-

Loading latest news...

‘ஹார்ட்டின்’ திரைப்பட விமர்சனம்

ஹார்ட்டின்’ திரைப்பட விமர்சனம்

ஜெய்ப்பூரில் உள்ள தனது நண்பரின் உணவகத்தில் பணியாற்றும் நாயகன் சனத்தும், ஐடி துறையில் பணியாற்றும் தமிழ் பெண்ணான இமயாவும் நண்பர்களாக பழகுகிறார்கள். சனத் மீது இமயாவுக்கு காதல் மலர்கிறது. ஆனால், அவரது காதலை சனத் ஏற்க மறுக்கிறார். அதற்கான காரணமாக தனது முதல் காதல் பிரிவால் ஏற்பட்ட வலியை மீண்டும் அனுபவிக்கும் சக்தி தனக்கு இல்லை என்கிறார். அவரது முன்னாள் காதல் பற்றி அறிந்துக் கொண்ட பிறகும் அவர் மீது காதலோடு இருக்கும் இமயாவை சனத்தும் காதலிக்கிறார்.


இமயாவின் காதல் மூலம் மீண்டும் தனது மகிழ்ச்சிகரமான வாழ்க்கைக்கு திரும்பிய சனத், விபத்து ஒன்றின் மூலம் தலையில் அடிபட்டு, தனது 6 வருட நினைவுகளை இழந்து விடுகிறார். இதனால், இமயா மற்றும் அவரது காதலை மறந்துவிடுவதோடு, காதலை முறித்துகொண்டு தன்னைவிட்டு பிரிந்து சென்ற முன்னாள் காதலியின் பிரிவு சம்பவத்தையும் மறந்துவிடுபவர், பழைய நினைவுகளோடு தனது முன்னாள் காதலி மரோனா செபாஸ்டியனை சந்திக்க செல்கிறார்.


மறந்த நினைவுகள் திரும்பவும் வந்தவுடன், அனைத்தும் சரியாகிவிடும் என்ற நம்பிக்கையில் அவருடன் பயணிக்கும் இமயாவின் காதல் வெற்றி பெற்றதா? அல்லது முதல் காதல் முறிவு பற்றி தெரியாமல் பிரிந்து சென்ற காதலியை தேடிச் செல்லும் சனத்தின் காதல் வெற்றி பெற்றதா? என்பதே படத்தின் மீதிக்கதை.


நாயகனாக நடித்திருக்கும் சனத், இரண்டு நாயகிகள் இருந்தாலும் டூயட் மற்றும் ரொமான்ஸ் காட்சிகள் இன்றி, ஒரு கதாபாத்திரமாகவே வலம் வந்திருக்கிறார். முதல் காதலியை உருகி உருகி காதலிப்பவர், அவரது பிரிவால் இறுக்கமான மனநிலையில் இருப்பதும், இமயா உடனான காதலுக்குப் பிறகு மகிழ்ச்சியான மனநிலைக்கு மாறுவது என்று நடிப்பில் ஸ்கோர் செய்திருக்கிறார்.


அறிமுக நடிகை இமயா, புதுமுகம் என்ற அடையாளமே தெரியாதபடி தைரியமாகவும், தன்னம்பிக்கையுடனும் நடித்திருக்கிறார். அவரது திரை இருப்பு மற்றும் நடிப்பு அவரது கதாபாத்திரத்திற்கு பெரும் பலம் சேர்த்திருக்கிறது.


மடோனா செபாஸ்டியன், காதலருக்கு இணையாக தன்னால் காதலில் நேர்மையாக இருக்க முடியாத நிலையை எண்ணி வருந்தும் காட்சியிலும், தான் நிராகரித்த காதல் மீண்டும் தன்னை தேடி வரும்போது, தடுமாறும் காட்சியிலும் எதார்த்தமாக நடித்து கவனம் ஈர்க்கிறார்.


நாயகனின் நண்பராக நடித்திருக்கும் வாட்ஸ்-அப் மணி குணச்சித்திர வேடத்துடன் நகைச்சுவையாகவும் நடித்து சில காட்சிகளில் சிரிக்க வைக்கிறார். அவரது மனைவியாக நடித்திருக்கும் டெப்னிதா கொடுத்த வேலையை சரியாக செய்திருக்கிறார்.


ஒளிப்பதிவாளர் முகேஷ்வரன்.வி, ஜெய்ப்பூர் மற்றும் ஊட்டியை அழகியலோடு காட்சிப்படுத்தி கண்களுக்கு காட்சி விருந்து படைத்திருக்கிறார்.


ராஜேஷ் முருகேசனின் இசையில் பாடல்கள் அனைத்தும் திரும்ப திரும்ப கேட்கும் மெலோடி ரகம். பின்னணி இசை அளவு.


நினைவுகளை இழப்பதும், அதனால் ஏற்படும் விளைவுகளுமே திரைக்கதையில் ஆதிக்கம் செலுத்துவதால், காதலர்களின் உணர்வுகளும், அவர்களது வலியும் எந்த ஒரு காட்சியிலும் பிரதிபலிக்காதது, படத்தொகுப்பிலும் தெரிகிறது. எனவே இயக்குநர் சொன்னதை மட்டுமே செய்திருக்கிறார் படத்தொகுப்பாளர் பரத் விகரமன்.


எழுதி இயக்கியிருக்கும் கிஷோர் குமார், காதல் கதை மூலமாக பார்வையாளர்களை உருக வைப்பதற்கு பதிலாக, நினைவுகளை இழந்த நாயகனின் காதல் கதைகளை காமெடியாக சொல்லி ரசிக்க வைக்க முயற்சித்திருக்கிறார்.


பார்வையாளர்களை கவர்வதோடு, அவர்களது ஆழ் மனதில் இருக்கும் காதல் நினைவுகளை தட்டி எழுப்புவதற்கு காதலர்களின் உணர்வுப்பூர்வமான காட்சிகளே போதுமானது. ஆனால், இயக்குநர் கிஷோர் குமார், ஞாபக மறதி அல்லது நினைவுகள் இழப்பு என்ற பின்னணியோடு காதல் உணர்வுகளை வெளிப்படுத்த முயற்சித்திருப்பது, எந்தவிதத்திலும் பார்வையாளர்களை பாதிக்கவில்லை.


முன்னாள் காதல் மற்றும் இன்னாள் காதல் என்று ஒரே நேரத்தில் இரண்டு காதலிகளுடன் பயணிக்கும் நாயகனின் செயலும், இறுதியில் யாருடன் அவர் இணைவார் ? என்ற கேள்வியும் படத்தை சற்று சுவாரஸ்யமாக நகர்த்தி சென்றாலும், மூன்று முதன்மை கதாபாத்திரங்களுக்கான கெமிஸ்ட்ரியில் இயக்குநர் கூடுதல் கவனம் செலுத்தியிருந்தால் தமிழ் சினிமாவில் தாக்கத்தை ஏற்படுத்திய காதல் படங்களின் வரிசையில் இந்த படத்திற்கும் இடம் கிடைத்திருக்கும்.


மொத்தத்தில் ‘ஹார்ட்டின்’ பொழுதுபோக்கு படமாக பார்வையாளர்களை திருப்திப்படுத்தினாலும், இதயத்தை தொடவில்லை.

மம்மட்டியான் ஸ்டார்ஸ்’ இணையத் தொடர் விமர்சனம்

மம்மட்டியான் ஸ்டார்ஸ்’ இணையத் தொடர் விமர்சனம்


’மம்மட்டியான் ஸ்டார்ஸ்’ இணையத் தொடர் விமர்சனம்


வைபவ் முருகேசன், வெங்கட பாலமுரளி மற்றும் ஜகபர் சாதிக் மூன்று பேரும் நண்பர்கள் மட்டும் இன்றி, இந்திய நட்சத்திர கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.வீர் சிங் (எம்.எஸ்.டோனி)-ன் தீவிர ரசிகர்களாகவும் இருக்கிறார்கள். இவர்கள் மூன்று பேரும் கேப்டனாக இருந்து ‘மம்மட்டியான் ஸ்டார்ஸ்’ என்ற கிரிக்கெட் அணியை வழி நடத்துவதோடு, பல்வேறு போட்டிகளில் பங்கேற்று விளையாடி வருகிறார்கள். அதன்படி, தங்களது கிராமத்தில் நடத்தப்படும் கிரிக்கெட் போட்டியில் இவர்களது அணி பங்கேற்று விளையாடி வரும் நிலையில், கிரிக்கெட் வீரர் வீர் சிங் விளையாடும் கடைசி கிரிக்கெட் போட்டியை நேரில் பார்க்க வேண்டும் என்று முடிவு செய்கிறார்கள்.


கிரிக்கெட் போட்டியின் இறுதிப் போட்டியில் வெற்றி பெற்று பரிசுத் தொகை ரூ.50 ஆயிரத்தை வென்று, அதன் மூலம் சென்னையில் நடக்கும் கிரிக்கெட் போட்டியை பார்க்கலாம் என்று திட்டம் போட, ஊர் தலைவரின் திடீர் மரணத்தால் இறுதிப் போட்டி நடத்தப்படாமல் நின்று விடுகிறது. இதனால், ஊர் தலைவரின் அலுவலகத்தில் வைக்கப்பட்டிருக்கும் கிரிக்கெட் போட்டியின் ரன்னர் பரிசுத் தொகையை திருடி, அதை கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட் வாங்க அனுப்பிவிடுகிறார்கள். டிக்கெட் கிடைத்த மகிழ்ச்சியில் மூன்று நண்பர்களும் சென்னைக்கு செல்ல, அவர்களுடன் வைபவ் முருகேசனின் முன்னாள் காதலியான லாவண்யா அன்பழகனும் செல்கிறார்.


