-

Loading latest news...

பாராட்டுக்களைக் குவிக்கும் ‘அங்கீகாரம்’ பட டிரெய்லர் !!*

பாராட்டுக்களைக் குவிக்கும் ‘அங்கீகாரம்’ பட டிரெய்லர் !!* 



ஸ்வஸ்திக் விஷன்ஸ் தயாரிப்பில், கதையின் நாயகனாக அறிமுக நடிகர் கே.ஜெ.ஆர் நடிக்க, இயக்குனர் பா.ரஞ்சித்திடம் துணை இயக்குனராக பணிபுரிந்த தென்பாதியான் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘அங்கீகாரம்’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகி ரசிகர்களிடமும் திரையுலகினரிடமும் பாராட்டு பெற்று வருகிறது.


பல உண்மை சம்பவங்களின் அடிப்படையில், தடகள விளையாட்டை மையமாக கொண்டு உருவாகியுள்ள இந்த திரைப்படம், விளையாட்டு வீரர்களின் இன்னல்களையும், விளையாட்டுத்துறையின் அவலங்களையும் பேசும் படமாக இப்படம் உருவாகியுள்ளது.


தற்போது வெளியான டிரெய்லரில் ஒரு தடகள விளையாட்டு வீரன் தனக்கான அங்கீகாரத்துக்கு கோர்ட் படியேறி போராடும், உணர்ச்சிப்பூர்வமான காட்சிகளும், வலுவான வசனங்களும் படத்தின் களத்தை வெளிப்படுத்துவதுடன், படத்தின் மீது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்துகிறது.


இப்படத்திற்காக 75 லட்ச ரூபாயில் கோர்ட் வளாக செட் தத்ரூபமாக அமைக்கப்பட்டு இப்படத்தின் காட்சிகள் படமாக்கப்பட்டது என்பது குறிப்பிடதக்கது.


இந்த திரைப்படத்தில் K.J.R கதையின் நாயகனாக அறிமுகமாகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அவருடன் இணைந்து விஜி வெங்கடேஷ், அஜித் கோஷி, சிந்தூரி விஸ்வநாத், ஆண்டனி, ரங்கராஜ் பாண்டே, மன்சூர் அலிகான், மோகன்ராம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.


ஜிப்ரான் இசையமைத்துள்ள இப்படத்திற்கு A.விஸ்வநாத் ஒளிப்பதிவு செய்துள்ளார். பீட்டர் ஹெயின் சண்டைக்காட்சிகளை வடிவமைத்துள்ள நிலையில், தினேஷ்குமார் படத்தொகுப்பு பணிகளை கவனித்துள்ளார். ராமு தங்கராஜ் கலை இயக்கம், சம்பத் ஆழ்வார் ஒலி வடிவமைப்பு, ஷெரீப் நடன அமைப்பு ஆகியவற்றின் மூலம் இத்திரைப்படம் தொழில்நுட்ப ரீதியாகவும் கவனம் ஈர்த்துள்ளது.


ஸ்வஸ்திக் விஷன்ஸ் நிறுவனம் சார்பில் பிரசாந்த், அஜித்பாஸ்கர், அருண்முருகன் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ள ‘அங்கீகாரம்’ திரைப்படத்தின் டிரெய்லர் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. விரைவில் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என படக்குழு தெரிவித்துள்ளது.


https://www.youtube.com/watch?v=xVyMza6j0Nk

ஜாலி ஓ ஜிம்கானா' நிகழ்ச்சியில் 'வட சென்னை 2' படத்தின் அப்டேட்டை அறிவித்த நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்*

ஜாலி ஓ ஜிம்கானா' நிகழ்ச்சியில் 'வட சென்னை 2' படத்தின் அப்டேட்டை அறிவித்த நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்*




தமிழ் சினிமா ரசிகர்களுக்கு ஒரு முக்கிய தருணமாக இருக்கும் 'வடசென்னை 2 ' படம் குறித்த ஒரு புதிய தகவலை நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் 'ஜாலி ஓ ஜிம்கானா' நிகழ்ச்சியில் அதிகாரபூர்வமாக பகிர்ந்துள்ளார். இது தொடர்பான நிகழ்ச்சி மே ஏழாம் தேதியான இன்று சன் நெக்ஸ்ட் (SUN NXT) டிஜிட்டல் தளத்தில் பிரத்யேகமாக ஒளிபரப்பாகிறது.


மிகவும் எதிர்பார்க்கப்பட்ட வடசென்னை படத்தின் இரண்டாம் பாகம் குறித்து தொடர்ச்சியான யூகங்கள் நிலவி வரும் நிலையில்... தொகுப்பாளர் ஜெகன் கிருஷ்ணனுடனான ஒரு வெளிப்படையான மற்றும் தணிக்கையற்ற உரையாடலில்.. ரசிகர்கள் நீண்ட காலமாக எதிர்பார்த்து கொண்டிருந்த கேள்விக்கு ஐஸ்வர்யா ராஜேஷ் இறுதியாக பதிலளித்து ... இப்படம் குறித்த தெளிவையும், புதிய உற்சாகத்தையும் ஏற்படுத்தி உள்ளார்.


இந்த பரபரப்பான அறிவிப்பை கடந்து இந்த நிகழ்ச்சி ஐஸ்வர்யா ராஜேஷின் திரையுலக பயணத்தை பற்றிய ஒரு அரிதான பார்வையையும் வழங்குகிறது. இதில் உள்ள கதைகள் ஆச்சரியமூட்டுவதாகவும், அதே சமயத்தில் சுவாரசியமானதாகவும் இருக்கின்றன. வடசென்னை படத்திற்காக இயக்குநர் வெற்றிமாறனுடன் 'ஆடிஷன் ' செய்ததை அவர் நினைவு கூர்ந்தார். அதில் இரண்டு முழு நிமிடங்களுக்கு தடையின்றி கெட்ட வார்த்தையை பேசும் படி அவரிடம் கேட்கப்பட்டது. இது ஒரு அசாதாரணமான பணி என்றாலும்.. அவர் தயக்கமின்றி அதை ஏற்றுக் கொண்டு, மனதில் நீடித்த ஒரு தாக்கத்தை ஏற்படுத்தினார்.



இந்த உரையாடல் பிரத்யேகமானதாகவும் மாறுகிறது. ஐஸ்வர்யா தனது கல்லூரி கால நினைவை வெளிப்படையாக பகிர்ந்து கொண்டிருக்கிறார். பல வருடங்கள் பெண்கள் மட்டும் படிக்கும் கல்லூரிகளில் படித்த பிறகு அந்த சூழலுக்கு அப்பாற்பட்ட வாழ்க்கையை அனுபவிக்க வேண்டும் என்ற ஆசையால் உந்தப்பட்டு.. தொடர்ந்து பத்து நாட்கள் வகுப்புகளை தவிர்த்து இருக்கிறார். அந்தத் தருணம் நேர்மையுடனும் , நகைச்சுவையுடனும் வெளிப்பட்டு... பார்வையாளர்களின் மனதை தொடுகிறது.


ஜெகன் கிருஷ்ணனின் எளிமையான மற்றும் ஈர்க்கும் பாணியால் வழிநடத்தப்பட்டு, 'ஆஃபீஸ் கானா' இசை குழுவின் ஆற்றல் மிக்க பங்களிப்பால் மெருகேற்றப்பட்ட இந்த எபிசோட்.. புதிய தகவல்களையும், பொழுதுபோக்கையும் தடையின்றி ஒன்றிணைக்கிறது.


இந்த கொண்டாட்டம் ஐஸ்வர்யா ராஜேஷ் உடன் நின்று விடவில்லை. ஜாலி ஓ ஜிம்கானா நிகழ்ச்சியில் அடுத்தடுத்து வருபவர்கள்... துருவ் விக்ரம் - ரவி மோகன் - மிர்ச்சி சிவா - பிரேம்ஜி அமரன் - ஹரிஷ் கல்யாண் - மகத் ராகவேந்திரா - வைபவ் ரெட்டி - அஸ்வின் காகுமனு மற்றும் அனைவரின் விருப்பத்திற்குரிய டிஜிட்டல் திரை இரட்டையர்களான கோபி- சுதாகர் என பட்டியல் நீள்கிறது.



ஒவ்வொரு வியாழக்கிழமையும் ஒரு புதிய விருந்தினர்... ஒரு புதிய கதை ... முற்றிலும் தவற விட கூடாத நிகழ்ச்சி ஜாலி ஓ ஜிம்கானா..!


சன் நெக்ஸ்ட் - SUN NXT - பற்றி


சன் நெக்ஸ்ட் என்பது நாடு தழுவிய பார்வையாளர்களின் விருப்பத்திற்குரிய பொழுதுபோக்கு தளமாகும். இது தமிழ் உள்ளிட்ட ஏழுக்கும் மேற்பட்ட மொழிகளில் ...4000 க்கும் மேற்பட்ட தலைப்புகளில் ...44 க்கும் மேற்பட்ட நேரலை - தொலைக்காட்சி - அலைவரிசைகளை வழங்குகிறது. திரைப்படங்கள்.. தொலைக்காட்சி .. நேரலை மற்றும் முன்கூட்டிய அணுகலுக்கான சலுகைகள் என பல தரப்பட்ட உள்ளடக்கங்களுடன் சன் நெக்ஸ்ட் SUN NXT உயர்தரமான தென்னிந்திய பொழுதுபோக்கின் அடையாளமாக திகழ்கிறது.

