-

Loading latest news...

Baththa’ First Single ‘Magale’! A Beautiful Melody That Gently Touches the Heart!*

 *‘பத்தா’ படத்தின் முதல் சிங்கிள் ‘மகளே’ – மனதை வருடும் அழகான மெலடி!*


“மகளே” – சாய் அப்யங்கரின் மெலடி இசையில் மனதை மயக்கும் ‘பத்தா’ முதல் சிங்கிள்!

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில், இயக்குநர் பாலாஜி தரணிதரன் இயக்கத்தில், இயக்குநர் அட்லி வழங்கும், ஸ்டார் ஸ்டுடியோ18,(Star Studio18), ஏ ஃபார் ஆப்பிள் ஸ்டுடியோஸ் (A for Apple Studios) மற்றும் சினி 1 ஸ்டுடியோஸ் புரொடக்‌ஷன் (Cine 1 Studios Production) நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள ‘பத்தா’ திரைப்படத்தின் முதல் சிங்கிள் ‘மகளே’ வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. சாய் அப்யங்கர் இசையமைத்து பாடியுள்ள இப்பாடலுக்கு கவிஞர் கார்த்திக் நேதா வரிகளை எழுதியுள்ளார்.


இன்றைய தலைமுறை ரசிகர்களால் கொண்டாடப்படும் சாய் அப்யங்கர், துள்ளலான பாடல்களால் தனக்கென தனி அடையாளத்தை உருவாக்கி வரும் நிலையில், ‘மகளே’ பாடலில் முற்றிலும் மாறுபட்ட மென்மையான மெலடி பாணியை கையாண்டுள்ளார். அவரது இசையில் இதுவரை கேட்டிராத வித்தியாசமான இசை அனுபவமாக இந்தப் பாடல் அமைந்துள்ளது.



80-களின் இசை உலகை கண்முன் கொண்டு வரும் வீடியோ


80-களின் புகைப்படங்களும், அக்காலகட்ட இசையும் மீண்டும் ட்ரெண்டிங்கில் இருக்கும் இந்த நேரத்தில், ‘மகளே’ பாடலின் வீடியோவும் 80-களின் இசை உலகை நினைவுபடுத்தும் வகையில் அமைந்துள்ளது. வீடியோவின் தொடக்கமே 80-களில் ஒரு திரைப்படப் பாடல் ரெக்கார்டிங் எப்படி நடைபெற்றிருக்குமோ, அதனை அப்படியே கண்முன் கொண்டு வரும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. பழைய கால இசைக்கூடம், அக்கால ரெக்கார்டிங் முறைகள் என அந்தக் காலகட்டத்தின் சூழலை அப்படியே பிரதிபலிக்கும் வகையில் காட்சிகள் அமைந்துள்ளன. அதேநேரத்தில் சாய் அப்யங்கர் இசையமைப்பாளராகவும், பாடகராகவும் இரட்டை வேடத்தில் தோன்றியிருப்பதும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வரவேற்பைப் பெற்று வருகிறது.


மகளை கொண்டாடும் அழகான பாடல்


ஒரு தந்தை தனது மகளைப் பார்த்து அன்புடன் பேசுவது போன்ற உணர்வில் உருவாகியுள்ள இந்தப் பாடல், மகளின் மீதான பாசத்தையும் அன்பையும் அழகாக வெளிப்படுத்துகிறது. “மகளே, மந்திரச் சிமிழே, மங்கள விளக்கே கேளடி” எனத் தொடங்கும் கார்த்திக் நேதாவின் வரிகள் கவிதையைப் போல அமைந்து, பாடலின் உணர்வை மேலும் அழுத்தமாக வெளிப்படுத்துகின்றன.


சாய் அப்யங்கரின் மென்மையான இசையும், அவரது குரலும், கார்த்திக் நேதாவின் கவித்துவமான வரிகளும் இணைந்து ‘மகளே’ பாடலை, ரசிக்க வைக்கும் அனுபவமாக மாற்றியுள்ளது. குறிப்பாக, வழக்கமான இளமைத் துள்ளல் இசையிலிருந்து விலகி, மனதை வருடும் மெலடி பாணியில் சாய் அப்யங்கர் இந்தப் பாடலை உருவாக்கியிருப்பது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.


வித்தியாசமான கூட்டணியில், வித்தியாசமான களத்தில் வெளியாகியுள்ள ‘மகளே’ பாடல் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு, தொடர்ந்து நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.


தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான விஜய் சேதுபதி, இயக்குநர் பாலாஜி தரணிதரன் மற்றும் இந்திய சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களான Star Studio18, A for Apple Studios  மற்றும் Cine 1 Studios Production நிறுவனங்கள் இணைந்து தயாரிப்பது என, பல்வேறு எதிர்பார்ப்புகளை ஒன்றிணைத்துள்ள ‘பத்தா’, வரும் அக்டோபர் 1ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.


*Baththa’ First Single ‘Magale’! A Beautiful Melody That Gently Touches the Heart!*


The musical sensation Sai Abhyankkar endows a soulful musical dimension with ‘Magale’, the first single from Vijay Sethupathi’s ‘Baththa’


The first single ‘Magale’ from ‘Baththa’, starring Makkal Selvan Vijay Sethupathi and directed by Balaji Tharaneetharan, has been released and is receiving a warm response from music lovers. Presented by filmmaker Atlee, the film is jointly produced by Star Studio18, A for Apple Studios and Cine1 Studios Production. Composed and sung by Sai Abhyankkar, the song features lyrics by acclaimed lyricist Karthik Netha.


Celebrated by today’s generation for his energetic and instantly appealing music, Sai Abhyankkar takes a refreshingly different musical route with ‘Magale’, embracing a tender and soothing melody. What adds more intrigue to the song is that the track exhibits a distinctly different side of the composer, moving away from his familiar youthful exuberance and creating a gentle musical experience that lingers with the listener.



A Refreshing Visual  That Recreates the Musical World of the 1980s


 With the visual and musical aesthetics of the 1980s once again finding its place among audiences, the video song of ‘Magale’ beautifully recreates the atmosphere of that era. From its very opening, the song commutes  viewers into an old-school recording studio, evoking the way a film song could have been recorded during the 1980s.


The vintage studio setting, period recording techniques and carefully recreated ambience add a distinct charm to the video. Another highlight is Sai Abhyankkar appearing as both the composer and singer, adding an interesting visual dimension to the song.


Beautiful Poetic Dedication to Daughter


A Heartfelt Musical Tribute to the Bond Between a Father and Daughter, built around the tender emotions of a father expressing his affection towards his daughter, ‘Magale’ beautifully celebrates the warmth and unconditional love of this special bond. Karthik Netha’s poetic lyrics further deepen the emotional essence of the song, giving it the feel of an affectionate musical ode to a daughter.


Sai Abhyankkar’s gentle composition and soulful vocals blend beautifully with Karthik Netha’s evocative writing, turning ‘Magale’ into a soothing listening experience. His departure from his signature high-energy style to explore a delicate melodic space has emerged as one of the song’s most refreshing aspects.


Arriving as a distinctive musical offering, ‘Magale’ has already begun winning the appreciation of listeners, further adding to the anticipation surrounding ‘Baththa’.


Starring Vijay Sethupathi and Lijomol Jose in the lead roles, ‘Baththa’ is directed by Balaji Tharaneetharan and presented by Atlee. Sai Abhyankkar composes the music, with Selvakumar S.K. handling cinematography, R. Kalaivanan taking care of editing and T. Muthuraj as Production Designer. The film is jointly produced by Star Studio18, A for Apple Studios and Cine1 Studios Production.


‘Baththa’ is scheduled for a worldwide theatrical release on October 1, 2026.


https://www.youtube.com/watch?v=FhhA5purigQ

I am game movie Review

 I am game movie Review சூதாட்டங்கள் விளையாடுவதில் தீவிரம் காட்டும் நாயகன் துல்கர் சல்மான், கடனாளியாகி விடுகிறார். கடன் பிரச்சனையில் இருந்து மீள்வதற்காக கிரிக்கெட் சூதாட்டட்தில் ஈடுபடுகிறார், ஆனால் அதிலும் தோல்வியடைந்து மொத்த பணத்தையும் இழந்து விடுகிறார். இதற்கிடையே விபத்து ஒன்றில் சிக்கி படுகாயம் அடையும் துல்கர் சல்மானின் ஒரு கை சிதைந்து விடுகிறது. இதனால், இறந்த ஒருவரது கை அவருக்கு அறுவை சிகிச்சை மூலம் பொருத்தப்படுகிறது. பல மாதங்களுக்குப் பிறகு மீண்டும் தன்னுடைய வழக்கமான பணிகளை மேற்கொள்ளும் துல்சர் சல்மானின் வாழ்க்கையில் அவரது புதிய கை பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்துகிறது.


தன் பேச்சை கேட்காமல் அந்த கையே பல விசயங்களை செய்தாலும், அதன் மூலம் சூதாட்டங்களில் தொடர் வெற்றிகளை குவிக்கும் துல்கர் சல்மான், தன் புதிய கை தனக்கான அதிஷ்ட்டம் என்று நம்பும் போது, அந்த கை தொழிலதிபரும், மெட்ராஸ் கிரிக்கெட் அணியின் நிதியுதவியாளருமான மிஷ்கினை கொலை செய்ய முயற்சிக்கிறது. இதன் மூலம் அந்த கை தனக்கான அதிஷ்ட்டம் இல்லை, தன்னை பிரச்சனையில் சிக்க வைக்க வந்த ஆபத்து என்பதை துல்கர் சல்மான் உணர்கிறார். அப்போது அவர் மீதே அந்த கை கொலைவெறி தாக்குதல் நடத்துகிறது. அதில் இருந்து தப்பிக்கும் துல்கர் சல்மான், அந்த கையின் பின்னணியை கண்டுபிடித்து பிரச்சனையை எப்படி தீர்க்கிறார் ? என்பதை விறுவிறுப்பாக சொல்வதே ’ஐ அம் கேம்’.


