-

Loading latest news...

நடிகர் திரு வீர் - ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடித்திருக்கும் 'ஓ ! சுகுமாரி' படத்தின் ட்ரெய்லர் வெளியீடு

 *நடிகர் திரு வீர் - ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடித்திருக்கும் 'ஓ ! சுகுமாரி' படத்தின் ட்ரெய்லர் வெளியீடு*



டீசர் மற்றும் இரண்டு பாடல்கள் வெளியாகி மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திய திரைப்படம் 'ஓ! சுகுமாரி' - திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாக தயாராகி வருகிறது. திரு வீர் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகிய இருவரும் முதன் முதலாக திரையில் ஒன்றிணைந்திருக்கும் இந்த திரைப்படம் - காதல், நகைச்சுவை மற்றும் கிராமிய பின்னணியின் அழகிய அம்சங்கள் நிறைந்த ஒரு முழுமையான பொழுதுபோக்கு திரைப்படமாக இருக்கும் என்ற உறுதியை அளிக்கிறது. அறிமுக இயக்குநர் பரத் தர்ஷன் எழுதி, இயக்கியுள்ள இப்படத்தை கங்கா என்டர்டெயின்மென்ட்ஸ்( Gangaa Entertainments) நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் மகேஸ்வரா ரெட்டி மூலி தயாரித்திருக்கிறார். 'ஓ! சுகுமாரி ' படத்தின் திரையரங்க வெளியீட்டிற்கான ட்ரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது.


இந்த ட்ரெய்லரில், 'தாமினி' என்ற துடுக்குத்தனமான இளம் பெண்ணை அறிமுகப்படுத்துகிறது. இவளைக் கண்டு ஊரே ஒரு விசித்திரமான காரணத்திற்காக அஞ்சுகிறது. அதாவது, அவளை தொடுபவர்களுக்கு மின்சாரம் தாக்கியது போன்ற அதிர்ச்சி ( Electric Shock) ஏற்படுகிறது. இந்த விசித்திரமான ரகசியத்தை மறைத்து, அவளது குடும்பத்தினர்- அவளை நாயகனுக்கு திருமணம் செய்து வைக்கின்றனர். திருமணத்திற்கு பிறகு தனக்கு என்ன காத்திருக்கிறது என்பது அந்த நாயகனுக்கு தெரியாது. இதுபோன்ற அசாதாரணமான சிக்கலை சமாளிக்க போராடும் அந்த புதுமண தம்பதியினருக்கு இடையே ஏற்படும் கலகலப்பான மற்றும் எதிர்பாராத நிகழ்வுகளே படத்தின் அடுத்த கட்ட நகர்வாக அமைகிறது. அவர்கள் இருவரும் இணைந்து இந்த சிக்கலை எப்படி எதிர்கொண்டு காதலையும், மகிழ்ச்சியையும் கண்டறிந்து கொண்டாடுகிறார்கள் என்பதே இந்த கதையின் மையமாகும்.


இயக்குநர் பரத் தர்ஷன் உணர்ச்சிகளுக்கு குறைவில்லாமல் அதே சமயம் மிகுந்த நகைச்சுவையுடன் இந்த கதையை வழங்கியுள்ளார். திரு வீர் மீண்டும் ஒரு புத்துணர்ச்சியூட்டும் மற்றும் தனித்துவமான கதையை தேர்ந்தெடுத்துள்ளார். கவலையற்ற கிராமத்து இளைஞராக தனது கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தி, துடிப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். ஐஸ்வர்யா ராஜேஷ் தனக்குரிய கதாபாத்திரத்தில் சிறப்பாக ஜொலிக்கிறார். தனது கதாபாத்திரத்திற்கான அழகையும், ஆழத்தையும் அவர் திரையில் அற்புதமாக வெளிப்படுத்தியுள்ளார். இவர்களுடன் முரளிதர் கௌட் , விஷ்ணு ஒய், ஜான்சி, ஆமனி மற்றும் ஆனந்த் கோட்டா ஜெயராம் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர்.


ஒளிப்பதிவாளர் C.H. குஷேந்தர் - கிராமத்து பின்னணியிலான அழகியல்களை நேர்த்தியாக காட்சிப்படுத்தியுள்ளார். இசையமைப்பாளர் பரத் மஞ்சிராஜு - தனது துடிப்பான இசையின் மூலம் இந்த கலகலப்பான கதை களத்திற்கு மேலும் வலு சேர்த்துள்ளார். தயாரிப்பு வடிவமைப்பாளராக திருமலா எம். திருப்பதி பணியாற்ற, படத் தொகுப்பை ஸ்ரீ வர பிரசாத் கையாளுகிறார்.


இந்த 'ஓ! சுகுமாரி' படத்தின் ட்ரெய்லர் நகைச்சுவை, காதல் மற்றும் உணர்ச்சிகளின் புத்துணர்ச்சியூட்டும் கலவையை வழங்குகிறது. மேலும் இது ஒரு ஆரோக்கியமான குடும்ப பொழுதுபோக்கு படைப்பு என்ற எதிர்பார்ப்பையும் அதிகரிக்கிறது. 'ஓ! சுகுமாரி' ஜூலை 17ஆம் தேதி முதல் உலகம் முழுவதும் தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் திரையரங்குகளில் வெளியாகிறது.


நடிகர்கள் : திரு வீர், ஐஸ்வர்யா ராஜேஷ், முரளிதர் கௌட், விஷ்ணு. ஒய், ஜான்சி, ஆமனி, ஆனந்த் கோட்டா ஜெயராம் .


தொழில்நுட்ப குழு :


தயாரிப்பாளர் : மகேஸ்வரா ரெட்டி மூலி

இயக்குநர் : பரத் தர்ஷன்

ஒளிப்பதிவு : சி ஹெச் குஷேந்தர்

இசை : பரத் மஞ்சிராஜு

கலை இயக்குநர்: திருமலா எம் திருப்பதி

படத்தொகுப்பு : ஸ்ரீ வர பிரசாத்  

மக்கள் தொடர்பு : யுவராஜ்

மார்க்கெட்டிங் : ஹேஷ்டாக் மீடியா


*Hit Machine Anil Ravipudi Released Hilarious Theatrical Trailer Of Thiru Veer, Aishwarya Rajesh’ Oh..! Sukumari*

 

After creating strong excitement with its teaser and first single, Oh..! Sukumari is all set for its grand theatrical release. Bringing Thiru Veer and Aishwarya Rajesh together on screen for the first time, the film promises a wholesome entertainer packed with romance, comedy, and rustic charm. Written and directed by debutant Bharat Dharshan, the film is produced by Maheswara Reddy Mooli under the Gangaa Entertainments banner, following the success of Shivam Bhaje. Today, Hit Machine Anil Ravipudi unveiled the film's theatrical trailer.

 

The trailer introduces Damini, a mischievous young woman feared by her entire village for one bizarre reason- anyone who touches her receives an electric shock. Concealing this strange secret, her family gets her married to the protagonist, who has no idea what awaits him after the wedding. What follows is a series of hilarious and unexpected situations, as the newlyweds struggle to deal with this extraordinary problem. How they overcome it together and discover love and happiness forms the crux of the story.

 

Director Bharat Dharshan presents the unusual premise with plenty of humor while keeping the emotions intact. Thiru Veer once again chooses a refreshing and distinctive subject, delivering a spirited performance that perfectly suits his role as a carefree village youngster. Aishwarya Rajesh shines in an equally significant role, bringing both charm and depth to her character. The supporting cast, including Muralidhar Goud, Vishnu Oi (MAD fame), Jhansi, Amani, and Anandhkota Jayaram, adds to the film's entertaining appeal.

 

Cinematographer CH Kushendar beautifully captures the picturesque rural backdrop, while composer Bharath Manchiraju enhances the fun-filled narrative with an energetic score. Balagam fame Thirumala M Thirupathi serves as the production designer, Sree Varaprasad handles the editing, Anu Reddy Akkati designs the costumes, and Purnachary pens the lyrics.

 

On the whole, the theatrical trailer delivers a refreshing blend of comedy, romance, and emotion, raising expectations for a wholesome family entertainer. Oh..! Sukumari is all set to hit theatres worldwide on July 17.

 

Cast: Thiru Veer, Aishwarya Rajesh, Muralidhar Goud, Vishnu Oi(Mad fame), Jhansi, Amani, Anandhkota Jayaram

 

Technical Crew:

Producer: Maheswara Reddy Mooli

Director: Bharat Dharshan

DoP: CH Kushendar

Music Director: Bharath Manchiraju

Art Director: Thirumala M Thirupathi

Editor: Sree Varaprasad

Costume Designer: Anu Reddy Akkati

Lyricist: Purnachary

Fights: Anji

Choreography: JD Master

PRO: Yuvaaj 

Marketing: Haashtag Media


https://www.youtube.com/watch?v=KIIKX4PmTqc

சவுரவ் கங்குலியின் பிறந்தநாளில் வெளியான ‘தாதா – தி சவுரவ் கங்குலி ஸ்டோரி’ ஃபர்ஸ்ட் லுக்*

 *சவுரவ் கங்குலியின் பிறந்தநாளில் வெளியான ‘தாதா – தி சவுரவ் கங்குலி ஸ்டோரி’ ஃபர்ஸ்ட் லுக்*



*2027 மே 14-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.*


‘தாதா – தி சவுரவ் கங்குலி ஸ்டோரி’, விளையாட்டை வெறும் விளையாடியவராக அல்லாமல், அதை மாற்றியமைத்த மனிதரின் அசாதாரணமான வாழ்க்கைப் பயணத்தைச் சொல்கிறது. திறமையான இளம் கிரிக்கெட் வீரராக தொடங்கி, இந்தியாவின் மிகவும் செல்வாக்கு மிக்க கேப்டன்களில் ஒருவராக உயர்ந்த சவுரவ் கங்குலியின் பயணத்தை, இப்படம் பதிவு செய்கிறது. இந்திய கிரிக்கெட்டை மறுவரையறை செய்த அவரது உறுதி, விடாமுயற்சி மற்றும் அசைக்க முடியாத நம்பிக்கையை கொண்டாடுவதோடு, ஒரு தலைமுறையையே ஊக்குவித்த அவரது பாரம்பரியத்தையும் இப்படம் வெளிப்படுத்துகிறது.