Peddi Is A One-Of-A-Kind Film, Audiences Will Walk Out Of Theatres With Tears In Their Eyes: Production Designer Avinash Kolla*

 *“பெத்தி”  படம் முடிந்து வெளியே வரும் போது கண்களில் கண்ணீர் இருக்கும்” – தயாரிப்பு வடிவமைப்பாளர் அவினாஷ் கொல்லா*



 “ரங்கஸ்தலம்” படத்தை மிஞ்சும் ராம் சரண் நடிப்பு… பிரம்மாண்டமாக உருவாகும் “பெத்தி”


70 களின் காலகட்டத்தை நிஜத்தில் கொண்டு வரும் 24 பிரம்மாண்ட செட்கள், கிராமத்து உணர்வு, கண்கலங்க வைக்கும் கதை – “பெத்தி” குறித்து அவினாஷ் கொல்லா பகிர்வு


மெகா சூப்பர்ஸ்டார் ராம்சரண்  நடிப்பில், புச்சி பாபு சனா  இயக்கத்தில் உருவாகி வரும் “பெத்தி” திரைப்படம் குறித்து தயாரிப்பு வடிவமைப்பாளர் அவினாஷ் கொல்லா பகிர்ந்த தகவல்கள் தற்போது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன.  

கிராமத்து பின்னணியில் உருவாகியுள்ள இந்த பிரம்மாண்ட படைப்பு, ஜூன் 4ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.


இத்திரைப்படத்தின் கதை முதன்முதலாக கேட்ட தருணத்திலேயே தன்னை ஆழமாக பாதித்துவிட்டதாக அவினாஷ்  கொல்லா தெரிவித்துள்ளார். தனது பத்து வருட சினிமா பயணத்தில் இதுபோன்ற உற்சாகத்தை எந்தக் கதையும் தரவில்லை என்றும், கதை கேட்ட பிறகு சுமார் இருபது நிமிடங்கள் அதிலிருந்து வெளிவர முடியாத நிலை ஏற்பட்டதாகவும் கூறியுள்ளார். மிக கனமான கதையின் தன்மையை உயிர்ப்பிக்க தயாரிப்பு வடிவமைப்பில் வெகு கவனமுடன் செயல்பட்டதாக கூறியுள்ளார். 


இந்தப் படத்திற்காக ஒரு வருடத்திற்கு மேலாக முன் தயாரிப்பு பணிகள் நடைபெற்றுள்ளன. ஒவ்வொரு செட்டிற்கும் முன்பாக சிறிய வடிவங்கள் உருவாக்கப்பட்டு பின்னரே பெரிய அளவில் கட்டப்பட்டுள்ளன. மொத்தமாக 24 பெரிய செட்கள் புதிதாக கட்டப்பட்டுள்ளதுடன், 60க்கும் மேற்பட்ட கூடுதல் அமைப்புகளும் உருவாக்கப்பட்டுள்ளன. மிகப்பெரிய நட்சத்திர பட்டாளத்துடன் வெளியிடங்களில் படப்பிடிப்பு நடத்துவது சிரமமானதால், தேவையான அனைத்து இடங்களையும் தனியே உருவாக்கி வசதியான சூழலில் படமாக்கியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


70 மற்றும் 80களின் பின்னணியில் அமைந்துள்ள இந்தப் படத்திற்காக, விஜயநகரம் பகுதியை முழுமையாக மறுவடிவமைத்துள்ளனர். அந்த காலகட்டத்தின் தெருக்கள், கடிகார கோபுரம், சுற்றுப்புறங்கள் என அனைத்தையும் இயல்பாக மீண்டும் உருவாக்கியுள்ளனர். படம் முழுவதும் உருவாக்கப்பட்ட செட்கள் எதுவும் செட் போல தோன்றக்கூடாது என்பதே தனது நோக்கம் எனவும், அந்த அளவிற்கு இயல்பாக வேலை செய்யப்பட்டுள்ளதாகவும் அவினாஷ் குறிப்பிட்டார்.


படத்தில் இடம்பெறும் மல்யுத்த காட்சிகளுக்காக இதுவரை யாரும் பார்க்காத வகையிலான அரங்க அமைப்பு உருவாக்கப்பட்டதாம். குறிப்பாக தரைக்கடியில் உருவாக்கப்பட்ட பிரம்மாண்ட அமைப்பில், கதை நாயகன் பெத்தியாக ராம்சரண் கம்பீரமாக தோன்றும் காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன. மேலும், கிரிக்கெட் காட்சிகளும் இயல்பான கிராமத்து உணர்வை தரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. “லகான்” படத்தைப் போல இல்லாமல், கிராம மக்கள் வயல்வெளி மேடுகளில் அமர்ந்து கிரிக்கெட் பார்க்கும் உணர்வை தரும் வகையில் அந்த காட்சிகள் இருக்கும் என அவர் கூறியுள்ளார்.


படத்தில் இடம்பெறும் சர்க்கரை ஆலை, ரயில் அமைப்பு, மலையடிவார நகரம் போன்றவை அனைத்தும் செட்களாக உருவாக்கப்பட்டிருந்தாலும், அவை அனைத்தும் உண்மையான இடங்களைப் போலவே தோன்றும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக ஹைதராபாத்தில் உள்ள ஒரு பழைய பங்களாவுக்குள் மலையடிவார நகரத்தை உருவாக்கியது மிகப்பெரிய சவாலாக இருந்ததாக அவினாஷ் கூறியுள்ளார்.


மேலும், படத்தில் ஹீரோ பயன்படுத்தும் கிரிக்கெட் பேட்டும் இயல்பான கிராமத்து தோற்றத்தில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. ஒரு கிராமத்து இளைஞன் கிடைக்கும் பொருட்களை பயன்படுத்தி தானாகவே உருவாக்கிய பேட் போல அதனை வடிவமைத்துள்ளார்களாம். அந்த கதாபாத்திரத்தின் நடை, உடல் மொழி உள்ளிட்ட பல நுணுக்கங்களும் அதற்குள் சேர்க்கப்பட்டுள்ளன.


கலை இயக்குநரும் ஒளிப்பதிவாளரும் ஒரே எண்ணத்தில் பணிபுரிந்தால் மட்டுமே திரைப்படம் முழுமையான வடிவம் பெறும். அந்த வகையில் ஒளிப்பதிவாளர் R. ரத்னவேலு  மிகச்சிறப்பான ஒத்துழைப்பை தந்ததாக தெரிவித்துள்ளார். 


நடிகர் ராம்சரண் குறித்து பேசுகையில், தான் உருவாக்கிய ஒவ்வொரு செட்டையும் ராம்சரண் மிகவும் பாராட்டியதாக அவினாஷ் கூறியுள்ளார். மல்யுத்த அரங்கம், ரயில் அமைப்பு, சிறப்பு பாடல் செட் என அனைத்தையும் அவர் ரசித்ததாகவும் தெரிவித்துள்ளார்.


இறுதியாக “பெத்தி” குறித்து அவர் கூறிய வார்த்தைகள் ரசிகர்களின் எதிர்பார்ப்பை மேலும் உயர்த்தியுள்ளன. “இது முற்றிலும் வித்தியாசமான திரைப்படம். படம் முடிந்து திரையரங்கிலிருந்து வெளியே வரும் போது கண்டிப்பாக கண்களில் கண்ணீர் இருக்கும். அந்த அளவுக்கு பெத்தியின் வாழ்க்கை பயணம் மனதை தொடும்” என்று அவர் தெரிவித்துள்ளார். மேலும், இயக்குநர் சுகுமார் கூட சமீபத்தில், இந்தப் படத்தில் ராம்சரண்  நடிப்பு ரங்கஸ்தலம் படத்தை விட அதிகமாக பேசப்படும் என்று கூறியிருப்பது படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.


*Peddi Is A One-Of-A-Kind Film, Audiences Will Walk Out Of Theatres With Tears In Their Eyes: Production Designer Avinash Kolla*


Mega Power Star Ram Charan's rural action drama Peddi, directed by Buchi Babu Sana, produced on a massive scale by Venkata Satish Kilaru under the Vriddhi Cinemas banner and presented by Mythri Movie Makers and Sukumar Writings, is slated for a worldwide theatrical release on June 4th. Expectations for the movie have already reached enormous heights with chartbuster songs and stunning glimpses. Meanwhile, Production Designer Avinash Kolla shared insights about the movie.


How did you feel when Director Buchi Babu narrated this story?

In my ten-year career, this is the first time I have been this excited about a story. After the director narrated the story, I wasn't myself for about 20 minutes. It moved me that deeply. Because the story itself has so much strength, I decided right then that I needed to take extreme care in all aspects of the production design.


This is a period drama, right? What precautions did you take regarding the sets?

When a set is built for a movie, the audience shouldn't realize that it is a set. Only then is an Art Director successful. As far as I am concerned, the audience will not perceive the sets built for this film as sets. They are that natural.


This is a story set in the 70s and 80s. I have already worked on many period films. I have that experience. Peddi is a story set in the Vizianagaram area. We recreated the streets, the clock tower, and all of those elements. We also designed the surrounding areas of Vizianagaram. Similarly, we took great care with the wrestling and cricket games. We created a wrestling setup in this that no one has ever seen before. For that, we shot in an underground setup. The shot where Charan garu appears with a mace was filmed right there.


What about DOP Rathnavelu?

If the DOP and the Art Director are in sync, the film will definitely turn out perfectly. Such a great sync happened here. It was a great joy working with Rathnavelu. We worked with excellent coordination.


There is cricket in this, right? Will it be like Lagaan?

No. Lagaan is a story that happened during the British era. This is set in the mid-70s and 80s against a Vizianagaram backdrop. When you watch the cricket here, it will carry the exact natural feeling you get while sitting on the ridges of the fields in our villages watching a game.


We did pre-production for this film for over a year. During that time, we created miniatures for every single set. We built every set for this movie in an open ground. We shot entirely in natural light.


We needed a hill station town for this. We built that inside a Bhoot Bungalow (a haunted house) in Hyderabad. When you watch the movie, it will feel like a town situated at the foot of a hill. Building that set felt very challenging.


Director Buchi Babu and I worked with very good coordination. There is a sugarcane factory in this. That is also a set. However, the beauty of it is that you won't be able to spot even a single element as a set.


How many sets did you build for Peddi?

There are 24 sets built from scratch. Apart from that, there are easily around 60 to 70 setups. If it is a small film, we can go anywhere and shoot. But going out to shoot with such a massive star cast is no ordinary task. We can only shoot if we keep the locations within our comfort zone. It has been almost a year since we built the Vizianagaram set. It is convenient to shoot whenever we need it. We built that set so that it adapts to all weather conditions.


