-

Loading latest news...

பிரபல கேமராமேனும் தயாரிப்பாளருமான ரவியாதவ் பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாடிய "ரஞ்சன்" படக்குழு

 பிரபல கேமராமேனும் தயாரிப்பாளருமான ரவியாதவ் பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாடிய "ரஞ்சன்" படக்குழு.



இயக்குனர் தயாரிப்பாளர் நடிகர் தியாகராஜன் இயக்கத்தில் டாப் ஸ்டார் பிரஷாந்த் நடிப்பில் "ரஞ்சன்" படத்தின் படப்பிடிப்பு பரபரப்பாக நடைபெற்று வருகிறது.


இந்த படத்தில் சத்யராஜ், தேவயானி, ஆர்.கே.சுரேஷ், மோகன்ராம், ஆதிரா, மானஸ்வி, ஆதேஷ்பாலா, சந்தோஷ்பிரபாகர்,மோகன்லால் உட்பட பலர் நடிக்கிறார்கள்.


பிரபல தயாரிப்பாளர் கதிரேசன் மகன் ஹரியும், நடிகை தேவயானி மகள் பிரியங்காவும் இளம் ஜோடியாக அறிமுகம் ஆகிறார்கள்.


இளைஞர்களுக்கு போக்சோ சட்டத்தின் வீரியத்தை சொல்லும் விதமாக பரபரப்பாக கோர்ட் ஷூட்டிங் நடக்கும் போது கேமராமேன் ரவியாதவ் பிறந்த நாள் சர்ப்ரைஸ் நிகழ்வு நடைபெற்றது.


திடீரென செட்டுக்கு பெரிய கேக் வரவழைக்கப்பட்டு அனைத்து நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞ்ர்கள் முன்னிலையில் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. 


பரபரப்பாக நடைபெறும் இந்த படத்தில் சொல்லப்படும் கருத்து சமூகத்தில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Vishwanath & Sons Set For Grand Worldwide Release On August 14th

 *சூர்யாவின் ‘விஸ்வநாத் & சன்ஸ்’ ஆகஸ்ட் 14ஆம் தேதி உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியாகிறது !!*



சூர்யா மற்றும் வெங்கி அட்லூரி ( Venky Atluri) கூட்டணியில் உருவாகியுள்ள ‘விஸ்வநாத் & சன்ஸ்’ திரைப்படம் வரும் ஆகஸ்ட் 14ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாகிறது. குடும்ப உணர்வுகள், நகைச்சுவை மற்றும் மனதை வருடும் தருணங்கள் நிறைந்த முழுமையான ஃபேமிலி என்டர்டெய்னராக இப்படம் உருவாகியுள்ளது.


பிளாக்பஸ்டர் இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கியுள்ள இப்படத்தை சூர்யதேவர நாக வம்ஷீ மற்றும் சாயி சௌஜன்யா தயாரித்துள்ளனர். டீசர் மற்றும் டைட்டில் அறிவிப்பு வெளியான தருணத்திலிருந்தே ரசிகர்கள் மத்தியில் படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.


குறிப்பாக, சூர்யா ஒரு குழந்தையுடன் இடம்பெற்றிருந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள், நடிகர் சூர்யாவின் பழைய வசீகரமிக்க நடிப்பு பாணியை மீண்டும் நினைவூட்டியதுடன் குடும்ப ரசிகர்களிடையே உடனடி வரவேற்பைப் பெற்றது.


‘வாத்தி’, ‘லக்கி பாஸ்கர்’ போன்ற வெற்றி படங்களை தொடர்ந்து இயக்குநர் வெங்கி அட்லூரி, இந்தப் படத்தின் மூலம் குடும்ப உறவுகள், உணர்ச்சி மிக்க கதை சொல்லல் மற்றும் மனதை கவரும் தருணங்களுடன் ஒரு ஃபீல் குட் எண்டர்டெய்னரை வழங்க உள்ளார்.


இப்படத்தில் மமிதா பைஜு, ராதிகா சரத்குமார், ரவீனா டாண்டன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைக்க, நிமிஷ் ரவி ஒளிப்பதிவு செய்துள்ளார். நவீன் நூலி படத்தொகுப்பு பணிகளை கவனித்துள்ள நிலையில், பங்களன் தயாரிப்பு வடிவமைப்பாளராக பணியாற்றியுள்ளார்.


இந்த ஆண்டின் மிகவும் நேசிக்கப்படும் குடும்ப பொழுதுபோக்கு திரைப்படங்களில் ஒன்றாக ‘விஸ்வநாத் & சன்ஸ்’ உருவாகும் என எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.


தமிழ்நாட்டில் இப்படத்தை திங்க் ஸ்டூடியோஸ் நிறுவனம் வெளியிடுகிறது. இதன் மூலம் மாநிலம் முழுவதும் படத்திற்கு வலுவான திரையரங்கு வெளியீடு கிடைக்க உள்ளது.


சூர்யாவின் ‘விஸ்வநாத் & சன்ஸ்’ படத்தை ஆகஸ்ட் 14ஆம் தேதி திரையரங்குகளில் கொண்டாடலாம்.


*தொழில்நுட்பக் குழு:*


எழுத்து & இயக்கம் : வெங்கி அட்லூரி

தயாரிப்பாளர்கள் : சூர்யதேவர நாக வம்ஷீ & சாயி சௌஜன்யா

இசை : ஜி.வி. பிரகாஷ் குமார்

ஒளிப்பதிவு : நிமிஷ் ரவி

படத்தொகுப்பு : நவீன் நூலி

தயாரிப்பு வடிவமைப்பாளர் : பங்களன்

நிர்வாக தயாரிப்பாளர் : யலமஞ்சிலி கோபால கிருஷ்ணா (நானி)

சண்டை பயிற்சி : V. வெங்கட்

தயாரிப்பு நிறுவனங்கள் : சிதாரா எண்டர்டெயின்மெண்ட்ஸ் & ஃபார்ச்சூன் ஃபோர் சினிமாஸ்

வழங்குபவர் : ஸ்ரீகரா ஸ்டூடியோஸ்


*‘Vishwanath & Sons Set For Grand Worldwide Release On August 14th*


Suriya & Venky Atluri’s ‘Vishwanath & Sons’ Gears Up To Deliver a Perfect Family Entertainer This Independence Day Weekend.


Suriya’s much-awaited family drama Vishwanath & Sons is officially set for a grand worldwide theatrical release on August 14th. Directed by blockbuster filmmaker Venky Atluri and produced by Suryadevara Naga Vamsi & Sai Soujanya, the film is expected to offer audiences a wholesome entertainer packed with emotions, humour and heartwarming family moments.


Ever since the teaser & title announcement, the film has created tremendous excitement among audiences. The first look posters featuring Suriya alongside a child brought back the actor’s vintage charm and instantly connected with family audiences.


After delivering back-to-back successful films like Vaathi and Lucky Baskhar, director Venky Atluri once again promises a feel-good emotional entertainer with strong family values and memorable storytelling.


The film stars Mamitha Baiju, Radhika Sarathkumar, Raveena Tandon and others in key roles. Music is composed by G. V. Prakash Kumar, cinematography is by Nimish Ravi, editing by Navin Nooli and production design by Banglan.


The expectations are soaring high for Vishwanth & Sons to emerge as one of the most loved family entertainers of the year.


The film will be distributed in Tamil Nadu by Think Studios, ensuring a strong theatrical release across the state.


*Crew:*


Written and Directed by Venky Atluri

Producers: Suryadevara Naga Vamsi & Sai Soujanya

Music: G.V. Prakash Kumar

Director of Photography: Nimish Ravi

Editor: Navin Nooli

Production Designer: Banglan

Executive Producer: Yalamanchili Gopala Krishna (Nani)

Fight Master: VVenkat

Banners: Sithara Entertainments & Fortune Four Cinemas

Presenter: Srikara Studios

கேன்ஸ் திரைவிழாவில் மிரட்டிய “தாழ் திறவா” – திகில் கிளப்பும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியீடு*

 *கேன்ஸ் திரைவிழாவில் மிரட்டிய “தாழ் திறவா” – திகில் கிளப்பும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியீடு*



*அமானுஷ்ய மர்மங்களுடன் வரும் “தாழ் திறவா” – ரசிகர்களை ஈர்க்கும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள்!*


*வரவேற்பைக் குவிக்கும் “தாழ் திறவா” ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் !!*


*கேன்ஸ் திரைவிழாவில் கவனம் ஈர்த்த ஹாரர் திரில்லர் “தாழ் திறவா” பட டீசர் !!*


திகில் மற்றும் மர்மம் கலந்த கதைக்களத்தில் உருவாகி வரும் “தாழ் திறவா” திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன.


உலகளவில் திரை ரசிகர்களால் கொண்டாடப்படும் கேன்ஸ் திரைப்பட விழாவில், “தாழ் திறவா” படத்தின் டீசர் திரையிடப்பட்டு பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. Barman Pictures தயாரிப்பில், பரணி சேகரன் இயக்கத்தில், ஆதவ் கண்ணதாசன் மற்றும் வாணி போஜன் நடித்துள்ள இப்படம், மாறுபட்ட களத்தில் உருவாகும் ஹாரர் திரில்லராக அமைந்துள்ளது.


