-

Loading latest news...

*ஜி.டி. நாயுடு வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு, நடிகர் மாதவன் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் ஜூலை மாதம் வெளியாகிறது!*

 *ஜி.டி. நாயுடு வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு, நடிகர் மாதவன் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் ஜூலை மாதம் வெளியாகிறது!*



வர்கீஸ் மூலன் பிக்சர்ஸ் மற்றும் ட்ரைகலர் பிலிம்ஸ் இணைந்து வெளியிடும் இந்த படத்தின் புதிய போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. இந்திய ஆளுமைகளைக் கொண்டாடும், இதுவரை சொல்லப்படாத கதைகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் திரைப்படங்கள் எப்போதும் ரசிகர்கள் மத்தியில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றன. அந்த வகையில், மிகவும் எதிர்பார்க்கப்படும் இந்த திரைப்படம் தற்போது உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களை சந்திக்க தயாராகி வருகிறது.


வர்கீஸ் மூலன் பிக்சர்ஸ், ட்ரைகலர் பிலிம்ஸுடன் இணைந்து தயாரிக்கும், ஆர். மாதவன் நடிப்பில் உருவாகியுள்ள இந்த திரைப்படம், புகழ்பெற்ற கண்டுபிடிப்பாளர் மற்றும் தொழில்துறை முன்னோடி ஜி.டி. நாயுடுவின் வாழ்க்கையில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டது. இந்த படம் வரும் ஜூலை மாதம் பிரம்மாண்டமாக திரையரங்குகளில் வெளியாக உள்ளது.


இந்த அறிவிப்புடன், படக்குழு மாதவன் இடம்பெறும் புதிய போஸ்டரையும் வெளியிட்டுள்ளனர். இந்த போஸ்டர் ரசிகர்கள் மற்றும் திரையுலகில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. ஜி.டி. நாயுடுவாகவே தோற்றத்திலும் நடிகர் மாதவன் மாறியிருப்பது ரசிகர்களிடையே ஆச்சரியத்தையும் ஆர்வத்தையும் ஏற்படுத்தியுள்ளது.


கிருஷ்ணகுமார் ராமகுமார் எழுதி இயக்கியுள்ள இந்த திரைப்படம், 'இந்தியாவின் எடிசன்' என்றும் 'வெல்த் கிரியேட்டர் ஆஃப் கோயம்புத்தூர்' என்றும் அழைக்கப்படும் ஜி.டி. நாயுடுவின் வாழ்க்கையின் ஒரு முக்கிய அத்தியாயத்தை ரசிகர்களுக்கு கொண்டு செல்கிறது. பல துறைகளில் அவரது புரட்சிகரமான யோசனைகள் மற்றும் முன்னோடியான பங்களிப்புகள் காரணமாக ஜி.டி. நாயுடு இந்தியாவின் புகழ்பெற்ற கண்டுபிடிப்பாளர்களில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. 



தேசிய விருது வென்ற 'ராக்கெட்டரி: தி நம்பி எஃபெக்ட்' படத்தின் வெற்றிக்குப் பிறகு, வர்கீஸ் மூலன் பிக்சர்ஸ் மற்றும் ட்ரைகலர் பிலிம்ஸ் மீண்டும் இணைந்து, இந்தியாவின் பாரம்பரியமும் சாதனைகளையும் பேசும் ஊக்கமளிக்கும் கதையை கொண்டு வருவதால் ரசிகர்கள் மற்றும் திரைத்துறை வட்டாரங்களில் பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.


இப்படத்தை வர்கீஸ் மூலன் பிக்சர்ஸ் சார்பில் வர்கீஸ் மூலன் மற்றும் விஜய் மூலன் ஆகியோரும், ட்ரைகலர் பிலிம்ஸ் சார்பில் ஆர். மாதவன் மற்றும் சரிதா மாதவன் ஆகியோரும் இணைந்து தயாரித்துள்ளனர்.

இப்படத்தில் ஆர். மாதவன் முதன்மை கதாபாத்திரத்தில் நடிப்பதோடு மட்டுமல்லாமல், சத்யராஜ், பிரியாமணி, ஜெயராம், துஷாரா விஜயன், தம்பி ராமையா, வினய் ராய் மற்றும் கருணாகரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.


இப்படம் பல்வேறு பிராந்தியங்களில் உள்ள பார்வையாளர்களைச் சென்றடைவதை உறுதிசெய்யும் வகையில், தயாரிப்பாளர்கள் புகழ்பெற்ற விநியோக நிறுவனங்களுடன் கைகோர்த்துள்ளனர். தமிழகத்தில் இப்படத்தின் திரையரங்கு வெளியீட்டை ஏஜிஎஸ் சினிமாவும், ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநிலங்களில் ஸ்பிரிட் மீடியாவும், வெளிநாடுகளில் ஏபி இண்டர்நேஷனலும், கேரளாவில் ஊர்வசி தியேட்டர்ஸூம் விநியோகிக்கவுள்ளன. 


படத்தயாரிப்புடன் நெருங்கிய தொடர்புடைய வட்டாரங்களின் தகவலின்படி, படப்பிடிப்பு நடைபெற்ற காலம் முழுவதும் மிகவும் நேர்மறையான மற்றும் உற்சாகமான சூழல் நிலவியது. இதற்குப் படக்குழுவினர் மற்றும் தொழில்நுட்பக் குழுவினரின் ஒத்துழைப்பே முக்கியக் காரணம். மாதவனின் நடிப்பையும் அர்ப்பணிப்பையும் படக்குழுவினர் வியந்து பாராட்டியுள்ளனர். சமீப ஆண்டுகளில் அவர் ஏற்று நடித்த கதாபாத்திரங்களிலேயே மாறுபட்ட பரிணாமத்தில் அவரை இந்த படத்தில் பார்க்கலாம் என்கின்றனர். 


படப்பிடிப்புப் பணிகள் தற்போது நிறைவடைந்து, போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெறுகிறது. பார்வையாளர்களுக்கு உத்வேகம் அளிக்கும் மற்றும் உணர்வுபூர்வமாக ஈர்க்கக்கூடிய திரையனுபவத்தை வரும் ஜூலை மாதம் இந்தப் படம் தர இருக்கிறது. படம் குறித்தான அடுத்தடுத்த அப்டேட் விரைவில் அறிவிக்கப்படும்.

 *சோனி மியூசிக் வழங்கும் ராப்பர் கிட் சாந்தேவின் “நா வேற லெவல்” பாடல் பத்திரிக்கையாளர் சந்திப்பு !*



மலேசிய தமிழ் ஹிப்-ஹாப் ராப்பர், பாடலாசிரியர் மற்றும் இசை தயாரிப்பாளர் கிட் சாந்தே (Kidd Santhe) வின் புதிய பாடலான “நா வேற லெவல்” பத்திரிக்கையாளர் சந்திப்பு இன்று சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது . இப்பாடலை முன்னணி இசை நிறுவனமான சோனி மியூசிக் நிறுவனம் வெளியிட்டுள்ளது.


மலேசியாவில் உருவாகி வரும் புதிய தலைமுறை தமிழ் ஹிப்-ஹாப் இசையில் முக்கியமான குரலாக கொண்டாடப்படுபவர் கிட் சாந்தே (Kidd Santhe ). தமிழ், ஆங்கிலம், மலாய், பஞ்சாபி போன்ற பல மொழிகளை கலந்த ராப் ஸ்டைலே இவரின் தனிச்சிறப்பு.  


சிறு வயதிலிருந்தே beatboxing மற்றும் இசையில் ஆர்வம் கொண்ட கிட் சாந்தே (Kidd Santhe), தனது 16-வது வயதில் பாடல்கள் தயாரித்து SoundCloud மூலம் பிரபலமானார். பின்னர் மலேசிய ஹிப்-ஹாப் குழுக்களுடன் இணைந்து பல ஹிட் பாடல்களை வெளியிட்டார். தற்போது உலகளாவிய “Desi Hip-Hop” இயக்கத்தில் முக்கியமான இளம் கலைஞர்களில் ஒருவராக வளர்ந்து வருகிறார்.  


“API”, “SAMPAH”, “Ambani Money”, “Penjenayah” போன்ற பாடல்கள் மற்றும் ஆல்பங்கள் மூலம் ரசிகர்களிடம் கவனம் பெற்றார். குறிப்பாக “Ambani Money” பாடல் மூலம் இந்திய கலாச்சாரம், செல்வாக்கு மற்றும் இளைஞர்களின் ஆற்றலை ஹிப்-ஹாப் ஸ்டைலில் வெளிப்படுத்தியிருந்தார்.  


தற்போது இந்திய கலாச்சார பின்னணியில் உருவாக்கப்பட்டுள்ள அவரது அடுத்த பாடலான “நா வேற லெவல் ஆல்பம்” இன்று சென்னையில் வெளியிடப்பட்டது. 



இன்றைய நிகழ்வில்… 


இயக்குநர் பார்த்திபன் ரவி பேசியதாவது…


முதலில் கடவுளுக்கும், Sony Music Malaysia மற்றும் Sony Music South ஆகியோருக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவிக்க விரும்புகிறேன். இந்த வாய்ப்பை வழங்கியதற்கு மிக்க நன்றி. இது என்னுடைய முதல் International Album. ஏற்கனவே Sony Music உடன் இரண்டு மியூசிக் வீடியோக்கள் செய்திருந்தாலும், இந்த புராஜக்ட் எனக்கு மிகவும் ஸ்பெஷல் மற்றும் மனதுக்கு நெருக்கமான ஒன்று.


கிட் சாந்தே உங்கள் அற்புதமான ஐடியாவை உயிர்ப்பிக்க இந்த வாய்ப்பை எனக்கு கொடுத்ததற்கு நன்றி. திலீபன் இல்லாமல் இந்த ஆல்பம் உருவாகியிருக்கவே முடியாது. குணா மற்றும் ரே — “Mother of Dragons” போல இந்த ஆல்பம் பாடலுக்கு அனைத்து பக்கங்களிலும் ஆதரவை திரட்டிக் கொண்டு வந்தவர்கள் நீங்கள் தான். ஒவ்வொரு டிராக்குக்கும் நீங்கள் கொடுத்த உழைப்பு மிகப்பெரியது. இந்த ஆல்பம் பாடலில் உழைத்த அனைத்து கலைஞர்களுக்கும் என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். இப்பாடலை ரசித்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றி.


சோனி மியூசிக் நிறுவனம் சார்பில் ரேவதி மாரியப்பன் பேசியதாவது.., 


கிட் சாந்தே அவர்களின் முதல் சர்வதேச தமிழ் இசை வெளியீட்டிற்கு மனமார்ந்த வாழ்த்துகள். இந்த இணைப்பிற்கு ஆதரவு அளித்த சோனி மியூசிக் சவுத் மற்றும் இந்த ஆல்பத்தில் உழைத்த அனைவருக்கும் நன்றி.இந்த பாடலை மலேசியாவில் எடுப்பதாக இருந்தது ஆனால் இதை சென்னையில் எடுக்கலாம் என கிட் சாந்தே சொன்னார். சோனி நிறுவனமும் பெரிய ஆதரவு தந்தது. 


