-

Loading latest news...

சென்னை ரசிகர்களை உற்சாகப்படுத்த வரும் பாடகர்கள் வேடன், அறிவு, அசல் கோலார்*

 *இசை நிகழ்ச்சிக்காக ஒன்று கூடும் வேடன், அறிவு, அசல் கோலார்*



*சென்னை ரசிகர்களை உற்சாகப்படுத்த வரும் பாடகர்கள் வேடன், அறிவு, அசல் கோலார்*



*வணக்கம் வணக்கம் பெங்களூர் மிகப்பெரிய வெற்றி; அடுத்த பதிப்பு “வணக்கம் வணக்கம் சென்னை” விரைவில்*




தென்னிந்திய ஹிப்-ஹாப் இசை உலகத்தை ஒன்றிணைக்கும் “வணக்கம் வணக்கம் பெங்களூர்” விழா மிகப்பெரிய வெற்றியாக நிறைவடைந்தது. ஏப்ரல் 11ஆம் தேதி பார்தியா மால் ஆஃப் பெங்களூரில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், 3 மாநிலங்களைச் சேர்ந்த 8க்கும் மேற்பட்ட கலைஞர்கள் ஒரே மேடையில் கலந்து கொண்டு, ரசிகர்களுக்கு அதிரடியான அனுபவத்தை வழங்கினர்.


வேடன், காப்ரி, ஸ்டிக், சந்தன் ஷெட்டி மற்றும் டகால்டி ஆகியோரின் உற்சாகமான நிகழ்ச்சிகளுடன், தமிழ் கலைஞர்கள் அறிவு மற்றும் அசல் கோலார் வழங்கிய சிறப்பு நிகழ்ச்சிகள் ரசிகர்களின் பெரும் வரவேற்பைப் பெற்றது.


மலையாளம், கன்னடம் மற்றும் தமிழ் ஹிப்-ஹாப் இசையின் பல்வேறு முகங்களை ஒரே மேடையில் கொண்டு வந்த இந்த விழா, மொழி மற்றும் கலாச்சார எல்லைகளை தாண்டிய இசை ஒன்றிணைப்பாக அமைந்தது. ரசிகர்களின் பெரும் திரளான வருகையுடன், இந்த நிகழ்ச்சி ஒரு உற்சாகமான, சமூகத்தை இணைக்கும் அனுபவமாக மாறியது.


Alt+ மற்றும் The High Culture இணைந்து ஏற்பாடு செய்த இந்த நிகழ்ச்சி, தென்னிந்திய இன்டிபெண்டென்ட் ஹிப்-ஹாப் இயக்கத்தின் வளர்ச்சியில் முக்கியமான கட்டமாக அமைந்தது.


மேலும், கலைஞர் வேடன் தனது மேடை நிகழ்ச்சிகளில் பயன்படுத்திய “வணக்கம் வணக்கம்” என்ற வரியை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்ட இந்த டூர் ஐபி, தற்போது இளைஞர்களிடம் வலுவான கலாச்சார அடையாளமாக உருவெடுத்து வருகிறது.


பெங்களூரில் கிடைத்த அபார வரவேற்பை தொடர்ந்து, இந்த டூரின் அடுத்த பதிப்பு “வணக்கம் வணக்கம் சென்னை” என்ற பெயரில் விரைவில் நடைபெற உள்ளது.


இதனைத் தொடர்ந்து ஹைதராபாத், மும்பை உள்ளிட்ட நகரங்களிலும், பின்னர் உலகளாவிய அளவில் பல நாடுகளுக்கும் இந்த டூர் விரிவடைய உள்ளது.

நடிகர் விக்கல்ஸ் விக்ரம் நடிக்கும் 'லைட் வெயிட் பேபி ' படத்தின் டைட்டில் வெளியீடு

 *'லைட் வெயிட் பேபி' படத்தின் மூலம் கதையின் நாயகனாக அறிமுகமாகும் நடிகர் விக்கல்ஸ் விக்ரம்* 



*நடிகர் விக்கல்ஸ் விக்ரம் நடிக்கும் 'லைட் வெயிட் பேபி ' படத்தின் டைட்டில் வெளியீடு*


ஸ்டாண்ட் அப் காமெடியன்- பிக் பாஸ் பிரபலம் - டிஜிட்டல் திரை நட்சத்திரம் என இளம் தலைமுறை ரசிகர்கள் கொண்டாடும் நடிகர் விக்கல்ஸ் விக்ரம் 'லைட் வெயிட் பேபி' படத்தின் மூலம் கதையின் நாயகனாக அறிமுகமாகிறார். இப்படத்தின் டைட்டில் வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.  


இயக்குநர் கே சி குரு இயக்கத்தில் உருவாகும் 'லைட் வெயிட் பேபி' திரைப்படத்தில் விக்கல்ஸ் விக்ரம் மற்றும் ஃபிட்னஸ் மாடலிங் மங்கை ஆர்த்தி கிருஷ்ணா ஆகியோர் முதன்மையான வேடங்களில் நடிக்கிறார்கள். பிரமோத் கோடியன் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு சரவணன் சுப்பிரமணியம் இசையமைக்கிறார். ரொமான்டிக் காமெடி ஜானரில் தயாராகும் இந்த திரைப்படத்தை ஹிதா ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்திற்கு சாகர் சந்தேஷ் - ஜி . திம்மா ரெட்டி ஆகியோர் இணை தயாரிப்பாளர்களாக பொறுப்பேற்று இருக்கிறார்கள். 


இப்படத்தின் டைட்டில் வெளியிட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் படத்தின் நாயகன் விக்கல்ஸ் விக்ரம், நாயகி ஆர்த்தி கிருஷ்ணா, இயக்குநர் கே சி குரு ஆகியோர் கலந்து கொண்டனர். 


இந்நிகழ்வில் நடிகர் விக்கல்ஸ் விக்ரம் பேசுகையில், '' இங்கு வருகை தந்த அனைவருக்கும் நன்றி. இந்த நிகழ்ச்சியை ஸ்டாண்ட் அப் காமெடி ஷோவை போல் தொடங்குகிறேன். இடையில் எங்காவது காமெடி வந்தால் சிரிக்க மறந்துவிடாதீர்கள். நான் முதன் முதலாக இந்த மேடையில் சற்று பதட்டத்துடன் இருக்கிறேன். மேலும் இந்த ஸ்டாண்ட் அப் காமெடி ஷோ- ஒரு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சியாகவும் இருக்கும். 


2016ஆம் ஆண்டில் நான் தியேட்டர் ஆர்டிஸ்ட் ஆக இருந்தேன். அதன் பிறகு சோசியல் மீடியாவில் சில கன்டென்டுகள் மூலம் ரசிகர்களிடத்தில் பிரபலமானேன். நான் ஒரு அமைதியான கலைஞன். என்னை போல என் ரசிகர்களும் அமைதியாக இருந்து ஆதரவு அளித்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் இறுதிவரை என்னை அழைத்து வந்தார்கள். அதற்கு இந்த தருணத்தில் நான் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். 


பிக் பாஸ் என்னை எப்படி மாற்றி இருக்கிறது என்றால்.. முன்பெல்லாம் என்னை ஒரு கன்டென்ட் ஆக தான் பார்த்தார்கள். அந்தத் தருணத்தில் என்னை சந்திக்கும் ரசிகர்களுக்கு என் பெயர் தெரியாது. ஆனால் என் மீது அன்பு காட்டுவார்கள். ஆனால் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு, என்னை அவர்களுடைய வீட்டில் ஒரு பிள்ளையாக மாற்றி இருக்கிறது. அத்தகைய ஒரு சக்தி பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு இருக்கிறது என்பதை உணர்ந்தேன். 


நான் பிக் பாஸ் வீட்டில் இருந்தபோது ஒவ்வொரு நாளும் என்னை பின் தொடர்ந்தார்கள். அவர்கள் என் மீது அன்பு செலுத்த தொடங்கினார்கள். நான் ஒவ்வொரு குடும்பத்திற்கும் செல்ல பிள்ளையாக மாறிவிட்டேன். செல்ஃபி எடுத்துக் கொண்டார்கள். அது எனக்கும் மகிழ்ச்சியாக இருந்தது. என்னை நேரில் சந்திக்கும்போது உரிமையுடன் விசாரிக்கவும் செய்தார்கள். அது எனக்கு உண்மையில் சந்தோஷமாகவும் இருந்தது. அதிர்ச்சியாகவும் இருந்தது.  


இப்போது ரசிகர்கள் விக்கல்ஸ் என்ற என்னுடைய சமூக வலைதள பக்கத்தை பார்க்கிறார்கள். பின் தொடர்கிறார்கள். என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்..? என அக்கறையுடனும், உரிமையுடனும் கேட்கிறார்கள். 


எனக்கு ரசிகர்களின் தொந்தரவு பிடிக்கும். இது அல்பத்தனமானது என்றாலும்.. என்னை யாராவது டிஸ்டர்ப் செய்தால் எனக்கு பிடிக்கும். 


அப்பாவிற்கு இன்டர்நெட் பற்றி எதுவும் தெரியாது. தொடக்கத்தில் நான் என்னுடைய நண்பர்களுடன் படுக்கை அறையில் இருந்து தான் ரீல்ஸ்களை எடுத்து பதிவேற்றுவோம். 


ஒவ்வொரு நாளும் என்னுடைய தந்தையார் நானும் என் நண்பர்களும் காலையிலிருந்து இரவு வரை பெட்ரூமில் இருப்பதையும்... அதன் பிறகு என்னுடைய நண்பர்கள் வீட்டிலிருந்து வெளியே செல்வதையும்.. அதன் பிறகு நான் சோர்வாக இருப்பதையும் மட்டும்தான் என் தந்தை பார்ப்பார்.‌


'நிலவை கொண்டு வா' என்ற பாடலை நாங்கள் ரீல்ஸாக எடுத்து பதிவேற்றினோம். அது வைரலானது. அந்த ரீல்சை போஸ்ட் செய்த சில நிமிடங்களில் பத்தாயிரம் பேர் பார்த்திருந்தனர். கொஞ்ச நேரம் கழித்து பார்த்தால் ஒரு லட்சத்தை எட்டி இருந்தது.‌ அதன் பிறகு அது ஒரு மில்லியனை கடந்து எங்கோ சென்று கொண்டிருந்தது. அந்த தருணத்தில் நடிகர் எஸ் ஜே சூர்யா - சிம்ரன் மேடம் ஆகியோர் இது தொடர்பாக தங்களது கருத்துக்களை போஸ்ட் செய்தார்கள். திடீரென்று தேவா அவர்கள் என்னை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு நன்றி தெரிவித்தார். நீண்ட நாள்களுக்குப்பிறகு அந்தப் பாடலை பிரபலப்படுத்தியதற்கு நன்றி என்றார் அதைக் கேட்டதும் என் கண்களில் கண்ணீர் வந்தது. அவரிடம் அப்படியெல்லாம் சொல்லாதீர்கள் நீங்கள் மிகப்பெரிய லெஜன்ட். நிலவை கொண்டு வா பாடல் யாருடைய வாழ்க்கையை மாற்றியதோ... தெரியாது ஆனால் எங்களுடைய வாழ்க்கையை மாற்றியது. நிறைய சேனல்களுக்கு இன்டர்வியூ கொடுத்தோம் எங்களை பற்றி நாங்களே பேசினோம். இதை என் அப்பா ஆச்சரியத்துடன் பார்த்துக் கொண்டிருந்தார். 