தங்களது தல விளையாடும் போட்டியை நேரில் பார்க்கப் போகிறோம் என்ற மகிழ்ச்சியில் இருப்பவர்கள், தங்களிடம் இருக்கும் டிக்கெட் போலி என்று தெரிந்ததும் பேரதிர்ச்சியடைகிறார்கள். இருந்தாலும், எப்படியாவது தல விளையாடும் போட்டியை நேரில் பார்த்துவிட்டு தான் ஊருக்கு திரும்ப வேண்டும் என்று முடிவு எடுக்கும் நண்பர்கள், அடுத்த போட்டி நடப்பதற்குள் அதற்கான பணத்தை தயார் செய்யும் முயற்சியில் இறங்க, அதனால் பல்வேறு பிரச்சனையில் சிக்கிக் கொள்கிறார்கள். அந்த பிரச்சனைகளில் இருந்து மீண்டு, அவர்கள் நினைத்தது போல், அவர்களது தல விளையாடும் போட்டியை நேரில் பார்த்தார்களா ? இல்லையா ? என்பதை 6 அத்தியாயங்களாக சொல்வதே ‘மம்மட்டியான் பாய்ஸ்’.


கிரிக்கெட் வீரர்களாக இருந்தாலும் சரி, சினிமா நட்சத்திரங்களாக

Hombale Films’ S-48: ‘The One’ Suriya and Director T.J. Gnanavel Join Forces for a Powerful New Film

ஹொம்பாலே பிலிம்ஸ் ( Hombale Films) – ‘The one’ சூர்யா - இயக்குநர் த.செ.ஞானவேல் வலிமையான கூட்டணியில் S-48 திரைப்படம் உருவாகிறது



மக்களின் பேராதரவும், ’அன்பான ஃபேன்ஸ்’ படையின் அன்பும் பெற்ற நடிகர் சூர்யா நடிப்பில், எல்லா தரப்பு சினிமா ரசிகர்களும் ரசிக்கும் விதமாக அழுத்தமான கதைகளை திரையில் படைக்கும் இயக்குநர் த .செ. ஞானவேல் இயக்கத்தில், இந்திய சினிமா ரசிகர்களுக்கு பிரம்மாண்டமான திரை அனுபவத்தை வழங்கிவரும் ஹொம்பாலே பிலிம்ஸ் நிறுவத்தின் தயாரிப்பாளர் விஜய் கிரகந்தூர் தயாரிப்பில், S-48 திரைப்படம் உருவாகிறது.


ஸ்டாராவும், சிறந்த நடிகராகவும் விளங்கும் சூர்யாவுடன் இணைந்து இந்திய அளவில் தாக்கத்தை உருவாக்கிய ‘ஜெய்பீம்’ படத்தைக் கொடுத்தவர் இயக்குநர் த.செ. ஞானவேல். எல்லா தரப்பு சினிமா ரசிகர்களின்  கவனத்தையும் பெற்று ஆச்சர்யப்பட வைத்த இவர்கள் மீண்டும் இணையும் திரைப்படத்தை, கே.ஜி.எஃப், காந்தாரா, சலார் போன்ற பிளாக் பஸ்டர் ஹிட் வெற்றி படங்களைத் தருவதில் புதிய சாதனைகளைப் படைத்து வரும், இந்தியாவின் முன்னணி திரைப்பட தயாரிப்பு நிறுவனமான ஹொம்பாலே பிலிம்ஸ் தயாரிக்கும் செய்தி, இந்திய அளவில் அதிக எதிர்பார்ப்பை உருவாக்கி இருக்கிறது.


வெற்றித்திரைப்படங்களின் முகவரியாக விளங்கும் ஹொம்பாலே பிலிம்ஸ் நிறுவனர் தயாரிப்பாளர் விஜய் கிரகந்தூர் இத்திரைப்படம் பற்றி கூறும்போது, ’’தமிழ்நாடு, தென்னிந்தியா கடந்து இந்திய சினிமாவின் சிறந்த நட்சத்திர நடிகராக விளங்கும் சூர்யாவை, முப்பது ஆண்டுகளுக்கு மேல் மக்கள் கொண்டாடி வருகின்றனர். வணிக வெற்றியையும், விமர்களின் பாராட்டையும் ஒருசேர பெறுவதில் தனித்து விளங்கும் சூர்யா அவர்களுடன் ஹொம்பாலே பிலிம்ஸ் இணைவதில் பெருமிதமும் பெருமகிழ்ச்சியும் அடைகிறது.


இந்தியா கடந்து உலக அளவில் கவனம் ஈர்த்த ஜெய்பீம் திரைப்படத்தை இயக்கிய த.செ. ஞானவேல் அவர்கள், அழுத்தமான கதைகளத்தில் நட்சத்திர நடிகர்களை வெற்றிகரமாக கையாண்டு வெற்றிகளைத் தரக்கூடியவர். மொழி மற்றும் கலாச்சார எல்லைகளை கடந்து செல்லும் சிறந்த வெற்றி திரைப்படங்களை உருவாக்குவதில் ஹொம்பாலே பிலிம்ஸ் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறது. இந்திய அளவில் பெரும் வெற்றியையும், கவனத்தையும் பெறப்போகும் திரைப்படத்தை தயாரிப்பதில் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம். The one சூர்யா அவர்களையும், இயக்குநர் த.செ. ஞானவேல் அவர்களையும் ஹொம்பாலே பிலிம்ஸ் குடும்பத்தில் இணைய மகிழ்ச்சியுடன் வரவேற்கிறோம்.


ஹொம்பாலே பிலிம்ஸ் மக்களின் எதிர்பார்ப்புகளை புரிந்துகொண்டு சிறந்தப்படங்களை தயாரிப்பதிலும், அதை மிகப்பெரிய அளவில் பிரம்மாண்ட வெற்றியடை செய்வதில் ஆர்வமும் கவனமும் செலுத்துகிறது. இந்த  தொலைநோக்கு சிந்தனையோடு உள்ள நடிகர்களையும், இயக்குனர்களையும், தொழில்நுட்ப கலைஞர்களையும் இணைப்பதில் எப்போதும் தீவிரம் காட்டி வருகிறது. அதே தொலைநோக்கு சிந்தனை கொண்ட நட்சத்திர நடிகர் சூர்யா அவர்களோடும், இயக்குநர் த.செ. ஞானவேல் அவர்களோடும் ஹொம்பாலே பிலிம்ஸ் இணைவதில் எதிர்பாராததை எதிர்பாருங்கள்’ என்கிறார் தயாரிப்பாளர் விஜய் கிரகந்தூர்.


S-48 திரைப்படத்திற்கு, இளைஞர்களின் இசை ரசனையை தற்போது ஆட்சி செய்கிற சாய் அபயங்கர் இசையமைக்கிறார். தமிழ், தெலுங்கு, மலையாளம் என எல்லா மொழிகளிலும் மிகவும் கவனம் ஈர்த்த கயாது லோகர் கதாநாயகியாக நடிக்கிறார். மிக முக்கியமான கதாபாத்திரத்தில் பிரகாஷ்ராஜ், யோகிபாபு, குமரவேல் போன்ற சிறந்த கலைஞர்கள் நடிக்கிறார்கள்.


எஸ். ஆர். கதிர் ஒளிப்பதிவு செய்ய, கே. கதிர் தயாரிப்பு வடிவமைப்பிலும், ஃபிலோமின் ராஜ் படத்தொகுப்பிலும், பா. கிருத்திகா திரைக்கதையிலும் பங்களிப்பு செய்கிறார்கள். விரைவில் இத்திரைப்படத்தின் இதர தொழில்நுட்ப கலைஞர்கள் விவரங்கள் விரைவில் வெளியாகியுள்ளன. ஜூலை மாதம் 22-ம் தேதி முதல் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்குகிறது.


English Press Release 


*Hombale Films’ S-48: ‘The One’ Suriya and Director T.J. Gnanavel Join Forces for a Powerful New Film*



Actor Suriya, who is immensely loved and supported by the masses and his devoted fans, is set to star in S-48, directed by filmmaker T.J. Gnanavel, known for crafting impactful stories that resonate with audiences across all sections. The film is being produced by Vijay Kiragandur under the banner of Hombale Films, the production house that has consistently delivered grand cinematic experiences to Indian audiences.


Director T.J. Gnanavel and Suriya previously collaborated on the critically acclaimed Jai Bhim, a film that created a significant impact across India. The reunion of this successful duo has already generated tremendous anticipation among cinema lovers, and the excitement has been elevated further with the project being backed by Hombale Films, one of India’s leading production houses behind blockbuster successes such as KGF, Kantara, and Salaar.


Speaking about the project, producer Vijay Kiragandur said:


“Suriya has been celebrated by audiences for over three decades and stands as one of Indian cinema’s finest stars. Hombale Films is proud and delighted to collaborate with an actor who has consistently balanced commercial success with critical acclaim.


