-

Loading latest news...

ஹிப்ஹாப் தமிழா தயாரிப்பில் உருவான “பொருநை” ஆவணப்படம் துருக்கியில் நடைபெறும் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட தேர்வு

 ஹிப்ஹாப் தமிழா தயாரிப்பில் உருவான “பொருநை” ஆவணப்படம் துருக்கியில் நடைபெறும் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட தேர்வு! Foca International Archaeology & Cultural Heritage Film Festival-இல் திரையிடப்படும் முதல் தமிழ் ஆவணப்படம் பொருநை!





ஹிப்ஹாப் தமிழாவின் தமிழன்டா இயக்கம் 2019 ஆம் ஆண்டு தமிழி என்ற ஆவணப்பட இணையத் தொடரை உருவாக்கி வெளியிட்டிருந்தது. சுமார் 20,000 கிமீ பயணித்து, பண்டைய தமிழிக் கல்வெட்டுகள் முதல் அசோகர் கல்வெட்டுகள் வரை பலவற்றையும் ஒருங்கிணைத்து உருவாக்கப்பட்ட இந்த ஆவணப்படத் தொடர் பெரும் வரவேற்பைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து, ஹிப்ஹாப் தமிழாவின் தமிழன்டா இயக்கத்தின் முன்னெடுப்பில், பொருநை என்ற ஆவணப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. தாமிரபரணி என்று அழைக்கப்படும் பொருநை நதிக்கரையில் 2020-2021 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற அகழாய்வுப் பணிகளை முழுமையாக பதிவு செய்து இந்த ஆவணப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. பொருநை ஆவணப்படத்தை ஹிப்ஹாப் தமிழா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. பிரதீப்குமார் - இளங்கோ சம்பத்குமார் ஆகியோர் இந்த ஆவணப்படத்தையும் இயக்கியுள்ளனர். சரண்குமார், பாலாஜி பாஸ்கரன், சந்தோஷ் ஆகியோர் ஒளிப்பதிவு செய்ய, திலகேஷ், பரத்பாலாஜி ஆகியோர் எடிட்டிங் செய்துள்ளனர். இந்த ஆவணப்படத்தை தயாரித்து, குரல் நெறியாள்கை செய்துள்ளதுடன், இசை அமைத்துள்ளார் ஹிப்ஹாப் தமிழா. சுமார் ஓராண்டு காலம் படப்பிடிப்பு நிகழ்த்தப்பட்டு, அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட பொருட்கள் மீதான அறிவியல்பூர்வ ஆய்வு முடிவுகள் முழுமையாக வெளிவரும் வரை காத்திருந்து, எல்லா முடிவுகளையும் தொகுத்து பல்லாண்டுகள் கடின உழைப்பின் பயனாய் சுவாரஸ்யமாக இந்த ஆவணப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. சுமார் ஒன்றரை மணிநேரம் ஓடக்கூடிய இந்த ஆவணப்படத்திற்கு மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியம்' “யு” சான்றிதழ் வழங்கியுள்ளது. பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களுக்கும் அனுப்பட்டுள்ள இப்படம் தற்போது துருக்கியில் நடைபெறும் Foca International Archaeology & Cultural Heritage Film Festival-இல் திரையிட தேர்வாகியுள்ளது. வரும் அக்டோபர் மாதம் நடைபெறும் திரையிடலில் 'பொருநை' ஆவணப்படம் திரையிடப்படவுள்ளது. தொல்லியல், பண்பாடு உள்ளிட்ட துறைகளில் முக்கியத்துவம் வாய்ந்த இந்த திரைப்பட விழாவில் திரையிடப்படவுள்ள முதல் தமிழ் ஆவணப்படம் 'பொருநை' என்பது குறிப்பிடத்தக்கது.

தயாள் பத்மநாபனின் ‘லட்சுமிகாந்தன் கொலை வழக்கு’ பத்திரிகையாளர் சந்திப்பு

தயாள் பத்மநாபனின் ‘லட்சுமிகாந்தன் கொலை வழக்கு’ பத்திரிகையாளர் சந்திப்பு!



மாநில அரசின் விருது பெற்ற இயக்குநரான தயாள் பத்மநாபன், பல மொழிகளில் கதைக்கான உள்ளடக்கத்தை மையப்படுத்தப்பட்ட தரமான திரைப்படங்களை வழங்கி வருபவர். அவரது மிகவும் எதிர்பார்க்கப்பட்ட தமிழ் திரைப்படமான ‘லட்சுமிகாந்தன் கொலை வழக்கு’ ஜூன் 25 அன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது.


2M சினிமாஸ் மற்றும் D பிக்சர்ஸ் நிறுவனங்களின் சார்பில் கே.வி. ஷபரீஷ் தயாரித்துள்ள இப்படத்தில் வெற்றி, ரங்கராஜ் பாண்டே, பிரிகிடா சாகா, மாறன், சரவணன், லிஸ்ஸி ஆண்டனி, லோகன் கண்ணன், நர்மதா, அருவி மதன், கன்யா பாரதி, கவிதா பாரதி மற்றும் சுப்பிரமணியம் சிவா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.


இப்படத்தின் பிரம்மாண்டமான பத்திரிகையாளர் சந்திப்பு சென்னை நகரில் படக்குழுவினரின் முன்னிலையில் நடைபெற்றது. நிகழ்வின் சிறப்பாக, படத்தின் காட்சிசார் சுருக்கமும் (Visual Synopsis), கதாபாத்திர அறிமுகமும் ஊடகங்களுக்கு பிரத்யேகமாக திரையிடப்பட்டது. இது படத்தின் உலகத்தையும் கதாபாத்திரங்களையும் பற்றிய சுவாரஸ்யமான முன்னோட்டத்தை வழங்கியதுடன், ஜூன் 25, 2026 அன்று நடைபெறவுள்ள திரையரங்கு வெளியீட்டிற்கான எதிர்பார்ப்பை மேலும் உயர்த்தியது.


நிகழ்ச்சியில் பேசப்பட்ட முக்கிய கருத்துகளின் தொகுப்பு பின்வருமாறு:


நடிகரும் எழுத்தாளருமான கவிதா பாரதி:


“தயாள் பத்மநாபன் கர்நாடகாவில் தொடர்ந்து தரமான மற்றும் துணிச்சலான படைப்புகளை வழங்கும் இயக்குநராக கொண்டாடப்படுகிறார். அவரது மூன்றாவது தமிழ் திரைப்படமான ‘லட்சுமிகாந்தன் கொலை வழக்கு’ மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. ஆரம்பத்தில் அவர் என்னைத் தொடர்புகொண்டு திரைக்கதை மற்றும் வசனங்களை எழுதுமாறு கேட்டார். இந்தப் படம் எங்கள் அனைவருக்கும் மிகவும் சிறப்பானது. பார்வையாளர்களுக்கும் இது வித்தியாசமான அனுபவமாக இருக்கும் என்று நம்புகிறேன்.”


ஒளிப்பதிவாளர் எம்.வி. பன்னீர்செல்வம்:


“எழுத்து வலுவாக இருக்கும் போது திரைப்படமும் ஆழமாக மாறுகிறது. தொழில்நுட்பக் கலைஞர்களும் தங்களது சிறந்த பங்களிப்பை வழங்க முடிகிறது. ‘கொன்றால் பாவம்’ படத்தின் அசல் பதிப்பைப் பார்த்த பிறகே தயாளுடன் எனது நட்பு தொடங்கியது. பல இயக்குநர்கள் வளர்ச்சியுடன் தங்களது படைப்புகளின் அளவை பெரிதாக்க முயல்வார்கள். ஆனால் தயாள் தனது கலைநோக்கில் உறுதியாக இருக்கிறார். மிகைப்படுத்தல்களைத் தவிர்த்து ஒவ்வொரு துறையையும் திட்டமிட்டு அணுகுகிறார். திரைக்கதை கட்டத்திலேயே ஒளிப்பதிவாளரை இணைக்கும் இயக்குநர்கள் அரிது. குழுவின் மீதான அவரது மரியாதை அபாரமானது. இப்படம் பார்வையாளர்களுக்கு ஒரு காட்சிவிருந்தாக (Visual Treat) இருக்கும்.”


இசையமைப்பாளர் தர்புகா சிவா:


“பல படங்களில் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தாலும், சில படங்களே நம்மை சிந்திக்க வைக்கின்றன. எல்லா படங்களும் முடிந்தபின் பெருமிதத்தை தராது. ஆனால் ‘லட்சுமிகாந்தன் கொலை வழக்கு’ எனக்கு மிகுந்த திருப்தியையும் மகிழ்ச்சியையும் அளித்துள்ளது. ஹுக் ஸ்டெப்ஸ், டிரெண்டிங் ஃபார்முலாக்கள், வைரல் அம்சங்கள் பற்றி எங்களிடம் பேச்சே இல்லை. திரைக்கதை கேட்டதை மட்டுமே செய்ய வேண்டும் என்பதில் தயாள் சார் நேர்மையாக இருந்தார்.”


நடிகர் வெற்றி:


“தயாள் சார் போல இவ்வளவு திட்டமிடலுடன் செயல்படும் இயக்குநரை நான் பார்த்ததில்லை. ‘கொன்றால் பாவம்’ பார்த்த பிறகு அவருடன் பணியாற்ற வேண்டும் என்று ஆசைப்பட்டேன். அது இப்போது நனவாகியுள்ளது. படம் மிகவும் சிறப்பாக உருவாகியுள்ளது. முழு குழுவிற்கும் எனது நன்றி.”


நடிகர் சரவணன்:


“இது தயாள் சாரின் மூன்றாவது தமிழ் படம் என்றாலும், அவர் கன்னடத்தில் ஏற்கனவே 18 படங்களை இயக்கியுள்ளார். அவர் மேலும் பல தமிழ் படங்களை இயக்க வேண்டும் என்று விரும்புகிறேன். அவரது திட்டமிடல் அனைவரும் தெளிவாகவும் அமைதியாகவும் வேலை செய்ய உதவியது. இந்தப் படம் பார்வையாளர்களுக்கு மிகவும் சிறப்பான அனுபவமாக இருக்கும்.”


நடிகை பிரிகிடா சாகா:


“இந்தப் படத்தின் ஒரு பகுதியாக இருப்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். தயாள் சார் ஒரு சிறந்த இயக்குநர் மட்டுமல்ல, அருமையான மனிதரும் கூட. படப்பிடிப்பில் அனைவரையும் குடும்பத்தினராக கவனித்தார். எனக்கு வழங்கப்பட்ட கதாபாத்திரம் மிகவும் நெருக்கமானது. முதல் காட்சியிலேயே என் பாட்டியின் ஆன்மாவுடன் இணைந்த உணர்வு ஏற்பட்டது. அந்த உணர்வை முழுப் படத்திலும் தக்கவைத்தேன். இந்த அனுபவம் எனக்கு என்றும் நினைவாக இருக்கும்.”


நடிகர் அருவி மதன்:


“சிறிய பட்ஜெட் படங்களுக்கு வலுவான உள்ளடக்கம் இருந்தால் அவை நிச்சயம் வெற்றி பெறும். என் ‘நூடுல்ஸ்’ படத்தின் மூலம் இதை அனுபவித்தேன். தயாள் சார் அதே பாதையில் பயணிக்கிறார். படப்பிடிப்பு தொடங்கும் முன்பே சம்பளம் வழங்கப்பட்டது என்பது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. திட்டமிட்ட முறையில் உருவாக்கப்பட்ட படம் வணிக ரீதியாகவும் வெற்றி பெறும்.”


நடிகை லிஸ்ஸி ஆண்டனி:


“இந்தப் படத்தில் நான் சூடாமணி என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். பொதுவாக நடிகர்களுக்கு, தாங்கள் செலுத்திய உழைப்பிற்கு இறுதி வெளியீடு நியாயம் செய்யுமா என்ற சந்தேகம் இருக்கும். ஆனால் தயாள் சார் இயக்கும் படங்களில் அத்தகைய கவலை தேவையில்லை. அவரது தெளிவான கலைநோக்கும் திட்டமிடலும் நடிகர்களின் நடிப்பை உயர்த்திக் காட்டும்.”


நடிகரும் இயக்குநருமான சுப்பிரமணியம் சிவா:


“தயாள் மிகுந்த தெளிவுடைய மனிதர். அவர் வீடு கட்டினாலும், திருடர்கள் எளிதில் உள்ளே வருவதற்கே ஒரு தனி வழியை திட்டமிட்டு வைத்திருப்பார் என்று நகைச்சுவையாக சொல்வேன். அந்த அளவுக்கு அவரது திட்டமிடல் அசாதாரணமானது. தனுஷிடம் நான் கண்ட தெளிவை இப்போது தயாளிடமும் பார்க்கிறேன். வணிக மற்றும் மாற்று சினிமாவுக்கிடையேயான இடைவெளியை இந்தப் படம் அழகாக இணைக்கிறது.”


நடிகர் ஆரவ்:


“ஒரு கொலைக்காக குற்றவாளிக்கு மரண தண்டனை வழங்கப்பட வேண்டுமா என்ற முக்கியமான கேள்வியை இந்தப் படம் எழுப்புகிறது. தயாள் பத்மநாபன் மிகத் திறமையான இயக்குநர். குறுகிய காலத்தில் திட்டமிட்டு தரமான படைப்புகளை உருவாக்கும் அவரது திறனை நான் எப்போதும் பாராட்டியுள்ளேன். அனைத்து தரப்பு மக்களுக்கும் இந்தப் படம் ஒரு சிறப்பான அனுபவமாக இருக்கும்.”


இயக்குநர் தயாள் பத்மநாபன்:


“எங்கள் தயாரிப்பாளர் ஷபரீஷ் தற்போது மொரீஷியஸில் தனது அடுத்த படத்தின் படப்பிடிப்பில் உள்ளார். ரங்கராஜ் பாண்டேவும் அவருடன் இருக்கிறார். அதனால் இருவரும் இன்று வர முடியவில்லை.


இது என் 22வது திரைப்படமும், மூன்றாவது தமிழ் படமும் ஆகும். இந்தப் படத்தைப் பற்றிய சில முக்கிய தகவல்களை நாங்கள் திட்டமிட்டு மறைத்துள்ளோம். அவை வெளியீட்டுக்குப் பிறகான பத்திரிகையாளர் சந்திப்பில் வெளிப்படுத்தப்படும்.

உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்ட இந்தப் படம், 1972-ஆம் ஆண்டை பின்னணியாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. மரண தண்டனைக் கைதியின் வாழ்க்கையில் ஒரு இரவை மையமாகக் கொண்டு, அவன் கடந்தகாலத்தை மீள்பார்க்கும் கதையாக இது அமைந்துள்ளது.


கன்னடத் துறையில் பணியாற்றியதால் என் தமிழ் பேசும் திறன் சற்று குறைந்துவிட்டது. இந்தப் படத்தின் திரைக்கதை மற்றும் வசனங்களை சிறப்பாக வடிவமைத்த கவிதா பாரதி சாருக்கு நான் மனமார்ந்த நன்றி தெரிவிக்கிறேன்.

என் நடிகர்கள் அனைவரும் தங்கள் இதயத்தையும் ஆன்மாவையும் இந்தப் படத்திற்காக அர்ப்பணித்துள்ளனர். தொழில்நுட்பக் கலைஞர்கள் நான் கொடுத்த அழுத்தத்தையும் பொறுமையுடன் ஏற்றுக்கொண்டனர்.


