-

Loading latest news...

விஸ்வநாத் & சன்ஸ்” ரூ.200 கோடியை கடந்தது – அதிகாரப்பூர்வமாக அறிவித்த படக்குழு

 *“விஸ்வநாத் & சன்ஸ்” ரூ.200 கோடியை கடந்தது – அதிகாரப்பூர்வமாக அறிவித்த படக்குழு*



  *200 கோடி வசூலை தாண்டிய “விஸ்வநாத் & சன்ஸ்” – சூர்யாவின் தொடரும் வெற்றிப் பயணம்*


 மீண்டும் 200 கோடி கிளப்பில் சூர்யா – “விஸ்வநாத் & சன்ஸ்” புதிய வசூல் சாதனை


சூர்யா நடிப்பில், வெங்கி அட்லூரி இயக்கத்தில் வெளியான “விஸ்வநாத் & சன்ஸ்” திரைப்படம் உலகளவில் ரூ.200 கோடி வசூலைக் கடந்து சாதனை படைத்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 2026 ஆகஸ்ட் 14ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியான இப்படம், வெளியான குறுகிய காலத்திலேயே இந்த வசூல் மைல்கல்லை எட்டியுள்ளது.


குடும்ப உறவுகள், உணர்வுகள் மற்றும் மனதை நெகிழவைக்கும் தருணங்களை மையமாகக் கொண்ட முழுமையான பொழுதுபோக்கு திரைப்படமாக வெளிவந்த “விஸ்வநாத் & சன்ஸ்”, அறிவிக்கப்பட்ட நாளிலிருந்தே ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. படத்தின் ஒவ்வொரு புரமோஷனல் அப்டேட்டும் கவனம் பெற்ற நிலையில், தற்போது ரூ.200 கோடி வசூலை கடந்துள்ள செய்தி படக்குழுவினரையும் ரசிகர்களையும் உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.


மீண்டும் வசூல் சாதனை படைக்கும் சூர்யா!


சூர்யாவின் திரைப்பயணத்தில் தொடர்ந்து வசூல் சாதனைகள் இடம்பெற்று வருகின்றன. “கருப்பு” திரைப்படத்தைத் தொடர்ந்து தற்போது “விஸ்வநாத் & சன்ஸ்” படமும் ரூ.200 கோடி வசூல் கிளப்பில் இணைந்திருப்பது அவரது நட்சத்திர மதிப்பையும், அவரது படங்களுக்கு ரசிகர்கள் மற்றும் குடும்ப பார்வையாளர்கள் மத்தியில் இருக்கும் வரவேற்பையும் வெளிப்படுத்துகிறது. மாறுபட்ட கதாபாத்திரங்களையும், பல்வேறு வகைத் திரைப்படங்களையும் தேர்வு செய்து வரும் சூர்யாவுக்கு, இந்த வெற்றி அவரது திரையுலகப் பயணத்தில் மேலும் ஒரு முக்கியமான வசூல் மைல்கல்லாக அமைந்துள்ளது.


“விஸ்வநாத் & சன்ஸ்” திரைப்படத்தை சூர்யதேவரா நாக வம்சி மற்றும் சாய் சௌஜன்யா ஆகியோர் சிதாரா என்டர்டெயின்மென்ட்ஸ் நிறுவனத்தின் சார்பில் ஃபார்ச்சூன் ஃபோர் சினிமாஸ் நிறுவனத்துடன் இணைந்து தயாரித்துள்ளனர். ஸ்ரீகரா ஸ்டூடியோஸ் இப்படத்தை வழங்கியுள்ளது.


“வாத்தி”, “லக்கி பாஸ்கர்” உள்ளிட்ட வெற்றிப் படங்களை தயாரித்த நாக வம்சி மற்றும் இயக்குநர் வெங்கி அட்லூரி கூட்டணி , மீண்டும் ஒரு பிரம்மாண்டமான திரையரங்கு கொண்டாட்டத்திற்கு தேவையான அம்சங்களுடன் இப்படத்தைத் தந்து அசத்தியுள்ளனர்.


இப்படத்தில் சூர்யாவுடன் மமிதா பைஜு, ராதிகா சரத்குமார் மற்றும் ரவீனா டாண்டன் ஆகியோரும் தங்களது சிறப்பான நடிப்பால் ரசிகர்களின் பாராட்டுக்களைப் பெற்றுள்ளனர்.


ரூ.200 கோடியை கடந்துள்ள “விஸ்வநாத் & சன்ஸ்” திரைப்படத்தின் வசூல் பயணம் தொடர்ந்து அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், சூர்யாவின் மற்றொரு திரைப்படம் வசூல் சாதனை படைத்திருப்பது அவரது ரசிகர்களுக்கு கூடுதல் உற்சாகத்தை அளித்துள்ளது.



தொழில்நுட்பக் குழு


எழுத்து & இயக்கம்: வெங்கி அட்லூரி

தயாரிப்பாளர்கள்: சூர்யதேவரா நாக வம்சி & சாய் சௌஜன்யா

இசை: ஜி.வி. பிரகாஷ் குமார்

ஒளிப்பதிவு: நிமிஷ் ரவி

படத்தொகுப்பு: நவீன் நூலி

கலை இயக்கம்: பங்களன்

நிர்வாக தயாரிப்பாளர்: யலமஞ்சிலி கோபால கிருஷ்ணா (நானி)

சண்டை பயிற்சி: V. வெங்கட்

தயாரிப்பு நிறுவனங்கள்: சிதாரா என்டர்டெயின்மென்ட்ஸ் & ஃபார்ச்சூன் ஃபோர் சினிமாஸ்

வழங்குபவர்: ஸ்ரீகரா ஸ்டூடியோஸ்

*மாண்புமிகு முதலமைச்சர் C. ஜோசப் விஜயின் இறுதித் திரைப்படம் ஆகஸ்ட் 21 முதல் தமிழ் ZEE5-ல் ஸ்ட்ரீமிங்

 *மாண்புமிகு முதலமைச்சர் C. ஜோசப் விஜயின் இறுதித் திரைப்படம் ஆகஸ்ட் 21 முதல் தமிழ் ZEE5-ல் ஸ்ட்ரீமிங்*



தமிழ் ZEE5-ன் புதிய படைப்புகள் வெளியாகும் நிலையில், மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பிளாக்பஸ்டர் ஜனநாயகன், தளத்தின் மிகவும் சுவாரஸ்யமான பன்மொழித் திரைப்படங்களில் ஒன்றாக உருவெடுக்கிறது. 


தமிழ் ZEE5-ன் புதிய படைப்புகள் வெளியாகும் நிலையில், மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படங்களில் ஒன்றான ஜனநாயகன் திரைப்படத்தை பார்வையாளர்களிடம் கொண்டு வர தளம் தயாராகியுள்ளது. H. வினோத் இயக்கத்தில், மாண்புமிகு முதலமைச்சர் C. ஜோசப் விஜய் கதாநாயகனாக நடித்துள்ள இந்த அரசியல் ஆக்‌ஷன் திரைப்படம் ஆகஸ்ட் 21 அன்று தமிழ் ZEE5-ல் பிரீமியர் ஆகிறது. மேலும், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழிகளிலும் இப்படம் வெளியாகிறது. இதன் மூலம் தென்னிந்தியாவின் நான்கு மொழிப் பார்வையாளர்களையும் இந்த பிரம்மாண்டமான திரை நிகழ்வு சென்றடைகிறது.


ஒரு பிளாக்பஸ்டர் திரைப்படம் என்பதைத் தாண்டி, ஜனநாயகன் திரைப்படம் மாண்புமிகு முதலமைச்சர் C. ஜோசப் விஜயின் திரைப்பயணத்தில் ஒரு முக்கியமான இடத்தைப் பெற்றுள்ளது. அரசியலில் நுழைந்த பிறகு வெளியாகும் அவரது முதல் திரைப்படமாகவும், பெரிய திரையில் வெளியாகும் அவரது இறுதித் திரைப்படமாகவும் இது அமைகிறது. கோடிக்கணக்கான ரசிகர்களுக்கு, தமிழ் சினிமாவின் மிகவும் பிரபலமான நட்சத்திரங்களில் ஒருவரான நடிகர்-அரசியல்வாதியின் இறுதித் திரைப்பயணமாக அமையவுள்ள இப்படம், ஒரு உணர்வுப்பூர்வமான விடைபெறலாக அமைகிறது.


H. வினோத் இயக்கியுள்ள ஜனநாயகன் திரைப்படம், வெற்றி கொண்டான் என்ற நேர்மையான முன்னாள் காவல்துறை அதிகாரியை கதாநாயகனாகக் கொண்டுள்ளது. ஊழல் மற்றும் அநீதிக்கு எதிராக அவர் குரல் கொடுக்கிறார். சக்திவாய்ந்தவர்களுக்கு எதிரான மிகப்பெரிய போராட்டத்தில் அவர் ஈடுபடும்போது, வெற்றி மக்களின் நாயகனாகவும், நம்பிக்கை மற்றும் தலைமைத்துவத்தின் அடையாளமாகவும் உருவெடுக்கிறார். அதிரடி ஆக்‌ஷன், உணர்வு, குடும்ப உறவுகள் மற்றும் சமூக-அரசியல் கருப்பொருள்களை ஒருங்கிணைக்கும் இப்படத்தில் பாபி தியோல், பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, பிரகாஷ் ராஜ், கௌதம் வாசுதேவ் மேனன், பிரியாமணி, நாசர் மற்றும் நரேன் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.


ரசிகர்களுக்குப் பிடித்த தருணங்கள், பிரபலமான உடல்மொழிகள் மற்றும் அந்த நட்சத்திரத்துடன் அடையாளம் காணப்படும் தனித்துவமான திரை அம்சங்கள் என பலவற்றை உள்ளடக்கிய ஜனநாயகன், பல தலைமுறை ரசிகர்களை கவர்ந்த அவரது வசீகரத்தையும் மரபையும் நினைவுகூரும் ஒரு அனுபவத்தை பார்வையாளர்களுக்கு வழங்குகிறது. இப்படத்தின் மையத்தில், எது சரி என்பதற்காக குரல் கொடுக்க முன்வரும் ஒரு சாதாரண மனிதனின் கதை இடம்பெற்றுள்ளது. இதனால், இப்படம் அதிரடி நிறைந்த பொழுதுபோக்கு திரைப்படமாக மட்டுமல்லாமல், உணர்வுப்பூர்வமான முக்கியத்துவம் கொண்ட ஒரு விடைபெறலாகவும் அமைகிறது.


ZEE5 தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளப் பிரிவுகளின் பிசினஸ் ஹெட் லாய்ட் C. சேவியர் கூறுகையில், “ஜனநாயகன் திரைப்படம் பார்வையாளர்களுக்கு, குறிப்பாக மாண்புமிகு முதலமைச்சர் C. ஜோசப் விஜயின் பல தசாப்த காலப் பயணத்தைப் பின்தொடர்ந்து வரும் கோடிக்கணக்கான ரசிகர்களுக்கு, மிகப்பெரிய உணர்வுப்பூர்வமான மற்றும் கலாச்சார முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது. அவரது இறுதித் திரைப்படமாக, இது தமிழ் சினிமாவின் ஒரு முக்கியமான தருணத்தைப் பிரதிபலிக்கிறது. மேலும், நட்சத்திரம், நடிகர் மற்றும் அவர் விட்டுச் செல்லும் மரபைக் கொண்டாடுவதற்கான ஒரு வாய்ப்பையும் பார்வையாளர்களுக்கு வழங்குகிறது. ஆக்‌ஷன், உணர்வு, குடும்ப மதிப்புகள் மற்றும் சமூகக் கருத்துக்களை ஒருங்கிணைக்கும் இப்படம், பல தலைமுறை ரசிகர்களுக்கும் பொருத்தமான மற்றும் பிரம்மாண்டமான விடைபெறலாக அமைகிறது. இந்த மாபெரும் படைப்பை எங்கள் தளத்திற்குக் கொண்டு வருவதில் நாங்கள் பெருமை கொள்கிறோம். மேலும், இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க திரை நிகழ்வை மீண்டும் காணவும், கொண்டாடவும் கோடிக்கணக்கான பார்வையாளர்களுக்கு வாய்ப்பளிப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் இந்த மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படத்தை ZEE5 தமிழ் தளத்திற்கு கொண்டு வருவதில் மகிழ்ச்சியடைகிறோம். இந்த டிஜிட்டல் பிரீமியர், இன்னும் அதிகமான குடும்பங்களும் ரசிகர்களும் இந்த முக்கியமான திரைப்படத்தை ஒன்றாக அனுபவிக்க வழிவகுக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்.”


ஜனநாயகன் ஆகஸ்ட் 21 அன்று தமிழ் ZEE5-ல் பிரத்யேகமாக பிரீமியர் ஆகிறது. மேலும், தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழிகளிலும் இப்படம் கிடைக்கும்.

