-

Loading latest news...

மை டியர் டாலி படத்தின் வருமானத்தின் ஒரு பகுதியை புற்றுநோய் குழந்தைகளின் சிகிச்சைக்கு வழங்குவோம் - தயாரிப்பாளர் எம்.ஜே‌.சிவராமகிருஷ்ணா அறிவிப்பு

 *மை டியர் டாலி படத்தின் வருமானத்தின் ஒரு பகுதியை புற்றுநோய் குழந்தைகளின் சிகிச்சைக்கு வழங்குவோம் - தயாரிப்பாளர் எம்.ஜே‌.சிவராமகிருஷ்ணா அறிவிப்பு* 




வி.ஜே.பப்பு மற்றும் அனுபமா இணைந்து நடித்துள்ள திரைப்படம் "மை டியர் டாலி". அரவிந்த் ராஜ் எழுதி, இயக்கி இருக்கும் இந்தத் திரைப்படத்தை சிம்ம மூர்த்தி சினிமாஸ் சார்பில் ஜெயராமசந்திரன் மற்றும் சிவராமகிருஷ்ணா தயாரித்துள்ளனர். இந்தப் படத்தில் கே.பி.ஒய். ராஜவேலு, சுதா, தாரா, கீர்த்தனா, ஆஷா, ராஜாமணி, பேபி தீக்ஷிதா, டொமினிக் மற்றும் பலர் நடித்துள்ளனர்.


காதல் கதையை மையமாக வைத்து உருவாகி இருக்கும் மை டியர் டாலி திரைப்படம் உலகளவில் இன்று வெளியானது. இந்தப் படத்தில் இரத்த புற்றுநோய் பாதிப்பு குறித்த காட்சிகள் இடம்பெற்றுள்ளது. இந்த நிலையில், இந்தப் படத்தை தயாரித்துள்ள தயாரிப்பாளர் சிவராமகிருஷ்ணா படத்தின் வெளியீட்டை ஒட்டி புது அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.


அதன்படி மை டியர் டாலி திரைப்படத்தின் மொத்த வசூலில் ஒரு பகுதி இரத்த புற்றுநோய் பாதித்து சிகிச்சை பெறும் குழந்தைகளுக்கு வழங்குவதாக சிவராமகிருஷ்ணா தெரிவித்துள்ளார். இவரது இந்த அறிவிப்புக்கு திரைத்துறை கடந்து வரவேற்பும், பாராட்டுக்களையும் பெற்று வருகிறது. திரையில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதோடு, படத்தின் வருவாயில் ஒருபங்கை புற்றுநோயை எதிர்த்து போராடும் குழந்தைகளுடன் பகிர்ந்து கொள்வதாக தயாரிப்பாளர் சிவராமகிருஷ்ணா அறிவித்து இருப்பது மனிதம் மீதுள்ள நம்பிக்கையை பிரதிபலிப்பதோடு, மேலும் பலரை இப்படி செய்யவும் ஊக்குவிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.


மை டியர் டாலி திரைப்படத்தின் ஒளிப்பதிவு பணிகளை பாலாஜி கே சேகர் மேற்கொள்ள, படத்தொகுப்பு பணிகளை சித்தார்த் மேற்கொண்டுள்ளார். எம். ஃபாஸில் இசையமைத்துள்ள இந்தப் படத்திற்கு நிர்வாக தயாரிப்பு பணிகளை ஆர்.திருமலை மேற்கொண்டுள்ளார்.

பயம் உன்னை விடாது” திரைப்படக் குழு – திருமதி பிரேமலதா விஜயகாந்த் அவர்களை சந்தித்து மரியாதை

 கேப்டன் விஜயகாந்த் அவர்களின் ஆசீர்வாதத்துடன் “பயம் உன்னை விடாது” திரைப்படக் குழு – திருமதி பிரேமலதா விஜயகாந்த் அவர்களை சந்தித்து மரியாதை

சென்னை : 


கேப்டன் விஜயகாந்த் அவர்களின் ஆசீர்வாதமும் வழிகாட்டுதலும் துணையாக, உருவாகி வரும் *“பயம் உன்னை விடாது”* திரைப்படக் குழுவினர் சமீபத்தில் திருமதி பிரேமலதா விஜயகாந்த் அவர்களை நேரில் சந்தித்து மரியாதை செலுத்தினர்.

இந்த சந்திப்பின் போது, திரைப்பட இயக்குநர் கி.மு.இளஞ்செழியன், நடிகர் கதிரவன் மற்றும் மக்கள் தொடர்பாளர் ஆண்டனி ஆகியோர் இணைந்து, திருமதி பிரேமலதா விஜயகாந்த் அவர்களுக்கு சால்வை அணிவித்து மரியாதை செய்தனர்.

நிகழ்வின் போது, “பயம் உன்னை விடாது” திரைப்படத்தின் கதை, அதன் சமூகக் கருத்து மற்றும் தயாரிப்பு சார்ந்த அம்சங்கள் குறித்து விளக்கப்பட்டது. திரைப்படக் குழுவின் முயற்சிகளை மனதார பாராட்டிய திருமதி பிரேமலதா விஜயகாந்த், கேப்டன் விஜயகாந்த் அவர்களின் நினைவுகளுடனும் ஆசீர்வாதத்துடனும் இந்தப் படம் வெற்றி பெற வேண்டும் என தனது வாழ்த்துகளை தெரிவித்தார்.

தமிழ் திரையுலகத்திற்கும் சமூகத்திற்கும் அளப்பரிய பங்களிப்பு வழங்கிய கேப்டன் விஜயகாந்த் அவர்களின் ஆசீர்வாதம் இந்தத் திரைப்படத்திற்கு கிடைத்திருப்பது, “பயம் உன்னை விடாது” படக்குழுவினருக்கு மிகப் பெரிய ஊக்கமாக அமைந்துள்ளது.

சமூகத்தில் நிலவும் பயம், மனஅழுத்தம் மற்றும் மனித உணர்வுகளை மையமாகக் கொண்டு உருவாகும் இந்த திரைப்படம், ரசிகர்களிடையே தற்போது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. விரைவில் இப்படம் தொடர்பான மேலதிக அறிவிப்புகள் வெளியிடப்படும் என படக்குழு தெரிவித்துள்ளது.


#PremalathaVijayakanth #DMDK #CaptainVijayakanth #ActorKathiravan #BayamUnnaiVidathu #AiswaryaKS


@kathirrrr2 @actor_kathiravan @virudhai_talkies @radha.thiraikkonam @director.elanchezhiyan @Ki.Mu.elanchezhiyaniyakkunar @thiraikkonam @ProAntoine007 @rrajeshananda

மை லார்ட்” பட நன்றி அறிவிப்பு விழா !*

 *“மை லார்ட்” பட நன்றி அறிவிப்பு விழா !*



ஒலிம்பியா மூவிஸ் நிறுவனம் சார்பில் ஜெயந்தி அம்பேத்குமார் தயாரிப்பில், ராஜுமுருகன் இயக்கத்தில், நட்சத்திர நடிகரான சசிகுமார் கதையின் நாயகனாக அழுத்தமான வேடத்தில் நடித்திருக்கும் ' மை லார்ட்' ( My Lord) திரைப்படம் கடந்த பிப்ரவரி மாதம் 13 ஆம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது


சமூக அக்கறை மிக்க ஒரு படைப்பாகவும், ரசிகர்களை ரசிக்க வைத்த படைப்பாகவும் பார்வையாளர்களிடமும், விமர்சகர்களிடமும் பெரும் பாராட்டுக்களைக் குவித்த இப்படம் திரையரங்குகளில் அரங்கம் நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கிறது.


இந்நிலையில் இன்று படக்குழுவினர் பத்திரிக்கை ஊடக நண்பர்களைச் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.


இந்நிகழ்வினில்…


இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் பேசியதாவது..,


மறுபடியும் நன்றி சொல்ல வந்திருக்கிறேன் இம்முறை மை லார்ட் படத்திற்காக....

சில படங்கள்...நாம் ஒரு பணி எடுத்திருக்கிறோம் ,நாம் அதை நன்றாக செய்ய வேண்டும் என தோன்றும். ஒரு சில படங்கள் மட்டுமே இது வெறும் படம் கிடையாது ஒரு இசையமைப்பாளராகவும் சரி ஒரு மனிதனாகவும் இது நமக்கு ஒரு பெரிய பொறுப்பு... இதில் வேலையை மட்டும் முடித்தால் பத்தாது, இதை நாம் பதிவாகவும் அமைக்க வேண்டும் என்பது இரு பொறுப்புகள் ஆகிவிடும். எப்போதுமே ராஜூ முருகன் சார் எனக்கு பாட்டு எழுதும் போதோ இல்லை அவரோட படத்துக்கு நான் இசையமைக்கும்போதோ அந்தப் பொறுப்பை நான் உணர்ந்திருக்கிறேன்.



