-

Loading latest news...

துருவ் விக்ரம் நடிக்கும் புதிய படம் ‘ஜாக்கி – நோ ரீடேக்ஸ் அலவுட் (Jackie - No Retakes Allowed) ’!!*

 *துருவ் விக்ரம் நடிக்கும் புதிய படம் ‘ஜாக்கி – நோ ரீடேக்ஸ் அலவுட் (Jackie - No Retakes Allowed) ’!!* 



மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் துருவ் விக்ரம் நடிக்கும் புதிய திரைப்படத்திற்கு ‘ஜாக்கி – நோ ரீடேக்ஸ் அலவுட்’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. கரண் அரவிந்த் குமார் இயக்கும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.


தெலுங்கு திரையுலகில் முன்னணி பான் இந்தியா தயாரிப்பு நிறுவனமாக வலம் வரும் மைத்ரி மூவி மேக்கர்ஸ், தமிழ் சினிமாவில் தனது நான்காவது படைப்பாக இப்படத்தை தயாரிக்கிறது. நவீன் யெர்னேனி மற்றும் ஒய். ரவி சங்கர் இணைந்து தயாரிக்கும் இப்படத்தில், மாறுபட்ட கதாபாத்திரங்களிலும் அழுத்தமான நடிப்பிலும் கவனம் ஈர்த்து வரும் துருவ் விக்ரம், முதல் முறையாக ரசிகர்களை அதிக அளவில் கவரும் வகையிலான கமர்ஷியல் கதைக்களத்தில் நடிக்கவுள்ளார்.


படத்தின் தலைப்புடன் வெளியான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் துருவ் விக்ரம் இதுவரை இல்லாத வகையில் ஸ்டைலிஷான மாஸ் தோற்றத்தில் காட்சியளிக்கிறார். நேரடி ஆக்‌ஷன் காட்சிகளின் தன்மையுடன் காமிக் புக் பாணியிலான காட்சியமைப்பும் இணைந்திருக்கும் இந்த போஸ்டர், படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.


புதிய போஸ்டரில் பிரவுன் நிற உடையில், வித்தியாசமான ஹேர்ஸ்டைலுடன் துருவ் விக்ரம் தோன்றுகிறார். அவரது தீவிரமான பார்வையும் ஆக்ரோஷமான உடல்மொழியும் கதாபாத்திரத்தின் தன்மையை வெளிப்படுத்துகின்றன. குறிப்பாக முன்னோக்கி நீட்டியிருக்கும் அவரது கை, போஸ்டருக்கு அதிரடியான தோற்றத்தை கொடுக்கிறது. ‘No Retakes Allowed’ என்ற டேக்லைனும் படத்தின் ஆக்‌ஷன் பின்னணியை உணர்த்துகிறது.


ஃபர்ஸ்ட் லுக் ‘ஜாக்கி’ திரைப்படம் ஸ்டைலிஷான ஆக்‌ஷன் கமர்ஷியல் என்டர்டெய்னராக உருவாகி வருவதையும், துருவ் விக்ரமின் புதிய திரைமுகத்தையும் அறிமுகப்படுத்துகிறது.


இப்படத்திற்கு தேசிய விருது பெற்ற இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். விக்கி ஒளிப்பதிவு செய்ய, ஜெயசூர்யா எஸ் படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்கிறார். ஜி.எம். சேகர் தயாரிப்பு வடிவமைப்பாளராக பணியாற்றுகிறார். அதிரடி சண்டைக் காட்சிகளை பிரபல ஸ்டண்ட் இயக்குநர் விக்ரம் மோர் வடிவமைக்கிறார்.


மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தை கரண் அரவிந்த் குமார் இயக்குகிறார். துருவ் விக்ரம் கதாநாயகனாக நடிக்கிறார். சந்தோஷ் நாராயணன் – இசை, விக்கி – ஒளிப்பதிவு, ஜெயசூர்யா எஸ் – படத்தொகுப்பு, ஜி.எம். சேகர் –தயாரிப்பு வடிவமைப்பாளர், விக்ரம் மோர் – சண்டைப்பயிற்சி என சிறப்பான தொழில்நுட்பக் குழு பணியாற்றுகிறது. இப்படத்தின் மக்கள் தொடர்புப் பணிகளை யுவராஜ் மேற்கொள்கின்றனர். மார்க்கெட்டிங் பணிகளை ஃபர்ஸ்ட் ஷோ நிறுவனம் கவனிக்கிறது.


*Mythri Movie Makers' New Film, Featuring Dhruv Vikram, Directed by Karan Arvind Kumar Is Titled 'Jackie - No Retakes Allowed', First Look Poster Promises Stylish Action Extravaganza.*

 

Leading Pan India Production House Mythri Movie Makers continues to expand its footprint beyond Telugu cinema, and the production house is now making its mark in Tamil with an exciting fourth venture, starring Kollywood Star Dhruv Vikram. Produced by Naveen Yerneni and Y Ravi Shankar, the film is directed by Karan Arvind Kumar. Dhruv, who has established himself with performances in diverse and intense roles, is now taking up a commercial subject that is designed to connect with a broader section of the audience.

 

The makers today unveiled the title along with the film’s first-look poster. Titled 'Jackie- No retakes allowed', the first look presents Dhruv Vikram in a larger-than-life mass avatar. The poster blends a gritty live-action treatment with a stylish comic-book-inspired aesthetic, instantly creating curiosity around the character and the world of the stylish action extravaganza.

 

Dhruv appears in a stylish brown outfit, sporting a distinctive hairstyle and an intense expression. His fierce posture adds to the character’s commanding presence, while his prominently extended fist gives the poster a dynamic, action-packed feel. The tagline “No Retakes Allowed” further amplifies the film’s edgy tone.

 

The first look succeeds in establishing Jackie as a stylish and action-driven commercial entertainer while offering a peek of Dhruv Vikram’s powerful new screen persona.

 

The film also boasts an impressive technical crew. National Award-winning composer Santhosh Narayanan is scoring the music, while Viki is handling the cinematography. Jayasuriya is responsible for the editing, with GM Sekhar overseeing production design. Renowned action choreographer Vikram Mor is designing the film’s action sequences.

 

*Cast* : Dhruv Vikram

 

*Technical Crew:*


Producers: Naveen Yerineni & Ravi Shankar Yalamanchili

Banner: Mythri Movie Makers

Director: Karan Arvind Kumar

Music: Santhosh Narayanan

DOP: Viki

Editing: Jayasuriya S

Production Design: GM Sekhar

Action: Vikram Mor

PRO: Yuvraaj

Marketing : First Show

பிரபாஸ் போன்ற நல்ல மனிதரை பார்ப்பது அரிது” – ஜிதின் குலாட்டி

 *“பிரபாஸ் போன்ற நல்ல மனிதரை பார்ப்பது அரிது” – ஜிதின் குலாட்டி*



தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான பிரபாஸ், அடுத்தடுத்து பிரம்மாண்டமான படங்களில் நடித்து வருவதன் மூலம் இந்திய அளவில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கி வருகிறார். அந்த வகையில், தற்போது ‘ஃபௌசி’ திரைப்படத்தில் நடிகர் ஜிதின் குலாட்டியுடன் இணைந்து நடித்து வருகிறார். இந்நிலையில், பிரபாஸுடன் சுமார் இரண்டு ஆண்டுகளாகப் பணியாற்றி வரும் அனுபவம் குறித்து ஜிதின் குலாட்டி, Variety India தளத்திற்கு அளித்துள்ள பிரத்யேக பேட்டியில் பல சுவாரஸ்யமான தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.


பிரபாஸ் மிகவும் தாராளமானவர் என்றும், சிறந்த மனிதர் என்றும் தான் ஏற்கனவே கேள்விப்பட்டிருந்ததாகவும், ஆனால் அவருடன் நேரடியாகப் பணியாற்றத் தொடங்கிய பிறகு அந்த வார்த்தைகள் உண்மை என்பதை அனுபவப்பூர்வமாக உணர்ந்ததாகவும் ஜிதின் குலாட்டி தெரிவித்துள்ளார். “பிரபாஸ் எப்போதும் மற்றவர்களுக்கு உதவத் தயாராக இருக்கும் மிகச் சிறந்த மனிதர்களில் ஒருவர். அவர் மிகவும் இனிமையானவர், தாராளமானவர். யார் உதவி கேட்டாலும் அவர்களுக்கு உதவத் தயாராக இருப்பார். கடந்த இரண்டு ஆண்டுகளாக அவருடன் படப்பிடிப்பில் இருக்கிறேன். அவரைச் சுற்றியுள்ள பலருக்கு அவர் உதவுவதை நேரில் பார்த்து வியந்திருக்கிறேன்” என அவர் கூறியுள்ளார்.


மேலும், பிரபாஸின் எளிமை மற்றும் தாராள மனப்பான்மை மட்டுமின்றி, அவரது வீட்டில் தயாரிக்கப்படும் உணவையும் சுவைத்துள்ளதாக ஜிதின் குலாட்டி தெரிவித்துள்ளார் குறிப்பாக பிரபாஸ் வீட்டிலிருந்து வந்த மட்டன் குறித்து பேசிய அவர், “பிரபாஸ் வீட்டில் சமைக்கும் உணவுக்காகவும் பிரபலமானவர். அவரது வீட்டில் சமைத்த உணவை நானும் சாப்பிட்டிருக்கிறேன். குறிப்பாக அந்த மட்டன், நான் இதுவரை சாப்பிட்டதிலேயே மிகச் சிறந்தது. இதை நான் மிகைப்படுத்திச் சொல்லவில்லை. அனுபவித்து சொல்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.