இந்த ஆல்பத்திற்கு தமிழ்நாட்டில் கிடைத்த அன்பும் ஆதரவும் எங்களை மிகவும் நெகிழச்செய்தது. மலேசியாவிலிருந்து வந்த ஒரு தமிழ் கலைஞரை இவ்வளவு அன்பாக வரவேற்ற அனைவருக்கும் எங்களின் மனமார்ந்த நன்றி.இந்த பாடல் உருவாக பல மாதங்களாக ஒரு பெரிய குழு கடினமாக உழைத்துள்ளது. தொழில்நுட்பத்தை மட்டும் நம்பாமல், நூற்றுக்கணக்கான கலைஞர்களின் உழைப்பையும் ஒன்றிணைத்து இந்த பாடலை உருவாக்கியுள்ளோம். கிட் சாந்தேவின் இந்த வெற்றி அவருடையது மட்டும் அல்ல; மலேசியாவில் இருக்கும் பல தமிழ் கலைஞர்களின் கனவுகளுக்கான தொடக்கமாகவும் இது அமையும் என்று நாங்கள் நம்புகிறோம்.


தமிழ்நாடு எப்போதும் திறமையை அங்கீகரிக்கும் மண். அந்த நம்பிக்கையோடு இந்த பாடலை உங்கள் கைகளில் ஒப்படைக்கிறோம் நன்றி.


ராப்பர் கிட் சாந்தே பேசியதாவது..,


அனைவருக்கும் வணக்கம். இன்று இங்கே “நா வேற லெவல்” பாடலை ஆதரிக்க வந்திருக்கும் அனைவருக்கும் மனமார்ந்த நன்றி. இந்த பயணத்தில் என்னை நம்பி முழுமையாக ஆதரவு அளித்த Sony Music South மற்றும் Sony Music Malaysia-க்கு என் நன்றிகள்.


இந்த ஆல்பம் உருவாக காரணமான மிக முக்கியமான நபர் இயக்குநர். ஒரு storyboard-ஐ உயிரோட்டமுள்ள காட்சியாக மாற்றியது இயக்குநர் ரவி தான். அவருக்கு என் மனமார்ந்த நன்றிகள். அதேபோல் மூன்று நாட்களிலேயே எனக்கு நடனம் கற்றுக்கொடுத்த நடன இயக்குநர் ஆகாஷ் அவர்களுக்கும் நன்றி.


ராவண ராம் என் சகோதரன் போன்றவர். Instagram-ல் ஒரு மெசேஜ் மூலம் தொடங்கிய நட்பு, ஒரே studio session-ல் “நா வேற லெவல்” பாடலை உருவாக்கியது. அவருடைய திறமை அசாதாரணமானது.


இந்த பாடல் மூலம் நான் என்னை ஒரு நடிகராகவோ அல்லது இசையமைப்பாளராகவோ காட்ட விரும்பவில்லை. தமிழ்நாட்டின் உண்மையான ஹீரோக்களை காட்டவே இந்த பாடலை உருவாக்கினேன் — ஆட்டோ ஓட்டுநர்களை. தினமும் மக்களை பாதுகாப்பாக ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்துக்கு கொண்டு செல்லும் அவர்கள் தான் நம்முடைய அன்றாட வாழ்க்கையின் மறைக்கப்பட்ட ஹீரோக்கள். சென்னைக்கு முதன்முதலாக வந்தபோது, என் கார் பஞ்சர் ஆகி நின்றது. ஒரு ஆட்டோ ஓட்டுநருக்கு டயர் மாற்ற உதவிய அந்த தருணமே இந்த பாடலின் முழு கருத்தாக மாறியது. “நா வேற லெவல்” என்பது நான் அல்ல, ஆட்டோ ஓட்டுநர்கள் தான்.


அவர்கள் இன்று எரிபொருள் விலை உயர்வு, பராமரிப்பு செலவு, பைக் டாக்ஸி போட்டி போன்ற பல சவால்களை எதிர்கொள்கிறார்கள். இந்த பாடல் மூலம் அவர்களுக்கான மரியாதையும் அன்பும் மக்களிடம் சென்றடைய வேண்டும் என்பதே என் நோக்கம்.


நான் ஒரு மலேசிய இளைஞன். இசையை கொண்டு உங்கள் முன் வந்திருக்கிறேன். தமிழ்நாடு எனக்கு கொடுத்த அன்புக்கும் வரவேற்புக்கும் மனமார்ந்த நன்றி. “நா வேற லெவல்” பாடலை YouTube-ல் பார்த்து ஆதரவு அளிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். நன்றி.


“நா வேற லெவல்” பாடலை சோனி மியூசிக் YouTube தளத்தில் அதிகாரப்பூர்வமாக கண்டுகளிக்கலாம்.


https://youtu.be/e5MSYDeno9Q?si=5_j3mAUJ6pABxHR6

*AP இண்டர்நேஷனல் மற்றும் விஷ்ணு விஷால் ஸ்டூடியோஸ் நிறுவனங்கள் இணைந்து வழங்கும் “யெல்லோ யெல்லோ டர்டி ஃபெல்லோ” பட ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் டீசர் வெளியானது !!*

 *AP இண்டர்நேஷனல் மற்றும் விஷ்ணு விஷால் ஸ்டூடியோஸ் நிறுவனங்கள் இணைந்து வழங்கும் “யெல்லோ யெல்லோ டர்டி ஃபெல்லோ” பட ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் டீசர் வெளியானது !!*



*இளைஞர்களின் காதல் வாழ்க்கையை புதுமையாக பேசும் “யெல்லோ யெல்லோ டர்டி ஃபெல்லோ” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது !!*


AP இண்டர்நேஷனல் மற்றும் விஷ்ணு விஷால் ஸ்டூடியோஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும், அறிமுக இயக்குநர் விக்கி பாஸ்கர் இயக்கத்தில், “ஓஹோ எந்தன் பேபி” புகழ் ருத்ரா மற்றும் ப்ரீத்தி அஸ்ரானி நடிக்கும் “யெல்லோ யெல்லோ டர்டி ஃபெல்லோ” திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளது.


குறும்படங்கள் மற்றும் திரைப்படங்களில் பணியாற்றிய அனுபவம் கொண்ட விக்கி பாஸ்கர், இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். இன்றைய நவீன கால இளைஞர்களின் காதல் மற்றும் வாழ்க்கை முறையை மையமாகக் கொண்டு, மனதை வருடும் ஃபீல் குட் கமர்ஷியல் எண்டர்டெயினராக இப்படத்தை உருவாக்கியுள்ளார்.


தற்போது வெளியாகியுள்ள ஃபர்ஸ்ட் லுக்கில், இன்றைய Gen Z தலைமுறையின் வாழ்க்கை முறை, காதல் உறவுகள் மற்றும் அதனால் உருவாகும் சிக்கல்கள் புதுமையான முறையில் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. ஒரு நவீன கால காதலியிடம் மாட்டிக்கொள்ளும் அப்பாவி இளைஞன் சந்திக்கும் பிரச்சனைகளே இப்படத்தின் மையக்கருவாக அமைந்துள்ளது. இளைஞர்களை கவரும் விதமாக வடிவமைக்கப்பட்டுள்ள இந்த ஃபர்ஸ்ட் லுக் சமூக வலைதளங்களில் ரசிகர்கள் மற்றும் திரையுலக ஆர்வலர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. அதனைத் தொடர்ந்து தற்போது வெளியான டீசரும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. 


ருத்ரா மற்றும் ப்ரீத்தி அஸ்ரானி நாயகன், நாயகியாக நடித்துள்ள இப்படத்தில், ஏஞ்சல் மரியா, மோனிஷா மோகன், கருணாகரன், ஜென்சன் திவாகர், நிகிலா சங்கர், சேத்தன், தேவதர்ஷினி மற்றும் அனுபமா உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.


AP இண்டர்நேஷனல் சார்பில் சஞ்சய் அர்ஜூன்தாஸ் வாத்வா மற்றும் விஷ்ணு விஷால் ஸ்டூடியோஸ் சார்பில் விஷ்ணு விஷால் ஆகியோர் இப்படத்தை தயாரிக்கின்றனர். சுப்ரா, ஆர்யன் ரமேஷ் ஆகியோர் இணை தயாரிப்பாளர்களாக பணியாற்றுகின்றனர்.


சென்னை, வியட்நாம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பல பகுதிகளில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. தற்போது படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்த நிலையில், போஸ்ட் புரடக்சன் பணிகள் பரபரப்பாக நடைபெற்று வருகின்றன. விரைவில் டிரெய்லர் மற்றும் இசை வெளியீடு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.


தொழில்நுட்பக் குழு விபரம்

தயாரிப்பு - AP இண்டர்நேஷனல் மற்றும் விஷ்ணு விஷால் ஸ்டூடியோஸ்

இயக்கம் - விக்கி பாஸ்கர்

ஒளிப்பதிவு - லூக் ஜோஸ்

எடிட்டிங் - நாஷ்

இசை - பரத் சங்கர்

பப்ளிசிட்டி டிசைன் - வியாகி

உடை வடிவமைப்பு - நவா ராஜ்குமார்

கலை இயக்கம் - வீரமணி கணேசன்

சிஜி - Srivfx 

மக்கள் தொடர்பு - AIM சதீஷ்

*சென்னைஸ் அமிர்தா இன்டர்நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஹோட்டல் மேனேஜ்மென்ட்

 *சென்னைஸ் அமிர்தா இன்டர்நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஹோட்டல் மேனேஜ்மென்ட் மாணவர்களின் கைவண்ணத்தில் மாண்புமிகு முதலமைச்சர் திரு.ச. ஜோசப் விஜய் அவர்களை கௌரவப்படுத்தும் பிரமாண்ட நிகழ்ச்சி நடிகர் சஞ்சீவ் மற்றும் சென்னைஸ் அமிர்தா கல்விக்குழும நிறுவனர் பூமிநாதன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.*



சென்னை ராயப்பேட்டையில் உள்ள, சென்னைஸ் அமிர்தா ஏவியேஷன் பயிற்சி மையத்தில், முதலமைச்சர் விஜய்யின் திரைப்பயணம் முதல் அரசியல் பயணம் வரையிலான நிகழ்வுகளை சித்தரிக்கும் வகையில், சென்னைஸ் அமிர்தா ஹோட்டல் மேனேஜ்மென்ட் மாணவர்கள் காய்கறி மற்றும் பழங்களில் திரு. ச. ஜோசப் விஜய்யின் உருவங்களை சிற்பமாக செதுக்கி அசத்தியுள்ளனர்.


 இந்நிகழ்ச்சி சென்னைஸ் அமிர்தா கல்விக்குழுமங்களின் நிறுவன தலைவர் திரு. பூமிநாதன் மற்றும் முதலமைச்சரின் நண்பரும் நடிகருமான சஞ்சீவ் ஆகியோர் முன்னிலையில் பொதுமக்களின் பார்வைக்கு திறந்து வைக்கப்பட்டது. தமிழ்நாட்டின் முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள மாண்புமிகு. திரு. ச.ஜோசப் விஜய் அவர்களை கெளரவிக்கும் விதமாக நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், அவர் முதன்முறையாக கதாநாயகனாக அறிமுகமான நாளைய தீர்ப்பு திரைப்படம் முதல் ஜனநாயகன் திரைப்படம் வரையிலான 69 சிற்பங்கள் இடம்பெற்றுள்ளன.