படம் முழுவதும் ஸ்டைலான உடையில், ஸ்டைலான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கும் துல்கர் சல்மான், கை மாற்று அறுவை சிகிச்சைக்குப் பிறகு சவாலான காட்சிகளை மிக சாமர்த்தியமாக கையாண்டு ரசிக்க வைக்கிறார். தன் உடலோடு பொருந்தியிருந்தாலும் தன் கட்டுப்பாட்டை மீறி செயல்படும் கையை வைத்துக் கொண்டு துல்கர் சல்மான் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை தன் நடிப்பு மூலம் நேர்த்தியாக பார்வையாளர்களிடத்தில் கடத்தி விடுகிறார்.


நாயகியாக நடித்திருக்கும் கயாடு லோஹர், மெழுகுச் சிலை போல் அழகாக இருக்கிறார். அமைதியான முகம், அளவான நடிப்பு என்று படம் முழுவதும் நாயகனுக்கு துணையாகவும், படத்திற்கு பலமாகவும் பயணித்திருக்கிறார்.


வில்லனாக நடித்திருக்கும் மிஷ்கின், சூதாட்ட உலகத்தையும், அதன் செயல்பாடுகளையும் பார்வையாளர்கள் கண்முன் நிறுத்தும்படி நடித்திருக்கிறார். அவரது ஆக்ரோஷமான நடிப்பும், உடல்மொழியும் டேவிட் ஆப்ரஹாம் என்ற கதாபாத்திரத்திற்கு நூறு சதவீதம் நியாயம் சேர்த்திருக்கிறது.


ஆண்டனி வர்கீஸ், கதிர், சம்யுக்தா விஸ்வநாதன், வினய் ஃபோர்ட் ஆகியோருக்கு சிறிய வேடம் என்றாலும் திரைக்கதையில் முக்கிய பங்கு வகிக்கிறார்கள்.


ஒளிப்பதிவாளர் ஜிம்ஷி காலித், இரவு நேர காட்சிகளை பல்வேறு விளக்குகள் மூலம் பிரகாசமாக காட்சிப்படுத்தி, சூதாட்ட உலகத்தில் பார்வையாளர்களையும் பயணிக்க வைக்கிறார். படத்தின் பெரும்பாலான காட்சிகள் இரவு நேரத்தில் நடந்தாலும், வண்ணங்கள் மற்றும் விளக்குகள் மூலம் அந்த உணர்வே பார்வையாளர்களுக்கு ஏற்படாத வகையில் படம் முழுவதையும் வண்ணமயமாகவும், பிரமாண்டமாகவும் காட்சிப்படுத்தியிருக்கிறார்.


ஜேக்ஸ் பிஜாய் இசையில் பாடல்கள் துள்ளல் ரகம். பின்னணி இசை திரைக்கதையின் வேகத்திற்கு கூடுதல் வேகம் சேர்த்திருக்கிறது. அதிலும், கை செய்யும் களேபரங்கள் மற்றும் சண்டைக்காட்சிகளுக்கு தனித்துவமான பீஜியம் மூலம் இசையமைப்பாளர் பெரும் பலம் சேர்த்திருக்கிறார்.


சூதாட்டம் தான் படத்தின் மையக்கரு, அதை சுற்றி திரைக்கதை எழுதப்பட்டிருந்தாலும், எதிர்பார்க்காத ஒரு திருப்பத்தின் மூலம் திரைக்கதையின் வடிவத்தை மாற்றியிருக்கும் படத்தொகுப்பாளர் சாமன் சாக்கோ, படம் முழுவதையும் சிறு தொய்வின்றி விறுவிறுப்பாக நகர்த்தி சென்றிருக்கிறார்.


சஜீர் பாபா, பிலால் மொய்து, இஸ்மாயில் அபூபக்கர் ஆகியோரது திரைக்கதை வழக்கமான பழிவாங்கும் கதையை வேறு பாதையில் பயணிக்க வைத்து, படத்தின் சுவாரஸ்யத்தை அதிகரிக்கச் செய்திருக்கிறது.


கிரிக்கெட் விளையாட்டில் நடைபெறும் சூதாட்டத்தை தோலுரித்துக் காட்டும் வகையில் கதை எழுதி இயக்கியிருக்கும் நஹாஸ் ஹிதாயத், இத்தகைய சூதாட்டங்களும், அதை நடத்துபவர்களும் மக்களின் பேராசை மூலமாகவே உருவாகிறார்கள், என்ற கருத்தை அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார்.


சூதாட்டத்தை சுற்றி கதை நகர்ந்தாலும், சஸ்பென்ஸ், திரில்லர், ஆக்‌ஷன், காதல் என அனைத்துவிதமான கமர்ஷியல் அம்சங்களையும் திரைக்கதையில் அளவாக கையாண்டு, ஆரம்பம் முதல் முடிவு வரை பார்வையாளர்களின் கவனம் சிதறாமல் படத்தை நகர்த்தி சென்றிருக்கிறார் இயக்குநர் நஹாஸ் ஹிதாயத்.


மொத்தத்தில் ‘ஐ அம் கேம்’ சுவாரஸ்யமான விளையாட்டு

வதந்தி சீசன் 2 - எனக்கான அடையாளத்தை அளித்தது - நடிகர் அர்ஜுன் சக்கரவர்த்தி

 *வதந்தி சீசன் 2 - எனக்கான அடையாளத்தை அளித்தது - நடிகர் அர்ஜுன் சக்கரவர்த்தி 



*என் முதல் ரசிகர் மறக்க முடியாதவராக இருக்க வேண்டும் - அறிமுக நடிகர் அர்ஜுன் சக்கரவர்த்தி*


வால்வாட்சர் ஃபிலிம்ஸ் நிறுவனம் சார்பில் இயக்குநர்கள் புஷ்கர்- காயத்ரி தயாரிப்பில் இயக்குநர் ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் ஆகஸ்ட் 7ஆம் தேதி முதல் ப்ரைம் வீடியோ டிஜிட்டல் தளத்தில் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்று வரும் 'வதந்தி சீசன் 2 : த மிஸ்டரி ஆஃப் மணி' எனும் எட்டு அத்தியாயங்கள் கொண்ட இன்வஸ்டிகேட்டட் கிரைம் திரில்லர் ஜானரிலான இணைய தொடரில் சுந்தரேசன் கதாபாத்திரத்தில் அறிமுகமாகி, ரசிகர்களை தனித்துவமான நடிப்பால் மிரள வைத்திருக்கிறார் புதுமுக நடிகர் அர்ஜுன் சக்கரவர்த்தி. 


'வதந்தி சீசன் 2' இணைய தொடர் வெளியான பிறகு தன்னுடைய பிரத்யேக இன்ஸ்டா ஐடி ( arjun_chakkaravarthy) யை பப்ளிக் ஆக்கியுள்ள நடிகர் அர்ஜுன் சக்கரவர்த்தி தன் நடிப்பை பாராட்டி ரசிகர்கள் பதிவிடும் போஸ்ட்டிற்கு லைக்கும், ஷேரும் கொடுத்துக் கொண்டிருந்த தருணத்தில் அவரை சந்தித்தோம்.  


கலைத்துறை அறிமுகத்திற்கான பிளாஷ்பேக்..?


சின்ன வயதில் இருந்தே டிவியில் ஒரு படம் ஓடினால்.. அது தொடர்பான சம்பவங்களை அப்பா சொல்வார். சில நேரங்களில் ஒவ்வொரு காட்சியைப் பற்றி சொல்லும்போது... அந்த காட்சி படமாக்கப்பட்ட போது நடைபெற்ற சம்பவங்களை சுவாரசியமாக விவரிப்பார். அதை கேட்டு கேட்டு படப்பிடிப்பு தளத்தில் படக் குழுவினருடன் பழக வேண்டும்... திரை துறையில் பணியாற்ற வேண்டும்... என்ற ஆசை எழுந்தது. அத்துடன் விடுமுறை நாட்களில் அப்பா பணியாற்றும் படங்களுக்கான படப்பிடிப்பில் கலந்து கொள்வேன். அங்கு நடக்கும் நிகழ்வுகளை பார்த்துக் கொண்டே இருப்பேன். அப்போதுதான் நான் திரையில் பார்த்தது வேறு. நிஜத்தில் பார்ப்பது வேறாக இருந்தது. கேமராமேன் - லைட் மேன்- புரொடக்ஷன்- என ஒவ்வொருவரும் தங்களுடைய கடுமையான உழைப்பை அளித்துக் கொண்டிருந்தனர்.

இதற்காகவே விடுமுறை எப்போது வரும் என்று காத்திருப்பேன். ஏனென்றால் பள்ளிக்கு செல்லும் போது படப்பிடிப்புக்கு செல்ல முடியாது. இது அப்பாவின் கடுமையான உத்தரவு. அதன் பிறகு 12 வது படிப்பு முடித்தவுடன் அப்பாவிடம் 'விஸ்காம் படிக்கிறேன்' என்று சொன்னேன். 'அது வேண்டாம் உனக்கு பொருத்தமாக இருக்காது. நீ சட்டம் படி' என்றார். அதற்காக தற்போது நான் சென்னை சட்டக் கல்லூரியில் சட்டம் பயின்று வருகிறேன். 