அவர் ஒரு ஸ்பெஷலான கிரியேட்டர், மை லார்ட் படத்துல ஒரு புதுவிதமான சர்ப்ரைஸ் கொடுத்திருக்கிறார்.


அவருக்கே உரித்தான பொலிட்டிக்கல் satire ஐ ரொம்ப ஜனரஞ்சகமாக எல்லோரும் ரசிக்கும்படி கொண்டு வந்தது சர்ப்ரைசிங்கா இருந்தது.மை லார்ட் படத்தை எனக்கு கொடுத்ததற்கு நன்றி.டூரிஸ்ட் ஃபேமிலி படத்திற்குப் பிறகு இந்த படம் தொடர்ச்சியாக சசி சாருடன் வெற்றியில் பங்கேற்பது ஒரு ஸ்பெஷலான தருணமாய் உணர்கிறேன்.


அம்பேத் சாருடன் நேரில் சந்தித்து பேசியதை விட போனில் பேசியது தான் அதிகம்...

இந்தப் படம் சமூகத்துக்கு ஒரு நல்ல விஷயத்தை செய்யக்கூடிய படம் . இந்தப் படத்தை நான் எடுத்து பண்றேன்னு அவர் எடுத்த அந்த முயற்சி இன்று வெற்றி என்ற புள்ளியில் வந்து நின்றதற்கு அவருக்கு என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். சத்யராஜ் சாருக்கு மை லார்ட் படம் கண்டிப்பாக ஒரு மைல்கல்லாக இருக்கும் என நம்புகிறேன். சத்யராஜ் சார் மியூசிக் ல சில இன்புட்ஸ் கொடுத்தாரு. படங்களின் கலெக்ஷனை நாம் கம்பேர் பண்ணலாம் ஆனால் ஒரு சில படங்கள் மட்டுமே காலத்தைத் தாண்டி மனதில் நிற்கும். அப்படிப்பட்ட ஒரு படமாக மை லார்ட் இருக்கும். இப்படத்தில் வேலை செய்த இசை கலைஞர்களுக்கும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.நல்ல படங்களுக்கு ஒரு பலமாக இருந்து மக்களிடம் கொண்டு போய் சேர்க்கும் பத்திரிக்கை மற்றும் ஊடக நண்பர்களுக்கு என் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். ரொம்ப நன்றி


தயாரிப்பாளர் அம்பேத்குமார் பேசியதாவது..,


படம் வெளியாகி இவ்வளவு வேலைகளுக்கு நடுவிலும் ‘தேங்க்ஸ் மீட் கண்டிப்பாக நடக்க வேண்டும் என்று சொல்லி, எனக்கு ஒரு பெரிய ஊக்கமும் ஆக்கமும் கொடுத்தவர் சசிகுமார் சார். இந்தப் படம் ரிலீஸுக்கு முன்னாலிருந்து இன்று வரைக்கும், ‘இந்த படத்தை மக்களிடம் எப்படியாவது கொண்டு போய் சேர்க்க வேண்டும் என்று ஒரு தீர்மானத்தோடு தொடர்ந்து உழைத்து வருகிற இந்த மாதிரியான ஹீரோவை, உண்மையிலேயே நான் இதுவரை பார்த்ததே கிடையாது. அப்படிப்பட்ட ஒரு சிறந்த நடிகர் மட்டுமல்ல; மனிதநேயமும், மனிதாபிமானமும் நிறைந்த ஒரு அற்புதமான மனிதர் சசிகுமார் சாருக்கு என்னோட மனப்பூர்வமான நன்றிகள். அதேபோல், இந்த படத்தின் இயக்குநர்—என்னோட அருமையான நண்பர் ராஜுமுருகன் சாருக்கும் என் நன்றி. இந்த படத்தைப் பற்றி முன்வந்து பேசின வார்த்தைகளில் மட்டும் இல்லாமல், உள்ளத்திலேயே மனிதநேயத்தை சுமந்து பேசின—அருமையான நண்பர் ஷான் ரோல்டன் அவர்களுக்கும் என் நன்றிகள்.


இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைத்து பத்திரிகை நண்பர்களுக்கும், ஊடக நண்பர்களுக்கும், ‘மை லார்ட்’ ஒரு நல்ல படம், சிறந்த படம், பிரியமான படம் என்று மக்களிடம் தொடர்ந்து கொண்டு போய் சேர்த்துக் கொண்டிருக்கும் ஒவ்வொரு பத்திரிகை நண்பர்களுக்கும் என்னோட அன்பும், மரியாதையும், வணக்கமும். இப்படம் எனக்கு ஜிப்ஸியை விட இந்தப் படம் எனக்கு வெற்றி படம்தான்.நான் திருப்தியாக இருக்கிறேன்.எங்களுக்கு ஆதரவு தந்த அனைவருக்கும் நன்றி.




இயக்குநர் ராஜுமுருகன் பேசியதாவது..,


இந்த படத்தை சரியாகப் புரிந்து கொண்டு, அது உங்களுக்குள் ஏற்படுத்திய பாதிப்புகளை தொடர்ந்து எங்களிடம் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.


‘மை லார்ட்’ படத்தை தொடங்குவதற்கு முதன்மையான காரணமாக இருந்த அம்பேத்கர் சாருக்கு என் சிறப்பு நன்றிகள். ஷான் —தொடர்ந்து ஒரு வாத்தியார் மாதிரி, பல விஷயங்களை என்னோடு பகிர்ந்து கொண்டு, என்னுடைய இசை பயணத்திலும் தொடர்ந்து உறுதுணையாக இருந்து வருவதற்காக அவருக்கும் என் நன்றிகள். எடிட்டர் சத்யராஜ் சார், நீரவ் ஷா சார், இந்த படத்தில் வேலை பார்த்த அத்தனை பேருக்கும் என் மனப்பூர்வமான நன்றி.நான் சினிமாவுக்கு வந்ததிலிருந்து இன்றுவரை, இந்த உலகம் ரொம்ப மாறியிருக்கிறது. ஒரு படத்தை எழுதத் தொடங்கும் இடத்தில் ஒரு எழுத்தாளரின் வேலை ஆரம்பிக்கிறது. ஷூட்டிங் நேரத்தில் இயக்குநரின் வேலை வருகிறது. அதற்குப் பிறகு ரிலீஸ், போஸ்ட்-புரடக்சன் என்று தொடர்கிறது. ஆனால் இன்றைக்கு, படம் ரிலீஸான பிறகும்—ப்ரமோஷன் வரைக்கும்—நிறைய விஷயங்களை நாமே கவனிக்க வேண்டிய ஒரு சூழல் உருவாகியிருக்கிறது. ஒரு ரைட்டிங்குக்கு எவ்வளவு உழைப்போ, ஒரு படத்தை உருவாக்க எவ்வளவு உழைப்போ, அதே அளவு உழைப்பை இன்றைக்கு அந்த படத்தை மக்களிடம் கொண்டு போய் சேர்க்கவும் கொடுக்க வேண்டியிருக்கிறது.நான் அடிப்படையில் ஒரு ஜர்னலிஸ்டாக இருந்ததால், முன்பெல்லாம் ப்ரமோஷன், இன்டர்வியூஸ் இதிலெல்லாம் அதிக ஆர்வம் காட்டியதே இல்லை. ஆனால் இப்போ அது ஒரு பெரிய சவாலாக மாறியிருக்கிறது


ஒரு படத்துக்கு எப்படி முழு மனசோடு வேலை செய்கிறோம், அதே தீவிரத்தோடு ப்ரமோஷனுக்கும் வேலை பண்ண வேண்டிய ஒரு சூழல் இன்றைக்கு உருவாகியிருக்கிறது. இது நல்லதா, கெட்டதா என்ற விவாதத்தை தாண்டி—இந்த உலகம் மாறிக்கிட்டே இருக்கிறது என்பதையும், அதுக்கேற்ற மாதிரி நாமும் மாற வேண்டியிருக்கிறது என்பதையும் புரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது.


நாம் படத்தில் எதைப் பற்றி பேசினாலும், அந்த படத்தை எடுத்துக் கொண்டு போய் ஆடியன்ஸிடம் சேர்ப்பது ஒரு மிகப் பெரிய வேலை. அந்த இடத்தில் உறுதுணையாக நிற்பது ஊடகங்களான நீங்கள் தான்.உங்களுடைய பாசிட்டிவான அணுகுமுறை, பாசிட்டிவான வார்த்தைகள் எப்போதுமே எனக்கு பெரிய ஊக்கமாக இருந்திருக்கிறது. அதற்காக உங்களுக்கெல்லாம் என் மனப்பூர்வமான நன்றி. இந்த படைப்பில் எப்போதும் கூடவே இருந்து துணைநின்ற ஜேம்ஸ் சார், திங்க் மியூசிக் சந்தோஷ் சார்,இந்த படம் உருவாகுவதற்கு உறுதுணையாக இருந்த இரா. சரவணன் உட்பட அத்தனை நண்பர்களுக்கும் என் மனப்பூர்வமான நன்றிகள்.



