-

Loading latest news...

KAATTAAN movie press meet

 *KAATTAAN movie press meet 


ஜியோ ஹாட்ஸ்டாரில் வெளியாகும் 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி நடிக்கும் 'முத்து என்கிற காட்டான்' இணையத் தொடருக்கான பத்திரிகையாளர் சந்திப்பு*



'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி நடிப்பில் மணிகண்டன் - பி. அஜித் குமார் இயக்கத்தில் ஜியோ ஹாட் ஸ்டார் டிஜிட்டல் தளத்தில் மார்ச் மாதம் 27 ஆம் தேதி முதல் வெளியாகும் 'முத்து என்கிற காட்டான்' பத்து அத்தியாயங்கள் கொண்ட இணையத் தொடரை விளம்பரப்படுத்தும் வகையில் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.


தேசிய விருது வென்ற படைப்பாளியான இயக்குநர் மணிகண்டன் மற்றும் இயக்குநரும், படத்தொகுப்பாளருமான பி. அஜித் குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள 'முத்து என்கிற காட்டான்' இணையத் தொடரில் விஜய் சேதுபதி, மிலிந்த் சோமன், சுதேவ் நாயர், முத்துக்குமார், சிங்கம் புலி, கலைவாணி பாஸ்கர், வி ஜே பார்வதி, ரிஷா ஜேக்கப், வடிவேல் முருகன், அபி நட்சத்திரா உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். மது நீலகண்டன் மற்றும் சண்முகசுந்தரம் இணைந்து ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த இணையத் தொடருக்கு ராஜேஷ் முருகேசன் இசையமைத்திருக்கிறார். ஜியோ ஹாட் ஸ்டார் டிஜிட்டல் தளத்திற்காக இந்த இணையத் தொடரை விஜய் சேதுபதி புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் நடிகர் விஜய் சேதுபதி தயாரித்திருக்கிறார்.


மார்ச் 27 ஆம் தேதி முதல் ஜியோ ஹாட் ஸ்டார் டிஜிட்டல் தளத்தில் வெளியாகும் இந்த இணையத் தொடரை விளம்பரப்படுத்தும் நிகழ்வு சென்னையில் நடைபெற்றது. இதில் இணையத் தொடர் குழுவினர் கலந்து கொண்டனர்.


இந்நிகழ்வில் ஜியோ ஹாட் ஸ்டார் நிறுவனத்தின் தென்னிந்திய பிரிவிற்கான தலைவர் கிருஷ்ணன் குட்டி பேசுகையில், '' முத்து என்கிற காட்டான் இணைய தொடரை வழங்குவதில் பெருமிதம் கொள்கிறோம். கடந்த மூன்று ஆண்டுகளில் ஜியோ ஹாட் ஸ்டார் தளத்தில் வெளியான 40 நிகழ்ச்சிகளுக்கு பொறுப்பேற்று இருக்கிறேன். அதில் முத்து என்கிற காட்டான் சீரிஸ் சிறப்பானது.‌ இந்த முயற்சி ஜியோ ஹாட் ஸ்டார் டிஜிட்டல் தளத்தின் அடுத்த கட்ட நகர்விற்கான முயற்சி என நம்புகிறோம். இதில் விஜய் சேதுபதியின் பங்களிப்பு மிகவும் ஸ்பெஷலானது. கதையின் முதல் அத்தியாயத்தில் ஹீரோவின் தலை மட்டும்தான் இடம்பெறும். இது வித்தியாசமானது.


இந்த குழுவினருடனான பயணம் மிகவும் நீண்டது. கிட்டத்தட்ட இரண்டரை ஆண்டு காலம் இவர்களுடன் பயணித்திருக்கிறோம். பயணம் முழுவதும் அன்பால் நிறைந்திருந்தது. விஜய் சேதுபதியின் தயாரிப்பு நிறுவனத்துடன் நாங்கள் முதல்முறையாக இணைந்திருக்கிறோம்.

விஜய் சேதுபதியுடன் ஏற்கனவே பிக் பாஸ் நிகழ்ச்சியில் இணைந்து பணியாற்றிருக்கிறோம். இதற்காக விஜய் சேதுபதிக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.


இந்த இணையத் தொடரை முன்னின்று இயக்கிய இயக்குநர் மணிகண்டனுக்கும் நன்றி. அவர்தான் இந்த இணைய தொடருக்கு முதுகெலும்பாக திகழ்ந்தார். இயக்குநர் அஜித்குமார், கதாசிரியர் ராஜ்குமாருக்குநன்றி. நடித்த நடிகர்கள் நடிகைகள் பணியாற்றிய தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவருக்கும் நன்றி. இந்த இணைய தொடர் நாடு கடந்து அனைத்து ரசிகர்களையும் சென்றடைந்து வெற்றி பெறும் '' என்றார்.


ஜியோ ஹாட் ஸ்டார் டிஜிட்டல் தளத்தின் கன்டென்ட் பிரிவின் மூத்த துணைத் தலைவர் பிரதீப் பேசுகையில், '' இந்த ப்ராஜெக்டை இயக்குநர் மணிகண்டன் எங்களிடம் முதன் முதலாக சொன்ன போது எங்கள் அனைவருக்கும் பிடித்திருந்தது. அதன் பிறகு விஜய் சேதுபதியை சந்தித்தோம். அப்போது அவர் இந்த கதையை நான் ஆத்மார்த்தமாக செய்கிறேன். எனக்கு இதைப் பற்றி நன்றாகத் தெரியும். இதை குறிப்பிட்ட நாளில் நிறைவு செய்ய இயலாது. இந்தப் ப்ராஜெக்ட் எத்தனை நாட்கள் நடைபெற்றாலும் நான் முழுமையான ஒத்துழைப்பை வழங்குவேன் என வாக்குறுதி அளித்தார். ஒரு நட்சத்திர நடிகரிடம் இருந்து இப்படி ஒரு வாக்குறுதி கிடைப்பது பெரிய விசயம். அந்த நம்பிக்கை எங்களை ஊக்கப்படுத்தியது. நாங்கள் இதுவரை தயாரித்த தயாரிப்புகளில் இதுதான் மிகப்பெரிய பட்ஜெட்.


பணிகளை தொடங்கினோம். ஆனால் தடங்கல் வேறு வடிவத்தில் வந்தது. இதன் படப்பிடிப்பு 20 நாட்கள் வரை நடந்த பிறகு பட்ஜெட் காரணமாக தயாரிப்பாளர்கள் பலரும் பின் வாங்கினர். இதனால் இந்த ப்ராஜெக்ட் நின்று விடுமோ..! என்ற நிலை ஏற்பட்டபோது.. நான் விஜய் சேதுபதியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினேன்.‌ இந்த ப்ராஜெக்ட்டை நீங்கள் தயாரிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டேன். சிறிது நேரம் யோசித்து விட்டு பிறகு நடிகராகவும் தயாரிப்பாளராகவும் மாறினார்.


இதை நான் ஏன் பகிர்ந்து கொள்கிறேன் என்றால் நாங்கள் கர்ப்பரேட் உலகத்தில் உள்ளவர்கள். அங்கு கோடு போட்ட இடத்தில் கையெழுத்து போட்டுவிட்டால் அதன் பிறகு எதுவும் செய்ய முடியாது. இந்த சூழலை புரிந்து கொண்டு எங்களுக்கு இறுதி வரை உறுதுணையாக நின்றார் விஜய் சேதுபதி. இதற்காக அவருக்கு மீண்டும் ஒரு முறை நன்றியை சொல்கிறேன்.


தமிழில் மிகப்பெரிய பட்ஜெட்டில் தயாராகி வெளியான இணைய தொடர் இதுதான் என்பதை எங்களால் உறுதியாக சொல்ல முடியும். இந்த கதை தொடங்கும் போது பார்வையாளராக பார்ப்பது கதையின் நாயகனுடைய வெட்டப்பட்ட தலை மட்டும்தான். இன்றைக்கு இந்தியாவில் இருக்கும் எந்த துறையிலும் மிகப்பெரிய நட்சத்திர நடிகர் இது போன்றதொரு கதைக்கு ஆம் என்று சொல்லவே மாட்டார்கள். அதை சொல்லும் தைரியம் விஜய் சேதுபதிக்கு மட்டும்தான் இருக்கிறது. அதுதான் இந்த இணைய தொடரின் பிரம்மாண்டம். அந்த வெட்டுப்பட்ட தலையை பார்த்த பிறகு இந்த கதையை யாராலும் முழுமையாக பார்க்காமல் இருக்க முடியாது.


அத்துடன் இந்த இணையத் தொடரில் தமிழகத்திலிருந்து மட்டுமல்லாமல் கேரளாவில் இருந்தும் மும்பையில் இருந்தும் நிறைய நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். அதனால் இது பான் இந்திய அளவிலான ப்ராஜெக்ட் தான் '' என்றார்.


இயக்குநர் - படத்தொகுப்பாளர் பி. அஜித் குமார் பேசுகையில், '' விஜய் சேதுபதி- இயக்குநர் மணிகண்டன் -ஜியோ ஹாட்ஸ்டார் ஆகியோருக்கு முதலில் நன்றி. நான் முதலில் பட தொகுப்பாளராகத்தான் பணியாற்றினேன். முதல் கட்ட படப்பிடிப்பிற்கு பிறகு.. இயக்குநருடனான கதை விவாதம் தொடர்ந்து நடைபெற்றது. பிரதீப் குறிப்பிட்டதை போல் இதற்கு தடங்கல் ஏற்பட்ட போது நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் எங்களுக்கு உறுதுணையாக ஆதரவளித்தார்கள். ஜியோ ஹாட்ஸ்டார் நிறுவனம் எங்களுக்கு முழுமையான ஒத்துழைப்பை தொடர்ந்து வழங்கியது. அதிலும் குறிப்பாக படைப்பு தரமானதாக இருக்க வேண்டும் என்பதற்காக விஜய் சேதுபதி தயாரிப்பு நிறுவனம் முழுமையான பங்களிப்பை வழங்கியது.


இணைந்து பணியாற்றிய தொழில்நுட்ப கலைஞர்கள் ஒவ்வொரு வரும் திறமைசாலிகள். ஒவ்வொரு வரும் கடுமையாக உழைத்தனர். இதில் இடம்பெறும் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்த நடிகர்கள் கூட தங்களின் அர்ப்பணிப்புடன் கூடிய உழைப்பை வழங்கினர்.

இந்த இணைய தொடருக்கான மணிகண்டனின் ஐடியா மிகவும் அருமையானதாக இருந்தது. இதனை நாங்கள் அனைவரும் ஒன்றிணைந்து பேசி இன்று அனைவரும் பார்த்து ரசிக்கும் வகையிலான படைப்பாக வழங்கி இருக்கிறோம். இதற்காக உழைத்த அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த இணையத் தொடர் அனைத்து தரப்பு ரசிகர்களுக்கும் பிடிக்கும் என்று உறுதியாக நம்புகிறேன்'' என்றார்.


நடிகர் மிலிந்த் சோமன் பேசுகையில், '' இந்த மேடையில் நிற்பதற்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. தமிழில் தயாராகும் இணைய தொடரில்,இதில் தான் முதன் முதலாக நடித்திருக்கிறேன். இதற்காக விஜய் சேதுபதி மணிகண்டன் ஜியோ ஹாட் ஸ்டார் அடங்கிய இந்த குழுவினருக்கு என் முதல் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.


இந்த கதை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அதிலும் குறிப்பாக இந்த கதையின் தொடக்கம் முன்னணி நட்சத்திர நடிகர் ஒருவரின் வெட்டப்பட்ட தலையில் இருந்து தொடங்குகிறது. இதுவே எனக்கு ஆச்சரியத்தை தந்தது. இந்தப் படத்தில் இடம்பெற்ற அந்த கதாபாத்திரத்திற்கு நான் ஏன்? என்ற கேள்வியை இயக்குநரிடம் கேட்டபோது , அவர் அதற்கான விளக்கத்தை முழுமையாகவும், நேர்த்தியாகவும் அளித்தார். என் மீது நம்பிக்கை வைத்து அந்த கதாபாத்திரத்தை வழங்கியதற்காக இயக்குநருக்கு மீண்டும் ஒருமுறை நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.


என் கதாபாத்திரம் மட்டுமல்ல இந்த தொடரில் பணியாற்றிய அனைவரும் ஒன்றிணைந்து குழுவாக பணியாற்றினார்கள். அதுவும் என்னை கவர்ந்தது. இதற்காகவும் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்'' என்றார்.


ஒளிப்பதிவாளர் சண்முகசுந்தரம் பேசுகையில், '' விஜய் சேதுபதியுடன் இணைந்து பணியாற்றும் மூன்றாவது படைப்பு இது. மணிகண்டன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்த 'ஆண்டவன் கட்டளை' படத்தில் பணியாற்றினேன். அதன் பிறகு விஜய் சேதுபதி நடித்த' 96 'படத்தில் பணியாற்றினேன். இந்த ரெண்டு படமும் ஹிட். தற்போது மூன்றாவது முறையாக இணைந்து இருக்கிறோம். இதுவும் வெற்றி பெறும்.  


இதுபோன்ற திரைக்கதைகளை மணிகண்டனால் தான் கையாள முடியும். காக்கா முட்டை படத்திற்கு முன் வின்ட்‌ ( Wind) என்றொரு குறும்படத்தை அவர் இயக்கி இருந்தார். அதில் இரண்டே கதாபாத்திரங்கள் தான். ஒன்று சடலம் . மற்றொன்று விஜய் சேதுபதி.‌ அது ஒரு குறும்படம் போல் இருக்காது. திரைப்படம் போல் இருக்கும். அதைப் பார்த்து நான் வியந்திருக்கிறேன்.


'கடைசி விவசாயி' படத்தை பார்த்துவிட்டு விஜய்யிடம் பேசினேன். ஒவ்வொரு பிரேமையும் உங்கள் இருவரது உழைப்பையும் பார்த்து ரசித்தேன் என்றேன். இந்த இணையத் தொடரில் விஜய் சேதுபதி ஆக்சன் திரில்லர் ஜானரில் நடித்திருக்கிறார். இதில் மிகப்பெரிய ஆக்சன் காட்சிகள் இருக்கிறது. அது அனைவருக்கும் மிகவும் பிடிக்கும்'' என்றார்.


ஒளிப்பதிவாளர் மது நீலகண்டன் பேசுகையில், '' திறமையான நட்சத்திரங்களுடனும் அற்புதமான தொழில்நுட்ப கலைஞர்களுடனும் இணைந்து பணியாற்றிய இந்த படைப்பில் என்னுடைய பங்களிப்பும் இருந்ததை பெருமிதமாக நினைக்கிறேன்'' என்றார்.


இசையமைப்பாளர் ராஜேஷ் முருகேசன் பேசுகையில், '' இந்த குழுவினருடன் இணைந்து பயணித்த அனுபவம் மகிழ்ச்சியானதாக இருந்தது. மணிகண்டன் கதையை சொன்ன தருணத்திலிருந்து இதில் வேலை செய்தது மறக்க முடியாத அளவிற்கு திரில்லிங்காக இருந்தது. எனக்கு மிகவும் பிடித்த நடிகரான விஜய் சேதுபதியுடன் இணைந்து பணியாற்றுவதும் சந்தோஷமாக இருந்தது. முதலில் ஒவ்வொரு அத்தியாயத்திலும் குட்டி குட்டியான பாடல்களை இடம்பெற வைக்கலாம் என்றுதான் விவாதித்தோம். ஆனால் திரைக்கதை நிறைவாகும் போது மூன்று பாடல்கள் மட்டுமே இடம்பெற்றது. அதில் ஒரு பாடலுக்கான மெட்டை உருவாக்கியது விஜய் சேதுபதி தான். படப்பிடிப்பு தளத்தில் அவர் அந்த சூழலில் உச்சரித்தது எனக்கு பிடித்திருந்தது. அதையே மெருகேற்றி பாடலாக உருவாக்கினோம்'' என்றார்.


கதாசிரியர் ஆர். ராஜ்குமார் பேசுகையில், '' இதில் இயக்குநர் மணிகண்டனுடன் இணைந்து திரைக்கதை உருவாக்கத்தில் பங்கு பெற்றேன். அந்த அனுபவம் சிறப்பானதாக இருந்தது. இயக்குநர் மணிகண்டன் சிறந்த நண்பர். காக்கா முட்டை படத்திற்கு முன்பிருந்தே பழக்கம். ஒரு பத்து பதினைந்து ஆண்டு கால நண்பர். அந்த தருணத்தில் இருந்து என்னுடைய திரைக்கதைக்கு அவர் உதவி செய்வார். அவருடைய திரைக்கதைக்கு நான் உதவி செய்வேன்.