சவுரவ் கங்குலியின் பிறந்தநாளை முன்னிட்டு, ராஜ்குமார் ராவ் நடித்துள்ள ‘தாதா – தி சவுரவ் கங்குலி ஸ்டோரி’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியிடப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான ரசிகர்களுக்கு இந்த நாள் மேலும் சிறப்பானதாக மாறியுள்ளது. இதனுடன், இப்படம் 2027 மே 14-ஆம் தேதி, நீண்ட விடுமுறை வார இறுதியை முன்னிட்டு, திரையரங்குகளில் வெளியாகும் என்றும் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.


அதிகாரப்பூர்வ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில், 2002-ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான வரலாற்றுச் சிறப்புமிக்க நாட்வெஸ்ட் டிராபி வெற்றிக்குப் பிறகு, லார்ட்ஸ் மைதானத்தின் பால்கனியில் சவுரவ் கங்குலி தனது ஜெர்சியை சுழற்றி கொண்டாடிய மறக்க முடியாத தருணத்தை, ராஜ்குமார் ராவ் சினிமா மேஜிக்குடன் மீண்டும் உருவாக்கியுள்ளார். இந்திய கிரிக்கெட்டில் அச்சமற்ற புதிய யுகத்தின் அடையாளமாகக் கருதப்படும் அந்த கொண்டாட்டம், கங்குலியின் தலைமையில் உருவான தன்னம்பிக்கை, எதிர்ப்பை மீறும் மனப்பாங்கு மற்றும் நம்பிக்கையின் நிலையான சின்னமாக இன்றளவும் நினைவுகூறப்படுகிறது.


‘தாதா – தி சவுரவ் கங்குலி ஸ்டோரி’ திரைப்படத்தை விக்ரமாதித்யா மோத்வானே இயக்கியுள்ளார். லவ் ரஞ்சன் மற்றும் அங்கூர் கார்க் தயாரித்துள்ள இப்படத்தை, குல்ஷன் குமார், பூஷண் குமார், டி-சீரிஸ் மற்றும் DBL இணைந்து வழங்குகின்றனர். லவ் ஃபிலிம்ஸ் தயாரிப்பாக  ( Luv Films production ) உருவாகியுள்ள இப்படம், 2027 மே 14-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.


*First Look of ‘Dada – The Sourav Ganguly Story’ Unveiled on Sourav Ganguly's Birthday; Arrives in Cinemas on 14th May 2027!*


The first look poster of ‘Dada - The Sourav Ganguly Story’ featuring Rajkummar Rao has been unveiled today, on the occasion of Sourav Ganguly's birthday, making the day even more special for millions of fans across the world. Along with the reveal, the makers also announced the film's theatrical release on 14th May 2027 over an extended holiday weekend. 


The official first-look poster captures Rajkummar Rao in a cinematic recreation of Sourav Ganguly's iconic jersey-waving moment at Lord's balcony following India's historic NatWest Trophy triumph over England in 2002. Widely regarded as a defining image, the celebration came to symbolize a fearless new era of Indian cricket under Ganguly's leadership and remains an enduring emblem of confidence, defiance and belief.


'Dada – The Sourav Ganguly Story' chronicles the extraordinary journey of the man who didn't just play the game but changed it.  Tracing his rise from a talented young cricketer to one of India's most influential captains, the film celebrates the grit, resilience and conviction that redefined Indian cricket and inspired an entire generation. 


Dada- The Sourav Ganguly Story is directed by Vikramaditya Motwane, produced by Luv Ranjan and Ankur Garg, presented by Gulshan Kumar, Bhushan Kumar, Tseries and DBL and is a Luv Films production. The film releases worldwide in cinemas on 14th May 2027.

The Wait is Over: Makers Drop the Official Music Video of Toxic's 'Tabaahi

 *‘டாக்ஸிக்‘ திரைப்படத்தின் ‘தபாஹி’ அதிகாரப்பூர்வ மியூசிக் வீடியோ வெளியீடு – ரசிகர்களின் நீண்டநாள் எதிர்பார்ப்பு நிறைவேறியது !*



Monster Mind Creations, KVN Productions, மற்றும் Zee Music கம்பெனி இணைந்து, டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் க்ரோன்-அப்ஸ் ( ‘Toxic: A Fairy Tale for Grown-Ups’ ) திரைப்படத்தின் முதல் பாடலான ‘தபாஹி’-யின் அதிகாரப்பூர்வ மியூசிக் வீடியோவை வெளியிட்டுள்ளன. ஆடியோ வெளியாகி ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற இந்தப் பாடல், தற்போது பிரம்மாண்டமான காட்சிகளுடன் ரசிகர்களை மீண்டும் கவர வருகிறது.


டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் க்ரோன்-அப்ஸ் (‘Toxic: A Fairy Tale for Grown-Ups’ ) திரைப்படத்தின் தயாரிப்பாளர்கள், ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த ‘தபாஹி’ பாடலின் அதிகாரப்பூர்வ மியூசிக் வீடியோவை வெளியிட்டுள்ளனர். ஆடியோ வெளியானவுடன் உடனடியாக ரசிகர்களின் விருப்பப் பாடலாக மாறிய இந்தப் பாடல், திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ இசை கூட்டாளியான Zee Music கம்பெனி உடன் இணைந்து கண்கவர் காட்சிகளாக ரசிகர்களை சென்றடைந்துள்ளது. இந்திய சினிமாவின் மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படங்களில் ஒன்றான டாக்ஸிக் உலகத்தை முதன்முறையாக ரசிகர்கள் காணும் வாய்ப்பையும் இந்த மியூசிக் வீடியோ வழங்குகிறது.


ராக்கிங் ஸ்டார் யாஷ் மற்றும் கியாரா அத்வானி முதல் முறையாக இணைந்து திரையில் தோன்றும் இந்த பாடல், இருவரின் அற்புதமான கெமிஸ்ட்ரி மற்றும் உணர்வுபூர்வமான நடிப்பின் மூலம் மறக்க முடியாத காதலை கொண்டாடுகிறது. அவர்களைச் சுற்றிய உலகமே மறைந்து போகும் அளவிற்கு, காதலின் தூய்மையான, ஆழமான, முழுமையான வடிவத்தை ‘தபாஹி’ வெளிப்படுத்துகிறது. பிரம்மாண்டமான காட்சியமைப்பு, கண்கவர் ஒளிப்பதிவு, உணர்வுகளைத் தூண்டும் கதை சொல்லல், மின்னல் வேக கிட்டார் இசை மற்றும் உயர்தர ஆர்கெஸ்ட்ரா இசை அமைப்பு ஆகியவற்றுடன், டாக்ஸிக் திரைப்படத்தின் மர்மமான மற்றும் தனித்துவமான உலகிற்கான சிறப்பான அறிமுகமாக இந்த மியூசிக் வீடியோ அமைந்துள்ளது.


மியூசிக் வீடியோ வெளியீட்டிற்கு முன்னதாக, ஜூலை 7 அன்று தயாரிப்பாளர்கள் சமூக வலைதளங்களில் ரசிகர்களுக்காக சுவாரஸ்யமான உரையாடலை உருவாக்கினர். டாக்ஸிக் திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கம், “திருடப்பட்ட சில தருணங்களில் மட்டுமே வாழும் தடைசெய்யப்பட்ட காதலை என்னவென்று அழைப்பீர்கள்?” என்று பதிவிட்டு கியாரா அத்வானி-யை குறிப்பிட்டது. அதற்கு கியாரா ஒரு வார்த்தையில் “தபாஹி” என்று பதிலளித்தார். அதைத் தொடர்ந்து ஜீ மியூசிக் கம்பெனி, அவரது பதிலை மேற்கோள் காட்டி “Stay Tuned…” என்று பதிவிட்டது. இந்த சுவாரஸ்யமான சமூக வலைதள பரிமாற்றம், அதிகாரப்பூர்வ மியூசிக் வீடியோ வெளியீட்டிற்கு முன்பே ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.


இசையமைப்பாளர் விஷால் மிஸ்ரா இசையமைத்து, பாடியுள்ள ‘தபாஹி’ பாடலின் இந்தி வரிகளை ராஜ் சேகர் எழுதியுள்ளார். இந்தப் பாடல் இந்தி, கன்னடம், தெலுங்கு, தமிழ் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகியுள்ளது. இந்திய சினிமாவின் சிறந்த பாடலாசிரியர்களான யோகராஜ் பட் (கன்னடம்), ராமஜோகைய்யா சாஸ்திரி (தெலுங்கு), விக்னேஷ் சிவன் (தமிழ்), மற்றும் ரஃபீக் அகமது (மலையாளம்) ஆகியோர் தங்களது மொழிகளில் பாடல் வரிகளை எழுதியுள்ளனர். இது டாக்ஸிக் திரைப்படத்தின் உண்மையான பான்-இந்திய படைப்பாற்றலை பிரதிபலிக்கிறது. அனைத்து மொழி ரசிகர்களையும் சென்றடையும் நோக்கில், ஜீ மியூசிக் கம்பெனி திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ இசை கூட்டாளியாக நாடு முழுவதும் இசை வெளியீட்டை முன்னெடுத்து வருகிறது.