நடிப்பின் மீதான ஆர்வம் காரணமாக நிறைய கம்பெனிகளில் ஆடிசனுக்கு சென்றேன். அதன் பிறகு கூத்துப் பட்டறைக்கு சென்று நடிப்பு பயிற்சியை பயின்றேன். சினிமா சண்டை பயிற்சி இயக்குநரான டேஞ்சர் மணியிடம் சண்டைக் காட்சிகளுக்காக பயிற்சி பெற்றேன். 


என்னுடைய உருவத்தை வைத்தும்... நிறத்தை வைத்தும்... நிறைய பேர் கேலி செய்தனர் 'கருப்பா இருக்கியே.. உன் மூஞ்சியெல்லாம் கேமராவுல தெரியுமா..? 'என பேசினர். இதனால் என் மனதிற்குள் ஏன் நம்மால் நடிக்க முடியாதா? நான் நடிகனாகக் கூடாதா? என்ற வெறித்தனமான எண்ணம் ஏற்பட்டது. முதலில் நடிகனாவதற்கான தகுதி என்னவோ... அதை வளர்த்துக் கொள்ள வேண்டும் என நினைத்தேன். 


நடிகர்களுக்கு உடல் ஆரோக்கியம் தான் முக்கியம் என்பதால் சத்தான உணவுகளை சாப்பிடத் தொடங்கினேன். ஜிம்முக்கு சென்றேன். வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் மேடை நாடகங்களிலும் நடித்தேன். சினிமா சம்பந்தமான ஒர்க்ஷாப் நடந்தால்... அதில் கலந்து கொள்வேன். மைம் என்ற கலையையும் கற்று வருகிறேன். சண்டைக் காட்சிகளை நடிப்பது தொடர்பான பயிற்சியையும் பெற்று வருகிறேன். நடனமும் கற்று வருகிறேன். 


என்ன மாதிரியான கேரக்டர்களில் நடிக்க ஆசை?


ஆக்சன் ஹீரோ என்பதை விட நல்ல நடிகர் என்ற அடையாளத்தை பெறுவதைத்தான் விரும்புகிறேன். உதாரணத்திற்கு பசுபதி அவர்கள்.. எல்லா கதாபாத்திரங்களிலும் சிறப்பாக நடிப்பார்.‌ இந்த கேரக்டர் என்று எந்த வரையறையும் இல்லை. எந்த கேரக்டர் கொடுத்தாலும் அதில் பொருந்தி என் சிறந்த நடிப்பை வழங்குவேன். எல்லோருக்கும் என்னை பிடிக்க வேண்டும் இதுதான் என் ஆசை. இதற்காக கடுமையாக உழைக்கவும் தயாராக இருக்கிறேன். 


வதந்தி சீசன் 2 வாய்ப்பு...? 


வால்வாட்சர் ஃபிலிம்ஸ் நிறுவனத்தில் அப்பா பணியாற்றுவதால்.. கடந்த ஆறு ஆண்டுகளாக இந்த நிறுவனத்துடன் நெருங்கிய தொடர்பு உண்டு. ஒருமுறை அலுவலகத்தில் இருந்தபோது புஷ்கர் - காயத்ரி அவர்கள் என்னை பார்த்தார்கள். என் தந்தையிடம், 'நன்றாக இருக்கிறானே..! ஆடிசன் வைக்கலாமா? அனுப்புவீர்களா?' என கேட்டனர். அதன் பிறகு எனக்கு ஆடிசன் டெஸ்ட் வைத்தனர். முதலில் புஷ்கர் - காயத்ரி மேடம் வைத்த டெஸ்டில் பாஸ் செய்தேன். அதன் பிறகு இயக்குநர் ஆண்ட்ரூஸ் லூயிஸ் ஆடிஷன் வைத்தார். அப்போது இயக்குநர், 'எந்த சீன் கொடுத்தாலும் நடிப்பியாப்பா?' என கேட்டார். 'வதந்தி சீசன் 1 சூப்பர் ஹிட் சார். அந்த சூப்பர் ஹிட்டான தொடரின் இரண்டாவது சீசனில் நடிக்க எனக்கு ஒரு வாய்ப்பு கிடைக்கிறது என்றாலே.. அதை விட்டு விட மனமில்லை...'என்று சொன்னேன். அதன் பிறகு செலக்ட் ஆனேன். இதில் சுந்தரேசன் கதாபாத்திரத்தில் நான் நடித்திருக்கிறேன். 


உங்கள் பார்வையில் வதந்தி சீசன் 2...?


வதந்தி சீசன் 1 போல்.. சீசன் 2 வரும் சூப்பர் ஹிட். இதில் சுந்தரேசன் கதாபாத்திரத்தில் நடிக்க தொடங்கும் போது ஒவ்வொரு நாளும் எனக்கு புது அனுபவமாகவே இருந்தது. வதந்தி சீசன் 2 வை பார்த்த அனைவரும் நன்றாக இருக்கிறது என பாராட்டி இருக்கிறார்கள். 


ஃப்யூச்சர் ஐடியா..? 


இந்த வெப்சீரிஸிற்கு பிறகு எனக்கு வாய்ப்புகள் வரும் என்று நினைக்கிறேன். எந்த வாய்ப்பு கிடைத்தாலும் அதில் என் நூறு சதவீத உழைப்பை கொடுப்பேன். என் மீது நம்பிக்கை வைத்து வாய்ப்பளித்தவர்களின் பெயரை காப்பாற்றும் வகையில் நடிக்க வேண்டும்.


திரைத் துறையிலும், மக்கள் மனதிலும் எனக்கென்று ஒரு தனிப்பட்ட இடத்தை உருவாக்கிக் கொள்ள வேண்டும். மக்களை மகிழ்விக்க வேண்டும் என்ற எண்ணம் மட்டும் இருக்கிறது. 'தெய்வத்தால் ஆகாது எனினும்..' என்ற திருக்குறளை போல் கடுமையாக முயற்சித்தால்... அந்த நம்பிக்கை என்னை கைவிடாது என்று நம்புகிறேன். 


சினிமாவில் தான் என் வாழ்க்கை. நடிகராக இல்லை என்றால்.. சினிமாவில் ஏதேனும் ஒரு துறையில் வேலை செய்து கொண்டு இருக்க வேண்டும். 


உங்கள் சமூக ஊடக பக்கம்..? 


சோசியல் மீடியாவில் நான் இன்ஸ்டாகிராமில் மட்டும்தான் arjun_chakkaravarthy என்ற ஐடியை வைத்திருக்கிறேன். அதிலும் இந்த ஐடியை இதுவரை பிரைவேட்டாகத்தான் வைத்திருந்தேன். வதந்தி சீசன் 2 வெளியான பிறகு தான் அதனை பப்ளிக் ஆக்கினேன். இதில் இனிமேல் என் படம் சம்பந்தமான விசயங்கள்... என்னுடைய எண்ணங்கள் ஆகியவற்றை போஸ்ட் செய்வேன்.


அவெர்னஸ் தொடர்பான போஸ்ட்களை ரீபோஸ்ட் செய்திருக்கிறேன். சில விசயங்களில் என்னுடைய கருத்தையும் சேர்த்து சொல்லி இருக்கிறேன்.‌


விஜய் Vs வதந்தி சீசன் 2..?


முதலில் நான் ஒன்றை தெளிவு படுத்தி விடுகிறேன். நான் பக்கா விஜய் ரசிகன். விஜய் சார் எனக்கு ஒரு இன்ஸ்பிரேஷன்.‌ வதந்தி சீசன் 2 வை விஜய் பார்த்துவிட்டு என்ன சொல்வார் ? என்ற பதட்டம் நிறையவே இருக்கிறது. 


அதர்ஸ் வெப் சீரிஸ் - வதந்தி சீசன் 2 வெப் சீரிஸ் என்ன டிஃபரன்ஸ்?


டைரக்டர் ஆண்ட்ரூ சார் இதற்காக மூன்று ஆண்டு காலம் கடினமாக உழைத்து எழுதி, இயக்கி இருக்கிறார். நாங்கள் அனைவரும் இரண்டு ஆண்டு காலம் கஷ்டப்பட்டும்... இஷ்டப்பட்டும்... உழைத்திருக்கிறோம். இது அனைவருக்கும் பிடிக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது. நான் சொல்வதை விட நீங்கள் அனைவரும் பார்த்துவிட்டு சொல்லுங்கள். அதற்காக காத்திருக்கிறேன். 


* உங்களுடைய முதல் ரசிகரை பற்றி...? 


வதந்தி சீசன் 2 வை பார்த்துவிட்டு, அதில் சுந்தரேசனை ரசித்து என்னுடைய ரசிகராக அதிலும் முதல் ரசிகராக யாராக இருந்தாலும் எனக்கு சந்தோசம் தான். மக்களை மகிழ்விக்க வேண்டும் என்பதற்காகத்தான் கடினமாக உழைக்கிறோம். அதனால் மக்கள் என்னை ஏற்றுக் கொண்டால் சந்தோஷம்தான். 


சினிமா இல்லாமல் வெப் சீரிஸ் மூலம் அறிமுகமாகி இருக்கிறீர்களே.. இது குறித்து எப்பவாவது கவலைப்பட்டதுண்டா... ? 


இந்த வாய்ப்பு கூட கிடைக்காமல் எத்தனையோ திறமைசாலிகள் இங்கு கோடம்பாக்கத்தில் சுற்றிக் கொண்டுதான் இருக்கிறார்கள். அதனால் எனக்கு எதில் வாய்ப்பு கிடைத்தாலும் அதில் நடிப்பேன். சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. இருந்தாலும் வாய்ப்பு எங்கு கிடைக்கிறதோ.. அதில் நூறு சதவீதம் உழைத்து என் திறமையை வெளிப்படுத்த வேண்டும்.