இப்படத்தின் டீசர் மே 19ஆம் தேதி கேன்ஸ் திரைப்பட விழாவின் இந்தியன் பவிலியனில் திரையிடப்பட்டு ரசிகர்களிடம் பாராட்டுகளை பெற்றுள்ளது. உலகளவில் மிக உயர்ந்த மதிப்பும் கவனமும் பெற்ற கேன்ஸ் திரைவிழாவில் ஒரு தமிழ்ப்படத்தின் டீசர் திரையிடப்பட்டு வரவேற்பைப் பெறுவது, தமிழ் சினிமாவிற்கே பெருமை சேர்க்கும் முக்கிய தருணமாக பார்க்கப்படுகிறது.


ஒரு கிராமத்தில் கண்டெடுக்கப்படும் பழமையான எழுத்துக்கள் மற்றும் அதன் பின்னணியில் மறைந்திருக்கும் மர்மமான ஆபத்துகளே இப்படத்தின் மையக் கதையாக அமைந்துள்ளது. தமிழில் அகழ்வாராய்ச்சியை மையமாகக் கொண்டு, அதனுடன் ஹாரர் மற்றும் அமானுஷ்ய அம்சங்களை இணைத்து உருவாகும் அரிய முயற்சியாக இப்படம் உருவாகியுள்ளது.


இன்று தமிழ் ரசிகர்களுக்காக இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளன.


வெளியான இரண்டு போஸ்டர்களிலும் திகில் நிறைந்த காட்சிகள் ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டியுள்ளன. முதல் போஸ்டரில், இருள் சூழ்ந்த அறையில் சுவரிலிருந்து நீளும் மர்மக் கைகள் வாணி போஜனை இழுத்துச் செல்ல முயல, அவரைக் காப்பாற்ற ஆதவ் கண்ணதாசன் பதட்டத்துடன் ஓடி வருவது போன்ற காட்சி இடம் பெற்றுள்ளது.


இரண்டாவது போஸ்டரில், பழமையான மாளிகை, மர்மம் நிறைந்த சூழல், அமானுஷ்ய சம்பவங்களை கண்டு அதிர்ச்சியடையும் குழந்தைகள் மற்றும் ஒரு ரகசிய கதவை திறக்க முயலும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன. பயத்துடனும் பதட்டத்துடனும் நிற்கும் கதாபாத்திரங்களின் தோற்றம், இப்படம் வித்தியாசமான ஹாரர் அனுபவத்தை தரப்போகிறது என்பதை உணர்த்துகிறது.


இப்படத்தில் ஆதவ் கண்ணதாசன், வாணி போஜன்ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளதுடன், சுரேஷ் மேனன், சுப்பு பஞ்சு, ஷ்யாம் பிரசாத் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். மேலும் குழந்தை நட்சத்திரங்களான லிஷா மற்றும் லலித் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் இடம்பெற்றுள்ளனர்.


படப்பிடிப்பு நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது இறுதிக்கட்ட பணிகள் பரபரப்பாக நடைபெற்று வருகின்றன. சர்வதேச அளவில் கவனம் பெற்றுள்ள இப்படத்தின் டீசர் மற்றும் இசை வெளியீடு விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகவுள்ளது.


தொழில்நுட்பக் குழு :


தயாரிப்பு - பார்மன் பிக்சர்ஸ்

இணை தயாரிப்பாளர் - விவேக் கே.ஆர்

கதை, திரைக்கதை, இயக்கம் - பரணி சேகரன்

இசை - ஓஷோ வெங்கட்

ஒளிப்பதிவு - சாலமன் போஸ் டி.எஸ் / ஜபெஸ் கே கணேஷ்

கலை இயக்கம் - K.A. ராகவ குமார்

எடிட்டிங் - மணிகண்டன் எஸ்

ஆடை வடிவமைப்பு - சுகிர்தா பி

உடை அலங்காரம் - கோபால்

மேக்கப் - வினோத் சுகுமாரன்

சண்டைக்காட்சிகள் - ரக்கர் ராம்

VFX - சோசோ ஸ்டுடியோ

VFX - மேற்பார்வை - வெங்கடேஷ்

SFX - சிங்க் சினிமா

DI - ஃபயர்ஃபாக்ஸ் ஸ்டுடியோஸ்

தயாரிப்பு மேற்பார்வை - சௌந்தரராஜன் / தமிழ்ச்செல்வன்

தயாரிப்பு நிர்வாகம் - முகேஷ் ஷர்மா

விளம்பர வடிவமைப்பு - நெக்ஸ்ட்ஜென் ஸ்டுடியோ

மக்கள் தொடர்பு - யுவராஜ்

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய “கான் சிட்டி” வரும் ஜூன் 26 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது !!*

 *பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய “கான் சிட்டி” வரும் ஜூன் 26 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது !!*



“கான் சிட்டி” திரைப்படத்தின் டீசர், முதல் மற்றும் இரண்டாம் சிங்கிள் பாடல்கள் ஏற்கனவே ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றிருந்த நிலையில், தற்போது வெளியாகியுள்ள ரிலீஸ் தேதி அறிவிப்பு ரசிகர்களை மேலும் உற்சாகப்படுத்தியுள்ளது. அர்ஜூன் தாஸ் நடிப்பில் உருவாகியுள்ள “கான் சிட்டி” திரைப்படம் வரும் ஜூன் 26 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதனை ஒரு அதிரடி போஸ்டருடன் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.


பவர் ஹவுஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் ஹரிஷ் துரைராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் அர்ஜூன் தாஸ், அன்னா பென், யோகி பாபு, வடிவுக்கரசி உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். பட அறிவிப்பின் ஆரம்பத்திலிருந்தே இப்படத்தின் வித்தியாசமான கதைக்களம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த நிலையில், வெளியான டீசரும் அதற்கான எதிர்பார்ப்பை அதிகரித்தது.


குறிப்பாக “ரா ரா ரங்கையா” முதல் சிங்கிள் பாடல் வெளியானவுடனே சமூக வலைதளங்களில் வைரலானது. அதைத்தொடர்ந்து வெளியாகிய “நான் தான் கிங்கு” பாடலும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. ஷான் ரோல்டன் இசையில் உருவான இந்தப் பாடல்கள், அதன் தனித்துவமான மேக்கிங் , ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருந்தது.


“கான் சிட்டி” படம் ஒரு மிடில் கிளாஸ் குடும்பத்தை மையமாக வைத்து பரபரப்பான கமர்ஷியல் எண்டர்டெயினராக உருவாகியுள்ளது. புதுமையான கதைக்களத்தில் உருவாகும் “கான் சிட்டி” படம், நகர வாழ்க்கையில் கடனில் சிக்கித் தவிக்கும் ஒரு மிடில் கிளாஸ் குடும்பத்தின் கதையை மையமாகக் கொண்டு, குடும்ப உணர்வுகள், நகைச்சுவை, பரபரப்பு ஆகிய அனைத்தும் கலந்த ஒரு முழுமையான ஃபேமிலி என்டர்டெயினராக உருவாகியுள்ளது.


மங்களூர், சென்னை, மும்பை உள்ளிட்ட பல பகுதிகளில் படமாக்கப்பட்டுள்ள இந்தப் படத்தின் டிஜிட்டல் உரிமையை Netflix நிறுவனம் கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.


டீசர், முதல் மற்றும் இரண்டாம் சிங்கிள் பாடல்கள் என தொடர்ந்து வெளியாகிய ஒவ்வொரு அப்டேட்டும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில், தற்போது வெளியான ஜூன் 26 ரிலீஸ் தேதி அறிவிப்பு “கான் சிட்டி” படத்தின் மீதான எதிர்பார்ப்பை இன்னும் அதிகரித்துள்ளது.


தொழில்நுட்ப குழு


எழுத்து, இயக்கம்: ஹரிஷ் துரைராஜ்

தயாரிப்பு: பவர் ஹவுஸ் பிக்சர்ஸ்

ஒளிப்பதிவு: அரவிந்த் விஸ்வநாதன்

எடிட்டிங்: அருள் மோசஸ்

இசை: ஷான் ரோல்டன்

கலை இயக்கம்: ராஜ் கமல்

உடை வடிவமைப்பு: நவா ராம்போ ராஜ்குமார்

ஸ்டண்ட்: ஆக்ஷன் சந்தோஷ்

மக்கள் தொடர்பு: யுவராஜ்

Kajal Aggarwal and Shreyas Talpade’s ‘The India Story’ Teaser To Be Out Soon; Film Set For July 24 Release*

 *காஜல் அகர்வால் மற்றும் ஷ்ரேயாஸ் தல்படே நடிக்கும் 'தி இந்தியா ஸ்டோரி (The India Story) படத்தின் டீசர் விரைவில் வெளியீடு : ஜூலை 24ஆம் தேதி திரைப்படம் வெளியாகிறது*



*MIG புரொடக்ஷன் & ஸ்டுடியோஸ் நிறுவனத்துடன் இணைந்து ஜீ ஸ்டுடியோஸ் இந்த திரைப்படத்தை வழங்குகிறது* .