இந்த திரைப்படத்தில் யாஷ், நயன்தாரா, கியாரா அத்வானி, தாரா சுதாரியா, ருக்மிணி வசந்த், மற்றும் ஹுமா குரேஷி உள்ளிட்ட நட்சத்திர பட்டாளம் நடித்துள்ளனர்.


பாடல் குறித்து இசையமைப்பாளர் விஷால் மிஸ்ரா கூறியதாவது:


”‘தபாஹி’ என்பது வழக்கமான காதல் பாடல் அல்ல. அது சிதைவாகவும், முழுமையான சரணாகதியாகவும், அனுமதி கேட்காமல் எரியும் நெருப்பாகவும் இருக்கும் காதலின் வடிவம். ‘டாக்ஸிக்’ திரைப்படம் அதே தீவிரத்தை தாங்கும் இசையை வேண்டியது—ஒரே நேரத்தில் பிரம்மாண்டமாகவும், மிகவும் நெருக்கமானதாகவும். யாஷ் பாய் திரையில் வெளிப்படுத்தும் உறுதியை இசையிலும் ஒவ்வொரு ஸ்வரத்திலும் பதிவு செய்ய முயன்றேன். எனக்கு ‘தபாஹி’ என்பது காதலின் வடிகட்டப்படாத, கட்டுப்படுத்த முடியாத துடிப்பைத் தேடும் ஒரு இசைப் பயணம். ஆறுதல் அளிப்பதற்கு முன்பே நம்மை முழுமையாக ஆட்கொள்ளும் காதலின் உணர்வே இந்தப் பாடலின் மையம்.”


யாஷ் மற்றும் கீது மோகன்தாஸ் இணைந்து கதை எழுதியுள்ள இந்த திரைப்படத்தை கீது மோகன்தாஸ் இயக்கியுள்ளார். கன்னடம் மற்றும் ஆங்கிலத்தில் உருவாகியுள்ள இப்படம், இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு உலகளாவிய வெளியீட்டை நோக்கி உருவாக்கப்பட்டுள்ளது. KVN Productions மற்றும் Monster Mind Creations தயாரித்துள்ள டாக்ஸிக், ஆகஸ்ட் 26, 2026 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.


*The Wait is Over: Makers Drop the Official Music Video of Toxic's 'Tabaahi'*


Monster Mind Creations, KVN Productions, and Zee Music Company bring the first music video from Toxic: A Fairy Tale for Grown-Ups to audiences after the song's chart-topping audio success.


8th July, 2026 : The makers of Toxic: A Fairy Tale for Grown-Ups have finally unveiled the much-anticipated official music video for Tabaahi, the film's first song, which became an instant fan favourite following its audio release. Along with the film's official music partner, Zee Music Company, the visual spectacle now brings audiences the immersive experience they have been eagerly awaiting, offering the first glimpse into one of Indian cinema's most anticipated films.


Featuring Rocking Star Yash alongside Kiara Advani in a captivating new on-screen pairing, Tabaahi celebrates an unforgettable romance brought to life through their undeniable chemistry and emotionally resonant performances. As the world around them fades away, Tabaahi captures love in its rawest and purest form, intimate, unwavering, and all-consuming. Set against a grand cinematic canvas with breathtaking visuals, evocative storytelling, electrifying guitar arrangements, and a soaring orchestral score, the music video serves as a stirring introduction to the enigmatic and visually distinctive world of Toxic.


Building anticipation ahead of the launch, the makers treated fans to a playful social media exchange on 7th July. The official Toxic handle posted, "What do you call a forbidden love that only exists in stolen time?", tagging Kiara Advani. Kiara responded with a single word — "Tabaahi." Shortly after, Zee Music Company joined the conversation by quoting her reply with a simple, "Stay Tuned...", setting the stage for the official music video premiere and sending fans into a frenzy ahead of the release.


Composed, sung by musician Vishal Mishra and written by Raj Shekhar in Hindi, Tabaahi has been released in Hindi, Kannada, Telugu, Tamil, and Malayalam. The song has been adapted across languages by some of the finest lyricists in Indian cinema—Yogaraj Bhat (Kannada), Ramajogayya Sastry (Telugu), Vignesh Shivan (Tamil), and Rafeeq Ahammed (Malayalam)—reflecting the film's truly pan-Indian creative collaboration. The multilingual launch reinforces Toxic's vision of connecting with audiences across languages and geographies, with Zee Music Company leading the nationwide music rollout as the film's official music partner. The film stars Yash, Nayanthara, Kiara Advani, Tara Sutaria, Rukmini Vasanth, and Huma Qureshi in a powerhouse ensemble cast.


Opening up about the song, Vishal Mishra Added, “Tabaahi isn't a love song in the conventional sense, it's love as wreckage, as surrender, as fire that doesn't ask permission. Toxic demanded music that could hold that intensity: epic and intimate at once. Yash Bhai brings a rare conviction to the screen that I tried to match note for note. Tabaahi, for me, was about chasing that raw, unfiltered pulse of love, the kind that consumes before it comforts.”


Written by Yash and Geetu Mohandas, and directed by Geetu Mohandas, the film is shot in Kannada and English, with dubbed versions across Hindi, Tamil, Telugu, Malayalam, and other languages — reinforcing its global ambitions and expansive cinematic vision. Produced by KVN Productions and Monster Mind Creations, Toxic is scheduled to hit theatres on August,26 2026.



https://www.youtube.com/watch?v=0hh5XDrR-NU

*‘தி இந்தியா ஸ்டோரி’ படத்தின் மேலும் ஒரு அதிரடி போஸ்டர் !*

 *‘தி இந்தியா ஸ்டோரி’ படத்தின் மேலும் ஒரு அதிரடி போஸ்டர் !*



கோபமடைந்த கூட்டத்தை எதிர்கொள்ளும் காஜல் அகர்வால், ஷ்ரேயாஸ் தல்படே!


நச்சு பூச்சிக்கொல்லி விவசாயத்தின் பின்னணியை மையமாகக் கொண்ட ‘தி இந்தியா ஸ்டோரி’ புதிய போஸ்டர் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கிறது!


Zee Studios மற்றும், MIG Production இணைந்து தயாரித்துள்ள ‘தி இந்தியா ஸ்டோரி’ திரைப்படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. சேட்டன் DK இயக்கத்தில், சாகர் B. ஷிண்டே எழுதி தயாரித்துள்ள இப்படம், ஜூலை 24, 2026 அன்று உலகம் முழுவதும் இந்தி, தமிழ், தெலுங்கு மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகிறது.


நச்சு பூச்சிக்கொல்லி விவசாயம் மனித உடல்நலத்தில் ஏற்படுத்தும் தீவிர விளைவுகளை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இந்த சமூக அக்கறை கொண்ட நீதிமன்ற பின்னணித் திரைப்படம், உண்மை சம்பவங்களின் தாக்கத்தை வலுவான திரைக்கதையுடன் எடுத்துரைக்கிறது.


வெளியான புதிய போஸ்டரில், காஜல் அகர்வாலும் ஷ்ரேயாஸ் தல்படேவின் பதற்றமான சூழ்நிலையில் கோபமடைந்த பொதுமக்கள் கூட்டத்தால் சூழப்பட்டிருப்பது காணப்படுகிறது. காய்கறி சந்தையின் நடுவே நடைபெறும் இந்தக் காட்சியில், வியாபாரிகள் இருவரையும் நோக்கி காய்கறிகளை வீசுவதும், குற்றம் சாட்டுவதும் இடம்பெற்றுள்ளது. உண்மையை வெளிக்கொணர முயலும் நபர்கள் சந்திக்கும் எதிர்ப்பையும் சமூகத்தின் கோபத்தையும் இந்த போஸ்டர் வலுவாக பிரதிபலிக்கிறது.


போஸ்டரில் இடம்பெற்றுள்ள “Slow Poison in Progress…” என்ற வாசகம், மெதுவாக மனிதர்களின் வாழ்வை பாதிக்கும் மறைமுக அச்சுறுத்தலை சுட்டிக்காட்டி, படத்தின் மையக் கருத்தை மேலும் வலுப்படுத்துகிறது.


இயக்குநர் சேட்டன் DK கூறுகையில், “உண்மையை பேசுவதற்கான விலையை இந்த போஸ்டர் பிரதிபலிக்கிறது. ஏமாற்றத்தின் மீது கட்டமைக்கப்பட்ட ஒரு அமைப்பை கேள்வி கேட்கும்போது, முதலில் வெளிப்படுவது பயமும் கோபமும்தான். ‘தி இந்தியா ஸ்டோரி’ படத்தின் ஒவ்வொரு காட்சியும் அந்தப் போராட்டத்தை உணர்த்துவதோடு, நாம் உண்ணும் உணவு மற்றும் நம்பிக்கைகளைப் பற்றி பார்வையாளர்கள் சிந்திக்க வைக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது” என்றார்.


இந்தப்படத்தில் இணை தயாரிப்பாளர்களாக ஸ்வாதி விநாயக் சைந்தானி,அனிதா ஜாதவ்,விநாயக் சைந்தானி, கல்பேஷ் ஷா, தேவ்யானி கொராடே மற்றும் பிரேம் ஜோஷி ஆகியோர் பணியாற்றியுள்ளனர்.