The bat used by the hero in this also comes from a very natural production design. The way a local village player would make a bat using whatever raw materials he can find—that bat looks just as natural. He also has a specific mannerism. All of those nuances were crafted into it.


Tell us about your bond with Charan?

Charan appreciated every set I built. The train setup, the special song set, the wrestling arena... he really liked every single one. Many people who came to meet Charan also mentioned that the sets look extremely natural.


How did Charan get injured?

It happened during the wrestling in an action sequence. Even in that condition, Charan immediately returned to the shoot. Because if we didn't shoot that month, all the artists' dates would have been missed. That is why he came right back and completed it.


About the story of Peddi?

This is a one-of-a-kind film. When you walk out of the theatre, your eyes will definitely well up with tears. You will travel that deeply with Peddi's journey. That emotion will absolutely be there.


Sukumar recently said that Charan's performance in this movie will surpass 'Rangasthalam'. The reason is that there is that much strength in this story.

Sundeep Kishan, Krishna Chaitanya, Vijay Chilla, Shashi Devireddy, 70mm Entertainments, Powerpeta Powerful Glimpse Unveiled

 *சந்தீப் கிஷன் – கிருஷ்ண சைதன்யா – விஜய் சில்லா – சசி தேவி ரெட்டி கூட்டணியில் உருவாகும் ‘பவர் பேட்டா’ (Power Peta) படத்தின் அதிரடி கிளிம்ப்ஸ் வீடியோ வெளியானது !!*



விஜய் சில்லா மற்றும் சசி தேவி ரெட்டி தலைமையிலான 70mm Entertainments நிறுவனம் மீண்டும் ஒரு மாபெரும் திரைப்படத்தை உருவாக்கத் தயாராகியுள்ளது. இதயம் தொடும், தீவிரம் மற்றும் வலுவான கதைகளைக் கொண்ட படங்களை வழங்கி வரும் இந்த தயாரிப்பு நிறுவனம் தனது அடுத்த பிரம்மாண்ட முயற்சியை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதில் நடிகர் சந்தீப் கிஷன் கதாநாயகனாக நடிக்கிறார். எழுத்தாளராக இருந்து இயக்குநராக மாறிய கிருஷ்ண சைதன்யா இப்படத்தை இயக்குகிறார். சந்தீப் கிஷனின் பிறந்தநாளை முன்னிட்டு ‘பவர் பேட்டா’ படத்தின் புதிய அதிரடி கிளிம்ப்ஸ் வெளியாகியுள்ளது.


இந்த கிளிம்ப்ஸ் ஆரம்பத்திலேயே திரையரங்க முதல் நாள் கொண்டாட்டத்தின் மின்சாரம் பாயும் சூழலுடன் தொடங்குகிறது. ரசிகர்களின் ஆரவாரத்திற்கிடையில் ஹீரோ சிகரெட் புகைத்தபடி என்ட்ரி கொடுத்து, “சிங்கம்” குறித்து அதிரடி வசனம் பேசுகிறார். அதன் பின்னர் அந்த மண்ணின் தன்மையும், அதற்குள் இருக்கும் அதிகாரத்தின் வலிமையையும் அவர் விவரிக்கிறார். மேலும் திரையரங்க திரையில் பட்டாசுகளை எறியும் காட்சி ரசிகர்களுக்கு மிகுந்த உற்சாக தருணமாக அமைந்துள்ளது.


சந்தீப் கிஷன் இந்த படத்தில் முரட்டுத்தனமான லுக்கில் காட்சியளிக்கிறார். ஸ்டைலிஷ் கண்ணாடி, வித்தியாசமான உடை மற்றும் மிரட்டலான பாடி லாங்குவேஜ் மூலம் அவர் வேற லெவல் தாக்கத்தை ஏற்படுத்துகிறார். அவரது கதாபாத்திர பெயரான “சேனாபதி ரவி” வெளியிடப்பட்டிருப்பதும் இந்த கதாபாத்திரத்தின் தீவிரத்தையும் ஆதிக்கத்தையும் உணர்த்துகிறது. அவரது திரை ஆளுமை, பன்ச் வசனங்கள் மற்றும் மிரட்டலான ஆட்டிட்யூட் அனைத்தும் கிளிம்ப்ஸில் பெரும் கொண்டாட்டமாக அமைந்துள்ளது.


இயக்குநர் கிருஷ்ண சைதன்யா ஒரு பெரிய மாஸ் கதாபாத்திரத்தை உருவாக்குவதில் தனது திறமையை நிரூபித்துள்ளார். மாஸ் காட்சிகளும் வசனங்களும் வலுவாக அமைந்துள்ளன. சாதாரணமாக சிகரெட் பற்றவைக்கும் காட்சியையே கோபம் நிறைந்த தருணமாக மாற்றியிருப்பது அவரது இயக்கத்தின் திறனை வெளிப்படுத்துகிறது.


ஒளிப்பதிவாளர் மதி , பீரியட் கால உலகத்தை துல்லியமாக படமாக்கியுள்ளார். மணி சர்மாவின் பின்னணி இசை ஒவ்வொரு காட்சிக்கும் அதிரடியை கூட்டுகிறது. தேசிய விருது பெற்ற எடிட்டர் ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பை கவனித்துள்ளார். ராமகிருஷ்ணா மற்றும் மோனிகா ஆகியோர் தயாரிப்பு வடிவமைப்பை மேற்கொண்டுள்ளனர். சச்சின் சுதாகரன் மற்றும் ஹரிஹரன் இணைந்து சவுண்ட் டிசைன் பணிகளை செய்துள்ளனர்.


படப்பிடிப்பு தற்போது பரபரப்பாக நடைபெற்று வருகிறது. முதல் கட்ட படப்பிடிப்பை படக்குழு வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது.


நடிப்பு:

சந்தீப் கிஷன்


தொழில்நுட்ப குழு:

எழுத்து, இயக்கம் – கிருஷ்ண சைதன்யா

தயாரிப்பாளர்கள் – விஜய் சில்லா, ஷஷி தேவிரெட்டி

தயாரிப்பு நிறுவனம் – 70mm Entertainments

இசை – மணி சர்மா

ஒளிப்பதிவு – மதி

படத்தொகுப்பு – ஸ்ரீகர் பிரசாத்

தயாரிப்பு வடிவமைப்பு – சப்பாணி ராமகிருஷ்ணா, மோனிகா

சவுண்ட் டிசைன் – சச்சின் சுதாகரன், ஹரிஹரன்

PRO – யுவராஜ்


*Sundeep Kishan, Krishna Chaitanya, Vijay Chilla, Shashi Devireddy, 70mm Entertainments, Powerpeta Powerful Glimpse Unveiled*


70mm Entertainments, the acclaimed banner headed by Vijay Chilla and Shashi Devireddy, is gearing up to raise the stakes yet again. Known for backing cinema with heart, grit, and strong storytelling, the production house has officially announced its next ambitious project. Sundeep Kishan steps in as the lead, with writer-turned-director Krishna Chaitanya taking charge. Marking the actor’s birthday, the makers of Powerpeta dropped a striking new glimpse.


The glimpse opens on a high-voltage note- crowds erupting inside a theatre on first day, first show frenzy. Amid the chaos, the protagonist makes a fiery entry, smoking a cigarette and delivering a commanding dialogue about a lion. He goes on to define the essence of the land and the forces that shape its power. In a whistle-worthy moment, he sets the atmosphere ablaze by hurling crackers at the theatre screen.


Sundeep Kishan appears in a rugged period avatar- stylish shades, vibrant attire, and an intimidating aura. The reveal of his character name, Senapathi Ravi, adds weight, hinting at the dominance and intensity the role carries. His screen presence is explosive, matched by punchy dialogue delivery and raw attitude.


Director Krishna Chaitanya showcases his command in crafting a fierce, larger-than-life character. The elevations hit hard, and the dialogues reinforce his strength as a writer. Even the simple act of lighting a cigarette is turned into a moment of fury, highlighting his directorial finesse.


Cinematographer Madhie captures the period setting with precision, while Mani Sharma’s intense background score amplifies every frame. National Award-winning editor Sreekar Prasad handles the cuts, with production design by Ramakrishna and Monika, and sound design by Sachin Sudhakaran and Hariharan shaping the film’s sonic landscape.


The shoot is currently in progress, with the team successfully wrapping up its first schedule.


Cast: Sundeep Kishan


Technical Crew:

Writer, Director: Krishna Chaitanya

Producers: Vijay Chilla and Shashi Devireddy

Banner: 70 mm Entertainments

Music: Mani Sharma

DOP: Madhie

Editing: Sreekar Prasad

Production Design: Sabbani Ramakrishna and Monika

Sound Design: Sachin Sudhakaran and Hariharan

PRO: Yuvraaj



Link : https://www.youtube.com/watch?v=a2Ldt2BXRG0

கான் சிட்டி” இரண்டாவது சிங்கிள் வெளியீடு…, மாஸாக கவரும் “நான் தான் கிங்கு” பாடல்!*

 *“கான் சிட்டி” இரண்டாவது சிங்கிள் வெளியீடு…, மாஸாக கவரும் “நான் தான் கிங்கு” பாடல்!* 



*நாயகனின் ஸ்டைல், புத்திசாலித்தனம், ஆளுமையை கொண்டாடும் “கான் சிட்டி” செகண்ட் சிங்கிள்!*


*ஷான் ரோல்டன் இசையில் வைரலாகும் “நான் தான் கிங்கு” லிரிக்கல் வீடியோ!*


பவர் ஹவுஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் ஹரிஷ் துரைராஜ் இயக்கத்தில், அர்ஜூன் தாஸ், அன்னா பென், யோகி பாபு, வடிவுக்கரசி உள்ளிட்டோர் நடித்திருக்கும் “கான் சிட்டி” திரைப்படம், வெளியீட்டுக்கு முன்பே ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கி வருகிறது. இப்படத்தின் முதல் சிங்கிள் “ரா ரா ரங்கையா” பாடல் சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், தற்போது வெளியாகியுள்ள இரண்டாவது சிங்கிள் “நான் தான் கிங்கு” பாடலும் ரசிகர்களின் கவனத்தை கவர்ந்து வருகிறது.