இந்த இணைய தொடருக்காக மணிகண்டனின் ஐடியா ஸ்பெஷல் ஆக இருந்தது. இது மணிகண்டனின் அப்பாவின் வாழ்க்கையில் நடைபெற்ற ஒரு உண்மை சம்பவம். அதை விவாதித்து விரிவு படுத்தலாம் என பேசத் தொடங்கினோம். மாதக்கணக்கில் விவாதித்தோம். தலை கிடைத்து விட்டது முண்டம் எங்கே? அவன் நல்லவனா? கெட்டவனா? கொலைகாரனா ?கொள்ளைக்காரனா? என விசாரிப்பது போல் ஏராளமான கிளை கதைகளை உருவாக்கி, சுவாரசியமான புதிய எதிர்பாராத திருப்பங்களுடன் இதனை உருவாக்கினோம். இது ஒரு வகையான புது முயற்சி. இதற்கு வாய்ப்பளித்த மணிகண்டனுக்கு நன்றி.


நாங்கள் இருவரும் பேசிய விசயங்களை வைத்து இன்னும் இரண்டு இணைய தொடர்களை உருவாக்கலாம். அந்த அளவிற்கு கதாபாத்திரங்களை பற்றி பேசி இருக்கிறோம்.


இந்த கதையை விஜய் சேதுபதி தேர்வு செய்தது மிகப்பெரிய விசயம். எந்த ஒரு மாஸ் ஹீரோவும் இதை ஒப்புக்கொள்ள மாட்டார்கள். ஆனால் விஜய் சேதுபதி இந்த ஸ்கிரிப்டை பெரிதாக நம்பினார். இதற்காக அவருக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.‌


இந்த இணைய தொடர் ஒரு புது முயற்சி புது முயற்சியை எப்போதும் தமிழ் ரசிகர்கள் கொண்டாடுவார்கள்'' என்றார்.


நடிகை அபி நட்சத்திரா பேசுகையில், '' இந்த படைப்பில் ஒரு பகுதியாக இருந்ததற்கு மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். இந்தக் குழு மிகப் பெரியது. இந்த படைப்பும் பிரம்மாண்டமானது. நான் மிகவும் துறுதுறுவென இருக்கும் சிட்டு எனும் கேரக்டரில் நடித்திருக்கிறேன்.‌ இந்த கேரக்டர் அனைவருக்கும் பிடிக்கும். விஜய் சேதுபதி சார் எனக்கு நிறைய முறை மோட்டிவேஷன் கொடுத்திருக்கிறார். இந்த இணைய தொடர் ரசிகர்களின் ஆதரவுடன் பெரிய அளவில் வெற்றி பெறும்'' என்றார்.


நடிகை வி ஜே பார்வதி பேசுகையில், '' இந்த நாளிற்காக நிறைய ஆண்டுகள் காத்திருந்தேன். இயக்குநர் மணிகண்டனின் குழுவில் இருந்து பேசிய போது நான் முதலில் நம்பவில்லை. அதன் பிறகு மணிகண்டனுடன் இணைய வழியிலான சந்திப்பிற்குப் பிறகு நம்பிக்கை வந்தது. ஏனெனில் அவருடைய படைப்புகளை பார்த்து தான் நான் வளர்ந்திருக்கிறேன். உசிலம்பட்டிக்கு வர சொன்னார்கள், நான் நவீன உடையில் சென்றிருந்தேன். அங்கு சென்ற பிறகு காஸ்டியூம் டிசைனர் எனக்கு மதுரை பெண் கதாபாத்திரத்திற்கான ஆடையை வழங்கினார். எந்தவித மேக்கப்பும் இல்லாமல் அந்த டிரஸ்ஸை அணிந்து போட்டோ சூட்டுக்காக நின்ற போதுதான் நான் லலிதா எனும் கதாபாத்திரமாகவே தெரிந்தேன். அதை நான் என்னுடைய பாக்கியமாகவும், எனக்கு கிடைத்த ஆசீர்வாதமாகவும் கருதுகிறேன். விஜய் சேதுபதி - மணிகண்டன் கூட்டணி என்றால் எல்லோருக்கும் பெரிய எதிர்பார்ப்பு இருக்கும். இதில் லலிதாவாக நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. நிச்சயம் என்னை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தும்'' என்றார்.


நடிகை ரிஷா ஜேக்கப் பேசுகையில், '' கொஞ்சம் பதற்றமாக இருக்கிறது. நிறைய மேடைகளில் பேசி இருக்கிறேன். ஆனால் இந்த மேடை எனக்கு மிகவும் புதிதாக இருக்கிறது. மிகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறேன். கலவையான உணர்விலும் இருக்கிறேன். இந்தப் படத்தில் எனக்கு நடிக்க வாய்ப்பு அளித்ததற்காக விஜய் சேதுபதி சார்க்கும்

இந்த இணைய தொடரின் படப்பிடிப்பில் கலந்து கொண்டதன் மூலம் நான் நிறைய விசயங்களை கற்றுக் கொண்டேன். எதை... எதுவரை செய்யலாம்... எதை செய்யக்கூடாது... என்பதை எல்லாம் இதில் கற்றுக் கொண்டேன். என்னுடன் இணைந்து பணியாற்றிய ஒட்டுமொத்த குழுவினருக்கும் நன்றி'' என்றார்.


நடிகர் விஜய் சேதுபதி பேசுகையில், '' முத்து என்கிற காட்டான் இந்த வெப்சீரிசை தொடங்கியதிலிருந்து இந்த தருணம் வரை இதற்கு பின்னால் நடைபெற்ற விசயங்களை வைத்து இரண்டு மூன்று தொடர்களை உருவாக்கலாம். அனைத்தையும் கடந்து இன்று இந்த இணைய தொடர் வெளியாவதற்க்காக உழைத்த அனைவருக்கும் நன்றி. குறிப்பாக ஜியோ ஹாட் ஸ்டார் நிறுவனத்திற்கு பெரிய நன்றி.


நான் அவர்களுக்கு ஆதரவளித்ததாக அவர்கள் சொல்லலாம். ஆனால் அவர்கள் என் மீது வைத்த நம்பிக்கை தான் இதற்கு முக்கிய காரணம். நான் இங்கு வந்த பிறகுதான் தெரிந்து கொண்டேன். தமிழில் உருவான மிகப்பெரிய வெப் சீரிஸ் இதுதான் என்று. இந்த அனுபவத்தில் என்னுடன் இருந்த பிரதீப்பிற்கு மிக்க நன்றி. பிக் பாஸ் ஆக இருந்தாலும் இந்த இணைய தொடராக இருந்தாலும் அவரின் பங்களிப்பு சிறப்பானது.


ஒரு நாள் நான் அலுவலகத்தில் இருந்தேன் பிரதீப் வந்தார். சோபாவில் சாய்ந்து அமர்ந்தார். என்னையும் சாய்ந்து அமரும்படி சொன்னார். நானும் சாய்ந்து அமர்ந்தேன். நான் உங்களிடம் ஒன்று கேட்பேன் அதற்கு நீங்கள் மறுப்பு தெரிவிக்க கூடாது என்று பேசத் தொடங்கினார். அது எனக்கு மேரேஜ் ப்ரோபோசல் போலிருந்தது. அவர் என்ன கேட்பார் ? என்பது குறித்து யோசித்துக் கொண்டே இருந்தேன். அவர் பிக் பாஸில் நீங்கள் தான் தொகுப்பாளராக பணியாற்ற வேண்டும் என சொன்னார். சொன்னவுடன் நான் என்ன சார் அதில் பெரிதாக செய்யப் போகிறேன். அதை பற்றி எனக்கு எதுவும் தெரியாது. நான் அதை பார்த்தது கூட கிடையாது. சிம்பு அல்லது சூர்யாவிடம் கேட்டுப் பாருங்கள் சிம்புவுக்கு இதில் ஏற்கனவே அனுபவம் இருக்கிறது என்று சொன்னேன். ஆனால் பிரதீப் நீங்கள் செய்யுங்கள் என்று கேட்டார்.


இதுபோல் பல சமயங்களில்... இன்று நான் வாழ்க்கையில் ஓரளவிற்கு இந்த நிலையில் இருக்கிறேன் என்றால் நான் பெரிதாக அனுபவம் இல்லாத ..அறிமுகம் இல்லாத.. ஏதோ ஒரு காரணத்தால் என் மீது வைத்திருக்கும் நம்பிக்கைதான் என்னை முன்னால் அழைத்துச் சென்று இருக்கிறது. என் மீது எனக்கு பெரிதாக நம்பிக்கை இருந்ததில்லை.


ஒரு வேலை செய்து அதை மற்றவர்கள் பார்த்து பாராட்டும் போது தான் எனக்கு தெரியவரும் 'ஓ இந்த வேலையை என்னால் சிறப்பாக செய்ய முடியும்' என்று. அதற்கு முன் எனக்குத் தெரியாது. ஆனால் அதற்கு முன் என் மீது நம்பிக்கை வைக்கும் மனிதர்கள் இருக்கிறார்கள். இதுதான் எனக்கு மிகப்பெரிய ஆச்சரியம். இதில் மணிகண்டனும் அப்படித்தான் இருந்தார். இப்படி பலர் என் வாழ்க்கையில் இருந்திருக்கிறார்கள். என் மேல் நம்பிக்கை வைத்து நண்பர்கள் இருந்திருக்கிறார்கள். இருக்கிறார்கள். 

இதுபோல் பலர் என்னை நம்பியதால் தான் நான் என்னை நம்பத் தொடங்கினேன். அந்த வகையில் என் மீது நம்பிக்கை வைத்த பிரதீப் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி.


மணிகண்டனுக்கும் எனக்குமான அறிமுகமும் நட்பும் எதேச்சையாக ஒரு நாள் நடந்தது. அவருடைய நண்பர் வினோத் என்பவர் மூலமாக மணிகண்டனின் குறும்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அது இன்று இங்கு வரை அழைத்து வந்திருக்கிறது.‌


மணிகண்டனின் அறிவு எனக்கு எப்போதும் ஆச்சரியத்தை தரும். ஒவ்வொரு விசயத்தையும் அவர் பார்க்கும் கோணங்கள் வித்தியாசமாக இருக்கும். இங்கு அவருடன் பணியாற்றியவர்கள் அனைவருக்கும் தெரியும் ..அவர் ஒரு விசயத்தை பார்த்தவுடன் மிக விரைவாக புரிந்து கொள்வார். அவர் நடிகர்களிடமிருந்து மிக எளிதாக நடிப்புத் திறனை வாங்கி விடுவார். சில சமயங்களில் நடித்து முடித்த பிறகு தான் அவர் அந்த காட்சியில் அவ்வளவு விசயங்களை யோசித்து வைத்திருக்கிறார் என்பது புரியும். அப்படி என்னை எப்போதும் ஆச்சரியப்படுத்தும் மனிதர்தான் அவர்.


2008 முதல் இப்போது வரை அவரை எனக்குத் தெரியும். அவர் எழுதுவது எல்லாம் சுவாரசியமாக இருக்கும். ஆச்சரியமாகவும் இருக்கும். இந்த வெப் சீரிஸ் உள்பட பல அற்புதமான படங்களை வழங்கி இருக்கிறார் அற்புதமான பாடல்களையும் அளித்திருக்கிறார். இதற்காக அவருக்கு இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.


மணிகண்டனால் தொடர்ந்து பணியாற்ற முடியாத ஒரு சூழல் வந்த போது எடிட்டராக பணியாற்றிய அஜித்குமார் இயக்கினார். இந்த வெப் சீரிஸ் எப்படி செல்லும் என்ற ஒரு கேள்வி எனக்குள் இருந்தபோது.. அஜித் அதை அழகாக அவருடைய கையில் எடுத்துக்கொண்டு தெளிவாக நிறைவு செய்தார். இதற்காக அவருக்கும் நன்றி.


ஒரு கட்டத்தில் மணிகண்டன் இல்லாத போது அஜித் குமார் இதை இயக்கும்போது நான்தான் அவருக்கு உதவியாக இருக்கும் என்று 'உடன் பால்' படத்தினை இயக்கிய இயக்குநர் கார்த்திக்கை அழைத்து இதில் பணியாற்றுமாறு கேட்டுக் கொண்டேன். நம்ம ஊரைப்பற்றி உணர்வுபூர்வமாக தெரிந்தவர் என்பதால் அவரிடம் உரிமையுடன் கேட்டேன். என் அழைப்பை ஏற்று இதில் பணியாற்றியதற்காக அவருக்கும் நன்றி.


இதில் பணியாற்றிய ஒளிப்பதிவாளர்கள், இசையமைப்பாளர், நடிகர்கள், நடிகைகள், மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவருக்கும் நன்றி. முத்து என்கிற காட்டான் இணைய தொடர் மார்ச் 27 ஆம் தேதி ஜியோ ஹாட்ஸ்டார் இல் வெளியாகிறது. எல்லோருக்கும் பிடிக்கும் என்று நம்புகிறேன்'' என்றார்

Kasthuri Raja BRINGS EXPERIENCE AND CREATIVE GUIDANCE TO “HABEEBI

 *'ஹபீபி’ திரைப்படத்திற்கு தனது அனுபவம் மூலம் வழிகாட்டி வலுசேர்த்துள்ளார் கஸ்தூரி ராஜா!*



ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது ‘ஹபீபி’ திரைப்படம். வலுவான கதை சொல்லல், ஆழமான உணர்வுகள் மற்றும் கலாச்சாரத்தை மையமாகக் கொண்ட கதைக்களத்தோடு மறக்க முடியாத சினிமா அனுபவத்தையும், மொழிகளை தாண்டி பல தரப்பட்ட ரசிகர்களையும் ஈர்க்கும் படமாகவும் இது உருவாகி வருகிறது. 


’ஹபீபி’ திரைப்படத்தில், திரைத்துறையில் அனுபவம்மிக்க இயக்குநர் கஸ்தூரி ராஜா இணைந்திருப்பது படத்தின் தரத்தை மேலும் உயர்த்தியுள்ளது. அவரது நீண்டகால அனுபவமும், வழிகாட்டுதலும் ஆதரவும் இந்தப் படத்தை மேலும் செழுமைபடுத்தியுள்ளதோடு படக்குழுவினருக்கும் பெரும் பலமாக மாறியுள்ளது. 


படத்தில் தனது பங்களிப்பு குறித்து கஸ்தூரி ராஜா பகிர்ந்து கொண்டதாவது, “’ஹபீபி’ திரைப்படத்தில் எனது பங்கு படக்குழுவினரை ஆதரித்து அவர்களை மேலும் வலுப்படுத்தியதுதான். ஒரு நல்ல கதை எப்போதும் தனது பார்வையாளர்களை கண்டடையும் என்று நான் நம்புகிறேன். இந்த திரைப்படத்தில் அந்த உண்மைத்தன்மை உள்ளது” என்றார்.


இயக்குநர் மீரா கதிரவன் பகிர்ந்து கொண்டதாவது, “’ஹபீபி’ படத்தில் கஸ்தூரி ராஜா சார் இணைந்தது எங்களுக்கு மிகப்பெரிய பலமாக அமைந்தது. அவரது அனுபவமும் கதை பற்றிய புரிதலும் எங்கள் பயணத்திற்கு தெளிவும் நம்பிக்கையும் அளித்தது. மத வேறுபாடுகளைத் தாண்டி சமூகத்தில் மூத்தவர்களுக்கு நாம் அளிக்கும் மரியாதையை அவரது கதாபாத்திரம் இந்தப் படத்தில் பிரதிபலிக்கும். ஒற்றுமை, கண்ணியம் மற்றும் உணர்வுப்பூர்வமான தருணங்கள் கொண்டதாகவும் அவரது இருப்பு இருக்கும். திரைத்துறையிலும் வயதிலும் அவர் மூத்தவராக இருந்தாலும் அதை வெளிப்படுத்தாமல் எங்கள் அனைவருடனும் மிக எளிமையாக பழகினார்” என்றார்.


இந்தத் திரைப்படத்தை ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் விநியோகம் செய்கிறது. தரமான மற்றும் கருத்துள்ள படங்களை ஆதரித்து வரும் இந்த நிறுவனம், திறமையான விளம்பரம், மார்க்கெட்டிங் மற்றும் விநியோகத்தின் மூலம் நல்ல திரைப்படங்களை அதிக பார்வையாளர்களிடம் கொண்டு செல்லும் வலுவான தளமாக திகழ்கிறது.