ஆனால் அவருக்கு நான் ஒரு நல்ல நடிகர் என்பது தெரியாது. நன்றாக சிந்திப்பவன் என்றும் தெரியாது. அவரை பொறுத்தவரை நான் கல்லூரி வகுப்புகளை 'பங்க்' செய்தவன்.. போன்ற விசயங்கள் தான் நினைவில் இருக்கும்.


பிக் பாஸ் வீட்டில் இருந்த போது தான் நான் நன்றாக நடிப்பேன் என்பதை என் தந்தை பார்த்து தெரிந்து கொண்டார்.‌ 


 இன்று ஒரு படத்தில் நடிக்கிறேன்.‌ பத்து வருடத்திற்கு பிறகு நான் ஹீரோவாக ஒரு படத்தில் நடிக்கிறேன். அந்த படத்தின் பெயரை தான் நாங்கள் இப்போது ரிவீல் செய்யப் போகிறோம். 


நானும் சினிமாவில் ஆடியோ லாஞ்ச் உள்ளிட்ட சில விழாக்களுக்கு சென்று இருக்கிறேன். அந்த விழாவில் ஹீரோ டைரக்டரை புகழ்வார். டைரக்டர் ஹீரோவை புகழ்வார். 


எனக்கு இயக்குநரை சமீபத்தில் தான் தெரியும். அவர் ஒரு கதையை சொன்னார். அது எனக்கு பிடித்துப் போனது. அப்போது அவரிடம் நாம் ஒரு விழா வைத்தால் என்ன பேசலாம் என கேட்டபோது பேசுவதற்கு ஒன்றும் இல்லை என்றார். 


அதனால் ஒரு ஸ்டாண்ட் அப் காமெடி ஷோ போல் நடத்தி படத்தின் டைட்டிலை ரிவீல் செய்துவிடலாம் என திட்டமிட்டோம். 


இதற்கு முன் திரைப்படங்களில் எனக்கு கேரக்டர்களில் நடிப்பதற்கு தான் வாய்ப்பு வழங்குவார்கள். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு இன்ஸ்டாகிராமில் நீங்கள் என் படத்தில் ஹீரோவாக நடிக்க வேண்டும் என்று ஒரு மெஸேஜ் வந்தது , நான் கூட அப்போது ஏதேனும் ஷார்ட் பிலிம் - பைலட் பிலிம் ஆகத்தான் இருக்கும் என்று நினைத்தேன். அதன் பிறகு தான் ஃபீச்சர் ஃபிலிம் என்று சொன்னார்கள், திகைத்து போனேன், அந்த வாய்ப்பை அளித்த இயக்குநர் கே சி குருவுக்கு நன்றி. 


2016 ஆம் ஆண்டில் ஹீரோவாக வேண்டும் என்ற ஆசை இருந்தது. அதுவும் பின் மண்டையில் ஓரமாக இருந்தது. அதனை வெளியில் சொன்னாலும் வெட்கக்கேடு. வெளியில் சொல்வதற்கு வெட்க பட்ட ஒரு கனவை இன்று நிஜமாக நடந்து கொண்டிருக்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது. 


எங்கள் படத்திற்கான டைட்டில் 'லைட் வெயிட் பேபி.'


லைட் வெயிட் பேபி படத்தின் போஸ்டரில் ஒரு மைக் இருக்கிறது, ஒரு ஸ்டாண்ட் இருக்கிறது, அப்புறம் அதில் வெயிட் இருக்கிறது. இது ஒரு லவ் ஸ்டோரி. ஒரு ஸ்டாண்ட் அப் காமெடியன் மற்றும் ஃபீமேல் பாடி பில்டர் ஆகிய இருவருக்கும் இடையேயான கதை. அதனால் தான் நான் இந்த படத்தில் ஹீரோவாகி இருக்கிறேன். 


இந்த படத்தின் டைட்டிலை விட மிகவும் சுவாரசியமான விசயம் என்னவென்றால் இப்படத்தின் ஹீரோயின் தான். அவர்கள் பெயர் ஆர்த்தி கிருஷ்ணா.


இதற்கு மேல் பேசுவதற்கு ஒன்றும் இல்லை. படத்தை உருவாக்கி விட்டு உங்களிடம் வருகிறோம்'' என்றார். 


இயக்குநர் கே சி குரு பேசுகையில், '' நான் பெங்களூரூவிலிருந்து வருகை தந்திருக்கிறேன். எனக்கு தமிழ் மொழி பேசினால் புரியும். ஆனால் பேச வராது. அதனால் நான் ஆங்கிலத்திலேயே பேசி விடுகிறேன். 


லைட் வெயிட் பேபி என்பது இம்பேலன்ஸிங் லைஃப். இந்த போஸ்டரில் ஒரு பக்கம் எடை குறைவாகவும்... மறுபக்கம் எடை அதிகமாகவும்.... இருக்கும் இது ஏன் என்பதுதான் இப்படத்தின் பின்னணி.‌'' என்றார். 


நடிகை ஆர்த்தி கிருஷ்ணா பேசுகையில், '' இந்த வாய்ப்பை வழங்கியதற்காக இயக்குநருக்கும் ,தயாரிப்பாளருக்கும் நன்றி. இது என் முதல் திரைப்படம். இந்த திரைப்படம் எப்படி உருவாகும் என்பது தெரியாது. அதை தெரிந்து கொள்ள ஆர்வமாக இருக்கிறேன். நன்றாக வரவேண்டும் என்ற ஆசை இருக்கிறது. என்னுடைய சிறப்பான பங்களிப்பை வழங்குவேன் '' என்றார்.

இயக்குநர் வெங்கட் பிரபு வெளியிட்ட “லெனின் பாண்டியன்” டிரெய்லர் !!

 இயக்குநர் வெங்கட் பிரபு வெளியிட்ட “லெனின் பாண்டியன்” டிரெய்லர் !! 



சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில், மாறுபட்ட கதைக்களத்தில் மிரட்டும் “லெனின் பாண்டியன்” டிரெய்லர் !! 


முன்னணி தயாரிப்பு நிறுவனமான சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் D.D.பாலச்சந்திரன் இயக்கத்தில் , சிவாஜி கணேசன் பேரன் தர்ஷன், கங்கை அமரன், ரோஜா நடிப்பில், நம் மண்ணின் வாழ்வியல் பேசும் அழுத்தமான படைப்பாக, மணல் கொள்ளையை மையமாக வைத்து உருவாகியுள்ள திரைப்படம் “லெனின் பாண்டியன்”. இப்படத்தின் டிரெய்லரை முன்னணி இயக்குநர் வெங்கட் பிரபு வெளியிட்டுள்ளார். 


ஜனநாயக நாட்டில் எவர் ஒருவருக்கும் எந்த காரணத்தை முன்னிட்டும், எந்த அதிகாரத்தாலும், ஒருவரது தனிப்பட்ட உரிமைகளும், சுதந்திரமும் மறுக்கப்படக்கூடாது பறிக்கப்படக்கூடாது. அதை காப்பது தான் ஜனநாயகத்தின் அடிப்படை. கிராமத்து பின்னணியில் வாழும் எளிய மனிதர்களின் வாழ்வில் நடைபெறும் அது போன்ற பிரச்சனை தான் இப்படத்தின் மையம். 


தற்போது வெளியான டிரெய்லர், சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகளை கடந்த இந்நாட்டில், ஒரு 75 வயது முதியவர் போலீஸ் பாதுகாப்புடன் இருப்பது காட்டப்படுகிறது. இது ஏன் எதற்காக அவருக்கு போலீஸ் பாதுகாப்பு எனும் ஆர்வத்தை தூண்டுகிறது டிரெய்லர். நம் மண்ணின் வாழ்வியலோடு பின்னிப்பிணைந்திருக்கும் இந்தக் கதை, ஒரு புது அனுபவமாக இருக்கும் என்பதை டிரெய்லர் உறுதி செய்கிறது. ஆர்வத்தை தூண்டும் டிரெய்லர் ரசிகர்கள் மற்றும் திரை ஆர்வலர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. 


நடிகர் சிவாஜி கணேசன் குடும்பத்திலிருந்து அடுத்த வாரிசாக நடிகர் தர்ஷன் இப்படத்தில் நாயகனாக நடிக்கிறார். பன்முக திறமையாளர் கங்கை அமரன் முதன்மைப் பாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் நடிகை ரோஜா நீண்ட இடைவேளைக்குப் பிறகு, இப்படம் மூலம் திரைக்க்கு மீண்டும் வருகிறார். ஸ்ரித்தா ராவ் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இவர்களுடன், ஜார்ஜ் மரியம், ஆடுகளம் நரேன், யுகேந்திரன், பிக் பாஸ் அர்ச்சனா, ஜெயப்பிரகாஷ், போஸ் வெங்கட், இளவரசு ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர். 


செந்தில் தியாகராஜன் மற்றும் அர்ஜுன் தியாகராஜன் தயாரித்துள்ள இப்படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் சார்பில் TG தியாகராஜன் வழங்குகிறார். இணை தயாரிப்பு - G.சரவணன் மற்றும் சாய் சித்தார்த்


இப்படத்தின் அமைத்து பணிகளும் முடிவடைந்த நிலையில், தற்போது இப்படத்தின் திரையரங்கு வெளியீட்டு பணிகள் திட்டமிடப்பட்டு வருகிறது. 


தொழில்நுட்ப குழு விபரம் 


தயாரிப்பு நிறுவனம் - சத்யஜோதி

தயாரிப்பு - T.G.தியாகராஜன்

இணை தயாரிப்பு - G.சரவணன் மற்றும் சாய் சித்தார்த்

எழுத்து இயக்கம் - D.D.பாலச்சந்திரன்

ஒளிப்பதிவு - A. M எட்வின் சகாய்

எடிட்டிங்க் - நாகூரான் இராமச்சந்திரன் 

ஸ்டண்ட் - தளபதி தினேஷ்

கலை இயக்கம் - அதூரி ஜெய்குமார்

மக்கள் தொடர்பு - சதீஷ் AIM


https://youtu.be/iFv3N9mX5gU?si=Msl2r0DAy_LyZkx4

கோபி நயினார் இயக்கத்ததில், “கலையரசி” ராதிகா நடிக்கும் “காலனி” பட ஃபர்ஸ்ட் லுக் !!*

 *இயக்குநர் வெற்றிமாறன் மற்றும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி வெளியிட்ட, கோபி நயினாரின் “காலனி” பட ஃபர்ஸ்ட் லுக் !!* 




*கோபி நயினார் இயக்கத்ததில், “கலையரசி” ராதிகா நடிக்கும் “காலனி” பட ஃபர்ஸ்ட் லுக் !!*



அதிதி மூவிஸ் தயாரிப்பில் டாக்டர் R.நாகராஜன் வழங்க, இயக்குநர் கோபி நயினார் இயக்கத்தில், “கலையரசி” ராதிகா முன்னணி வேடத்தில் நடித்துள்ள “காலனி” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டது. இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை முன்னணி இயக்குநர் வெற்றிமாறன் மற்றும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இணைந்து வெளியிட்டனர்.