தொழில்நுட்பக் குழுவில் ஒளிப்பதிவாளர் நிஷாந்த் பகவத், இசையமைப்பாளர் மங்கேஷ் தாக்டே, படத்தொகுப்பாளர் ஆஷிஷ் மாத்ரே, பாடலாசிரியர் ஷகீல் அஜாமி , ஒலி வடிவமைப்பாளர் அன்மோல் பாவே ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.


*Another Hard-Hitting Poster of The India Story Unveiled; Kajal Aggarwal and Shreyas Talpade Confront an Angry Mob*


Kajal Aggarwal and Shreyas Talpade Face Public Fury in New Poster of The India Story


The India Story Unveils Intense New Poster, Spotlighting the Fight Against Toxic Pesticide Farming


The makers of The India Story have unveiled another gripping poster that further builds anticipation for the upcoming socially relevant courtroom drama. Presented by Zee Studios in association with MIG Production & Studios, the film is directed by Chettan DK and written and produced by Sagar B. Shinde. Slated for a worldwide theatrical release on July 24, 2026, The India Story will release in Hindi, Telugu, and Tamil. Inspired by the issue of pesticide farming and its far-reaching impact on public health, the film brings a socially significant subject to the big screen through a compelling courtroom narrative. The newly released poster features Kajal Aggarwal and Shreyas Talpade in a tense and emotionally charged moment, hinting at the relentless battle their characters undertake while uncovering a disturbing truth.


Set in the middle of a bustling vegetable market, the poster captures an atmosphere of chaos and fear. Kajal Aggarwal and Shreyas Talpade are seen surrounded by an aggressive crowd, with angry vendors pointing fingers and hurling vegetables at them. The frightened expressions on the lead actors, the flying vegetables, and the hostile mob create a powerful visual that reflects the resistance faced by those who dare to expose uncomfortable realities. The tagline, "Slow Poison in Progress...", further strengthens the film's central theme, suggesting a hidden menace that silently impacts millions.


Director Chettan DK says, "This poster represents the cost of speaking the truth. When a system built on deception is challenged, the first response is often fear and outrage. Every frame of The India Story is designed to reflect that struggle and make audiences question what they consume and believe."


The project is backed by co-producers Swati Vinayak Saindane, Anita Jadhav, Vinayak Saindane, Kalpesh Shah, Devyani Khorate, and Prem Joshi. The technical team includes cinematographer Nishant Bhagwat, music composer Mangesh Dhakde, editor Ashish Mhatre, lyricist Shakeel Azami, and sound designer Anmol Bhave

துல்கர் சல்மான் – பூஜா ஹெக்டே காம்போவின் ‘ஸ்ரீ ஸ்ரீ’ அசத்தலான ஃபர்ஸ்ட் லுக்

 *துல்கர் சல்மான் – பூஜா ஹெக்டே காம்போவின் ‘ஸ்ரீ ஸ்ரீ’ அசத்தலான ஃபர்ஸ்ட் லுக் !!*



துல்கர் சல்மான் – பூஜா ஹெக்டே ஜோடியாக நடிக்கும் பான் இந்தியா திரைப்படத்திற்கு ‘ஸ்ரீ ஸ்ரீ’ என பெயரிடப்பட்டுள்ளது… ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் புத்துணர்ச்சியும் பாஸிடிவ் உணர்வுகளும் நிறைந்ததாக வெளியாகியுள்ளது!


பன்முகத் திறமை கொண்ட நடிகர் துல்கர் சல்மான் தற்போது அறிமுக இயக்குநர் ரவி நேலகுதிடி இயக்கும் புதிய பொழுதுபோக்கு திரைப்படமான #DQ41-ல் நடித்து வருகிறார். பிரபல தயாரிப்பு நிறுவனமான SLV Cinemas சார்பில் சுதாகர் செருகூரி தயாரிக்கும் இந்த திரைப்படம், அந்நிறுவனத்தின் 10-வது தயாரிப்பாக (#SLV10) உருவாகி வருகிறது. இப்படத்தின் இணை தயாரிப்பாளராக இஷான் சக்சேனா பணியாற்றுகிறார்.


இந்த மனதை வருடும் காதல் கலந்த பொழுதுபோக்கு திரைப்படத்தில் துல்கர் சல்மானுக்கு ஜோடியாக முதல் முறையாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். காதல், நகைச்சுவை மற்றும் உணர்வுபூர்வமான தருணங்களை இணைக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு புகைப்படங்கள் ஏற்கனவே வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தன. குறிப்பாக துல்கர் - பூஜா இருவரின் இயல்பான கெமிஸ்ட்ரி அனைவரையும் கவர்ந்தது.


அந்த எதிர்பார்ப்பை மேலும் அதிகரிக்கும் வகையில், படக்குழு தற்போது படத்தின் தலைப்பையும், ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரையும் வெளியிட்டுள்ளது.


படத்திற்கு ‘ஸ்ரீ ஸ்ரீ’ (Sri Sri) என்று வெகு சுவாரசியமான தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. மேலும், “Love Will Spark Again” என்ற டேக்லைன் இடம்பெற்றுள்ளது. இது காதலையும் நம்பிக்கையையும் மீண்டும் கண்டுபிடிக்கும் ஒரு அழகான காதல் கதையை சுட்டிக்காட்டுகிறது.


ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் துல்கர் சல்மானும் பூஜா ஹெக்டேயும் ஒரு சுவரின் மேல் அமர்ந்து மகிழ்ச்சியாக உரையாடும் தருணம் இடம் பெற்றுள்ளது. இளநீல நிற சட்டை, சாம்பல் நிற பேண்ட் மற்றும் கண்ணாடி அணிந்த துல்கர் சல்மான் வெட்கப் புன்னகையுடன் கீழே பார்க்கிறார். இளநீல நிற சல்வார் அணிந்த பூஜா ஹெக்டே, அவரைப் பார்த்து மனம் திறந்து சிரிக்கும் தோற்றத்தில் காணப்படுகிறார்.


இருவரின் உடைத் தேர்வைப் பார்க்கும்போது, அவர்கள் வகுப்புத் தோழர்களாக இருக்கலாம் என்ற எண்ணத்தை ஏற்படுத்துகிறது. எளிமையான பின்னணி, அமைதியான சூழல், இயல்பான உடல்மொழி மற்றும் மனதை வருடும் புன்னகை ஆகியவை, இருவருக்கும் இடையிலான நெருக்கம், நட்பு மற்றும் வார்த்தைகளால் சொல்ல முடியாத பந்த்தை அழகாக வெளிப்படுத்துகின்றன.


மொத்தத்தில் இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் புத்துணர்ச்சியையும், பாஸிடிவ் உணர்வுகளையும் வெளிப்படுத்துகிறது. துல்கர் சல்மான் – பூஜா ஹெக்டே ஜோடியை மையமாகக் கொண்டு உருவாகும் இந்த திரைப்படம், காதல், நகைச்சுவை, மனதை வருடும் உணர்வுகள் மற்றும் கண்கவர் காட்சிகளால் நிறைந்த முழுமையான காதல் பொழுதுபோக்கு படமாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.


தொழில்நுட்பக் குழுவிலும் பல திறமையான கலைஞர்கள் இணைந்துள்ளனர். அனய் ஓம் கோஸ்வாமி ஒளிப்பதிவை மேற்கொள்கிறார். ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். அவிநாஷ் கொல்லா கலை இயக்கத்தை கவனிக்கிறார்.


பான் இந்தியா திரைப்படமாக உருவாகும் ‘ஸ்ரீ ஸ்ரீ’, தெலுங்கு, தமிழ், இந்தி, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய ஐந்து மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.


நடிகர்கள்:


துல்கர் சல்மான்

பூஜா ஹெக்டே


தொழில்நுட்பக் குழு:


கதை, இயக்கம் – ரவி நேலகுதிடி

தயாரிப்பு – சுதாகர் செருகூரி

தயாரிப்பு நிறுவனம் – எஸ்எல்வி சினிமாஸ்

இணை தயாரிப்பாளர் – கோபிசந்த் இன்னமூரி

தலைமை நிர்வாக அதிகாரி – விஜய் குமார் சாகண்டி

இசை – ஜி.வி. பிரகாஷ் குமார்

ஒளிப்பதிவு – அனய் ஓம் கோஸ்வாமி

தயாரிப்பு வடிவமைப்பு – அவினாஷ் கொல்லா

மக்கள் தொடர்பு – யுவராஜ்


*Dulquer Salmaan, Pooja Hegde, Ravi Nelakuditi, Sudhakar Cherukuri, SLV Cinemas Pan India Film Titled Pleasantly Sri Sri, First Look Poster With Genuine Smiles Radiates Freshness & Positivity*


Versatile Star Dulquer Salmaan is presently immersed in the shoot of his crazy entertainer #DQ41, directed by newcomer Ravi Nelakuditi. Produced by Sudhakar Cherukuri under the prestigious SLV Cinemas banner, the project marks the production house's landmark 10th film (#SLV10) and is steadily emerging as one of its most ambitious ventures. Ishan Saksena is the co-producer. Pooja Hegde stars opposite Dulquer Salmaan for the first time in this heartwarming romantic entertainer that beautifully blends love, laughter, and heartfelt emotions. The candid working stills released earlier received a tremendous response for showcasing the pair's effortless chemistry. Building on that excitement, the makers have now unveiled the film's title, along with its delightful first-look poster.