வதந்தி சீசன் 2 - மறக்க முடியாதது எது? 


இந்த வெப்சீரிஸில் சுந்தரேசன் அதிகமாக யாரிடம் பேச மாட்டான். அதில் அவனை ஒரு காட்சியில் தலை கீழாக கட்டி போட்டு தொங்க விட்டு இருப்பார்கள். அந்த காட்சியை பற்றி இயக்குநர் சொன்னவுடன் தலைகீழாக நாம் தொங்க வேண்டும் என்பதற்காக சாப்பிட வேண்டாம் என நினைத்து காலையில் இருந்து எதுவும் சாப்பிடாமல் அந்த காட்சிக்காக காத்திருந்தேன். காலையில் எட்டு மணிக்கு வந்த என்னை இரவு எட்டு மணிக்கு கட்டித் தொங்க விட்டார்கள். படப்பிடிப்பு விடிகாலை ஐந்து மணி வரை சென்றது. எல்லோரும் அங்கிருந்து சென்று விட்டார்கள். நான் மட்டும் அங்கேயே இருந்தேன். என்னால் எழுந்திருக்க முடியவில்லை. நான் அழத் தொடங்கி விட்டேன். வலி பின்னி எடுத்தது. அதன் பிறகு என்னை அங்கு பணியாற்றும் ஊழியர்கள் தூக்கி, காரில் உட்கார வைத்து, வீட்டிற்கு அழைத்துச் சென்றனர். அதன் பிறகு ஒரு வாரம் வீட்டில் ஓய்வெடுத்தேன். வலி இருந்தாலும் அதனையும் சுகமாகவே அனுபவித்தேன். இதுவும் மறக்க முடியாத அனுபவமாக இருக்கிறது. 


ஆனால் கிளைமாக்ஸ் காட்சியில் நான் நடித்த போது அங்கு கூடியிருந்த படக் குழுவினர் அனைவரும் நன்றாக நடித்திருக்கிறாய் என கைத்தட்டி பாராட்டினார்.  


சட்டக் கல்லூரியில் சட்ட படிப்பை படித்து வரும் நீங்கள் இந்த இணைய தொடரில் சுந்தரேசன் எனும் பள்ளி மாணவனாக சீருடை அணிந்து நடித்த போது என்ன நினைத்தீர்கள்..? 


பள்ளியில் படிக்கும் போது நண்பர்களுடன் சேர்ந்து அரட்டை அடித்ததுண்டு. ஆனால் சுந்தரேசனை போல் எந்த பெண்ணையும் ஃபாலோ செய்யவில்லை. அதே சமயத்தில் பள்ளியில் படிக்கும் போது நான் சுந்தரேசன் கேரக்டருக்கு நேர் ஆப்போசிட். எப்போதும் பிரண்ட்ஸ்களுடன் ஜாலியாக பேசி அரட்டை அடித்துக் கொண்டே இருப்பேன். அதனால் சுந்தரேசனாக ஸ்கூல் யூனிபார்மை அணிந்து நடித்த போது மகிழ்ச்சியாகவே இருந்தது. 


-----------


அர்ஜூன் சக்கரவர்த்தியின் ராபிட் ஃபயர் 

மொமண்ட்ஸ் 



பெற்றோர்கள் ...


அவர்கள் தான் என்னுடைய முதல் கடவுள் 


நம்பிக்கை ....


எத்தனை தோல்விகள் வந்தாலும் நம்பிக்கை மட்டும் தான் நம்மை கடைசி வரை காப்பாற்றும் ஆயுதம். இந்த நம்பிக்கையை யாரும் ஒருபோதும் கைவிடாதீர்கள். 


ஆக்சன் ஹீரோ ....


அர்ஜூன் சார் இருக்கிறாரே..! சினிமாவில் ஆக்சன் ஹீரோக்கள் அடியாட்களை தூக்கி அடித்து பறக்க விடும்போது சந்தோஷமாக இருந்தது. ஆனால் அதை இங்கு நானே செய்ய வேண்டும் என்ற போது இரட்டிப்பு சந்தோஷம் வரும். அதுபோன்ற படத்தில் நடிக்க வேண்டும் என்ற ஆசையும் இருக்கிறது. 


பிடித்த நடிகர்.... 


விஜய் சார். ரஜினிகாந்த் - கமல்ஹாசன் ஆகியோரிடமிருந்து நிறைய விசயங்களை கற்றுக் கொள்ளலாம். கற்றுக் கொண்டே இருக்கலாம்.  


பிடிச்ச ஹீரோயின்.... 


எல்லாரையும் பிடிக்கும். 


பிடிச்ச செலிபிரிட்டி....


'வதந்தி சீசன் 2'வில் முடக்கத்தான் மணியாக நடித்திருக்கும் யஷ்வந்த்- ஒரு சோசியல் மீடியா செலிபிரிட்டி தான். அவரை எனக்கு மிகவும் பிடிக்கும். 


எந்த போஸ்ட்டை லைக் செய்திருக்கிறீர்கள். ஷேர் செய்திருக்கிறீர்கள்? 


இப்போ வதந்தி சீசன் 2 தொடர்பான போஸ்ட்களை மட்டும் தான் லைக் செய்கிறேன். ஷேர் செய்கிறேன். அதில் என்னுடைய போஸ்ட் ஏதேனும் வருகிறதா? என ஆவலுடன் பார்த்துக் கொண்டிருக்கிறேன்.

SEYON welcomes Senthamizhan SEEMAN

சேயோன்’ திரைப்படத்தில் இணைகிறார் சீமான்!



இயக்குநர், நடிகர் மற்றும் அரசியல் இயக்கத்தின் தலைவர் என பன்முகம் கொண்ட ஆளுமை செந்தமிழன் திரு. சீமான் அவர்கள் ‘சேயோன்’ திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். 


தற்போது மதுரையில் நடைபெற்று வரும் ‘சேயோன்’ படப்பிடிப்பில் கலந்து கொண்டு நடித்து வருகிறார். செந்தமிழன் சீமான் அவர்கள் சேயோனில் இணைந்ததால், இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.


சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடிக்கிறார். சிவகுமார் முருகேசன் இயக்குகிறார். சந்தோஷ் நாராயணன் இசை அமைக்கிறார். அன்பரிவ் சண்டைப் பயிற்சி அளிக்கின்றனர். இந்தப் படத்தை ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் டர்மெரிக் மீடியா இணைந்து உருவாக்கி வருகிறது. திரு. கமல்ஹாசன் மற்றும் ஆர். மகேந்திரன் ஆகிய இருவரும் படத்தைத் தயாரிக்கிறார்கள்.


அடுத்தடுத்து வரும் புதிய புதிய அறிவிப்புகளால் ‘சேயோன்’ படம் மக்களிடையே பெரும் ஆர்வத்தையும், எதிர்பார்ப்பையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.


SEYON welcomes Senthamizhan SEEMAN 


Director, Actor and Political leader Mr. Seeman has joined the cast of the upcoming film SEYON, marking an exciting addition to the highly anticipated project. Seeman has commenced shooting for the film in Madurai, where his presence on the sets has already generated considerable interest and heightened expectations surrounding the film.


Starring Sivakarthikeyan in the lead role, the film is directed by Sivakumar Murugesan, with music composed by Santhosh Narayanan and action by Anbariv. The film is Produced by Thiru. Kamal Haasan and R. Mahendran under the banners of RaajKamal Films International and Turmeric Media.


SEYON is steadily building strong anticipation among audiences and raising expectations with every new update.

அன்பில் அவன்’ செப்டம்பர் 25- முதல், உலகமெங்கும் திரையரங்குகளில்

 *‘அன்பில் அவன்’ செப்டம்பர் 25- முதல், உலகமெங்கும் திரையரங்குகளில் !*



முன்னணி இளம் நடிகர் அசோக் செல்வன் நடிப்பில் உருவாகியுள்ள காதல் திரைப்படமான ‘அன்பில் அவன்’ வரும் செப்டம்பர் 25ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வ போஸ்டர் மூலம் அறிவித்துள்ளது.


ஆர். கார்த்திகேயன் இயக்கத்தில் உருவாகியுள்ள, இப்படம் காதல் கதைக்களத்துடன், அழகான உணர்வுகளையும் கலந்து, சிறந்த பொழுதுபோக்கு திரைப்படமாக உருவாகியுள்ளது. இப்படத்தின் கதையை ‘போர் தொழில்’ பட இயக்குநர் விக்னேஷ் ராஜா எழுதியுள்ளார்.


இப்படத்தில் அசோக் செல்வனுடன் ப்ரீத்தி முகுந்தன், சபு மோன், அப்துல் சமத், கதிர் பாலு, மஹா டெல்லி கணேஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.


கௌதம் ராஜேந்திரன் ஒளிப்பதிவு செய்ய, கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். ஆர்.கே. செல்வா படத்தொகுப்பையும், மணிகண்டன் ஸ்ரீனிவாசன் கலை இயக்கத்தையும் கவனித்துள்ளனர்.


ஐங்கரன் இன்டர்நேஷனல் மற்றும் ஹேப்பி ஹை பிக்சர்ஸ் சார்பில் கே. கருணா மூர்த்தி, அசோக் செல்வன், அபிநயா செல்வம் ஆகியோர் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளனர்.