பிரிகிடாவுக்கு இப்படத்தில் அழகான கதாபாத்திரம் உள்ளது. வெற்றி மற்றும் ரங்கராஜ் பாண்டே இருவருக்கும் கதையில் சமமான முக்கியத்துவம் உள்ளது. குறிப்பாக சரவணன் சார், இந்தப் படத்தின் மீது கொண்ட அன்பினால் தனது சம்பளத்தைக் குறைத்ததோடு, கிளைமாக்ஸ் காட்சிக்காக கூடுதலாக ஒரு நாள் படப்பிடிப்பையும் வழங்கினார்.


படப்பிடிப்பு முடிந்த நாளில், திட்டமிட்டதை விட இரண்டு நாட்கள் முன்னதாகவே வேலை முடிந்ததால், ரங்கராஜ் பாண்டே தனது சம்பளத்தில் இருந்து ரூ.2 லட்சத்தைத் திருப்பிக் கொடுத்தார். இந்த முழு பயணத்திலும் குழுவின் ஆதரவு அளவிட முடியாதது. அவர்களுடன் பணியாற்றியதில் நான் மிகவும் ஆசீர்வதிக்கப்பட்டவனாக உணர்கிறேன்.”


இதனைத் தொடர்ந்து, படக்குழுவினர் ஊடகங்களுடன் கலந்துரையாடி, திரைப்படம், கதாபாத்திரங்கள் மற்றும் உருவாக்க அனுபவங்கள் குறித்த பல்வேறு தகவல்களைப் பகிர்ந்து கொண்டனர். பிரத்யேக காட்சிசார் சுருக்கமும் கதாபாத்திர அறிமுகமும் ஊடகங்களின் பாராட்டைப் பெற்ற நிலையில், ஜூன் 25 அன்று உலகம் முழுவதும் வெளியாகவுள்ள ‘லட்சுமிகாந்தன் கொலை வழக்கு’ திரைப்படத்திற்கான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.

பாடலாசிரியரும் நடிகருமான ஜெகன் கவிராஜ் எழுதிய "ஈரம் காயாத கதைகள்" புத்தக வெளியீட்டுவிழா*

 *பாடலாசிரியரும் நடிகருமான ஜெகன் கவிராஜ் எழுதிய "ஈரம் காயாத கதைகள்" புத்தக வெளியீட்டுவிழா*



*"ஈரம் காயாத கதைகள்" புத்தக வெளியீட்டு நிகழ்ச்சிக்கு நான் ஏன் வந்தேன்?- இயக்குநர் அமீர் விளக்கம்*


*"ஈரம் காயாத கதைகள்" புத்தகத்தை அனைவரும் வாசிக்க வேண்டும்" - கவிதாபாரதி*


*அப்பா தீபாவளி கதை குறித்து நிவாஸ் கே பிரசன்னா உருக்கம்*




பாடலாசிரியரும் நடிகருமான மு. ஜெகன் கவிராஜ் எழுதிய ‘ஈரம் காயாத கதைகள்’ சிறுகதைகள் தொகுப்பின் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இயக்குநரும் நடிகருமான அமீர், நூலினை வெளியிட, ஜெகன் கவிராஜின் பெற்றோரான திரு. முத்தையா - திருமதி லலிதா இணை பெற்றுக் கொண்டனர்.


இவ்விழாவில் பேசிய கிராம நிர்வாக அதிகாரி அன்னலட்சுமி, “ஜெகன் அண்ணாவும் நானும் ஒரே ஊர். அவரிடம் நிறைய நல்ல விஷயம் இருக்கு. அதில் குறிப்பிட்டுச் சொல்லணும் என்றால், அவரது வாசிப்புப் பழக்கம். ஒருநாளைக்கு இத்தனை பக்கங்கள் படிக்கணும் எனத் திட்டமிட்டுப் படிப்பவர். அவர் பள்ளிப்படிப்பு படிக்கலை என அவரளித்த பேட்டிகளில் ஆதங்கப்படுடிருப்பார். ஆனால் அவர் மனிதர்களின் வாழ்க்கையைப் படித்துள்ளார். இந்தத் தொகுப்பில் உள்ள கதைகளை, எங்க ஊர் தாத்தா, பாட்டிகள் வாய்மொழியாகச் சொன்ன விஷயங்களைக் கொண்டுதான் எழுதியுள்ளார். ஜெகன் அண்ணாவின் கதைகளைப் படித்த பின் தான், எங்க ஊர் மனிதர்களைப் பற்றி வேறொரு பார்வையில் பார்க்க ஆரம்பிக்கிறேன். அவருக்குள் நிறைய கதைகள் ஒளிஞ்சிருக்கு. அடுத்து வரும் புத்தகத்தில் அக்கதைகள் வரணும். அதற்கு காலமும் கதையுமும் ஆசிர்வதிக்கணும்” என்றார்.


எழுத்தாளரின் ஊரைச் சேர்ந்த செந்தில்குமார் IRS பேசுகையில், “எங்கள் கிராமம், கிராமத்தைச் சுற்றி வாழ்ந்த மனிதர்களின் சிறந்த கதைகளின் வெளிப்பாடாக உள்ளது ‘ஈரம் காயாத கதைகள்’. இந்த அளவுக்குக் கிராமங்களை ஊள்வாங்கிக் கொண்டு எழுதிய கிரா, தோப்பில் முகமது மீரான் போன்றவர்களின் இயல்பான நடை ஜெகனுக்கு வாய்ச்சதில் ஆச்சரியம் ஏற்பட்டது. எங்கள் நட்பு, நாங்கள் யாரெனத் தெரியும் முன்பே தொடங்கிவிட்டது. ஏனெனில் எங்கப்பாக்கள் இருவரும் கிளாஸ்மேட்கள். அதனால் எங்க நட்பு சிறுவயதிலேயே தொடங்கினாலும் பல்வேறு திசைகளில் மீண்டும் சந்திக்கும்போது, முப்பதுகளைக் கடந்துவிட்டோம். எழுத்தில் வெற்றியை விடத் தோல்வி அதிகம். கடினமான மனவலியும், பொருளாதாரச் சுமையும் தரக்கூடியது. ஜெகன் இந்தத் துறையைத் அவர் தேர்ந்தெடுக்கும்போது, அது மிகப் பெரிய சவாலாக இருக்குமென நினைச்சேன். ஆனா சில வருடங்களிலேயே மிகப் பெரிய சாதனையை நிகழ்த்திக் காட்டினார். அதுவும் மல்டி-டைமன்ஷலில் தடத்தைப் பதித்துள்ளார். பாடல் எழுதுவதாகட்டும், நடிப்பதாகட்டும், புத்தகம் எழுதுவதாகட்டும், எங்கள் ஊருக்கே பெருமையான விஷயம்.


எப்பொழுதும், இந்த மாதிரியான சூழலில் இருந்து வந்தவர்கள் எப்படியிருப்பார்கள் என்றால், சமுதாயத்தின் மீது கோபம் கொண்டவர்களாக இருப்பார்கள். எப்படின்னா, பணக்காரர்கள் எல்லாம் கெட்டவங்க, அரசியல்வாதிங்க எல்லாம் கெட்டவங்க என்ற வெளிப்பாடு வரும். தங்களுக்கு என்று ஒரு ஐடென்ட்டியை உருவாக்க முயற்சி செய்வாங்க. மத ரீதியாகவோ, சாதிய ரீதியாகவோ, இல்ல இனம், மொழி ரீதியாகவோ அடையாளத்தை உருவாக்கி, அதன் பின் ஒளிஞ்சுக்கிட்டு எழுதுறதுக்கோ, வாழுறதுக்கோ முயற்சி செய்வாங்க. ஆனா ஜெகன் எதிர்கொண்ட வலிகள் அனைத்தும் அவரைப் புது மனிதராக உருவாக்கியுள்ளது.


எந்த ஒரு விஷயத்தையும் அவர் இன்சைடர் (Insider) ஆகப் பார்க்கும் விதம் ஆச்சரியமாக இருந்தது. நேரில் பழகித் தெரிந்து கொண்டதை விட, அவரது கதைகள் மூலமாகத்தான் அவரைத் தெரிந்து கொண்டேன். எடிக் வியூ (Etic view), எமிக் வியூ (Emic view) என சோஷியல் ஸ்டடிஸ்ல சொல்வாங்க. எடிக் வியூ என்றால், அனைவருமே தூரமாக இருந்துதான் ஒரு சொசைட்டியைப் பார்ப்போம். எல்லா எழுத்தாளர்க்கும் ஈஸியா வரக் கூடியது. ஆனா அந்த சொசைட்டியாக மாறி, அதன் இயல்புகளைப் பற்றி எழுதுவது இவருக்கு அருமையாக வந்துள்ளது. இந்தப் புத்தகத்தில் அது வெளிப்பட்டுள்ளது.


ஈரானியத் திரைப்படங்களில் உள்ள ஆழம் இந்தப் புத்தக்கத்தில் உள்ளது. ஒவ்வொரு கதையுமே கி.ரா.வையும், தோப்பில் முகமது மீரானையும்தான் ஞாபகப்படுத்தியது. ஏன்னா தோப்பில் முகமது மீரான் கதைகளைப் படித்தவர்களுக்குத் தெரியும், முஸ்லீம் சமூகத்தை வெளியில் இருந்து எக்ஸ்ட்ரீமாகப் பார்க்கும் போக்கில் இருந்து மாறுபட்டு, உள்ளிருந்து இயல்பாக எழுதியிருப்பார். ஜெகன், எங்க மக்களைப் பற்றி க்ளோரிஃபை (Glorify) பண்ணாமல் மிக இயல்பாக எழுதியிருந்தார். இப்படி மேலும் கதைகள் எழுதவும், வெற்றிகளைக் குவிக்கவும் நண்பனுக்கு வாழ்த்துகள்” என்றார்.


கவிதா பாரதி பேசுகையில், “என்னுடைய சிறு வயதில் நான் ஒரு கவிதைப் புத்தகம் போட்டேன். 1200 பிரதிகளில் 1000 புத்தகத்தை இலவசமாகக் கொடுத்தோம். 200 புத்தகம் பத்திரிகைகளுக்கு விமர்சனத்துக்காகக் கொடுத்தேன். ஒன்றிலும் விமர்சனம் வரலை. ஆயிரம் புத்தகங்களில், இருநூறு நான் கொடுத்தேன், எண்ணூறு புத்தகங்கள் என் அப்பா கொடுத்திருப்பார். எங்கப்பா தினம் பத்துப் புத்தகங்களைப் பையில் போட்டுக் கொண்டு, சைக்கிளில் வச்சுக்கிட்டுப் போற இடத்திலெல்லாம், ‘என் பையன் புத்தகம் எழுதியிருக்கான்’ என நண்பர்களுக்கும் தெரிஞ்சவர்களுக்கும் கொடுப்பார். செய்தி என்னவென்றால், எங்கப்பாவிற்குப் படிக்கத் தெரியாது. ஒரு படிக்கத் தெரியாத அப்பாவிற்கு, ஒரு மகன் புத்தகம் எழுதியிருக்கிறான் என்பது மிகவும் பெருமைக்குரிய விஷயமாக இருந்தது. இந்த மேடையில், எழுத்தாளரின் தந்தையையும் தாயையும் அழைத்துப் புத்தகத்தைக் கொடுத்ததை விட சிறப்பான எந்தப் பெருமையும் இருக்கவேண்டிய அவசியமில்லை என்று நான் கருதுகிறேன்.


வட்டார வழக்கைப் பேசுவதென்பது கேலிக்குரியதாக இருக்கிறது. ஒவ்வொரு அம்மாவுக்கும் ஒரு சமையல் கைவண்ணம் உண்டு. ரசம் என்பது புளியையும் தக்காளியையும் கரைச்சு வைப்பதுதான். ஆனால் ஒவ்வொரு அம்மாவின் ரசத்திற்கும் ஒரு சுவையுண்டு. ஆனால் நண்பர்களே ஆச்சி மசாலாவும், சக்தி மசாலாவும் அம்மாகளின் சுவையை எல்லாம் கொன்றுவிட்டன என்பதுதான் சோகம். அப்படித்தான் வட்டார வழக்கு இல்லாமல் போனது ஒரு மொழியினுடைய மிகப் பெரிய இழப்பு. இன்று, தமிழில் பேசினாலோ, எழுதினாலோ நீங்க ஒரு பூமர். தமிழை ஆங்கிலத்தில் எழுதவேண்டும். A m m a தான் இன்றிருக்கக் கூடிய ஜென் ஸீ மொழி. இத்தகைய சூழல் நிலவும் தருணத்தில், தம்பி தனது வட்டார மொழியில் கதைகளை எழுதியிருப்பது மிகவும் மகிழ்ச்சிக்குரிய வரவேற்புக்குரிய செயல்.


இந்தச் சிறுகதைத் தொகுப்பு, ஒரு நாவலைப் போல் ஒன்றின் தொடர்ச்சியாக எல்லாக் கதாபாத்திரங்களும் ஏதோ ஒன்றின் தொடர்புடையதாகத்தான் இதிலுள்ள ஒன்பது கதைகளும் அமைந்திருக்கின்றன. இந்தக் கதைகள் சிறப்பானவை என்பதற்கு நான் உத்திரவாதம் அளிக்கின்றேன். எழுத்தாளனுக்கு மெய்யறிவு, முழுமையறிவு, அந்த அறிவு, இந்த அறிவு இருக்கவேண்டும் என நினைக்கிறார்கள். எழுத்தாளனுக்கு அதெல்லாம் தேவையில்லை என நான் நினைக்கிறேன். எழுத்தாளனுக்கு ஒரு சமூக நோக்கம், பொறுப்புணர்வு, நேர்மை, உண்மை இருக்கவேண்டும். அந்த கிராஃப்ட், தொழில்நுட்பம் எல்லாம் இரண்டாம் பட்சம்தான். எதற்காக எழுதுகிறான், அதில் எதைச் சொல்கிறான் என்பதுதான் எழுத்தாளனைப் பாராட்டுவதற்குரிய அடிப்படை. அவ்வகையில் ஜெகன் தான் பார்த்த செய்திகளை, நீதிகளை, அநீதிகளை இதில் பதிவு செய்திருக்கிறார். ஜெகன் ஒரு நல்ல இயக்குநர் ஆவதற்கான அனைத்துச் சான்றுகளும் இப்புத்தகத்தில் இருக்கின்றன. அனைவரும் இதை வாங்கிப் படிக்கவேண்டும் என்று பரிந்துரைக்கிறேன்” என்றார்.


இயக்குநர் சுப்பிரமணியா சிவா, “கவிதா பாரதி சொன்ன அப்பா கதை எவ்ளோ அற்புதமான கதை! எனக்கு எங்கம்மா ஞாபகம் வந்துடுச்சு. எங்கம்மாவுக்கு எழுதப் படிக்கத் தெரியாது. எங்கம்மா எப்பவும் ஒரு வெத்தலைப்பாக்கு பை வச்சிருப்பாங்க. அதுல எப்பவும் ஒரு பென்சில் வச்சிருப்பாங்க. அவங்களுக்கு 86 வயசாகுது. எனக்குத் தெரிஞ்சு இருபது, முப்பது வருஷமா பென்சில் வச்சிருக்காங்க. வெத்திலையை மாத்தும் பொழுதெல்லாம் பென்சிலைப் பத்திரமா எடுத்து பையில் திரும்ப வச்சுப்பாங்க. ‘ஏன் நீ பென்சில வச்சிருக்க?’ என ஒருநாள் கேட்டேன். ‘யப்பா, யாராச்சும் எழுதக் கேட்பாங்க இல்ல!’ என அதுக்கு அவங்க பதில் சொன்னாங்க. ‘ஏம்மா இதுவரைக்கும் எழுத யாராச்சும் கேட்டிருக்காங்களா?’ எனக் கேட்டாங்க. ‘இதுவரைக்கும் கேட்கலைப்பா’ எனச் சொன்னாங்க. அதுதான் அந்த பென்சலின் கதை. எனக்கு என்ன ஆர்வம்ன்னா, அந்தப் பென்சிலை எழுதக் கேட்கப் போகிற அந்த மனிதன் யார் அப்படிங்கிறது தான் என்னோட கேள்விய இன்னும் இருந்துட்டிருக்கு. அது ஏன் அப்படின்னு இன்னும் என்னால் புரிஞ்சுக்கவே முடில.