ப்ளாக்பஸ்டர் வெற்றி பெற்ற அறம் படத்தின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் கோபி நயினார், வெளியீட்டுக்கு தயாராக உள்ள “மனுஷி” படத்திற்கு பின், சமூக அக்கறை மிக்க இன்னொரு அழுத்தமான படைப்பாக “காலனி” படத்தை உருவாக்கியுள்ளார். தாய்கிழவி படத்தின் மூலம் பெரும் வரவேற்பைப் பெற்ற கலையரசி ராதிகா, இப்படத்தில் மீண்டும் வலுவான மையக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.


தனது மகனின் இறப்புக்கு நீதி தேடி போராடும் ஒரு தாயின் உணர்ச்சி மிகுந்த பயணமே இப்படத்தின் கரு. வெளியான ஃபர்ஸ்ட் லுக்கில், கண்களில் கனல் பொங்கும் கோபத்துடன் அமர்ந்திருக்கும் ராதிகாவின் தோற்றம் வலுவாக பதிகிறது. பின்னணியில் கலவர சூழலில் பொதுமக்களை விரட்டும் போலீஸ் காட்சி இடம்பெற்றுள்ளதால், சமூக அவலங்களை வெளிப்படுத்தும் படமாக இது அமையும் என எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அறம் போலவே இதுவும் தீவிரமான தாக்கம் ஏற்படுத்தும் படைப்பாக இருக்கும் என்பதைக் காட்டும் வகையில் இந்த போஸ்டர் அமைந்துள்ளது.இந்த போஸ்டர் திரை ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.


இப்படத்தில் “கலையரசி” ராதிகா முதன்மைப் பாத்திரத்தில் நடிக்க, அவரது மகனாக அறிமுக நடிகர் லியோ நடிக்கிறார். இவர்களுடன் அஞ்சலி நாயர், எம்.எஸ். பாஸ்கர், சேத்தன், ஆர்.கே. விஜயமுருகன், வினோத்சாகர், மூணார் ரமேஷ், அஜித் கோஷி, ரவி வெங்கட்ராம், ஜே கே, ஏ. வெங்கடேஷ், ராம்ஸ், இயக்குநர் தமிழ், செந்தி, ஜானகி, அஸ்வினி தங்கராஜ், கீதா கைலாசம், போஸ் வெங்கட் உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.


சிறு இடைவெளிக்குப் பிறகு, தேனிசைத் தென்றல் தேவா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். ஒளிப்பதிவு பணிகளை R. வேல்ராஜ் மேற்கொண்டுள்ளார். படத்தொகுப்பை ஆண்டனி கவனித்துள்ளார்.


இப்படத்தின் படப்பிடிப்பு தமிழகத்தின் திருவண்ணாமலை முதலான வட மாவட்டங்களில் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. தற்போது இறுதிக்கட்ட பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. விரைவில் டீசர், டிரெய்லர் மற்றும் திரையரங்கு வெளியீடு குறித்த அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


தொழில்நுட்ப குழு:

இயக்குநர் – கோபி நயினார்

இசை – தேனிசைத் தென்றல் தேவா

ஒளிப்பதிவு – R. வேல்ராஜ்

படத்தொகுப்பு – ஆண்டனி

கலை இயக்குனர் – சக்தி வெங்கட்ராஜ்

பாடல்கள் – யுகபாரதி

சண்டை பயிற்சி – கனல் கண்ணன்

நடனம் – பிருந்தா

மக்கள் தொடர்பு – சதீஷ் AIM

தயாரிப்பு – டாக்டர் R. நாகராஜன்.

தயாரிப்பு மேற்பார்வை - KNR. சாமி

நிர்வாக தயாரிப்பு - L.Srikanth

லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ (LIK) திரைப்பட நன்றி விழா!*

 *லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ (LIK) திரைப்பட நன்றி விழா!* 



தமிழ் திரையுலகின் முன்னணி இளம் நட்சத்திரமான பிரதீப் ரங்கநாதன் கதாநாயகனாக நடிக்க, முன்னணி இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவான ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ (LIK) திரைப்படம், கடந்த ஏப்ரல் 10ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகி, ரசிகர்கள் மற்றும் திரை ஆர்வலர்கள் மத்தியில் சிறந்த வரவேற்பைப் பெற்று வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.


திரையரங்குகளில் பெரும் வரவேற்புடன் ஓடிக்கொண்டிருக்கும் இப்படத்தின் வெற்றியை கொண்டாடும் வகையில், படக்குழுவினர் பத்திரிக்கை மற்றும் ஊடக நண்பர்களை சந்தித்து, தங்களின் நன்றியை தெரிவித்தனர்.


இந்நிகழ்வினில் 


*இயக்குநர் ஜெகன் பேசியதாவது..,* 


இப்படத்தில் நானும் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது. இயக்குநர் விக்னேஷ் சிவன் உழைப்பை நேரில் பார்த்தேன், பிரமிப்பாக இருந்தது. நம்ம எல்லோரும் இந்தப் படத்தை பார்த்திருக்கிறோம். தியேட்டரில் மக்கள் எப்படி கொண்டாடுகிறார்கள் என்பதை பார்க்கும்போதுதான் இந்தப் படத்தின் உண்மையான வெற்றி என்ன என்பதை உணர முடிகிறது. அது ஒரு உண்மையான அர்ப்பணிப்பின் பலன். அந்த அர்ப்பணிப்பின் அர்த்தம் தியேட்டரில்தான் முழுமையாக தெரிகிறது. அதற்காக எனக்கு மிகுந்த மகிழ்ச்சி.


முக்கியமாக அன்புத் தம்பி பிரதீப் ரங்கநாதன் அவர்களுக்கு நான் ஒரு பெரிய வாழ்த்து சொல்ல வேண்டும். அவருக்கு மக்களிடம் இருக்கும் அன்பு மிகவும் பெரிது. அதேபோல் அவருக்கு ரசிகர்களிடம் அளவில்லாத அன்பு இருக்கிறது. ஒரு நடிகராக நான்காவது படத்திலேயே இவ்வளவு வரவேற்பு கிடைப்பது மிகப்பெரிய சாதனை. அவர் ஏற்கனவே எண்ணற்ற மனங்களை வென்றிருக்கிறார். உலகத்தில் பணம் சம்பாதிப்பது எளிது. ஆனால் ரசிகர்களின் அன்பை சம்பாதிப்பது மிகவும் கடினம். அந்த அரிய வரத்தை கடவுள் அவருக்கு அளித்திருக்கிறார். அதற்காக எனக்கு மிகுந்த சந்தோஷம். நான் இந்தப் படத்தை பல தியேட்டர்களில் பார்த்தேன். முதல் நாளிலிருந்து மீண்டும் மீண்டும் பார்த்தேன். எல்லா இடங்களிலும் மக்கள் அவரை தங்களுடைய வீட்டுக் குழந்தை போலவே பார்க்கிறார்கள்.


இந்தப் படத்தில் சீமான் அண்ணன் நடித்ததற்கு நான் ஒரு காரணமாக இருந்தேன். ஆரம்பத்தில் அவர் நடிப்பாரா?  என எனக்கு ஒரு சந்தேகம் இருந்தது. விக்னேஷ் சிவனும் ஒத்து வருமா? என்று கேட்டார். இருவரும் பழகிய பிறகு பிரிக்க முடியாத நண்பர்களாகி விட்டார்கள்.  படம் பார்த்த பிறகு, “இரண்டு பேரும் வெற்றி பெற்றுவிட்டார்கள்” என்று சொல்லும் அளவுக்கு படம் சிறப்பாக அமைந்துள்ளது.விக்னேஷ் சிவன் அவர்கள் மற்றும் சீமான் அண்ணன் இருவரும் மிகுந்த அன்பானவர்கள். அந்த இரண்டு நல்ல மனங்களை இணைக்க நான் ஒரு காரணமாக இருந்தது எனக்கு பெருமையாக உள்ளது.


இந்தப் படத்தில் நடித்த நடிகைகள் மிகவும் அர்ப்பணிப்புடன் உழைத்துள்ளனர். அவர்களின் நேர்மை, ஈடுபாடு, உழைப்பு ஆகியவை பாராட்டத்தக்கவை. இந்த வெற்றியில் அவர்களுக்கும் முக்கியமான பங்கு உள்ளது.நேற்று தியேட்டரில் பார்த்த அனுபவம் மிகவும் சிறப்பு. அனைத்து காட்சிகளும் நிரம்பியிருந்தன. மக்கள் அளித்த வரவேற்பு, அவர்கள் காட்டிய உற்சாகம்—இவை அனைத்தும் இந்தப் படத்தின் வெற்றியை வெளிப்படுத்துகின்றன. ஒவ்வொரு வெற்றிக்கும் பின்னாலும் ஒரு பெரிய ரகசியம் இருக்கும்; அது கடினமான உழைப்பு. அதை நான் விக்னேஷ் சிவன் மற்றும் பிரதீப் ஆகியோரிடம் பார்த்திருக்கிறேன்.

இந்தப் படத்தில் வேலை செய்ய வாய்ப்பு கொடுத்த அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றி.


*நடிகை கௌரி பேசியதாவது..,* 


பத்திரிகை நண்பர்களுக்கு முதலில் என் மனமார்ந்த நன்றி. நீங்கள் எல்லாரும் இன்று வந்திருக்கிறீர்கள் — அது   மிகுந்த மகிழ்ச்சி.இது எங்களுடைய நன்றி தெரிவிக்கும் சந்திப்பு படம் வெளியாகி இப்போது ஒரு வாரம் ஆகிறது. தொடர்ந்து நல்ல வரவேற்பு கிடைத்துக் கொண்டே இருக்கிறது.


ஒவ்வொரு சவாலான படத்துக்கு இருக்கிற மாதிரி, இந்தப் படத்துக்கும் சில சிரமங்கள், சிக்கல்கள் இருந்தன. ஆனால் அவையெல்லாம் தாண்டி, படம் அதன் தரத்திற்காக பாராட்டப்படுவது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இந்தப் படம் எனக்கு மிகவும் முக்கியமான ஒன்று. நான் இதுவரை செய்ததிலிருந்து வித்தியாசமான ஒரு கதாபாத்திரம் — “கல்கி” — இதில் செய்திருக்கிறேன். அந்தக் கதாபாத்திரத்தை மக்கள் புரிந்து கொண்டு, தனிப்பட்ட முறையில் மெசேஜ்கள் அனுப்பி பாராட்டுவது எனக்கு மிகவும் மகிழ்ச்சி தருகிறது. குறிப்பாக, அந்த நட்பு பற்றிய உணர்வை பலரும் பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள்.


நம்ம தலைமுறையில் கொஞ்சம் கவனிக்கப்படாமல் போகும் ஒரு உறவு — நட்பு. அதில் இருந்து உருவாகும் அன்பு. “வாஸ்” மற்றும் “கல்கி” இடையிலான அந்த அழகான நட்பு இந்தப் படத்தின் முக்கியமான அம்சம். சமூக வலைதளங்களில், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் எல்லாம் பார்த்தால், இயல்பான, உண்மையான நல்ல எதிர்வினைகள் அதிகமாக வருகிறது.சில இடங்களில் சிறிய எதிர்மறை கருத்துகள் இருந்தாலும், அது ஏன் என்று தெரியவில்லை. மக்கள் தியேட்டருக்கு வந்து, நேரடியாக படம் பார்த்து அனுபவிக்க வேண்டும்.