சமீபத்தில் வெளியான ‘ஆசை வரமே’ பாடலுக்கு கிடைத்துள்ள வரவேற்பைத் தொடர்ந்து, தற்போது வெளியீட்டு தேதியும் அறிவிக்கப்பட்டுள்ளதால் ‘அன்பில் அவன்’ படத்தின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.


வரும் செப்டம்பர் 25ஆம் தேதி இப்படம் திரையரங்குகளில் காதல் கொண்டாட்டத்தை ரசிகர்கள் கொண்டாடலாம்.

ஒன்ஸ் மோர்' திரைப்பட விமர்சனம்:

ஒன்ஸ் மோர்' திரைப்பட விமர்சனம்:


ஒன்ஸ் மோர்' திரைப்படத்தை ஒரு தீவிரமான காதல் கதை என்று அழைப்பது , இப்படத்தை அற்புதமாக விரக்தியடையச் செய்யும் ஒரே ஒரு அம்சத்திற்குள் சுருக்கிவிடுவதாக இருக்கும். அதற்குப் பதிலாக, ரகுவரன் (அர்ஜுன் தாஸ்) என்ற மனிதனின் இந்தக் கதையை, ஒரு கொடூரமான மர்மக் கதையாகப் பார்க்கவே நான் விரும்புகிறேன். நான் அதை அப்படி அழைக்கக் காரணம், நாம் முதலில் சந்திக்கும் ரகுவை, நலமாக உயிருடன் இருக்கும் ஒரு நபர் என்று சொல்வதே கடினம். அவன் நடக்கவும் பேசவும் மட்டுமே திறன் கொண்ட ஒரு சடலம். ஒரு மதகுரு மற்றும் ஒரு மனநல மருத்துவர் ஆகிய இருவருடனும் அவன் தொடர்ந்து உரையாடுவதை நாம் காணும்போது, ​​தன்னை மீண்டும் உயிர்ப்பிக்க அவன் ஆன்மீகம் மற்றும்/அல்லது அறிவியலுடன் போராடுவதை நாம் காண்கிறோம். 'ரகு என்பவன்...' என்று சொல்வதற்குப் பதிலாக, 'ரகு என்பவன்...' என்று சொல்லவே இப்படம் உங்களைப் பழக்குகிறது. இந்த வெறுமைக்குள்தான் அஞ்சலியின் (அதிதி சங்கர்) வருகையை நாம் காண்கிறோம். ரகு உயிரற்றவனாக இருந்தால், அஞ்சலியோ ஒருவேளை அச்சமூட்டும் அளவிற்கு உயிரோட்டத்துடன் இருக்கிறாள். தன்னைச் சுற்றியுள்ளவர்கள் மீது தனக்கு ஏற்படும் தாக்கத்தை அவள் அறிந்திருக்கிறாள். நாம் அந்த நிலைக்கு வருவதற்கு முன்பே, ' சந்தோஷ் சுப்ரமணியம்' படத்தில் வரும் ஜெனிலியாவின் ஒரு வடிவம் என்று தன்னை முதலில் கூறிக்கொள்பவளும் அவள்தான் . ரகுவைப் போன்ற ஒருவரைக் "காப்பாற்ற" வந்தவளாகத் தான் பார்க்கப்படலாம் என்பதையும் அவள் அறிந்திருக்கிறாள்; நாம் அந்த நிலைக்கு வருவதற்கு முன்பே, தனது மீட்பர் மனப்பான்மையையும் அவள் வெளிப்படுத்துகிறாள். ஆனால் அவர்கள் இருவரும் ஒன்றாக இருக்கும்போது, ​​அவனுடைய கல்லூரியில் ஜூனியர் மாணவியான அஞ்சலி அவசரப்பட்டுத் தன் காதலை அவனிடம் வெளிப்படுத்துவதால், திரைப்படம் ஒரு பதட்டமான காதல் காட்சியாக மாறுகிறது. அவன் வாழ்க்கையை வாழக்கூடியதாக மாற்றுவதற்குத் தேவையான பிராணவாயுவை அஞ்சலி அவனுக்குள் செலுத்துவது போலத் தோன்றினாலும், ஒருவேளை அவள் அதைச் சற்றே அதிகமாகச் செலுத்தி, அது ஒரு வெடிப்புக்கு வழிவகுத்துவிடுமோ என்று நாமும் கவலைப்படுகிறோம்.


அவர்களுடைய முற்றிலும் மாறுபட்ட குணாதிசயங்களின் ஆழம் அவர்களின் உடைகளில்கூடப் பிரதிபலிக்கிறது. அவளை மஞ்சள், சிவப்பு மற்றும் ஆரஞ்சு நிறங்கள் நிறைந்த பிரகாசமான, வண்ணமயமான ஆடைகளில் நாம் காண்கிறோம். அவள் கர்வம் பிடித்த படைப்பாளிகள் நிறைந்த ஒரு பிரகாசமான ஸ்டுடியோவில் வேலை செய்கிறாள். இதற்கு நேர் மாறாக, ரகு நேர்த்தியாகத் தலைவாரிக்கொண்டு, சட்டையை முழுவதுமாக உள்ளே செருகிய இறுக்கமான ஆடைகளை அணிந்திருப்பதைக் காண்கிறோம். அந்த முறையான உடையை விட, இந்த வாழ்க்கையால் அவன் கட்டுப்படுத்தப்பட்டிருப்பதைப் போலத் தெரிகிறது. அவனும் ஒரு கட்டுமானத் தளத்தில் வேலை செய்கிறான்; அது அவனது விருப்பமான தொழில் என்பதால் அல்ல, ஆனாலும் அது அவனுக்குப் பொருத்தமாகவே இருக்கிறது, ஏனென்றால் அவனும் ஒரு கட்டுமானப் பணியில் இருக்கிறான் அதிதியின் ஒளிமயமான உலகத்தில் அவன் பொருந்திப் போவதை நாம் காணும் ஒரே தருணம், அதிதி தரப்பிலிருந்து ஒருவர் விலகி, ரகு முயற்சி செய்திருப்பான் என்று நீங்கள் கற்பனை செய்யக்கூடிய ஒன்றைச் செய்ய முயலும்போதுதான். அது எவ்வளவு கொடூரமானதாக இருந்தாலும், தன்னைத்தானே காயப்படுத்திக்கொள்வதில் ஏதோ ஒன்று ரகுவை மீண்டும் உயிர்ப்பிக்கிறது. இந்தத் தருணத்திலிருந்தே, ஒரு காலத்தில் இருந்த ரகுவுக்காக இந்தப் படம் உங்களைத் தயார்படுத்துகிறது.


இறுக்கமான கட்டுப்பாடுகள் விலகுகின்றன, கூடவே அரைகுறைப் புன்னகைகளும் மறைகின்றன. நீல நிற ஆடைகள், தளர்வான லினன் சட்டைகள் மற்றும் கலைந்த தலைமுடி ஆகியவற்றின் கலவையில், அவர் முதல் முறையாக முழுமையாகப் புன்னகைப்பதை நாம் காண்கிறோம். ரகு, இப்போது மற்றொருவருக்கு அஞ்சலியாக இருப்பதை நாம் காண்பது, படத்தின் எழுத்துத் திறமைக்குக் கிடைத்த பாராட்டு. படத்தின் ஆரம்பப் பகுதிகள் சோகம் மற்றும் பதற்றம் நிறைந்த ஒரு மனநிலையை உருவாக்கியிருந்தால், இதற்குப் பிறகு அது மேலும் கவித்துவமான ஒரு தளத்திற்கு மாறுகிறது. முழுவதுமாக வட கேரளாவில் அமைக்கப்பட்டிருக்கும் இந்தப் பகுதி, ' விண்ணைத்தாண்டி வருவாயா' படத்தின் ஜெஸ்ஸியை ஒரு துறவியைப் போலக் காட்டக்கூடிய மற்றொரு கதாபாத்திரத்தையும் அறிமுகப்படுத்துகிறது. 


ஒன்ஸ் மோர்' திரைப்பட விமர்சனம்: ஒரு சுவாரஸ்யமான குழப்பமான காதலில் ஒரு புதிய அர்ஜுன் தாஸ்

வினீத் ஸ்ரீனிவாசன் படத்தின் வெகுளித்தனமான நம்பிக்கைக்கும், கௌதம் மேனனின் மிகவும் குழப்பமான காதல் கதைக்கும் இடையே ஊசலாடும் இந்தப் படம், ஒரு மனிதன், அவனைக் கொன்ற நபர் மற்றும் அவனை மீண்டும் உயிரோடு கொண்டு வந்தவர் ஆகியோரைப் பற்றிய, நேர்த்தியாக விவரிக்கப்பட்ட மற்றும் திறமையாக நடிக்கப்பட்ட ஒரு மர்மக் கதையாகும்.


'ஒன்ஸ் மோர்' திரைப்படத்தின் ஒரு காட்சி


சுருக்கமாக

சலிப்பூட்டுகிறது, ஆனால் ஒரு நல்ல விதத்தில்.