The movie is pleasantly titled Sri Sri and carries the catchy tagline, "Love Will Spark Again," hinting at a heartwarming tale of rediscovering love and hope. The first-look poster features Dulquer Salmaan and Pooja Hegde seated casually on a compound wall, sharing a light-hearted moment. Dulquer, dressed in a pastel blue shirt, grey trousers, and spectacles, wears a shy smile as he looks down, exuding understated charm. Pooja Hegde, in a graceful light blue salwar suit, looks at him with infectious laughter, making the chemistry between the duo feel natural and effortless. Judging by their coordinated attire, they appear to be classmates. The minimalist setting creates a soothing atmosphere that reflects innocence and nostalgia. Their relaxed body language and genuine smiles hint at a relationship built on comfort, companionship, and unspoken affection.


The first look radiates freshness and positivity. With Dulquer Salmaan and Pooja Hegde's beautiful pairing at its heart, the poster promises a wholesome romantic entertainer filled with warmth, heartfelt emotions, and a visually appealing cinematic experience.


The film further boasts an accomplished technical team, with cinematography by Anay Om Goswamy, music composed by GV Prakash Kumar, and production design by Avinash Kolla, all working together to create a visually captivating and emotionally immersive cinematic experience.


Planned as a Pan-India release, Sri Sri will arrive in theatres in Telugu, Tamil, Hindi, Kannada, and Malayalam.


Cast: Dulquer Salmaan, Pooja Hegde


Technical Crew:

Writer, Director: Ravi Nelakuditi

Producer: Sudhakar Cherukuri

Banner: SLV Cinemas

Co-Producer: Ishan Saksena

CEO: Vijay Kumar Chaganti

Music: GV Prakash Kumar

DoP: Anay Om Goswamy

Production Designer: Avinash Kolla

PRO: Yuvraaj

லவ் ஓ லவ்’ (Love Oh Love) திரைப்பட விமர்சனம்

 லவ் ஓ லவ்’ (Love Oh Love) திரைப்பட விமர்சனம்


ரூ.40 ஆயிரம் சம்பளம் வாங்கினாலும் தனக்கென்று பைக் வாங்காமல், தேவைக்கு அப்பாவின் இருசக்கர வாகனத்தை பயன்படுத்துவதோடு, சம்பளம் முழுவதையும் அப்பாவிடம் கொடுத்துவிட்டு தனது செலவுக்கு கூட பணம் கேட்காத, ஒரு ஆச்சரியமான இளைஞராக வாழ்ந்து வருகிறார் நாயகன் பவிஷ். இப்படிப்பட்ட பவிஷை காதல் பெரும் கடன்காரானாக்கி, குடும்பத்தாரிடம் இருந்து பிரிப்பதோடு, அவரது வேலையையும் பரித்து விடுகிறது.


நாயகி நாக துர்காவின் ஆடம்பர செலவுகளாலும், அக்கறை இல்லாத காதல் உறவாலும் உருக்குலைந்து போகும் பவிஷ், அவரை பிரிய முடிவு செய்கிறார். ஆனால், நாக துர்கா பவிஷ் தான் தனக்கு ஏற்றவர் என்ற முடிவில், அவரை மணந்தே தீர வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார்.


நாக துர்வாவின் விருப்பத்தை நிறைவேற்ற பவிஷ் ஒரு நிபந்தனை விதிக்கிறார். அதன்படி, நான்கு வருடங்களாக ஒரு காதலனாக தான் செய்ததை, அவர் தனக்கு நான்கு மாதங்கள் செய்ய வேண்டும், அப்படி செய்துவிட்டால் அவரை திருமணம் செய்துகொள்வதாகவும், அவரால் அது முடியாமல் போனால், அவர் தன்னை விட்டு விலகிவிட வேண்டும், என்கிறார்.


அவரது நிபந்தனையை ஏற்று ஆண்களின் உலகத்துக்குள் பயணப்பட முடிவு செய்யும் நாக துர்கா, நான்கு மாதங்களை வெற்றிகரமாக கடந்து பவிஷை கரம் பிடித்தாரா ? முடியாமல் பிரிந்தாரா ? என்பதை நகைச்சுவையாகவும், நாகரீகமாகவும் சொல்வதே ‘லவ் ஓ லவ்’.


கதாநாயகனாக நடித்திருக்கும் பவிஷ், தன் முதல் படத்திலேயே நடனம் மற்றும் நடிப்பில் தன்னை நிரூபித்து விட்டார். இது அவருக்கு இரண்டாவது படம் என்பதால் நடிப்பில் முதிர்ச்சி தெரிவதோடு, சில இடங்களில் தனுஷின் சாயலும் தெரிகிறது. நடனம் மட்டும் அல்ல நடிப்பு, ஆக்‌ஷன் காட்சிகள், காதலி மீதான கோபத்தை வெளிப்படுத்தும் காட்சிகள் என அனைத்திலும் அளவாக நடித்து, பாதிக்கப்பட்ட ஆண்களின் பிரதிபலிப்பாக வலம் வருகிறார்.


கதாநாயகியாக நடித்திருக்கும் புதுமுக நடிகை நாக துரகா, பக்கத்து வீட்டுப் பெண் போல் எளிமையாக இருந்தாலும், பார்வையாளர்களை சட்டென்று கவரக்கூடிய நாயகியாக இல்லை. நடனக் காட்சிகளிலும் அவருக்கு போதுமான வாய்ப்பு இல்லாததால், அதன் மூலமாகவும் பார்வையாளர்கள் மனதில் ஒட்ட மறுக்கிறார்.


நாயகனின் தந்தையாக நடித்திருக்கும் கே.எஸ்.ரவிக்குமார், போலீஸ் இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் செல்வராகவன், மகளிர் சங்க தலைவியாக நடித்திருக்கும் வனிதா விஜயகுமார் ஆகியோரது திரை இருப்பு திரைக்கதைக்கு பலம் சேர்த்திருக்கிறது.


ஒளிப்பதிவாளர் பி.ஜி.முத்தையா படம் முழுவதையும் கலர்புல்லாக காட்சிப்படுத்தி கண்களுக்கு விருந்து படைத்திருக்கிறார். ஒரே ஒரு சண்டைக்காட்சி என்றாலும், நாயகனை புழுதியோடு உருண்டு புரள வைத்து உண்மைக்கு நெருக்கமாக காட்சிப்படுத்தி கவனம் ஈர்க்கிறார். கதாபாத்திரங்களையும், கதைக்களத்தையும் அளவான ஒளி மற்றும் வண்ணங்கள் மூலம் எதார்த்தமாக படமாக்கும் பி.ஜி.முத்தையா, இந்த படத்தின் பாடல் காட்சிகளில் பயன்படுத்திய ஒளி மற்றும் வண்ணங்கள் அவரை கமர்ஷியல் படக்கம் திருப்பியிருக்கிறது. பாக்ஸன் இசையமைப்பில் பாடல்கள் கமர்ஷியல் அம்சங்கள் நிறைந்தவையாக இருந்தாலும், மக்கள் மனதில் இடம் பிடிக்கும் வகையிலும், திரும்ப திரும்ப கேட்கும் வகையிலும் இல்லை. பின்னணி இசை அளவு.


இயக்குநருக்கு வரிசைப்படி கதை சொல்ல தெரியவில்லை என்றாலும், படத்தொகுப்பாளர் என்.பி.ஸ்ரீகாந்த் காட்சிகளை கவனமாக தொகுத்து இயக்குநர் சொல்ல வந்ததை பார்வையாளர்களிடத்தில் எளிதாக கடத்தி விடுகிறார்.


ஜெயம் ரவி – ஹன்சிகா மோத்வானி நடிப்பில் வெளியான ‘ரோமியோ ஜூலியட்’ படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றிய மகேஷ் ராஜேந்திரன், அப்படத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டிருப்பது தன் முதல் படத்தில் தெளிவாக தெரிகிறது. இருப்பினும், பாதிப்பு எதுவாக இருந்தாலும் சரி, அதை பார்வையாளர்களுக்கு பிடித்த மாதிரியும், பழைய பாதிப்பின் அடையாளம் தெரியாதபடியும் கையாண்டு ஒரு கமர்ஷியல் இயக்குநராக வெற்றி பெற்றிருக்கிறார்.


காதல் என்றால் என்ன ? என்ற பாடத்தை கலகலப்பாக சொல்ல ஆரம்பித்து இறுதியில் இதயத்தின் அடிநாதத்தை காட்சிகள் மூலம் தொட்டிருக்கும் இயக்குநர் மகேஷ் ராஜேந்திரன், தற்போதைய காலக்கட்ட இளைஞர்களை குறிவைத்து எழுதப்பட்ட கதை என்றாலும், திரைக்கதையில் குடும்ப உறவுகளையும் இணைத்து அனைத்து வயதினருக்கும் ஏற்ற நாகரீகமான காதல் படமாக இயக்கியிருகிறார்.


எப்படி காதலிக்க ஆரம்பித்தார்கள் என்பதை விட, இவர்கள் காதலின் பிரச்சனை என்ன ? என்பதற்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருப்பது புதிய பாணியாக இருந்தாலும், காதல் உணர்வு அரும்பும் அந்த இனிமையான தருணம், அதனைத் தொடர்ந்து கதை மாந்தர்களின் மனதில் பறக்கும் பட்டாம்பூச்சியை பார்வையாளர்கள் மனதிலும் பறக்கச் செய்யும் மேஜிக் இல்லாததும், யுடியுப் பிரபலமாக இருந்தாலும், பெரிய திரையில் பார்வையாளர்களை கவர்ந்திழுக்காத கதாநாயகியும், காதல் உணர்வுகளை கடத்தும் வரிகள் நிறைந்த பாடல்கள் இல்லாததும் படத்தின் குறைகள்.