நடிகர் சசிக்குமார் பேசியதாவது..,


இந்த படத்தை மக்களிடம் கொண்டு போய் சேர்த்ததற்கு முதலில் உங்களுக்கு என் மனப்பூர்வமான நன்றி.என்னுடைய நடிப்பை எல்லாருமே பாராட்டியதை கேட்கும்போது எனக்கு உண்மையிலேயே ரொம்ப சந்தோஷமாக இருந்தது. என்னோட நடிப்பும், சைத்ரா நடிப்பும், அதுக்கப்புறம் குருசசோமசுந்தரம் உள்ளிட்ட பல சிறிய சிறிய கேரக்டர்ஸும் — முதல் காட்சியிலிருந்தே பாராட்டப்பட்டது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தந்தது.


ஒரு நடிகராக, என்னை இன்னொரு விதமாக அழகாக மாற்றிக் காட்டியிருக்கிறார் ராஜுமுருகன். அதுக்காக அவருக்கு நான் மனதார நன்றி சொல்லிக்கொள்கிறேன்.


தயாரிப்பாளர் அம்பேத்குமார் சார், எல்லாவற்றையும் நான் பார்த்துக்கொள்கிறேன் என சொல்லக்கூடிய அவரது மனது தான் பெரிய விஷயம். ராஜு முருகன் கொடுத்து வைத்தவர். ஒரு நல்ல இயக்குநரும், ஒரு நல்ல தயாரிப்பாளரும் எப்போதும் தோற்றுப் போகக் கூடாது. எப்போதும் ஜெயிக்க வேண்டும் என்பது தான் என் எண்ணம்.


முதல் நாள் கலெக்ஷனை பார்த்துவிட்டு எல்லோருக்கும் கொஞ்சம் பயம் வந்தது, ஆனால் எனக்கு தைரியமாக இருந்தது. ஏனென்றால் எல்லாருமே படம் நல்ல படம் எனச் சொன்னார்கள். அது கண்டிப்பா மக்களிடம் இன்னும் போய் சேரும் என்ற நம்பிக்கை எனக்கு இருந்தது. அது நடந்துள்ளது எனக்கு மகிழ்ச்சி. ‘அயோத்தி’படத்தில் நான் பார்த்த அனுபவம் தான் எனக்கு இந்த தைரியத்தை கொடுத்தது. அந்தப்படமும் இரண்டாவது, மூன்றாவது வாரத்தில் தான் கலெக்ஷனை எடுத்தது. அதே மாதிரி இந்தப் படமும் கண்டிப்பாக எடுக்கும் என்ற நம்பிக்கை மக்கள்மேல் இருக்கிறது. இப்படம் போய் சேர வேண்டிய இடத்திற்கு கண்டிப்பா போய்ச் சேரும். படம் பார்த்து விஜய் டிவி ரிலீஸுக்கு அப்புறம் வாங்கியதும், ஓடிடியிலும் வாங்கியதும்—இதெல்லாமே ஒரு பெரிய வெற்றிதான். அதே போல சூர்யா சார் படம் பார்த்து, இந்த படத்தை ப்ரெசென்ட் பண்ணுறோம் என சொன்னதுக்கும், அவருக்கும் அவரோட டீமுக்கும் என் மனப்பூர்வமான நன்றி.

சந்தோஷ், ஜேம்ஸ்—ஆரம்பத்திலிருந்தே கூடவே நின்ற எல்லாருக்கும் நன்றி. ஷான் மியூசிக் படம் முடிந்தும் மனதுக்குள் நின்றது. சத்யராஜ் எடிட்டிங் நன்றாக இருந்தது. இறுதியாக, எங்களை வாழ்த்திய, எங்களை பாராட்டிய அனைத்து பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்களுக்கும் என் மனப்பூர்வமான நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.”


மை லார்ட் திரைப்படம் திரையரங்குகளில் வெற்றி நடை போடுகிறது


இப்படத்தில் சசிகுமார், சைத்ரா ஜே. ஆச்சார், ஜெயப்பிரகாஷ், குரு சோமசுந்தரம் , ஆஷா சரத் , இயக்குநர் கோபி நயினார், வசுமித்ரா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.


நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ள இந்த திரைப்படத்திற்கு, பாடலாசிரியர் யுகபாரதி பாடல்களை எழுத, ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். கலை இயக்கத்தை முனி பால்ராஜ் மேற்கொள்ள, படத்தொகுப்பு பணிகளை சத்யராஜ் நடராஜன் கவனித்துள்ளார். டி. ஆர். பூர்ணிமா ஆடை வடிவமைப்பாளராக பணியாற்ற, நடனத்தை எம். ஷெரீப்பும், சண்டை காட்சிகளை பி. சி. ஸ்டண்ட்டும் அமைத்துள்ளனர்.

தமிழக முதல்வரைச் சந்தித்த “வித் லவ்” படத் தயாரிப்பாளர்கள்

 *தமிழக முதல்வரைச் சந்தித்த “வித் லவ்” படத் தயாரிப்பாளர்கள்



வித் லவ்’ – வெற்றிப் பயணம் தொடரும் நிலையில் முதல்வரை சந்தித்த தயாரிப்பாளர்கள்*


திரையரங்குகளில் அரங்கம் நிறைந்த காட்சிகளுடன் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் ‘வித் லவ் (With Love)’ திரைப்படத்தின் தயாரிப்பாளர்கள் இன்று மரியாதை நிமித்தமாக தமிழக முதல்வர் மாண்புமிகு மு.க. ஸ்டாலின் அவர்களை நேரில் சந்தித்து ஆசி பெற்றனர்.


Zion Films சார்பில் சௌந்தர்யா ரஜினிகாந்த் மற்றும் MRP Entertainment இணைந்து வழங்க, பசிலியான் நாசரேத் மற்றும் மகேஷ் ராஜ் பசிலியான் தயாரிப்பில் உருவான இப்படம், வெளியான நாளிலிருந்து ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்த வெற்றியின் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்ளும் வகையில் இன்று தயாரிப்பாளர்கள்  தமிழக முதல்வரைச் சந்தித்தனர்.


முதல்வர் மாண்புமிகு மு.க. ஸ்டாலின் தயாரிப்பாளர்களுடன் சிறிது நேரம் உரையாடி, ‘வித் லவ்’ திரைப்படத்தின் வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்ததோடு, படக்குழுவின் முயற்சியையும் பாராட்டினார். இந்த சந்திப்பு படக்குழுவினருக்கு மேலும் உற்சாகம் அளித்துள்ளது.


‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படத்தின் இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் மற்றும் அனஸ்வரா ராஜன் நடித்துள்ள ‘வித் லவ்’, 2026 பிப்ரவரி 6 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகி தற்போது வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இன்றைய இளைஞர்களின் உலகம், அவர்களின் உணர்வுகள் மற்றும் காதலை மையமாக வைத்து உருவான இப்படம், ரசிகர்களிடம் மட்டுமல்லாமல் விமர்சகர்களிடமும் பாராட்டுகளை குவித்துள்ளது.


‘லவ்வர்’, ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ ஆகிய படங்களில் இணை இயக்குநராக பணியாற்றிய மதன், இப்படத்தின் இயக்குநராக அறிமுகமாகி, தனது நேர்த்தியான கதை சொல்லலால் கவனம் ஈர்த்துள்ளார்.


இப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். ஷ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்துள்ளார். K. சுரேஷ் குமார் எடிட்டிங் பணிகளை மேற்கொண்டுள்ளார். ராஜ்கமல் கலை இயக்கம் செய்துள்ளார். உடை வடிவமைப்பாளராக ப்ரியா ரவி பணியாற்றியுள்ளார்.

வித் லவ் ( With Love )” திரைப்பட நன்றி அறிவிப்பு விழா !!

வித் லவ் ( With Love )” திரைப்பட நன்றி அறிவிப்பு விழா !! 




Zion Films சார்பில் சௌந்தர்யா ரஜினிகாந்த் மற்றும் MRP Entertainment இணைந்து வழங்கும், பசிலியான் நாசரேத், மகேஷ் ராஜ் பசிலியான் தயாரிப்பில், டூரிஸ்ட் ஃபேமிலி' இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் மற்றும் அனஸ்வரா ராஜன் நடிப்பில் உருவாகியுள்ள, “வித் லவ் ( With Love )” திரைப்படம் கடந்த 2026 பிப்ரவரி 6 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியானது.


