-

Loading latest news...

இதயம் முரளி” திரைப்பட நன்றி அறிவிப்பு விழா !!*

இதயம் முரளி” திரைப்பட நன்றி அறிவிப்பு விழா !!*

 


Dawn Pictures நிறுவனத்தின் தயாரிப்பில், ஆகாஷ் பாஸ்கரன் எழுத்து இயக்கத்தில், அதர்வா முரளி நடித்துள்ள, “இதயம் முரளி” திரைப்படம் கடந்த  ஜூலை 10 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடம்பெரும் பாராட்டுக்களை குவித்து வெற்றி பெற்றுள்ளது. இன்பன் உதயநிதி வழங்க, ரெட் ஜெயன்ட் மூவிஸ் இப்படத்தைஉலகமெங்கும் வெளியிட்டது.

 

இப்படத்தின் பெரும் வரவேற்பைப் தொடர்ந்து   படக்குழுபத்திரிக்கை ஊடக நண்பர்களை சந்தித்து நன்றி தெரிவித்தனர்.

 

இந்நிகழ்வினில்


சின்னி ஜெயந்த் பேசியதாவது.., 

 

“முதலில் இந்தப் படத்தின் இயக்குநர் ஆகாஷ் பாஸ்கரனுக்குநன்றி சொல்ல வேண்டும். இன்றைய தலைமுறையில் பலரும் பழைய நினைவுகளை மறந்துவிடுகிறார்கள். ஆனால் அந்த பழைய உணர்வுகளையும் நினைவுகளையும் அழகாக மீட்டெடுத்து திரையில் கொண்டு வந்த பெருமை இயக்குநர் ஆகாஷ்பாஸ்கரனுக்கே சேரும்.

 

அதர்வாவுடன் இது எனக்கு மிகவும் சிறப்பான அனுபவம். அவரது தந்தை முரளியுடன் இணைந்து நடித்தபோது இருந்த அதே உணர்வை, அதர்வாவுடன் நடித்தபோதும் நான் உணர்ந்தேன். அதனால்தான் இந்தப் படத்தில் என்னை இணைத்ததற்காகஇயக்குநருக்கு நான் மிகவும் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். படத்தின் ஒவ்வொரு காட்சியையும் அவர் மிகுந்த அக்கறையுடனும்அழகிய ரசனையுடனும் உருவாக்கியிருக்கிறார்.

 

இந்தப் படத்தில் பணியாற்றிய ஒவ்வொரு கலைஞரும் மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். அனைவருக்கும் என் மனமார்ந்த பாராட்டுகள். குறிப்பாக கதாநாயகி சிறப்பாக நடித்துள்ளார். மருத்துவர் கதாபாத்திரத்தில் நடித்த நடிகையும் தனது பாத்திரத்தை சிறப்பாகச் செய்திருந்தார்.இசையமைப்பாளராகமட்டுமல்ல, நடிகராகவும் திறமையை நிரூபித்த தமனுக்கும் என் பாராட்டுகள். அதேபோல் ‘டேலண்ட் அண்ட்’ நிகழ்ச்சியில் நான் பாராட்டிய சுதாகர் இன்று சிறந்த நடிகராக உயர்ந்திருப்பதுமிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.

 

இந்தப் படத்தில் மூத்த கலைஞர்கள், புதிய கலைஞர்கள், யூடியூப்இன்ஃப்ளூயன்சர்கள் என அனைவரையும் ஒரே படத்தில்இணைத்து அவர்களுக்கு வாய்ப்பு வழங்கிய இயக்குநர் ஆகாஷ்பாஸ்கரனின் முயற்சி பாராட்டுக்குரியது. படம் பார்த்தபோது ஒரு தரமான இந்திப் படத்தைப் பார்த்த உணர்வு ஏற்பட்டது. இதே கூட்டணி தொடர்ந்து நல்ல படங்களை உருவாக்க வேண்டும். இப்படிப்பட்ட தரமான படங்கள் தமிழ்சினிமாவுக்கு கலைரீதியாகமட்டுமல்ல, வணிக ரீதியிலும் பெரிய பலனைத் தரும். இந்த வாய்ப்பை வழங்கிய படக்குழுவினருக்கு என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.”

 

எக்ஸிகியூட்டிவ் புரொட்யூசர் கிருஷ்ணா பேசியதாவது.., 

 

“அனைவருக்கும் வணக்கம். ‘இதயம் முரளி’ திரைப்படம் எங்களுக்கு கிட்டத்தட்ட ஒரு வருட பயணமாக இருந்தது. ஒரு படத்தை இயக்குவதும், தயாரிப்பதும் தனித்தனியாகவே பெரிய சவால். ஆனால் இரண்டையும் ஒரே நேரத்தில் சிறப்பாகச் செய்து வெற்றிகரமாக நிறைவேற்றிய இயக்குநரும் தயாரிப்பாளருமானஆகாஷ் பாஸ்கரனுக்கு முதலில் என் வாழ்த்துகள்.

இந்தப் படம் பலருக்கும் நாஸ்டால்ஜியா உணர்வைக்கொடுத்ததற்கு காரணம், இயக்குநர் தனது வாழ்க்கையில் பார்த்து ரசித்த சிறிய சிறிய விஷயங்களைக் கூட மிக நுணுக்கமாகதிரையில் பதிவு செய்ததுதான். ஒரு கேசட், ஒரு கோக் கேன்போன்ற பொருட்களைக் கூட எந்த இடத்தில் வைக்க வேண்டும், எப்படி காட்சிப்படுத்த வேண்டும் என்பதில் அவர் காட்டிய மைக்ரோ டீட்டெய்லிங் இந்தப் படத்தின் பெரிய பலம். அந்த காட்சிகளை அழகாக திரையில் கொண்டு வந்த ஒளிப்பதிவாளர்கள் மனோஜ் சார், சாய் சார் ஆகியோரின்பங்களிப்பு மிக முக்கியமானது. அதேபோல், தயாரிப்பு வடிவமைப்பாளர் கார்த்திக் சார் தனது பிஸியான வேலையிலும்இந்தப் படத்திற்காக அர்ப்பணிப்புடன் உழைத்தார்.

 

இசையமைப்பாளர் தமன் சார் பெரும்பாலும் மாஸ் படங்களுக்குஇசையமைப்பவர். ஆனால் ‘ஈரம்’, ‘ஆளவந்தான்’ போன்ற உணர்வுப்பூர்வமான படங்களைப் போலவே ‘இதயம் முரளி’ போன்ற படங்களுக்கும் தொடர்ந்து இசையமைக்க வேண்டும் என்பது எங்கள் விருப்பம்.

 

அதர்வா சார் பற்றி சொல்ல வேண்டியதே இல்லை. கடந்த 15ஆண்டுகளாக அவருடைய தோற்றம், உடற்தகுதி, நடிப்பு என அனைத்தையும் ஒரே ஒழுக்கத்துடன் பராமரித்து வருகிறார். அது எங்கள் குழுவினருக்கும் ஒரு பெரிய உத்வேகமாக இருக்கிறது.நட்டி சார் உடன் பணியாற்றிய அனுபவம் மிகவும் சிறப்பானது. ஒளிப்பதிவாளராக இருந்து நடிகராக மாறிய அவரது பயணம் குறித்து அவர் பகிர்ந்த அனுபவங்கள் எங்களுக்கு நிறைய கற்றுக் கொடுத்தன.

 

ரக்ஷன், ஏஞ்சல், டிராவிட், சுதாகர் உள்ளிட்ட அனைவரும் படப்பிடிப்பு தளத்தை ஒரு கல்லூரி வளாகம் போல கலகலப்பாகமாற்றிவிட்டார்கள். படப்பிடிப்பு முழுவதும் மிகவும் மகிழ்ச்சியான சூழலில் நடந்தது. அமெரிக்காவில் நடைபெற்ற படப்பிடிப்பின்‘ப்ளூப்பர்ஸ்’ வீடியோவையும் விரைவில் வெளியிட திட்டமிட்டுள்ளோம்.

 

பீட்டர் ஹெய்ன் மாஸ்டர், எடிட்டர் பிரதீப் மற்றும் தொழில்நுட்பக்குழுவினர் அனைவரும் சிறப்பான பங்களிப்பை வழங்கியுள்ளனர். குறிப்பாக சுதாகர் திரையரங்குகளில் ரசிகர்களை பெரிதும் கவர்ந்துள்ளார். தமிழ் திரையுலகில் ஒரு சிறந்த பொழுதுபோக்கு நடிகருக்கான இடத்தை அவர் நிச்சயம் நிரப்புவார் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது.

 

இந்தப் படத்தை மக்களிடம் இயல்பாகவும் நேர்மையாகவும்கொண்டு சென்ற பத்திரிகை, மீடியா, நியூ மீடியா நண்பர்கள் அனைவருக்கும் எங்கள் மனமார்ந்த நன்றி. எங்கள் தொழில்நுட்பக் குழு, விநியோகஸ்தர்கள், Think Music, Netflix, போஸ்ட் புரொடக்ஷன் குழு, உதவி இயக்குநர்கள், மேலாண்மை குழு என அனைவருக்கும் என் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். ‘இதயம் முரளி’ திரைப்படத்தை வெற்றிப்படமாகமாற்றிய ரசிகர்கள் மற்றும் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை மனமார்ந்த நன்றி.”

 

திங் மியூசிக் நிறுவனத்தின் சார்பில் சந்தோஷ் பேசியதாவது.., 

 

“அனைவருக்கும் வணக்கம். ‘இதயம் முரளி’ திரைப்படத்துடன்இணைந்து பணியாற்றியதில் மிகவும் மகிழ்ச்சி. இந்த நிகழ்வுக்கு‘முரளி ரீயூனியன்’ என்ற டேக்லைன் வைத்திருப்பதும் மிகவும் பொருத்தமாக இருக்கிறது.

