-

Loading latest news...

பெத்லகேம் குடும்ப யூனிட்’ திரைப்பட விமர்சனம்

 பெத்லகேம் குடும்ப யூனிட்’ திரைப்பட விமர்சனம் 



இறந்த காதலியின் நினைவில் வாடும் மத்திய வயதுக்காரரான நிவின் பாலியின் பக்கத்து வீட்டில் கல்லுரி மாணவியான மமிதா பைஜு தனது குடும்பத்துடன் குடியேறுகிறார். இருவரும் நட்பாக பழக, இருவர் மனதிலும் காதல் மலர்கிறது. இவர்களது காதல் உணர்வுகளையும், அதன் மூலம் நடக்கும் களேபரங்களையும் மனம் தொடும் விதத்திலும், சிரித்து மகிழியும்படியும் சொல்வது தான் ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’.


காதலிக்கும் தனக்கும் இருக்கும் வயது வித்தியாசதை தன் உடல்மொழி மூலம் வெளிப்படுத்துவது, குறும்புக்கார இளம்பெண்ணின் செயல்களினால் வெட்கப்படுவது, மீண்டும் ஒரு காதல் தோல்வியினால் கலங்குவது, என்று பல்வேறு உணர்வுகளை மிக சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கும் நிவின் பாலி, முழு படத்தையும் தன் பன்பட்ட நடிப்பின் மூலம் சுமந்திருக்கிறார்.


குறும்புக்கார கல்லூரி மாணவியாக நடித்திருக்கும் மமிதா பைஜு தனது சுட்டித்தனமான நடிப்பு மற்றும் உடல்மொழி மூலம் கவர்கிறார். காதலனுக்கும் தனக்கும் வயது வித்தியாசம் அதிகம் என்றாலும், அதைப் பற்றி யோசிக்காமல் காதலை அவர் கையாளும் விதம் ரசிக்க வைக்கிறது.


நிவின் பாலியின் தம்பியாக நடித்திருக்கும் சங்கீத் பிரதாப், பிந்து பணிக்கர், சுரேஷ் கிருஷ்ணா, வினய் ஃபோர்ட், ஸ்ரிந்தா, ஷமீர் கான், மீனாட்சி ரவீந்திரன், அயசங்கர் கரிமுட்டம், தங்கம் மோகன், வெட்டுக்கிளி பிரகாஷ் என அனைத்து நடிகர்களும் கதாபாத்திரங்களுக்கு பொருத்தமான தேர்வாக இருப்பதோடு, தங்களது திரையிருப்பு மூலம் திரைக்கதைக்கு பெரும் பலம் சேர்த்திருக்கிறார்கள்.


ஒளிப்பதிவாளர் அஜ்மல் சாபு, கதை பயணிக்கும் நகரம், அங்கிருக்கும் தேவாலயம், அருகருகே இருக்கும் வீடுகள் என்று காதலையும், காமெடியையும் கடந்து கதைக்களத்தையும் ரசிக்க வைத்திருக்கிறார்.


விஷ்ணு விஜய் இசையமைப்பில் பாடல்களும், பின்னணி இசையும் காதல் உணர்வுகளுக்கு கூடுதல் பலம் சேர்த்திருக்கிறது. வசனங்களால் சொல்ல முடியாத பல உணர்வுகளை இசை மூலம் சொல்லியிருக்கிறார்.


ஒரு காதல் கதையை இப்படியும் சொல்லலாம், என்ற புதிய பாதையில் பயணித்திருக்கும் படத்தொகுப்பாளர் ஆகாஷ் ஜோசப் வர்கீஸின் பணி சிறப்பு.


கிரிஷ்.ஏ.டி மற்றும் கிரண் ஜோசி ஆகியோரது கதை, திரைக்கதை எளிமையானதாக இருந்தாலும், அதில் சொல்லப்பட்டிருக்கும் உணர்வுப்பூர்வமான விசயங்கள் வலிமையானதாக இருக்கிறது. அதிலும் அதை வழக்கமான பாணியில் சொல்லாமல் சிரிக்கும்படியும், காதலை மனம் தொடும்படியும் சொல்லியிருப்பது படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்திருக்கிறது.


இயக்குநர் கிரிஷ்.ஏ.டி, சாதாரணமான காதல் கதையை, சாதாரணமான காட்சியமைப்பின் மூலம் சொல்லியிருந்தாலும், அவை பார்வையாளர்கள் மனங்களை தொடும்படியும், ரசித்து மகிழும்படியும் சொல்லியிருக்கிறார்.


மொத்தத்தில், ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ மக்களை கொண்டாட வைக்கும்.


ரேட்டிங் 4/5

*‘ஹாய்’ படத்திற்கு கிடைத்த வரவேற்பு மகிழ்ச்சியில் – பத்திரிகை, ஊடக நண்பர்களைச் சந்தித்து நன்றி தெரிவித்த படக்குழு

 *‘ஹாய்’ படத்திற்கு கிடைத்த வரவேற்பு மகிழ்ச்சியில் – பத்திரிகை, ஊடக நண்பர்களைச் சந்தித்து நன்றி தெரிவித்த படக்குழு!*



நயன்தாரா மற்றும் கவின் முதன்முறையாக இணைந்து நடித்த ‘ஹாய்’ திரைப்படம் கடந்த ஆகஸ்ட் 28 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான நிலையில், ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் பெரும் பாராட்டுகளைப் பெற்று, வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. படத்திற்கு கிடைத்து வரும் வரவேற்பு மற்றும் ஆதரவுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, படக்குழுவினர் பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்களைச் சந்தித்து தங்களது நன்றியைத் தெரிவித்தனர்.


இந்த சந்திப்பில் படத்தில் பணியாற்றிய நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் கலந்து கொண்டு, ‘ஹாய்’ திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் கிடைத்து வரும் வரவேற்பு குறித்து தங்களது மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டனர்.


இந்நிகழ்வில்…


தயாரிப்பாளர் எஸ். எஸ். லலித்குமார் பேசுகையில்,


“முதலில் பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றி. நீங்கள் இல்லாமல் எந்தப் படத்தையும் மக்கள் மத்தியில் சரியான முறையில் கொண்டு சேர்ப்பது சாத்தியமில்லை. ‘ஹாய்’ திரைப்படத்திற்கும் நீங்கள் தொடர்ந்து அளித்து வரும் ஆதரவுக்கு மிகுந்த நன்றி. இந்தப் படத்தை உருவாக்கியபோது, பெரிய படங்களுக்குப் பிறகு ஏன் இப்படிப்பட்ட படத்தைத் தயாரிக்கிறீர்கள் என்று பலர் கேட்டார்கள். நல்ல கதையையும், நல்ல படத்தையும் ரசிகர்களுக்குக் கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில்தான் இந்தப் படத்தைத் தயாரித்தோம். இன்று அதற்கு கிடைத்து வரும் வரவேற்பு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது,” என்றார்.


“இந்த மேடையில் இருக்கும் அனைவருடனும் எனக்கு மிகவும் நெருக்கமான உறவு உள்ளது. குறிப்பாக பிரபு சார் படப்பிடிப்பின்போது காட்டிய அன்பை மறக்க முடியாது. தூத்துக்குடி படப்பிடிப்புக்கு வருவதற்கு முன்பே என்னைத் தொடர்புகொண்டு, ‘தம்பி, நீ எதுவும் சாப்பிடாதே, வீட்டில் இருந்து உணவு கொண்டு வருகிறேன், என்னிடம்தான் சாப்பிட வேண்டும்’ என்று அன்புடன் கூறினார். எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் அவர் காட்டிய அந்த பாசத்திற்கும் அன்பிற்கும் நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். அவருடன் நிறைய விஷயங்களில் சண்டை போட்டிருக்கிறேன், அதே நேரத்தில் அந்த உறவில் இருக்கும் அன்புதான் மிகப்பெரியது,” என்றார்.


“பிலோவுடன் எனக்கு குடும்பம் போன்ற உறவு. இதுவரை நான்கு படங்களில் அவருடன் இணைந்து பணியாற்றியுள்ளேன். அதனால் அவரைப் பற்றி பேசுவதற்கே ஒரு தனி நெருக்கம் இருக்கிறது. இந்தப் படத்திற்காக உழைத்த நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் என அனைவருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஒவ்வொருவரின் பங்களிப்பும் இந்த வெற்றிக்கு முக்கியமானது,” என்றார்.


“விஷ்ணு கதை சொல்லும் விதமே மிகவும் தனித்துவமானது. அவர் கதையை விவரிக்கும்போதே அந்தக் கதையின் உணர்வை நம்மால் முழுமையாக உணர முடியும். அவர் முதலில் கதை சொல்லியபோதே அந்த எமோஷன் என்னை மிகவும் கவர்ந்தது. இன்று அந்தக் கதையை ஒரு நல்ல படமாக உருவாக்கி ரசிகர்களிடம் கொண்டு சேர்த்திருப்பது மகிழ்ச்சியாக உள்ளது. விஷ்ணுவுக்கும், இந்தப் படத்திற்காக உழைத்த அனைத்து நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி,” என்றார்.



ஒளிப்பதிவாளர் ராஜேஷ் சுக்லா பேசுகையில்..,


“அனைவருக்கும் நன்றி. படப்பிடிப்பு முழுவதும் என் மீது அன்பும் அக்கறையும் காட்டியதற்கும், சிறப்பான உணவு மற்றும் பரிசுகளை வழங்கியதற்கும் நன்றி. இந்தப் படத்தில் பணியாற்ற எனக்கு வாய்ப்பு அளித்ததற்காக படக்குழுவினருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இயக்குநர் விஷ்ணுவுடன் இணைந்து பணியாற்றியது மிகவும் மகிழ்ச்சியான அனுபவமாக இருந்தது. அவர் முதன்முதலில் என்னிடம் கதையை விவரித்தபோதே, அவர் ஒரு சிறப்பான படத்தை உருவாக்குவார் என்ற நம்பிக்கை எனக்கு ஏற்பட்டது. அந்த நம்பிக்கை இன்று நிஜமாகியிருப்பது மகிழ்ச்சியாக உள்ளது. விஷ்ணுவை நான் அன்பாக ‘தளபதி’ என்றுதான் அழைப்பேன். இந்த வாய்ப்புக்கும் படக்குழுவினரின் அன்பிற்கும் அனைவருக்கும் தனது நன்றி.