ஆனால், குறைகளை மறக்கடிக்கும் விதத்தில் திரைக்கதையை நேர்மையாக கையாண்டு, மகிழ்ச்சியான மற்றும் நெகிழ்ச்சியான காட்சிகளோடு, இதமான காதல் உணர்வுகள் மற்றும் இணக்கமான குடும்ப உறவுகள் மூலம் காதலர்களை மட்டும் இன்றி அனைத்து தரப்பு மக்களின் மனங்களையும் கவர்ந்திருக்கிறார் இயக்குநர் மகேஷ் ராஜேந்திரன்.


மொத்தத்தில், ‘லவ் ஓ லவ்’ குடும்பத்தோடு பார்க்க கூடிய நாகரீகமான காதல் கலாட்டா படம். 

இதயம் முரளி’ திரைப்பட விமர்சனம்

 இதயம் முரளி’ திரைப்பட விமர்சனம்


முதல் காதல் தோல்வியில் முடிந்தால், அந்த வலிக்கு மருந்து மற்றொரு காதல், என்று வரிசைக்கட்டி காதலிக்கும் அதர்வா, எதிலும் வெற்றி பெறாததால், தன் மாமா பார்த்த பெண்ணை மணக்க முடிவு செய்கிறார். அதர்வாவின் காதல் தோல்விகளின் சுவாரஸ்யம் ஒரு பக்கம் இருக்க, காதல் கைகூடாமல் போனால் என்ன, மனைவியை காதலிக்கலாம் என்ற முடிவில் பயணிக்கும் அவர், அதிலாவது வெற்றி பெற்றாரா ? என்பதை கலகலப்பாகவும், கலர்புல்லாகவும் சொல்ல முயற்சித்திருக்கிறார்கள்.


சொல்லாமல் போன ஒருதலை காதல் தோல்வியை வலியோடு சொன்ன படம் முரளியின் ‘இதயம்’. அதர்வா முரளியின் பல ஒருதலை காதல் தோல்வியை கலகலப்பாக சொல்வது தான் ‘இதயம் முரளி’.


அதர்வா முரளி இதுவரை நடித்த படங்களிலேயே இந்த படம் தான் மிகப்பெரிய பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டதாக இருக்கும். பாணி, உடை என அனைத்தும் அவரை புதிதாக காட்டியிருக்கிறது. நடிப்பை பொறுத்தவரை எந்தவித மாற்றமும் தெரியவில்லை என்றாலும், காதல் காட்சிகளில் கவனம் ஈர்க்கும் விதத்தில் நடித்திருக்கிறார்.


நாயகிகளாக நடித்திருக்கும் ப்ரீத்தி முகுந்தன் மற்றும் கயாடு லோஹர் இருவரும் நடிக்கவே தேவையில்லை, பார்ப்பது, சிரிப்பது, கண் சிமிட்டுவது என்று தங்கள் அழகு மூலமாகவே காதல் காட்சிகளின் அழகியலை அதிகரிக்க செய்திருக்கிறார்கள். அதர்வாவின் மாமா வேடத்தில் நடித்திருக்கும் நட்டி நட்ராஜை காக்கி சட்டை இல்லாமல் பார்ப்பதே பெரும் ஆறுதலாக இருக்க, நடிகர் ரஜினிகாந்தின் பாதிப்பு இல்லாத நடிப்பில் பார்ப்பது கூடுதல் ஆனந்தம் தருகிறது.


தமன்.எஸ், நிஹாரிகா, ரக்‌ஷன், டிராவிட், ஏஞ்சலினா, அஞ்சு குரியன், சுதாகர், யாஷாஸ்ரீ, ஜோனிதா ஆகியோர் காமெடி நடிகர்களாகவும், குணச்சித்திர நடிகர்களாகவும் திரையை நிரப்பியிருக்கிறார்கள் ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா படத்தின் மிகப்பெரிய பலம். திரைக்கதை நிகழ்த்தாத மேஜிக்கை மனோஜ் பரமஹம்சாவின் ஒளிப்பதிவில் உருவான காட்சிகள் நிகழ்த்தியிருக்கிறது. கதாநாயகன் மற்றும் கதாநாயகிகளை மட்டும் இன்றி, படத்தில் இடம் பெறும் சிறு சிறு நடிகர்களை கூட திரையில் மிளிர செய்திருப்பவர், படத்தின் ஒவ்வொரு காட்சிகளையும் ஓவியம் போல் ரசிக்க வைத்திருக்கிறார்.


இசையமைப்பாளர் தமன்.எஸ் இசையில் பாடல்கள் அனைத்தும் தற்போதைய டிரெண்டுக்கு ஏற்றபடி இருந்தாலும், மனதில் நிற்கும்படி இல்லை. பின்னணி இசை எந்திர இசைக்கருவிகளின் ஆதிக்கம் நிறைந்தவையாக பயணப்படுவதால் அதுவும் பலவீனமே. பிரதீப் ஈ.ராகவின் படத்தொகுப்பு காட்சிகளில் இருக்கும் பிரமாண்டத்தை சிதைக்காமல் பார்வையாளர்களிடம் கடத்தியிருக்கிறது.


ரமணகிரிவாசனின் வசனம் மற்றும் ஆகாஷ் பாஸ்கரன், டிராவிட் செல்வம் ஆகியோரது கூடுதல் வசனங்கள் காதலுக்கும் கைகொடுக்கவில்லை, காமெடி காட்சிகளிலும் பெரிய அளவில் சிரிக்க வைக்கவில்லை.


ஹீரோவின் பல காதல் தோல்வியும், அதன் பின்னணி சுவாரஸ்யங்களும், என்ற பாணியில் பல படங்களை பார்த்திருந்தாலும், தனது பாணியில் வித்தியாசமாக சொல்ல முயற்சித்திருக்கும் இயக்குநர் ஆகாஷ் பாஸ்கரன், அதை தன் எழுத்து மூலம் நேர்த்தியாகவும், சுவாரஸ்யமாகவும் சொல்ல தடுமாறியிருந்தாலும், காட்சி மொழியில் பிரமாண்டமாக சொல்வதில் பெரும் வெற்றி பெற்றிருக்கிறார்.


மொத்தத்தில், ‘இதயம் முரளி’ கலர்புல்லான காதல்.

’ஐ , நோபடி’ (I,Nobody) திரைப்பட விமர்சனம்

 ’ஐ , நோபடி’ (I,Nobody) திரைப்பட விமர்சனம்


  மூன்று பேர் வங்கி ஒன்றில் கொள்ளையடிக்கிறார்கள். அப்போது அந்த வங்கியில் இருக்கும் பிரித்விராஜ் சுகுமாரனின் முகத்தை மூடி பிணைக் கைதியாக தங்களுடன் அழைத்துச் செல்கிறார்கள். ஒரு இடத்தில் அவரை இறக்கி விடும்போது, மூவரில் ஒருவரது ஆதாரம் பிரித்விராஜ் கையில் சிக்குவதோடு, விபத்தில் சிக்கி மூன்று பேரும் இறக்கிறார்கள்.


பிரித்விராஜிக்கு கிடைத்த ஆதாரத்தின் அடிப்படையில் திருடர்கள் யார் ? என்பதை கண்டுபிடிக்கும் போலீஸ், அவர்கள் இறந்துவிட்டதால், அவர்கள் கொள்ளையடித்த பணத்தை கைப்பற்ற முடியாமல் தவிக்கிறது.


இந்த நிலையில், அந்த வங்கியில் தனக்கும், தனது குடும்ப நபர்களுக்கோ கணக்கு உள்ளிட்ட எந்தவித தொடர்பும் இல்லாத பிரித்விராஜ் அங்கு சென்றதோடு, வங்கி ஊழியர்களிடம் எந்தவித உதவியும் கேட்காமல் நெடுநேரமாக அங்கு இருந்தது ஏன் ? என்ற கேள்வி எழுகிறது. அந்த கேள்வியால் பிரித்விராஜுக்கும் அந்த கொள்ளையில் சம்மந்தம் இருக்கலாம் என்று போலீஸ் சந்தேகிக்கிறது. அதே சமயம், ஊடகங்கள் அந்த சந்தேகத்திற்கு திரைக்கதை அமைத்து வெளியிடும் செய்திகளால், பிரித்விராஜுக்கு மட்டும் இன்றி அவரது குடும்பத்தாருக்கும் பல சிக்கல்கள் ஏற்படுகிறது.


சிக்கல்களில் இருந்து மீள்வதற்கு போராடும் பிரித்விராஜின் செயல்கள் புதிய சிக்கல்களை உருவாக்கி, தப்பிக்க முடியாத அளவுக்கு பெரும் சிலந்திவலையில் அவரை சிக்க வைக்க, அதில் இருந்து அவரும், அவரது குடும்பத்தாரும் எப்படி மீண்டார்கள் ?, சம்மந்தமே இல்லாத அந்த வங்கிக்கு பிரித்விராஜ் சென்றது ஏன் ?, கொள்ளையடிக்கப்பட்ட பணம் எங்கே போனது ?, அதை கண்டுபிடிக்க போலீஸ் ஒருபக்கம் முயற்சித்தாலும், மேலும் சிலரும் முயற்சிக்க, யாரிடம் பணம் கிடைத்தது ?, ஆகிய கேள்விகளுக்கான பதில்களை படத்தின் முதல் காட்சியில் இருந்து இறுதி காட்சி வரை, பதட்டத்தின் உச்சத்தில் பயணிக்கும் வகையில் சொல்வதே ‘ஐ , நோபடி’ (I,Nobody).


