும்ப பொழுதுபோக்கு திரைப்படமாக இது உருவாகி வருகிறது.


தருண் விஜய் மற்றும் பிக்பாஸ் புகழ அக்‌ஷரா ரெட்டி நாயகன்–நாயகியாக நடிக்கும் இப்படத்தில் பாவல் நவகீதன், திவ்ய ஜகத், அப்புகுட்டி, தீபா சங்கர், தேனப்பன், சம்பத் ராம், கஜராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 


தற்போது தேனி, விழுப்புரம், செஞ்சி உள்ளிட்ட பகுதிகளில் படப்பிடிப்பு தீவிரமாக நடைபெற்று வருகிறது. இப்படத்தின் அடுத்தடுத்த அறிவிப்புகள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.


தொழில்நுட்பக் குழு:


எழுத்து, இயக்கம், தயாரிப்பு: செ. ஹரி உத்ரா

வசனம் : செ. ஹரி உத்ரா, P. ரஞ்சித் குமார்

ஒளிப்பதிவு: K.S. பழனி

இசை: A.J. அலி மிர்சாக்

படத்தொகுப்பு: பிரசாந்த், S.B. ராஜா

கலை இயக்கம்: எட்வர்ட் கென்னடி

சண்டைப்பயிற்சி: கனல் V. கண்ணன், கனல் S. குகன்

நடனம்: I. ராதிகா, ராஜேஷ் கிறிஸ்டி

பாடல் வரிகள் : மோகன் ராஜன், கவிஞர் சாரதி 

நிர்வாக தயாரிப்பாளர்கள்: மனோவ் செல்வராஜ், தனகோபால், M. விஸ்வநாதன், சேட்டு K

இணை தயாரிப்பாளர்கள்: பாலகங்காதரன், திவ்யா ஜகத், ஜனார்த்தனன் V.

மக்கள் தொடர்பு: சதீஷ் (AIM)

புதிய வெளியீட்டு தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு: ஆகஸ்ட் 28-ல் உலகம் முழுவதும் வெளியாகும் நயன்தாரா - கவின் நடித்த ‘ஹாய்’*

 *புதிய வெளியீட்டு தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு: ஆகஸ்ட் 28-ல் உலகம் முழுவதும் வெளியாகும் நயன்தாரா - கவின் நடித்த ‘ஹாய்’*



*தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகை நயன்தாரா மற்றும் நடிகர் கவின் முதன்முறையாக இணைந்து நடித்திருக்கும் ‘ஹாய்’ திரைப்படத்தின் புதிய வெளியீட்டு தேதியை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.*


அறிமுக இயக்குநர் விஷ்ணு எடவன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தில் நயன்தாரா, கவின், கே. பாக்யராஜ், பிரபு, ராதிகா சரத்குமார், விடிவி கணேஷ், சத்யன், ‘ஆதித்யா’ கதிர், குரேஷி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ராஜேஷ் சுக்லா ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு ஜென் மார்ட்டின் இசையமைத்துள்ளார். படத்தொகுப்பை பிலோமின் ராஜ் மேற்கொண்டுள்ள நிலையில், கலை இயக்கத்தை எஸ். கண்ணன் கவனித்துள்ளார்.


முழுக்க முழுக்க குடும்பத்துடன் ரசிக்கும் வகையிலான ஃபேமிலி என்டர்டெய்னராக உருவாகியுள்ள இந்த திரைப்படத்தை ஜீ ஸ்டுடியோஸ், தி ரவுடி பிக்சர்ஸ் மற்றும் செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனங்கள் சார்பில் நயன்தாரா, விக்னேஷ் சிவன் மற்றும் எஸ். எஸ். லலித்குமார் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். வினோத் சி. ஜே. மற்றும் கே. எஸ். மயில்வாகனன் இணை தயாரிப்பாளர்களாகவும், வி. கே. குபேந்திரன் கிரியேட்டிவ் புரொடியூசராகவும் பணியாற்றியுள்ளனர்.


ஏற்கனவே வெளியாகியுள்ள இப்படத்தின் முதல் பாடல் மில்லியன் கணக்கான டிஜிட்டல் பார்வைகளை பெற்று ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றதுடன், படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகரித்துள்ளது. இந்த நிலையில், தற்போது வெளியிடப்பட்டுள்ள புதிய அறிவிப்பு போஸ்டர் மூலம் ‘ஹாய்’ திரைப்படம் உலகம் முழுவதும் ஆகஸ்ட் 28 முதல் திரையரங்குகளில் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.


இப்படம் குறித்து இயக்குநர் விஷ்ணு எடவன் பேசுகையில்,


“பெயருக்கு ஏற்றபடி எளிமையான, இனிமையான, மனதை வருடும் குடும்ப பொழுதுபோக்கு திரைப்படமாக ‘ஹாய்’ உருவாகியுள்ளது. சென்னை, கோயம்புத்தூர், பொள்ளாச்சி ஆகிய மூன்று நகரங்களை பின்னணியாகக் கொண்டு நகரும் இந்தக் கதையை, குடும்பத்துடன் மகிழ்ச்சியாக ரசிக்கும் வகையில் வடிவமைத்துள்ளோம். ‘டார்லிங் டார்லிங் டார்லிங்’, ‘சந்தோஷ் சுப்பிரமணியம்’, ‘யாரடி நீ மோகினி’ போன்ற வில்லன்கள் இல்லாத ஃபேமிலி என்டர்டெய்னர்களின் உணர்வை நினைவூட்டும் திரைப்படமாக இது இருக்கும்” என்றார்.