இசையமைப்பாளர் ஜென் மார்ட்டின் பேசுகையில்..,


“அனைவருக்கும் நன்றி. இயக்குநர் விஷ்ணுவுடனும், நடிகர் கவினுடனும் இணைந்து பணியாற்றுவது எனக்கு இது நான்காவது படம். கவின் எனக்கு பள்ளிக் கால நண்பர். பள்ளி நாட்களில், ‘நீ நடிகராக வருவாய், நான் இசையமைப்பாளராக வருவேன்’ என்று நாங்கள் பேசிய நாட்களில் இருந்து இன்று இந்த தருணம் வரை வந்திருப்பது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. எங்களது கனவு இன்று நனவாகியிருப்பதைப் போல் உணர்கிறேன். இந்தப் படம் நல்ல வெற்றியைப் பெற்றிருப்பது எனக்கு மிகப்பெரிய மகிழ்ச்சி. கவினுடன் இது எனது நான்காவது படம் என்பதால், அவர் என்மீது வைத்துள்ள நம்பிக்கையை ஒரு அளவுக்காவது காப்பாற்றியிருக்கிறேன் என்று நம்புகிறேன். இந்தப் படத்தின் இசையும் ரசிகர்களுக்கு பிடித்திருக்கும் என நம்புகிறேன். அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை நன்றி,” என்றார்.


நடிகை அம்ருதா சீனிவாசன் பேசுகையில்..,


“என்னை மேடைக்கு அழைத்து பேச வைப்பார்கள் என்று நான் எதிர்பார்க்கவில்லை. ஊடக நண்பர்கள் அனைவருக்கும் எனது நன்றி. பிரபு சார், ராதிகா மேம், சுகாசினி மேம் போன்ற மூத்த கலைஞர்கள் முன்னிலையில் நிற்பதே எனக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியும் பெருமையும். ‘ஹாய்’ உண்மையிலேயே ஒரு அழகான ஃபீல்-குட் திரைப்படம். இப்படிப்பட்ட படங்கள் தமிழ் சினிமாவில் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து ரசிப்பவை. இசை, படத்தொகுப்பு, இயக்கம், கதை என ஒவ்வொரு துறையினரும் ஒன்றிணைந்து பங்களித்தால்தான் இப்படிப்பட்ட ஒரு முழுமையான திரைப்படத்தை உருவாக்க முடியும். இயக்குநர் விஷ்ணு ஒவ்வொரு ஃபிரேமையும் மிகவும் கவனமாகவும் அழகாகவும் செதுக்கியுள்ளார். படத்தைப் பார்த்துவிட்டு வெளியே வரும்போது மிகவும் மகிழ்ச்சியான உணர்வு கிடைத்தது. ரசிகர்களுக்கும் அதே அனுபவம் கிடைக்கும் என்று நம்புகிறேன். தொடர்ந்து வரும் வாரங்களிலும் ரசிகர்கள் படத்திற்கு ஆதரவு அளிக்க வேண்டும். இந்தப் படத்தை சிறப்பாக உருவாக்கிய லலித் சார், பிலோமின் ராஜ் சார், ஜென் மார்ட்டின் சார் உள்ளிட்ட படக்குழுவினர் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றி,” என்றார்.



நடிகர் குரேஷி பேசுகையில்..,


“பொதுவாக பல நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக இருந்து நடிகர்களை வரவேற்றுள்ளேன். ஆனால், இன்று ஒரு நடிகராக இந்த மேடையில் நிற்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. என்மீது நம்பிக்கை வைத்து, இந்தப் படத்தில் நண்பன் கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு அளித்த படக்குழுவினருக்கு நன்றி. குறிப்பாக கவின் அண்ணாவுக்கு என் நன்றி. இயக்குநர் விஷ்ணு மிகவும் நல்ல மனிதர். மழை, புயல், வெள்ளம் என எத்தகைய சவால்கள் வந்தாலும் அவற்றையெல்லாம் சமாளித்து, வெற்றியாக மாற்றும் திறமை அவருக்கு உள்ளது. அவருடன் இந்தப் பயணத்தில் இணைந்து பணியாற்றியது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.


பிரபு சார், ராதிகா மேடம் போன்ற மூத்த கலைஞர்களுடன் இணைந்து பணியாற்றியது மறக்க முடியாத அனுபவம். குறிப்பாக பிரபு சார் என்னிடம் மிகவும் இயல்பாகவும் அன்பாகவும் பழகினார். புதிய நடிகர் என்ற எந்தத் தயக்கத்தையும் எனக்கு ஏற்படுத்தாமல், தானாகவே வந்து பேசுவார், அன்பாக விசாரிப்பார். அவருடன் பகிர்ந்து கொண்ட அந்த தருணங்கள் என்றும் மறக்க முடியாதவை. ராதிகா மேடத்துடன் ஏற்கனவே ஒரு நிகழ்ச்சியில் பணியாற்றியுள்ளேன். இந்தப் படத்தில் அவருடன் இணைந்து நடித்த அனுபவமும் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. அவர் மிகவும் கலகலப்பானவர்; நம்மை கிண்டல் செய்து சிரிக்க வைப்பதிலும் வல்லவர்.


மேலும், இசையமைப்பாளர் ஜென் மார்ட்டின் உள்ளிட்ட படக்குழுவினர் அனைவருடனும் பணியாற்றியது மகிழ்ச்சியான அனுபவமாக இருந்தது. படக்குழுவினர் அனைவருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இனி மேலும் பல படங்களில் நடிக்க வேண்டும் என்ற ஆசை உள்ளது. என்னிடம் இன்னும் நிறைய திறமைகள் இருப்பதாக நானே நம்புகிறேன். எனவே, எனக்கு தொடர்ந்து வாய்ப்புகள் வழங்கி ஆதரிக்க வேண்டும்,” என்றார்.


நடிகை காவ்யா பேசுகையில்..,


“ ஹாய்’ படத்திற்கு மக்கள் மத்தியில் இருந்து கிடைத்து வரும் அன்பும் வரவேற்பும் எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. இந்த மேடையில் இன்று நிற்பது எனக்கு மிகவும் மதிப்புமிக்க தருணம். கல்லூரி காலத்தில் ராதிகா மேடத்தைப் பார்த்து, அவரைப் போல ஒரு பெரிய நடிகையாக வேண்டும் என்று கனவு கண்டேன். இன்று அவருடனேயே திரையைப் பகிர்ந்து நடித்திருப்பது எனக்கு கனவு நனவான தருணமாக உள்ளது. ‘மைதிலி’ கதாபாத்திரத்தில் நடிக்க என்மீது நம்பிக்கை வைத்த படக்குழுவினருக்கும், அந்தக் கதாபாத்திரத்திற்கு அன்பு அளித்து வரும் ரசிகர்களுக்கும் மனமார்ந்த நன்றி. இது எனது பயணத்தின் தொடக்கம் மட்டுமே; இனி மேலும் நல்ல கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களின் அன்பைப் பெற வேண்டும்,” என்றார்.


இயக்குநர் விஷ்ணு எடவன் பேசுகையில்..,


“ஹாய்’ என் முதல் திரைப்படம் என்பதால், இந்த மேடையில் இயக்குநராக நிற்பது எனக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியான தருணம். இந்தப் பயணத்தில் எனக்கு வாய்ப்பளித்து, என்னை நம்பி இந்தப் படத்தை உருவாக்க உதவிய அனைவருக்கும் மனமார்ந்த நன்றி. குறிப்பாக, என் ஆரம்பகால சினிமா பயணத்தில் எனக்கு அடையாளம் கிடைக்க காரணமாக இருந்தவர்களுக்கும், என்னை தொடர்ந்து ஊக்கப்படுத்தி ஆதரித்தவர்களுக்கும் நான் எப்போதும் நன்றியுள்ளவனாக இருப்பேன்.


இந்தப் படத்தில் நடித்த ஒவ்வொரு கலைஞரும் என்மீது நம்பிக்கை வைத்து, தங்களது முழுமையான ஒத்துழைப்பை வழங்கினர். மூத்த நடிகர்கள் முதல் இளம் நடிகர்கள் வரை அனைவரும் தங்களது கதாபாத்திரங்களை சிறப்பாகக் கொண்டு வந்தனர். சத்யன் சார், குரேஷி, அக்ஷய் குமார், அம்ருதா, காவ்யா உள்ளிட்ட அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி. எனது முதல் படத்திலேயே இவ்வளவு திறமையான நடிகர்களுடன் பணியாற்றியது எனக்குப் பெருமையான விஷயம்.


இசையமைப்பாளர் ஜென் மார்ட்டினுடனான நட்பு பள்ளிப் பருவத்திலிருந்தே தொடர்கிறது. பள்ளி நாட்களிலேயே ‘நான் இயக்குநராவேன், நீ இசையமைப்பாளராவாய்’ என்று பேசிக் கொண்டிருந்தோம். இன்று எனது முதல் படத்திற்கு அவரே இசையமைத்திருப்பது எனக்கு மிகவும் உணர்வுப்பூர்வமான மகிழ்ச்சியை அளிக்கிறது. அதேபோல் ஒளிப்பதிவாளர் ராஜேஷ் சுக்லா, படத்தொகுப்பாளர் பிலோமின் ராஜ் உள்ளிட்ட தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவரும் இந்தப் படத்திற்கு மிகப்பெரிய பலமாக இருந்தனர். அவர்களின் பங்களிப்பு இல்லாமல் நான் வழி தெரியாமல் இருந்திருப்பேன்.


எனக்கு வாய்ப்பளித்து, என் மீது நம்பிக்கை வைத்து இந்தப் படத்தின் பின்னால் உறுதுணையாக நின்ற தயாரிப்பாளர்கள் விக்னேஷ் சிவன் அண்ணா, நயன்தாரா மேம், எஸ். எஸ். லலித்குமார் சார் மற்றும் அனைத்து தயாரிப்பாளர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி. படப்பிடிப்பு தொடங்கியது முதல் படம் வெளியாகி வெற்றி பெறும் வரை, பலரும் பல்வேறு வகையில் எனக்கு ஆதரவாக இருந்தனர். இந்தப் படம் எனக்கு மட்டும் கிடைத்த வெற்றியல்ல; என்னை நம்பி இந்தப் பயணத்தில் இணைந்த ஒவ்வொருவருக்கும் கிடைத்த வெற்றி. அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி,” என்றார்.



நடிகை ராதிகா சரத்குமார் பேசுகையில், “முதலில் ‘ஹாய்’ படக்குழுவினர் அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள். இன்றைய சூழலில் ஒரு படம் வெற்றிகரமாக ஓடுவது என்பது மிகவும் சவாலான விஷயம். பல்வேறு சவால்களுக்கு மத்தியில் இந்தப் படத்தை உருவாக்கி, ரசிகர்களிடம் கொண்டு சேர்த்து வெற்றி பெற்றிருக்கும் படக்குழுவினருக்கு என் பாராட்டுகள். இயக்குநர் விஷ்ணு பல சவால்களைக் கடந்து இந்த வெற்றியைப் பெற்றிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது,” என்றார்.