இதற்கு முன் ‘எழுதப்படாத முகங்கள்’ என்றொரு புத்தகம் போட்டிருக்கிறார். இப்போ ‘ஈரம் காயாத கதைகள்’. நான் முதலில், யாருக்கு சமர்ப்பணம் என்பதையும், என்னுரையையும் வாழ்த்துரையையும் படிப்பேன். என்னுரையில், தனது அம்மாவை உடனிருந்து பார்த்துக் கொண்ட சுமதி மயினி பற்றி எழுதும் போது, ‘எங்கம்ம சாப்பிட்ட ஒவ்வொரு பருக்கையிலும் சுமதி மயினி பேரிருக்கும்’ எனச் சொல்றார். நீங்க எந்த நேரத்தில் சிறந்தவர்களைக் கண்டுபிடிக்க முடியுமென்றால், உடம்பு சரியில்லாத பொழுது கூட இருந்து பார்த்துபவர்களைத்தான் முக்கியமான நண்பனாகப் பார்க்க முடியும். மேலும் ஜெகன் கவிராஜ், எழுதறதுக்கு கரம் போதும், எழுத வைக்கிற வரம் என்று தன் மனைவியையும் பிள்ளைகளையும் சொல்கிறார். ஒரு முன்னுரையிலேயே, ஜெகனின் மனிதநேயமும் நன்றியுணர்வும் வெளிப்படுகிறது.


இந்நூலை சிறுகதை என்று என்னால் சொல்லமுடியவில்லை. ஜெகன் சந்தித்த மனிதர்கள் பற்றிய தொகுப்பு தான் இப்புத்தகம். சிறுகதையை விட, தான் சந்தித்த மனிதரிடம் இருக்கும்கதையை எழுதுபவனை உலகத்தின் மிகச் சிறந்த எழுத்தாளனாக மதிக்கிறேன். கதை என்பது கற்பனையில் வருவது. ஆனால் இன்னொரு மனிதனிடம் இருக்கும் அனுபவம், அவன் இறந்துவிட்டால் அவனோட போய்விடும். எழுதப் படிக்கத் தெரியாத என் அப்பாம்மாவிடம் இருக்கும் கதைகளை நான் உள்வாங்கிக்கணும் அல்லது எழுதணும். அப்ப இன்னொரு சாமானிய மனிதனிடம் இருக்கும் கதைகளை அனுபவங்களை உள்வாங்கி எவன் படைப்பாகத் தருகிறானோ அவன் இந்தச் சமுதாயத்துக்கு மிக முக்கியமானவன். அப்படியொரு புத்தகம்தான் ஜெகன் கவிராஜின் இந்த ஈரம் காயாத கதைகள் எனும் புத்தகம். ஜெகன் கவிராஜ் இதில் எதையும் மிகைப்படுத்திச் சொல்லாமல், மிக எளிமையாக வட்டார வழக்கில் சொல்லியுள்ளார். ஜெகன் இது போல் நிறைய புத்தகங்கள் எழுதவேண்டும்” என்றார்.


நிவாஸ் கே.பிரசன்னா பேசுகையில், “என் சொந்த ஊர் திருநெல்வேலிதான். ஜெகன் கவிராஜ் எனக்கு எப்படிப் பழக்கம்ன்னா, ‘மை டியர் சிஸ்டர்’ எனும் பத்திற்கு நான் மியூசிக் பண்ணேன். அப்படத்தில் அவர் நடிச்சுட்டு இருந்தார். அந்தப் படத்தின் இயக்குநர் பிரபு ஜெயராம், ‘ஜெகன்னு ஒருத்தர் இருக்கிறார். நல்லா எழுதுவார்’ எனச் சொன்னார். மியூசிக் டைரக்டர்ஸ் நாங்க எப்பவும் ஒரு பாடலாசிரியரோடு கம்ஃபர்ட் ஜோன் எதிர்பார்ப்போம். டக்குன்னு புதுசா ஒருத்தங்களிடம் மாறும்போது ஒரு சின்ன தயக்கம் இருக்கும். அதனால் நான் கொஞ்சம் தயங்கினேன். ‘இல்ல, நீங்க ட்ரை பண்ணிப் பாருங்க’ என்றார் பிரபு ஜெயராம். ‘அப்படியா!’ என ஃபோனில் ஜெகனுக்கு ஒரு சந்தம் கொடுத்தேன். அடுத்த பத்து நிமிடங்களில் முழுப் பாடல் எழுதிக் கொடுத்துட்டார். அப்படித்தான் எங்களுக்குள் பழக்கம் ஆரம்பித்து. பின் நிறையப் பேச ஆரம்பிச்சோம். ஆன்மிகம் பேசுவோம். அவரிடம் ஒரு நகைச்சுவைத்தன்மை இருக்கும். ஜெகனிடம் ஒரு ரிதம் இருப்பது தெரிய வந்தது. எல்லா கிரியேட்டர்ஸ்க்கும் ஒரு ரிதம் இருக்கு. கம்போசர்ஸா எனக்கொரு சைலன்ஸ் தேவை; ரைட்டர்ஸா அவங்க ஒரு பிளான்க் பேப்பர்ல இருந்து ஆரம்பிப்பாங்க. எல்லா கிரியேட்டர்ஸ்க்கும் சோர்ஸ் ஒன்னுதான். அந்த ரிதம் எங்களைக் கனெக்ட் பண்ணுச்சு. தொடர்ந்து பாடல்கள் எழுத ஆரம்பிச்சோம். ஒவ்வொன்றும் நன்றாக வந்தது. தாய்க்கிழவி வரை எங்க ஜர்னி வந்து. இப்ப அடுத்தது ‘மக்கள் காவலன்’ படத்திலும் பாடல் எழுதிட்டிருக்கிறார். எங்க ஜர்னி ரொம்ப நல்லா வரும் என்ற நம்பிக்கை எனக்கிருக்கிறது.


எப்பவும் அவரிடம் ஒரு பாசிட்டிவ் எனர்ஜி இருக்கும். அந்த எனர்ஜிதான் ஆர்ட்டாக மாறுகிறது என நம்புகிறேன். இந்தத் தொகுப்பில், ‘அப்பா தீபாவளி’ எனும் கதை படிச்சேன். எளிமையான மனிதர்கள் பற்றிய கதை என்றால் எனக்கு ரொம்பப் பிடிக்கும். எளிமையாக உள்ளவர்களோடு பழகினால் நம்ம மைண்ட் பயங்கரமா ரெஃப்ரெஷ் ஆகும். ஜெகன் கவிராஜ் அந்த மாதிரியான ஒருத்தர். அவரிடம் எப்ப பேசினாலும், புது விஷயங்களுக்கு ஓப்பனா இருப்பார். ஜெகன் மென்மேலும் வளர்வார். அவருக்கு வாழ்த்துகள்” என்றார்.


மு. ஜெகன் கவிராஜ் ஏற்புரை வழங்கி பேசும்போது, “என்னைக் கொண்டாடுறதுக்கு, என்னைப் பற்றிப் பேசுறதுக்கு, என்னை ரசிக்கிறதுக்கு யாருமே இருக்கமாட்டாங்க போல என மறைந்து விட்ட தேவதாஸ் அய்யாவிடம் 2014 இல் மிகத் துயரமான காலகட்டத்தில் வருத்தப்பட்டுப் பேசினேன். அப்பொழுது, அய்யா வைகுண்டரின் அகில திரட்டிலுள்ள, ‘காட்சி உனது கண் முன்னே காணும் மகனே கலங்காதே!’ எனச் சொல்லி ஆறுதல்படுத்தினார். ‘நீ என்னென்ன காட்சியெல்லாம் கற்பனை பண்ணி வச்சிருக்கியோ, அந்தக் காட்சிகளை எல்லாம் அய்யா தோன்ற வைப்பார்’ எனச் சொன்னார். இந்தக் காட்சியைச் சாத்தியப்படுத்திய அனைவருக்கும் ரொம்ப நன்றி.


எல்லோரும் என்னைப் பற்றிச் சொல்லும்போது, ‘நல்ல பையன் பாசிட்டிவா தான் பேசுவான்’ எனச் சொன்னாங்க. எல்லார் வீட்டிலும் அம்மா வளர்ப்புன்னு சொல்வாங்க. நாங்க எல்லாம் எங்க அக்கா வளர்ப்பு. ‘இந்தப் பிள்ள என்ன இவ்ளோ கருப்பா இருக்கு!’ என நாங்க எந்தப் பிள்ளையாவது கிண்டல் பண்ணா, ‘ஏலே, அக்காளும் கருப்பாதான்ல இருக்கேன். அப்ப அக்காள ஒருத்தவங்க சொல்வாங்க இல்ல. அப்ப நீங்க அக்காளைப் பத்தி நினைக்கணும்’ என அக்கா எங்களுக்குச் சொல்வாங்க. நாம எந்த ஒரு பிள்ளையைத் தப்பா பேசும்பொழுது அக்காவை நினைக்கணும்னு ஸ்கூலுக்குப் போகும்பொழுது சொல்வாங்க. அதனால் எங்க எல்லாம் தவறுதலான ஒரு சூழல் வரும்போது, நாங்க அக்காவை நினைச்சுப்போம். நாங்க அம்மாவோட வார்ப்பு, அக்காவோட வளர்ப்பு. அந்த அக்கா இன்று, என் புத்தக வெளியீட்டு விழாவிற்குத் தொகுத்துரை வழங்குவது ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கு.


‘மிகவும் கஷ்டத்தில் ஒருவன் என்னிடம் வந்தால் நான் என்ன செய்யவேண்டும்?’ என நபிகள் நாயகத்திடம் ஒருத்தன் கேட்கிறான். ‘நீ பணம் கொடு’ என்கிறார் நபிகள். ‘பணம் என்னிடம் இல்லையென்றால்?’ என்று கேட்கிறான். ‘சோறு கொடு’ என்கிறார் நபிகள். ‘சோறு இல்லைன்னா?’ என மீண்டும் கேட்கிறான். ‘தண்ணி கொடு’ என்கிறார் நபிகள். ‘தண்ணியும் இல்லைன்னா?’ எனக் கேட்டதற்கு, ‘நாலு நல்ல வார்த்தைகளையாவது கொடு’ என்கிறார் நபிகள். இந்த உலகத்தில் நாலு நல்ல வார்த்தைகள் கூட தர்மம் தான் என நபிகள் சொல்கிறார். இது மனதில் பசுமரத்தாணி போல் பதிந்துவிட்டது. அய்யா வைகுண்டரும், ‘செவ்வென்ற பேச்சு செப்பியிரு என்மகனே’ எனச் சொல்கிறார். ‘சிறந்த பேச்சைப் பேசு. என்ன நடந்துவிடப் போகுது வாழ்க்கையில்? நீ நெகட்டிவா பேசி என்னாயிடப் போகுது? சும்மா நாலு நல்ல வார்த்தை பேசு’ என அய்யா வழியில் நிறைய நல்ல மனிதர்கள் சொல்லிக் கொடுத்ததாலோ என்னவோ கதையில் எதிர்மறை பாத்திரங்களைப் படைக்க மனம் வரமாட்டேங்குது. நல்லது நினைச்சால் நிச்சயம் நல்லது நடக்கும் என்பது உண்மை.


அமீர் சாரோட ஒரு படத்தில் நடிச்சிருக்கேன். அதில் அவருக்காக ஒரு பாட்டு எழுதியிருக்கேன். அதுல ஒரு வரி, ‘பொய்ய கூட்டிச் சொன்னதில்ல, கையக் கட்டி நின்னதில்ல’ என வரும். அது அமீர் சாருக்கு நூறு சதவிகிதம் பொருந்தும். மனதில் தோன்றுவதை வாயில் மறைக்கவே தெரியாத மிகச் சிறந்த மனிதர். இந்த இடத்துல ஒரு விஷயத்தைப் பதிவு பண்ண நினைக்கின்றேன்.


இன்றைய முதல்வர் மாண்புமிகு ஜோசப் விஜய் அண்ணன், இன்னிக்கு அவர் அடைஞ்சிருக்கும் உயரம் நடக்குமா, நடக்காதா என்ற ஒரு மாதிரி கருத்துக் கணிப்பு இருக்கும்போது, அமீர் சார் ஒரு பத்திரிகையில் ஒரு வார்த்தை சொல்றார். ‘புரட்சித்தலைவர் எம்ஜியாருக்குப் பிறகு தமிழ்நாட்டில் ஒரு கூர்மையான வாள் வந்திருக்கு. அது நல்லது செய்யுமா, என்ன செய்யப் போகுதுன்னு யாருக்கும் தெரியாது’ எனச் சொன்னார். அனைவரும் அமீர் சாரை விமர்சனம் செய்தனர். ‘என்னப்பா உங்க ஆள் இப்படிச் சொல்றார்?’ எனக் கேட்டாங்க. ‘சொல்லியிருக்கார் பாருங்க’ என பதில் சொன்னேன். அவர் சொன்னது உண்மையாகிடுச்சு.


ஒரு கலைஞனின் வளர்ச்சியையும், ஒரு அரசியல் தலைவரோட வளர்ச்சியையும் கணிக்கக் கூடிய ஆற்றல் அமீர் சாருக்கு உண்டு. அவர் ஒரு சில விஷயத்தைக் கணிச்சா அது மாறவே மாறாது. நிவாஸ் K. பிரசன்னா பெரிய ஹீரோவார் எனக் கணிச்சிருக்கார். அது நடக்கும்னு நான் நம்புறேன். எனக்கு ஆசை என்னென்னா நிவாஸ் K.பிரசன்னா நடிச்சாலும், அந்தப் படத்தில் எனக்குப் பாடல் எழுத வாய்ப்புக் கொடுப்பார். நிவாஸ் K. பிரசன்னா சாரைச் சந்தித்த பின் என் வாழ்வில் என்னென்ன நடக்கிறது என்பது என் குடும்பத்தினருக்கு நன்றாகத் தெரியும். எனக்கொரு மிகப்பெரிய பாக்கியத்தை அவர் கொடுத்தார். தாய்க்கிழவி மேடைக்கு முன், ஒரு பாட்டுக்குப் பத்தாயிரம், பதினஞ்சாயிரம் என வந்ததென்றால், அதற்குப் பின், ‘ஒரு பாட்டுக்கு எவ்ளோ சம்பளம் வாங்குறீங்க?’ எனக் கேட்கிறாங்க. இந்த வார்த்தையைக் கேட்க எத்தனை வருஷம் ஆகியிருக்கு! அதற்குக் காரணம் நிவாஸ் சார்தான். அவருக்கு மனமார்ந்த நன்றி. அனைவருக்கும் அன்பும் நன்றியும்” என்றார்.


