-

Loading latest news...

அங்கீகாரம்” திரைப்பட நன்றி அறிவிப்பு விழா

 *“அங்கீகாரம்” திரைப்பட நன்றி அறிவிப்பு விழா !!*



முதல் வார வெளியீட்டிலேயே ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள “அங்கீகாரம்” திரைப்படத்தின் வெற்றி விழா உற்சாகமாக நடைபெற்றது. இதில் படக்குழுவினர் பத்திரிகையாளர்களை சந்தித்து, திரைப்படத்திற்கு அளிக்கப்பட்ட ஆதரவுக்கும் பாராட்டுகளுக்கும் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்தனர். மேலும், படத்தின் உருவாக்க அனுபவங்கள், ரசிகர்களின் வரவேற்பு மற்றும் வெற்றிக்கான காரணங்கள் குறித்து பல சுவாரஸ்யமான தகவல்களையும் பகிர்ந்து கொண்டனர்.


இந்நிகழ்வினில் நடிகர் ஆண்டனி பேசியதாவது..,


“அங்கீகாரம்” படத்தின் வசனங்கள் மிகவும் அற்புதமாக இருந்தது. அந்த வசனங்களைக் கேட்கும்போது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. ஹீரோ நல்ல கதைகளைத் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அவர் இந்த ஸ்போர்ட்ஸ் படத்தில் நடித்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.


இந்தப் படம் கிராமப்புறங்களில் விளையாட்டு வீரர்கள் எதிர்கொள்ளும் சிரமங்களையும், அவர்களின் போராட்டங்களையும் அழுத்தமாக பதிவு செய்துள்ளது. குறிப்பாக விளையாட்டில் இருக்கும் அனைவரும் கண்டிப்பாக இந்தப் படத்தைப் பார்க்க வேண்டும். இப்படம் அவர்களுக்கு நிச்சயம் ஒரு உத்வேகத்தை அளிக்கும்.


மேலும், இசையமைப்பாளர் ஜிப்ரானின் பின்னணி இசையும், பாடல்களும் படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளன. சண்டைப் பயிற்சி இயக்குநர் பீட்டர் ஹெய்ன் ஸ்போர்ட்ஸ் மற்றும் ஆக்ஷன் காட்சிகளை சிறப்பாக வடிவமைத்துள்ளார். ஒளிப்பதிவாளரின் பணியையும் பாராட்டிய அவர், படத்தில் பணியாற்றிய அனைத்து கலைஞர்கள் மற்றும் தொழில்நுட்பக் குழுவினருக்கும் நன்றி. “அங்கீகாரம்” யாரும் தவறவிடக் கூடாத படம் என்றும், அனைவரும் திரையரங்குகளில் பார்த்து படத்திற்கு இன்னும் முழு ஆதரவு அளிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன் நன்றி.



நடிகை இசபெல்லா பேசியதாவது..,


“அங்கீகாரம்" எனக்கு கிடைத்த முதல் அடையாளம். இதுவரை மேடையேறி பேசியதில்லை. முதன்முறையாக இந்த மேடையில் பேசுவது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த வாய்ப்பை இயக்குநர் சிவா மற்றும் தயாரிப்பாளர்கள் அனைவருக்கும் என் நன்றி.


இயக்குநர் எனக்கு மிகப்பெரிய நம்பிக்கையை கொடுத்து, இந்தப் படம் மூலம் எனக்கு அங்கீகாரம் கிடைக்கச் செய்தார். கே ஜெ ஆர் சார் மிகவும் கம்ஃபர்ட்டாக நடிக்க வைத்தார். படத்தில் எனக்கு ‘தங்கமயில்’ என்ற பெயர் வைத்ததற்கும் நன்றி. ஜிப்ரான் சாரின் இசை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அவரைப் போன்ற கலைஞருடன் பணியாற்றியது பெருமையாக உள்ளது. ஒளிப்பதிவாளர் படப்பிடிப்பு முழுவதும் என்னை ஊக்கப்படுத்தினார். பீட்டர் ஹெய்ன் மாஸ்டர் உள்ளிட்ட அனைத்து கலைஞர்கள் மற்றும் தொழில்நுட்பக் குழுவினருடன் பணியாற்றியது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. என்னை இவ்வளவு அழகாக திரையில் காட்டிய எடிட்டர் உள்ளிட்ட அனைவருக்கும் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.”