“நான் இன்னும் படத்தைப் பார்க்கவில்லை என்றாலும், படத்தைப் பார்த்த பலரும் மிகவும் ரசித்ததாகவும், உணர்ச்சிப்பூர்வமான அனுபவமாக இருந்ததாகவும் கூறியுள்ளனர். பாக்யராஜ் சாருடன் பணியாற்றிய அனுபவம் மிகவும் இனிமையானது. நகைச்சுவையாகப் பழகும் அவர், தனது அனுபவத்தின் மூலம் பல அருமையான ஆலோசனைகளையும் வழங்குவார். அதேபோல், பிரபு சார் எனக்கு மிகவும் பிடித்த சக நடிகர். அவரது குடும்பத்தின் விருந்தோம்பலும், சினிமா மீதான அன்பும் எப்போதும் சிறப்பானது,” என்றார்.


“கவினின் ‘டாடா’ படத்தைப் பார்த்தபோதே அவருக்கு சிறப்பான எதிர்காலம் இருப்பதாக நினைத்தேன். ‘ஹாய்’ படத்தின் வெற்றிக்கும், அவரது பயணத்திற்கும் வாழ்த்துகள். விஷ்ணுவுக்கும் அவரது வெற்றிக்கும் புதிய வாழ்க்கைப் பயணத்திற்கும் வாழ்த்துகள். மேலும், விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாராவின் வெற்றியில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. நயன்தாரா வெளியில் மென்மையானவராகத் தோன்றினாலும், மனதளவிலும் உடல் ரீதியாகவும் மிகவும் வலிமையானவர். இந்த வெற்றிக்காக படக்குழுவினர் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை எனது மனமார்ந்த வாழ்த்துகள்,” என்றார்.


நடிகை சுஹாசினி பேசுகையில்,


“ ‘ஹாய்’ படத்தில் எனக்கு ஒரு காட்சி மட்டுமே இருந்தாலும், அதில் பணியாற்றியது மகிழ்ச்சியாக இருந்தது. இயக்குநர் விஷ்ணுவுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள். இது அவரது பயணத்தின் ஆரம்பம் மட்டுமே. ஆரம்பத்திலேயே பல சவால்களைச் சந்தித்திருக்கலாம், ஆனால் அவை அனைத்தையும் கடந்து இனி அவரது பயணம் மேலும் மகிழ்ச்சியாகத் தொடர வேண்டும் என்று வாழ்த்துகிறேன்,” என்றார்.


மேலும், “இந்தப் படத்திற்காக அனைவரும் கடுமையாக உழைத்திருக்கிறீர்கள். அந்த உழைப்புக்கான பலன் இன்று கிடைத்திருப்பது மகிழ்ச்சி. கடந்த இரண்டு நாட்களாக ‘ஹாய்’ படத்தைப் பற்றியே பலரும் நல்ல விதமாகப் பேசுவதை கேட்டு வருகிறேன். இந்த வெற்றிக்கு நீங்கள் அனைவரும் தகுதியானவர்கள். இப்படிப்பட்ட மகிழ்ச்சியான தருணங்கள் வாழ்க்கையில் அடிக்கடி கிடைப்பதில்லை. எனவே, இந்த வெற்றியை முழுமையாக மகிழ்ந்து கொண்டாடுங்கள். ஒட்டுமொத்த படக்குழுவினருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள்,” என்றார்.




நடிகர் பிரபு பேசுகையில்..,


“ ‘ஹாய்’ ஒரு அருமையான படக்குழு. இந்தப் படத்தில் அனைவருடனும் இணைந்து பணியாற்றிய அனுபவம் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. இயக்குநர் விஷ்ணு எனக்கு நல்ல கதாபாத்திரம் கொடுத்து, இந்தப் படத்தில் நடிக்க வாய்ப்பளித்ததற்கு நன்றி. தயாரிப்பாளர் லலித்குமார் சாருக்கும், இந்த வாய்ப்பிற்காக என்னை அழைத்த நயன்தாராவுக்கும் எனது நன்றி. படப்பிடிப்பு முழுவதும் மிகவும் மகிழ்ச்சியான சூழல் நிலவியது. பாக்யராஜ் சாருடன் இணைந்து இருந்த தருணங்களும் மறக்க முடியாதவை,”.


“கவின் இந்தப் படத்தில் மிகவும் சிறப்பாக நடித்திருக்கிறார். அவரிடம் நிறைய திறமையும், நல்ல எதிர்காலத்திற்கான பலமும் இருக்கிறது. தொடர்ந்து இன்னும் சிறப்பாக வளர வேண்டும். ஜென் மார்ட்டினின் இசையும் படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளது. படக்குழுவில் உள்ள அனைவரும் தங்களது பணியை சிறப்பாகச் செய்துள்ளனர். ‘ஹாய்’ படத்திற்கு கிடைத்து வரும் நல்ல விமர்சனங்களும், நேர்மறையான வரவேற்பும் மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது,”.


மேலும், “படக்குழுவினர் அனைவரும் கடுமையாக உழைத்துள்ளனர். குறிப்பாக விஷ்ணு படப்பிடிப்பின்போது பல சவால்களைச் சந்தித்தார். சில நேரங்களில் சிரிப்பார், சில நேரங்களில் அழுத்தத்தில் இருப்பார். ஆனால், இன்று இந்த வெற்றியால் அவர் மகிழ்ச்சியாக இருப்பதைப் பார்ப்பது சந்தோஷமாக உள்ளது. பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்களும் படத்திற்கு தொடர்ந்து நேர்மறையான ஆதரவை அளித்து வருகிறீர்கள். இந்த உற்சாகத்துடன் ‘ஹாய்’ படம் இன்னும் பெரிய வெற்றியைப் பெற வேண்டும் என்று வாழ்த்துகிறேன். இந்தப் படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை நன்றி,” என்றார்.



நடிகர் கவின் பேசுகையில்..,


“முதலில் அனைவருக்கும் ரொம்ப ரொம்ப நன்றி. மாதத்தின் கடைசியில் வெளியான ‘ஹாய்’ படத்திற்கு நீங்கள் அளித்த ஆதரவு எங்களுக்கு ஆச்சரியமும் மகிழ்ச்சியும் கலந்த உணர்வைத் தந்துள்ளது. சமீபத்தில் தொடர்ந்து பல நல்ல படங்கள் வெளியாகி வரவேற்பைப் பெற்ற நிலையில், ‘ஹாய்’ படத்திற்கும் ரசிகர்கள் எந்த அளவுக்கு ஆதரவு அளிப்பார்கள் என்ற ஒரு சிறிய பதற்றம் இருந்தது. ஆனால், தற்போது பல ஊர்களில் திரையரங்குகளுக்குச் செல்லும்போது கூட ரசிகர்கள் உற்சாகமாக படத்தை ரசிப்பதைப் பார்க்க முடிகிறது. அதற்காக அனைவருக்கும் மனமார்ந்த நன்றி.


புதிய மாதம் தொடங்கியுள்ள நிலையில், குடும்பத் தேவைகளுக்கான செலவுகளை எல்லாம் செய்து முடித்த பிறகு, பொழுதுபோக்கிற்காக நீங்கள் ஒதுக்கும் நேரத்தையும் பணத்தையும் இந்த வார இறுதியில் ‘ஹாய்’ படத்திற்காக செலவிட்டால், மனம் நிறைந்த மகிழ்ச்சியுடன் திரும்பிச் செல்வீர்கள் என்பதை உறுதியாகச் சொல்ல முடியும். திரையரங்குகளில் ரசிகர்கள் சிரித்து, மகிழ்ந்து, சில காட்சிகளில் உணர்ச்சிவசப்பட்டு படத்தை ரசிப்பதைப் பார்க்கும்போது, நாங்கள் நினைத்த நோக்கம் நிறைவேறிய திருப்தி கிடைக்கிறது. குடும்பத்துடன் அனைவரும் ஒன்றாக அமர்ந்து, கவலைகளை மறந்து ரசிக்க வேண்டும் என்ற எண்ணத்தில்தான் இந்தப் படத்தை எளிமையாகவும் அழகாகவும் பொழுதுபோக்கு அம்சங்களுடன் உருவாக்கினோம்.


இயக்குநர் விஷ்ணுவின் இந்தப் பயணம் மிகவும் சிறப்பானது. பொதுவாக ஒரு படம் வெற்றி பெற்றால்தான் ஒருவருடைய வாழ்க்கை மாறும் என்று சொல்வார்கள். ஆனால், ‘ஹாய்’ படத்தின் பயணமும் விஷ்ணுவின் தனிப்பட்ட வாழ்க்கைப் பயணமும் இணைந்தே நகர்ந்தது. படம் தொடங்கிய காலகட்டத்தில் அவருடைய திருமண ஏற்பாடுகளும் நடைபெற்றன. படப்பிடிப்பு ஒருபுறம் நடந்துகொண்டிருக்க, மறுபுறம் தனது வாழ்க்கையின் முக்கியமான அத்தியாயத்திற்கும் அவர் தயாராகிக் கொண்டிருந்தார். ஆரம்பத்தில் மிக வேகமாகத் தொடங்கிய படப்பிடிப்பு, பல்வேறு காரணங்களால் நீண்ட பயணமாக மாறினாலும், இன்று படம் வெற்றிபெற்று அனைவரும் ஒன்றாகக் கொண்டாடுவது மகிழ்ச்சியாக இருக்கிறது.

நான் எப்போதும் இலக்கை அடைவதைவிட, அந்த இலக்கை நோக்கிய பயணம்தான் முக்கியம் என்று நம்புவேன். ஒரு படம் வெற்றி பெறுகிறதா, தோல்வி அடைகிறதா என்பது ஒரு கட்டம் மட்டுமே. ஆனால், அந்தப் பயணத்தில் நாம் சந்திக்கும் மனிதர்கள், நமக்காக நிற்பவர்கள், நமக்கு ஆதரவாக இருப்பவர்கள்தான் வாழ்க்கை முழுவதும் நம்முடன் வரும் உண்மையான பலம். அந்த வகையில் ‘ஹாய்’ படத்தின் பயணம் எனக்கு மிகவும் அழகான அனுபவமாக அமைந்தது.


கதை கேட்டவுடன் விஷ்ணுவிடம், ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் அவர் நினைத்த நடிகர்களே நடிக்க வேண்டும் என்று சொன்னேன். ராதிகா மேடம், பிரபு சார், சுகாசினி மேடம், பாக்யராஜ் சார் என ஒவ்வொருவரையும் தாண்டி வேறு யாரையும் அந்தக் கதாபாத்திரங்களில் கற்பனை செய்ய முடியவில்லை. அந்த நடிகர்கள் இணைந்தால்தான் இந்தக் கதைக்கு முழுமையான பலம் கிடைக்கும் என்று அப்போதே உணர்ந்தேன். இன்று அந்தக் குழுவினர் அனைவரும் ஒன்றாக அமர்ந்து இந்தப் படத்தின் வெற்றியைப் பகிர்ந்து கொள்வதைப் பார்க்கும்போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது,” இந்த வெற்றியை பெற்று தந்த பத்திரிக்கை ஊடக நண்பர்கள் அனைவருக்கும் நன்றி என்றார்.