நிறைவாக இயக்குநரும் நடிகருமான அமீர் பேசுகையில் , “தாரே ஜமீன் பர் படத்தில் வரும் சிறுவனின் இன்னொரு வெர்ஷன் தான் நான். புத்தகத்தைப் பார்த்தாலே ஒரு பதற்றம் வரும். இந்த மேடைக்கு வரக் காரணம் புத்தகம் அல்ல. அந்தப் புத்தகத்தை எழுதிய நபர்தான் காரணம். ஏன் அவருக்காக நான் வருகிறேன் என்றால், உடன்பிறந்த சகோதரி தொகுத்து வழங்கப் புத்தகத்தைப் பெற்றோர் இருவரும் வாங்கிக் கொள்ளும் பாக்கியம் இருக்கு இல்லையா, ஒரு மனிதன் தன் வாழ்க்கையில் வெற்றி அடைஞ்சுட்டான் என்கிற தருணம் அது. தன்னை இந்தச் சமூகம் ஒத்துக் கொண்டதுன்னு சொல்ற இடம் இருக்கில்லையா, அதைத் தன் குடும்பத்தார்க்கு உணர்த்தும் இடமிருக்கில்லையா, இந்த மாதிரி யார் விழா எடுத்தாலும் அந்த விழாவிற்குப் போவது என் வழக்கம். காரணம் எனக்கு இப்படியொரு விழா நடக்கவே இல்லை. நான் திரைத்துறைக்கு வந்து 25 ஆண்டுகள் ஆகின்றது. என்னுடைய எந்தப் படத்திற்கும் வெற்றி விழா நடந்ததில்லை. என் படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு என் குடும்பத்தினர் வந்ததில்லை. அதனால் தான் யாராவது தன் உறவுகளோடு, ஒரு ஆளாகியிருக்கிறேன் என நிற்கும்பொழுது பக்கத்தில் நிற்க வேண்டியது என் கடமைன்னு நினைக்கிறேன். இதை விட பெரிய வெற்றி என்ன ஒரு மனிதன் அடைந்து விட முடியும்? ஜெகன் கவிராஜின் பெற்றோர் சென்னைக்கு வந்து முதல் முறையாக இப்படியொரு அரங்கில் மகனைப் பார்க்கிறார்கள் என்றால், இதுதான் ஒரு மனிதன் அடைந்த உயரம்.


திருநெல்வேலி பக்கத்தில் பூலாங்குளம் எனும் கிராமத்தில், டீக்கடையும் விவசாயமும் பார்த்த பெற்றோர்கள் ஆறாவதோடு படிப்பை நிறுத்தி பீடி பிடித்துக் கொண்டிருந்த ஜெகன், ஏதோ ஒரு மில்லில் போய் வேலை பார்க்க, பதினாறு வயசில் இப்படியிருந்தா கெட்டுப் போயிடுவான்னு உறவினர்கள் சேர்ந்து காஞ்சிபுரத்துக்கு அனுப்பி வைக்கிறாங்க. காஞ்சிபுரத்தில் காயிலாங்கடை வியாபாரத்திலும், பின் கேரளாவுக்குப் போய் மண்ணு சுமக்கிற வேலை பார்த்திருக்கார். திருச்சியில தெரு தெருவாகப் போய் பாத்திர வியாபாரம் பார்க்கிறார். பழைய புத்தகக் கடையில் எடைக்குப் புத்தகம் போடுவாங்க இல்ல, அதுல வர்ற புத்தகங்களைப் படிச்சு ஏற்பட்ட வாசிப்புப் பழக்கம் தான் இவரை இங்க கொண்டு வந்து உட்கார வச்சிருக்கு. அதன் பின், ஏக இறைவனை வழிபடும் முற்போக்கான சிந்தனையும், இடதுசாரி சிந்தனையும் கொண்ட அய்யா வழில நுழைகிறார். சென்னைக்கு வந்து வெற்றிவேந்தன் ஆஃபீஸ்ல வேலை செய்து, அவங்க கம்பெனி எடுத்த நாகேஷ் திரையரங்கம் படத்தில் கடைசி அசிஸ்டென்ட்டாகச் சேர்ந்து, அந்த கம்பெனியிலேயே கேஷியராக வேலை பார்த்து, அதன் பின் பாட்டெழுதி, அப்புறம் மீடியாவிற்குள் வந்து, அப்புறம் ‘ஜீரக பிரியாணி’ பாடல், தாய்க்கிழவி படத்தில் பாட்டெழுதி, இப்போ நான் நடிச்சிட்டிருக்கிற படத்துக்குப் பாட்டு எழுதி, ஒரு புத்தகம் எழுதி சென்னையில் பெரிய வெளியீட்டு விழா நடத்துறார். இந்த மாதிரியான ஆட்களைச் சமூகத்துக்கு அறிமுகப்படுத்த வேண்டிய பொறுப்பு இருப்பதாக நான் நினைக்கிறேன். ஜெகனின் சிந்தனைக்கும், எண்ணத்துக்கும், அவர் சந்தித்த மனிதர்களையும், அவரது வட்டாரக் கதைகளையும் புத்தகமாகக் கொண்டு வந்ததற்கு அவருக்கு வாழ்த்துகளும் நன்றியும்” என்றார்.

Filmmaker Gowtham Sivaraman debut directorial*

 *அறிமுக இயக்குநர் படத்தில் சிவராஜ்குமார் - அபிஷன் ஜீவிந்த்*



*டிராமா கம்பெனி தயாரிப்பாளர் பாலமுருகன்.அ தயாரிக்கும் படத்தில் நடிக்கும் சிவராஜ்குமார் - அபிஷன் ஜீவிந்த்*


*டாக்டர் சிவராஜ்குமார் - அபிஷன் ஜீவிந்த் இணையும் படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இனிதே துவங்கியது!*



எப்போதுமே தரமான மற்றும் அர்த்தமுள்ள பொழுதுபோக்குத் திரைப்படங்களை வழங்கும் தயாரிப்பு நிறுவனங்களை தமிழ் சினிமா இருகரம் கூப்பி வரவேற்றிருக்கிறது. அந்த வகையில், பெரும் கனவுகள், லட்சியங்கள் மற்றும் ஒரு சிறந்த பொழுதுபோக்கு கதையோடு தமிழ் திரையுலகில் கால்பதிக்கிறது பாலமுருகன்.அ தலைமையிலான புதிய தயாரிப்பு நிறுவனம் ‘டிராமா கம்பனி’ (Drama Company).


இன்னும் பெயரிடப்படாத இப்புதிய திரைப்படத்தில், கன்னட சூப்பர் ஸ்டார் டாக்டர் சிவராஜ்குமார்‌ மற்றும் இயக்குநராக 'டூரிஸ்ட் ஃபேமிலி' (Tourist Family) என்ற பிளாக்பஸ்டர் வெற்றியையும், நடிகராக 'வித் லவ்' (With Love) திரைப்படம் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த திறமையான இளம் நடிகர் அபிஷன் ஜீவிந்த் ஆகிய இருவரும் முதன்மை பாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்தப் படத்தில் ஷிவானி நாகாரம் கதாநாயகியாக நடிக்கிறார்.


இத்திரைப்படத்தின் மூலம் கௌதம் சிவராமன்‌ இயக்குநராக தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார். இப்படத்தின் துவக்க விழா மற்றும் பூஜை முன்னணி பிரமுகர்கள் முன்னிலையில் பாரம்பரிய முறைப்படி சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது.


இந்நிகழ்வில் தயாரிப்பாளர் சௌந்தர்யா ரஜினிகாந்த், மகேஷ் ராஜ், இயக்குநர் சி. பிரேம்குமார், தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு, நடிகர் மணிகண்டன், கென் கருணாஸ், தயாரிப்பாளர் ஆர்.டி. ராஜா, ஆவுடையப்பன், நடிகர் ரிஷிகாந்த், பிரபு ராம் வியாஸ், மதன், கருப்பையா சி. ராம் உள்ளிட்ட திரைத்துறையைச் சேர்ந்த பல முக்கிய பிரபலங்கள் கலந்துகொண்டு படக்குழுவினரை வாழ்த்தினர்.


டாக்டர் சிவராஜ்குமார், அபிஷன் ஜீவிந்த் மற்றும் ஷிவானி நாகாரம் ஆகியோருடன், 'ஹார்ட்பீட்' மற்றும் 'டூரிஸ்ட் ஃபேமிலி' மூலம் புகழ்பெற்ற யோகலட்சுமி, பிக் பாஸ் புகழ் கானா வினோத், சங்கீதா மாதவன், பெஞ்சமின் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.


தொழில்நுட்பக் கலைஞர்கள்:

இசை: லியோன் ஜேம்ஸ்

ஒளிப்பதிவு: பிரகதீஷ் பிரபு

படத்தொகுப்பு: சுரேஷ்

ஆடை வடிவமைப்பு: சுவாதி ராமகிருஷ்ணன்


இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. படத்தின் தலைப்பு மற்றும் அடுத்தடுத்த சுவாரசியமான அறிவிப்புகளை தயாரிப்பு நிறுவனம் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிட உள்ளது.*Drama Company Producer Balamurugan A presents* 


*Filmmaker Gowtham Sivaraman debut directorial*


*Dr. Shivarajkumar-Abhishan Jeevinth starrer movie project launched. Shooting kick starts !* 


Tamil cinema has always embraced production houses driven by passion and a vision to create meaningful entertainers. Joining this vibrant space with dreams, ambition, and an entertaining story is Drama Company, a new production house headed by Balamurugan.


This yet-to-be-titled film features Kannada Superstar Dr. Shivarajkumar and Abishan Jeevinth, who has delivered a Blockbuster Hit ‘Tourist Family’ as Director and ‘With Love’ as a promising hero in the lead roles. Blockbuster hit Telugu film “Little Hearts” fame Shivani Nagaram has been signed to play the female lead and also “Heart Beat” Hotstar series, “Tourist Family” fame Yogalakshmi plays another female lead. 


The film marks the directorial debut of Gowtham Sivaraman. 


The project was launched with a traditional pooja ceremony in Chennai, attended by several eminent personalities from the film industry, including Producer Soundarya Rajinikanth, Mahesh Raj, C. Premkumar, Producer Kalaipuli S. Thanu, Actor Manikandan, Ken Karunas, Producer R.D. Raja, Avudaiappan, Actor Rishikanth, Prabhu Ram Vyas, Madhan, Karuppiah C. Ram, and others.


The prominent supporting cast includes Bigg Boss fame Gana Vinoth, Sangeetha Madhavan, Benjamin, and many others.


Music for the film is composed by Leon James, while cinematography is handled by Pragadeesh Prabhu. Editing is overseen by Suresh Kumar, and Swathi Ramakrishnan is handling costumes.


The film’s shooting is progressing at a brisk pace in Chennai, with the production house set to unveil more exciting updates soon.

மலையாள ZEE5, பேட்ரியாட் திரைப்படத்தின் டிஜிட்டல் பிரீமியரை ஜூன் 5 அன்று அறிவித்துள்ளது*

 *மலையாள ZEE5, பேட்ரியாட் திரைப்படத்தின் டிஜிட்டல் பிரீமியரை ஜூன் 5 அன்று அறிவித்துள்ளது*



இந்தியா, 22 மே 2026: மலையாள ZEE5, புகழ்பெற்ற இயக்குநர் மகேஷ் நாராயணன் இயக்கிய பரபரப்பான அரசியல் திரில்லர் திரைப்படமான பேட்ரியாட் -ஐ ஜூன் 5 அன்று வெளியிடத் தயாராக உள்ளது. இப்படம் மலையாளம், இந்தி, தெலுங்கு, தமிழ் மற்றும் கன்னட மொழிகளில் வெளியாகும்.


18 ஆண்டுகளுக்குப் பிறகு மலையாள திரையுலகின் இரு மிகப்பெரிய நட்சத்திரங்களான மம்முட்டி மற்றும் மோகன்லாலை மீண்டும் ஒன்றிணைக்கும் இந்தப் படத்தில், நயன்தாரா, ஃபஹத் ஃபாசில் மற்றும் குஞ்சாக்கோ போபன் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.


உளவு, அரசியல், தொழில்நுட்பம் மற்றும் உணர்ச்சிப்பூர்வமான நாடக அம்சங்களை இணைக்கும் பேட்ரியாட், ரகசியமும் அதிகாரமும் நிறைந்த ஒரு அமைப்பில் கட்டுப்பாடற்ற கண்காணிப்பின் ஆபத்தான விளைவுகளை ஆராய்கிறது.


இந்தக் கதையின் மையத்தில், நாட்டைப் பாதுகாக்கும் என்ற நம்பிக்கையில் ஒரு அதிநவீன அரசு கண்காணிப்பு திட்டத்தை உருவாக்க உதவிய மனிதர் ஒருவர் உள்ளார். ஆனால், அந்த அமைப்பு குற்றமற்ற குடிமக்களுக்கு எதிராக சூழ்ச்சி, மிரட்டல் மற்றும் கட்டுப்பாட்டின் மூலம் ஆயுதமாக பயன்படுத்தப்படுவதை அவர் கண்டறியும் போது, அவர் நம்பிய அனைத்தையும் கேள்வி கேட்கத் தள்ளப்படுகிறார்.


தான் உருவாக்க உதவிய அதே அமைப்புக்கு எதிராக அவர் திரும்பும் போது, பேட்ரியாட், தேசபக்திக்கும் துரோகத்திற்கும் இடையிலான மங்கலான கோட்டைப் பற்றி பேசுவதுடன், உண்மையை வெளிப்படுத்துவது ஒருவரை துரோகியா அல்லது உண்மையான தேசபக்தரா ஆக்குகிறது என்ற கேள்வியையும் எழுப்புகிறது.


இந்திய சமூக-அரசியல் பின்னணியில் அமைந்திருந்தாலும், கண்காணிப்பு மற்றும் தனியுரிமை குறித்த உலகளாவிய கவலைகளை மையமாகக் கொண்ட பேட்ரியாட், மிகப்பெரிய சதித் திட்டத்தை உணர்ச்சிப்பூர்வமான சினிமா அனுபவமாக மாற்றுகிறது.


மகேஷ் நாராயணனின் கூர்மையான கதை சொல்லலும், மம்முட்டி, மோகன்லால், நயன்தாரா, ஃபஹத் ஃபாசில் மற்றும் குஞ்சாக்கோ போபன் ஆகியோரின் சக்திவாய்ந்த திரைநிகழ்வும் இணைந்து, இப்படம் தீவிரமான மற்றும் சிந்திக்க வைக்கும் அனுபவத்தை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இந்தப் படத்தில் ரேவதி, ராஜீவ் மேனன், தர்ஷனா ராஜேந்திரன் மற்றும் ஸரின் ஷிஹாப் உள்ளிட்ட பலரும் முக்கிய துணை வேடங்களில் நடித்துள்ளனர்.


இயக்குநர் மகேஷ் நாராயணன் கூறியதாவது:


“பேட்ரியாட் என்பது நாம் இன்று வாழும் காலத்தின் அச்சங்களை பிரதிபலிக்கும் ஒரு கதை. மக்களை பாதுகாக்க உருவாக்கப்பட்ட தொழில்நுட்பமே, பயமும் கட்டுப்பாடும் ஏற்படுத்தும் கருவியாக மாறும் உலகை இது பேசுகிறது. இந்தக் கதையில் என்னை அதிகமாக ஈர்த்தது அதன் மையத்தில் இருக்கும் உணர்ச்சிப்பூர்வமான மோதல் — ஒருகாலத்தில் முழுமையாக நம்பிய ஒன்றின் விளைவுகளை எதிர்கொள்ள வேண்டிய நிலைக்கு தள்ளப்படும் ஒரு மனிதனின் பயணம். நாடு முழுவதும் உள்ள பார்வையாளர்கள் பேட்ரியாட் திரைப்படத்தை மலையாள ZEE5-ல் அனுபவிப்பதை நான் ஆவலுடன் எதிர்நோக்குகிறேன்.”