Director T.J. Gnanavel, who helmed the globally acclaimed Jai Bhim, has proven his ability to present powerful stories and deliver impactful cinema with star actors. At Hombale Films, we remain committed to creating films that transcend linguistic and cultural boundaries and connect with audiences across the world. We are thrilled to produce a film that is poised to receive immense appreciation and success across India. We warmly welcome Suriya and T.J. Gnanavel to the Hombale Films family.


Hombale Films has always focused on understanding audience expectations and delivering quality cinema on a grand scale. We are constantly looking to collaborate with actors, directors, and technicians who share our vision. The one Suriya and T.J. Gnanavel coming together with us, expect the unexpected.”


For S-48, music will be composed by Sai Abhyankkar, the young sensation currently ruling the hearts of music lovers. Actress Kayadu Lohar, who has garnered attention across Tamil, Telugu, and Malayalam cinema, plays the female lead.


The film also features an impressive supporting cast, including Prakash Raj, Yogi Babu, and Kumarevel in pivotal roles.


S.R. Kathir handles cinematography, K. Kadhir serves as the production designer, Philomin Raj takes care of editing, and B.Krithika contributes to the screenplay.


The film’s shoot set to commence on July 22 2026.

நோவா’ படத்தில் ராணுவ அதிகாரியாக தமிழில் அறிமுகமாகும் அத்விதி ஷெட்டி*

 *‘நோவா’ படத்தில் ராணுவ அதிகாரியாக தமிழில் அறிமுகமாகும் அத்விதி ஷெட்டி*



ராயல் ஃபார்ச்சுனா கிரியேஷன்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘நோவா’ ; பேஸ் ஒன் - தி அரைவல்’ (NOVA) ; Phase One – The Arrival). இயக்குநர் மைலோ இப்படத்தை இயக்குவதன் மூலம் முதன்முறையாக வெள்ளித்திரையில் எடுத்து வைக்கிறார். ஹாரர் சயின்ஸ் பிக்சன் சூப்பர் நேச்சுரல் ஃபேண்டஸி திரில்லர் படமாக இது உருவாகி உள்ளது .


கதையின் நாயகியாக பிக்பாஸ் புகழ் ரைசா வில்சன் நடிக்கிறார்.. இன்னொரு கதாநாயகியாக, கன்னடத்தை சேர்ந்த அத்விதி ஷெட்டி நடித்துள்ளார். மேலும் ‘ஆண்மை தவறேல்’ துருவா, பெங்காலி நடிகையான கிருத்திகா பிஸ்வாஸ், மலையாள நடிகர் ஜோ ஜான் சாக்கோ, சென்ராயன், யூட்யூப் புகழ் ஃபைனலி ஸ்வாதிகா மற்றும் ஃபைனலி கிருஷ்ணா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.


விரைவில் திரைக்கு வரும் விதமாக இப்படத்தின் போஸ்ட் புரொடக்சன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.


படத்தின் கதாநாயகியான அத்விதி ஷெட்டி கடந்த 11 ஆண்டுகளாக கன்னடத் திரைப்படத் துறையில் பணியாற்றி வருபவர். பல விருது பெற்ற படங்களிலும், வணிக ரீதியாக வெற்றி பெற்ற படங்களிலும் நடித்துள்ள இவர். சமீபத்தில் நடித்து வெளியான இரண்டு படங்களில், துளு மொழிப் படம் 100 நாட்கள் ஓடி மிகப்பெரிய வெற்றி பெற்றது..


அதுமட்டுமல்ல இவர் அடிப்படையில் ஒரு நடனக் கலைஞரும் கூட.. கன்னடம், இந்தி மற்றும் தெலுங்கில் சுமார் ஐந்து நடன ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ள இவர் தற்போது ‘நோவா’ படத்தின் மூலம் தமிழில் அடியெடுத்து வைத்துள்ளார்.


‘நோவா’ படத்தில் நடித்த அனுபவம் குறித்து அத்விதி ஷெட்டி கூறும்போது, “இதில் “வல்லபி. ராணுவ அதிகாரி என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன்.. இதுவரையிலான திரைப்பயணத்தில் மிகவும் வித்தியாசமான மற்றும் சவாலான கதாபாத்திரம் இதுதான். இந்தக் கதாபாத்திரத்திற்கு அதிக முக்கியத்துவமும், வலுவான நடிப்பு வாய்ப்பும், நிறைய வசனங்களும் உள்ளன.. 

இது ஒரு அறிவியல் புனைகதை திரைப்படம். அதோடு நிறைய சஸ்பென்ஸும் இருக்கிறது.


எனக்கு இது ஒரு பெரிய சவாலாக இருந்தது. எனக்கு தமிழ் புரியும்.. தமிழ் படங்களையும் விரும்பிப் பார்ப்பேன். ஆனால் தமிழ் பேசும் நண்பர்கள் இல்லாததால் பேசும் வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனாலும் படப்பிடிப்பில் நான் வசனங்களை மிக விரைவாக கற்றுக்கொண்டதாகவும் என் லிப்-சிங்க் மற்றும் நடிப்பு மிகவும் நன்றாக இருந்ததாகவும் பாராட்டினார்கள். ஒரு உணர்ச்சிப்பூர்வமான காட்சியில் நான் கிளிசரின் பயன்படுத்தாமல் நடித்ததை கண்டு மொத்த படக்குழுவிடமிருந்தும் கைதட்டல் கிடைத்தது.. பொதுவாகவே அழுகைக் காட்சிகளில் நான் கிளிசரின் பயன்படுத்துவதில்லை.


படப்பிடிப்பின் நடுவில் என் பாட்டி காலமானார். அவருடன் நான் மிகவும் நெருக்கமாக இருந்தேன். நான் படப்பிடிப்புத் தளத்தில் இருந்தபோது தான் வீட்டிலிருந்து அந்த செய்தி வந்தது. அதேசமயம் முக்கியமான காட்சியில் நடிக்கவேண்டி இருந்ததால் முதலில் அந்தக் காட்சியை முடித்தேன். அதன் பிறகு மங்களூருக்குச் சென்றேன். அதிலும் மூணாரில் இருந்து சரியான் போக்குவரத்து வசதி இல்லாததால் கொச்சி, பெங்களூரு வழியாக பயணம் செய்ய வேண்டியிருந்தது. இதனால் இறுதியாக என் பாட்டியின் முகத்தை கூட என்னால் பார்க்க முடியவில்லை. அடுத்த நாளே மீண்டும் படப்பிடிப்பிற்கு திரும்பி வந்தேன். மனதளவில் அது மிகவும் கடினமான காலம். என்றாலும் என் குடும்பத்தினர், "உன் குழுவிற்கு நீ தேவைப்படுகிறாய்; திரும்பிச் செல்" என்று ஊக்கமளித்ததை தொடர்ந்து மீண்டும் படப்பிடிப்பிற்கு திரும்பினேன். 


பெரும்பாலும் நாங்கள் மலைப்பகுதி மற்று காடுகளின் உள்ளார்ந்த பகுதிகளில் படப்பிடிப்பு நடத்தியதால் எங்களுக்கான காரவன்கள் தூரத்திலேயே நிறுத்தப்பட்டிருந்தன. கழிப்பறைக்குச் செல்லவும் நீண்ட தூரம் நடக்க வேண்டியிருந்தது. மேலும் நான் ராணுவ அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்ததால் கனமான ராணுவ பூட்ஸ்களை அணிய வேண்டியிருந்தது. அவற்றை அணிந்து நடப்பதே மிகவும் கடினமாக இருந்தது. அந்த சமயத்தில் இருந்துதான் நமது நாட்டைக் காக்கும் ராணுவ வீரர்களின் அர்ப்பணிப்பை இன்னும் அதிகமாக மதிக்கத் தொடங்கினேன். 


படத்தில் என் அறிமுகக் காட்சியே மழைக் காட்சியாக இருந்தது. நள்ளிரவு நேரத்தில் மூணாரின் கடும் குளிரில் டேங்கர் தண்ணீரை எங்கள் மீது ஊற்றி படமாக்கினர். 24 மணி நேரம் தொடர்ந்து படப்பிடிப்பு நடந்தது. அது மிகவும் சவாலான அனுபவமாக இருந்தது 


இயக்குநர் மைலோவின் சினிமா பார்வை மிகவும் வித்தியாசமானது. பார்வையாளர்களுக்கு புதுமையான அறிவியல் புனைகதை திரைப்படத்தை வழங்க வேண்டும் என்பதே அவரது நோக்கம். "நோவா" அதற்கான ஒரு சிறந்த முயற்சியாக இருக்கும் என்று நம்புகிறேன்


படப்பிடிப்பில் அனைவரும் மிகவும் உதவியாக இருந்தனர். தமிழ் உச்சரிப்பு, வசனங்கள் போன்றவற்றில் எனக்கு உதவினர். என். குடும்பத்திலிருந்து தூரமாக இருந்ததால் படக்குழுவே எனக்கு ஒரு குடும்பமாக மாறிவிட்டது. நோவா" வெளியான பிறகு தமிழில் மேலும் பல படங்களில் நடிக்க விரும்புகிறேன்” என்று கூறினார்..