அறிமுக இயக்குநர் விஷ்ணு எடவன் இயக்கத்தில் veliyaana ‘ஹாய்’ திரைப்படத்தில் நயன்தாரா, கவின், கே. பாக்யராஜ், பிரபு, ராதிகா சரத்குமார், விடிவி கணேஷ், சத்யன், ‘ஆதித்யா’ கதிர், குரேஷி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ராஜேஷ் சுக்லா ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு ஜென் மார்ட்டின் இசையமைத்துள்ளார். படத்தொகுப்பை பிலோமின் ராஜ் மேற்கொண்டுள்ள நிலையில், கலை இயக்கத்தை எஸ். கண்ணன் கவனித்துள்ளார்.


முழுக்க முழுக்க குடும்பத்துடன் ரசிக்கும் வகையிலான ஃபேமிலி என்டர்டெய்னராக வெளிவந்த இப்படத்தை ஜீ ஸ்டுடியோஸ், தி ரவுடி பிக்சர்ஸ் மற்றும் செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனங்கள் சார்பில் நயன்தாரா, விக்னேஷ் சிவன் மற்றும் எஸ். எஸ். லலித்குமார் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். வினோத் சி. ஜே. மற்றும் கே. எஸ். மயில்வாகனன் இணை தயாரிப்பாளர்களாகவும், வி. கே. குபேந்திரன் கிரியேட்டிவ் புரொடியூசராகவும் பணியாற்றியுள்ளனர்.


கடந்த ஆகஸ்ட் 28 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியான ‘ஹாய்’ திரைப்படம், தற்போது ரசிகர்களின் உற்சாகமான வரவேற்புடன் அரங்கு நிறைந்த காட்சிகளாக வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.

*Kamal Haasan - S.U. Arunkumar Movie Announcement | Tamil and English Press Release

 *Kamal Haasan - S.U. Arunkumar Movie Announcement | Tamil and English Press Release*



கமல்ஹாசன் – எஸ்.யு.அருண் குமார் கூட்டணிக்கு அமோக வரவேற்பு; 'லுக் டெஸ்ட்' காட்சிகள் வைரல்


கமல்ஹாசன், தனது புதிய திரைப்படத்திற்கான 'லுக் டெஸ்ட்' காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருவதால் மீண்டும் ஒருமுறை பெரும் உற்சாக அலையின் மையப்புள்ளியாகத் திகழ்கிறார்.


கமல்ஹாசன் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படத்திற்கான 'லுக் டெஸ்ட்' நடைபெற்றது. அதன் காட்சிகள் வெளியான உடனேயே இணையத்தில் வைரலாகி, ரசிகர்கள் மற்றும் திரைப்பட ஆர்வலர்களிடையே மிகுந்த ஆர்வத்தையும் எதிர்பார்ப்பையும் தூண்டியுள்ளன. கமல்ஹாசனின் இந்த ஈர்க்கக்கூடிய புதிய தோற்றம், சமூக வலைதளங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது; ரசிகர்கள் இத்திரைப்படம் குறித்த கூடுதல் தகவல்களை ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.


கமல்ஹாசனும், திரைப்பட இயக்குநர் எஸ்.யு.அருண் குமாரும் இணையும் முதல் படம் இது என்பதால், இக்கூட்டணி மீதான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது. தன்னைத் தொடர்ந்து புதுப்பித்துக்கொண்டு, தனித்துவமான கதாபாத்திரங்களை ஏற்று நடிப்பதில் பெயர் பெற்ற கமல்ஹாசனின் இந்த புதிய தோற்றம், படத்தின் கதைக்களம் குறித்த ரகசியத்தைக் காக்கும் அதே வேளையில், படத்திற்காக உருவாக்கப்படும் உலகத்தைப் பற்றிய ஒரு சிறு பார்வையை ரசிகர்களுக்கு அளித்து பெரும் ஆர்வத்தைத் தூண்டியுள்ளது.


மிகவும் எதிர்பார்க்கப்படும் இத்திரைப்படத்தை ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் (RKFI) மற்றும் டர்மெரிக் மீடியா ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. கமல்ஹாசன் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க, எஸ்.யு.அருண் குமார் இயக்கத்தில் உருவாகும் இப்படம், படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


'லுக் டெஸ்ட்' வெற்றிகரமாக நிறைவடைந்ததைத் தொடர்ந்து, விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இத்திரைப்படம் குறித்த கூடுதல் விவரங்கள் பின்னர் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும்.


English Press Release 


Kamal Haasan – S.U. Arun Kumar Collaboration Creates Buzz; Look Test Goes Viral


Kamal Haasan is once again at the centre of a wave of excitement, as his look from his upcoming film has taken social media by storm.


With Kamal Haasan headlining the project, the look test for the film was conducted yesterday, and glimpses from the test have already gone viral, creating immense curiosity and anticipation among fans and film audiences. Kamal Haasan’s striking new appearance has become a talking point across social media, with fans eagerly awaiting more details about the project.


The film marks the first collaboration between Kamal Haasan and filmmaker S. U. Arun Kumar, making the combination all the more intriguing. Known for constantly reinventing himself and embracing distinctive characters, Kamal Haasan’s latest look has once again sparked widespread interest, offering audiences a glimpse into the world being created for the film while keeping its larger narrative firmly under wraps.


The much-awaited project is jointly produced by RaajKamal Films International (RKFI) and Turmeric Media, bringing together two prominent production houses for this highly anticipated collaboration. With Kamal Haasan leading the project and S.U. Arun Kumar at the helm, the film has already generated considerable buzz even before commencing production.


Following the successful completion of the look test, the film is expected to commence shooting soon. Further details about the project will be officially revealed at a later stage.

வெளிநாடுகளிலும் வெளியாகும் ‘ஹனுமான் அன்ஷ்’ – செப்டம்பர் 11 முதல் சர்வதேச திரையரங்குகளில்

 *வெளிநாடுகளிலும் வெளியாகும் ‘ஹனுமான் அன்ஷ்’ – செப்டம்பர் 11 முதல் சர்வதேச திரையரங்குகளில்! 



*வெளிநாடுகளில் ‘ஹனுமான் அன்ஷ்’ படத்தை வெளியிடும் ஹோம்பலே ஃபிலிம்ஸ் நிறுவனம்*



இந்தியாவில் ரசிகர்களின் வரவேற்புடன் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் இந்தி பக்தி திரைப்படம் ‘ஹனுமான் அன்ஷ்’. நீம் கரோலி பாபா என அழைக்கப்படும் மகாராஜ்-ஜியின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகியுள்ள இப்படம், தற்போது வெளிநாடுகளிலும் வெளியாக உள்ளது.


விஷால் சதுர்வேதி எழுதி இயக்கியுள்ள இப்படத்தை வெளிநாடுகளில் வெளியிடும் பணியை ஹோம்பலே ஃபிலிம்ஸ் நிறுவனம் மேற்கொள்கிறது. இதையடுத்து, செப்டம்பர் 11-ந் தேதி இப்படம் சர்வதேச திரையரங்குகளில் வெளியாகிறது.


மகாராஜ்-ஜி என்று பக்தர்களால் அழைக்கப்படும் நீம் கரோலி பாபா, அன்பு, பக்தி, சேவை ஆகியவற்றை தனது போதனைகளின் முக்கிய அம்சங்களாக கொண்ட ஆன்மிகத் தலைவராக போற்றப்படுகிறார். அவரது ஆன்மிக தாக்கம் இந்தியாவைத் தாண்டியும் பலரிடம் சென்றடைந்துள்ளது.


குறிப்பாக, 1960 மற்றும் 1970-களில் ஆன்மிகத் தேடலுடன் இந்தியாவுக்கு வந்த மேற்கத்திய நாடுகளைச் சேர்ந்த பலரிடமும் அவரது போதனைகள் தாக்கத்தை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது.


இந்தியாவில் ஏற்கனவே வெளியாகியுள்ள ‘ஹனுமான் அன்ஷ்’ திரைப்படம் திரையரங்குகளில் தொடர்ந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. தொடக்கத்தில் சுமார் ரூ.10 லட்சம் வசூலித்த இப்படம், 26-வது நாளில் ரூ.63.82 கோடி வசூலை எட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


ரசிகர்களின் வாய் வழிப் பாராட்டும், தொடர்ந்து கிடைத்து வரும் வரவேற்பும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.


நீம் கரோலி பாபாவின் ஆன்மிக தாக்கம் உலகப் புகழ்பெற்ற தொழிலதிபர்களான ஸ்டீவ் ஜாப்ஸ், மார்க் ஸக்கர்பெர்க் மற்றும் நடிகை ஜூலியா ராபர்ட்ஸ் ஆகியோருடன் தொடர்புடையதாக கூறப்படுகிறது.


1974-ம் ஆண்டு ஸ்டீவ் ஜாப்ஸ், மகாராஜ்-ஜியை சந்திக்கும் நோக்கத்தில் இந்தியாவுக்கு வந்ததாகவும், பின்னர் ஜாப்ஸின் ஆலோசனையின் பேரில் மார்க் ஸக்கர்பெர்க் தனது வாழ்க்கையில் சவாலான காலகட்டத்தை எதிர்கொண்டபோது கைஞ்சி தாமுக்கு சென்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


ஜூலியா ராபர்ட்ஸும் தனது ஆன்மிகப் பயணத்தில் நீம் கரோலி பாபா ஏற்படுத்திய தாக்கம் குறித்து பேசியுள்ளார்.


இந்திய பிரபலங்களான விராட் கோலி மற்றும் அனுஷ்கா சர்மா ஆகியோரும் நீம் கரோலி பாபாவுடன் நெருங்கிய தொடர்புடையதாக கருதப்படும் கைஞ்சி தாம் பகுதிக்கு சென்றுள்ளனர்.


இந்தியாவில் இருந்து தற்போது வெளிநாடுகளுக்கும் பயணிக்கும் ‘ஹனுமான் அன்ஷ்’, எல்லைகளைக் கடந்து மகாராஜ்-ஜியின் வாழ்க்கை மற்றும் ஆன்மிகப் பயணத்தை உலக ரசிகர்களிடம் கொண்டு செல்ல இருக்கிறது.


கைஞ்சி தாமில் இருந்து உலக ரசிகர்கள் வரை... மகாராஜ்-ஜியின் கதை தற்போது எல்லைகளைக் கடந்து பயணிக்கிறது.