வங்கி கொள்ளை சம்பவம் தான் கதையின் மையக்கரு. ஆனால், கொள்ளையடித்தவர்களை தவிர்த்துவிட்டு, அதற்கு சம்மந்தமே இல்லாத ஒரு கதாபாத்திரத்தை வைத்துக் கொண்டு, காட்சிக்கு காட்சி திருப்பம், நொடிக்கு நொடி திரில்லர் என்று எழுத்தாளர், இயக்குநர், ஒளிப்பதிவாளர், இசையமைப்பாளர், நட்சத்திரங்கள் என ஒட்டுமொத்த ’ஐ , நோபடி’ படக்குழுவே மிகப்பெரிய திரை மாயாஜாலத்தை நிகழ்த்தி பார்வையாளர்களின் கவனம் முழுவதையும் ஈர்த்து விடுகிறார்கள்.


கதையின் நாயகனாக நடித்திருக்கும் பிரித்விராஜ் சுகுமாரன், ஆரம்பக் காட்சியில் துப்பாக்கியுடன் வங்கிக்குள் நுழையும் போதும் சரி, கொள்ளையர்களின் பிணைக் கைதியாக வீக்கமடைந்த கண்களோடு அறிமுகமாவதும் சரி, புரியாத புதிராக பல விசயங்களை தனது மெளனத்தின் மூலமாகவே யோசிக்க வைத்திருக்கிறார். தன் இளைய மகளிடம் மட்டுமே பேசிக்கொண்டு தனது வாழ்க்கை சம்பவங்களை கதையாக விவரிப்பதும், தனக்கு எதிரான சிக்கல்களில் இருந்து விடுபட சாமானியனாக போராடுவதும், என்று நடிப்பில் மிரட்டியிருக்கிறார். அதே சமயம், அதீதமான ஆக்‌ஷன் காட்சிகள், மசாலத்தனத்தோடு இருந்தாலும், அதில் நம்பகத்தன்மையோடு நடித்து கவனம் ஈர்க்கவும் செய்திருக்கிறார்.


பிரித்விராஜின் மனைவியாக நடித்திருக்கும் பார்வதி திருவோத்து, முதுமை எட்டிப்பார்க்கும் முகத்தோடு வலம் வந்தாலும், கதாபாத்திரத்திற்கு பொருத்தமானவராக, இயல்பான நடிப்பு மற்றும் எக்ஸ்பிரஷன்கள் மூலம் சிறந்த நடிகையாக மக்கள் மனதில் இடம் பிடித்து விடுகிறார்.


காவலர் கதாபாத்திரத்தில் கொள்ளை பணத்தை தேடும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஹக்கிம் ஷாஜகானின் அமைதியான முகமும், தேடல் மிக்க நடிப்பும் கதாபாத்திரத்திற்கு சிறப்பு சேர்த்திருக்கிறது.


ஜேக்கப் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அசோகன், முதல்வர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் விஜயராகவன், டி.எஸ்.பியாக நடித்திருக்கும் சங்கர் ராமகிருஷ்ணன், வங்கி கொள்ளை வழக்கை விசாரிக்கும் குற்றப்பிரிவு அதிகாரியாக நடித்திருக்கும் மதுபால், பிரித்விராஜின் மூத்த மகளாக நடித்திருக்கும் ஜியா மற்றும் இளைய மகளாக நடித்திருக்கும் சிறுமி அனைவரும் திரைக்கதையின் பதட்டத்தை அதிகரிக்கும் வகையிலும், காட்சிகளின் திருப்பங்களுக்கு ஏற்றபடியுமான நடிப்பை வழங்கியிருப்பதோடு, தங்களது சிறு சிறு உடல் மொழி மூலம் பார்வையாளர்களின் கவனத்தை தங்கள் பக்கம் ஈர்த்து விடுகிறார்கள். ஒளிப்பதிவாளர் தினேஷ் புருஷோத்தமனின் கேமரா, சாலையில் நிகழும் வாகன விபத்தை பிரமாண்டமாக காட்சிப்படுத்துவது முதல், பேருந்தில் நடக்கும் சண்டைக்காட்சி, மின்தூக்கியில் நடக்கும் சண்டைக்காட்சி, ஒரு அறைக்குள் நடக்கும் சண்டைக்காட்சி என அனைத்துவிதமான சண்டைக்காட்சிகளையும் பிரமிக்கும்படி படமாக்கியிருக்கிறது.


ஒளிப்பதிவாளரின் கேமரா மேஜிக்கை மிஞ்சும் அளவுக்கு படத்தொகுப்பாளர் ரமீஸ் எம்.பி-யின் பணி அமைந்திருக்கிறது. கதாபாத்திரங்களின் மன ஓட்டங்களை பார்வையாளர்களிடத்தில் கடத்தும் வகையில், வெவ்வேறு கோணங்களில் எடுக்கப்பட்ட காட்சிகளை ஒரே கண்ணோட்டத்தில் தொகுத்து, படத்தின் நீளத்தால் சோர்வு ஏற்படாத வகையில் காட்சிகளை வேகமாக நகர்த்திச் சென்றாலும், காட்சிகளின் திருப்பங்கள் மூலம் பார்வையாளர்களின் படபடப்பை அதிக்கரிக்கச் செய்கிறார்.


இசையமைப்பாளர் ஜேக்ஸ் பிஜாயின் பின்னணி இசை காட்சிகளின் வேகத்திற்கு ஈடுகொடுத்து பயணித்திருப்பதோடு, அமைதியான சூழல்களின் பின்னணியில் இருக்கும் சுவாரஸ்யத்தை குலைக்காமல் பயணித்து படத்திற்கு பெரும் பலம் சேர்த்திருக்கிறது.


யானிக் பென், கலை கிங்சன் மற்றும் அமித் ஜாலி பாஸ்டின் ஆகியோரது சண்டைக்காட்சிகள் மிரட்டல். இரண்டாம் பாதியின் பெரும்பாலான காட்சிகளை இவர்களது சண்டைக்காட்சிகள் ஆக்கிரமித்தாலும், ஒவ்வொன்றையும் ஒவ்வொரு ரகத்தில் படமாக்கி பாராட்டு பெறுகிறார்கள்.


எழுத்தாளர் சமீர் அப்துல், வங்கி கொள்ளை என்ற மிகப்பெரிய குற்ற சம்பவத்தை வைத்துக்கொண்டு, அதற்கு சம்மந்தமே இல்லாத ஒரு சாமனியனின் வாழ்க்கை போராட்டத்தையும், அவரது குடும்ப சிக்கல்களையும், காட்சிக்கு காட்சி பரபரப்போடும், நொடிக்கு நொடி பதட்டத்தோடும் பயணிக்க வைத்த விதம் பிரமிக்க வைக்கிறது. இப்படி ஒரு சிக்கலில் இருந்து நாயகன் எப்படி மீண்டு வரப்போகிறார், என்ற பதட்டம் குறைவதற்குள்ளாகவே, அவரை அடுத்த சிக்கலில் சிக்க வைத்து, திரைக்கதையில் இருக்கும் பதட்டத்தை தொடர்ந்து அதிகரித்திருக்கும் எழுத்தாளர் சமீர் அப்துல், இறுதிவரை அந்த பதட்டம் குறையாமல் படத்தை நகர்த்தி செல்கிறார்.


குறிப்பிட்ட காட்சியில் பார்வையாளர்களை சீட் நுணியில் உட்கார வைக்கும் இயக்குநர்கள் மத்தியில், ஒரு முழு படத்தையே சீட் நுணியில் உட்கார்ந்து பார்க்க வைத்திருப்பதோடு, பல இடங்களில் நகம் கடிக்கும் பழக்கம் இல்லாதவர்களை கூட நகம் கடிக்க வைத்திருக்கிறார் இயக்குநர் நிசாம் பஷீர்.


இரண்டாம் பாதியில் வரும் அதிகப்படியான சண்டைக்காட்சிகள் சில இடங்களில் பார்வையாளர்களை சோர்வடைய செய்வது சற்று குறையாக இருந்தாலும், அதை வித்தியாசமான முறையில் படமாக்கியது மற்றும் அதன் வேகம், அந்த குறையை மறக்கடிக்க செய்து விடுகிறது. இருந்தாலும், சண்டைக்காட்சிகளையும், அதன் நீளத்தையும் சற்று குறைத்திருந்தால் எழுத்தாளரின் திறன் இன்னும் மேலோங்கி நின்றிருக்கும்.


வித்தியாசம் என்ற பெயரில் பார்வையாளர்களை குழப்பமடைய செய்யும் ‘இன்செப்ஷன்’ (Inception) போன்ற ஹாலிவுட் படங்களை கொண்டாடும் மக்கள், நம்ம உள்நாட்டில் உருவாகியிருக்கும் எழுத்தாளர் சமீர் அப்துலின் புத்திசாலித்தனமான எழுத்து மற்றும் இயக்குநர் நிசாம் பஷீரின் நுணுக்கமான யோசனைகள் கொண்ட இத்தகைய படத்தை மிகப்பெரிய அளவில் கொண்டாடுவார்கள் என்பது உறுதி.


மொத்தத்தில், ‘ஐ , நோபடி’ (I,Nobody) மிரள வைக்கும் கிரைம் திரில்லர்.