சிங் கீதம்’ திரைப்பட விமர்சனம்

 சிங் கீதம்’ திரைப்பட விமர்சனம்

ஜெய்ப்பூரில் உள்ள தனது நண்பரின் உணவகத்தில் பணியாற்றும் நாயகன் சனத்தும், ஐடி துறையில் பணியாற்றும் தமிழ் பெண்ணான இமயாவும் நண்பர்களாக பழகுகிறார்கள். சனத் மீது இமயாவுக்கு காதல் மலர்கிறது. ஆனால், அவரது காதலை சனத் ஏற்க மறுக்கிறார். அதற்கான காரணமாக தனது முதல் காதல் பிரிவால் ஏற்பட்ட வலியை மீண்டும் அனுபவிக்கும் சக்தி தனக்கு இல்லை என்கிறார். அவரது முன்னாள் காதல் பற்றி அறிந்துக் கொண்ட பிறகும் அவர் மீது காதலோடு இருக்கும் இமயாவை சனத்தும் காதலிக்கிறார்.


இமயாவின் காதல் மூலம் மீண்டும் தனது மகிழ்ச்சிகரமான வாழ்க்கைக்கு திரும்பிய சனத், விபத்து ஒன்றின் மூலம் தலையில் அடிபட்டு, தனது 6 வருட நினைவுகளை இழந்து விடுகிறார். இதனால், இமயா மற்றும் அவரது காதலை மறந்துவிடுவதோடு, காதலை முறித்துகொண்டு தன்னைவிட்டு பிரிந்து சென்ற முன்னாள் காதலியின் பிரிவு சம்பவத்தையும் மறந்துவிடுபவர், பழைய நினைவுகளோடு தனது முன்னாள் காதலி மரோனா செபாஸ்டியனை சந்திக்க செல்கிறார்.


மறந்த நினைவுகள் திரும்பவும் வந்தவுடன், அனைத்தும் சரியாகிவிடும் என்ற நம்பிக்கையில் அவருடன் பயணிக்கும் இமயாவின் காதல் வெற்றி பெற்றதா? அல்லது முதல் காதல் முறிவு பற்றி தெரியாமல் பிரிந்து சென்ற காதலியை தேடிச் செல்லும் சனத்தின் காதல் வெற்றி பெற்றதா? என்பதே படத்தின் மீதிக்கதை.


நாயகனாக நடித்திருக்கும் சனத், இரண்டு நாயகிகள் இருந்தாலும் டூயட் மற்றும் ரொமான்ஸ் காட்சிகள் இன்றி, ஒரு கதாபாத்திரமாகவே வலம் வந்திருக்கிறார். முதல் காதலியை உருகி உருகி காதலிப்பவர், அவரது பிரிவால் இறுக்கமான மனநிலையில் இருப்பதும், இமயா உடனான காதலுக்குப் பிறகு மகிழ்ச்சியான மனநிலைக்கு மாறுவது என்று நடிப்பில் ஸ்கோர் செய்திருக்கிறார்.


அறிமுக நடிகை இமயா, புதுமுகம் என்ற அடையாளமே தெரியாதபடி தைரியமாகவும், தன்னம்பிக்கையுடனும் நடித்திருக்கிறார். அவரது திரை இருப்பு மற்றும் நடிப்பு அவரது கதாபாத்திரத்திற்கு பெரும் பலம் சேர்த்திருக்கிறது.


மடோனா செபாஸ்டியன், காதலருக்கு இணையாக தன்னால் காதலில் நேர்மையாக இருக்க முடியாத நிலையை எண்ணி வருந்தும் காட்சியிலும், தான் நிராகரித்த காதல் மீண்டும் தன்னை தேடி வரும்போது, தடுமாறும் காட்சியிலும் எதார்த்தமாக நடித்து கவனம் ஈர்க்கிறார்.


நாயகனின் நண்பராக நடித்திருக்கும் வாட்ஸ்-அப் மணி குணச்சித்திர வேடத்துடன் நகைச்சுவையாகவும் நடித்து சில காட்சிகளில் சிரிக்க வைக்கிறார். அவரது மனைவியாக நடித்திருக்கும் டெப்னிதா கொடுத்த வேலையை சரியாக செய்திருக்கிறார்.


ஒளிப்பதிவாளர் முகேஷ்வரன்.வி, ஜெய்ப்பூர் மற்றும் ஊட்டியை அழகியலோடு காட்சிப்படுத்தி கண்களுக்கு காட்சி விருந்து படைத்திருக்கிறார்.


ராஜேஷ் முருகேசனின் இசையில் பாடல்கள் அனைத்தும் திரும்ப திரும்ப கேட்கும் மெலோடி ரகம். பின்னணி இசை அளவு.


நினைவுகளை இழப்பதும், அதனால் ஏற்படும் விளைவுகளுமே திரைக்கதையில் ஆதிக்கம் செலுத்துவதால், காதலர்களின் உணர்வுகளும், அவர்களது வலியும் எந்த ஒரு காட்சியிலும் பிரதிபலிக்காதது, படத்தொகுப்பிலும் தெரிகிறது. எனவே இயக்குநர் சொன்னதை மட்டுமே செய்திருக்கிறார் படத்தொகுப்பாளர் பரத் விகரமன்.


எழுதி இயக்கியிருக்கும் கிஷோர் குமார், காதல் கதை மூலமாக பார்வையாளர்களை உருக வைப்பதற்கு பதிலாக, நினைவுகளை இழந்த நாயகனின் காதல் கதைகளை காமெடியாக சொல்லி ரசிக்க வைக்க முயற்சித்திருக்கிறார்.


பார்வையாளர்களை கவர்வதோடு, அவர்களது ஆழ் மனதில் இருக்கும் காதல் நினைவுகளை தட்டி எழுப்புவதற்கு காதலர்களின் உணர்வுப்பூர்வமான காட்சிகளே போதுமானது. ஆனால், இயக்குநர் கிஷோர் குமார், ஞாபக மறதி அல்லது நினைவுகள் இழப்பு என்ற பின்னணியோடு காதல் உணர்வுகளை வெளிப்படுத்த முயற்சித்திருப்பது, எந்தவிதத்திலும் பார்வையாளர்களை பாதிக்கவில்லை.


முன்னாள் காதல் மற்றும் இன்னாள் காதல் என்று ஒரே நேரத்தில் இரண்டு காதலிகளுடன் பயணிக்கும் நாயகனின் செயலும், இறுதியில் யாருடன் அவர் இணைவார் ? என்ற கேள்வியும் படத்தை சற்று சுவாரஸ்யமாக நகர்த்தி சென்றாலும், மூன்று முதன்மை கதாபாத்திரங்களுக்கான கெமிஸ்ட்ரியில் இயக்குநர் கூடுதல் கவனம் செலுத்தியிருந்தால் தமிழ் சினிமாவில் தாக்கத்தை ஏற்படுத்திய காதல் படங்களின் வரிசையில் இந்த படத்திற்கும் இடம் கிடைத்திருக்கும்.


மொத்தத்தில் ‘ஹார்ட்டின்’ பொழுதுபோக்கு படமாக பார்வையாளர்களை திருப்திப்படுத்தினாலும், இதயத்தை தொடவில்லை.

அந்தரன்’ திரைப்பட விமர்சனம்

 அந்தரன்’ திரைப்பட விமர்சனம்

நாயகி இவானா வருணை காதலிக்கும் நபர் கொடூரமாக கொலை செய்யப்படுகிறார். சில மாதங்களுக்குப் பிறகு பெற்றோர்களின் வற்புறுத்தலால் அவருக்கு திருமண ஏற்பாடு செய்யப்படுகிறது. நிச்சயம் முடிந்த நிலையில் இவானாவின் வருங்கால கணவர் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொள்கிறார். அவரை தொடர்ந்து இவானா வருணுக்கு மீண்டும் திருமண ஏற்பாடு நடக்க, அவரும் விபத்தில் சிக்கி உயிரிழக்கிறார்.


இந்த தொடர் மரணங்கள் எதேச்சையாக நடப்பவை என்று இவானா குடும்பத்தார் நினைக்கும் போது, காவல்துறையின் விசாரணையில் இவை அனைத்தும் யாரோ திட்டமிட்டு செய்யும் கொலைகள் என தெரிய வருகிறது. இருப்பினும், குற்றவாளி குறித்தோ அல்லது மரணங்களின் மர்மம் குறித்தோ எந்தவிதமான தடயங்களும் கிடைக்காமல் போக, இந்த வழக்கு காவல்துறை அதிகாரியான நாயகன் பிரஜினிடம் ஒப்படைக்கப்படுகிறது.


இவானா வருணிடம் இருந்து தனது விசாரணையை தொடங்கும் பிரஜின், நாளடைவில் அவர் மீது காதல் கொண்டு, அவரை திருமணம் செய்துகொள்ள முடிவு செய்கிறார். இவானா வருணை திருமணம் செய்ய நினைப்பவர்களுக்கு ஏற்பட்ட நிலை பிரஜினுக்கும் ஏற்பட்டதா ? அல்லது கொலைகளின் பின்னணியில் இருக்கும் மர்மத்தையும், கொலையாளியையும் அவர் கண்டுபிடித்தாரா ? என்பதை பல திடுக்கிடும் திருப்பங்களோடு சொல்வதே ‘அந்தரன்’.


காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கும் பிரஜின், கம்பீரமான நடிப்பின் மூலம் தனது கதாபாத்திரத்திற்கு நியாயம் சேர்த்திருக்கிறார். காவல்துறை அதிகாரியாகவும், காதலராகவும் தனது உணர்வுப்பூர்வமான நடிப்பை கச்சிதமாக வெளிப்படுத்தி படத்திற்கு பலமாக பயணித்திருக்கிறார்.


கதாநாயகியாக நடித்திருக்கும் இவானா வருண், பலம் வாய்ந்த கதாபாத்திரத்தை தன்னால் முடிந்தவரை குறையில்லாமல் கையாண்டு கவனம் ஈர்க்கிறார்.


நாயகியின் தந்தையாக நடித்திருக்கும் எம்.கே.சாம்பசிவம், அம்மாவாக நடித்திருக்கும் செந்தி குமாரி, அனுபமா குமார், அதிரன், ரமேஷ்பாபு கீதா, பத்மன், பிரியங்கா செல்வி, ஐஸ்வர்யா கண்ணன் என மற்ற கதாபாத்திரங்களில் நடித்திருப்பவர்கள் தங்களது பணியை சரியாக செய்திருக்கிறார்கள்.


ஒளிப்பதிவாளர் கிஷோர் ராமச்சந்திரன், கிரைம் சஸ்பென்ஸ் திரில்லருக்கான பரபரப்புடன் காட்சிகளை படமாக்கினாலும், காதல் காட்சிகள் மற்றும் பாடல் காட்சிகளை கலர்புல்லாக காட்சிப்படுத்தி ரசிக்க வைத்திருக்கிறார்.


ஹரி.எஸ்.ஆர் இசையமைப்பில் காதல் பாடல்கள் நெஞ்சை வருடும் விதத்தில் அமைந்திருக்கிறது. பின்னணி இசை காட்சிகளின் விறுவிறுப்பை அதிகரிக்கச் செய்கிறது.


படத்தொகுப்பாளர்கள் இக்னேஷியஸ் அஸ்வின் மற்றுய்ம் சதீஷ் குரோசாவா, காட்சிகளை நேர்த்தியாக தொகுத்து படத்தை தொய்வின்றி நகர்த்தி சென்றிருக்கிறார்கள்.


எழுதி இயக்கியிருக்கும் சந்தோஷ் ராவணன், தொடர் கொலைகள் என்ற வழக்கமான கிரைம் சஸ்பென்ஸ் திரில்லர் பாணியிலான கதைக்கருவுக்கு, மிக சுவாரஸ்யமான திரைக்கதை அமைத்து, யூகிக்க முடியாத திருப்பங்கள் மூலம் படத்தை பரபரப்பாக நகர்த்தி செல்கிறார்.


பார்வையாளர்களுக்கு சில கதாபாத்திரங்கள் மீது சந்தேகம் ஏற்படும் வகையில் காட்சிகளை வடிவமைத்திருக்கும் இயக்குநர் சந்தோஷ் ராவணன், கிளைமாக்ஸ் நெருங்கும் போது, எதிர்பார்க்காத திருப்பம் மூலம் யூகங்களை உடைத்தெறிந்து வியக்க வைக்கிறார்.


நாயகியின் வீட்டில் இருக்கும் இளைஞர் யார் ? என்பதை விவரிக்காதது லாஜிக் மீறலாக இருந்தாலும், படத்தின் ஆரம்பத்திலேயே பார்வையாளர்களை கதைக்குள் இழுத்துவிடும் இயக்குநர் சந்தோஷ் ராவணன், கிளைமாக்ஸ் வரை அடுத்தது என்ன நடக்கும் ? என்ற எதிர்பார்ப்புடனும், விறுவிறுப்புடனும் படத்தை நகர்த்தி சென்று, கிரைம் சஸ்பென்ஸ் திரில்லர் பட விரும்பிகளை முழுமையாக திருப்திப்படுத்தியிருக்கிறார்.


மொத்தத்தில், ‘அந்தரன்’ அமர்க்களமான கிரைம் சஸ்பென்ஸ் திரில்லர்.

கான் சிட்டி’ திரைப்பட விமர்சனம்

 கான் சிட்டி’ திரைப்பட விமர்சனம்

அர்ஜுன் தாஸ், அன்ன பென் மற்றும் வடிவுக்கரசியும், அவரது மகனான யோகி பாபு ஆகியோருக்கு எந்தவித தொடர்பும் இல்லை என்றாலும் அனைவரும் பொருளாதார பிரச்சனையில் சிக்கி தவிக்கிறார்கள். அவர்களது நிலையை மாற்றுவதற்காக கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்தி மோசடி மூலம் பணம் சம்பாதிக்க தொடங்குகிறார்கள். அந்த பணத்தை வைத்து குறுகிய காலத்தில் அதிக வருமானம் ஈட்டும் முயற்சியில் ஈடுபடும் போது அவர்கள் அனைவரும் ஏமாற்றப்படுகிறார்கள். தங்களது பணத்துடன், மக்களின் பணத்தையும் இழந்து விட்ட அவர்களை போலீஸ் கைது செய்ய, அங்கிருந்து தப்பித்துச் செல்பவர்கள் ஒன்றாக சேர்ந்து ஒரு குடும்பமாக தலைமறைவு வாழ்க்கை வாழ்கிறார்கள்.


இதற்கிடையே அவர்கள் இருக்கும் இடத்தை கண்டிபிடிக்கும் ஓய்வு பெற்ற போலீஸ் இன்ஸ்பெக்டர், அவர்களை வைத்து கோடிக்கணக்கில் பணம் சம்பாதிக்க திட்டம் போடுகிறார். அவரது மிரட்டலுக்கு அடிபணிபவர்கள், மீண்டும் சென்னைக்கு திரும்பி பெரும் மோசடி மூலம் பணம் சம்பாதிக்க திட்டம் போடுகிறார்கள். அவர்களின் திட்டம் வெற்றி பெற்றதா ?, இல்லையா ?, என்பதை மக்களின் பேராசையை வைத்து நடத்தப்படும் மோசடிகளை, நகைச்சுவை பின்னணியோடு சொல்ல முயற்சித்திருப்பது தான் ‘கான் சிட்டி’.


நாயகனாக நடித்திருக்கும் அர்ஜுன் தாஸ், தனது இறுக்கமான கதாபாத்திர கட்டமைப்பில் இருந்து விலகி கொஞ்சம் ரிலாக்ஸ் செய்யும் விதத்திலான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். நகைச்சுவைக்கு முக்கியத்துவம் உள்ள கதைக்களம் என்றாலும், அதற்கான முழுமையான வாய்ப்பு அர்ஜுன் தாஸுக்கு கிடைக்கவில்லை என்பதே உண்மை. இருந்தாலும் தனக்கு கிடைத்த வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தி, தன்னால் கமர்ஷியல் நாயகனாகவும் பயணிக்க முடியும் என்பதை படம் முழுவதும் நிரூபித்திருக்கிறார்.


மோசடியால் ஏமாற்றப்பட்டு, அதே மோசடி மூலம் தனது நிலையை மாற்றும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அன்னா பென், அளவான நடிப்பின் மூலம் தனது கதாபாத்திரத்திற்கு பலம் சேர்த்திருக்கிறார்.


நகைச்சுவைக்கு முக்கியத்துவம் உள்ள படம் என்றாலும், யோகி பாபு தனது பாணியை கைவிட்டுவிட்டு புதிதாக ஏதோ செய்ய முயற்சித்திருக்கிறார். தனது வழக்கமான உடல்கேலி வசனங்களை முற்றிலும் தவிர்த்திருப்பவர், தனது சோகமான முகம் மற்றும் நடிப்பு மூலம் பார்வையாளர்களை சிரிக்க வைக்க முயற்சித்திருக்கிறார். ஆனால், அது முடியாமல் போக, தனது வழக்கமான பாணியை அளவாக கையாண்டு சில இடங்களில் லேசாக சிரிக்க வைக்கிறார்.


யோகி பாபுவின் அம்மாவாக நடித்திருக்கும் வடிவுக்கரசி, பிளாக் காமெடி காட்சிகளுக்கு ஏற்ப கச்சிதமான எக்ஸ்பிரஷனோடு சிரிக்க வைக்கிறார். குறிப்பாக யோகி பாபு உடனான அவரது காட்சிகளும், அதில் அவர் வெளிப்படுத்திய நடிப்பும் அவருக்கு புதிய அடையாளத்தை கொடுப்பதோடு, பார்வையாளர்களை சிரிக்கவும் வைக்கிறது.


அகிலன், நந்தகோபால், விடிவி கணேஷ், தீப ராமானுஜம், ராதாரவி, அருள்தாஸ், ஷாஜி சென், தம்பி ராமையா, ரமேஷ் திலக், பரத்வாஜ் ரங்கன், இமான் அண்ணாச்சி, பொன்வண்ணன், ராகு எசக்கி, சதானந்த் ஆகியோர் கொடுத்த வேலையை குறையின்றி செய்திருக்கிறார்கள்.


ஷான் ரோல்டன் இசையில் பாடல்கள் கேட்கும்படி உள்ளது. பின்னணி இசை காட்சிகளின் விறுவிறுப்பை அதிகரிக்க செய்யும் விதத்தில் பயணித்திருக்கிறது.