‘ஹனுமான் அன்ஷ்’ திரைப்படம் செப்டம்பர் 11, 2026 அன்று சர்வதேச திரையரங்குகளில் வெளியாகிறது.

Rashmika Mandanna, Rawindra Pulle, Unformula Films’ Pan India Film Mysaa Worldwide Theatrical Release On November 27

 *Rashmika Mandanna's Mysaa Movie Tamil and English Press Release*



*ராஷ்மிகா மந்தனா – ரவீந்திர புல்லே – அன்ஃபார்முலா ஃபிலிம்ஸ் இணையும் ‘மைசா’ திரைப்படம் நவம்பர் 27-ல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது!*


*இந்தியாவின் நேஷனல் கிரஷ் ராஷ்மிகா மந்தனா நடிக்கும் பிரம்மாண்ட பான் இந்தியா ஆக்‌ஷன் டிராமா ‘மைசா’ திரைப்படம் நவம்பர் 27-ல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது!*


நேஷனல் கிரஷ் ராஷ்மிகா மந்தனா, தனது திரைப்பயணத்தில் மிகவும் சவாலான கதாபாத்திரங்களில் ஒன்றாக உருவாகி வரும் ‘மைசா’ திரைப்படத்திற்காக தனது உடல் மற்றும் நடிப்பு திறன்களின் எல்லைகளை கடந்து உழைத்து வருகிறார். இப்படத்தில் கோண்ட் பழங்குடியின பெண்ணாக நடிக்கும் ராஷ்மிகா, கதாபாத்திரத்தின் உணர்வையும், தீவிரத்தையும் திரையில் உண்மைத்தன்மையுடன் வெளிப்படுத்துவதற்காக கடுமையாக உழைத்து வருகிறார்.


அறிமுக இயக்குநர் ரவீந்திர புல்லே இயக்கத்தில், அன்ஃபார்முலா ஃபிலிம்ஸ் சார்பில் தயாராகி வரும் இப்படத்தின் மீது ஏற்கனவே எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. இப்படத்தின் முதல் பார்வை ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்ற நிலையில், தற்போது படத்தின் பிரம்மாண்ட வெளியீட்டு தேதியை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.


அதன்படி, ‘மைசா’ திரைப்படம் நவம்பர் 27, 2026 அன்று உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக திரையரங்குகளில் வெளியாகிறது.


ரிலீஸ் தேதிக்கான போஸ்டரில், கையில் பிரம்மாண்டமான ஈட்டியுடன் ராஷ்மிகா மந்தனா காட்சியளிக்கிறார். அவரது முகத்தில் போர்க்காயங்களும், பின்னணியில் ஏராளமான மக்கள் கூட்டமும், தீப்பிழம்புகளும் இடம்பெற்றுள்ளன. பாரம்பரிய உடைகள், ஆயுதங்கள், தீக்காட்சிகள் மற்றும் ராஷ்மிகாவின் ஆக்ரோஷமான முகபாவனை ஆகியவை போஸ்டருக்கு வலிமையான வரலாற்றுப் பின்னணி கொண்ட ஆக்‌ஷன் திரைப்படத்திற்கான தோற்றத்தை அளிக்கின்றன.


மிகப்பெரிய பொருட்செலவில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் ‘மைசா’, நவீன இந்திய சினிமாவின் ஆக்‌ஷன் காட்சிகளுக்கு புதிய அளவுகோலை உருவாக்கும் வகையில் உருவாக்கப்பட்டு வருகிறது. அதிரடியான ஸ்டண்ட் காட்சிகளுடன், பார்வையாளர்களுக்கு பரபரப்பும், அட்ரினலின் நிறைந்த அனுபவத்தையும் வழங்கும் வகையில் இப்படம் உருவாகிறது.


பெண் கதாபாத்திரத்தை மையமாகக் கொண்ட ஆக்‌ஷன் திரைப்படங்களின் எல்லைகளை மட்டுமின்றி, இந்திய சினிமாவின் ஆக்‌ஷன் காட்சிகளுக்கான தரத்தையே புதிய உயரத்திற்கு கொண்டு செல்லும் நோக்கில் ‘மைசா’ உருவாகி வருகிறது.


படப்பிடிப்பில் மிகவும் சவாலான அதிரடி காட்சியில் நடித்தபோது ராஷ்மிகா மந்தனாவுக்கு சமீபத்தில் காயம் ஏற்பட்டது. தற்போது காயத்திலிருந்து முழுமையாக குணமடைந்து வரும் அவர், விரைவில் மீண்டும் படப்பிடிப்பில் இணைந்து, இறுதிக்கட்ட படப்பிடிப்பை நிறைவு செய்யவுள்ளார். படப்பிடிப்பில் இன்னும் 12 நாட்கள் மட்டுமே எஞ்சியுள்ளன.


அதே நேரத்தில், படத்தின் பின்னணி பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. பிரம்மாண்டமான காட்சியமைப்பை உருவாக்கும் வகையில் அதிநவீன VFX பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதனுடன், படத்தின் காட்சிகளுக்கு மேலும் வலு சேர்க்கும் வகையில் சக்திவாய்ந்த பின்னணி இசை மற்றும் ஒரிஜினல் ஸ்கோர் உருவாக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.


இப்படத்தில் ஈஸ்வரி ராவ், குரு சோமசுந்தரம், ராவ் ரமேஷ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.


ஒளிப்பதிவை ஷ்ரேயாஸ் பி. கிருஷ்ணா மேற்கொள்ள, இசையை ஜேக்ஸ் பிஜாய் அமைத்துள்ளார். சர்வதேச அளவில் புகழ்பெற்ற ஸ்டண்ட் நிபுணர் ஆண்டி லாங் ஆக்‌ஷன் காட்சிகளை வடிவமைத்துள்ளார். மேலும், கேச்சா காம்பாக்டீ ஸ்டண்ட் பணிகளை கவனித்துள்ளார்.


‘மைசா’ திரைப்படம் தெலுங்கு, இந்தி, தமிழ், கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய ஐந்து மொழிகளில் ஒரே நேரத்தில் உலகம் முழுவதும் வெளியாகிறது.


நடிகர்கள்: ராஷ்மிகா மந்தனா, ஈஸ்வரி ராவ், ராகுல் ரவீந்திரன், சமுத்திரக்கனி, ராவ் ரமேஷ், தாரக் பொன்னப்பா, நிதி சிங் மற்றும் பலர்.


இயக்கம்: ரவீந்திர புல்லே

தயாரிப்பு நிறுவனம்: அன்ஃபார்முலா ஃபிலிம்ஸ்

தயாரிப்பாளர்கள்: அஜய் சாய்புரெட்டி, அனில் சய்யாபுரெட்டி, வீரசாய் கோபா

இணை தயாரிப்பாளர்: ஸ்ரீகாந்த் ரெட்டி சாத்தி

இசை: ஜேக்ஸ் பிஜாய்

ஒளிப்பதிவு: ஷ்ரேயாஸ் பி. கிருஷ்ணா

ஸ்டண்ட்: கேச்சா காம்பாக்டீ

புரொடக்‌ஷன் டிசைனர்: ஜி.எம். சேகர்

ஆடை வடிவமைப்பு: ஆயிஷா மரியம்

VFX: நாகு தலாரி & அசோக் மொச்சர்லா

பப்ளிசிட்டி டிசைன்: ஏஸ்தெடிக் குஞ்ஜம்மா

மார்க்கெட்டிங்: ஹாஸ்டேக் மீடியா

மக்கள் தொடர்பு: சதீஷ் குமார், S2 மீடியா


‘மைசா’ – நவம்பர் 27, 2026 முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில்!


English Press Release 


Rashmika Mandanna, Rawindra Pulle, Unformula Films’ Pan India Film Mysaa Worldwide Theatrical Release On November 27

 

National Crush Rashmika Mandanna is pushing her physical limits for Mysaa, an ambitious Pan-India action drama that is shaping up to be one of the most challenging projects of her career. The actress, who plays a Gond tribal woman in the film, is leaving no stone unturned to bring authenticity and intensity to the character. Directed by debutant Rawindra Pulle and produced by Unformula Films, Mysaa has already generated curiosity with its striking first glimpse.

 

The makers of Mysaa have officially launched the striking release date poster, locking November 27, 2026, for its grand worldwide theatrical arrival. Rashmika is seen standing with a large spear, her face marked by battle wounds, while a huge gathering and blazing surroundings create a charged atmosphere behind her. The combination of traditional clothing, weapons, fire, and raw expressions gives the poster a strong period-action flavour.

 

Mounted on a colossal scale, Mysaa pushes the envelope of contemporary cinema, setting unprecedented benchmarks for high octane stunt choreography. Designed as a fierce, adrenaline pumping experience, the film’s vision redefines action standards not just for female led cinema, but for the Indian action genre as a whole.

 

Rashmika Mandanna, who recently sustained an injury while performing a demanding high-octane sequence on set, has shown tremendous dedication and grit. Following her recovery, she is set to rejoin the sets very soon to complete the final leg of principal photography, with just 12 days of shoot remaining.

 

Simultaneously, post-production work is advancing at a brisk pace. Advanced VFX work is in full swing to deliver an extraordinary visual spectacle, complemented by a powerful, pulse pounding original score.

 

Eshwari Rao, Guru Somasundaram, and Rao Ramesh are part of the prominent supporting cast. The technical team features Shreyaas P Krishna as the cinematographer and Jakes Bejoy as the music composer. International stunt specialist Andy Long is choreographing the action, adding further scale to the film’s combat portions.

 

Mysaa will arrive in cinemas across the globe, releasing simultaneously in five languages: Telugu, Hindi, Tamil, Kannada, and Malayalam.

 

Cast: Rashmika Mandanna, Eshwari Rao, Rahul Ravindran, Samuthirakani, Rao Ramesh, Tarak Ponnappa, Nidhi Singh and others Marketing: Haashtagter, Director: Rawindra Pulle

Banner: Unformula Films

Producers: Ajay Saipureddy, Anil Sayyapureddy, Veerasai Gopa

Co-Producer: Srikanth Reddy Sathi

Music: Jakes Bejoy

DOP: Shreyaas P Krishna

Stunts: Kecha Khamphakdee 

Production Designer : GM Shekar

Costumes: Ayesha Mariam

VFX: Nagu Talari & Ashok Mocharla

Publicity Design - Aesthetic Kunjamma

PRO: Sathish Kumar, S2 Media 

Marketing: Haashtag Media

துல்கர் சல்மானின் “I Am Game” படத்தின் பிரம்மாண்ட முன் வெளியீட்டு விழா – செப்டம்பர் 3 முதல் உலகம் முழுவதும் ரிலீஸ்

 *துல்கர் சல்மானின் “I Am Game” படத்தின் பிரம்மாண்ட முன் வெளியீட்டு விழா – செப்டம்பர் 3 முதல் உலகம் முழுவதும் ரிலீஸ்!*



துல்கர் சல்மான் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள “I Am Game” திரைப்படத்தின் பிரம்மாண்டமான முன் வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது. படக்குழுவினர் மற்றும் திரையுலகப் பிரபலங்கள் கலந்து கொண்ட இந்த விழாவில், வரும் செப்டம்பர் 3, 2026 முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் இப்படம் வெளியாகிறது என்பது அறிவிக்கப்பட்டது.