விஷ்ணு விஷால் – சூரி நட்பை கொண்டாடும் வைரல் வீடியோ… மதுரையில் ‘அம்மன்’ உணவகத்தில் படக்குழுவுக்கு சூரி சர்ப்ரைஸ்

 *விஷ்ணு விஷால் – சூரி நட்பை கொண்டாடும் வைரல் வீடியோ… மதுரையில் ‘அம்மன்’ உணவகத்தில் படக்குழுவுக்கு சூரி சர்ப்ரைஸ்!* 



*‘ஊரே படத்தைக் கொண்டாடுகிறது’… ‘கட்டா குஸ்தி 2’ வெற்றிக்கு வீடியோ காலில் வாழ்த்து தெரிவித்த சூரி; வைரலாகும் விஷ்ணு விஷால் நட்பு தருணம்*


மதுரையில் சூரியின் ‘அம்மன்’ உணவகத்தில் விஷ்ணு விஷால் – செல்லா அய்யாவு… வீடியோ காலில் வாழ்த்து தெரிவித்த சூரி!


வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் மற்றும் விஷ்ணு விஷால் ஸ்டூடியோஸ் தயாரிப்பில், விஷ்ணு விஷால் – ஐஸ்வர்யா லட்சுமி நடிப்பில், இயக்குநர் செல்லா அய்யாவு இயக்கத்தில் உருவாகியுள்ள “கட்டா குஸ்தி 2” திரைப்படம், ஜூலை 3 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே அமோக வரவேற்பைப் பெற்று வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.


படத்தின் வெற்றியை ரசிகர்களுடன் கொண்டாடும் வகையில், நடிகர் விஷ்ணு விஷாலும் இயக்குநர் செல்லா அய்யாவும் பல்வேறு நகரங்களுக்கு நேரில் சென்று ரசிகர்களை சந்தித்து நன்றி தெரிவித்து வருகின்றனர்.


அந்த வகையில் மதுரைக்கு சென்றிருந்த படக்குழுவினர், நடிகர் சூரிக்கு சொந்தமான “அம்மன்” உணவகத்தில் மதிய உணவருந்தினர். அப்போது சூரி வீடியோ கால் மூலம் விஷ்ணு விஷாலுடனும் இயக்குநர் செல்லா அய்யாவுடனும் உற்சாகமாக உரையாடி மகிழ்ந்தார்.


உரையாடலின்போது “படத்தின் வெற்றிக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள். ஊரே இந்தப் படத்தை கொண்டாடுகிறது. படக்குழுவில் உள்ள அனைவருக்கும் வாழ்த்துக்கள்” என்று சூரி தனது மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொண்டார். நீண்ட நாள் நண்பர்களான விஷ்ணு விஷாலும் சூரியும் பகிர்ந்த அந்த அன்பான தருணம் அங்கிருந்தவர்களையும் ரசிகர்களையும் நெகிழச் செய்தது.


விஷ்ணு விஷால் – சூரி இருவரின் நட்பை வெளிப்படுத்தும் இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி, ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.


“கட்டா குஸ்தி 2” திரைப்படத்தில் முதல் பாகத்தில் ரசிகர்களின் மனதை கவர்ந்த ஜோடியான விஷ்ணு விஷாலும் ஐஸ்வர்யா லட்சுமியும் மீண்டும் இணைந்துள்ளனர். இவர்களுடன் கருணாஸ், காளி வெங்கட், முனீஷ்காந்த், கஜராஜ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் குழந்தை நட்சத்திரம் ஜாராவும் முக்கியமான பாத்திரத்தில் இடம்பெற்றுள்ளார்.


வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனத்துடன் இணைந்து, முதல் பாகத்தை தயாரித்திருந்த விஷ்ணு விஷால் ஸ்டூடியோஸ், இந்த இரண்டாம் பாகத்தையும் பிரம்மாண்டமாக தயாரித்துள்ளது. சுப்ரா, ஆர்யன் ரமேஷ் மற்றும் இஷான் சக்சேனா ஆகியோர் இணை தயாரிப்பாளர்களாக பணியாற்றியுள்ளனர்.

MythriTamil04 '#DV4' படத்தின் தொடக்க விழா*

 *மைத்ரி மூவி மேக்கர்ஸ் (Mythri Movie Makers) - இயக்குநர் கரண் அரவிந்த் குமார் - துருவ் விக்ரம் கூட்டணியில் பிரம்மாண்டமாக உருவாகும்‌ '#MythriTamil04 '#DV4' படத்தின் தொடக்க விழா*



துருவ் விக்ரம் நடிக்கும் '#DV 4' பட தொடக்க விழா


துருவ் விக்ரம் நாயகனாக நடிக்கும் நான்காவது படமாகவும் இது அமைய உள்ளது.


இந்தியா முழுவதும் திரைப்படங்களைத் தயாரிக்கும் முன்னணி நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் தெலுங்கு திரையுலகத்துடன் மட்டும் நின்று விடாமல் பிற மொழிகளிலும் திரைப்படங்களை தயாரித்து வருகிறது. அந்த வகையில் தங்களது நான்காவது தமிழ் திரைப்படத்தை இன்று பூஜையுடன் ஆரம்பித்துள்ளனர் .



மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்தின் சென்னை அலுவலகத்தில் #MythriTamil04 #DV4 படத்தின் பாரம்பரிய படப்பிடிப்பு மற்றும் தொடக்க விழா சிறப்பாக நடைபெற்றது. இதில் இயக்குநர்கள் சசி- 'ஹாய் நானா' சௌர்யுவ்- ஆதிக் ரவிச்சந்திரன்- ஆண்டனி பாக்யராஜ் - ராஜா - ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டு, படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தனர். மேலும் இப்படத்தின் பாரம்பரியமான முகூர்த்த தருண படப்பிடிப்பை இயக்குநர் கீர்த்தீஸ்வரன் கிளாப் அடித்து தொடங்கி வைத்தார்.


அறிமுக இயக்குநர் கரண் அரவிந்த் குமார் இயக்கத்தில் உருவாகும் #DV 4 படத்தில் துருவ் விக்ரம் கதையின் நாயகனாக நடிக்கிறார். இவருடன் பிருத்வி பாண்டியராஜன், சாய் தீனா ஆகியோர் நடிக்கிறார்கள்.ஷபி மற்றும் கரண் அரவிந்த் குமார் கதை எழுதி இருக்கும் இந்த திரைப்படத்திற்கு விக்கி ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பு பணிகளை ஜெயசூர்யா மேற்கொள்கிறார். தேசிய விருதை வென்ற விக்ரம் மோர் இப்படத்தின் ஆக்சன் காட்சிகளை வடிவமைக்கிறார். கமர்ஷியல் என்டர்டடெய்னராக தயாராகும் இந்த திரைப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் நவீன் யெர்னேனி & ரவிசங்கர் யலமஞ்சிலி ஆகியோர் இணைந்து பிரம்மாண்டமான பொருட் செலவில் தயாரிக்கிறார்கள்.


'பைசன்' படத்தின் பிளாக் பஸ்டர் வெற்றிக்குப் பிறகு நடிகர் துருவ் விக்ரம் நடிக்கும் இப்படத்தில், அவர் முற்றிலும் மாஸ் ( Mass) பாணியிலான தோற்றத்தில் நடிக்கவுள்ளார். நடிப்பிற்கு முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரங்களில் புதிய முயற்சிகளை மேற்கொள்வதில் பெயர் பெற்ற இளம் நடிகரான துருவ் விக்ரம் தற்போது பரந்த அளவிலான ரசிகர்களைக் கவரும் வகையில் தனித்துவமான பொழுதுபோக்கு திரைப்படத்தில் நடிக்க தயாராகி வருகிறார்.


அஜித் குமார் நடிப்பில் வெளியான 'குட் பேட் அக்லி ', பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் வெளியான 'டியூட் 'ஆகிய படங்களின் பிரம்மாண்டமான வெற்றிக்குப் பிறகு மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் புதிய திரைப்படத்தில் துருவ் விக்ரம் இணைந்திருப்பது படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பை அதிகரித்திருக்கிறது.


*Mythri Movie Makers Announced Their 4th Tamil Film, Featuring Dhruv Vikram, Directed by Karan A Kumar; The Project #MythriTamil04 #DV4 Begins With Traditional Pooja Ceremony*


Leading Pan India Production House Mythri Movie Makers is not restricting themselves to Telugu industry, and are making films in other languages as well. Meanwhile, they have announced their fourth Tamil venture, which marks 4th film as a lead actor for Dhruv Vikram. Karan Aravind Kumar will direct the movie billed to be an out-and-out commercial entertainer.


The project #MythriTamil04 #DV4 has officially been kickstarted, with a grand pooja ceremony held at Mythri office - MRC Nagar, Chennai. The launch event witnessed the presence of the film's cast, crew, and several special guests. Dhruv Vikram looked stylish in a black polo T-shirt paired with cream trousers as he joined director Karan Aravind Kumar and the team for the auspicious occasion.


Director Keerthiswaran sounded the clapboard for the muhurtham shot. Directors Adhik Ravichandran, Ravikumar, Keerthiswaran, Antony Bhagyaraj, Raja, Sasi and Hi Nanna fame Shouryuv graced the launching ceremony.


Produced by Naveen Yerneni and Y Ravi Shankar, DV4 promises to showcase Dhruv Vikram in a completely mass-oriented avatar. Known for experimenting with intense and performance-driven roles, the young actor now appears ready to embrace a unique entertainer aimed at appealing to a wider audience.


Karan Aravind Kumar has also co-written the screenplay with Saby. The film boasts a talented technical crew. Cinematography will be handled by Viki, while Jayasuriya joins the project as editor. Costume designer Praveen Raja, production designer GM Sekhar, and action choreographer Vikram Mor complete the impressive lineup behind the camera.


Other details are awaited.


Cast: Dhruv Vikram


Technical Crew:

Producers: Naveen Yerineni & Ravi Shankar Yalamanchili

Banner: Mythri Movie Makers

Director: Karan Arvind Kumar

PRO: Yuvraaj