கலை நேர்மை மற்றும் வணிக நுணுக்கம் ஆகியவற்றின் பிரதிபலிப்பாக ’ஹபீபி’ திரைப்படம் இருக்கும். இன்றைய மாறிவரும் சினிமா உலகில் படைப்பாற்றல், அனுபவமிக்க வழிகாட்டுதல் மற்றும் வலுவான விநியோக ஆதரவு ஆகியவற்றின் முக்கியத்துவத்தை இந்தப் படம் உணர்த்தும். நீண்ட நாட்களுக்கு ரசிகர்கள் மனதில் இந்தப் படம் நீங்கா இடம் பிடிக்கும். ‘ஹபீபி’ வெறும் திரைப்படம் மட்டுமல்ல. ஆர்வம், ஒற்றுமை மற்றும் வலுவான கதை சொல்லலுடன் உருவான மிகச்சிறந்த அனுபவம். Kasthuri Raja BRINGS EXPERIENCE AND CREATIVE GUIDANCE TO “HABEEBI”


The much-anticipated film Habeebi continues to generate strong buzz across the industry, emerging as a cinematic experience rooted in powerful storytelling, emotional depth, and cultural resonance. With its engaging narrative and universal appeal, Habeebi is poised to connect with audiences across regions.


Enhancing the film’s creative strength is the association of veteran filmmaker Kasthuri Raja, whose experience and storytelling insight add meaningful depth to the project. His presence serves as a guiding force, supporting the vision of the film while preserving its core creative identity.


Sharing his thoughts on his role, Kasthuri Raja said, “My role in Habeebi has been to support and strengthen the vision of the team. I believe honest storytelling always finds its audience, and this film holds that sincerity.”


Director Meera Kathiravan, speaking about the collaboration, expressed, “Having Kasthuri Raja sir associated with Habeebi has been a great strength for us. His experience and understanding of storytelling brought clarity and confidence to our journey. The character he represents reflects the immense respect we hold for elders in our society—individuals who command admiration beyond religious differences. His presence brings a sense of unity, dignity, and emotional depth that truly connects with the soul of the film. Despite his seniority and immense acumen in storytelling, he showed no sense of superiority, which made everyone in the unit feel extremely comfortable.”


Backing this content-driven venture is Romeo Pictures, an emerging force in the distribution sector. The company has marked its presence by supporting films of quality and substance, providing a strong platform through effective promotion, marketing, and distribution, ensuring that meaningful cinema reaches a wider audience.


Habeebi reflects a seamless blend of artistic integrity and commercial sensibility. The film’s journey highlights the importance of collaborative creativity, experienced mentorship, and strong distribution support in today’s evolving cinematic landscape.


With compelling content, seasoned guidance, and strategic backing, Habeebi is set to leave a lasting impression.


“Habeebi” is not just a film—it is an experience shaped by passion, unity, and powerful storytelling.

Roll Time Studios* - தயாரிப்பில் ரியோ ராஜ் - சானியா ஐயப்பன் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் கோலாகலமாக தொடங்கியது.

 *Roll Time Studios* - தயாரிப்பில் ரியோ ராஜ் - சானியா ஐயப்பன் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் கோலாகலமாக தொடங்கியது. 



*Roll Time Studios* தயாரிப்பில் புதிய திரைப்படமான "movie title" இன்று சிறப்பு பூஜையுடன் அதிகாரப்பூர்வமாக தொடங்கியது. இந்தத் திரைப்படத்தை கலை அரசு தயாரிக்குகிறார். அறிமுக இயக்குனரான கார்த்திகேயன் BK இப்படத்தினை இயக்குகிறார். இவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உடன் இணை இயக்குனராக பணிபுரிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


ஆண் பாவம் பொல்லாதது, ஸ்வீட் ஹார்ட், ஜோ போன்ற வெற்றி படம் மூலம் ரசிகர்களை கவர்ந்த ரியோ ராஜ் கதாநாயகனாக நடிக்கிறார். இருகப்பற்று, சொர்க்கவாசல் படத்தின் நாயகியாக நடித்த சானியா ஐயப்பன் இப்படத்தின் கதாநாயகியாக நடிக்கின்றார். 


படத்தில் முக்கிய காதாபாத்திரங்களில் அஜூ வர்கீஸ் , சிங்கம்புலி,மிர்ச்சி விஜய், கார்த்திகா. உள்ளிட்டோர் முக்கிய காதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். 


இசையமைப்பாளர் திபு நிநான் தாமஸ் இசை அமைக்கிறார். பிரவீன் போத்தன் பட ஒளிப்பதிவாளராக அறிமுகமாகிறார். மேலும் படத்தொகுப்பை லாரண்ஸ் கிஷோர் மேற்கொள்கிறார். அறிமுக கலை இயக்குனராக பிரதீப் ராஜ் பணிபுரிகிறார். உடை வடிவமைப்பை பிரியா ரவி செய்கிறார். 


நடிகர் சிவகார்த்திகேயன் கிளாப் போர்டு அடித்து நடிகர் சூரி ரோலிங் சொல்லி இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அக்சன் சொல்லி படப்பிடிப்பு இனிதே தொடங்கியது.


இந்த படைப்பு அனைத்து தரப்பு ரசிகர்களும் ரசிக்கும் படமாக இருக்கும்.முக்கியமாக இளைஞர்களை கவரும் திரைப்படமாக உருவாகிறது. 


திரைப்படத்தின் மற்ற நடிகர்கள், கதை விவரங்கள், மற்றும் வெளியிட்டுத் திட்டங்கள் குறித்த அறிவிப்புகள் தயாரிப்பாளர் தரப்பிலிருந்து விரைவில் வெளியாகும்.

பாணா காத்தாடி' போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய பிரபல இயக்குனர் பத்ரி வெங்கடேஷ், சேப்பாக்கம்

 பாணா காத்தாடி' போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய பிரபல இயக்குனர் பத்ரி வெங்கடேஷ், சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களின் பிரம்மாண்டமான 'ரோர் 26' (Roar 26) நிகழ்ச்சியின் இயக்குனராகப் பொறுப்பேற்று வெற்றிகரமாக நடத்தியுள்ளார்.



இந்த நிகழ்ச்சியில் எம்.எஸ். தோனி, ருதுராஜ் கெய்க்வாட், மைக் ஹசி மற்றும் சுரேஷ் ரெய்னா போன்ற ஜாம்பவான்களுடன், தமிழ் நடிகர் சிவகார்த்திகேயனும் கலந்து கொண்டு சிஎஸ்கே அணிக்குத் தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.


ஆர்.ஜே. பாலாஜி, அனிருதா ஸ்ரீகாந்த், அர்ஜுன் தாஸ் மற்றும் ஆர்.கே. (எ) ராதாகிருஷ்ணன் ஆகியோர் தொகுப்பாளர்களாக இருந்து நிகழ்ச்சியை விறுவிறுப்பாக நடத்தினர்.


சைமா (SIIMA) மற்றும் மிர்ச்சி மியூசிக் அவார்ட்ஸ் போன்ற உயர்மட்ட நிகழ்ச்சிகளை இயக்கிய தனது அனுபவத்தைக் கொண்டு, பத்ரி வெங்கடேஷ் 'ரோர் 26' நிகழ்வை ஒரு மறக்க முடியாத இரவாக மாற்றினார்.


ஏற்கனவே மூன்று தமிழ்ப் படங்களை இயக்கியுள்ள அவர், தற்போது தனது அடுத்த படத்திற்கான பணிகளில் ஈடுபட்டுள்ளார்.


Badri Venkatesh, the acclaimed director behind hits like "Baana Kaathadi", took the reins as the show director for the star-studded 'Roar 26' event, Chennai Super Kings' fan interaction extravaganza at Chepauk Stadium!


The event saw the likes of M.S. Dhoni, Ruturaj Gaikwad, Mike Hussey, and Suresh Raina rubbing shoulders with Tamil actor Sivakarthikeyan, who wished the CSK squad good luck. R.J. Balaji, Anirudha Srikanth, Arjun Das, and R.K. a.k.a Radhakrishnan kept the energy high as hosts. With his expertise in directing high-profile events like SIIMA and Mirchi Music Awards, Badri Venkatesh ensured 'Roar 26' was a memorable night. He's currently working on his next film, adding to his impressive portfolio of three Tamil films

இது தியாகம் அல்ல; கடமை. சுய நலம் அல்ல; பொறுமை... கமல்ஹாசன்

 இது தியாகம் அல்ல; கடமை. சுய நலம் அல்ல; பொறுமை... கமல்ஹாசன்



வரும் 2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில், பேட்டரி டார்ச் சின்னத்தில் போட்டியிடுவது என்பது மக்கள் நீதி மய்யம் கட்சியின் தேர்வு. பேட்டரி டார்ச் எங்களுக்கு வெறும் சின்னமல்ல. அது எங்களின் அடையாளம்.


மதவாத சக்திகளிடமிருந்து தமிழகத்தைக் காக்கும் நோக்கத்துடணும், தமிழக மக்களின் நலன் கருதியும், தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் நேரடியாகப் போட்டியிடவில்லை என்றும், திமுக தலைமையிலான கூட்டணியின் வேட்பாளர்களை நிபந்தனையின்றி ஆதரிப்பது என அறிவிக்கிறோம். இது தியாகம் அல்ல; கடமை. சுய நலம் அல்ல; பொறுமை. 


என்னைப் புரிந்துகொண்டு எந்த சுயநலமின்றி, என்னோடு தொடர்ந்து பயணிக்கும் மக்கள் நீதி மய்யத்தின் தொண்டர்களுக்கும், நிர்வாகிகளுக்கும் நெஞ்சின் ஆழத்திலிருந்து நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

Biker Press Meet Tamil | Sharwanand | Dr Rajashekhar | Malvika Nair

 Biker Press Meet Tamil | Sharwanand | Dr Rajashekhar | Malvika Nair


*
ஷர்வானந்த் நடிக்கும் பைக்கர் ( BIKER) பட பத்திரிகையாளர் சந்திப்பு !!*


முன்னணி நட்சத்திர நடிகர் ஷர்வானந்த், டாக்டர் ராஜசேகர், மாளவிகா நாயர், அதுல் குல்கர்னி நடிப்பில் இந்தியாவின் முதல் பைக் ஸ்போர்ட்ஸ் திரைப்படமாக, பிரம்மாண்டமாக உருவாகியுள்ள படம் “பைக்கர்”. இப்படத்தை அபிலாஷ் ரெட்டி இயக்கியுள்ளார். UV Creations தயாரிப்பில், விக்ரம் ரெட்டி வழங்க, வம்சி கிருஷ்ணா ரெட்டி மற்றும் பிரமோத் உப்பலபாட்டி தயாரித்துள்ளனர்.


இப்படம் தெலுங்கு, தமிழ், மலையாளம் உட்பட பல மொழிகளில் பான் இந்திய வெளியீடாக வரும் 2026 ஏப்ரல் 3 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது. இந்நிலையில் படத்தின் தமிழ்ப்பதிப்பை விளம்பரப்படுத்தும் வகையில் படக்குழுவினர் சென்னையில் தமிழ் பத்திரிக்கை ஊடக நண்பர்களைச் சந்தித்தனர்.


இந்நிகழ்வினில்


மோட்டார் சைக்கிள் டிரெய்னர் ரோஷிணி பேசியதாவது..,


இது எனக்கு புதிய அனுபவமாக இருந்தாலும், மிகவும் நெருக்கமாக உணர்ந்தேன்.நான் பெண்களுக்கு மோட்டார் சைக்கிள் பயிற்சி அளித்து வருவதால், இந்தப் படத்தின் உலகத்தை எளிதாக புரிந்துகொள்ள முடிந்தது. ‘பைக்கர்’ உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்ட படம் என்பதால், அது இன்னும் சிறப்பு பெற்றதாக தெரிந்தது. இந்தப் படம் இளைஞர்களுக்கும் பைக் ரேசிங் ஆர்வலர்களுக்கும் ஒரு பெரிய ஊக்கமாக இருக்கும் என்று நம்புகிறேன். இந்திய சினிமாவில் மோட்டார் பைக் ரேசிங்கை மையமாகக் கொண்ட இப்படம் மிகவும் முக்கியமான முயற்சியாக தெரிகிறது. இந்த விளையாட்டை அதிகமான மக்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்பதே இயக்குநரின் உண்மையான நோக்கம் என்பதை உணர முடிந்தது. டாக்டர் ராஜசேகர் அவர்களின் நடிப்பு ஒரு கடுமையான ஆனால் பாசமுள்ள தந்தையை நினைவுபடுத்தியது. நாயகன் ஷர்வானந்த் தனது கதாபாத்திரத்திற்கு முழுமையாக அர்ப்பணித்து, உண்மையான ரேஸராகவே மாறியிருக்கிறார்.


புரடக்ஷன் டிசைனர் ராஜீவன் பேசியதாவது..,


இந்தப் படத்தில் கலை இயக்கம் பெரிதாக வெளியில் தெரியாமல் இருந்தாலும், அதற்குப் பின்னால் மிகுந்த உழைப்பும் நுணுக்கமும் இருந்தது.பொதுவாக ரேசிங் காட்சிகள் வெளிநாடுகளில் படமாக்கப்படும் நிலையில், இந்தப் படத்தில் ரேஸ்களை உருவாக்குவது பெரிய சவாலாக இருந்தது. கதை இரண்டு காலக்கட்டங்களில் நகர்வதால், அதற்கேற்ற பைக்குகள் மற்றும் பொருட்களைத் தேர்வு செய்வதில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டது. ஒவ்வொரு காலத்திற்கும் பொருந்தும் விவரங்கள் நம்பகத்தன்மையுடன் அமைய வேண்டும் என்பதில் அக்கறையுடன் பணியாற்றினோம். பழைய டிராக்குகளை மாற்றி, புதிய ரேஸ் காட்சிகளுக்கேற்ற சூழலை உருவாக்கினோம். அதற்கான அமைப்புகளை உருவாக்குவதுதான் தயாரிப்பு வடிவமைப்பின் முக்கியப் பணியாக இருந்தது. தேவையான பல அம்சங்கள் வெளிநாடுகளில் இருந்து கொண்டு வரப்பட்டன. குறிப்பாக இந்தோனேஷியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து போன்ற நாடுகளிலிருந்து பல பொருட்கள் பெறப்பட்டன. ரேஸ் டிராக் இயல்பாகவும் உண்மையாகவும் தோன்ற வேண்டும் என்பதற்காக தீவிரமாக உழைத்தோம். பார்வையாளர்கள் திரையில் ஒரு உண்மையான ரேசிங் உலகத்தை உணர வேண்டும் என்பதே முக்கிய நோக்கமாக இருந்தது. ஒரு செட்டை அமைப்பதைக் கடந்தும், முழு ரேசிங் அனுபவத்தை உருவாக்கும் முயற்சி நடைபெற்றது. இந்தப் படத்தின் பின்னணியில் தயாரிப்பு வடிவமைப்பில் மிகுந்த உழைப்பும் நுணுக்கமும் இருப்பதை ரசிகர்கள் திரையில் உணர்வார்கள். நன்றி.


ஒளிப்பதிவாளர் மதி பேசியதாவது..,


இந்தப் படக்குழுவுடன் இணைந்து பணியாற்றியது குடும்பத்தோடு சேர்ந்து வேலை செய்த அனுபவம் போல இருந்தது. ரேவதி, பிரபு உள்ளிட்ட பலருடன் முன்பே பணியாற்றியிருந்தாலும், இந்தப் படம் தனித்துவமான அனுபவத்தை அளித்தது. குறிப்பாக ரேஸ் காட்சிகளைப் படம் பிடிப்பது மிகவும் சவாலாக இருந்தாலும், அதை சிறப்பாக பதிவு செய்ய முழு முயற்சியும் எடுத்தோம். அபிஜித் உள்ளிட்ட குழுவினரின் ஒத்துழைப்புக்கு நன்றி. தொடர்ந்து ஒரு மாத காலம் நடைபெற்ற ரேஸ் படப்பிடிப்பு மிகப்பெரிய அனுபவமாக அமைந்தது. இது எனது திரைப்பயணத்தில் மறக்க முடியாத ஒன்றாக இருக்கும். இந்தப் படத்தில் குழுவின் முழு அர்ப்பணிப்புதான் இப்படத்தை சிறப்பாக்கியது. படக்குழுவினர் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்.