ஜிதின் குலாட்டியின் முழுமையான பேட்டி – Variety India


பிரபாஸ் மற்றும் ஜிதின் குலாட்டி இணைந்து நடித்து வரும் ‘ஃபௌசி’ திரைப்படம் மீதும் ரசிகர்கள் மத்தியில் ஏற்கனவே மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. பிரம்மாண்டமான கதைக்களத்துடன் உருவாகி வரும் இப்படம், பிரபாஸின் திரைப்பயணத்தில் மற்றொரு முக்கியமான படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இதனிடையே, ‘சலார்’, ‘கல்கி 2898 AD’, ‘தி ராஜா சாப்’ உள்ளிட்ட படங்களைத் தொடர்ந்து அடுத்தடுத்து பெரிய படங்களில் நடித்து வரும் பிரபாஸ், தனது படங்களின் மூலம் இந்திய அளவில் கவனம் ஈர்த்து வருகிறார். இந்நிலையில், அவருடன் நீண்ட காலம் இணைந்து பணியாற்றிய ஜிதின் குலாட்டி, அவரது நட்சத்திர அந்தஸ்தை மட்டுமின்றி, தனிப்பட்ட முறையில் அவரது மனிதநேயத்தையும் பாராட்டியிருப்பது ரசிகர்களிடையே கவனம் பெற்றுள்ளது.


*#Prabhas is one of those quintessential good guys,’ says #JitinGulati.*


Having worked with #Prabhas for nearly 2 years on the film #Fauzi, @jitin0804 says the experience has only reinforced the superstar’s reputation in the industry.

 

I had heard that he’s a very generous man & a good human being. Now I’ve had that experience firsthand. He is one of those quintessential good guys who is always there, is the sweetest, is very generous, and is ready to help anyone.

 

We’ve been shooting for the last two years, and I have seen him helping so many people around him,” he says.


Apart from his magnanimity and humility, I have also tasted Prabhas’ home-cooked food that he’s so well-known for. I think that’s the best mutton I’ve ever had; I’m not exaggerating.


https://varietyindia.com/prabhas-is-one-of-those-quintessential-good-guys-says-jitin-gulati-on-his-two-year-long-association-with-fauzi-co-star-exclusive/

அன்பில் அவன்’ படத்தின் இரண்டாவது சிங்கிள் “கல்லா நிக்கிறியே” பாடல் வெளியானது

 *‘அன்பில் அவன்’ படத்தின் இரண்டாவது சிங்கிள் “கல்லா நிக்கிறியே” பாடல் வெளியானது !! 



காதலின் வலியையும் காதலியின் பெருமையையும் பேசும் மனதை வருடும் மெலடி – “கல்லா நிக்கிறியே”!


முன்னணி இளம் நடிகர் அசோக்செல்வன் நடிப்பில், ஆர்.கார்த்திகேயன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘அன்பில் அவன்’ திரைப்படத்தின் இரண்டாவது பாடலான “கல்லா நிக்கிறியே” வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.


அழகான காதல் கதையாக உருவாகி வரும் இப்படத்திற்காக கோவிந்த் வஸந்தா இசையில் உருவாகியுள்ள “கல்லா நிக்கிறியே” பாடலுக்கு பாடலாசிரியர் கார்த்திக் நேத்தா வரிகளை எழுதியுள்ளார். பாடலை சித் ஸ்ரீராம் தனது தனித்துவமான குரலில் பாடியுள்ளார்.


முதல் சிங்கிளான “ஆசை வரமே” காதலின் நெருக்கத்தையும், இனிமையான காதல் தருணங்களையும் அழகாகப் பதிவு செய்திருந்த நிலையில், “கல்லா நிக்கிறியே” காதலின் மற்றொரு பக்கத்தைப் பேசுகிறது. காதலின் வலி, காதலியின் பெருமை, பிரிவின் ஏக்கம் என உணர்வுகளை தாங்கி நிற்கும் இப்பாடல், காதல் உலகிற்குள் கேட்பவர்களை மெல்ல இழுத்துச் செல்கிறது.


கார்த்திக் நேத்தாவின் வரிகள் காதலின் ஆழமான உணர்வுகளை அழகாகக் கடத்த, கோவிந்த் வஸந்தாவின் இசை அந்த உணர்வுகளுக்கு உயிர் கொடுக்கிறது. குறிப்பாக சித் ஸ்ரீராமின் உணர்வுப்பூர்வமான குரல், பாடலின் ஒவ்வொரு வரியையும் மனதுக்குள் ஊடுருவச் செய்கிறது. காதலின் வலியை உணர்ந்தவர்களின் மனதில் இப்பாடல் நிச்சயம் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.


பாடலுடன் வெளியாகியுள்ள விஷுவல்களும் கூடுதல் கவனம் ஈர்க்கின்றன. இசையமைப்பாளர் கோவிந்த் வஸந்தா மற்றும் பாடகர் சித் ஸ்ரீராம் இடம் பெறும் காட்சிகளுடன், ‘அன்பில் அவன்’ படத்தின் அழகான காட்சிகளும் இணைக்கப்பட்டுள்ளன. பாடலின் உணர்வுகளோடு படத்தின் விஷுவல்களும் ஒன்றிணைவதால், “கல்லா நிக்கிறியே” பாடலை மீண்டும் மீண்டும் பார்க்கவும் கேட்கவும் தூண்டும் வகையில் அமைந்துள்ளது.


‘அன்பில் அவன்’ திரைப்படத்தில் அசோக் செல்வன், ப்ரீத்தி முகுந்தன், சபு மோன், அப்துல் சமத், கதிர் பாலு, மஹா டெல்லி கணேஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.


இப்படத்தின் கதையை ‘போர் தொழில்’ பட இயக்குநர் விக்னேஷ் ராஜா எழுதியுள்ளார். கௌதம் ராஜேந்திரன் ஒளிப்பதிவை மேற்கொள்ள, கோவிந்த் வஸந்தா இசையமைக்கிறார். படத்தொகுப்புப் பணிகளை ஆர்.கே. செல்வா கவனிக்கிறார். மணிகண்டன் ஸ்ரீனிவாசன் கலை இயக்கத்தை மேற்கொண்டுள்ளார்.


பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய அழகான காதல் கதையாக உருவாகியுள்ள இப்படத்தை ஐங்கரன் இன்டர்நேஷனல் மற்றும் ஹேப்பி ஹை பிக்சர்ஸ் நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் கே. கருணா மூர்த்தி, அசோக் செல்வன், அபிநயா செல்வம் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர்.


பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ‘அன்பில் அவன்’ திரைப்படம் வரும் செப்டம்பர் மாதம் 25 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.


https://www.youtube.com/watch?v=b-IJaMCIhm8

துருவ் விக்ரம் – ரமேஷ் வர்மா கூட்டணியில் உருவாகும் தமிழ்–தெலுங்கு இருமொழி ஆக்‌ஷன் படம்

துருவ் விக்ரம் – ரமேஷ் வர்மா கூட்டணியில் உருவாகும் தமிழ்–தெலுங்கு இருமொழி ஆக்‌ஷன் படம்



துருவ் விக்ரமின் அடுத்த படமாக உருவாகிறது புதிய தமிழ்–தெலுங்கு இருமொழி ஆக்‌ஷன் திரைப்படம். இப்படத்தை தெலுங்கில் ‘ராட்சசன்’, ‘கில்லாடி’ உள்ளிட்ட படங்களை இயக்கிய ரமேஷ் வர்மா இயக்குகிறார். இதன் மூலம் துருவ் விக்ரமும் ரமேஷ் வர்மாவும் முதல் முறையாக இணைகின்றனர்.


பென் ஜெயந்திலால் வழங்கும் இப்படத்தை, பென் ஸ்டுடியோஸ், ஸ்ரீ நீலாத்ரி புரொடக்‌ஷன்ஸ் மற்றும் ஆர்.வி. ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. கோனேரு சத்யநாராயணா மற்றும் சிரீஷா குரபதி ஆகியோர் தயாரிப்பாளர்களாக உள்ளனர்.


ஆக்‌ஷன் காட்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாகும் இப்படத்தில், உணர்வுப்பூர்வ அம்சங்கள், டிராமா மற்றும் வலுவான கதை சொல்லலும் இடம்பெறவுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. துருவ் விக்ரம் இதுவரை நடித்த கதாபாத்திரங்களில் இருந்து மாறுபட்ட ஆக்‌ஷன் பின்னணியிலான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.


இப்படத்திற்கான பூஜை நிகழ்ச்சி சமீபத்தில் நடைபெற்ற நிலையில், தற்போது படத்தின் முன் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. படப்பிடிப்பு வரும் அக்டோபர் மாதம் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.


இதற்கிடையே, துருவ் விக்ரமின் பிறந்தநாளான செப்டம்பர் 23-ம் தேதி படத்தின் தலைப்பு மற்றும் முழுமையான நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த அறிவிப்பு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இதனால் இப்படம் குறித்த கூடுதல் தகவல்கள் துருவ் விக்ரமின் பிறந்தநாளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


துருவ் விக்ரம் – ரமேஷ் வர்மா கூட்டணியில் உருவாகும் இந்தப் படம் தமிழ் மற்றும் தெலுங்கு ரசிகர்களை மனதில் வைத்து பிரம்மாண்டமான ஆக்‌ஷன் படமாக உருவாக உள்ளது.