இயக்குநர் லோகேஷ் கனகராஜின் ‘கைதி’, ‘மாஸ்டர்’, ‘விக்ரம்’ உள்ளிட்ட வெற்றிப் படங்களில் பணியாற்றிய அனுபவம் கொண்ட பாடலாசிரியர் விஷ்ணு எடவன் இயக்குநராக அறிமுகமாகும் படம் என்பதாலும், நயன்தாரா - கவின் இணையும் முதல் திரைப்படம் என்பதாலும், அனுபவம் மிக்க நட்சத்திர பட்டாளம் ஒன்றாக இணைந்திருப்பதாலும், ‘ஹாய்’ திரைப்படம் ரசிகர்கள் மற்றும் திரையுலக வட்டாரங்களில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

சூர்யாவின் விஸ்வநாத் & சன்ஸ் படத்தின் முன்னோட்டம் வெளியீடு*

 *சூர்யாவின் விஸ்வநாத் & சன்ஸ் படத்தின் முன்னோட்டம் வெளியீடு*



*சூர்யாவின் விஸ்வநாத் & சன்ஸ் படத்தின் டிரெய்லர்: மனதிற்கு இதமான திரையரங்க அனுபவத்தை உறுதி செய்கிறது*


சூர்யா நடிப்பில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.  இது மகிழ்ச்சி- உணர்வு பூர்வமான தருணங்கள்- இனிமையான சூழல் கொண்ட முழுமையான திரைப்பட  அனுபவத்தை அளிக்கும் வகையில் அமைந்துள்ளது. இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் தயாரிப்பாளர்கள்சூர்யதேவர நாக வம்ஷீ மற்றும்சாய் சௌஜன்யா  ஆகியோரின் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த திரைப்படம் - இந்த ஆண்டின் மிகச்சிறந்த குடும்ப பொழுதுபோக்கு திரைப்படங்களில் ஒன்றாக அமைய உள்ளது. 


நாற்பது வயதை கடந்தும் தனது கனவுகளை துரத்தும் சர்வதேச துப்பாக்கி சுடும் வீரரான சஞ்சய் விஸ்வநாத்தின் உலகத்தை இந்த ட்ரெய்லர் அறிமுகப்படுத்துகிறது. ஸ்டைல் -கனிவு- நகைச்சுவை- உணர்ச்சிகள் - ஆகியவற்றை சூர்யா மிக சிறப்பாக கையாண்டு, பார்வையாளர்களின் மனதை உடனடியாக கவரும் வகையிலான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். அவரது கவனம் ஈர்க்கக்கூடிய திரை ஆளுமையும்... வெங்கி அட்லூரியின் உணர்வுபூர்வமான திரைக்கதையும்... இணைந்து சமீப காலங்களில் சூர்யாவின் மிகச்சிறந்த மற்றும் மனதிற்கு நெருக்கமான நடிப்புகளில் ஒன்றாக இந்த படம் அமையும் என்பதையும் உறுதிப்படுத்துகின்றன. 


திரையில் மமிதா பைஜூ தனது தனித்துவமான வசீகரத்தை வெளிப்படுத்த.. ராதிகா சரத்குமார், ரவீனா தாண்டன் மற்றும் சிறந்த நட்சத்திர நடிகர்கள் குழு இந்த உணர்வுபூர்வமான பயணத்திற்கு கூடுதலாக வலிமை சேர்த்துள்ளனர். ஜி. வி பிரகாஷ் குமாரின் மனதை வருடும் இசை... நிமிஷ் ரவியின் நேர்த்தியான ஒளிப்பதிவு... வெங்கி அட்லூரியின் தனித்துவமான கதை சொல்லும் பாணி... ஆகியவை இந்த ட்ரெய்லரை மேலும் மெருகூட்டுகிறது. 


கோயம்புத்தூரில் நடைபெற்ற பிரம்மாண்டமான இசை வெளியீட்டு விழாவில் படத்தின் உணர்வுபூர்வமான ஆழம் மற்றும் அனைத்து தரப்பு பார்வையாளர்களையும் ஈர்க்கும் திறன் குறித்தும் படக் குழுவினர் மிகுந்த நம்பிக்கையை பேச்சில் வெளிப்படுத்தினர். அந்த நம்பிக்கையை இந்த ட்ரெய்லர் முழுமையாக உறுதிப்படுத்தி இருப்பதுடன் மறக்க முடியாத திரையரங்க அனுபவத்திற்கான உத்திரவாதத்தையும் பார்வையாளர்களுக்கு அளிக்கிறது. 


 சிதாரா என்டர்டெயின்மென்ட்ஸ் மற்றும் ஃபார்ச்சூன் ஃபோர் சினிமாஸ் ஆகிய நிறுவனங்களின் தயாரிப்பில் ஸ்ரீகரா ஸ்டுடியோஸ் வழங்கும் 'விஸ்வநாத் & சன்ஸ்' திரைப்படம் - ஆகஸ்ட் 14ஆம் தேதி அன்று உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியாகிறது. இந்த ஆண்டு சுதந்திர தின கொண்டாட்டத்தின் வார இறுதியில் மறக்க இயலாத உணர்ச்சிகளின் உலகத்தை இப்படம் பார்வையாளர்களுக்கு வழங்க உள்ளது.


*Suriya’s ‘Vishwanath & Sons’ Trailer Promises a Heartwarming Big-Screen Experience*


The much-awaited trailer of Vishwanath & Sons, starring Suriya, is finally out and it promises a happy, emotional, pleasant and wholesome big-screen experience. Directed by Venky Atluri and produced by Suryadevara Naga Vamsi and Sai Soujanya, the film is gearing up to be one of the biggest family entertainers of the year.