இந்தப் படம் இயல்பானது, உண்மையானது. அதனால் அதை அதே உணர்வோடு ரசிக்க வேண்டும். தேவையில்லாத எதிர்மறை கதை உருவாக்காமல், படத்தை அனுபவிக்க வேண்டும். இந்த கோடை கால வெளியீடாக, குடும்பத்தோடு, நண்பர்களோடு தியேட்டரில் ரசிக்கக்கூடிய ஒரு முழுமையான படைப்பு இது.


இயக்குநர் விக்னேஷ் சிவன் அவர்களின் கனவும், பார்வையும் இந்தப் படம். ஒளிப்பதிவாளர் ரவி வர்மன் அவர்களின் அழகான காட்சியமைப்பும் இதில் பெரிய பலம். அனைத்து நடிகர்களும் மிகுந்த உழைப்பை செலுத்தியிருக்கிறார்கள். பிரதீப் — அவருடைய முந்தைய வெற்றிகளைத் தொடர்ந்து, இதுவும் ஒரு பெரிய வெற்றியாக அமையும் திறன் கொண்ட படம். கிருத்தி — தமிழ் திரையுலகுக்கு ஒரு சிறந்த வரவு. ஒரு காலத்திற்குப் பிறகும் நினைவில் நிற்கக்கூடிய நடிகையாக அவர் இருப்பார் என்று நம்புகிறேன். மொத்தத்தில், இது ஒரு முழுமையான அனுபவத்தை தரும் படம். இதே போல் இந்த வாரமும் நல்ல வரவேற்பு தொடரும் என்று நம்புகிறோம். விரைவில் ஒரு பெரிய வெற்றி விழாவில் மீண்டும் சந்திப்போம் என்று எதிர்பார்க்கிறோம்.


குறிப்பாக இயக்குநர் விக்னேஷ் சிவன் அவர்கள் இதற்காக மிகுந்த உழைப்பும், திறமையும் செலுத்தியிருக்கிறார். அதனால், ஒரு சினிமா ரசிகராக, இந்தப் படத்திற்கு நீங்கள் ஆதரவு அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். உங்கள் ஆசீர்வாதமும், நேர்மையான ஆதரவும் எங்களுக்கு மிகவும் முக்கியம். நன்றி. 


*நடிகை தீபிகா வெங்கடாச்சலம் பேசியதாவது..,* 


இந்தப் படம் வெற்றி பெற வேண்டும் என்று மனதார பிரார்த்தனை செய்தேன். அந்த எண்ணம் நனவாகி, இன்று இங்கே நின்று பேசும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இதற்காக மிகவும் நன்றி. நான் இந்தப் படத்தில் இருந்ததைக் காட்டிலும், ஒரு பார்வையாளராக இந்தப் படத்தை அதிகமாக ரசித்தேன். நான் ஒரு பார்வையாளராகவும், படக்குழுவில் ஒருபங்காகவும், பல நிலைகளில் இருந்திருக்கிறேன். அதனால் இப்போது ஒரு நுண்ணிய கோடு எனக்கு தெளிவாக தெரிகிறது — ஒரு படம் உருவாக எவ்வளவு பேர் உழைக்கிறார்கள் என்பதை நேரில் பார்த்தேன்.


நாம் அனைவருக்கும் கருத்து சொல்லும் சுதந்திரம் இருக்கிறது. ஆனால் கருத்தை பகிர்வதுக்கும், அதை திணிப்பதுக்கும் வித்தியாசம் இருக்கிறது. இந்த மூன்று நாட்களில் நான் இதை ஆழமாக உணர்ந்தேன்.


முதலில் நன்றி சொல்ல வேண்டியது பார்வதி அவர்களுக்கு. அவர்கள் தான் என்னை இந்த வாய்ப்புக்காக அழைத்தார்கள். என்னை நம்பி இந்தக் கதாபாத்திரத்தை கொடுத்தார்கள். படப்பிடிப்பில் நான் காயம், வலி எதையும் கவனிக்காமல் முழுமையாக ஈடுபட வேண்டும் என்று நினைத்தேன். அந்த நேரத்தில் அவர்கள் கொடுத்த ஆதரவு மிக முக்கியமானது.


இந்தத் திரைப்படம் எனக்கு ஒரு புதிய அனுபவம். ஆரம்பத்தில் இது ஒரு ஐடியா மாதிரி தான் எனக்குத் தெரியும். ஆனால் படம் பார்த்தபோது நான் ஒரு உண்மையான பார்வையாளராக அதைப் பார்த்தேன். கௌரி, உங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள். உங்கள் கதாபாத்திரம் எனக்கு மிகவும் நெருக்கமாக இருந்தது.


பிரதீப் ரங்கநாதன் சார் — நீங்கள் எனக்கு ஒரு பெரிய ஊக்கமாக இருக்கிறீர்கள். எதுவும் இல்லாத இடத்திலிருந்து நீங்கள் வந்த பயணம் பலருக்கும் ஒரு உதாரணம். அதனால் தான் மக்கள் உங்களை தங்களுடைய வீட்டுப் பையன் போல பார்க்கிறார்கள்.  விக்னேஷ் சார் சினிமாவில் ஒரு வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்று ஏங்கிக்கொண்டிருக்கும் பல பெண்கள் இருக்கிறார்கள். அந்த மாதிரி நிறைய பேருக்கு, நீங்கள் எனக்கு கொடுத்த இந்த சிறிய வாய்ப்பு ஒரு நம்பிக்கையாக இருக்கும். அது நாளை பெரிய வாய்ப்பாக மாறும் என்று நான் நம்புகிறேன்.


இந்தப் படத்தில் “தமிழ் செல்வி” என்ற கதாபாத்திரம் எனக்கு மிகவும் முக்கியமானது. ஆரம்பத்தில் அது ஒரு சிறிய கதாபாத்திரம் என்று நினைத்தேன். ஆனால் படம் பார்த்தபிறகு அது இந்தக் கதையின் இதயம்தான் என்று உணர்ந்தேன்.இந்தப் படத்தின் மையக்கருத்து மிகவும் அழகானது. அது இன்னும் அதிகமான மக்களிடம், குறிப்பாக ஒவ்வொரு பெண்ணிடமும் சென்று சேர வேண்டும் என்பதே என் விருப்பம்.இந்த வாய்ப்புக்காக அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி.


*நடிகர் எஸ் ஜே சூர்யா பேசியதாவது..,* 


எங்கிருந்து ஆரம்பிப்பது என்று தெரியவில்லை… விக்னேஷ் சிவன் சாரிலிருந்து ஆரம்பிக்கிறேன். அவருக்கு என்  மேல இருக்கும் அன்பு ரொம்ப பெரியது. அது எவ்வளவு என்றால், திடீர்னு போன் பண்ணி “எங்கே இருக்கீங்க? நாளைக்கே மலேசியா வர முடியுமா?” என்று கேட்பார். ஒரு சீனுக்காக கோடிகளில் செலவு செய்ய தயாராக இருப்பார். “நீங்கள் வந்தால் அந்த சீன் இன்னும் சிறப்பாக இருக்கும்” என்பதற்காகவே இப்படிச் சொல்வார். அவர் ஒரு இனிமையான அழுத்தம் கொடுப்பார் — ஆனா அந்த அழுத்தம் முழுக்க படத்துக்காகவும், ஆடியன்ஸ்க்காகவும் தான். இவ்வளவு சிரமங்களையும், வலிகளையும் கடந்து வந்தாலும், எங்களுக்கு அது தெரியாமல் பார்த்துக்கொள்வார். அவருடைய ஒரே நோக்கம் — ஆடியன்ஸை எண்டர்டெயின் பண்ணணும், ஒரு தரமான படைப்பு கொடுக்கணும். ஒவ்வொரு விஷயத்திலும் perfection வேண்டும் என்ற ஆர்வம் அவரிடம் இருக்கிறது — விஷுவல், சவுண்ட், காஸ்ட்யூம், நடிப்பு எல்லாமே உயர்ந்த தரத்தில் இருக்க வேண்டும். அதனால் தான் தியேட்டரில் மக்கள் இப்படத்தை இவ்வளவு கொண்டாடுகிறார்கள்.


உலகம் முழுக்க இருந்து மெசேஜ்கள் வருகிறது — மலேசியா, சிங்கப்பூர், டொரண்டோ…

நீண்ட நாட்களாக தொடர்பில் இல்லாத நண்பர்கள்கூட மீண்டும் தொடர்பு கொள்கிறார்கள். அது இந்தப் படத்தின் வெற்றியை சொல்லுகிறது.


பிரதீப் ரங்கநாதன் சார் — அவருக்கு கடவுளின் ஆசீர்வாதம் ரொம்ப அதிகம்.

ஒரு சாதாரண ஆரம்பத்திலிருந்து இன்று பெரிய ஹீரோவாக உயர்ந்திருக்கிறார். அவருடைய பயணம் உண்மையிலேயே பிரமிப்பானது. நான் எப்போதும் மனசில் பட்டதை தான் சொல்வேன். அதுபோலவே, அவர் நடித்ததை பார்த்தபோது — “நீங்கள் பெரிய அளவுக்கு போவீர்கள்” என்று நம்பிக்கை வந்தது. நான் ஏழு வருடம் முன்பு சொன்னது,  அது இன்று உண்மையாகி இருக்கிறது.


பிரதீப் சார் — இந்தப் படத்தில் உங்கள் லுக், விஷுவல் அனைத்தும் மிக அழகாக இருக்கிறது. உங்கள் கேரியரில் சிறந்த தோற்றங்களில் ஒன்றாக இது இருக்கும்.

மக்கள் உண்மையிலேயே இதைப் பெரிய அளவில் கொண்டாடுகிறார்கள்.


இந்தப் படத்தில் அனிருத் இசை மிகப்பெரிய பலம். காதல் கதையென்றால் அது லவ்வும் பெயினும் சேர்ந்தது. அதற்கு ஒரு பக்கம் தீமா மியூசிக், இன்னொரு பக்கம் “எனக்கென யாருமில்லையே” போன்ற பாடல்கள் — இந்த இரண்டும் தரும் உணர்வு ரொம்ப பரவசமானது.

க்ளைமாக்ஸ்க்கு முன் வரும் அந்த பாடல், அந்த உணர்ச்சி, அந்த காட்சிகள் — எல்லாமே ரொம்ப அழகாக வேலை செய்திருக்கிறது.


