-

Loading latest news...

Prime Video Unveils ‘Daiva’, a Foot-Tapping New Track from Vadhandhi Season Two – The Mystery of Mani*

 *பிரைம் வீடியோ, ‘வதந்தி சீசன் 2 – தி மிஸ்டரி ஆஃப் மணி’ சீரிஸிலிருந்து துள்ளலான புதிய ‘தெய்வா’ பாடலை வெளியிட்டது !*



இசையமைப்பாளர் சைமன் K. கிங், இசைக்கோர்த்து, தயாரித்துள்ள இந்தப் பாடலை சைமன் மற்றும் யஷ்வந்த் இணைந்து பாடியுள்ளனர். துள்ளலான இசையும், உற்சாகமான தாளமும் கொண்ட இந்தப் பாடல், பெரிதும் எதிர்பார்க்கப்படும் இரண்டாவது சீசனுக்கு மேலும் உற்சாகத்தை சேர்க்கிறது.


‘வதந்தி சீசன் 2 – தி மிஸ்டரி ஆஃப் மணி’ ஆகஸ்ட் 7 முதல் பிரைம் வீடியோவில் பிரத்யேகமாக வெளியாகிறது.


இணைப்பு: https://www.instagram.com/reels/DbX86jHIJlB/


பிரைம் வீடியோ மற்றும் டி-சீரிஸ் இணைந்து, விமர்சகர்களின் பாராட்டைப் பெற்ற தமிழ் ஒரிஜினல் சஸ்பென்ஸ் த்ரில்லர் சீரிஸான ‘வதந்தி சீசன் 2 – தி மிஸ்டரி ஆஃப் மணி’யிலிருந்து புதிய பாடலான ‘தெய்வா’ பாடலை இன்று வெளியிட்டுள்ளன. சைமன் K. கிங் இசையமைத்து, தயாரித்துள்ள இந்தப் பாடலை, சைமன் மற்றும் யஷ்வந்த் இணைந்து பாடியுள்ளனர். மணி ரோமியோ எழுதியுள்ள கவர்ச்சிகரமான வரிகளும், துள்ளலான இசையும் இணைந்து உருவாகியுள்ள இந்தப் பாடல், ரசிகர்கள் கேட்டவுடன் கவரும் வகையில் அமைந்துள்ளது.


இந்தப் பாடலின் வண்ணமயமான மியூசிக் வீடியோ.., உற்சாகமான நடன அமைப்புகள், கலகலப்பான சூழல் மற்றும் நடிகர்களின் சுறுசுறுப்பான தருணங்கள் மூலம் பாடலின் துள்ளலான உணர்வை உயிர்ப்பிக்கிறது. மேலும், இந்தப் பாடல் உருவான விதத்தைப் பின்னணியில் காட்டும் (Behind-the-scenes) காட்சிகளும் இடம்பெற்றுள்ளன. படப்பிடிப்பு தளத்தில் நடிகர்கள் மற்றும் குழுவினருக்கிடையேயான நட்பு, மகிழ்ச்சியான தருணங்கள் ஆகியவற்றையும் இந்த வீடியோ பதிவு செய்கிறது. இதனால், ‘தெய்வா’, ‘வதந்தி சீசன் 2’ உலகத்திற்கு உற்சாகம் சேர்க்கும் இசை அனுபவமாக மாறியுள்ளது.


மதுரையின் செழுமையான கலாச்சாரப் பின்னணியையும், உலகப் புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு திருவிழாவின் ஆற்றல்மிக்க சூழலையும் பின்னணியாகக் கொண்டு உருவாகியுள்ள ‘வதந்தி சீசன் 2 – தி மிஸ்டரி ஆஃப் மணி’, புதிரும் பரபரப்பும் நிறைந்த புதிய மர்மக் கதையை மையமாகக் கொண்டுள்ளது. நேர்மையான காவல் அதிகாரியான எஸ்.ஐ. மூசா ரஸா (எம். சசிகுமார்), நெடுஞ்சாலைத் திட்ட தொடக்க விழாவின் போது தோண்டியெடுக்கப்படும் மனித எலும்புக்கூட்டின் மர்மத்தை விசாரிக்கிறார். அந்த விசாரணை, மணி என்ற மர்ம கைதியை நோக்கிச் செல்ல, வதந்திகள், ஏமாற்றங்கள் மற்றும் புதைக்கப்பட்ட ரகசியங்கள் நிறைந்த ஆபத்தான வலையில் அவர் சிக்கிக் கொள்கிறார். சீரிஸின் உள்ளூர் கலாச்சார சுவையை பிரதிபலிக்கும் வகையில், ‘தெய்வா’ பாடலும் அதன் துள்ளலான இசை மற்றும் உற்சாகமான தாளங்கள் மூலம் அந்த உலகத்தை உயிர்ப்பிக்கிறது.


ஆண்ட்ரூ லூயிஸ் உருவாக்கி, எழுதி, இயக்கியுள்ள இந்த சீரிஸை, வால்வாட்சர் ஃபிலிம்ஸ் நிறுவனம் சார்பில், புஷ்கர் மற்றும் காயத்ரி கிரியேட்டிவ் தயாரிப்பாளர்களாக தயாரித்துள்ளனர். எம். சசிகுமார் எஸ்.ஐ. மூசா ரஸா கதாபாத்திரத்தில் நடித்துள்ள இந்த சீரிஸில், யஷ்வந்த், அனகா மாருதோரா, அபர்ணா தாஸ், விவேக் பிரசன்னா, ரேவதி சர்மா மற்றும் அர்ஜுன் நந்தகுமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.


எட்டு எபிசோடுகள் கொண்ட இந்த சஸ்பென்ஸ் த்ரில்லர், ஆகஸ்ட் 7 முதல் பிரைம் வீடியோவில் தமிழில் பிரத்யேகமாக வெளியாகிறது. மேலும், தெலுங்கு மற்றும் இந்தி மொழி டப்பிங் பதிப்புகளுடன், ஆங்கிலம் உட்பட 15 மொழிகளில் சப்டைட்டில்களுடன் இந்தியா மற்றும் உலகம் முழுவதும் 240-க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் பார்வையாளர்களுக்குக் கிடைக்கிறது.


‘தெய்வா’ பாடல் தற்போது வெளியாகி, அனைத்து முக்கிய இசை ஸ்ட்ரீமிங் தளங்களிலும் கேட்கக் கிடைக்கிறது


*Prime Video Unveils ‘Daiva’, a Foot-Tapping New Track from Vadhandhi Season Two – The Mystery of Mani*


Composed, arranged, and produced by Simon K. King and sung by Simon and Yashwanth, the upbeat track brings a playful, foot-tapping energy to the highly anticipated second season


Vadhandhi Season Two – The Mystery of Mani premieres exclusively on Prime Video on August 7

Link Here: https://www.instagram.com/reels/DbX86jHIJlB/


 CHENNAI, India, July 29, 2026: Prime Video and T-Series today unveiled ‘Daiva’, the latest track from the highly anticipated second season of its critically acclaimed Tamil Original suspense thriller series, Vadhandhi Season Two – The Mystery of Mani. Composed, arranged, and produced by Simon K. King, with vocals by Simon himself and Yashwanth, ‘Daiva’ is a fun, foot-tapping number boasting catchy lyrics penned by Mani Romeo and a lively rhythm. The vibrant music video brings the song's playful energy to life with lively choreography, an upbeat setting, and a series of fun, spirited moments featuring the cast. The video also offers a behind-the-scenes glimpse into the making of the track, capturing the camaraderie and light-hearted moments from the shoot, making ‘Daiva’ a lively musical accompaniment to the world of Vadhandhi Season Two. 


Set against the culturally rich backdrop of Madurai and the raw energy of the iconic Jallikattu festival, Vadhandhi Season Two – The Mystery of Mani with a gripping new mystery and follows SI Moosa Raza (M. Sasikumar), an honest police officer investigating skeletal remains unearthed during a highway project inauguration. As the trail leads to an elusive prisoner named Mani, he is drawn into a web of rumors, deception, and buried secrets. Reflecting the series' vibrant local flavour, Daiva brings its playful spirit to life with infectious beats and an energetic vibe.


Created, written, and directed by Andrew Louis and produced under the banner of Wallwatcher Films by Pushkar and Gayatri as creative producers, Vadhandhi Season Two – The Mystery of Mani stars M. Sasikumar in the lead as SI Moosa Raza, alongside Yashwanth, Anagha Maruthora, Aparna Das, Vivek Prasanna, Revathy Sharma, and Arjun Nandhakumar in pivotal roles. The eight-episode suspense thriller will premiere exclusively on Prime Video in Tamil, with dubs in Telugu and Hindi and subtitles in 15 languages, including English, across India and over 240 countries and territories worldwide on August 7.