ஷான் ரோல்டன் இசையில், மோகன் ராஜன் எழுதியுள்ள இந்தப் பாடலை ஷான் ரோல்டன், கெலிதீ,  லலிதா சுதா ஆகியோர் இணைந்து பாடியுள்ளனர். நாயகனின் குணாதிசயங்கள், புத்திசாலித்தனம் மற்றும் ஆளுமையை வெளிப்படுத்தும் வகையில் உருவாகியுள்ள இந்த லிரிக்கல் வீடியோ பாடல், முதல் முறை கேட்டவுடனேயே ரசிகர்களை ஈர்க்கும் தன்மையைக் கொண்டுள்ளது. மாஸ் மற்றும் ஸ்டைலிஷ் பாணியில் அமைந்துள்ள பாடலின் வரிகளும் இசையும், “கான் சிட்டி” படத்தின் உலகத்தை மேலும் சுவாரஸ்யமாகக் காட்டுகின்றன.


பாடலின் காட்சியமைப்பிலும் தனித்துவமான முயற்சிகள் இடம்பெற்றுள்ளன. அர்ஜூன் தாஸ் திரையில் காட்டும் ஸ்கிரீன் பிரசென்ஸ் மற்றும் பாடலின் அனல் பறக்கும் பீட்ஸ் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றன. குறிப்பாக பாடலின் வரிகளும், இசை அமைப்பும் இளைஞர்களை கவரும் வகையில் அமைந்துள்ளதாக ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.


புதுமையான கதைக்களத்தில் உருவாகும் “கான் சிட்டி” படம், நகர வாழ்க்கையில் கடனில் சிக்கித் தவிக்கும் ஒரு மிடில் கிளாஸ் குடும்பத்தின் கதையை மையமாகக் கொண்டு, குடும்ப உணர்வுகள், நகைச்சுவை, பரபரப்பு ஆகிய அனைத்தும் கலந்த ஒரு முழுமையான ஃபேமிலி என்டர்டெயினராக உருவாகியுள்ளது.


இந்தப் படத்தில் அர்ஜூன் தாஸ் நாயகனாக நடிக்க, அன்னா பென் கதாநாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன் யோகி பாபு, வடிவுக்கரசி, அகிலன் உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.


பவர் ஹவுஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் ஹரிஷ் துரைராஜ் இயக்கியுள்ள இந்த படம், மங்களூர், சென்னை, மும்பை உள்ளிட்ட பல நகரங்களில் படமாக்கப்பட்டுள்ளது. மேலும், இப்படத்தின் டிஜிட்டல் உரிமையை Netflix நிறுவனம் பெரும் தொகைக்குக் கைப்பற்றியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.


ஒவ்வொரு அப்டேட்டிலும் ரசிகர்களுக்கு புதுமையான அனுபவத்தை கொடுத்து வரும் “கான் சிட்டி”, தற்போது “நான் தான் கிங்கு” பாடல் மூலம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது. விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ள இப்படத்திற்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.


LINK : https://www.youtube.com/watch?v=RMEyZXDQrCg

Prime Video Unveils the Captivating Trailer of System, a Prime Original Movie that Navigates the Battle Between Power and Justice*

 *அதிகாரம் மற்றும் நீதிக்கிடையிலான போராட்டத்தை வெளிப்படுத்தும் ப்ரைம் ஒரிஜினல் திரைப்படமான “சிஸ்டம்” படத்தின் அதிரடியான டிரெய்லரை வெளியிட்டது ப்ரைம் வீடியோ !!*



*ப்ரைம் வீடியோ வழங்கும் “சிஸ்டம்” படத்தின் அதிரடியான டிரெய்லர் வெளியானது !!*


தனது புதிய ப்ரைம் ஒரிஜினல் திரைப்படமான “சிஸ்டம்” திரைப்படத்தின் உலகளாவிய வெளியீட்டு தேதியை மே 22 என அறிவித்துள்ளது.


ப்ரைம் வீடியோ தயாரிப்பில் உருவாகியுள்ள பரபரப்பான நீதிமன்ற த்ரில்லர் திரைப்படமான சிஸ்டம், அஸ்வினி ஐயர் திவாரி இயக்கத்தில் உருவாகியுள்ளது. பம்மி பவேஜா, ஹர்மன் பவேஜா மற்றும் ஸ்மிதா பாலிகா ஆகியோர் Baweja Studios நிறுவனத்தின் கீழ் தயாரித்துள்ளனர். ஹர்மன் பவேஜா, அருண் சுகுமார், அஸ்வினி ஐயர் திவாரி, தஸ்னீம் லோகண்ட்வாலா மற்றும் அக்ஷத் கில்தியல் ஆகியோர் இணைந்து திரைக்கதை எழுதியுள்ளனர்.


சோனாக்‌ஷி சின்ஹா, ஜோதிகா மற்றும் அஷுதோஷ் கோவாரிகர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ள இப்படத்தில், ப்ரீத்தி அகர்வால், ஆதிநாத் கோத்தாரே, ஆஷ்ரியா மிஷ்ரா, கவுரவ் பாண்டே மற்றும் சயந்தீப் குப்தா உள்ளிட்ட பலரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.


“சிஸ்டம்” திரைப்படம் வரும் மே 22ஆம் தேதி இந்தியாவிலும் உலகம் முழுவதும் 240-க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிராந்தியங்களில், பிரத்யேகமாக ப்ரைம் வீடியோவில் வெளியாகிறது.


மும்பை, இந்தியா – மே 12, 2026 – இந்தியாவின் மிகவும் விரும்பப்படும் பொழுதுபோக்கு தளமான ப்ரைம் வீடியோ, தனது அடுத்த ப்ரைம் ஒரிஜினல் திரைப்படமான “சிஸ்டம்” படத்தின் அதிரடியான டிரெய்லரை இன்று வெளியிட்டுள்ளது. சமூகத்தின் கடுமையான உண்மைகளையும், அதிகாரம் உண்மையை நிர்ணயிக்கும் ஒரு அமைப்பில் நீதிக்கு என்ன மதிப்பு உள்ளது என்ற கேள்வியையும் இப்படம் முன்வைக்கிறது.


இயக்குநர் அஸ்வினி ஐயர் திவாரி இயக்கியுள்ள இந்த திரைப்படத்தை பம்மி பவேஜா, ஹர்மன் பவேஜா மற்றும் ஸ்மிதா பாலிகா ஆகியோர் தயாரித்துள்ளனர். பேராசை, பழிவாங்குதல், நீதி தேடும் போராட்டம் மற்றும் ஒழுக்கநெறி போன்ற உலகளாவிய கருக்களை மையமாகக் கொண்டு “சிஸ்டம்” உருவாகியுள்ளது.


டிரெய்லரில், நேகா என்ற இளம் வழக்கறிஞராக சோனாக்‌ஷி சின்ஹா அறிமுகமாகிறார். தனது தந்தையான மூத்த வழக்கறிஞர் (அஸ்தோஷ் கோவாரிகர் ) முன்னிலையில் தனது திறமையை நிரூபிக்க வேண்டிய சவாலில் அவர் ஈடுபடுகிறார். அதற்காக சரிகா என்ற கூர்மையான நீதிமன்ற ஸ்டெனோகிராஃபரை (ஜோதிகா) அவர் தனது அணியில் இணைத்துக்கொள்கிறார். ஆனால் சரிகாவுக்கும் தனிப்பட்ட நோக்கங்கள் இருப்பது பின்னர் தெரிய வருகிறது. அதன் பிறகு நீதிமன்றத்தில் நடக்கும் கடுமையான மோதல்கள், சிக்கலான உறவுகள் மற்றும் உணர்ச்சி மிகுந்த தருணங்கள் டிரெய்லரில் வேகமாக நகர்கின்றன.


“பணக்காரர்களின் சத்தத்தில் ஏழைகளின் குரல் காணாமல் போய்விடுகிறது.” போன்ற தாக்கம் மிக்க வசனங்கள் படத்தின் மைய கருத்தை வெளிப்படுத்துகின்றன. “அதிகாரம் உண்மையை விட வலிமையானதாக இருக்கும் ஒரு அமைப்பில், நீதி இன்னும் உயிருடன் இருக்கிறதா?” என்ற கேள்வியை படம் எழுப்புகிறது. இதற்கான பதில் மே 22ஆம் தேதி ப்ரைம் வீடியோவில் வெளியாகும் “சிஸ்டம்” திரைப்படத்தில் கிடைக்கும்.


இப்படம் குறித்து இயக்குநரும் இணை எழுத்தாளருமான அஸ்வினி ஐயர் திவாரி கூறுகையில்..,


“நான் சொல்லும் ஒவ்வொரு கதையும் ஒரு தைரியமான முயற்சிதான். என்னை சவாலுக்கு உள்ளாக்கும் கதைகளே என்னை ஒரு படைப்பாளியாக வளர்த்திருக்கின்றன. “சிஸ்டம்” திரைப்படமும் அதேபோல உண்மைத்தன்மையுடன் உருவான ஒரு படைப்பு. ப்ரைம் வீடியோ மற்றும் Baweja Studios ஆகியோர் என் கற்பனையில் நம்பிக்கை வைத்ததற்கு நான் மிகவும் நன்றி கூறுகிறேன். சோனாக்‌ஷி சின்ஹா மற்றும் ஜோதிகா போன்ற வலிமையான நடிகைகள் இப்படத்தின் மையமாக இருப்பதால், இந்த படம் மக்களை வெறும் பொழுதுபோக்கைத் தாண்டி சிந்திக்க வைக்கும் என்று நம்புகிறேன்” என்றார்.