அனைவரது கவனத்தையும் கவரும் வகையில் பிரத்யேக போஸ்டரை வெளியிட்டதை தொடர்ந்து, தற்போது 'தி இந்தியா ஸ்டோரி- The India Story ' படத்தின் தயாரிப்பாளர்கள்- அப்படத்தின் டீசர் விரைவில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். 

 

காஜல் அகர்வால், ஷ்ரேயாஸ் தல்படே ஆகியோர் முதன்மையான கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் இந்த சமூக மற்றும் தேசிய அளவிலான திரைப்படம்.. அதன் விறுவிறுப்பான கதைக் களம் மற்றும் ஈர்க்கக்கூடிய காட்சி அமைப்புகளுக்காக ஏற்கனவே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது.


MIG புரொடக்ஷன் & ஸ்டுடியோஸ் உடன் இணைந்து ஜீ ஸ்டுடியோஸ் வழங்கும் இந்த திரைப்படம் எதிர்வரும் ஜூலை மாதம் 24 ஆம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.


 சேட்டன் DK இயக்கத்தில், சாகர் B. ஷிண்டே கதை எழுதி தயாரித்துள்ள ‘தி இந்தியா ஸ்டோரி : ஸ்லோ பாய்சன் இன் ப்ராக்ரஸ்‘ (The India Story: Slow Poison in Progress) திரைப்படம், ரசாயன பொருட்களின் தவறான பயன்பாட்டினால் ஏற்படும் ஆபத்தான பக்க விளைவுகளை, குறிப்பாக பூச்சிக்கொல்லி மருந்து சார்ந்த விவசாயத்தில், அதன் தாக்கம் மற்றும் பொது சுகாதாரத்தின் மீதான விளைவுகளை பற்றி இப்படம் உரக்க பேசுகிறது. சமீபத்தில் வெளியான இப்படத்தின் போஸ்டர்- இப்படம் கையாளவிருக்கும் அதே தருணத்தில் மிகவும் முக்கியமானதும் மனதை உருக்கும் வகையில் அமைந்திருக்கும் விஷயங்களை பற்றிய ஒரு முன்னோட்டத்தை வழங்கியது.


ஒரு தனி நபரின் அல்லது ஒரு குடும்பத்தின் கதை என்ற எல்லையைக் கடந்து.. இப்படம் நாடு முழுவதும் உள்ள எண்ணற்ற மக்களின் வாழ்க்கையை பாதிக்கும் ஒரு மிகப்பெரிய நெருக்கடியை எதிரொலிக்கிறது. தொழில் துறை சார்ந்த அலட்சியத்தால் ஏற்படும் மறைமுகமான ஆபத்துகளையும்.. அது தொடர்பான விழிப்புணர்வு மற்றும் பொறுப்புணர்விற்கான அவசர தேவையையும்... இப்படம் முன்னிலை படுத்த முயற்சிக்கிறது.


தி இந்தியா ஸ்டோரி (The India Story) படத்தின் மூலம் விவரிக்கப்படும் அதி தீவிரமான உலகத்தை.. ரசிகர்கள் மேலும் அழுத்தமாக புரிந்து கொள்ளும் வகையில் டீசர் இருக்கும் என்றும், இது இப்படத்தின் முக்கியத்துவம் வாய்ந்த கதைக்களம் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரிக்கும் என்றும் தயாரிப்பாளர்கள் சூசகமாக தெரிவித்துள்ளனர். காஜல் அகர்வால் மற்றும் ஷ்ரேயாஸ் தல்படே ஆகியோர் முதன் முறையாக திரையில் இணைந்து நடித்துள்ளனர். இவர்கள் இருவரும் தங்களுடைய அழுத்தமான நடிப்பின் மூலம் கதைக்கு உணர்வு பூர்வமான ஆழத்தையும், தீவிரத்தையும் ரசிகர்களுக்கு கடத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


சுமித் பாகடே -அனிதா ஜாதவ்- விநாயக் சைதானி- கல்பேஷ் ஷா - தேவ்யானி கொராடே மற்றும் பிரேம் ஜோஷி ஆகியோர் இப்படத்திற்கு இணை தயாரிப்பாளர்களாக பங்களிப்பு செய்துள்ளனர். நிஷாந்த் பக்வத் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு மங்கேஷ் தாக்டே இசையமைத்திருக்கிறார். ஆஷிஷ் மாத்ரே படத்தொகுப்பு பணிகளையும், ஷகீல் அஜாமி பாடலாசிரியராகவும், அன்மோல் பாவே ஒலி வடிவமைப்பாளராகவும் பணியாற்றி இருக்கிறார்கள். மேலும் இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது. இதனை ஜீ ஸ்டுடியோஸ் உலக அளவில் வெளியிடுகிறது


*Kajal Aggarwal and Shreyas Talpade’s ‘The India Story’ Teaser To Be Out Soon; Film Set For July 24 Release*


*Presented by Zee Studios in association with MIG Production & Studios*


After unveiling an intense and thought-provoking poster, the makers of 'The India Story' have announced that the teaser of the film will be out soon. Starring Kajal Aggarwal and Shreyas Talpade in lead roles, the socio-national drama has already started creating buzz for its gripping theme and striking visuals. Presented by Zee Studios in association with MIG Production & Studios, the film is scheduled to release in cinemas on July 24, 2026.


Directed by Chettan DK and written and produced by Sagar B Shinde, The India Story: Slow Poison in Progress explores the alarming consequences of chemical misuse, particularly in pesticide farming and its impact on public health. The recently released poster offers a glimpse into the disturbing yet important subject that the film aims to address.


Moving beyond the story of an individual or a family, the narrative reflects a much larger crisis affecting countless lives across the country. The film intends to highlight the hidden dangers of industrial negligence and the urgent need for awareness and accountability.


The makers have hinted that the teaser will offer audiences a deeper look into the hard-hitting world of The India Story, building anticipation around the film’s socially relevant premise. Kajal Aggarwal and Shreyas Talpade, coming together on screen for the first time, are expected to bring emotional depth and intensity to the narrative with their impactful performances.


Backed by co-producers Sumit Bagade, Anita Jadhav, Vinayak Saidani, Kalpesh Shah, Devyani Khorate, and Prem Joshi, and further elevated by the work of DOP Nishant Bhagwat, music composer Mangesh Dhakde, editor Ashish Mhatre, lyricist Shakeel Azami, and sound designer Anmol Bhave, The film is all set to release in Hindi, Telugu and Tamil language.A Zee Studios Worldwide Release

மெகா ஸ்டார்' சிரஞ்சீவி நடிக்கும் #Chiru158 படத்தின் படப்பிடிப்பு நாளை தொடங்குகிறது*

 *மெகா ஸ்டார்' சிரஞ்சீவி நடிக்கும் #Chiru158 படத்தின் படப்பிடிப்பு நாளை தொடங்குகிறது*



'மெகா ஸ்டார்' சிரஞ்சீவி - இயக்குநர் பாபி கொல்லி - கே வி என் புரொடக்ஷன்ஸ்- கூட்டணியில் தயாராகும்' #ChiruBobby2- #Chiru158' திரைப்படத்தின் பிரம்மாண்டமான தொடக்க விழாவில் 'பவர் ஸ்டார்' பவன் கல்யாண் மற்றும் நாகபாபு ஆகியோர் கலந்து கொண்டனர். இப்படத்தின் படப்பிடிப்பு நாளை முதல் தொடங்குகிறது


திரையுலகில் சில கூட்டணிகள் உடனடியாக பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் 'மெகா ஸ்டார்' சிரஞ்சீவியும் , வெற்றிகரமான திரைப்பட இயக்குநர் பாபி கொல்லியும் மீண்டும் கூட்டணி அமைத்திருப்பது.. ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தும் முக்கிய நிகழ்வுகளில் ஒன்று என்பதில் ஐயமில்லை. இவர்களின் கூட்டணியில் உருவான 'வால்டர் வீரய்யா' திரைப்படம்- சிரஞ்சீவி அவரது உச்சகட்டமான 'மாஸ்' அவதாரத்தில் வெளிப்படுத்தி, ஒரு மிகப்பெரிய பிளாக் பஸ்டர் ஹிட் வெற்றி படமாக அமைந்தது. தற்போது இந்த ஜோடி மற்றொரு பிரம்மாண்டமான படத்திற்காக மீண்டும் இணைந்துள்ளனர்.


#ChiruBobby2 / #Chiru158 என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இந்தத் திரைப்படத்தை கே வி என் புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில் வெங்கட் கே. நாராயணா தயாரிக்கிறார். தமிழ், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் பிரம்மாண்டமான பட்ஜெட் படங்களை தயாரித்து வழங்கிய பிறகு கே வி என் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தெலுங்கில் தயாரிக்கும் முதல் திரைப்படம் இதுவாகும்.


இந்த படத்தைப் பற்றிய தொடர்ச்சியான அறிவிப்புகள் மூலம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய நிலையில்.. இன்று அப்படத்தின் தொடக்க விழா பிரம்மாண்டமான பூஜையுடன் ஹைதராபாத்தில் நடைபெற்றது. இதில் 'பவர் ஸ்டார்' பவன் கல்யாண்- நாக பாபு ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு சிறப்பித்தனர். இதன் காரணமாக இந்த விழா 'மெகா' நிகழ்வாக மாறியது. இந்த மூன்று மெகா நட்சத்திரங்களும் ஒரே மேடையில் தோற்றமளித்தது ... ரசிகர்களுக்கு ஒரு கண் கொள்ளா காட்சியாக அமைந்தது.