இசையமைப்பாளர் ஜிப்ரான் பேசியதாவது..,


இந்தப் படத்திற்கு இசையமைக்க வாய்ப்பு கிடைத்ததற்கு வம்சி சாருக்கு முதலில் நன்றி. அபிலாஷை தமக்கு அறிமுகப்படுத்தியது அவர்தான். அபிலாஷுடன் முதல் சந்திப்பிலேயே நல்ல உணர்வு ஏற்பட்டது. கதையைக் கேட்டவுடனேயே மிகவும் ஆச்சரியமும் மகிழ்ச்சியும் ஏற்பட்டது. இப்படிப்பட்ட வேகமும் ஆழமும் கொண்ட கதைகள் எப்போதும் எனக்கு மிகவும் பிடிக்கும். ஷர்வானந்துடன் மீண்டும் இணைந்து பணியாற்றியது மகிழ்ச்சி அளித்தது. கதை 1990களில் இருந்து 2000கள் வரை தமிழ்நாட்டை மையமாகக் கொண்டு நகர்வதால், அதன் சூழல் எனக்கு நெருக்கமாக இருந்தது. படக்குழுவில் பலரும் தமிழில் பேசும் சூழல் இருந்தது பணியில் மேலும் உதவியாக அமைந்தது. பைக் ரேசிங் உலகின் ஒலி வேறுபாடுகளை உணர்த்துவதில் சவுண்ட் டிசைன் மிக முக்கிய பங்காற்றியது.

இந்தப் படம் இந்திய அளவைக் கடந்து சர்வதேச அளவிலும் ரசிக்கப்படும் என்ற நம்பிக்கை இருக்கிறது. படத்தில் நடித்த அனைவரின் நடிப்பும் மிகவும் சிறப்பாக அமைந்துள்ளது. இந்தப் படத்தை முதல் நாளிலேயே பார்த்து ஆதரிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன் நன்றி.


இயக்குநர் அபிலாஷ் ரெட்டி பேசியதாவது..,


இந்த மேடையில் மூத்த கலைஞர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் முன் பேசுவது எனக்கு பெருமையாகவும் பதட்டமாகவும் இருக்கிறது. ‘பைக்கர்’ படம் வெறும் ரேஸ் பற்றிய கதை மட்டும் அல்ல, அதில் ஆழமான மனித உணர்வுகளும் இடம்பெற்றுள்ளன.

அதனால்தான் இந்தப் படத்தை தமிழிலும் வெளியிடுவதில் மகிழ்ச்சியாக இருக்கிறது. எனக்கு தமிழ் சரியாகப் பேச வராவிட்டாலும், இந்தப் படம் தமிழ் ரசிகர்களின் மனதை நிச்சயம் தொடும் என்ற நம்பிக்கை இருக்கிறது. ராஜீவன் சார், மதி சார், யுவராஜ் சார், ஜிப்ரான் சார் உள்ளிட்ட தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவரின் பங்களிப்பும் இந்தப் படத்திற்கு பெரிய பலமாக அமைந்துள்ளது. சென்னைக்கு வரும் ஒவ்வொரு முறையும் தமிழ் கற்க வேண்டும் என்ற ஆசை அதிகரிக்கிறது.


அடுத்த முறை வரும்போது இன்னும் நன்றாக தமிழில் பேச வேண்டும் என்பதையும் விரும்புகிறேன். எதிர்காலத்தில் ஒரு தமிழ் படம் இயக்க வேண்டும் என்ற ஆசையும் இருக்கிறது. ஷர்வானந்த் சார், ராஜசேகர் சார், மாளவிகா மேடம் உள்ளிட்ட நடிகர்கள் இல்லாமல் இந்தப் படம் சாத்தியமாகியிருக்காது. அவர்கள் ஒவ்வொருவரும் தங்கள் கதாபாத்திரங்களை சிறப்பாக உயிர்ப்பித்துள்ளனர். இந்தப் படம் அனைவரின் கூட்டு உழைப்பால் உருவான ஒன்று. ஏப்ரல் 3ஆம் தேதி திரையரங்குகளில் இந்தப் படத்தை பார்த்து ஆதரிக்க வேண்டும் என்பதே என் அன்பான வேண்டுகோள். நன்றி.


நடிகர் நிரூப் பேசியதாவது..,


இந்தப் படத்தில் நடிக்க என்னை அணுகியபோது, நான் இரண்டு படங்கள் மட்டுமே நடித்திருந்தேன். அந்த நேரத்தில் இவ்வளவு பெரிய கதாபாத்திரம் கிடைத்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சியான அனுபவமாக இருந்தது. ஆடிஷன் மூலம் இந்த வாய்ப்பு கிடைத்ததற்கு நன்றி. என் கதாபாத்திரம் பற்றி இப்போது அதிகமாக சொல்ல விரும்பவில்லை, ஏனெனில் அது ரசிகர்களுக்கான சஸ்பென்ஸாக இருக்க வேண்டும். ஆனால் இந்தப் படம் எனக்கு ஒரு நல்ல வாய்ப்பை மட்டும் அல்ல, நிறைய நல்ல நண்பர்களையும் கொடுத்தது. ஷர்வா அண்ணாவுடன் பணியாற்றியது மிக அழகான அனுபவமாக இருந்தது. ராஜசேகர் சார் மனிதராகவே மிகவும் அருமையானவர்; அவரிடமிருந்து இன்னும் பல விஷயங்கள் கற்றுக்கொள்ள வேண்டும் என நினைக்கிறேன். மாளவிகா மேடமும் தனது கதாபாத்திரத்தில் மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார். யுவராஜ் சார் இந்தப் படத்திற்கு கண்களால் ரசிக்க வேண்டிய அளவுக்கு அழகான காட்சிகளை கொடுத்திருக்கிறார். இந்தப் படம் திரையரங்கில் பார்த்தால்தான் அதன் முழு அனுபவமும் உணர முடியும். அபிலாஷ் சார் ஒரு அழகான உலகத்தை உருவாக்கியிருக்கிறார்; அதில் ஆச்சரியங்கள், அதிவேக ரேஸ்கள், உணர்வுகள் என அனைத்தும் இருக்கின்றன. தமிழ், தெலுங்கு, கன்னடம் என எல்லா மொழி ரசிகர்களும் ரசிக்கும் படமாக இது இருக்கும். நன்றி.


நடிகை மாளவிகா பேசியதாவது..,


சென்னைக்கு மீண்டும் வருவது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இங்கே கிடைக்கும் அன்பும் வரவேற்பும் எப்போதும் நினைவில் நிற்கும். இன்னும் பல தமிழ் படங்களில் நடிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. அதேபோல், ஷர்வாவின் மற்ற படங்களுக்கு நீங்கள் கொடுத்த அன்பைப் போலவே ‘பைக்கர்’ படத்திற்கும் ஆதரவு தர வேண்டும் என்று விரும்புகிறேன். ஷர்வா பற்றி நான் அதிகமாகச் சொல்லத் தேவையில்லை, ஏனெனில் அவரை அனைவரும் ஏற்கனவே நன்றாக அறிவீர்கள். எங்கள் படத்தை திரையரங்கில் பார்த்து ரசிக்க வேண்டும் என்பதே என் அன்பான வேண்டுகோள். நன்றி.


டாக்டர் ராஜசேகர் பேசியதாவது,


நடக்கும்போதே கொஞ்சம் சிரமமாக இருக்கிறது; ஹீரோ ஷர்வானந்த் கையைத் தந்து என்னை மேடைக்கு அழைத்து வந்தார். மூன்று மாதங்களுக்கு முன்பு எனக்கு காலில் முறிவு ஏற்பட்டது. இப்போதுதான் அது குணமாகி வருகிறது. இதற்கு முன்பும் சினிமா ஸ்டண்ட் செய்யும் போது இரு கால்களும் முறிந்த அனுபவம் எனக்கு உள்ளது. அதில் இடது கால் முதலில் முறிந்தது, அதுவும் ஒரு படப்பிடிப்பின் நடுவிலேயே நடந்தது. அந்த விபத்து மிகவும் பெரியதாக இருந்ததால் அப்போலோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றேன். அப்போது டாக்டர்கள் ஓய்வெடுக்கச் சொன்னாலும், ‘இதுதாண்டா போலீஸ்’ படத்தின் வெளியீடு நெருங்கியதால் மருத்துவமனையில் அமைதியாக இருக்க முடியவில்லை. டிசம்பர் 8ஆம் தேதி வெளியான அந்தப் படத்தைப் பார்க்க நேராக சத்யம் திரையரங்கிற்கே வந்தேன். அந்தப் படம் வெளியாகும் முன்பே தெலுங்கில் பெரிய வெற்றி பெற்றிருந்தது. அப்போது இந்த முறிவு நல்ல அறிகுறி, படம் பெரிய ஹிட் ஆகும் என்று பலர் சொன்னது நினைவுக்கு வந்தது.


அதேபோல் இப்போதும் மீண்டும் முறிவுடன் சத்யம் திரையரங்கிற்கு வந்திருக்கிறேன் என்பதால், இந்தப் படமும் பெரிய வெற்றி பெறும் என்ற நம்பிக்கை இருக்கிறது. ஏப்ரல் 3ஆம் தேதி படம் வெளியாகிறது. அனைவரும் திரையரங்கில் வந்து ஆதரிக்க வேண்டும். இந்தப் படம் ரசிகர்களின் அன்பில் பெரிய வெற்றியை அடையும் என்று மனமார நம்புகிறேன்.


நடிகர் ஷர்வானந்த் பேசியதாவது..,


நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் சென்னை வருவது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. ‘எங்கேயும் எப்போதும்’ முதல் ‘கணம்’ வரை தமிழ் ரசிகர்களுடன் எனக்கு எப்போதும் ஒரு நெருக்கம் இருந்திருக்கிறது. தமிழ் சினிமாவின் மீதும் தமிழ் மக்களின் மீதும் எனக்கு எப்போதும் தனி அன்பும் மரியாதையும் உண்டு. அதனால்தான் தமிழில் படம் வெளியிடும் ஒவ்வொரு முறையும் வித்தியாசமான கதைகளையே தேர்வு செய்து வருகிறேன். என் படப் பயணத்தைப் பார்த்தால், ஒவ்வொரு படமும் ஒவ்வொரு புதிய ஜானரில் அமைந்திருப்பதை காணலாம். அதேபோல், ‘பைக்கர்’ படமும் என் திரைப்பயணத்தில் மிகவும் முக்கியமான இடத்தைப் பெற்றுள்ளது. என் முழு திரை வாழ்க்கையிலேயே இதுதான் எனது சிறந்த படம் என்று பெருமையுடன் சொல்ல முடிகிறது. ஏனெனில், இது இந்திய சினிமாவில் உருவான முதல் மொட்டோகிராஸ் படம்.


இந்தப் படம் தொழில்நுட்ப ரீதியாகவும், உணர்ச்சி ரீதியாகவும், மிகப் பெரிய முயற்சியாக உருவாகியுள்ளது. இந்தக் கதாபாத்திரத்திற்காக 22 கிலோ எடையை குறைத்து, 18 வயது இளைஞனாகவும் 30 வயது மனிதராகவும் இரு பரிமாணங்களில் என்னை மாற்றிக் கொண்டேன். இந்தப் படம் என்னை நடிகராக மட்டும் அல்ல, மனிதராகவும் மாற்றிய ஒரு திருப்புமுனைப் படமாக அமைந்துள்ளது. ராஜீவன், மதி, யுவராஜ், ஜிப்ரான், ராஜசேகர், மாளவிகா, வம்சி ரெட்டி உள்ளிட்ட அனைவரின் பங்களிப்பும் இந்தப் படத்தை சிறப்பாக மாற்றியுள்ளது. இரண்டு ஆண்டுகளாக நீண்ட அர்ப்பணிப்புடன் உருவான இந்தப் படம் ஏப்ரல் 3ஆம் தேதி வெளியாகிறது; தமிழ் ரசிகர்கள் கண்டிப்பாக திரையரங்கில் வந்து ஆதரிக்க வேண்டும். அனைவருக்கும் நன்றி.


இப்படம் வரும் ஏப்ரல் 3 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.


தொழில்நுட்பக் குழு:


எழுத்து, இயக்கம்: அபிலாஷ் ரெட்டி

வழங்குபவர்: விக்ரம் ரெட்டி

தயாரிப்பாளர்கள்: வம்சி கிருஷ்ணா ரெட்டி, பிரமோத் உப்பலபாட்டி

இசை: ஜிப்ரான்

நிறுவனம்: UV Creations

ஒளிப்பதிவு: J. யுவராஜ்

புரடக்ஷன் டிசைனர்: ராஜீவன்

எடிட்டர்: அனில் பசலா

கலை இயக்கம்: A. பன்னீர் செல்வம்

எழுத்தாளர்கள்: M.V.S. பரத்வாஜ், ஷ்ரவன் மாதாலா

ஸ்டண்ட்ஸ்: திலீப் சுப்பராயன்

நடன அமைப்பு: ராஜு சுந்தரம், சேகர் VJ, விஸ்வ ரகு

ஒலி வடிவமைப்பு: சிங் சினிமா

மக்கள் தொடர்பு - யுவராஜ்.

The teaser of “Pallichattambhi,” directed by Dijo Jose Antony and starring Tovino Thomas, has been released, promising a fresh visual experience.*

 *டொவினோ தாமஸ் நடிப்பில் டிஜோ ஜோஸ் ஆண்டனி இயக்கத்தில் உருவான 'பள்ளிச்சட்டம்பி' படத்தின் டீசர் வெளியீடு*



டிஜோ ஜோஸ் ஆண்டனி இயக்கி, டொவினோ தாமஸ் நடித்துள்ள ' பள்ளிச்சட்டம்பி 'படத்தின் டீசர் வெளியாகி, ஒரு புத்தம் புதிய திரை அனுபவத்தை அளிப்பதை உறுதி செய்துள்ளது.


டிஜோ ஜோஸ் ஆண்டனி இயக்கி டொவினோ தாமஸ் கதாநாயகனாக நடித்துள்ள 'பள்ளிச்சட்டம்பி' படத்தின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது.  டீசர் முழுவதும் விறுவிறுப்பான சண்டை  காட்சிகளால் நிரம்பியுள்ளது. டீசரில் இருந்து 'பள்ளிச்சட்டம்பி' மலையாள திரையுலக வரலாற்றில் மட்டுமல்லாமல் தமிழ் திரையுலகிலும் மற்றொரு மைல்கல்லை பதிக்கும் என்பது தெளிவாகிறது. மேலும் இது அனைத்து வயதினரும் ரசிக்கக் கூடிய ஒரு படமாக இருக்கும் என்றும் உறுதியளிக்கிறது. 


இப்படத்திற்கு ஹிட் மேக்கர் ஜேக்ஸ் பிஜாய் இசையமைத்துள்ளார்.  அவரது இசையில் வெளியான 'காட்டு செம்பகம்'  பாடலை பிரபல பின்னணி பாடகர் அகில் ஜே. சந்த் மற்றும் பின்னணி பாடகி அவனி  மல்ஹார் ஆகியோர் இணைந்து பாடியுள்ளனர். இந்தப் பாடலை மோகன் ராஜா எழுதியிருக்கிறார். இந்தப் பாடல் ஏற்கனவே ட்ரெண்டிங் பட்டியலில் இடம் பிடித்துள்ளது. 


இந்த டீசர் ஒரு காலகட்டத்தின், அதிரடி ஆக்சனை ஒரு சிறு காட்சியாக வழங்குகிறது. டொவினோவுடன் விஜயராகவன் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கயாடு லோஹர் கதாநாயகியாக நடித்துள்ளார். இதுவரையில், படக் குழுவினர் ஒரு விறுவிறுப்பான டீசரையும், அழகான உணர்வுபூர்வமான ஒரு குடும்பப் பாடலையும் வெளியிட்டுள்ளனர். 


'பள்ளிச்சட்டம்பி' டிஜோ ஜோஸ் ஆண்டனி மற்றும் ஜேக்ஸ் பிஜாய் கூட்டணியில் உருவாகும் நான்காவது படமாகும். அவர்களின் முந்தைய படங்களான 'குயின்', 'ஜன கண மன' மற்றும் 'மலையாளி ஃபிரம் இந்தியா' ஆகியவற்றில் இடம் பெற்ற பாடல்கள் அனைத்தும் தரவரிசையில் முதலிடம் பிடித்தன. இந்த வெற்றிகரமான கூட்டணி மீண்டும் இணைவதைக் காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். 


இப்படம் ஏற்கனவே IMDb யின் மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படங்களின் பட்டியலில் இடம் பிடித்துள்ளது. சமீபத்தில் இந்திய சினிமாவின் பெருமைக்குரிய அடையாளமான எஸ். எஸ். ராஜமவுலி,  டிஜோ ஜோஸ் ஆண்டனியின் 'ஜன கண மன ' திரைப்படத்தை பாராட்டியது... பரவலாக விவாதிக்கப்பட்ட ஒரு விசயமாக மாறியது.‌


'பள்ளிச்சட்டம்பி' திரைப்படத்தில் பல முக்கிய மலையாள நடிகர்களும் நடித்துள்ளனர். இப்படத்தின் கதையை பிரபல திரைக்கதை எழுத்தாளர் எஸ். சுரேஷ் பாபு எழுதியுள்ளார். டிஜோ டோமி ஒளிப்பதிவு செய்துள்ளார். வேர்ல்ட் வைட் பிலிம்ஸ் ( World Wide Films) நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் நௌஃபல் ( Noufal) - பிரிஜீஷ்( Brijeesh ) ஆகியோருடன் சி கியூப் பிரதர்ஸ் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர்கள் சாணக்யா சைதன்ய சரண் ஆகியோரும் இணைந்து தயாரித்த 'பள்ளிச்சட்டம்பி' திரைப்படம்

 ஏப்ரல் 10 ஆம் தேதி முதல் தமிழ் , மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய ஐந்து மொழிகளில் வெளியாகிறது.