DV4 / RV7 BIG ANNOUNCEMENT: DHRUV VIKRAM AND RAMESH VARMA COME TOGETHER FOR A HIGH-INTENSITY TAMIL–TELUGU BILINGUAL ACTION FILM


PEN JAYANTILAL PRESENTS


PEN STUDIOS × SRI NEELADRI PRODUCTIONS × RV STUDIOS


Chennai / Hyderabad:


Dhruv Vikram’s next release is set to be a high-intensity Tamil–Telugu bilingual action film, bringing together the dynamic actor and acclaimed filmmaker Ramesh Varma in an exciting new combination.


Presented by Pen Jayanthilal and produced by Koneru Satyanarayana & Sireesha Kurapati under the banners of Pen Studios, Sri Neeladri Productions and RV Studios, the film promises to be an intense and ambitious action entertainer.


Packed with high-octane action, emotion, drama and powerful storytelling, the film is being mounted on a large scale with a strong emphasis on character and cinematic impact.


DHRUV VIKRAM’S NEXT RELEASE


This film marks Dhruv Vikram’s next release, bringing the actor to audiences in a powerful new action avatar.


The project brings together Dhruv Vikram’s screen presence and Ramesh Varma’s distinctive filmmaking vision, creating a fresh and intense cinematic experience.


OFFICIAL ANNOUNCEMENT


The much-awaited project is now officially announced, following a traditional pooja ceremony that marked the beginning of its journey.


With pre-production progressing rapidly, the team is gearing up for an extensive shoot scheduled to commence in October.


SEPTEMBER 23 — THE BIG REVEAL


The most important date in the film’s journey is September 23 — Dhruv Vikram’s birthday.


On this special occasion, the makers will unveil the official title, complete cast and entire crew of the film.


The birthday announcement will introduce audiences to the title, characters, creative team and cinematic world of this high-intensity action saga.


PRODUCTION UNDERWAY


With the principal shoot scheduled to begin in October, the film is currently in active pre-production.


The makers are working towards creating a visually powerful and intense action experience, combining scale, emotion, drama and compelling storytelling for audiences across Tamil and Telugu.


KEY CREDITS


PEN JAYANTILAL PRESENTS


A PEN STUDIOS × SRI NEELADRI PRODUCTIONS × RV STUDIOS PRODUCTION


Produced by

KONERU SATYANARAYANA & SIREESHA KURAPATI


Starring

DHRUV VIKRAM


Directed by

RAMESH VARMA


A HIGH-INTENSITY TAMIL–TELUGU BILINGUAL ACTION FILM


THE JOURNEY BEGINS


SEPTEMBER 23 — DHRUV VIKRAM’S BIRTHDAY


TITLE • COMPLETE CAST • ENTIRE CREW


OCTOBER


THE CAMERAS ROLL


DHRUV VIKRAM × RAMESH VARMA


DV4 × RV7


ONE HERO.


ONE VISION.


ONE EXPLOSIVE ACTION SAGA.

சர்தார் 2 விமர்சனம்

 Cinema Inbox

’சர்தார் 2’ திரைப்பட விமர்சனம்

’சர்தார் 2’ திரைப்பட விமர்சனம்

By admin on September 10, 2026

பல வருடங்களாக தலைமறைவாக இருக்கும் உளவாளி ஒருவரை ரா சிறப்பு குழு தேடுகிறது. அவர்களுக்கு முன்பாக அவரை பிடித்து மேலதிகாரியிடம் ஒப்படைத்து தனது திறமையை நிரூபிக்க கார்த்தி முயற்சிக்கிறார். ஆனால், அதற்கு முன்பாக சர்வதேச கூலிப்படை கும்பலால் அந்த உளவாளி கொலை செய்யப்படுவதோடு, அவரிடம் இருக்கும் ரகசியம் ஒன்றை கைப்பற்ற முயற்சிக்கிறது. இறப்பதற்கு முன்பு அந்த உளவாளியிடம் இருந்த ரகசியத்தை பெறும் கார்த்தி, அவர் மூலம் தனது தந்தை உயிருடன் இருப்பதையும் அறிந்துக் கொள்கிறார்.


உயிருடன் இருக்கும் தந்தையை தேடி செல்லும் கார்த்தி, இறந்த உளவாளி கொடுத்த ரகசிய பொருள் போல் மேலும் இரண்டு உளவாளிகள் மூலம் இரண்டு ரகசியங்கள் பாதுகாத்து வைக்கபப்ட்டிருப்பதும், அந்த மூன்றையும் கைப்பற்ற முயற்சிக்கும் சர்வதேச கூலிப்படை தலைவன் எஸ்.ஜே.சூர்யா, அதன் மூலம் நாட்டையே அழிக்கும் திட்டம் ஒன்றை செயல்படுத்த இருப்பதையும் தெரிந்துக் கொள்கிறார். கூலிப்படை தலைவனுக்கு முன்பாக அந்த ரகசியத்தை கைப்பற்றி, அதன் பின்னணி என்ன ? என்பதை அறிந்துக் கொள்ள முயற்சிக்கும் கார்த்தி, அந்த இடத்தில் தனது தந்தையை மீண்டும் சந்திக்கிறார். மகனும், தந்தையும் இணைந்து நாட்டை அழிக்கும் நாசவேலையை முறியடிக்கும் முயற்சியில் இறங்குகிறார்கள். அது என்ன ?, அதை எப்படி தடுத்து நிறுத்துகிறார்கள் ?, நாட்டை அழிக்க துடிக்கும் எஸ்.ஜே.சூர்யா யார் ?, என்பதை அதிரடி சாகச காட்சிகளுடன் ஹாலிவுட் ஆக்‌ஷன் பட பாணியில் சொல்வதே ‘சர்தார் 2’.


‘சர்தார்’ முதல் பாகத்தின் தொடர்ச்சியாக இருந்தாலும், வேறு ஒரு பிரச்சனையோடு மக்களை எச்சரித்திருக்கும் இயக்குநர் பி.எஸ்.மித்ரன், எதிர்காலத்தில் இப்படியும் ஒரு பேரழிவு ஏற்படலாம், என்ற கற்பனையை சாகசங்கள் நிறைந்த உளவாளியின் வாழ்க்கை பின்னணியில் பிரமாண்டமாகவும், கமர்ஷியலாகவும் சொல்லியிருக்கிறார்.


அப்பா – மகன் என இரட்டை வேடத்தில் நடித்திருக்கும் கார்த்தி, உருவத்தில் மட்டும் இன்றி நடிப்பிலும் வித்தியாசத்தை காண்பித்திருக்கிறார். வெள்ளந்தியான நபர், ஆனால் வேலைன்னு வந்துட்டா உயிரை துச்சமாக நினைத்து மக்களை காக்கும் பணியை திறம்பட செய்யும் சூப்பர் உளவாளி என்பதை நிரூபிக்கும் வகையில் சாகசம் நிறைந்த காட்சிகளை நம்பும்படி கையாண்டிருக்கிறார். காதல் காட்சிகள் குறைவு என்றாலும் ஆக்‌ஷன் காட்சிகளிலும், விமான சாகசங்களிலும் கார்த்தியின் உற்சாகமான நடிப்பு ரசிகர்களை குஷிப்படுத்துகிறது.


சர்வதேச கூலிப்படை தலைவன் பிளாக் டேக்கர் என்ற கதாபாத்திரத்தில் வில்லனாக நடித்திருக்கும் எஸ்.ஜே.சூர்யா, வழக்கமான நடிப்பாக இருந்தாலும், திரைக்கதைக்கு பலம் சேர்க்கும் வகையில் பயணித்திருக்கிறார். வில்லனாக இருந்தாலும் மக்கள் செய்யும் தவறுகள், அதனால் எதிர்காலத்தில் ஏற்படும் விளைவுகளை விவரிக்கும் நீளமான காட்சியை தனது திரை இருப்பு மற்றும் நடிப்பு மூலம் தொய்வில்லாமல் கடத்தியிருக்கிறார்.


சிறிய வேடம் என்றாலும் ஆக்‌ஷனில் அமர்க்களப்படுத்தியிருக்கிறார் மாளவிகா மோகனன், படம் முழுவதும் பயணித்தாலும் ஆஷிகா ரங்கநாத்தின் வேடம் மனதில் நிற்கவில்லை. ஒரு காட்சியில் தலைகாட்டி மறைகிறார் ரஜிஷா விஜயன்.


யோகி பாபு மற்றும் நிழல்கள் ரவியின் புதிய காமெடி கூட்டணியின் காட்சிகள் சிரிக்க வைக்கிறது. அதிலும், வில்லன் எஸ்.ஜே.சூர்யா சொல்லும் கதையை கேட்டு கொடுக்கும் இவர்களது ரியாக்‌ஷன் திரையரங்கையே சிரிப்பு சத்தத்தால் அதிர வைக்கும்.


ஒளிப்பதிவாளர் ஜார்ஜ் சி.வில்லியம்ஸ் காட்சிகளை பிரமாண்டமாக படமாக்கியிருக்கிறார். ஆக்‌ஷன் மற்றும் சாகச காட்சிகள் கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் என்றாலும் அது தெரியாதவாறு காட்சியை கையாண்டிருக்கிறார்.


சாம்.சி.எஸ்-ன் இசை படத்தின் தரத்தை அதிகரிக்கச் செய்திருக்கிறது. சேசிங் மற்றும் சாகச காட்சிகள், ஜேம்ஸ் பாண்ட் படம் பார்க்கும் அனுபவத்தை கொடுக்கும் விதத்தில் அமைந்திருக்கும் சாம்.சி.எஸ்-ன் பின்னணி இசை அளவாக பயணித்து படத்திற்கு பெரும் பலம் சேர்த்திருக்கிறது.