இந்த மாதிரி காதல் கதைக்கு அழகான முகங்கள் தேவை. அதைப் பூர்த்தி செய்தவர்கள் கிருத்தி ஷெட்டி மற்றும் கௌரி. குறிப்பாக கிருத்தி ஷெட்டி — நல்ல நடிப்பு, நல்ல நடனம், தமிழில் பேசும் முயற்சி — ரொம்ப சந்தோஷம். உங்களுக்கு நல்ல வெற்றி தொடர்ந்து கிடைக்கணும் என்று வாழ்த்துகிறேன். கௌரி — ஏற்கனவே பெரிய பெயர் எடுத்தவர். இந்தப் படத்திலும் ஒரு நல்ல பெயர் எடுத்திருக்கிறார். குறிப்பாக ஃப்ரெண்ட்ஷிப் மற்றும் லவ் இடையிலான அந்த நுணுக்கமான கோட்டை காட்டிய சீன் ரொம்ப அருமை. சீமான் சார் கலக்கி விட்டார், ஒரு சில காட்சிகளில் அவர் வரும் போது தியேட்டர் அதிர்கிறது. 


விக்னேஷ் சிவன் சார் இந்தப் படத்தில் பல விஷயங்களை நெஞ்சை கிழிக்காமல், மெதுவாக, அழகாக சொல்லியிருக்கிறார். அதுதான் இந்தப் படத்தின் பலம்.


எந்த தியேட்டருக்குப் போனாலும் கிடைக்கும் அந்த ரெஸ்பான்ஸ் — அதுதான் இந்த வெற்றிக்கு சாட்சி. இந்தப் படத்தின் மைய கருத்து என்னவென்றால்  — நவீன விஷயங்களை நாம் பயன்படுத்த வேண்டும்,ஆனா அது நம்மை ஆளக் கூடாது. முடிவில் சொல்ல வேண்டியது ஒன்று தான் —நாம் செய்யும் கலை, மக்களை இவ்வளவு சந்தோஷப்படுத்தும் போது,

அதைவிட பெரிய மகிழ்ச்சி வேற எதுவும் இல்லை. இந்த அளவுக்கு அன்பு கொடுத்த ரசிகர்களுக்கு மனமார்ந்த நன்றி.


*நடிகை கிருத்தி ஷெட்டி பேசியதாவது..,* 


இங்கே வந்திருக்கிற எல்லாருக்கும் என் மனமார்ந்த வணக்கம். தமிழ் ஊடகங்களுக்கும், தமிழ் ரசிகர்களுக்கும் எனது பெரிய நன்றி.எனக்கு தமிழ் மொழி ரொம்ப பிடிக்கும். சின்ன வயதிலிருந்தே அதை கற்க வேண்டும் என்று ஆசை இருந்தது. எங்கள் அம்மா கோயம்புத்தூரில் படித்தவர், வீட்டில் தமிழில் பேசுவார்கள். ஆனால் எனக்கு கற்றுக்கொடுக்கவில்லை. அது அவர்களுக்குள்ள ஒரு ரகசிய மொழி மாதிரி இருந்தது. இப்போ தமிழ் படங்களில் நடிப்பதன் மூலம் அந்த அழகான மொழியை கற்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.


இந்தப் படத்தின் டிரைலர், டீசர் வந்தபோது, நான் ஒரு ரோபோட் மாதிரி கேரக்டர் பண்ணுகிறேன் என்று  நிறைய பேர் சொன்னார்கள். அது எனக்கு ரொம்ப சந்தோஷம் தந்தது. ஏன்னா, அந்தக் கேரக்டரின் அடிப்படை யோசனை அதுதான். இன்றைய தலைமுறையில் நாமெல்லாம் அதிகமாக மொபைல் உலகத்துக்குள் சென்று, நம்மைச் சுற்றியுள்ளவர்களிடம் இருந்து தள்ளிப் போயிருக்கிறோம். அந்த உணர்ச்சி விலகலை தான் அந்தக் கதாபாத்திரம் பிரதிபலிக்கிறது. அது திரையில் அழகாக வெளிப்பட்டதுக்கு நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். நிறைய பேர் அதநுடன் தொடர்பு கொண்டு பேசுவது எனக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது.


இந்தப் படத்தில் எனக்கு மிகவும் பிடித்த விஷயம் — எல்லா சம்பவங்களும் ஒரே இடத்தில் இணையும் அந்த தருணம். குறிப்பாக, அந்தக் கேரக்டர் தனது உணர்ச்சியை வெளிப்படுத்தும் காட்சி மிகவும் சிறப்பு. எந்த காரணமும் இல்லாமல், நம்மை நாமாகவே ஏற்றுக்கொண்டு நேசிக்கும் மனிதர்கள் வாழ்க்கையில் கிடைப்பது ரொம்ப அரிது. அந்த உணர்ச்சியை இந்த படம் அழகாக சொல்லுகிறது. இந்த மாதிரி ஒரு நல்ல கருத்துள்ள படத்தில் நான் ஒரு பகுதியாக இருப்பது எனக்கு பெருமை.


சமூக வலைதளங்களில் மக்கள் இந்தப் படத்தோடு இணைந்த விதம் என்னை மிகவும் மகிழ்ச்சியடையச் செய்தது. இந்தக் கதாபாத்திரத்தை எனக்கு நம்பிக்கையுடன் கொடுத்த இயக்குநர் விக்னேஷ் சிவன் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி. படம் வெளியான முதல் நாளிலேயே நான் 5-6 தியேட்டர்களுக்கு சென்று பார்த்தேன். ஒவ்வொரு தியேட்டரிலும் மக்கள் மகிழ்ச்சியாக படம் ரசித்தது எனக்கு மிகுந்த திருப்தி கொடுத்தது.


பிரதீப் ரங்கநாதன் — அவருடன் சேர்ந்து நடித்தது எனக்கு ஒரு சிறந்த அனுபவம். அவர் மிகவும் மென்மையான, அழகான நடிப்பை கொடுத்திருக்கிறார். ஒவ்வொரு முறையும் படம் பார்க்கும்போது அவருடைய நடிப்பில் புதிய அம்சங்களை கண்டுபிடிக்கிறேன். கௌரி — ஆரம்பத்தில் கொஞ்சம் பதட்டமாக இருந்தாலும், இப்போது கிடைத்துள்ள நல்ல வரவேற்பு அவருக்கு மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது.


இந்தப் படத்தில் ஒவ்வொருவரும் மிகுந்த உழைப்பை செலுத்தியிருக்கிறார்கள். ஆயிரக்கணக்கான மக்கள் இந்தப் படத்துக்காக வேலை செய்திருக்கிறார்கள். நான் இந்தப் படத்தில் எனது தோற்றத்தை பார்த்தபோது மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். இதுவரை நான் இப்படிப் பிரதிபலிக்கப்பட்டதில்லை என்று உணர்கிறேன். அதற்கான முழு பாராட்டு ஒளிப்பதிவாளர் மற்றும் இயக்குநருக்கே.இந்தப் படத்திற்கு ஆதரவு அளித்த அனைத்து ரசிகர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி.


*நடிகர் பிரதீப் ரங்கநாதன் பேசியதாவது..,* 


பத்திரிக்கை மற்றும் மீடியா நண்பர்களுக்கு வணக்கம். இந்தப் படத்தின் பயணம் சுமார் மூன்று முதல் நான்கு ஆண்டுகளாக நீண்ட ஒன்று. 2022 பிப்ரவரி மாதத்திலேயே இந்தக் கதையின் ஒன் லைன் என்னிடம் கூறப்பட்டது. அப்போது  இந்தப் படம் உருவாகப் போகிறது என்று ரசிகர்களுக்கும் தெரிந்திருந்தது.


அதற்குப் பிறகு பல தாமதங்கள் ஏற்பட்டது. பல முறை வெளியீட்டு தேதிகள் மாற்றப்பட்டது — கோடை, டிசம்பர், பிப்ரவரி என்று தொடர்ந்து மாற்றிக் கொண்டே இருந்தோம்.


பொதுவாக இப்படியான தாமதங்கள் ஒரு படத்தின் மீதான எதிர்பார்ப்பை குறைக்கும். நம்பிக்கையும் கொஞ்சம் குறையும். அது படக்குழுவினரையும் பாதிக்கும். எனக்கும் அதே சந்தேகம் இருந்தது — “இவ்வளவு தாமதமான படம் எப்படி வரவேற்பைப் பெறும்?” என்று. ஆனால் படம் வெளியான விதம் எங்களுக்கெல்லாம் ஒரு பெரிய ஆச்சரியம். மிகப்பெரிய அளவில் ஓபனிங் கிடைத்தது. மக்கள் கொடுத்த அன்பு நான் எதிர்பார்த்ததை விட அதிகமாக இருந்தது. இந்த எல்லா தடைகளையும் தாண்டி, இப்படத்திற்கு கிடைத்த இந்த அன்புக்கு மக்களிடம் என் மனமார்ந்த நன்றியை தெரிவிக்கிறேன். என் படக்குழுவினருக்கும், இயக்குநருக்கும், தயாரிப்பாளர்களுக்கும் என் நன்றிகள்.


முக்கியமாக, இந்த தருணத்தில் மூன்று முக்கிய தொழில்நுட்ப கலைஞர்களுக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன் —ஒளிப்பதிவாளர் ரவி வர்மன் சார், எடிட்டர் பிரதீப் ராகவன், இசையமைப்பாளர் அனிருத் சார். இந்த மூவர் இல்லாமல் இந்தப் படம் உருவாக முடியாது என்று நான் உண்மையாக நம்புகிறேன். அவர்கள் கொடுத்த காட்சியமைப்பு, இசை, எடிட்டிங் — இவை எல்லாமே இந்தப் படத்தை ஒரு தொழில்நுட்ப ரீதியாக வலுவான படமாக மாற்றியுள்ளது. படம் பார்த்த உடனே நான் இவர்களிடம் தனிப்பட்ட முறையில் தொடர்பு கொண்டு நன்றி தெரிவித்தேன். பொதுவாக தொழில்நுட்ப கலைஞர்கள் பின்னணியில் இருப்பதால் அவர்களின் பங்களிப்பு வெளியில் அதிகமாக தெரியாமல் போகும். இந்த நேரத்தில் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.


இறுதியாக, முதல் நாளிலிருந்து இன்று வரை எங்களுக்கு ஆதரவு அளித்து வரும் பத்திரிகை மற்றும் மீடியா நண்பர்களுக்கு என் இதயப்பூர்வமான நன்றி.



*இயக்குநர் விக்னேஷ் சிவன் பேசியதாவது..,* 


இந்தப் படம் ரிலீஸ் ஆனதே எனக்கு ஒரு ப்ளாக்பஸ்டர். அது வெளியானது தான் எனக்கு பெரிய வெற்றி. ஏன்னா, எப்போதுமே பெரிய கனவு காண்றது சுலபமில்லை. அதுக்காக கம்ஃபர்ட் ஜோன்ல இருந்து வெளியே வரணும். எனக்கு வாழ்க்கை கம்ஃபர்ட்டாக இருந்திருக்கலாம். ஆனா அந்த கம்ஃபர்ட் ஜோனை உடைத்து, என்னை நான் சாலஞ்ச் பண்ணிக்கிட்டதுதான் இந்தப் படம்.