*Teaser Link* : https://www.youtube.com/watch?v=cicdTszL548


*The teaser of “Pallichattambhi,” directed by Dijo Jose Antony and starring Tovino Thomas, has been released, promising a fresh visual experience.*


The teaser of Pallichattambhi, directed by Dijo Jose Antony and featuring Tovino Thomas in the lead, has been unveiled. It is packed with thrilling action sequences throughout. From the teaser itself, it is evident that Pallichattambhi could mark another milestone in Malayalam cinema history. It also promises to be a film that audiences of all age groups can enjoy.


The music is composed by hitmaker Jakes Bejoy, and the song “Kaatu Chembakam,” sung by trending Bollywood singer Vishal Mishra-marking his Malayalam debut-has already entered the trending charts. He is joined by Avani Malhar for the song.


The teaser offers a glimpse of a period action drama. Alongside Tovino, Vijayaraghavan appears in a key role, while South Indian trending star Kayadu Lohar plays the female lead. So far, the makers have released a gripping teaser and a beautiful emotional family song. The lyrics of the song are penned by Kaithapram Damodaran Namboothiri.


Another highlight is the reunion of Jakes Bejoy, Kaithapram, and Tovino Thomas after their 2025 superhit song “Minnalvala.”


Pallichattambhi marks the fourth collaboration between Dijo Jose Antony and Jakes Bejoy. Their previous films-Queen, Jana Gana Mana, and Malayali from India - all featured chart-topping music, and audiences are eagerly waiting to see this successful combo reunite.


The film has already made it to IMDb’s list of most anticipated movies. Recently, Indian cinema’s pride S. S. Rajamouli praised Dijo Jose Antony’s Jana Gana Mana, which became a widely discussed topic.

Set to hit theatres worldwide soon, Pallichattambi also features several prominent Malayalam actors. The film is written by hit screenwriter S. Suresh Babu, with cinematography by Tijo Tomy. Produced under the banner of World Wide Films by Noufal and Brijesh, along with Chanakya Chaitanya Charan under C Qube Bros Entertainment, Pallichattambi is gearing up for a global release in five languages on April 10.


Teaser Link : https://www.youtube.com/watch?v=cicdTszL548

Prime Video Presents 2026: Prime Video Unveils its Biggest Indian Originals Slate yet Featuring an Expansive Lineup of Series and Movies Across Formats and Languages*

 *Prime Video Presents 2026: Prime Video இந்தியாவின் இதுவரையிலான மிகப்பெரிய ஒரிஜினல்ஸ் ஸ்லேட்டை அறிவிக்கிறது — பல வடிவங்கள் மற்றும் மொழிகளில் தொடர்கள் மற்றும் திரைப்படங்களின் விரிவான வரிசை 



Hrithik Roshan-இன் HRX Films மற்றும் Alia Bhatt-இன் Eternal Sunshine Productions போன்ற தொழில் முன்னணியான நிறுவனங்களுடனான புதிய ஒத்துழைப்புகளுடன், Dharmatic Entertainment, D2R Films, Excel Entertainment, Tiger Baby Films, Emmay Entertainment, Abundantia Entertainment, The Viral Fever மற்றும் Wallwatcher Films உள்ளிட்ட இந்தியாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களிடமிருந்து புதிய கதைகளுடன், இந்தியாவின் படைப்பு பொருளாதாரத்தில் Prime Video தன் முதலீட்டு அறிவிப்பை மீண்டும் உறுதிப்படுத்துகிறது


Amazon MGM Studios-இன் உற்சாகமான இந்திய திரைப்பட தொகுப்பு அறிவிப்புகள், திரையரங்கு உலகில் நுழைவதை முன்னிலைப்படுத்தும் இந்த வரிசை, ஆழமான தொழில் ஒத்துழைப்புகளை வளர்க்கிறது


2025-ல் புதிய Prime உறுப்பினர்களை ஈர்ப்பதிலும், Prime Video-ஐ ஸ்ட்ரீம் செய்யும் Prime உறுப்பினர்களின் விகிதத்திலும் Prime Video India உலகளவில் மிக உயர்ந்த பகுதிகளில் ஒன்றாக தரவரிசைப்படுத்தப்பட்டு, இந்தியா Prime Video-இன் உலகளாவிய வளர்ச்சியில் முக்கிய பங்கை தொடர்ந்து வகிக்கிறது


மும்பை, இந்தியா — மார்ச் 19, 2026 — இந்தியாவின் மிகவும் விரும்பப்படும் பொழுதுபோக்கு ஓடிடி தளமான Prime Video, இன்று 'Prime Video Presents' நிகழ்வில் 55-க்கும் மேற்பட்ட தொடர்கள் மற்றும் திரைப்படங்களுடன் இதுவரையிலான மிகப்பெரிய புதிய ஒரிஜினல்ஸ் அறிவிப்பை வெளியிட்டது. விரிவான இந்திய ஒரிஜினல்ஸ் வரிசையை மையமாகக் கொண்டு, Amazon MGM Studios India-விலிருந்து திரையரங்கு திரைப்படங்களின் அறிவிப்புகளுடன் மற்றும் சில மிகப்பெரிய உரிமம் பெற்ற தலைப்புகளுடன், வரவிருக்கும் பல மொழி தொகுப்பு ஸ்ட்ரீமிங் முதல் திரையரங்கு வரை ஒவ்வொரு பார்வை தொடர்புப் புள்ளியிலும் வாடிக்கையாளர்களை மகிழ்விக்க உறுதியளிக்கிறது.


இந்தத் தொகுப்பில் , ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கில் சிறப்பான ஒரிஜினல் தொடர்கள் மற்றும் திரைப்படங்கள் இடம்பெற்றுள்ளன, இவை ஸ்கிரிப்ட் மற்றும் unscripted கதை சொல்லல் என இரு வகைகளிலும் பரந்த வகைமைகளை உள்ளடக்கியுள்ளன. இந்த வரிசையில் Bhuvan Bam, Rohit Saraf, Pratibha Ranta மற்றும் Gurfateh Pirzada நடிக்கும் Nikkhil Advani-இன் மகத்தான படைப்பு The Revolutionaries ; Vijay Varma நடிக்கும் Matka King; Ali Fazal, Sonali Bendre மற்றும் Aamir Bashir நடிக்கும் Raakh; ராப்பர் KING-இன் நடிப்பு அரங்கேற்றத்தை குறிக்கும் Lukkhe, மற்றும் ஸ்ட்ரீமிங்கிற்காக உருவாக்கப்பட்ட இந்தியாவின் முதல் இந்தி homegrown சூப்பர்ஹீரோ தொடரான Vansh - The Kalyug Warriors உள்ளிட்ட பல எதிர்பார்க்கப்பட்ட புதிய தலைப்புகள் அறிமுகப்படுத்தப்படுகின்றன.


இந்தப் புதிய தொகுப்புகளுடன் , Farzi Season 2, Panchayat Season 5, Call Me Bae Season 2, Dupahiya Season 2, Dahaad Season 2 மற்றும் The Traitors Season 2 உள்ளிட்ட இந்தியாவின் மிகவும் விரும்பப்படும் சில franchise-களின் புதிய சீசன்களையும் இந்த அறிவிப்பு கொண்டு வருகிறது.


இதுவரையிலான மிகப்பெரிய தொகுப்புடன் பிராந்திய கதை சொல்லலை விரிவுபடுத்தி, Teja Sajja தொகுத்து வழங்கும் The Traitors-இன் தெலுங்கு தழுவல், Kiran Abbavaram மற்றும் Thiruveer நடிக்கும் தெலுங்கு நாடகமான Guvvala Cheruvu Ghat, தமிழ் நாடகமான Exam, Pushkar மற்றும் Gayatri தயாரித்த Vadhandhi-இன் Season 2, மற்றும் Inspector Rishi-இன் Season 2 ஆகியவை சில குறிப்பிடத்தக்க தலைப்புகளாகும்.


இந்த தொகுப்பு Prime Video-க்கான புதிய உத்தியிலான ஒத்துழைப்புகளின் வரிசையையும் அறிமுகப்படுத்துகிறது - ஒரிஜினல் தொடரான Storm மற்றும் ஒரிஜினல் திரைப்படமான Mess-உடன் ஸ்ட்ரீமிங் உலகில் அடியெடுத்து வைக்கும் Hrithik Roshan-இன் HRX Films, மற்றும் ஒரிஜினல் திரைப்படமான Don't Be Shy-உடன் Alia Bhatt-இன் Eternal Sunshine Productions. நிறுவப்பட்ட கதை சொல்பவர்கள் மற்றும் வளர்ந்து வரும் படைப்பாளிகளின் பல்வகை கலவை இப்போது இந்தியாவிலும் உலகம் முழுவதிலும் உள்ள பார்வையாளர்கள் பொழுதுபோக்கை அனுபவிக்கும் விதத்தை வடிவமைக்கிறது.


ஒரு முக்கிய சிறப்பம்சம் என்னவெனில், Amazon MGM Studios-இன் உற்சாகமான புதிய திரையரங்கு தொகுப்பு, ஐந்து புதிய இந்திய திரைப்படங்களுடன் அறிவிக்கப்பட்டது. Rajkummar Rao மற்றும் Keerthy Suresh நடிக்கும், Aditya Nimbalkar இயக்கும் Raftaar, Kemmu, Preity G Zinta மற்றும் Sparsh Shrivastava நடிக்கும் Kunal Kemmu-வின் இயக்க முயற்சியான VIBE, Lijo Jose Pellissery இயக்கி, Hansal Mehta மற்றும் Sahil Saigal தயாரித்து, A.R. Rahman இசையமைத்த Dilkashi, Yami Gautam நடிக்கும், Balaji Mohan இயக்கி, Aanand L. Rai தயாரித்த Nayyi Navelli, மற்றும் Sharan Sharma இயக்கி, Bhuvan Bam மற்றும் Wamiqa Gabbi நடிக்கும் Kuku Ki Kundli.


திரையரங்கு மட்டுமல்ல, இந்த தொகுப்பு பல இந்திய மொழிகளில் திரையரங்கிற்கு பிறகான டிஜிட்டல் திரையிட்டலுடன் கணிசமான உரிமம் பெற்ற திரைப்படங்களின் வரிசையையும் வழங்குகிறது, இது பார்வையாளர்களுக்கு தைரியமான, திரையரங்கு அனுபவத்தை உறுதியளிக்கிறது.


“இந்த தொகுப்பு Prime Video India-வின் புதிய சகாப்தத்தை குறிக்கிறது, ஒப்பற்ற உள்ளடக்க பன்முகத்தன்மையை வழங்குகிறது என்று Prime Video India-வின் SVOD Business-இன் இயக்குனர் மற்றும் தலைவரான Shilangi Mukherji கூறினார்.


2025-ல் புதிய Prime உறுப்பினர்களை ஈர்ப்பதில் முன்னணி பகுதிகளில் ஒன்றாக தரவரிசைப்படுத்தப்பட்டு இந்தியா Prime Video-இன் உலகளாவிய வளர்ச்சியில் மையமாக உள்ளது. எங்கள் வாடிக்கையாளர்களில் ஏறத்தாழ மூன்றில் இரண்டு பங்கினர் நான்குக்கும் மேற்பட்ட மொழிகளில் உள்ளடக்கத்தை பார்க்கின்றனர், இது பல்வகை கதை சொல்லலுக்கான வளர்ந்து வரும் ஆர்வத்தை பிரதிபலிக்கிறது. மேலும் எங்கள் இந்திய உள்ளடக்கம் உலகளவிலான வாடிக்கையாளர்களிடமும் வரவேற்பு பெறுகிறது - 2025-ல் மிகவும் பார்க்கப்பட்ட முதல் 50 ஆங்கிலமல்லாத தலைப்புகளில் பாதிக்கும் மேற்பட்டவை Prime Video India-விலிருந்து வந்தன.”


“Prime Video தொடர்ந்து தொழில் புதுமையில் முன்னோடியாக இயங்கி, தைரியமான கதை சொல்லலை ஆதரித்து வருகிறது. நாட்டில் உள்ள மகத்தான படைப்பு திறமையில் எங்கள் நம்பிக்கை, வளர்ந்து வரும் குரல்களை தீவிரமாக ஆதரிக்கும் அதே வேளையில் இந்தியாவின் மிகவும் கொண்டாடப்படும் படைப்பு சக்திகளுடனான உறவுகளை வளர்க்க வழிவகுத்துள்ளது. Amazon MGM Studios India-விலிருந்து திரையரங்கு திரைப்படங்களின் உற்சாகமான வரிசையுடன் எங்களின் இதுவரை வெளியான மிகப்பெரிய ஒரிஜினல்ஸ் வரிசையை வழங்குவதில் நாங்கள் பெருமைப்படுகிறோம். கலாசார ரீதியில் வேரூன்றிய, தொடர்புடைய மற்றும் உலகளாவிய ரீதியில் கவர்ச்சிகரமான கதைகளுடன் உயர்தர கதை சொல்லலின் தரத்தை நாங்கள் தொடர்ந்து உயர்த்துகிறோம்.”


வரவிருக்கும் தலைப்புகள் பற்றிய விவரங்கள் இணைப்பில் தனியாக சேர்க்கப்பட்டுள்ளன. தலைப்புகளின் பட்டியல், விவரங்கள், முக்கிய கலைப்படங்கள் மற்றும் நிகழ்வு புகைப்படங்களை அணுக இங்கே கிளிக் செய்யவும்.


*Prime Video Presents 2026: Prime Video Unveils its Biggest Indian Originals Slate yet Featuring an Expansive Lineup of Series and Movies Across Formats and Languages*


The slate reaffirms Prime Video's investment in India's creative economy, with exciting new collaborations with industry powerhouses such as Hrithik Roshan's HRX Films and Alia Bhatt's Eternal Sunshine Productions and new stories from India’s leading production houses such as Dharmatic Entertainment, D2R Films, Excel Entertainment, Tiger Baby Films, Emmay Entertainment, Abundantia Entertainment, The Viral Fever, and Wallwatcher Films, among others


The line up highlights a foray into theatricals with Amazon MGM Studios’ exciting Indian movie slate, fostering deeper industry collaborations


India continues to play a pivotal role in Prime Video's growth worldwide, with Prime Video India ranking amongst the highest territories globally in terms of attracting new Prime members and the percentage of Prime Members streaming Prime Video in 2025


MUMBAI, India—March 19, 2026—Prime Video, India’s most-loved entertainment destination, today unveiled its biggest new Originals slate at its ‘Prime Video Presents’ showcase with close to 55 series and movies. Anchored by an expansive Indian Originals lineup, alongside the announcement of theatrical films from Amazon MGM Studios India and some of the biggest licensed titles, the upcoming multi-language slate promises to entertain customers at every viewing touchpoint, from streaming to cinema.


The slate features compelling Original series and movies in Hindi, Tamil, and Telugu, spanning a wide range of genres across both scripted and unscripted storytelling. The lineup introduces several highly anticipated new titles, including Nikkhil Advani’s magnum opus The Revolutionaries starring Bhuvan Bam, Rohit Saraf, Pratibha Ranta, and Gurfateh Pirzada; Matka King starring Vijay Varma; Raakh starring Ali Fazal, Sonali Bendre, and Aamir Bashir; Lukkhe, which marks the acting debut of rapper KING; and Vansh – The Kalyug Warriors, India’s first Hindi homegrown superhero series created for streaming.

 

Alongside these new launches, the slate also brings back new seasons of some of India’s most loved franchises, including Farzi Season 2, Panchayat Season 5, Call Me Bae Season 2, Dupahiya Season 2, Dahaad Season 2 and The Traitors Season 2, among others.


Expanding its regional storytelling with the biggest slate yet, the lineup includes major launches such as the Telugu adaptation of the hit Hindi unscripted series The Traitors with Teja Sajja as host, Guvvala Cheruvu Ghat, a Telugu drama starring Kiran Abbavaram and Thiruveer, as well as the Tamil drama Exam, Season 2 of Vadhandhi produced by Pushkar and Gayatri, and Season 2 of Inspector Rishi, to name a few.