பவன் கல்யாண் 'கிளாப் போர்டு' - ( Clap Board) அடித்து, படப்பிடிப்பை தொடங்கி வைத்தார். சுஸ்மிதா கொணிதெல கேமராவை இயக்கி வைத்தார். முதல் காட்சியை இயக்கும் கௌரவத்தை வி வி விநாயக் ஏற்றார். பி. கோபால் - கோதண்டராமி ரெட்டி மற்றும் நாகபாபு ஆகியோர் இப்படத்தின் திரைக்கதையை தயாரிப்பு குழுவினரிடம் வழங்கினர். இவ்விழாவில் திரையுலகை சார்ந்த பல முக்கிய இயக்குநர்களும் , தயாரிப்பாளர்களும் கலந்து கொண்டு படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தனர். கே வி என் புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தை சார்ந்த லோகித் மற்றும் அவரது குழுவினரும் இவ்விழாவில் பங்கேற்றனர்.


வெகுஜன மக்களின் ரசனையை மிகத்துல்லியமாக புரிந்து கொண்ட இயக்குநர் பாபி கொல்லி - இம்முறை இன்னும் பிரம்மாண்டமான ஒரு கதையை உருவாக்கியுள்ளார். இது மிகப்பெரிய வீச்சையும்.. தீவிரத்தையும்.. கண் கவர் காட்சிகளையும் வழங்கும் என உறுதி அளிக்கிறது. பல ஆண்டுகளாக எண்ணற்ற மறக்க முடியாத கதாபாத்திரங்களில் நடித்து புகழ்பெற்ற 'மெகா ஸ்டார்' சிரஞ்சீவி - இத்திரைப்படத்தில் தனது கதாபாத்திரத்தில் தீவிரத் தன்மையுடன் தோன்ற உள்ளார். இதற்காக அவர் ஜிம்மில் உடற்பயிற்சி செய்யும் வீடியோ ஒன்று அண்மையில் வெளியானது. இதில் அவரது உடல் தோற்றத்தில் ஏற்பட்டுள்ள மாற்றத்தையும் வெளிப்படுத்தியது. அவரது இந்த முயற்சி.. இந்த திரைப்படத்திற்காக அவர் எந்த அளவு அர்ப்பணிப்புடன் உழைத்து வருகிறார் என்பதை அனைவருக்கும் உணர்த்துகிறது.


இந்த திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க.. மலையாள நடிகை அனஸ்வரா ராஜன் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்.


#ChiruBobby2- திரைப்படத்தில் மிகச்சிறந்த தொழில்நுட்ப கலைஞர்களும் இணைந்துள்ளனர். விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவு செய்ய, எஸ். தமன் இசையமைக்கிறார். அவினாஷ் கொல்லா தயாரிப்பு வடிவமைப்பாளராகவும், ஆண்டனி ரூபன் பட தொகுப்பாளராகவும் பொறுப்பேற்றிருக்கிறார்கள். திரைக்கதையை கோனா வெங்கட் மற்றும் கே. சக்கரவர்த்தி ரெட்டி எழுதியுள்ளனர். கூடுதல் திரைக்கதையை எழுத்தாளர்களான ஹரி மோகன கிருஷ்ணா மற்றும் வினீத் பொட்லூரி ஆகியோர் எழுதியுள்ளனர். பானு- நந்து ஆகியோர் நகைச்சுவை பகுதிக்கான உரையாடல்களை எழுதியுள்ளனர்.


இப்படத்தின் வழக்கமான படப்பிடிப்பு நாளை முதல் ஹைதராபாத்தில் தொடங்குகிறது.


நடிகர்கள் : 'மெகா ஸ்டார்' சிரஞ்சீவி , அனஸ்வரா ராஜன்


தொழில்நுட்பக் குழு :


எழுத்து& இயக்கம் : பாபி கொல்லி


தயாரிப்பாளர் : வெங்கட் கே. நாராயணா


தயாரிப்பு நிறுவனம் : கே வி என் புரொடக்ஷன்ஸ்


இசை : எஸ். தமன்


திரைக்கதை : கோனா வெங்கட் & கே. சக்கரவர்த்தி ரெட்டி


கூடுதல் திரைக்கதை : ஹரி மோகன கிருஷ்ணா & வினீத் பொட்லூரி


ஒளிப்பதிவு : விஜய் கார்த்திக் கண்ணன்

 

படத்தொகுப்பு : ஆண்டனி ரூபன்


தயாரிப்பு வடிவமைப்பு : அவினாஷ் கொல்லா

 

VFX மேற்பார்வையாளர் : யுகாந்தர் .டி


வசனங்கள் - பானு & நந்து

 

நிர்வாக தயாரிப்பாளர் : சரண்யா பொட்லா


மக்கள் தொடர்பு : யுவராஜ்


மார்க்கெட்டிங் : ஹேஷ்டேக் மீடியா


*A Mega Launch In The Mega Presence Of Power Star Pawan Kalyan & Nagababu For Megastar Chiranjeevi, Most Successful Director Bobby Kolli, Leading Production House KVN Productions’ #ChiruBobby2 / #Chiru158, Regular Shoot Commences Tomorrow*


Some collaborations create instant excitement, and the reunion of Megastar Chiranjeevi with successful filmmaker Bobby Kolli is undoubtedly one of them. Their first outing, Waltair Veerayya, was a sensational blockbuster that showcased Chiranjeevi in peak mass form. Now, the duo is back with another massive project- #ChiruBobby2 / #Chiru158, to be mounted on a prestigious manner by producer Venkat K Narayana under the KVN Productions banner. The film also marks KVN Productions’ maiden Telugu venture after delivering several big-scale projects in Kannada, Tamil, and Hindi.


After back-to-back announcements that fuelled tremendous buzz, the film has been officially launched today with a grand pooja ceremony. The event turned truly mega with the presence of Power Star Pawan Kalyan and Nagababu, who graced the occasion as chief guests. It was a visual delight for fans to witness the mega trio sharing the stage. Pawan Kalyan sounded the clapboard, while Sushmita Konidela switched on the camera. VV Vinayak has done the honours of directing the first shot. B Gopal, Kodandarami Reddy, and Nagababu handed over the script to the makers. The event also saw the presence of several prominent directors and producers. Lohith from KVN Productions, along with the team, also attended the event.


Director Bobby Kolli, who understands the pulse of the masses like few others, crafted an even bigger story this time, promising scale, intensity, and spectacle. Chiranjeevi, known for countless iconic characters over decades, will be seen in one of his most intense roles yet. His recent gym session video, showcasing his remarkable fitness transformation, already hints at the dedication he is pouring into the film.


Malayalam actress Anaswara Rajan has been finalized for a crucial role in the film.


#ChiruBobby2 boasts a powerhouse technical lineup. The in-form composer S Thaman is scoring the music, while acclaimed cinematographer Vijay Karthik Kannan is crafting the film’s rich visual palette. Production design is helmed by Avinash Kolla, with editing by Antony Ruben. The screenplay is penned by Kona Venkat and K Chakravarthy Reddy, supported by additional screenplay writers Hari Mohana Krishna and Vineeth Potluri. The successful duo Bhanu–Nandu, known for their hilarious writing, take charge of the dialogues.


The regular shoot of the movie commences tomorrow in Hyderabad.


Cast: Megastar Chiranjeevi, Anaswara Rajan


Technical Crew:

Writer, Director: Bobby Kolli

Producer: Venkat K Narayana

Banner: KVN Productions

Music: Thaman S

Screenplay Writers: Kona Venkat, K Chakravarthy Reddy

Additional Screenplay Writers: Hari Mohana Krishna, Vineeth Potluri

DOP: Vijay Kartik Kannan

Editor: Antony Ruben

Production Design: Avinash Kolla

VFX Supervisor: Yugandhar T

Dialogues: Bhanu-Nandu

Chief Co-Directors: Bellamkonda Sathyam, Poosala Radhakrishna

Co-Director: V Kranthi Chakravarthi

Executive Producer: Saranya Potla

PRO: Yuvraaj

Marketing: Haashtag Media

From Dushara Vijayan’s Jhansi to Bhumi Pednekar’s Rita Ferreira and Sonakshi Sinha’s Anjali Bhaati: Exploring the Many Shades of ‘Modern Female Cop’ on Streaming

 *துஷாரா விஜயனின் ஜான்சி முதல், பூமி பட்னேக்கரின் ரிட்டா பெரேரா, மற்றும் சோனாக்ஷி சின்ஹாவின் அஞ்சலி பாட்டி வரை : OTT உலகை கலக்கும் ‘மாடர்ன் பெண் போலீஸ்’ கதாபாத்திரங்களின் பல முகங்கள் !!*



*இந்தியாவெங்கும் OTT உலகை கலக்கும் ‘மாடர்ன் பெண் போலீஸ்’ கதாபாத்திரங்கள் ! ப்ரைம் வீடியோவில் இப்பொது கண்டுகளியுங்கள்!!*


புஷ்கர் - காயத்ரியின் எக்ஸாம் தற்போது பிரைம் வீடியோவில் வெளியாகியுள்ள நிலையில், அந்த தளத்தில் கடந்த சில ஆண்டுகளில் உருவாகியிருக்கும் பல அடுக்குகள் நிறைந்த குற்றத் தொடர்கள், பெண் போலீஸ் கதாபாத்திரங்களை எப்படி புதிய கோணத்தில் சித்தரித்து வருகின்றன என்பதைக் கவனிக்க வேண்டிய நேரமாக இது தோன்றுகிறது. இந்த கதைகளில் வரும் பெண் போலீஸ் அதிகாரிகள் வெறும் சீருடையில் இருக்கும் அதிகாரிகளாக அல்ல; அவர்கள் உணர்ச்சிகளால் சிக்குண்ட மனிதர்கள், தங்களின் தனிப்பட்ட சுமைகளுடன் வாழ்பவர்கள், முறைகேடான அமைப்புகளுக்கு எதிராக போராடுபவர்கள், தவறுகளையும் மன அழுத்தங்களையும் சுமந்து செல்லும் நபர்கள். இந்த அணுகுமுறை பாரம்பரிய ‘ஹீரோயிக்’ போலீஸ் சித்திரிப்புகளை விட மிகவும் நிஜமாக உணரப்படுகிறது. அந்த மாற்றத்தை பிரதிபலிக்கும் ஐந்து முக்கியமான படைப்புகளை பார்க்கலாம்.