ஒன்ஸ்மோர்’ – திரைப்பட டிரெய்லர் வெளியீட்டு விழா

 *‘ஒன்ஸ்மோர்’ – திரைப்பட டிரெய்லர் வெளியீட்டு விழா! 



*மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் இயக்குநர் விக்னேஷ் ஸ்ரீகாந்த் இயக்கத்தில், நடிகர் அர்ஜுன் தாஸ் – அதிதி ஷங்கர் இணைந்து நடித்திருக்கும் திரைப்படம் ‘ஒன்ஸ்மோர்’.*


அறிமுக இயக்குநர் விக்னேஷ் ஸ்ரீகாந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படம், காதல், உணர்வுகள் மற்றும் பொழுதுபோக்கை மையமாகக் கொண்ட படைப்பாக உருவாகியுள்ளது. இதில் அர்ஜுன் தாஸ், அதிதி ஷங்கர் ஆகியோருடன், பிரபல மாடல் சோனா ஒலிக்கல் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

வரும் ஆகஸ்ட் 28 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில் இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா படக்குழுவினருடன் திரை பிரபலங்கள் கலந்து கொள்ள பத்திரிகை ஊடக நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது.


இந்நிகழ்வினில் இயக்குநர் தயாரிப்பாளர் இரா சரவணன் பேசியதாவது..,


“ஆகஸ்ட் 28ஆம் தேதி ‘அன்பே டயானா’ ஓடிடியிலும், ‘ஒன்ஸ்மோர்’ திரையரங்குகளிலும் வெளியாகிறது. இந்த நாள் என் நண்பர் தயாரிப்பாளர் யுவராஜுக்கு மிக முக்கியமான நாள்.‘அன்பே டயானா’ படத்தில் என்னுடைய பணி எதுவும் இல்லாவிட்டாலும் என்னையும் தயாரிப்பாளராக இணைத்துக்கொண்ட அவரது அன்பை நான் எப்போதும் மதிக்கிறேன். ‘ஒன்ஸ்மோர்’ படத்தைப் பார்த்தபோது, கவிதை போல அவ்வளவு அழகாக இருந்ததால் எங்கேயாவது என் பெயரைப் போட்டுவிடுங்கள் என்று அவரிடம் கெஞ்சினேன்.


அர்ஜுன் தாஸ் வில்லனாக நடித்தாலே எனக்கு பிடிக்கும். ஆனால் இந்தப் படத்தில் கதாநாயகனாக, ஹீரோவாக அவர் கலக்கியிருக்கிறார். . அவருடைய அர்ப்பணிப்பு பாராட்டுக்குரியது. அதிதி ஷங்கர் எனக்கு மிகவும் பிடித்த நடிகை. இயக்குநர் ஷங்கரின் மகள் நடிக்க வருகிறார் என்று தெரிந்தபோது எனக்கு மிகப்பெரிய மகிழ்ச்சி ஏற்பட்டது. அவர் அறிமுகமாகும்போது சிவகார்த்திகேயனிடம் பேசி, அவருடன் இணைந்து அறிமுகமானால் நன்றாக இருக்கும் என்று சொன்னேன். பின்னர் அவர் சிவகார்த்திகேயன் படத்தில் அறிமுகமாகி நடித்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. இந்தப் படத்திலும் அதிதி மிக அற்புதமான நடிப்பை வழங்கியிருக்கிறார்.


தயாரிப்பாளர் யுவராஜ் எனக்கு மிகச் சிறந்த நண்பராக மாறியிருக்கிறார். அவருடைய நட்பு கிடைத்த பிறகு என்னுடைய மற்ற நண்பர்கள் எல்லாம் மறைந்துவிட்டார்கள் என்று சொல்லும் அளவுக்கு அத்தனை நெருக்கமான நண்பராகிவிட்டார்.


ரசிகர்கள் திரையரங்கில் ‘ஒன்ஸ்மோர்’ என்று கேட்கும் அளவுக்கு இப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற வேண்டும். என் நெருங்கிய நண்பர் யுவராஜுக்கு இப்படம் மிகப்பெரிய வெற்றியைத் தர வேண்டும்.”


நடிகை கலா பேசியதாவது..,


“‘ஒன்ஸ்மோர்’ திரைப்படம் எனக்கு என்னுடைய கல்லூரி நாட்களை நினைவுபடுத்தியது. ‘என்னுடைய கல்லூரி நாட்களும் இப்படி இருந்திருக்கலாமே’ என்று ஏங்க வைக்கும் அளவுக்கு இப்படம் பல நினைவுகளை ஏற்படுத்தியது. ‘ஒன்ஸ்மோர்’ திரைப்படம் என்றும் மறக்க முடியாத கல்லூரி நினைவுகளைப் போல இருக்கிறது. இயக்குநர் விக்னேஷ் ஸ்ரீகாந்த் அதை மிகச் சிறப்பாக இயக்கியிருக்கிறார்.


அர்ஜுன் தாஸை வில்லனாகப் பார்த்தாலே எனக்கு பிடிக்கும். இந்தப் படத்தில் அவர் மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார். அதிதி எனக்கு மிகவும் பிடித்த நடிகைகளில் ஒருவர். அவரும் அழகாக நடித்திருக்கிறார். இந்தத் திரைப்படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் என்னுடைய நன்றிகள்.


இசையமைப்பாளர் ஹேஷாம் அப்துல் வஹாப் பேசியதாவது..,


“மலையாளத்தில் ‘ஹிருதயம்’ திரைப்படத்திற்குப் பிறகு, தமிழில் நான் மிகவும் எஞ்சாய் செய்து பணியாற்றிய திரைப்படம் ‘ஒன்ஸ்மோர்’. தமிழில் என் முதல் படம், இப்படத்தின் ஆல்பம் முழுவதிலும் மிகுந்த கொண்டாட்டத்துடன் உழைத்தோம்.அனைவரும் எளிதில் தொடர்புபடுத்திக்கொள்ளக்கூடிய ஒரு அழகான கதையை இயக்குநர் மிகச் சிறப்பாக உருவாக்கியிருக்கிறார். படத்தில் பணியாற்றிய அனைவருமே மிகச் சிறப்பாக உழைத்திருக்கிறார்கள்.

என்னுடன் பணியாற்றிய இசைக்கலைஞர்கள் அனைவருக்கும் நன்றி. பாடல்களை எழுதிய கவிஞர் ஸ்ரீகாந்துக்கும் எனது நன்றிகள். இப்படத்தின் பாடல்களை ரசிகர்கள் ஏற்கனவே கொண்டாடி வருகின்றனர். இந்தப் பாடல்கள் காலம் கடந்தும் ரசிகர்களால் ரசிக்கப்படும் என்று நம்புகிறேன். நன்றி.”


நடிகை சோனா பேசியதாவது..,


“இன்று எனக்கு மிகவும் முக்கியமான நாள். ‘ஒன்ஸ்மோர்’ திரைப்படத்திற்காக நான் மிகவும் எதிர்பார்ப்புடன் காத்துக் கொண்டிருந்தேன். இப்படத்தில் எனக்கு மிகவும் முக்கியமான இந்திரா கதாபாத்திரத்தை வழங்கிய இயக்குநர் விக்னேஷ் ஸ்ரீகாந்த் மற்றும் தயாரிப்பாளர் யுவராஜ் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.

அர்ஜுன் தாஸ் எனக்கு மிகவும் ஆதரவாக இருந்தார். நிறைய சாப்பாடு கொடுத்து என்னை சந்தோஷப்படுத்தினார். அதேபோல் அதிதியும் படப்பிடிப்பின் முதல் நாளிலிருந்தே எனக்கு மிகச் சிறந்த தோழியாக இருந்தார். அவருக்கும் எனது நன்றிகள். இப்படத்தில் உழைத்த அனைத்து நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.உங்கள் அனைவரையும் போலவே நானும் ஆகஸ்ட் 28ஆம் தேதிக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன். கண்டிப்பாக இப்படம் அனைவருக்கும் பிடிக்கும் என்று நம்புகிறேன். நன்றி.”


தயாரிப்பாளர் யுவராஜ் கணேசன் பேசியதாவது..,


“இந்த மேடைக்காக நான் பல காலமாக காத்திருக்கிறேன். நானும் இயக்குநர் விக்னேஷ் ஸ்ரீகாந்தும் இதற்காகத்தான் காத்துக் கொண்டிருந்தோம். இப்படத்திற்கு பல வெளியீட்டுத் தேதிகளைத் நிர்ணயித்தும், சில காரணங்களால் அது சரியாக அமையாமல் போனது. ஆனால் இம்முறை ஆகஸ்ட் 28ஆம் தேதி படம் திரைக்கு வருவது உறுதியாகிவிட்டது.

இயக்குநர் கதை சொன்ன நொடியில் இருந்து, ஒவ்வொரு காட்சியிலும் ஏதாவது வித்தியாசமாக செய்ய வேண்டும் என்ற துடிப்புடன் பணியாற்றினார். அவரது திறமைக்கு இப்படம் ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகவும், அவருக்கு ஒரு முக்கியமான அடையாளமாகவும் இருக்கும்.


இது ஒரு மியூசிக்கல் படம் என்பதால் இசையமைப்பாளர் குறித்து பலருடன் விவாதித்தோம். இறுதியில் ‘ஹிருதயம்’ படத்தின் இசையமைப்பாளர் ஹேஷாம் அப்துல் வஹாபை சந்தித்து இப்படத்தை ஒப்புக்கொள்ளச் சொன்னோம். அவர் நாங்கள் எதிர்பார்த்ததைவிட மிகச் சிறப்பான இசையை வழங்கியிருக்கிறார். அவரது இசையை ரசிகர்கள் நிச்சயம் கொண்டாடுவார்கள்.அதிதி ஷங்கர் இப்படத்தில் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். ‘மாவீரன்’ படத்தைப் பார்த்த பிறகு அவரை அணுகினோம். அந்தப் படத்தில் அவர் பெற்ற சம்பளத்துடன் ஒப்பிடும்போது, இப்படத்திற்காக மிகவும் குறைவான சம்பளத்தில் நடித்து, எங்களுக்கு மிகச் சிறப்பான ஒத்துழைப்பை வழங்கினார். அவருக்கு எனது நன்றிகள்.


அதேபோல் அர்ஜுன் தாஸ் இல்லாமல் இந்தப் படமே இல்லை. அவருடைய அர்ப்பணிப்பும் ஆதரவும் இப்படத்தின் மிகப்பெரிய பலம். இது அவருக்கு மிகவும் முக்கியமான பிடித்தமான படம். அவரும் இப்படத்தை மிகவும் ரசித்து நடித்திருக்கிறார். கால்ஷீட் உள்ளிட்ட எதைப் பற்றியும் கவலைப்படாமல், நாங்கள் அழைத்தபோதெல்லாம் வந்து முழு அர்ப்பணிப்புடன் பணியாற்றினார்.


இவர்கள் அனைவரின் அர்ப்பணிப்பும் உழைப்பும்தான் ‘ஒன்ஸ்மோர்’ படத்தின் பலம். எனக்கு ஆதரவாக இருந்த இயக்குநரும் தயாரிப்பாளருமான இரா சரவணன் அவர்களுக்கும், என்னுடன் இருந்து உழைத்த என்னுடைய குழுவினர் அனைவருக்கும் எனது நன்றிகள். வரும் ஆகஸ்ட் 28ஆம் தேதி இப்படத்தை திரையரங்குகளில் கண்டுகளியுங்கள். அனைவருக்கும் நன்றி!”


இயக்குநர் விக்னேஷ் ஸ்ரீகாந்த் பேசியதாவது..,


“இந்த நாளுக்காக நான் பல காலமாகக் காத்திருந்தேன். அழுவதற்கு காலம் வந்தால் மகிழ்ச்சியாக இருக்கவும் ஒரு காலம் வரும். அந்த மகிழ்ச்சியான காலம் இதுதான். ஆகஸ்ட் 28ஆம் தேதி ‘ஒன்ஸ்மோர்’ திரைக்கு வருகிறது.

இந்தத் திரைப்படத்தை இயக்குநர் மணிரத்னம் அவர்களுக்கு சமர்ப்பிக்கிறேன். அவருடைய படங்களைப் பார்த்துதான் நான் இயக்குநராக வேண்டும் என்று ஆசைப்பட்டேன். அவருக்கான என்னுடைய லவ் லெட்டர்தான் இந்தத் திரைப்படம். இப்படத்திற்காக ஆதரவு அளித்த என்னுடைய அப்பா, அம்மா, உறவினர்கள், திரைத்துறை நண்பர்கள் அனைவருக்கும் நன்றி. என்னுடன் பயணித்து இப்படத்தைத் தயாரித்த தயாரிப்பாளர் யுவராஜ் கணேசன் அவர்களுக்கும் எனது நன்றிகள்.