படத்தின் மிகப்பெரிய பலமே விஜய் வேலுகுட்டியின் படத்தொகுப்பு தான். நாயகன் இரண்டு வேடம், வில்லன் எஸ்.ஜே.சூர்யா, மக்களை காப்பாற்ற உளவாளிகள் மேற்கொள்ளும் ஜப்பான் திட்டம், ரா அமைப்பின் பிளாஷ்பேக் காட்சிகள் என்று படத்தில் ஏகப்பட்ட கதாபாத்திரங்கள் மற்றும் காட்சிகள் இருந்தாலும், அவை அனைத்தையும் சரியான முறையில் தொகுத்து படத்தை தொய்வின்றி நகர்த்தி சென்றிருக்கிறார். குறிப்பாக சாகச காட்சிகளை நம்பும்படியும், திரைக்கதையின் விறுவிறுப்பு குறையாமலும் கதையை நகர்த்தியிருக்கும் விஜய் வேலுகுட்டி, 3 மணி நேரம் எப்படி போனது என்று தெரியாதவாறு தன் படத்தொகுப்பு பணியை நேர்த்தியாக செய்திருக்கிறார்.


முதல் பாகத்தின் தொடர்ச்சியாக இரண்டாம் பாகத்தை கையாண்டிருக்கும் இயக்குநர் பி.எஸ்.மித்ரன், மீண்டும் ஒரு சமூகப் பிரச்சனையை அழுத்தமாக பேசியிருந்தாலும், அதை பிரச்சாரமாக கையாளாமல், ஆக்‌ஷன் மற்றும் சாகசம் நிறைந்த காட்சியாக கொடுத்து பார்வையாளர்களை சீட் நுணியில் உட்கார வைத்திருக்கிறார்.



மக்கள் எதிர்கொள்ள இருக்கும் ஆபத்து, அது குறித்த விளக்கத்தை வில்லன் கதாபாத்திரம் மூலம் விவரித்தாலும், அந்த காட்சியை நகைச்சுவையாகவும் கையாண்டு படத்தை தொய்வின்றி நகர்த்தி செல்கிறார். படத்தின் ஆரம்பம் முதல் முடிவு வரை, அடுத்தது என்ன ? என்ற எதிர்பார்ப்போடு பார்வையாளர்களை படம் பார்க்க வைத்திருப்பவர், சர்தார் மூலம் மீண்டும் வெற்றியை சாத்தியமாக்கியிருக்கிறார்.


மொத்தத்தில், ‘சர்தார் 2’.

The Paradise Has A Beautiful Mother-Son Emotion, We Made This Film Wholeheartedly & Did Everything Required For It: Nani

செப்டம்பர் 24-இல் வெளியாகிறது! நேச்சுரல் ஸ்டார் நானியின் 'தி பாரடைஸ்' – டிரெய்லர் இன்றி புதிய முயற்சி*



*செப்டம்பர் 24-இல் பிரம்மாண்ட வெளியீடு! டிரெய்லர் இன்றி வெளியாகும் நேச்சுரல் ஸ்டார் நானியின் 'தி பாரடைஸ்'*



நேச்சுரல் ஸ்டார் நானி நடிப்பில், ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில் பெரிதும் எதிர்பார்க்கப்படும் 'தி பாரடைஸ்' திரைப்படம் செப்டம்பர் 24-ஆம் தேதியன்று உலகெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது. எவ்வித தாமதமுமின்றி குறித்த தேதியில் படம் திரைக்கு வரும் என்பதை உறுதிப்படுத்த படக்குழுவினர் பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தினர்.


தயாரிப்பாளர் சுதாகர் செறுகுரி பேசும் போது: "'தி பாரடைஸ்' படம் குறித்து பல வதந்திகள் பரவி வருகின்றன. ஆனால், படம் திட்டமிட்டபடி செப்டம்பர் 24-ஆம் தேதியன்று வெளியாகிறது. படத்தின் இறுதி வடிவம் எங்களுக்குப் பெரும் மகிழ்ச்சியளிக்கிறது," என்றார்.


இயக்குநர் ஸ்ரீகாந்த் ஒடேலா பேசும் போது, "சிறிய தாமதம் ஏற்பட்டிருந்தாலும், படத்தின் கிளிம்ப்ஸ், டீசர் மற்றும் பாடல்கள் என அனைத்தும் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளன. இது ஒரு புரட்சிகரமான தாய் - மகன் பாசப் போராட்டத்தை மையமாகக் கொண்ட படம். அத்துடன் ஒடுக்கப்பட்ட மக்களின் குரலையும் பேசுகிறது. 'பிறப்பும் இறப்பும் நமக்கானது, ஆனால் வாழ்வு நாட்டுக்கானது' என்ற கலோஜியின் வரிகளுக்கு ஏற்ப, தங்கள் உரிமைக்காகப் போராடும் மனிதர்களின் கதையே இது. படத்தின் மொத்த நேரம் 2 மணி நேரம் 49 நிமிடங்கள். ரசிகர்கள் இந்த உணர்வுப்பூர்வமான அனுபவத்தை நேரடியாகத் திரையரங்கில் பெற வேண்டும் என்பதற்காக டிரெய்லர் எதுவுமின்றி படத்தை வெளியிட முடிவு செய்துள்ளோம்," என்றார்.


நடிகர் நானி பேசும் போது: "இரண்டு முறை வெளியீட்டு தேதி மாறியதால் சிறு தயக்கம் இருந்தது உண்மைதான். ஆனால், ரசிகர்கள் அளித்த ஆதரவு எங்கள் பொறுப்பை அதிகப்படுத்தியுள்ளது. இப்படம் தன் பாதையைத் தானே அமைத்துக் கொண்டது போன்ற உணர்வைத் தருகிறது. ஸ்ரீகாந்தின் பிரம்மாண்ட பார்வையைத் திரையில் கொண்டு வந்துள்ளோம். கால அவகாசம் குறைவாக இருப்பதால் டிரெய்லர் வெளியிடவில்லை. இது என் திரையுலக வாழ்க்கையிலேயே மிகவும் கடினமான, சவாலான படமாக அமைந்தது. சண்டைக் காட்சிகளின் போது எனக்கும் சக நடிகர்களுக்கும் காயங்கள் ஏற்பட்டன; எங்கள் உழைப்பையும் ரத்தத்தையும் திரையில் காண்பீர்கள்.


டீசரைப் பார்த்துவிட்டு இது வெறும் வன்முறைப் படம் எனப் பலர் நினைக்கலாம். ஆனால், 'தி பாரடைஸ்' ஒரு அழகான தாய்-மகன் கதையையும், அதற்குப் பின்னணியில் இருக்கும் அழுத்தமான உணர்வுகளையும் மையமாகக் கொண்டது. பார்வையாளர்களுக்கு ஒரு சிறந்த திரையரங்க அனுபவத்தை இப்படம் நிச்சயமாக வழங்கும்," என்றார்.


அனிருத் இசையமைத்துள்ள இத்திரைப்படத்தில் மோகன் பாபு முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அனைத்துப் பணிகளையும் முடித்து, செப்டம்பர் 24-இல் தியேட்டர்களில் அதிரடி ஆக்‌ஷன் விருந்து படைக்க படக்குழுவினர் தயாராக உள்ளனர்.



The Paradise Has A Beautiful Mother-Son Emotion, We Made This Film Wholeheartedly & Did Everything Required For It: Nani

 

Natural Star Nani’s much-awaited action extravaganza will be hitting the screens on September 24th. The team interacted with the media today, to clarify that they are working rigorously to release the movie on time, and there will be no further delay.

 

Sudhakar Cherukuri said, “There are all kinds of rumours doing the rounds about The Paradise. The movie is arriving on September 24th. We are very happy with the way things have shaped up.”

 

Srikanth Odela said, “The Paradise may have been delayed a little, but every update from the film has created a blast. The glimpse, teaser and songs have all received a superb response. There is a lot of excitement and curiosity among audiences about what The Paradise is all about. This is a revolutionary emotional film. It is a story about a mother and son, and also about a marginalized community. Kaloji has a line that goes, ‘We own our birth, we own our death, but our entire life belongs to the nation.’ This is the story of people who fought for their country, but when they realised they had no place in that very country, they fought back without knowing what else to do. That is the story of The Paradise.

 

Personally, I feel a film like this is better experienced without a trailer. I think the theatrical experience will be completely different that way. The film’s final cut is 2 hours and 49 minutes long.”

 

Nani said, “We are finally arriving on September 24th. We have missed the release date twice, and naturally, we had several fears. But every update from the film has received an overwhelming response. In a way, that has increased our responsibility and tension. We have developed a strong belief that this film has a destiny of its own, as if something has already been written for it.

 

Once the September 24th release date was locked, the entire team started working 24/7. Even we don’t know what we are going to do over the next 10 days. But I can say one thing: when you come to theatres with good expectations, we are going to make every effort to give you a solid adrenaline rush and a great high. We are presenting Srikanth’s vision on a grand scale. There won’t be a trailer for The Paradise. The team is working extremely hard to bring the film to theatres on time. Due to time constraints, we decided not to release a trailer.

 

Srikanth has a very strong ear for music. He knows exactly which singer is required for a particular song and what the song needs. He records a voice and sends it to Anirudh. Even I cannot imagine how it is going to sound when it finally plays in theatres. In this social media era, we tend to put boundaries on everything. Srikanth doesn’t care about any of that. He is a mad guy who believes that whatever he wants to do is the right thing, and he doesn’t worry about what others think. That is a great quality. The Paradise took more time than we initially anticipated. There were many reasons for that. We succeeded in delivering everything we wanted to say through the film, but we fell a little short when it came to time management.