The trailer opens the doors to the world of Sanjay Vishwanath, an international pistol shooter who continues to chase his dreams even in his 40s. Suriya effortlessly balances style, warmth, humour and emotion, delivering a performance that instantly strikes a chord. His charismatic screen presence, coupled with Venky Atluri’s heartfelt writing, promises one of his most endearing performances in recent years.


Mamitha Baiju brings her signature charm to the screen, while Radhika Sarathkumar, Raveena Tandon and the stellar ensemble cast add depth to this emotional journey. G. V. Prakash Kumar’s soulful music, Nimish Ravi’s rich visuals and Venky Atluri’s signature storytelling further elevate the trailer.


During the grand audio launch event in Coimbatore, the team confidently spoke about the film’s emotional strength and its ability to connect with audiences of all ages. The trailer now validates every bit of that confidence, leaving viewers with the promise of a memorable theatrical experience.


Produced under Sithara Entertainments and Fortune Four Cinemas, and presented by Srikara Studios, Vishwanath & Sons is all set for a grand worldwide release on August 14, 2026, promising audiences a world of unforgettable emotions this Independence Day weekend.


Link : https://www.youtube.com/watch?v=jZHoM2YhFCY

Hell Breaks Loose, A New Reign Begins In Fire, Witness The Madness – Teaser Of Nani, Srikanth Odela, Sudhakar Cherukuri, SLV Cinemas' The Paradise Unveiled

 *'நேச்சுரல் ஸ்டார்' நானி நடித்திருக்கும் 'தி பாரடைஸ் - The Paradise ' படத்தின் டீசர் வெளியீடு*



*நரகம் கட்டவிழ்த்து விடப்படுகிறது! நெருப்பில் ஒரு புதிய சகாப்தம் தொடங்குகிறது! இந்த வெறியாட்டத்தை காணுங்கள்!- நானி- ஸ்ரீகாந்த் ஒடேலா- சுதாகர் செருகூரி - எஸ் எல் வி சினிமாஸ் - கூட்டணியில் தயாரான 'தி பாரடைஸ்- The Paradise ' படத்தின் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது*


'நேச்சுரல் ஸ்டார்' நானியின் பிரம்மாண்டமான உலகளாவிய திரைப்படமான 'தி பாரடைஸ்'- இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படங்களில் ஒன்றாக படிப்படியாக வளர்ந்துள்ளது. அதன் ஒவ்வொரு விளம்பர அறிவிப்பும் அமோகமான வரவேற்பை பெற்று வருகிறது. அதன் பிரமிக்க வைக்கும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் - தாக்கத்தை ஏற்படுத்தும் கிளிம்ப்ஸ்- வெற்றி பெற்ற பாடலான 'ஆயா ஷேர்' ... என  இப்படம் தொடர்ந்து எதிர்பார்ப்புகளை அதிகரித்து வருகிறது. இயக்குநர் ஸ்ரீகாந்த் ஒடேலா தனது கற்பனையை ஒரு பிரம்மாண்டமான தளத்தில் உயிர்ப்பிக்கிறார். அதே தருணத்தில் தயாரிப்பாளர் சுதாகர் செருகூரி- எஸ் எல் வி சினிமாஸ் நிறுவனத்தின் சார்பில் இந்தப் படத்தை அதன் மிகப்பெரிய லட்சியத்திற்கு ஏற்ப அயராது உழைத்திருக்கிறார். 'நரகம் கட்டவிழ்த்து விடப்பட்டு, நெருப்பில் ஒரு புதிய சகாப்தம் தொடங்குகிறது' என்ற வாசகத்துடன் இப்படத்தின் அதிரடியான டீசரை படக் குழுவினர் வெளியிட்டுள்ளனர்.


இந்த டீசர் - அடக்குமுறை மற்றும் வன்முறையால் ஆதிக்கம் செலுத்தப்படும் ஒரு கொடூரமான உலகில் பார்வையாளர்களை மூழ்கடிக்கிறது. இந்த இருளுக்கு மத்தியில் ஒடுக்கப்பட்டவர்களின் உரத்த குரலாகவும்.... சக்தி வாய்ந்தவர்களுக்கு கெட்ட கனவாகவும் மாறும் ஒரு அச்சமற்ற புரட்சியாளரான ஜடல் எழுகிறார். ஒவ்வொரு காட்சியும் உணர்ச்சி- கோபம் மற்றும் நோக்கத்தால் நிரம்பி இருப்பதால்... இந்த மோதல் ஒரு பிரம்மாண்டமான படைப்பாக தோன்றுகிறது.


இந்த டீசரை தனித்துவமாக காட்சிப்படுத்துவது... அதன் காட்சி ரீதியிலான கதை சொல்லல்தான். மீண்டும் மீண்டும் இடம்பெறும் காகத்தின் உருவம்.... பல தலைமுறைகளாக ஓரங்கட்டப்பட்டவர்களை குறிக்கிறது. இந்த குறியீடு - படத்தின் அதிரடி நிறைந்த கதைக்கு கச்சிதமாக பொருந்துவதுடன்.. உணர்வு பூர்வமான ஆழத்துடனும் இணைக்கிறது.