The song ‘Daiva’ is out now and available on all music streaming platforms.


https://www.youtube.com/watch?v=FPyHPOVLgQg

சாகித்யா கிரியேஷன்ஸ் மற்றும் தி கிங் மூவி என்டர்டைன்மென்ட் இணைந்து தயாரிக்கும் படம் நடு நாடு

 சாகித்யா கிரியேஷன்ஸ் மற்றும் தி கிங் மூவி என்டர்டைன்மென்ட் இணைந்து தயாரிக்கும் படம் நடு நாடு


 இத்திரைப்படத்தின் அறிமுக நாயகர்கள் எழில் மற்றும் அருண்குமார் நாயகியாக அனுஸ்ரீ நடிக்க முக்கிய கதாபாத்திரத்தில் காந்தாரா புகழ் சம்பத் ராம் மாறுபட்ட வேடத்தில் நடிக்க மற்றும் கருத்தம்மா ராஜஸ்ரீ முக்கிய கதாபாத்திரத்தில் திரை பிரபலங்கள் நடிக்கும் நடு நாடு

 இத்திரைப்படம் மிகப் பெரிய பொருட்செலவில் முழுக்க முழுக்க கடலூர் மாவட்டத்தில் மற்றும் சென்னை சுற்றியுள்ள இடத்தில் படமாக்கப்பட்டுள்ளது 

 கல்வியின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் படமாக்கப்பட்டுள்ளது. தமிழ் திரைப்படங்களில் வெற்றிகளை குவித்த இசையமைப்பாளர் பரணி அவர்கள் இசையமைக்க ஒளிப்பதிவு செந்தில் மாறன் கவனிக்க இத்திரைப்படம் போஸ்ட் புரடக்க்ஷன் விறுவிறுப்பாக நடந்து முடிந்து விட்டது 

 அண்மையில் இத்திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா பிரசாத் லேபில் நடைபெற்றது பொழுது சிறப்பு விருந்தினராக ஆர் வி உதயகுமார் குருவையில் பாடல் ஆசிரியர் மா ஆ தாமு அவர்களை மிகவும் பாராட்டினார் அதுமட்டுமில்லாமல் திரைப்படத்தின் எடிட்டர் ஆர்கே செல்வம் மற்றும் கேமரா மேன் செந்தில் மாறன் அவர்களையும் பாராட்டினார் .   

 இயக்குனர் பேரரசு பேசுகையில் நடு நாடு திரைப்படத்தின் இயக்குனர் சந்தோஷ் அவர்களையும் இசையமைப்பாளர் பரணி அவர்களையும் மிகவும் பாராட்டினார் 

 இயக்குனர் தயாரிப்பாளர் திருமலை அவர்கள் பேசுவையில் சிறு படங்கள் அனைத்தும் வெற்றி பெற வேண்டும் திரைப்படம் பாடல் எடிட்டிங் கேமராமின் அனைத்தும் தரமாக உள்ளது இப்படம் வெற்றி பெறும் என்று கூறினார் 

 நடுநடு திரைப்படம் விரைவில் திரையரங்கில் 

 மக்கள் தொடர்பாளர்

 நித்தீஷ் ஸ்ரீராம்

மாலிக் ஸ்ட்ரீம்ஸ் கார்ப்பரேஷன் தயாரிப்பில் ராஜேஷ்.எம் இயக்கத்தில் நடிகர் ஜீவா நடிக்கும் 'ஜாலியா இருந்த ஒருத்தன்' படத்தை வெளியிடும் ஏஜிஎஸ் நிறுவனம்

 மாலிக் ஸ்ட்ரீம்ஸ் கார்ப்பரேஷன் தயாரிப்பில் ராஜேஷ்.எம் இயக்கத்தில் நடிகர் ஜீவா நடிக்கும் 'ஜாலியா இருந்த ஒருத்தன்' படத்தை வெளியிடும் ஏஜிஎஸ் நிறுவனம்



இயக்குநர் ராஜேஷ்.எம் இயக்கத்தில் உருவாகி வரும் 'ஜாலியா இருந்த ஒருத்தன்' திரைப்படத்தில் ஜீவா, இவானா, பரிதாபங்கள் சுதாகர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். எம்.சுகுமார் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தத் திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். 


கமர்சியல் என்டர்டெய்னராக தயாராகி வரும் இந்த திரைப்படத்தை மலேசியா புகழ் மாலிக் ஸ்ட்ரீம்ஸ் கார்ப்பரேஷன் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் டத்தோ அப்துல் மாலிக் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கிறார்.


இப்படத்தின் ப்ரோமோ வீடியோ வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற நிலையில் , இப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் வெளியிட இருப்பதாக மாலிக் ஸ்ட்ரீம்ஸ் கார்பொரேஷன் இந்தியா CEO திரு ராசிக் அஹ்மது சமூக வலைதளம் மூலம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்

சினிமா மீதான தீராத காதல்… மீண்டும் வெள்ளித்திரைக்கு வரத் தயாராகும் யுவா புஷ்பாகர்

 சினிமா மீதான தீராத காதல்… மீண்டும் வெள்ளித்திரைக்கு வரத் தயாராகும் யுவா புஷ்பாகர்



சென்னை: வெற்றிகரமான தொழிலதிபராக தன்னை நிலைநிறுத்திக் கொண்ட பிறகு, நடிகர் யுவா புஷ்பாகர் மீண்டும் சினிமாவில் தனது பயணத்தைத் தொடங்கத் தயாராகி வருகிறார். வாழ்க்கையில் பெற்ற அனுபவம், தொழில்முறை ஒழுக்கம் மற்றும் சினிமா மீதான தீராத காதலுடன் அவர் தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்க உள்ளார்.


திரைப்படங்களில் அறிமுகமாகும் முன்பே, தொலைக்காட்சி மற்றும் விளம்பரத் துறையில் யுவா புஷ்பாகர் தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கியிருந்தார். HSBC, Ponds, Carlsberg, Aircel, 7UP உள்ளிட்ட பல முன்னணி தேசிய மற்றும் சர்வதேச நிறுவனங்களின் விளம்பரங்களில் நடித்ததன் மூலம், கேமரா முன் இயல்பாக நடிக்கும் அனுபவத்தையும் தன்னம்பிக்கையையும் பெற்றார். அதுவே நடிப்பை முழுநேரப் பயணமாக மாற்ற வேண்டும் என்ற கனவையும் வலுப்படுத்தியது.


ஒரு முழுமையான நடிகராக உருவாக வேண்டும் என்ற நோக்கில், தென்னிந்திய திரையுலகின் பல முன்னணி நடிகர்களுக்கு பயிற்சி அளித்துள்ள பாண்டியன் மாஸ்டர் அவர்களிடம் நடனம் மற்றும் சண்டைப் பயிற்சிகளை முறையாகக் கற்றார். அதிகாலை நேரங்களில் நடைபெற்ற கடுமையான பயிற்சிகள், உடற்தகுதி, சண்டைக் காட்சிகள் மற்றும் நடிப்பு ஆகியவற்றில் அவருக்கு ஒழுக்கத்தையும் தன்னம்பிக்கையையும் அளித்தன. அந்த அனுபவம் இன்றும் அவரது நடிப்புப் பயணத்தில் உறுதுணையாக உள்ளது.


2009-ஆம் ஆண்டு இயக்குநர் சரண் இயக்கிய ‘மோதி விளையாடு’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான யுவா, ‘மதன்’ என்ற கதாபாத்திரத்தில் நடித்தார். வினய், காஜல் அகர்வால், கலாபவன் மணி, சந்தானம் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்த அவர், தனது இயல்பான நடிப்பால் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.


அதன்பிறகு சினிமாவில் தொடர்ந்து நடிக்கும் வாய்ப்புகள் கிடைத்தபோதும், தனது தொழில்முனைவோர் வாழ்க்கையில் கவனம் செலுத்த அவர் முடிவு செய்தார். ஆனால் அந்த இடைவெளி சினிமா மீதான அவரது ஆர்வத்தை ஒரு நாளும் குறைக்கவில்லை.


சிறு வயதிலிருந்தே உலக சினிமாவின் தீவிர ரசிகரான யுவா, பல்வேறு நாடுகளின் திரைப்படங்களை தொடர்ந்து பார்த்து, அவற்றின் கதை சொல்லும் முறை, திரைப்பட உருவாக்கம், நடிகர்களின் நடிப்பு ஆகியவற்றை ஆர்வத்துடன் கற்றார். குறிப்பாக கொரிய திரைப்படங்களைப் பார்ப்பதற்காக வெளிநாடுகளில் இருந்து DVD-களையே வரவழைத்தது அவரது சினிமா மீதான ஈடுபாட்டை வெளிப்படுத்துகிறது.


கமல்ஹாசன், ரஜினிகாந்த் மற்றும் மலையாள திரையுலகின் பெருமை மோகன்லால் ஆகியோரின் திரைப்பயணம் யுவாவுக்கு மிகப்பெரிய உத்வேகமாக இருந்துள்ளது. ஒரு குறிப்பிட்ட இமேஜுக்குள் சிக்காமல், பல்வேறு கதாபாத்திரங்களில் தனது திறமையை நிரூபிக்கும் நடிகராக உருவாக வேண்டும் என்பதே அவரது இலக்கு.


இதுகுறித்து யுவா புஷ்பாகர் கூறுகையில்,


“சினிமா எப்போதும் என் வாழ்க்கையின் மிகப்பெரிய காதல். வாழ்க்கையில் சந்தித்த ஒவ்வொரு அனுபவமும் என்னை மேலும் முதிர்ச்சியடையச் செய்திருக்கிறது. இன்று நான் அதிகமான அனுபவத்துடனும், மனிதர்களைப் பற்றிய ஆழமான புரிதலுடனும், என் கலை மீது இன்னும் அதிக அர்ப்பணிப்புடனும் திரும்பி வருகிறேன். மக்களை சிந்திக்க வைக்கும், மகிழ்விக்கும், மனதில் நீண்ட காலம் நிற்கும் கதைகளின் ஒரு பகுதியாக இருக்க வேண்டும் என்பதே என் விருப்பம்,” என்றார்.