The slate also introduces an array of new strategic collaborations for Prime Video – Hrithik Roshan's HRX Films, making its foray into streaming with Original series Storm and Original movie Mess, and Alia Bhatt's Eternal Sunshine Productions with Original movie Don't Be Shy. A diverse mix of established storytellers and emerging creators are now shaping how audiences in India and across the world experience entertainment.


A key highlight included the unveiling of Amazon MGM Studio’s exciting new theatrical slate with five new Indian movies: Raftaar, starring Rajkummar Rao, Keerthy Suresh and directed by Aditya Nimbalkar; Kunal Kemmu’s directorial venture VIBE, featuring Kemmu, Preity G Zinta, and Sparsh Shrivastava; Dilkashi, directed by Lijo Jose Pellissery, produced by Hansal Mehta and Sahil Saigal, with music by A.R. Rahman; Nayyi Navelli, starring Yami Gautam, directed by Balaji Mohan and produced by Aanand L. Rai; and Kuku Ki Kundli directed by Sharan Sharma, featuring Bhuvan Bam and Wamiqa Gabbi. Not just theatricals, the slate also delivers a significant lineup of licensed movies across multiple Indian languages with post-theatrical digital premieres on the service, promising a bold, cinematic experience for audiences.


"This slate marks Prime Video India's new era, delivering unparalleled content diversity," said Shilangi Mukherji, Director & Head of SVOD Business, Prime Video India. "India remains central to Prime Video’s global growth, ranking among the top territories worldwide for attracting new Prime members in 2025. Close to two-thirds of our customers watch content in more than four languages, reflecting the growing appetite for diverse storytelling. And our Indian content is resonating globally among customers as well, — over half of the most-watched Top 50 non-English titles in 2025 came from Prime Video India.”


“Prime Video has consistently pioneered industry innovation and backed bold storytelling. Our belief in the immense creative talent in the country has seen us actively support emerging voices while fostering relationships with India's most celebrated creative forces," said Nikhil Madhok, director & head of Originals, Prime Video India." We are proud to present our upcoming slate which is our largest ever lineup of Originals along with an exciting line up of theatrical films from Amazon MGM Studios India. We continue to raise the bar for high-quality storytelling with narratives that are culturally rooted, relatable, and universally compelling."


Details about upcoming titles are included separately in the appendix. Click here to access the list of titles, credits, key arts, and event pictures.

நடிகர் பிரபுதேவாவின் மகன் ரிஷி தேவா அறிமுகமாகும் 'முதல் முதலாய்' மியூசிக் வீடியோ ஆல்பம்*

 *நடிகர் பிரபுதேவாவின் மகன் ரிஷி தேவா அறிமுகமாகும் 'முதல் முதலாய்' மியூசிக் வீடியோ ஆல்பம் 



*'முதல் முதலாய்' மியூசிக்கல் வீடியோ ஆல்பம் மூலம் அறிமுகமாகும் 'நடன புயல்' பிரபுதேவாவின் வாரிசு ரிஷி தேவா*


நடிகர் பிரபுதேவாவின் மகன் ரிஷி தேவா 'முதல் முதலாய் ' இன்டி மியூசிக்கல் வீடியோ ஆல்பம் மூலம் தனது கலைப் பயணத்தை தொடங்கி இருக்கிறார்.‌ இந்த ஆல்பத்தில் அசத்தலான நடனமாடி நடிகராக அறிமுகமாகி இருக்கிறார்.  


இசையமைப்பாளர் ரவிச்சந்திரன் ஸ்ரீநிவாஸ் இப்பாடலை எழுதி இசையமைக்க, ஜி.வி பிரகாஷ் குமார் பாடியிருக்கிறார். ரிஷி தேவா, நடிகை கைரா ஆகியோர் இணைந்து நடனமாடி நடித்திருக்கிறார்கள். மெலோடியும், ராப் இசையும் கலந்த இந்த ஆல்பத்தில் உள்ள ராப் பாடலை இசைக் கலைஞர் ஆதித்யா பாடியிருக்கிறார்.


இந்தப் பாடலில் காதல் -அப்பாவித்தனம் - மறக்க இயலாத தருணங்கள்- ஆகியவை இனிமையான பாடல் வரிகளுடன் இணைந்து இருப்பதால்.. இசை ரசிகர்களின் வரவேற்பைப் பெற்று வருகிறது.


இந்தப் பாடலை ட்ரஸ்டினா ஐசக் இயக்க, ஆர். பி. குருதேவ் ஒளிப்பதிவு செய்ய , சுரேன் நடனம் அமைத்திருக்கிறார். இந்தப் பாடலுக்கான காட்சி மொழி... ரிஷி தேவா மற்றும் கைராவின் ஸ்டைலான தோற்றம்... நடனம் ..அனைத்தும் இளமைத் துள்ளலுடன் இருப்பதால் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.


 ரிஷி தேவா - ஜி. வி பிரகாஷ் குமார் - ரவிச்சந்திரன் - கூட்டணியில் உருவாகி இருக்கும் 'முதல் முதலாய்' மியூசிக்கல் வீடியோ ஆல்பம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.


இதனிடையே நடிகர் பிரபுதேவா நடனமாடி பிரபலமான 'சிக்கு புக்கு ரயிலே.. பாடலை சிறுவயதில் ஜி. வி பிரகாஷ் குமார் பாடினார் என்பதும் பிரபுதேவாவின் மகன் ரிஷி தேவா அறிமுகமாகும் 'முதல் முதலாய் ' மியூசிக்கல் வீடியோ ஆல்ப பாடலையும் ஜி. வி பிரகாஷ் குமார் தான் பாடியிருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


'முதல் முதலாய்' ஆல்பம் பாடலை முன்னணி இசை நிறுவனமான சரிகம நிறுவனம் வெளியிட்டுள்ளது.



Link : https://www.youtube.com/watch?v=Ty6CwDdCeKY

நீளிரா' படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு

 நீளிரா' படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு



ஸ்டோன் பெஞ்ச் ஸ்டுடியோ பேனரில் கார்த்திகேயன் சந்தானம் தயாரிப்பில் சோமிதரன் இயக்கத்தில் நவீன் சந்திரா நடிப்பில் உருவாகி, ஏப்ரல் 3ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் 'நீளிரா' படத்தினை அறிமுகப்படுத்தும் வகையில் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.

'நீளிரா ' திரைப்படத்தில் நவீன் சந்திரா, சனந்த், ரூபா கொடுவாயூர், கபிலா வேணு, 'கயல்' வின்சென்ட், விது, ரோஹித் கோகாட்டே, நவயுகா, சிது குமரேசன், ஸ்வாதி கிருஷ்ணா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். செல்வரத்னம் பிரதீபன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு கே இசையமைத்திருக்கிறார். கலை இயக்கத்தை மார்ட்டின் கவனிக்க படத்தொகுப்பு பணிகளை ராதா ஸ்ரீதர் மேற்கொண்டிருக்கிறார். இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டு போர் சூழலில் திருமணம் நடைபெறுவதற்காக மணமக்கள், இரு வீட்டார், உறவினர்கள், நண்பர்கள் ஆகியோர் எதிர்கொள்ளும் சவால்களை பின்னணியாக கொண்டு சர்வைவல் திரில்லராக தயாராகி இருக்கும் இப்படத்தை ஸ்டோன் பெஞ்ச் ஸ்டுடியோ நிறுவனம் சார்பில் கார்த்திகேயன் சந்தானம் மற்றும் கார்த்திக் சுப்புராஜ் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். இந்த திரைப்படத்தை தமிழகம் முழுவதும் ஏஜிஎஸ் நிறுவனமும், வெளிநாடுகளில் அஹிம்சா என்டர்டெய்ன்மென்ட் நிறுவனமும்  வழங்குகின்றன.

ஏப்ரல் மாதம் மூன்றாம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் 'நீளிரா' படத்தினை விளம்பரப்படுத்த சென்னையில் நடைபெற்ற நிகழ்வில் இயக்குநர் சோமீதரன் பேசுகையில், "சின்ன வயதில் போர் நடந்து கொண்டிருக்கும் போது தமிழகத்திலிருந்து திரைப்படங்கள் வெளியாகும். அந்தப் படங்களை பார்க்கும் போது எனக்குள் ஒரு ஆசை இருந்தது. எனக்கு மட்டுமல்ல, என்னைப் போன்ற ஏராளமான ஈழத்து கலைஞர்களுக்கும் இருந்தது. என்றைக்காவது ஒருநாள் இந்த பெரிய திரையில் எங்களுடைய மொழியை  கேட்க முடியாதா...! என்னுடைய ஊரின்.. என்னுடைய வீட்டின்.. ஏதேனும் ஒரு காட்சியை திரையில் பார்த்து விட இயலாதா..! என்ற ஏக்கம் இருந்து கொண்டே இருந்தது. அந்த ஏக்கம் இன்று சாத்தியப்பட்டிருக்கிறது. இத்தனை ஆண்டுகால தமிழ் சினிமாவில் ஈழத்திலிருந்து பாலு மகேந்திரா தொடங்கி ஏராளமான கலைஞர்கள் பலர் முயற்சி செய்திருக்கிறார்கள். அந்த முயற்சியின் ஒரு தொடர்ச்சியாக இது சாத்தியப்பட்டிருக்கிறது. அதனை சாத்தியப்படுத்துவதற்கான முதல் புள்ளியை வைத்த இயக்குநர்- நண்பர் கார்த்திக் சுப்புராஜிற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

உலகம் முழுவதும் உள்ள ஈழத் தமிழர்களுக்கு எங்களுடைய வீட்டில் சமைக்கும் புட்டு உணவு பண்டத்தை பெரிய திரையில் பார்த்திட மாட்டோமா என்ற எண்ணம் இருந்தது, அது இன்று சாத்தியமாகி இருக்கிறது.

இந்த கதையை நான் சொல்லும் போது ஈழத்தில் நடைபெற்ற போரை பற்றி செவி வழியாக கேட்டு ஓரளவிற்கு தெரிந்து வைத்திருந்த எங்களுடைய தயாரிப்பாளர் கார்த்திகேயன் சந்தானம் அவர்கள் இந்த கதையை படமாக உருவாக்குவதற்கான முடிவை மேற்கொண்ட தருணம் முக்கியமானது. இது போன்ற ஒரு கதையை படமாக்குவதற்காக முயற்சியை மேற்கொண்டிருந்த போது, இந்த கதைக்குள் ஒரு வாழ்வியல் இருக்கிறது, அந்த வாழ்க்கை தமிழ் சினிமாவிற்கு புதிதாக இருக்கும், தமிழ் சினிமா புதிதான வாழ்க்கையை கொண்டாடி இருக்கிறது, இந்த படத்தையும் அந்த வகையில் கொண்டாடும் என்று நம்பிக்கையுடன் தயாரித்த கார்த்திகேயன் சந்தானத்திற்கு என் நன்றி.‌

நான் எழுதிய திரைக்கதைக்குள் கமர்ஷியல் அம்சங்கள் இருக்கிறது என்று ஊக்கப்படுத்திய கல்யாண் அவர்களுக்கும் நன்றி. இந்தப் படம் ஆர்ட் ஃபிலிம் ஆகவோ அல்லது சீரியஸ் ஃபிலிம் ஆகவோ இல்லாமல் நாம் காலம் காலமாக பார்த்த போர்ப்படங்களில் இருந்து அந்த வாழ்க்கையை சொல்லும் படமாக இது இருக்கிறது.

இந்தப் படத்தை இணைந்து தயாரித்த ஸ்பிரிட் மீடியா நிறுவனத்தின் தயாரிப்பாளர் நடிகர் ராணா அவர்களுக்கும், தமிழகம் முழுவதும் வெளியிடும் ஏஜிஎஸ் நிறுவனத்திற்கும், வெளிநாடுகளில் வெளியிடும் அஹிம்சா என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்திற்கும் என் நன்றி.

நாங்கள் நிறைய போர் படங்களை பார்த்திருக்கிறோம். ஹாலிவுட்டிலிருந்து பல திரைப்படங்கள் வெளியாகி  இருக்கின்றன. அந்த படங்களை நாம் கொண்டாடியிருக்கிறோம். அந்த திரைப்படங்களில் இரு தரப்பினரும் துப்பாக்கியால் சுடுவதையும் சுடப்படுவதையும் பார்த்திருக்கிறோம்.  இன்றைக்கு உலகம் போர் சூழலில் இருக்கிறது. தினம் நாம் போர் பற்றிய செய்திகளை பார்த்துக் கொண்டிருக்கிறோம், கேட்டுக் கொண்டிருக்கிறோம். இந்த செய்திகளில். குண்டுகளின் எண்ணிக்கையை பார்த்துக் கொண்டிருக்கிறோம்.‌ ஆனால் இதற்குப் பின்னால், குண்டு விழுகின்ற இடத்தில், அது இஸ்ரேலாக இருந்தாலும் சரி, ஈரானாக இருந்தாலும் சரி... அங்கும். மக்கள் இருப்பார்கள். அவர்களுக்கென்று ஒரு வாழ்க்கை இருக்கும். குண்டு விழுகின்ற அந்த நேரத்தில் அவர்கள் ஒரு பிறந்த நாளை கொண்டாடும் முயற்சியில் ஈடுபட்டிருக்கலாம், அவர்கள் ஒரு கல்யாணத்திற்கு ஏற்பாடு செய்திருக்கலாம், அங்கு ஒரு மரணம் நிகழ்ந்திருக்கலாம், ஏதோ ஒரு விஷயம் நிகழ்ந்திருக்கலாம். அங்கு குண்டு விழுந்த பிறகு என்னவாகும்? அந்த சூழ்நிலையை எப்படி மாற்றும்? அவர்கள் எப்படி பதட்டமடைவார்கள்? அந்த பதட்டமான வாழ்க்கை இருக்கிறதல்லவா, அப்படிப்பட்டதொரு வாழ்க்கையை சொல்லும் படம்தான் 'நீளிரா'.

நாம் போர் படங்களை பார்க்கும் போது எப்போதும் இரு தரப்பினரின் தாக்குதலை பற்றிய படங்களாக தான் பார்த்திருக்கிறோம். இந்தப் பக்கம் ஒரு ஆயிரம் துப்பாக்கி... அந்தப் பக்கம் ஒரு ஆயிரம் துப்பாக்கி...  குண்டுகள் முழங்கும், துப்பாக்கிகள் சுடும் காட்சிகளைத் தான் பார்த்திருக்கிறோம். இதற்கு நடுவில் மக்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு என்று ஒரு வாழ்க்கை இருக்கிறது. போர் என்றால் இரு தரப்பிலிருந்து சுடும் துப்பாக்கிகள் என்று மட்டும் தான் நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் நிஜம் அதுவல்ல.

போருடன் கூடிய வாழ்க்கை தான் எங்கள் வாழ்க்கை. பிறந்ததிலிருந்து என்னுடைய முழு இளமைக்கால வாழ்க்கையும் போருக்குள் தான் இருந்தது. அந்த போருக்குள் தான் நாங்கள் படித்தோம். அந்த போருக்குள் தான் எங்களுடைய சிறு வயது விளையாட்டுகள் இருந்தது. அந்தப் போர் தான் எங்களது விளையாட்டாகவும் இருந்தது. அந்தப் போருக்குள் தான் எங்களின் காதலும் இருந்தது, போருக்குள் தான் திருமணமும் இருந்தது. அந்த போர் வாழ்க்கையை தான் நாங்கள் வாழ்ந்தோம். வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு போர் என்றால் இரு தரப்பினரும் கம்பீரமாக நிற்பதை போன்று நினைப்பார்கள். ஆனால் அதுவல்ல.  போர் எங்களுடைய வாழ்க்கையில் ஒரு பகுதியாக மாறிவிட்டது.

பகுதியாக மாறிவிட்ட போரில் எங்களுடைய வாழ்க்கை எப்படி இருந்தது? அந்த வாழ்க்கையில் நிகழ்வுகள் எப்படி இருந்தது? அதைத்தான் இந்த படத்தில் நாங்கள் சொல்லி இருக்கிறோம்.

ஒரு விசயம் நடந்து விடுமோ என்ற பதட்டத்தை ஏற்படுத்துவது தான் சினிமா. உலகத்தில் அப்படியான பல படங்களை நாம் பார்த்திருக்கிறோம். 'லைஃப் இஸ் பியூட்டிஃபுல்' என்றொரு திரைப்படம். அந்தப் படம் போரை பற்றிய வலியை தான் சொல்லியது. போரின் வலியை ரத்தமாகவோ அழுகையாகவோ மட்டும் சொல்லாமல் அதற்குள் இருக்கும் வாழ்க்கையை சொல்லியது அந்தத் திரைப்படம். அப்படியானதொரு வாழ்க்கையைத்தான் நாங்கள் இந்த படத்தில் சொல்லி இருக்கிறோம்.