 இந்த சிற்பங்களை சென்னைஸ் அமிர்தா இன்டர்நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஹோட்டல் மேனேஜ்மென்ட் மாணவர்கள் 10 நாட்களாக கடின உழைப்பில் உருவாக்கி உள்ளனர். இந்த சிற்பங்களைப் பார்வையிட்டு ரசித்த, நடிகர் சஞ்சீவ் இவற்றை உருவாக்கிய மாணவர்களை வெகுவாக பாராட்டினார். மேலும் பல்வேறு முயற்சிகள் மூலம் மாணவர்களின் எதிர்காலத்திற்கு வலுவான அடித்தளம் அமைத்து கல்விச்சேவை வழங்கிவரும் சென்னைஸ் அமிர்தா கல்விக்குழுமங்களின் நிறுவனர் திரு. பூமிநாதன் அவர்களுக்கும் வாழ்த்துகள் தெரிவித்தார். 


 சென்னைஸ் அமிர்தா கல்விக்குழும நிறுவனர் திரு. பூமிநாதன் உரையாற்றுகையில், ஹோட்டல் மேனேஜ்மென்ட் மற்றும் ஏவியேஷன் துறையில் மிகச்சிறப்பான பங்களிப்பை வழங்கி, சர்வதேச அளவில் பெருநிறுவனங்களில் மாணவர்களை கொண்டு சேர்ப்பதில் தங்கள் நிறுவனம் சமரசம் இன்றி செயல்படுவதாக தெரிவித்தார். மேலும் இது போன்று மாணவர்களின் திறமையை வெளிப்படுத்தி கவனம் பெறச் செய்யும் நிகழ்ச்சிகளை தொடர்ந்து நடத்துவதில் பெருமை கொள்வதாகவும் அவர் கூறினார். 


இந்த நிகழ்ச்சி முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்களை பெருமைப் படுத்தியதோடு, சென்னைஸ் அமிர்தா மாணவர்களின் திறமைகளையும் வெளிப்படுத்தியது.

கேன்ஸ் திரைவிழாவில் மிரட்டிய “தாழ் திறவா” – திகில் கிளப்பும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியீடு*

கேன்ஸ் திரைவிழாவில் மிரட்டிய “தாழ் திறவா” – திகில் கிளப்பும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியீடு*



*அமானுஷ்ய மர்மங்களுடன் வரும் “தாழ் திறவா” – ரசிகர்களை ஈர்க்கும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள்!*


*வரவேற்பைக் குவிக்கும் “தாழ் திறவா” ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் !!*


*கேன்ஸ் திரைவிழாவில் கவனம் ஈர்த்த ஹாரர் திரில்லர் “தாழ் திறவா” பட டீசர் !!*


திகில் மற்றும் மர்மம் கலந்த கதைக்களத்தில் உருவாகி வரும் “தாழ் திறவா” திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன.


உலகளவில் திரை ரசிகர்களால் கொண்டாடப்படும் கேன்ஸ் திரைப்பட விழாவில், “தாழ் திறவா” படத்தின் டீசர் திரையிடப்பட்டு பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. Barman Pictures தயாரிப்பில், பரணி சேகரன் இயக்கத்தில், ஆதவ் கண்ணதாசன் மற்றும் வாணி போஜன் நடித்துள்ள இப்படம், மாறுபட்ட களத்தில் உருவாகும் ஹாரர் திரில்லராக அமைந்துள்ளது.


இப்படத்தின் டீசர் மே 19ஆம் தேதி கேன்ஸ் திரைப்பட விழாவின் இந்தியன் பவிலியனில் திரையிடப்பட்டு ரசிகர்களிடம் பாராட்டுகளை பெற்றுள்ளது. உலகளவில் மிக உயர்ந்த மதிப்பும் கவனமும் பெற்ற கேன்ஸ் திரைவிழாவில் ஒரு தமிழ்ப்படத்தின் டீசர் திரையிடப்பட்டு வரவேற்பைப் பெறுவது, தமிழ் சினிமாவிற்கே பெருமை சேர்க்கும் முக்கிய தருணமாக பார்க்கப்படுகிறது.


ஒரு கிராமத்தில் கண்டெடுக்கப்படும் பழமையான எழுத்துக்கள் மற்றும் அதன் பின்னணியில் மறைந்திருக்கும் மர்மமான ஆபத்துகளே இப்படத்தின் மையக் கதையாக அமைந்துள்ளது. தமிழில் அகழ்வாராய்ச்சியை மையமாகக் கொண்டு, அதனுடன் ஹாரர் மற்றும் அமானுஷ்ய அம்சங்களை இணைத்து உருவாகும் அரிய முயற்சியாக இப்படம் உருவாகியுள்ளது.


இன்று தமிழ் ரசிகர்களுக்காக இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளன.


வெளியான இரண்டு போஸ்டர்களிலும் திகில் நிறைந்த காட்சிகள் ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டியுள்ளன. முதல் போஸ்டரில், இருள் சூழ்ந்த அறையில் சுவரிலிருந்து நீளும் மர்மக் கைகள் வாணி போஜனை இழுத்துச் செல்ல முயல, அவரைக் காப்பாற்ற ஆதவ் கண்ணதாசன் பதட்டத்துடன் ஓடி வருவது போன்ற காட்சி இடம் பெற்றுள்ளது.


இரண்டாவது போஸ்டரில், பழமையான மாளிகை, மர்மம் நிறைந்த சூழல், அமானுஷ்ய சம்பவங்களை கண்டு அதிர்ச்சியடையும் குழந்தைகள் மற்றும் ஒரு ரகசிய கதவை திறக்க முயலும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன. பயத்துடனும் பதட்டத்துடனும் நிற்கும் கதாபாத்திரங்களின் தோற்றம், இப்படம் வித்தியாசமான ஹாரர் அனுபவத்தை தரப்போகிறது என்பதை உணர்த்துகிறது.


இப்படத்தில் ஆதவ் கண்ணதாசன், வாணி போஜன்ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளதுடன், சுரேஷ் மேனன், சுப்பு பஞ்சு, ஷ்யாம் பிரசாத் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். மேலும் குழந்தை நட்சத்திரங்களான லிஷா மற்றும் லலித் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் இடம்பெற்றுள்ளனர்.


படப்பிடிப்பு நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது இறுதிக்கட்ட பணிகள் பரபரப்பாக நடைபெற்று வருகின்றன. சர்வதேச அளவில் கவனம் பெற்றுள்ள இப்படத்தின் டீசர் மற்றும் இசை வெளியீடு விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகவுள்ளது.


தொழில்நுட்பக் குழு :


தயாரிப்பு - பார்மன் பிக்சர்ஸ்

இணை தயாரிப்பாளர் - விவேக் கே.ஆர்

கதை, திரைக்கதை, இயக்கம் - பரணி சேகரன்

இசை - ஓஷோ வெங்கட்

ஒளிப்பதிவு - சாலமன் போஸ் டி.எஸ் / ஜபெஸ் கே கணேஷ்

கலை இயக்கம் - K.A. ராகவ குமார்

எடிட்டிங் - மணிகண்டன் எஸ்

ஆடை வடிவமைப்பு - சுகிர்தா பி

உடை அலங்காரம் - கோபால்

மேக்கப் - வினோத் சுகுமாரன்

சண்டைக்காட்சிகள் - ரக்கர் ராம்

VFX - சோசோ ஸ்டுடியோ

VFX - மேற்பார்வை - வெங்கடேஷ்

SFX - சிங்க் சினிமா

DI - ஃபயர்ஃபாக்ஸ் ஸ்டுடியோஸ்

தயாரிப்பு மேற்பார்வை - சௌந்தரராஜன் / தமிழ்ச்செல்வன்

தயாரிப்பு நிர்வாகம் - முகேஷ் ஷர்மா

விளம்பர வடிவமைப்பு - நெக்ஸ்ட்ஜென் ஸ்டுடியோ

மக்கள் தொடர்பு - யுவராஜ்

விசாரணை கைதி’ திரைப்பட இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா

 ’விசாரணை கைதி’ திரைப்பட இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா



தைரியத்தின் அடையாளம் கே.ராஜன் சாரின் முடிவு அதிர்ச்சியளிக்கிறது - ‘விசாரணை கைதி’ பட விழாவில் பேரரசு வருத்தம்


’விசாரணை கைதி’ திரைப்பட விழாவில் கே.ராஜன் சாரின் மறைவு பற்றி பேசி கண்கலங்கிய கூல் சுரேஷ்


தற்போதைய காலக்கட்டத்தில் படம் தயாரிப்பது சாதாரண விசயம் அல்ல - ‘விசாரணை கைதி’ பட விழாவில் சேலம் ஆர்.ஆர் தமிழ்ச்செல்வன் பேச்சு


விஜய் சாரின் வெற்றி, அவரது எண்ணத்திற்கான வெற்றி - ‘விசாரணை கைதி’ பட விழாவில் முதல்வர் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்த மாஸ்டர் மகேந்திரன்


‘விசாரணை’, ‘கைதி’ படங்கள் போல் ‘விசாரணை கைதி’ மிகப்பெரிய வெற்றி பெறும் - இயக்குநர் பேரரசு வாழ்த்து



வி.ஜி சினி புரொடக்‌ஷன்ஸ் சார்பில் என்.வெங்கடேஷன் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் எஸ்.ஆர்.மணிகண்டன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘விசாரணை கைதி’. உன்னி கிருஷ்ணன் நாயகனாக நடித்திருக்கும் இப்படத்தில், நாயகியாக ரித்விக்கா ஸ்ரேயா நடித்திருக்கிறார். இவர்களுடன் முன்னணி கலைஞர்கள் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.


சந்திரன் சாமி ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு நரேஷ் மற்றும் விஜய் இசையமைத்துள்ளனர். ராஜேந்திரன் படத்தொகுப்பு செய்ய, அசால்டு மதுரா சண்டைக்காட்சிகளை வடிவமைத்துள்ளார். பவர் சிவா நடனக் காட்சிகளை வடிவமைக்க, கலைக்குமார் மற்றும் ஜி.சரவணன் பாடல்கள் எழுதியுள்ளனர். மக்கள் தொடர்பாளராக விஜய் கார்த்திக் பணியாற்றுகிறார்.


இப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா மே 18 ஆம் தேதி மாலை, சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது. இதில், சிறப்பு விருந்தினர்களாக இயக்குநர்கள் சங்க பொருளாளர் பேரரசு, நடிகர் மாஸ்டர் மகேந்திரன், சேலம் ஆர்.ஆர் பிரியாணி தமிச்செல்வன், நடிகர் கூல் சுரேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 


நிகழ்ச்சியில் தயாரிப்பாளர் என்.வெங்கடேஷன் விருந்தினர்களை வரவேற்று பேசுகையில், “பத்திரிகை, ஊடகத்தினர் மற்றும் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி. நான் பல கதைகள் கேட்டேன், அதில் மணிகண்டன் சொன்ன கதை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. விசாரணை கைதி என்ற தலைப்பை நான் தான் வைத்தேன். படம் சிறப்பாக வந்திருக்கிறது, நிச்சயம் மக்களுக்கு பிடிக்கும். எங்களை வாழ்த்த வந்த அனைவருக்கும் மீண்டும் ஒரு முறை நன்றி தெரிவித்து, வருக வருக என வரவேற்கிறேன்.” என்றார்.


இசையமைப்பாளர் நரேஷ் பேசுகையில், “அனைவருக்கும் வணக்கம், பின்னணி இசை நன்றாக வந்திருக்கிறது. கூடிய விரைவில் திரையில் வெளியாக உள்ளது, நன்றி.” என்றார்.