கடந்த சில ஆண்டுகளாக தனது மறுபிரவேசத்திற்காக உடற்தகுதியை மேம்படுத்துவதில் தீவிரமாக கவனம் செலுத்தியுள்ள யுவா, அதே நேரத்தில் சமகால திரைப்படங்கள், திரைக்கதைகள் மற்றும் இந்திய சினிமாவின் புதிய போக்குகளையும் தொடர்ந்து ஆராய்ந்து வருகிறார்.


தற்போது தமிழ் மற்றும் மலையாள திரைப்படங்களுக்கான பல கதைகளை கேட்டு வரும் அவர், கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் படங்கள், ஆக்ஷன் டிராமாக்கள், உளவியல் த்ரில்லர்கள் மற்றும் வலுவான உள்ளடக்கம் கொண்ட திரைப்படங்களில் நடிக்க விருப்பம் தெரிவித்துள்ளார்.


மேலும், தனது உடற்தகுதி மாற்றம் மற்றும் சினிமாவுக்கான தயாரிப்புகள் தொடர்பான பதிவுகளை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகிறார். அதற்கு ரசிகர்களிடமிருந்து நல்ல வரவேற்பும் கிடைத்து வருகிறது.


தமிழ் மற்றும் மலையாளத் திரையுலகில் பல திரைக்கதைகளை தற்போது பரிசீலித்து வரும் யுவா புஷ்பாகர், தனது அடுத்த திரைப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை விரைவில் வெளியிட உள்ளார்.


யுவா புஷ்பாகரின் இந்த வருகை, வெறும் மறுபிரவேசம் மட்டுமல்ல; அனுபவம், அர்ப்பணிப்பு மற்றும் சினிமா மீதான அழியாத காதலால் தொடங்கும் புதிய அத்தியாயமாகவும் பார்க்கப்படுகிறது.

MITTAI MAZHAI’ FROM AOT RELEASED ON DULQUER SALMAAN’S BIRTHDAY*

 *துல்கர் சல்மானின் பிறந்தநாளில் 'AOT' படத்தின் 'மிட்டாய் மழை' பாடல் வெளியீடு*



துல்கர் சல்மான் பிறந்தநாளன்று பொழிந்த 'மிட்டாய் மழை' !


நடிகர் துல்கர் சல்மானின் பிறந்தநாளை முன்னிட்டு ஏ ஒ டி - AOT திரைப்படக் குழுவினர் - அப்படத்தில் இடம்பெறும் முதல் பாடலான 'மிட்டாய் மழை- Mittai Mazhai' யை வெளியிட்டுள்ளனர்.‌


ஜீ. வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள 'மிட்டாய் மழை' பாடல் கதையின் உணர்வு பூர்வமான சாராம்சத்தை அழகாக வெளிப்படுத்தும் ஒரு இனிமையான மெல்லிசை பாடல் ஆகும். கதாநாயகியின் பார்வையில் அமைக்கப்பட்ட இந்தப் பாடல்... நட்சத்திரங்களை தொடும் அவளது கனவையும், அவளை முன்னேற்ற தூண்டும் ஆணின் அமைதியான ஊக்கத்தையும் சித்தரிக்கிறது. காதலுக்கான வழக்கமான வரையறைகளை கடந்த ஒரு தனித்துவமான பிணைப்பிற்கு இது ஒரு நெகிழ்ச்சியான சமர்ப்பணமாக அமைந்துள்ளது. 


பாடலாசிரியர் பாலாஜி வேணுகோபாலின் வரிகளில்... பின்னணி பாடகி ரம்யா பெஹாரா பாடியுள்ள இந்தப் பாடல்... விடா முயற்சி- நம்பிக்கை மற்றும் ஒவ்வொரு கனவையும் முன்னெடுத்துச் செல்லும் அமைதியான ஆற்றல் - ஆகியவற்றை உணர்த்தும் கவித்துவமான உவமைகளால் மெருகூட்டப்பட்டுள்ளது.‌


துல்கர் சல்மான், சாத்விகா வீரவள்ளி,  ஸ்ருதிஹாசன் ஆகியோர் முதன்மையான வேடத்தில் நடித்துள்ள 'ஆகாசம்லோ ஒக தாரா- Aakasamlo Oka Thara- AOT' திரைப்படத்தை பவன் சடினேனி இயக்கியுள்ளார். லைட் பாக்ஸ் மீடியா ( Lightbox Media) நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர்கள் சந்தீப் குன்னம் மற்றும் ரம்யா குன்னம் ஆகியோர் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளனர். ஸ்வப்னா சினிமா மற்றும் கீதா ஆர்ட்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து இப்படத்தை வழங்குகின்றன.‌


*‘MITTAI MAZHAI’ FROM AOT RELEASED ON DULQUER SALMAAN’S BIRTHDAY*


The makers of AOT celebrated Dulquer Salmaan’s birthday by unveiling the film’s first single, “Mittai Mazhai.”


Composed by GV Prakash Kumar, Mittai Mazhai is a feel-good melody that beautifully captures the emotional heartbeat of the story. Told from the heroine’s perspective, the song portrays her dream of touching the stars and the silent encouragement of the man who helps her move forward. It is a touching tribute to a unique bond that transcends traditional definitions of love.


Penned by Balaji Venugopal and sung by Ramya Behara, the song is enriched with poetic metaphors that symbolize perseverance, hope, and the quiet power that drives every dream.


Starring Dulquer Salmaan, Satvika Veeravalli, and Shruti Haasan, Aakasamlo Oka Tara is directed by Pavan Sadineni, produced by Sandeep Gunnam and Ramya Gunnam under Lightbox Media. The film is presented by Swapna Cinema and Geetha Arts.


https://www.youtube.com/watch?v=_Fy4eK09pWM

எலிஃபன்டைன் எக்ஸ் (Elephantine X) நிறுவனத்தின் "ராஜாஸ் பிளேலிஸ்ட்" (Raja's Playlist) படப்பிடிப்பு நிறைவு: அறிமுக நடிகர் ஜெயனுடன் களமிறங்கும் திரைப்படம் தீவிரமாகத் தொடங்கியது போஸ்ட் புரடெக்ஷன் பணிகள்

 எலிஃபன்டைன் எக்ஸ் (Elephantine X) நிறுவனத்தின் "ராஜாஸ் பிளேலிஸ்ட்" (Raja's Playlist) படப்பிடிப்பு நிறைவு: அறிமுக நடிகர் ஜெயனுடன் களமிறங்கும் திரைப்படம் தீவிரமாகத் தொடங்கியது போஸ்ட் புரடெக்ஷன் பணிகள்!


மறைந்த மூத்த தயாரிப்பாளர் ஆர்.டி. பாஸ்கரின் மகன் ஜெயன் அறிமுகமாகும் திரைப்படம்; வெங்கட் பிரபு, யுவன் சங்கர் ராஜா, சுதா கொங்கரா மற்றும் தயாரிப்பாளர் ரமணன் பாலகங்காதரன் ஆகியோர் இணைந்திருக்கும் இசை சார்ந்த குடும்பத் திரைப்படம்!


எலிஃபன்டைன் எக்ஸ் தயாரிப்பில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள "ராஜாஸ் பிளேலிஸ்ட்" (Raja's Playlist) திரைப்படத்தின் முழு படப்பிடிப்பும் வெற்றிகரமாக நிறைவடைந்து, தற்போது பின்-தயாரிப்பு (Post-Production) பணிகள் தீவிரமாகத் தொடங்கியுள்ளன. இத்திரைப்படத்தின் மூலம் மறைந்த மூத்த தயாரிப்பாளர் ஆர்.டி. பாஸ்கரின் இளைய மகனும், இசைஞானி இளையராஜாவின் சகோதரர் மகனுமான ஜெயன் கதாநாயகனாக அறிமுகமாகிறார்.


மறைந்த தயாரிப்பாளர் ஆர்.டி. பாஸ்கர் மற்றும் அவரது குடும்பத்தின் மீதான நீண்டகால நட்பின் காரணமாக, தமிழ் சினிமாவின் முன்னணிப் பிரபலங்கள் சிலர் இத்திரைப்படத்திற்காக இணைந்துள்ளது தொடக்கம் முதலே பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது.

ஆர்.டி. பாஸ்கருடனான நட்பின் அடையாளமாக இத்திரைப்படத்தைத் தயாரிப்பாளர் ரமணன் பாலகங்காதரன் தயாரித்துள்ளார். இயக்குநர் வெங்கட் பிரபு கதையமைக்க, யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். மேலும், பிரபல இயக்குநர் சுதா கொங்கரா கிரியேட்டிவ் தயாரிப்பாளராகப் (Creative Producer) பங்களித்துள்ளார்.