சண்டைக் காட்சிகள்-  பிரமிக்க வைக்கும் அளவில் அமைக்கப்பட்டுள்ளன. மூர்க்கத்தனமான கோடாரி மோதல் ...ஒரு அதி திவீரமான சிறை சண்டை .... கொடூரமான வாள் சண்டை .... எலும்பும் முறியும் அளவுக்கு கைகலப்பு... கொழுந்து விட்டு எரியும் வெடிப்புகள்.... ஆயிரக்கணக்கானோர் கிளர்ச்சியில் ஒன்றாக அணிவகுத்து செல்வது.... என ஒவ்வொரு காட்சியும் இயல்பாகவும், தயக்கமின்றியும் பிரம்மாண்டமாக உணரப்படுகிறது. இந்த டீசர் ஒருபோதும் தனது வேகத்தை இழக்காமல் ..மெய்சிலிர்க்க வைக்கும் தருணங்களை தொடர்ந்து வழங்குகிறது.


நானியை அடையாளம் காணவே முடியவில்லை. மிரட்டலான தோற்ற மாற்றத்துடன் ஈடு இணையற்ற தீவிரத்தை வெளிப்படுத்தி.. அவர் அந்த கதாபாத்திரத்துடன் முழுதாக ஒன்றி விடுகிறார். அவரது தனித்துவமான சக்தி வாய்ந்த வசன உச்சரிப்பு ... கம்பீரமான உடல் மொழி மற்றும் உணர்ச்சிப்பூர்வமான நடிப்பு.. ஆகியவை கதையில் முழுமையான ஈடுபாட்டை ஏற்படுத்துகின்றன.


இவருடன் மோகன் பாபு, ராகவ் ஜூயல், கயாடு லோஹர், சம்பூர்ணேஷ் பாபு ஆகியோரின் பங்களிப்பும் படத்தின் சுவாரசியத்தை அதிகப்படுத்துகின்றன.


இயக்குநர் ஸ்ரீகாந்த் ஒடேலாவின் பிரம்மாண்டமான படைப்பு பாணி தான் அனைத்து வித்தியாசங்களையும் உண்டாக்குகிறது. ஒவ்வொரு காட்சியிலும் உணர்ச்சியின் ஆழத்தையும், பிரம்மாண்டத்தையும், சமநிலைப்படுத்தி இருப்பது... ஒரு திரைப்பட இயக்குநராக அவரது படைப்பு சார்ந்த நம்பிக்கையை எதிரொலிக்கிறது. அதிகப்படியான விளக்கங்களை சார்ந்திருக்காமலேயே இப்படத்தின் பின்னணியில் உள்ள மிகப்பெரும் லட்சியத்தை... இந்த டீசர் நேர்த்தியாக வெளிப்படுத்துகிறது.


இதில் பணியாற்றி இருக்கும் தொழில்நுட்ப குழுவினரும் பாராட்டுக்குரியவர்கள் தான். தயாரிப்பு வடிவமைப்பாளர் அவினாஷ் கொல்லா ஒரு யதார்த்தமான மற்றும் அழுத்தமான உலகத்தை உருவாக்கியுள்ளார். ஒளிப்பதிவாளர் சி ஹெச் சாய் அதனை தனித்துவமான காட்சி அமைப்பு மற்றும் கோணங்களுடன் பிரமிக்கத்தக்க வகையில் காட்சிப்படுத்தியுள்ளார். இவை அனைத்திற்கும் மேலாக அனிருத்தின் அதிரடி பின்னணி இசை தனித்து நிற்கிறது. ஒரு வித மர்மமான ஒலியுடன் தொடங்கி... பின்னர் ஒவ்வொரு காட்சியையும் அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் வகையிலும்.... இதயத்துடிப்பை அதிகரிக்கும் வகையிலும் இசை.. பெருவெளியாக மாற்றம் பெறுகிறது. எஸ் எல் வி சினிமாஸ் SLV Cinemas நிறுவனத்தின் சமரசமற்ற தயாரிப்பு அணுகுமுறையால் 'தி பாரடைஸ் - The Paradise ' திரைப்படம் - பெரிய திரைக்கு ஏற்ற ஒரு பிரம்மாண்டமான சினிமா அனுபவமாக திகழ்கிறது.


இந்த அதிரடி டீசர் மூலம் படக்குழுவினர் எதிர்பார்ப்புகளை அதிகரித்திருப்பது மட்டுமல்லாமல் இத்திரைப்படம் எதிர்வரும் செப்டம்பர் 24ஆம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் புயலாக வீசப்போவதையும் அறிவித்துள்ளனர்.


நடிகர்கள் : நானி, மோகன் பாபு, கயாடு லோஹர், ராகவ் ஜூயல், சோனாலி குல்கர்னி, சம்புர்னேஷ் பாபு .


தொழில்நுட்ப குழு :

எழுத்து & இயக்கம் : ஸ்ரீகாந்த் ஒடேலா

தயாரிப்பாளர் : சுதாகர் செருகூரி

தயாரிப்பு நிறுவனம் : எஸ் எல் வி சினிமாஸ் - SLV Cinemas

ஒளிப்பதிவு : சி ஹெச் சாய்

இசை : அனிருத் ரவிச்சந்தர்

படத்தொகுப்பு : நவீன் நூலி

தயாரிப்பு வடிவமைப்பு : அவினாஷ் கொல்லா

மக்கள் தொடர்பு : சதீஷ்குமார் ( S2 மீடியா)

மார்க்கெட்டிங் : ஃபர்ஸ்ட் ஷோ


English Press Release 


Hell Breaks Loose, A New Reign Begins In Fire, Witness The Madness – Teaser Of Nani, Srikanth Odela, Sudhakar Cherukuri, SLV Cinemas' The Paradise Unveiled


Natural Star Nani's ambitious pan-world spectacle The Paradise has steadily grown into one of the most awaited films of the year, with every promotional update receiving an overwhelming response. From its striking first-look poster and impactful glimpses to the chartbuster anthem Aaya Sher, the film has consistently raised expectations. Director Srikanth Odela is bringing his vision to life on a grand canvas, while producer Sudhakar Cherukuri is leaving no stone unturned to ensure the film matches its massive ambition under the SLV Cinemas banner. Hell breaks loose and a new reign begins in fire as the makers unveiled the film's explosive teaser a while ago.