இன்றைய இளைஞர்களின் உலகத்தை காதலை மையமாக வைத்து உருவான இப்படம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றதுடன் விமர்சகர்களிடமும் பாராட்டுக்களைக் குவித்தது.


அரங்கம் நிறைந்த காட்சிகளாக வெற்றிகரமாக ஓட்டிக்கொண்டிருக்கும் நிலையில் படக்குழு பத்திரிக்கை ஊடக நண்பர்களை சந்தித்து நன்றி தெரிவித்தனர்.



எடிட்டர் சுரேஷ் பேசியதாவது..,


இந்த திரைப்படத்திற்கு நீங்கள் தந்த ஆதரவுக்கு நன்றி படக்குழுவுக்கு நன்றி. அனைவருக்கும் நன்றி.


பாடலாசிரியர் மோகன்ராஜன் பேசியதாவது..,


மகேஷ் ஐயாவோட பல படங்களாக இந்தப் பயணமாக தொடர்ந்து கொண்டிருக்கிறது. ஒவ்வொரு படத்துக்கும், இது நல்ல படம் - ன்னு நீங்கள் நம்பினால், அதை முழு மனதோடு தூக்கிக்கொண்டு போய் ஒரு வெற்றிப் படமாக மாற்றுவதற்கு உங்களுக்குப் பெரிய பெரிய நன்றிகள். இப்படத்தில் தயாரிப்பாளராக சௌந்தர்யா மேம் எங்களுக்கு கிடைத்தது, ஒரு பெரிய வரம்னு தான் நினைக்கிறோம். உண்மையிலேயே, நான் நீண்ட நாளா மனசுக்குள்ள வைத்திருந்த ஆசை – ரஜினி சாரை நேரில் சந்திக்கணும்ன்னு. அதை மகேஷ் ஐயாவிடம் அடிக்கடி சொல்லிக்கிட்டே இருப்பேன். சௌந்தர்யா மேடமிடம் சொன்னேன். அது இப்படத்தில் நடந்தது மகிழ்ச்சி.  


ரஜினி சாரை பார்க்கும் போது வைரமுத்து சார் போல எப்படியாவது ஒரு கவிதை சொல்லி, சாரை இம்ப்ரெஸ் பண்ணணும்னு நினைச்சேன். உண்மையிலேயே அந்த கவிதை அவருக்கு ரொம்ப பிடிச்சது. என்னோட வாழ்நாள் கனவு நிறைவேறிச்சு.


இந்த படத்தில் ஒர்க் பண்ணிய ஒவ்வொருத்தருக்கும் நான் மனசார நன்றி சொல்லணும். மதன் – அடுத்த படம் இன்னும் கவனமா பண்ணணும். அபி – இது உன்னோட முதல் படம். அது ஜெயிக்கணும்னு நானும் ஷான் ஐயாவும் அடிக்கடி பேசிக்கிட்டே இருப்போம். அது இப்போ நடந்து கொண்டிருப்பது மகிழ்ச்சி. அனஸ்வராவுக்கு வாழ்த்துக்கள் , கடைசியாக, இந்த படத்துக்காக உழைத்த எல்லாருக்கும் பெரிய நன்றி.



நடிகர் சரவணன் பேசியதாவது..,


இந்த படத்தில் நான் நடிக்கக் காரணமாக இருந்தது முதலில் இயக்குநர் மதன். அதே மாதிரி மகேஷ் சார், மேலும் இந்த படத்தின் முழு குழுவுக்கும் நான் மனப்பூர்வமாக நன்றி தெரிவிக்கிறேன்.இந்த படத்தில் என்னோட கேரக்டர் உண்மையிலேயே ஒரு சின்ன கேரக்டர்தான். ஆனாலும் அந்த சின்ன கேரக்டரையும் அழகாக எழுதி, அதைப் பாராட்டி, நிறைய ஊடகங்களும் பத்திரிக்கையாளர்களும் மனசார எழுதியிருந்தார்கள். என்னைப் பாராட்டிய எல்லாருக்கும் நான் ரொம்ப ரொம்ப நன்றி சொல்லக் கடன்பட்டிருக்கிறேன். இந்த படம் இன்னும் நல்ல படியாக, இன்னும் அதிக மக்களைச் சேரும் வகையில் பயணிக்க முயற்சி செய்து கொண்டிருக்கும் தயாரிப்பாளருக்கு நன்றி. அனைவருக்கும் நன்றி.



நடிகை ஆனந்தி பேசியதாவது..


நான் இந்த படத்தைப் பற்றி பேசும்போது, ஒரு நடிகராக இல்லாமல், ஒரு ஆடியன்ஸாக பேசணும்னு ஆசைப்படுறேன். நேத்து நைட்டுதான் இந்த படம் பார்த்தேன். ஒரு நல்ல படத்தில் நானும் ஒருத்தராக இருப்பது மகிழ்ச்சி.

இன்றைய தலைமுறை பற்றி ஒரு தவறான எண்ணம் நம்மிடம் இருக்கிறது அதை மாற்றி வேறு பார்வையில் இப்படம் நம்மிடம் காட்டுகிறது.


இந்த படம் அந்த Human Nature-ஐ ரொம்ப அழகாக, ரொம்ப மென்மையாக சொல்லுகிறது. “There are no bad people.But we all do bad things sometimes.”


அது நம்ம எல்லாருக்கும் நடந்திருக்கலாம்.ஆனா அதே சமயம், நம்மளுக்குள்ள வளர வாய்ப்பு இருக்கிறது அப்படிங்கிற கருத்து இந்த படத்துல ரொம்ப அழகா ஒரு காதல் கதையில் சொல்லப்பட்டிருக்கிறது. இப்படிப்பட்ட ஒரு படத்தில் ஒரு பங்காக இருந்தது மிகுந்த மகிழ்ச்சி. அனைவருக்கும் நன்றி.


நடிகை காவ்யா பேசியதாவது..,


ஒரு புதுமுகமாக என்னை என் பெயர் சொல்லி பாராட்டிய அனைவருக்கும் நன்றி. என் கதாப்பாத்திரத்தை கொண்டாடிய ரசிகர்களுக்கு நன்றி. இப்படத்தில் பங்கு கொண்டது மகிழ்ச்சி. தயாரிப்பாளர் படக்குழுவுக்கு என் நன்றி.



நடிகர் சச்சின் பேசியதாவது..,,


இப்படத்தில் பங்கு கொண்டது மிக மகிழ்ச்சி. இந்த மொத்தக்குழுவுக்கும் என் நன்றி. அபி மற்றும் அனஸ்வராவுக்கு நன்றி. இந்தப்படத்தை பெரிய அளவில் மக்களிடம் கொண்டு சென்ற பத்திரிக்கை ஊடக நண்பர்களுக்கு நன்றி. அனைவருக்கும் நன்றி.


நடிகை அனஸ்வரா பேசியதாவது..,


இந்த படம் ரொம்ப ரொம்ப அன்போட உருவக்கிய படம். அந்த அன்பை ஆடியன்ஸ் அப்படியே ஏற்றுக்கிட்டது தான் எங்களுக்கு கிடைத்த மிகப் பெரிய சந்தோஷம்.


“இந்த வாய்ப்பை எனக்கு கொடுத்ததற்காக மதனுக்கு மனப்பூர்வமான நன்றி. அபியுடன் பணியாற்றிய அனுபவம் மிகச் சிறப்பாக இருந்தது என தெரிவித்தார். அபியுடன் உள்ள கெமிஸ்ட்ரியை மக்கள் பேசிக் கொண்டிருக்கிறார்கள். அதை மக்கள் ரசித்தது ரொம்ப மகிழ்ச்சி. சௌந்தர்யா மேடம், மகேஷ் அண்ணா, காவ்யா மற்றும் முழு நடிகர்–தொழில்நுட்ப குழுவினருக்கும் நன்றி.


இரண்டு நாட்களுக்கு முன் ரஜினி சாரை சந்தித்த தருணம் வாழ்வில் மறக்க முடியாதது. அவர் படம் பார்த்து சொன்ன ரெஸ்பான்ஸ் எங்களுக்கெல்லாம் ரொம்ப அர்த்தமுள்ளதா இருந்தது. எங்கள் படத்தை இவ்வளவு அன்போட ஏற்றுக்கொண்ட எல்லாருக்கும் நன்றி.


இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் பேசியதாவது..,


இந்தப்படத்துக்கு பத்திரிக்கையாளர்கள் தந்த ஆதரவு மிகப்பெரியது. அபியை முதல் படம் செய்ய கஷ்டபட்ட காலத்திலிருந்து பார்க்கிறேன். அவனுடைய உழைப்பு 200 சதவீதம் இருந்தாலும் நீங்கள் அவனுக்கு முழு ஆதரவு தந்திருக்கிறீர்கள் நன்றி. அபி மிக அழகான மனது கொண்டவர் அவர் மாற மாட்டார் என நம்புகிறேன். எனது கூட்டாளி மோகன்ராஜனுடன் தொடர்ந்து படங்கள் செய்கிறேன் அவருக்கு என் நன்றி.


இயக்குநர் மதன் இந்தக்கதை சொன்ன போதே இது வெற்றிப்படம் என்பது தெரியும், கதை சொல்லும் போது தடுமாறினாலும் படத்தில் மிக அழகாக அதை நிறைவு செய்துவிட்டார். அனஸ்வரா கேரக்டரை எழுதிய விதமும், அதை எடுத்த விதமும் அத்தனை அழகாக இருந்தது. அனஸ்வராவுக்கு படத்தில் நான் கை தட்டினேன் அவர் அத்தனை அற்புதமாக நடித்திருந்தார்.


தயாரிப்பாளர் மகேஷ் அவர் தொட்டதெல்லாம் பொன்னாகிறது. அவரைப் பார்த்தால் என் பையன் தான் ஞாபகம் வரும். குழந்தை மனது கொண்டவர். கண்டிப்பாக இன்னும் 3 படங்கள் ஹிட் தந்துவிடுவார். எங்களுக்கு முழு ஆதரவு தந்ததற்காக நன்றி. சௌந்தர்யா மேம், அவர் மிகத்தெளிவான சிந்தனை கொண்டவர். அவரிடம் நிறைய திட்டமிடல் இருக்கும். அவர் இன்னும் நிறைய சாதிப்பார் அதைக் காண ஆவலாக இருக்கிறேன்.


படத்தில் உழைத்த அத்தனை நடிகர்கள் கலைஞர்கள் அனைவருக்கும் நன்றி.இந்தப்படத்தை ஏற்றுக்கொண்டு கொண்டாடிய மக்களுக்கு நன்றி.


இயக்குநர் மதன் பேசியதாவது..,


எல்லாருமே“இந்த படம் கண்டிப்பா ஒரு வெற்றி படம்” என சொன்னார்கள். அதே போல படம் வெற்றியடைந்தது உண்மையிலேயே எங்களுக்கு பெரிய மகிழ்ச்சியாக இருக்கிறது. இப்படத்தை மக்களிடம் கொண்டு சேர்த்த பத்திரிக்கை நண்பர்களுக்கு நன்றி.மகேஷ் சார், சௌந்தர்யா மேடம், இருவருக்கும் பெரிய நன்றி. அதே மாதிரி சரவணன் சார் டீம் உட்பட, இந்த படத்துக்காக உழைத்த எல்லாருக்கும் என் மனப்பூர்வமான நன்றிகள். தூக்கமில்லாமல் இப்படத்திற்காக உழைத்த என் உதவி இயக்குநர்கள் அனைவருக்கும் நன்றி. படத்தை கொண்டாடிய ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி.


தயாரிப்பாளர் மகேஷ் பேசியதாவது..,


“நீங்கள் இல்லாமல் நாங்கள் இல்லை.”நீங்கள் எல்லாரும் இல்லாம இந்த டீமும் இல்லை. அதனால ரொம்ப சந்தோஷம். பிரஸ் ஷோ முடிந்த பிறகு,நீங்கள் தந்த பாராட்டுக்களில் இருந்து தான் இந்த படம் உண்மையிலேயே take off ஆனது. இப்படத்தை மக்கள் மனதளவில் நெருக்கமாக கொண்டாடுகிறார்கள்.  


மதன் எனக்கு ரொம்ப நாளா தெரிஞ்ச பையன். லவ்வர், டூரிஸ்ட் ஃபேமிலி படங்களில் அவன் வேலை பற்றி எனக்கு தெரியும். இந்தக் கதை சொல்லும்போதே, “இந்த படம் ஹிட்” எனத் தோன்றியது. அவன் கண்டிப்பாக அனஸ்வரா வேண்டும் என்பதில் பிடிவாதமாக இருந்தான். அனஸ்வரா நடிப்பை பார்த்த பிறகு அவர் எவ்வளவு பெரிய பலம் என்று புரிந்தது. அபி எனக்கு சொந்த தம்பி. அபியை நீங்கள் எல்லாரும் உங்கள் வீட்டுப் பையன் மாதிரி

பார்த்துக் கொள்வீர்கள் என்று நான் நம்புகிறேன். ஷான் தான் என் மூன்று படத்திற்கும் இசையமைப்பாளர். இதில் அனீஷா கேரக்டருக்கு அவரின் இசை அற்புதமாக இருந்தது. எங்கள் சின்ன டீமை பாராட்டி ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட சூப்பர்ஸ்டாருக்கு நன்றி.


சௌந்தர்யா அக்காவுடனான உறவு 10 வருடங்களுக்கு மேலாக இருக்கிறது. அவர் எனக்கு எப்போதும் அக்கா தான். எங்களால் முடியாத பல விஷயங்களை ஒரு போன் கால்லஅவங்க முடிச்சு கொடுத்து விடுவார்கள்.அக்கா – ஒரு பெரிய சப்போர்ட். எங்கள் டீமின்தூண். அவருடன் இன்னும் நிறைய படம் செய்வேன். இந்தப்படத்திற்காக உழைத்த அனைவருக்கும் நன்றி. படத்தை கொண்டாடிய உங்கள் அனைவருக்கும் பெரிய நன்றி.



தயாரிப்பாளர் சௌந்தர்யா ரஜினிகாந்த் பேசியதாவது..,


“ரொம்ப ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. மகிழ்ச்சி என்ற வார்த்தை கூட இந்த உணர்வுக்கு சரியாக இருக்காது”ப்ரீமியர் ஷோவில் அப்பா படம் பார்த்து தான் படத்தை அடுத்த கட்டதிற்கு எடுத்துச் சென்று விட்டார்.


“படம் முடிந்ததும், வீட்டிற்கு சென்றபோது அப்பா–அம்மா இருவரும் என்னை கட்டிப்பிடித்து சிரித்தார்கள். அப்போது தான் ‘இதுதான் சக்ஸஸ்’ என்று உணர்ந்தேன். அந்த அப்பாவின் சிரிப்பை நான் வாழ்க்கை முழுக்க மறக்க மாட்டேன். 16–18 ஆண்டுகளாக சினிமா பயணத்தில் இருந்தாலும், இந்த படத்தின் மூலமாக தான் ‘வெற்றி’ என்பதன் உண்மையான அர்த்தம் புரிந்தது இது தான் முதல் சக்சஸ் மீட்.


“அபி எனக்கு ஒரு பேபி பிரதர். அந்த மனதிலிருந்து வரும் சிரிப்பு எனக்கு மிகவும் பிடிக்கும். அவர் இங்கே நீண்ட காலம் நிலைத்திருப்பார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை” என்று நம்பிக்கையுடன் கூறினார். அனஸ்வராவை எங்கே இருந்தீர்கள் இவ்வளவு நாள் என்று கேட்கத் தோன்றியது. இந்த படத்தில் அவர் மிக அழகாக நடித்துள்ளார். குறிப்பாக இறுதிக் காட்சியில் வரும் அமைதியும், மழையை பார்த்து அவர் சிரிக்கும் காட்சி எனக்கு மிகவும் பிடித்த தருணம்”


இயக்குநர் மதன் கதை சொன்னபோதே இது வெற்றி படம் என்ற நம்பிக்கை வந்தது. இரண்டாம் பாதியில் வரும் காட்சிகளும், இறுதியில் நான்கு கதாபாத்திரங்களும் ஒரே ஷாட்டில் சந்திக்கும் காட்சியும் முழுமையான டைர்கடர்ஸ் டச். அவரது அடுத்த படத்திற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம்.


இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் அனீஷா பாத்திரத்திற்கு போட்டது பத்து நிமிடத்தில் உருவான இசை என்பது நம்ப முடியாத மாயை. அந்த மேஜிக் அவரால் மட்டுமே முடியும். பாடலாசிரியர் மோகன், எடிட்டர் சுரேஷ், பிரஷாந்த் உள்ளிட்ட தொழில்நுட்ப குழுவினருக்கு மனப்பூர்வமான நன்றி. இந்த படம் வெறும் ‘நல்ல படம்’ என்ற ஸ்டேட்டஸை தாண்டி, மக்கள் தங்கள் படமாக கொண்டாடுவது எங்களுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி” அனைவருக்கும் நன்றி.