இப்படத்தை எழுத ஆரம்பித்த முதல் நாளிலிருந்தே என் மனதில் இருந்த ஒரே நடிகர் அர்ஜுன் தாஸ். ரகு கதாபாத்திரமாக அவரை மனதில் வைத்துதான் எழுதினேன். அவர் இப்படத்தில் ரகுவாக முழுமையாக வாழ்ந்திருக்கிறார். நான் எதிர்பார்த்ததைவிட எடிட்டிங்கில் அவருடைய நடிப்பு இன்னும் புதிதாகவும் அற்புதமாகவும் இருந்தது. அதேபோல் அதிதி ஷங்கர் அவர்களுக்கும் நன்றி. படப்பிடிப்பில் பல சிரமங்களுக்கு இடையிலும் எங்களுடன் இணைந்து முழு ஆதரவு கொடுத்து மிக அற்புதமாக நடித்துக் கொடுத்தார். இந்திரா கதாபாத்திரத்தில் நடித்துள்ள சோனாவுக்கும் நன்றி. அவருக்கும் எனக்கும் இதுதான் அறிமுகத் திரைப்படம். பல காலமாக நாங்கள் இருவரும் இந்த நாளுக்காகக் காத்திருந்தோம். இறுதியாக அந்த நாள் வந்ததில் மகிழ்ச்சி.


இப்படத்தின் இசை மிகவும் முக்கியமானது. ‘ஹிருதயம்’ படத்தின் இசையமைப்பாளர் ஹேஷாம் அப்துல் வஹாப் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். அவரது இசை படத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றிருக்கிறது. காட்சிகளையும் இசையையும் தனித்தனியாகப் பிரித்துப் பார்க்க முடியாத அளவுக்கு அழகாக ஒன்றோடு ஒன்று இணைந்திருக்கிறது. ஒளிப்பதிவாளர், எடிட்டர் உள்ளிட்ட அனைத்து தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும், என்னுடைய உதவி இயக்குநர்களுக்கும் நன்றி.


இது என்னுடைய முதல் திரைப்படம். கண்டிப்பாக உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் என்று நம்புகிறேன். ஆகஸ்ட் 28ஆம் தேதி திரையரங்குகளில் ‘ஒன்ஸ்மோர்’ படத்தைப் பார்த்து உங்கள் ஆதரவைத் தாருங்கள். நன்றி!”


நடிகை அதிதி ஷங்கர் பேசியதாவது..,


“முதலில் தயாரிப்பாளர் யுவராஜ் கணேசன் அவர்களுக்கு நன்றி சொல்லிக் கொள்கிறேன். ‘ஒன்ஸ்மோர்’ போன்ற ஒரு திரைப்படத்தை திரையில் கொண்டு வந்ததற்கும், விக்னேஷ் ஸ்ரீகாந்த் போன்ற ஒரு திறமையான இயக்குநரை அறிமுகப்படுத்தியதற்கும் அவருக்கு நன்றி.


நான் வாழ்க்கையில் மிகவும் கடினமான காலகட்டத்தில் இருந்தபோது இந்தத் திரைப்படம் எனக்கு கிடைத்தது. அந்த நேரத்தில் படப்பிடிப்புக்கு வந்து அஞ்சலியாக வாழ்ந்த ஒவ்வொரு நாளும் என்னை மனதளவில் மருந்தாக அமைந்து உற்சாகப்படுத்தியது. எனக்கு மிகப்பெரிய உற்சாகத்தையும் மகிழ்ச்சியையும் கொடுத்தது. அதனால் இந்தப் படம் எனக்கும் மிகவும் முக்கியமானது.


இப்படத்தின் இசையமைப்பாளர் ஹேஷாம் அப்துல் வஹாப், ‘ஹிருதயம்’ படத்தின் மூலம் எனக்கு மிகவும் பிடித்தவர். இந்தப் படத்தில் எனக்காக ஒரு அழகான பாடலைக் கொடுத்திருக்கிறார். அந்தப் பாடல் என் மனதிற்கு மிகவும் பிடித்த பாடல்.இப்படத்தில் நடித்திருக்கும் சோனா மிகவும் அற்புதமான நடிகை. அவருடைய நடிப்பை நான் மிகவும் ரசித்தேன். அவருக்கு இன்னும் பல நல்ல வாய்ப்புகள் கிடைக்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.

அர்ஜுன் தாஸை முதன்முதலில் அனிருத் கான்சர்ட்டில் பார்த்தபோது, ரசிகையாக அவருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டேன். அப்போது அவர் என்னைப் பார்த்து சிரித்தார். இப்போது அவருடன் இணைந்து நடித்திருப்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சி. அவர் எனக்கு மிகச் சிறந்த நண்பராகிவிட்டார். அர்ஜுன் தாஸை வித்தியாசமான கதாபாத்திரத்தில் அனைவரும் ரசித்திருப்பீர்கள். இந்தப் படத்தில் அவரை லவர் பாயாகவும் கண்டிப்பாக கொண்டாடுங்கள். அவர் நிச்சயம் உங்கள் அனைவரையும் கவருவார். ‘ஒன்ஸ்மோர்’ ஒரு அழகான டிராமா. அனைவருக்கும் கண்டிப்பாக பிடிக்கும் என்று நம்புகிறேன்.!”


நடிகர் அர்ஜுன் தாஸ் பேசியதாவது..,


“விக்னேஷ் ஸ்ரீகாந்த் என்னிடம் கதை சொல்ல வந்தபோது, முதலில் ஒன்லைனை மட்டும் சொன்னார். அது எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அதன்பிறகு முழு திரைக்கதையையும் தயார் செய்துவிட்டு வருவதாகக் கூறினார்.

ஆனால் அவர் சொல்லாமல் விட்ட ஒரு விஷயம் இருக்கிறது. திரைக்கதையைத் தயார் செய்த பிறகு பல நிறுவனங்களிடம் இந்தக் கதையைப் பிட்ச் செய்திருக்கிறார். அப்போது பலரும், ‘அர்ஜுன் தாஸ் ஹீரோவாக வேண்டாமே, வேறு ஹீரோவை வைத்து செய்யலாமே’ என்று கூறியிருக்கிறார்கள். ஆனால் விக்னேஷ், ‘அர்ஜுன் தாஸ் மட்டும்தான் இந்தக் கதையில் ரகுவாக நடிக்க முடியும். அவரை வைத்துதான் இந்தப் படத்தை எடுப்பேன்’ என்று எனக்காக உறுதியாக நின்றிருக்கிறார்.


என்னை முழுமையாக நம்பி இந்தப் படத்திற்காக நின்ற இயக்குநர் விக்னேஷ் ஸ்ரீகாந்துக்கு எனது நன்றி. ரகு கதாபாத்திரத்தை என்னால் செய்ய முடியும் என்று நான் கூட சில நேரங்களில் நினைக்கவில்லை. ஆனால் அவர் என்னை முழுமையாக நம்பினார்.


அவருக்கு இந்தத் திரைப்படம் எவ்வளவு முக்கியம் என்பது எனக்குத் தெரியும். நாங்கள் அனைவரும் படத்தை முடித்துவிட்டு அடுத்தடுத்த படங்களுக்குச் சென்றுவிட்டோம். ஆனால் இன்றுவரை அவர் இந்தப் படத்திற்காக தொடர்ந்து நின்றுகொண்டிருக்கிறார். இது அவருடைய அறிமுகப் படம். ஆகஸ்ட் 28ஆம் தேதி வெளியாகும் இப்படம், அவருடைய திறமையை நிச்சயம் சொல்லும்.


 இசையமைப்பாளர் ஹேஷாம் அப்துல் வஹாப், ‘ஹிருதயம்’ படம் பார்த்து, அவருடைய இசை எனக்கு மிகவும் பிடித்ததால் அவருக்கு போன் செய்து பாராட்டினேன். அப்போது விரைவில் இணைந்து ஒரு படம் செய்யலாம் என்று பேசினோம். விக்னேஷ் இந்தக் கதையைச் சொன்னபோது, இது ஒரு மியூசிக்கல் படம் என்பதால் இசைக்கு முக்கியத்துவம் அதிகம் என்பதால் ஹேஷாமிடம் கேட்கலாம் என்று கூறினேன். அவர் கதையைக் கேட்டவுடன் உடனே ஒப்புக்கொண்டு, இப்படத்திற்கு மிக அற்புதமான இசையைத் தந்திருக்கிறார். அவருக்கு எனது நன்றிகள்.”

இந்திரா கதாபாத்திரத்தில் நடித்த சோனாவைப் பற்றி விக்னேஷ் பல்வேறு விதமாகக் கற்பனை செய்து சொல்லிக்கொண்டே இருந்தார். இறுதியாக சோனா இந்திராவாக வந்தார். மிக அற்புதமாக நடித்திருக்கிறார். ஒரு சிறந்த தோழியாகவும் மாறிவிட்டார். இந்தத் திரைப்படம் அவருக்கு மிகச் சிறந்த அடையாளமாக இருக்கும்.

அதேபோல் அதிதி ஷங்கர் இந்தப் படத்திற்கு தேவையான அந்த எனர்ஜியை அற்புதமாகக் கொண்டு வந்திருக்கிறார். படப்பிடிப்பின் முதல் நாளில் ‘வாங்க சார்’ என்று அழைத்தவர், அடுத்த நாளிலிருந்தே ‘வாடி’ என்று அழைக்கும் அளவுக்கு நெருக்கமான தோழியாகிவிட்டார். அவருடைய நட்பு கிடைத்தது எனக்கு மிகப்பெரிய மகிழ்ச்சி.

பல பிரச்சனைகளைச் சந்தித்தபோதும், இப்படத்தை முழுமையாக முடிக்க வேண்டும் என்ற உறுதியுடன் நின்ற தயாரிப்பாளர் யுவராஜ் கணேசன் அவர்களுக்கும், மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் நிறுவனத்திற்கும் நன்றி. இந்தப் படம் அந்த நிறுவனத்தின் வெற்றிச் சரித்திரத்தில் இடம்பெற வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன். யுவராஜ் கணேசன் அவர்களுக்கு இப்படம் மிகப்பெரிய வெற்றியைத் தரட்டும்.‘ஒன்ஸ்மோர்’ அழகான காதலைச் சொல்லும் ஒரு உண்மையான டிராமா. எனக்கு மிகவும் நெருக்கமான திரைப்படம். கண்டிப்பாக உங்கள் அனைவருக்கும் பிடிக்கும். நன்றி!”பான் இந்திய அளவில் தனது இசையால் ரசிகர்களை கவர்ந்த ஹேஷாம் அப்துல் வஹாப், ‘ஒன்ஸ்மோர்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார்.


அரவிந்த் விஸ்வநாதன் ஒளிப்பதிவு செய்துள்ள இந்த திரைப்படத்திற்கு ராஜ்கமல் கலை இயக்கத்தை கவனித்துள்ளார். நவா ராஜ்குமார் ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றியுள்ள நிலையில், மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் சார்பில் யுவராஜ் கணேசன் தயாரித்துள்ளார்.பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் ‘ஒன்ஸ்மோர்’ திரைப்படம், வரும் ஆகஸ்ட் 28 முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இருமுடி கட்டு’ திரைப்பட விமர்சனம்

 இருமுடி கட்டு’ திரைப்பட விமர்சனம் 


விவசாயியான நாயகன் ரவி தேஜா – பிரியா பவானி சங்கர் தம்பதிக்கு ஒரு மகள் இருக்கிறார். திருமணமாகி பல வருடங்களாக குழந்தை இல்லாமல் இருந்த ரவி தேஜா, ஐயப்பன் சாமிக்கு மாலை போட்டு வேண்டிய பிறகு பிறந்த குழந்தை என்பதால், தன் மகள் மீது கொண்டிருக்கும் அளவுக்கு அதிகமான அன்பு போல், ஐயப்பன் மீதும் அளவுக்கு அதிகமான பக்தி கொண்டிருக்கிறார். அதே சமயம், அதீத மது பிரியரான ரவி தேஜா, ஒவ்வொரு ஆண்டும் ஐயப்பனுக்கு மாலை போட்டு கடுமையாக விரதம் இருக்கிறார்.


இந்த நிலையில், ரவி தேஜா மகள் படிக்கும் பள்ளியை சேர்ந்த மாணவி ஒருவர் மர்மமான முறையில் இறக்கிறார். அவரை தொடர்ந்து மற்றொரு மாணவி திடீரென்று படிப்பை பாதியில் விட்டுவிட்டு தலைமறைவாகிறார். ஆசிரியை சுவாசிகா சிறப்பு வகுப்பு என்ற பெயரில் குறிப்பிட்ட சில மாணவிகளை தன் வீட்டுக்கு அழைத்துச் செல்கிறார். இப்படி மாணவிகளை சுற்றி நிகழும் மர்ம சம்பவங்களுக்கான பின்னணி பற்றி ரவி தேஜாவின் மகளுக்கு தெரிய வருகிறது. அதை தன் தந்தையிடம் சொல்லி அவர்களை காப்பாற்ற நினைக்கிறார். ஆனால், அதற்கு ரவி தேஜாவின் மது பழக்கமும், ஐயப்பனுக்கு மாலை போட்டதும், தடையாக அமைகிறது. அந்த தடை நீங்கி, மகள் சொல்ல நினைத்தது தந்தை ரவி தேஜாவுக்கு தெரிந்ததா ?, மாணவிகளை காப்பாற்றினாரா ? என்பதை உணர்ச்சிகரமாகவும், மாஸாகவும் சொல்வது தான் ‘இருமுடி கட்டு’.