ஒளிப்பதிவாளர் அரவிந்த் விஸ்வநாத் காட்சிகளை தரமாக படமாக்கியிருந்தாலும், தலைப்புக்கு ஏற்ப காட்சியை காட்ட வேண்டும் என்பதற்காக நகரத்தை அடிக்கடி பருந்து பார்வையில் காட்டுவதை தவிர்த்திருக்கலாம்.


படத்தொகுப்பாளர் அருள் மோசஸ்.ஏ, திரைக்கதை தொய்வின்றி நகர்வதற்கு தன்னால் முடிந்த முயற்சியை செய்தாலும், இறுதியில் என்ன நடக்கப் போகிறது என்ற பார்வையாளர்களின் யூகங்களுக்கு ஏற்ப படத்தை நகர்த்திச் சென்றிருக்கிறார்.


எழுதி இயக்கியிருக்கும் ஹரிஸ் துரைராஜ், புத்திசாலித்தனம் அல்லது தந்திரமான திட்டங்கள் மூலம் நடத்தப்படும் மோசடிகளை, நகைச்சுவை பின்னணியோடு சொல்ல முயற்சித்திருக்கிறார்.


முதன்மை கதாபாத்திரங்களின் முகத்தில் சிரிப்பை வெளிக்காட்டாமல் காட்சிகளை கையாண்டிருப்பது புதிதாக இருக்கிறது. அதே சமயம், திரைக்கதை மற்றும் காட்சிகள் நாம் ஏற்கனவே பல படங்களில் பார்த்த உணர்வை கொடுப்பதால், படம் சுவாரஸ்யம் இல்லாமல் நகர்கிறது.


மொத்தத்தில், ‘கான் சிட்டி’ ஏற்கனவே பார்த்த உணர்வை கொடுக்கிறது.

அங்கீகாரம்’ திரைப்பட விமர்சனம்

 அங்கீகாரம்’ திரைப்பட விமர்சனம் 

சென்னையின், குடிசைப் பகுதியில் வாழும் நாயகன் கே.ஜெ.ஆர், சிறு வயதில் இருந்தே தடகள விளையாட்டில் ஈடுபாடு காட்டி வருகிறார். விளையாட்டு ஒன்றே தனது வாழ்க்கை தரத்தை உயர்த்தும் என்ற நம்பிக்கையில், ஓட்டப்பந்தய விளையாட்டில் அதீத ஈடுபாடு காட்டி வரும் அவர், விளையாட்டு வீரருக்கான எவ்வித அடிப்படை வசதிகளும் இல்லை என்றாலும், தேசிய அளவிலான போட்டியில் சாதனை புள்ளிகளோடு சாம்பியன் பட்டம் வென்று காமன்வெல்த் போட்டிக்கு நேரடியாக தகுதி பெறுகிறார்.


ஆனால், மோசடிகள் நிறைந்த தேசிய தடகளச் சங்கம் அவரது முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டைப் போடுகிறது. எப்படியாவது சர்வதேச போட்டியில் சாம்பியன் பட்டம் வென்று சாதிக்க துடிக்கும் அவர் மாநில விளையாட்டுத் துறை, விளையாட்டுத்துறை அமைச்சர் என்று பல இடங்களில் முறையிட்டாலும், பயன் இல்லாமல் போகிறது.

அனைத்து தகுதிகளும் இருந்தும், தனக்கான வாய்ப்பு மறுக்கப்படுவதை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரும் கே.ஜெ.ஆர், வழக்கறிஞர் இல்லாமல் தனது பிரச்சனைக்கு தானே வாதிட்டு, விளையாட்டுத் துறையில் தனக்கு கிடைக்க வேண்டிய அங்கீகாரத்தை பெற முயற்சிக்கிறார். இந்த முயற்சியில் அவர் வெற்றி பெற்றாரா? இல்லைய ?, என்பதை தகுதி இருந்தும் தங்களுக்கான அங்கீகாரம் கிடைக்காமல் போன விளையாட்டு வீரர்களின் மன குமுறல்களாக பிரதிபலிப்பதே ‘அங்கீகாரம்’.

நாயகனாக நடித்திருக்கும் திரைப்பட தயாரிப்பாளர் கே.ஜெ.ஆர், தடகள வீரருக்கான உடல்மாற்றத்தை வியக்கும்படி மேற்கொண்டிருக்கிறார். அதற்காக அவர் கடுமையான உடற்பயிற்சியை செய்திருப்பது படம் முழுவதும் தெரிகிறது. அதேபோல், நடிப்பிலும் கொஞ்சம் பயிற்சி எடுத்திருந்தால் ஒரு நடிகராகவும் வியக்க வைத்திருக்கலாம். ஆனால், மனுஷன் உடற்பயிற்சிக்கே அதிக முக்கியத்துவம் கொடுத்திருப்பதால், நடிப்பில் கவனம் செலுத்தாமல் அனைத்துக் காட்சிகளிலும் ஒரே மாதிரியான ரியாக்‌ஷன்களோடு வலம் வருகிறார். அதே சமயம் அவருக்கு நடிப்பதைவிட, அதிகமான வசனம் பேசுவதற்கு தான் வாய்ப்புகள் அதிகம் என்றாலும், அந்த குறைவான வாய்ப்பில் கூட அவரது நடிப்பின் குறை அப்பட்டமாக தெரிகிறது.

அரசு வழக்கறிஞராக நடித்திருக்கும் விஜி வெங்கடேஷ், நாயகனின் சகோதரியாக நடித்திருக்கும் இசபெல்லா, தடகள விளையாட்டுப் பயிற்சியாளராக நடித்திருக்கும் வசுந்தரா, நாயகனின் அம்மாவாக நடித்திருக்கும் ரமா, நாயகனின் தோழியாக தடக வீராங்கனையாக நடித்திருக்கும் சிந்தூரி, தேசிய தடகள சங்கத்தின் தலைவராக நடித்திருக்கும் ஷான், மாநில விளையாட்டுத்துறை அதிகாரியாக நடித்திருக்கும் அருள் டி.சங்கர், விளையாடுத்துறை அமைச்சராக நடித்திருக்கும் மன்சூர் அலிகான், நீதிபதிகளாக நடித்திருக்கும் ரங்கராஜ் பாண்டே மற்றும் மோகன் ராமன் உள்ளிட்ட மற்ற கதாபாத்திரங்களில் நடித்திருப்பவர்கள் படத்தில் எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை என்றாலும், திரைக்கதையின் ஓட்டத்திற்கு உறுதுணையாக பயணித்திருக்கிறார்கள்.

கதாபாத்திரங்களின் முகத்தில் செயற்கைத்தனம் தெரிந்தாலும், காட்சிகளில் தெரியக் கூடாது என்பதற்காக ஒளிப்பதிவாளர் ஏ.விஸ்வநாத், சென்னையின் குடிசைப் பகுதிகளில் நேரடியாக காட்சிகளை படமாக்கியிருக்கிறார். தடகள போட்டியை எதார்த்தமாக காட்சிப்படுத்துவதை விட கிரீன் மேட் அதிகம் பயன்படுத்தியிருப்பது அப்பட்டமாக தெரிகிறது. அதே சமயம், இரண்டாம் பாதி முழுவதும் நீதிமன்ற வளாகத்தில் நகர்வதால், ஒளிப்பதிவாளர் தனது தனித்தன்மையை காட்ட முடியாமல் தடுமாறியிருக்கிறார்.

ஜிப்ரான் வைபோதா இசை படத்திற்கு பெரிய அளவில் கைகொடுத்திருக்கிறது. கதை மாந்தர்களின் உணர்வுகளுக்கு உயிரூட்டியிருக்கும் பின்னணி இசை, படம் முழுவதும் அளவாக பயணித்து பலம் சேர்த்திருக்கிறது.

படத்தொகுப்பாளர் தினேஷ் குமாருக்கு பெரிய சவால் நிறைந்த பணி இல்லை என்றாலும், திரைக்கதை தொய்வின்றி நகர்வதற்கு ஏற்ப காட்சிகளை தொகுத்திருக்கிறார்.

எழுதி இயக்கியிருக்கும் தென்பாதியான், தமிழகத்தில் மட்டும் அல்ல இந்திய அளவில் விளையாடுத்துறையில் நடக்கும் மோசடிகளை வெளிச்சத்திற்கு கொண்டு வரும் முயற்சியை மேற்கொண்டிருப்பதோடு, கிரிக்கெட்டுக்கு கிடைக்கும் முக்கியத்துவம் மற்ற விளையாட்டுகளுக்கு கிடைப்பதில்லை ஏன் ? என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளார்.

சட்டம் மூலம் தனக்கான அங்கீகாரத்தை பெறுவதற்கு போராடும் ஒரு சாமானியனின் குரலை நீதிமன்றம் இவ்வளவு பொறுமையாக கேட்குமா ?, அதுவும் வழக்கறிஞர் இன்றி அவரே வாதிடுவதோடு, பல மோசடிகள் குறித்து ஆதாரப்பூர்வமாக விவரிப்பதை கூட அமைதியான முறையில் கேட்கும், என்பதெல்லாம் சினிமாத்தனமாகவே தெரிகிறதே தவிர உண்மைக்கு நெருக்கமானதாக இல்லை.