விமர்சன ரீதியாகப் பாராட்டுக்களைப் பெற்ற 'குடும்பஸ்தன்' திரைப்படத்தின் ஒளிப்பதிவாளரான சுஜித் என். சுப்ரமணியம், வெங்கட் பிரபுவின் கதையைத் தழுவி திரைக்கதை எழுதி இத்திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.


படப்பிடிப்பு நிறைவு குறித்துத் தயாரிப்பாளர் ரமணன் பாலகங்காதரன் பேசுகையில்:

"ராஜாஸ் பிளேலிஸ்ட் படத்தின் படப்பிடிப்பை நிறைவு செய்திருப்பது எங்கள் அனைவருக்கும் மிகவும் நெகிழ்ச்சியான மற்றும் மனநிறைவான ஒரு தருணம். ஒரு அழகான கதையை உருவாக்கப் படக்குழுவின் ஒவ்வொரு உறுப்பினரும் மிகுந்த அர்ப்பணிப்புடன் உழைத்துள்ளனர்.

ஜெயன் தனது அறிமுகப் படத்திற்காகத் தனது முழு உழைப்பையும் தந்துள்ளார். ரசிகர்கள் அவரை மனதார வரவேற்பார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. தற்போது பின்-தயாரிப்பு பணிகளைத் தொடங்கியுள்ளோம். குடும்ப உறவுகள், உணர்வுகள் மற்றும் இசையின் ஆற்றலைக் கொண்டாடும் ஒரு நல்ல திரைப்படமாக இதை மக்களுக்குக் கொண்டு சேர்ப்பதில் மகிழ்ச்சியடைகிறோம்."

இத்திரைப்படத்தில் ஜெயனுடன் சோனா ஒலிகல் (Sona Olickal), வாகை சந்திரசேகர், குரு சோமசுந்தரம், ரோஜு, பிபியன், ஆர்யா லக்ஷ்மி, பிரகதீஸ்வரன் பூபாளம், இந்துமதி, ரேஷ்மி, ரஜினாத், ராம்குமார், மீனா மற்றும் திலகவதி ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.


தற்போது படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில், இசை, ஒளிப்பதிவு செப்பனிடுதல் உள்ளிட்ட தொழில்நுட்பப் பின்-தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.

நடிப்பு மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் விவரம்

நடிகர்கள்:

• ஜெயன் (அறிமுகம்)

• சோனா ஒலிகல்

• வாகை சந்திரசேகர்

• குரு சோமசுந்தரம்

• ரோஜு

• பிபியன்

• ஆர்யா லக்ஷ்மி

• பிரகதீஸ்வரன் பூபாளம்

• இந்துமதி

• ரேஷ்மி

• ரஜினாத்

• ராம்குமார்

• மீனா

• திலகவதி

தொழில்நுட்பக் குழு:

• தயாரிப்பு நிறுவனம்: எலிஃபன்டைன் எக்ஸ் (Elephantine X)

• தயாரிப்பாளர்: ரமணன் பாலகங்காதரன்

• கதை: வெங்கட் பிரபு

• இசை: யுவன் சங்கர் ராஜா

• கிரியேட்டிவ் தயாரிப்பாளர் (Creative Producer): சுதா கொங்கரா

• திரைக்கதை & இயக்கம்: சுஜித் என். சுப்ரமணியம்

• ஒளிப்பதிவு: சாய் முனீஷ்

• படத்தொகுப்பு: ஸ்ரீ வாட்சன்

• கலை இயக்கம்: ஷானு முரளிதரன்

• ஆடை வடிவமைப்பு: பூர்ணிமா ராமசாமி

• சண்டைப்பயிற்சி: பிசி ஸ்டண்ட்ஸ்

• ஒலி வடிவமைப்பு: அந்தோணி பி. ஜெயரூபன்

• VFX மேற்பார்வை: செந்தில் குமார்

• நிர்வாகத் தயாரிப்பாளர் (Executive Producer): உத்ரா மீனாட்சி

• மக்கள் தொடர்பு (PRO): ரேகா – ரான் டி ஆர்ட் (Raan T Art)

• விளம்பர வடிவமைப்பு (Publicity Design): வியாக்கி

Experience Refreshing Romantic Ride- Breezy Number Vaane Vaane From Dulquer Salmaan, Pooja Hegde’s Sri Sri Is Out Now*

 *துல்கர் சல்மான் - பூஜா ஹெக்டே நடிக்கும் 'ஸ்ரீ ஸ்ரீ' திரைப்படத்தின் இதமான காதல் பாடலான 'வானே வானே- Vaane Vaane' வெளியீடு*



பன்முகத் திறமை கொண்ட நட்சத்திரமான துல்கர் சல்மான்-  அறிமுக இயக்குநர் ரவி நெலகுதிடி இயக்கத்தில் தனது 41வது திரைப்படத்தின் படப்பிடிப்பில் மும்முரமாக ஈடுபட்டுள்ளார். எஸ் எல் வி சினிமாஸ் ( SLV Cinemas) நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் சுதாகர் செருகூரி தயாரிக்கும் இந்த திரைப்படம் - அந்நிறுவனத்தின் பத்தாவது பிரம்மாண்டமான திரைப்படமாக தயாராகிறது. இஷான் சக்சேனா இப்படத்தில் இணை தயாரிப்பாளராக பணியாற்றுகிறார். துல்கர் சல்மான் மற்றும் பூஜா ஹெக்டே முதன் முறையாக திரையில் இணையும் இத்திரைப்படமானது... காதல் - நகைச்சுவை மற்றும் நெகிழ்ச்சியான உணர்வுகள் நிறைந்த ஒரு புத்துணர்ச்சி தரும் காதல் படைப்பாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே வெளியான படப்பிடிப்பு தள காட்சிகள் மற்றும் கண்ணை கவரும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ஆகியவை... ரசிகர்களின் மனதை வென்ற நிலையில், தற்போது 'வானே வானே..' எனும் முதல் பாடலை வெளியிட்டு, இப்படத்தின் இசை பயணம் தொடங்கியுள்ளது. 


ரயில் நிலையத்தின் இருக்கை ஒன்றில் அமர்ந்திருக்கும் துல்கர் சல்மான்- பூஜா ஹெக்டே நடை மேடை( Platform) க்கு நுழையும் தருணத்தில்.. அவரைக் கண்டு முற்றிலும் மெய் மறந்து போவதுடன் இப்பாடல் தொடங்குகிறது. அதைத் தொடர்ந்து மகிழ்ச்சியான தருணங்கள் மற்றும் பலருடன் இணைந்து அவர்கள் மேற்கொள்ளும் அழகான பயணத்தின் காட்சிகள் இதமான தொகுப்பாக - மாண்டேஜஸ்ஸாக இடம்பெறுகின்றன. 


ஜீ. வி. பிரகாஷ் குமார் மீண்டும் ஒருமுறை இதமான மற்றும் மனதை மயக்கும் மெல்லிசையை வழங்கி உள்ளார். இந்த பாடலைக் கேட்டவுடன் மனதை கவரும் வகையில் அமைந்துள்ளது. இனிமையான இசை அமைப்பு மற்றும் இசைக்கருவிகளின் நேர்த்தியான பயன்பாடு ஆகியவற்றுடன் இந்த பாடல் முதல் முறையிலேயே கேட்பவர்களின் மனதில் நீங்காத இடத்தை பிடிக்கிறது. பாடலாசிரியர் கே. ஆர். தரன்- ஆழமான காதலில் இருக்கும் ஒரு ஆணின் உணர்வுகளை அழகாக பதிவு செய்துள்ளார். கதாநாயகியின் நளினம்- அழகு- அவரை சுற்றியுள்ள மந்திரம் போன்ற வசீகரம் - ஆகியவற்றை கவித்துவமாக விவரித்துள்ளார். பின்னணி பாடகர் நகுல் அபயங்கர் - தனது உணர்வுபூர்வமான மற்றும் வெளிப்பாட்டு திறனுடன் இந்த பாடலை இனிமையான குரலில் பாடி அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றிருக்கிறார். அதே தருணத்தில் ராம் மாஸ்டரின் நடன அமைப்பும் கண்களுக்கு விருந்தளிக்கும் வகையில் அமைந்துள்ளது. 


இந்தப் பாடலின் மிகப்பெரிய சிறப்பம்சம் என்னவென்றால்...


 சந்தேகத்திற்கு இடமின்றி துல்கர் சல்மான் மற்றும் பூஜா ஹெக்டே ஆகியோருக்கு இடையிலான இயல்பான மற்றும் கச்சிதமான கெமிஸ்ட்ரி தான். திரையில் அவர்களின் வசீகரமான தோற்றம் மற்றும் இயல்பான புரிதல் ஆகியவை ஒவ்வொரு காட்சியை ரசிக்கும் படியாக மாற்றுகின்றன. அழகான இடங்களில் படமாக்கப்பட்ட காட்சிகள்... காதல் உணர்வை மேலும் மெருகூட்டி, பாடலை இன்னும் ஈர்க்கக் கூடியதாக மாற்றுகின்றன. கவரும் மெல்லிசை - பிரமிக்க வைக்கும் காட்சி அமைப்பு - ரசிக்கத்தக்க நடிப்பு - என அனைத்தும் கொண்ட இந்தப் பாடல்... அடுத்த 'வைரல் ஹிட்' பாடலாக மாறுவதற்கான அனைத்து அம்சங்களையும் கொண்டுள்ளது. 