மாஸ் மகாராஜா என்ற பட்டப் பெயருடன் வலம் வரும் ரவி தேஜா, இதில் தனது மாஸை குறைத்துக் கொண்டு கதாபாத்திரத்திற்கு ஏற்ற நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கிறார். மகள் மீதான பாசத்தை வெளிப்படுத்தும் காட்சிகளில் கிளாஸாக நடித்திருக்கும் ரவி தேஜா, பெண் பிள்ளைகள் அனைவரையும் தன் மகள்களாக பார்ப்பது தனது மோசமான பலவீனம், என்று கூறி அவர்களது பிரச்சனையை தீர்க்கும் காட்சிகளில் மாஸ் காட்டியிருக்கிறார்.


ரவி தேஜாவின் மனைவியாக நடித்திருக்கும் பிரியா பவானி சங்கர், மகளாக நடித்திருக்கும் சிறுமி நக்‌ஷத்ரா இருவரும் தங்களது நடிப்பின் மூலம் பார்வையாளர்கள் மனதில் ஒட்டிக்கொள்கிறார்கள். குறிப்பாக சிறுமி நக்‌ஷத்ரா தனது பார்வையின் மூலமாகவே பலவித உணர்வுகளை மிக நேர்த்தியாக வெளிப்படுத்தி கவனம் ஈர்க்கிறார்.


சாய் குமார், அஜய் கோஷ், ரமேஷ் இந்திரா, சுவாசிகா, மீசாலா லக்‌ஷ்மண், ராஜ்குமார் காசிரெட்டி, கிஷோர் கசிரப்பளம், கார்த்திக் அடுசுமல்லி, மகேஷ் என மற்ற கதாபாத்திரங்களில் நடித்திருப்பவர்களின் திரை இருப்பு திரைக்கதைக்கு பெரும் பலம் சேர்த்திருக்கிறது.


ஒளிப்பதிவாளர் விஷ்ணு சர்மா, கிரைம் திரில்லர், அப்பா – மகள் செண்டிமெண்ட் மற்றும் மாஸ் என மூன்று விதமான பரிணாமங்களை தனது கேமரா மூலம் பார்வையாளர்களிடம் கச்சிதமாக கடத்தியிருக்கிறார்.


ஜி.வி.பிரகாஷ் குமார் இசையில் பாடல்கள் டப்பிங் படம் போல் அல்லாமல் ஒரிஜினல் படம் போல் அமைந்திருக்கிறது. பின்னணி இசை மகள் மீது அப்பாவுக்கு இருக்கும் அன்பையும், அது தொடர்பான காட்சிகளையும் கண் கலங்க வைக்கும் விதத்தில் பார்வையாளர்கள் மனதில் பதிய வைக்கிறது.


அமைதியான குடும்ப நாடகம், திரில்லர், மாஸ், கமர்ஷியல் மற்றும் சமூகத்திற்கான அறிவுரை என திரைக்கதையில் இருக்கும் பல்வேறு அம்சங்கள் அனைத்தும் பார்வையாளர்களின் கவனம் ஈர்க்கும் வகையில் படத்தொகுப்பாளர் பிரவீன் பவுடி, காட்சிகளை தொகுத்திருக்கிறார்.


எழுதி இயக்கியிருக்கும் சிவா நிர்வாணா, எளிமையான ஒரு கதையை மிக வலிமையாக சொல்லும் வித்தையை மிக சிறப்பாக செய்திருக்கிறார். மாஸ் ஹீரோவை வைத்துக்கொண்டு அவரது ரசிகர்களை திருப்திப்படுத்துவதோடு, கதையின் போக்கை மாற்றாமல் அதே சமயம் கதை சொல்ல வரும் விசயத்தை பார்வையாளர்கள் மனதில் ஆழமாக பதிய வைத்திருக்கிறார்.


கதையின் துவக்கத்தில் இருந்தே பயணிக்கும் அப்பா – மகள் செண்டிமெண்ட் மற்றும் மாணவிகளின் பிரச்சனைகள் திரைக்கதையை சுவாரஸ்யமாகவும், அடுத்தது என்ன நடக்கும் ? என்ற எதிர்பார்ப்போடும் நகர்த்திச் செல்கிறது. இரண்டாம் பாதியில் வரும் எதிர்பார்க்காத திருப்பம் பார்வையாளர்களின் இதயங்களை கனக்கச் செய்து, படத்தின் இறுதி வரை சீட் நுணியில் உட்கார வைத்து விடுகிறது.


மொத்தத்தில், ‘இருமுடி கட்டு’ வெற்றிக்கொடி கட்டுவது உறுதி.

பியார் பிரேமா கல்யாணம்’ திரைப்பட விமர்சனம்

பியார் பிரேமா கல்யாணம்’ திரைப்பட விமர்சனம்


நாயகன் இளனும், நாயகி சான்வி மேக்னாவும் காதலிக்கிறார்கள். அவர்களது காதலுக்கு இரு வீட்டாரும் சம்மதம் தெரிவிக்க திருமண ஏற்பாடு நடக்கிறது. திருமணம் முடிந்த சில நிமிடங்களில் சான்வி மேக்னா, மணக்கோலத்திலேயே மண்டபத்தில் இருந்து தலைதெறிக்க தன் வீட்டுக்கு ஓடிவிடுகிறார். என்ன, ஏது என்று புரியாமல் அனைவரும் அதிர்ச்சியடைய, தன் பெற்றோரை பிரிய மனம் இல்லாதது தான் காரணம் என்று தெரிய வருகிறது. கணவர் இளன் மற்றும் பெற்றோர் அறிவுரை சொல்லியும் கேட்காத சான்வி மேக்னா, திருமணத்திற்குப் பிறகு பெண் எதற்காக கணவர் வீட்டுக்கு செல்ல வேண்டும், கணவர் மனைவி வீட்டுக்கு வரலாமே..!, என்று பெண்ணியம் பேசுகிறார்.


ஆரம்பத்தில் சான்வியின் எதிர்பார்ப்புக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் இளன், பிறகு மனைவியின் விருப்பத்தை ஏற்று, அவரது வீட்டில் வாழ செல்கிறார். வேலை இல்லாமல், மனைவி சம்பாத்தியத்தில், மாமியார் வீட்டில் வசிக்கும் இளனின் திருமண வாழ்க்கை ‘பியார் பிரேமா காதல்’ போல் இனித்ததா?, இல்லையா? என்பதை நகைச்சுவையாக சொல்ல முயற்சித்திருப்பது தான் ‘பியார் பிரேமா கல்யாணம்’.


’பியார் பிரேமா காதல்’ மூலம் இயக்குநராக கவனம் ஈர்த்த இளன், ‘பியார் பிரேமா கல்யாணம்’ மூலம் இயக்குநர் மற்றும் ஹீரோவாக கவனம் ஈர்க்க முயற்சித்திருக்கிறார். ஆனால், காதலை கையாண்ட விதம் அவரை காப்பாற்றினாலும், கல்யாணம் அவரை சற்று தடுமாற வைத்திருக்கிறது.


நாயகனாக அறிமுகமாகியிருக்கும் இளன், வயதுக்கு ஏற்ற துள்ளல் நடிப்பின் மூலம் தனது கதாபாத்திரத்திற்கு நியாயம் சேர்த்திருக்கிறார். பொறுப்பில்லாத பிள்ளை, இனிக்க இனிக்கா காதலிக்கும் காதலர், மாமியார் வீட்டு மருமகன் என பலவிதமான பரிமாணங்களை தனது இயல்பான நடிப்பின் மூலம் இயல்பாக வெளிப்படுத்தி பார்வையாளர்களின் மனம் கவர்கிறார்.


நாயகியாக நடித்திருக்கும் சான்வி மேக்னா, துரு துரு நடிப்பாலும், கவர்ச்சியான உடையாலும் கவனம் ஈர்க்கிறார். நாயகனுக்கு இணையான கதாபாத்திரத்தில், கொடுத்த வேலையை குறையின்றி செய்திருக்கும் சான்வி மேக்னா, முதல் படம் போல் இல்லாமல் பல காட்சிகளை அசால்டாக கையாண்டு கைதட்டல் பெறுகிறார்.


நாயகியின் அம்மாவாக நடித்திருக்கும் ராதிகா, முதன்மை கதாபாத்திரங்களுக்கு ஈடுகொடுக்கும் விதத்தில் தன் இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி கவனம் ஈர்க்கிறார்.


எம்.எஸ்.பாஸ்கர், செந்தில், கீதா கைலாசம், இளங்கோ குமரவேல் ஆகியோரது கதாபாத்திரங்கள் அறிவுரை கூறவும், திரைக்கதை ஓட்டத்திற்கும் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.


யோகி பாபு வரும் காட்சிகள் சில சிரிக்க வைக்கிறது. மாறனின் நகைச்சுவை காட்சிகள் பெரிய அளவில் கைகொடுக்கவில்லை. ஒளிப்பதிவாளர் தினேஷ் கே.பாபுவின் ஒளிப்பதிவு வண்ணமயமாக இருக்கிறது. நட்சத்திரங்களை அழகாக காட்டியிருப்பவர், மொட்டை மாடியையும், நாயகியின் வீட்டையும் வைத்தே பெரும்பாலான காட்சிகளை படமாக்கி ரசிக்க வைத்திருக்கிறார்.


யுவன் சங்கர் ராஜாவின் இசையில் பாடல்கள் மனதில் நிற்கவில்லை. பின்னணி இசை அதீத சத்தம் இல்லாமல் அளவாக பயணித்து காட்சிகளுக்கு பலம் சேர்த்திருக்கிறது.


காதலோடு பயணிக்கும் முதல் பாதி படத்தை ரசிக்கும்படி தொகுத்த பிரதீப் இ.ராகவ், கல்யாண வாழ்க்கையோடு பயணிக்கும் இரண்டாம் பாதி படத்தை திரைக்கதை தொய்வடையும் விதத்தில் தொகுத்திருக்கிறார்.


திருமண முறையின் வழக்கத்தை மாற்றும் நிவேதிதா போஹங்கர் கதையில் இருக்கும் சுவாரஸ்யம் அதற்கான திரைக்கதையில் இல்லாதது படத்தின் பலவீனம். குறிப்பாக மனைவி வீட்டில் கணவர் வசிப்பதும், பெண்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களையும் அப்படியே ஆண்கள் எதிர்கொள்வது போல் வடிவமைத்த காட்சியமைப்புகள் படத்திற்கு கைகொடுக்காமல், பார்வையாளர்களை கடுப்பேற்ற செய்கிறது.


கூடுதல் திரைக்கதை எழுதி இயக்கியிருக்கும் இளன், காதலை திறம்பட கையாண்டு ரசிகர்களை கவர்ந்தது போல், கல்யாண வாழ்க்கை மற்றும் அதில் எழும் சிக்கல்களை சரியான முறையில் கையாளாமல் தடுமாறியிருக்கிறார்.


முதல் பாதி படத்தில் இடம்பெறும் காதல் காட்சிகள், சோசியல் மீடியாக்களில் ஒரு விசயம் எப்படி தீயாக பரவுகிறது, அதற்கு எப்படி எல்லாம் கருத்துகள் வருகிறது, ஆகியவை படத்தை ரசிக்க வைத்தாலும், இரண்டாம் பாதியில் மாமியார் வீட்டில் வாழும் மருமகனின் திண்டாட்டம், அங்கு எதிர்கொள்ளும் சிக்கலை சமாளிப்பதற்கான இளனின் வழிமுறைகள் போன்றவை திரைக்கதையோடு ஒட்டாமல் பயணிப்பதோடு, பார்வையாளர்களை சோர்வடைய செய்து விடுகிறது.


மொத்தத்தில், ‘பியார் பிரேமா காதல்’ மூலம் இயக்குநராக வெற்றி பெற்ற இளன் ‘பியார் பிரேமா கல்யாணம்’ மூலம் ஹீரோவாக வெற்றி பெற்று, இயக்குநராக தோல்வியடைந்திருக்கிறார்.