நடிகர் அபிஷன் ஜீவிந்த் பேசியதாவது..,


“ரஜினி சார் சொன்ன அந்த ஒரு வார்த்தை தான் என்னை ஹீரோவாக இந்த முடிவை எடுக்கவும், அதில் நம்பிக்கை வைக்கவும் காரணமாயிருந்தது. இப்போ அவரை மீட் பண்ணும்போது, ‘ஹீரோ ஆகிட்டீங்க’ன்னு அவர் திரும்ப சொன்னது… அந்த சர்கிள் கம்ப்ளீட் ஆன மாதிரி சந்தோஷமாக இருந்தது,”


நீங்கள் படத்தை அழகாக மக்களிடம் கொண்டு போய் சேர்த்தீர்கள். நல்ல ரிவ்யூஸ், நல்ல வார்த்தைகள் – அதுதான் இந்த வெற்றிக்கு காரணம். அதற்காக உங்கள் அனைவருக்கும் நன்றி.


“என்னை ஹீரோவாக நம்பி இந்த இடத்துல நிற்க வைத்ததுக்கு மதனுக்கு ரொம்ப பெரிய நன்றி. உன்னை இந்த மேடையில் பார்க்க பெருமையாக இருக்கிறது. இந்த பயணம் இன்னும் பெரியதாக இருக்கும் வாழ்த்துக்கள். இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் குறித்து,“எப்போதும் எனக்கு கூடுதலாக வேலை செய்வார். ‘அபிக்காக இதை இன்னும் நல்லா பண்ணலாம்’ன்னு சொல்ற அந்த மனசு ரொம்ப ஸ்பெஷல். புகழை கூட அழகாக, ஈகோ இல்லாமல் கொடுக்கத் தெரிந்தவர், அவருக்கு நன்றி. பாடலாசிரியர் மோகன், எடிட்டர் சுரேஷ், ஸ்ரேயாஸ், தொழில்நுட்ப குழுவினர் அனைவருக்கும் மனப்பூர்வமான நன்றி. அனஸ்வரா எங்களுக்குள்ள கெமிஸ்ட்ரி ரொம்ப அழகாக ஒர்க் ஆனது. ஆடியன்ஸ் அதை ரொம்ப ரசிக்கிறார்கள். இந்த கூட்டணி அடுத்தும் தொடரும். காவியா, சச்சின், தேனி முருகன், சரவணன், ஆனந்தி உள்ளிட்ட நடிகர்கள் அனைவருக்கும் நன்றி.


தயாரிப்பாளர் மகேஷ் அண்ணா படம் ஹிட் ஆன பிறகும், ‘நான் எதாவது தவறு பண்ணினேனா ? ன்னு கேட்கும் அந்த மனசு எல்லாருக்கும் கிடைக்காது. அவர்கிட்ட பேச எனக்கு எந்த தயக்கமும் கிடையாது. அது தான் இந்த உறவின் அழகு,” அவருக்கு என் நன்றிகள்.


சௌந்தர்யா மேம் படம் வெளியான பிறகு“‘சக்ஸஸ் இப்படித்தான் இருக்குமா என்று அவர் சொன்ன அந்த வார்த்தை எனக்கு ரொம்ப சந்தோஷம் கொடுத்தது. மகேஷ் அண்ணா சௌந்தர்யா மேம் நான் மூன்று பேரும் இணைந்து அடுத்து ஒரு பெரிய படம் செய்கிறோம். இந்த படம் இன்றைக்கு மக்கள் மனசுக்குள்ள ஒரு இடத்தை பிடித்திருக்கிறது. அதுவே எங்களுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி. இந்த பயணத்தில் இருந்த ஒவ்வொருவருக்கும் என் மனப்பூர்வமான நன்றி

சிறப்பாக நடைபெற்ற தலை நிமிர் திரை விருதுகள் 2026*

சிறப்பாக நடைபெற்ற தலை நிமிர் திரை விருதுகள் 2026 



தலை நிமிர் திரை விருதுகள் 2026 – திரையுலக சாதனையாளர்களுக்கு பெருமை சேர்த்த விழா

சென்னை, பிப்ரவரி 14, 2026:

தமிழ் திரைப்படத் துறையின் சிறப்பையும், புதிய தலைமுறை திறமைகளையும் பாராட்டும் வகையில் தலை நிமிர் திரை விருதுகள் 2026 விழா, சென்னை பிரசாத் லேப் அரங்கில் சிறப்பாக நடைபெற்றது. திரையுலகின் பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்களும், எதிர்கால நம்பிக்கையான இளம் கலைஞர்களும் இந்த விழாவில் கௌரவிக்கப்பட்டனர்.

இந்த விழாவில், பிரபல திரைப்பட இயக்குநர் பேரரசு அவர்கள், நடிகர் கதிரவன், நடிகை ஸ்ருதி நாராயணன், நடிகை தியா, நடிகர் காதல் சுகுமார் உள்ளிட்ட பல நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கு விருதுகளை வழங்கி கௌரவித்தார். பல்வேறு திரைப்படப் பிரிவுகளைச் சேர்ந்த கலைஞர்கள் இவ்விழாவில் விருது பெற்றது குறிப்பிடத்தக்கது.

இந்த விருது விழா சிவானி ஸ்டூடியோ சார்பில், செந்தில் மற்றும் டைகர் சக்கரவர்த்தி,டைகர் முத்து ஆகியோரின் ஏற்பாட்டில் வெற்றிகரமாக நடத்தப்பட்டது.

மேலும், இவ்விழாவில் முதன்மை விருந்தினர்களாக மூத்த இந்திய திரைப்பட இயக்குநர் ஆர்.வி. உதயகுமார், இயக்குநர் பேரரசு, சண்டைப் பயிற்சியாளர் கனல்கண்ணன், மற்றும் மூத்த திரைப்பட இயக்குநர் ஆர். அரவிந்த்ராஜ் ஆகியோர் கலந்து கொண்டு விருதுகளை வழங்கி விழாவை சிறப்பித்தனர்.

தமிழ் திரையுலகின் வளர்ச்சிக்கும், புதிய திறமைகளின் ஊக்கத்திற்கும் உறுதுணையாக அமைந்த தலை நிமிர் திரை விருதுகள் 2026, கலைஞர்களுக்கு மேலும் ஊக்கம் அளிக்கும் ஒரு முக்கியமான மேடையாக திகழ்ந்தது.


PRO Mani Madhan 


#ThalaiNimirThiraiAwards2026 #ShivaaniStudio #ActorKathiravan #ShruthiNarayanan #CinemaAwards2026 

@promanimadhan

Moonwalk திரைப்படத்தின் ‘Yethu’

 *Moonwalk திரைப்படத்தின் ‘Yethu’ பாடலுக்கு ஆப்பிரிக்கன குழந்தைகளின் இசைக்குழு நடமாடி வீடியோ பதிவிட்ட நிலையில் அதற்கு ஏ.ஆர்.ரஹ்மான் கமெண்ட் செய்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். 



மூன்வாக் திரைப்படத்தில் இடம்பெற்ற ‘ஏத்து’ வீடியோ பாடல் இன்ஸ்டாகிராமை அதிர வைத்துள்ளது. இது ஒரு பெரிய நடன ட்ரெண்டாக மாறி, உலகம் முழுவதும் வேகமாக வைரலாகி வருகிறது.


ஆப்பிரிக்கா, ஜப்பான், அமெரிக்கா, இங்கிலாந்து, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், பிரான்ஸ், ஸ்வீடன் உள்ளிட்ட பல நாடுகளைச் சேர்ந்தவர்கள் இந்த ட்ரெண்டில் உற்சாகமாக கலந்து கொண்டு, பாடலின் உணர்வை காப்பாற்றியபடி அதிக ஆற்றலுடன் ரீல்ஸ் செய்து பதிவிட்டு வருகின்றனர்.


Yethu பாடல் வெளியான இரண்டு வாரங்களிலேயே யூடியூபில் 11 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது. மேலும், சர்வதேச விமர்சகர்கள் Yethu பாடலை பார்த்து ஆர்வத்துடன் கருத்து தெரிவித்து வருகின்றனர். தற்போது சமூக ஊடகங்களில் “Yethu” பாடலை கொண்டு செய்யப்பட்ட ரீல்கள் 100 மில்லியன் பார்வைகளை கடந்து படுவைரலாகி வருகிறது.


ஜனவரி 27ஆம் தேதி தொடங்கிய இந்த ட்ரெண்ட், இன்றளவும் சற்றும் குறையாமல் தொடர்ந்து வேகமெடுத்து வருகிறது. நடனக் கலைஞர்களைத் தாண்டி, இசைக்கலைஞர்கள் மற்றும் வாத்தியக்கலைஞர்களும் “Yethu” பாடலுக்கு ரீல்ஸ் செய்து அசத்தி வருகின்றனர்.