இப்படத்தின் தொழில்நுட்பக் குழு மிகவும் வலுவானது. அனய் ஓம் கோஸ்வாமி ஒளிப்பதிவையும்,  ஜீ. வி. பிரகாஷ் குமார் இசையமைப்பையும்,  அவினாஷ் கொல்லா தயாரிப்பு வடிவமைப்பையும் ( Production Designer) மேற்கொள்கின்றனர். இவர்கள் அனைவரும் இணைந்து கண்களுக்கு விருந்தளிக்கும் வகையிலான மற்றும் உணர்வு பூர்வமான ஒரு திரைப்பட அனுபவத்தை வழங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 


பான் இந்திய திரைப்படமாக பிரம்மாண்டமாக வெளியிட திட்டமிடப்பட்டுள்ள 'ஸ்ரீ ஸ்ரீ' திரைப்படம்- தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. 


*நடிகர்கள்* :  துல்கர் சல்மான் - பூஜா ஹெக்டே 


*தொழில்நுட்பக் குழு :* 


எழுத்து & இயக்கம் : ரவி நெலகுதிடி

தயாரிப்பாளர் : சுதாகர் செருகூரி

தயாரிப்பு நிறுவனம் : எஸ் எல் வி சினிமாஸ் - SLV Cinemas

இணை தயாரிப்பாளர் : இஷான் சக்சேனா 

தலைமை நிர்வாக அதிகாரி ( CEO) : விஜய் குமார் சகாந்தி 

இசை:  ஜீ. வி. பிரகாஷ் குமார் 

ஒளிப்பதிவு : அனய் ஓம் கோஸ்வாமி

தயாரிப்பு வடிவமைப்பு : அவினாஷ் கொல்லா 

மக்கள் தொடர்பு : யுவராஜ் 

மார்க்கெட்டிங் : ஃபர்ஸ்ட் ஷோ


*Experience Refreshing Romantic Ride- Breezy Number Vaane Vaane From Dulquer Salmaan, Pooja Hegde’s Sri Sri Is Out Now*


 Versatile Star Dulquer Salmaan is currently busy filming his much-awaited 41st project, directed by debutant Ravi Nelakuditi. Backed by successful producer Sudhakar Cherukuri under the SLV Cinemas banner, the film also marks the production house's milestone 10th venture. Ishan Saksena serves as the co-producer. Marking the first-ever on-screen pairing of Dulquer Salmaan and Pooja Hegde, the film promises a refreshing romantic entertainer packed with love, humour, and touching emotions. After the previously released working stills won hearts by highlighting the lead pair's sparkling chemistry, followed by an eye-catching first-look poster, the makers have begun the musical journey with the release of first single Vaane Vaane

 

The song opens with Dulquer Salmaan seated on a bench at a railway station, completely captivated the moment Pooja Hegde walks onto the platform. What follows is a heartwarming montage of their beautiful journey together, filled with joyful moments and accompanied by a group of people.

 

GV Prakash Kumar scored yet another breezy and enchanting melody that charms instantly. With its soothing composition and elegant orchestration, the track leaves a lasting impression from the very first listen. Lyricist Anantha Sriram beautifully captures the emotions of a man deeply in love, poetically describing the heroine's grace, beauty, and the magical aura she carries. Kapil Kapilan elevates the number with his soulful and expressive vocals, while Ram Master's choreography adds a delightful visual appeal.

 

The biggest highlight of the song is undoubtedly the effortless chemistry between Dulquer Salmaan and Pooja Hegde. Their charming screen presence and natural camaraderie make every frame a treat to watch. Shot across picturesque locales, the visuals further enhance the romantic mood, making the song even more appealing. With its catchy tune, stunning visuals, and lovable performances, the track has all the ingredients to become the next viral chartbuster.

 

The film also boasts a strong technical crew, with Anay Om Goswamy handling cinematography, GV Prakash Kumar composing the music, and Avinash Kolla serving as the production designer. Together, they promise a visually rich and emotionally engaging cinematic experience.

 

Planned as a grand Pan-India release, Sri Sri is set to hit theatres in Telugu, Tamil, Hindi, Kannada, and Malayalam.

 

*Cast* : Dulquer Salmaan, Pooja Hegde

 

*Technical Crew:*


Writer, Director: Ravi Nelakuditi

Producer: Sudhakar Cherukuri

Banner: SLV Cinemas

Co-Producer: Ishan Saksena

CEO: Vijay Kumar Chaganti

Music: GV Prakash Kumar

DoP: Anay Om Goswamy

Production Designer: Avinash Kolla

PRO:Yuvraaj 

Marketing: First Show


https://www.youtube.com/watch?v=5r7Q5jS2gas

தென்னிந்திய திரைப்பட பத்திரிகை தொடர்பாளர்கள் யூனியன் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா

 *தென்னிந்திய திரைப்பட பத்திரிகை தொடர்பாளர்கள் யூனியன் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா*



*வெள்ளித்திரை -சின்னத்திரை- தமிழ் திரை விருதுகள் இனி ஆண்டுதோறும் வழங்கப்படும்' - அமைச்சர் ராஜ்மோகன்*


தென்னிந்திய திரைப்பட பத்திரிக்கை தொடர்பாளர்கள் சங்கத்தின் 2026-28 ஆம் ஆண்டிற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய நிர்வாகிகளின் பதவி ஏற்பு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவில் தமிழக பள்ளிக் கல்வி துறை - தமிழ் வளர்ச்சித் துறை மற்றும் செய்தி துறை அமைச்சரான திரு.ராஜ்மோகன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.    


தயாரிப்பு நிறுவனம் - தயாரிப்பாளர் - திரைப்படம் - நட்சத்திர கலைஞர்கள் - தொழில்நுட்ப கலைஞர்கள் - விளம்பரங்கள் - பத்திரிகையாளர்கள் - ஊடகவியலாளர்கள் - திரையரங்குகள் - ரசிகர்கள்- திரை ஆர்வலர்கள் - என ஒரு திரைப்படத்தின் பணிகள் தொடங்கிய தருணத்திலிருந்து அத்திரைப்படம் முழுவதுமாக தயாராகி, அது தொடர்பான தகவல்களை ஊடகங்கள் மூலமாக மக்களுக்கும், ரசிகர்களுக்கும்  சென்றடையச் செய்வதுடன்.. அப்படத்தின் வெற்றிக்குப் பிறகு அதனை முறையாக ஆவணப்படுத்தும் வரலாறு வரை தங்களுடைய பணிகளை செழுமையாக முழுமையான அர்ப்பணிப்புடன் முன்னெடுப்பவர்கள் தான் திரைப்பட பத்திரிக்கை தொடர்பாளர்கள்.  சமூக வலைதளங்களின் ஆதிக்கம் அதிகமாகியுள்ள இந்தத் தருணத்திலும் பத்திரிக்கை தொடர்பாளர்கள் டிஜிட்டல் தளத்தில் வெளியாக வேண்டிய செய்திகளையும்... சமூக வலைதளங்களில் வெளியாகும் எதிர்மறையான விமர்சனங்களுக்கு விளக்கங்கள் வெளியிடும் பொறுப்பினையும்.. ஏற்று அயராது உழைக்கும் பத்திரிகை தொடர்பாளர்களின் நலன்களுக்காக இயங்கும் சங்கத்திற்கு புதிதாக நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். பி யுவராஜ் தலைவராகவும், என். விஜய முரளி செயலாளராகவும், வீ. கே. சுந்தர் பொருளாளராகவும், எஸ். புவனேந்திரன் மற்றும் எஸ். சதீஷ்குமார் ஆகியோர் துணைத் தலைவர்களாகவும், பாலன் என்கிற ஜி. பாலசுப்பிரமணியன் மற்றும் ஆர். உதயகுமார் ஆகியோர் இணை செயலாளராகவும் பதவி ஏற்று கொண்டனர். இந்த நிகழ்வில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் - தமிழ் திரைப்படத்தின் நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் - தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சங்கம்- தமிழ் திரைப்பட இயக்குநர்கள் சங்கம்- தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கம்-  நடிகர்கள் அர்ஜுன் தாஸ் -அசோக் செல்வன்- தயாரிப்பாளரும், இயக்குநருமான சௌந்தர்யா ரஜினிகாந்த் - தயாரிப்பாளர் மகேஷ் ராஜ் பஸ்லியான் - தயாரிப்பாளர் ஜே. எம். பஷீர் உள்ளிட்ட ஏராளமான தமிழ் திரையுலக பிரபலங்களும் கலந்து கொண்டு, புதிய நிர்வாகிகளுக்கு வாழ்த்து தெரிவித்தனர். 


தயாரிப்பாளர் சங்க தலைவர் ஜி கே எம் தமிழ் குமரன் பேசுகையில், '' திரைப்படத் துறையில் முக்கியமான சங்கம்- தவிர்க்க முடியாத சங்கம்- பி.ஆர்.ஓ சங்கம். எண்ணற்ற சங்கங்கள் இருந்தாலும்... இந்த சங்கம் முக்கியமானது. தேர்தல் நடைபெற்று ,தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளுக்கு சான்றிதழ் வழங்கி சிறப்புரை நிகழ்த்த வருகை தந்திருக்கும் மாண்புமிகு அமைச்சர் ராஜ் மோகன் அவர்களுக்கு நன்றி. யுவராஜ் ஒரு துடிப்பான இளைஞர். அவரது தலைமையில் இந்த சங்கம் சிறப்பாக செயல்படும். இதற்கு நான் சார்ந்த தயாரிப்பாளர் சங்கத்தின் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். 