ராம் அன்ட் லீலா’ திரைப்பட விமர்சனம்

 ராம் அன்ட் லீலா’ திரைப்பட விமர்சனம்


திருமண வயதை தாண்டியும் பெண் கிடைக்காமல் திண்டாடும் நாயகன் ரியோவை, நாயகி வர்டிகா காதலிக்கிறார். அதே சமயம், மாலை 6 மணிக்கு மேல் தான் வீட்டை விட்டு வெளியே வர மாட்டேன், அதனால் 6 மணிக்கு மேல் சந்திக்க கூடாது, என்ற நிபந்தனை விதிக்கிறார். வர்டிகாவின் அழகிலும், காதலிலும் கிரங்கியிருக்கும் ரியோ, அவரது நிபந்தனையை ஏற்று காதலிக்கிறார். சில நாட்களுக்குப் பிறகு வர்டிகாவின் மாலை 6 மணி நிபந்தனை ரியோவுக்கு பல சிக்கல்களை ஏற்படுத்த, 6 மணி ரகசியத்தை தெரிந்துக் கொள்ள வேண்டும் என்று முடிவு செய்கிறார்.


’சின்னதம்பி’ பட கவுண்டமனி போல் மாலைக்கண் பிரச்சனையாக இருக்குமோ…!, என்று நாயகன் ரியோ மற்றும் பார்வையாளர்கள் சிந்திக்க, யோசித்து பார்க்க முடியாத ஒரு பிரச்சனை நாயகிக்கு இருப்பது தெரிய வருகிறது. அது என்ன ?, அது தெரிந்த பிறகும் நாயகன், வர்டிகாவை காதலித்தாரா ?, அவருக்கு கல்யாணம் நடந்ததா ? என்பதை காமெடியாக சொல்வதே ‘ராம் அன்ட் லீலா’.


கல்யாணத்திற்காக ஏங்கும் இளைஞர் ராம் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ரியோ, காமெடி கலந்த நடிப்பால் புதுவிதமான ரியோவை வெளிக்காட்ட முயற்சித்திருக்கிறார். பெண்கள் உலகம் பற்றி தெரியாத அப்பாவியாக வலம் வருபவர், தனது ஒவ்வொரு அசைவுகள் மூலமாகவும் பார்வையாளர்களை சிரிக்க வைக்க முயற்சித்திருக்கிறார். அதில் பெரும்பாலான சில்மிஷங்கள் மற்றும் செயல்களில் சிவகார்த்திகேயனின் ஆரம்பக்கட்டத்தை நினைவுப்படுத்துகிறது. காதலுக்காக ஏங்குவது, எதிர்பார்க்காத பிரச்சனை, அந்த பிரச்சனையை தீர்க்க போராடுவது என்று திரைக்கதைக்கு பலம் சேர்க்கும் வகையில் ரியோவின் நடிப்பு இருந்தாலும், பல இடங்களில் கொஞ்சம் ஓவர் டோஸாகவும் இருக்கிறது.


நாயகியாக நடித்திருக்கும் அறிமுக நடிகை வர்டிகா அழகாக இருக்கிறார். கனமான கதாபாத்திரம் என்றாலும், அவருக்கு ஹீரோ அளவுக்கு நடிக்க வாய்ப்புகள் வழங்கப்படவில்லை. அவரை ஒரு அழகு சிலையாக காட்டுவதற்கே முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார்கள்.


நாயகனின் தந்தையாக நடித்திருக்கும் சேத்தன், அம்மாவாக நடித்திருக்கும் மாளவிகா அவினாஷ், தங்கையாக நடித்திருக்கும் தாஃபியா அபு, மாமனாக நடித்திருக்கும் முனீஷ்காந்த், நண்பராக நடித்திருக்கும் பாலாஜி தியாகராஜன் தயாளன், நாயகியின் அம்மாவாக நடித்திருக்கும் தீபா வெங்கட், மாமனாக நடித்திருக்கும் மாகாபா, தாத்தாவாக நடித்திருக்கும் காத்தாடி ராமமூர்த்தி ஆகியோர் கதாபாத்திரங்களுக்கு பொருத்தமான தேர்வாக இருக்கிறார்கள்.


ஒளிப்பதிவாளர் மல்லிகார்ஜுன், காட்சிகளை கலர்புல்லாக படமாக்கியிருக்கிறார். குறிப்பாக நாயகியை அழகாகவும், பளிச்சென்றும் காட்டுவதில் அதிகம் மெனக்கெட்டிருப்பவர் படம் முழுவதையும் பளிச்சென்று படமாக்கி காட்சிகளை ரசிக்க வைத்திருக்கிறார்.


அன்கிட் மேனனின் இசையில் பாடல்கள் அனைத்தும் மாண்டேஜாக இடம் பெற்றிருந்தாலும், திரும்ப திரும்ப கேட்கும்படி இருப்பதோடு, ரீல்ஸ் வீடியோவுக்கானதாகவும் இருக்கிறது. பின்னணி இசை பாடல்களைப் போல் மெலோடி பாணியில் இதமாக பயணிக்கிறது.


படத்தொகுப்பாளர் ஒய்.என்.சி.சிவா, முதல் பாதியை சற்று மெதுவாக நகர்த்தி சென்றாலும், இரண்டாம் பாதியை வேகமாக நகர்த்துவதோடு, நகைச்சுவை காட்சிகளை சரியான முறையில் தொகுத்து படத்தை கலகலப்பாக நகர்த்திச் செல்கிறார்.


எழுதி இயக்கியிருக்கும் ராமச்சந்திரன் கண்ணன், எந்த ஆங்கிலப் படத்தை பார்த்து கருவை சுட்டார், என்று தெரியவில்லை. (காரணம், இதே கருவோடு மூன்று மாதங்களுக்கு முன்பு தான் ஒரு படம் வெளியானது ) சுட்ட கருவாக இருந்தாலும், அதை தமிழ் பார்வையாளர்களுக்கு ஏற்ப கொடுத்ததில் வெற்றி பெற்றிருக்கிறார்.


யூகங்களை கடந்த நாயகியின் பிரச்சனை படத்தை சுவாரஸ்யமாக நகர்த்த உதவியிருப்பதோடு, அதற்கான பின்னணியை கதையாக விவரித்த விதமும் திரைக்கதைக்கு பலம் சேர்த்திருக்கிறது.


பிரச்சனை குறித்து தெரிந்த பிறகு, காதலர்கள் ஒன்று சேர்வதில் இருக்கும் சிக்கல், அந்த சிக்கலை தாண்டிய காதலையும், அந்த உணர்வையும் வெளிப்படுத்தும் விதம், கல்யாணத்தை காமெடி கலாட்டாவாக கையாண்ட விதம் ஆகியவற்றின் மூலம் படத்தில் இருக்கும் சில குறைகளை மறக்கடித்து, சிரித்து மகிழும்படியான படமாக கொடுத்திருக்கிறார் இயக்குநர் ராமச்சந்திரன் கண்ணன்.


மொத்தத்தில், ’ராம் அன்ட் லீலா’ மனிதர் உணர்ந்து கொண்ட புனிதமான காதல்


மொத்த ராத்திரி விமர்சனம்


காதல் தோல்வியால் ஊரை விட்டு துபாய் செல்லும் நாயகன் ரிஷிகாந்த், ஐந்து வருடங்களுக்குப் பிறகு மீண்டும் ஊருக்கு வர, அவருக்கே தெரியாமல் திருமண ஏற்பாடுகள் செய்யப்படுகிறது. குடும்பத்தாரின் கட்டாயத்தினால் திருமணத்திற்கு சம்மதிக்கிறார். அவருக்கும், நாயகி அனிஷ்மா அனில்குமாருக்கும் திருமணம் நடக்கிறது.


மொத ராத்திரி அன்று தனது மனைவியிடம் ரிஷிகாந்த், மனம் திறந்து பேச முயற்சிக்கிறார். ஆனால், அனிஷ்மா அங்கிருந்து வெளியேறி தன் காதலருடன் ஓட முயற்சிக்கிறார். விசயம் தெரிந்த பிறகு ரிஷிகாந்த், என்ன முடிவு எடுத்தார்?, அவரது கல்யாண வாழ்க்கை வெற்றி பெற்றதா? அல்லது அனிஷ்மாவின் காதல் வெற்றி பெற்றதா ? என்பதை கிராமத்து மனிதர்களின் எதார்த்தமான வாழ்வியலாகவும், நகைச்சுவையாகவும் சொல்வதே ‘மொத ராத்திரி’.


திருமண வீட்டில் நடக்கும் சம்பவங்களை இயல்பாகவும், உறவுகளின் மகிழ்ச்சி, சோகம், எதிர்பார்ப்பு, மோதல் ஆகியவற்றை உண்மைக்கு நெருக்கமாகவும் காட்சிப்படுத்தி கதை சொல்லியிருக்கும் இயக்குநர் ராஜா கருப்புசாமி, பல இடங்களில் சிரிக்க வைப்பதோடு, சிந்திக்கவும் வைத்திருக்கிறார்.


நாயகனாக நடித்திருக்கும் ரிஷிகாந்த், நாயகன் பற்றாக்குறையை தீர்ப்பார் என்ற நம்பிக்கையை கொடுக்கும் விதமாக நடித்திருக்கிறார். மருது கதாபாத்திரத்தில் அளவாக நடித்து திரைக்கதைக்கு பலம் சேர்த்திருப்பவர், பல இடங்களில் அமைதியாக இருந்தே தனது உணர்வை சரியான முறையில் வெளிப்படுத்தியிருக்கிறார்.


நாயகியாக நடித்திருக்கும் அனிஷ்மா அனில்குமார், ‘சிறை’ படத்திற்குப் பிறகு மீண்டும் ஒரு அழுத்தமான கதாபாத்திரத்தை அசால்டாக கையாண்டு பாராட்டு பெறுகிறார். முதல் பாதி படத்தில் குறைவாக பேசியிருப்பவர், இரண்டாம் பாதி படம் முழுவதும் பேசாமலேயே நடித்தாலும், இறுதிக் காட்சியில் தன் மனக்குமுறலை வெளிப்படுத்தி அழும் காட்சியில் கைதட்டல் பெறுகிறார்.


சேத்தன், பக்ஸ், சங்கீதா பாலன், பானுப்பிரியா, வர்ஷினி கார்மேகம், அப்துல் லீ, ஏ.வெங்கடேஷ் உள்ளிட்ட படத்தில் நடித்திருக்கும் அனைவரும் நடிகர்களாக அல்லாமல் கிராமத்து மனிதர்களாக தங்களது உணர்வுகளை வெளிப்படுத்தி நடித்த விதம் திரைக்கதைக்கு பெரும் பலம் சேர்த்திருக்கிறது.


ஒளிப்பதிவாளர் சுரேந்தரன் பரஞ்சோதி கதாபாத்திரங்களைப் போல் கதைக்களம் மற்றும் காட்சிகளையும் இயல்பாக படமாக்கியிருக்கிறார். ஒரு திருமண நிகழ்வு மற்றும் திருமண வீட்டில் பயணித்த உணர்வை கொடுப்பவர், இரவு நேர காட்சிகளை மிக சிறப்பாக கையாண்டு கவனம் ஈர்க்கிறார்.


பரத் சங்கரின் இசையில் பாடல்கள் அனைத்தும் கதைக்களத்தையும், கதாபாத்திரங்களின் உணர்வுகளையும் வெளிப்படுத்தும் விதமாக அமைந்திருக்கிறது. பின்னணி இசையில் சில பாடல்களின் இசை ஒட்டிக்கொண்டிருந்தாலும், காட்சிகளுக்கு உயிரூட்டியிருக்கிறது.


ஒரு நாளில் நடக்கும் கதையாக இருந்தாலும், நேர்த்தியான முறையில் காட்சிகளை தொகுத்து கதையின் இயல்பு தன்மை மாறாமல் படத்தை ந்கர்த்திச் சென்றிருக்கும் படத்தொகுப்பாளர் அசோக் அர்ஜுனன், ஏகப்பட்ட கதாபாத்திரங்கள் இருந்தாலும், அனைவர் மீதும் பார்வையாளர்களின் கவனத்தை கடத்தும் வித்தையை சிறப்பாக செய்திருக்கிறார்.


திருமண நிகழ்வில் தொடங்கும் கதை, மொத ராத்திரியோடு முடிவடைந்தாலும், அந்த இடைப்பட்ட நேரத்தில் மனித மனங்களை அலசியிருக்கும் இயக்குநர் ராஜா கருப்புசாமி, காதல் உள்ளிட்ட பல விசயங்களை மேலோட்டமாகவும், நகைச்சுவையாகவும் பேசியிருந்தாலும் பார்வையாளர்கள் மனதில் ஆழமாக பதியும்படி பேசியிருக்கிறார்.


கதாபாத்திரங்களை வடிவமைத்த விதம் மற்றும் அவர்களிடம் வேலை வாங்கிய விதம், ஒரு திருமண வீட்டில் நடக்கும் நிகழ்வை உண்மைக்கு நெருக்கமான முறையில் காட்சிப்படுத்திய முறை ஆகியவை வழக்கமான கமர்ஷியல் சினிமாவை கடந்த ஒரு படைப்பாக பாராட்டு பெறுகிறது.