The teaser immerses viewers in a harsh world dominated by oppression and violence. Amid this darkness rises Jadal, a fearless revolutionary who becomes the voice of the silenced and the nightmare of the powerful. Every frame is loaded with emotion, rage, and purpose, making the conflict feel larger than life.


What makes the teaser stand apart is its visual storytelling. The recurring crow motif represents those who have been pushed to the margins for generations. The symbolism adds emotional depth while perfectly complementing the film's action-packed narrative.


The action is mounted on an astonishing scale. Whether it's savage axe clashes, an intense jail fight, brutal sword combat, bone-crunching fistfights, blazing explosions, or thousands marching together in rebellion, every sequence feels raw and unapologetically grand. The teaser never loses momentum, delivering one goosebumps moment after another.


Nani is simply unrecognizable. Sporting an intimidating makeover and exuding unmatched intensity, he disappears into the role with complete conviction. His powerful dialogue delivery, commanding body language, and emotionally charged performance make the narrative thoroughly engaging.


Mohan Babu makes a powerful impact, while the glimpses of Raghav Juyal, Kadayu Lohar, and Sampoornesh Babu add another layer of intrigue to the film.


Director Srikanth Odela's epic presentation makes all the difference. Every shot reflects his confidence as a filmmaker, balancing emotional depth with spectacular scale. The teaser speaks volumes about the ambition behind the project without relying on excessive exposition.


The technical team deserves equal applause. Production designer Avinash Kolla creates a hauntingly authentic world, while cinematographer CH Sai captures it with gritty textures and breathtaking visual compositions. Towering above it all is Anirudh Ravichander's electrifying background score, which begins on an eerie note before exploding into a pulse-pounding musical assault that elevates every frame. The Paradise looks like a massive cinematic spectacle crafted for the big screen, thanks to SLV Cinemas' uncompromising approach to mounting the project.


With this thunderous teaser, the makers have not just raised expectations, they have announced that a storm is set to arrive in theatres worldwide on September 24.


Cast: Nani, Mohan Babu, Kayadu Lohar, Raghav Juyal, Sonali Kulkarni, Sampoornesh Babu


Technical Crew:

Writer, Director: Srikanth Odela

Producer: Sudhakar Cherukuri

Banner: SLV Cinemas

DOP: Ch Sai

Music: Anirudh Ravichander

Editing: Navin Nooli

Production Designer: Avinash Kolla

PRO: Sathish Kumar (S2 Media)

Marketing: First Show

Birla Studios and Neelam Studios announce their next film — Makkal Kaavalan*

 *பிர்லா ஸ்டுடியோஸ் மற்றும் நீலம் ஸ்டுடியோஸ் இணைந்து வழங்கும் அடுத்த திரைப்படம் “மக்கள் காவலன்”*  



பைசன் காளமாடன் திரைப்படத்தின் மாபெரும் திரையரங்கு வெற்றியைத் தொடர்ந்து, பிர்லா ஸ்டுடியோஸ் மற்றும் நீலம் ஸ்டுடியோஸ் தங்களது கூட்டணியில் அடுத்த திரைப்படமாக “மக்கள் காவலன்”  படத்தை  அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.


ஆக்‌ஷன் டிராமா வகையில் உருவாகும் மக்கள் காவலன், பிரம்மாண்டமான திரையரங்கு அனுபவத்தை வழங்கும் பிர்லா ஸ்டுடியோஸின் கனவையும், உணர்வுபூர்வமான, சமூக வேர்களைக் கொண்ட, தனித்துவமான திரைப்படங்களை உருவாக்கும் நீலம் ஸ்டுடியோஸின் அர்ப்பணிப்பையும் ஒன்றிணைக்கிறது.


குட் நைட், லவ்வர், குடும்பஸ்தன் ஆகிய படங்களின் வர்த்தக வெற்றியைத் தொடர்ந்து, தமிழ் சினிமாவின் மிகவும் நம்பகமான மற்றும் அதிகம் விரும்பப்படும் முன்னணி நடிகர்களில் ஒருவராக உருவெடுத்துள்ள கே. மணிகண்டனின் அடுத்த படமாகவும் மக்கள் காவலன் அமைகிறது. மேலும், தனது திரைப்பயணத்தில் முதல் முறையாக முழுநீள ஆக்‌ஷன் டிராமாவில் கதாநாயகனாக அவர் நடிக்கிறார்.


இயக்குநர் சந்தோஷ் குமார் எழுதி இயக்கியுள்ள “மக்கள் காவலன்”, கண்ணியமாக வாழ வேண்டும் என்ற ஒரே எண்ணத்துடன் இருக்கும் ஒரு சாதாரண மனிதனின் கதையைச் சொல்கிறது. ஆனால் ஊழல் நிறைந்த ஒரு அமைப்பு, அவனுக்கு சரணடைவதா அல்லது எதிர்த்து நிற்பதா என்ற இரண்டு வழிகளையே விட்டுச் செல்கிறது. ஒருவரின் உயிர்வாழ்வுக்கான போராட்டமாகத் தொடங்கும் இந்தப் பயணம், அவர் விரும்பாமலேயே மக்களின் தலைவராக மாறும் அளவுக்கு வளர்கிறது. போராட்டம் தீவிரமடையும்போது அதன் விலையும் அதிகரிக்கிறது. இறுதியில், ஒரு சாதாரண மனிதனுக்கும் மக்களின் காவலனுக்கும் இடையேயான எல்லை மெதுவாக மறைந்து விடுகிறது.