படம் வெளியாகவுள்ள ஒவ்வொரு மொழியிலும் தீவிரமான விளம்பரப் பணிகளை படக்குழு உற்சாகமாக மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், “I Am Game” படத்தின் தமிழ் பதிப்பை ரசிகர்களிடம் கொண்டு சேர்க்கும் நோக்கில், சென்னையில் நடைபெற்ற பிரம்மாண்டமான முன் வெளியீட்டு விழாவில் படக்குழுவினர் கலந்துகொண்டு படத்தை உற்சாகமாக விளம்பரப்படுத்தினர்.


இந்நிகழ்வில் படக்குழுவினர் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் கலந்துகொண்டு “I Am Game” திரைப்படம் குறித்தும், படத்தில் பணியாற்றிய அனுபவங்கள் குறித்தும் தங்களது கருத்துகளைப் பகிர்ந்துகொண்டனர்.


இந்நிகழ்வில்.. நடிகர் கதிர் பேசுகையில்..,


 “‘I Am Game’ படம் நிறைய சர்ப்ரைஸ் அம்சங்களைக் கொண்ட ஒரு வித்தியாசமான படமாக இருக்கும். டிரெய்லரில் நீங்கள் பார்த்ததைத் தாண்டி படத்தில் இன்னும் பல ஆச்சரியங்கள் காத்திருக்கின்றன. ஒவ்வொரு காட்சியும் ரசிகர்களுக்கு ஒரு அனுபவமாக அமையும் வகையில் முன்கூட்டியே திட்டமிட்டு உருவாக்கப்பட்டுள்ளது. படத்தின் ஒளிப்பதிவும் முக்கிய அம்சமாக இருக்கும்.


இந்தப் படத்தில் கிரிக்கெட் கேப்டனாக நடித்துள்ளேன். ஆனால் இதற்கு முன்பு நான் கிரிக்கெட் விளையாடிய அனுபவமே மிகக் குறைவு. பள்ளிக் காலத்தில் பேட் கிரிக்கெட் விளையாடியதோடு சரி; என்னை கேப்டனாக நடிக்க வைத்த இயக்குநரின் தைரியம் உண்மையிலேயே ஆச்சரியமானது. இந்தப் படத்திற்காக கிரிக்கெட்டையும் புதிதாகக் கற்றுக்கொண்டு நடித்தேன். இதற்குப் பிறகு கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறலாம் என்ற அளவுக்கு அந்த அனுபவம் இருந்தது,”


மேலும், “இந்தப் படத்திற்குப் பின்னால் மிகப்பெரிய உழைப்பும் நம்பிக்கையும் இருக்கிறது. குறிப்பாக, புதிய கதைகள் மற்றும் வித்தியாசமான முயற்சிகளில் ரிஸ்க் எடுக்கும் துல்கர் சல்மானின் சினிமா மீதான ஆர்வம் மிகவும் ஊக்கமளிப்பதாக உள்ளது. வரும் செப்டம்பர் 3-ம் தேதி வெளியாகும் ‘I Am Game’ படத்தை ரசிகர்கள் அனைவரும் ஆதரிப்பார்கள் என நம்புகிறோம்,” என்றார்.


நடிகை சம்யுக்தா விஸ்வநாதன் பேசுகையில்,


“சிறு வயதிலிருந்தே சினிமாவை ரசித்து வளர்ந்த எனக்கு, ஒரு படம் பார்க்கும்போது ஏற்படும் உணர்வும் தாக்கமும் மிகவும் முக்கியம். அந்த வகையில், ‘I Am Game’ படத்தின் கதையை இயக்குநர் நஹாஸ் ஹிதாயத் முதன்முறையாக கூறியபோதே, இதில் கண்டிப்பாக நடிக்க வேண்டும் என்று உடனடியாக முடிவு செய்தேன்.


இந்தப் படத்தில் எனது கதாபாத்திரம் மிகவும் வித்தியாசமானதாகவும், எனது மனதைத் தொட்டதாகவும் இருந்தது. படப்பிடிப்பின்போது குறிப்பாக ஹைதராபாத்தில் நடைபெற்ற நீண்ட ஷெட்யூல் எனக்கு ஒரு சிறந்த பயிற்சியைப் போன்ற அனுபவமாக அமைந்தது. ஒரு காட்சிக்குத் தேவையான உணர்வை மிகக் குறுகிய நேரத்தில் வெளிப்படுத்த வேண்டியிருந்தது சவாலாக இருந்தாலும், அது நடிப்பில் எனக்கு நிறைய கற்றுத்தந்தது. துல்கர் சல்மானை சந்தித்தது அவருடன் நடித்தது மறக்க முடியாத அனுபவம்.


படத்தில் ஏராளமான கதாபாத்திரங்கள் இருந்தாலும், படப்பிடிப்பு முடிவில் அனைவரும் ஒரு குடும்பமாக மாறிவிட்டோம். டிரெய்லரில் சில கதாபாத்திரங்களையே ரசிகர்கள் பார்த்திருப்பார்கள்; ஆனால் முழுப் படத்தைப் பார்க்கும்போது இந்தப் படக்குழுவின் ஒற்றுமையும் உழைப்பும் ரசிகர்களுக்குப் புரியும்,” அமைவருக்கும் நன்றி என்றார்.


நடிகர் ஆண்டனி வர்கீஸ் பேசுகையில்..,


“சென்னையில் நடைபெறும் என்னுடைய முதல் நிகழ்ச்சி இது. ‘I Am Game’ படத்தின் தமிழ் விளம்பர நிகழ்வுக்காக இங்கு வந்திருப்பது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. தமிழில் என்னை ரசிகர்கள் எப்படி வரவேற்பார்கள் என்பதை அறிய ஆவலுடன் இருக்கிறேன். வரும் செப்டம்பர் 3-ம் தேதி வெளியாகும் இந்தப் படத்திற்கு தமிழ் ரசிகர்கள் அனைவரும் ஆதரவு அளிக்க வேண்டும்.


துல்கர் சல்மான் மிக அழகான தயாரிப்பாளர், மிகப்பெரிய நடிகர், மிகச்சிறந்த மனிதர் என் நெருங்கிய நண்பர். அவருடன் பணியாற்றியது மகிழ்ச்சி.


இயக்குநர் நஹாஸ் ஹிதாயத் எனது நெருங்கிய நண்பர். அவருடன் பணியாற்றிய அனுபவம் மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது. படப்பிடிப்பின்போது எங்களுக்குள் இருந்த நட்பும் நகைச்சுவையான தருணங்களும் இந்தப் படப்பிடிப்பை மறக்க முடியாத அனுபவமாக மாற்றியது. எனது கதாபாத்திரம் குறித்து தற்போது அதிகம் சொல்ல முடியாது; படத்தைப் பார்க்கும்போது ரசிகர்களுக்கு அது ஒரு சிறப்பான அனுபவமாக இருக்கும்,” என்றார்.


நடிகர் துல்கர் சல்மான் பேசுகையில்..,


“நான் எந்தப் படத்தின் விளம்பரத்திற்காக சென்னைக்கு வந்தாலும், பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்களை நேரடியாகச் சந்தித்து படத்தின் காட்சிகளையும் முக்கிய அம்சங்களையும் பகிர்ந்துகொள்வதை வழக்கமாக வைத்திருக்கிறேன். படம் உங்களுக்குப் பிடித்திருந்தால், நீங்கள் நிச்சயம் அதற்கு ஆதரவு அளிப்பீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு எப்போதும் உண்டு.


‘I Am Game’ படத்தைப் பார்க்கும்போது, அது கிட்டத்தட்ட ஒரு தமிழ் படம் போன்ற உணர்வை ரசிகர்களுக்கு ஏற்படுத்தும். இதில் ஏராளமான தமிழ் நடிகர்கள் நடித்துள்ளனர். மேலும், எங்கள் தயாரிப்பு நிறுவனத்தில் இதுவரை உருவான மிகப்பெரிய பட்ஜெட் மற்றும் பிரம்மாண்டமான தயாரிப்பு இதுதான்.


படத்தில் நடித்துள்ள கதிரின் நடிப்பு மிகவும் இயல்பாகவும் தீவிரமாகவும் அமைந்துள்ளது. குறிப்பாக, படத்தில் அவர் நடித்திருக்கும் கதாபாத்திரத்தில் மிகவும் நம்பகத்தன்மையுடன் நடித்துள்ளார். மிஷ்கின் இந்தப் படத்தின் முக்கியமான அங்கம். அவரது அளவுக்கான உற்சாகமும் எனர்ஜியும் இன்றைய இளம் தலைமுறையினரிடமே அரிதாகத்தான் பார்க்க முடியும்.


சம்யுக்தா விஸ்வநாதனுக்கு இந்தப் படம் ஒரு முக்கியமான திருப்புமுனையாக அமையும். ஆண்டனி வர்கீஸ் பெப்பே, இந்தப் படத்தின் முக்கியமான பலம். மலையாளத்தில் பெரிய படங்களில் ஹீரோவாக நடித்து வரும் அவர், இந்தப் படத்திலும் ரசிகர்களால் கொண்டாடப்படும் வகையில் சிறப்பான பங்களிப்பை வழங்கியுள்ளார். அவரை தமிழ் ரசிகர்களும் நிச்சயம் கொண்டாடுவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.


ஜேக்ஸ் பிஜாயின் இசையில் இந்தப் படம் ஒரு அசத்தலான ஹிட் ஆல்பமாக அமையும். ஏற்கனவே வெளியான பாடல்களைத் தாண்டி, படத்தில் ரசிகர்களை கவரும் மேலும் பல பாடல்கள் உள்ளன.


‘I Am Game’ முழுமையான கமர்ஷியல் என்டர்டெய்னராக உருவாகியுள்ளது. இதில் காமெடி, ரொமான்ஸ், மர்மம், சஸ்பென்ஸ், ஆக்ஷன், த்ரில்லிங் மற்றும் கேமிங் என ரசிகர்களை கவரும் பல அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. வரும் செப்டம்பர் 3-ம் தேதி வெளியாகும் இந்தப் படத்தை ரசிகர்கள் திரையரங்குகளில் பார்த்து ஆதரவு அளிக்க வேண்டும்,” என்றார்.