ஸ்டண்ட் மாஸ்டர் அசால்டு மதுரா பேசுகையில், “மேடையில் அமர்ந்திருக்கும் ஜாம்பவான்களுக்கு நன்றி. இந்த படத்தில் சண்டைக்காட்சிகள் மிக சவாலாக இருந்தது. காமினேஷன் அதிகம் என்பதால் மிகவும் சிரமப்பட்டு செய்திருக்கிறேன். 25 வருடங்களுக்குப் பிறகு கஷ்ட்டப்பட்டு இந்த இடத்திற்கு வந்திருக்கிறேன். இந்த சண்டைக்காட்சிகளைப் பார்த்த பிறகு நான் யார் ? என்பது உங்களுக்கு தெரியும். பேரரசு சார் படத்தில் ஒரு காட்சியில் நடித்திருக்கிறேன். படம் வெளியானால் என் திறமை உங்களுக்கு தெரியும், இந்த 2026 ஆம் ஆண்டு நான் யார் என்பது தெரியும். சண்டைக்காட்சிகளை பாருங்கள், பிடித்திருந்தால் பாராட்டுங்கள், நன்றி.” என்றார்.


படத்தின் கதாநாயகன் உன்னி கிருஷ்ணன் பேசுகையில், “அனைவருக்கும் மாலை வணக்கம், இந்த விழாவுக்கு வந்திருக்கும் பேரரசு சாருக்கு என் மனமார்ந்த நன்றி. திருப்பாச்சி-யில் இருந்து அவரது படங்களை பார்த்து வியந்திருக்கிறேன், அவர் இந்த விழாவுக்கு வந்ததில் எனக்கு சந்தோஷம். சேலம் ஆர்.ஆர் பிரியாணி தமிழ்ச்செல்வன் சாரை பிடிக்கவே ரொம்ப கஷ்ட்டப்பட்டோம், அவர் இங்கு வந்திருப்பது மகிழ்ச்சி. நடிகர் மாஸ்டர் மகேந்திரனுக்கு என் மனமார்ந்த நன்றி. யுடியூபையே கலக்கிக் கொண்டிருக்கும் கூல் சுரேஷ் வந்த உடன் விழா கலைக்கட்டி விட்டது. நம்ம கொடுக்கும் கண்டெண்டை பேச மாட்டார், வேறு ஒரு கண்டெண்டை பேசுவார். அவர் வந்ததும் மகிழ்ச்சி. படத்தின் ஸ்டண்ட் மாஸ்டர் அசால்டு மதுரை சிறப்பாக பணியாற்றியிருக்கிறார். படத்தின் கேமரா பணியும் சிறப்பாக வந்திருக்கிறது. பின்னணி இசையும் சிறப்பாக வந்திருக்கிறது. பாடலாசிரியர்கள் சரவணன் மற்றும் கலைக்குமார் இருவரும் பாடல்களை சிறப்பாக கொடுத்திருக்கிறார்கள். முக்கியமாக சொல்ல வேண்டும் என்றால், இந்த படத்தின் தயாரிப்பாளர் வெங்கடேஷ் சாருக்கு ரொம்ப நன்றி. அவரை நான் பார்த்ததே இல்லை, இன்று தான் பார்க்கிறேன். போனில் மட்டும் தான் பேசுவார். நல்லா பண்ணுங்க, ஒன்று இரண்டு அதிகமானாலும் பரவாயில்லை முடித்துக் கொடுத்துட்டு போங்க, என்று சொல்வார். நாங்களே பல முறை அழைத்தாலும் படப்பிடிப்பு தளத்திற்கு வர மாட்டார். அதற்கு காரணம் இயக்குநர் மணிகண்டன் சார் தான். அவர் மிக சிறப்பாக பணியாற்றினார். இவரைப் போல் அமைதியான இயக்குநரை நான் பார்த்ததே இல்லை. ஒருவரையும் திட்டாமல் வேலை வாங்குவார். எனக்கு அவர் இந்த வாய்ப்பு கொடுத்ததற்கு நன்றி.” என்றார்.


படத்தின் கதாநாயகி ரித்விக்கா ஸ்ரேயா பேசுகையில், “அனைவருக்கும் வணக்கம், தமிழ் அதிகம் பேச மாட்டேன், தவறு இருந்தால் மன்னிக்கவும். எனக்கு இந்த வாய்ப்பளித்த தயாரிப்பாளர் வெங்கடேஷன் சார் மற்றும் இயக்குநர் மணிகண்டன் சாருக்கு நன்றி. உன்னி சொன்னது போல் தான், இயக்குநர் மணிகண்டன் சார் ரொம்பவே அமைதியானவர், யாரையும் திட்ட மாட்டார். யாராவது தவறு செய்தால் கூட பரவாயில்லை, மறுபடியும் பண்ணுங்க பண்ணுங்க, என்று சொல்லி ஊக்கம் கொடுப்பார். எனக்கு இது இரண்டாவது படம், ஸ்டண்ட் வராது ஆனால் என்னை வைத்து சண்டைக்காட்சிகளை ரசிக்கும்படி படமாக்கியிருக்கிறார்கள். நான் பயத்துடன் தான் கிரவுண்டில் நின்றேன், அப்போது மதுரா சார் வந்தார், பயப்படாதீங்க, உங்களால் முடியும், என்று சொல்லி என்னை ஸ்டண்ட் பண்ண வைத்தார். ஸ்டண்ட் காட்சிகள் மிக சிறப்பாக வந்திருக்கிறது. படம் வெளியாகும் போது திரையரங்குகளுக்கு சென்று பாருங்கள், நிச்சயம் உங்களுக்கு பிடிக்கும். கேமரா மேன் சார் என்னை அழகாக காட்டியிருக்கிறார். என்னுடைய ஸ்கிரீன் பிரசன்ஸ் நன்றாக இருக்கிறது, அவருக்கு நன்றி. உன்னி உள்ளிட்ட என் உடன் நடித்த சக நடிகர்களுக்கு நன்றி. தயாரிப்பு குழுவினருக்கும் நன்றி. பத்திரிகை மற்றும் ஊடகத்தினர் எங்களுக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். என்னை இந்த துறைக்கு வர அனுமதித்த என் பெற்றோர்களுக்கு நன்றி. கடவுளுக்கு நன்றி.” என்றார்.


பாடலாசிரியர் கலைக்குமார் பேசுகையில், “மேடையில் இருக்கும் சான்றோர்களுக்கும், அரங்கத்தில் இருக்கும் சான்றோர்களுக்கும் மாலை வணக்கம். விசாரணை கைதி படத்தில் இரண்டு பாடல்கள் எழுதியிருக்கிறேன். படத்தில் நான்கு பாடல்கள் இருக்கிறது. நான்கும் வெவ்வேறு ரகங்களில் நன்றாக இருக்கும். ஹீரோ, ஹீரோயின் அனைவரும் நன்றாக பண்ணியிருக்காங்க. இயக்குநருக்கு முதல் படமாக இருந்தாலும், முதல் படம் போல் தெரியாமல் மிக சிறப்பாக பண்ணியிருக்கிறார். இந்த படத்தின் தயாரிப்பாளர் பற்றி சொல்ல வேண்டும் என்றால், அவர் பல படங்கள் தயாரிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். காரணம், வேலை கொடுப்பதற்கு முதல் நாளே ஊதியத்தை கொடுத்து விடுவார். பாடகி அனுராதா ஸ்ரீராம் மேடமை ஒப்பந்தம் செய்த போது, அவர்களுக்கான ஊதியத்தை கொடுத்துவிட்டு மறுநாள் தான் பாட வைத்தார்கள். அவர்களைப் போல் அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் இப்படி தான் செய்தார். இவரை போன்ற தயாரிப்பாளர் தான் வெற்றி பெற வேண்டும். இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற வேண்டும், அதற்கு பத்திரிகை மற்றும் ஊடகத்தினர் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும், என்று கேட்டுக்கொள்கிறேன். நன்றி.” என்றார்.


பாடலாசிரியர் ஜி.சரவணன் பேசுகையில், “இந்த அழகான இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்றிருக்கும் படக்குழுவினர், சிறப்பு விருந்தினர்கள், பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி. நான் இதில் இரண்டு பாடல்கள் எழுதியுள்ளேன். பாடல் எழுதும் போதே ரசிகர்கள் மனதில் வரிகள் நிற்க வேண்டும் என்று நினைத்து எழுதியிருக்கிறேன். இரண்டு பாடல்களும் மிகப்பெரிய வெற்றியடையும், ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெறும். இதற்கு உறுதுணையாக இருந்த அனைவருக்கும் நன்றி. ஊடகத்தினர் எங்கள் படத்திற்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன், நன்றி.” என்றார்.


படத்தில் வில்லனாக நடித்திருக்கும் நடிகர் சேகர் பேசுகையில், “விசாரணை கைதி இசை வெளியீட்டு விழாவுக்கு வந்திருக்கும் அனைவருக்கும் நன்றி. நாட்டாமை படம் அப்போ பாத்திருப்பீர்கள், அந்த படத்தில் குட்டி பையனாக திடீரென்று வந்து சாட்சி சொல்லுவார். யார்டா அந்த குட்டி பையன் என்று நாம் ஆச்சரியப்படுவோம், அவர் இங்கே வந்ததற்கு நன்றி. திருப்பாச்சி, சிவகாசி, திருத்தணி அந்த வரிசையில் நான் பிறந்து வளர்ந்த தர்மபுரி என்ற தலைப்பில் படம் எடுத்த பேரரசு சாருக்கு என் இரண்டாவது நன்றி. சேலம் ஆர்.ஆர் பிரியாணி தமிழ்ச்செல்வன் ஐயாவுக்கு நன்றி. யுடியூப் சூப்பர் ஸ்டார் கூல் சுரேஷுக்கு நன்றி. நம்ம தயாரிப்பாளர் வெங்கடேஷன்ன், எங்க இருக்கிறார் என்று தெரியாது. எங்களை சிறப்பாக பார்த்துக்கொண்ட அவருக்கு நன்றி. இயக்குநர் மணிகண்டனுக்கு நன்றி. பாடலாசிரியர், ஹீரோ அனைவருக்கும் நன்றி. அனைவருக்கும் நன்றி.” என்றார்.


படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ராமச்சந்திரன் பேசுகையில், “நான் அரசு ஊழியர், சுகாதாரத்துறையில் இருந்தேன். மதுரையில் பிறந்தேன். நாடகம், விழிப்புணர்வு படங்களில் நடித்திருக்கிறேன். நடிப்பு மீது ஆர்வம் இருந்ததால் சென்னை வந்து பாரதிராஜா சார் பள்ளியில் பயின்று நடிப்பு கற்றுக்கொண்டேன். அங்கே பேரரசு சார், பாக்யராஜ் சார் வருவாங்க. என்னுடைய எழுத்துகளை பார்த்தார்கள், வேற லெவலில் இருக்கே, முன்னாடியே ஏன் வரல, என்று சொல்வார்கள். பிறகு பாராதிராஜா சார் படத்தில் எப்படியாவது நடிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன், அதே போல் நடித்தேன். செல்லாக்காசு என்ற படத்தில் நடித்தேன், ஒரு பக்கம் காலே இல்லாதது போல் நடித்தேன். மகிழ்ச்சியாக இருந்தது. அவர் படத்தில் நடித்துவிட்டு மற்றொரு இயக்குநரை நான் வியந்து பார்த்தேன் என்றால் அது மணிகண்டன் சார் தான். அவர் திருப்தியே ஆக மாட்டாரு. பொறுமையாக சொல்லிக் கொடுக்கிறார், அவர் நினைத்தது போல் வரவில்லை என்றால் விடவே மாட்டார். அவருக்கு நிறைய விசயங்கள் தெரியும், அவரை ஏமாற்றவே முடியாது. சினிமாவை நேசிப்பவர்கள் நிச்சயம் சாதிப்பார்கள், மணிகண்டன் சாரும் நிச்சயம் சாதிப்பார். படத்தில் ஒரு காட்சி இருக்கிறது, அதை பார்ப்பவர்கள் நிச்சயம் கண்கலங்குவார்கள். இயக்குநர்கள் விக்ரமன், ஆர்.சுந்தராஜன், பாக்யராஜ் ஆகியோர் இந்த படத்திற்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார்கள். படம் நிச்சயம் ஜெயிக்கும். நானும் அரசு பணியில் இருந்து திரையுலகத்திற்கு வருகிறேன், உங்களுடைய ஒத்துழைப்பு மற்றும் வாழ்த்துகள் வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன், நன்றி.” என்றார்.


படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் விகடன் பேசுகையில், “எனக்கு நடிக்க தான் தெரியும் பேச தெரியாது. இருந்தாலும், எங்கள் விழாவுக்கு வந்திருக்கும் ஜாம்பவான்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.” என்றார்.


சேலம் ஆர்.ஆர் பிரியாணி தமிழ்ச்செல்வன் பேசுகையில், “எங்கள் சேலம் ஆர்.ஆர் தொழிலாளர்கள் சார்பிலும், என் சார்பிலும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். என்னுடைய ஹீரோ உன்னி கிருஷ்ணன் என் நெருங்கிய நண்பர். மகேந்திரன், பாடலாசிரியர், தயாரிப்பாளர், இயக்குநர் முக்கியமாக இந்த படத்தை தயாரித்த தயாரிப்பாளர்களுக்கு பெரிய நன்றி. இப்போதைய காலக்கட்டத்தில் ஒரு திரைப்படம் தயாரிப்பது சாதாரண விசயம் இல்லை. கே.ராஜன் சார் இன்று நம்மிடம் இல்லை. அவர் சிறிய படங்களுக்காக நிறைய பேசியிருக்கிறார். தயாரிப்பாளர்களுக்காக குரல் கொடுத்திருக்கிறார். சிறிய படங்களுக்கு தியேட்டர் கிடைக்காது, பெரிய படங்களின் வருகையினால் சிறிய படங்கள் மக்களிடம் சேர முடியாமல் போகிறது. இப்படி ஒரு சூழ்நிலையில் இந்த படத்தை தயாரித்த வெங்கடேஷன் சாருக்கு பாராட்டு. ஹீரோ உன்னி கிருஷ்ணன் சிறப்பாக நடிப்பார். அவர் ஏற்கனவே ஒரு படத்தில் நடித்தார். அவருடைய உழைப்புக்காகவே இந்த படம் வெற்றி பெற வேண்டும். 


விஜய் சார் அரசியலுக்கு போய் விட்டார். அஜித் சார் கார் ஓட்ட போய் விட்டார். இப்படி ஒரு நிலையில், நீங்கள் எல்லாம் திரைப்படத்துறையை தூக்கி நிறுத்த வந்திருக்கிறீர்கள், மகிழ்ச்சியாக இருக்கிறது. பேரரசு சார் எவ்வளவு பெரிய வெற்றிகளை கொடுத்திருக்கிறார். இவர்களை பார்க்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த படக்குழுவினர் கடுமையாக உழைத்திருக்கிறார்கள், அவர்களுக்கு கடவுள் ஆசியால் வெற்றி கிடைக்க வேண்டும்.” என்றார்.


நடிகர் மாஸ்டர் மகேந்திரன் பேசுகையில், “உங்களை பார்க்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது. நீங்கள் சிரித்துக் கொண்டு இருப்பது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. நீங்க இந்த படத்தை சப்போர்ட் பண்ண வந்திருப்பது மகிழ்ச்சி. தமிழ் சினிமாவில் மிக சிறந்த இயக்குநர்களில் பேரரசு சார் ஒருவர். மக்களுக்கான படத்தை கொடுத்தவர், இப்போது பல படங்களுக்கு பெரிய ஒத்துழைப்பு கொடுத்து வருகிறார். அவரை எனக்கு மிகவும் பிடிக்கும். தமிழ் எப்படி அழகாக இருக்கிறதோ அதுபோல் தமிழ்ச்செல்வன் சார் அழகு. பசிக்கும் அனைவருக்கும் அவர் சோரு போட்டு இருக்காரு, அவரை பார்த்தது மகிழ்ச்சி. ஹீரோ உன்னி பிரதர், தன்னம்பிக்கையோடு இருக்கிறார். காவல்துறை உடையில் மிக பொறுத்தமாக இருக்கிறார். அவருக்கு மிகப்பெரிய வாழ்த்துகள். அவர் சினிமாவில் ஜெயிக்க வேண்டும். இயக்குநர் மணிகண்டன் சாருக்கு வாழ்த்துகள். இந்த படத்தில் அவர் நினைத்தது கிடைத்ததா என்றால் அது தெரியாது. ஆனால், எதிர்காலத்தில் அவர் பல பெரிய படங்களை எடுக்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன். கேமரா மேனின் பணி மிக சிறப்பாக இருந்தது. சண்டைக்காட்சிகள் சிறப்பு, ஸ்டண்ட் மாஸ்டர் அண்னாவின் வலி எனக்கு புரியுது, அவரை சினிமா கைவிடாது. தயாரிப்பாளரிடம் பேசிக்கொண்டு இருந்த போது, தம்பி நாம சேர்ந்து ஒரு படம் பண்ட்றோம் என்று சொன்னார், மகிழ்ச்சியாக இருந்தது. அவர் நிச்சயம் ஜெயிக்க வேண்டும். இன்றைய நம்முடைய முதல்வர் பல தயாரிப்பாளர்களை ஜெயிக்க வைத்தவர், எனவே நீங்களும் இந்த சினிமாவில் வெற்றி பெறுவீர்கள்.


திரைத்துறைக்கு ராஜ்மோகன் அண்ணா வந்திருக்கிறார். அவருக்கு என்ன அனுபவம் என்று சொல்கிறார்கள், ஆனால் அவருக்கு நிறைய அனுபவம் உண்டு. சினிமாவுக்கு வருவதற்கு முன்பாகவே அவர் பலரிடம் பேசியிருக்கிறார். பலதரப்பட்ட மக்களை சந்தித்து அவர்களுடன் உரையாடியிருக்கிறார். கஷ்ட்டப்படுபவர்களிடம், எளியவர்களிடம் அதிகம் பழகியிருக்கிறார். அவர் இந்த பொறுப்புக்கு வந்தது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. அவருக்கு என் வாழ்த்துகள். நம்ம சிஎம், நான் பொதுவாக எந்த தேர்தலையும் பெரிதாக பார்த்ததில்லை. ஆனால், இந்த தேர்தலில் அதிகம் கவனம் செலுத்தினேன், அவருக்கு என்ன நடக்கிறது, அவர் என்ன செய்கிறார் என்று பார்த்தேன். இந்த வெற்றி அவருக்கான வெற்றி, அவரது எண்ணத்திற்கான வெற்றி. அவருக்கு என் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.


படத்தில் நடித்தவர்கள் அனைவரும் தன்னம்பிக்கையோடு பேசினார்கள், அவர்களுக்கு என் வாழ்த்துகள். கூல் சுரேஷ் அண்ணாவை எனக்கு ரொம்ப பிடிக்கும். அவர் தைரியமாக பேசுவார், சினிமாவை அதிகம் நேசிப்பார். சின்ன படமோ, பெரிய படமோ அனைத்து படங்களையும் புரோமோட் பண்ணுவார், அவருக்கு வாழ்த்துகள். பி.ஆர்.ஓ கார்த்தி அழைத்து தான் இங்கே வந்தேன், சிறந்த மனிதர், அனைத்து படங்களும் ஓட வேண்டும் என்று நினைப்பவர். இங்கே வந்தது மகிழ்ச்சி, நன்றி.” என்றார்.


நடிகர் கூல் சுரேஷ் பேசுகையில், “விசாரணை கைதி பாடல்கள் மற்றும் டிரைலரை பார்க்கும் போது அனைவரும் மகிழ்ச்சியடைந்தார்கள். அதிகமாக மகேந்திரன் தான் சந்தோஷப்பட்டார். படத்தின் ஹீரோ உன்னி கிருஷ்ணன், டூயட் , ஆக்‌ஷன் பண்ணதை விட அவரது தாடி தான் எனக்கு பிடித்திருக்கிறது. அவருக்கு என் வாழ்த்துகள். ஒவ்வொரு ஹீரோவிடம் ஒரு ஸ்டைல் இருக்கும், அதுபோல் உன்னியிடம் தாடி ஒரு ஸ்டைல். படத்தின் தயாரிப்பாளர் வெங்கடேஷ் சாருக்கு வாழ்த்துகள். அவரை பார்க்கும் போதே தெரிகிறது கல்லம் கபடம் இல்லாதவர் என்று. இயக்குநர் மணிகண்டன் சாருக்கு வாழ்த்துகள். அமைதியாக இருக்கிறார் அதிலே தெரிகிறது, அவரது படம் பேசும் என்று. நாயகி ரித்விக்கா ஸ்ரேயாவுக்கு வாழ்த்துகள். வில்லனாக நடித்தவருக்கு வாழ்த்துகள். இசையமைப்பாளர், எடிட்டர், ஸ்டண்ட் மாஸ்டர் அனைவருக்கும் வாழ்த்துகள். 


ராஜன் சார் உங்களுக்காக, வீரமான மனிதர். அவருக்கு என்ன கஷ்ட்டம். அவரது மகன் வதந்திகளை கிளப்பாதீங்க என்று சொன்னார். இந்த ஒவ்வொரு மேடையிலும் தயாரிப்பாளர்களுக்கு நீங்க தான் குரல் கொடுப்பீங்க. அவர் அனைவரையும் திட்டுவார் என்று சொல்வார்கள். அது திட்டுவது அல்ல ஆசிரியர் இடத்தில் இருந்து அறிவுரை சொல்வார். சிறிய தயாரிப்பாளர்களை யாரும் ஏமாற்றி விட கூடாது என்று குரல் கொடுப்பார். 85 வயதில் நான் இருப்பேனா என்று தெரியவில்லை, ஆனால் அவர் அந்த வயதிலும் கம்பீரமாக இருப்பார். வெள்ளை சட்டை அவரது அடையாளம், அவரது உடலும் வெள்ளை. உங்களுக்கு அப்படி என்ன சார் பிரச்சனை. உங்களது வலதுகரமாக பேரரசு சார், உதயகுமார் சார் இருந்தார்கள், அவர்களிடமாவது சொல்லி இருக்கலாம். வயது ஆக ஆக அவர்களது மனநிலை எப்படி மாறும் என்பது எனக்கு தெரியும். காசு பணம் இருந்தாலும், உடன் யாரும் இல்லை என்றால் அவர்களது நிலை என்னவாகும் என்று தெரியும். இன்று விஜய் சார் சிஎம் ஆகியிருக்கிறார். அவரது அம்மா, அப்பா ஆகியோரை விட கே.ராஜன் சார் தான் அவர் வெற்றி பெற வேண்டும் என்று ஆசைப்பட்டார். என்னிடம் பல முறை சொல்லியிருக்கிறார். தயாரிப்பாளர்களின் வலியை உணர்ந்து அடிக்கடி சொல்வார், என்னுடைய தயாரிப்பாளர்களின் நிலை மாற, மாற்று அரசியல் வந்திருக்கிறது. அதை பார்ப்பதற்குள் இப்படி அவசப்பட்டுடீங்களே. அவரால் தான் நான் பிரபலமானேன், பல இடங்களில் எனக்கு புத்திமதி சொல்லியிருக்கிறார். அதன் பிறகு தான் நான் வாலை சுருட்டிக் கொண்டு, நேர்மையாக பயணித்து வருகிறேன். 