இந்தப் படத்தில், முதன்மை கதாபாத்திரத்தில் கே. மணிகண்டன் நடிக்கிறார். அவருடன் வாகை சந்திரசேகர், ஏ. வெங்கடேஷ், ஆர்.கே. விஜய்முருகன், சண்முகம் முத்துசாமி, சபுமோன், உன்னி மாயா, திவ்யா ஸ்ரீபாதா, ஜென்சன் திவாகர், லல்லு, ஜெமினி மணி மற்றும் ரகு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஒளிப்பதிவு – பிரதீபன் செல்வரத்தினம், படத்தொகுப்பு – அருள் மோசஸ், கலை இயக்கம் – பாப்பநாடு சி. உதயகுமார், சண்டைப் பயிற்சி – டான் அசோக், ஒலியமைப்பு – ஆண்டனி ஜெயரூபன், ஆடை வடிவமைப்பு – சுரேஷ்குமார், ஒப்பனை – ராமச்சந்திரன் ஆகியோர் தொழில் நுட்ப குழுவில் பணியாற்றியுள்ளனர்.


பைசன் காளமாடன் திரைப்படத்தைத் தொடர்ந்து வெற்றிகரமாக தொடரும் இந்தக் கூட்டணியில் உருவாகும் “மக்கள் காவலன்” திரைப்படத்திற்கு நிவாஸ் கே. பிரசன்னா இசையமைக்கிறார்.


பிர்லா ஸ்டுடியோஸின் இணைத் தயாரிப்பாளர் சுனில் சைனானி கூறியதாவது:


“பைசன் காளமாடன் திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, மக்கள் காவலன் மூலம் நீலம் ஸ்டுடியோஸுடன் எங்களது கூட்டணியின் அடுத்த கட்டத்தைத் தொடங்குவதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம். வலுவான, தனித்துவமான குரல் கொண்ட படைப்பாளிகளையும், ரசிகர்களுடன் ஆழமாக இணையும் கதைகளையும் தொடர்ந்து வழங்க வேண்டுமென்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். தனது முதல் முழுநீள திரைப்படத்திலேயே இயக்குநர் சந்தோஷ் குமார் அந்தப் பார்வையை மிகத் தெளிவாக கொண்டு வந்துள்ளார். தமிழ் சினிமாவின் மிகவும் திறமையான நடிகர்களில் ஒருவரான கே. மணிகண்டன் இந்தப் படத்தில் நாயகனாக நடிப்பது எங்களுக்கு பெருமை. மக்கள் காவலன் வலிமையான, பொழுதுபோக்கான, அதே நேரத்தில் ஆழமான உணர்வுகளைத் தாங்கிய திரைப்படம். இப்படத்தை திரையரங்குகளில் ரசிகர்களிடம் கொண்டு செல்ல ஆவலுடன் இருக்கிறோம்.”


நீலம் ஸ்டுடியோஸின் சார்பில் பா. ரஞ்சித் மற்றும் அதிதி ஆனந்த் கூறியதாவது:


“மக்கள் காவலன் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவின் மிகத் திறமையான இளம் எழுத்தாளர்-இயக்குநர்களில் ஒருவரான சந்தோஷ் குமாரை ரசிகர்களிடம் கொண்டு வருவதில் மகிழ்ச்சி அடைகிறோம். எங்களுக்கு கிடைத்த மிகவும் உற்சாகமான திரைப்படங்களில் இதுவும் ஒன்று. மணிகண்டனின் அற்புதமான நடிப்பு இந்தப் படத்தின் மிகப்பெரிய பலமாக இருக்கும். அதேபோல், இயக்குநர்களின் பார்வையை மையமாகக் கொண்ட, பெரிய அளவில் உருவாகும் திரைப்படங்களை ஆதரிக்க வேண்டும் என்ற எங்களது நம்பிக்கையைப் பகிர்ந்து கொள்ளும் பிர்லா ஸ்டுடியோஸுடன் மீண்டும் இணைவதும் எங்களுக்கு மகிழ்ச்சியாக உள்ளது.”


நடிகர் கே. மணிகண்டன் கூறியதாவது:


“மக்கள் காவலன் என்பது கலாச்சார மற்றும் இன மோதல்களை மையமாகக் கொண்ட தனித்துவமான ஆக்‌ஷன் டிராமா. இந்தக் கதையின் புதுமையும், நேர்மையும் என்னை உடனே கவர்ந்தது. அதுவே இந்தப் படத்தில் நடிக்க என்னைத் தூண்டியது. இது விறுவிறுப்பான, தீவிரமான, இன்றைய காலத்துக்கு மிகவும் பொருத்தமான திரைப்படம். சந்தோஷ் இந்தக் கதையை முதன்முதலாக சொன்னபோதே நான் முழுமையாக ஈர்க்கப்பட்டேன். இது எங்கள் அனைவரின் கனவு படம். நாங்கள் நினைத்தபடியே இந்தப் படம் உருவாகியிருப்பதில் மிகுந்த மகிழ்ச்சி.”


