-

Loading latest news...

Hombale Films Announces Its First-Ever Overseas Distribution Venture with PEDDI

 *மெகா ஸ்டார் ராம்சரணின் “பெத்தி” படம் மூலம் வெளிநாட்டு விநியோகத்தில் களமிறங்கும் ஹொம்பாலே ஃபிலிம்ஸ்!*



இந்தியாவின் மிகவும் பிரபலமான தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ஹொம்பாலே ஃபிலிம்ஸ் (Hombale Films) தனது முதல் வெளிநாட்டு விநியோக முயற்சியாக “பெத்தி” திரைப்படத்தை அறிவித்துள்ளது. சமீபத்தில் வெளிநாட்டு விநியோகத் துறையில் விரிவாக்கம் செய்வதாக அறிவித்திருந்த ஹொம்பாலே ஃபிலிம்ஸ், மெகா பவர் ஸ்டார் ராம் சரண் நடிக்கும் “பெத்தி” திரைப்படத்தின் மூலம் தனது சர்வதேச விநியோக பயணத்தை தொடங்குகிறது.


கேஜிஎஃப், காந்தாரா, சலார் போன்ற மாபெரும் வெற்றி திரைப்படங்கள் மூலம் இந்திய சினிமாவின் அளவுகோலை மாற்றிய ஹொம்பாலே ஃபிலிம்ஸ், தற்போது 2026 ஆம் ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும் பான்-இந்திய திரைப்படங்களில் ஒன்றான “பெத்தி” மூலம் சர்வதேச விநியோகத்தில் முக்கியமான முன்னேற்றத்தை எடுத்துள்ளது.


பல ஆண்டுகளாக, மண் மணம் சார்ந்த கதையையும் பிரம்மாண்டமான திரையரங்கு அனுபவத்தையும் இணைத்து சினிமா ரசிகர்களுக்கு விருந்தளித்து வரும் ஹொம்பாலே ஃபிலிம்ஸ், இந்தியாவைத் தாண்டியும் உலகளாவிய ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளது.


“பெத்தி” திரைப்படத்தின் மூலம், ஹொம்பாலே ஃபிலிம்ஸ் தனது சர்வதேச தடத்தை நேரடியாக வலுப்படுத்துகிறது. இது அந்த நிறுவனத்தின் முதல் அதிகாரப்பூர்வ வெளிநாட்டு விநியோக முயற்சியாக கருதப்படுகிறது. இந்த அறிவிப்பு திரைப்படத்தின் உலகளாவிய வெளியீட்டிற்கான எதிர்பார்ப்பை மேலும் உயர்த்தியுள்ளது.


புகழ்பெற்ற இயக்குநர் புச்சி பாபு சனா இயக்கும் “பெத்தி” திரைப்படம், அதன் அதிரடியான ஆக்ஷன் பின்னணி, சக்திவாய்ந்த கதைக்களம் மற்றும் ராம் சரணின் தீவிரமான உருமாற்றத்தால் ஏற்கனவே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. மேலும், ஆஸ்கர் விருது பெற்ற இசையமைப்பாளர் A. R. ரஹ்மான் இசையமைப்பது இந்த படத்துக்கு கூடுதல் பலத்தை வழங்குகியுள்ளது.


ஹொம்பாலே ஃபிலிம்ஸ் “பெத்தி” படத்தை விநியோகம் செய்வது, ரசிகர்கள் மற்றும் திரை வர்த்தக வட்டாரங்களில் மிகப்பெரிய உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. முக்கிய சர்வதேச பகுதிகளில் மிகப்பெரிய அளவில் வெளிநாட்டு வெளியீடு நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.


“பெத்தி” திரைப்படம் ஜூன் 4 ஆம் தேதி உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக திரையரங்குகளில் வெளியாக உள்ளது.


*Hombale Films Announces Its First-Ever Overseas Distribution Venture with PEDDI*


One of India’s most celebrated production house, Recently, Hombale Films had announced their expansion into the overseas distribution space, and PEDDI becomes the prestigious banner’s first international distribution venture, starring Mega Powerstar Ram Charan.


After redefining the scale of Indian cinema with blockbusters like KGF, Kantara, and Salaar, Hombale Films has now taken a significant step forward by venturing into international distribution beginning with one of the most anticipated pan-Indian films of 2026, PEDDI.


Over the years, Hombale Films has built a strong reputation for delivering cinematic spectacles that combine rooted storytelling with massive theatrical appeal. Their films have consistently crossed language and regional barriers, creating a loyal audience base not just in India, but across global markets.


With PEDDI, Hombale Films is set to directly strengthen its international footprint, marking this as the banner’s first official overseas distribution acquisition. The move is already being seen as a major boost for the film’s worldwide release prospects.


Directed by acclaimed filmmaker Buchi Babu Sana, PEDDI has generated tremendous buzz for its raw action-packed backdrop, powerful visuals, and Ram Charan’s intense transformation. Adding further weight to the project is music by Oscar-winning composer A. R. Rahman.


The association of Hombale Films with PEDDI has significantly amplified excitement in trade and fan circles, with expectations of a massive overseas rollout across key international territories.


PEDDI is slated for a grand worldwide theatrical release on June 4th

மீரா கதிரவனின் 'ஹபீபி' திரைப்படத்திற்கு 'யூ' சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது!*

 *திரையரங்குகளில் குடும்பங்கள் பார்த்து ரசிக்க இருக்கும் மீரா கதிரவனின் 'ஹபீபி' திரைப்படத்திற்கு 'யூ' சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது!*



நல்ல கதையம்சத்துடன் கூடிய எண்டர்டெயின்மெண்ட் படங்களை மகிழ்வோடும் கொண்டாட்டத்துடனும் குடும்ப பார்வையாளர்கள் வரவேற்பார்கள். மனித உறவுகளை அடிப்படையாகக் கொண்ட உணர்வுப்பூர்வமான கதைகள் தலைமுறைகள் தாண்டியும் ஸ்பெஷலான பிணைப்பை உருவாக்கும். அப்படியான நல்ல சினிமா அனுபவத்தை தர இருக்கும் படம்தான் 'ஹபீபி'. 