ஆப்பிரிக்காவின் பிரபலமான “Hypers Kids Africa” என்ற குழந்தைகள் இசைக்குழு “Yethu” பாடலுக்கு நடன ரீமேக் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர். இந்த வைரல் அலைக்கு மேலும் பெருமை சேர்க்கும் வகையில், புகழ்பெற்ற இசையமைப்பாளர் A R ரஹ்மான் அவர்களே அந்த வீடியோவில் “Thank you for the love. You guys are terrific” என கமெண்ட் செய்துள்ளார். அதற்கு பதிலளித்த குழந்தைகள் குழு, “Happy to see your comment. We love you too” என்று தெரிவித்துள்ளது. இந்த தருணம் ரசிகர்கள் மற்றும் இப்பாடலுக்கு மேலும் reels தயாரிப்பவர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தி, இப்பாடல் கலாச்சாரம் தாண்டி எல்லோராலும் கொண்டாடப்படுகிறது என்பதை உறுதிப்படுத்திருக்கிறது


“Yethu” பாடலில் நடனப்புயல் பிரபுதேவா மிகவும் கடினமான நடன அசைவுகளை எளிதாக ஆடி அசத்திய விதத்திற்கும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன. 

 A R Rahman அவர்களின் துள்ளலான இசையுடன் கூடிய பிரபுதேவாவின் அதிரடி நடனம், பாடலின் ஒளிப்பதிவு அமைப்பு — இவை அனைத்தும் ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தி இப்பாடல் உலகமெங்கும் வைரல் லிஸ்டில் இணைந்துள்ளது.


இப்பாடலின் மீது ஈர்ப்பு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், ‘Yethu’ ஒரு உலகளாவிய நடன கீதமாக மாறி வருகிறது. தாளம், ஒற்றுமை மற்றும் எல்லைகளை தாண்டிய படைப்பாற்றலை கொண்டாடும் ஒரு திருவிழாவாக மாறியுள்ளது “Yethu” பாடல்.

சாருலதா பிலிம்ஸ் தயாரிப்பில் எம். ஆர் .பாரதி கதை எழுதி இயக்கியிருக்கும் படம் 'ட்ரீம் கேர்ள்'. இப்படத்தில்

 சாருலதா பிலிம்ஸ் தயாரிப்பில் எம். ஆர் .பாரதி கதை எழுதி இயக்கியிருக்கும் படம் 'ட்ரீம் கேர்ள்'. இப்படத்தில் 


ஜீவா நாயகனாக நடித்திருக்கிறார். நாயகியாக ஹரிஷ்மிதா நடித்திருக்கிறார். மற்றும் பிரபு சாஸ்தா, துருவன், இந்திரா ஆகியோரும் நடித்துள்ளனர்.


இப்படத்திற்கு ஒளிப்பதிவு சாலமன் போவாஸ் இளமாறன்,வசனம் ஹேமந்த் செல்வராஜ், ராம் சரசுராம்,எம். டி .தமிழரசன்,தயாரிப்பு வடிவமைப்பு எஸ் .ரதி, 

திரைக்கதை எம்.டி. தமிழரசன் கிருத்திகா தாஸ்,எடிட்டிங் எஸ். பி .அஹமத், இணை இயக்கம் எம்.பொன் புவனேஸ்வரன்.


இப்படத்தில் என் .காவேரி மாணிக்கம் டாக்டர் ஆர். குணசேகரன் B. ஆதித்யன் இணைத் தயாரிப்பாளர்களாகப் பங்கெடுத்துள்ளனர்.


Cast and crew 

 

Jeeva as Krishna

Harisha as Anjali

Sidhu as arjun

Prabhu sastha as aravind

Indra as indra

Thuruvan as dhruvan 

Screenplay thamizharasan, kirthika das

Dialogue Hemanth selvaraj 

Dop soloman Boaz

Editor sp Ahmed 

Music elamaran

ட்ரீம் கேர்ள்’ (Dream Girl) திரைப்பட விமர்சனம்

 ட்ரீம் கேர்ள்’ (Dream Girl) திரைப்பட விமர்சனம்


Casting : Jeeva, Harishmitha, Prabhu Sastha, Thuruvan, Indira



Directed By : MR Bharathi



Music By : Ilamaran



Produced By : Charulatha Films




 


நாயகன் ஜீவா திரைப்பட இயக்குநராக வேண்டும் என்ற கனவோடு வாழ்கிறார். நாயகி ஹரிஷ்மிதா திரைப்பட பின்னணி பாடகியாக வேண்டும் என்ற கனவோடு வாழ்கிறார். இவர்கள் இருவருக்கும் இடையே காதல் மலர்கிறது. காதல் ஜோடியாக வாழ்க்கையை ரசித்துக் கொண்டிருக்கும் இவர்களது வாழ்க்கையில் ஒரு கனவு வருகிறது. அந்த கனவு இருவரது வாழ்விலும் எத்தகைய விளைவுகளை ஏற்படுத்துகிறது என்பதை மசாலா கலப்பில்லாத காதல் கதையாக சொல்வதே ‘ட்ரீம் கேர்ள்’. தமிழ் சினிமாவில் முக்கோணக் காதல் கதைகள் பல வெளியாகி பெரும் வெற்றி பெற்றிருக்கிறது. அவை ஒவ்வொன்றும் வெவ்வேறு பின்னணியில், சில புதுமையான அம்சங்களை கொண்டவை. அந்த வகையில், இந்த படத்தில் கனவு வில்லனாக சித்தரிக்கப்பட்டு, அதை மையப்புள்ளியாக கொண்டு அமைக்கப்பட்டிருக்கும் திரைக்கதை படத்திற்கு தனி சிறப்பு சேர்த்திருக்கிறது.



 


நாயகனாக நடித்திருக்கும் ஜீவா மற்றும் நாயகியாக நடித்திருக்கும் ஹரிஷ்மிதா இருவரும் புதியவர்கள். முதல் படத்திலேயே முழு படத்தையும் தங்களது தோளில் சுமந்து செல்லும் வாய்ப்பை பெற்று, அதை மிக சரியாக செய்திருக்கிறார்கள்.


 


பிரபு சாஸ்தா, துருவன், இந்திரா என மற்ற கதாபாத்திரங்களில் நடித்திருப்பவர்களும் தங்களது வேலையை சரியாக செய்து திரைக்கதை ஓட்டத்திற்கு பலம் சேர்த்திருக்கிறார்கள்.இளமாறன் இசையில் படத்தில் இடம்பெற்றுள்ள ஒரு பாடல் கேட்பதற்கு இனிமை. பின்னணி இசை கதைக்களத்திற்கு ஏற்ப, எந்தவித இரைச்சல் இன்றி இனிமையாகவும், அமைதியாகவும் பயணிக்கிறது.


 


ஒளிப்பதிவாளர் சாலமன் போவாஸ் கட்டிடங்கள் அற்ற ஊட்டியை காட்டி கண்களுக்கு இயற்கை விருந்தளித்திருக்கிறார். 


 


அழுத்தமான காதல் கதையாக இருந்தாலும், படம் பார்ப்பவர்களின் இறுக்கத்தை போக்கும் வகையில் படத்தொகுப்பாளர் ஸ்.பி.அஹமத் காட்சிகளை தொகுத்திருக்கிறார்.


 


ஹேமந்த் செல்வராஜ், ராம் சரசுராம், எம். டி .தமிழரசன் ஆகியோரது வசனத்தில் காதல் ரசம் மிக குறைவாக இருக்கிறது.


 


எம்.டி. தமிழரசன்,  கிருத்திகா தாஸ் ஆகியோரது திரைக்கதை முக்கோணக் காதல் கதையை வேறு ஒரு பரிணாமத்தில் கொடுக்க முயற்சித்து, அதில் வெற்றியும் பெற்றிருக்கிறது. கதை எழுதி இயக்கியிருக்கும் எம்.ஆர்.பாரதி, கனவை துரத்தும் காதல் ஜோடிக்குள் ஒரு கனவு, அந்த கனவு ஏற்படுத்தும் காதல் மாயாஜாலம், என்ற ஒருவரிக் கதையை வைத்துக்கொண்டு, அழகான மற்றும் அழுத்தமான காதல் படைப்பை படைத்திருக்கிறார்.