சுழல் : தி வோர்டெக்ஸ் – ஷ்ரேயா ரெட்டி நடித்த இன்ஸ்பெக்டர் ரெஜினா தாமஸ், சமீபத்திய OTT உலகில் மிகவும் நினைவில் நிற்கும் பெண் போலீஸ் கதாபாத்திரங்களில் ஒன்றாக திகழ்கிறது. சம்பலூரில் நடைபெறும் மயான கொள்ளை திருவிழாவை பின்னணியாகக் கொண்ட இந்த தொடரில், ஒரு இளம் பெண் காணாமல் போன வழக்கை விசாரிக்கும் ரெஜினா, அதே நேரத்தில் தனது மகனையும் இழக்கிறார். இதனால் அவரது தொழில்முறை வாழ்க்கையும், தனிப்பட்ட வாழ்க்கையும் ஒன்றாக கலக்கின்றன. அதுவே இந்த கதாபாத்திரத்தின் பலம். ரெஜினா ஒரு கண்டிப்பான அதிகாரியாக அல்லாமல், மன உளைச்சல், கோபம், தாய்மையின் பயம் ஆகியவற்றோடு வாழும் மனிதராக எழுதப்பட்டிருக்கிறார்.


சாணிக் காயிதம் – இந்த குற்ற அதிரடி படத்தில் கீர்த்தி சுரேஷின் பொன்னி, பாரம்பரிய பெண் போலீஸ் சித்திரிப்பிலிருந்து மிகவும் விலகிய கதாபாத்திரம். குடும்பத்தை காப்பாற்ற முயலும் ஒரு காவலராக ஆரம்பிக்கும் அவள், வாழ்க்கையை சிதைக்கும் அளவிலான கொடூரமான அனுபவத்தை சந்திக்கிறார். அதன் பிறகு நடப்பது வழக்கமான நீதிக்கான போராட்டமல்ல; பழிவாங்கலுக்கான கொதிக்கும் பயணம். இந்த பட்டியலில் மிகவும் வன்முறையான கதாபாத்திரமாக இருந்தாலும், போலீஸ் சீருடையின் பின்னாலுள்ள உடைந்த மனிதரை மிகவும் நேர்மையாக காட்டியவராகவும் பொன்னி திகழ்கிறார்.


தஹாட் – சோனாக்ஷி சின்ஹாவின் SI அஞ்சலி பாட்டி, இந்தி OTT உலகில் பெண் போலீஸ் கதாபாத்திரங்களுக்கு புதிய தொனியை கொண்டு வந்தார். அவர் மென்மையான நாயகி அல்ல. நேராக பேசுபவர், தன்னம்பிக்கையுடன் செயல்படுபவர், குற்றவாளிகளோடு மட்டுமல்ல தனது துறையினரிடமிருந்தும் எதிர்ப்புகளை சந்திப்பவர். தொடர்ச்சியான மர்ம மரணங்களை மையமாகக் கொண்ட இந்த தொடரில், அஞ்சலி பாட்டி ஒரு ஆபத்தான விசாரணையின் மையத்தில் நிற்கிறார். ஆனால் அந்த வழக்கு மட்டுமல்ல அவரது கதை; தொடர்ந்து தனது அதிகாரத்தை கேள்விக்குள்ளாக்கும் உலகில் தன்னுடைய இடத்தை உறுதியாக பிடித்துக் கொண்டிருப்பதே இந்த கதாபாத்திரத்தை தனித்துவமாக்குகிறது.


டல்டல் – பூமி பட்னேக்கரின் ரிட்டா பெரேரா, வழக்கமான போலீஸ் அதிகாரி அல்ல. கூர்மையான உள்ளுணர்வும் திறமையும் கொண்டிருந்தாலும், தன்னைச் சுற்றியிருக்கும் இருண்ட உலகின் மன அழுத்தங்களை சுமந்து வாழும் நபர். இந்த உளவியல் குற்றத் திரில்லரில், ரிட்டா ஒரு தொடர் கொலைகாரனை தேடுவதோடு, தனது கடந்தகாலத்தின் சுமைகளையும் எதிர்கொள்கிறார். இளம் வயதிலேயே மும்பை குற்றப்பிரிவை வழிநடத்தும் அவர், கடுமையான அதிகாரியாகவும் உடைந்த மனிதராகவும் இரு நிலைகளில் தொடர்ந்து இயங்குகிறார். அந்த இரட்டைத் தன்மையையே இந்த தொடர் மிகவும் நுட்பமாக பயன்படுத்துகிறது.


எக்ஸாம் – இயக்குநர் A. சற்குணத்தின் முதல் வெப் தொடரான எக்ஸாம், இந்த விவாதத்திற்கு புதிய பரபரப்பை சேர்த்துள்ளது. குறிப்பாக துஷாரா விஜயனின் ஜான்சி மற்றும் அதிதி பாலனின் DSP மரமல்லி ஆகிய இரு கதாபாத்திரங்கள் அதன் மையமாக உள்ளன. தைக்கரா என்ற மலைநகரத்தை பின்னணியாகக் கொண்ட இந்த தொடர், போட்டித் தேர்வுகளைச் சுற்றியுள்ள பெரிய மோசடியை வெளிச்சத்திற்குக் கொண்டு வர போராடும் DSP மரமல்லியாக நடிக்கும் ஜான்சியை பின்தொடர்கிறது. ஆனால் அந்த சதி அவள் நினைத்ததைவிட மிகப்பெரியது என்பதை பின்னர் உணர்கிறாள். தற்போது பிரைம் வீடியோவில் வெளியாகியுள்ள எக்ஸாம், ஜான்சி மற்றும் மரமல்லி இடையேயான மனப்போரின் மூலம் OTT உலகில் பெண் போலீஸ் கதாபாத்திரங்களின் புதிய பரிணாமத்தை சுவாரஸ்யமாக பதிவு செய்கிறது.


இந்த எல்லா கதைகளையும் இணைப்பது, பெண்கள் போலீஸ் அதிகாரிகள் சீருடையில் இருப்பது மட்டும் அல்ல. அவர்கள் எழுதப்படும் விதத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம்தான். இந்த கதாபாத்திரங்கள் பிழையற்ற நேர்மையாளர்கள் அல்ல. அவர்கள் தவறுகள் செய்கிறார்கள். உணர்ச்சி சுமைகளை சுமக்கிறார்கள். முறைகேடான அமைப்புகளுக்குள் வாழ்கிறார்கள். அந்த அமைப்புகளே அவர்களை வடிவமைக்கின்றன. அதனால் தான், பழைய ஒரே மாதிரியான சித்திரிப்புகளை விட இவர்கள் மிகவும் நிஜமானவர்களாக தோன்றுகிறார்கள். OTT உலகில் இந்த மாற்றம் இன்னும் எங்கு செல்லப் போகிறது என்ற எதிர்பார்ப்பையும் உருவாக்குகிறது.


From Dushara Vijayan’s Jhansi to Bhumi Pednekar’s Rita Ferreira and Sonakshi Sinha’s Anjali Bhaati: Exploring the Many Shades of ‘Modern Female Cop’ on Streaming


With Puskar-Gayatri’s Exam now streaming on Prime Video, this feels like the right moment to look at how the service’s growing line-up of layered crime stories has shaped a far more contemporary idea of the female cop on screen. Across these stories, Prime Video has spotlighted women cops who are fierce, emotionally complex, and deeply human, defined not just by their uniform, but by the personal baggage they carry, the systems they push against, the difficult choices they make, and the moral grey zones they navigate. It’s a portrayal that feels far more real than heroic. As newer stories continue to explore that shift, let’s look at five stories that capture the evolving face of the ‘modern female cop’ on screen.


Suzhal: The Vortex - Sriya Reddy’s Inspector Regina Thomas in Suzhal is one of those rare female cops who feels tough, frayed, and vulnerable all at once. Set against the Mayana Kollai festival in Sambaloor, the series follows Regina as she investigates the disappearance of a teenage girl even as her own son also goes missing, blurring the line between the professional and the personal. That is what gives Regina her grip. She is not written as an untouchable force of order, but as a woman doing her job while battling disillusionment, anger, and maternal fear.