நடிகர்கள்: அர்ஜுன் தாஸ், அதிதி சங்கர், தேவதர்ஷினி, சோனா, டிராவிட் செல்வம்

இயக்குனர்: விக்னேஷ் ஸ்ரீகாந்த்

திரைக்கதை எழுத்தாளர்: விக்னேஷ் ஸ்ரீகாந்த்

மொழி: தமிழ்

'ஒன்ஸ் மோர்' திரைப்படத்தை ஒரு தீவிரமான காதல் கதை என்று அழைப்பது , இப்படத்தை அற்புதமாக விரக்தியடையச் செய்யும் ஒரே ஒரு அம்சத்திற்குள் சுருக்கிவிடுவதாக இருக்கும். அதற்குப் பதிலாக, ரகுவரன் (அர்ஜுன் தாஸ்) என்ற மனிதனின் இந்தக் கதையை, ஒரு கொடூரமான மர்மக் கதையாகப் பார்க்கவே நான் விரும்புகிறேன். நான் அதை அப்படி அழைக்கக் காரணம், நாம் முதலில் சந்திக்கும் ரகுவை, நலமாக உயிருடன் இருக்கும் ஒரு நபர் என்று சொல்வதே கடினம். அவன் நடக்கவும் பேசவும் மட்டுமே திறன் கொண்ட ஒரு சடலம். ஒரு மதகுரு மற்றும் ஒரு மனநல மருத்துவர் ஆகிய இருவருடனும் அவன் தொடர்ந்து உரையாடுவதை நாம் காணும்போது, ​​தன்னை மீண்டும் உயிர்ப்பிக்க அவன் ஆன்மீகம் மற்றும்/அல்லது அறிவியலுடன் போராடுவதை நாம் காண்கிறோம். 'ரகு என்பவன்...' என்று சொல்வதற்குப் பதிலாக, 'ரகு என்பவன்...' என்று சொல்லவே இப்படம் உங்களைப் பழக்குகிறது.


நீங்கள் இதையும் விரும்பலாம்

'பபிதா சிங் ரிப்போர்டிங்' திரைப்பட விமர்சனம்: சிறு நகர ஆணாதிக்கத்தின் விசாரணையை நிமிஷா சஜயன் கச்சிதமாக வெளிப்படுத்தியுள்ளார்.


இந்த வெறுமைக்குள்தான் அஞ்சலியின் (அதிதி சங்கர்) வருகையை நாம் காண்கிறோம். ரகு உயிரற்றவனாக இருந்தால், அஞ்சலியோ ஒருவேளை அச்சமூட்டும் அளவிற்கு உயிரோட்டத்துடன் இருக்கிறாள். தன்னைச் சுற்றியுள்ளவர்கள் மீது தனக்கு ஏற்படும் தாக்கத்தை அவள் அறிந்திருக்கிறாள். நாம் அந்த நிலைக்கு வருவதற்கு முன்பே, ' சந்தோஷ் சுப்ரமணியம்' படத்தில் வரும் ஜெனிலியாவின் ஒரு வடிவம் என்று தன்னை முதலில் கூறிக்கொள்பவளும் அவள்தான் . ரகுவைப் போன்ற ஒருவரைக் "காப்பாற்ற" வந்தவளாகத் தான் பார்க்கப்படலாம் என்பதையும் அவள் அறிந்திருக்கிறாள்; நாம் அந்த நிலைக்கு வருவதற்கு முன்பே, தனது மீட்பர் மனப்பான்மையையும் அவள் வெளிப்படுத்துகிறாள்.




ஆனால் அவர்கள் இருவரும் ஒன்றாக இருக்கும்போது, ​​அவனுடைய கல்லூரியில் ஜூனியர் மாணவியான அஞ்சலி அவசரப்பட்டுத் தன் காதலை அவனிடம் வெளிப்படுத்துவதால், திரைப்படம் ஒரு பதட்டமான காதல் காட்சியாக மாறுகிறது. அவன் வாழ்க்கையை வாழக்கூடியதாக மாற்றுவதற்குத் தேவையான பிராணவாயுவை அஞ்சலி அவனுக்குள் செலுத்துவது போலத் தோன்றினாலும், ஒருவேளை அவள் அதைச் சற்றே அதிகமாகச் செலுத்தி, அது ஒரு வெடிப்புக்கு வழிவகுத்துவிடுமோ என்று நாமும் கவலைப்படுகிறோம்.


அவர்களுடைய முற்றிலும் மாறுபட்ட குணாதிசயங்களின் ஆழம் அவர்களின் உடைகளில்கூடப் பிரதிபலிக்கிறது. அவளை மஞ்சள், சிவப்பு மற்றும் ஆரஞ்சு நிறங்கள் நிறைந்த பிரகாசமான, வண்ணமயமான ஆடைகளில் நாம் காண்கிறோம். அவள் கர்வம் பிடித்த படைப்பாளிகள் நிறைந்த ஒரு பிரகாசமான ஸ்டுடியோவில் வேலை செய்கிறாள். இதற்கு நேர் மாறாக, ரகு நேர்த்தியாகத் தலைவாரிக்கொண்டு, சட்டையை முழுவதுமாக உள்ளே செருகிய இறுக்கமான ஆடைகளை அணிந்திருப்பதைக் காண்கிறோம். அந்த முறையான உடையை விட, இந்த வாழ்க்கையால் அவன் கட்டுப்படுத்தப்பட்டிருப்பதைப் போலத் தெரிகிறது. அவனும் ஒரு கட்டுமானத் தளத்தில் வேலை செய்கிறான்; அது அவனது விருப்பமான தொழில் என்பதால் அல்ல, ஆனாலும் அது அவனுக்குப் பொருத்தமாகவே இருக்கிறது, ஏனென்றால் அவனும் ஒரு கட்டுமானப் பணியில் இருக்கிறான்.


A still from the film

திரைப்படத்திலிருந்து ஒரு காட்சி

அதிதியின் ஒளிமயமான உலகத்தில் அவன் பொருந்திப் போவதை நாம் காணும் ஒரே தருணம், அதிதி தரப்பிலிருந்து ஒருவர் விலகி, ரகு முயற்சி செய்திருப்பான் என்று நீங்கள் கற்பனை செய்யக்கூடிய ஒன்றைச் செய்ய முயலும்போதுதான். அது எவ்வளவு கொடூரமானதாக இருந்தாலும், தன்னைத்தானே காயப்படுத்திக்கொள்வதில் ஏதோ ஒன்று ரகுவை மீண்டும் உயிர்ப்பிக்கிறது. இந்தத் தருணத்திலிருந்தே, ஒரு காலத்தில் இருந்த ரகுவுக்காக இந்தப் படம் உங்களைத் தயார்படுத்துகிறது.


இறுக்கமான கட்டுப்பாடுகள் விலகுகின்றன, கூடவே அரைகுறைப் புன்னகைகளும் மறைகின்றன. நீல நிற ஆடைகள், தளர்வான லினன் சட்டைகள் மற்றும் கலைந்த தலைமுடி ஆகியவற்றின் கலவையில், அவர் முதல் முறையாக முழுமையாகப் புன்னகைப்பதை நாம் காண்கிறோம். ரகு, இப்போது மற்றொருவருக்கு அஞ்சலியாக இருப்பதை நாம் காண்பது, படத்தின் எழுத்துத் திறமைக்குக் கிடைத்த பாராட்டு. படத்தின் ஆரம்பப் பகுதிகள் சோகம் மற்றும் பதற்றம் நிறைந்த ஒரு மனநிலையை உருவாக்கியிருந்தால், இதற்குப் பிறகு அது மேலும் கவித்துவமான ஒரு தளத்திற்கு மாறுகிறது. முழுவதுமாக வட கேரளாவில் அமைக்கப்பட்டிருக்கும் இந்தப் பகுதி, ' விண்ணைத்தாண்டி வருவாயா' படத்தின் ஜெஸ்ஸியை ஒரு துறவியைப் போலக் காட்டக்கூடிய மற்றொரு கதாபாத்திரத்தையும் அறிமுகப்படுத்துகிறது.


நீங்கள் இதையும் விரும்பலாம்

'பெத்லஹேம் குடும்பா யூனிட்' திரைப்பட விமர்சனம்: நிவின் பாலி மற்றும் மமிதா பைஜுவின் வசீகரம், காலத்தால் அழியாத இந்த வயது வித்தியாசமுள்ள காதலை இயக்குகிறது.

'


இதுவரை படம் யூகிக்கக்கூடிய பாதையில் பயணித்தாலும், ' ஒன்ஸ் மோர்' திரைப்படம், அற்புதமாக எரிச்சலூட்டும் ஒரு பகுதிக்குள் திசைமாறுகிறது. இந்தப் புதிய கதாபாத்திரம், படத்தை ஒரு புதுவிதமான தீவிரத்துடன் உணர வைக்கிறது. அவளை இந்த நிலைக்கு ஆளாக்கிய கைவிடப்பட்ட உணர்வுகளின் சிக்கல்களை நீங்கள் புரிந்துகொண்டாலும், அவள் ஏன் இப்படி இருக்கிறாள் என்று தலையைச் சொறிந்துகொள்ளவும் தோன்றுகிறது. முழு பழங்குடியினரையே படுகொலை செய்த திரைப்பட வில்லன்கள் கூட இவளை விடக் குறைவான கொடூரமானவர்களாகவே தோன்றுகிறார்கள். அதுவும் இந்தப் படம் இவ்வளவு சிறப்பாகச் செயல்படுவதற்கு ஒரு காரணம்.