 


ஊட்டியை கதைக்களமாக கொண்டு வடிவமைக்கப்பட்டிருக்கும் காட்சிகள் படம் பார்ப்பவர்களையும் அந்த இடங்களில் பயணிக்க வைப்பது போல் இருப்பதோடு, காதலர்கள் மட்டுமே பயணிக்கும் பகுதிகளும் படத்தின் ஒரு கதாபத்திரமாக கவனம் ஈர்க்கிறது. முக்கோணக் காதல் கதைகள் ஏராளம் என்றாலும், அதில் ஒரு வித்தியாசத்தை புகுத்தி, அதீத மசாலத்தனம் இன்றி  சொல்லியிருக்கும் இயக்குநர் எம்.ஆர்.பாரதி, தற்போதைய நவீன காலக்கட்டத்திற்கு ஏற்ப காட்சிகளை கையாள்வதில் சற்று தடுமாறியிருக்கிறார். அந்த தடுமாற்றத்தை சரி செய்திருந்தால் இந்த காதல் படம் நிச்சயம் காவியம் படைத்திருக்கும்.


 


மொத்தத்தில், ‘ட்ரீம் கேர்ள்’ காதல் உணர்வு.

ஸ்வீட்டி நாட்டி கிரேசி’ திரைப்பட விமர்சனம்

ஸ்வீட்டி நாட்டி கிரேசி’ திரைப்பட விமர்சனம்

Casting : Thrigun, Srijita Ghosh, Iniya, Radha, Thambi Ramaiah, Sathyan, Ravi Mariya, Aali, Jawa Sundaresan, Madhan Babu, Vijay TV Danasekar, Vinoth



Directed By : Rajasekar.G



Music By : Arunagiri



Produced By : Arun Visualz - Covai Ramesh




 


நாயகன் த்ரிகுணும், நாயகி ஸ்ரீ ஜீத்தா கோஷும் ஒரே கல்லூரியில் படிக்கிறார்கள். இருவர் இடையே ஏற்படும் நட்பு காதலாக மாறுகிறது. காதல் காமத்தில் முடியும் போது, நாயகன் தான் ஏற்கனவே அக்கா வயதுள்ள ஒரு பெண்ணுடனும், ஆண்டி வயதுள்ள ஒரு பெண்ணுடம் உடலுறவு வைத்துக் கொண்ட உண்மையை காதலியிடம் சொல்கிறார். இதனால் கோபமடையும் காதலி, இவனை இப்படியே விட்டால், காமலீலைகளை தொடர்ந்துக் கொண்டே இருப்பான் என்பதால், கல்யாணம் செய்து கணவனாக்கிக் கொள்கிறார். 

தன் காதல் கணவனை அழைத்துக் கொண்டு கோத்தகிரியில் உள்ள தன் வீட்டுக்கு நாயகி செல்கிறார். குடும்பம் இல்லாத தனக்கு, தன் மனைவி மூலம் கிடைக்கப் போகும் குடும்பத்தை காண ஆவலோடு செல்லும் த்ரிகுண், அங்கு தன் மனைவியின் அக்கா இனியா மற்றும் அம்மா ராதாவை பார்த்ததும், பேரதிர்ச்சி அடைகிறார். அவரது அதிர்ச்சிக்கான காரணம் என்ன ?, அதிர்ச்சியில் இருந்து மீண்டாரா? இல்லை அவர்கள் மூலம் மீண்டும் மீண்டும் அதிர்ச்சியை எதிர்கொண்டாரா? என்பதை அடல்டு காமெடியாக சொல்வதே ‘ஸ்வீட்டி நாட்டி கிரேசி’. இப்படி ஒரு கதையில் நாயகனாக நடித்திருக்கும் த்ரிகுணின் தைரியத்தை நிச்சயம் பாராட்டியாக வேண்டும். அடல்டு காமெடி படத்தில் நடிப்பது பெரிதல்ல, ஆனால் இப்படிப்பட்ட ஒரு சில்மிஷமான சிந்தனையோடு எழுதப்பட்ட கதையில் பயணித்திருப்பது பெரிய விசயம் மட்டும் அல்ல, நாயகனுக்கு மூச்சு முட்டவும் செய்திருக்கும்.


 


நாயகியாக நடித்திருக்கும் ஸ்ரீ ஜீத்தா கோஷ், தோழிகளின் அறிவுரை மூலம் காதலனை கட்டிலில் சாய்ப்பதும், அவர் செய்த தவறை மன்னித்து மீண்டும் மீண்டும் அவருடன் நெருக்கம் காட்டுவதும் என்று, இப்படி ஒரு பெண் காதலியாகவும், மனைவியாகவும் அமைவது தான் இறைவன் கொடுத்த வரம், என்று பார்வையாளர்களை ஏங்க வைத்திருக்கிறார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு திரையில் தன் முகத்தை மட்டும் இன்றி உடல் அங்கங்களையும் காட்டி பார்வையாளர்களை கிரங்கடிக்கும் இனியா, உதட்டோடு உதடு முத்தமிட்டு, ”பாடம் சொல்லிக் கொடு”, என்று நாயகனிடம் கேட்கும் டியூசன் டீச்சராக நடித்து பரங்கிமலை ஜோதியையே தோற்கடிக்கும், கவர்ச்சி மலையாக பார்வையாளர்களை மயக்குகிறார்.


 


‘சுந்தாரா டிராவல்ஸ்’ படத்தில் இளமையாக இருந்த போது கூட ராதாவை இப்படி ரசித்திருக்க மாட்டார்கள் போல, அம்மணி இந்த படத்தில் ஆண்டியாக வந்து அதிரடி காட்டியிருக்கிறார்.


 


தம்பி ராமையா, சத்யன், ஆலி, ரவி மரியா, ஜாவா சுந்தரேசன், மதன்பாபு, விஜய் டிவி தனசேகர், வினோத் என படத்தில் ஏகப்பட்ட காமெடி நடிகர்கள் இருந்தாலும், காம நெடி அதிகம் இருப்பதால், இவர்களது காமெடி குறைவாகவே தெரிகிறது. சி.விஜயின் ஒளிப்பதிவில் மூன்று நாயகிகளும் பளிச்சென்று இருக்கிறார்கள். அவர்களது பிரகாசம் காட்சிகளிலும் இருப்பதால், படம் முழுவதும் ஒரே வண்ணமயம் தான்.


 


அருணகிரியின் இசையில் பாடல்கள் அனைத்தும் கமர்ஷியல் அம்சங்களோடு ஆட்டம் போட வைக்கிறது. பின்னணி இசை காம காட்சிகளை தூக்கலாக காட்டியிருக்கிறது.


 


படத்தொகுப்பாளர் கே.குமார், அதிஷ்ட்டசாலி தான். பார்வையாளர்களுக்கே இவ்வளவு காட்டியிருக்கிறார் என்றால், அவர் எவ்வளவு பார்த்திருப்பார்...! எழுதி இயக்கியிருக்கும் ராஜசேகர்.ஜி, அடல்டு காமெடி என்ற பெயரில் அசிங்கமான சிந்தனையை, ஆபாசமாக சொல்லியிருந்தாலும், அதை இலை மறை காய் மறையாக சொல்லியதோடு, காமெடி பின்னணியில் சொல்லி இளைஞர்களை ரசிக்க வைத்திருக்கிறார்.


 


யார் என்று தெரியாமல் நாயகன் செய்ததை ஏற்றுக்கொண்டாலும், உண்மை தெரிந்த பிறகு விலகி செல்ல முயற்சிக்கும் நாயகன் உடன், தொடர்ந்து பழக துடிப்பது போல் பெண் கதாபாத்திரங்களை வடிவமைத்திருப்பது, காமத்தை தாண்டிய வக்கிரத்தை வெளிப்படுத்தும் விதமாகவும், உறவு முறைகளை கொச்சைப்படுத்தும் விதமாக இருந்தாலும், அதற்கு காமெடி என்ற போர்வையை போர்த்தி, மேலோட்டமாக சொல்லி சமாளித்திருக்கும் விதம் படத்தை முகம் சுழிக்காமல் பார்க்க வைத்திருக்கிறது. படத்தில் இடம்பெற்றிருக்கும் இரட்டை அர்த்த வசனங்களும், சில நேரடியான வசனங்களும் இளைஞர்களை சிரிக்க வைத்து குஷிப்படுத்தும் விதமாக இருக்கிறது. படத்தின் மையக்கரு அதிர்ச்சியளிக்கும் விதத்தில் இருந்தாலும், அதை கமர்ஷியலாக இளைஞர்கள் கொண்டாடும் விதமாக சொல்லியிருப்பதோடு, கவர்ச்சிக்கும், ஆபாசத்திற்கும் இடையே இருக்கும் எல்லையை சரியாக கணித்து காட்சிகளை வடிவமைத்திருக்கும் இயக்குநர் ராஜசேகர்.ஜி, படம் தொடங்கியது முதல் முடியும் வரை திரையரங்கில் சிரிப்பு சத்தமும், கைதட்டல் சத்தமும் ஒலித்துக் கொண்டே இருக்கும்படி படத்தை இயக்கியிருக்கிறார். 


 


மொத்தத்தில், ‘ஸ்வீட்டி நாட்டி கிரேசி’ செம மேட்டர்.