தமிழ் திரைப்படத் துறையில் எல்லா சங்கங்களுக்கும் ஒரு அலுவலகம் சொந்தமாக இருக்கிறது. தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திற்கு  என எந்த அலுவலகமும் இல்லை. இந்த அலுவலகம் வாடகையில் தான் இயங்கி வருகிறது. புதிதாக அலுவலகம் கட்டுவதற்கான இடத்தை தமிழக அரசு வழங்கினால்.. நாங்கள் கட்டடத்தை கட்டிக் கொள்கிறோம். இதனை வழங்கினால் சிஎம்முக்கும் , அமைச்சருக்கும் காலத்திற்கும் அழியாத நற்பெயர் கிடைக்கும். பெருமையாகவும் இருக்கும். 


2015 ஆம் ஆண்டில் இருந்து 2022 ஆம் ஆண்டு வரையில் சிறிய முதலீட்டு திரைப்படங்களுக்கான தமிழக அரசின் சார்பில் வழங்க வேண்டிய மானியங்கள் வழங்கப்படவில்லை. அதனை விரைவில் வழங்க வேண்டும் என தமிழக அரசை பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்'' என்றார் . 


அமைச்சர் ராஜ்மோகன் பேசுகையில், '' இந்த உலகத்துடன் ஒரு உறவு பாலமாய் தமிழ் சினிமாவை- இந்த கலைத்துறையை- இணைக்கக் கூடிய அத்தனை சினிமா பத்திரிக்கையாளர்கள் மற்றும் பத்திரிக்கை தொடர்பாளர்களுக்கும் நான் நெஞ்சார தலை வணங்குகிறேன் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள். நீங்கள் அனைவரும் நன்றாக இருக்க வேண்டும். 


இங்கு பணியாற்றும் அனைத்து பிஆர்ஓக்களிடமும் நான் எஃப் எம்மில் பணியாற்றிய போதும்.... சோசியல் மீடியாவில் பணியாற்றிய போதும்... தனியாக யூட்யூப் சேனலை தொடங்கிய போதும்.... திட்டு வாங்கிய ஒருவன் என்றால், அது நான் தான். கடந்த காலங்களில் இத்துறையில் பத்திரிகைகளுக்கும், வெப்சைட்களுக்கும் என பத்திரிக்கையாளர் சந்திப்புகளில் அனுமதிப்பது தொடர்பான சிக்கல்கள் உருவானது. அப்போதும் பொறுமையாக இருந்து விளக்கமும், ஆதரவும் அளித்தனர். அதன் பிறகு கால மாற்றத்தை -தொழில்நுட்ப மாற்றத்தை- உணர்ந்து ஆதரவை வழங்கத் தொடங்கினார். 


அத்துடன் அனைத்து பிஆர்ஓக்களுக்கும்... நல்ல தமிழில் குறைவான சம்பளத்தில் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க கூடிய தொகுப்பாளர் ஒருவர் தேவை என்றால்... உடனடியாக அவர்களுக்கு நினைவுக்கு வருவது நான் தான். மலிவு விலை தொகுப்பாளர் என்றால் ராஜ்மோகன் தான். அது நான்தான் என்பதை மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொள்கிறேன்.


ஐந்து ஆண்டுக்கு ஒரு முறை கொடுத்தால் அது விருது அல்ல. விருது என்றால் ஆண்டுதோறும் வழங்கப்பட வேண்டும். மாண்புமிகு தமிழக முதல்வரின் அனுமதியை பெற்று வெள்ளித்திரை- சின்னத்திரை- தமிழ் திரை- விருதுகள் இனி ஆண்டுதோறும் வழங்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். 


நல்ல படைப்புகள் தான் நமக்கு ஆக்சிஜன். தமிழ் சினிமாவில் தன் தலையை உண்மையிலேயே அடமானம் வைத்து முதலீடு செய்யும் முதலாளிகள் என்றால் ... அது நம்முடைய தயாரிப்பாளர்கள் தான். 


தயாரிப்பாளர்களால் சில தருணங்களில் ஒப்பந்தம் செய்யப்பட்ட ஊதியங்களை தர இயலாத போது.. அவர்களுக்கு பட வாய்ப்பையே வழங்கியுள்ளனர். அத்தகைய தாயுள்ளம் கொண்டவர்கள் தான் தயாரிப்பாளர்கள். தயாரிப்பாளர்கள் சங்கம் இல்லை என்றால் நாம் யாரும் இங்கில்லை.‌


தமிழ் சினிமாவில் கைகளாக இருப்பவர்கள் தான் பாடலாசிரியர்கள்- பாடகர்கள்- பாடகிகள்- இசையமைப்பாளர்கள்-. படத்திற்காக ஓடியதா? இளையராஜாவின் இசைக்காக ஓடியதா? என தெரியாத பல வொண்டர்ஃபுல் மேஜிக் தமிழ் சினிமாவில் உள்ளது. அவர்கள் இல்லை என்றால் நாம் இல்லை. 


தமிழ் சினிமாவை தாங்கிக் கொண்டு ஓடக்கூடிய கால்கள் என்றால்... ஃபைட் மாஸ்டர்ஸ் மற்றும் டான்ஸ் மாஸ்டர்ஸ் தான். இவர்கள் ரத்தத்தை வியர்வையாக கொட்டி ஓடி ஓடி உழைத்துக் கொண்டே இருப்பார்கள். 


தமிழ் சினிமாவின் வயிறாக திகழ்பவர்கள் புரொடக்ஷன். அஞ்சு பேர் இருந்தால்.. கேரவனில் சாப்பாடு. 50 பேர் இருந்தால் கேரவன் அருகே சாப்பாடு. 500 பேர் இருந்தால் சாப்பாட்டை எப்படியாவது வழங்கி விடுவார்கள். 'காந்தி' திரைப்படத்திற்காக கிளைமாக்ஸ் காட்சியில் ஒரு லட்சம் பேர் படப்பிடிப்பில் கலந்து கொண்டனராம். இந்தியாவில் படப்பிடிப்பு நடைபெற்று இருக்கிறது. அதில் கலந்து கொண்டவர்களுக்கு காலை உணவு மதிய உணவு எப்படி கொடுத்திருப்பார்கள்? எப்போது உணவு இடைவேளை வழங்கப்பட்டிருக்கும்? என்பதையெல்லாம் யோசித்துப் பார்க்கவே முடியாது.


இந்த சினிமாவின் நாடி நரம்புகளாக ஓடிக்கொண்டிருக்கும் தமிழ் சினிமாவின் முகம் தெரியாத நாயகர்களாக இருப்பவர்கள்... ரத்தமாக இருப்பவர்கள்... யார் என்றால் பி ஆர் ஓக்கள் ஆகிய நீங்கள் தான். நீங்கள் ஓடி ஓடி அங்கு செல்ல வேண்டும்.... இங்கு செல்ல வேண்டும்.. படத்தை விளம்பரப்படுத்த வேண்டும்.... என ஓடிக்கொண்டே இருப்பீர்கள்.


அப்படி என்றால் சினிமாவில் இதயம் யார்? உண்மையிலேயே தன்னுடைய இதயத்தை பற்றி கவலைப்படாத இயக்குநர்கள் தான். அவர்கள் தான் தங்களுடைய இதயத்தை பற்றி கவலைப்படாமல் எப்படியாவது ஒரு நல்ல படத்தை எடுத்து விட மாட்டோமா...! எடுத்து விட முடியாதா..! என 40 ஆண்டுகளுக்கும் மேலாக சாலிகிராமத்தின் காவேரி கார்னர் பகுதியில் சுற்றிக் கொண்டிருக்கும் ஏராளமான அண்ணன்களை  நான் அறிவேன். இந்த மொத்த சினிமாவின் உடலுக்கும் ஒரு அழகான ஸ்கின் வேண்டுமல்லவா.. அது நம்முடைய மேக்கப் டிபார்ட்மெண்ட். இப்படி எல்லாமே இருக்கும் சினிமாவில் ஆக்சிஜன் யார்? என்றால் துணை இயக்குநர்கள் தான் . இயக்குநர்கள் இல்லாமல் கூட இரண்டு மணி நேரங்களில் ஏதேனும் சில ஷாட்களை படமாக்கலாம். துணை இயக்குநர்கள் இல்லாமல் ஒரு ஷாட்டை கூட படமாக்க  முடியாது. இவர்களும் முகம் தெரியாத ஹீரோக்கள் தான். இப்படி எத்தனையோ முகம் தெரியாத ஹீரோக்கள் சினிமாவில் இருக்கிறார்கள். இப்படி அத்தனை நபர்களிடமும் பாரபட்சம் இல்லாமல் பழகக் கூடியவர்கள் இந்த பிஆர்ஓ க்கள்.