 

இயக்குநர் ஆகாஷ் பாஸ்கரனை முதன்முதலாக சந்தித்தபோது, இந்தப் படத்தின் பாடல்களின் ஸ்கிராட்ச் டிராக்குகளை மட்டும் கேட்க வைத்தார். அப்போது இசையமைப்பாளர் யார் என்பதைக் கூட சொல்லவில்லை. ஆனால் அந்த ட்யூன்கள் மிகவும் புத்துணர்ச்சியாகவும் வித்தியாசமாகவும் இருந்தன. பின்னர் இசையமைப்பாளர் தமன் என்று தெரிந்தவுடன் எனக்கு ஒரு இனிய நாஸ்டால்ஜிக் உணர்வு ஏற்பட்டது. ஏனெனில் தமனின் முதல் படத்தை  திங் மியூசிக் நிறுவனம்தான் வெளியிட்டது. அதன் பிறகு நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் அவருடன் இணைந்து பணியாற்றியதில் மகிழ்ச்சி.

 

இந்தப் படத்தில் மொத்தம் ஏழு பாடல்கள் இடம்பெற்றுள்ளன. தற்போது பல படங்களில் அறிவிக்கப்படும் அனைத்து பாடல்களும் இறுதியில் படத்தில் இடம்பெறுவதில்லை. ஆனால் இயக்குநர் ஆகாஷ் ஆரம்பத்திலேயே கொடுத்த வாக்குறுதியின்படிஏழு பாடல்களையும் முழுமையாக படத்தில்பயன்படுத்தியிருக்கிறார். அதையும் மிக அழகாக காட்சிப்படுத்தியிருப்பது இந்த ஆல்பத்தின் பெரிய பலம். நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு முழுமையான இசை ஆல்பத்தை‘இதயம் முரளி’ மூலம் பார்க்கிறோம். இந்த ஆண்டு அதிகம் ஸ்ட்ரீம்செய்யப்படும் தமிழ் திரைப்பட இசை ஆல்பங்களில் இதுவும் ஒன்றாக இருக்கும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

 

இசையமைப்பாளர் தமன் இந்த ஆல்பத்திற்காக மிகவும் அர்ப்பணிப்புடன் உழைத்திருக்கிறார். படம் தொடங்குவதற்கு முன்பே ஸ்கிராட்ச் டிராக்குகளில் இருந்து பல மாதங்கள் உழைத்து இந்த இசையை உருவாக்கியிருக்கிறார். அதேபோல் பாடலாசிரியர் விவேக் மற்றும் ஆதேஷ் கிருஷ்ணா ஆகியோரும்சிறப்பான வரிகளை எழுதியுள்ளனர். இந்த ஆல்பம் ஒரு முழுமையான இசை அனுபவத்தை வழங்குகிறது.

 

திங் மியூசிக் நிறுவனம் பல அறிமுக இயக்குநர்களின் முதல் படங்களுடன் இணைந்து பணியாற்றியுள்ளது. அந்த வரிசையில் இயக்குநர் ஆகாஷ் பாஸ்கரனின் அறிமுகப் படமும்இணைந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

 

அதர்வாவுடனும் இது ஒரு இனிய நினைவு. அவரது முதல் திரைப்படமான *‘பாணா காத்தாடி’*யின் இசையையும் திங்மியூசிக் நிறுவனம்தான் வெளியிட்டது. அதனால் இந்தப் படம் எங்களுக்கு உண்மையிலேயே ஒரு ‘ரீயூனியன்’ உணர்வைக்கொடுக்கிறது.

 

நட்டி சார் தனது நடிப்பால் அனைவரையும் கவர்ந்திருக்கிறார். அதேபோல் அதர்வாவின் நண்பர்களாக நடித்த ரக்ஷன், டிராவிட், ஏஞ்சல் உள்ளிட்ட அனைவரும் சிறப்பாக நடித்துள்ளனர். இப்படத்தின் முழுக் குழுவினருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகளையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.”

 

எழுத்தாளர் ரமணகிரிவாசன் பேசியதாவது.., 

 

“அனைவருக்கும் வணக்கம். முதலில் மயிலந்திரனுக்கு என் நன்றியைத் தெரிவிக்க வேண்டும். அவர்தான் என்னை இயக்குநர் ஆகாஷ் பாஸ்கரனிடம் அறிமுகப்படுத்தினார். அதன்பிறகு ஆகாஷுக்கும் என் நன்றி. அதைவிட முக்கியமாக, இந்தப்படத்தில் என்னுடன் ஒன்றரை ஆண்டுகளாக மிக நெருக்கமாக பணியாற்றிய பிரவீனுக்கு நான் தனியாக நன்றி சொல்ல வேண்டும்.

இந்த ஒன்றரை ஆண்டு பயணத்தில், வசனங்கள் குறித்து பிரவீன்என்னை தொடர்ந்து ஊக்கப்படுத்திக் கொண்டே இருந்தார். பொதுவாக பெரிய படங்களில் பக்கக்கணக்கில் வசனங்கள்எழுதுவோம். ஆனால் இந்தப் படத்தில் ஐந்து அல்லது ஆறு பக்கங்கள் எழுதினாலும், அதிலிருந்து ஐந்து வார்த்தைகள் மட்டும் திரையில் வந்தால்கூட அது கதைக்கு தேவையானதாக இருக்க வேண்டும் என்பதில் இயக்குநர் மிகவும் தெளிவாக இருந்தார்.

 

நாங்கள் முதன்முதலில் சந்தித்தபோதே தொடர்ந்து விவாதிக்கப்பட்ட ஒரு கேள்வி, ‘நாயகன் ஏன் தனது காதலை சொல்லவில்லை?’ என்பதுதான். ஒன்றரை ஆண்டுகளாக அந்தக் கேள்விக்கான பதிலைத் தேடிக்கொண்டே இருந்தோம். படம் வெளியாகும் தருவாயில், குறைந்தபட்சம் டிரெய்லரிலாவதுஅதற்கான காரணம் சொல்ல வேண்டும் என்று முடிவு செய்தோம்.

பல்வேறு யோசனைகளுக்குப் பிறகு, இறுதியில் ஆகாஷ்ஏற்றுக்கொண்ட வசனம், ‘காதலை சொல்ல முடியவில்லை… அதை ஏன் சொல்ல முடியவில்லை என்ற காரணத்தையும் சொல்ல முடியவில்லை’ என்பதுதான். அந்த ஒரு வசனமே இந்தக்கதையின் உணர்வையும், ‘இதயம் முரளி’ என்ற தலைப்பின்சாரத்தையும் முழுமையாக வெளிப்படுத்தியது.

 

இந்தப் படத்தின் வெற்றிக்குப் பின்னால் இருந்த மிகப் பெரிய காரணம், படக்குழுவின் ஒற்றுமையும் நட்பும்தான். ஒரே வகுப்பில் படித்த நான்கு நண்பர்கள்—இயக்குநர், ஒளிப்பதிவாளர், இணை இயக்குநர், இணை எழுத்தாளர்—அனைவரும் ஒன்றாக இணைந்து பணியாற்றியதால், படப்பிடிப்பு தளத்திலும், கதை விவாதங்களிலும் ஒரு அற்புதமான பாஸிடிவ்  ஆற்றல் இருந்தது.

 

ஆகாஷுடன் பல விஷயங்களில் வாதிட்டிருக்கிறோம், திறந்த மனதுடன் விவாதித்திருக்கிறோம். ஆனால் அந்த எல்லா விவாதங்களும் இறுதியில் இந்தப் படத்தின் வெற்றிக்கேவழிவகுத்துள்ளன. இன்று இந்த வெற்றியைப் பார்க்கும்போது, உங்களைப் போல நானும் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். இந்த வெற்றிப் பயணம் தொடர்ந்து நீடிக்க என் மனமார்ந்த வாழ்த்துகள்.”

 

பாடலாசிரியர் ஆதேஷ் கிருஷ்ணா பேசியதவது.., 

‘இதயம் முரளி’ போன்ற அழகான திரைப்படத்திலும், அதில் இடம்பெற்ற அற்புதமான பாடலிலும் எனக்கு வாய்ப்பு வழங்கியஇயக்குநர் ஆகாஷ் பாஸ்கரன் சாருக்கு என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். அதேபோல், இந்தப்பயணத்தில் எப்போதும் உறுதுணையாக இருந்த திங் மியூசிக்நிறுவனத்திற்கும், மகேசன் மற்றும் சந்தோஷ் சாருக்கும் என் நன்றி.

 

இசையமைப்பாளர் தமன் சாருடன் பணியாற்றியது எனக்கு மிகவும் இனிமையான அனுபவம். அவர் ஒரு இசையமைப்பாளர் மட்டுமல்ல, மிகவும் ஜாலியாக அண்ணன் போல பழகுபவர். அவருடன் பணியாற்றிய ஒவ்வொரு தருணத்தையும் நான் ரசித்தேன். குறிப்பாக ‘வாமா வாமா’ பாடலுக்கு ரசிகர்கள் அளித்த ஆதரவு என்னை மிகவும் நெகிழ்ச்சியடைய வைத்துள்ளது. அந்த அன்புக்கும் வரவேற்புக்கும் மனமார்ந்த நன்றி. தொடர்ந்து இதேபோல் ஆதரவு அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். ‘இதயம் முரளி’ திரைப்படத்தின் முழு நடிகர், தொழில்நுட்பக்குழுவினருக்கும் என் வாழ்த்துகள். நன்றி.”

 

 

ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சாபேசியதாவது.., 

 

“அனைவருக்கும் வணக்கம். நாங்கள் எல்லோரும் இயக்குநர் ஆகாஷ் பாஸ்கரனை நகைச்சுவையாக ‘ஹெட்மாஸ்டர்’ என்று அழைப்போம். அதற்கு ஒரு காரணம் இருக்கிறது. 2018-ம்ஆண்டிலிருந்தே இந்தக் கதையை நான் அறிவேன். அன்றிலிருந்து இன்று வரை அவர் இந்தப் படத்திற்காக தொடர்ந்து போராடிக்கொண்டே இருந்தார். ஆகாஷ் மிகவும் அமைதியான, வெகுளியான மனிதர். அந்த அளவுக்கு வெகுளியானவர் என்றாலும், தனது கனவை யாரிடமும் விட்டுக்கொடுக்காமல், இறுதியில் தானே தயாரிப்பாளராக மாறி இந்தப் படத்தை உருவாக்கினார். 2018-லிருந்து ஒவ்வொரு ஆண்டும் ‘ஒரு நல்ல தயாரிப்பாளர், ஒரு சரியான இசையமைப்பாளர் கிடைத்தால் இந்தப் படத்தை ஆரம்பிப்போம்’ என்று சொல்லிக்கொண்டே இருந்தார். பல ஆண்டுகள் காத்திருந்தோம். இன்று இந்தப் படத்தைப் பார்த்தவர்கள், முன்பு தவறவிட்டவர்கள் நிச்சயம் வருத்தப்படுவார்கள்.