நடிகை வசுந்தரா பேசியதாவது,


“அங்கீகாரம் படத்திற்கு தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் பத்திரிகையாளர்கள் மற்றும் ரசிகர்கள் அனைவருக்கும் என் நன்றி. இது உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவான படம். சினிமாவுக்காக தேவையில்லாத மிகைப்படுத்தல்களை சேர்க்காமல், வாழ்க்கைக்கு நெருக்கமான முறையில் முக்கியமான ஒரு கருத்தை இயக்குநர் தென்பாதியான் சொல்லியிருக்கிறார்.


இந்தப் படத்தின் ஒரு பகுதியாக இருந்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. கே.ஜெ.ஆர் இந்தக் கதாபாத்திரத்திற்காக கடுமையாக உழைத்திருக்கிறார். அவருடைய மாற்றமும், அர்ப்பணிப்பும் மிகவும் பிரமிக்க வைத்தது. பீட்டர் ஹெயின் மாஸ்டருடன் பணியாற்றியது மறக்க முடியாத அனுபவம். ஜிப்ரான் சாரின் இசை எப்போதும் போல அற்புதமாக அமைந்துள்ளது.


அருண், பிரசாந்த், அஜித் ஆகிய இளம் தயாரிப்பாளர்கள் முக்கியமான ஒரு கதையை நம்பி இப்படத்தை உருவாக்கியிருக்கிறார்கள். இப்படம் வெற்றி பெற்றால்தான் இதுபோன்ற நல்ல படங்கள் தொடர்ந்து உருவாகும். இந்தப் படத்தையும் உங்கள் மனதில் இடம் கொடுத்து, தொடர்ந்து ஆதரவு அளிக்க வேண்டும். நன்றி.”



இசையமைப்பாளர் ஜிப்ரான் பேசியதாவது..,


“அங்கீகாரம் படத்திற்கு பத்திரிகையாளர்கள் அளித்த விமர்சனங்களும், ஆதரவும் எங்களுக்கு மிகவும் முக்கியமானது. அதற்காக அனைவருக்கும் என் நன்றி. கே.ஜெ.ஆர் தயாரிப்பாளராக இருந்தாலும், நடிகராக இருந்தாலும், சமூகப் பொறுப்புள்ள கதைகளைத் தேர்ந்தெடுத்து வருகிறார். அடுத்த படமும் அதுபோன்ற முக்கியமான கருத்தை பேசும் படமாக இருக்கும்.


ஒரு கதைக்குள் மனிதர்களின் உணர்வுகளை இயல்பாக கொண்டு வருவது மிகவும் கடினம். அதை இயக்குநர் தென்பாதியான் ஒவ்வொரு கதாபாத்திரத்திலும் சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கிறார். குறிப்பாக கதையின் எழுத்து மிகவும் வலுவாக உள்ளது. இதுபோன்ற நல்ல படங்கள் தொடர்ந்து உருவாக, உங்கள் ஆதரவு மிகவும் அவசியம். குறிப்பாக இரண்டாவது வாரத்திலும் இந்தப் படத்திற்கு தொடர்ந்து ஆதரவு அளித்து, இன்னும் அதிகமான மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும். நன்றி.”