 

One day, Srikanth came to me and said he was unable to manage his time properly. He even told me, ‘You know Rajamouli, right? I’ll join him as an assistant director and learn how to manage things.’ The fact that he recognised his weakness and was willing to learn made me feel extremely proud of him. You need a stubborn person to make a film like The Paradise. Otherwise, a film like this would never get made. If stubbornness has a good purpose behind it, there is nothing wrong with it.

 

Making the Telangana setting authentic was the biggest challenge in both Dasara and The Paradise. Srikanth and his team took great care in every aspect. More than the dances, executing the complicated action sequences with the dreadlocks was extremely challenging.

 

Along with me, Sampoo and many others from our gang suffered injuries. You will see our hardships on screen. Everyone gave their all, and you can literally see their blood on the screen.

 

Srikanth Odela’s new favourite is Mohan Babu. There were many rumours about him. But once you travel with him, you will fall in love with him. He has a very childlike heart.

 

After the teaser release, I heard the feedback. There is a scene where I scream at the top of my voice. When you watch it as part of the film’s flow, you will feel the emotion behind it. We made this film wholeheartedly and did everything that was necessary for it. The Paradise is the most tiring film of my career, both physically and mentally.

 

After watching the teaser, many people are assuming that The Paradise is an extremely violent film. But The Paradise is actually a beautiful mother-and-son story. More than the violence, you will feel the emotion behind that violence.”

Baththa’ First Single ‘Magale’! A Beautiful Melody That Gently Touches the Heart!*

 *‘பத்தா’ படத்தின் முதல் சிங்கிள் ‘மகளே’ – மனதை வருடும் அழகான மெலடி!*



“மகளே” – சாய் அப்யங்கரின் மெலடி இசையில் மனதை மயக்கும் ‘பத்தா’ முதல் சிங்கிள்!

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில், இயக்குநர் பாலாஜி தரணிதரன் இயக்கத்தில், இயக்குநர் அட்லி வழங்கும், ஸ்டார் ஸ்டுடியோ18,(Star Studio18), ஏ ஃபார் ஆப்பிள் ஸ்டுடியோஸ் (A for Apple Studios) மற்றும் சினி 1 ஸ்டுடியோஸ் புரொடக்‌ஷன் (Cine 1 Studios Production) நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள ‘பத்தா’ திரைப்படத்தின் முதல் சிங்கிள் ‘மகளே’ வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. சாய் அப்யங்கர் இசையமைத்து பாடியுள்ள இப்பாடலுக்கு கவிஞர் கார்த்திக் நேதா வரிகளை எழுதியுள்ளார்.


இன்றைய தலைமுறை ரசிகர்களால் கொண்டாடப்படும் சாய் அப்யங்கர், துள்ளலான பாடல்களால் தனக்கென தனி அடையாளத்தை உருவாக்கி வரும் நிலையில், ‘மகளே’ பாடலில் முற்றிலும் மாறுபட்ட மென்மையான மெலடி பாணியை கையாண்டுள்ளார். அவரது இசையில் இதுவரை கேட்டிராத வித்தியாசமான இசை அனுபவமாக இந்தப் பாடல் அமைந்துள்ளது.



80-களின் இசை உலகை கண்முன் கொண்டு வரும் வீடியோ


80-களின் புகைப்படங்களும், அக்காலகட்ட இசையும் மீண்டும் ட்ரெண்டிங்கில் இருக்கும் இந்த நேரத்தில், ‘மகளே’ பாடலின் வீடியோவும் 80-களின் இசை உலகை நினைவுபடுத்தும் வகையில் அமைந்துள்ளது. வீடியோவின் தொடக்கமே 80-களில் ஒரு திரைப்படப் பாடல் ரெக்கார்டிங் எப்படி நடைபெற்றிருக்குமோ, அதனை அப்படியே கண்முன் கொண்டு வரும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. பழைய கால இசைக்கூடம், அக்கால ரெக்கார்டிங் முறைகள் என அந்தக் காலகட்டத்தின் சூழலை அப்படியே பிரதிபலிக்கும் வகையில் காட்சிகள் அமைந்துள்ளன. அதேநேரத்தில் சாய் அப்யங்கர் இசையமைப்பாளராகவும், பாடகராகவும் இரட்டை வேடத்தில் தோன்றியிருப்பதும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வரவேற்பைப் பெற்று வருகிறது.


மகளை கொண்டாடும் அழகான பாடல்


ஒரு தந்தை தனது மகளைப் பார்த்து அன்புடன் பேசுவது போன்ற உணர்வில் உருவாகியுள்ள இந்தப் பாடல், மகளின் மீதான பாசத்தையும் அன்பையும் அழகாக வெளிப்படுத்துகிறது. “மகளே, மந்திரச் சிமிழே, மங்கள விளக்கே கேளடி” எனத் தொடங்கும் கார்த்திக் நேதாவின் வரிகள் கவிதையைப் போல அமைந்து, பாடலின் உணர்வை மேலும் அழுத்தமாக வெளிப்படுத்துகின்றன.


சாய் அப்யங்கரின் மென்மையான இசையும், அவரது குரலும், கார்த்திக் நேதாவின் கவித்துவமான வரிகளும் இணைந்து ‘மகளே’ பாடலை, ரசிக்க வைக்கும் அனுபவமாக மாற்றியுள்ளது. குறிப்பாக, வழக்கமான இளமைத் துள்ளல் இசையிலிருந்து விலகி, மனதை வருடும் மெலடி பாணியில் சாய் அப்யங்கர் இந்தப் பாடலை உருவாக்கியிருப்பது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.


வித்தியாசமான கூட்டணியில், வித்தியாசமான களத்தில் வெளியாகியுள்ள ‘மகளே’ பாடல் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு, தொடர்ந்து நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.


தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான விஜய் சேதுபதி, இயக்குநர் பாலாஜி தரணிதரன் மற்றும் இந்திய சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களான Star Studio18, A for Apple Studios  மற்றும் Cine 1 Studios Production நிறுவனங்கள் இணைந்து தயாரிப்பது என, பல்வேறு எதிர்பார்ப்புகளை ஒன்றிணைத்துள்ள ‘பத்தா’, வரும் அக்டோபர் 1ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.


*Baththa’ First Single ‘Magale’! A Beautiful Melody That Gently Touches the Heart!*


The musical sensation Sai Abhyankkar endows a soulful musical dimension with ‘Magale’, the first single from Vijay Sethupathi’s ‘Baththa’


The first single ‘Magale’ from ‘Baththa’, starring Makkal Selvan Vijay Sethupathi and directed by Balaji Tharaneetharan, has been released and is receiving a warm response from music lovers. Presented by filmmaker Atlee, the film is jointly produced by Star Studio18, A for Apple Studios and Cine1 Studios Production. Composed and sung by Sai Abhyankkar, the song features lyrics by acclaimed lyricist Karthik Netha.


Celebrated by today’s generation for his energetic and instantly appealing music, Sai Abhyankkar takes a refreshingly different musical route with ‘Magale’, embracing a tender and soothing melody. What adds more intrigue to the song is that the track exhibits a distinctly different side of the composer, moving away from his familiar youthful exuberance and creating a gentle musical experience that lingers with the listener.



A Refreshing Visual  That Recreates the Musical World of the 1980s


 With the visual and musical aesthetics of the 1980s once again finding its place among audiences, the video song of ‘Magale’ beautifully recreates the atmosphere of that era. From its very opening, the song commutes  viewers into an old-school recording studio, evoking the way a film song could have been recorded during the 1980s.


The vintage studio setting, period recording techniques and carefully recreated ambience add a distinct charm to the video. Another highlight is Sai Abhyankkar appearing as both the composer and singer, adding an interesting visual dimension to the song.


Beautiful Poetic Dedication to Daughter


A Heartfelt Musical Tribute to the Bond Between a Father and Daughter, built around the tender emotions of a father expressing his affection towards his daughter, ‘Magale’ beautifully celebrates the warmth and unconditional love of this special bond. Karthik Netha’s poetic lyrics further deepen the emotional essence of the song, giving it the feel of an affectionate musical ode to a daughter.


Sai Abhyankkar’s gentle composition and soulful vocals blend beautifully with Karthik Netha’s evocative writing, turning ‘Magale’ into a soothing listening experience. His departure from his signature high-energy style to explore a delicate melodic space has emerged as one of the song’s most refreshing aspects.


Arriving as a distinctive musical offering, ‘Magale’ has already begun winning the appreciation of listeners, further adding to the anticipation surrounding ‘Baththa’.


Starring Vijay Sethupathi and Lijomol Jose in the lead roles, ‘Baththa’ is directed by Balaji Tharaneetharan and presented by Atlee. Sai Abhyankkar composes the music, with Selvakumar S.K. handling cinematography, R. Kalaivanan taking care of editing and T. Muthuraj as Production Designer. The film is jointly produced by Star Studio18, A for Apple Studios and Cine1 Studios Production.