 

ஒரு நல்ல இசையமைப்பாளர் ஒரு படத்திற்கு எவ்வளவு முக்கியம் என்பதை இந்தப் படத்தின் மூலம் உணர்ந்தோம். தமன் இந்தத்திரைப்படத்தில் இணைந்த பிறகுதான் அனைத்தும் வேகமாக முன்னேறியது. அவரிடம் இசை பெறுவது எவ்வளவு கடினம் என்பது அனைவருக்கும் தெரியும்.  தெலுங்கில் அவர் அவ்வளவு பிஸி.  ஆனால் அவர் இணைந்தது இந்தப் படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்தது. குறிப்பாக தமன் இசையமைத்த பாடல்கள்திரையரங்குகளில் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பைப்பெற்றுள்ளன.

 

இந்தப் படத்தை ஆகாஷ் தயாரிக்க வேண்டும் என்று அதிகமாக வலியுறுத்தியவர்களில் நானும் ஒருவன். அமெரிக்காவில் புரொமோஷூட் எடுத்தபோது, பெரிய நிறுவனங்களுடன் பணிபுரிந்தஅனுபவத்தில் ஒரு காதல் கதைக்கு அவர்கள் கொடுத்த முன்னுரிமை மிகவும் குறைவாக இருந்தது. அப்போது, ‘நீங்களே தயாரிப்பாளராக இருந்தால்தான் நினைத்தபடி படத்தைஉருவாக்க முடியும்’ என்று அவரிடம் கூறினேன். அந்த முடிவுதான்இன்று இந்த வெற்றிக்கு அடித்தளமாக அமைந்தது.

 

இன்று திரைப்படத் தயாரிப்பில் பெரும்பாலான பட்ஜெட் நடிகர்களின் சம்பளத்திற்கே செல்கிறது. ஆனால் ஒரு நல்ல கதைக்கு தேவையான தயாரிப்பு தரத்தில் சமரசம் செய்யக்கூடாது என்ற முடிவை ஆகாஷ் எடுத்தார். அது பாராட்டப்பட வேண்டிய விஷயம். புதிய தயாரிப்பாளர்களுக்கு இது ஒரு முன்னுதாரணமாகஇருக்கும். இந்தப் படத்திற்காக பல இடங்களில் பிரம்மாண்டமான செட்கள் அமைக்கப்பட்டன. சில காட்சிகள் சில நிமிடங்களே திரையில் வந்தாலும், அதற்காக எந்த சமரசமும்செய்யாமல் செலவு செய்து உருவாக்கப்பட்டது. இப்படிப்பட்ட அர்ப்பணிப்புள்ள தயாரிப்பாளர்கள் அதிகம் வர வேண்டும் என்பதே என் விருப்பம்.

 

அதர்வாவுடன் இதற்கு முன்பும் ஒரு இசை ஆல்பத்தில்பணியாற்றியிருக்கிறேன். அப்போதே அவர் போன்ற திறமையான நடிகருக்கு ஒரு மிகப்பெரிய வெற்றிப் படம் கிடைக்க வேண்டும் என்று நினைத்தேன். இன்று ‘இதயம் முரளி’ அந்த வெற்றியை அவருக்கு கொடுத்திருப்பதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. இந்த வெற்றி அவருக்குக் கிடைக்க வேண்டியதுதான்.

 

படத்தின் நாயகிகள்  இருவரும் ஆரம்பத்திலிருந்தே மிகவும் அர்ப்பணிப்புடன் பணியாற்றினார்கள். இந்த இரண்டு ஆண்டுகளில் அவர்கள் வேறு படங்களிலும் வளர்ச்சி பெற்றாலும், இந்தப் படத்திற்கு முழு ஒத்துழைப்பையும் வழங்கினர். திரையில்அவர்களுடைய நடிப்பு, தோற்றம்,  நாயகனுடனான கெமிஸ்ட்ரிஆகியவை படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளன.

 

நண்பர்கள் கதாபாத்திரங்களில் நடித்த அனைவரும் படப்பிடிப்பு தளத்தை உற்சாகமாக வைத்திருந்தனர். நட்டி சார் உள்ளிட்ட அனைத்து நடிகர்களும் முழு ஒத்துழைப்பை வழங்கினர். தொழில்நுட்பக் குழு, தயாரிப்புக் குழு என அனைவருடனும்பணியாற்றியது மறக்க முடியாத அனுபவம். மீண்டும் ஒரு புதிய படத்தை தொடங்கும் உணர்வோடு இந்த வெற்றியை கொண்டாடுகிறோம். இந்தப் படத்திற்கு ஆதரவு அளித்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி.”

நெக்ஸா இந்தியன் ஸ்ட்ரீமிங் அகாடமி விருதுகள்’ விழாவில் சிறந்த இசையமைப்பாளராக கௌரவிக்கப்பட்ட சாம் சி எஸ் !*

 *‘நெக்ஸா இந்தியன் ஸ்ட்ரீமிங் அகாடமி விருதுகள்’ விழாவில் சிறந்த இசையமைப்பாளராக கௌரவிக்கப்பட்ட சாம் சி எஸ் !*



இந்தியாவின் முன்னணி OTT படைப்புகளை கௌரவிக்கும் NEXA Indian Streaming Academy Awards விருதுகள் விழாவில், இசையமைப்பாளர் சாம் சி எஸ் தனது இசைப் பயணத்தில் மேலும் ஒரு முக்கிய மைல்கல்லை எட்டியுள்ளார். ‘சுழல் 2’ (Suzhal 2) வெப் தொடருக்காக ‘Best Original Soundtrack – Regional’ விருதை வென்று, தனது தனித்துவமான இசை மொழிக்காக மீண்டும் ஒருமுறை தேசிய அளவில் பாராட்டைப் பெற்றுள்ளார்.


இந்த விருதுகள் அறிவிப்பில் ‘சுழல் - சீசன் 2’ சீரிஸ் மொத்தம் மூன்று முக்கிய விருதுகளை வென்று சாதனை படைத்துள்ளது. Winner of Best Series (Regional) - சுழல் - 2, சிறந்த பிராந்திய ஒரிஜினல் சவுண்ட்டிராக் (Best Original Soundtrack – Regional) - சாம் சி எஸ், Best Actor – Series (Female) Critics, Regional - ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகிய பிரிவுகளில் வெற்றி பெற்று, இந்த சீரிஸ் தனது தரமான படைப்பை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.


சாம் சி எஸ் இசையில் பின்னணி இசைக்கு எப்போதுமே தனி அடையாளம் உண்டு. ஒரு காட்சியின் பதற்றம், உணர்வு, மர்மம், வலி அல்லது உற்சாகத்தை வெறும் இசையின் மூலம் பார்வையாளர்களிடம் கொண்டு சேர்க்கும் திறன் அவரை சமகால இந்திய இசையமைப்பாளர்களில் தனித்துவமாக நிறுத்துகிறது. குறிப்பாக த்ரில்லர், சஸ்பென்ஸ் மற்றும் இன்வெஸ்டிகேஷன் கதைகளுக்கு அவர் அமைக்கும் இசை, கதையின் முக்கிய கதாபாத்திரமாகவே மாறிவிடுகிறது.


‘சுழல் 2’ சீரிஸில் கிராமத்து பின்னணி, மர்மம், குடும்ப உறவுகள் மற்றும் குற்ற விசாரணை ஆகிய அனைத்தையும் இணைக்கும் வகையில் சாம் சி எஸ் அமைத்த இசை, அந்த சீரிஸின் வெற்றியில் முக்கிய பங்காற்றியது. ஒவ்வொரு காட்சிக்கும் ஏற்ற இசை வடிவமைப்பு, பார்வையாளர்களை கதைக்குள் முழுமையாக இழுத்துச் சென்றது. அதற்கான அங்கீகாரமாகவே இந்த தேசிய விருது பார்க்கப்படுகிறது.


திரைப்படங்களோ, வெப் சீரிஸ்களோ என எந்த வடிவமாக இருந்தாலும், கதைக்கு ஏற்ற இசையை வழங்குவதே தனது பாணி என்பதை சாம் சி எஸ் தொடர்ந்து நிரூபித்து வருகிறார். வணிக ரீதியிலான இசையையும், கலைநயமிக்க பின்னணி இசையையும் சமநிலையுடன் வழங்கும் அவரது திறமை, அவரை இயக்குநர்களின் விருப்பமான இசையமைப்பாளர்களில் ஒருவராக மாற்றியுள்ளது.


தற்போது தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் பிஸியாக பணியாற்றி வரும் சாம் சி எஸ், தமிழில் “கராத்தே பாபு”, “சர்தார் 2”, புஷ்கர்–காயத்ரி இயக்கும் புதிய திரைப்படம், ஹெச். வினோத் – தனுஷ் கூட்டணி படம், “டிமான்டி காலனி 3” உள்ளிட்ட முக்கிய படங்களுக்கும் இசையமைத்து வருகிறார். இந்நிலையில், ராம் போதினேனியின் முதல் இயக்குநர் படமும் அவரது கைவசம் வந்திருப்பது ரசிகர்களின் கவனத்தை மேலும் ஈர்த்துள்ளது.


தொடர்ச்சியாக தேசிய அளவிலான அங்கீகாரங்களையும், மொழிகளைத் தாண்டிய படைப்புகளையும், வித்தியாசமான இசை முயற்சிகளையும் பதிவு செய்து வரும் சாம் சி எஸ், இந்திய திரையுலகின் மிகவும் பிஸியான மற்றும் அதிகம் எதிர்பார்க்கப்படும் இசையமைப்பாளர்களில் ஒருவராக தொடர்ந்து தனது இடத்தை வலுப்படுத்தி வருகிறார். ‘சுழல் 2’ சீரிஸிற்காக கிடைத்துள்ள இந்த விருது, அவரது இசைப் பயணத்தில் மேலும் ஒரு பெருமைமிக்க அத்தியாயமாக அமைந்துள்ளது.