நீதிமன்ற வாதங்கள் சினிமாத்தனமாக பயணித்தாலும், ஒரு விளையாட்டு வீரரின் சாதனைப் பயணத்தை மட்டுமே கதையாக்கி காட்சிப்படுத்தி வரும் திரைப்படங்களுக்கு மத்தியில், ஆட்சியாளர்களின் அலட்சியம், பொறுப்பில்லாத அதிகாரிகள், விளையாட்டை வளர்க்க வேண்டிய சங்கங்கள் அதை எப்படி சாகடிக்கின்றது என்ற உண்மை, ஆகியவற்றை அழுத்தமாக பதிவு செய்து, பல சோதனைகளை கடந்தாலும் சாதனைக்கு அருகில் செல்ல முடியாமல் துவண்டு போகும் பல தகுதியான விளையாட்டு வீரர்களின் மன வலியை மக்களின் மனதுக்குள் கடத்தியதில் இயக்குநர் தென்பாதியான் வெற்றி பெற்றிருக்கிறார்.

மொத்தத்தில், ’அங்கீகாரம்’ படத்திற்கு மக்களின் ஆதரவு நிச்சயம் கிடைக்கும்.

ப்ராமிஸ்’ திரைப்பட விமர்சனம்

 ப்ராமிஸ்’ திரைப்பட விமர்சனம் 

தனியார் நிறுவனம் ஒன்றில் விற்பனை பிரிவில் பணியாற்றும் நாயகன் அருண்குமார் சேகரனும், கல்லூரி மாணவியான நாயகி நதியா சோமுவும் காதலிக்கிறார்கள். அருண்குமார் சேகரனுக்கு மது அருந்தும் பழக்கம் இருப்பதை அறிந்துக் கொள்ளும் நதியா சோமு, இனி மது அருந்துவதை நிறுத்த வேண்டும், என்று அவரிடம் சத்தியம் (ப்ராமிஸ்) வாங்குகிறார். ஆனால், சில நாட்களிலேயே காதலிக்கு செய்துக் கொடுத்த சத்தியத்தை உதாசினப்படுத்திவிட்டு நண்பர்களுடன் சேர்ந்து அருண்குமார் சேகரன் மது அருந்துகிறார். இதை அறிந்து வருந்தும் நதியா சோமு, காதலனுடன் பேசுவதை தவிர்க்க, காதல் பிரிவால் அருண்குமார் சேகரன் தொடர்ந்து மது அருந்துகிறார்.


விசயம் அறிந்து அருண்குமார் சேகரனை சந்தித்து சமாதானப்படுத்தும் நதியா சோமு, அவரை திருமணமும் செய்துக் கொள்கிறார். காதல் ஜோடி தம்பதியராகி மகிழ்ச்சியாக வாழ்ந்துக் கொண்டிருக்க, அவர்களது மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கும் விதமாக நதியா சோமு கர்ப்பமடைகிறார். இதையடுத்து தம்பதிக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட, அருண்குமார் சேகரனின் பரிசோதனை முடிவு, அவருக்கு பேரதிர்ச்சியை கொடுக்கிறது.


காதலில் வெற்றி, மகிழ்ச்சியான இல்லற வாழ்க்கை, அப்பவாகப் போகும் பெருமிதம் என வாழ்க்கையில் அனைத்தும் கிடைத்த பெரும் மகிழ்ச்சியில் இருக்கும் நாயகன் அருண்குமார் சேகரனின் மருத்துவ முடிவு, வாழ்க்கையில் அவருக்கு படிபடியாக கிடைத்த அனைத்து மகிழ்ச்சியையும் ஒட்டுமொத்தமாக சாய்த்துவிடுகிறது. அதன் பிறகு அவரது வாழ்க்கை என்னவானது ?, அவரது மருத்துவ முடிவின் பின்னணி என்ன ? என்பதை எளிமையான காதல் கதையோடும், வலிமையான மெசஜோடும் சொல்வது தான் ‘ப்ராமிஸ்’


கொடுத்த வாக்கை நிறைவேற்ற வேண்டும், செய்த சத்தியத்தை காப்பாற்ற வேண்டும். அப்படி இல்லை என்றால் என்னவெல்லாம் நடக்கும் என்பதை, கமர்ஷியல் பாணியில் மட்டும் அல்லாமல் மக்களுக்கு அறிவுரை சொல்லும் படமாகவும் இயக்கியிருக்கிறார் அருண்குமார் சேகரன்.


படத்தை இயக்கி கதையின் நாயகனாக நடித்திருக்கும் அருண்குமார் சேகரன், எளிமையான தோற்றத்தில், கதாபாத்திரத்திற்கு பொருத்தமானவராக இருக்கிறார். மற்றவர்களுக்கு அறிவுரை சொல்வதை விட, தன்னால் முடிந்த உதவியை செய்ய வேண்டும், என்ற குணம் கொண்ட அவரது உடல்மொழி மற்றும் ஏற்றமும், இறக்கமும் இல்லாத அளவான நடிப்பு, அருண்குமார் சேகரன் என்ற நடிகர் அடையாளத்தை கடந்து, சங்கமித்ரன் என்ற கதாபாத்திரமாக பார்வையாளர்கள் மனதில் எளிதில் பதிய வைத்து விடுகிறது.


கதாநாயகியாக நடித்திருக்கும் நதியா சோமு, பக்கத்து வீட்டு பெண் போல் மிக மிக எளிமையான முகத்தோடும், செயற்கைத்தனம் அற்ற அழகோடும் கவனம் ஈர்க்கிறார். ஆரம்பத்தில் அவரது நடிப்பு சாதாரணமாக இருந்தாலும், கணவருக்கு ஏற்பட்ட பாதிப்பு, கணவர் பற்றிய உண்மை தெரிந்து அவரை பிரிய முடிவு செய்வது, இறுதியில் தனது சத்தியத்தால் ஏற்பட்ட விபரீதத்தை எண்ணி வருந்துவது, என்று அழுத்தமான கதாபாத்திரத்தை மிக சிறப்பாக கையாண்டு படத்திற்கு பெரும் பலம் சேர்த்திருக்கிறார்.


சுஜன், அம்ரிஷ், பிரதாப், கோகுல், குணா, சுந்தரவேல், கார்த்திக் ஸ்மித் ,ராஜா, டாக்டர் இவின், ராஜ்குமார், கலைவாணி ஆகியோர் புதுமுகங்கள் என்ற அடையாளமே தெரியாதவாறு நடித்திருக்கிறார்கள். அதேபோல், கதாநாயகனின் நண்பர்களாக வருபவர்கள், கடை முதலாளி, நாயகனின் தாய் தந்தை, நாயகியின் தாய் , எதிர்மறைப் பாத்திரத்தில் லிங்கேஸ்வரனாக நடித்திருப்பவர் என அனைவரும் புதியவர்கள் என்றாலும், தங்களுக்கு கொடுத்த வேலையை குறையின்றி செய்திருக்கிறார்கள்.


ஒளிப்பதிவாளர் வினோத் குமார், மலைகள் நிறைந்த வேலூர் மாவட்டத்தை ரசிக்கும்படி காட்சிப்படுத்தியிருக்கிறார். ரயில் தண்டவாளம், பாறைகள் ஆகியவற்றை காட்சிகளோடு பயணிக்க வைத்து கதைக்களத்துடன் பார்வையாளர்களையும் பயணிக்க வைத்திருக்கிறார்.


சரவண தீபன் இசையமைப்பில், பாலா வரிகளில் பாடல்கள் அனைத்தும் புரியும்படியும், கேட்கும்படியும் இருக்கிறது. பின்னணி இசை காட்சிகளுக்கு ஏற்ப பயணித்திருக்கிறது.


ஸ்ரீராம் விக்னேஷின் படத்தொகுப்பு காட்சிகளை தொய்வில்லாமல் நகர்த்துகிறது.


ஒருவருக்கு செய்துகொடுத்த சத்தியத்திற்கு மதிப்பளிக்காமல் போவது வாழ்க்கையில் பல விளைவுகளை உண்டாக்கும், என்ற ரீதியில் கதை நகர்ந்தாலும், திரைக்கதையில் மது போதையும், அதனால் ஏற்படும் பேராபத்தையும் இயக்குநர் அருண்குமார் சேகரன் ஆழமாக அலசியிருக்கிறார்.


எதற்கு எடுத்தாலும் ப்ராமிஸ்…என்று சத்தியம் செய்பவர்களுக்கு அதை காப்பாற்றும் பொறுப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் காட்சிகளை வடிவமைத்திருக்கும் இயக்குநர் அருண்குமார் சேகரன், தீர விசாரிக்காமல், மனம் விட்டு பேசாமல் ஒரு விசயத்தில் எடுக்கப்படும் முடிவு, எத்தகைய பாதிப்புகளை உண்டு பண்ணும் என்பதை எளிமையாக விவரித்தாலும், படம் பார்ப்பவர்களை யோசிக்க வைக்கும் விதத்தில் சொல்லியிருக்கிறார்.


தவறு செய்யாத நாயகனுக்கு பாதிப்பு வந்தது எப்படி ? என்பதை இயக்குநர் அருண்குமார் சேகரன் தெளிவுப்படுத்தாது, பாதிக்கப்பட்ட தங்களது ஒரே மகனின் இக்கட்டான சூழ்நிலையில் உடன் இல்லாத பெற்றோர், போன்றவை திரைக்கதையின் குறைகளாக இருந்தாலும், இயக்குநர் மக்களுக்கு சொல்ல நினைத்த கருத்தை மிக ஆழமாகவும், கமர்ஷியலாகவும் சொன்னதில் வெற்றி பெற்றிருக்கிறார். மொத்தத்தில், ‘ப்ராமிஸ்’ வலிமையான மெசஜை எளிமையான முறையில் சொல்லும் மக்களுக்கான படம்.