அண்ணன் செல்வமணி பேசுகையில் பேமெண்ட் பென்டிங் பற்றி குறிப்பிட்டார். அது என்ன? என்பதை நான் கூறுகிறேன். கடந்த காலத்தில் எல்லா சங்கங்களும் சேர்ந்து முத்தமிழ் அறிஞர் கலைஞருக்கு  நூற்றாண்டு விழாவை கொண்டாடினர். அந்த விழாவில் தொகுப்பாளராக பணியாற்றுவதற்காக இயக்குநர் லிங்குசாமி -பாண்டிராஜ் -என பலரிடமிருந்து போன் கால்ஸ் வந்து கொண்டே இருந்தது. அப்போது எனக்கு இந்த நிகழ்ச்சிக்கான ஊதியம் கிடைக்குமா? கிடைக்காதா? என்ற சந்தேகம் இருந்தது. அதனால் நான் சமாளித்துக் கொண்டே பதில் அளித்தேன். அதன் பிறகு ஒரு பிஆர்ஓ போன் செய்து, 'ஒரு நிமிடம் ஆர் கே செல்வமணி உங்களிடம் பேச வேண்டும்' என்றார். அவர் போன் செய்தவுடன், 'நான் வந்து கொண்டிருக்கிறேன்' என சொல்லிவிட்டேன். அன்றிலிருந்து ஒரு மாதம் வரை எனக்குத் தெரிந்து யாரும் தூங்க கூடவில்லை. தொடர்ந்து அதற்காக உழைத்துக் கொண்டே இருக்கிறார்கள். ஏராளமான ஸ்கிரிப்டுகளை எழுதி எழுதி அதனை மாற்றிக் கொண்டே இருக்கிறார்கள். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் - கமல்ஹாசன் என தமிழ் சினிமாவின் மொத்த பேரும் வருகை தந்திருந்தனர். இப்படிப்பட்ட மனித உழைப்பு எனக்குத் தெரிந்து இதுவரை இல்லை என்றே சொல்லலாம். இப்படிப்பட்ட நேர்மையான உழைப்பை வழங்குவது திரை உலகம் தான். இவர்கள் அனைவரும் நடமாடும் உழைப்பாளர்கள் சிலைகள் தான். அப்படி இருக்கும்போது நீங்கள் உங்களுடைய கோரிக்கைகளை உரிமையுடன் கேட்கலாம். 


'தவமாய் தவமிருந்து' படத்தில் இடம்பெறும் ஒரு காட்சிக்காக இயக்குநர் சேரனுக்கு தேசிய விருதுகளை கொட்டிக் கொடுக்க வேண்டும். அப்படி ஒரு காத்திரமான படைப்பு.‌ நாங்கள்தான் உங்களுக்கு நன்றிக் கடன் பட்டிருக்கிறோம். உங்களுக்கு என்னென்ன தேவையோ...! அவை அனைத்தையும் மாண்புமிகு தமிழக முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்வேன்.


முதல் சந்திப்பில் தமிழக முதல்வர் என்னை அழைத்து, 'மானியத்திற்காக காத்துக் கொண்டிருக்கும் படங்கள் எதுவும் பெண்டிங் இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள். அரசு சார்பில் வழங்கப்படும் மானியங்களை வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை விரைவு படுத்துங்கள் ' என சொன்னார். இதற்காக தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.


ஒரு காலத்தில் தமிழ்நாடு தான் சினிமாவில் கேப்பிட்டல் ஆக இருந்தது. இங்கு தான் அனைத்து படப்பிடிப்புகளும் நடைபெறும். கொஞ்சம் கொஞ்சமாக வெவ்வேறு மாநிலங்கள் சென்றது. அதற்கு பலதரப்பட்ட காரணங்கள். அவற்றையெல்லாம் பகுப்பாய்வு செய்வதுதான் எங்களுடைய வேலை.


சூட்டிங் ஸ்பாட்டில் மேனேஜரோ... பி ஆர் ஓக்களோ... பர்மிஷனுக்காக பலருக்கு காசு கொடுக்க வேண்டியதிருந்தது. அதற்கு தற்போது 'நோ ' சொல்லப்பட்டிருக்கிறது. யார் கேட்டாலும் ஒரு ரூபாய் கூட கொடுக்க வேண்டாம். உங்களுடன் சிஎம் இருக்கிறார். புரொடக்ஷன் மற்றும் ஆர்டிஸ்டிகளுக்கு என்ன தேவையோ... அதை மட்டுமே பார்த்துக் கொள்ளுங்கள். 


உலகத்தில் வேலையை செய்வதற்காக யாரும் பாராட்ட மாட்டார்கள் ஏனெனில் நம்முடைய சிஸ்டம் அப்படி மாறிவிட்டது நாம் வேலையை செய்து கொண்டிருக்கிறோம். அதை சிறப்பாக செய்து கொண்டு இருக்கிறோம். அதை உண்மையாக செய்து கொண்டிருக்கிறோம். ஒளிவு மறைவு இல்லாமல்... வெளிப்படை தன்மையுடன் இயங்குவதற்கான ஒரு முயற்சிதான். ஏனெனில் சினிமா துறையில் தான் கருவாகி... உருவாகி... இன்று ஒரு மாமனிதர் முதலமைச்சர் ஆக கிடைத்திருக்கிறார். 


இந்த மேடையில் எங்களுடைய அண்ணன்கள் எதையெல்லாம் வேண்டுமென கேட்டார்களோ... அதை எல்லாம் செய்வதற்கு ஒரு பொன்னான வாய்ப்பு கிடைத்திருக்கிறது. 


முத்துக்காளை மனைவிக்கு ஒரு பிரச்சனை என்று போது.. என்னை அழைக்கவில்லை என்றாலும்.. நானாக சென்று, 'அவர்களை நடிகராக பார்க்காதீர்கள். ஒரு கல்வியாளராக பாருங்கள் 'என்று அறிவுறுத்தி முழுமையான மருத்துவ சிகிச்சையை கிடைக்கச் செய்தோம். 


பாவா லக்ஷ்மணன் அண்ணனுடன் நான் ஒரு படத்தில் கூட இணைந்து பணியாற்றியதில்லை. இருப்பினும் எம்எல்ஏ ஹாஸ்டலில் அவருக்கு இடம் கொடுத்துவிட்டேன். கேப்டன் இல்லையென்றால் என்ன.... கேப்டனின் படங்களை பார்த்து தான் நாங்கள் அனைவரும் வளர்ந்திருக்கிறோம். நீங்கள் வாருங்கள் என்று அவரை அன்புடன் அழைத்து அந்த விடுதி அறையை கொடுத்தேன். 


பாரதிராஜா- பாக்யராஜ்- மறைந்த போது ஓடோடி சென்று முழு அரசு மரியாதை வழங்கியது. அது எங்களுடைய கடமை. அவர்களுக்கு செய்யாமல் நாங்கள் வேறு யாருக்கு செய்யப் போகிறோம். 


நான் பள்ளி கல்வித்துறை அமைச்சராகவும் இருக்கிறேன். அரசு பள்ளியில் படிக்கும் ஆட்டிசம் குழந்தைகள்.. என்னுடைய அறைக்கு வந்தவுடன்.. அவர்களை ஒரு குட்டி நாற்காலியில் அமர வைப்பேன். சாக்லேட் தருவேன். அவர்களிடம் நீண்ட நேரம் உரையாடுவேன். அவர்களின் பெற்றோர்கள் தான் பதட்டமடைவார்கள்.  ஆனால் அவர்கள் கேட்கும் கேள்விக்கு பதில் அளிக்காமல் வேறு எங்கோ பார்த்துக் கொண்டிருப்பார்கள். இந்த நிலையை பார்த்து அவர்களுடைய பெற்றோர் கண்ணீர் சிந்துவார்கள். அப்போது ஒரு அதிகாரி நல்லதொரு ஐடியாவை கொடுத்தார். அதன்படி சென்னை பிலிம் இன்ஸ்டிடியூட்டில் உள்ள தியேட்டரில் சென்னையில் அரசு பள்ளியில் படிக்கும் ஆட்டிசம் பாதித்த குழந்தைகளை தேர்வு செய்து, அவர்களுக்கு உலக சினிமாவை திரையிட்டோம். அந்த பிள்ளைகள் அந்த சினிமாவை பார்த்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இதை பார்த்தவுடன் இத்தகைய முயற்சிகள் இனி மாதம் தோறும் மேற்கொள்ள வேண்டும் என முடிவெடுத்து அதை தொடங்கி விட்டோம்.


நாங்கள் பேசும்போது எங்களுடன் பேசாத அந்த குழந்தைகள்.... திரையில் தெரியும் மீனுடன் பேசுகிறது. மானுடன் பேசுகிறது. சிரித்து விளையாடினர். படத்தின் இடைவேளையின் போது குழந்தைகளுக்கு மட்டும் அல்ல அவர்களின் பெற்றோர்களும் தங்களுடைய பிள்ளைகளின் உற்சாகத்தை பார்த்து மகிழ்ச்சி அடைந்தனர். 