🔗 https://www.instagram.com/p/Da8EwILt5oL/?igsh=bTV2aHk1a200Yzdu

72-வது தேசிய திரைப்பட விருதுகள் - மூன்று தேசிய விருதுகளை வென்றது ‘அமரன்

 72-வது தேசிய திரைப்பட விருதுகள் - மூன்று தேசிய விருதுகளை வென்றது ‘அமரன்’



சென்னை, 18 ஜூலை 2026


ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல், சோனி பிக்சர்ஸ் மற்றும் டர்மெரிக் மீடியா இணைந்து தயாரித்த 'அமரன்' திரைப்படம் மூன்று தேசிய விருதுகளை வென்றுள்ளது. 


நேற்று அறிவிக்கப்பட்ட 72-வது தேசிய திரைப்பட விருதுகளில் அமரன் பெற்றிருக்கும் அங்கீகாரம் தயாரிப்பாளர்களுக்குப் பெருமை சேர்க்கும் தருணம். இது இந்தப் படத்தில் பங்களிப்பாற்றிய ஒவ்வொரு கலைஞர் மற்றும் தொழில்நுட்பக் கலைஞரின் உழைப்பிற்கும் அர்ப்பணிப்பிற்கும் கிடைத்த வெற்றி. 


கமல் ஹாசன் மற்றும் ஆர். மகேந்திரன் தயாரிப்பில் உருவான இந்தத் திரைப்படம், பின்வரும் முக்கிய பிரிவுகளில் விருதுகளைப் பெற்றுள்ளது:


* சிறந்த இயக்குனர் – ராஜ்குமார் பெரியசாமி

* சிறந்த இசை அமைப்பு (பின்னணி இசை) – ஜி. வி. பிரகாஷ் குமார்

* சிறந்த படத்தொகுப்பாளர் (எடிட்டர்) – ஆர். கலைவாணன்


இந்த விருதுகள், அமரன் திரைப்படத்தை ஒரு மகத்தான காவியமாக மாற்றிய மூன்று கலைஞர்களின் அசாத்திய திறமையைக் கொண்டாடுகின்றன. 


அசோகச் சக்ரா விருது பெற்ற மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு இந்தத் திரைப்படம் உருவாக்கப்பட்டது. தாய்திரு நாட்டிற்காகத் தீரத்துடன் போராடிய இந்தியாவின் மிகச்சிறந்த ராணுவ வீரர்களில் ஒருவருக்குச் செலுத்தும் மரியாதையாக இப்படம் அமைந்துள்ளது. இதன் உணர்வுப்பூர்வமான கதை, வீரத்தையும் தியாகத்தையும் காட்டிய விதம் மற்றும் தொழில்நுட்பத் தரம் ஆகியவற்றுக்காக இது ரசிகர்களால் பெரிதும் பாராட்டப்பட்டது.


திரு. கமல் ஹாசன் கூறியது:


"சிறந்த இயக்குனருக்கான தேசிய விருதை வென்ற ராஜ்குமார் பெரியசாமிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள். உங்களது தெளிவான இயக்கத்திற்கும் கதை சொல்லும் திறமைக்கும் கிடைத்த தகுதியான அங்கீகாரம் இது. சிறந்த பின்னணி இசைக்காக விருது வென்றிருக்கும் ஜி. வி. பிரகாஷ் குமாருக்கும், சிறந்த படத்தொகுப்பிற்காக விருது வென்றிருக்கும் ஆர். கலைவாணனுக்கும் எனது பாராட்டுகள். உங்களது உழைப்பு அமரன் படத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றது.


சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவிக்கு என் நன்றிகள். சில நடிப்புகள் விருதுகளையும் தாண்டியவை. அமரன் படத்திற்கு உண்மையான, அழகான மற்றும் அழுத்தமான நடிப்பைக் கொடுத்ததற்கு நன்றி. மேஜர் முகுந்த் வரதராஜன் மற்றும் இந்து ரெபேக்காவாக நீங்கள் இருவரும் நடித்தது இந்திய சினிமா வரலாற்றில் எப்போதும் நிலைத்திருக்கும்.


அமரன் திரைப்படம் பெறும் ஒவ்வொரு விருதும் அங்கீகாரமும் மேஜர் முகுந்த் வரதராஜனின் வீரத்தையும் தியாகத்தையும் என்றென்றும் அழியாமல் மாற்றுகிறது. கடந்த 46 ஆண்டுகளாக, ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தரமான சினிமாக்களை ஆதரித்து வருகிறது. இந்தத் தேசிய விருதுகள், மகிழ்ச்சியையும் பெருமையை மட்டுமல்ல, உண்மையான இந்தியக் கதைகளைத் தரமாகச் சொல்வதில் எங்களுக்கிருக்கும் கடமையை மீண்டும் உறுதிப்படுத்துகின்றன.


டர்மெரிக் மீடியா தயாரிப்பாளர் திரு. ஆர். மகேந்திரன் கூறியது:


"2016-ல், விஜய் டிவிக்காக 'முதல் மரியாதை – சல்யூட் டூ த இந்தியன் ஆர்மி' என்ற நிகழ்ச்சியைத் தயாரித்தபோது, மேஜர் முகுந்த் வரதராஜனின் கதையை நான் முதன்முதலில் தெரிந்துகொண்டேன். அவரது வீரம், திருமதி. இந்துவின் அமைதியான மனவலிமை மற்றும் நம் ராணுவ வீரர்களின் குடும்பங்கள் செய்த தியாகங்கள் என் மனதை விட்டு நீங்கவே இல்லை.


ராணுவச் சீருடைக்கு பின்னால் இருக்கும் மனிதரைப் பற்றி ஒவ்வொரு இந்தியரும், முக்கியமாக ஒவ்வொரு குழந்தையும் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக இந்த கதையை 'அமரன்' படம் மூலம் சொல்ல 2024-ல் முடிவு செய்தோம்.


அமரன் திரைப்படம் இந்திய சினிமாவின் உயரிய அங்கீகாரமான மூன்று தேசிய திரைப்பட விருதுகளைப் பெற்றுள்ளது.


சில பயணங்கள் திரைப்படமாகத் தொடங்கும். ஆனால் சில பயணங்கள் நம் இதயத்திற்கு மிக நெருக்கமானதாக மாறும். அமரன் அப்படிப்பட்ட ஒரு பயணம். அமரன் குழுவை நினைத்து மிகவும் நெகிழ்ச்சியாகவும், நன்றியுடனும், பெருமையாகவும் இருக்கிறது.” 



நேற்று அறிவிக்கப்பட்டுள்ள தேசிய விருதுகள், சமீபத்தில் வெளியான மிகச்சிறந்த இந்தியப் படங்களுள் ஒன்றாக மீண்டும் நிலைநிறுத்தியுள்ளது. தேசிய முக்கியத்துவமும், கலைநயமும் மிக்க திரைப்படங்களை உருவாக்குவதில் ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல், சோனி பிக்சர்ஸ் மற்றும் டர்மெரிக் மீடியா ஆகிய நிறுவனங்களின் கூட்டு முயற்சியை இது மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.

46 ஆண்டுகால திரைப்பயணத்தில் மேலும் ஒரு மகுடம் சூட்டிய 'அமரன்' – 72-வது தேசிய திரைப்பட விருதுகளில் மூன்று விருதுகளை வென்றது

 46 ஆண்டுகால திரைப்பயணத்தில் மேலும் ஒரு மகுடம் சூட்டிய 'அமரன்' – 72-வது தேசிய திரைப்பட விருதுகளில் மூன்று விருதுகளை வென்றது!



இந்திய திரையுலகில் நடிகர், திரைப்பட இயக்குநர், தயாரிப்பாளர் என பன்முகத் திறமையுடன் தனது தனித்துவமான கலைப் பார்வையால் அழியாத முத்திரையைப் பதித்துள்ள கமல்ஹாசனின் 'ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல்' நிறுவனம், தனது 46-வது ஆண்டைப் பெருமையுடன் கொண்டாடி வருகிறது. அந்த மகத்தான திரைப்பயணத்தில் மேலும் ஒரு பெருமைமிகு அத்தியாயமாக 'அமரன்' திரைப்படம் இடம்பிடித்துள்ளது.


கமல்ஹாசன் வழங்கியுள்ள இப்படத்தை கமல்ஹாசன் மற்றும் ஆர். மகேந்திரன் ஆகியோர் தயாரித்துள்ளனர். வலுவான கதைகளையும், திறமையான படைப்பாளிகளையும் மிகப் பெரிய திரை அனுபவமாக ரசிகர்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற அவர்களின் உறுதியின் அடையாளமாக 'அமரன்' திரைப்படம் உருவாகியுள்ளது.


நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் நடிகை சாய் பல்லவி ஆகியோரின் அர்ப்பணிப்புமிக்க நடிப்பு, கதையின் உணர்வுகளையும், உண்மைத்தன்மையையும் சிறப்பாக வெளிப்படுத்தி ரசிகர்களின் மனதில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியது.


தற்போது, 72-வது தேசிய திரைப்பட விருதுகளில் 'அமரன்' திரைப்படம் மூன்று உயரிய விருதுகளை வென்று சாதனை படைத்துள்ளது.


- சிறந்த இயக்குநருக்கான தேசிய விருது – ராஜ்குமார் பெரியசாமி

- சிறந்த இசையமைப்பாளர் (பின்னணி இசை) தேசிய விருது – ஜி.வி. பிரகாஷ் குமார்

- சிறந்த படத்தொகுப்பாளர் தேசிய விருது – ஆர். கலைவாணன்


கதையைத் தெளிவான பார்வையுடனும், வலுவான திரைக்கதை மொழியுடனும் திரையில் உயிர்ப்பித்ததற்காக இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இந்த தேசிய விருதைப் பெற்றுள்ளார். படத்தின் உணர்வுகளையும், காட்சிகளின் தீவிரத்தையும் தனது பின்னணி இசையின் மூலம் மேலும் வலுப்படுத்தியதற்காக ஜி.வி.பிரகாஷ் குமார் கௌரவிக்கப்பட்டுள்ளார். அதேபோல், திரைப்படத்தின் கதை சொல்லும் ஓட்டத்தை நேர்த்தியாக வடிவமைத்த ஆர். கலைவாணனின் படத்தொகுப்பு தேசிய அளவில் பாராட்டைப் பெற்றுள்ளது.