மம்முட்டி கூறியதாவது:


“பேட்ரியாட் திரைப்படத்தை வலுவானதாக மாற்றுவது, அதன் பிரம்மாண்ட அளவுக்கும் அரசியல் பதற்றத்திற்கும் அடியில், இது மனசாட்சி, பொறுப்பு மற்றும் தைரியம் பற்றிய மிகவும் ஆழமான மனிதக் கதையாக இருப்பதுதான். இந்தப் படம் கடினமான கேள்விகளை எழுப்புவதோடு உணர்ச்சிப்பூர்வமாகவும் நெருக்கமாகவும் இருக்கும். மலையாள ZEE5-ல் பார்வையாளர்கள் இதைப் பார்க்கவிருப்பதை நான் எதிர்பார்க்கிறேன்.”


மோகன்லால் கூறியதாவது:


“பேட்ரியாட் நாம் இன்று வாழும் உலகைப் பற்றி பேசுகிறது, அங்கு உண்மையும் அதிகாரமும் தொடர்ந்து மோதிக்கொண்டே இருக்கின்றன. சினிமாத்தன்மையும் ஆழமான பொருத்தத்தையும் கொண்ட ஒரு படத்தின் பகுதியாக இருப்பது மிகவும் உற்சாகமாக இருந்தது. பல ஆண்டுகளுக்குப் பிறகு மம்முட்டியுடன் இப்படிப்பட்ட கதைக்காக மீண்டும் இணைந்தது இந்த அனுபவத்தை இன்னும் சிறப்பாக மாற்றியது.”


மலையாளம், இந்தி, தெலுங்கு, தமிழ் மற்றும் கன்னட மொழிகளில் வெளியாகும் பேட்ரியாட் திரைப்படத்தை ஜூன் 5 முதல் மலையாள ZEE5-ல் தவறவிடாமல் பாருங்கள்!


ZEE5 பற்றி


ZEE5 என்பது இந்தியாவின் மிகப்பெரிய உள்நாட்டு வீடியோ ஸ்ட்ரீமிங் தளமாகும். இது கோடிக்கணக்கான பொழுதுபோக்கு ரசிகர்களுக்கான பன்மொழி கதை சொல்லும் தளமாக விளங்குகிறது. உலகளாவிய உள்ளடக்க சக்தியாக விளங்கும் ZEE Entertainment Enterprises Limited நிறுவனத்தின் ஒரு பகுதியாக ZEE5 செயல்படுகிறது.


வீடியோ-ஆன்-டிமாண்ட் தளங்களில் முன்னணி தேர்வாக விளங்கும் ZEE5, 4,071+ திரைப்படங்கள், 1,800+ டிவி நிகழ்ச்சிகள், 422+ வெப் ஒரிஜினல்கள், 4,492+ இசை வீடியோக்கள் மற்றும் 1.35 லட்சம் மணிநேரங்களுக்கு மேற்பட்ட ஆன்-டிமாண்ட் உள்ளடக்கங்களைக் கொண்ட விரிவான நூலகத்தை வழங்குகிறது.


இந்த தளம் இந்தி, தமிழ், தெலுங்கு, பெங்காலி, மலையாளம், கன்னடம், மராத்தி, ஆங்கிலம், ஒடியா, போஜ்புரி, குஜராத்தி மற்றும் பஞ்சாபி உள்ளிட்ட 12 மொழிகளில் 7 தனிப்பயன் மற்றும் ஹைப்பர்-லோக்கல் சந்தா தொகுப்புகளை வழங்குகிறது. இதில் ஒரிஜினல் தொடர்கள், இந்திய மற்றும் சர்வதேச திரைப்படங்கள், டிவி நிகழ்ச்சிகள், குழந்தைகளுக்கான உள்ளடக்கம், செய்திகள் மற்றும் Live TV ஆகியவை அடங்கும்.


உலகளாவிய தொழில்நுட்ப நிறுவனங்களுடன் இணைந்து செயல்படும் வலுவான டீப்-டெக் அமைப்பின் மூலம், ZEE5 பல்வேறு சாதனங்கள், சூழல்கள் மற்றும் இயக்க முறைமைகளில் இடையறாத அனுபவத்தை வழங்குகிறது.


Facebook, Instagram, LinkedIn மற்றும் X தளங்களில் ZEE5-ஐ பின்தொடருங்கள்.

தத் த்வம் அஸி” (2026) படத்தின் படப்பிடிப்பு இனிதே துவங்கியது!!

 *“தத் த்வம் அஸி” (2026) படத்தின் படப்பிடிப்பு இனிதே துவங்கியது!!*



ஆன்மீகம், பக்தி மற்றும் ஆக்சன் கலந்த பிரம்மாண்டமான திரைப்படமாக உருவாகும் “தத் த்வம் அஸி” (2026) படத்தின் படப்பிடிப்பு நேற்று (மே 26) இனிதே துவங்கியுள்ளது. தந்த்ரா ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகும் இந்த திரைப்படம், அறிவிக்கப்பட்ட தருணத்திலிருந்தே ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது.


இப்படத்தின் முன் தயாரிப்பு பணிகள் கடந்த பிப்ரவரி 26ஆம் தேதி தொடங்கப்பட்ட நிலையில், சரியாக மூன்று மாதங்களுக்குள் அனைத்து திட்டமிடல்களும் நிறைவு செய்யப்பட்டு இன்று படப்பிடிப்பு துவங்கியுள்ளது. திரைப்பட உலகில் இத்தகைய துல்லியமான திட்டமிடல் படக்குழுவின் அர்ப்பணிப்பை வெளிப்படுத்துவதாக பார்க்கப்படுகிறது.


படப்பிடிப்பு துவக்க நிகழ்வில் இயக்குநர் வெங்கட் பிரபு கிளாப் அடிக்க, இயக்குநர் பொன்ராம் கேமராவை ஆன் செய்து படக்குழுவை வாழ்த்தினார். ஆன்மீக சூழலில் நடைபெற்ற இந்த தொடக்க விழா படக்குழுவிற்கு சிறப்பான தொடக்கமாக அமைந்தது.


மலையாளத்தில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற “மாளிகப்புரம்” படத்தின் இயக்குநர் விஷ்ணு சசி சங்கர் இந்த திரைப்படத்தை இயக்குகிறார். ஆன்மீக கதைகளை உணர்வுபூர்வமாக காட்சிப்படுத்தும் அவரது அனுபவம், “தத் த்வம் அஸி” திரைப்படத்திற்கு பெரிய பலமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இந்த படத்தில் வைபவ் மற்றும் மீனாட்சி கோவிந்தராஜன் முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இவர்களுடன் அரவிந்த் ஆகாஷ், ஆடுகளம் நரேன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் இணைந்துள்ளனர்.


பக்தி, நம்பிக்கை மற்றும் ஆன்மீக உணர்வுகளை மையமாகக் கொண்டு, அதனுடன் ஆக்சன் மற்றும் உணர்ச்சி கலந்த பொழுதுபோக்கு அம்சங்களையும் சேர்த்து இந்த திரைப்படம் உருவாக்கப்படவுள்ளது. குடும்ப ரசிகர்களையும் இளைஞர்களையும் ஒருசேர கவரும் வகையில் இப்படத்தின் திரைக்கதை வடிவமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.


இந்த திரைப்படத்தை JK சரவணா மற்றும் JK சதீஷ் தயாரிக்கின்றனர். இசையை பிரேம் ஜி அமரன் அமைக்கிறார். ஒளிப்பதிவை யுவன் செல்வா கவனிக்க, படத்தொகுப்பை பிரவீன் KL மேற்கொள்கிறார். கலை இயக்குநராக சூர்யா ராஜிவன் பணியாற்றுகிறார். சண்டைக் காட்சிகளை சக்தி சரவணன் வடிவமைக்கிறார்.


எழுத்தாளர்களாக ஆதித்யா தங்கீராலா, நந்தகுமார் தமிழ்செல்வன் மற்றும் ப்ருத்வி ஆதித்யா இணைந்துள்ளனர்.


மேலும், தந்த்ரா ஃபிலிம்ஸ் நிறுவனம் அறிவித்துள்ள மற்றொரு முக்கியமான திரைப்படமான “ஆர்ய கேரள வர்மன்” படமும் வரலாறு மற்றும் ஆன்மீக பின்னணியில் உருவாகி வருவது குறிப்பிடத்தக்கது.


இந்த வருடம் ஐயப்ப மண்டல காலத்தை முன்னிட்டு “தத் த்வம் அஸி” திரைப்படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆன்மீக உணர்வுகளுடன் மாஸ் அம்சங்களும் கலந்த இந்த படம் ரசிகர்களிடம் பெரிய வரவேற்பைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

*ரோமியோ பிக்சர்ஸ் தயாரிப்பில் ஆகாஷ் முரளி நடிக்கும் புதிய திரைப்படம் பூஜையுடன் இனிதே துவக்கம்

 *ரோமியோ பிக்சர்ஸ் தயாரிப்பில் ஆகாஷ் முரளி நடிக்கும் புதிய திரைப்படம் பூஜையுடன் இனிதே துவக்கம்!* 



*தமிழக பள்ளிக்கல்வித் துறை,

தமிழ் வளர்ச்சித் துறை, 

செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் ராஜ் மோகன் துவங்கி வைத்த ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனத்தின் புதிய படம் !!*


தமிழ் சினிமாவில் தரமான மற்றும் வெற்றிப் படைப்புகளை தொடர்ந்து வழங்கி வரும் ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனத்தின் அடுத்த பிரம்மாண்ட தயாரிப்பு சிறப்பான பூஜையுடன் துவங்கியது. ரோமியோ பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் ராகுல் தயாரிக்கும் இப்படத்தில் நடிகர் ஆகாஷ் முரளி கதாநாயகனாக நடிக்கிறார். அறிமுக இயக்குநர் ஹர்ஷவரதன் இப்படத்தை இயக்குகிறார்.


இப்படத்தின் துவக்க விழாவில் தமிழக பள்ளிக்கல்வித் துறை, தமிழ் வளர்ச்சித் துறை, செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் ராஜ் மோகன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு படக்குழுவினருக்கு தனது வாழ்த்துகளைத் தெரிவித்ததுடன், படத்தை அதிகாரப்பூர்வமாக துவக்கி வைத்தார். குறிப்பிடத்தக்க வகையில், அமைச்சர் ராஜ் மோகன் தனது முதல் இயக்குநர் முயற்சியான “பாபா பிளாக் ஷீப்” திரைப்படத்தை ரோமியோ பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்கியிருந்தார். தற்போது அமைச்சராக பொறுப்பேற்றுள்ள அவர், அதே நிறுவனத்தின் புதிய திரைப்படத்தை துவக்கி வைத்தது நிகழ்வுக்கு மேலும் சிறப்புச் சேர்த்தது.


மேலும், முன்னணி இயக்குநர் ஹெச். வினோத் மற்றும் நடிகர் ரவி மோகன் ஆகியோர் விழாவில் கலந்துகொண்டு படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.



இயக்குநர் ஹெச். வினோத் அவர்களிடம் இணை இயக்குநராக பணியாற்றிய ஹர்ஷவரதன், இந்த திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.


1970-களின் தொடக்க காலத்தை பின்னணியாகக் கொண்டு உருவாகும் இப்படம், குதிரைப் பந்தய உலகை மையமாகக் கொண்டு நேர்மையும் உயர்ந்த லட்சியங்களும் கொண்ட ஒரு இளைஞனின் போராட்டம், கனவுகள் மற்றும் வெற்றிப் பயணத்தை சுவாரஸ்யமாகச் சொல்லும் கதையாக உருவாகவுள்ளது.


1970-களின் சென்னையை திரையில் உயிர்ப்பிக்க, படக்குழு தற்போது தீவிரமான முன்தயாரிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகிறது. அந்தக் காலகட்டத்தின் வாழ்க்கை முறை, கலாச்சாரம் மற்றும் நகரின் தனித்துவமான சூழலை மிக நுணுக்கமாக திரையில் பதிவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.


தமிழ் சினிமாவில் மாறுபட்ட கதைக்களங்களையும், வணிக ரீதியான வெற்றிகளையும் தொடர்ந்து வழங்கி வரும் ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம், இந்த திரைப்படத்தையும் மிகப்பெரிய பொருட்செலவில் பிரம்மாண்டமாக தயாரிக்கிறது.


இப்படத்தில் நடிக்கவுள்ள மற்ற நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.

சென்னையில் கோலாகலமாக நடைபெற்ற ‘பெத்தி’ திரைப்பட பத்திரிகையாளர் சந்திப்பு*

 *சென்னையில் கோலாகலமாக நடைபெற்ற ‘பெத்தி’ திரைப்பட பத்திரிகையாளர் சந்திப்பு 



மெகா பவர் ஸ்டார் ராம் சரண் நடிப்பில் உருவாகியுள்ள பிரம்மாண்ட கிராமத்து விளையாட்டு திரைப்படமான ‘பெத்தி’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.


இயக்குநர் புச்சி பாபு சனா இயக்கத்தில், வெங்கட சதீஷ் கிலாரு தயாரிப்பில் உருவாகியுள்ள ‘பெத்தி’, ஒரு கிராஸ்ஓவர் தடகள வீரரின் ஊக்கமூட்டும் மற்றும் உணர்ச்சிப்பூர்வமான பயணத்தை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளது. கிராமத்து விளையாட்டு பின்னணியுடன் ஆக்ஷன், உணர்வுகள் மற்றும் வெற்றிக்கான போராட்டத்தை இணைத்து உருவாக்கப்பட்டுள்ள இப்படம், ரசிகர்களிடையே ஏற்கனவே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.


பான்-இந்தியா அளவில் உருவாகியுள்ள ‘பெத்தி’ திரைப்படம், தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி உள்ளிட்ட மொழிகளில் வரும் ஜூன் 4ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதனை முன்னிட்டு தயாரிப்பாளர் வெங்கட சதீஷ் கிலாரு தலைமையிலான படக்குழு நாடு முழுவதும் தீவிரமான புரமோஷன் பணிகளை மேற்கொண்டு வருகிறது.


இதன் ஒரு பகுதியாக சென்னையில் நடைபெற்ற சந்திப்பில், படக்குழுவினர் கலந்து கொண்டு, திரைப்படம் குறித்த பல சுவாரஸ்ய தகவல்கள் பகிர்ந்து கொண்டனர்.


இந்நிகழ்வினில்… ஒளிப்பதிவாளர் ஆர். ரத்னவேலு பேசியதாவது..,


“நீண்ட நாட்களுக்குப் பிறகு உங்களைச் சந்திப்பதில் மிகவும் மகிழ்ச்சி. சேது, வாரணம் ஆயிரம், எந்திரன் போன்ற படங்கள் எனது திரைப்பயணத்தில் முக்கிய மைல்கற்களாக அமைந்தது போல, பெத்தி திரைப்படமும் எனக்கு மிகவும் முக்கியமான படமாக இருக்கும்.


இயக்குநர் புச்சி பாபு இந்தப் படத்திற்காக அற்புதமான திரைக்கதையை எழுதியிருக்கிறார். ஒரு திரைப்படம் காகிதத்தில் எழுதப்படலாம். ஆனால் அதற்கு உயிர் கொடுப்பது இசை, காட்சியமைப்பு மற்றும் சிறந்த நடிப்புதான். பெத்தி படத்தில் இவை அனைத்தும் மிகச் சிறப்பாக ஒன்றிணைந்துள்ளன. இந்தப் படம் நிச்சயமாக ரசிகர்களிடம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.