தனது மிகவும் நேர்மையான பாத்திரங்களில் ஒன்றான இதில், அர்ஜுன் தாஸ் இரண்டு ரகுவரன் பாத்திரங்களிலும் பிரித்தறிய முடியாதபடி பொருந்திப் போகிறார். அவர் எரிச்சலான பாத்திரத்தையும், மகிழ்ச்சியான காதலன் பாத்திரத்தையும் ஒரே மாதிரியாகச் சிறப்பாகக் கையாள்கிறார். எளிதில் ஒப்பிடக்கூடிய ஒரு பாத்திரத்தை, ஒரு புதிய வழியில் ஏற்று நடிக்கும் அதிதியும் அதே அளவு சிறப்பாக நடித்துள்ளார். வினீத் ஸ்ரீனிவாசன் படங்களின் அப்பாவித்தனமான நம்பிக்கைக்கும் (ஹேஷமின் இசை அபாரமானது) மற்றும் மிகவும் குழப்பமான கௌதம் மேனன் காதல் படத்திற்கும் இடையில் ஊசலாடும் இந்தப் படம், ஒரு மனிதன், அவனைக் கொன்ற நபர் மற்றும் அவனை மீண்டும் உயிருடன் கொண்டு வந்தவர் ஆகியோரைப் பற்றிய, நேர்த்தியாக விவரிக்கப்பட்ட மற்றும் திறமையாக நடிக்கப்பட்ட ஒரு மர்மக் கதையாகும் 

என்ன விலை’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா

 *'என்ன விலை’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா!*



தேசிய விருது பெற்ற திரைப்பட இயக்குநர் சஜீவ் பழூர் எழுதி இயக்கியுள்ள ‘என்ன விலை’ திரைப்படத்தை ஜித்தேஷ் விஸ்வம்பரன் மற்றும் அனுகோபால் வேணுகோபாலன் ஆகியோர் கலாமயா சினிவெர்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரித்துள்ளனர். இப்படத்தில் கருணாஸ், நிமிஷா சஜயன் உள்ளிட்டப் பலர் நடித்துள்ள இந்த திரைப்படம் செப்டம்பர் 17 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இதன் டிரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற்றது. 


தயாரிப்பாளர் ஜித்தேஷ் விஸ்வாம்பரன், "பல சிறிய விஷயங்களுக்கு இந்த படம் முன்னுதாரணமாக இருக்கும். படக்குழுவினரோடு ராமேஸ்வரம் மக்களும் கடுமையான உழைப்பு இந்த படத்திற்கு கொடுத்திருக்கிறார்கள். அதற்கான பலனை நீங்கள் தருவீர்கள் என்று நம்புகிறேன்".


நடிகர் கான்ஸ்டபிள் சுந்தரம், "ஜூனியர் ஆர்ட்டிஸ்டாக இருந்த எனக்கு இந்த படத்தில் வாய்ப்பளித்த இயக்குநருக்கு நன்றி. நடிகர் கருணாஸ் பெரிய நடிகர் என்ற அலட்டல் இல்லாமல் எங்களிடம் இயல்பாக பழகினார். படம் நன்றாக வந்திருக்கிறது".


நடிகர் பிரதீப், "இது ஒரு அருமையான படம். இதில் வாய்ப்பு கொடுத்த இயக்குநர், தயாரிப்பாளர், அண்ணன் கருணாஸூக்கு நன்றி. படம் வெற்றி பெற வேண்டி கொள்கிறேன்".


நடிகர் தர்ஷன், "இந்தப் படத்தில் எனக்கு ரைட்டர் கேரக்டர். அனுப்பி வைத்த எல்லா விருது விழாக்களிலும் இந்தப் படம் விருது வென்றது. மிகச்சிறந்த வெற்றி படமாக இது மாற வேண்டும். அனைவரும் திரையரங்குகளில் வந்து படம் பாருங்கள். படக்குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துக்கள்".


நடிகை நிரோஷா, "இந்தப் படத்தில் வாய்ப்பு கொடுத்த இயக்குநருக்கும் தயாரிப்பாளருக்கும் நன்றி. நடிப்பு என்று தெரியாமல் இயல்பானதாக இருக்க வேண்டும் என்று சொல்லிக் கொடுத்தார். உங்கள் அனைவரின் ஆதரவும் தேவை". 


நடிகர் கவி, "பல நாடுகளின் விருது விழாக்களில் இந்த படம் திரையிடப்பட்டு விருதுகளை அள்ளியது. எப்போது நம் நாட்டு மக்களுடன் இந்த படத்தை பார்க்க இருக்கிறோம் என்று ஆவலுடன் காத்திருந்தோம். மக்களுடன் இணைந்து இந்த படத்தை கொண்டாட இருக்கிறோம். முக்கியமான படத்தில் எனக்கு வாய்ப்பு அளித்த தயாரிப்பாளருக்கும் இயக்குநருக்கும் படக்குழுவினருக்கும் நன்றி".


நடிகர் பாண்டி, "ரொம்ப நாள் இந்தப் படத்திற்காக காத்திருந்தோம். வாய்ப்பு கொடுத்த தயாரிப்பாளர், இயக்குநருக்கு நன்றி. 'பசங்க', 'கோலி சோடா' படங்களை தாண்டி பெயர் எடுக்க வேண்டும் என ஒவ்வொரு படத்திலும் எதிர்பார்த்தேன். அது இந்த படத்தில் நடக்கும் என நம்புகிறேன். உங்கள் அனைவரது ஆதரவும் தேவை". 


நடிகை சாஷா, "இயக்குநர் சஜீவ் சார், தயாரிப்பாளர் ஜித்தேஷ் சாருக்கு நன்றி. இந்த படத்தில் ஹீரோவின் தங்கை மணிமேகலை என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். கிராமத்துக் கதையில் நடிக்க வேண்டும் என்ற எனது கனவு இந்த படம் மூலம் நிறைவேறி இருக்கிறது. ராமேஸ்வரத்தில் இந்த படம் படமாக்கப்பட்டுள்ளது. எல்லோருமே கஷ்டப்பட்டு உழைத்திருக்கிறோம். 13 விருது விழாக்களில் இந்த படம் விருது வென்று இருக்கிறது. எல்லோரும் திரையரங்குகளில் பார்த்துவிட்டு ஆதரவு கொடுங்கள்".


இயக்குநர் சஜீவ் பழூர், " 'நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்', 'சூது கவ்வும்', 'பண்ணையாரும் பத்மினியும்' போன்ற படங்கள் சின்ன கருவில் இருந்து கதையானது. தமிழ் எனக்கு மிகவும் பிடிக்கும் என்பதால் அதில் 'என்ன விலை' படத்தை இயக்கியுள்ளேன். படம் பார்த்துவிட்டு சொல்லுங்கள் ".


நடிகர் கருணாஸ், "கடந்த 2001 ஆம் ஆண்டு ராமேஸ்வரத்தில் பாலா அண்ணன் இயக்கத்தில் லொடுக்கு பாண்டியாக திரையுலகில் எனது பயணத்தை ஆரம்பித்தேன். நான் அதிகம் மலையாள படங்களை விரும்பி பார்ப்பேன். அதனால் மலையாள ரைட்டர், இயக்குநர்கள், டெக்னீஷியன்ஸ் உடன் இணைந்து ஒரு படமாவது பணிபுரிய ஆசைப்பட்டேன். அது இப்போது நடந்திருக்கிறது. இந்த படம் சாமானியர்களை பற்றியது. அதனால் தான் இயல்பான நடிகர்களை தேர்வு செய்துள்ளார். எனக்கு இன்று பெரிதாக வியாபாரம் இல்லை. இருந்தாலும் என்னை நம்பி ஏழு கோடி ரூபாய் தயாரிப்பாளர்கள் இந்த படத்தில் முதலீடு செய்திருக்கிறார்கள். அந்த அளவுக்கு அவர்களுக்கு கதை மீது நம்பிக்கை. இந்திய சினிமாவில் இதுவரை யாரும் எழுப்பாத ஒரு கேள்வியை இந்த படத்தில் இயக்குநர் சஜீவ் எழுப்பி இருக்கிறார். எனது இருபது ஆண்டு கால ஆசையை இந்த படம் நிறைவேற்றி இருக்கிறது. 


அட்வகேட் கதாபாத்திரத்தில் நிமிஷா அற்புதமாக நடித்திருக்கிறார். எல்லா கதாபாத்திரங்களுக்கும் பொருத்தமானவர்களை இயக்குநர் திறமையாக தேர்வு செய்து இருக்கிறார். இந்த திரைப்படம் வெளியாவதற்கு முன்பே நெட்ஃபிலிக்ஸ் போன்ற முன்னணி ஓடிடி தளம் விலைக்கு வாங்கி இருப்பது மகிழ்ச்சி. 'நந்தா' படத்திற்கு பிறகு என் மனதிற்கு மிகவும் நெருக்கமான திரைப்படம் இது. இத்தனை ஆண்டுகால திரைப்பயணத்தில் என்னுடைய நடிப்பை பார்த்து என் மனைவி முதன் முதலாக இந்த படத்தில் தான் பாராட்டி இருக்கிறார். நிமிஷா மேடமும் என்னுடைய நடிப்பை பார்த்து சிலிர்த்து கட்டிப்பிடித்து கன்னத்தில் முத்தம் கொடுத்தார். நிச்சயம் இந்த படமும் என்னுடைய கதாபாத்திரமும் உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் என்று உறுதியாக நம்புகிறேன்" என்றார்.

Ulaganayagan Kamal Haasan Watches ‘Bethlehem Kudumba Unit’ and Appreciates the Team in Chennai*

 *‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ படக்குழுவினரை பாராட்டிய உலகநாயகன் கமல்ஹாசன் !!*



*‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ திரைப்படக் குழுவினர் சமீபத்தில் சென்னை அலுவலகத்தில் உலகநாயகன் கமல்ஹாசனை சந்தித்து சிறப்பான தருணத்தை பகிர்ந்து கொண்டனர்.*


இந்த திரைப்படத்தை ஏற்கனவே பார்த்திருந்த கமல்ஹாசன், படக்குழுவினரின் ஒட்டுமொத்த பணியையும் வெகுவாக பாராட்டியதுடன், அவர்களின் முயற்சிகளுக்கும் படத்தின் சுவாரஸ்யமான திரை வடிவமைப்பிற்கும் தனது பாராட்டுகளைத் தெரிவித்தார். நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களுடன் தனது வாழ்த்துகளையும் ஊக்கமளிக்கும் வார்த்தைகளையும் அவர் பகிர்ந்து கொண்டது படக்குழுவினருக்கு மறக்க முடியாத தருணமாக அமைந்தது.