Saani Kaayidham - Keerthy Suresh’s Ponni from this crime actioner is perhaps the most radical departure from the traditional idea of a female cop. A police constable who begins as someone trying to hold her family together, she is pushed into unimaginable trauma that shatters her world. What follows is not justice in the conventional sense, but a relentless quest for revenge. Ponni may be the most brutal entry on this list, but she is also one of the most revealing. The film strips away the romanticism around the badge. And that is exactly why it stays with you.


Dahaad - Sonakshi Sinha’s SI Anjali Bhaati changed the tone of what a Hindi streaming cop could look like. She is not polished. She is not softened to fit expectations. She is direct, assertive, and often operating against both criminals and her own department. Set against a series of mysterious deaths, the show builds a cat-and-mouse dynamic that places her at the eye of the storm. But the case is only one part of her story. What made Anjali stand out in Dahaad was how firmly she held her space in a world that constantly tried to undermine her authority.


Daldal - Bhumi Pednekar’s Rita Ferreira in Daldal is not your typical cop. She is sharp and instinctive yet constantly negotiating the emotional fallout of the world she works in. In this psychological crime thriller, Rita is not only chasing a serial killer but also dealing with the weight of her own past, all while leading the Mumbai Crime Branch at a relatively young age. What works here is the duality. And the show intelligently leans into it, making her one of the most emotionally complex portrayals of a woman in uniform in recent times.


Exam - Since its launch, A. Sarkunam’s directorial debut series Exam has added a tense new layer to this conversation, and it starts with its two central characters, Dushara Vijayan’s Jhansi and Aditi Balan’s DSP Maramalli. Set in the hilly town of Thykara, the series follows Jhansi as she takes on the dangerous impersonation of Maramalli to expose a sprawling scam tied to competitive exams, only to realise the conspiracy runs far deeper than expected. Now streaming on Prime Video, Exam’s face-off between Jhansi and Maramalli makes it one of the most intriguing additions to the evolving portrayal of female cops on streaming.


What connects all these stories is not just the presence of women in uniform. It is the shift in how they are written. These characters are not invincible. They make mistakes. They carry emotional weight. They exist within flawed systems and are shaped by them. And in doing so, they feel far more real than the one-note portrayals we have seen in the past. Which makes you wonder where this space is headed next.

From Suzhal and Vadhandhi to Exam: How Pushkar and Gayatri are Championing Tamil Long-Form Storytelling

 *இணைய தொடர்களுக்கு புதிய வடிவம் தரும் புஷ்கர் - காயத்ரி !!*



*சுழல் மற்றும் வதந்தி முதல் எக்ஸாம் வரை: தமிழ் இணையத் தொடர் கதையாடலுக்கு புதிய முகம் கொடுக்கும் புஷ்கர் - காயத்ரி !!*


தமிழில் நீளமான கதையாடல்களில் தனித்துவமான படைப்பாற்றல் கொண்ட இயக்குநர் ஜோடியாக புஷ்கர் மற்றும் காயத்ரி உருவெடுத்துள்ளனர். பல்வேறு அடுக்குகள் நிறைந்த எழுத்து நடை மற்றும் முழுமையாக உயிர்ப்புடன் தோன்றும் கதைக்களம் தான் அவர்களின் மிகப்பெரிய பலமாக பார்க்கப்படுகின்றன.


புஷ்கர் - காயத்ரியை வேறுபடுத்துவது, அவர்கள் உருவாக்கும் கதை உலகங்கள் மிகவும் இயல்பாகவும் வாழ்ந்து கொண்டிருப்பதுபோலவும் தோன்றினாலும், அதே நேரத்தில் வணிகரீதியான திரில்லர் அம்சங்களின் பரபரப்பையும் சுவாரஸ்யத்தையும் தக்க வைத்திருப்பதுதான். சிறிய நகரங்களின் இயல்பான பின்னணி, சிக்கலான மனித மனங்கள், மெதுவாக பரவும் மர்மங்கள் ஆகியவற்றின் மூலம், உள்ளூர் கதைகளும் உலகளாவிய தரத்தில் பேசக்கூடியவை என்பதை அவர்கள் தொடர்ந்து நிரூபித்து வருகின்றனர். அந்த படைப்பாற்றல் பார்வை சுழல்: தி வோர்டெக்ஸ் சீசன் 1 மற்றும் 2, வதந்தி: தி ஃபேபிள் ஆஃப் வெலோனி, தற்போது எக்ஸாம் போன்ற படைப்புகள் மூலம் வெளிப்பட்டுள்ளது.


தமிழ் OTT உலகில் முக்கியமான திருப்பமாக அமைந்தது சுழல்: தி வோர்டெக்ஸ். இரு சீசன்களும் அதன் ஆழமான கதையாடல், நம் மண் சார்ந்து வேரூன்றிய கதை பின்னணி, உணர்ச்சிபூர்வமான மர்மம் ஆகியவற்றுக்காக பெரும் வரவேற்பைப் பெற்றன. குறிப்பாக இரண்டாம் சீசன், சமூக ரீதியாக சிக்கலான காளிபட்டணம் என்ற உலகத்தை மையமாகக் கொண்டு, ஒரு மரணம் முழு ஊரின் அமைதியையே சிதைக்கும் வகையில் நகரும் பரபரப்பான திரில்லராக உருவெடுத்தது. குடும்பம், தியாகம், பழிவாங்குதல், ஒழுக்கம் போன்ற கருக்கள் கலந்து, அந்த தொடர் ரகசியங்களும் மன அழுத்தங்களும் நிறைந்த உலகிற்குள் பார்வையாளர்களை இழுத்துச் சென்றது.


வதந்தி: தி ஃபேபிள் ஆஃப் வெலோனி தொடரில் க்ரியேட்டிவ் புரடியூசர்களாக இருந்த புஷ்கர் - காயத்ரி, உணர்ச்சிகளும் மனித பார்வைகளும் மையமாக இருக்கும் அடுக்குகள் நிறைந்த கதையாடலை உருவாக்கி தந்துள்ளனர். “வதந்தி” என்ற தலைப்புக்கேற்றவாறு, அந்த தொடர் வெலோனி என்ற இளம் பெண்ணின் வாழ்க்கையைச் சுற்றி பரவும் வதந்திகள், சந்தேகங்கள் மற்றும் மாறுபட்ட உண்மைகள் குறித்து பேசுகிறது. உண்மையையும் பொய்யையும் பிரிக்க போராடும் காவல்துறை அதிகாரி விவேக், அந்த கதையின் மையமாக இருந்தார். ஒரு சிறிய நகரத்தின் இயல்பான பின்னணியில் நகரும் இந்த தொடர் மூலம், உணர்ச்சிகள் நிரம்பிய நீளமான கதையாடல்களை உருவாக்கும் தங்களின் திறனை இந்த படைப்பாளிகள் மீண்டும் நிரூபித்தனர்.


அதேபோல், எக்ஸாம் தொடரிலும் புஷ்கர் - காயத்ரி தங்களின் படைப்பாற்றல் பார்வையை தொடர்கிறார்கள். நுழைவுத் தேர்வுகளைச் சுற்றியுள்ள கடுமையான போட்டி மற்றும் அதனைச் சூழ்ந்துள்ள ஊழலை மையமாகக் கொண்ட இந்த தொடர், பெரிய மோசடியை வெளிச்சத்திற்குக் கொண்டு வர முயலும் ஜான்சி மற்றும் அவரது வழிகாட்டியான ஜெயச்சந்திரன் ஆகியோரின் பயணத்தை பின்தொடர்கிறது. அதே நேரத்தில் DSP மரமல்லியும் இந்த பதற்றமான சம்பவங்களின் முக்கிய அங்கமாக மாறுகிறார். பரபரப்பு, உணர்ச்சி ஆழம் மற்றும் சமூக முக்கியத்துவம் ஆகியவற்றை இணைக்கும் கதைகளுக்கு தொடர்ந்து ஆதரவளித்து வரும் அவர்கள், இந்த தொடரின் மூலமும் தங்களின் நீளமான கதையாடல் பார்வையை மேலும் வலுப்படுத்தியுள்ளனர்.


இந்நிலையில், வதந்தி சீசன் 2-ஐ எதிர்நோக்கும் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு பெருமளவில் அதிகரித்து வருகிறது. சுழல், வதந்தி மற்றும் தற்போது எக்ஸாம் ஆகியவை அனைத்தும் பிரைம் வீடியோவில் வெளியாகியுள்ள நிலையில், புஷ்கர் - காயத்ரி தொடர்ந்து நம் மண்ணில் வேரூன்றிய, உணர்ச்சிப்பூர்வமான மற்றும் பரந்த ரசிகர்கள் விரும்பும் வகையிலான தமிழ் கதைகளுக்கு புதிய பரிமாணம் கொடுத்து வருகிறார்கள்.