இந்த மூன்று தேசிய விருதுகளும் தனிநபர்களின் சாதனையை மட்டுமல்லாமல், தயாரிப்பாளரின் நம்பிக்கை, கலைஞர்களின் அர்ப்பணிப்பு மற்றும் படைப்புக் குழுவின் ஒட்டுமொத்த உழைப்பின் வெற்றியையும் கொண்டாடுகின்றன.


46-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ள ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல், அர்த்தமுள்ள, லட்சியமிக்க மற்றும் காலத்தால் நிலைத்திருக்கும் இந்திய திரைப்படங்களை தொடர்ந்து உருவாக்கும் தனது உறுதியை 'அமரன்' திரைப்படத்தின் இந்த தேசிய விருதுகள் மூலம் மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்தியுள்ளது.

’Captain Miller' Earns Two National Honours, Further Strengthening Sathya Jyothi Films' Legacy of Excellence

 *’Captain Miller' Earns Two National Honours, Further Strengthening Sathya Jyothi Films' Legacy of Excellence*



_*Three Generations. Seven Decades. One Enduring Legacy of National Recognition.*_


The 72nd National Film Awards have added another glorious chapter to the illustrious journey of Sathya Jyothi Films, as Captain Miller has earned two prestigious honours on the national stage. The film has been recognised with the award for Best Feature Film Promoting National, Social and Environmental Values, while Dhanush has been honoured with a Special Mention for his powerful performance, making it a proud and memorable occasion for everyone associated with the film.


For Sathya Jyothi Films, these accolades represent far more than a moment of celebration. They reaffirm a cinematic legacy built over seven decades, spanning three generations of filmmakers who have consistently championed meaningful storytelling, artistic excellence, and socially relevant cinema.


The foundation of this remarkable journey dates back to the late 1950s with Venus T. Govindarajan, whose landmark production Kalyana Parisu (1959) earned the National Award for Best Feature Film in Tamil. The family's proud association with National Award-winning cinema continued with R.M. Veerappan's Rickshawkaran (1972), which brought Makkal Thilagam M.G. Ramachandran the National Award for Best Actor, marking another historic milestone in the family's contribution to Indian cinema.


Carrying this rich heritage forward, T.G. Thyagarajan transformed Sathya Jyothi Films into one of Tamil cinema's most respected production banners. His critically acclaimed production Moondram Pirai went on to win three National Film Awards, including the first National Award of Kamal Haasan's illustrious career, reinforcing the banner's unwavering commitment to producing cinema of exceptional artistic merit.


Today, the third generation, Sendhil Thyagarajan and Arjun Thyagarajan, continues to uphold that enduring legacy with the same passion and vision. Their productions have consistently earned both audience appreciation and critical acclaim. Viswasam received the National Award for Best Music Direction, and now Captain Miller has further strengthened the banner's remarkable legacy by securing two honours at the 72nd National Film Awards, following its international recognition at the UK National Film Awards in 2024.


Sathya Jyothi Films extends its heartfelt gratitude to director Arun Matheswaran, actor Dhanush, the entire cast, technicians, creative collaborators, and every member of the Captain Miller team whose unconditional dedication and collective vision made this achievement possible. The production house also congratulates Dhanush on receiving the Special Mention, an honour that further celebrates the passion and commitment that went into bringing this ambitious story to life.


For over seven decades, Sathya Jyothi Films has remained steadfast in its pursuit of cinema that entertains, inspires, and creates a lasting impact on society. The National recognition for Captain Miller is not merely another accolade for the banner, but a continuation of a legacy defined by excellence, integrity, and a deep commitment to storytelling that transcends generations.



As Sathya Jyothi Films looks ahead to the future, these twin National honours stand as both a celebration of its remarkable journey and an inspiration to continue creating films that reflect with audiences while enriching the beauty of Indian cinema.

*ZEE5 தனது KidZ பிரபஞ்சத்தை புராண அனிமேஷன் தொடரான 'Shivlok Ke Kundakka Mandakka' மூலம் விரிவுபடுத்துகிறது

 *ZEE5 தனது KidZ பிரபஞ்சத்தை புராண அனிமேஷன் தொடரான 'Shivlok Ke Kundakka Mandakka' மூலம் விரிவுபடுத்துகிறது* 



*இந்திய புராண உலகத்தை குழந்தைகள் மற்றும் குடும்பங்களுக்கு ஆறு மொழிகளில் புதுமையாக அறிமுகப்படுத்தும் அசல் அனிமேஷன் தொடர்*


தேசியம் | ஜூலை 15, 2026: குழந்தைகளுக்கான பாதுகாப்பான, மகிழ்ச்சியான மற்றும் குற்றவுணர்வில்லாத (Guilt-Free) திரை நேர அனுபவத்தை வழங்கும் பிரபல தளமான KidZ on ZEE5, தனது குழந்தைகளுக்கான உள்ளடக்கத் தொகுப்பை மேலும் வலுப்படுத்தும் வகையில் புதிய புராண அனிமேஷன் தொடரான Shivlok Ke Kundakka Mandakka (SKM)-வை அறிமுகப்படுத்தியுள்ளது.


புகழ்பெற்ற எழுத்தாளர் ஆனந்த் நீலகண்டன் எழுதிய அதிகம் விற்பனையான குழந்தைகள் நூலான The Very, Extremely, Most Naughty Asura Tales for Kids-ஐ அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்தத் தொடர், அனைவராலும் விரும்பப்படும் புராண உலகத்தை அனிமேஷன் வடிவில் திரையில் உயிர்ப்பிக்கிறது.


ஜூலை 17 முதல் ஒளிபரப்பாகவுள்ள இந்தக் கதையின் மையமாக, குறும்புத்தனமான அசுர இரட்டையர்களான குண்டக்கா மற்றும் மண்டக்கா இடம்பெறுகின்றனர். அவர்களின் விளையாட்டுத்தனமான குறும்புகள், தைரியம், நட்பு மற்றும் சுயஅறிதல் நிறைந்த அசாதாரணமான சாகசப் பயணத்திற்கு அவர்களை அழைத்துச் செல்கின்றன.


ராமாயணம் மற்றும் மகாபாரதம் போன்ற அனைவருக்கும் பரிச்சயமான கதைகளைத் தாண்டி விரியும் புராண உலகில் அமைந்துள்ள இந்தத் தொடர், இந்தியாவின் செழுமையான புராண பாரம்பரியத்தால் ஈர்க்கப்பட்ட புதிய கதாபாத்திரங்கள், இதுவரை ஆராயப்படாத உலகங்கள் மற்றும் மாயாஜால சாகசங்களை குழந்தைகள் மற்றும் குடும்பங்களுக்கு அறிமுகப்படுத்துகிறது.


நகைச்சுவை, அதிரடி மற்றும் வண்ணமயமான அனிமேஷன் ஆகியவற்றின் கலவையுடன், இன்றைய இளம் தலைமுறைக்காக புராணங்களை புதிய கோணத்தில் மறுவடிவமைக்கும் இந்தத் தொடர், முழுமை (Perfection) அல்ல, ஒருவர் எடுக்கும் முடிவுகளே அவரை ஹீரோவாக உருவாக்குகின்றன என்ற கருத்தையும் வலியுறுத்துகிறது.


விரிவடையவிருக்கும் மிகப்பெரிய புராண பிரபஞ்சத்தின் முதல் படைப்பாக உருவாக்கப்பட்டுள்ள Shivlok Ke Kundakka Mandakka, புதிய கதாபாத்திரங்கள், புதிய சாகசங்கள் மற்றும் புதிய கதைகள் மூலம் தொடர்ந்து வளரக்கூடிய உலகத்திற்கு அடித்தளமிடுகிறது. இதன் மூலம், இந்திய புராணங்களை விளையாட்டுத்தனமான, எதிர்பாராத மற்றும் புத்துணர்ச்சியூட்டும் புதிய பார்வையில் இளம் பார்வையாளர்கள் அனுபவிக்க முடியும்.


கதையின் மையமாக இரண்டு குறும்புத்தனமான அசுர கதாபாத்திரங்களை வைத்து, விளையாட்டுத்தனமான குழந்தைகளுக்கு மதிப்புகளோ ஒழுக்கமோ இல்லை என்ற பொதுவான கருத்தை இந்தத் தொடர் சவாலுக்கு உட்படுத்துகிறது. குண்டக்கா மற்றும் மண்டக்காவின் சாகசங்கள் மூலம், ஆர்வமும் குறும்புத்தனமும் கருணை, தைரியம் மற்றும் பரிவு போன்ற உயரிய பண்புகளுடன் இணைந்து இருக்க முடியும் என்பதை பார்வையாளர்கள் உணர்கிறார்கள்.


KidZ மூலம், இந்திய கலாச்சாரத்தையும் சமகாலக் கதையம்சங்களையும் அடிப்படையாகக் கொண்ட, பாதுகாப்பான மற்றும் வயதுக்கேற்ற பொழுதுபோக்கை வழங்கும் நம்பகமான தளத்தை குழந்தைகள் மற்றும் குடும்பங்களுக்காக ZEE5 உருவாக்கி வருகிறது.


குழந்தைகளும் பெற்றோர்களும் ஒன்றாகக் கண்டு ரசிக்கும் குடும்பப் பார்வை அனுபவமாக வடிவமைக்கப்பட்டுள்ள இந்தத் தொடர், பொழுதுபோக்குடன் காலத்தால் அழியாத வாழ்க்கை மதிப்புகளையும் கொண்டாடுகிறது.


Shivlok Ke Kundakka Mandakka தொடர் இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், வங்காளம் மற்றும் ஆங்கிலம் ஆகிய ஆறு மொழிகளில் வெளியாகிறது.