மொத்தத்தில், ’மொத ராத்திரி’ தலைப்பு தான் ஒரு மாதிரி, படம் அனைத்து மாதிரியான மக்களுக்கான திரைப்படம்

*Vikkals Vikram and Arathy Krishna's Lightweight, Baby! unveils a fun and quirky first look*

 *Vikkals Vikram and Arathy Krishna's Lightweight, Baby! unveils a fun and quirky first look* 



 *Chennai, August 20:* Hitha Studios, the production house behind the upcoming Tamil romantic entertainer *Lightweight, Baby!,* has unveiled the film's first look, starring stand-up comedian Vikkals Vikram and fitness personality Arathy Krishna.


The first look offers a glimpse into the film's unique world, bringing together romance, comedy and competitive fitness in an unexpected way. Set against a vibrant gym backdrop, the poster features Vikkals Vikram in a playful situation as Arathy Krishna, in her element as a fitness personality, shares the frame with him. The contrasting personalities of the lead pair hint at the fun, chemistry and chaos that audiences can expect from the film.


The poster also brings the film's title to life with its playful visual treatment, reflecting the light-hearted and contemporary tone of the story.


For Vikkals Vikram, *Lightweight, Baby!* marks his first film as a leading man. Known for his stand-up comedy and his distinctive comic timing, Vikram also makes his writing contribution to the film as the dialogue writer. Arathy Krishna, who has built a strong presence in the fitness and bodybuilding community, makes her first major screen appearance as the female lead.


The unconventional pairing of a stand-up comedian and a fitness personality forms one of the film's key attractions. While the world of fitness provides the backdrop, *Lightweight, Baby!* explores the relationship between two people from very different worlds, bringing together romance, humour, family expectations and personal ambition.


 *CAST* 


Vikkals Vikram

Arathy Krishna


 *TECHNICAL CREDITS* 


 *Produced by:* Hitha Studios


 *Written & Directed by:* KC Guru


 *Co-Producer:* Sagara Sandesh


 *Director of Photography:* Pramod Kotiyan


 *Music:* Sarvanaa Subramaniam


 *Editor:* Harish Komme


 *Dialogues:* Vikkals Vikram


 *Co-Director:* Kiran Tumbakere


 *Executive Producer:* Sharath Kumar N


 *Art Director:* Shankaragouda


 *Assistant Directors:* Ahmad Varadharajan, Prem Chandran


 *PRO* : Navaneetha Krishnan

ஊடகங்களுக்கும், ரசிகர்களுக்கும் நன்றி தெரிவித்த தி ஒன் சூர்யாவின் 'விஸ்வநாத் & சன்ஸ்' படக்குழு

 *ஊடகங்களுக்கும், ரசிகர்களுக்கும் நன்றி தெரிவித்த தி ஒன் சூர்யாவின் 'விஸ்வநாத் & சன்ஸ்' படக்குழு !* 



சிதாரா என்டர்டெயின்மென்ட் & ஃபார்ச்சூன் ஃபோர் சினிமாஸ் ஆகிய நிறுவனங்களின் தயாரிப்பில் வெங்கி அட்லூரி இயக்கத்தில் தி ஒன் 'சூர்யா' நடிப்பில் தயாராகி ஆகஸ்ட் 14ஆம் தேதி வெளியான விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படம் - பிரம்மாண்டமான வெற்றியை பெற்று ரசிகர்களின் பேராதரவுடன் வசூலில் சாதனை படைத்து வருகிறது. இதனால் மகிழ்ச்சியடைந்த படக்குழுவினர், படத்தை வெற்றி பெறச் செய்த ரசிகர்களுக்கும், ஊடகங்களுக்கும் நன்றி தெரிவித்துள்ளனர். 


இதனை முன்னிட்டு, சென்னையில் படக்குழுவினர் பங்கேற்ற பிரத்யேக நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் விநியோகஸ்தர் ஹரிதா லிங்கசாமி, நடிகர் சுனில் ரெட்டி, பாடலாசிரியர் பாலாஜி வேணுகோபால், நடிகைகள் ராதிகா சரத்குமார், பவானி ஸ்ரீ, மமீதா பைஜூ, இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார், இயக்குநர் வெங்கி அட்லூரி ஆகியோர் கலந்து கொண்டனர். 


இந்நிகழ்வில் பாடலாசிரியர் பாலாஜி வேணுகோபால் பேசுகையில், 



'' கடந்த 23 வருடங்களாக பேச்சு தான் என் வாழ்க்கையாக இருந்திருக்கிறது. ஏனெனில் நான் ஒரு ஆர்ஜே (RJ). இதுவரை ஆயிரக்கணக்கான மேடை நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளேன்.‌ திரைப்பட இயக்குநராகவும் மேடை ஏறி இருக்கிறேன். இணைய தொடரை இயக்கியதற்காகவும் மேடை ஏறி இருக்கிறேன். ஆனால் முதன்முறையாக பாடலாசிரியராக இந்த முறை மேடை ஏறி இருக்கிறேன். இது எனக்கு மிக முக்கியமான மேடை ஆகும். இது எனக்கு மிகவும் சந்தோஷத்தை அளிக்கிறது.‌


இந்தப் படத்தில் நானும், அருண் ராஜா காமராஜும் முதன்முறையாக இணைந்து பாடல்களை எழுதி இருக்கிறோம். 



சினிமாவிற்காக எந்த மேடை ஏறினாலும் நான் முதலில் நன்றி சொல்வது ஜி வி பிரகாஷ் குமாருக்கு தான். 2003 ஆம் ஆண்டில் அவர் 'வெயில்' படத்திற்கு இசையமைத்துக் கொண்டிருந்தபோது, 'உருகுதே மருகுதே' பாடலை போட்டுக் காண்பித்து இந்தப் பாடல் ரீச்சாகுமா? என என்னிடம் கேட்டிருக்கிறார்.  ஆனால் இப்போது அவர் எந்த அளவிற்கு ரீச் ஆகி இருக்கிறார் என்பது அனைவருக்கும் தெரியும். மூன்று தேசிய விருதுகளை பெற்றிருக்கிறார்.ஜி வி என்னுடைய நண்பர் என்பதைவிட என்னுடைய ஆசான். தற்போதுள்ள இளம் தலைமுறை இசைக் கலைஞர்களிடையே இசையின் அனைத்து விசயங்களையும் , நுட்பங்களையும் தெரிந்து இந்தியாவில் தயாரான அனைத்து ஜானரிலான படங்களுக்கும் இசையமைத்த ஒரே இசையமைப்பாளர் ஜி. வி. பிரகாஷ் குமார் தான்.  எனக்கு இந்த திரைப்படத்தில் பாடல் எழுதுவதற்கு வாய்ப்பு வழங்கிய ஜிவிக்கும், இயக்குநர் வெங்கி அட்லூரிக்கும் நன்றி. 


ஜி.வி. பிரகாஷ் மூலமாக எனக்கு அறிமுகமான ஆகச் சிறந்த மனிதநேய பண்பாளர் தான் வெங்கி அட்லூரி.  நீங்கள் பார்த்து ரசித்த விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படம்-  வெங்கியுடைய ஆர்ட் அல்ல.... ஹார்ட்.‌ இந்த படத்தின் திரைக்கதையை நான் ஓராண்டுக்கு முன்பே வாசித்து விட்டேன். வாசிக்கும் போதே பல இடங்களில் கண்கலங்கினேன். அதை அப்படியே திரையில் நேர்த்தியாக கடத்தி இருக்கிறார். அவருக்கு மிகச் சிறந்த எதிர்காலம் இருக்கிறது. இந்த வாய்ப்பு வழங்கியதற்காக அவருக்கும் நன்றி. 


சூர்யாவை 2003 ஆம் ஆண்டில் 'கஜினி' படத்திற்காக நேர்காணல் செய்தேன். நேர்காணலுக்காக ஒப்புக்கொண்ட நேரத்தை விட ஐந்து நிமிடம் தாமதமாக வந்தார். அதற்கும் அவர் காரணம் இல்லை. எங்கள் அலுவலகத்தில் இருந்த - இயங்கிய லிஃப்ட் தான் காரணம். அதற்கு அவர் வந்தவுடன் வருத்தம் தெரிவித்தார். ஐந்து நிமிடம் தாமதமாக வந்ததற்கு மன்னிக்கவும் என்று சொன்ன அந்த பண்பு... என்னை வியக்க வைத்தது. அவருடைய அந்த மனித நேயம் தான் இன்றும் அவருக்கு ஏராளமான ரசிகர்கள் பின் தொடர்வதற்கு காரணம். அதுவும் இந்தப் படத்தில் மக்கள் சூர்யாவை அதிக அளவு நேசித்தார்கள், விரும்பினார்கள், ஒரு குடும்பஸ்தனாக சூர்யாவை திரையில் காண்பித்த இயக்குநர் வெங்கி அட்லூரிக்கு ஒரு நன்றி.


படத்திற்கு ரசிகர்களின் வரவேற்பைக் காண திரையரங்கத்திற்கு சென்ற போது அங்கு ரசிகர்களின் அன்பும், ஆதரவும் எங்களை உற்சாகப்படுத்தியது. தி ஒன் 'சூர்யா'  போன்ற மாபெரும்  நட்சத்திர நடிகர் இது போன்றதொரு ஜானரில் ஒரு படத்தில் நடிப்பதற்கு நிறைய துணிச்சல் வேண்டும். அது அவரிடம் இருக்கிறது. அதற்காக அவருக்கும் நன்றி'' என்றார். 


நடிகை பவானி ஸ்ரீ பேசுகையில், 


'' மிகவும் சந்தோஷமாக இருக்கிறேன். இந்தப் படத்தில் ஒரு சிறிய பங்காக நான் இருந்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். எனக்கு இந்த படத்தில் சிறிய கதாபாத்திரம் தான். ஆனால் அதையும் இயக்குநர் நன்றாக எழுதியிருந்தார். மேக்னா என்ற அந்த கதாபாத்திரத்தை வழங்கியதற்காக இயக்குநருக்கு நன்றி. 


சிறிய வயதிலிருந்து திரையில் பார்த்து வியந்த நட்சத்திர நடிகரான தி ஒன் சூர்யாவுடன் இணைந்து நடிக்கிறோம் என்றவுடன் எனக்குள் பயம் இருந்தது. ஆனால் படப்பிடிப்பு தளத்திற்கு வந்தவுடன் இயல்பாக பேசி, 'மேக்னா கதாபாத்திரம் நல்ல கதாபாத்திரம், அதில் சிறப்பாக நடிக்க வேண்டும்' என ஊக்கம் கொடுத்தார். அவர் அப்படி சொன்ன பிறகு, எனக்குள் இருந்த பயம் நீங்கி இயல்பாகி விட்டேன். அவருடன் இணைந்து பணியாற்றிய நாட்கள் மறக்க முடியாதது. 


இந்தப் படத்தில் ராதிகா சரத்குமார் - மமீதா பைஜூவும் இரண்டு பவர் ஹவுஸ். திரையில் பார்த்தபோது இவர்களுடன் இருக்க வேண்டும் என்ற உணர்வு எனக்குள் ஏற்பட்டது. அவர்கள் இருவரும் தோன்றும் ஒவ்வொரு காட்சியும் முத்துக்கள் போல் இருந்தது. ரவீனா மேடத்துடன் பணியாற்றியதும் நல்ல அனுபவமாக இருந்தது. ஊட்டியில் படப்பிடிப்பு நடைபெற்ற அனைத்து நாட்களும் மறக்க முடியாதவை. அனைவருக்கும் நன்றி'' என்றார். 


நடிகை ராதிகா சரத்குமார் பேசுகையில், 


'' இந்தப் படத்தை வெற்றி பெறச் செய்த ஊடகத்தினருக்கும், ரசிகர்களுக்கும் நன்றி. 


இந்தக் காலத்தில் மற்றவர்களின் கவனத்தை கவர்ந்து அதை தக்க வைத்துக் கொள்வது என்பது குறைந்துவிட்டது. ஒரு நிமிடத்திற்கு மேல் யாரிடமும் பேச முடிவதில்லை. ஆனால்  ரசிகர்களை அன்பாலும் ... பாசத்தாலும்... ஒரே சிந்தனையுடன் இந்தப் படத்தை நிதானமாக கதையை சொல்லி.. அதில் ஒரு வெற்றியை பெற்று, அந்த மேடையில் நான் நின்று கொண்டிருக்கிறேன். இதை கேட்கும் போதும்... பேசும் போதும்... பெருமிதமாக இருக்கிறது. இந்த வெற்றியை அளித்த படக்குழுவினருக்கு என்னுடைய வாழ்த்துக்கள். 