எழுத்தாளர் மற்றும் இயக்குநர் சந்தோஷ் குமார் கூறியதாவது:


“மக்கள் காவலன் எனது முதல் முழுநீள திரைப்படம். நான் சந்தித்த மனிதர்கள், நான் வாழ்ந்த அனுபவங்கள், நான் நேரில் கண்ட உண்மைகள் ஆகியவற்றின் தாக்கத்திலிருந்தே இந்தக் கதை உருவானது. அதிகார அமைப்புகளுக்குள் இருக்கும் படிநிலைகளையும், அதனால் உருவாகும் சமத்துவமின்மையையும் இந்தப் படம் பேசுகிறது. அதே நேரத்தில், அந்த அமைப்புக்குள் தனது நேர்மையை காப்பாற்ற போராடும் ஒரு மனிதனின் கதையையும் இது சொல்கிறது. இந்தக் கதாபாத்திரத்திற்கு தேவையான நேர்மையையும் தீவிரத்தையும் மணிகண்டன் மிகச் சிறப்பாக கொண்டு வந்துள்ளார். இந்தக் கதையை நம்பி, என் முதல் முழுநீள திரைப்படத்திற்கு வாய்ப்பு வழங்கிய பிர்லா ஸ்டுடியோஸுக்கும் நீலம் ஸ்டுடியோஸுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.”


*Birla Studios and Neelam Studios announce their next film — Makkal Kaavalan*


Following the resounding theatrical success of Bison Kaalamaadan, Birla Studios and Neelam Studios have announced the next film from their creative partnership — Makkal Kaavalan.


An action-drama Makkal Kaavalan brings together Birla Studios’ ambition for big-curtain cinema with Neelam Studios’ commitment to stories that are emotionally resonant, socially rooted and unmistakably cinematic.


The film also marks K. Manikandan’s next project following the commercial success of Good Night, Lover and Kudumbasthan, a remarkable run that has established him as one of Tamil cinema’s most dependable and sought-after leading actors. With Makkal Kaavalan, Manikandan becomes the leading man in an action drama for the first time.


Written and directed by Santhosh Kumar, Makkal Kaavalan follows a simple man determined to live with dignity until a corrupt system leaves him with only two choices: surrender or resist. What begins as one man’s struggle for survival grows into something far larger, forcing him to become a leader he never sought to be. As the battle intensifies, the price of resistance mounts and the line between an ordinary man and a people’s protector begins to disappear.


K. Manikandan stars in the titular role alongside Vaagai Chandrasekar, A Venkatesh, R.K. Vijaymurugan, Shanmugam Muthusamy, Sabumon, Unni Maya, Divya Sripada, Jenson Dhivakar, Lallu, Gemini Mani and Raghu. The film features Cinematography by Pratheepan Selvaratnam, Editing by Arul Moses, Production Design by Pappanadu C Uthayakumar, Stunts by Don Ashok, Sound Design by Anthony Jayaruban, Costume Design by Sureshkumar and Makeup by Ramachandran.


In continuation of the winning relationship and after Bison Kaalamaadan, Makkal Kaavalan is a Nivas K Prasanna musical. 


Sunil Chainani, Co-Producer, Birla Studios, said: 


“Following the success of Bison Kaalamaadan, we’re delighted to embark on the next chapter of our partnership with Neelam Studios with Makkal Kaavalan. We remain deeply committed to championing filmmakers with bold, original voices and stories that connect deeply with audiences, and Santhosh Kumar brings exactly that vision to this film in his feature directorial debut. K. Manikandan has established himself as one of Tamil cinema’s most compelling actors, and we’re thrilled to have him lead this project. Makkal Kaavalan is a powerful and entertaining story with a deeply emotional core, and we look forward to bringing it to audiences in theatres.”


Pa. Ranjith and Aditi Anand, Neelam Studios, said:


“We are delighted to bring one of the brightest young writer-directors in Tamil cinema, Santhosh Kumar, to audiences with Makkal Kaavalan. It's one of the most exciting films we have had the opportunity to be part of, anchored by a truly outstanding performance from Manikandan. We are equally thrilled to continue our partnership with Birla Studios, who share our belief in backing ambitious, filmmaker-led cinema with the scale to reach audiences everywhere.”


K. Manikandan, said:


“Makkal Kaavalan is a unique action drama rooted in cultural and ethnic disputes. The originality and honesty in the script gave me all the compelling reasons to take it up. The film is gripping, intense, and very timely for today's world. I was hooked from the very first time Santhosh narrated the story. This is a dream project for us, and we're thrilled that it has come out exactly the way we envisioned.”


Santhosh Kumar, Writer and Director, said:


“Makkal Kaavalan is my first feature film. It is inspired by the people I have met, the experiences I have lived through, and the realities I have witnessed. At its core, the film explores the hierarchies within systems of power and the inequalities they create. It also tells the story of an honest man and the challenges he faces while trying to uphold his integrity within that system. Having Manikandan lead this film brings exactly the honesty and intensity the character demands. I'm thankful to Birla Studios and Neelam Studios for believing in this story and giving me the platform for my feature debut.”

'ஷம்பாலா' வெற்றிக் கூட்டணியின் அடுத்த பிரம்மாண்ட படைப்பு... சந்தீப் கிஷனின் சோஷியோ ஃபேண்டஸி திரைப்படம் 'கரிகாலா' – மிரளவைக்கும் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

 *'ஷம்பாலா' வெற்றிக் கூட்டணியின் அடுத்த பிரம்மாண்ட படைப்பு... சந்தீப் கிஷனின் சோஷியோ ஃபேண்டஸி திரைப்படம் 'கரிகாலா' – மிரளவைக்கும் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!*



'ஷம்பாலா' திரைப்படத்தின் மூலம் தனித்துவமான கற்பனை உலகை ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்திய இயக்குநர் யுகேந்தர் முனி, தற்போது இன்னும் பிரம்மாண்டமான படைப்பான 'கரிகாலா' மூலம் ரசிகர்களை புதிய மாய உலகிற்கு அழைத்துச் செல்ல தயாராகியுள்ளார். ஷைனிங் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் மகிதர் ரெட்டி மற்றும் ராஜசேகர் அன்னபிமோஜு தயாரிக்கும் இந்த பான் இந்தியா சோஷியோ ஃபேண்டஸி திரைப்படத்தில் சந்தீப் கிஷன் கதாநாயகனாக நடிக்கிறார்.