டிரெய்லர் இணைப்பு: https://www.youtube.com/watch?v=0KSXQAy2GgY


இந்த அறிமுகம் குறித்து KidZ, ZEE5-ன் Business Head சந்தன் கந்தேல்வால் கூறியதாவது:


"ZEE5-இல், தலைமுறைகள் கடந்து மக்களால் நேசிக்கப்பட்ட கதைகளே நீண்ட காலம் நிலைத்திருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம். அதனால், ஆனந்த் நீலகண்டன் போன்ற புகழ்பெற்ற கதைசொல்லிகளுடன் இணைந்து, அந்த உலகங்களை இன்றைய இளம் பார்வையாளர்களுக்காக உயிர்ப்பிக்கிறோம்.


Shivlok Ke Kundakka Mandakka மூலம், அனைவருக்கும் ஏற்கனவே தெரிந்த புராணங்களைத் தாண்டி, மறக்க முடியாத கதாபாத்திரங்கள், நகைச்சுவை, சாகசம் மற்றும் காலத்தால் அழியாத மதிப்புகள் நிறைந்த புதிய உலகத்தை குடும்பங்களுக்கு அறிமுகப்படுத்த விரும்பினோம்.


இந்திய புராணங்களின் செழுமையையும், ஈர்க்கக்கூடிய கதையம்சங்களையும், உயர்தர அனிமேஷனையும் இணைத்து, குழந்தைகளுக்கும் பெற்றோர்களுக்கும் சமமாக மகிழ்ச்சியளிக்கும், அர்த்தமுள்ள குடும்பப் பார்வை அனுபவத்தை உருவாக்கியுள்ளோம்.


KidZ தொடர்ந்து வளர்ந்து வரும் நிலையில், இந்தியாவின் கதை சொல்லும் பாரம்பரியத்தை குழந்தைகள் மற்றும் குடும்பங்கள் எளிதில் தொடர்புபடுத்திக் கொள்ளும் வகையில் புதிய வடிவில் வழங்கும் படைப்பாளிகளுடன் இணைந்து, இந்தியாவில் உருவாகும் புதிய பிராண்டு கதைகளை உருவாக்குவதே எங்கள் முக்கிய நோக்கமாகும்."


இந்தத் தழுவல் குறித்து எழுத்தாளர் ஆனந்த் நீலகண்டன் கூறியதாவது:


"என்னுடைய The Very, Extremely, Most Naughty Asura Tales for Kids என்ற நூலை KidZ, Shivlok Ke Kundakka Mandakka என்ற அனிமேஷன் தொடராக உயிர்ப்பித்து, புதிய தலைமுறை குழந்தைகளிடம் கொண்டு சேர்ப்பதைப் பார்க்க மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.


இந்தியாவின் செழுமையான புராண பாரம்பரியத்தை அடிப்படையாகக் கொண்ட கதைகளில் இவ்வளவு பெரிய தளங்கள் முதலீடு செய்து, குழந்தைகளுக்காக அவற்றை இவ்வளவு சுவாரஸ்யமான முறையில் மறுவடிவமைப்பதைப் பார்ப்பது உற்சாகமளிக்கிறது.


நான் குண்டக்கா மற்றும் மண்டக்காவை உருவாக்கியபோது அனுபவித்த மகிழ்ச்சியைப் போலவே, இளம் பார்வையாளர்களும் அவர்களின் திரை சாகசங்களை ரசிப்பார்கள் என்று நம்புகிறேன். இந்த குறும்புக்கார கதாபாத்திரங்களும் அவர்களின் உலகமும் அனிமேஷன் மூலம் புதிய உயிர் பெறுவது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது."


ZEE5 பற்றி


ZEE5 என்பது இந்தியாவின் மிகப்பெரிய உள்நாட்டு வீடியோ ஸ்ட்ரீமிங் தளமாகவும், தெற்காசிய உள்ளடக்கங்களை உலகின் 190-க்கும் மேற்பட்ட நாடுகளில் உள்ள பார்வையாளர்களிடம் கொண்டு சேர்க்கும் உலகளாவிய பொழுதுபோக்கு தளமாகவும் விளங்குகிறது.


Zee Entertainment Enterprises Ltd.-இன் டிஜிட்டல் பொழுதுபோக்கு தளமான ZEE5, மொழி முதன்மை (Language-first) அணுகுமுறையை அடிப்படையாகக் கொண்டு, உள்ளூர் தேவைகளுக்கேற்ற உள்ளடக்கம், மொழி அடிப்படையிலான சந்தா திட்டங்கள் மற்றும் தனிப்பயனாக்கப்பட்ட அனுபவங்களை இந்தி, தமிழ், தெலுங்கு, வங்காளம், மலையாளம், கன்னடம் மற்றும் மராத்தி ஆகிய ஏழு மொழிகளில் வழங்குகிறது.


Originals, இந்திய மற்றும் சர்வதேச திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், நேரடி விளையாட்டுகள், குழந்தைகளுக்கான நிகழ்ச்சிகள், செய்திகள், Live TV மற்றும் Micro Dramas உள்ளிட்ட மிகப்பெரிய உள்ளடக்கத் தொகுப்புடன், பல மொழிகளில் பொழுதுபோக்கும் நேரடி விளையாட்டு அனுபவங்களையும் வழங்கும் முன்னணி தளமாக ZEE5 விளங்குகிறது.


2034 வரை FIFA-வுடன் Zee Entertainment கொண்டுள்ள நீண்டகால கூட்டாண்மையின் மூலம், இந்தியாவில் FIFA World Cup 2026™ மற்றும் 2030 உள்ளிட்ட FIFA-வின் முக்கிய கால்பந்து போட்டிகளின் அதிகாரப்பூர்வ ஸ்ட்ரீமிங் தளமாகவும் ZEE5 செயல்படுகிறது.

*'T Series unveils the first song of The India Story, 'NeeSel '! A Powerful Anthem Of Hope and Resilience Featuring Kajal Aggarwal*

 *‘தி இந்தியா ஸ்டோரி’ படத்தின் முதல் பாடலான ‘நீ செல்’ (Nee Sel) பாடலை வெளியிட்ட டி-சீரிஸ்! (T Series)*



*காஜல் அகர்வால் இடம்பெறும் நம்பிக்கை மற்றும் விடாமுயற்சியின் சக்திவாய்ந்த பாடல் !*


ZEE  Studios  வழங்க, MIG Production இணைந்து தயாரித்துள்ள “தி இந்தியா ஸ்டோரி” திரைப்படத்தின் முதல் பாடலான ‘நீ செல்’ (Nee Sel)  தற்போது வெளியாகியுள்ளது. நம்பிக்கை, விடாமுயற்சி மற்றும் தளராத மன உறுதியை உணர்வுபூர்வமாக வெளிப்படுத்தும் இந்தப் பாடல், படத்தின் உணர்ச்சி மையமாக அமைந்துள்ளது. பாடகி ரிச்சா ஷர்மா மனதை வருடும் வகையில் பாடியுள்ள இந்த பாடலுக்கு மங்கேஷ் தகாடே இசையமைத்துள்ளார். வரிகளை ஷகீல் அசாமி எழுதியுள்ளார்.


காஜல் அகர்வால் ஏற்றுள்ள கதாபாத்திரத்தை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள ‘து சல்’, மிகப்பெரிய சவால்களையும், உணர்வுபூர்வமான போராட்டங்களையும் எதிர்கொண்டாலும் ஒருபோதும் சரணடைய மறுக்கும் ஒரு பெண்ணின் உறுதியான பயணத்தை பிரதிபலிக்கிறது. சக்திவாய்ந்த காட்சிகளும், ஆழமான வரிகளும் இணைந்து, ஒவ்வொரு தோல்விக்குப் பிறகும் மீண்டும் எழுந்து நிற்கும் துணிச்சலை கொண்டாடுகிறது. எவ்வளவு கடினமான பாதையாக இருந்தாலும், தொடர்ந்து முன்னேறுவதே உண்மையான வலிமை என்பதை இந்த பாடல் பார்வையாளர்களுக்கு நினைவூட்டுகிறது.


ரிச்சா ஷர்மாவின் ஆன்மாவைத் தொடும் குரல் இந்த பாடலுக்கு உணர்வுப்பூர்வமான  ஆழத்தை வலிமையை வழங்குகிறது. மங்கேஷ் தகாடேவின் இசை, படத்தின் வலுவான கதைக்களத்துடன் இயல்பாக ஒன்றிணைகிறது. ஷகீல் அசாமியின் அர்த்தமுள்ள வரிகள் நம்பிக்கையையும் விடாமுயற்சியையும் ஊக்குவிக்கின்றன. அதனால் ‘‘நீ செல்’ (Nee Sel)  ’ ஒரு பாடலாக மட்டுமல்லாமல், அநீதி மற்றும் எதிர்ப்புகளை எதிர்த்து போராடும் ஒவ்வொருவருக்கும் ஒரு உத்வேக கீதமாக மாறுகிறது.


சேட்டன் டி.கே. இயக்கத்தில், சாகர் B. ஷிண்டே எழுதி தயாரித்துள்ள தி இந்தியா ஸ்டோரி, பூச்சிக்கொல்லி மருந்துகள் பயன்படுத்தப்படும் விவசாயம் மற்றும் அது  பொதுமக்களின் உடல்நலத்தின் மீது ஏற்படுத்தும் பேரழிவு தாக்கத்தை மையமாகக் கொண்ட நீதிமன்ற பின்னணியிலான சமூகப் படமாக உருவாகியுள்ளது. சமூக முக்கியத்துவம் வாய்ந்த இந்தக் கருத்தை உணர்வுபூர்வமான கதைக்களத்தின் மூலம் திரைப்படம் எடுத்துரைக்கிறது. இதில் காஜல் அகர்வால் மற்றும் ஸ்ரேயஸ் தல்பதே முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் 2026 ஜூலை 24 அன்று இந்தி, தெலுங்கு மற்றும் தமிழ் மொழிகளில் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.


இந்தப்படத்தில் இணை தயாரிப்பாளர்களாக ஸ்வாதி வினாயக் சைன்டானே, அனிதா ஜாதவ், விநாயக் சைதானி, கல்பேஷ் ஷா, தேவ்யானி கொராடே மற்றும் பிரேம் ஜோஷி ஆகியோர் பணியாற்றியுள்ளனர். 