‘Baththa’ is scheduled for a worldwide theatrical release on October 1, 2026.


https://www.youtube.com/watch?v=FhhA5purigQ

I am game movie Review

 I am game movie Review


சூதாட்டங்கள் விளையாடுவதில் தீவிரம் காட்டும் நாயகன் துல்கர் சல்மான், கடனாளியாகி விடுகிறார். கடன் பிரச்சனையில் இருந்து மீள்வதற்காக கிரிக்கெட் சூதாட்டட்தில் ஈடுபடுகிறார், ஆனால் அதிலும் தோல்வியடைந்து மொத்த பணத்தையும் இழந்து விடுகிறார். இதற்கிடையே விபத்து ஒன்றில் சிக்கி படுகாயம் அடையும் துல்கர் சல்மானின் ஒரு கை சிதைந்து விடுகிறது. இதனால், இறந்த ஒருவரது கை அவருக்கு அறுவை சிகிச்சை மூலம் பொருத்தப்படுகிறது. பல மாதங்களுக்குப் பிறகு மீண்டும் தன்னுடைய வழக்கமான பணிகளை மேற்கொள்ளும் துல்சர் சல்மானின் வாழ்க்கையில் அவரது புதிய கை பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்துகிறது.


தன் பேச்சை கேட்காமல் அந்த கையே பல விசயங்களை செய்தாலும், அதன் மூலம் சூதாட்டங்களில் தொடர் வெற்றிகளை குவிக்கும் துல்கர் சல்மான், தன் புதிய கை தனக்கான அதிஷ்ட்டம் என்று நம்பும் போது, அந்த கை தொழிலதிபரும், மெட்ராஸ் கிரிக்கெட் அணியின் நிதியுதவியாளருமான மிஷ்கினை கொலை செய்ய முயற்சிக்கிறது. இதன் மூலம் அந்த கை தனக்கான அதிஷ்ட்டம் இல்லை, தன்னை பிரச்சனையில் சிக்க வைக்க வந்த ஆபத்து என்பதை துல்கர் சல்மான் உணர்கிறார். அப்போது அவர் மீதே அந்த கை கொலைவெறி தாக்குதல் நடத்துகிறது. அதில் இருந்து தப்பிக்கும் துல்கர் சல்மான், அந்த கையின் பின்னணியை கண்டுபிடித்து பிரச்சனையை எப்படி தீர்க்கிறார் ? என்பதை விறுவிறுப்பாக சொல்வதே ’ஐ அம் கேம்’.


படம் முழுவதும் ஸ்டைலான உடையில், ஸ்டைலான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கும் துல்கர் சல்மான், கை மாற்று அறுவை சிகிச்சைக்குப் பிறகு சவாலான காட்சிகளை மிக சாமர்த்தியமாக கையாண்டு ரசிக்க வைக்கிறார். தன் உடலோடு பொருந்தியிருந்தாலும் தன் கட்டுப்பாட்டை மீறி செயல்படும் கையை வைத்துக் கொண்டு துல்கர் சல்மான் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை தன் நடிப்பு மூலம் நேர்த்தியாக பார்வையாளர்களிடத்தில் கடத்தி விடுகிறார்.


நாயகியாக நடித்திருக்கும் கயாடு லோஹர், மெழுகுச் சிலை போல் அழகாக இருக்கிறார். அமைதியான முகம், அளவான நடிப்பு என்று படம் முழுவதும் நாயகனுக்கு துணையாகவும், படத்திற்கு பலமாகவும் பயணித்திருக்கிறார்.


வில்லனாக நடித்திருக்கும் மிஷ்கின், சூதாட்ட உலகத்தையும், அதன் செயல்பாடுகளையும் பார்வையாளர்கள் கண்முன் நிறுத்தும்படி நடித்திருக்கிறார். அவரது ஆக்ரோஷமான நடிப்பும், உடல்மொழியும் டேவிட் ஆப்ரஹாம் என்ற கதாபாத்திரத்திற்கு நூறு சதவீதம் நியாயம் சேர்த்திருக்கிறது.


ஆண்டனி வர்கீஸ், கதிர், சம்யுக்தா விஸ்வநாதன், வினய் ஃபோர்ட் ஆகியோருக்கு சிறிய வேடம் என்றாலும் திரைக்கதையில் முக்கிய பங்கு வகிக்கிறார்கள்.


ஒளிப்பதிவாளர் ஜிம்ஷி காலித், இரவு நேர காட்சிகளை பல்வேறு விளக்குகள் மூலம் பிரகாசமாக காட்சிப்படுத்தி, சூதாட்ட உலகத்தில் பார்வையாளர்களையும் பயணிக்க வைக்கிறார். படத்தின் பெரும்பாலான காட்சிகள் இரவு நேரத்தில் நடந்தாலும், வண்ணங்கள் மற்றும் விளக்குகள் மூலம் அந்த உணர்வே பார்வையாளர்களுக்கு ஏற்படாத வகையில் படம் முழுவதையும் வண்ணமயமாகவும், பிரமாண்டமாகவும் காட்சிப்படுத்தியிருக்கிறார்.


ஜேக்ஸ் பிஜாய் இசையில் பாடல்கள் துள்ளல் ரகம். பின்னணி இசை திரைக்கதையின் வேகத்திற்கு கூடுதல் வேகம் சேர்த்திருக்கிறது. அதிலும், கை செய்யும் களேபரங்கள் மற்றும் சண்டைக்காட்சிகளுக்கு தனித்துவமான பீஜியம் மூலம் இசையமைப்பாளர் பெரும் பலம் சேர்த்திருக்கிறார்.


சூதாட்டம் தான் படத்தின் மையக்கரு, அதை சுற்றி திரைக்கதை எழுதப்பட்டிருந்தாலும், எதிர்பார்க்காத ஒரு திருப்பத்தின் மூலம் திரைக்கதையின் வடிவத்தை மாற்றியிருக்கும் படத்தொகுப்பாளர் சாமன் சாக்கோ, படம் முழுவதையும் சிறு தொய்வின்றி விறுவிறுப்பாக நகர்த்தி சென்றிருக்கிறார்.


சஜீர் பாபா, பிலால் மொய்து, இஸ்மாயில் அபூபக்கர் ஆகியோரது திரைக்கதை வழக்கமான பழிவாங்கும் கதையை வேறு பாதையில் பயணிக்க வைத்து, படத்தின் சுவாரஸ்யத்தை அதிகரிக்கச் செய்திருக்கிறது.


கிரிக்கெட் விளையாட்டில் நடைபெறும் சூதாட்டத்தை தோலுரித்துக் காட்டும் வகையில் கதை எழுதி இயக்கியிருக்கும் நஹாஸ் ஹிதாயத், இத்தகைய சூதாட்டங்களும், அதை நடத்துபவர்களும் மக்களின் பேராசை மூலமாகவே உருவாகிறார்கள், என்ற கருத்தை அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார்.


சூதாட்டத்தை சுற்றி கதை நகர்ந்தாலும், சஸ்பென்ஸ், திரில்லர், ஆக்‌ஷன், காதல் என அனைத்துவிதமான கமர்ஷியல் அம்சங்களையும் திரைக்கதையில் அளவாக கையாண்டு, ஆரம்பம் முதல் முடிவு வரை பார்வையாளர்களின் கவனம் சிதறாமல் படத்தை நகர்த்தி சென்றிருக்கிறார் இயக்குநர் நஹாஸ் ஹிதாயத்.


மொத்தத்தில் ‘ஐ அம் கேம்’ சுவாரஸ்யமான விளையாட்டு

வதந்தி சீசன் 2 - எனக்கான அடையாளத்தை அளித்தது - நடிகர் அர்ஜுன் சக்கரவர்த்தி

 *வதந்தி சீசன் 2 - எனக்கான அடையாளத்தை அளித்தது - நடிகர் அர்ஜுன் சக்கரவர்த்தி 



*என் முதல் ரசிகர் மறக்க முடியாதவராக இருக்க வேண்டும் - அறிமுக நடிகர் அர்ஜுன் சக்கரவர்த்தி*


வால்வாட்சர் ஃபிலிம்ஸ் நிறுவனம் சார்பில் இயக்குநர்கள் புஷ்கர்- காயத்ரி தயாரிப்பில் இயக்குநர் ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் ஆகஸ்ட் 7ஆம் தேதி முதல் ப்ரைம் வீடியோ டிஜிட்டல் தளத்தில் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்று வரும் 'வதந்தி சீசன் 2 : த மிஸ்டரி ஆஃப் மணி' எனும் எட்டு அத்தியாயங்கள் கொண்ட இன்வஸ்டிகேட்டட் கிரைம் திரில்லர் ஜானரிலான இணைய தொடரில் சுந்தரேசன் கதாபாத்திரத்தில் அறிமுகமாகி, ரசிகர்களை தனித்துவமான நடிப்பால் மிரள வைத்திருக்கிறார் புதுமுக நடிகர் அர்ஜுன் சக்கரவர்த்தி. 


'வதந்தி சீசன் 2' இணைய தொடர் வெளியான பிறகு தன்னுடைய பிரத்யேக இன்ஸ்டா ஐடி ( arjun_chakkaravarthy) யை பப்ளிக் ஆக்கியுள்ள நடிகர் அர்ஜுன் சக்கரவர்த்தி தன் நடிப்பை பாராட்டி ரசிகர்கள் பதிவிடும் போஸ்ட்டிற்கு லைக்கும், ஷேரும் கொடுத்துக் கொண்டிருந்த தருணத்தில் அவரை சந்தித்தோம்.  


கலைத்துறை அறிமுகத்திற்கான பிளாஷ்பேக்..?