From Suzhal and Vadhandhi to Exam: How Pushkar and Gayatri are Championing Tamil Long-Form Storytelling


Pushkar and Gayatri have emerged as one of the most distinct creative forces in Tamil long-form storytelling, with layered writing and immersive world-building being their strongest trademarks. What sets Pushkar and Gayatri apart is their ability to build worlds that feel lived-in and authentic while still delivering the scale and intrigue of mainstream thrillers. Through atmospheric small-town settings, morally complex characters, and slow-burn mysteries, they have consistently proven how local narratives can be cinematic, culturally rooted, and globally compelling at the same time. That creative vision has come alive through acclaimed titles like Suzhal: The Vortex Seasons 1 and 2, the haunting and atmospheric Vadhandhi: The Fable of Velonie, and now Exam.


Suzhal: The Vortex became a landmark moment for Tamil streaming, with both seasons earning acclaim for their immersive storytelling, rooted settings, and emotionally charged mysteries. Season 2 raised the stakes through a gripping suspense thriller set in the socially complex world of Kaalipattanam, where a single death threatens to unravel the fragile fabric of the town. Blending themes of family, sacrifice, revenge, and morality, the series drew audiences into a tense world of secrets and psychological conflict.


As Creative Producers on Vadhandhi: The Fable of Velonie, Pushkar and Gayatri backed a layered, character-driven story rooted in emotion and perception. Much like its title, Vadhandhi, meaning rumors, the series followed the haunting story of Velonie, a young woman whose life becomes consumed by gossip, speculation, and conflicting versions of the truth. At the center of the investigation is Vivek, a troubled yet determined cop trying to separate fact from fiction within a suffocating web of lies, all set against the textured backdrop of a small town. Through the series, the talented duo once again showcased their instinct for emotionally rich and immersive long-form narratives.


Similarly, with Exam, Pushkar and Gayatri continue to lend their creative expertise to stories that blend high-stakes tension with grounded human drama. Set against the fiercely competitive world of entrance exams and the corruption surrounding it, the series follows Jhansi as she attempts to expose a far-reaching scam alongside her mentor Jayachandran, while DSP Maramalli becomes central to the tense chain of events that unfolds. Through their role as Creative Producers, the two have once again championed a story driven by suspense, emotional depth, and social relevance, elements that have become synonymous with their long-form storytelling vision.


With Vadhandhi Season 2 on the horizon, Pushkar and Gayatri’s long-form Tamil storytelling only seems to be getting stronger. With Suzhal, Vadhandhi, and now Exam streaming on Prime Video, the duo continues to champion ambitious, rooted, and emotionally immersive stories that resonate with a wide audience.

இந்திய சினிமாவில் ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் புராண அதிரடி சாகச படமான 'நாக பந்தம்' படத்தின் கவுண்ட் டவுன் தொடங்கியது

 *இந்திய சினிமாவில் ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் புராண அதிரடி சாகச படமான 'நாக பந்தம்' படத்தின் கவுண்ட் டவுன் தொடங்கியது*



நாடு தழுவிய பார்வையாளர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் திரைப்படம் 'நாக பந்தம்'. எதிர்வரும் ஜூலை மாதம் 3 ஆம் தேதியன்று வெளியாகும் இப்படத்திற்கான கவுண்ட் டவுன் அதிகாரப்பூர்வமாக தொடங்கி விட்டது


அபிஷேக் நாமா இயக்கத்தில் உருவாகியுள்ள 'நாக பந்தம்'- புராணம் - சாகசம் - பண்டைய ரகசியங்கள்- தெய்வீக சக்தி மற்றும் அதிரடி சண்டை காட்சிகளை கொண்ட ஒரு பிரம்மாண்டமான காட்சி அமைப்பில் உருவாகி, இதுவரை கண்டிராத தனித்துவமான சினிமா அனுபவத்தை ரசிகர்களுக்கு வழங்கும் என உறுதியளிக்கிறது.


NIK ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் சார்பில் அபிஷேக் பிக்சர்ஸ் நிறுவனத்துடன் இணைந்து தயாரிப்பாளர்கள் கிஷோர் அன்னபுரெட்டி மற்றும் நிஷிதா நாகிரெட்டி ஆகியோர் 'நாக பந்தம்' படத்தை தயாரித்துள்ளனர். இந்த திரைப்படம் ஒரு பிரம்மாண்டமான தயாரிப்பு மற்றும் உலக தரம் வாய்ந்த தொழில்நுட்ப தரத்துடன், ஒரு உண்மையான பான் இந்திய அளவிலான பிரம்மாண்ட படைப்பாக உருவாக்கப்படுகிறது.


சக்தி வாய்ந்த முன்னணி கதாபாத்திரத்தில் நடிகர் விராட் கர்ணா நடிக்கிறார். அவருடன் நபா நடேஷ், ஐஸ்வர்யா மேனன், ஜெகபதி பாபு , மகேஷ் மஞ்சரேக்கர், ரிஷப் சாவ்னி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். இந்த திரைப்படம் இந்திய சினிமாவில் புராண சாகச வகையிலான படைப்புகளின் எல்லையை மறு வரையறை செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


சமீபத்தில் வெளியிடப்பட்ட போஸ்டர்.. சமூக ஊடகங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இப்படத்திற்கான வீடியோவில் ஒரு பிரம்மாண்டமான பழங்குடி இன மக்களின் கடல் போர் மற்றும் தீவிரமான சாகச சண்டை காட்சிகள்.. அது தொடர்பான பிரமிக்க வைக்கும் காட்சி...இப்படத்தின் பிரம்மாண்டமான அளவு - சினிமாவின் கம்பீரம் மற்றும் அதிரடியான சண்டைக் காட்சிகள் இடம் பிடித்துள்ளதை வெளிப்படுத்துகிறது. இது ஒரு முழுமையான திரையரங்க அனுபவத்திற்கும் உறுதியளிக்கிறது.‌


இந்த அதிரடியான சண்டைக் காட்சிகளை கண்களுக்கு விருந்தாகவும் தொழில்நுட்ப ரீதியாக தீவிரமான சண்டை காட்சிகளை வடிவமைப்பதில் உலக அளவில் பிரபலமாகி, சர்வதேச அளவில் பாராட்டைப் பெற்ற சண்டை பயிற்சி இயக்குநர் விளாட் ரிம்பர்க் வடிவமைத்துள்ளார். இப்படத்தில் பிரம்மாண்டமான முறையிலான பழங்குடியினரின் சண்டைகள்- கடல் போர் காட்சிகள்- நீருக்கு அடியில் நடைபெறும் சண்டை காட்சிகள் - என இதுவரை பார்வையாளர்கள் கண்டிராத பிரம்மாண்டமான சாகச காட்சிகளும் இடம் பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


பிரமிக்க வைக்கும் காட்சிகளையும் பார்வையாளர்களை கவர்ந்து இழுக்கும் சினிமா தருணங்களையும் வழங்குவதற்காக.. பல முன்னணி ஸ்டுடியோகள் இரவு பகலாக உழைத்து வருகின்றன. அத்துடன் போஸ்ட் புரொடக்ஷன் மற்றும் வி எஃப் எக்ஸ் - VFX பணிகள் முழு வேகத்தில் நடைபெற்று வருகின்றன. பழங்கால கோயில்கள்- மாய உலகங்கள் முதல் பிரம்மாண்டமான போர்க்காட்சிகள் மற்றும் தெய்வீக அம்சங்கள் வரை- ஒரு உலகளாவிய சினிமா அனுபவத்தை பார்வையாளர்களுக்கு வழங்கும் நோக்கத்தில் அதிநவீன விசுவல் எபெக்ட்ஸ்களுடன் இப்படம் உருவாக்கப்பட்டு வருகிறது.


சமீபத்திய ஆண்டுகளில் இந்திய சினிமாவில் இருந்து வெளிவந்த மிகப்பெரிய காட்சி மொழியிலான படைப்புகளில் ஒன்றாக நாக பந்தம் படம் இருக்கும் என்று திரையுலக வட்டாரங்கள் ஏற்கனவே விவரித்து வருகின்றன.


இந்த உற்சாகத்தை மேலும் அதிகரிக்கும் வகையில் முன்னணி பொழுதுபோக்கு நிறுவனமான ஜீ ஸ்டுடியோஸ் இப்படத்தின் வட இந்திய திரையரங்கு விநியோக உரிமைகளை பெற்றுள்ளது. அத்துடன் இந்தப் படத்தை இந்தி பேசும் மக்களை கவர்வதற்காக.. அவர்களுக்கான சந்தையில் இப்படத்தை பிரம்மாண்டமாக வெளியிட ஜீ ஸ்டுடியோஸ் திட்டமிட்டுள்ளது. இந்த கூட்டணி 'நாக பந்தம்' படத்திற்கு நாடு தழுவிய அளவில் மிகப்பெரிய வரவேற்பை அளித்து, இந்த ஆண்டின் மிகப்பெரிய பான் இந்திய வெளியீடுகளில் ஒன்றாக இருக்கும் என எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது.  