இது வெறும் படம் பார்த்து வெளியே வரும் அனுபவமாக இருக்காது. திரையரங்கில் முழுமையாக மூழ்கடிக்கும் அனுபவமாக இருக்கும். அதே நேரத்தில், படத்தில் ஒரு வலுவான கருத்தும் இருக்கிறது. படம் முடிந்து வெளியே வந்த பிறகும் அதன் தாக்கம் நீண்ட நாட்கள் உங்கள் மனதில் இருக்கும்.


சிவராஜ் குமார் சார் இந்தப் படத்தில் அற்புதமான நடிப்பை வழங்கியிருக்கிறார். ஒரு குரு என்ற கதாபாத்திரத்திற்கு அவர் அளித்திருக்கும் வலிமை மிகவும் சிறப்பானது. திவ்யேந்துவும் தனது அனுபவத்தையும் திறமையையும் வெளிப்படுத்தியிருக்கிறார். அவரின் நடிப்பை படம்பிடிக்கும்போது சரியான கோணத்தைத் தேர்வு செய்யவே கேமரா தேடியது என்று சொல்லலாம்.


இந்தப் படத்தின் வெற்றிக்காக எனது உதவி இயக்குநர்கள் முதல் ஒவ்வொரு தொழில்நுட்பக் கலைஞரும் தங்களது முழு பங்களிப்பையும் வழங்கியுள்ளனர்.


ராம் சரண் பற்றி குறிப்பாக சொல்ல வேண்டும். இந்தப் படத்திற்காக அவர் முழுமையாக தன்னை அர்ப்பணித்திருக்கிறார். ஒரு தோற்றத்திலிருந்து மற்றொரு தோற்றத்திற்கு மாறுவது என்பது வெறும் உடை மாற்றம் அல்ல. முழுமையான உடல் மாற்றம். கிரிக்கெட் வீரராகத் தோன்ற வேண்டிய கட்டத்தில் இருந்து, பின்னர் மண்ணின் மணம் வீசும் ஒரு கிராமத்து இளைஞனாகவும், அதன் பிறகு உடற்கட்டுடன் கூடிய வேறொரு பரிமாணத்திலும் அவர் தன்னை மாற்றிக் கொண்டார். அதற்காக தினமும் பல மணி நேரங்கள் கடுமையாக பயிற்சி செய்து உழைத்தார். இன்று அனைவரும் அவரது தோற்றத்தைப் பாராட்டுகிறார்கள் என்றால், அதன் பின்னால் மிகப்பெரிய அர்ப்பணிப்பும் ஒழுக்கமும் இருக்கிறது. பின்னர் கதையின் மற்றொரு கட்டத்தில் அவரது வாழ்க்கை கீழிறங்கும் தருணங்களிலும், அதற்கேற்றவாறு தனது தோற்றத்தையும் நடிப்பையும் முழுமையாக மாற்றியுள்ளார். இது ராம் சரணின் மிகச் சிறந்த கதாபாத்திரங்களில் ஒன்றாக இருக்கும் என்று நான் நம்புகிறேன். ஒவ்வொரு விளையாட்டையும் கற்றுக்கொண்டு, அதற்கான ஒழுக்கத்தைப் பின்பற்றி அவர் இந்தக் கதாபாத்திரத்தை உருவாக்கியுள்ளார்.


மேலும், இசைப்புயல் A. R. ரஹ்மான் சார் எங்களுடன் மீண்டும் இணைந்திருப்பது மிகுந்த மகிழ்ச்சி. எந்திரன் படத்திற்குப் பிறகு இந்தக் கூட்டணி மீண்டும் உருவாகியுள்ளது. அவரது இசையும் இந்தப் படத்தின் மிகப்பெரிய பலமாக இருக்கும்.இந்தப் படத்தை அனைவரும் திரையரங்கில் கண்டு ரசிப்பீர்கள் என்று நம்புகிறேன். நன்றி.


நடிகர் திவ்யேந்து சர்மா பேசியதாவது..,


“இங்கு இருப்பதில் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. குறிப்பாக, பெத்தி திரைப்படத்தின் மூலம் தெலுங்கு சினிமாவில் நான் அறிமுகமாக இருப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியையும் பெருமையையும் அளிக்கிறது.


ஒரு நடிகராக என் கம்ஃபர்ட் ஜோனை விட்டு வெளியே வந்து, புதிதாக ஏதாவது முயற்சி செய்வதற்கான அருமையான வாய்ப்பாக இந்த படம் அமைந்தது. ஒவ்வொரு கலைஞரும் தங்களிடம் இருக்கும் திறமைகளை முழுமையாக வெளிப்படுத்தும் ஒரு வாய்ப்பை கனவு காண்பார்கள். அந்த வாய்ப்பை எனக்கு வழங்கிய படம் தான் பெத்தி.


இந்த பயணம் இயக்குநர் புச்சி பாபு சாருடன் தொடங்கியது. அவர் ஒரு சிறந்த மனிதர், சிறந்த இயக்குநர், அதைவிட சிறந்த நண்பர். இந்த வாய்ப்பை எனக்கு வழங்கியதற்கும், கதாபாத்திரத்தை என் பாணியில் வெளிப்படுத்துவதற்கான சுதந்திரத்தை அளித்ததற்கும் அவருக்கு மனமார்ந்த நன்றி. அவருடன் பணியாற்றியது மிகவும் அழகான அனுபவமாக இருந்தது.


ராம் சரண் சார், உங்களுக்கு நன்றி சொல்ல வார்த்தைகளே இல்லை. முதல் நாளிலிருந்தே நீங்கள் காட்டிய அன்பும் அரவணைப்பும் என்னை மிகவும் சுதந்திரமாக உணர வைத்தது. அந்த நினைவுகளை நான் எப்போதும் மனதில் வைத்திருப்பேன். ஒரு அற்புதமான மனிதராகவும், இணை நடிகராகவும் இருந்ததற்கு நன்றி.


இசைப்புயல் A. R. ரஹ்மான் சார் குறித்து என்ன சொல்வது? நீங்கள் ஒரு ஜாம்பவான். நீங்கள் இடம்பெற்றுள்ள ஒரு படத்தில் நானும் ஒரு பகுதியாக இருப்பது எனக்கு மிகப்பெரிய கௌரவம். என் பெயர் உங்கள் பெயருடன் இணைக்கப்படுவது கூட பெருமையான விஷயமாக கருதுகிறேன்.


மேலும், சிவராஜ்குமார் சாரின் முன்னிலையில் நிற்பதே எனக்கு பெருமையாக இருக்கிறது. அவருடன் காட்சிகளில் இணைந்து நடிக்கவில்லை என்றாலும், அவரது சாதனைகள் மற்றும் ஆளுமை குறித்து நன்கு அறிந்திருக்கிறேன். அவரின் முன்னிலையில் இருப்பது கூட ஒரு கௌரவம்.


ஒளிப்பதிவாளர் ஆர். ரத்னவேலு சார் எனக்கு மிகவும் பிடித்தவர். இதை நான் பல பேட்டிகளிலும் கூறியிருக்கிறேன். ஒரு நடிகராக எனக்கு அவர் கொடுத்த நம்பிக்கையும், சுதந்திரமும் அளவிட முடியாதவை. இவ்வளவு அனுபவம் மிக்க ஒளிப்பதிவாளர் ஒருவருடன் இவ்வளவு எளிதாக பணியாற்ற முடியும் என்று நான் நினைத்ததே இல்லை.


நான் ஏதாவது புதிதாக செய்ய விரும்பினால், அதை எப்படி இன்னும் சிறப்பாக காட்சிப்படுத்தலாம் என்று அவர் யோசிப்பார். ‘இதை இப்படிப் படம்பிடிப்போம், இன்னொரு க்ளோஸ் ஷாட் எடுப்போம்’ என்று அவர் கொடுத்த ஒத்துழைப்பு எனக்கு மிகப்பெரிய ஊக்கமாக இருந்தது. அந்த அனுபவம் எப்போதும் எனக்கு மறக்க முடியாததாக இருக்கும்.


இந்தப் படத்தின் ஒரு பகுதியாக இருப்பதில் மிகவும் மகிழ்ச்சியும் பெருமையும் அடைகிறேன். அனைவருக்கும் நன்றி.”


இயக்குநர் புச்சி பாபு பேசியதாவது..,


எனக்கு சென்னை என்றால் மிகவும் பிடிக்கும். ஏனென்றால் எனக்கு மிகவும் பிடித்த பல கலைஞர்கள் இங்குதான் இருக்கிறார்கள். ஏ.ஆர். ரஹ்மான் சார், ரத்னவேலு சார், தேவி ஸ்ரீ பிரசாத் சார் என நான் மதிக்கும் பலர் சென்னையில் இருக்கிறார்கள். சென்னை என்பது வெறும் ஒரு நகரம் அல்ல, இங்கே சினிமாவே வாழ்கிறது. மக்கள் சினிமாவை நேசிக்கிறார்கள், சினிமா கலைஞர்களை மதிக்கிறார்கள்.


எனக்கு பிடித்த மூத்த ஆளுமைகள் அனைவரும் சென்னை பற்றிப் பெருமையாகப் பேசுவார்கள். அப்போது எனக்கு அதன் மகத்துவம் முழுமையாகப் புரியவில்லை. ஆனால் இப்போது இங்கு வரும்போதெல்லாம் ஒரு புனிதமான இடத்திற்குச் செல்வது போன்ற உணர்வு வருகிறது.


எனக்கு மிகவும் பிடித்த நடிகர்களில் ஒருவரான விஜய் சேதுபதி சாரும் இங்கே இருக்கிறார். என்னுடைய முதல் திரைப்படத்தில் அவர் நடித்திருந்தார். எப்போதும் எனக்கு ஆதரவாக இருப்பதற்கும், சென்னை வரும்போதெல்லாம் அன்புடன் வரவேற்பதற்கும் அவருக்கு நன்றி.


பெத்தி பற்றி சொல்ல வேண்டுமென்றால், இது மிகவும் உணர்வுப்பூர்வமான படம். பார்வையாளர்களை முழுமையாக ஈர்த்துக் கொள்ளும் ஒரு அனுபவமாக இருக்கும். குறிப்பாக இரண்டாம் பாதியில் ராம் சரண் சார் கொடுத்திருக்கும் நடிப்பு மற்றும் அர்ப்பணிப்பை பார்த்தால் யாராலும் எளிதில் மறக்க முடியாது.


கடந்த சில நாட்களாக நான் சென்னையில் இருந்து படத்தை மீண்டும் மீண்டும் பார்த்து வருகிறேன். அதே நேரத்தில் ஹைதராபாத்திலும் சிறப்புக் காட்சிகள் நடக்கின்றன. படம் பார்த்த அனைவரும் தொலைபேசியில் அழைத்து பாராட்டி வருகிறார்கள். ‘மிகச் சிறந்த படம்’, ‘மிக அழகாக உருவாக்கியிருக்கிறீர்கள்’ என்று கூறுகிறார்கள். அது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது.


இந்தப் படத்தின் வெற்றிக்கு மிகப்பெரிய காரணம் ராம் சரண் சார் தான். பெத்தி என்றாலே எனக்கு ராம் சரண் தான் நினைவுக்கு வருகிறார். அவர் இந்தக் கதாபாத்திரத்திற்காக கொடுத்த உழைப்பு அளவிட முடியாதது. என்னை நம்பி இந்த வாய்ப்பை வழங்கியதற்காக அவருக்கு மனமார்ந்த நன்றி.


திவ்யேந்து சாரின் நடிப்பைப் பார்த்தபோது, விஜய் சேதுபதி சாரை நினைவுபடுத்தியது. சிறிய சிறிய விஷயங்களில்கூட அவர் காட்டிய நுணுக்கமான நடிப்பு என்னை மிகவும் கவர்ந்தது. இந்தப் படத்தில் இணைந்ததற்காக அவருக்கு நன்றி.


இசைப்புயல் A. R. ரஹ்மான் சார் பற்றி பேச வேண்டுமென்றால், அவரைப் பற்றி ஒரு புத்தகமே எழுதலாம். சிறுவயதிலிருந்தே அவருடைய இசைக்கு நான் மிகப்பெரிய ரசிகன். ஒருநாள் அவருடன் சேர்ந்து பணியாற்றுவேன் என்று கனவிலும் நினைத்ததில்லை. ஆனால் இன்று அது நனவாகியுள்ளது. இந்தப் படத்தின் பாடல்களும் பின்னணி இசையும் அற்புதமாக வந்துள்ளன.


ரத்னவேலு சார் இந்தப் படத்தை உலகத் தரத்தில் காட்சிப்படுத்தியிருக்கிறார். நான் எழுதிய ஒவ்வொரு காட்சிக்கும் அவர் உயிர் கொடுத்துள்ளார். அவரது ஒளிப்பதிவு இல்லாமல் இந்தப் படம் இப்படியாக உருவாகியிருக்காது.


மேலும், சிவராஜ்குமார் சார் இந்தப் படத்தில் ஒரு உண்மையான குருவாகத் தோன்றுகிறார். குரு-சிஷ்யன் உறவு எப்படி இருக்க வேண்டும் என்பதை இந்தப் படம் அழகாக வெளிப்படுத்துகிறது. அந்தக் கதாபாத்திரத்திற்கு அவர் அளித்திருக்கும் மதிப்பும், கம்பீரமும் படத்தின் முக்கிய பலமாக இருக்கும்.


இந்தப் படத்தை ரசிகர்கள் அனைவரும் திரையரங்கில் பார்த்து கொண்டாடுவார்கள் என்று நம்புகிறேன். அனைவருக்கும் நன்றி.”


 நடிகர் சிவராஜ்குமார் பேசியதாவது..,


முதலில் இயக்குநர் புச்சி பாபுவுக்கு நன்றி. இந்தப் படத்தில் குரு கதாபாத்திரம் பற்றி அவர் என்னிடம் கூறியபோது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. அதைவிட, ராம் சரணுடன் இணைந்து நடிக்கப் போகிறேன் என்ற செய்தி எனக்கு இன்னும் மகிழ்ச்சியை அளித்தது.


ராம் சரணையும், அவருடைய குடும்பத்தையும் எனக்கு மிகவும் பிடிக்கும். அவர் மீது எனக்கு எப்போதும் ஒரு தனிப்பட்ட அன்பும் மரியாதையும் இருக்கிறது. அதனால் இந்தப் படத்தில் நடிக்க வேண்டும் என்ற ஆர்வம் உடனே வந்தது. புச்சி பாபு கதையைச் சொன்னவுடன் எனக்கு மிகவும் பிடித்துவிட்டது. உடனே ஒப்புக்கொண்டேன்.


ஆனால் அதன் பிறகு எனக்கு புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது. சிகிச்சைக்காக நான் செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டது. அதனால் இந்தப் படம் என்னால் செய்ய முடியாமல் போய்விடுமோ என்று நினைத்தேன். ஆனால் படக்குழுவினர் எனக்காக காத்திருந்தார்கள். அது என்னை மிகவும் நெகிழச் செய்தது. அதற்காக அவர்களுக்கு மனமார்ந்த நன்றி.