மண் சார்ந்த நல்ல கதையம்சம் கொண்ட உணர்வுப்பூர்வமான இந்தப் படத்தை மீரா கதிரவன் இயக்கியுள்ளார். இப்படம் தற்போது சென்சார் பணிகளை வெற்றிகரமாக நிறைவு செய்து, சென்சார் வாரியத்தினரிடமிருந்து 'யூ’ சான்றிதழைப் பெற்றுள்ளது. மேலும், நல்லுணர்வுகளும் நேர்மறை மதிப்புகளும் நிறைந்த குடும்பத்துடன் பார்க்கக்கூடிய தரமான படைப்பாக இப்படத்தை உருவாக்கியதற்காக படக்குழுவினரை அதிகாரிகள் பாராட்டியுள்ளனர்.


தரமான படங்களை தேர்ந்தெடுத்து ரசிகர்களிடம் கொண்டுபோய் சேர்க்கும் ரோமியோ பிக்சர்ஸ் ராகுல், உலகம் முழுவதும் ‘ஹபீபி’ திரைப்படத்தை வெளியிட முன்வந்துள்ளது வணிக வட்டாரங்களிலும் ரசிகர்களிடையிலும் இந்தப் படத்திற்கான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. 


புதிய திறமையாளர்களுடன் நடிகர் கஸ்தூரி ராஜா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இந்தப் படத்திற்கு, இசையமைப்பாளர் சாம் சி.எஸ். உணர்வுகளை ஆழமாகத் தொட்டுச் செல்லும் இசையை கொடுத்துள்ளார். குறிப்பாக, 'வல்லோனே...' பாடலுக்காக மறைந்த புகழ்பெற்ற பாடகர் நாகூர் இ.எம். ஹனிபாவின் குரலை செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் மூலம் மீண்டும் உருவாக்கியிருப்பது கவனம் ஈர்த்தது.


இப்படத்திற்கான நேர்மறையான எதிர்பார்ப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், தயாரிப்பாளர்கள் விரைவில் அதிகாரப்பூர்வ வெளியீட்டு தேதியை அறிவிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

மிரட்டலாக தயாராகும் அமானுஷ்ய நாட்டார் மர்மகதை!

 மிரட்டலாக தயாராகும் அமானுஷ்ய நாட்டார் மர்மகதை!


பிரமாண்டமாக தயாரிக்கும் கோமளா ஹரி பிக்சர்ஸ். 




 “GENTLEWOMAN” படத்தை தயாரித்த

“கோமளா ஹரி பிக்சர்ஸ்” பட நிறுவனம் சார்பில் கோமளா ஹரிபாஸ்கரன் தனது நான்காவது படைப்பாக

ஒரு கதையை பிரமாண்டமாக தயாரிக்கிறார். புரொடக்‌ஷன்-4 படமான இதற்கு இன்னும் பெயர் சூட்ட படவில்லை. 


சமூகத்தின் நீண்டகால கலாச்சாரம், பண்பாடு மற்றும் மரபுகளை வெளிப்படுத்தும் மண்ணில் புதைந்த பழைய கலை வடிவங்களையும், பழமை கதையின் பதிவாக இருக்கும் விதமாக இப்பட கதை உருவாகி இருக்கிறது.

1980-களின் மத்தியில், தென் மாவட்டங்களில் ரத்தமும் சதையுமாய் அரங்கேறிய ‘அமானுஷ்யம்’ சார்ந்த உண்மைக் கதை என்பது, இப்படத்தை பிரமாண்ட கதையாக மாற்றியுள்ளது. 


மண் சார்ந்த படைப்பான “விழா” படத்தை

இயக்கி, அனைவர் பாராட்டையும் பெற்ற பாரதி பாலகுமாரன் இப்படத்தை வடிவமைத்து இயக்குகிறார். இந்த கதையை எடுப்பதென்று முடிவு செய்த பின்பு, உண்மைக்கு நெருக்கமான பல வழிகளில் ஆராய்ந்து கதை அமைத்து, திரைக்கதையை எழுதியுள்ளார்


இதில், நாயகனாக விஷ்வா நடிக்கிறார்.

தன் தலைமுறையின் தீரா சாபத்திலிருந்த தனது

குடும்பத்தை மீட்க போராடும் ஒரு இளஞனாக விஷ்வா நடிக்கிறார். இவர், ‘சாம்பியன்’ படம் மூலம் அறிமுகமானவர். இதற்காக, ஆறு மாதம் கடும் பயிற்சி எடுத்து கதை நாயகனாக தன்னை தயார் செய்து வருகிறார். 

இன்னொரு முக்கிய கதாபாத்திரத்தில் பெரிய நடிகர் ஒருவர் நடிக்க பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது. மேலும், மைம் கோபி, ஆடுகளம் நரேன், ரிஷா ஜாக்கோப்ஸ், முனிஷ்காந்த், அனுபமா குமார், பாபா பாஸ்கர், ரெம்யா சுரேஷ் மற்றும் பல நடிகர், நடிகை தேர்வு நடை பெற்று வருகிறது. 


இதன் படபிடிப்பு இம்மாதம் 22ம் தேதி முதல் தொடர்ந்து 40 நாள்கள் நடை பெறுகிறது. சென்னையிலும் சில காட்சிகள் நடைபெறும். 



#PRODUCED BY KOMALA HARI PICTURES 

#PRODUCERS: KOMALA & HARI BHASKARAN 


#WRITER & DIRECTOR BHARATHI BALAKUMARAN 

( ‘VIZHA’ Fame ) 


#CINEMATOGRAPHER: BANU MURUGAN ( ‘MUTHINA KATHIRIKA’ Fame )


#EDITOR: KALAIVANAN ( ‘AMARAN’ Fame )


#ART DIRECTOR: PRAGATHEESWARAN ( ‘POOKIE’ , ‘DIESEL’ Fame )


#LYRICIST: MOHAN RAJAN ( ‘LOVER’, ‘LUBBER PANDHU’ Fame. 


#STUNT MASTER: DINESH KAASI (‘KARA’ Fame)


#STORY LINE & DIALOGUE: WRITER KANI RAJA 

Pro: Johnson 

Publicity: Movie Bond 

#PRODUCTION Executive: G.Thiruneelagandan

PRODUCTION Mananger: P.Sivakumar

Komala Hari Pictures Brings a Grand Cinematic Spectacle!*

 *A Terrific Supernatural Folk Mystery in the Making!*


*Komala Hari Pictures Brings a Grand Cinematic Spectacle!* 


Komala & Hari Bhaskaran of Komala Hari Pictures is producing this film, which marks his ‘Production No.4’. The yet to be titled movie is produced on a grand scale. 