இயக்குநர் வெங்கி இந்தப் படத்தின் கதையை ஒவ்வொரு காட்சியாக சொல்லும் போது அவரிடம், 'இந்த காட்சிகளில் எல்லாம் சூர்யா நடிக்க ஒப்புக்கொண்டாரா?' என கேட்டேன். அவர் இந்த காட்சிகளில் எல்லாம் சூர்யா நடிக்க ஒப்புக்கொண்டார் என என்னிடம் சொன்னார்.


அதன் பிறகு இயக்குநரிடம் 'இந்த படத்தில் ஹீரோயின் அழகாக இல்லை என்றால்... இந்த படம் ஓடாது' என்று சொன்னேன். அப்போது நாங்கள் அதற்காக பொருத்தமான நடிகையை தேடிக் கொண்டிருக்கிறோம் என்றார். அப்போது ஒரு நாள் 'டியூட்' படத்தின் படப்பிடிப்பு தளத்திற்கு சென்றிருந்தேன். அப்போது மமீதாவை அங்கு பார்த்தேன். அதன் பிறகு சரத்குமார் சார் மிகத் திறமையான பெண், நன்றாக நடிக்கிறார் எனச் சொன்னார். அதன் பிறகு இயக்குநர் வெங்கி அட்லூரி மமீதா தான் ஹீரோயின் என்று சொன்னவுடன் எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. 


இந்தப் படத்தை அனைவரும் பார்த்து இருக்கிறார்கள், ரசித்திருக்கிறார்கள். பல்வேறு விமர்சனங்களும் வந்திருக்கின்றன. அது மகிழ்ச்சியாக இருந்தது. இந்தப் படத்தை நானும், சரத் சார் திரையரங்கில் பார்த்தோம் . அவர் எந்த படத்தை பார்த்தாலும் ஏதாவது குறையை கண்டுபிடித்து அதனை இப்படி செய்திருக்கலாம். ..!அப்படி செய்திருக்கலாம் .. !என விமர்சனம் செய்வார். ஆனால் இந்த படத்தை பார்த்தவுடன் 'ஐ லவ் திஸ் மூவி. நன்றாக இருக்கிறது' என்றார். 


இந்தப் படத்தில் ஹீரோவிற்கு அவர்களுடைய அம்மா தான் உலகம். அம்மா உயிருடன் இருக்கும் வரை வேறு யாருடனும் பழகமாட்டார். ஆனால் அம்மா உயிரிழந்த உடன் அவருக்குள் ஏற்படும் அதிர்ச்சி... அடுத்த உறவுகளை நோக்கிய  அவரது பயணம்.. இந்த காட்சியில் வெங்கியை மனதார பாராட்டுகிறேன். அவருடைய 'லக்கி பாஸ்கர்' படத்தை பார்த்தேன். அது எனக்கு மிகவும் பிடித்திருந்தது. ஆனால் இந்தப் படத்தில் ஒரு புத்திசாலித்தனமான எழுத்து இருந்தது. 


கமல்ஹாசனை நேற்று கூட சந்தித்தேன். அப்போது அவர் புத்திசாலித்தனமாக எழுதுவது எப்படி? என்பது குறித்து பயிற்சியும் விவாதமும் நடத்தப்பட வேண்டும் என்றார். 


சினிமாவில் ஒவ்வொரு கதைக்கு பின்னால் ஒரு குடும்பம் இருக்கும். அந்த குடும்பத்தில் உள்ள அனைவரும் கஷ்டப்பட்டு வேலை செய்து வெற்றியடைய செய்ய வேண்டும் என்ற கனவு எல்லோருக்கும் இருக்கும். அந்த குடும்பத்திற்குள் ஒரு பந்தம் இருக்கும். அது சில படங்களில் முழுவதுமாக அமையும். அப்படி ஒரு திரைப்படம் தான் விஸ்வநாத் அண்ட் சன்ஸ். இந்த படத்தில் அனைவரும் ஒரு குடும்பமாகத்தான் இணைந்து பணியாற்றினார்கள்.


ஜிவி பிரகாஷ் குமார் ஒரு ஜீனியஸ்.சிவக்குமாருடன் ஒரு மணி நேரம் பேசிக் கொண்டிருந்தேன். இந்த திரைப்படம் 'அவன் அவள் அது' என்ற திரைப்படத்தின் வேறு ஒரு வெர்சன் என்று சொன்னேன். இதைப்போல் இந்தப் படத்தைப் பார்த்த ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வகையான நினைவுகளை தூண்டி இருக்கிறது. 


ஒரு நல்ல குடும்ப படம் என்று நான் பார்த்தது 'சூரியவம்சம்'. அது அந்த காலகட்டத்தில். அதற்குப் பிறகு நான் ரொம்ப ரசித்த படம் 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்'. இந்தப் படத்தில் நடித்திருக்கும் ஒவ்வொரு கதாபாத்திரங்களும் புத்திசாலித்தனமாக பேசும். ஒவ்வொரு கதாபாத்திரமும் தனக்கான நியாயத்துடன் நேர்மையாக பேசும். இதற்காக மீண்டும் ஒருமுறை வெங்கிக்கு நன்றி சொல்கிறேன். அவருக்கு சிறந்த எதிர்காலம் இருக்கிறது. அவர் தொடர்ந்து வெற்றி பெற வேண்டும் என வாழ்த்துகிறேன் '' என்றார். 


நடிகை மமீதா பைஜூ பேசுகையில், 


'' விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படக்குழுவினருக்கு வாழ்த்துக்கள். எனக்கு ஆதரவாக இருந்ததற்கும், வழிகாட்டியாக இருப்பதற்கும் நன்றி. சூர்யா சார்யை மிஸ் செய்கிறோம். இந்தப் படத்தை வெற்றி பெறச் செய்த ஊடகத்தினருக்கும் ரசிகர்களுக்கும் நன்றி. 


இதுவரை இந்தப் படத்தை பார்க்காதவர்கள் திரையரங்கத்திற்கு சென்று பாருங்கள் பார்க்க வேண்டும். இந்தப் படத்தை பார்த்துவிட்டு வெளியே வரும்போது மனதிற்குள் ஒரு மன நிறைவு ஏற்படும்'' என்றார். 


இசையமைப்பாளர் ஜி. வி. பிரகாஷ் குமார் பேசுகையில்,


 '' இந்தப் படத்திற்கு இசையமைக்கும் வாய்ப்பை வழங்கிய தயாரிப்பாளருக்கும், தயாரிப்பு நிறுவனத்திற்கும் நன்றி.


அடுத்த நன்றி இயக்குநர் வெங்கி அட்லூரி - க்கு அவருடன் 'வாத்தி' படத்தில் தான் முதன் முதலாக இணைந்தேன். அந்தப் படம் மிகப்பெரிய அளவில் வெற்றியைப் பெற்றது .அதற்குப் பிறகு அவருடன் இணைந்து லக்கி பாஸ்கரில் பணியாற்றினேன். அந்தப் படமும் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அதைத் தொடர்ந்து மூன்றாவது முறையாக 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' திரைப்படத்தில் இணைந்தேன். தொடர்ந்து மூன்று படங்களும் வெற்றி பெற்று,  ஹாட்ரிக் அடித்திருக்கிறார். இதற்காக அவருக்கு நன்றி.


'வாத்தி' திரைப்படத்தின் பாடல்- தமிழ், தெலுங்கு என இரண்டு மாநிலங்களிலும் வெளியானது. வெளியாகி வெற்றி பெற்றது. இதற்காக எனக்கு தேசிய விருதும் கிடைத்தது. அதன் பிறகு தெலுங்கு திரை உலகில் இருந்து ஏராளமான வாய்ப்புகள் வந்தது. இதற்கு வெங்கி தான் காரணம். 


தற்போது வேறொரு படத்தின் பணிக்காக ஹைதராபாத் சென்றிருந்தபோது என்னை சந்தித்த அனைவரும் 'விஸ்வநாத் & சன்ஸ்' படத்தின் இசை பிரமாதம் என பாராட்டினர்.  அவர்களாக முன் வந்து இப்படத்தின் இசையையும், அதில் என்னுடைய பணியையும் பாராட்டிய போது.. உண்மையில் பெருமிதமாக இருந்தது. இதுதான் உண்மையான வெற்றி என்றும் நான் கருதுகிறேன். 


இந்த திரைப்படம் வெளிநாடுகளில் மிகப்பெரிய வெற்றியை பெற்றிருக்கிறது. ஆந்திராவில் சூர்யா நடித்த படத்தின் வசூல் புதிய சாதனையை படைத்திருக்கிறது. இது சந்தோஷமாக இருக்கிறது. 


சூர்யாவிற்கு இது முக்கியமான வருடம். அடுத்தடுத்து இரண்டு பிளாக் பஸ்டர் ஹிட் படங்களை கொடுத்திருக்கிறார். மூன்றாவது திரைப்படத்தையும் விரைவில் வழங்குவார். தீபாவளி அல்லது இந்த ஆண்டின் இறுதிக்குள் வெளியாகும். இதற்காக சூர்யாவிற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். 'சூரரை போற்று' திரைப்படத்திற்கு பிறகு மீண்டும் சூர்யாவுடன் இணைந்து பணியாற்றிருக்கிறேன். மூன்றாவது படத்திலும் இணைந்திருக்கிறேன். எங்கள் ஜோடியும் ஹாட்ரிக் அடிக்கும் என நம்புகிறேன். 


படப்பிடிப்பு தளத்தில் நானும் ராதிகா மேடத்திடம் அடி வாங்கி இருக்கிறேன். அவர் ஒரு ரியல் இன்ஸ்பிரேஷன். சூர்யாவை போல் ராதிகா மேடத்திற்கும் இந்த ஆண்டு முக்கியமான ஆண்டு. அவர்களுடைய நடிப்பில் 'தாய்க்கிழவி' மிகப்பெரிய வெற்றி. அதைத் தொடர்ந்து விஸ்வநாத் அண்ட் சன்ஸ். இந்த படமும் வெற்றி. இந்த படத்தில் ராதிகா மேடம் நடித்த காட்சிகளை பின்னணி இசைக்காக பார்த்தபோது என்னையும் அறியாமல் நான் அழுதேன். 


இந்தப் படத்திற்காக இறுதிக்கட்டத்தில் மூன்றே நாட்களில் இரண்டு பாடல்களை உருவாக்கினோம். அந்த இரண்டு பாடல்கள் தான் தற்போது மிகப்பெரிய வெற்றியை பெற்று, அனைவராலும் பகிர்ந்து கொள்ளப்படுகிறது. 


மேஜிக் மொமென்ட்ஸ் எப்போது வரும் என்று தெரியாது. இசையில் எப்போது வேண்டுமென்றாலும் அந்த மேஜிக் நிகழும். இதற்காக மீண்டும் ஒருமுறை வெங்கிக்கு நன்றி சொல்கிறேன். 


இந்தப் படத்திற்கு இதுவரை ஒரு எதிர்மறையான விமர்சனங்களும் வரவில்லை. அது இதன் மிகப்பெரிய சிறப்பம்சம். இது மிக அரிதாக நிகழக்கூடியவை. '' என்றார். 


இயக்குநர் வெங்கி அட்லூரி பேசுகையில், 


'' இந்தப் படத்தை வெற்றி பெறச் செய்த ரசிகர்களுக்கும், ஊடகத்தினருக்கும் நன்றி. இதற்கு முன் 'வாத்தி', 'லக்கி பாஸ்கர்' என இரண்டு படங்களுக்கும் எனக்கு ஆதரவு அளித்தீர்கள். இந்த படத்தை நான் முதன் முதலாக தமிழில் இயக்கியிருக்கிறேன். 


இந்தப் படத்திற்கான பத்திரிகையாளர் காட்சி திரையிடப்பட்டது. படம் நிறைவடைந்து பத்திரிகையாளர்கள் என்ன சொல்லப் போகிறார்களோ..? என்ற பதட்டத்தில் என் கால்கள் நடுங்கின. ஆனால் படம் முடிவடைந்ததும் ஒவ்வொருவரும் என்னை பாராட்டினார்கள். கை குலுக்கினார்கள். கட்டி அணைத்தார்கள். அவர்களுடைய அன்பை வெளிப்படுத்திக் கொண்டே இருந்தார்கள். இது என்னால் மறக்கவே இயலாது. இதற்காக அனைவருக்கும் நன்றி. 


இந்தப் படத்தில் நடித்த சுனில் ,பவானி ஸ்ரீ ,இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார், படத்தை விநியோகம் செய்த லிங்கசாமி, ராதிகா மேடம், மமீதா பைஜூ ஆகியோருக்கு நன்றி. 


மமீதா பைஜூ தூய ஆத்மா. எனக்குக் கிடைத்த தங்கை. சினிமாவை தவிர வேறு எதை பற்றியும் சிந்திக்காத அற்புதமான நடிகை. வாய்ப்பு கிடைத்தால் மீண்டும் அவருடன் இணைந்து பணியாற்றுவேன். 