நேகா என்ற அரசு வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் நடித்துள்ள சோனாக்‌ஷி சின்ஹா கூறுகையில்..,


“இந்த கதாபாத்திரம் எனக்கு மிகவும் சிறப்பான அனுபவமாக இருந்தது. ஒரு நடிகையாக என்னை சவாலுக்கு உட்படுத்தும் கதைகளை நான் எப்போதும் விரும்புவேன். Dahaad படத்திற்குப் பிறகு சிஸ்டம் போன்ற வித்தியாசமான கதையில் நடிக்கும் வாய்ப்பை ப்ரைம் வீடியோ எனக்கு வழங்கியுள்ளது. இது ஒரு சாதாரண நீதிமன்ற நாடகம் மட்டுமல்ல; சமூகத்தில் நீதியும் சமூக அமைப்புகளும் எவ்வாறு பிரிக்கப்பட்டிருக்கின்றன என்பதை பிரதிபலிக்கும் ஒரு படம்” என்றார்.


சரிகா கதாபாத்திரத்தில் நடித்துள்ள ஜோதிகா கூறுகையில்…,


“பல அடுக்குகள் கொண்ட இந்த கதாபாத்திரத்தை ஏற்றுக்கொள்வது சவாலானது, அதே நேரத்தில் உற்சாகமாக இருந்தது. சமத்துவமின்மை மற்றும் அதிகாரம் ஒன்றாக வாழும் நவீன இந்தியாவை இந்த படம் பேசுகிறது. அஸ்வினி மிகவும் தெளிவான மற்றும் உண்மைத்தன்மை கொண்ட கண்ணோட்டத்துடன் இந்தக் கதையை உருவாக்கியுள்ளார். ப்ரைம் ஒரிஜினல் திரைப்படத்தின் ஒரு பகுதியாக இருப்பது மிகச் சிறந்த அனுபவம். இந்த படம் இந்தியாவையும் தாண்டி உலகம் முழுவதும் வரும் மே 22 மக்களை சென்றடையும் என்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்றார்.


*Prime Video Unveils the Captivating Trailer of System, a Prime Original Movie that Navigates the Battle Between Power and Justice*


Prime Original Movie, System, a gripping courtroom thriller, is directed by Ashwiny Iyer Tiwari and produced under the banner of Baweja Studios by Pammi Baweja, Harman Baweja, and Smitha Baliga. The movie is written by Harman Baweja, Arun Sukumar, Ashwiny Iyer Tiwari, Tasneem Lokhandwala, and Akshat Ghildial


Featuring Sonakshi Sinha, Jyotika, and Ashutosh Gowariker in lead roles, System, it also features Preeti Agarwal, Adinath Kothare, Aashriya Mishra, Gaurav Pandey, and Sayandeep Gupta in pivotal roles


System will premiere exclusively on Prime Video in Hindi across India and over 240 countries and territories worldwide on May 22


MUMBAI, India—May 12, 2026—Prime Video, India’s most loved entertainment destination, today unveiled the gripping trailer of its upcoming Prime Original movie System, offering a powerful glimpse into hard-hitting social realities and questions a system where power defines truth. Directed by Ashwiny Iyer Tiwari and produced by Pammi Baweja, Harman Baweja, and Smitha Baliga, System captures the universal themes of ambition, revenge, fight for justice, and moral ethics. Written by Harman Baweja, Arun Sukumar, Ashwiny Iyer Tiwari, Tasneem Lokhandwala, and Akshat Ghildial, System features Sonakshi Sinha, Jyotika, and Ashutosh Gowariker in lead roles, supported by Preeti Agarwal, Adinath Kothare, Aashriya Mishra, Gaurav Pandey, and Sayandeep Gupta in pivotal roles. The movie will premiere exclusively on Prime Video in Hindi, across India and over 240 countries and territories worldwide on May 22.

 

The trailer for System opens with Neha, a determined young lawyer played by Sonakshi Sinha, taking on a tough challenge from her father (Ashutosh Gowariker) to be worthy of a partnership in his firm. To pull it off, she recruits Sarika (Jyotika) - a street-smart courtroom stenographer, who secretly harbors motives of her own. What follows is a fast-moving glimpse into intense courtroom battles, messy relationships, and some powerful moments. Hard-hitting dialogues like "Ameeri ke shor mein gareeb ki awaaz kho jaati hai" cut straight to the core conflict, and viewers are left to wonder, in a System where influence can outweigh truth, has Power killed Justice or does it still stand a chance? Find out when System premieres exclusively on Prime Video on May 22!

 

Ashwiny Iyer Tiwari, the director and co-writer of System shared, “As a filmmaker every story I have told is an act of bravery. Stories that inspire me creatively, break barriers and sometimes they are deeply personal. System like all my movies shares similar values that challenges me to evolve with my craft with authenticity. Movies that I hope will live beyond my lifetime. She further added, “I am immensely grateful that Prime Video along with Baweja Studios believed in my vision. With Sonakshi Sinha and Jyotika, two powerful actors at the heart of the narrative, I hope that System will not only entertain but also spark a conversation among viewers in India and around the world, when it premieres on Prime Video on May 22.”

 

Sonakshi Sinha, who plays Neha, an ambitious public prosecutor, shared, “Playing this character has been deeply rewarding. I’m always drawn to stories that challenge me as an actor, and Prime Video has given me the opportunity to explore diverse genres and themes—from Dahaad to now System. This original movie is more than just a legal drama; it reflects the society we live in, where justice can sometimes be as divided as the social structures around us. Ashwiny’s clear vision helped me bring out my best and I’m excited to see how audiences respond when System premieres on Prime Video on May 22.”

 

Known for her versatility, Jyotika, who plays the role of Sarika, a courtroom stenographer, said, “Portraying such a layered character in System was both exciting and challenging. The film explores the contrasts of modern India, where privilege and inequality coexist. Ashwiny brings a clear and engaging vision to the story, from well-developed characters to realistic settings. Being part of a Prime Original movie has been a great experience. Prime Video is known for sharing meaningful stories with audiences across India and globally, and I am glad System will reach so many people when it premieres on May 22.”


Link : https://www.youtube.com/watch?v=7dB5ne639ls

I Am Game Set to Be Dulquer Salmaan’s Most Stylish Film; August 2026 Release Confirmed*

 *துல்கர் சல்மானின் ஸ்டைலீஷ் படம் “ஐ அம் கேம்” வரும் ஆகஸ்ட் 2026 வெளியாகிறது ! !*



துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகி வரும் “ஐ அம் கேம்” திரைப்படம் தற்போது ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள மலையாள படங்களில் ஒன்றாக உருவெடுத்து வருகிறது. தென்னிந்தியாவில் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் படமாக்கப்பட்டுள்ள இந்த திரைப்படம், தற்போது பரபரப்பான இறுதிக்கட்ட பின்னணி பணிகளில் உள்ளது.


தனது திரை வாழ்க்கையில் இதுவரை நடித்திருக்கும் படங்களில் மிகவும் ஸ்டைலிஷான படமாக இப்படம் இருக்கும் என்று துல்கர் சல்மான் தெரிவித்துள்ளார். கதாபாத்திரமும், படத்தின் உலகம் முழுவதும் நவீன மற்றும் ஸ்டைலிஷ் தோற்றத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இயக்குனர் நஹாஸ் ஹிதாயத் (Nahas Hidayath ) , தன்னை முற்றிலும் புதிய ஸ்டைலிஷ் அவதாரத்தில் காட்ட வேண்டும் என்ற எண்ணத்துடன் இந்த படத்தை வடிவமைத்ததாகவும் தெரிவித்துள்ளார்.


நஹாஸ் ஹிதாயத், இயக்கும் இந்த பிரம்மாண்ட ஆக்ஷன் திரில்லர் திரைப்படம் 2026 ஆகஸ்ட் மாதத்தில் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. துல்கர் சல்மான் தனது திரை வாழ்க்கையில் இதுவரை மேற்கொண்டிருக்கும் மிகப்பெரிய படைப்பாக, இந்தப் படம் உருவாகி வருவதுடன், மலையாள சினிமாவின் மிகப்பெரிய வெளியீடுகளில் ஒன்றாகவும் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. Wayfarer Films தயாரிப்பில், துல்கர் சல்மான் மற்றும் ஜோம் வர்கீஸ் இணைந்து இந்த படத்தை தயாரிக்கின்றனர். ஷஹபாஸ் ரஷீத் மற்றும் ஆதர்ஷ் சுகுமாரன் இணைந்து திரைக்கதை எழுதியுள்ளனர். லோகா திரைப்படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு Wayfarer Films நிறுவனம் தயாரிக்கும் அடுத்த படமாகவும் இது அமைந்துள்ளது.


மேலும், சமீப காலங்களில் வெளியான தனது பல படங்களில் வின்டேஜ் தோற்றத்தில் நடித்திருந்தாலும், “ஐ அம் கேம்“ திரைப்படத்தில் முற்றிலும் மாறுபட்ட மற்றும் புத்துணர்ச்சியான மாற்றத்தில் ரசிகர்களை சந்திக்கப் போவதாக துல்கர் சல்மான் தெரிவித்துள்ளார். இந்த படத்தில் அவர் ஸ்டைலிஷ் மாஸ் ஆக்ஷன் ஹீரோவாக களமிறங்குகிறார். மேலும், RDX வெற்றிக்குப் பிறகு நஹாஸ் ஹிதாயத், இயக்கும் அடுத்த திரைப்படம் இதுவாகும். மேலும் துல்கர் சல்மான் நடிக்கும் 40வது படமாக “ஐ அம் கேம்“ உருவாகி வருகிறது. பான்-இந்திய அளவில் மிகப்பெரிய ஆக்ஷன் திரில்லராக இந்த படம் தயாராகி வருகிறது.


இந்த படத்தில் ஆண்டனி வர்கீஸ், மிஷ்கின், கயாடு லோஹர், கதிர், பார்த் திவாரி மற்றும் சம்யுக்தா விஸ்வநாதன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இசையை ஜேக்ஸ் பிஜாய் அமைக்க, அதிரடி சண்டைக் காட்சிகளை பிரபல ஸ்டண்ட் இயக்குநர்கள் அன்பறிவு வடிவமைத்துள்ளனர்.


ஏற்கனவே வெளியான முதல் மற்றும் இரண்டாவது லுக் போஸ்டர்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றிருந்தன. “ஐ அம் கேம்” திரைப்படம் மலையாளம், தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் பான்-இந்திய படமாக வெளியாகவுள்ளது.