சண்டைப்பயிற்சி இயக்குநர் பீட்டர் ஹெய்ன் பேசியதாவது..,


“அங்கீகாரம் படத்திற்கு பத்திரிகையாளர்கள் அளித்த பாராட்டும், நேர்மையான விமர்சனங்களும் மிகவும் மகிழ்ச்சி அளித்தது. புதுமுக ஹீரோவான கே.ஜெ.ஆர் மீது எனக்கு ஆரம்பத்திலிருந்தே நம்பிக்கை இருந்தது. இந்தப் படத்திற்காக அவர் எடுத்த உழைப்பும், உடல்மாற்றமும், அர்ப்பணிப்பும் சாதாரணமானது அல்ல. ஒரு தடகள வீரராக திரையில் இயல்பாகத் தோன்றுவதற்காக கடுமையாக உழைத்துள்ளார்.


இந்தப் படத்தின் பின்னால் இயக்குநர் தென்பாதியான் , கே.ஜெ.ஆர், தயாரிப்பாளர்கள் மற்றும் ஒட்டுமொத்த படக்குழுவினரின் கடின உழைப்பு இருக்கிறது. விளையாட்டு வீரர்களின் வாழ்க்கை, அவர்கள் சந்திக்கும் சிரமங்கள் ஆகியவற்றை உண்மைக்கு நெருக்கமாக இப்படத்தில் பதிவு செய்திருக்கிறார்கள். அதற்காக இயக்குநருக்கு என் பாராட்டுகள்.


இந்தப் படத்திற்காக நாங்களும் பல மாதங்கள் ஆய்வு செய்து பணியாற்றினோம். படப்பிடிப்பில் அனைவரும் மிகவும் அர்ப்பணிப்புடன் உழைத்தனர். குறிப்பாக மூன்று தயாரிப்பாளர்களின் ஈடுபாடு என்னை மிகவும் கவர்ந்தது. ஒளிப்பதிவாளரும் தனது பணியை சிறப்பாக செய்துள்ளார். அங்கீகாரம் அனைவரும் பார்க்க வேண்டிய ஒரு முக்கியமான படம். அனைவருக்கும் நன்றி.”


ஒளிப்பதிவாளர் ஏ.விஸ்வநாத் பேசியதாவது..,


“இயக்குநர் தென்பாதியான் காட்சிகளை முன்கூட்டியே தெளிவாக கற்பனை செய்து வைத்திருப்பார். அதனால் பல சவாலான இடங்களில்கூட, கஷ்டங்கள் இருந்தாலும் அதே இடத்தில் படமாக்க வேண்டும் என்று உறுதியாக இருந்தார். அந்த நம்பிக்கையால்தான் படத்தின் காட்சிகள் இவ்வளவு சிறப்பாக வந்துள்ளன.


ஸ்போர்ட்ஸ் காட்சிகளை படமாக்கும்போது பீட்டர் ஹெய்ன் மாஸ்டருடன் பணியாற்றுவது ஆரம்பத்தில் பயமாக இருந்தது. அவர் ஒரு ஜாம்பவான் ஆனால் முதல் நாள் முதல் கடைசி நாள் வரை ஒரு மென்டராகவும், வழிகாட்டியாகவும் இருந்து ஒவ்வொரு காட்சியையும் விரிவாக விளக்கி மிகப்பெரிய ஆதரவு கொடுத்தார். இந்தப் படத்தின் ஸ்போர்ட்ஸ் மற்றும் ஆக்‌ஷன் காட்சிகள் சிறப்பாக வந்ததற்கு அவருடைய பங்களிப்புதான் முக்கிய காரணம்.


படத்தின் முதல் கியூப் திரையிடலை பார்த்தபோது மிகவும் உணர்ச்சிவசப்பட்டேன். இயக்குநரை கட்டிப்பிடித்து ‘நாம் ஜெயித்துவிட்டோம்’ என்று சொன்னேன். ஜிப்ரான் சாரின் இசை படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்தது. பத்திரிகையாளர்கள் படத்தை பாஸிடிவாக எழுதி மக்களிடம் கொண்டு சென்றது எங்களுக்கு மிகப்பெரிய உற்சாகத்தை கொடுத்தது.