இந்த சூழலில் தமிழர்கள் இந்தப் படத்தை ரசிப்பார்கள் என நினைக்கிறேன். ஏனெனில் ஒரு பரபரப்பான திரில்லரை ரசிக்க கூடியவர்களாகவும், அந்த படங்களை வெற்றி பெற வைப்பவர்களாகவும் தமிழ் சினிமா ரசிகர்கள் இருக்கிறார்கள்.‌

என்னைப் பொருத்தவரை மரணத்தை விட மரண பயம் கொடுமையானது. இந்த படம் அந்த மரண பயத்தில் இருந்த வாழ்க்கையை சொல்கிறது. இப்படி ஏராளமான இரவுகளில் ஒரு நீண்ட இரவை பற்றிய படம்தான் நீளிரா.  அந்த இரவும், அந்த இரவின் படபடப்பும், அந்த மக்களின் பதற்றமும் உங்களுக்கு நெருக்கமாக இருக்கும்.

நாங்கள் தமிழகத்தில் ஈழத்தைப் பற்றி நிறைய கதைகளை கேள்விப்பட்டிருக்கிறோம். எனக்கு கோயம்புத்தூர், மதுரை உள்ளிட்ட தமிழகம் முழுவதும் உள்ள ஊர்களில் உள்ள வீடுகள் எப்படி இருக்கும் என்று தெரியும். இதில் மேல் தட்டு, நடுத்தர வர்க்கம், எளிய மக்கள் ஆகியோரின் வீடுகள் எப்படி இருக்கும் என்றும் எனக்கு தெரியும். ஆனால் என்னுடைய ஈழ மண்ணில் எங்களுடைய வீடுகள் எப்படி இருக்கும் என்பதை இந்த தமிழ் ரசிகர்களுக்கு காட்சிப்படுத்த வேண்டும் என விரும்பினேன். இதுவரைக்கும் அத்தகைய காட்சி முழுமையாக காண்பிக்கப்படவில்லை. இந்த படம் அந்த வேலையை செய்யும். ஈழத்தில் வீடுகள் எப்படி  இருக்கின்றன? அந்த வீட்டின் குசினி ( கிச்சன்) எப்படி இருக்கிறது? அவர்களுடைய வாழ்க்கை எப்படி இருக்கிறது? என்பதை இந்த படம் உங்களுக்குச் சொல்லும்.

லயோலா கல்லூரியில் நான் விசுவல் கம்யூனிகேஷன் படிக்கும் போது ஈழத்தைப்பற்றி நான் எவ்வளவு கதைகளை சொன்னாலும் மற்றவர்களால் அதனை விசுவலைஸ் செய்து பார்க்க இயலாது. ஏனெனில் அவர்கள் அதனை விசுவலாக பார்த்ததில்லை. இந்தப் படம் அந்த வாழ்க்கையை உங்களுக்கு விசுவலாக எந்தவித சமரசமும் இல்லாமல் காட்சிப்படுத்தும்.

எங்கள் ஊரில் போர் நடந்து கொண்டிருக்கும் போதே நாங்கள் படமெடுத்திருக்கிறோம். இங்கிருந்து படங்கள் வராத காலகட்டத்தில் குண்டுகள் விழுந்து கொண்டிருக்கும் தருணத்திலும் கூட நாங்கள் ஒரு விஹெச்எஸ் கேமராவில் படமெடுத்துக் கொண்டிருந்தோம். படத்தில் நடித்துக் கொண்டிருந்தவர்கள் திடீரென்று இறந்து விடுவார்கள். இருந்தாலும் படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருக்கும்.‌ அப்படி எடுக்கப்பட்ட படங்களை நாங்கள் 90களில் பார்த்திருக்கிறோம். அங்கிருந்து தொடங்கியது தான் இது போன்றதொரு கதையை உருவாக்க வேண்டும் என்ற எண்ணம்.

போர் தொடங்கும் போது வாழ்க்கை படப்படப்பாக இருக்கும், ஆனால் அதற்குள் இருக்கும் வாழ்க்கையையும் அந்த வாழ்க்கைக்குள் இருக்கும் ஒரு பதற்றத்தையும் அதற்குள் நடைபெறும் ஒரு திருமணத்தைப் பற்றியும் இந்தப் படம் பேசுகிறது.

இலங்கையில் போர் நடந்த போது பெங்களூருவில் இருந்து கிளம்பி சென்னைக்கு வந்து இங்கு நடைபெற்ற மனித சங்கிலி போராட்டத்தில் கலந்துகொண்டு அந்த மக்களுக்காக நிற்க வேண்டும் என்று வந்த ஒரு ஐடி கம்பெனி இளைஞன், பின்னாளில் இயக்குநராகி, தயாரிப்பாளராகி, எனக்கு நண்பராகவும் மாறி இந்தப் படத்தை சாத்தியப்படுத்திய கார்த்திக் சுப்புராஜுக்கு நன்றி.

பாலு மகேந்திராவிடம் உதவியாளராக பணியாற்றிய போது அவர் ஒரு முறை என்னிடம் 'உன்னுடைய முதல் படத்திலாவது நம்முடைய கதையை படமாக உருவாக்கிடு. என்னால் இறுதிவரை எடுக்க முடியாமல் போய்விட்டது.' என சொன்னார்.  இன்று அதனை சாத்தியப்படுத்துவதற்கு உதவிய ஸ்டோன் பெஞ்ச் ஸ்டுடியோ நிறுவனத்திற்கு நன்றி. இந்தப் படத்தில் நடித்த நடிகர்கள் நடிகைகள் தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவருக்கும் நன்றி,'' என்றார்.

நடிகை ரூபா கொடுவாயூர் பேசுகையில், "எம காதகி படத்திற்கு பிறகு நான் நடிக்கும் இரண்டாவது தமிழ் படம் இது. முதல் படத்தை போல் இந்த திரைப்படமும் எனக்கு ஸ்பெஷலானது. எனக்கு மட்டுமல்ல தமிழ் மக்கள் அனைவருக்கும் இந்த படம் ஸ்பெஷலானது. நமக்கு போரைப் பற்றி என்ன தெரியும் என்றால் போர் என்றால் ஆயுதம் இருக்கும், துப்பாக்கி இருக்கும், போராட்டம் இருக்கும் என தெரியும். ஆனால் அதற்குள் மக்கள் இருப்பார்கள். அவர்கள் ஒரு எமோஷனலான போரை எதிர்கொள்வார்கள். அதை பற்றி பேச நினைத்த திரைப்படம் தான் நீளிரா. போர் நடைபெற்றுக் கொண்டிருக்கும் சூழலில் ஒரு நீண்ட இரவில் நடைபெறும் சம்பவங்கள் தான் இப்படத்தின் கதை. ரசிகர்களுக்குள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நான் நம்புகிறேன்.

இந்த வாய்ப்பை வழங்கிய தயாரிப்பாளர்களுக்கும் , இயக்குநருக்கும் நன்றி. நான் கார்த்திக் சுப்புராஜ் படங்களுக்கு ரசிகை. அவர் ஒரு இயக்குநராக மட்டுமல்லாமல் அர்த்தமுள்ள படங்களை தயாரிக்கும் தயாரிப்பாளராகவும் இருக்கிறார். நீளிரா போன்ற படங்கள் மீது நம்பிக்கை வைத்து தயாரித்து வழங்கி இருக்கிறார். அதற்காக அவருக்கு இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த படத்திற்குப் பிறகு இயக்குநர் சோமிதரனுக்கு ஏராளமான பாராட்டுகள் கிடைக்கும். இந்தப் படத்தில் நான் நடித்திருக்கும் கதாபாத்திரம் குறித்து எதுவும் தற்போது பகிர்ந்து கொள்ள இயலாது. ஆனால் இந்தப் படத்தில் நான் நன்றாக நடித்திருக்கிறேன் என்று நம்புகிறேன்.‌ இந்தப் படத்தில் நடித்திருப்பது எனக்கு கிடைத்த ஆசீர்வாதமாக கருதுகிறேன்.‌

நீளிரா திரைப்படம் அனைவருக்கும் பிடிக்கும் என்று நான் நம்புகிறேன். இந்தப் படம் பார்த்துவிட்டு வீட்டிற்கு செல்லும் போதும் உங்கள் நினைவுகளில் இந்த நீளிரா இருக்கும். ஏப்ரல் மூன்றாம் தேதி திரையரங்கத்திற்கு சென்று படத்தை பார்த்து ஆதரவு தாருங்கள்,'' என்றார்.

இசையமைப்பாளர் கே பேசுகையில், "இந்தப் படத்தில் இணைந்து பணியாற்றியதில் மகிழ்ச்சி. அர்த்தமுள்ள திரைப்படத்தில் நானும் பங்களித்திருப்பதில் சந்தோஷம். இயக்குநருக்கும், தயாரிப்பாளருக்கும் வாழ்த்துகள். நீளிரா ஒரு அர்த்தமுள்ள படைப்பாக இருக்கும். மறக்க முடியாத படமாகவும் இருக்கும் என நான் நம்புகிறேன். உங்களுடைய ஆதரவிற்கு நன்றி,'' என்றார்.

நடிகர் சனந்த் பேசுகையில், "நான் சென்னையில் பிறந்து சென்னையிலேயே வளர்ந்த பையன். எனக்கு இந்த படத்தில் இருந்த வாழ்வியல் முற்றிலும் புதிதாக இருந்தது. இயக்குநர் சோமிதரன் நிறைய டாக்குமென்ட்ரி திரைப்படங்களையும் வேறு சில வீடியோக்களையும் காண்பித்தார். அங்குள்ள மக்களின் வாழ்வியலை பற்றியும் சொன்னார். அதனை கேட்டு தான் இப்படத்தில் நடித்தேன். நான் இதற்கு முன் போர் சம்பந்தமாக குறும்படம் ஒன்றில் நடித்திருக்கிறேன். இந்த படத்தில் பணியாற்றும் போது தான் நிறைய மக்களை சந்திக்க முடிந்தது. நிறைய மக்களிடம் பேசினேன். அவர்களுடைய கதைகளை கேட்டேன். அவர்களிடம் ஈழத்தைப்பற்றி நிறைய கதைகள் உள்ளது. அதை கேட்கும் போது இன்னும் நிறைய ஈழம் சம்பந்தமான திரைப்படங்கள் வெளியாக வேண்டும் என நினைக்கிறேன். விரைவில் நிறைய படங்கள் வெளியாகும் என எதிர்பார்க்கிறேன்.

இந்தப் படத்தை வெளியிடுபவர்களுக்கும் , வழங்குபவர்களுக்கும் என்னுடன் நடித்த நடிகர் நடிகைகள் தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவருக்கும் நன்றி,'' என்றார்.

நடிகர் நவீன் சந்திரா பேசுகையில், "மகிழ்ச்சியாக இருக்கிறது. நான் பல வகையான  படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறேன். ஆனால் இந்த திரைப்படம் எனக்கு மிகவும் ஸ்பெஷல். எனக்கு மட்டுமல்ல இந்தக் குழுவில் உள்ள ஒவ்வொருவருக்கும் இந்த திரைப்படம் ஸ்பெஷலானது. இந்தப் படத்தின் தயாரிப்பு பணிகளும் எனக்கு பிடித்திருந்தது. மேடைக் கலைஞர்கள், குறும்படங்களில் நடித்தவர்கள், புது முகங்கள், லண்டன், கனடா ஆகிய இடங்களில் இருந்து நடிக்க வந்தவர்கள்... இவர்களுடன் இணைந்து பணியாற்றியது புதிய அனுபவமாக இருந்தது.

இந்த படத்தில் நான் ஒரு கேப்டனாக நடித்திருக்கிறேன். இதைத்தவிர என்னுடைய கதாபாத்திரத்தை பற்றி விரிவாக எதையும் சொல்ல இயலாது. ஆனால் படம் பார்த்தால் உங்கள் அனைவருக்கும் பிடிக்கும். இந்தப் படத்திற்காக அஸ்ஸாம், மும்பை, மகாராஷ்டிரா, தமிழ்நாடு என ஒவ்வொரு கதாபாத்திரத்திற்காக ஒவ்வொரு மாநிலத்தில் இருந்தும் நடிகர்களை கவனமுடன் இயக்குநர் தேர்வு செய்தார்.

படப்பிடிப்பின் போது நடிகர்களுக்கு வழங்கப்பட்ட மரியாதை.. சந்தோஷமாக இருந்தது. நான் இதுவரை ஸ்டோன் பெஞ்ச் ஸ்டுடியோ நிறுவனத்தில் ஐந்து படங்களில் நடித்து விட்டேன். அது என்னுடைய சொந்த பட தயாரிப்பு நிறுவனம் போன்றது. இங்கு என்ன சிறப்பு என்றால், இங்கு சமத்துவம் இருக்கும். அனைவரும் சினிமா மீது பற்று கொண்டவர்களாகவே இருப்பார்கள். அதிலும் அர்த்தமுள்ள படைப்பை உருவாக்க வேண்டும் என்பதில் ஆர்வம் கொண்டவர்களாகவே இருப்பார்கள்.

நான் நடித்த காட்சிகளை இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் நிச்சயமாக பார்ப்பார், அப்போது நான் நன்றாக நடித்திருக்கிறேனா? இல்லையா? என்ற பயம் எனக்குள் இருந்து கொண்டே இருக்கும். நன்றாக நடித்திருக்கிறேன் என்று நம்புகிறேன்.

திரைப்படங்கள், இணைய தொடர் என பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கும்போது தயாரிப்பாளர் கார்த்திகேயன் சந்தானம் தொடர்பு கொண்டு இப்படத்தின் கதையை பற்றி விவரித்தார். இயக்குநர் சோமிதரனிடம் கதையை கேட்கிறேன் என்று சொன்னேன்.  கதையைக் கேட்ட பிறகுதான் தயாரிப்பாளர் கார்த்திகேயன் சந்தானத்தின் கதை தேர்வு குறித்து வியந்தேன். அவர் சரியான கதையை தேர்வு செய்திருக்கிறார். இதற்காகவே நான் பெருமிதம் கொள்கிறேன்.

இந்தப் படத்தில் நடித்திருக்கும் ஒவ்வொரு நடிகர்களும் கதாபாத்திரத்திற்காக அர்ப்பணிப்புடன் உழைத்திருக்கிறார்கள். அவர்கள் அனைவருக்கும் நன்றி.


தயாரிப்பாளர் கார்த்திகேயன் சந்தானம் பேசுகையில், "நாங்கள் தயாரிக்கும் 18-வது திரைப்படம் இது. ஆறாவது திரைப்படம் தயாரிக்கும் போது நண்பர் ஒருவர் நீங்கள் நன்றாக பேசுகிறீர்கள். ஆனால் ஆங்கிலத்தில் பேசுகிறீர்கள். அதை தமிழில் பேசலாமே என ஆலோசனை சொன்னார். அதன் பிறகு என்னை மாற்றிக் கொண்டு தமிழில் பேசி வருகிறேன். ஆனால் ஆங்கிலத்தில் பேச வேண்டியதிருக்கிறது. ஏனெனில் அப்போதுதான் பிசினஸ் செய்ய முடியும்.

நீளிரா மிகவும் ஸ்பெஷலான படம். பெருமைக்குரிய படம்.  இந்தப் படத்தை தயாரித்ததற்காக நாங்கள் தைரியமாக காலரை தூக்கி விட்டுக் கொள்வோம்.

2012ம் ஆண்டில் இங்கிலாந்தில் இருந்து இங்கு திரும்பி வந்தேன். அங்கும் மகிழ்ச்சியாக தான் இருந்தேன். வாழ்க்கையில் எப்போதும் சந்தோஷமாகத்தான் இருக்கிறேன். கார்த்திக் சுப்புராஜ் 'பீட்சா' படத்தை இயக்கி ஒரே நாளில் புகழ்பெற்றார். அதன் பிறகு தான் நண்பர்களுடன் சேர்ந்து ஒரு நாள் இயக்குநர் சோமிதரனை சந்தித்தேன்.  அவரை இதுவரை நான் இயக்குநராக பார்த்ததில்லை. பார்க்கவும் முடியாது. அவரும் என்னை தயாரிப்பாளராக பார்த்ததில்லை. பார்க்கவும் முடியாது. ஏனென்றால் நாங்கள் நல்ல நண்பர்கள்.‌
அவருடைய படத்தை நாங்கள் தயாரிப்போம் என்று நினைக்கவில்லை. அவரும் எங்களிடத்தில் கதையை சொல்வார் என்று நினைக்கவில்லை. இது ஒரு மிகப்பெரிய நீண்ட பயணம். சோமிதரன் அருமையானதொரு திரைப்படத்தை இயக்கியிருக்கிறார்.