The India Story Hard-Hitting Teaser Out, Highlights the Hidden Truth Behind Pesticide Farming*

 *பூச்சிக்கொல்லி விவசாயத்தின் மறைக்கப்பட்ட உண்மையை வெளிச்சமிடும் ‘தி இந்தியா ஸ்டோரி’ டீசர் வெளியீடு!*



சமூகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வரும் பூச்சிக்கொல்லி விவசாயம் (Pesticide Farming) குறித்த அதிர்ச்சியூட்டும் உண்மைகளை வெளிச்சமிடும் ‘தி இந்தியா ஸ்டோரி: ஸ்லோ பாய்சன் இன் புரோகிரஸ்’ (Slow Poison in Progress  ) திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.


காஜல் அகர்வால் மற்றும் ஷ்ரேயாஸ் தல்படே முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ள இப்படம், நாள்தோறும் கோடிக்கணக்கான மக்களின் வாழ்க்கையை பாதிக்கும் மிக முக்கியமான சமூகப் பிரச்சினையை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளது.


Zee Studios நிறுவனம், MIG Production & Studios உடன் இணைந்து வழங்கும் இப்படத்தை சேட்டன் DK இயக்கியுள்ளார். சாகர் B . ஷிண்டே கதையை எழுதி தயாரித்துள்ளார். இப்படம் ஜூலை 24, 2026 அன்று உலகம் முழுவதும் தமிழ், இந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.


தற்போது வெளியாகியுள்ள டீசர், பூச்சிக்கொல்லி விவசாயத்தின் பின்னணியில் மறைந்திருக்கும் ஆபத்தான உண்மைகளை வெளிக்கொணர போராடும் காஜல் அகர்வால் மற்றும் ஷ்ரேயாஸ் தல்படேவின் கதாபாத்திரங்களை வலுவாக சித்தரிக்கிறது. அன்றாட உணவுப் பொருட்களில் கலந்து வரும் நச்சுப் பொருட்களால், குறிப்பாக இளம் தலைமுறையினரின் உடல்நலத்திற்கு ஏற்படும் பாதிப்புகளை படம் உருக்கமாக எடுத்துரைக்கிறது. சமூக அக்கறையுடன் உருவாக்கப்பட்ட இந்தக் கதை, பலரின் கவனத்திற்கே வராமல் இருக்கும் ஒரு மிகப்பெரிய பிரச்சினையை மக்களிடம் கொண்டு சேர்க்க முயல்கிறது.


இப்படத்தை பற்றி சேட்டன் DK கூறுகையில்..,

“தி இந்தியா ஸ்டோரி என்பது வெறும் திரைப்படம் அல்ல; சமூகமாக நாம் அவசியம் பேச வேண்டிய ஒரு முக்கிய உரையாடல். பூச்சிக்கொல்லி விவசாயத்தின் அதிர்ச்சியூட்டும் உண்மைகளையும், அது உருவாக்கும் அமைதியான உடல்நல நெருக்கடியையும் இந்தக் கதையின் மூலம் வெளிப்படுத்த விரும்பினோம். டீசர் என்பது இந்தப் பிரச்சினையின் ஒரு சிறிய முன்னோட்டம் மட்டுமே. தினமும் கோடிக்கணக்கான குடும்பங்களை பாதிக்கும் இந்த விஷயத்தைப் பற்றி மக்கள் சிந்திக்கவும், விழிப்புணர்வு பெறவும், தங்கள் உணவுத் தட்டில் என்ன வருகிறது என்பதை கேள்வி எழுப்பவும் இந்தப் படம் தூண்ட வேண்டும் என்பதே எங்கள் நோக்கம்,” என்றார்.


நடிகர் ஷ்ரேயாஸ் தல்படே கூறியதாவது..,


“இந்தப் படத்தில் என்னை மிகவும் ஈர்த்தது அதன் கருப்பொருள்தான். பூச்சிக்கொல்லி விவசாயம் ஒவ்வொரு குடும்பத்தையும் பாதிக்கும் பிரச்சினையாக இருந்தாலும், அதன் நீண்டகால விளைவுகளை நாம் பெரும்பாலும் சிந்திப்பதில்லை. மிகப்பெரிய அமைப்புக்கு எதிராக போராடும் ஒரு சாதாரண தந்தையின் உணர்வுபூர்வமான பயணத்தை என் கதாபாத்திரம் மூலம் ரசிகர்கள் உணர்வார்கள் என்று நம்புகிறேன். இது பொழுதுபோக்கு மட்டுமல்ல, மிக முக்கியமான ஒரு விவாதத்தையும் தொடங்கும் திரைப்படம்.”



நடிகை காஜல் அகர்வால் கூறுகையில்,


“தி இந்தியா ஸ்டோரி ஒரு வலுவான சமூகச் செய்தியை மையமாகக் கொண்ட திரைப்படம். ஒரு தாயாக இந்தக் கதை என்னை மிகவும் ஆழமாகத் தொட்டது. இன்றைய பெற்றோர்களின் அச்சங்களையும் கவலைகளையும் இது பிரதிபலிக்கிறது. பொதுமக்களின் பார்வைக்கு பெரும்பாலும் வராத ஒரு உண்மையை டீசர் வெளிப்படுத்துகிறது. நாம் சாப்பிடும் உணவு மற்றும் அது எதிர்கால தலைமுறையினருக்கு ஏற்படுத்தும் தாக்கம் குறித்து மக்கள் அதிக விழிப்புணர்வுடன் இருக்க இந்தப் படம் உதவும் என்று நம்புகிறேன்,” என்றார்.


இந்தப்படத்தில் இணை தயாரிப்பாளர்களாக ஸ்வாதி விநாயக் சைந்தானி,அனிதா ஜாதவ்,விநாயக் சைந்தானி, கல்பேஷ் ஷா, தேவ்யானி கொராடே மற்றும் பிரேம் ஜோஷி ஆகியோர் பணியாற்றியுள்ளனர். 


தொழில்நுட்பக் குழுவில் ஒளிப்பதிவாளர் நிஷாந்த் பகவத், இசையமைப்பாளர் மங்கேஷ் தாக்டே, படத்தொகுப்பாளர் ஆஷிஷ் மாத்ரே, பாடலாசிரியர் ஷகீல் அஜாமி, ஒலி வடிவமைப்பாளர் அன்மோல் பாவே ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இப்படம் Zee Studios  உலகளாவிய வெளியீடாக வெளியாகிறது.


*The India Story Hard-Hitting Teaser Out, Highlights the Hidden Truth Behind Pesticide Farming*


The teaser of The India Story: Slow Poison in Progress has been unveiled, shedding light on the alarming issue of Pesticide Farming and its impact on society. Starring Kajal Aggarwal and Shreyas Talpade, the film aims to raise awareness about a growing threat that affects millions of people every day.


Presented by Zee Studios in association with MIG Production & Studios, The India Story is directed by Chettan DK and written and produced by Sagar B. Shinde. The film is slated for a worldwide theatrical release on July 24, 2026, and will be released in Hindi, Telugu, and Tamil.


 The gripping teaser showcases the struggle of Kajal Aggarwal and Shreyas Talpade, as they fight for justice while uncovering the dangerous reality of Pesticide Farming. It highlights the growing health risks posed by the toxic substances increasingly finding their way into everyday food consumption, particularly among the younger generation. Through an emotional and socially relevant narrative, the film attempts to bring attention to an issue that often goes unnoticed despite its far-reaching consequences.


Talking about the film, Director Chettan DK said, "The India Story is not just a film; it is a conversation that we as a society need to have. Through this story, we wanted to shed light on the alarming reality of Pesticide Farming and the silent health crisis it creates. The teaser is only a glimpse into a much larger issue that affects millions of families every day. Our aim is to create awareness, provoke thought, and encourage audiences to question what ends up on their plates."



Shreyas Talpade said, "What drew me to The India Story was the relevance of its subject. Pesticide Farming is an issue that affects every household, yet we rarely stop to think about its long-term consequences. Through my character's journey, I hope audiences connect with the emotional struggle of an ordinary parent fighting against a system much larger than himself. This is a story that entertains, but more importantly, it starts an important conversation."


Kajal Aggarwal shared, "The India Story is a film with a strong social message at its core. As a mother, the story resonated with me on a very personal level because it reflects the fears and concerns that many parents carry today. The teaser offers a glimpse into a reality that often remains hidden from public view. I hope the film creates awareness and encourages people to be more conscious about the food they consume and the impact it has on future generations."


The project is backed by co-producers Swati Vinayak Saindane, Anita Jadhav, Vinayak Saindane, Kalpesh Shah, Devyani Khorate, and Prem Joshi. The technical team includes cinematographer Nishant Bhagwat, music composer Mangesh Dhakde, editor Ashish Mhatre, lyricist Shakeel Azami, and sound designer Anmol Bhave.


https://www.youtube.com/watch?v=z2MgHG8QgQU