ஜி வி பிரகாஷ் குமாருடன் 'வாத்தி' படத்திலிருந்து பயணிக்கிறேன். முதல் நாள் அவரை சந்தித்து, 'உங்களை...சார்..! ப்ரோ..! என எப்படி அழைக்க வேண்டும்?' என கேட்டேன். 'ப்ரோ' என்று கூப்பிடுங்கள் என்றார். ஆனால் இப்போது நாங்கள் உண்மையிலேயே சகோதரர்கள். நாங்கள் இருவரும் இணைந்து மூன்று படங்களில் பணியாற்றி விட்டோம். ஒரு பாடலை முழுமையாக நிறைவு செய்த பிறகும் அதை வேண்டாம் என்று சொன்னால்... சிறிது கூட முகம் சுழிக்காமல் மீண்டும் புதிதாக ஒரு பாடலை உருவாக்கித் தருவார். இதற்காக கட்டணம் எதையும் வாங்கவும் மாட்டார். அவர் நான் எதைக் கேட்டாலும் அதை மறுக்காமல் வழங்குவார். இந்த புரிதலுக்கு நன்றி.


'தி‌ ஒன்'  சூர்யா இப்போது இங்கே இல்லை. இருந்தாலும் அவருடைய அன்பும், ஆதரவும் அனைவருக்கும் இருக்கிறது. நான் அவரிடம் கதையை சொன்ன போது அவருடைய எதிர்பார்ப்பு குறித்து எதுவும் சொல்லாமல் இந்த குடும்பக் கதையை கேட்டு நடிக்க ஒப்புக்கொண்டார். இயல்பிலேயே அவருக்குள் இருந்த ஒரு துணிச்சல்தான் மிகப்பெரிய வெற்றிக்கு காரணம் என நான் நினைக்கிறேன். ரசிகர்கள் மீதும் அவர் வைத்திருக்கும் அன்பு எதனுடனும் ஒப்பிட முடியாதது. 


இப்போதுதான் திரையுலக வணிகர் ஒருவர் சூர்யாவின் 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' 150 கோடி ரூபாய் வசூலை கடந்திருக்கிறது என்றார். அதைக் கேட்கும் போது எனக்கு சிலிர்த்தது. 


சூர்யா ரசிகர்களுக்கு எப்போதும் புதுவிதமான விருந்தை வழங்குவதை தான் முக்கியமானதாக பார்க்கிறார். இதுவும் ரசிகர்கள் மீதான ஒரு வகையான அன்புதான்.


திரையரங்குகளில் விற்பனையாகும் ஒவ்வொரு டிக்கெட்டிற்கும்... படத்தை பார்க்கும் ரசிகர்களின் ஒவ்வொரு கரவொலிக்கும்.... நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். 'விஸ்வநாதன் அண்ட் சன்ஸ்' அல்ல.. விஸ்வநாதன் குடும்பத்தினருக்கு அனைவரும் தொடர்ந்து ஆதரவு வழங்குங்கள்'' என்றார்.

பெரிய நட்சத்திரங்கள். இன்னும் பெரிய கதைகள். தமிழ் ZEE5 வழங்கும் இதுவரையிலான மிகச் சிறப்பான உள்ளடக்கத் தொகுப்பு

 *பெரிய நட்சத்திரங்கள். இன்னும் பெரிய கதைகள். தமிழ் ZEE5 வழங்கும் இதுவரையிலான மிகச் சிறப்பான உள்ளடக்கத் தொகுப்பு.*



ஜனநாயகன் முதல் பிரபலமான ஃபிராஞ்சைஸ்களின் தொடர்ச்சி வரை, இன்றைய தமிழ் பொழுதுபோக்கை வரையறுக்கும் கதைகள், நட்சத்திரங்கள் மற்றும் அனுபவங்களை தமிழ் ZEE5-ன் புதிய உள்ளடக்கத் தொகுப்பு ஒன்றிணைக்கிறது 


தமிழ் உள்ளடக்கம் என்பது வெறும் பொழுதுபோக்கு மட்டுமல்ல; அது தமிழ் கலாச்சாரம் மற்றும் அன்றாட வாழ்க்கையின் ஒருங்கிணைந்த பகுதியாகும். கதைகள், கதாபாத்திரங்கள் மற்றும் நட்சத்திரங்கள் திரையைக் கடந்து, தலைமுறைகளைக் கடந்து பகிரப்பட்ட அனுபவங்கள், உரையாடல்கள் மற்றும் கலாச்சார அடையாளமாக மாறுகின்றன. தமிழ் ZEE5-ஐ பொறுத்தவரை, இந்த உறவின் ஒரு பகுதியாக இருப்பது மிகப்பெரிய பொறுப்புடன் கூடியதாகும். பார்வையாளர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்வதோடு மட்டுமல்லாமல், அர்த்தமுள்ள, உயர்தரமான கதைசொல்லல் மூலம் அவற்றை தொடர்ந்து உயர்த்துவதும் எங்கள் பொறுப்பாகும்.


இந்த உறுதிப்பாட்டை பிரதிபலிக்கும் வகையில், தமிழ் ZEE5-ன் புதிய உள்ளடக்கத் தொகுப்புக்கு இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும் படமான ஜனநாயகன் முன்னிலை வகிக்கிறது. முதலமைச்சர் C. ஜோசப் விஜய்யின் திரைப்பயணத்தில் ஒரு முக்கியமான மைல்கல்லாக அமையும் இப்படம், அவரது அரசியல் மாற்றத்திற்குப் பிறகு வெளியாகும் முதல் படமாகவும், அவரது இறுதி திரையரங்கத் தோற்றமாகவும் அமைகிறது. இந்த முக்கியமான படைப்பை உலகெங்கிலும் உள்ள பார்வையாளர்களிடம் கொண்டு சேர்ப்பதில் தமிழ் ZEE5 பெருமை கொள்கிறது. இந்த முக்கியமான படைப்புடன், ரசிகர்களின் விருப்பமான ஃபிராஞ்சைஸ்கள், புதிய ஒரிஜினல்கள், பிளாக்பஸ்டர் பிரீமியர்கள் மற்றும் இன்றைய தமிழ் பொழுதுபோக்கின் பன்முகத்தன்மையை பிரதிபலிக்கும் புதுமையான வடிவங்களையும் இந்த உள்ளடக்கத் தொகுப்பு ஒன்றிணைக்கிறது.


இந்த உள்ளடக்கத் தொகுப்பின் மூலம், தமிழ்நாட்டின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களான Dheeran Productions, Dream Warrior Pictures, KVM Productions, SS Group, 18 creators, Cocktail Cinemas, Passion Studios, Seven Screen Studios, Zee Studios, Drumsticks Production, Cinemum LLP மற்றும் Happy Unicorn ஆகியவற்றுடன் புதிய மற்றும் தொடர்ச்சியான கூட்டணிகளை தமிழ் ZEE5 அறிவிக்கிறது. திரையரங்க உள்ளடக்கத் தொகுப்பில் இந்த ஆண்டின் மிகப்பெரிய படைப்பும், பிளாக்பஸ்டருமான ஜனநாயகன் முன்னிலை வகிக்கிறது. இதனுடன், நயன்தாரா மற்றும் கவின் நடிப்பில் Hi; அருள்நிதி மற்றும் பிரியா பவானி சங்கர் நடிப்பில் Demonte Colony; கீர்த்தி சுரேஷ் நடிப்பில் Savithri; ஹரிஷ் கல்யாண் நடிப்பில் Nooru Kodi Vanavil; அக்‌ஷய் குமார் மற்றும் பாசில் ஜோசப் நடிப்பில் Raawadi ஆகிய முக்கியமான வெளியீடுகளும் இந்த வரிசையை மேலும் வலுப்படுத்துகின்றன. தமிழ் ZEE5-ன் மிகவும் விரும்பப்பட்ட ஒரிஜினல்களின் வெற்றியைத் தொடர்ந்து, பார்வையாளர்களின் விருப்பமான Koose Munisamy Veerappan 2, Regai 2, Vilangu 2, Thadayam 2 மற்றும் Sattamum 2 ஆகியவற்றின் தொடர்ச்சிகளும் இந்தத் தொகுப்பில் இடம்பெறுகின்றன. மேலும், Anand Neelakandan நடிப்பில் Ananthakaalam, நெல்சன் இயக்கத்தில் Mix FM, Cinemum-ன் Octopus மற்றும் Muthukumar, Adithya Joshi மற்றும் Lisha ஆகியோர் இடம்பெறும் Thaai Mann ஆகிய புதிய ஒரிஜினல்களும் அறிமுகப்படுத்தப்படுகின்றன. Thee Kural என்ற ரியாலிட்டி நிகழ்ச்சியும் தமிழ் ZEE5-ன் பொழுதுபோக்கு வழங்கலை மேலும் விரிவுபடுத்துகிறது.


Zee 5 நிறுவனத்தின் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள மொழிகளுக்கான Business Head லாயிட் சேவியர் கூறுகையில், “ஜனநாயகனை தமிழ் ZEE5-க்கு கொண்டு வருவதில் நாங்கள் மிகுந்த பெருமை கொள்கிறோம். இது ஒரு பிளாக்பஸ்டர் படத்தைத் தாண்டி, மாண்புமிகு முதலமைச்சர் C. ஜோசப்பின் இறுதி திரையரங்கத் தோற்றம் என்பதால், கோடிக்கணக்கான ரசிகர்களுக்கு இது ஒரு உணர்வுபூர்வமான மைல்கல்லாகும். ரசிகர்கள் தங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் அந்த மறக்க முடியாத தருணங்களை மீண்டும் அனுபவிக்கும் வாய்ப்பை வழங்குவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். வரவிருக்கும் எங்கள் உள்ளடக்கத் தொகுப்பில் இடம்பெறும் பல்வேறு சுவாரஸ்யமான படைப்புகளுடன், ஜனநாயகனை அவர்களின் பார்வைப் பயணத்தின் நிரந்தரமான ஒரு பகுதியாக மாற்றுவதில் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம். நயன்தாரா மற்றும் கவின் நடிப்பில் மிகவும் எதிர்பார்க்கப்படும் Hi மற்றும் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் Savithri போன்ற படங்களிலிருந்து, Thadayam மற்றும் Koose Munisamy Veerappan ஆகியவற்றின் தொடர்ச்சிகள் மற்றும் Thee Kural போன்ற வடிவங்கள் வரை, வெவ்வேறு குரல்கள், கருத்துகள் மற்றும் கதை சொல்லும் முறைகளைக் கொண்ட கதைகளை நாங்கள் ஒன்றிணைக்கிறோம். தமிழ் பார்வையாளர்களிடையே ஆழமாக வேரூன்றியுள்ள ஆர்வமும், படைப்பாளர்களுக்கு துணிச்சலுடன் செயல்படவும், கதைசொல்லலின் எல்லைகளை விரிவுபடுத்தவும் தொடர்ந்து சுதந்திரத்தை வழங்குகிறது.”


தமிழ் உள்ளடக்கத் தொகுப்பு திரைப்படங்கள் மற்றும் ஒரிஜினல்களைத் தாண்டியும் விரிவடைந்து, Garuda, Vikram Vetal, Shiv Sati, Chandrakanta, Tirupati Balaji, Barbarik Narmada மற்றும் Ram Anjanay Yudh உள்ளிட்ட பல்வேறு AI தொழில்நுட்பம் சார்ந்த கதைசொல்லல் படைப்புகளையும், குழந்தைகளின் விருப்பமான Kundaka Mandakka போன்றவற்றையும் உள்ளடக்கியுள்ளது. இதனுடன் FIFA, Bundesliga, Coppa Italia, Supercoppa Italiana மற்றும் ILT20 ஆகியவற்றை உள்ளடக்கிய வலுவான நேரலை விளையாட்டு தொகுப்பும் இணைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பல்வேறு வகைகள் மற்றும் வடிவங்களில் பொழுதுபோக்கின் கலவையை பார்வையாளர்களுக்கு வழங்குகிறது.


இந்த விரிவுபடுத்தப்பட்ட வழங்கலின் மூலம், தமிழ் ZEE5, தமிழ் பார்வையாளர்களுக்கான முழுமையான பொழுதுபோக்கு அனுபவத்தை உருவாக்கி வருகிறது. பல்வேறு ஆர்வங்கள் மற்றும் பார்வை நேரங்களுக்கு ஏற்ற கதைகள், வடிவங்கள் மற்றும் அனுபவங்களை ஒன்றிணைக்கிறது. புராணங்கள் மற்றும் குழந்தைகளுக்கான பொழுதுபோக்கு முதல் புனைகதை, புனைகதை அல்லாத நிகழ்ச்சிகள் மற்றும் நேரலை விளையாட்டுகள் வரை, புதிய உள்ளடக்கத் தொகுப்பு, பிராந்தியம் முழுவதும் உள்ள பார்வையாளர்கள் இந்த தளத்தில் கண்டறியக்கூடிய உள்ளடக்கத்தின் பரந்த தன்மையையும் பன்முகத்தன்மையையும் பிரதிபலிக்கிறது.