முதலில் இது போன்ற ஒரு கதையை தேர்வு செய்து படமாக உருவாக்க வேண்டும் என்று கார்த்திக் சொன்னார். அதற்காக நாங்கள் அனைவரும் ஒன்றிணைந்து பணியாற்றினோம்.

சனந்த் சொன்னது போல் நானும் மதுரையில் பிறந்து மதுரையிலேயே வளர்ந்தவன். இந்தப் படத்தில் சொல்லப்படுவதை போல் நாங்கள் எதையும் கேட்கவில்லை. அறியவும் இல்லை. தெரியாது. நான் ஒரு இந்திய பிரஜையாக எப்படி வாழ்வேன் என்றால் காலையில் எழுந்தது முதல் இரவு உறங்கும் வரை எனக்கு விருப்பமானவர்களுடன் நேரத்தை செலவழிப்பேன். இதுதான் என் உலகம். உலகத்தில் வேறு என்ன நடந்தாலும் அதை பற்றி அதிகமாக தெரிந்து கொள்வதில் விருப்பமில்லாத நபர். ஏனெனில் நான் ஒரு யூனிக்கான இதயம் கொண்ட நபர். காலையில் எழுந்தவுடன் செய்திகள் பார்க்கும்போது நல்ல விஷயமாக இருந்தால் பரவாயில்லை, ஆனால் நெகட்டிவ் ஆகவே இருந்தால் அது என் வாழ்க்கையை பாதிக்கிறது. அந்த நாளை என்னால் இயல்பாக எதிர்கொள்ள முடியவில்லை. நான் என்னை எந்த அளவிற்கு கட்டுப்பாட்டிற்குள் வைத்துக் கொள்ள இயலுமோ அந்த அளவில்தான் பேச வேண்டும். பார்க்க வேண்டும் என நானே வரையறை வகுத்துக் கொண்டேன்.

இந்த மனநிலையில் இருந்தபோது ஒரு நாள் கார்த்திக் என்னிடம் ஒரு நிமிட குறும்படம் ஒன்றே காட்டினார். அது மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய படம். அது எனக்கு பிடித்திருந்தது. ஆனால் ஏன்? எதற்கு? என்று புரியவில்லை.  அப்புறம் கார்த்திக் அதைப்பற்றி எனக்கு விளக்கம் அளித்தார் அதன் பிறகு எனக்கு கொஞ்சம் கொஞ்சமாக புரியத் தொடங்கியது.

சினிமா என்று வந்த பிறகு நம்மால் சில விசயங்களை சொல்ல முடியும் என்ற போது.. அதனை சொல்ல வேண்டும் என நினைத்தோம். அப்படித்தான் நாங்கள் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனத்தை உருவாக்கினோம். இயக்குநர் சோமீதரன் இப்படி ஒரு கதையை சொன்னபோது அதை படமாக தயாரிக்க பெருமிதத்துடன் முன்வந்தோம்.

படத்தில் நடித்திருக்கும் ஒவ்வொருவரும் நன்றாக நடித்திருக்கிறார்கள். படத்தில் நடித்த நடிகர்கள் அனைவரும் ஒவ்வொருவரும் தங்கள் கதாபாத்திரத்தை உணர்ந்து அற்புதமாக நடித்திருக்கிறார்கள். அவர்கள் அனைவருக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.‌

இயக்குநர் சோமீ நிறைய பேசுவார், ஒளிப்பதிவாளர் பிரதீபன் பேசவே மாட்டார்.  இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்ற முதல் நாள் நாங்கள் நாகர்கோவிலுக்கு சென்றிருந்தோம். நான் -கார்த்திக் சுப்புராஜ்- கல்யாண் -பவன் -ராஜ் - என பலரும் சென்றிருந்தோம். முதல் காட்சி மிகவும் எளிமையான காட்சி. சினிமாவைப் பற்றி தெரியாதவர்கள் கூட அது மிக எளிமையான காட்சி என்று சொல்வார்கள். ஆனால் அந்தக் காட்சி முதல் டேக் ஓகே  ஆகவில்லை.  இயக்குநர் ஒன் மோர் என்றார். பிறகு மீண்டும் ஒன் மோர் என்று சொன்னார். கிட்டத்தட்ட ஐந்து முறைக்கு மேல் ஒன் மோர் சொல்லிக்கொண்டிருந்தார் . நாங்கள் அங்கு இருப்பதால் இயக்குனர் சோமீ பதட்டமடைகிறாரோ..! என நினைத்து அங்கிருந்து கிளம்பினோம். பிறகு ஐந்து நிமிடம் கழித்து மீண்டும் அங்கு வந்தபோது அதே காட்சி மீண்டும் அதே ஒன் மோர் என்று சென்று கொண்டிருந்தது. அப்போது கார்த்திக்கிடம் படத்தின் டைட்டில் நீளிராவை போல் இது நீண்டு கொண்டே போகும் போல் தெரிகிறது என்று சொன்னேன்.

ஆனால் இந்தப் படம் மிகவும் குறுகிய காலத்தில் அற்புதமாக உருவாக்கப்பட்ட படம். தொழில்நுட்ப ரீதியாகவும் தரமான படமாக உருவாகி இருக்கிறது. குறிப்பாக இசை. இசையமைப்பாளர் கே இந்தப் படத்தில் மிக சிறப்பாக பணியாற்றி இருக்கிறார். இசைதான் ஒரு காட்சியை உயிர்ப்புள்ளதாக உணர்வுபூர்வமானதாக மாற்றுகிறது. நடிகர்களின் நடிப்புத் திறனை மேம்படுத்துவது இசை தான். இசையமைப்பாளர் கே உடன் தொடர்ந்து பணியாற்ற வேண்டும் என விரும்புகிறேன்.

நவீன் சந்திரா - சன் ஆப் ஸ்டோன் பெஞ்ச் ஸ்டுடியோ. அவர் எங்களுடைய குடும்பத்தில் ஒருவர். அவருடன் நாங்கள் தொடர்ந்து பணியாற்றிக் கொண்டிருக்கிறோம். அது தொடர்பான அறிவிப்புகள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும்.

இந்த படத்தை காண்பித்தவுடன் பேராதரவு வழங்கிய ஸ்பிரிட் மீடியா நிறுவனத்தின் தயாரிப்பாளர் நடிகர் ராணாவிற்கும், தமிழகம் முழுவதும் வெளியிடும் ஏஜிஎஸ் நிறுவனத்தை சார்ந்த அர்ச்சனா கல்பாத்தி, ஐஸ்வர்யா கல்பாத்தி மற்றும் சிந்தன் அவர்களுக்கும்,  அயல்நாடுகளில் வெளியிடும் அஹிம்சா என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் விதுர்ஸ் அவர்களுக்கும் நன்றி

இன்றைய ஜென் ஸீ ரசிகர்களை திரையரங்கத்திற்கு அழைத்து வருவதற்கு அரும்பாடு பட வேண்டி இருக்கிறது. அவர்களுக்கும் இந்தப் படம் மிகவும் முக்கியமான படம். உலகெங்கும் வாழும் தமிழர்களுக்கு இது மிகவும் முக்கியமான படம். நாங்களும் இது போன்ற நல்ல திரைப்படங்களை உருவாக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறோம். அது ரசிகர்களின் கைகளில் இருக்கிறது. அனைவரும் திரையரங்கத்திற்கு வருகை தந்து இந்த படத்தை கண்டு ரசிக்க வேண்டும்,'' என்றார்.

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் பேசுகையில், "முதலில் திரைப்படங்களை இயக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய கனவாக இருந்தது. அதன் பிறகு திரைப்படங்களை தயாரிக்க வேண்டும் என்பதற்காக ஸ்டோன் பெஞ்ச் நிறுவனத்தை தொடங்கினோம். எப்படிப்பட்ட படங்களை தயாரிக்க வேண்டும் என்று நான் விரும்பினேனோ அப்படிப்பட்ட படங்களை தயாரிக்க முன்வந்தோம். பொதுவாக ஸ்டோன் பெஞ்ச் நிறுவனம் தயாரிக்கும் எல்லா படத்திற்கும் கார்த்திக் சுப்புராஜ் வழங்கும் என்று தான் இருக்கும். படத்தின் தயாரிப்பாளராக கார்த்திகேயன் சந்தானம் இருப்பார். ஆனால் முதன் முறையாக நானாக இப்படத்தின் தயாரிப்பாளர் பெயரில் என் பெயரும் இடம்பெற வேண்டும் என்று விரும்பி கேட்டேன். அப்படி ஆசைப்பட்ட திரைப்படம் இது.‌

இந்த படத்திற்கு முன் இயக்குநர் சோமீ மிகப்பெரிய டாக்குமெண்ட்ரி இயக்குநர். இலங்கையில் போர் நடக்கும் போது போரை பற்றிய ஆவண படத்தை இயக்கியவர்.‌ அவர் ஒரு ஊடகவியலாளரும் கூட. அவருடைய கதையை அவரே எழுதி இருக்கிறார். அவரிடம் இன்னும் நிறைய ஏராளமான கதைகள் உள்ளது.

எனக்கு ஈழம் சம்பந்தமாக ஒரு உணர்வுப்பூர்வமான தொடர்பு உண்டு. கார்த்திகேயன் சொன்னது போல் 'காட்சி பிழை' தான் என்னுடைய முதல் குறும்படம். அதன் மூலமாகத்தான் நான் நாளைய இயக்குநரில் தேர்வானேன்.

பொதுவாக சின்ன வயதாக இருக்கும் போது ஒரு ஏரோபிளேன் சென்றால் ... அதை பார்க்கும்போது உற்சாகமாக இருக்கும். மதுரையில் ஒரு ரிக்ஷாவில் சென்று கொண்டிருக்கும் பசங்களுக்கு ஏரோபிளேன் எப்படி மகிழ்ச்சியை அளிக்குமோ... ஒரு வீட்டின் மொட்டை மாடியில் ஒரு பிள்ளைக்கு அம்மா சோறு ஊட்டிக் கொண்டிருக்கும்போது அவர்களுடைய பார்வையில் ஏரோபிளேனை காண்பித்து எப்படி சோறு ஊட்டுவார்களோ.. இப்படி பலருக்கு ஏரோபிளேன் பறப்பது ஒரு மகிழ்ச்சியான தருணமாக இருக்கும் என்பதை காட்சிப்படுத்தினேன். அதேபோன்று ஏரோபிளேன் பறக்கும் போது ஈழத்தில் இருக்கும் பிள்ளைகளுக்கு என்ன மாதிரியான தாக்கத்தை உண்டாக்கும் என்பதுதான் அந்த குறும்படத்தில் நான் சொல்லி இருப்பேன்.

போரை பற்றிய நிறைய கிளாசிக்கல் ஃபிலிம் இருக்கிறது. 1917 என்ற படத்தை போல் போருக்குள் ஆக்சன் படங்களும் இருக்கும். லைஃப் இஸ் பியூட்டிஃபுல் என்று இயக்குநர் குறிப்பிட்டார்.

'தி பியானிஸ்ட் 'படத்தில் இரண்டாம் உலகப்போர் குறித்து நமக்கு எதுவும் தெரியாது. அந்தக் காலகட்ட வாழ்க்கை பற்றி நமக்கு எதுவும் தெரியாது. ஒரு பியானோ பிளேயரை பற்றிய படம். அதில் ஒரு காட்சி வரும். அவரால் வீட்டை விட்டு வெளியே எங்கும் செல்ல முடியாது. நீண்ட நாட்கள் கழித்து அவர் ஒரு பியானோவை பார்ப்பார். அவர் ஒரு இசைக் கலைஞர். பியானோவை பார்த்தவுடன் அதை வாசிக்க வேண்டும் என்று துடிப்பார். அதை வாசிக்க வேண்டும் என்று நினைப்பார். அப்படி வாசித்தால் அந்த ஒலி வெளியில் கேட்டு குண்டு வீச கூடும். இந்த நிலையில் அந்த இசைக் கலைஞர் பியானோ இசைக்கருவியை தொடாமல் அதை அற்புதமாக வாசிப்பது போன்ற ஒரு காட்சி இருக்கும்.‌ அது எனக்கு ஒரு அற்புதமான உணர்வை வழங்கியது. போரை பற்றிய ஒரு புரிதலை ஏற்படுத்தியது. அந்த காலகட்டத்தில் மக்களின் மனநிலை எப்படிப்பட்டது என்பதை உணர வைத்தது.‌ இது போன்ற படங்களை தயாரிக்க வேண்டும் என்று விரும்பினேன்.

சோமீ குறிப்பிட்டதைப் போல் பெங்களூரில் இருந்து சென்னைக்கு வந்து அந்த மனித சங்கிலி போராட்டத்தில் கலந்து கொண்டேன். ஈழ மக்கள் மீது எனக்கு ஒரு எம்பதி இருந்தது. அதை கலை வழியாக கொண்டு வர வேண்டும் என்றும் விரும்பினேன். சினிமா ஆயுதங்களை விட வலிமையான கலை வடிவம் என்பதை உணர்ந்து இருக்கிறேன்.‌ உங்களுடைய உணர்வுகளை வெளிப்படுத்துவது தான் கலை படைப்புகள். வசூல் என்பதையெல்லாம் கடந்து இந்த சமூகத்திற்கு சில உண்மை கதைகளை அவசியம் சொல்ல வேண்டும். நாம் எல்லா பார்த்திடாத கேட்டிராத கதைகளை சொல்ல வேண்டும் என்பதுதான் சினிமா. ரசிகர்களிடத்தில் தாக்கத்தை ஏற்படுத்துவது தான் சினிமா. அத்தகைய தருணத்தில் நான் சோமீயை சந்தித்தேன். அவருடைய எல்லா ஆவணப் படங்களையும் பார்த்தேன். பாலு மகேந்திராவிடம் உதவியாளராக பணியாற்றியவர். அவர் திரைப்படங்களை இயக்க வேண்டும் என்று நினைத்தபோது அவரிடம் இருந்து கதைகளை கேட்டோம்.

குறைந்த முதலீட்டில் நல்ல கதை இருந்தால் சொல்லுங்கள். தயாரிக்கிறோம். ஏனென்றால் அது எங்களின் கனவு என்று அவரிடம் சொன்னேன். ஈழத்தைப் பற்றிய கதையை இந்திய சினிமாவில் திரையரங்கத்திற்கு வருகை தந்து பார்க்கும் ரசிகர்களுக்காக உருவாக்க வேண்டும் என்று சொன்னேன். அவர் நிறைய கதைகளை சொல்லும்போது இந்த நீளிரா கதையையும் சொன்னார். ஒரு திருமணம் - அதற்காக இரவில் நடைபெறும் சடங்குகள் - சம்பிரதாயங்கள் என்று சொன்னார். அதைக் கேட்கும் போது மிகவும் எமோஷனலாக இருந்தது. அதே தருணத்தில் அது ஒரு திரில்லராகவும் இருந்தது. இதனை ஒரு சர்வைவல் திரில்லர் என்றும் சொல்லலாம்.

போரை பற்றிய எந்த சிந்தனையும் இல்லை என்றாலும் இந்த படம் பார்க்கும்போது இது ஒரு அசலான திரில்லர் திரைப்படம் என்ற அனுபவத்தை வழங்கும்.

தற்போது ஈரானில் போர் நடந்து கொண்டிருக்கிறது. அதனால் தமிழகத்தில் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது. அதனால் இங்கு ஒரு திருமணம் நிற்கிறது. அதனால் உலகத்தில் எங்கோ நடைபெறும் ஒரு போரின் தாக்கத்தை நம்மால் உணர முடிகிறது. இந்த சூழலில் போர் நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஒரு பகுதியில் திருமணம் எப்படி நடந்திருக்கும் என்பதை எம்மால் எளிதாக புரிந்து கொள்ள இயலும். அதுவும் இந்த திரைப்படம் சுவாரசியங்களுடன் எதிர்பாராத திருப்பங்களுடன் சொல்லப்பட்ட ஒரு கதையாக உருவாகி இருக்கிறது. குழுவினர் அனைவரும் கடுமையாக உழைத்திருக்கிறார்கள்.  நடித்த நடிகைகள் நடிகர்கள் பணியாற்றிய தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவரும் தங்களுடைய சிறப்பான பங்களிப்பை வழங்கி இருக்கிறார்கள்.

இந்தத் திரைப்படத்தின் ஏப்ரல் மூன்றாம் தேதி அன்று திரையரங்குகளில் வெளியிடுகிறோம். தமிழ் ரசிகர்களுக்கு இந்த படம் நிச்சயம் பிடிக்கும் என்று உறுதியாக நம்புகிறேன்,'' என்றார்.