சின்ன வயதில் இருந்தே டிவியில் ஒரு படம் ஓடினால்.. அது தொடர்பான சம்பவங்களை அப்பா சொல்வார். சில நேரங்களில் ஒவ்வொரு காட்சியைப் பற்றி சொல்லும்போது... அந்த காட்சி படமாக்கப்பட்ட போது நடைபெற்ற சம்பவங்களை சுவாரசியமாக விவரிப்பார். அதை கேட்டு கேட்டு படப்பிடிப்பு தளத்தில் படக் குழுவினருடன் பழக வேண்டும்... திரை துறையில் பணியாற்ற வேண்டும்... என்ற ஆசை எழுந்தது. அத்துடன் விடுமுறை நாட்களில் அப்பா பணியாற்றும் படங்களுக்கான படப்பிடிப்பில் கலந்து கொள்வேன். அங்கு நடக்கும் நிகழ்வுகளை பார்த்துக் கொண்டே இருப்பேன். அப்போதுதான் நான் திரையில் பார்த்தது வேறு. நிஜத்தில் பார்ப்பது வேறாக இருந்தது. கேமராமேன் - லைட் மேன்- புரொடக்ஷன்- என ஒவ்வொருவரும் தங்களுடைய கடுமையான உழைப்பை அளித்துக் கொண்டிருந்தனர்.

இதற்காகவே விடுமுறை எப்போது வரும் என்று காத்திருப்பேன். ஏனென்றால் பள்ளிக்கு செல்லும் போது படப்பிடிப்புக்கு செல்ல முடியாது. இது அப்பாவின் கடுமையான உத்தரவு. அதன் பிறகு 12 வது படிப்பு முடித்தவுடன் அப்பாவிடம் 'விஸ்காம் படிக்கிறேன்' என்று சொன்னேன். 'அது வேண்டாம் உனக்கு பொருத்தமாக இருக்காது. நீ சட்டம் படி' என்றார். அதற்காக தற்போது நான் சென்னை சட்டக் கல்லூரியில் சட்டம் பயின்று வருகிறேன். 


நடிப்பின் மீதான ஆர்வம் காரணமாக நிறைய கம்பெனிகளில் ஆடிசனுக்கு சென்றேன். அதன் பிறகு கூத்துப் பட்டறைக்கு சென்று நடிப்பு பயிற்சியை பயின்றேன். சினிமா சண்டை பயிற்சி இயக்குநரான டேஞ்சர் மணியிடம் சண்டைக் காட்சிகளுக்காக பயிற்சி பெற்றேன். 


என்னுடைய உருவத்தை வைத்தும்... நிறத்தை வைத்தும்... நிறைய பேர் கேலி செய்தனர் 'கருப்பா இருக்கியே.. உன் மூஞ்சியெல்லாம் கேமராவுல தெரியுமா..? 'என பேசினர். இதனால் என் மனதிற்குள் ஏன் நம்மால் நடிக்க முடியாதா? நான் நடிகனாகக் கூடாதா? என்ற வெறித்தனமான எண்ணம் ஏற்பட்டது. முதலில் நடிகனாவதற்கான தகுதி என்னவோ... அதை வளர்த்துக் கொள்ள வேண்டும் என நினைத்தேன். 


நடிகர்களுக்கு உடல் ஆரோக்கியம் தான் முக்கியம் என்பதால் சத்தான உணவுகளை சாப்பிடத் தொடங்கினேன். ஜிம்முக்கு சென்றேன். வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் மேடை நாடகங்களிலும் நடித்தேன். சினிமா சம்பந்தமான ஒர்க்ஷாப் நடந்தால்... அதில் கலந்து கொள்வேன். மைம் என்ற கலையையும் கற்று வருகிறேன். சண்டைக் காட்சிகளை நடிப்பது தொடர்பான பயிற்சியையும் பெற்று வருகிறேன். நடனமும் கற்று வருகிறேன். 


என்ன மாதிரியான கேரக்டர்களில் நடிக்க ஆசை?


ஆக்சன் ஹீரோ என்பதை விட நல்ல நடிகர் என்ற அடையாளத்தை பெறுவதைத்தான் விரும்புகிறேன். உதாரணத்திற்கு பசுபதி அவர்கள்.. எல்லா கதாபாத்திரங்களிலும் சிறப்பாக நடிப்பார்.‌ இந்த கேரக்டர் என்று எந்த வரையறையும் இல்லை. எந்த கேரக்டர் கொடுத்தாலும் அதில் பொருந்தி என் சிறந்த நடிப்பை வழங்குவேன். எல்லோருக்கும் என்னை பிடிக்க வேண்டும் இதுதான் என் ஆசை. இதற்காக கடுமையாக உழைக்கவும் தயாராக இருக்கிறேன். 


வதந்தி சீசன் 2 வாய்ப்பு...? 


வால்வாட்சர் ஃபிலிம்ஸ் நிறுவனத்தில் அப்பா பணியாற்றுவதால்.. கடந்த ஆறு ஆண்டுகளாக இந்த நிறுவனத்துடன் நெருங்கிய தொடர்பு உண்டு. ஒருமுறை அலுவலகத்தில் இருந்தபோது புஷ்கர் - காயத்ரி அவர்கள் என்னை பார்த்தார்கள். என் தந்தையிடம், 'நன்றாக இருக்கிறானே..! ஆடிசன் வைக்கலாமா? அனுப்புவீர்களா?' என கேட்டனர். அதன் பிறகு எனக்கு ஆடிசன் டெஸ்ட் வைத்தனர். முதலில் புஷ்கர் - காயத்ரி மேடம் வைத்த டெஸ்டில் பாஸ் செய்தேன். அதன் பிறகு இயக்குநர் ஆண்ட்ரூஸ் லூயிஸ் ஆடிஷன் வைத்தார். அப்போது இயக்குநர், 'எந்த சீன் கொடுத்தாலும் நடிப்பியாப்பா?' என கேட்டார். 'வதந்தி சீசன் 1 சூப்பர் ஹிட் சார். அந்த சூப்பர் ஹிட்டான தொடரின் இரண்டாவது சீசனில் நடிக்க எனக்கு ஒரு வாய்ப்பு கிடைக்கிறது என்றாலே.. அதை விட்டு விட மனமில்லை...'என்று சொன்னேன். அதன் பிறகு செலக்ட் ஆனேன். இதில் சுந்தரேசன் கதாபாத்திரத்தில் நான் நடித்திருக்கிறேன். 


உங்கள் பார்வையில் வதந்தி சீசன் 2...?


வதந்தி சீசன் 1 போல்.. சீசன் 2 வரும் சூப்பர் ஹிட். இதில் சுந்தரேசன் கதாபாத்திரத்தில் நடிக்க தொடங்கும் போது ஒவ்வொரு நாளும் எனக்கு புது அனுபவமாகவே இருந்தது. வதந்தி சீசன் 2 வை பார்த்த அனைவரும் நன்றாக இருக்கிறது என பாராட்டி இருக்கிறார்கள். 


ஃப்யூச்சர் ஐடியா..? 


இந்த வெப்சீரிஸிற்கு பிறகு எனக்கு வாய்ப்புகள் வரும் என்று நினைக்கிறேன். எந்த வாய்ப்பு கிடைத்தாலும் அதில் என் நூறு சதவீத உழைப்பை கொடுப்பேன். என் மீது நம்பிக்கை வைத்து வாய்ப்பளித்தவர்களின் பெயரை காப்பாற்றும் வகையில் நடிக்க வேண்டும்.


திரைத் துறையிலும், மக்கள் மனதிலும் எனக்கென்று ஒரு தனிப்பட்ட இடத்தை உருவாக்கிக் கொள்ள வேண்டும். மக்களை மகிழ்விக்க வேண்டும் என்ற எண்ணம் மட்டும் இருக்கிறது. 'தெய்வத்தால் ஆகாது எனினும்..' என்ற திருக்குறளை போல் கடுமையாக முயற்சித்தால்... அந்த நம்பிக்கை என்னை கைவிடாது என்று நம்புகிறேன். 


சினிமாவில் தான் என் வாழ்க்கை. நடிகராக இல்லை என்றால்.. சினிமாவில் ஏதேனும் ஒரு துறையில் வேலை செய்து கொண்டு இருக்க வேண்டும். 


உங்கள் சமூக ஊடக பக்கம்..? 


சோசியல் மீடியாவில் நான் இன்ஸ்டாகிராமில் மட்டும்தான் arjun_chakkaravarthy என்ற ஐடியை வைத்திருக்கிறேன். அதிலும் இந்த ஐடியை இதுவரை பிரைவேட்டாகத்தான் வைத்திருந்தேன். வதந்தி சீசன் 2 வெளியான பிறகு தான் அதனை பப்ளிக் ஆக்கினேன். இதில் இனிமேல் என் படம் சம்பந்தமான விசயங்கள்... என்னுடைய எண்ணங்கள் ஆகியவற்றை போஸ்ட் செய்வேன்.


அவெர்னஸ் தொடர்பான போஸ்ட்களை ரீபோஸ்ட் செய்திருக்கிறேன். சில விசயங்களில் என்னுடைய கருத்தையும் சேர்த்து சொல்லி இருக்கிறேன்.‌


விஜய் Vs வதந்தி சீசன் 2..?


முதலில் நான் ஒன்றை தெளிவு படுத்தி விடுகிறேன். நான் பக்கா விஜய் ரசிகன். விஜய் சார் எனக்கு ஒரு இன்ஸ்பிரேஷன்.‌ வதந்தி சீசன் 2 வை விஜய் பார்த்துவிட்டு என்ன சொல்வார் ? என்ற பதட்டம் நிறையவே இருக்கிறது. 