The story is rooted in the long-standing culture, traditions, and heritage of society, while also bringing to light ancient art forms buried deep within the soil of the land. Designed as a cinematic record of forgotten folklore, the film is based on a true supernatural incident that reportedly unfolded in the southern districts during the mid-1980s, a haunting tale filled with blood, flesh, and unexplained horrors, now transformed into a grand cinematic narrative.


The film is written and directed by Bharathi Balakumaran, who won acclaim for his nativity based film Vizha. After deciding to bring this story to the screen, he conducted extensive research through various authentic sources to shape the screenplay as close to reality as possible.


Actor Vshvaa ( This is the correct spelling ) plays the protagonist, a young man fighting to save his family from a curse that has haunted generations. Vshvaa, who made his debut with the film Champion, has reportedly undergone six months of intense preparation to transform himself for the role.


Talks are currently underway with a senior actor for another pivotal role. While the process has already started, the official confirmation will be made soon. The star-cast comprises prominent actors including Mime Gopi, Aadukalam Naren, Risha Jacobs, Munishkanth, Anupama Kumar, Baba Bhaskar, Remya Suresh and several others being considered.


The shoot is scheduled to commence on the 22nd of this month and will continue for 40 consecutive days. Certain portions will also be filmed in Chennai.


*Technical Crew*


Banner: Komala Hari Pictures

Producer: Komala & Hari Bhaskaran


Writer & Director: Bharathi Balakumaran (Vizha fame)


Cinematographer: Banu Murugan (Muthina Kathirika fame)


Editor: Kalaivanan (Amaran fame)


Art Director: Pragatheeswaran 

(Pookie, Diesel fame)


Lyricist: Mohan Rajan (Lover, Lubber Pandhu fame)


Stunt Master: Dinesh Kaasi (Karafame)


Story Line & Dialogue Writer: Kani Raja 


Pro: Johnson 

Publicly: Movie Bond 


Production Executive: G.Thiruneelagandan


Production Manager:P.Sivakumar

கண்டன அறிக்கை மதிப்பிற்குரிய தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு

 தேதி : 14.05.2026


கண்டன அறிக்கை 


மதிப்பிற்குரிய தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு,  

 “ஜனநாயகன்” படம் சமூக ஊடகங்களில் கள்ளத்தனமாய் வெளிவந்து ஏற்பட்ட காயம் ஆறுமுன்பே இன்று பேரடியாக திரு.சூர்யா அவர்களின் படமான “கருப்பு” திரைப்படம் வடமாநிலங்கள் சிலவற்றில் அதிகாரபூர்வமாய் வெளியாகும் முன்பே திரையரங்குகளில் திரையிடப்பட்டது. தமிழ்சினிமா மட்டுமல்ல ஒட்டுமொத்த இந்திய சினிமாவின் எதிர்காலத்தையே கேள்விக்குறியாக்குகிறது.

 150 கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள ஒரு திரைப்படத்தை இப்படி கவனக்குறைவாய் எப்படி ஒரு பெரும் நிறுவனம் கசியவிட்டிருக்கும் என்ற ஒரு ஐயமும் நம்பிக்கையின் பேரில் கேள்விகுறியும் எழுகிறது. பாதிக்கப்பட்ட தயாரிப்பாளருக்கு சம்பந்தப்பட்ட நிறுவனம் அதற்கான ஈட்டை சரிசெய்ய முற்படவேண்டும் அதுமட்டுமில்லாமல் கசிய விட்டவர்களை கடுமையாக தண்டித்து வருங்காலத்தில் கவனக்குறைவிற்கு இது ஒரு உதாரணமாக இருக்கவேண்டும் என்றும் தென்னிந்திய நடிகர் சங்கம் வேண்டுகோள் விடுக்கிறது. 

 இதில் பல கோடிகள் மட்டுமல்ல பல கலைஞர்களின், தொழிலாளர்களின் வியர்வை சிந்திய உழைப்பும் எதிர்காலத்தை பற்றிய கனவும் உள்ளடங்கியிருக்கிறது. வருங்காலத்தில் இது சம்பந்தமான கடுமையான விதிமுறைகளும் வழிமுறைகளும் வகுக்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது.

 இச்சூழலில் தமிழ் திரையுலகின் அங்கத்தினர்கள் யாவரும் ஒன்றாய் நின்று கண்டிக்கவும் போராடவும் தயாராக நிற்கிறோம். இத்தருணத்தில் தென்னிந்திய நடிகர் சங்கம் தயாரிப்பாளர்களுக்கு என்றும் போல் துணையாய் நின்று குரல் கொடுக்க தவறாது.


#தென்னிந்திய நடிகர் சங்கம்

பாராட்டுக்களைக் குவிக்கும் ‘அங்கீகாரம்’ பட டிரெய்லர் !!*

பாராட்டுக்களைக் குவிக்கும் ‘அங்கீகாரம்’ பட டிரெய்லர் !!* 



ஸ்வஸ்திக் விஷன்ஸ் தயாரிப்பில், கதையின் நாயகனாக அறிமுக நடிகர் கே.ஜெ.ஆர் நடிக்க, இயக்குனர் பா.ரஞ்சித்திடம் துணை இயக்குனராக பணிபுரிந்த தென்பாதியான் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘அங்கீகாரம்’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகி ரசிகர்களிடமும் திரையுலகினரிடமும் பாராட்டு பெற்று வருகிறது.


பல உண்மை சம்பவங்களின் அடிப்படையில், தடகள விளையாட்டை மையமாக கொண்டு உருவாகியுள்ள இந்த திரைப்படம், விளையாட்டு வீரர்களின் இன்னல்களையும், விளையாட்டுத்துறையின் அவலங்களையும் பேசும் படமாக இப்படம் உருவாகியுள்ளது.


தற்போது வெளியான டிரெய்லரில் ஒரு தடகள விளையாட்டு வீரன் தனக்கான அங்கீகாரத்துக்கு கோர்ட் படியேறி போராடும், உணர்ச்சிப்பூர்வமான காட்சிகளும், வலுவான வசனங்களும் படத்தின் களத்தை வெளிப்படுத்துவதுடன், படத்தின் மீது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்துகிறது.


இப்படத்திற்காக 75 லட்ச ரூபாயில் கோர்ட் வளாக செட் தத்ரூபமாக அமைக்கப்பட்டு இப்படத்தின் காட்சிகள் படமாக்கப்பட்டது என்பது குறிப்பிடதக்கது.