ரவி மோகன் சாரின் கதறலை பார்த்தேன். எல்லோருடைய குடும்பத்திலும் பிரச்சனை இருக்கும், யார் குடும்பத்தில் தான் பிரச்சனை இல்லை. இதேபோல் பிரஷாந்த் சார், ரஜினிக்குப் பிறகு அவர் தான். ஆனால், குடும்ப பிரச்சனையால் அவர் அந்த இடத்தை கைவிட்டுவிட்டார். எனவே ரவி மோகன் சார், பெரியவர்கள் மூலம் பேசி பிரச்சனையை தீர்த்துக்கொள்ளுங்கள். அவருக்கு கவுன்சிலிங் கொடுத்து பிரச்சனையை தீர்க்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். அதேபோல் இப்போது எந்த வீடியோவை பார்த்தாலும் டாஸ்மாக் பற்றி தான் வருகிறது. பத்து ரூபாய் அதிகமாக கேட்டு விட்டால், எங்கள் விஜய் அண்ணா வாங்க கூடாதுனு சொல்றாரு, நீங்க ஏன் வாங்குறீங்க என்று கேட்டு வீடியோ எடுக்கிறார்கள். அதற்காகவே பலர் டாஸ்மாக் சென்று வீடியோ எடுத்து போடுகிறார்கள். குழந்தைகள் அந்த வீடியோவை பார்த்தால் என்னவாகும். சுய ஒழுக்கம் வேண்டாமா. முன்பு திமுக மீது குற்றம் சொன்னீர்கள், இப்போது யார் மீது சொல்வீர்கள். மது குடிப்பது கெட்டப் பழக்கம் என்று தெரிந்தும், அதை ஏன் செய்கிறீர்கள். தயவு செய்து டாஸ்மாக் பற்றி வீடியோ போடுவதை நிறுத்துங்கள். நல்லதே நடக்கும் வெற்றி நிச்சயம், நன்றி.” என்றார்.


இயக்குநர் பேரரசு பேசுகையில், “விசாரணை கைதி நல்ல தலைப்பு. இத்தனை நாட்கள் இதை எப்படி விட்டு வைத்தார்கள் என்று தெரியவில்லை. விசாரணை, கைதி என இரண்டு படங்களும் பெரிய வெற்றி பெற்றது. அதுபோல் இந்த ‘விசாரணை கைதி’ படமும் பெரிய வெற்றி பெறும்.


சேலம் ஆர்.ஆர் பிரியாணி தமிழ்ச்செல்வன் நல்ல மனசுக்காரர். சினிமாவை மட்டும் அல்ல சினிமாக்காரர்களையும் அதிகம் நேசிக்க கூடியவர். பாரதிராஜா சாரின் மகன் மனோஜ் இறப்பில் அவர் எந்த அளவுக்கு சினிமாவையும், சினிமாக்காரர்களையும் நேசிக்கிறார் என்பதை நான் உடன் இருந்து பார்த்தேன். அந்த இறப்பில், பத்திரிகையாளர்கள், பொதுமக்கள், காவல்துறையினர் என அனவைருக்கும் தனி ஒருவராக தண்ணீர், டீ, காபி, உணவு என அனைத்தையும் ஏற்பாடு செய்து கடைசி வரை அங்கே இருந்தார். அவருக்கு என் நன்றி. மாஸ்டர் மகேந்திரன் என்று சிறு வயதில் அழைத்தார்கள், வளர்ந்த பிறகும் அப்படி அழைக்க கூடிய வாய்ப்பு அவருக்கு அமைந்தது. மாஸ்டர் படத்தில் பின்னிட்டார். வெற்றியடைவது மட்டும் வெற்றி அல்ல, வெற்றிக்காக தொடர்ந்து போராடுவது தான் வெற்றி. அதற்காக தனி தைரியம் வேண்டும். அந்த தைரியத்துடன் தொடர்ந்து சினிமாவில் பயணிக்கும் மகேந்திரன் நிச்சயம் பெரிய இடத்துக்கு செல்வார். நடிகர் உன்னி கிருஷ்ணன், அடுத்த போராளி. அவரும் எதாவது ஒரு படத்தில் நடித்து, எதாவது பெயர் வாங்கிட மாட்டோமா என்று தொடர்ந்து முயற்சித்துக் கொண்டிருக்கிறார். அவர் நடிக்கும் படங்களில், தயாரிப்பாளர்களுக்கு பக்கபலமாக இருப்பார். எந்த படமாக இருந்தாலும், அதை வெளிக்கொண்டு வருவதற்காக ஒத்துழைப்பார். அசால்டு மதுரா மதுரா என்றாலே அசால்டு தான். நீங்க அசால்டா ஜெயிச்சிடுவீங்க. 2026 சொன்னீங்களே உங்களுக்கும் நிச்சயம் கைகொடுக்கும். கவிஞர்கள் கலைக்குமார், சரவணன் இருவருக்கும் வாழ்த்துகள். படத்தின் தயாரிப்பாளரை பார்க்கும் போது தயாரிப்பாளர் போலவே தெரியல, வாய்ப்பு கேட்டு வந்தவர் போல இருக்கிறார். நான் இப்போது மதிப்பது பெரிய தயாரிப்பாளர்களை அல்ல சிறிய தயாரிப்பாளர்களை தான். காரணம், பெரிய தயாரிப்பாளர்கள் பெரிய பெரிய கலைஞர்களை தான் போடுகிறார்கள். ஆனால், இவரைப்போன்று சிறிய தயாரிப்பாளர்கள் தான் வளரும் கலைஞர்களையும், தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் வாய்ப்பு கொடுக்கிறார்கள். இவர்களை போன்ற சிறு முதலீட்டு தயாரிப்பாளர்களால் தான் சினிமா வாழ்கிறது. இபோதைக்கு இவர்கள் தான் பெரிய தயாரிப்பாளர்கள். இருப்பவர்களுக்கு கொடுக்கிறவர்களை விட, இல்லாதவர்களுக்கு கொடுப்பவர்கள் தான் மனிதர்கள். இயக்குநர் மணிகண்டன் இந்த படத்திற்கும் அவருக்கும் சம்மந்தம் இல்லாதது போல் அமைதியாக இருக்கிறார். நானும் அவரைப் போல் தான் இருப்பேன், என்னை பார்ப்பது போல தான் இருக்கிறது. அவர் தேர்வு செய்த தலைப்பே சிறப்பாக இருக்கிறது. படமும் நிச்சயம் நன்றாக இருக்கும் என்று நம்புகிறேன். அவருக்கு என் வாழ்த்துகள். இந்த படத்தின் பி.ஆர்.ஓ கார்த்திகிற்கு நன்றி. தொகுப்பாளினி, கதாநாயகி காயத்ரிக்கு நன்றி. 


பிரசாத் லேப், இந்த மேடையில் அதிக நேரங்கள் நாங்கள் செலவிட்ட மேடை. அதிகம் நேரம் நான், இன்னும் பலர் ஒருவருடன் நேரம் செலவிட்டோம். பல தருணங்களில் ஒன்றாக பயணித்தோம். எங்க ஹீரோ தயாரிப்பாளர் கே.ராஜன் என்ற இரும்புக்கரங்கள் பல இசைத்தகடுகளை வெளியிட்டு இருக்கிறோம். இப்போ கூட நம்ப முடியவில்லை. யாரோ ஒருவர் என்று சொன்னால் நம்பி விடுவோம். பல வருடங்களுக்கு முன்பு ஜி.வெங்கடேசன் என்ற தயாரிப்பாளர் தற்கொலை செய்துகொண்டார். அதற்கு காரணம் தெரிந்தது, அனுதாபம் பட்டோம். கே.ராஜன் சார், தைரியத்தின் அடையாளம், துணிச்சலின் அடையாளம். அவர் தயாரிப்பாளர், இயக்குநர், நடிகர் என்பதை எல்லாம் தாண்டி சினிமா மீது அக்கறை உள்ள மனிதர். அவருக்கு எப்படி இந்த எண்ணம் வந்தது. 85 வயது, இன்னும் 5 வருடங்கள் கடந்தால் இயற்கையே அழைத்துச் சென்றிருக்கோம். 85 வயதில் ஒருவர் தற்கொலை செய்துகொள்கிறார் என்றால் அது எவ்வளவு பெரிய கொடுமை. அந்த மனசு எவ்வளவு வேதனை பட்டிருக்கோம். திருட்டு விசிடியை ஒழிக்க தனி நபராக அடித்து நொறுக்கினீங்களே அந்த கே.ராஜன் சார் எங்கே சார். சினிமாவை காப்பாற்ற குரல் கொடுத்தீங்களே, இப்படி ஆற்றில் விழுந்துட்டீங்களே. தைரியமானவர்களாக இருப்பவர்களுக்கும் இப்படி ஒரு நிலை என்றால், அங்கேயும் விதி விளையாடுகிறது. அவர் என்னிடம் பல முறை சொன்னது, பலருக்கு கோடி கணக்கில் கடன் கொடுத்து இருக்கிறேன், அதை திரும்ப வாங்க முடியவில்லை என்பது தான். கடன் வாங்கியவர்களிடம் கேட்டால் தருவதில்லை, என்று வருத்தத்தோடு சொல்வார். ஆனால், இது அவரது மரணத்திற்கு காரணமாக இருக்குமா என்றால் அது எனக்கு தெரியவில்லை. அவரது ஆத்மா சாந்தியடைய வேண்டும்.


புதிய தயாரிப்பாளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். புதியவர்கள் தொடர்ந்து படம் தயாரித்தால் தான் திரைப்படத்துறை வாழும். எனவே, சினிமாவை பற்றி தெரியாமல் படம் தயாரிக்க வருபவர்கள், அனுபவம் உள்ள தயாரிப்பாளர்களிடமோ அல்லது தயாரிப்பாளர்கள் சங்கத்தில் அறிவுரை பெற்று படம் தயாரிப்பது நல்லது. விசாரணை கைதி திரைப்படம் வெற்றி பெற வாழ்த்துகிறேன்.” என்றார்.


இறுதியாக இயக்குநர் மணிகண்டன் நன்றி தெரிவித்து பேசுகையில், “பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி நண்பர்களுக்கு நன்றி. பேரரசு சார், தமிழ்ச்செல்வன் சார், மகேந்திரன் சார், கூல் சுரேஷ் சார் அனைவருக்கும் நன்றி. தயாரிப்பாளர் சாருக்கு நன்றி, காலம் முழுவதும் அவருக்கு நன்றி கடன் பட்டிருக்கிறேன். நாயகன் உன்னி கிருஷ்ணன் அவர்களுக்கும் நன்றி.” என்றார்.