தொழில்நுட்பக் குழுவில் ஒளிப்பதிவாளர் நிஷாந்த் பகவத், இசையமைப்பாளர் மங்கேஷ் தாக்கடே, படத்தொகுப்பாளர் ஆஷிஷ் மாத்ரே, பாடலாசிரியர் ஷகீல் அசாமி, ஒலி வடிவமைப்பாளர் அன்மோல் பாவே ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.


இந்தப் படத்தின் இணைத் தயாரிப்பாளர்களாக ஸ்வாதி  விநாயக் சைந்தானி,அனிதா ஜாதவ்,விநாயக் சைந்தானி, கல்பேஷ் ஷா, தேவ்யானி கொராடே மற்றும் பிரேம் ஜோஷி   ஆகியோர் உள்ளனர். ஒளிப்பதிவை நிஷாந்த் பகவத், இசையை மங்கேஷ் தாக்டே  , படத்தொகுப்பை ஆஷிஷ் மாத்ரே, பாடல் வரிகளை ஷகீல் அசாமி, ஒலி வடிவமைப்பை அன்மோல் பாவே கவனித்துள்ளனர்.


T-Series இசை நிறுவனத்தின் மூலம் வெளியாகியுள்ள ‘து சல்’ பாடல் தற்போது T-Series YouTube சேனலிலும், அனைத்து முக்கிய ஆடியோ ஸ்ட்ரீமிங் தளங்களிலும் பிரத்யேகமாக வெளியாகியுள்ளது. உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் இந்த உத்வேகமூட்டும் இசைப் பயணத்தை தற்போது அனுபவிக்கலாம்.


*'T Series unveils the first song of The India Story, 'NeeSel '! A Powerful Anthem Of Hope and Resilience Featuring Kajal Aggarwal*


Presented by Zee Studios , in association with MIG Production & Studios, the makers of The India Story have unveiled the film's first song, NeeSel a moving anthem that beautifully captures the spirit of resilience, hope, and unwavering determination. Sung with heartfelt emotion by Richa Sharma, composed by Mangesh Dhakade, and penned by Shakeel Azami, the song serves as the film's emotional heartbeat.


Filmed on Kajal Aggarwal's character, Tu Chal reflects the hardships, emotional battles, and relentless determination of a woman who refuses to surrender despite overwhelming odds. Through powerful visuals and deeply evocative lyrics, the song celebrates the courage to rise after every setback, reminding audiences that true strength lies in continuing the journey, no matter how difficult the path becomes.


Richa Sharma's soulful rendition lends immense emotional depth to the track, while Mangesh Dhakade's stirring composition perfectly complements the film's powerful narrative. Shakeel Azami's meaningful lyrics inspire hope and perseverance, making Tu Chal more than just a song; it becomes an anthem for anyone fighting against injustice and adversity.


The India Story is directed by Chettan DK and written and produced by Sagar B. Shinde. Inspired by the issue of pesticide farming and its devastating impact on public health, the courtroom drama explores a socially significant subject through an emotionally engaging narrative. The film stars Kajal Aggarwal and Shreyas Talpade in pivotal roles and is slated for a worldwide theatrical release on July 24, 2026, in Hindi, Telugu, and Tamil.


The project is backed by co-producers Swati Vinayak Saindane, Anita Jadhav, Vinayak Saindane, Kalpesh Shah, Devyani Khorate, and Prem Joshi. The technical team includes cinematographer Nishant Bhagwat, music composer Mangesh Dhakde, editor Ashish Mhatre, lyricist Shakeel Azami, and sound designer Anmol Bhave.


With music on T-Series, Tu Chal is now exclusively available on the T-Series YouTube channel and across all major audio streaming platforms, allowing audiences worldwide to experience this inspiring musical journey.


https://www.youtube.com/watch?v=8JofRnEai6s

அருள்வான்’ திரைப்பட விமர்சனம்.

 அருள்வான்’ திரைப்பட விமர்சனம்.


தொலைதூர மலை கிராமத்தைச் சேர்ந்த சிறுமி கிருத்திகா படிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார். ஆனால், அவரது வாழ்க்கை சூழல், அடிப்படை வசதிகள் இல்லாத இருப்பிடம் ஆகியவை அவரது கல்வி கனவுக்கு தடையாக இருக்கிறது. எப்படியாவது படித்தாக வேண்டும் என்பதில் ஈடுபாடு காட்டுவதோடு, தனது மலை கிராம பிள்ளைகளும் கல்வி கற்க வேண்டும் என்ற அவரது லட்சியப் பயணத்தில் மாவட்ட ஆட்சியரான அருள்நிதி இணைகிறார். அவரது முயற்சியினால் மலைவாழ் சிறுமியின் கல்வி கனவு நிறைவேறியதா? இல்லையா ? என்பதை சமூக அக்கறையோடு சொல்வதே ‘அருள்வான்’.


மலைவாழ் மக்களின் மேம்பாட்டிற்காக உழைக்கும் ஒரு நேர்மையான மாவட்ட ஆட்சியர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அருள்நிதி, தனது முதிர்ச்சியான நடிப்பின் மூலம் முத்துவேல் என்ற கலெக்டர் கதாபாத்திரத்திற்கு நியாயம் சேர்த்திருக்கிறார். அமைதியான அவரது நடிப்பு மற்றும் உடல் மொழி படத்திற்கு பெரும் பலம் சேர்த்திருக்கிறது. நாயகன் என்ற பிம்பத்தை கடந்து, கதைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரத்தை மிக சரியாக கையாண்டு பாராட்டு பெறுகிறார்.


மற்றொரு நாயகனாக நடித்திருக்கும் ஆரவ், பழங்குடியினராக தன்னை மாற்றிக்கொள்ள கடுமையாக உழைத்திருப்பது திரையில் தெரிகிறது. சில காட்சிகளில் அவர் கதாபாத்திரத்தோடு ஒட்ட மறுத்தாலும், தனது வேலையை குறையின்றி செய்திருக்கிறார்.


நாயகியாக நடித்திருக்கும் ரம்யா பாண்டியனுக்கு பெரிய வேலை இல்லை என்றாலும், தனக்கான பணியை நிறைவாக செய்து மக்கள் மனதில் இடம் பிடித்து விடுகிறார்.


பழங்குடியின சிறுமியாக நடித்திருக்கும் கிருத்திகா, தனது எதார்த்தமான மற்றும் அழுத்தமான நடிப்பின் மூலம் கவனம் ஈர்க்கிறார். படிப்பின் மீது இருக்கும் ஆர்வம், பெற்றோரை பிரிந்து வந்த பிறகு ஏற்படும் அச்சம், ஏக்கம், தவிப்பு என அனைத்து உணர்வுகளையும் மிக நேர்த்தியாக கையாண்டு படத்திற்கு சிறப்பான பங்களிப்பை வழங்கியிருக்கிறார்.


காளி வெங்கட், ஜான் விஜய், விடிவி கணேஷ் ஆகியோரது திரை இருப்பு திரைக்கதைக்கு பலம் சேர்த்திருக்கிறது.


ஒளிப்பதிவாளர் எம்.சுகுமார் மலைகளின் அழகையும், மலைவாழ் மக்களின் வாழ்க்கையையும் பார்வையாளர்களிடம் நேர்த்தியாக கடத்தியிருக்கிறார்.


ஜி.வி.பிரகாஷ் குமாரின் இசையில் பாடல்கள் அனைத்தும் கதைக்களத்தையும், கதை மாந்தர்களின் மன போராட்டங்களையும் பிரதிபலிக்கின்றன. பின்னணி இசை வலி மிகுந்த மலைவாழ் மக்களின் வாழ்க்கையை விவரிக்கும் காட்சிகளுக்கு உயிரூட்டியிருக்கிறது.


லாரன்ஸ் கிஷோரின் படத்தொகுப்பு திரைக்கதையை மெதுவாக நகர்த்தினாலும், உண்மை சம்பவங்களை உணர வைக்கும் விதத்தில் படத்தை நகர்த்தி செல்கிறது.


வேகமான தொழில்நுட்ப வளர்ச்சி மிக்க தற்போதைய காலக்கட்டத்திலும், கல்வியும், அடிப்படை தேவைகளும் கிடைக்காத மக்கள் வாழ்ந்துக் கொண்டிருக்கிறார்கள், என்ற உண்மையை உரக்க சொல்லியிருக்கும் இயக்குநர் கணேஷ் விநாயகம், பழங்குடியின மக்களின் உண்மை நிலையை எவ்வித சமரசமும் இன்றி அழுத்தமாகவும், நேர்மையாகவும் திரையில் கொண்டு வந்துள்ளார்.


கமர்ஷியல் அம்சங்கள் இல்லாத திரைக்கதை சில இடங்களில் ஆவணப் படம் பார்க்கும் உணர்வை ஏற்படுத்தினாலும், உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ள காட்சிகள் மனதை பதபதைக்க வைக்கிறது.


இயக்குநர் கணேஷ் விநாயகம், தொலைதூரக் கிராமங்களில் வாழும் பழங்குடியின மக்களின் கல்வி மற்றும் அடிப்படை வசதிகளுக்கான போராட்டத்தை உண்மைக்கு நெருக்கமாக சொல்வதில் வெற்றி பெற்றிருப்பதோடு, பார்வையாளர்களை மட்டும் இன்றி ஆட்சியாளர்களையும் யோசிக்க வைத்திருக்கிறார்.


மொத்தத்தில், ‘அருள்வான்’ சமூக அக்கறை கொண்ட நல்ல படைப்பு. 

அன்பே டயானா’ திரைப்பட விமர்சனம்

 அன்பே டயானா’ திரைப்பட விமர்சனம்



சென்னை, பெரம்பூர் பகுதியில் வசிக்கும் நாயகன் பாரி இளவழகன், அதே பகுதியில் வசிக்கும் ஆங்கிலோ இந்திய பெண்ணான நாயகி ரம்யா ரங்கநாதனை கல்லூரி காலம் முதலே காதலித்து வருகிறார். பாரியின் காதலை ஏற்க மறுக்கும் ரம்யா அவருடன் நட்பாக பழகி வருகிறார்.