இந்த திரைப்படத்தில் K.J.R கதையின் நாயகனாக அறிமுகமாகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அவருடன் இணைந்து விஜி வெங்கடேஷ், அஜித் கோஷி, சிந்தூரி விஸ்வநாத், ஆண்டனி, ரங்கராஜ் பாண்டே, மன்சூர் அலிகான், மோகன்ராம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.


ஜிப்ரான் இசையமைத்துள்ள இப்படத்திற்கு A.விஸ்வநாத் ஒளிப்பதிவு செய்துள்ளார். பீட்டர் ஹெயின் சண்டைக்காட்சிகளை வடிவமைத்துள்ள நிலையில், தினேஷ்குமார் படத்தொகுப்பு பணிகளை கவனித்துள்ளார். ராமு தங்கராஜ் கலை இயக்கம், சம்பத் ஆழ்வார் ஒலி வடிவமைப்பு, ஷெரீப் நடன அமைப்பு ஆகியவற்றின் மூலம் இத்திரைப்படம் தொழில்நுட்ப ரீதியாகவும் கவனம் ஈர்த்துள்ளது.


ஸ்வஸ்திக் விஷன்ஸ் நிறுவனம் சார்பில் பிரசாந்த், அஜித்பாஸ்கர், அருண்முருகன் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ள ‘அங்கீகாரம்’ திரைப்படத்தின் டிரெய்லர் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. விரைவில் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என படக்குழு தெரிவித்துள்ளது.


https://www.youtube.com/watch?v=xVyMza6j0Nk

ஜாலி ஓ ஜிம்கானா' நிகழ்ச்சியில் 'வட சென்னை 2' படத்தின் அப்டேட்டை அறிவித்த நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்*

ஜாலி ஓ ஜிம்கானா' நிகழ்ச்சியில் 'வட சென்னை 2' படத்தின் அப்டேட்டை அறிவித்த நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்*




தமிழ் சினிமா ரசிகர்களுக்கு ஒரு முக்கிய தருணமாக இருக்கும் 'வடசென்னை 2 ' படம் குறித்த ஒரு புதிய தகவலை நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் 'ஜாலி ஓ ஜிம்கானா' நிகழ்ச்சியில் அதிகாரபூர்வமாக பகிர்ந்துள்ளார். இது தொடர்பான நிகழ்ச்சி மே ஏழாம் தேதியான இன்று சன் நெக்ஸ்ட் (SUN NXT) டிஜிட்டல் தளத்தில் பிரத்யேகமாக ஒளிபரப்பாகிறது.


மிகவும் எதிர்பார்க்கப்பட்ட வடசென்னை படத்தின் இரண்டாம் பாகம் குறித்து தொடர்ச்சியான யூகங்கள் நிலவி வரும் நிலையில்... தொகுப்பாளர் ஜெகன் கிருஷ்ணனுடனான ஒரு வெளிப்படையான மற்றும் தணிக்கையற்ற உரையாடலில்.. ரசிகர்கள் நீண்ட காலமாக எதிர்பார்த்து கொண்டிருந்த கேள்விக்கு ஐஸ்வர்யா ராஜேஷ் இறுதியாக பதிலளித்து ... இப்படம் குறித்த தெளிவையும், புதிய உற்சாகத்தையும் ஏற்படுத்தி உள்ளார்.


இந்த பரபரப்பான அறிவிப்பை கடந்து இந்த நிகழ்ச்சி ஐஸ்வர்யா ராஜேஷின் திரையுலக பயணத்தை பற்றிய ஒரு அரிதான பார்வையையும் வழங்குகிறது. இதில் உள்ள கதைகள் ஆச்சரியமூட்டுவதாகவும், அதே சமயத்தில் சுவாரசியமானதாகவும் இருக்கின்றன. வடசென்னை படத்திற்காக இயக்குநர் வெற்றிமாறனுடன் 'ஆடிஷன் ' செய்ததை அவர் நினைவு கூர்ந்தார். அதில் இரண்டு முழு நிமிடங்களுக்கு தடையின்றி கெட்ட வார்த்தையை பேசும் படி அவரிடம் கேட்கப்பட்டது. இது ஒரு அசாதாரணமான பணி என்றாலும்.. அவர் தயக்கமின்றி அதை ஏற்றுக் கொண்டு, மனதில் நீடித்த ஒரு தாக்கத்தை ஏற்படுத்தினார்.



இந்த உரையாடல் பிரத்யேகமானதாகவும் மாறுகிறது. ஐஸ்வர்யா தனது கல்லூரி கால நினைவை வெளிப்படையாக பகிர்ந்து கொண்டிருக்கிறார். பல வருடங்கள் பெண்கள் மட்டும் படிக்கும் கல்லூரிகளில் படித்த பிறகு அந்த சூழலுக்கு அப்பாற்பட்ட வாழ்க்கையை அனுபவிக்க வேண்டும் என்ற ஆசையால் உந்தப்பட்டு.. தொடர்ந்து பத்து நாட்கள் வகுப்புகளை தவிர்த்து இருக்கிறார். அந்தத் தருணம் நேர்மையுடனும் , நகைச்சுவையுடனும் வெளிப்பட்டு... பார்வையாளர்களின் மனதை தொடுகிறது.


ஜெகன் கிருஷ்ணனின் எளிமையான மற்றும் ஈர்க்கும் பாணியால் வழிநடத்தப்பட்டு, 'ஆஃபீஸ் கானா' இசை குழுவின் ஆற்றல் மிக்க பங்களிப்பால் மெருகேற்றப்பட்ட இந்த எபிசோட்.. புதிய தகவல்களையும், பொழுதுபோக்கையும் தடையின்றி ஒன்றிணைக்கிறது.


இந்த கொண்டாட்டம் ஐஸ்வர்யா ராஜேஷ் உடன் நின்று விடவில்லை. ஜாலி ஓ ஜிம்கானா நிகழ்ச்சியில் அடுத்தடுத்து வருபவர்கள்... துருவ் விக்ரம் - ரவி மோகன் - மிர்ச்சி சிவா - பிரேம்ஜி அமரன் - ஹரிஷ் கல்யாண் - மகத் ராகவேந்திரா - வைபவ் ரெட்டி - அஸ்வின் காகுமனு மற்றும் அனைவரின் விருப்பத்திற்குரிய டிஜிட்டல் திரை இரட்டையர்களான கோபி- சுதாகர் என பட்டியல் நீள்கிறது.