இந்தப் படத்தில் ஒரு ஃப்ரேம் கூட ஈஸியா எடுக்க முடியாது. ஒவ்வொரு விஷயத்திலும் கவனம் — காஸ்ட்யூம், செட், VFX, மேக்கப், டயலாக் — எல்லாமே சரியாக இருக்கணும். அப்போதுதான் இது நம்பிக்கைக்குரியதாக இருக்கும். படம் வெளியான பிறகு நிறைய நல்ல விமர்சனங்களும் பாராட்டுகளும் கிடைத்திருக்கிறது. அதே சமயம் சிலர் “ஸ்லோவா இருக்கு”ன்னு சொன்னாங்க. ஆனா ஹை-கான்செப்ட் படம் என்றாலே, ஆரம்பத்தில் கொஞ்சம் விளக்கம் தேவைப்படும். அது போல தான் — விமானம் பறக்குமுன் சொல்லப்படும் விதிமுறைகள் மாதிரி. அதை நான் ஒரு constructive criticism-ஆ எடுத்துக்கிறேன். அது எனக்கும் சில விஷயங்களை புரிய வைத்தது.


இந்தப் படம் ஒரு காதல் கதைதான். ஆனா வழக்கமான மெலோட்ராமா இல்லாமல், ஒரு புதிய அனுபவம் கொடுக்கணும் என்ற முயற்சி தான் இது. அந்த முயற்சி தியேட்டரில் கைதட்டலாக மாறும்போது கிடைக்கும் சந்தோஷம் சொல்ல முடியாதது. ஒரு எழுத்தாளராக, இயக்குநராக நம்ம முயற்சி சிலருக்காவது வேலை செய்கிறது என்ற உணர்வு நம்பிக்கையை அதிகரிக்கிறது. அதற்காக ஆடியன்ஸ்க்கு மிகப்பெரிய நன்றி.


இந்தப் படம் நடக்க காரணம் பிரதீப் தான். ஆரம்பத்திலிருந்தே பட்ஜெட் சிக்கல்கள் இருந்தது. ஆனாலும் இந்தப் படம் உருவானது அவரால் தான். இன்றைக்கு நிறைய படங்கள் டிராப் ஆகுது லீக் ஆகுது, டைரக்டர்ஸ் நிலைமை ரொம்ப கஷ்டமா இருக்கு. அந்த வலியை ஒரு டைரக்டர்தான் உணர முடியும். அந்த இடத்தில், சமீபத்தில் லீக் பிரச்சனையை சந்தித்த H வினோத் அவர்களுக்கும் என் மனமார்ந்த அனுதாபம். அது ஒரு டைரக்டருக்கு மிகப்பெரிய வலி.


இந்தப் படத்தையும் நான் என்னால் முடிந்தவரை எந்த compromise-ம் இல்லாமல் எடுத்தேன். ஒரு தடவை தான் எடுக்க முடியும் — அதனால் முழுமையாக எடுத்தேன். பிரதீப் — ஒரு ஹீரோவாக மட்டும் இல்ல, ஒரு அர்ப்பணிப்புள்ள கலைஞன். நேரம், ஒழுக்கம், அர்ப்பணிப்பு— எல்லாமே வேற லெவல்.

ஒரு swimming pool sequence-ல அவர் செய்த உழைப்பு மறக்க முடியாதது. மூச்சை பிடித்து நீண்ட நேரம் நடிப்பது  ரொம்ப கஷ்டம். ஆனா அவர் முழு அர்ப்பணிப்புடன் செய்தார். அந்த மாதிரி பல நினைவுகள் இந்தப் படத்தில் எனக்கு கிடைத்திருக்கிறது. அதற்காக அவருக்கு மனமார்ந்த நன்றி. இந்தப் படத்துக்கு கிடைத்த ஓபனிங் — அது முழுக்க பிரதீப் மீது மக்கள் வைத்த நம்பிக்கை.


இந்தப் படம் நீண்ட காலம் ஓடும் என்று நான் நம்புகிறேன். சில கலவையான விமர்சனங்கள் இருந்தாலும்,  தியேட்டரில் போய் பார்த்தீங்கன்னா கண்டிப்பாக ரசிப்பீர்கள். என்னோட வார்த்தையை நம்பலாம். இந்தப் படம் சீக்கிரம் 100 கோடி கிளப்பில் சேரும் — நான் நம்பிக்கையோடு சொல்கிறேன்.


கிருத்தி — இன்னும் சின்ன குழந்தை மாதிரி தான். அவங்க அம்மாவும் அதே மாதிரி. செட்டில் பல நேரங்களில் அவர்களை ஒரு குழந்தையை கவனிப்பது போலவே நாங்கள் பார்த்துக்கொண்டோம். சில சமயங்களில் சிறிய தவறுகள் நடந்தாலும், வேலை செய்யும் போது அவருடைய அர்ப்பணிப்பு மிக உயர்ந்தது. சிறப்பாக அந்த ஸ்விம்மிங் பூல் காட்சியில், வேறு இடங்களில் படப்பிடிப்பு முடித்து வந்த பிறகும், இரவெல்லாம் உழைத்து ஒரு நாளும் சோர்வு காட்டாமல் நடித்தார். மிகவும் இனிமையானவர், அவருடன் வேலை செய்தது எனக்கு மிகவும் பிடித்த அனுபவம்.


ரவி வர்மன் அவருடைய ஒவ்வொரு ஃப்ரேமும் மிகவும் அழகாக இருக்கும். மலேசியாவில் சாதாரண சாலையில் எடுத்த காட்சிகளுக்கே ஒரு மாயம் சேர்த்தது ஒளிப்பதிவாளர் ரவி வர்மன் சார் அவர்களின் திறமை. அவர் எளிமையாகவே அசாதாரண காட்சிகளை உருவாக்கும் தனித்திறமை கொண்டவர்.


இந்தப் படத்தில் நடித்த மற்ற நடிகர்களும் மிகுந்த உழைப்பை கொடுத்துள்ளனர். கௌரி — அவருடன் வேலை செய்வது மிகவும் சுவாரஸ்யமான அனுபவம். எதிர்காலத்தை கற்பனை செய்து, அந்தக் கதாபாத்திரத்திற்கு பொருத்தமான உடை வடிவமைப்புகளை ஏற்றுக்கொண்டு, நடித்தார்.


இந்தப் படம் உருவாக முதன்மை காரணம் தயாரிப்பாளர் லலித் சார். அவர் முன் வந்து “இந்தப் படம் தொடங்கலாம்” என்று சொல்லவில்லை என்றால், இந்தப் படம் நடந்திருக்காது. அதற்காக அவருக்கு என் மனமார்ந்த நன்றி. இந்தப் படத்தில் பணியாற்றிய அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் நான் மிகவும் நன்றி கூற வேண்டும்.


எடிட்டர் பிரதீப் ராகவன் — இந்தப் படம் பல சிக்கல்களுடன் இருந்தது. எனக்கு பல சந்தேகங்கள் இருந்தன. அந்த நேரங்களில் அவர் உட்கார்ந்து ஒவ்வொரு காட்சியையும் ஆராய்ந்து, பல பதிப்புகளை உருவாக்கி, சரியான வடிவத்தை கண்டுபிடிக்க உதவினார். ஒரு படத்துக்கு அவர் பத்து படங்களுக்கு சமமான உழைப்பை கொடுத்தார். முத்துராஜ் சார் அவர்களின் தயாரிப்பு வடிவமைப்பு, உடை வடிவமைப்பு, கணினி காட்சி விளைவுகள் — இவை எல்லாமே இந்தப் படத்திற்கு பெரிய பலம். மாங்கோ போஸ்ட் நிறுவனம் இந்தப் படத்தில் கணினி காட்சி பணிகளில் மிகுந்த உதவி செய்தது. ஆரம்பத்தில் சிறிய வேலை என்று தொடங்கியதும், பிறகு முழு மனதுடன் இந்தப் படத்திற்குள் இறங்கி, எங்களுக்குத் தேவையான அனைத்தையும் செய்து கொடுத்தார்கள். அதற்காக அவர்களுக்கு நான் என்றும் நன்றி கூறுவேன்.


எஸ்.ஜே.சூர்யா சார் — 2018 முதல் இந்தக் கதாபாத்திரத்திற்கு அவரையே நான் நினைத்துக் கொண்டிருந்தேன். அவர் மிகவும் பிஸியானவர் என்றாலும், எங்களுக்கு தேவையான நேரத்தை ஒதுக்கி இந்தப் படத்திற்கு முழுமையாக ஆதரவு அளித்தார்.


சீமான் அண்ணன் — மிகவும் நல்ல மனம் கொண்டவர். அரசியலில் பெரியவர் என்றாலும், செட்டில் மிகவும் எளிமையாக, நட்பாக பழகினார். அவருடன் வேலை செய்த ஒவ்வொரு நாளும் மகிழ்ச்சியாக இருந்தது.


இந்தப் படத்தில் உதவி இயக்குநர்கள், ஒளிப்பதிவு குழு, பலர் — எல்லாருடைய உழைப்பாலும் தான் இந்தப் படம் உருவானது. அந்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி. இந்தப் படத்திற்கு உங்கள் ஆதரவு மிகவும் முக்கியம். இன்னும் ஒரு முறை தியேட்டரில் சென்று பார்த்து ஆதரிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.


இந்தப் படத்தின் மூலம் நான் கற்பனை செய்த ஒரு உலகத்தை திரையில் கொண்டு வர முடிந்தது. அந்தக் கற்பனையை ரசிகர்கள் ரசித்து கைதட்டும்போது, அதைவிட பெரிய சந்தோஷம் எனக்கு இல்லை. எவ்வளவு கஷ்டப்பட்டிருந்தாலும், இன்று மக்கள் இந்தப் படத்தை கொண்டாடுகிறார்கள் என்பதே எனக்கு மிகப்பெரிய வெற்றி. அதற்காக அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி.



இப்படத்தில் பிரதீப் ரங்கநாதன்,  கிருத்தி ஷெட்டி , எஸ். ஜே. சூர்யா,  யோகி பாபு, கௌரி கிஷன், ஷா ரா ஆகியோர் முதன்மையான வேடங்களில் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் செந்தமிழன் சீமான் சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கிறார். 



ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு Rock Star அனிருத் இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்பு பணிகளை பிரதீப் ஈ. ராகவ் மேற்கொள்ள கலை இயக்கம் மற்றும் தயாரிப்பு வடிவமைப்பு பணிகளை டி. முத்துராஜ் மேற்கொண்டிருக்கிறார். 


இந்த திரைப்படத்தை ரௌடி பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் நயன்தாரா தயாரித்திருக்கிறார். மேலும் இந்த திரைப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் எஸ். எஸ். லலித்குமார்‌ தயாரித்து, வழங்கியுள்ளார்.  


பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள இப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது

Sundeep Kishan, Krishna Chaitanya, Vijay Chilla, Shashi Devireddy, 70mm Entertainments, Power Peta Announced With A Powerful Poster*

 *நடிகர் சந்தீப் கிஷன் நடிக்கும் 'பவர் பேட்டா' (Power Peta) படத்தின் டைட்டில் வெளியீடு*



சந்தீப் கிஷன் - கிருஷ்ண சைதன்யா- விஜய் சில்லா -சசி தேவி ரெட்டி- 70 MM என்டர்டெய்ன்மென்ட்ஸ் - கூட்டணியில் தயாராகும் புதிய திரைப்படமான 'பவர் பேட்டா' படத்தின் டைட்டில் போஸ்டரை வெளியிட்டுள்ளார்கள்.