தொழில்நுட்ப குழு விவரங்கள்:


லைன் தயாரிப்பாளர்: பிபின் பெரும்பில்லி

ஒளிப்பதிவு: ஜிம்ஷி காலித்

இசை: ஜேக்ஸ் பிஜாய்

எடிட்டிங்: சமன் சாக்கோ

தயாரிப்பு நிர்வாகிகள் : சுஜோய் ஜேம்ஸ், தேவதேவன்

தயாரிப்பு வடிவமைப்பு: அஜயன் சாலிசேரி

மேக்கப்: ரோனெக்ஸ் சேவியர்

உடை வடிவமைப்பு: மஷார் ஹம்சா

தயாரிப்பு ஒருங்கிணைப்பு : தீபக் பரமேஸ்வரன்

உதவி இயக்குநர் : ரோஹித் சந்திரசேகர்

பாடல்வரிகள் : மனு மஞ்சித், விநாயக் சசிகுமார்

VFX : தௌஃபீக் (எக்வொயிட்) (Eggwhite)

போஸ்டர் வடிவமைப்பு: டென் பாயிண்ட்

ஒலி வடிவமைப்பு: சிங்க் சினிமா

சவுண்ட் மிக்ஸ்: கண்ணன் கணபதி

ஸ்டில்ஸ்: எஸ்.பி.கே

மார்க்கெட்டிங் தலைவர் : விஜீத் விஸ்வநாதன்

மக்கள் தொடர்பு : யுவராஜ்


*I Am Game Set to Be Dulquer Salmaan’s Most Stylish Film; August 2026 Release Confirmed*


I Am Game, the upcoming film starring Dulquer Salmaan, is shaping up to be one of the most anticipated Malayalam films among audiences today. The film, which has completed shooting across more than 100 locations in South India, is currently in the post-production stage.


Dulquer Salmaan revealed that I Am Game will be the most stylish film of his career so far. According to the actor, both the character and the world of the film have been designed in a highly modern and stylish manner. He also stated that director Nahas Hidayath specifically wanted to present him in a stylish new avatar, which became one of the defining aspects of the project.


Directed by Nahas Hidayath, the big-budget action thriller is slated for a worldwide theatrical release during August 2026. The film is being mounted as the biggest project in Dulquer Salmaan’s career and is also expected to be one of the biggest releases in Malayalam cinema. Produced by Dulquer Salmaan and Jom Varghese under the banner of Wayfarer Films, the screenplay has been written by Shahabas Rasheed and Adarsh Sukumaran. I Am Game is also the next production from Wayfarer Films after the mega blockbuster Lokah.


Dulquer further explained that most of his recent films featured him in vintage-style looks, whereas I Am Game will showcase a completely different and refreshing transformation. The actor will be seen in a stylish mass-action avatar in the film. The project also marks Nahas Hidayath’s next directorial venture after the blockbuster RDX. I Am Game is being made as Dulquer Salmaan’s 40th film and is positioned as a grand-scale pan-Indian action thriller.


The film features a massive ensemble cast including Antony Varghese, Mysskin, Kayadu Lohar, Kathir, Parth Tiwari, and Samyuktha Viswanathan. The music for the film is composed by Jakes Bejoy, while the action sequences are choreographed by the renowned stunt duo Anbariv.


The first-look and second-look posters released earlier had already generated significant buzz among audiences. I Am Game will release as a pan-Indian film in Malayalam, Tamil, Telugu, Hindi, and Kannada languages.


Line Producer: Bibin Perumbilly, Cinematography: Jimshi Khalid, Music: Jakes Bejoy, Editing: Chaman Chacko, Production Heads: Sujoy James, Devadevan, Production Designer: Ajayan Chalissery, Makeup: Ronex Xavier, Costume: Mashar Hamsa, Production Controller: Deepak Parameswaran, Associate Director: Rohith Chandrasekhar, Lyrics: Manu Manjith, Vinayak Sasikumar, VFX: Thoufeeq (Eggwhite), Poster Design: Ten Point, Sound Design: Sync Cinema, Sound Mix: Kannan Ganapathy, Stills: SBK, Marketing Head: Vijeeth Viswanathan.

ZEE5 ஒரிஜினல் சீரிஸ் வழங்கும், பிரசாந்த் பாண்டியராஜ் நடிக்கும் “வாரண்ட்” சீரிஸ் டிரெய்லர் அறிமுக விழா !!*

ZEE5 ஒரிஜினல் சீரிஸ் வழங்கும், பிரசாந்த் பாண்டியராஜ் நடிக்கும் “வாரண்ட்” சீரிஸ் டிரெய்லர் அறிமுக விழா !!* 



ZEE5 வழங்கும் புதிய தமிழ் கிரைம் த்ரில்லர் வெப் தொடரான “வாரண்ட்” தற்போது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.


இந்த சீரிஸை Sivan Pictures, S Studios சார்பில், பிரசாந்த் பாண்டியராஜ், P விஷால், P M ஆதீஸ்வர் இணைந்து தயாரித்துள்ளனர்.


விலங்கு சீரிஸ் மற்றும் மாமன் படம் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜ் முதன்மைப் பாத்திரத்தில் நடித்துள்ள இந்த சீரிஸின் திரைக்கதையை பிரசாந்த் பாண்டியராஜ், விக்னேஷ் நடராஜன் உடன் இணைந்து எழுதியுள்ளார். இந்த சீரிஸை விக்னேஷ் நடராஜன் இயக்கியுள்ளார்.


வரும் 22 ஆம் தேதி முதல் ZEE5 தளத்தில் வெளியாகவுள்ள நிலையில், இந்த சீரிஸின் டிரெய்லர் அறிமுக விழா, படக்குழுவினர் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது.


இந்நிகழ்வினில்…


கதையின் நாயகனாக அறிமுகமாகும் பிரபல இயக்குனர் பிரசாந்த் பாண்டியராஜ் பேசியதாவது..,

புரூஸ்லிக்குப் பிறகு எதுவும் இல்லாத நேரத்தில் விலங்கு செய்தோம். விலங்கு சீரிஸிற்கு நீங்கள் தந்த ஆதரவுதான் எங்களுக்கு மிகப்பெரிய அடையாளம் தந்தது. விலங்கு சீரிஸிற்கு பெரிய வரவேற்பை பெற்று தந்தது நீங்கள் தான். விலங்கு போல இன்னொரு வாய்ப்பு எனக்கு கிடைத்துள்ளது. இதில் நடிகராக மாறியுள்ளேன். அதே ஆதரவை தருவீர்கள் என நம்புகிறேன். என் குடும்பத்திற்கு, எனது குழுவிற்கு, என் நண்பர்களுக்கு, அனைவருக்கும் நன்றி.


இயக்குநர் விக்னேஷ் நடராஜன் பேசியதாவது..,

நான் படம் செய்வேன் என நம்பியது என் பெற்றோரும், பிரசாந்தும் தான். நானும் அவரும் சேர்ந்து எழுதியதுதான் இந்த சீரிஸ். நான் கட்டாயப்படுத்தித்தான் பிரசாந்தை நடிக்க வைத்தேன். ஒரு கோ-டைரக்டர் போல என்னுடன் இருந்து உழைத்து தந்தார். அதற்கு நன்றி. என் குரு பாண்டிராஜ் சாருக்கு நன்றி. இந்த சீரிஸ் அனைவருக்கும் பிடிக்கும் என நம்புகிறேன். இது என் முதல் படைப்பு. அனைவரும் ஆதரவு தாருங்கள் நன்றி.


ZEE5 சீரிஸ் ஹெட் ஷாம் பேசியதாவது…

“ஒவ்வொரு மாதமும் ஒரு தரமான சீரிஸை வெளியிட வேண்டும் என்ற நோக்கத்தோடு நாங்கள் செயல்பட்டு வருகிறோம். சமீப காலங்களில் ரசிகர்கள் கொடுத்த ஆதரவுக்கு நன்றி. அந்த வரிசையில் ‘வாரண்ட்’ மிக முக்கியமான சீரிஸாக அமைந்துள்ளது”. ‘விலங்கு’ ஒரு சிறிய சீரிஸாகத் தொடங்கியது. ஆனால் அதன் உள்ளே பல கதைகளும், பல்வேறு கேரக்டர்களும் இருப்பதை உணர்ந்தோம். அது தனி உலகமாக மாறியது. 2023-இலேயே இந்தக் கதையை உருவாக்க நினைத்தோம். தொடர்ந்து பல விவாதங்கள் நடந்தன. ‘விலங்கு’ ஒரு கதையுடன் முடிவதில்லை. அதன் தொடர்ச்சிகள் தொடர்ந்து வரும். ‘விலங்கு 2’-இல் இடம்பெற இருக்கும் ஒரு முக்கியமான போலீஸ் கேரக்டரின் பின்னணிக் கதையே ‘வாரண்ட்’. ஒரு சாதாரண மனிதர் எவ்வாறு வலுவான போலீஸ் அதிகாரியாக மாறுகிறார் என்பதைக் காட்டும் கதையாக இது உருவாகியுள்ளது” “பிரசாந்தை முதல் முறையாக ஹீரோவாக அறிமுகப்படுத்துவதில் மகிழ்ச்சி. ‘விலங்கு’ உலகத்தோடு இது தொடர்புடையதாயினும், இது தனித்துவமான பயணமாக இருக்கும்” அனைவருக்கும் பிடிக்கும் என்றார்.