ஒவ்வொரு வியாழக்கிழமையும் ஒரு புதிய விருந்தினர்... ஒரு புதிய கதை ... முற்றிலும் தவற விட கூடாத நிகழ்ச்சி ஜாலி ஓ ஜிம்கானா..!


சன் நெக்ஸ்ட் - SUN NXT - பற்றி


சன் நெக்ஸ்ட் என்பது நாடு தழுவிய பார்வையாளர்களின் விருப்பத்திற்குரிய பொழுதுபோக்கு தளமாகும். இது தமிழ் உள்ளிட்ட ஏழுக்கும் மேற்பட்ட மொழிகளில் ...4000 க்கும் மேற்பட்ட தலைப்புகளில் ...44 க்கும் மேற்பட்ட நேரலை - தொலைக்காட்சி - அலைவரிசைகளை வழங்குகிறது. திரைப்படங்கள்.. தொலைக்காட்சி .. நேரலை மற்றும் முன்கூட்டிய அணுகலுக்கான சலுகைகள் என பல தரப்பட்ட உள்ளடக்கங்களுடன் சன் நெக்ஸ்ட் SUN NXT உயர்தரமான தென்னிந்திய பொழுதுபோக்கின் அடையாளமாக திகழ்கிறது.

Peddi Is A One-Of-A-Kind Film, Audiences Will Walk Out Of Theatres With Tears In Their Eyes: Production Designer Avinash Kolla*

 *“பெத்தி”  படம் முடிந்து வெளியே வரும் போது கண்களில் கண்ணீர் இருக்கும்” – தயாரிப்பு வடிவமைப்பாளர் அவினாஷ் கொல்லா*



 “ரங்கஸ்தலம்” படத்தை மிஞ்சும் ராம் சரண் நடிப்பு… பிரம்மாண்டமாக உருவாகும் “பெத்தி”


70 களின் காலகட்டத்தை நிஜத்தில் கொண்டு வரும் 24 பிரம்மாண்ட செட்கள், கிராமத்து உணர்வு, கண்கலங்க வைக்கும் கதை – “பெத்தி” குறித்து அவினாஷ் கொல்லா பகிர்வு


மெகா சூப்பர்ஸ்டார் ராம்சரண்  நடிப்பில், புச்சி பாபு சனா  இயக்கத்தில் உருவாகி வரும் “பெத்தி” திரைப்படம் குறித்து தயாரிப்பு வடிவமைப்பாளர் அவினாஷ் கொல்லா பகிர்ந்த தகவல்கள் தற்போது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன.  

கிராமத்து பின்னணியில் உருவாகியுள்ள இந்த பிரம்மாண்ட படைப்பு, ஜூன் 4ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.


இத்திரைப்படத்தின் கதை முதன்முதலாக கேட்ட தருணத்திலேயே தன்னை ஆழமாக பாதித்துவிட்டதாக அவினாஷ்  கொல்லா தெரிவித்துள்ளார். தனது பத்து வருட சினிமா பயணத்தில் இதுபோன்ற உற்சாகத்தை எந்தக் கதையும் தரவில்லை என்றும், கதை கேட்ட பிறகு சுமார் இருபது நிமிடங்கள் அதிலிருந்து வெளிவர முடியாத நிலை ஏற்பட்டதாகவும் கூறியுள்ளார். மிக கனமான கதையின் தன்மையை உயிர்ப்பிக்க தயாரிப்பு வடிவமைப்பில் வெகு கவனமுடன் செயல்பட்டதாக கூறியுள்ளார். 


இந்தப் படத்திற்காக ஒரு வருடத்திற்கு மேலாக முன் தயாரிப்பு பணிகள் நடைபெற்றுள்ளன. ஒவ்வொரு செட்டிற்கும் முன்பாக சிறிய வடிவங்கள் உருவாக்கப்பட்டு பின்னரே பெரிய அளவில் கட்டப்பட்டுள்ளன. மொத்தமாக 24 பெரிய செட்கள் புதிதாக கட்டப்பட்டுள்ளதுடன், 60க்கும் மேற்பட்ட கூடுதல் அமைப்புகளும் உருவாக்கப்பட்டுள்ளன. மிகப்பெரிய நட்சத்திர பட்டாளத்துடன் வெளியிடங்களில் படப்பிடிப்பு நடத்துவது சிரமமானதால், தேவையான அனைத்து இடங்களையும் தனியே உருவாக்கி வசதியான சூழலில் படமாக்கியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


70 மற்றும் 80களின் பின்னணியில் அமைந்துள்ள இந்தப் படத்திற்காக, விஜயநகரம் பகுதியை முழுமையாக மறுவடிவமைத்துள்ளனர். அந்த காலகட்டத்தின் தெருக்கள், கடிகார கோபுரம், சுற்றுப்புறங்கள் என அனைத்தையும் இயல்பாக மீண்டும் உருவாக்கியுள்ளனர். படம் முழுவதும் உருவாக்கப்பட்ட செட்கள் எதுவும் செட் போல தோன்றக்கூடாது என்பதே தனது நோக்கம் எனவும், அந்த அளவிற்கு இயல்பாக வேலை செய்யப்பட்டுள்ளதாகவும் அவினாஷ் குறிப்பிட்டார்.


படத்தில் இடம்பெறும் மல்யுத்த காட்சிகளுக்காக இதுவரை யாரும் பார்க்காத வகையிலான அரங்க அமைப்பு உருவாக்கப்பட்டதாம். குறிப்பாக தரைக்கடியில் உருவாக்கப்பட்ட பிரம்மாண்ட அமைப்பில், கதை நாயகன் பெத்தியாக ராம்சரண் கம்பீரமாக தோன்றும் காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன. மேலும், கிரிக்கெட் காட்சிகளும் இயல்பான கிராமத்து உணர்வை தரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. “லகான்” படத்தைப் போல இல்லாமல், கிராம மக்கள் வயல்வெளி மேடுகளில் அமர்ந்து கிரிக்கெட் பார்க்கும் உணர்வை தரும் வகையில் அந்த காட்சிகள் இருக்கும் என அவர் கூறியுள்ளார்.