******************************************************

Experience Larger-Than-Life Spectacle- Epic Trailer Of Mega Power Star Ram Charan, Buchi Babu Sana, Venkata Satish Kilaru, Vriddhi Cinemas, Mythri Movie Makers, Sukumar Writings’ Peddi Unveiled*

 *ராம் சரணின் “பெத்தி” பட அதிரடி டிரெய்லர் வெளியானது...*


Experience Larger-Than-Life Spectacle- Epic Trailer Of Mega Power Star Ram Charan, Buchi Babu Sana, Venkata Satish Kilaru, Vriddhi Cinemas, Mythri Movie Makers, Sukumar Writings’ Peddi Unveiled*

மெகா பவர் ஸ்டார் ராம் சரண், புச்சி பாபு சனா, வெங்கட சதீஷ் கிலாரு, விருத்தி சினிமாஸ், மைத்ரி மூவி மேக்கர்ஸ், சுகுமார் ரைட்டிங்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள “பெத்தி” திரைப்படத்தின் பிரம்மாண்ட டிரெய்லர் வெளியீடு!


மெகா பவர் ஸ்டார் ராம் சரண் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள பான்-இந்தியா திரைப்படமான “பெத்தி”, வெளியீட்டுக்கு முன்பே நாடு முழுவதும் பரபரப்பை கிளப்பி வருகிறது. இயக்குநர் புச்சி பாபு சனா, கிராமத்து பின்னணியுடனான இந்த ஆக்ஷன்–ஸ்போர்ட்ஸ் கதையை மண் வாசனை மிக்க உணர்வுகளுடன் உருவாக்கியுள்ளார். ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள், கதாபாத்திர அறிமுகங்கள், மற்றும் மனதை கவரும் பாடல்கள் ஆகியவை ரசிகர்களின் எதிர்பார்ப்பை மேலும் உயர்த்தியுள்ளன. வெங்கட சதீஷ் கிலாரு தயாரிப்பில், விருத்தி சினிமாஸ் நிறுவனம் மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் சுகுமார் ரைட்டிங்ஸ் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தின் திரையரங்க டிரெய்லர், மும்பையில் நடைபெற்ற விழாவில் வெளியிடப்பட்டது.


ஹீரோ அறிமுகத்தை தவிர்த்து, “பெத்தி” டிரெய்லர் ஒரு விரிவான கிராமத்து உலகத்தை முன்வைக்கிறது. தீரா உழைப்பு, போராட்டம் மற்றும் விளையாட்டின் மீதான தீராத காதல் ஆகியவற்றால் நிரம்பிய வாழ்க்கையை மையமாகக் கொண்ட இந்தக் கதையில், “பெத்தி” என்ற கதாபாத்திரம் பல திறமைகள் கொண்ட விளையாட்டு வீரராக வருகிறார். கிரிக்கெட், மல்யுத்தம், ஓட்டப்பந்தயம் என எந்த விளையாட்டாக இருந்தாலும், தனது உடல் வலிமை மற்றும் கடின உழைப்பால் வாழ்வாதாரம் ஈட்டும் மனிதராக அவர் காட்சியளிக்கிறார். குழந்தைகளின் அன்பையும், கிராம மக்களின் மரியாதையையும் பெறும் அவரது வளர்ச்சி, குறிப்பாக ஒரு ஆதிக்கம் செலுத்தும் ஜமீன்தாரின் பொறாமையை தூண்டுகிறது.


இயக்குநர் புச்சி பாபு சனா உருவாக்கிய இந்த பிரம்மாண்ட உலகம் மிகத் தெளிவாகவும் வலிமையாகவும் தெரிகிறது. டிரெய்லர் முழுவதும் இதயத் துடிப்பைப் போல தடதடவென ஓடுகிறது – அமைதியான தருணங்களில் மென்மையாகவும், ஆக்ஷன் காட்சிகளில் இடியென வெடிப்பதுபோலும் அமைந்துள்ளது. ஒவ்வொரு ஃப்ரேமும் மிகத் துல்லியமாக வடிவமைக்கப்பட்டுள்ளதால், பார்வையாளர்கள் உண்மையான மற்றும் பரந்த உலகத்திற்குள் இழுக்கப்படுகிறார்கள். வழக்கமான விளையாட்டு படங்களின் பாணியை பின்பற்றாமல், “பெத்தி” தனது விளையாட்டு காட்சிகளில் பெரும் தீவிரத்தையும் பரபரப்பையும் உருவாக்குகிறது. ரயில் நிலைய மேடைகளில் நடக்கும் மாபெரும் மோதல்கள், இயற்கையை மீறும் அளவிலான ஸ்டண்ட்கள், அதிரடியான சண்டைக் காட்சிகள் ஆகியவை விளையாட்டும் உயிர் பிழைப்பும் ஒன்றாக கலந்த உலகத்தை சுட்டிக்காட்டுகின்றன. குறிப்பாக கிரிக்கெட் மற்றும் மல்யுத்தத்தை இணைத்து வடிவமைக்கப்பட்ட ஒரு அசாதாரண காட்சி உடனடியாக கவனத்தை ஈர்க்கிறது.


ராம் சரண், மிகவும் கடினமான உடற்திறன் பயிற்சியுடன், ஒரு வலிமையான விளையாட்டு வீரராக காட்சியளிக்கிறார். கிரிக்கெட் மைதானத்தில் அனல் பறக்க வெளிச்சங்களின் கீழ் பேட்டை சுழற்றும் தருணங்களிலிருந்து, சேறு கலந்த  மல்யுத்தப் போட்டிகளில் மிரட்டலாக மோதும் காட்சிகள் வரை, “பெத்தி”யாக அவர் முழுமையாக மாறியிருப்பது தெரிகிறது. உடல் மொழியிலும், உணர்ச்சிகளிலும் ஆழமான மாற்றத்தை அவர் வெளிப்படுத்துகிறார்.


ஜான்வி கபூர் தனது கதாபாத்திரத்தில் அழகான நளினத்தையும், பாரம்பரிய கவர்ச்சியையும் கொண்டு வந்துள்ளார். மேலும் சிவராஜ்குமார், ஜகபதி பாபு, திவ்யேந்து சர்மா, பொமன் இரானி உள்ளிட்ட பலரும் கதைக்கு வலிமை சேர்க்கும் வகையில் தோன்றுகின்றனர்.


தொழில்நுட்ப ரீதியாக “பெத்தி” இந்திய சினிமாவின் பிரம்மாண்டத்தை மறுபரிசீலனை செய்யும் படமாகத் தெரிகிறது. தயாரிப்பு வடிவமைப்பாளர் அவினாஷ் கொல்லா உருவாக்கிய கிராமப்புற உலகம் இயல்பும் நுணுக்கமும் நிறைந்ததாக உள்ளது. ஒளிப்பதிவாளர் R. ரத்னவேலு காட்சிகளை வண்ணமயமான நிறங்களுடனும், பரந்த ஃப்ரேம்களுடனும், உயிரோட்டமிக்க கேமரா இயக்கத்துடனும் பதிவு செய்துள்ளார். ஏ.ஆர். ரஹ்மானின் இசை, உணர்ச்சிகளையும் ஆக்ஷன் தருணங்களையும் மேலும் உயர்த்துகிறது.


படத்தின் தயாரிப்பு தரம் சர்வதேச அளவுக்கு இணையானதாக உள்ளது. ஒவ்வொரு ஃப்ரேமும் பெரிய திரைக்காக செதுக்கப்பட்டதுபோல் அமைந்துள்ளது. சமீப காலங்களில் வந்த எந்த டிரெய்லரையும் விட மாறுபட்டதாக மிக அற்புதமானதாக  இந்த டிரெய்லர் அமைந்துள்ளது. இதனால், இன்னும் சில வாரங்களில் வெளியாக இருக்கும் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு தற்போது உச்சத்தை எட்டியுள்ளது


*நடிகர்கள் :*

குளோபல் ஸ்டார் ராம் சரண், ஜான்வி கபூர், சிவ ராஜ்குமார், ஜகபதி பாபு, திவ்யேந்து சர்மா


*தொழில்நுட்பக் குழு :*

இயக்கம், திரைக்கதை: புச்சி பாபு சானா

வழங்குபவர்கள் : மைத்ரி மூவி மேக்கர்ஸ், சுகுமார் ரைட்டிங்ஸ்

தயாரிப்பு நிறுவனம்: விருத்தி சினிமாஸ்

தயாரிப்பாளர்: வெங்கட சதீஷ் கிலாரு

இணை தயாரிப்பாளர்: ஈஷான் சக்சேனா

இசை: A.R. ரஹ்மான்

ஒளிப்பதிவு: R. ரத்னவேலு

தயாரிப்பு வடிவமைப்பாளர்: அவினாஷ் கொல்லா

படத்தொகுப்பு: நவீன் நூலி

நிர்வாக தயாரிப்பாளர்: V.Y. பிரவீன் குமார்

மார்க்கெட்டிங்: ஃபர்ஸ்ட் ஷோ

மக்கள் தொடர்பு : யுவராஜ்


*Experience Larger-Than-Life Spectacle- Epic Trailer Of Mega Power Star Ram Charan, Buchi Babu Sana, Venkata Satish Kilaru, Vriddhi Cinemas, Mythri Movie Makers, Sukumar Writings’ Peddi Unveiled*


Mega Power Star Ram Charan’s highly anticipated Pan-India flick Peddi is already roaring ahead even before its release, with every promo becoming a nationwide talking point. Director Buchi Babu Sana brings a raw, rooted energy to this rural action–sports saga, while the striking first-look posters, impactful character glimpses, and stirring songs have only amplified the hype. Produced ambitiously by Venkata Satish Kilaru under Vriddhi Cinemas, in collaboration with Mythri Movie Makers and Sukumar Writings, the film’s theatrical trailer was unveiled just a while ago at an event in Mumbai.


Rather than opting for a typical hero introduction, Peddi trailer unfolds a sweeping rural tapestry dominated by sweat, struggle, and an undying love for sport. The protagonist, Peddi, is a multi-talented athlete who earns his livelihood through sheer physical might. Whether it’s cricket, wrestling, or sprinting, his life is defined by the grit and passion he pours into every discipline. Adored by the children and respected by the villagers, his rapid rise draws envy, especially from a domineering landlord whose pride refuses to share the spotlight.


Director Buchi Babu Sana shapes this larger-than-life universe with remarkable clarity. The trailer pulses like a heartbeat- gentle in its silences, thunderous in its bursts of action. Every frame is crafted with precision, immersing viewers in a world that feels authentic, expansive, and rich with atmosphere. Instead of relying on familiar sports-drama patterns, Peddi injects its sporting sequences with raw intensity and life-or-death stakes. Massive clashes on railway platforms, gravity-defying stunts, and adrenaline-fueled fights hint at a world where sport and survival are inseparable. One standout stretch is the seamless fusion of cricket and wrestling, an audacious, high-impact sequence that instantly grabs attention.


Ram Charan appears in a fiercely athletic avatar, showcasing exceptional physical conditioning that grounds the film’s demanding sports segments. The trailer fluidly shifts between sporting worlds- from Charan swinging a rugged cricket bat under blazing floodlights to engaging in visceral mud-wrestling bouts. His transformation into Peddi is both chiseled and emotionally layered.


Janhvi Kapoor brings elegant warmth to her role, blending traditional charm with expressive nuance. The trailer further teases a powerful supporting cast- Shiva Rajkumar, Jagapathi Babu, Divyenndu, and Boman Irani, each adding weight and intrigue to the drama.