கிட்டத்தட்ட நானும் அப்படித்தான்.. கிடைத்த வேலைகளை செய்து, எப்படியாவது ஒரு நிலைக்கு உயர்ந்திட வேண்டும் என உழைத்துக் கொண்டே இருந்தேன். இன்று இந்த இடத்திற்கு வந்து நிற்கிறேன் என்றால் ..இவை அனைத்தும் திரைக்கலை தந்த ஒரு வலிமை. இதயத்தை தொடக்கூடிய ஒரு உணர்வு. நல்ல படைப்புகளை பார்த்து... படித்து... கேட்டு... வளர்ந்தது. இதையெல்லாம் ...இப்படி எல்லாம் ... செய்ய வேண்டும் என்று நினைத்து, எனக்கு மாண்புமிகு முதல்வர் கொடுக்க நல்லதொரு வாய்ப்பு இது. அவர் என் மீது வைத்த நம்பிக்கை. என் மீது இங்கு உள்ள எல்லோரும் வைத்திருக்கும் நம்பிக்கை. இதனை நான் நிச்சயமாக காப்பாற்றுவேன். கடைசி மூச்சு வரை நேர்மையாக வேலை செய்து, உங்கள் அத்தனை பேரின் கோரிக்கையையும் மாண்புமிகு தமிழக முதல்வரின் கவனத்திற்கு எடுத்துச் சென்று, அவரின் ஆலோசனையும், அனுமதியும் பெற்று... என்னாலான அனைத்து முயற்சிகளையும் செய்வேன் என உறுதி அளிப்பதுடன்..வாழ்த்தி, வணங்கி விடைபெறுகிறேன்'' என்றார்.

உலகத் தரம் வாய்ந்த தொழில்நுட்பக் கலைஞர்களிலிருந்து சக்திவாய்ந்த நடிகர்கள் வரை, 'தி பிரைடு ஆஃப் பாரத்: சத்ரபதி சிவாஜி மகாராஜ்' படத்தில் பெலவாடி மல்லம்மாவாக இணைந்தார் பூமி சதீஷ் பெட்னேக்கர்

 *உலகத் தரம் வாய்ந்த தொழில்நுட்பக் கலைஞர்களிலிருந்து சக்திவாய்ந்த நடிகர்கள் வரை, 'தி பிரைடு ஆஃப் பாரத்: சத்ரபதி சிவாஜி மகாராஜ்' படத்தில் பெலவாடி மல்லம்மாவாக இணைந்தார் பூமி சதீஷ் பெட்னேக்கர்*



தி பிரைடு ஆஃப் பாரத்: சத்ரபதி சிவாஜி மகாராஜ் திரைப்படத்தின் நட்சத்திர பட்டியல் தொடர்ந்து விரிவடைந்து வருகிறது. இந்திய சினிமாவின் மிகப் பிரம்மாண்டமான வரலாற்றுத் திரைப்படங்களில் ஒன்றாக உருவாகி வரும் இந்தப் படத்தில், பாராட்டப்பட்ட நடிகர்களிலிருந்து உலகளவில் அங்கீகாரம் பெற்ற தொழில்நுட்பக் கலைஞர்கள் வரை பலர் தொடர்ந்து இணைந்து வருகின்றனர்.


இந்த சக்திவாய்ந்த நட்சத்திர அணியில் தற்போது நடிகை பூமி சதீஷ் பெட்னேக்கர் அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ளார். இந்த பிரம்மாண்டமான படைப்பில், அச்சமற்ற வீர ராணியாகவும், தனது துணிச்சல் மற்றும் அசைக்க முடியாத மன உறுதியால் நினைவுகூரப்படும் பெலவாடி மல்லம்மா என்ற கதாபாத்திரத்தில் அவர் நடிக்கிறார் என்பதை நாங்கள் பிரத்தியேகமாக அறிந்துள்ளோம். அவரது வருகை, புகழ்பெற்ற வீர மன்னர் சத்ரபதி சிவாஜி மகாராஜாக ரிஷப் ஷெட்டி முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் இந்த நட்சத்திர அணியை மேலும் வலுப்படுத்துகிறது. மேலும் அர்ஜுன் ராம்பால், விவேக் ஓபராய் மற்றும் பல முன்னணி நடிகர்களும் இதில் இடம்பெற்றுள்ளனர்.


இந்தப் படத்தில் இணைந்திருப்பது குறித்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்திய பூமி சதீஷ் பெட்னேக்கர் கூறியதாவது: "மகத்தான மராத்தா வீர மன்னர் சத்ரபதி சிவாஜி மகாராஜின் வாழ்க்கை மற்றும் பாரம்பரியத்தை மையமாகக் கொண்டு, இதுபோன்ற அளவில் உருவாகும் முதல் இந்திய திரை பிரம்மாண்டத்தின் ஒரு பகுதியாக இருப்பது எனக்கு மிகுந்த பெருமையாக உள்ளது. கர்நாடகத்தின் வீர ராணியான பெலவாடி மல்லம்மா கதாபாத்திரத்தில் நடித்து, அவரை திரையில் உயிர்ப்பிப்பது எனக்கு ஒரு பெரும் பாக்கியம். நான் காந்தாரா திரைப்படத்தின் மிகப்பெரிய ரசிகை. அதில் ரிஷப் ஷெட்டியின் அசத்தலான நடிப்பு என்னை மிகவும் கவர்ந்தது. அதனால், சந்தீப் இந்தக் கதையை என்னிடம் கூறிய தருணத்திலேயே என்னுள் இருக்கும் நடிகை உடனடியாக 'ஆம்' என்று கூறிவிட்டது. இதற்கு முன் நான் செய்த எந்தக் கதாபாத்திரத்தையும் போல இல்லாத ஒரு அனுபவம் இது. என்னை முற்றிலும் புதிய கோணத்தில் பார்த்து இந்த வாய்ப்பை வழங்கிய தயாரிப்பாளர்களுக்கு நான் மனமார்ந்த நன்றியைத் தெரிவிக்கிறேன்."


சந்தீப் சிங் இயக்கி தயாரிக்கும் தி பிரைடு ஆஃப் பாரத்: சத்ரபதி சிவாஜி மகாராஜ் திரைப்படம் மிகப் பிரம்மாண்டமான அளவில் உருவாக்கப்பட்டு வருகிறது. புகழ்பெற்ற மராத்தா வீர மன்னரின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவாகும் மிகப் பெரிய திரை பிரம்மாண்டங்களில் ஒன்றாக இது உருவாக்கப்பட உள்ளது.


இரண்டு பாகங்களாகத் திட்டமிடப்பட்டுள்ள இந்தத் திரைப்படத்திற்கு ரிஷி விர்மானி திரைக்கதை எழுதியுள்ளார். அமித் திரிவேதி இசையமைக்க, தேசிய விருது பெற்ற பாடலாசிரியர் பிரசூன் ஜோஷி பாடல் வரிகளை எழுதியுள்ளார். தொடர்ந்து விரிவடைந்து வரும் முன்னணி நடிகர்கள் மற்றும் உலகளவில் அங்கீகாரம் பெற்ற தொழில்நுட்பக் கலைஞர்களின் அணியுடன் உருவாகும் இந்த பிரம்மாண்ட திரைப்படம், இந்த ஆண்டு இறுதியில் படப்பிடிப்பைத் தொடங்க உள்ளது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க படைப்பை உயிர்ப்பிக்க விரிவான முன்தயாரிப்பு பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

தனுஷ் அவரது பிறந்த நாளை முன்னிட்டு அனைத்திந்திய தலைமை தனுஷ் நண்பர்கள் நற்பணி மன்றம் ஏற்பாடு செய்த மாபெரும் ரத்ததான முகாம் நேற்று (26/7/26)வேல்ஸ் மருத்துவமனை மற்றும் கல்லூரி ( Manjakaranai)

தனுஷ் அவரது பிறந்த நாளை முன்னிட்டு அனைத்திந்திய தலைமை தனுஷ் நண்பர்கள் நற்பணி மன்றம் ஏற்பாடு செய்த மாபெரும் ரத்ததான முகாம் நேற்று (26/7/26)வேல்ஸ் மருத்துவமனை மற்றும் கல்லூரி ( Manjakaranai) 


இந்திய சினிமா மட்டுமின்றி ஹாலிவுட் வரை கால் பதித்த நடிகர் தனுஷ் நாளை ஜூலை 28 தனது பிறந்த நாளை கொண்டாடுகிறார். தனுஷ் அவரது பிறந்த நாளை முன்னிட்டு அனைத்திந்திய தலைமை தனுஷ் நண்பர்கள் நற்பணி மன்றம் ஏற்பாடு செய்த மாபெரும் ரத்ததான முகாம் நேற்று (26/7/26)வேல்ஸ் மருத்துவமனை மற்றும் கல்லூரி ( Manjakaranai) 

 வளாகத்தில் இந்தியா முழுக்க உள்ள ரசிகர் மன்றத்தினர் முன்னிலையில் நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியில் ஏழை எளிய மாணவர்கள் 150 பேருக்கு கல்வி ஊக்கத்தொகை மற்றும் 30 மாவட்டங்களைச் சேர்ந்த ஏழை குடும்பத்திற்கு 30 ஆட்டோ வழங்கி உள்ளார் தனுஷ். 40க்கும் மேற்பட்ட மாவட்டங்களைச் சேர்ந்த ரசிகர் மன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டு ரத்த தானம் செய்தனர். மேலும் காலை, மதியம், இரவு என மூன்று நேரத்திற்கும் பந்தி வைத்து விருந்தளித்தார் தனுஷ்.