படத்தில் இடம்பெறும் சர்க்கரை ஆலை, ரயில் அமைப்பு, மலையடிவார நகரம் போன்றவை அனைத்தும் செட்களாக உருவாக்கப்பட்டிருந்தாலும், அவை அனைத்தும் உண்மையான இடங்களைப் போலவே தோன்றும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக ஹைதராபாத்தில் உள்ள ஒரு பழைய பங்களாவுக்குள் மலையடிவார நகரத்தை உருவாக்கியது மிகப்பெரிய சவாலாக இருந்ததாக அவினாஷ் கூறியுள்ளார்.


மேலும், படத்தில் ஹீரோ பயன்படுத்தும் கிரிக்கெட் பேட்டும் இயல்பான கிராமத்து தோற்றத்தில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. ஒரு கிராமத்து இளைஞன் கிடைக்கும் பொருட்களை பயன்படுத்தி தானாகவே உருவாக்கிய பேட் போல அதனை வடிவமைத்துள்ளார்களாம். அந்த கதாபாத்திரத்தின் நடை, உடல் மொழி உள்ளிட்ட பல நுணுக்கங்களும் அதற்குள் சேர்க்கப்பட்டுள்ளன.


கலை இயக்குநரும் ஒளிப்பதிவாளரும் ஒரே எண்ணத்தில் பணிபுரிந்தால் மட்டுமே திரைப்படம் முழுமையான வடிவம் பெறும். அந்த வகையில் ஒளிப்பதிவாளர் R. ரத்னவேலு  மிகச்சிறப்பான ஒத்துழைப்பை தந்ததாக தெரிவித்துள்ளார். 


நடிகர் ராம்சரண் குறித்து பேசுகையில், தான் உருவாக்கிய ஒவ்வொரு செட்டையும் ராம்சரண் மிகவும் பாராட்டியதாக அவினாஷ் கூறியுள்ளார். மல்யுத்த அரங்கம், ரயில் அமைப்பு, சிறப்பு பாடல் செட் என அனைத்தையும் அவர் ரசித்ததாகவும் தெரிவித்துள்ளார்.


இறுதியாக “பெத்தி” குறித்து அவர் கூறிய வார்த்தைகள் ரசிகர்களின் எதிர்பார்ப்பை மேலும் உயர்த்தியுள்ளன. “இது முற்றிலும் வித்தியாசமான திரைப்படம். படம் முடிந்து திரையரங்கிலிருந்து வெளியே வரும் போது கண்டிப்பாக கண்களில் கண்ணீர் இருக்கும். அந்த அளவுக்கு பெத்தியின் வாழ்க்கை பயணம் மனதை தொடும்” என்று அவர் தெரிவித்துள்ளார். மேலும், இயக்குநர் சுகுமார் கூட சமீபத்தில், இந்தப் படத்தில் ராம்சரண்  நடிப்பு ரங்கஸ்தலம் படத்தை விட அதிகமாக பேசப்படும் என்று கூறியிருப்பது படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.


*Peddi Is A One-Of-A-Kind Film, Audiences Will Walk Out Of Theatres With Tears In Their Eyes: Production Designer Avinash Kolla*


Mega Power Star Ram Charan's rural action drama Peddi, directed by Buchi Babu Sana, produced on a massive scale by Venkata Satish Kilaru under the Vriddhi Cinemas banner and presented by Mythri Movie Makers and Sukumar Writings, is slated for a worldwide theatrical release on June 4th. Expectations for the movie have already reached enormous heights with chartbuster songs and stunning glimpses. Meanwhile, Production Designer Avinash Kolla shared insights about the movie.


How did you feel when Director Buchi Babu narrated this story?

In my ten-year career, this is the first time I have been this excited about a story. After the director narrated the story, I wasn't myself for about 20 minutes. It moved me that deeply. Because the story itself has so much strength, I decided right then that I needed to take extreme care in all aspects of the production design.


This is a period drama, right? What precautions did you take regarding the sets?

When a set is built for a movie, the audience shouldn't realize that it is a set. Only then is an Art Director successful. As far as I am concerned, the audience will not perceive the sets built for this film as sets. They are that natural.


This is a story set in the 70s and 80s. I have already worked on many period films. I have that experience. Peddi is a story set in the Vizianagaram area. We recreated the streets, the clock tower, and all of those elements. We also designed the surrounding areas of Vizianagaram. Similarly, we took great care with the wrestling and cricket games. We created a wrestling setup in this that no one has ever seen before. For that, we shot in an underground setup. The shot where Charan garu appears with a mace was filmed right there.


What about DOP Rathnavelu?

If the DOP and the Art Director are in sync, the film will definitely turn out perfectly. Such a great sync happened here. It was a great joy working with Rathnavelu. We worked with excellent coordination.


There is cricket in this, right? Will it be like Lagaan?

No. Lagaan is a story that happened during the British era. This is set in the mid-70s and 80s against a Vizianagaram backdrop. When you watch the cricket here, it will carry the exact natural feeling you get while sitting on the ridges of the fields in our villages watching a game.


We did pre-production for this film for over a year. During that time, we created miniatures for every single set. We built every set for this movie in an open ground. We shot entirely in natural light.


We needed a hill station town for this. We built that inside a Bhoot Bungalow (a haunted house) in Hyderabad. When you watch the movie, it will feel like a town situated at the foot of a hill. Building that set felt very challenging.


Director Buchi Babu and I worked with very good coordination. There is a sugarcane factory in this. That is also a set. However, the beauty of it is that you won't be able to spot even a single element as a set.


How many sets did you build for Peddi?

There are 24 sets built from scratch. Apart from that, there are easily around 60 to 70 setups. If it is a small film, we can go anywhere and shoot. But going out to shoot with such a massive star cast is no ordinary task. We can only shoot if we keep the locations within our comfort zone. It has been almost a year since we built the Vizianagaram set. It is convenient to shoot whenever we need it. We built that set so that it adapts to all weather conditions.


The bat used by the hero in this also comes from a very natural production design. The way a local village player would make a bat using whatever raw materials he can find—that bat looks just as natural. He also has a specific mannerism. All of those nuances were crafted into it.


Tell us about your bond with Charan?

Charan appreciated every set I built. The train setup, the special song set, the wrestling arena... he really liked every single one. Many people who came to meet Charan also mentioned that the sets look extremely natural.


How did Charan get injured?

It happened during the wrestling in an action sequence. Even in that condition, Charan immediately returned to the shoot. Because if we didn't shoot that month, all the artists' dates would have been missed. That is why he came right back and completed it.