Technically, Peddi looks poised to redefine Indian cinematic spectacle. Production designer Avinash Kolla creates rustic landscapes filled with texture and authenticity. The visuals, captured by celebrated cinematographer R Rathnavelu, throb with intensity- rich tones, sweeping frames, and dynamic movement in every shot. Elevating the narrative further is a stirring score by AR Rahman, amplifying both emotional depth and action-packed moments.


The film’s production values are of international standards. Every frame feels sculpted for the big screen, promising a truly immersive theatrical experience.


This is a trailer cut like no other in recent times, and it sets the bar sky-high. The excitement is now through the roof as we count down the final couple of weeks before the film’s release.


*Cast* : Mega Power Star Ram Charan, Janhvi Kapoor, Shiva Rajkumar, Jagapathi Babu, Divyendu Sharma, Boman Irani


*Technical Crew:*

Writer, Director: Buchi Babu Sana

Presents: Mythri Movie Makers, Sukumar Writings

Banner: Vriddhi Cinemas

Producer: Venkata Satish Kilaru

Co producer: Ishan Saksena

Music Director: AR Rahman

DOP: R Rathnavelu

Production Design: Avinash Kolla

Editor: Navin Nooli

Executive Producer: V. Y. Praveen Kumar

Marketing: First Show

PRO: Yuvraaj


https://www.youtube.com/watch?v=qu3tPDCMNeU

KRG கண்ணன் ரவியின் தயாரிப்பில் நடனப்புயல் பிரபு தேவா மற்றும் வைகைப் புயல் வடிவேலு நடிக்கும் “பேங் பேங்” படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துள்ளது !!*

 *KRG கண்ணன் ரவியின் தயாரிப்பில் நடனப்புயல் பிரபு தேவா மற்றும் வைகைப் புயல் வடிவேலு நடிக்கும் “பேங் பேங்” படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துள்ளது !!*



KRG கண்ணன் ரவியின் பிரமாண்ட தயாரிப்பில், தீபக் ரவி இணைத் தயாரிப்பில் உருவாகி வரும் “பேங் பேங்” திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. நடனப்புயல் பிரபு தேவா மற்றும் வைகைப் புயல் வடிவேலு 25 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இணைந்துள்ள இந்த திரைப்படம், ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.


வித்தியாசமான ஜோம்பி வகை ஜானரில் உருவாகி வரும் இப்படம், ஆக்ஷன், காமெடி மற்றும் ஹாரர் அம்சங்கள் கலந்த முழுமையான கமர்ஷியல் என்டர்டெய்னராக உருவாகி வருகிறது. பிரபு தேவாவின் ஸ்டைலும் , வடிவேலுவின் தனித்துவமான நகைச்சுவையும் ரசிகர்களுக்கு புதிய அனுபவத்தை அளிக்கவுள்ளது.


மலேசியாவில் 10 நாட்கள் படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளது. பிரமாண்ட காட்சிகள் படத்தின் முக்கிய ஹைலைட்டாக அமையும் என படக்குழு தெரிவித்துள்ளது.


முன்னதாக வெளியான டைட்டில் டீஸர் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்திருந்தது. அந்த டீஸரில் ஜோம்பிகளால் சூழப்பட்ட சூழலில் பிரபு தேவா மற்றும் வடிவேலு துப்பாக்கியுடன் மாஸாக தோன்றிய காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலானது. “ பிரபு வேலு”, “வடி தேவா” போன்ற நகைச்சுவை கலந்த பெயர்கள் ரசிகர்களின் ஆர்வத்தை மேலும் தூண்டியது.


இப்படத்தினை இயக்குநர் சாம் ரோட்ரிகஸ் (Sam Rodrigues) எழுதி இயக்குகிறார். ஹாரர் அட்வென்ச்சர் பாணியில் உருவாகும் இப்படத்திற்கு முன்னணி இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். H.C. வேணு ஒளிப்பதிவு செய்ய, சுரேஷ் ஸ்டண்ட் காட்சிகளை வடிவமைக்கிறார். ஆண்டனி படத்தொகுப்பை கவனிக்கிறார். கலை இயக்கத்தை டான் பாலா செய்துள்ளார். ‘அனிமல்’ திரைப்படத்திற்காக தேசிய விருது பெற்ற Sync Cinema நிறுவனம் சவுண்ட் டிசைனை மேற்கொண்டுள்ளது. மேலும், தெலுங்கானா மாநில விருது பெற்ற அரவிந்த் மேனன் சவுண்ட் மிக்சிங் பணிகளை செய்துள்ளார்.


நடிகர் பப்லு பிரித்திவிராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படம், KRG நிறுவனத்தின் நான்காவது பிரமாண்ட தயாரிப்பாக உருவாகி வருகிறது. இந்தோனேசியாவின் Mount Bromo எரிமலை பகுதியில் தொடங்கிய இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்த நிலையில், விரைவில் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் துவங்கவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.


“பேங் பேங்” திரைப்படத்தின் அடுத்தடுத்த அப்டேட்கள் விரைவில் வெளியாக உள்ள நிலையில், இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

A Dream Symphony Begins: Karthik Subbaraj Joins Hands with Maestro Ilaiyaraaja for His 10th Film*

 *A Dream Symphony Begins: Karthik Subbaraj Joins Hands with Maestro Ilaiyaraaja for His 10th Film* 




_*The Iconic Filmmaker’s milestone 10th film marks Maestro Ilaiyaraaja’s 1540th musical journey, promising an unforgettable cinematic experience*_




Acclaimed filmmaker Karthik Subbaraj, known for consistently pushing the boundaries of mainstream storytelling with films such as Pizza, Jigarthanda, Iraivi, Petta, Mahaan, Jigarthanda DoubleX and Retro, has officially wrapped the shoot of his much-awaited 10th directorial venture, which commenced in November last year. The film, bankrolled by Academy Award-winning Sikhya Entertainment, headed by Guneet Monga Kapoor and Achin Jain, in association with Jio Studios, marks a prestigious first-time collaboration between the celebrated filmmaker and the globally recognised production banner. With the film’s shooting wrapped up, the makers have delightedly unveiled an exciting news about Isaignani Ilaiyaraaja getting onboard as music composer. 



Making the announcement even more special is the coming together of Karthik Subbaraj and Maestro Isaignani Ilaiyaraaja, who comes on board as the composer for the film, marking the 1540th project in the legendary musician’s illustrious career. The collaboration between a filmmaker celebrated for his unique cinematic voice and one of India’s greatest musical icons has already sparked immense excitement among cinema lovers.



Speaking about the project, Maestro Ilaiyaraaja said: “Cinema and music have always shared a deep emotional connection for me. What matters most is the honesty of the story and the people telling it. I’m happy to collaborate with Karthik Subbaraj, whose passion for cinema is very evident in his work for this film. Every film brings its own feeling and its own music. And during the composition sessions for the background scores I felt the audio should be released as an album itself as it has shaped up so well that am confident my fans will enjoy it. I hope this journey will create something that reaches people’s hearts.”



Speaking about the collaboration, filmmaker Karthik Subbaraj said: “People often say you don’t choose art, art chooses you, and my journey has truly felt like a testament to that. Working with the legendary Ilaiyaraaja sir has been a lifelong dream, and to finally have him compose music for my 10th film feels surreal and deeply special. As someone who has admired and celebrated his music for years, this collaboration means a great deal to me personally and creatively. I’m also excited to be joining hands with Sikhya Entertainment and Jio Studios on this film, alongside Guneet Monga Kapoor and Achin Jain. I can’t wait for audiences to experience what we’re creating together.”



Jyoti Deshpande, President of Jio Studios, added: “We’re excited to begin this first collaboration with Sikhya Entertainment alongside Karthik Subbaraj and the legendary Ilaiyaraaja on a film that brings together such exceptional creative talent. The project represents a powerful coming together of storytelling and music, and we’re thrilled to bring this cinematic experience to audiences on the big screen.”



Speaking about the project, producer Guneet Monga Kapoor, Sikhya Entertainment said, “This one feels deeply personal to all of us at Sikhya. Karthik Subbaraj is one of the most distinctive voices in Indian cinema today, and to see him finally make a film with Ilaiyaraaja sir, whose music has shaped generations of storytellers and cinema lovers alike, is genuinely exciting. And doing this alongside Jio Studios, our first collaboration together, makes it even more so. We back creative partnerships that feel inevitable in hindsight. This one does.”



Speaking about the collaboration, producer Achin Jain, Sikhya Entertainment said: “Karthik Subbaraj has such a distinct cinematic voice, and Ilaiyaraaja sir’s music continues to remain timeless across eras and languages. For Sikhya, this film represents the kind of ambitious, rooted storytelling we deeply believe in. Our first collaboration with Jio Studios makes it even more exciting. We’re incredibly proud to be part of a film that brings together such iconic creative forces, and we look forward to audiences experiencing this journey on the big screen.”

நாகர்கோவிலில் சமூக நலத்திட்ட உதவிகளை வழங்கினார் சௌந்தர்யா ரஜினிகாந்த்*

 *நாகர்கோவிலில் சமூக நலத்திட்ட உதவிகளை வழங்கினார் சௌந்தர்யா ரஜினிகாந்த்*



நாகர்கோவிலில் உள்ள ஆனந்தா திருமண மண்டபத்தில் மே 15-ஆம் தேதி மாற்றுத்திறனாளிகள் மற்றும் பெண்களுக்கான நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. Apex Laboratories நிறுவனத்தின் சமூகப் பொறுப்புணர்வுத் திட்டத்தின் (CSR) கீழ் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, பிரபல இயக்குநரும் தயாரிப்பாளருமான சௌந்தர்யா ரஜினிகாந்த் தலைமை வகித்தார்.


நாகர்கோவில் ரவுண்ட் டேபிள் 176 (Nagercoil Round Table 176) மற்றும் நாகர்கோவில் லேடீஸ் சர்க்கிள் 196 (Nagercoil Ladies Circle 196) ஆகிய அமைப்புகள் இணைந்து இந்நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனர். இதில் சிறப்பு விருந்தினராகத் தயாரிப்பாளர் மகேஷ் ராஜ் பசிலியன் (Magesh Raj Pasilian) கலந்துகொண்டார்.


வழங்கப்பட்ட நலத்திட்டங்கள்:


* செயற்கைக் கால்கள்: 'ஸ்ரீ பாலாஜி ஆர்த்தோடிக்ஸ்' (Sree Balaji Orthotics) நிறுவனம் தயாரித்த 27 செயற்கைக் கால்கள் மாற்றுத்திறனாளிகளுக்கு இலவசமாக வழங்கப்பட்டன.


* மின்சார ஆட்டோக்கள்: பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில், 5 பெண்களுக்கு மின்சார ஆட்டோக்கள் (E-Autos) வழங்கப்பட்டன.


திட்டத்தின் நோக்கம்:


சுமார் ரூ. 30 லட்சம் மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட்ட இத்திட்டம், சமூக நலன் மற்றும் பெண்களின் பொருளாதார முன்னேற்றத்தை முதன்மை நோக்கமாகக் கொண்டு நடத்தப்பட்டது. நிகழ்ச்சியில் சௌந்தர்யா ரஜினிகாந்த் பயனாளிகளுக்கு நேரில் நலத்திட்ட உதவிகளை வழங்கி வாழ்த்தினார்.