இந்த திரைப்படத்தின் டிஜிட்டல் உரிமையை அமேசான் பிரைம் வீடியோ பெற்றுள்ளது. இவை இப்படத்தின் மீது திரையுலக வணிகர்கள் கொண்டுள்ள வலுவான நம்பிக்கையை பிரதிபலிக்கிறது.‌


பண்டைய ரகசியங்கள் - மறைக்கப்பட்ட புதையல்கள்- தெய்வீக சக்திகள் - மறக்கப்பட்ட புராணக் கதைகளின் பின்னணியில் அமைந்திருக்கும் 'நாக பந்தம்' திரைப்படம் - இந்திய புராணங்கள் மற்றும் கலாச்சாரத்தில் வேரூன்றிய, உணர்வு பூர்வமான மற்றும் கண்களுக்கு விருந்தளிக்க கூடிய காட்சிகளைக் கொண்ட ஒரு அற்புதமான பயணத்தை பார்வையாளர்களுக்கு வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இப்படத்தின் பிரம்மாண்டம்- வியக்க வைக்கும் காட்சி அமைப்புகள் - விறுவிறுப்பான சண்டை காட்சிகள் - கற்பனைக்கு அப்பாற்பட்ட சாகச காட்சிகள் - சக்தி வாய்ந்த இசை - சுவராசியமான கதைக்களம் - என பல அம்சங்கள் இடம் பிடித்திருப்பதால், இந்த திரைப்படம் 2026 ஆம் ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படங்களில் ஒன்றாக மாறியுள்ளது.


இதன் காரணமாக இப்படத்தைக் காண்பதற்கான காத்திருக்கும் கால கட்டம் குறைந்து வருகிறது. அதே தருணத்தில் இப்படத்தை பார்ப்பதற்கான ஆர்வம் அதிகரித்து வருகிறது.


மிகவும் எதிர்பார்க்கப்படும் புராண அதிரடி சாகச படைப்பான நாக பந்தம் திரைப்படம்- திரை அரங்குகளில் வெளியாக இன்னும் 44 நாட்களே மீதமுள்ளன. அதனால் இப்படத்திற்கான கவுண்ட் டவுன் தொடங்கி விட்டது. இந்தத் திரைப்படம் உலகெங்கிலும் எதிர்வரும் ஜூலை மாதம் மூன்றாம் தேதியன்று வெளியாகிறது.


*The countdown has officially begun for one of Indian cinema’s most awaited mythological action-adventure spectacles — Nagabandham. The film is already creating massive buzz across the industry and among audiences nationwide.*


Directed by Abhishek Nama, Nagabandham promises a never-before-seen cinematic experience that blends mythology, adventure, ancient secrets, divine power, and high-octane action on a grand visual scale.


Produced by Kishore Annapureddy and Nishitha Nagi Reddy under the banner of NIK Studios in association with Abhishek Pictures, the film is being mounted as a true pan-Indian spectacle with a massive production scale and world-class technical standards.


Starring Virat Karrna in a powerful lead role alongside Nabha Natesh, Ishwarya Menon, Jagapathi Babu, Mahesh Manjrekar, Rishabh Sawhney, and several prominent actors, Nagabandham is expected to redefine the mythological adventure genre in Indian cinema.


The recently unveiled poster featuring a massive tribal sea battle and intense adventure action sequences has taken social media by storm. The stunning visual showcases the film’s raw scale, cinematic grandeur, and adrenaline-filled action blocks that promise a completely immersive theatrical experience.


The high-octane action sequences are choreographed by internationally acclaimed action director Vlad Rimburg, known for designing visually spectacular and technically intense stunt sequences. Sources reveal that the film includes massive tribal fights, sea combat episodes, underwater action, and never-before-seen adventure set pieces crafted on a huge scale.


The post-production and VFX works are currently progressing at full speed with multiple leading studios working around the clock to deliver breathtaking visuals and immersive cinematic moments. From ancient temples and mystical worlds to large-scale war episodes and divine elements, the film is being crafted with cutting-edge visual effects aimed at delivering a global cinematic experience.


Industry insiders are already calling Nagabandham one of the biggest visual spectacles to emerge from Indian cinema in recent years.


Adding to the excitement, leading entertainment powerhouse Zee Studios has acquired the North India theatrical distribution rights of the film, planning a massive release across Hindi-speaking markets. The collaboration is expected to give Nagabandham a huge nationwide reach and strengthen its position as one of the biggest pan-Indian releases of the year.


Streaming giant Amazon Prime Video has reportedly secured the OTT streaming rights of the film, while Telugu satellite rights have been acquired by Star Maa, showcasing the strong confidence trade circles have in the project.


Set against the backdrop of ancient secrets, hidden treasures, divine powers, and forgotten legends, Nagabandham is expected to offer audiences an emotionally powerful and visually stunning journey rooted in Indian mythology and culture.


With its grand scale, breathtaking visuals, intense action blocks, larger-than-life adventure episodes, powerful music, and intriguing storyline, the film has rapidly become one of the most anticipated releases of 2026.


The wait is getting shorter…

The madness is getting bigger 🔥


44 DAYS TO GO for the most anticipated mythological action adventure — #Nagabandham 🐍⚔️


In Cinemas Worldwide on July 3rd 🌍

முன்னணி நடிகர் கௌதம் கார்த்திக் வெளியிட்ட ‘பாதாம்கீர்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் போஸ்டர் !!*

 *முன்னணி நடிகர் கௌதம் கார்த்திக் வெளியிட்ட ‘பாதாம்கீர்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் போஸ்டர் !!*



*ரொமான்ஸ் கலந்த காமெடி என்டர்டெய்னராக உருவாகும் ‘பாதாம்கீர்’ படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் ரசிகர்களின் கவனம் கவனத்தை ஈர்த்துள்ளது !!*


லார்ட்ஸ் பி தி இன்டர்நேஷனல் புரொடக்ஷன்ஸ் (LORDS P The international Production) தயாரிப்பில், அறிமுக இயக்குநர் ஜெய் சக்தி பிரகாஷ் இயக்கத்தில், உருவாகி வரும் ரொமான்ஸ் காமெடி திரைப்படமான ‘பாதாம்கீர்’ படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.


இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை முன்னணி நடிகர் கௌதம் கார்த்திக் தனது சமூக வலைத்தள பக்கங்கள் வழியாக வெளியிட்டுள்ளார். போஸ்டர் வெளியாகியதுடன் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.


வண்ணக்கலவை நிறைந்த பின்னணியில், கையில் இசை வாத்தியங்களுடன் நடிகர்கள் சிவகுமார், சதீஷ் மற்றும் டேனியல் ஆன்னி போப் ஆகியோர் கையில் இசை வாத்தியங்களுடன் தோன்றும் விதமாக வடிவமைக்கப்பட்டுள்ள ஃபர்ஸ்ட் லுக், பார்ப்பவர்களின் முகத்தில் இயல்பாக புன்னகையை வரவழைக்கிறது. கலர்ஃபுல் மற்றும் ஜாலியான டிசைனில் உருவாக்கப்பட்டுள்ள இந்த போஸ்டர், படம் முழுக்க முழுக்க குடும்பத்துடன் ரசிக்கக்கூடிய ரொமான்ஸ் காமெடி என்டர்டெய்னராக இருக்கும் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.


இப்படத்தில் சிவகுமார் மற்றும் ஆன் ஷீத்தல் நாயகன் – நாயகியாக நடிக்கின்றனர். இவர்களுடன் சதீஷ், டேனியல் ஆன்னி போப் , பிரதீப் ஜோஷ் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் இணைந்து நடித்துள்ளனர். மேலும் யோகிபாபு மற்றும் TM கார்த்திக் முக்கியமான கேமியோ கதாப்பாத்திரங்களில் தோன்றுகின்றனர். மதுமிதா, பிரதீப் ஜோஷ், வழக்கு எண் முத்துராமன் மற்றும் லிஜா உள்ளிட்டோரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.


சென்னை, பாண்டிச்சேரி மற்றும் மூணாறு உள்ளிட்ட பகுதிகளில் இப்படத்தின் படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவு பெற்றுள்ளது. தற்போது இறுதிக்கட்ட பின்னணி பணிகள் நடைபெற்று வரும் நிலையில், விரைவில் டீசர் மற்றும் அடுத்தடுத்த அப்டேட்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இப்படத்தை அறிமுக இயக்குநர் ஜெய் சக்தி பிரகாஷ் எழுதி இயக்கியுள்ளார். இசையமைப்பாளர் விஷால் சந்திரசேகர் இசையமைக்க, ஒளிப்பதிவை A. குமரன் மேற்கொண்டுள்ளார். லினு.M படத்தொகுப்பை கவனித்துள்ளார். அனுபவம் மிக்க தொழில்நுட்பக் குழுவுடன் உருவாகி வரும் ‘பாதாம்கீர்’, ரசிகர்களுக்கு ஒரு வித்தியாசமான ரொமான்டிக் காமெடி அனுபவத்தை வழங்கும் என படக்குழு நம்பிக்கை தெரிவித்துள்ளது.


தொழில்நுட்ப கலைஞர்கள்


தயாரிப்பாளர் – பிரதீப் ஜோஸ். K

கதை, திரைக்கதை & இயக்கம் – ஜெய் சக்தி பிரகாஷ்

இசையமைப்பாளர் – விஷால் சந்திரசேகர்

ஒளிப்பதிவு – A. குமரன்

படத்தொகுப்பு – லினு. M

சவுண்ட் எஃபெக்ட்ஸ் – C. சேது

புரொடக்ஷன் எக்ஸிக்யூட்டிவ் – K. சடகோபன்

கலை இயக்கம் – A. பழனிவேல்

நடன அமைப்பு – கல்யாண்