இயக்குநர் பாண்டிராஜ் பேசியதாவது…,

பிரசாந்த்தை எவ்வளவு கலாய்த்தாலும், கிண்டல் செய்தாலும் ரசிப்பான். அவனை நான் திட்டினால் அவனுக்கு ரொம்ப பிடிக்கும். எதிலுமே மிகவும் ஆர்வமாக உழைப்பான். மாமன் படத்திற்கு பிறகு வெப் சீரிஸ் செய்வதாகவும், நடிப்பதாகவும் சொன்னான். மகிழ்ச்சி என வாழ்த்தினேன். நான் ஒரு ஆக்சன் கதை வைத்திருந்தேன், அந்தக் கதையை நான் நடிக்கிறேன் என்றான். அவனிடம் தன்னம்பிக்கை அதிகம். இன்னும் ஐந்து வருடத்தில் எம்.எல்.ஏ.க்கு நிற்பான். அந்தளவு தன்னம்பிக்கை உள்ளவன். விக்னேஷ் என்னிடம் கதகளி படத்தில் வேலை பார்த்தவன், நல்ல திறமைசாலி. இந்த டிரெய்லர் பார்த்தேன், அத்தனை அழகாக இருந்தது. விலங்கு எப்படி வெற்றி பெற்றதோ அதே போல இந்த சீரிஸ் வெற்றி பெற வாழ்த்துக்கள்.


நடிகர் கவின் பேசியதாவது…,

பிரசாந்த் என்னிடம் டிரெய்லர் காட்டினார். அட்டகாசமாக இருந்தது. படம் என்று நினைத்துவிட்டேன். கண்டிப்பாக படம் செய்து நடியுங்கள் என்றேன். என் அஸிஸ்டெண்ட்கள் வளர வேண்டும், அவர்களுக்காக இதை செய்கிறேன் என்றார். மகிழ்ச்சி. தமிழில் முக்கியமான வெப் சீரிஸ்களில் ஒன்று விலங்கு. அதே போல மிகச்சிறந்த சீரிஸாக வாரண்ட் வெற்றி பெற வாழ்த்துக்கள். நன்றி.


இயக்குநர் சுசீந்திரன் பேசியதாவது…,

பாண்டிராஜும் நானும் நல்ல நண்பர்கள். அப்போதிருந்தே பிரசாந்தை தெரியும். நல்ல உழைப்பாளி. விலங்கு மிகச்சிறப்பான சீரிஸ். மாமன் மிக அட்டகாசமான படம். பிரசாந்தை நடிகராக பார்க்க மகிழ்ச்சியாக உள்ளது. இந்தக் குழுவில் பணியாற்றியுள்ள அனைவருக்கும் வாழ்த்துக்கள். இயக்குநர் விக்னேஷுக்கும் என் வாழ்த்துக்கள்.


தயாரிப்பாளர் மதன் பேசியதாவது…,

விலங்கு, கேம், அடுத்து சோனிக்கு ஒன்று செய்துள்ளோம். இப்போது இது நான்காவது வெப் சீரிஸ். சீரிஸ் எடுப்பது எளிதான வேலையல்ல, சினிமாவை விட இது கடினமானது. படைப்பின் மீதான காதலில் மட்டுமே இதை செய்து வருகிறேன். நல்ல சீரிஸ் வர பட்ஜெட்டுதான் முக்கிய காரணம். ஓடிடி தளங்கள், தயாரிப்பாளர்கள் நல்ல கதைகளுக்கு தர வேண்டும். பிரசாந்த் இதில் நடிப்பார் என நினைக்கவில்லை, ஆனால் நன்றாக நடித்துள்ளார். இதில் உழைத்த அனைவருக்கும் என் நன்றிகள். இயக்குநர் விக்னேஷுக்கு என் நன்றிகள். விலங்கு சீரிஸிற்கு தந்த ஆதரவை இந்த சீரிஸிற்கும் தாருங்கள் நன்றி.


தயாரிப்பாளர் சினீஷ் பேசியதாவது…,

தமிழில் இருக்கும் அனைத்து தயாரிப்பாளர்களிடமும் அட்வான்ஸ் வாங்கி இருக்கிறார் பிரசாந்த். அவன் என் நண்பன். இந்த சீரிஸ் மிகச்சிறப்பான வெற்றி பெற அனைவருக்கும் வாழ்த்துக்கள்.


நடிகை கௌசல்யா பேசியதாவது..,

இந்த வெப் சீரிஸில் எந்த அழுத்தமும் இல்லாமல் வேலை செய்ய முடிந்தது. எல்லோரும் ஒரே குடும்பம் போல பழகினார்கள். படப்பிடிப்பு தளத்தில் மிகவும் பாசிட்டிவான சூழல் இருந்தது. நான் நடித்திருந்தாலும் இன்னும் முழு கதையும் எனக்கு தெரியாது. அந்த சஸ்பென்ஸ்தான் என்னை இன்னும் அதிகமாக எதிர்பார்க்க வைக்கிறது” அனைவருக்கும் நன்றி.


நடிகை மீனா பேசியதாவது,

“ZEE5 உடன் இது என்னுடைய மூன்றாவது ப்ராஜெக்ட். இந்த வாய்ப்புக்கு முழு குழுவிற்கும் நன்றி. பிரசாந்த் சார் ஹீரோவாக அறிமுகமாகும் இந்த சீரிஸில் அவருடன் இணைந்து பணியாற்றியது மகிழ்ச்சி. படப்பிடிப்பு அனுபவம் மிகவும் இனிமையானது. “நான் இதில் ‘ஷர்மி’ என்ற நர்ஸ் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். இந்தக் கதையும், அதன் காட்சிப்படுத்தலும் ரசிகர்களுக்கு நிச்சயம் பிடிக்கும்” அனைவருக்கும் நன்றி.


நடிகர் அருள்ஜோதி பேசியதாவது,

“இது என்னுடைய முதல் வெப் சீரிஸ். பிரசாந்த் சார் மீது எனக்கு மிகுந்த மரியாதை உள்ளது. அவர் திரையிலும் மிகவும் சிறப்பாகத் தெரிகிறார். இனிமேலும் அவரை ஹீரோவாக பல படங்களில் பார்க்க வேண்டும் என்று விரும்புகிறோம்”. “இயக்குநர் விக்னேஷின் இயக்கத்தை பெரிய திரையிலும் பார்க்க வேண்டும்” என்றார்.


Trailer Link 🔗https://youtu.be/3j0NBortZ3k?si=M16Q53p10TWuu4dH

உத்சவ் 2026 விழாவில் ‘தேவி ரத்னா’ விருதால் கௌரவிக்கப்பட்ட ரவி மோகன்

 உத்சவ் 2026 விழாவில் ‘தேவி ரத்னா’ விருதால் கௌரவிக்கப்பட்ட ரவி மோகன்;


ரசிகர்களைக் கவர்ந்த கெனீஷாவின் அதிரடி இசை நிகழ்ச்சி :


பாலக்காடு நகரம், பக்தி, கலாச்சாரம், சினிமா மற்றும் இசை ஆகிய அனைத்தும் இணைந்த ஒரு பிரம்மாண்ட கொண்டாட்டத்தை கண்டது. புகழ்பெற்ற பல்லாஸனா பழையகாவு ஸ்ரீ மீன்குளத்தி பகவதி அம்மன் கோவிலில் நடைபெற்ற “உத்சவ் 2026” விழாவின் முக்கிய அம்சமாக, நடிகர் ரவி மோகன் அவர்களுக்கு பெருமைக்குரிய நான்காவது தேவி ரத்னா விருது வழங்கப்பட்டது. இதனுடன், பாடகி கெனீஷா வழங்கிய நேரடி இசை நிகழ்ச்சியும் விழாவை மேலும் சிறப்பித்தது.


பல்லாஸனா பழையகாவு ஸ்ரீ பகவதி அம்மன் தேவஸ்தானம் நிறுவியுள்ள இந்தத் தேவி ரத்னா விருது, கலை, கலாச்சாரம் மற்றும் சமூக வாழ்க்கையில் சிறப்பான பங்களிப்பு செய்தவர்களுக்கு வழங்கப்படும் உயரிய கௌரவமாகும். இந்த ஆண்டு, பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் அவர் வெளிப்படுத்திய சிறப்பான நடிப்பு, தமிழ் சினிமாவிற்கான அவரது முக்கிய பங்களிப்பு மற்றும் ரசிகர்களிடையே பெற்றிருக்கும் பேராதரவை முன்னிட்டு ரவி மோகன் தேர்வு செய்யப்பட்டார்.


இந்த விருதில் ₹1,00,001 பணப் பரிசு, தங்கச் சின்னம், பாராட்டு சான்றிதழ் மற்றும் நினைவுப் பலகை ஆகியவை இடம்பெற்றன. கோவில் வளாகத்தில் நடைபெற்ற பிரம்மாண்ட விழாவில், முன்னாள் MLA K. பாபு, புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட MLA K. பிரேமன், சுமீஷ் அச்சுதன், மாட்டனூர் சங்கரன்குட்டி, மாறார், பிரகாஷ் உள்ளியேறி, ராதாகிருஷ்ணன், நித்தின், கோவில் செயலாளர் தேவிதாஸ் மற்றும் அறங்காவலர் மகேஷ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


இந்த விழாவிற்கு கேரளா மற்றும் தமிழ் நாடு முழுவதும் இருந்து பக்தர்கள், சினிமா ரசிகர்கள் மற்றும் கலாச்சார ஆர்வலர்கள் பெருமளவில் திரண்டனர். ரவி மோகன் அவர்களின் வருகை விழாவிற்கு கூடுதல் சிறப்பை சேர்த்தது. விருதைப் பெற்றுக்கொண்ட அவர், கோவிலின் ஆன்மிக சூழலும், பல்லாஸனா பழையகாவு பகவதி அம்மன் தேவஸ்தானம் அமைப்பின் பாரம்பரியப் பெருமையும் குறித்து மனமார்ந்த நன்றியைத் தெரிவித்தார். அவரது உரை ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.


விழாவை மேலும் கொண்டாட்டமயமாக்கியது பாடகி கெனீஷா அவர்களின் அதிரடி இசை நிகழ்ச்சி. தனது இசைக்குழுவுடன் மேடையேறிய அவர், சக்திவாய்ந்த குரல், உற்சாகமான மேடை நிகழ்வு மற்றும் ரசிகர்களுடன் கொண்ட நேரடி தொடர்பின் மூலம் அரங்கையே கொண்டாட்ட சூழலாக்கினார். மென்மையான மெலடிகளும், ஆற்றல் மிக்க பாடல்களும் கலந்த அவரது இசை நிகழ்ச்சி, ரசிகர்களை முழுமையாக ஈர்த்தது.