About the story of Peddi?

This is a one-of-a-kind film. When you walk out of the theatre, your eyes will definitely well up with tears. You will travel that deeply with Peddi's journey. That emotion will absolutely be there.


Sukumar recently said that Charan's performance in this movie will surpass 'Rangasthalam'. The reason is that there is that much strength in this story.

Sundeep Kishan, Krishna Chaitanya, Vijay Chilla, Shashi Devireddy, 70mm Entertainments, Powerpeta Powerful Glimpse Unveiled

 *சந்தீப் கிஷன் – கிருஷ்ண சைதன்யா – விஜய் சில்லா – சசி தேவி ரெட்டி கூட்டணியில் உருவாகும் ‘பவர் பேட்டா’ (Power Peta) படத்தின் அதிரடி கிளிம்ப்ஸ் வீடியோ வெளியானது !!*



விஜய் சில்லா மற்றும் சசி தேவி ரெட்டி தலைமையிலான 70mm Entertainments நிறுவனம் மீண்டும் ஒரு மாபெரும் திரைப்படத்தை உருவாக்கத் தயாராகியுள்ளது. இதயம் தொடும், தீவிரம் மற்றும் வலுவான கதைகளைக் கொண்ட படங்களை வழங்கி வரும் இந்த தயாரிப்பு நிறுவனம் தனது அடுத்த பிரம்மாண்ட முயற்சியை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதில் நடிகர் சந்தீப் கிஷன் கதாநாயகனாக நடிக்கிறார். எழுத்தாளராக இருந்து இயக்குநராக மாறிய கிருஷ்ண சைதன்யா இப்படத்தை இயக்குகிறார். சந்தீப் கிஷனின் பிறந்தநாளை முன்னிட்டு ‘பவர் பேட்டா’ படத்தின் புதிய அதிரடி கிளிம்ப்ஸ் வெளியாகியுள்ளது.


இந்த கிளிம்ப்ஸ் ஆரம்பத்திலேயே திரையரங்க முதல் நாள் கொண்டாட்டத்தின் மின்சாரம் பாயும் சூழலுடன் தொடங்குகிறது. ரசிகர்களின் ஆரவாரத்திற்கிடையில் ஹீரோ சிகரெட் புகைத்தபடி என்ட்ரி கொடுத்து, “சிங்கம்” குறித்து அதிரடி வசனம் பேசுகிறார். அதன் பின்னர் அந்த மண்ணின் தன்மையும், அதற்குள் இருக்கும் அதிகாரத்தின் வலிமையையும் அவர் விவரிக்கிறார். மேலும் திரையரங்க திரையில் பட்டாசுகளை எறியும் காட்சி ரசிகர்களுக்கு மிகுந்த உற்சாக தருணமாக அமைந்துள்ளது.


சந்தீப் கிஷன் இந்த படத்தில் முரட்டுத்தனமான லுக்கில் காட்சியளிக்கிறார். ஸ்டைலிஷ் கண்ணாடி, வித்தியாசமான உடை மற்றும் மிரட்டலான பாடி லாங்குவேஜ் மூலம் அவர் வேற லெவல் தாக்கத்தை ஏற்படுத்துகிறார். அவரது கதாபாத்திர பெயரான “சேனாபதி ரவி” வெளியிடப்பட்டிருப்பதும் இந்த கதாபாத்திரத்தின் தீவிரத்தையும் ஆதிக்கத்தையும் உணர்த்துகிறது. அவரது திரை ஆளுமை, பன்ச் வசனங்கள் மற்றும் மிரட்டலான ஆட்டிட்யூட் அனைத்தும் கிளிம்ப்ஸில் பெரும் கொண்டாட்டமாக அமைந்துள்ளது.


இயக்குநர் கிருஷ்ண சைதன்யா ஒரு பெரிய மாஸ் கதாபாத்திரத்தை உருவாக்குவதில் தனது திறமையை நிரூபித்துள்ளார். மாஸ் காட்சிகளும் வசனங்களும் வலுவாக அமைந்துள்ளன. சாதாரணமாக சிகரெட் பற்றவைக்கும் காட்சியையே கோபம் நிறைந்த தருணமாக மாற்றியிருப்பது அவரது இயக்கத்தின் திறனை வெளிப்படுத்துகிறது.


ஒளிப்பதிவாளர் மதி , பீரியட் கால உலகத்தை துல்லியமாக படமாக்கியுள்ளார். மணி சர்மாவின் பின்னணி இசை ஒவ்வொரு காட்சிக்கும் அதிரடியை கூட்டுகிறது. தேசிய விருது பெற்ற எடிட்டர் ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பை கவனித்துள்ளார். ராமகிருஷ்ணா மற்றும் மோனிகா ஆகியோர் தயாரிப்பு வடிவமைப்பை மேற்கொண்டுள்ளனர். சச்சின் சுதாகரன் மற்றும் ஹரிஹரன் இணைந்து சவுண்ட் டிசைன் பணிகளை செய்துள்ளனர்.


படப்பிடிப்பு தற்போது பரபரப்பாக நடைபெற்று வருகிறது. முதல் கட்ட படப்பிடிப்பை படக்குழு வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது.


நடிப்பு:

சந்தீப் கிஷன்


தொழில்நுட்ப குழு:

எழுத்து, இயக்கம் – கிருஷ்ண சைதன்யா

தயாரிப்பாளர்கள் – விஜய் சில்லா, ஷஷி தேவிரெட்டி

தயாரிப்பு நிறுவனம் – 70mm Entertainments

இசை – மணி சர்மா

ஒளிப்பதிவு – மதி

படத்தொகுப்பு – ஸ்ரீகர் பிரசாத்

தயாரிப்பு வடிவமைப்பு – சப்பாணி ராமகிருஷ்ணா, மோனிகா

சவுண்ட் டிசைன் – சச்சின் சுதாகரன், ஹரிஹரன்

PRO – யுவராஜ்


*Sundeep Kishan, Krishna Chaitanya, Vijay Chilla, Shashi Devireddy, 70mm Entertainments, Powerpeta Powerful Glimpse Unveiled*


70mm Entertainments, the acclaimed banner headed by Vijay Chilla and Shashi Devireddy, is gearing up to raise the stakes yet again. Known for backing cinema with heart, grit, and strong storytelling, the production house has officially announced its next ambitious project. Sundeep Kishan steps in as the lead, with writer-turned-director Krishna Chaitanya taking charge. Marking the actor’s birthday, the makers of Powerpeta dropped a striking new glimpse.