இசைப்புயல் A. R. ரஹ்மான் சாரை நான் நீண்ட காலமாக அறிவேன். அவர் பின்னணி கலைஞராக இருந்த காலத்திலிருந்தே எனக்கு தெரியும். பின்னர் இசையமைப்பாளராக அவர் இசையை முற்றிலும் புதிய பரிமாணத்தில் கொண்டு சென்றார். பல சிறந்த இசையமைப்பாளர்கள் இருந்தாலும், ரஹ்மான் சார் தனித்துவமான பாணியில் தனி அடையாளத்தை உருவாக்கினார். ஆஸ்கார் விருதை வென்றது இந்திய இசைக்கே பெருமை சேர்த்த தருணம். அவருடைய இசையில் நான் நடித்திருப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி.


ரத்னவேலு சாருடன் பணியாற்றிய அனுபவமும் சிறப்பானது. படப்பிடிப்பு தளத்தில் அவருடன் தமிழில் பேசிக்கொண்டே இருப்பேன். அவர் காட்டிய அன்பும், மரியாதையும், அர்ப்பணிப்பும் என்னை மிகவும் கவர்ந்தது. எங்களுக்குள் ஒரு சிறப்பு இணைப்பு உருவானது.


தயாரிப்பாளர் மற்றும் முழு படக்குழுவும் மிகச் சிறப்பாக பணியாற்றியுள்ளனர். இந்தப் படத்தைப் பார்த்தால் எங்களுக்குள் இருந்த உறவும், ஒற்றுமையும் உங்களுக்குப் புரியும்.


ராம் சரண் சாரின் உழைப்பைப் பற்றி சொல்லியே ஆக வேண்டும். இந்தக் கதாபாத்திரத்திற்காக அவர் தனது உடலை மாற்றிக்கொண்ட விதம், எடுத்துக்கொண்ட முயற்சி, அர்ப்பணிப்பு அனைத்தும் அசாதாரணமானவை. அவரது நடிப்பும் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தும்.


இந்தப் படத்தை அனைவரும் விரும்புவார்கள் என்று நம்புகிறேன். பெத்தி படக்குழுவினருக்கு எனது வாழ்த்துக்கள். ஜூன் 4-ஆம் தேதி படம் வெளியாக இருக்கிறது. நீங்கள் எவ்வளவு ஆவலுடன் காத்திருக்கிறீர்களோ, நானும் அதே அளவு ஆவலுடன் காத்திருக்கிறேன்.நன்றி. வணக்கம்.


இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் பேசியதாவது..,


சுமார் ஒரு மாதத்திற்கு முன்பு ராம் சரண் எங்கள் வீட்டிற்கு வந்திருந்தார். அப்போது ஒரு விஷயம் எனக்கு மிகவும் தோன்றியது. ஒரு மிகப் பெரிய ஆலமரமான சிரஞ்சீவி சாரின் மகனாக இருந்து, அதே உயரத்தை எட்ட முடியுமா என்று பலர் கேள்வி எழுப்பியிருக்கலாம். ஆனால் ராம் சரண் அதையும் தாண்டி தன்னுடைய தனித்துவமான இடத்தை உருவாக்கியிருக்கிறார். அவர் இன்னொரு ஆலமரமாக வளர்ந்திருக்கிறார். அப்போது என் மகனும் அங்கே இருந்தான். நான் அவனிடம், ‘நீ என்னைவிட பெரியவனாக வரலாம்’ என்று சொன்னேன். அதற்கான உதாரணமாக ராம் சரணைச் சுட்டிக்காட்டினேன். இளம் தலைமுறைக்கு இப்படிப்பட்ட உதாரணங்கள் மிகவும் முக்கியம்.


ஒரு நாள் சுகுமார் சார் என்னைச் சந்திக்க விரும்புவதாகச் சொன்னார்கள். அதன்பிறகு புச்சி பாபுவை அறிமுகப்படுத்தினார்கள். அவர் இந்தக் கதையைப் பற்றி பேசினார். அந்த நேரத்தில் நான் பரிசோதனை முயற்சிகள் நிறைந்த படங்களிலும், வித்தியாசமான படைப்புகளிலும் அதிக கவனம் செலுத்தி வந்தேன். ஆனால் பெத்தி போன்ற ஒரு திரைப்படம் வந்தபோது அதில் இருக்கும் ஆற்றலும், அர்ப்பணிப்பும் என்னை ஈர்த்தது.


இந்த மாதிரியான பெரிய வர்த்தகப் படங்களில் நடிகர்கள் தங்கள் உயிரையே கொடுத்து உழைக்கிறார்கள். நடிப்பிலும், நடனத்திலும், ஒவ்வொரு காட்சியிலும் மிகப்பெரிய அர்ப்பணிப்பு இருக்கிறது. மேலும் இப்படங்கள் பல மொழிகளில் வெளியாகி உலகம் முழுவதும் சென்று சேர்கின்றன. அதனால் அனைவரின் உழைப்பும் மிகப் பெரிய அளவில் மக்களை சென்றடைகிறது.


ராம் சரண் இந்தப் படத்தின் ஒவ்வொரு காட்சியிலும் முழுமையான அர்ப்பணிப்புடன் செயல்பட்டிருக்கிறார். ஒவ்வொரு ஃபிரேமிலும் அவரது உழைப்பு தெரியும். இசையும் காலத்திற்கு ஏற்ப தொடர்ந்து மாறிக்கொண்டே இருக்கிறது. ரோஜா காலத்திலிருந்து இன்று வரை இசை மற்றும் திரைப்படத் துறையில் ஏற்பட்ட மாற்றங்களை நான் நேரில் பார்த்திருக்கிறேன். பலர் என்னிடம் இருந்து ஊக்கமடைந்திருக்கலாம். ஆனால் நானும் பலரிடமிருந்து ஊக்கமடைந்திருக்கிறேன்.


தெலுங்குத் திரைப்படத் துறையில் M. M. கீரவாணி, தேவி ஸ்ரீபிரசாத் , தமன் போன்ற திறமையான இசையமைப்பாளர்கள் இருக்கிறார்கள். தெலுங்கு சினிமா கடந்த சில ஆண்டுகளில் மிகப்பெரிய வளர்ச்சியை அடைந்துள்ளது. அவர்கள் மிகவும் லட்சியத்துடன் செயல்படுகிறார்கள். திரைப்படத் தயாரிப்பின் தரத்தையும் தொடர்ந்து உயர்த்தி வருகிறார்கள். அந்தத் துறையின் ஒரு பகுதியாக இருப்பதில் எனக்கு பெருமை. பெத்தி படத்தில் பணியாற்றிய அனுபவம் எனக்கு முதல் படம் செய்வது போன்ற புதிய உற்சாகத்தை அளித்தது.


இன்றுக் காலைதான் இந்தப் படத்தின் பின்னணி இசைப் பணிகளை முடித்தோம். முடிந்த பிறகும் ‘இதை இன்னும் சிறப்பாக செய்ய முடியுமா?’, ‘இன்னும் ஏதாவது சேர்க்க வேண்டுமா?’ என்ற ஆர்வம் எங்களுக்குள் இருந்தது. அந்த உற்சாகமே இந்தப் படத்தின் சிறப்பு. சிவராஜ்குமார் சாருக்கும், படக்குழுவில் உள்ள அனைவருக்கும் என் நன்றி. இந்தப் படத்தை உருவாக்கிய அனுபவத்தை நாங்கள் அனைவரும் மிகவும் ரசித்தோம். நீங்கள் அனைவரும் இந்தப் படத்தை விரும்புவீர்கள் என்று நம்புகிறேன். நன்றி.”


நடிகர் ராம் சரண் பேசியதாவது..,


“சென்னை பத்திரிகை நண்பர்களுக்கு வணக்கம். உண்மையாகச் சொன்னால், சில நேரங்களில் என்ன பேச வேண்டும் என்று தெரியாமல் போய்விடும். இப்போதும் அந்த மாதிரியான ஒரு தருணத்தில்தான் நான் இருக்கிறேன். சென்னை வந்தாலே எனக்கு எப்போதும் இப்படியான உணர்வு ஏற்படும்.


முதலில், இந்த மேடையில் இத்தனை ஜாம்பவான்கள் இருக்கிறார்கள். அவர்களின் முன்னிலையில் என்ன பேசுவது என்ற எண்ணமே வருகிறது. இருந்தாலும் இங்கு வந்திருக்கும் அனைவருக்கும், குறிப்பாக சென்னை மற்றும் தமிழ்நாடு ஊடக நண்பர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி.


சென்னை எனக்கு எப்போதும் ஒரு சிறப்பான இடம். நான் பிறந்து வளர்ந்த நகரம் இது. அதனால் ஆர்.ஆர்.ஆர்., மகதீரா அல்லது வேறு எந்தப் படமாக இருந்தாலும், சென்னைக்கு வந்து புரமோஷன் செய்யும் போது வீட்டிற்கு வந்த உணர்வே கிடைக்கிறது. மேலும், என் அம்மாவும் இங்கு பிறந்தவர். அதனால் சென்னை எனக்கு என் தாயின் ஊர் என்ற பாசமான உணர்வை அளிக்கிறது.


பெத்தி திரைப்படம் குறித்து படக்குழுவினர் அனைவரும் ஏற்கனவே பேசிவிட்டார்கள். இந்தப் படத்தை முடிக்க எங்களுக்கு சுமார் இரண்டரை ஆண்டுகள் ஆனது. அதில் 285 நாட்களுக்கும் மேலாக நாங்கள் உழைத்தோம். ஆனால் எங்களைவிட அதிகமாக உழைத்தவர் இயக்குநர் புச்சி பாபு. கடந்த ஐந்து அல்லது ஆறு ஆண்டுகளாக அவர் இந்தப் படத்திற்காக உழைத்திருக்கிறார்.


நாங்கள் கஷ்டப்பட்டோம் என்று சொல்லிக் கொண்டிருக்கிறோம். ஆனால் உண்மையில் இப்படிப்பட்ட சிறந்த கலைஞர்கள் ஒரு படத்தில் இருக்கும்போது அந்தப் பயணம் கஷ்டமாகத் தோன்றாது. இந்தக் கதையை எங்களிடம் கொண்டு வந்த சுகுமார் சாருக்கு நான் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்.


இசைப்புயல் A. R. ரஹ்மான் சார் இந்தப் படத்தின் மையத் தூண். நாங்கள் அனைவரும் ஒரு வீட்டைத் தாங்கும் தூண்கள் என்றால், அதன் நடுவில் இருக்கும் மிகப்பெரிய ஆதாரத் தூண் அவர் தான். கடந்த பத்து நாட்களுக்கும் மேலாக அதிகாலை வரை விழித்திருந்து பின்னணி இசைப் பணிகளில் ஈடுபட்டிருக்கிறார். அவரது அர்ப்பணிப்பு எங்களுக்கு எல்லாம் மிகப்பெரிய உத்வேகமாக இருக்கிறது.


சிவராஜ்குமார் சார் திரையில் தோன்றினாலே ஒரு தீப்பொறி போல ஆற்றல் உருவாகும். ஜெயிலர் படத்தில் அவருடைய கதாபாத்திரத்தை நான் பலமுறை பார்த்திருக்கிறேன். காரில் பயணம் செய்யும்போதுகூட அந்த காட்சிகளை மீண்டும் மீண்டும் பார்ப்பேன். குறிப்பாக அவர் மெதுவாக நடந்து வரும் காட்சியும், பீடி பிடிக்கும் அந்த ஸ்டைலும் இன்று ஒரு ஐகானிக் தருணமாக மாறியுள்ளது. அவரது கண்களே ஆயிரம் வார்த்தைகள் பேசும்.


ஒளிப்பதிவாளர் ஆர். ரத்னவேலு சார் பற்றி என்ன சொல்வது? அவருடன் நான் நான்கு திரைப்படங்களில் பணியாற்றியிருக்கிறேன். இரண்டு படங்களை நான் தயாரித்தபோதும் அவர் உடன் இருந்தார். அவர் ஒரு உண்மையான ஜாம்பவான். எந்திரன் படத்தில் அவர் உருவாக்கிய காட்சிகள், குறிப்பாக பிரம்மாண்ட பாடல் காட்சிகள், என்னை மிகவும் கவர்ந்தவை. ‘அந்த மாதிரியான ஒரு காட்சியை எனக்கும் கொடுங்கள் சார்’ என்று நான் எப்போதும் அவரிடம் கேட்பேன்.


ரஜினி சார், கமல் சார், ஷங்கர் சார் போன்ற மகத்தான கலைஞர்களுடன் பணியாற்றிய அனுபவம் அவருக்கு இருக்கிறது. ஆனால் அந்த அனுபவத்தின் பெருமையை அவர் ஒருபோதும் வெளிக்காட்ட மாட்டார். அதுவே அவரது சிறப்பு.


என்னைப்போலவே திவ்யேந்து இந்தப் படத்தில் மிகப்பெரிய உழைப்பை தந்துள்ளார் அவரது காட்சிகளை ரசிகர்கள் கொண்டாடுவார்கள்.


இந்தப் படத்தை நான் வெறும் ஒரு நடிகராக செய்யவில்லை. மனதார காதலித்து செய்தேன். ஒவ்வொரு நாள் படப்பிடிப்பு முடிந்து வீட்டிற்கு வந்ததும், என் நண்பர்களிடமும், அம்மாவிடமும், அந்த நாள் ஷூட்டிங் அனுபவங்களைப் பற்றியே தொடர்ந்து பேசிக்கொண்டிருப்பேன். ‘போதும், நிறுத்து… நாள் முழுவதும் இதைப் பற்றியே பேசிக்கொண்டிருக்கிறாய்’ என்று அவர்கள் சொல்லும் அளவுக்கு பெத்தி படம் என் மனதில் ஆழமாக பதிந்திருந்தது.


என் வீட்டில் எப்போதும் ஒரு விஷயம் சொல்வார்கள். ‘ஒரு படத்தைப் பற்றி நீ வீட்டிற்கு வந்த பிறகும் தொடர்ந்து பேசினால், அந்த படம் கண்டிப்பாக பெரிய வெற்றி பெறும்’ என்று. ஆர்.ஆர்.ஆர்., ரங்கஸ்தலம், மகதீரா போன்ற படங்களைப் பற்றியும் நான் அப்படித்தான் பேசினேன். நீண்ட நாட்களுக்குப் பிறகு மீண்டும் பெத்தி படத்தைப் பற்றியே வீட்டில் தொடர்ந்து பேசிக் கொண்டிருக்கிறேன். அதுவே இந்தப் படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமையும் என்பதற்கான என் நம்பிக்கை. குடும்பத்தோடு, குறிப்பாக குழந்தைகளோடு வந்து பார்க்க வேண்டிய படம் இது. மிகவும் ஊக்கமளிக்கும், மனதைத் தொடும் திரைப்படமாக இருக்கும்.


என் வாழ்நாள் முழுவதும் நினைவில் நிற்கும் ஒரு படத்தை இயக்குநர் புச்சி பாபுவும், சுகுமார் சாரும் எனக்கு கொடுத்திருக்கிறார்கள். அதற்காக அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.


இறுதியாக, முதல்வர் விஜய் அவர்களுக்கு என் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். உச்சநிலையிலிருந்த ஒரு திரைப்பட வாழ்க்கையையும், மிகப் பெரிய நட்சத்திர அந்தஸ்தையும் விட்டு விட்டு பொதுச் சேவைக்காக வந்திருப்பது பாராட்டத்தக்க விஷயம். திரைப்படத் துறையைச் சேர்ந்த ஒருவராக நான் மிகவும் பெருமைப்படுகிறேன். அவருக்கும், தமிழ்நாடு மக்களுக்கும் என் வாழ்த்துகள்.