ஆன்மிகம், பாரம்பரியம், சினிமா மற்றும் பொழுதுபோக்கு ஆகிய அனைத்தையும் ஒருங்கிணைத்த “உத்சவ் 2026”, சமீப ஆண்டுகளில் நடைபெற்ற மிகவும் நினைவுகூரத்தக்க விழாக்களில் ஒன்றாக அமைந்துள்ளது. விழாவிற்கு வருகை தந்து சிறப்பித்த ரவி மோகன் மற்றும் தனது இசை நிகழ்ச்சியால் விழாவை மேலும் உயர்த்திய கெனீஷா ஆகியோருக்கு ஏற்பாட்டாளர்கள் நன்றியை தெரிவித்துள்ளனர்.Ravi Mohan Honoured with Prestigious Devi Ratna Award at Utsav 2026; Keneeshaa Sets Stage Ablaze with Power-Packed Performance

Palakkad witnessed a spectacular confluence of devotion, culture, cinema, and music as the grand celebrations of “Utsav 2026” unfolded at the renowned Pallassana Pazhayakavu Sree Meenkulathi Bhagavathi Temple. The highlight of this year’s festivities was the presentation of the prestigious fourth Devi Ratna Award to actor Ravi Mohan, alongside a captivating live musical performance by singer Keneeshaa.

Instituted by the Pallassana Pazhayakavu Bhagavathy Devaswom Trust, the Devi Ratna Award recognises eminent personalities who have made outstanding contributions to art, culture, and public life. This year, the honour was bestowed upon Ravi Mohan in recognition of his remarkable performance in Ponniyin Selvan, his significant contributions to Tamil cinema, and the widespread admiration he enjoys among audiences.

The award carries a cash prize of ₹1,00,001, along with a golden insignia, citation, and a commemorative plaque. Ravi Mohan received the honour at a grand ceremony held at the Meenkulathi Temple grounds, in the presence of several distinguished dignitaries including former Nenmara MLA K. Babu, newly elected MLA K. Preman, Chittur MLA Sumeesh Achuthan, Mattanur Sankarankutty Marar, Prakash Ulliyeri, Surya Group Chairman Radhakrishnan, Managing Director Nithin, Temple Secretary Devidas, and Trustee Mahesh.

The event drew a massive gathering of devotees, cinema lovers, and cultural enthusiasts from across Kerala and Tamil Nadu. Ravi Mohan’s presence added immense prestige to the occasion, with fans turning out in large numbers to catch a glimpse of the popular actor. Receiving the honour, Ravi Mohan expressed heartfelt gratitude and spoke about the spiritual aura and rich cultural legacy of the Meenkulathi Temple and the Pallassana Pazhayakavu Bhagavathy Devaswom Trust. His words resonated deeply with the audience, making his appearance one of the most cherished moments of the evening.

Adding further vibrancy to the celebrations was singer Keneeshaa, who delivered an electrifying live performance along with her band. Her dynamic stage presence, powerful vocals, and engaging interaction with the crowd created an energetic and festive atmosphere. The musical set, blending soulful melodies and high-energy numbers, kept the audience enthralled throughout.

The Utsav 2026 celebrations successfully brought together spirituality, tradition, cinema, and entertainment, making it one of the most memorable editions in recent years. The organisers extended their gratitude to Ravi Mohan for gracing the occasion and to Keneeshaa for her enthralling performance, which together elevated the grandeur of the event.

சென்னைஸ் அமிர்தாவின் விளம்பர தூதர் நடிகை ஶ்ரீலீலா, சென்னைஸ் அமிர்தா ஏவியேஷன் கல்லூரியை பார்வையிட்டு, மாணவர்களுடன் கலந்துரையாடி உற்சாகமூட்டினார்.*



*சென்னைஸ் அமிர்தாவின் விளம்பர தூதர் நடிகை ஶ்ரீலீலா, சென்னைஸ் அமிர்தா ஏவியேஷன் கல்லூரியை பார்வையிட்டு, மாணவர்களுடன் கலந்துரையாடி உற்சாகமூட்டினார்.*


சென்னைஸ் அமிர்தா

கல்லூரியின் உலகத்தரம் வாய்ந்த உள்கட்டமைப்புகளை பார்த்து அவர் பாராட்டு தெரிவித்தார். விமான நிலையம் போன்ற நிஜ அனுபவத்தை வழங்கும் ஏர்லைன் கேட்-பாஸ் சிமுலேஷன் பகுதி, சிறிய விமான நிலைய மாதிரி அமைப்பு, உண்மையான விமான அமைப்பு மற்றும் விமான எஞ்சின் பயிற்சி வசதிகள் ஆகியவை மாணவர்களுக்கு தொழில்துறை அனுபவத்தை நேரடியாக வழங்கும் வகையில் அமைந்துள்ளதாக அவர் பாராட்டினார். 


இந்நிகழ்ச்சியில் சென்னைஸ் அமிர்தா குழுமத்தின் தலைவர் திரு.பூமிநாதன் அவர்கள் 100க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு 28 லட்சம் மதிப்பிலான கல்வி உதவித்தொகையை வழங்கினார்.


சென்னைஸ் அமிர்தாவின் தனித்துவமான பயிற்சி முறையை வெகுவாக பாராட்டிய ஸ்ரீலீலா, மாணவர்களுக்கு வழங்கப்படும் சர்வதேச அனுபவ வாய்ப்புகள் மற்றும் பகுதி நேர வேலை வாய்ப்புகள் குறித்து மகிழ்ச்சி தெரிவித்தார். பயிற்சி காலத்திலேயே சில மாணவர்கள் மாதம் ரூ.35,000 வரை ஊதியம் பெறுவது மிகவும் பாராட்டத்தக்கது என்றும், மாணவர்களின் தொழில் மற்றும் பொருளாதார முன்னேற்றத்திற்கு இந்த நிறுவனம் சிறப்பாக செயல்படுகிறது என்றும் கூறினார்.


மாணவர்களுடனான கலந்துரையாடலின்போது, புன்னகை நிறைந்த பல்வேறு அனுபவங்களை பகிர்ந்து கொண்ட அவர், மாணவர்கள் உருவாக்கிய கலைப்பணிகள் மற்றும் சிற்பங்களை ஆர்வமாக பார்வையிட்டு, அவர்களின் திறமைகளை பாராட்டினார்.


இந்த நிகழ்விற்காக சிறப்பாக தயாரிக்கப்பட்ட, 5 நாடுகளின் உணவுகளையும் ஸ்ரீலீலா சுவைத்து மகிழ்ந்தார். பல்வேறு சுவைகள் குறித்து தனது விருப்பங்களை பகிர்ந்து கொண்டு, உலக நாடுகளின் உணவுகளை அறிந்து ரசிப்பதில் உள்ள தனது ஆர்வத்தையும் ஶ்ரீலீலா மாணவர்களுடன் பகிர்ந்துகொண்டார்.


இந்த நிகழ்ச்சியில் அன்னையர் தின கொண்டாட்டமும் இணைத்து நடத்தப்பட்டது. அப்போது தனது தாயார் குறித்து உணர்ச்சிப் பெருக்குடன் ஸ்ரீலீலா உரையாற்றினார். . தனது வாழ்க்கை மற்றும் தொழில் வளர்ச்சியில் தனது அன்னையின் பங்கு குறித்து நினைவுகூர்ந்த அவர், மாணவர்களுடனான உரையாடலை மேலும் நெகிழ்ச்சியூட்டும் வகையில் மாற்றினார்.


மாணவர்கள் அவரது உடற்பயிற்சி நடைமுறை, உணவுப் பழக்கம், திரைப்பட பயணம் மற்றும் தனிப்பட்ட விருப்பங்கள் குறித்து பல கேள்விகள் கேட்டனர். அனைத்து கேள்விகளுக்கும் அவர் எளிமையாகவும் மகிழ்ச்சியுடனும் பதிலளித்து, மாணவர்களுக்கு உற்சாகமும் நம்பிக்கையும் அளித்தார்.


இந்த நிகழ்வு மாணவர்களுக்கு மறக்க முடியாத அனுபவமாக அமைந்ததுடன், அவர்களின் கனவுகளை அடைய தன்னம்பிக்கையையும் ஊக்கத்தையும் அளித்தது.


கல்வி, திறன் மேம்பாடு, புதுமை மற்றும் உலகளாவிய தொழில் வாய்ப்புகளில் சென்னைஸ் அமிர்தா தொடர்ந்து முன்னணி நிறுவனமாக திகழ்கிறது. செய்முறை கல்வி மற்றும் சர்வதேச அனுபவ வாய்ப்புகள் மூலம் மாணவர்களின் எதிர்காலத்தை உருவாக்கும் பணியில் நிறுவனம் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.


சென்னைஸ் அமிர்தா கல்விக் குழுமம், நாட்டின் முன்னணி கல்வி நிறுவனங்களில் ஒன்றாக வளர்ந்து, ஆயிரக்கணக்கான மாணவர்களின் வாழ்க்கையில் மாற்றத்தை உருவாக்கியுள்ளது. உலகின் பல நாடுகளில் 31,650-க்கும் மேற்பட்ட மாணவர்கள் வெற்றிகரமாக பணியில் அமர்த்தப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் பெருமையுடன் தெரிவித்துள்ளது.


இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட சென்னைஸ் அமிர்தா இன்டர்நேஷனல் ஏவியேஷன் கல்லூரி, இந்தியாவின் முன்னணி விமானப் பயிற்சி நிறுவனங்களில் ஒன்றாக வேகமாக வளர்ந்து வருகிறது. சமீபத்தில் ஏர் ஆசியா விமான நிறுவனத்தின் பிரதிநிதிகள் கல்லூரியை பார்வையிட்டபோது, சுமார் 170 மாணவர்கள் சர்வதேச இன்டர்ன்ஷிப் மற்றும் நிரந்தர வேலை வாய்ப்புகளுக்காக தேர்வு செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.