இந்த சந்திப்பில் திரைப்படத்தின் இயக்குநர் கிரிஷ் ஏ.டி., நடிகர்கள் திலீஷ் போத்தன், ஃபகத் பாசில், கிரண் ஜோஸி, சங்கீத் பிரதாப் மற்றும் உன்னிமாயா ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும், ஃபியூச்சர் ரன் அப் பிலிம்ஸ் நிறுவனத்தின் விநியோகஸ்தர்களான அருண் நாராயணன் மற்றும் அனுப் குமார் ஆகியோரும் உடனிருந்தனர்.


பாவனா ஸ்டுடியோஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’, மலையாளத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று, குறிப்பிடத்தக்க வெற்றியைப் பதிவு செய்துள்ளது. தற்போது தமிழில் டப் செய்யப்பட்டு, தமிழ் ரசிகர்களின் கவனம் ஈர்த்து தனது ரசிகர் வட்டத்தை உருவாக்கி வருகிறது


இந்த நிலையில், உலகநாயகன் கமல்ஹாசன் படத்தை பார்த்து படக்குழுவினரை பாராட்டியது, ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ படத்தின் பயணத்தில் மேலும் ஒரு சிறப்பான தருணமாக அமைந்துள்ளது. உலகநாயகன் பாராட்டும் ஊக்கமளிக்கும் வார்த்தைகளும் ஒட்டுமொத்த படக்குழுவினருக்கும் மிகுந்த மகிழ்ச்சியை அளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


உலகநாயகன் கமல்ஹாசன் மற்றும் ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ படக்குழுவினரின் இந்த சந்திப்பு, திரைப்படத்தின் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவருக்கும் மறக்க முடியாத ஒரு சிறப்பு நிகழ்வாக அமைந்துள்ளது


*Ulaganayagan Kamal Haasan Watches ‘Bethlehem Kudumba Unit’ and Appreciates the Team in Chennai*


The team of ‘Bethlehem Kudumba Unit’ recently had a special and memorable interaction with Ulaganayagan Kamal Haasan at his office in Chennai.


Kamal Haasan had watched the film and appreciated the work of the entire team, congratulating them for their efforts and the film’s engaging presentation. The interaction turned into a memorable moment for the team, with Kamal Haasan sharing his appreciation and words of encouragement with the cast and crew.


The meeting was attended by the film’s director Girish A.D., actors Dileesh Pothan, Fahadh Faasil, Kiran Josey, Sangeeth Prathap and Unnimaya, along with Future Runup Films Distributors Arun Narayanan and Anup Kumar.


Produced by Bhavana Studios, Bethlehem Kudumba Unit has already emerged as a major success in Malayalam, receiving strong appreciation from audiences and establishing itself as one of the notable Malayalam releases. The film is now reaching Tamil audiences as well, where it continues to create awareness and build its audience following.


Kamal Haasan’s appreciation of the film and the team adds another special moment to the film’s journey. His words of encouragement have brought immense happiness to the entire team as they continue their journey with the film.


The memorable interaction between Ulaganayagan Kamal Haasan and the ‘Bethlehem Kudumba Unit’ team marks a special occasion for the film and its entire cast and crew.

இளையராஜா, ராமராஜன் இணையும் 25வது படம்

 இளையராஜா, ராமராஜன் இணையும் 25வது படம்


"கடவுள் தந்த பரிசு" 


திரையுலகில் தனது 50வது வருடத்தில் ராஜநடை போட்டு, பவனி வரும் இசைஞானி இளையராஜா, மக்கள் நாயகன் ராமராஜன் இணையும் புதிய திரைப்படத்திற்கு 'கடவுள் தந்த பரிசு' என்று பெயரிடப்பட்டுள்ளது. 


புதுமுக இயக்குனர் காசிமாயன் கதை, திரைக்கதை எழுதி, இயக்குகிறார். நகைச்சுவை பகுதியை ராஜகோபால் எழுதுகிறார். வசனத்தை ராஜகோபால், எம்.அடைக்கலம் இருவரும் எழுதுகிறார்கள்.


செந்தில், கோவை சரளா இருவரும் நீண்ட இடைவெளிக்குப் பிறகு, ராமராஜனுடன் இணைந்து, இந்த படத்தில் காமெடியில் கலக்க உள்ளார்கள்.


இசைஞானியும், மக்கள் நாயகனும் மீண்டும் எப்போது இணைவார்கள் என்று ஏங்கும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில், பாடல் பதிவுடன் பணிகள் தொடங்கியது. அதை தொடர்ந்து படப்பிடிப்பிற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.


மக்கள் தொடர்பு கோவிந்தராஜ்.


@GovindarajPro

பெத்லகேம் குடும்ப யூனிட்’ திரைப்பட விமர்சனம்

 பெத்லகேம் குடும்ப யூனிட்’ திரைப்பட விமர்சனம் 



இறந்த காதலியின் நினைவில் வாடும் மத்திய வயதுக்காரரான நிவின் பாலியின் பக்கத்து வீட்டில் கல்லுரி மாணவியான மமிதா பைஜு தனது குடும்பத்துடன் குடியேறுகிறார். இருவரும் நட்பாக பழக, இருவர் மனதிலும் காதல் மலர்கிறது. இவர்களது காதல் உணர்வுகளையும், அதன் மூலம் நடக்கும் களேபரங்களையும் மனம் தொடும் விதத்திலும், சிரித்து மகிழியும்படியும் சொல்வது தான் ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’.


காதலிக்கும் தனக்கும் இருக்கும் வயது வித்தியாசதை தன் உடல்மொழி மூலம் வெளிப்படுத்துவது, குறும்புக்கார இளம்பெண்ணின் செயல்களினால் வெட்கப்படுவது, மீண்டும் ஒரு காதல் தோல்வியினால் கலங்குவது, என்று பல்வேறு உணர்வுகளை மிக சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கும் நிவின் பாலி, முழு படத்தையும் தன் பன்பட்ட நடிப்பின் மூலம் சுமந்திருக்கிறார்.


குறும்புக்கார கல்லூரி மாணவியாக நடித்திருக்கும் மமிதா பைஜு தனது சுட்டித்தனமான நடிப்பு மற்றும் உடல்மொழி மூலம் கவர்கிறார். காதலனுக்கும் தனக்கும் வயது வித்தியாசம் அதிகம் என்றாலும், அதைப் பற்றி யோசிக்காமல் காதலை அவர் கையாளும் விதம் ரசிக்க வைக்கிறது.


நிவின் பாலியின் தம்பியாக நடித்திருக்கும் சங்கீத் பிரதாப், பிந்து பணிக்கர், சுரேஷ் கிருஷ்ணா, வினய் ஃபோர்ட், ஸ்ரிந்தா, ஷமீர் கான், மீனாட்சி ரவீந்திரன், அயசங்கர் கரிமுட்டம், தங்கம் மோகன், வெட்டுக்கிளி பிரகாஷ் என அனைத்து நடிகர்களும் கதாபாத்திரங்களுக்கு பொருத்தமான தேர்வாக இருப்பதோடு, தங்களது திரையிருப்பு மூலம் திரைக்கதைக்கு பெரும் பலம் சேர்த்திருக்கிறார்கள்.


ஒளிப்பதிவாளர் அஜ்மல் சாபு, கதை பயணிக்கும் நகரம், அங்கிருக்கும் தேவாலயம், அருகருகே இருக்கும் வீடுகள் என்று காதலையும், காமெடியையும் கடந்து கதைக்களத்தையும் ரசிக்க வைத்திருக்கிறார்.


விஷ்ணு விஜய் இசையமைப்பில் பாடல்களும், பின்னணி இசையும் காதல் உணர்வுகளுக்கு கூடுதல் பலம் சேர்த்திருக்கிறது. வசனங்களால் சொல்ல முடியாத பல உணர்வுகளை இசை மூலம் சொல்லியிருக்கிறார்.


ஒரு காதல் கதையை இப்படியும் சொல்லலாம், என்ற புதிய பாதையில் பயணித்திருக்கும் படத்தொகுப்பாளர் ஆகாஷ் ஜோசப் வர்கீஸின் பணி சிறப்பு.


கிரிஷ்.ஏ.டி மற்றும் கிரண் ஜோசி ஆகியோரது கதை, திரைக்கதை எளிமையானதாக இருந்தாலும், அதில் சொல்லப்பட்டிருக்கும் உணர்வுப்பூர்வமான விசயங்கள் வலிமையானதாக இருக்கிறது. அதிலும் அதை வழக்கமான பாணியில் சொல்லாமல் சிரிக்கும்படியும், காதலை மனம் தொடும்படியும் சொல்லியிருப்பது படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்திருக்கிறது.


இயக்குநர் கிரிஷ்.ஏ.டி, சாதாரணமான காதல் கதையை, சாதாரணமான காட்சியமைப்பின் மூலம் சொல்லியிருந்தாலும், அவை பார்வையாளர்கள் மனங்களை தொடும்படியும், ரசித்து மகிழும்படியும் சொல்லியிருக்கிறார்.


மொத்தத்தில், ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ மக்களை கொண்டாட வைக்கும்.


ரேட்டிங் 4/5