இந்தப் படம் எங்கள் அனைவரின் உழைப்பு . ஜூன் 4-ஆம் தேதி ரசிகர்கள் திரையரங்கில் இந்த அனுபவத்தை கொண்டாடுவார்கள் என்று நம்புகிறேன். உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி.”


ராம் சரண், ஜான்வி கபூர், சிவ ராஜ்குமார், ஜகபதி பாபு மற்றும் திவ்யேந்து சர்மா உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ள இப்படம், இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. சென்னை பத்திரிகையாளர் சந்திப்பும் ரசிகர்களிடையே படத்தின் மீதான ஆர்வத்தை மேலும் உயர்த்தியுள்ளது.


ஏற்கனவே ஆஸ்கர் விருது பெற்ற இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்த பாடல்கள் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளன. மேலும், சமீபத்தில் வெளியான டிரெய்லர், ஒரு கிராஸ்ஓவர் தடகள வீரரின் ஊக்கமூட்டும் மற்றும் உணர்ச்சிப்பூர்வமான பயணத்தை வலுவாக வெளிப்படுத்தி, படத்தின் மீதான எதிர்பார்ப்பை உச்சத்துக்கு கொண்டு சென்றுள்ளது.


இப்படம் வரும் ஜூன் 4ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.

தயாரிப்பாளர் வெங்கட சதீஷ் கிலாரு மற்றும் அவரது குழு, இந்தியா முழுவதும் தீவிரமான புரமோஷன் திட்டங்களை மேற்கொண்டு, படத்தின் எதிர்பார்ப்பை மேலும் உயர்த்த திட்டமிட்டுள்ளனர்.


நடிகர்கள் :

மெகா பவர் ஸ்டார் ராம் சரண், ஜான்வி கபூர், சிவ ராஜ்குமார், ஜகபதி பாபு, திவ்யேந்து சர்மா


தொழில்நுட்பக் குழு :

இயக்கம், திரைக்கதை: புச்சி பாபு சனா

வழங்குபவர்கள் : மைத்ரி மூவி மேக்கர்ஸ், சுகுமார் ரைட்டிங்ஸ்

தயாரிப்பு நிறுவனம்: விருத்தி சினிமாஸ்

தயாரிப்பாளர்: வெங்கட சதீஷ் கிலாரு

இணை தயாரிப்பாளர்: ஈஷான் சக்சேனா

இசை: A.R. ரஹ்மான்

ஒளிப்பதிவு: R. ரத்னவேலு

தயாரிப்பு வடிவமைப்பாளர் : அவினாஷ் கொல்லா

படத்தொகுப்பு: நவீன் நூலி

நிர்வாக தயாரிப்பாளர்: V.Y. பிரவீன் குமார்

மார்க்கெட்டிங்: ஃபர்ஸ்ட் ஷோ

மக்கள் தொடர்பு : யுவராஜ்

பிளாஸ்ட்’ திரைப்பட விமர்சனம்

பிளாஸ்ட்’ திரைப்பட விமர்சனம்


  கராத்தே பயிற்சி ஆசிரியரான அர்ஜுன், சிறு வயது முதலே தனது மகளுக்கு கராத்தே பயிற்சி அளிப்பதோடு, எங்கு தப்பு நடந்தாலும், யாருக்கு நடந்தாலும் தட்டிகேட்க வேண்டும் என்று சொல்லி வளர்க்கிறார். அதன்படி, அவரது மகள் ப்ரீத்தி முகுந்தனும், எங்கு தப்பு நடந்தாலும் அதை அதிரடியாக தட்டி கேட்கிறார். இதனால் அவருக்கு சிறு சிறு பிரச்சனைகள் ஏற்பட, அம்மா அபிராமியின் அறிவுரையின்படி அமைதியாக இருக்க பழகுகிறார். இந்த நேரத்தில், அவரது தங்க சங்கிலியை பறிக்க ஒருவர் முயற்சிக்க, வழக்கம் போல் தனது அதிரடியால் அவரை மிரள வைத்து போலீஸில் பிடித்து கொடுக்கிறார்.சிறிய திருட்டு என்று நினைத்து அர்ஜுனும், ப்ரீத்தி முகுந்தனும் காவல் நிலையத்தில் புகார் கொடுக்க முடிவு செய்யும் போது, அது மிகப்பெரிய பிரச்சனையின் தொடக்கப் புள்ளி என்று தெரிய வருகிறது. அதனால், அர்ஜுன் குடும்பத்தினர் உயிருக்கே பேராபத்து ஏற்பட, அந்த ஆபத்தில் இருந்து தங்களை காத்துக் கொள்வதற்காக அமைதியாக இருக்க வேண்டும் என்று மகளுக்கு அறிவுரை சொன்ன அம்மா அபிராமியும் அதிரடியில் இறங்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது. ஒரு கட்டத்தில் இது தனது குடும்பத்திற்கான பிரச்சனை மட்டும் இல்லை, ஆயிரக்கணக்கான குடும்பங்களின் உயிர் பிரச்சனை என்பதை புரிந்துக் கொள்ளும் அர்ஜுன் குடும்பத்தினர், அந்த குடும்பங்களை காப்பாற்ற என்ன செய்தார்கள் ?, அந்த பிரச்சனை என்ன ? என்பதை முழுக்க முழுக்க ஆக்‌ஷன் மூலமாகவே சொல்லியிருப்பது தான் ‘பிளாஸ்ட்’. எந்தவிதமான லாஜிக்கும் பார்க்காமல் இரண்டு மணி நேரம் போனதே தெரியாமல் இருக்க வேண்டும், என்றால் நிச்சயம் அதற்கு இந்த படம் சரியான தேர்வு. அதே சமயம், ஹீரோக்களின் ஆக்‌ஷன் காட்சிகளை பார்த்து வியந்த ரசிகர்களுக்கு ஹீரோவின் மகள், மனைவி என்று ஒட்டுமொத்த குடும்பமே இணைந்து நடத்தும் அதிரடி ஆக்‌ஷன் காட்சிகள் மிகப்பெரிய ஆக்‌ஷன் விருந்தாக, வியக்க வைக்கும் என்பது உறுதி. கராத்தே மாஸ்டராக நடித்திருக்கும் அர்ஜுன், இந்த வயதிலும் இப்படி பிட்டாக இருப்பது எப்படி ? என்று யோசிக்க வைப்பதோடு, தனது ஸ்டைலிஷான ஆக்‌ஷன் காட்சிகள் மூலம், தமிழ் சினிமாவில் இவரது இடத்தை நிறப்ப மற்றொருவர் வருவது கடினம் என்பதை நிரூபித்திருக்கிறார். ஆக்‌ஷன் மட்டும் இன்றி, சிறு வயது முதலே தனது மகளுக்கு தைரியம், நம்பிக்கை ஆகியவற்றை சொல்லிக் கொடுத்து வளர்ப்பவர், ஒரு சிறந்த தந்தையாகவும் பார்வையாளர்கள் மனதில் பதிந்து விடுகிறார். அர்ஜுனின் மனைவியாக நடித்திருக்கும் அபிராமி, அமைதி மற்றும் பொறுப்பான அம்மாவாக அறிமுகமாகி திடீரென்று அதிரடியில் இறங்குவது திரையரங்கையே அதிர வைக்கிறது.


அர்ஜுன் – அபிராமி தம்பதியின் மகளாக கதையின் நாயகியாக நடித்திருக்கும் ப்ரீத்தி முகுந்தன், உண்மையான கராத்தே வீராங்கனை போன்று சண்டைக்காட்சிகளில் நடித்திருக்கிறார். அவரது ஒவ்வொரு அடியும் எதிராளிகள் மீது இடியாக விழுவது திரையில் தெரிவதோடு, கராத்தே பாணியிலான சண்டைக்காட்சிகள் ரசிக்கும்படி இருக்கிறது. ப்ரீத்தி முகந்தன் முழுமையான ஆக்‌ஷன் மற்றும் சாசக திரைப்படங்களுக்கான நாயகிக்கான சரியான தேர்வு. நிச்சயம் கதாநாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த படங்களை தேர்வு செய்தால் இவருக்கான தனி இடம் உறுதி. வில்லன்களாக நடித்திருக்கும் ஜான் கொக்கேன், அர்ஜுன் சிதம்பரம், பவன், பாலா ஹாசன், வினோத் சாகர் மற்றும் அர்ஜுன் தம்பியாக நடித்திருக்கும் விவேக் பிரசன்னா ஆகியோரது கதாபாத்திர வடிவமைப்பு மற்றும் அவர்களது திரை இருப்பு திரைக்கதைக்கு பலம் சேர்த்திருப்பதோடு, காட்சிகளின் விறுவிறுப்பை அதிகரிக்கச் செய்திருக்கிறது.

ஒளிப்பதிவாளர் அருண் ராதாகிருஷ்ணன் மற்றும் அவரது குழுவினரின் உழைப்பு திரையில் தெரிகிறது. படம் முழுவதும் ஆக்‌ஷன் காட்சிகள் இருந்தாலும் அதை பல கோணங்களில் படமாக்கி, ஒவ்வொரு ஆக்‌ஷன் காட்சியையும் ரசிக்க வைத்திருக்கிறார்கள்.


இசையமைப்பாளர் ரவி பஸ்ரூரின் பின்னணி இசை திரைக்கதையின் வேகம் மற்றும் காட்சிகளின் விறுவிறுப்புக்கு எக்ஸ்ட்ரா கியரை போட்டு அதிவேகத்தில் நகர்த்தியிருப்பதோடு, மென்மையான இசை மூலம் சண்டைக்காட்சிகளை ரசிக்க வைத்திருக்கிறார். சண்டைக்காட்சிகள் என்றாலே காதை கிழிக்கும் சத்தம் அதிகம் இருக்க வேண்டும் என்ற பழைய பாணியை மாற்றி, மெலோடி கலந்த பின்னணி இசை மூலம் சண்டைக்காட்சிகளையும் காதல் காட்சிகள் போல் கவித்துவமாய் காட்டியிருக்கிறார். இயக்குநர் கற்பனை செய்த காட்சிகளுக்கு உயீர் கொடுத்தவர்களின் முக்கியமானவர் சண்டைப்பயிற்சி இயக்குநர் பீனிக்ஸ் பிரபு. அர்ஹுனின் அறிமுக சண்டைக்காட்சி முதல், ஒட்டுமொத்த குடும்பமே இணைந்து மேற்கொள்ளும் ஆக்‌ஷன் வரை படத்தில் இடம்பெறும் அனைத்து ஆக்‌ஷன் காட்சிகளையும் மிரட்டலாக மட்டும் இன்றி வியக்க வைக்கும் விதத்தில் வடிவமைத்திருக்கிறார். குறிப்பாக ப்ரீத்தி முகுந்தன் மற்றும் அபிராமி ஆகியோரை பயன்படுத்திய விதம், அவர்களுக்கான சண்டைக்காட்சிகளை வடிவமைத்த விதம் பாராட்டுக்குரியது. இருவரும் நிஜமாகவே கராத்தே பயிற்சி பெற்றிருப்பார்களோ…!, என்று ஆச்சரியப்படும் அளவுக்கு அவர்களது சண்டைக்காட்சிகள் வியக்க வைக்கிறது படத்தொகுப்பாளர் பிரதீப் ஈ.ராகவ், வேகமான காட்சிகளை அதிவேகமாக நகர்த்தும்படி காட்சிகளை தொகுத்திருந்தாலும், அனைத்தையும் ரசிக்க வைக்கிறார். சண்டைக்காட்சிகள் தான் படத்தின் முக்கிய பலம் என்பதை உணர்ந்து பணியாற்றியிருப்பவர், தனது நுணுக்கமான படத்தொகுப்பின் மூலம் சண்டைக்காட்சிகளை ஒரு கதாபாத்திரமாகவே வலம் வர செய்திருக்கிறார்.


எழுதி இயக்கியிருக்கும் சுபாஷ் கே.ராஜ், கமர்ஷியல் படம் என்றாலும் அதை பெண்களுக்கு நம்பிக்கையும், தைரியமும் கொடுக்கும் ஒரு படைப்பாக கொடுத்திருக்கிறார். அம்மா, அப்பா உட்பட யாரின் நிழலிலும் இருக்காமல் பெண்கள் தனித்து நிற்க வேண்டும், எந்த பிரச்சனையாக இருந்தாலும் அதை தனித்து சமாளிக்க வேண்டும் என்ற அவரது அறிவுரைக்காகவே தனியாக பாராட்டலாம்.


குடும்ப திரைப்படத்திற்குள் ஒரு அதிரடி ஆக்‌ஷன் திரைப்படம் என்று சொல்லும் அளவுக்கு, அதிரடியான ஆக்‌ஷன் காட்சிகளோடு முழு படத்தையும் ரசிக்க வைத்திருக்கும் இயக்குநர் சுபாஷ் கே.ராஜ், தொய்வில்லாத திரைக்கதை, விறுவிறுப்பான காட்சிகள் மூலம் இரண்டு மணி நேரம் எப்படி போனது, என்று தெரியாதவாறு பார்வையாளர்களின் கவனத்தை கட்டிப்போட்டு விடுகிறார்.


வியக்க வைக்கும் ஆக்‌ஷன் காட்சிகள், எதிர்பார்க்காத திருப்பங்கள் என முதல் பாதி படம் விறுவிறுப்பாக பயணித்தாலும், இரண்டாம் பாதி கொஞ்சம் லாஜிக் மீறலோடு பயணிப்பது படத்தின் சிறு குறையாக தெரிந்தாலும், அது படத்தை எந்தவிதத்திலும் பாதிக்காதவாறும், அதை மறந்தும் பார்வையாளர்கள் படத்தை கொண்டாட வைப்பது படத்தின் ஆக்‌ஷன் காட்சிகளும், அதை திரைக்கதையோடு இணத்து சொன்ன இயக்குநரின் புத்திசாலித்தனமும் தான்.


மொத்தத்தில், ‘பிளாஸ்ட்’ மாபெரும் வெற்றி உறுதி

காட்டாளன்’ திரைப்பட விமர்சனம்

 காட்டாளன்’ திரைப்பட விமர்சனம்


வரை தெரிகிறது. அதிலும், இப்படி ஒரு உலகத்தை உருவாக்கி தொடர்ந்து அதே பாணியிலான படங்களை இயக்கி வரும் ஒரு தமிழ் சினிமா இயக்குநரையே சிறப்பு தோற்றத்தில் தோன்ற வைத்து, அவர் மூலம் இரண்டாம் பாகம் இருக்கு, என்று சொல்லியிருக்கிறார்.


யானை தந்தம் கடத்தல் மற்றும் அதன் பின்னனியை கருவாக எடுத்துக் கொண்ட இயக்குநர் பவுல் ஜார்ஜ், அதைப் பற்றியும், அதனை சார்ந்த மக்களைப் பற்றியும் அழுத்தமாக பேசாமல், ஆக்‌ஷன் காட்சிகளையும், கதாபாத்திரங்களை ஸ்லோமோஷனில் நடக்க விட்டும் காட்சிகளை படமாக்கியிருப்பது படத்திற்கு எந்தவிதத்திலும் கைகொடுக்கவில்லை. இத்தகைய மேக்கிங்கை பார்வையாளர்கள் ஏற்கனவே பலமுறை பார்த்திருப்பதால், இவை அனைத்தும் பார்வையாளர்களை சலிப்படைய செய்கிறதே தவிர கவர வில்லை.


மொத்தத்தில், ‘காட்டாளன்’ கடுப்பேற்றுகிறான்.