அதர்ஸ் வெப் சீரிஸ் - வதந்தி சீசன் 2 வெப் சீரிஸ் என்ன டிஃபரன்ஸ்?


டைரக்டர் ஆண்ட்ரூ சார் இதற்காக மூன்று ஆண்டு காலம் கடினமாக உழைத்து எழுதி, இயக்கி இருக்கிறார். நாங்கள் அனைவரும் இரண்டு ஆண்டு காலம் கஷ்டப்பட்டும்... இஷ்டப்பட்டும்... உழைத்திருக்கிறோம். இது அனைவருக்கும் பிடிக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது. நான் சொல்வதை விட நீங்கள் அனைவரும் பார்த்துவிட்டு சொல்லுங்கள். அதற்காக காத்திருக்கிறேன். 


* உங்களுடைய முதல் ரசிகரை பற்றி...? 


வதந்தி சீசன் 2 வை பார்த்துவிட்டு, அதில் சுந்தரேசனை ரசித்து என்னுடைய ரசிகராக அதிலும் முதல் ரசிகராக யாராக இருந்தாலும் எனக்கு சந்தோசம் தான். மக்களை மகிழ்விக்க வேண்டும் என்பதற்காகத்தான் கடினமாக உழைக்கிறோம். அதனால் மக்கள் என்னை ஏற்றுக் கொண்டால் சந்தோஷம்தான். 


சினிமா இல்லாமல் வெப் சீரிஸ் மூலம் அறிமுகமாகி இருக்கிறீர்களே.. இது குறித்து எப்பவாவது கவலைப்பட்டதுண்டா... ? 


இந்த வாய்ப்பு கூட கிடைக்காமல் எத்தனையோ திறமைசாலிகள் இங்கு கோடம்பாக்கத்தில் சுற்றிக் கொண்டுதான் இருக்கிறார்கள். அதனால் எனக்கு எதில் வாய்ப்பு கிடைத்தாலும் அதில் நடிப்பேன். சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. இருந்தாலும் வாய்ப்பு எங்கு கிடைக்கிறதோ.. அதில் நூறு சதவீதம் உழைத்து என் திறமையை வெளிப்படுத்த வேண்டும்.


வதந்தி சீசன் 2 - மறக்க முடியாதது எது? 


இந்த வெப்சீரிஸில் சுந்தரேசன் அதிகமாக யாரிடம் பேச மாட்டான். அதில் அவனை ஒரு காட்சியில் தலை கீழாக கட்டி போட்டு தொங்க விட்டு இருப்பார்கள். அந்த காட்சியை பற்றி இயக்குநர் சொன்னவுடன் தலைகீழாக நாம் தொங்க வேண்டும் என்பதற்காக சாப்பிட வேண்டாம் என நினைத்து காலையில் இருந்து எதுவும் சாப்பிடாமல் அந்த காட்சிக்காக காத்திருந்தேன். காலையில் எட்டு மணிக்கு வந்த என்னை இரவு எட்டு மணிக்கு கட்டித் தொங்க விட்டார்கள். படப்பிடிப்பு விடிகாலை ஐந்து மணி வரை சென்றது. எல்லோரும் அங்கிருந்து சென்று விட்டார்கள். நான் மட்டும் அங்கேயே இருந்தேன். என்னால் எழுந்திருக்க முடியவில்லை. நான் அழத் தொடங்கி விட்டேன். வலி பின்னி எடுத்தது. அதன் பிறகு என்னை அங்கு பணியாற்றும் ஊழியர்கள் தூக்கி, காரில் உட்கார வைத்து, வீட்டிற்கு அழைத்துச் சென்றனர். அதன் பிறகு ஒரு வாரம் வீட்டில் ஓய்வெடுத்தேன். வலி இருந்தாலும் அதனையும் சுகமாகவே அனுபவித்தேன். இதுவும் மறக்க முடியாத அனுபவமாக இருக்கிறது. 


ஆனால் கிளைமாக்ஸ் காட்சியில் நான் நடித்த போது அங்கு கூடியிருந்த படக் குழுவினர் அனைவரும் நன்றாக நடித்திருக்கிறாய் என கைத்தட்டி பாராட்டினார்.  


சட்டக் கல்லூரியில் சட்ட படிப்பை படித்து வரும் நீங்கள் இந்த இணைய தொடரில் சுந்தரேசன் எனும் பள்ளி மாணவனாக சீருடை அணிந்து நடித்த போது என்ன நினைத்தீர்கள்..? 


பள்ளியில் படிக்கும் போது நண்பர்களுடன் சேர்ந்து அரட்டை அடித்ததுண்டு. ஆனால் சுந்தரேசனை போல் எந்த பெண்ணையும் ஃபாலோ செய்யவில்லை. அதே சமயத்தில் பள்ளியில் படிக்கும் போது நான் சுந்தரேசன் கேரக்டருக்கு நேர் ஆப்போசிட். எப்போதும் பிரண்ட்ஸ்களுடன் ஜாலியாக பேசி அரட்டை அடித்துக் கொண்டே இருப்பேன். அதனால் சுந்தரேசனாக ஸ்கூல் யூனிபார்மை அணிந்து நடித்த போது மகிழ்ச்சியாகவே இருந்தது. 


-----------


அர்ஜூன் சக்கரவர்த்தியின் ராபிட் ஃபயர் 

மொமண்ட்ஸ் 



பெற்றோர்கள் ...


அவர்கள் தான் என்னுடைய முதல் கடவுள் 


நம்பிக்கை ....


எத்தனை தோல்விகள் வந்தாலும் நம்பிக்கை மட்டும் தான் நம்மை கடைசி வரை காப்பாற்றும் ஆயுதம். இந்த நம்பிக்கையை யாரும் ஒருபோதும் கைவிடாதீர்கள். 


ஆக்சன் ஹீரோ ....


அர்ஜூன் சார் இருக்கிறாரே..! சினிமாவில் ஆக்சன் ஹீரோக்கள் அடியாட்களை தூக்கி அடித்து பறக்க விடும்போது சந்தோஷமாக இருந்தது. ஆனால் அதை இங்கு நானே செய்ய வேண்டும் என்ற போது இரட்டிப்பு சந்தோஷம் வரும். அதுபோன்ற படத்தில் நடிக்க வேண்டும் என்ற ஆசையும் இருக்கிறது. 


பிடித்த நடிகர்.... 


விஜய் சார். ரஜினிகாந்த் - கமல்ஹாசன் ஆகியோரிடமிருந்து நிறைய விசயங்களை கற்றுக் கொள்ளலாம். கற்றுக் கொண்டே இருக்கலாம்.  


பிடிச்ச ஹீரோயின்.... 


எல்லாரையும் பிடிக்கும். 


பிடிச்ச செலிபிரிட்டி....


'வதந்தி சீசன் 2'வில் முடக்கத்தான் மணியாக நடித்திருக்கும் யஷ்வந்த்- ஒரு சோசியல் மீடியா செலிபிரிட்டி தான். அவரை எனக்கு மிகவும் பிடிக்கும். 


எந்த போஸ்ட்டை லைக் செய்திருக்கிறீர்கள். ஷேர் செய்திருக்கிறீர்கள்? 


இப்போ வதந்தி சீசன் 2 தொடர்பான போஸ்ட்களை மட்டும் தான் லைக் செய்கிறேன். ஷேர் செய்கிறேன். அதில் என்னுடைய போஸ்ட் ஏதேனும் வருகிறதா? என ஆவலுடன் பார்த்துக் கொண்டிருக்கிறேன்.

SEYON welcomes Senthamizhan SEEMAN

சேயோன்’ திரைப்படத்தில் இணைகிறார் சீமான்!



இயக்குநர், நடிகர் மற்றும் அரசியல் இயக்கத்தின் தலைவர் என பன்முகம் கொண்ட ஆளுமை செந்தமிழன் திரு. சீமான் அவர்கள் ‘சேயோன்’ திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். 


தற்போது மதுரையில் நடைபெற்று வரும் ‘சேயோன்’ படப்பிடிப்பில் கலந்து கொண்டு நடித்து வருகிறார். செந்தமிழன் சீமான் அவர்கள் சேயோனில் இணைந்ததால், இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.


சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடிக்கிறார். சிவகுமார் முருகேசன் இயக்குகிறார். சந்தோஷ் நாராயணன் இசை அமைக்கிறார். அன்பரிவ் சண்டைப் பயிற்சி அளிக்கின்றனர். இந்தப் படத்தை ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் டர்மெரிக் மீடியா இணைந்து உருவாக்கி வருகிறது. திரு. கமல்ஹாசன் மற்றும் ஆர். மகேந்திரன் ஆகிய இருவரும் படத்தைத் தயாரிக்கிறார்கள்.


அடுத்தடுத்து வரும் புதிய புதிய அறிவிப்புகளால் ‘சேயோன்’ படம் மக்களிடையே பெரும் ஆர்வத்தையும், எதிர்பார்ப்பையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.


SEYON welcomes Senthamizhan SEEMAN 


Director, Actor and Political leader Mr. Seeman has joined the cast of the upcoming film SEYON, marking an exciting addition to the highly anticipated project. Seeman has commenced shooting for the film in Madurai, where his presence on the sets has already generated considerable interest and heightened expectations surrounding the film.


Starring Sivakarthikeyan in the lead role, the film is directed by Sivakumar Murugesan, with music composed by Santhosh Narayanan and action by Anbariv. The film is Produced by Thiru. Kamal Haasan and R. Mahendran under the banners of RaajKamal Films International and Turmeric Media.


SEYON is steadily building strong anticipation among audiences and raising expectations with every new update.