சமீபத்தில் வெளியான கான்செப்ட் போஸ்டர் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது படத்தின் தலைப்பும், மிரளவைக்கும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளன.


'கரிகாலா' என்ற தலைப்பில் வெளியாகியுள்ள ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், ரசிகர்களை ஒரு பிரம்மாண்டமான கற்பனை உலகிற்குள் அழைத்துச் செல்கிறது. அடர்ந்த மர்மக் காட்டில், கையில் வாளை உயர்த்தியபடி வீரராக குதிரையில் சீறிப்பாயும் சந்தீப் கிஷனுடன், அருகில் கர்ஜித்தபடி பாய்ந்து வரும் கம்பீரமான சிங்கமும் இடம்பெற்றுள்ளது. இந்த காட்சியமைப்பு, இந்திய நாட்டுப்புறக் கதைகள், சாகசம் மற்றும் கற்பனை உலகம் ஆகியவற்றை இணைக்கும் பிரம்மாண்டமான திரைப்பட அனுபவத்திற்கு முன்னோட்டமாக அமைந்துள்ளது.


தெலுங்கு, தமிழ் மற்றும் இந்தி மொழிகளில் உருவாகி வரும் 'கரிகாலா', தலைமுறைகளை கவர்ந்த *சந்தமாமா* கதைகளின் மாய உலகில் இருந்து உத்வேகம் பெற்று உருவாகியுள்ளது. மந்திர சக்திகள், மறக்கப்பட்ட ராஜ்ஜியங்கள், வீரர்கள், சிங்கங்கள், ஓநாய்கள் மற்றும் புராண மரபுகள் நிறைந்த இந்த உலகம், இந்திய நாட்டுப்புறக் கதைகளை நவீன தொழில்நுட்பத்துடன் இணைத்து திரையில் உயிர்ப்பிக்கவுள்ளது.


இந்தப் படத்திற்காக சந்தீப் கிஷன் தனது திரைப்பயணத்தில் இதுவரை இல்லாத மிகப்பெரிய மாற்றத்தை மேற்கொண்டுள்ளார். பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட ஆடை அலங்காரம், புதிய தோற்றம் மற்றும் முற்றிலும் மாறுபட்ட உடல் மொழியுடன் சக்திவாய்ந்த போர்வீரராக அவர் திரையில் தோன்றுகிறார். அவரது இந்த புதிய அவதாரம் ரசிகர்களுக்கு வித்தியாசமான திரை அனுபவத்தை வழங்கும் என படக்குழு நம்பிக்கை தெரிவித்துள்ளது.


'கரிகாலா' இரண்டு அத்தியாயங்களாக வெளியாகவுள்ளது. முதல் அத்தியாயம் 2027 ஜூலை 2-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதனைத் தொடர்ந்து இரண்டாம் அத்தியாயம் 2027 அக்டோபர் 28-ஆம் தேதி வெளியாக உள்ளது.


*ஷம்பாலா* படத்தின் வெற்றிக்குப் பிறகு, இயக்குநர் யுகேந்தர் முனி இந்தப் படத்தை இன்னும் பெரிய அளவில் உருவாக்கி வருகிறார். விரிவான உலகக் கட்டமைப்பு, அதிநவீன விஷுவல் எஃபெக்ட்ஸ், பிரம்மாண்டமான தயாரிப்பு வடிவமைப்பு, விறுவிறுப்பான ஆக்‌ஷன் காட்சிகள் மற்றும் உணர்வுபூர்வமான கதைக்களத்துடன் உருவாகி வரும் 'கரிகாலா', இந்திய சினிமாவில் சோஷியோ ஃபேண்டஸி வகைக்கு புதிய அடையாளத்தை உருவாக்கும் படைப்பாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.


பிரம்மாண்டமான தலைப்பு அறிவிப்பும், மிரளவைக்கும் ஃபர்ஸ்ட் லுக்கும் வெளியாகியுள்ள நிலையில், 'கரிகாலா' திரைப்படம் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.


**தொழில்நுட்பக் குழு:**


இயக்கம் : யுகேந்தர் முனி


ஒளிப்பதிவு : பிரவீன் பங்காரி


இசை : ஸ்ரீசரண் பாகலா


படத்தொகுப்பு : ஸ்ரவண் கட்டிகனேனி


தயாரிப்பு வடிவமைப்பு : ராம்சரண் தேஜ் லபானி


ஆக்‌ஷன் : ராஜ்குமார் சிந்தலா


ஆடை வடிவமைப்பு : ஆயிஷா மரியம்


தயாரிப்பாளர்கள் : ராஜசேகர் அன்னபிமோஜு, மகிதர் ரெட்டி


தயாரிப்பு நிறுவனம் : ஷைனிங் பிக்சர்ஸ்


படத்தின் மற்ற நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் 'கரிகாலா' திரைப்படத்தின் பிரம்மாண்டமான உலகம் தொடர்பான மேலும் பல முக்கிய அறிவிப்புகள் விரைவில் வெளியாகும்.