கதைக்கு முக்கியத்துவம் தரும்... தாக்கத்தை ஏற்படுத்தும் திரைப்படங்களை தயாரிப்பதில் வலிமையான நற்பெயரை பெற்றுள்ள தயாரிப்பாளர்களான விஜய் சில்லா மற்றும் சசி தேவி ரெட்டி ஆகியோர் தலைமையிலான 70 MM என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் அடுத்ததாக புதியதொரு இலட்சிய முயற்சிக்கு தயாராகி வருகின்றனர்.


தொடர்ந்து அர்த்தமுள்ள மற்றும் சக்தி வாய்ந்த கதைகளை தேர்ந்தெடுப்பதில் பெயர் பெற்ற நாயகன் சந்தீப் கிஷன் திரையுலகில் அறிமுகமாகி 16 ஆண்டுகள் நிறைவு செய்து ஒரு குறிப்பிடத்தக்க மைல் கல்லை எட்டியுள்ளார். இந்த நிகழ்வை கொண்டாடும் வகையில் திறமையான எழுத்தாளரும், இயக்குநருமான கிருஷ்ண சைதன்யா இயக்கத்தில் தயாராகும் புதிய படத்தில் கரம் கோர்த்திருக்கிறார்‌‌. இவரது கதை சொல்லும் விதம் மற்றும் ஆழமான கதைக்களம் ஆகியவற்றின் வலிமையான கலவையை கொண்டிருக்கும் அற்புதமான புதிய திரைப்படத்தை பற்றிய தகவல்களை இக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.


'பவர் பேட்டா' எனும் தலைப்பே ஆர்வத்தை தூண்டுகிறது. மேலும் இந்த டைட்டில் போஸ்டர் ஒரு சக்தி வாய்ந்த தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இருண்ட... யதார்த்தமான மற்றும் குறியீடுகள் நிறைந்த அந்த போஸ்டரில் ரத்தத்தில் தோய்ந்த சதுரங்க பலகையும் இடம் பிடித்துள்ளது. இது வியூகம், சக்தி மற்றும் தியாகம் ஆகியவற்றின் ஒரு உன்னதமான ஒரு பக்கமாகும். அந்த சதுரங்க விளையாட்டு காய்கள் உடைந்தும் விழுந்தும் அல்லது ஒரு விதமான வெற்றியின் தருவாயில் நிற்பது போன்றும் தோன்றுகின்றன. அதே சமயம் வன்முறையால் கறைபட்டு நசுக்கப்பட்ட ஒரு ரோஜா மலர் அந்த குழப்பங்களுக்கு மத்தியில் இடம் பிடித்திருக்கிறது. இந்த காட்சி படத்தின் மைய கரு பொருளான காதல் - கௌரவம் - அரசியல்- ஆகியவற்றுக்கான குரலாக ஒலிக்கிறது. உணர்ச்சிகளும், அதிகாரப் போராட்டங்களும் மோதும்... ஒவ்வொரு அசைவிற்கும் ஒரு விலை கொடுக்க வேண்டிய தீவிரமான கதை களத்தையும் இது சுட்டிக்காட்டுகிறது.


இயக்குநர் கிருஷ்ண சைதன்யா பல்வேறு வகைமைகளை ஒன்றிணைத்து ஒரு விறுவிறுப்பான கதைக் களத்தை உருவாக்கியுள்ளார். சந்தீப் கிஷன் தனது திரை வாழ்க்கையின் மிகவும் தீவிரமான... பத்திரமாக இருக்கக்கூடிய ஒன்றில் அடி எடுத்து வைப்பதால் ஒரு முழுமையான ஒரு மாற்றத்திற்கு உள்ளாவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.


கதை சொல்லும் பிரம்மாண்டத்தை கடந்து 'பவர் பேட்டா' ஒரு சிறந்த தொழில்நுட்ப குழுவினரையும் கொண்டிருக்கிறது. மணி ஷர்மா இசையமைக்கிறார். பிரபல ஒளிப்பதிவாளரான மதி ஒளிப்பதிவு செய்கிறார். தேசிய விருது பெற்ற பட தொகுப்பாளரான ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு பணிகளை கவனிக்க ... ராமகிருஷ்ணா மற்றும் மோனிகா ஆகியோர் தயாரிப்பு வடிவமைப்பை வழி நடத்துகின்றனர். ஒலி வடிவமைப்பு பணிகளை சச்சின் சுதாகரன் மற்றும் ஹரிஹரன் ஆகியோர் இணைந்து கையாளுகிறார்கள்.


கவர்ச்சிகரமான தலைப்பு - ஆர்வத்தை தூண்டும் டைட்டில் போஸ்டருடன் 'பவர் பேட்டா' திரைப்படம் தனி நபரின் பிரத்யேக உணர்வுகள்... அதிகாரப் போட்டியுடன் மோதும் ஒரு விறுவிறுப்பான கதைக்கு களம் அமைக்கிறது.


இப்படத்தைப் பற்றிய கூடுதல் விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என படக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.‌


*நடிகர்கள்* : சந்தீப் கிஷன்


*தொழில்நுட்பக் குழு :*


எழுத்து & இயக்கம் : கிருஷ்ண சைதன்யா


தயாரிப்பாளர்கள் : விஜய் சில்லா - சசி தேவி ரெட்டி


தயாரிப்பு நிறுவனம் : 70 MM என்டர்டெய்ன்மண்ட்ஸ்


இசை : மனி ஷர்மா


ஒளிப்பதிவு : மதி


படத்தொகுப்பு : ஸ்ரீகர் பிரசாத்


தயாரிப்பு வடிவமைப்பு : ராமகிருஷ்ணா & மோனிகா


ஒளி வடிவமைப்பு : சச்சின் சுதாகரன் &ஹரிஹரன்


மக்கள் தொடர்பு : யுவராஜ்.


*Sundeep Kishan, Krishna Chaitanya, Vijay Chilla, Shashi Devireddy, 70mm Entertainments, Power Peta Announced With A Powerful Poster*


The prestigious banner 70mm Entertainments, headed by producers Vijay Chilla and Shashi Devireddy, has earned a strong reputation for backing content-driven, impactful cinema. Now they are gearing up for another ambitious venture. Hero Sundeep Kishan, known for consistently choosing meaningful and powerful scripts, marks a significant milestone—completing 16 years in the film industry. To commemorate the occasion, the team has announced an exciting new film with talented writer-director Krishna Chaitanya, bringing together a strong combination of storytelling and rooted narrative.


The title Power Peta itself is intriguing, and the announcement poster leaves a powerful impression. Dark, gritty, and rich in symbolism, the poster features a blood-soaked chessboard- a classic metaphor for strategy, power, and sacrifice. The pieces appear broken, fallen, or standing in uneasy victory, while a crushed rose lies amid the chaos, stained by violence. The visual sets the tone for the film’s core themes- Love. Honour. Politics., hinting at an intense narrative where emotions and power struggles collide, and every move comes at a cost.


Director Krishna Chaitanya crafted a compelling story that blends multiple genres into a gripping narrative. Sundeep Kishan is expected to undergo a complete transformation, stepping into what could be the most intense role of his career.


Beyond its scale in storytelling, Power Peta also boasts a stellar technical team. Music will be composed by Mani Sharma, while cinematography is handled by the acclaimed Madhie. National Award-winning editor Sreekar Prasad takes charge of editing, with Ramakrishna and Monika leading the production design. Sound design will be crafted by Sachin Sudhakaran and Hariharan.


With a compelling title and an intriguing title poster, #PowerPeta sets the stage for a gripping narrative where personal emotions collide with power dynamics.


More details about the film are expected to be revealed soon.


*Cast* : Sundeep Kishan


*Technical Crew:*

Writer, Director: Krishna Chaitanya

Producers: Vijay Chilla and Shashi Devireddy

Banner: 70 mm Entertainments

Music: Mani Sharma

DoP: Madhie

Editing: Sreekar Prasad

Production Design: Ramakrishna and Monika

Sound Design: Sachin Sudhakaran and Hariharan

PRO: Yuvraaj

Actor Allu Arjun’s ‘Raaka’ First Look Captivates Fans and Grabs Widespread Attention!*

 *Actor Allu Arjun’s ‘Raaka’ First Look Captivates Fans and Grabs Widespread Attention!*



When Allu Arjun unveils a first look, the entire nation awaits. It is never just a reveal, but a moment that captures widespread attention. Over the years, he has established himself as one of the biggest stars in Indian cinema, consistently raising expectations with every project.


Following the massive success of Pushpa 2, instead of settling into comfort, Allu Arjun has chosen reinvention once again. With Raaka, he presents a completely new and distinct look, reinforcing his reputation for pushing boundaries.


What stands out is the effort behind the transformation. Sources reveal that achieving the Raaka look involves nearly 3 to 4 hours of intense daily preparation, reflecting a level of discipline and commitment rarely seen at this scale. Even at the peak of his stardom, he continues to approach every role with the mindset of constant improvement.


The impact of the Raaka look was evident almost immediately, with cricketer Hardik Pandya seen recreating the signature hand gesture, underlining how quickly it has entered popular culture.


Known for setting trends through his transformations, Allu Arjun once again brings a fresh screen presence and energy with Raaka. The look is not just a makeover, but a result of detailed craftsmanship, consistency, and an uncompromising focus on perfection.


At a time when success often leads to repetition, Allu Arjun’s journey stands out for its refusal to slow down. From delivering one of the biggest hits in Indian cinema to taking on a completely new challenge, he continues to evolve with every step.


With Raaka, Allu Arjun once again proves that true stardom lies in staying restless, committed, and constantly reinventing oneself a setting the stage to take Indian cinema to a wider global audience.

Deconstruct Announces Anirudh Ravichander as Official Brand Partner: A Story Sparked Organically by the Internet*

 *'டீகன்ஸ்ட்ரக்ட்' (Deconstruct )நிறுவனத்தின் பிராண்ட் பார்ட்னரான அனிருத்* 



 'டீகன்ஸ்ட்ரக்ட்', இசையமைப்பாளர் அனிருத்தை தனது அதிகார பூர்வமான பிராண்ட் பார்ட்னராக அறிவிக்கிறது.


இணையதளத்தின் மூலம் இயல்பாக தூண்டப்பட்ட ஒரு கதை.


நவீன கால பிராண்ட் மற்றும் கூட்டணிகளின் மாறி வரும் தன்மையை பிரதிபலிக்கும் ஒரு நடவடிக்கையாக டீகன்ஸ்ட்ரக்ட் நிறுவனம் இசை உலகின் பிரபல ராக் ஸ்டார் அனிருத் ரவிச்சந்தருடன் தனது அதிகாரப்பூர்வமான கூட்டணியை அறிவித்துள்ளது. இந்த கூட்டணி. ஒரு கூட்ட அரங்கில் இல்லாமல்... இணையத்தின் வாயிலாக தொடங்கி இருக்கிறது. 