The glimpse opens on a high-voltage note- crowds erupting inside a theatre on first day, first show frenzy. Amid the chaos, the protagonist makes a fiery entry, smoking a cigarette and delivering a commanding dialogue about a lion. He goes on to define the essence of the land and the forces that shape its power. In a whistle-worthy moment, he sets the atmosphere ablaze by hurling crackers at the theatre screen.


Sundeep Kishan appears in a rugged period avatar- stylish shades, vibrant attire, and an intimidating aura. The reveal of his character name, Senapathi Ravi, adds weight, hinting at the dominance and intensity the role carries. His screen presence is explosive, matched by punchy dialogue delivery and raw attitude.


Director Krishna Chaitanya showcases his command in crafting a fierce, larger-than-life character. The elevations hit hard, and the dialogues reinforce his strength as a writer. Even the simple act of lighting a cigarette is turned into a moment of fury, highlighting his directorial finesse.


Cinematographer Madhie captures the period setting with precision, while Mani Sharma’s intense background score amplifies every frame. National Award-winning editor Sreekar Prasad handles the cuts, with production design by Ramakrishna and Monika, and sound design by Sachin Sudhakaran and Hariharan shaping the film’s sonic landscape.


The shoot is currently in progress, with the team successfully wrapping up its first schedule.


Cast: Sundeep Kishan


Technical Crew:

Writer, Director: Krishna Chaitanya

Producers: Vijay Chilla and Shashi Devireddy

Banner: 70 mm Entertainments

Music: Mani Sharma

DOP: Madhie

Editing: Sreekar Prasad

Production Design: Sabbani Ramakrishna and Monika

Sound Design: Sachin Sudhakaran and Hariharan

PRO: Yuvraaj



Link : https://www.youtube.com/watch?v=a2Ldt2BXRG0

கான் சிட்டி” இரண்டாவது சிங்கிள் வெளியீடு…, மாஸாக கவரும் “நான் தான் கிங்கு” பாடல்!*

 *“கான் சிட்டி” இரண்டாவது சிங்கிள் வெளியீடு…, மாஸாக கவரும் “நான் தான் கிங்கு” பாடல்!* 



*நாயகனின் ஸ்டைல், புத்திசாலித்தனம், ஆளுமையை கொண்டாடும் “கான் சிட்டி” செகண்ட் சிங்கிள்!*


*ஷான் ரோல்டன் இசையில் வைரலாகும் “நான் தான் கிங்கு” லிரிக்கல் வீடியோ!*


பவர் ஹவுஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் ஹரிஷ் துரைராஜ் இயக்கத்தில், அர்ஜூன் தாஸ், அன்னா பென், யோகி பாபு, வடிவுக்கரசி உள்ளிட்டோர் நடித்திருக்கும் “கான் சிட்டி” திரைப்படம், வெளியீட்டுக்கு முன்பே ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கி வருகிறது. இப்படத்தின் முதல் சிங்கிள் “ரா ரா ரங்கையா” பாடல் சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், தற்போது வெளியாகியுள்ள இரண்டாவது சிங்கிள் “நான் தான் கிங்கு” பாடலும் ரசிகர்களின் கவனத்தை கவர்ந்து வருகிறது.


ஷான் ரோல்டன் இசையில், மோகன் ராஜன் எழுதியுள்ள இந்தப் பாடலை ஷான் ரோல்டன், கெலிதீ,  லலிதா சுதா ஆகியோர் இணைந்து பாடியுள்ளனர். நாயகனின் குணாதிசயங்கள், புத்திசாலித்தனம் மற்றும் ஆளுமையை வெளிப்படுத்தும் வகையில் உருவாகியுள்ள இந்த லிரிக்கல் வீடியோ பாடல், முதல் முறை கேட்டவுடனேயே ரசிகர்களை ஈர்க்கும் தன்மையைக் கொண்டுள்ளது. மாஸ் மற்றும் ஸ்டைலிஷ் பாணியில் அமைந்துள்ள பாடலின் வரிகளும் இசையும், “கான் சிட்டி” படத்தின் உலகத்தை மேலும் சுவாரஸ்யமாகக் காட்டுகின்றன.


பாடலின் காட்சியமைப்பிலும் தனித்துவமான முயற்சிகள் இடம்பெற்றுள்ளன. அர்ஜூன் தாஸ் திரையில் காட்டும் ஸ்கிரீன் பிரசென்ஸ் மற்றும் பாடலின் அனல் பறக்கும் பீட்ஸ் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றன. குறிப்பாக பாடலின் வரிகளும், இசை அமைப்பும் இளைஞர்களை கவரும் வகையில் அமைந்துள்ளதாக ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.


புதுமையான கதைக்களத்தில் உருவாகும் “கான் சிட்டி” படம், நகர வாழ்க்கையில் கடனில் சிக்கித் தவிக்கும் ஒரு மிடில் கிளாஸ் குடும்பத்தின் கதையை மையமாகக் கொண்டு, குடும்ப உணர்வுகள், நகைச்சுவை, பரபரப்பு ஆகிய அனைத்தும் கலந்த ஒரு முழுமையான ஃபேமிலி என்டர்டெயினராக உருவாகியுள்ளது.


இந்தப் படத்தில் அர்ஜூன் தாஸ் நாயகனாக நடிக்க, அன்னா பென் கதாநாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன் யோகி பாபு, வடிவுக்கரசி, அகிலன் உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.


பவர் ஹவுஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் ஹரிஷ் துரைராஜ் இயக்கியுள்ள இந்த படம், மங்களூர், சென்னை, மும்பை உள்ளிட்ட பல நகரங்களில் படமாக்கப்பட்டுள்ளது. மேலும், இப்படத்தின் டிஜிட்டல் உரிமையை Netflix நிறுவனம் பெரும் தொகைக்குக் கைப்பற்றியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.


ஒவ்வொரு அப்டேட்டிலும் ரசிகர்களுக்கு புதுமையான அனுபவத்தை கொடுத்து வரும் “கான் சிட்டி”, தற்போது “நான் தான் கிங்கு” பாடல் மூலம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது. விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ள இப்படத்திற்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.


LINK : https://www.youtube.com/watch?v=RMEyZXDQrCg