ஒருதலைக் காதலோடு பல வருடங்களாக காத்துக் கொண்டிருக்கும் பாரிக்கு ரம்யா சம்மதம் சொல்கிறார். ஆனால், ரம்யாவின் காதலை ஏற்பதில் திடீரென்று தயக்கம் காட்டும் பாரி, அவரிடம் இருந்து விலகிச்செல்ல முயற்சிக்கிறார். அது ஏன்?, அவரது காதல் என்னவானது ? என்பதை நகைச்சுவையாக சொல்வதே ‘அன்பே டயானா’.


நாயகனாக நடித்திருக்கும் பாரி இளவழகன், பக்கத்து வீட்டு பையன் போல் எளிமையான தோற்றத்தோடும், இயல்பான நடிப்போடும் கவனம் ஈர்க்கிறார். பல வருடங்களாக காத்துக் கொண்டிருந்த காதல் கைகூடும் போது, பலவித குழப்பங்களால் அதை ஏற்க தயக்கம் காட்டுவது முதல் கண்டிப்பான அம்மாவுக்கு கட்டுப்பட்டு காதலை சொல்ல முடியாமல் தவிப்பது வரை, எந்தவித அலட்டல் இல்லாமல் அசால்டாக நடித்து ஸ்கோர் செய்திருக்கிறார்.


நாயகியாக நடித்திருக்கும் ரம்யா ரங்கநாதன், ஆங்கிலோ இந்திய பெண் கதாபாத்திரத்தில் கச்சிதமாக பொருந்துவதோடு, ஆங்கிலம் கலந்த சென்னை தமிழிழை அசத்தலாக உச்சரித்திருக்கிறார். தன்னிடம் இருந்து விலகிச்செல்ல முயற்சிக்கும் காதலனை மிரட்டுவது, காதலரின் தந்தையிடம் அதிரடியாக பேசுவது என்று தன் நடிப்பின் மூலம் பார்வையாளர்களை வயிறு வலிக்க சிரிக்க வைக்கும் ரம்யா ரங்கநாதன், தன் சிறப்பான நடிப்பின் மூலம் திரைக்கதைக்கு பெரும் பலம் சேர்த்திருக்கிறார்.


நாயகனின் தந்தையாக நடித்திருக்கும் சேத்தன், இவ்வளவு நாளாக எங்கிருந்தார்? என்று கேட்கும் அளவுக்கு அசத்தலாக நடித்திருக்கிறார். காலையில் மனைவிக்கு பயந்த கணவர், மாலையில் அனைவருக்கும் பயம் காட்டும் குடும்ப தலைவர் என்ற சாதாரண கதாபாத்திரத்தை தன் சிறப்பான நடிப்பின் மூலம் பார்வையாளர்களை கொண்டாட வைத்திருக்கிறார்.


நாயகனின் அம்மாவாக நடித்திருக்கும் ரோஜா, தோற்றம், பேச்சு, நடிப்பு என அனைத்திலும் கம்பீரத்தை வெளிப்படுத்தி கவர்கிறார். கண்டிப்பான குடும்ப தலைவியாக இருந்தாலும், தன் மனதுக்குள் இருக்கும் எதிர்பார்ப்பை வெளிப்படுத்தும் காட்சியிலும், தன் தவறை உணர்ந்து மனம் மாறும் காட்சியிலும் தன் அனுபவம் வாய்ந்த நடிப்பால் அசத்தியிருக்கிறார்.


நாயகனின் நண்பராக நடித்திருக்கும் பரிதாபங்கள் கோபி, பெங்களூர் தமிழர் வேடத்தில் படம் முழுவதும் சிரிக்க வைக்கிறார். மாங்கபாபு கதாபாத்திரத்தில் சில காட்சிகள் வந்தாலும் செல் முருகன், தன் பங்கிற்கும் சிரிக்க வைக்கிறார்.


நாயகனின் மாமா பெண் வேடத்தில் நடித்திருக்கும் நிகிலா சங்கர், நாயகனின் சகோதரியாக நடித்திருக்கும் இஸ்மத் பானு, சகோதரனாக நடித்திருக்கும் சுதர்சன் காந்தி, நாயகியின் பெற்றோர்களாக நடித்திருக்கும் நடிகர், நடிகை என அனைவரும் கதாபாத்திரத்திற்கு பொறுத்தமான தேர்வாகவும், திரைக்கதைக்கு பலமாகவும் பயணித்திருக்கிறார்கள்.


ஒளிப்பதிவாளர் ஷெல்லி கேலிஸ்ட், பெரம்பூர் பகுதியை அழகியலோடு காட்சிப்படுத்தியிருக்கிறார். பார்த்து பழக்கப்பட்ட இங்களாக இருந்தாலும், தன் கேமரா மூலம் அப்பகுதியின் அழகியலை அதிகரிக்கச் செய்திருக்கும் ஒளிப்பதிவாளஃர் ஷெல்லியின் பருந்து கோணக் காட்சிகள் பிரமிக்க வைக்கிறது.


பரத் சங்கரின் இசையில் பாடல்கள் அனைத்தும் இதமாக பயணிக்கிறது. பின்னணி இசை காட்சிகளில் இருக்கும் இயல்பு தன்மைக்கு பலம் சேர்க்கும் வகையில் பயணித்திருக்கிறது.


கதாபாத்திரங்களும், அவர்களது வசனங்களும் திரைக்கதையில் முக்கிய பங்கு வகிப்பதை உணர்த்து காட்சிகளை தொகுத்திருக்கும் படத்தொகுப்பாளர் பார்த்தா.எம்.ஏ, படத்தை தொய்வின்றி நகர்த்தியிருக்கிறார்.


கதை எழுதி இயக்கியதோடு கதையின் நாயகனாகவும் நடித்திருக்கும் பரிதி இளவழகன், சாதாரண காதல் கதை என்றாலும், இயல்பான திரைக்கதை மூலம் அன்லிமிடெட் பொழுதுபோக்கை வழங்கியிருக்கிறார்.


படத்தின் பலமே கதாபாத்திரங்களின் தனித்துவமான வடிவமைப்பு மற்றும் அதில் இயல்பாக நடித்த நட்சத்திரங்கள் தான். நடிகர்களிடம் இருந்து சரியான முறையில் வேலை வாங்கியிருக்கும் இயக்குநர் பாரி இளவழகன், முதல் பாதியை ஊட்டி மலை ரயில் போல் மெதுவாகவும், மென்மையாகவும் நகர்த்தி சென்றாலும், இரண்டாம் பாதியை வந்தே பாரத் ரயில் போல் வேகமாக நகர்த்தி செல்வதோடு, பார்வையாளர்களை வயிறு வலிக்க சிரிக்க வைக்கவும் செய்கிறார்.


ஜாலியான பொழுதுபோக்கு படமாக இருந்தாலும், எளிமையான வசனங்கள் மூலம் சாதி, மதம், மொழி, இனம் போன்ற வேறுபாட்டை களைந்து மனிதர்களை அன்பால் ஒன்றிணைக்கும் மேஜிக்கை அனைவரும் ஏற்கும்படி நிகழ்த்தி இயக்குநர் பாரி இளவழகன் கைதட்டல் பெறுகிறார்.


மொத்தத்தில், ‘அன்பே டயானா’ அன்பும், மகிழ்ச்சியும் நிறைந்த படம்.


சுப்ரீம் ஸ்டார் சரத்குமாரின் 171வது திரைப்படத்திற்கு வரலாற்றுச் சிறப்புமிக்க கூட்டணி; பி. எல். தேனப்பன் – பிரெசிடென்ஷியல் மூவீஸ் இன்டர்நேஷனல் இணைந்து வழங்குகிறார்கள்.

 https://youtu.be/lBoe3yDdHvQ?si=yvYH1NM4_K1GMFhX

சுப்ரீம் ஸ்டார் சரத்குமாரின் 171வது திரைப்படத்திற்கு வரலாற்றுச் சிறப்புமிக்க கூட்டணி; பி. எல். தேனப்பன் – பிரெசிடென்ஷியல் மூவீஸ் இன்டர்நேஷனல் இணைந்து வழங்குகிறார்கள்.



சென்னை: தமிழ் திரைப்பட உலகில் முக்கிய அறிவிப்பாக, சுப்ரீம் ஸ்டார் சரத்குமாரின் 171வது திரைப்படத்தை ஸ்ரீ ராஜலட்சுமி ஃபிலிம்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் தயாரிப்பாளர் பி. எல். தேனப்பனுடன்,  இணை தயாரிப்பாளராக பிரெசிடென்ஷியல் மூவீஸ் இன்டர்நேஷனல் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ளது.


இந்த கூட்டணி இன்று சரத்குமாரின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்திலும், பி. எல். தேனப்பனின் அதிகாரப்பூர்வ யூடியூப் சேனலிலும் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.


பிரெசிடென்ஷியல் மூவீஸ் இன்டர்நேஷனல் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் தலைவர் மற்றும் தயாரிப்பாளரான அனுப் மோகன் தலைமையில் இத்திரைப்படம் பிரம்மாண்டமாக உருவாகவுள்ளது.


பல சகாப்தங்களாக திரைப்படத் தயாரிப்பில் அனுபவம் கொண்ட பி. எல். தேனப்பன் இந்தப் படத்தில் இணைவது, தயாரிப்புக்கு மேலும் வலுசேர்க்கும் என திரையுலக வட்டாரங்கள் கருதுகின்றன. இந்த அறிவிப்பு ரசிகர்களிடையிலும் திரைப்பட வர்த்தக வட்டாரங்களிலும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.


இந்தப் படத்தை ராகுல் சக்கரவர்த்தி இயக்குகிறார். கதையை விஜய் பார்கவ் எழுதியுள்ளார். பி.ஆர்.ஓ. ஆதிரா தில்ஜித், தமிழ் மார்க்கெட்டிங் – சரண், தமிழில் PRO - சதிஷ் (AIM) ஆகியோர் பணியாற்றுகின்றனர். படத்தின் படப்பிடிப்பு நவம்பர் 15 அன்று தொடங்கும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.