இதன் மூலம் அனிருத் மற்றும் அவரது ஸ்டைலிஸ்ட் இடம்பெற்ற ஒரு வைரல் இன்ஸ்டாகிராம் ரீலில் இருந்து, இந்த தொடர்பு தொடங்குகிறது. அதில் கூர்மையான பார்வை கொண்ட ரசிகர்கள்... பின்னணியில் நுட்பமாக வைக்கப்பட்டிருந்த டீகன்ஸ்ட்ரக்ட் சன்ஸ்கிரீனை கண்டறிந்தனர். அதைத் தொடர்ந்து சமூக ஊடகங்களில் இயல்பான உரையாடல்களின் மூலமாக அலை எழுந்தது. பார்வையாளர்கள் அந்தத் தயாரிப்பை அடையாளம் கண்டு விவாதித்ததன் மூலம் ஒரு ' க்ஷண' நேர தருணத்தை மிகப் பெரும் கலாச்சார பேசு பொருளாக மாற்றினர்.  


திட்டமிடப்படாத இந்த கண்டுபிடிப்பின் நம்பகத் தன்மையை உணர்ந்து டீகன்ஸ்ட்ரக் அந்த தருணத்தை அப்படியே ஏற்றுக் கொண்டது. ஒரு உண்மையான அன்றாட பயன்பாட்டு நிகழ்வாக தொடங்கிய இது... இப்போது திட்டமிடப்பட்ட விளம்பரத்தை விட உண்மையான இயல்பான தொடர்பில் வேரூன்றிய அந்த அர்த்தமுள்ள கூட்டணியாக உருவெடுத்துள்ளது. 


இது தொடர்பாக டீகன்ஸ்ட்ரக்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி மாலினி அடபு ரெட்டி பேசுகையில், 


''டீகான்ஸ்ட்ரக்ட்’ நிறுவனத்தில் உண்மையான தருணங்களே மிகவும் சக்தி வாய்ந்த கதைகளை உருவாக்குகின்றன என்று நாங்கள் எப்போதும் நம்புகிறோம். குறிப்பிட்ட அந்த தருணத்துடன் மக்கள் எவ்வளவு இயல்பாக ஒன்றி போனார்கள் என்பதை நாங்கள் கண்டபோது... அதை முன்னோக்கி எடுத்துச் செல்வது மிகவும் இயல்பானதாக தோன்றியது. அனிருத் - நம்பகத் தன்மை மற்றும் எளிதில் தொடர்புபாபடுத்தக்கூடிய விசயம் ஆகியவற்றின் உருவமாக திகழ்கிறார். இந்த மதிப்புகள் அறிவியல் ரீதியான தொழில் நுட்பத்திற்கு ஆதரவளித்து வரும் மற்றும் அதில் புகழ்பெற்ற எங்கள் பிராண்டுடன் கச்சிதமாக பொருந்துகின்றன,'' என்றார். 


தனது சாதனை படைத்த இசை மற்றும் இளைஞர்களுடன் பரந்த தொடர்புக்காக அறியப்படும் அனிருத் ரவிச்சந்தரின் இயல்பான செல்வாக்கும், அவருடைய தனிப்பட்ட பாணியும்... நாடு முழுதும் உள்ள பார்வையாளர்களிடம் தொடர்ந்து தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றன. எங்களின் இந்த கூட்டணி...பாரம்பரிய பிரபலங்களின் விளம்பர ஒப்பந்தங்களில் இருந்து கலாச்சாரத்திற்கு முதலிடம் கொடுக்கும் மற்றும் பார்வையாளர்களை மையமாகக் கொண்ட ஒரு அணுகுமுறைக்கு மாறுவதை குறிக்கிறது. இதில் நுகர்வோர் புதிய கண்டுபிடிப்புகளை முன்னெடுத்துச் செல்ல பிராண்டுகள் அதற்கு வழிகாட்டியாய் திகழ்ந்து, பதில் அளிக்கின்றன. 


இந்த கூட்டணியின் மூலம் டீகன்ஸ்ட்ரக்ட் நிறுவனம் தனது சமூகத்தின் கருத்துக்களை கேட்டு.. அதற்கேற்ப தன்னை மாற்றிக் கொண்டு அவர்களுடன் இணைந்து வளரும் ஒரு பிராண்டாக தனது நிலையை தொடர்ந்து வலுப்படுத்துகிறது. மேலும் இன்றைய சூழலில் நம்பகத் தன்மை தான் மிக வலிமையான நாணயம் என்பதையும் இது நிரூபிக்கிறது.


*Deconstruct Announces Anirudh Ravichander as Official Brand Partner: A Story Sparked Organically by the Internet*


In a move that reflects the evolving nature of modern-day brand collaborations, Deconstruct today announced its official partnership with music sensation Rockstar Anirudh Ravichander, a collaboration that began not in a boardroom, but on the internet.


The association traces back to a viral Instagram reel featuring Anirudh and his stylist, where eagle-eyed fans spotted a Deconstruct sunscreen subtly placed in the background. What followed was a wave of organic conversations across social media, with audiences identifying and discussing the product, turning a fleeting moment into a cultural talking point.


Recognizing the authenticity of this unplanned discovery, Deconstruct chose to embrace the moment. What started as a genuine, everyday usage instance has now evolved into a meaningful collaboration rooted in real connection rather than scripted endorsement.


“At Deconstruct, we’ve always believed that authentic moments make the most powerful stories,” said Malini Adapureddy, CEO of Deconstruct. “When we saw how organically people resonated with that moment, it felt only natural to take it forward. Anirudh embodies authenticity and relatability, values that align perfectly with our science-backed brand.”


Known for his chart-topping music and massive youth connect, Anirudh Ravichander’s effortless influence and personal style have consistently resonated with audiences across the country. This partnership marks a shift from traditional celebrity endorsements to a more culture-first, audience-led approach, where consumers drive discovery and brands respond.


With this partnership, Deconstruct continues to strengthen its positioning as a brand that listens, adapts, and grows with its community, proving that in today’s landscape, authenticity is the strongest currency.

MILLION DOLLAR PUBLICATION*

 *MILLION DOLLAR PUBLICATION* 


*(மில்லியன் டாலர் பதிப்பகம்)*


தேதி: 13 ஏப்ரல் 2026


பொருள்: ‘மில்லியன் டாலர் பப்ளிகேஷன்’ தொடக்க அறிவிப்பு.


வணக்கம்,

திரைத்துறையில் புதிய திறமைகளை அடையாளப்படுத்தியது போலவே, எழுத்துலகிலும் ஆரோக்கியமான மாற்றத்தை விதைக்க "மில்லியன் டாலர் பப்ளிகேஷன்" தனது பயணத்தை இனிதே தொடங்குகிறது.


இளம் எழுத்தாளர்களின் படைப்புகளை உலகிற்கு அறிமுகப்படுத்துவதும், அவற்றை எதிர்காலக் காட்சி ஊடகங்களுக்கான வலுவான அடித்தளமாக மாற்றுவதுமே எங்களின் முதன்மை நோக்கம்.


நிறுவனர் திரு. யுவராஜ் கணேசன் அவர்களின் வழிகாட்டலில், இப்புதிய முன்னெடுப்பைத் திறம்பட வழிநடத்திச் செல்ல பின்வரும் நிர்வாகக் குழு ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது:


நிர்வாகக் குழு:

பதிப்பாளர்: திரு. யுவராஜ் கணேசன்

துறைத் தலைவர்: திரு. புளியந்தோப்பு மோகன்

முதன்மைப் பொறுப்பாசிரியர்: திரு. ஷாஜன் கவிதா

தலைமை வடிவமைப்பு: திருமதி. ரேவதி


எங்களின் இந்த இலக்கிய முயற்சிக்கும் உங்களின் மேலான அன்பையும் பேராதரவையும் வழங்குமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கிறோம்.


அன்புடன்,

யுவராஜ் கணேசன்

நிறுவனர், மில்லியன் டாலர் ஸ்டூடியோஸ் & பப்ளிகேஷன்.

G.V. Prakash Kumar collaborates with “Joe” Director!

 *ஜி.வி.பிரகாஷை இயக்கும் ‘ஜோ’ இயக்குநர்* 



*‘ஜோ’ இயக்குநருடன் கைகோர்க்கும் ஜி.வி.பிரகாஷ்*


*லார்க் ஸ்டூடியோஸ் – பேரலல் யூனிவர்ஸ் பிக்சர்ஸ் இணையும் புதிய படம்*


லார்க் ஸ்டூடியோஸ் மற்றும் பேரலல் யூனிவர்ஸ் பிக்சர்ஸ் இணைந்து தயாரிக்கும் புதிய படத்தில் ஜி.வி.பிரகாஷ்குமார் நாயகனாக நடித்து இசையமைக்க உள்ளார். இதன் அதிகாரபூர்வ அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது.


‘கருடன்’ மற்றும் ‘மாமன்’ ஆகிய படங்களைத் தொடர்ந்து லார்க் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் படமாக இது உருவாகிறது. இதன் ஆரம்பகட்டப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.


இப்படத்தினை ‘ஜோ’ வெற்றி படத்தினை இயக்கிய ஹரிஹரன் ராம் இயக்கவுள்ளார். அவர் சொன்ன கதையைக் கேட்டுவிட்டு நாயகனாக நடிப்பது மட்டுமன்றி இசையமைத்து, தயாரிப்பாளராக இணையவும் முடிவு செய்துள்ளார் ஜி.வி.பிரகாஷ். அவரது நடிப்பில் இதுவரை வெளியான படங்களில் இருந்து வேறுபட்டு, முழுக்க வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். இதற்காக தீவிர பயிற்சியும் மேற்கொண்டு வருகிறார்.


’ஜோ’ படத்தில் தனது நடிப்பின் மூலம் கவனம் ஈர்த்த மாளவிகா மனோஜ், இப்படத்தில் ஜி.வி.பிரகாஷுக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். இப்படத்துக்கு ஒளிப்பதிவாளராக தேனி ஈஸ்வர் பணிபுரியவுள்ளார். ‘கர்ணன்’, ‘வாழை’ உள்ளிட்ட பல படங்களுக்கு தனது ஒளிப்பதிவின் மூலம் மெருகூட்டியவர் இப்படத்தில் இணைந்துள்ளார். இப்படத்தின் இதர நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் தேர்வு மும்முரமாக நடைபெற்று வருகின்றன.


இந்த புதிய படத்தின் படப்பிடிப்பு ஜூன் மாதத்தில் தொடங்கவுள்ளது. இதற்கான படப்பிடிப்பு இடங்களைத் தேர்வு செய்யும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.


*Joe” filmmaker to direct G.V. Prakash Kumar*


*G.V. Prakash Kumar collaborates with “Joe” Director!*


Lark Studios & Parallel Universe Pictures collaborate for a New Film


Lark Studios and  Parallel Universe Pictures have officially announced their new collaborative project, starring G.V. Prakash Kumar in the lead role. This marks the third production venture of Lark Studios, following their blockbusters Karudan and Maaman. Pre-production is currently progressing at a brisk pace.


The film is directed by Hariharan Ram, who gained widespread acclaim with his critically and commercially successful Joe. Impressed by his distinctive storytelling, G.V. Prakash Kumar not only agreed to headline the project but also compose the music. The film will present him in a completely new dimension, for which he is undergoing intense preparation.


Malavika Manoj, who impressed audiences with her performance in Joe, plays the female lead opposite G.V. Prakash Kumar.


Cinematography is handled by Theni Eswar, known for his visually striking work in films like Karnan and Vaazhai. Talks are currently underway with prominent actors and technicians, and official announcements regarding the extended cast and crew will be made soon.


The film is scheduled to go on floors in June, with location scouting already underway.