துல்கர் சல்மானின் Wayfarer Films நிறுவனம் தயாரித்துள்ள இந்த பிரம்மாண்ட ஃபேண்டஸி த்ரில்லர் திரைப்படம், அவரது திரைப்பயணத்தில் மிகப்பெரிய படங்களில் ஒன்றாக உருவாகியுள்ளது. நஹாஸ் ஹிதாயத் இயக்கியுள்ள இப்படம், துல்கர் சல்மானின் 40-வது திரைப்படம் என்ற சிறப்பையும் பெற்றுள்ளது.


துல்கர் சல்மான் மற்றும் ஜோம் வர்கீஸ் இணைந்து Wayfarer Films பேனரில் தயாரித்துள்ள இப்படத்தின் திரைக்கதையை சஜீர் பாபா, இஸ்மாயில் அபு பக்கர் மற்றும் பிலால் மொய்து ஆகியோர் இணைந்து எழுதியுள்ளனர். வசனங்களை சஜீர் பாபா, ஆதர்ஷ் சுகுமாரன் மற்றும் ஷபாஸ் ரஷீத் ஆகியோர் எழுதியுள்ளனர்.


இந்த பிரம்மாண்ட திரைப்படத்தில் ஆண்டனி வர்கீஸ், நடிகரும் இயக்குநருமான மிஷ்கின், காயாது லோஹர், கதிர், பார்த் திவாரி மற்றும் சம்யுக்தா விஸ்வநாதன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.


இப்படத்திற்கு ஜேக்ஸ் பிஜாய் இசையமைத்துள்ளார். ஆக்ஷன் காட்சிகளை அன்பறிவ் மாஸ்டர்ஸ் வடிவமைத்துள்ளனர். Zee Music நிறுவனம் இப்படத்தின் இசை உரிமையை கைப்பற்றியுள்ளது.


“I Am Game” மலையாளம், தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் கன்னடம் ஆகிய ஐந்து மொழிகளில் பான்-இந்தியா அளவில் வெளியாகிறது.


ஏற்கனவே வெளியான இப்படத்தின் டிரெய்லர் மற்றும் முதல் பாடல் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், இந்த முன் வெளியீட்டு விழா படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.


மலையாள சினிமாவில் இதுவரை பார்த்திராத வகையிலான ஸ்டைலிஷான ஃபேண்டஸி த்ரில்லராக “I Am Game” உருவாகியுள்ளது. இதில் துல்கர் சல்மான் ஸ்டைலிஷான மற்றும் மாஸ் அவதாரத்தில் தோன்றியுள்ளதால், ரசிகர்கள் மத்தியில் படத்திற்கான எதிர்பார்ப்பு உச்சத்தை எட்டியுள்ளது.


“I Am Game” செப்டம்பர் 3, 2026 முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.


தொழில்நுட்பக் குழு


லைன் புரொட்யூசர்: பிபின் பெரும்பில்லி

ஒளிப்பதிவு: ஜிம்ஷி காலித்

இசை: ஜேக்ஸ் பிஜாய்

எடிட்டிங்: சாமன் சாக்கோ

புரொடக்‌ஷன் ஹெட்ஸ்: சுஜாய் ஜேம்ஸ், தேவதேவன்

புரொடக்‌ஷன் டிசைனர்: அஜயன் சாலிசேரி

ஆக்ஷன்: அன்பறிவ் மாஸ்டர்ஸ்

மேக்கப்: ரோனெக்ஸ் சேவியர்

காஸ்ட்யூம்: மஷார் ஹம்சா

புரொடக்‌ஷன் கன்ட்ரோலர்: தீபக் பரமேஸ்வரன்

அசோசியேட் இயக்குநர்: ரோஹித் சந்திரசேகர்

பாடல்கள்: மனு மஞ்சித், விநாயக் சசிகுமார்

VFX: தௌஃபீக் (Eggwhite)

போஸ்டர் டிசைன்: Ten Point

சவுண்ட் டிசைன்: Sync Cinema

சவுண்ட் மிக்ஸ்: கண்ணன் கணபதி

ஸ்டில்ஸ்: SBK

மார்க்கெட்டிங் ஹெட்: விஜித் விஸ்வநாதன்

மக்கள் தொடர்பு: யுவராஜ்

Don’t Trouble The Trouble Locks October 2nd Release Date*

 *அக்டோபர் 2ம் தேதி வெளியாகிறது ஃபஹத் ஃபாசிலின் "டோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள்" - Don't Trouble The Trouble'*



எஸ். எஸ். ராஜமவுலி வழங்கும் 'டோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள் - Don't Trouble The Trouble' திரைப்படம் 2026 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 2ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. ஃபஹத் ஃபாஸில் மற்றும் சாரா பலேகர் இருவரும் - சூரி மற்றும் திவ்யா கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் இத்திரைப்படம்... கலகலப்பான ஃபேண்டஸியான சாகச அனுபவத்தை வழங்கவுள்ளது. தற்போது வெளியிடப்பட்டுள்ள வெளியீட்டு தேதி தொடர்பான போஸ்டர்- ஒரு ஃபேண்டஸியான பின்னணியில் முக்கிய ஜோடியை காட்சிப்படுத்தி இருப்பதுடன்.. பார்வையாளர்களுக்கு காத்திருக்கும் மாயாஜால அனுபவத்தையும் உணர்த்துகிறது.


தயாரிப்பாளர்கள் ஷோபு யார்லகட்டா மற்றும் எஸ். எஸ். கார்த்திகேயா ஆகியோரின் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் ஷஷாங்க் யெலெட்டி இயக்கத்தில் இந்தத் திரைப்படம் உருவாகி இருக்கிறது. இப்படத்தின் டீசர் ஏற்கனவே வெளியாகி படத்தைப் பற்றிய ஆர்வத்தை அதிகரித்துள்ளது. கதையின் மைய கருவாக உள்ள சுவாரசியமான ஃபேண்டஸி அம்சம் - அந்த டீசரில் இடம்பெற்றிருந்தது. இப்படத்தின் ஃபேண்டஸியான கதைக்களமும், அதன் தனித்துவமான பின்னணியும், படத்தின் முக்கிய சிறப்பம்சங்களாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.


மேலும் ரசிகர்களின் உற்சாகத்தை அதிகரிக்கும் வகையில் இசையமைப்பாளர் கால பைரவாவின் இசையில் உருவான கேக்கு வாக்கு” ( Cakeu Walku ) என்ற அனைத்து தரப்பினரையும் கவரும் வகையிலான பாடலை படக்குழுவினர் அண்மையில் வெளியிட்டனர்.


'டோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள் - Don't Trouble The Trouble' திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் எதிர்வரும் அக்டோபர் மாதம் இரண்டாம் தேதி முதல் தனது மாயாஜால ஃபேண்டஸி அனுபவத்தை ரசிகர்களுக்கு வழங்க தயாராக உள்ளது


*Don’t Trouble The Trouble Locks October 2nd Release Date*


Don’t Trouble The Trouble, presented by SS Rajamouli, is set to arrive in cinemas on October 2nd, 2026. Starring Fahadh Faasil and Ssara Palekar as Suri and Divya, the film promises a fun filled fantasy adventure. The newly unveiled release date poster showcases the lead duo against a fantasy backdrop, hinting at the magical experience that awaits audiences.


Produced by Shobu Yarlagadda and S. S. Karthikeya and directed by debutant Shashank Yeleti, the film has already created curiosity with its impressive teaser, which offered a glimpse into the intriguing fantasy element at the heart of the story. The fantasy and its unique setting are expected to be among the film’s major highlights.


Adding to the excitement, the makers recently released the catchy Cake-u Walk-u song, composed by music director Kaala Bhairava.


Don’t Trouble The Trouble is all set to bring its magical fantasy experience to audiences in Telugu, Tamil and Malayalam, worldwide in cinemas from October 2nd, 2026.

சக்தி ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனர் சக்திவேலனின் பிறந்தநாள் விழா – திரையுலக பிரபலங்கள் பங்கேற்பு*


 *சக்தி ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனர் சக்திவேலனின் பிறந்தநாள் விழா – திரையுலக பிரபலங்கள் பங்கேற்பு*


சக்தி ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனத்தின் நிறுவனர் சக்திவேலனின் பிறந்தநாள் விழா சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது.


இந்த பிறந்தநாள் விழாவில் தமிழ் திரையுலகைச் சேர்ந்த முன்னணி நடிகர்கள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், விநியோகஸ்ததர்கள் மற்றும் திரையரங்க உரிமையாளர்கள் கலந்து கொண்டு சக்திவேலனுக்கு பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.


விழாவில் நடிகர்கள் சூர்யா, கார்த்தி, விக்ரம் பிரபு, கவுதம் கார்த்திக், பார்த்திபன், சுந்தர் C, மாதம்பட்டி ரங்கராஜ், சாந்தனு, குணாநிதி, ஏகன், சுனில் ரெட்டி, உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.



இயக்குநர்கள் பசங்க பாண்டியராஜ், ஆதிக் ரவிச்சந்திரன், வெங்கட் பிரபு, கார்த்திக் சுப்பராஜ், ராம், உறியடி விஜயகுமார், தியாகராஜன் குமாரராஜா ஆகியோரும் பங்கேற்று சக்திவேலனுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.


மேலும் நடிகைகள் சாக்க்ஷி அகர்வால், அதுல்யா ரவி ஆகியோரும் விழாவில் கலந்து கொண்டனர்.


தயாரிப்பாளர்கள் ஏ.எம்.ரத்னம், ஞானவேல் ராஜா, ராஜ சேகர்பாண்டியன், கண்ணன் ரவி, அம்மா கிரியேஷன்ஸ் சிவா, தனஜெயன், அருண் விஷ்வா, அருளானந்து, அருண்குமார் உள்ளிட்ட திரையுலக பிரபலங்களும் கலந்து கொண்டு பிறந்தநாள் நாயகருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.


திரையுலகைச் சேர்ந்த பல்வேறு முன்னணி பிரபலங்கள் ஒரே இடத்தில் திரண்டு வாழ்த்தியதால், சக்திவேலனின் பிறந்தநாள் விழா சிறப்பான கொண்டாட்டமாக அமைந்தது.



*ஜீவாவின் அர்ப்பணிப்பால் 40 நாட்களில் நிறைவடைந்த ‘தகப்பன்’ படப்பிடிப்பு

 *ஜீவாவின் அர்ப்பணிப்பால் 40 நாட்களில் நிறைவடைந்த ‘தகப்பன்’ படப்பிடிப்பு!*



*40 நாட்களில் சாதித்த ‘தகப்பன்’ படக்குழு படப்பிடிப்பு முழுமையாக நிறைவு !*


நடிகர் ஜீவா நடிப்பில், லார்க் ஸ்டூடியோஸ் தயாரிப்பில் இயக்குநர் ரா. வெங்கட் இயக்கத்தில் உருவாகி வரும் ‘தகப்பன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துள்ளது. 45 நாட்களில் படப்பிடிப்பை முடிக்க படக்குழு திட்டமிட்டிருந்த நிலையில், அனைவரின் சிறப்பான ஒத்துழைப்பால் வெறும் 40 நாட்களிலேயே படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது.


மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளை பின்னணியாகக் கொண்டு, அப்பா – மகன் உறவு, குடும்ப பாசம் மற்றும் மனித உணர்வுகளை மையமாக வைத்து உருவாகும் ஆழமான குடும்பக் கதையாக ‘தகப்பன்’ உருவாகி வருகிறது. முழுக்க முழுக்க கிராமத்து மண்வாசனையுடன் உருவாகும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ஏற்கனவே வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.


படப்பிடிப்பு நிறைவு குறித்து இயக்குநர் ரா. வெங்கட் கூறுகையில்..,


படப்பிடிப்பு நிறைவு குறித்து இயக்குநர் ரா. வெங்கட் கூறுகையில், திட்டமிட்டதைவிட முன்னதாக படப்பிடிப்பை முடிக்க முடிந்ததற்கு நடிகர் ஜீவாவின் அபாரமான அர்ப்பணிப்பும் ஒத்துழைப்பும்தான் முக்கிய காரணம் என்றார். மேலும், கதாநாயகி ரஜிஷா விஜயனின் சிறப்பான ஒத்துழைப்பு, ஒளிப்பதிவாளர் சுகுமாரின் பங்களிப்பு மற்றும் ஒட்டுமொத்த தொழில்நுட்பக் குழுவினரின் அர்ப்பணிப்பான உழைப்பாலேயே 45 நாட்கள் திட்டமிடப்பட்ட படப்பிடிப்பை 40 நாட்களில் நிறைவு செய்ய முடிந்ததாகக் கூறி, அனைவருக்கும் தனது நன்றியைத் தெரிவித்தார்.


‘தகப்பன்’ படத்தின் பயணம் மேலூர் பகுதியில் உள்ள கோயிலில் நடைபெற்ற துவக்க விழாவுடன் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பல்வேறு கட்டங்களாக படப்பிடிப்பு நடத்தப்பட்டதுடன், மதுரை நகரிலும் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன.


சிறப்பம்சமாக, படப்பிடிப்பு தொடங்கிய அதே மேலூர் பகுதியில் உள்ள மேலவளவு கருப்பு கோயிலிலேயே படத்தின் இறுதிக்கட்ட இரவு நேரப் படப்பிடிப்பும் நடைபெற்றுள்ளது. படம் தொடங்கிய இடத்திலேயே படப்பிடிப்பை நிறைவு செய்தது ஒட்டுமொத்த படக்குழுவினருக்கும் மிகுந்த மகிழ்ச்சியை அளித்ததாக இயக்குநர் தெரிவித்துள்ளார்.


படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்ததைத் தொடர்ந்து, படக்குழுவினர் மேலூர் மேலவளவு கருப்பு கோயிலில் கிடா வெட்டி, பொதுமக்களுக்கு விருந்து வழங்கி, அப்பகுதி மக்களுடன் இணைந்து இந்த மகிழ்ச்சியை கொண்டாடியுள்ளனர். படப்பிடிப்பு நிறைவைக் கொண்டாடிய படக்குழுவின் இந்த செயல், அப்பகுதி மக்களுக்கும் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது.


‘தெனாவெட்டு’ திரைப்படத்திற்குப் பிறகு, முழுக்க முழுக்க கிராமத்து பின்னணியில் ஜீவா நடிக்கும் படமாக ‘தகப்பன்’ உருவாகி வருகிறது. ஜீவாவின் திரைப்பயணத்தில் வித்தியாசமான மற்றும் முக்கியமான படமாக இது அமையும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.


இந்தப் படத்தில் தேசிய விருது பெற்ற நடிகை ரஜிஷா விஜயன் கதாநாயகியாக நடித்துள்ளார். படத்திற்கு முன்னணி இசையமைப்பாளர்களுடன் பணியாற்றிய அனுபவம் கொண்ட சுயாதீன இசைக்கலைஞர் மார்ஷல் ராபின்சன் இசையமைக்கிறார். K. குமார் தயாரிக்கும் இப்படத்திற்கு M. சுகுமார் ஒளிப்பதிவு செய்கிறார். நாகூரான் ராமச்சந்திரன் படத்தொகுப்பையும், K.B. நந்தபாலன் கலை இயக்கத்தையும் கவனிக்கின்றனர்.


சண்டைக் காட்சிகளை மகேஷ் மேத்யூ, ஆடை வடிவமைப்பை M. செல்வராஜ் மற்றும் ரிதேஷ் செல்வராஜ், ஒலிப்பதிவை T. உதய் குமார் மேற்கொள்கின்றனர். புகைப்படங்களை அன்பு பதிவு செய்கிறார். நிர்வாகத் தயாரிப்பாளராக R. பாலகுமார், விநியோகத் தலைவராக பிரிதிவிராஜா சின்னசாமி, மக்கள் தொடர்பாளராக யுவராஜ், விளம்பர வடிவமைப்பாளராக தினேஷ் அசோக் பணியாற்றுகின்றனர். இப்படத்தின் இசை வெளியீட்டு உரிமையை திங்க் மியூசிக் பெற்றுள்ளது.


தற்போது இறுதிக்கட்ட பணிகளில் கவனம் செலுத்தி வரும் படக்குழு, இப்படத்தை இந்த ஆண்டு டிசம்பர் மாதம் திரையரங்குகளில் வெளியிட திட்டமிட்டுள்ளது. ஜீவாவின் வித்தியாசமான கிராமத்து பின்னணி கதையாக உருவாகியுள்ள இப்படத்தின் மீது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது

*ர.கார்த்திக் இயக்கத்தில் உருவான நாகார்ஜுனாவின் 'கிங் 100- KING 100 ' படத்தின் கிளிம்ப்ஸ் வெளியீடு

 *ர.கார்த்திக் இயக்கத்தில் உருவான நாகார்ஜுனாவின் 'கிங் 100- KING 100 ' படத்தின் கிளிம்ப்ஸ் வெளியீடு 



'நித்தம் ஒரு வானம்', 'மேட் இன் கொரியா' ஆகிய படங்களை இயக்கி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த ர.கார்த்திக் இயக்கத்தில் தெலுங்கின் முன்னணி நட்சத்திர நடிகரான நாகார்ஜுனாவின் நூறாவது திரைப்படமாக உருவாகி வரும் 'கிங் 100 - KING 100' திரைப்படத்தின் பிரத்யேக க்ளிம்ப்ஸ் வெளியிடப்பட்டுள்ளது.


'உதயம்' , 'இதயத்தை திருடாதே', 'தோழா' 'குபேரா', 'கூலி' திரைப்படங்களின் மூலம் தமிழ் ரசிகர்களிடத்திலும் பிரபலமான பான் இந்திய நட்சத்திர நடிகரான நாகார்ஜுனா... அவருடைய திரையுலக பயணத்தில் நூறாவது திரைப்படத்த்தில் நடித்த்து வருகிறார். இந்த சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த திரைப்படத்தை தமிழ் திரையுலகின் இளம் திறமையான இயக்குநர் ர.கார்த்திக் இயக்கி வருகிறார். ராஜா மகாதேவன் ஒளிப்பதிவு செய்யும்  இந்த திரைப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார் . பிரம்மாண்டமான கமர்ஷியல் என்டர்டெய்னராக தயாராகி வரும் இந்த திரைப்படத்தை அன்னபூர்ணா ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் அக்கினேனி குடும்பத்தினர் தயாரிக்கின்றனர்


நட்சத்திர நடிகரான நாகார்ஜுனாவின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது நடிப்பில் தயாராகி வரும் 'கிங் 100- KING100' திரைப்படத்தின் அறிமுக காணொளி வெளியிடப்பட்டிருக்கிறது. அத்துடன்எதிர்வரும் டிசம்பர் மாதம் 24 ஆம் தேதி  உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கும் இந்த திரைப்படத்தின் கிளிம்ப்ஸ்... படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பை எகிற செய்திருக்கிறது. அத்துடன் ர.கார்த்திக்  நாகார்ஜுனா கூட்டணி மிகப் பெரும் சாதனையை படைக்கும் என்ற எதிர்பார்ப்பையும் உண்டாக்கி இருக்கிறது.


படைப்பாளுமை மிக்க இயக்குநர் ரா. கார்த்தியின் கற்பனையில் உருவான 'கிங் 100 - KING 100' படத்தின் பிரத்யேக காணொளியில்.. நாகார்ஜுனாவின் திரை தோற்றம்- திரை ஆளுமை - திரை பங்களிப்பு - என அனைத்து அம்சங்களும் ரசிகர்களின் ஆர்வத்தை அதிகரித்திருப்பதால், நாகார்ஜுனாவின் ரசிகர்கள் இதனை பிறந்தநாள் பரிசாக கொண்டாடி, இணையத்தில் வைரலாக்கி வருகிறார்கள்.


இயக்குநர் ர. கார்த்திக், நாகார்ஜுனாவிற்காக அதிலும் அவருடைய நூறாவது திரைப்படத்திற்காக உருவாக்கி இருக்கும் காட்சி அமைப்புகள்- உரையாடல்கள்- அனைத்தும் பிரம்மாண்டமானதாகவும், ரசிகர்களுக்கு பிரமிக்கத்தக்க வகையிலான திரையரங்க அனுபவத்தை வழங்குவதாலும். இதனை அனைத்து தரப்பு ரசிகர்களும் வரவேற்று இருக்கிறார்கள்.


நடிகர்,:

நாகார்ஜுனா


தொழில்நுட்பக் குழு :


எழுத்து & இயக்கம் : ர.கார்த்திக்

தயாரிப்பு நிறுவனம் : அன்னபூர்ணா ஸ்டுடியோஸ்

தயாரிப்பாளர் :  அக்கினேனி குடும்பம்

இசை : தேவி ஸ்ரீ பிரசாத்

ஒளிப்பதிவு : ராஜா மகாதேவன்

தயாரிப்பு வடிவமைப்பாளர் : என். சதீஸ் குமார்

படத்தொகுப்பு :  நவீன் நூலி

கிரியேட்டிவ் புரொடியுசர்: பிரசாத் நிம்மகாயலா

மக்கள் தொடர்பு : யுவராஜ்

மார்க்கெட்டிங் : ஃபர்ஸ்ட் ஷோ


https://www.youtube.com/watch?v=OgF4eRYcHd8