படத்தில் நடித்த நடிகர்கள், கலரிஸ்ட், எடிட்டர் உள்ளிட்ட அனைத்து தொழில்நுட்பக் கலைஞர்களின் பங்களிப்பும் இந்த வெற்றிக்கு முக்கிய காரணம். இந்தப் படம் எங்கள் அனைவருக்கும் முதல் அங்கீகாரத்தை பெற்றுத் தந்துள்ளது. அதற்கு தொடர்ந்து ஆதரவு அளித்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி.”



எடிட்டர் தினேஷ்குமார் பேசியதாவது..,


“முதலில் அங்கீகாரம் படத்திற்கு ஆதரவு அளித்த பத்திரிகையாளர்கள் அனைவருக்கும் என் நன்றி. இந்தப் படத்தின் மூலம் இரண்டாவது முறையாக தயாரிப்பாளர்களுடன் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது. இயக்குநர் தென்பாதியான் என் மீது நம்பிக்கை வைத்து இந்தப் படத்தில் பணியாற்ற வாய்ப்பு அளித்ததற்கு நன்றி.


இந்தப் படத்தில் பணியாற்றிய ஜிப்ரான், பீட்டர் ஹெய்ன், சம்பத் ஆழ்வார், ஏ.விஸ்வநாத் உள்ளிட்ட அனைத்து தொழில்நுட்பக் கலைஞர்களின் ஒத்துழைப்பு மிகவும் சிறப்பாக இருந்தது. குறிப்பாக ஸ்போர்ட்ஸ் காட்சிகள் சினிமாத்தனத்தை மீறாமல் இயல்பாகவும், உண்மைக்கு நெருக்கமாகவும் அமைந்தது இந்தப் படத்தின் மிகப்பெரிய பலமாகும். அனைவரின் ஆதரவுக்கும் மனமார்ந்த நன்றி.”


இயக்குநர் தென்பாதியான் பேசியதாவது…,


“இந்தப் படத்திற்கு நாங்கள் எதிர்பார்த்ததைவிட நீங்கள் கொடுத்த ஆதரவு மிகவும் முக்கியமானது. அதற்காக பத்திரிகையாளர் நண்பர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.


இந்தக் கதையை முதலில் கேஜிஆர் ஸ்டுடியோவிடம் கொண்டு சென்றேன். அப்போது வேறு ஒரு பெரிய ஹீரோவிடம் இந்தக் கதையைச் சொன்னோம். ஆனால் அது நடக்கவில்லை. அதனால் வேறு ஒரு கதை செய்யச் சென்றுவிட்டேன். பிறகு, இந்தக் கதையை நம்மைத் தவிர வேறு யாராலும் சரியாக செய்ய முடியாது என்று தோன்றியதால், மீண்டும் இந்தக் கதையை கையில் எடுத்தேன். அப்போது கேஜிஆர், ‘இந்தப் படத்தில் நானே நடிக்கிறேன்’ என்று கூறினார். அதன்பிறகு அவரை வைத்து இந்தப் படத்தை மீண்டும் தொடங்கினோம். இந்தக் கதைக்காக அவர் மிகப்பெரிய உழைப்பைக் கொடுத்தார். என் ஹீரோ எந்த விதத்திலும் தவறாகத் தெரியக்கூடாது என்பதற்காக நானும், என் குழுவினரும் மிகவும் கடினமாக உழைத்தோம். அது படத்தில் நன்றாகவே வெளிப்பட்டிருக்கிறது. நீங்கள் கொடுத்த விமர்சனங்களிலும் அது பிரதிபலித்திருக்கிறது.


இந்தப் படத்திற்கு மிகச் சிறந்த தொழில்நுட்பக் கலைஞர்கள் அமைந்தார்கள். ஜிப்ரான் சார் அற்புதமான இசையைக் கொடுத்தார். பீட்டர் ஹெய்ன் மாஸ்டர், இந்தக் கதையைக் கேட்டுவிட்டு, ‘இந்த ஹீரோவுக்கா?’ என்று முதலில் கேட்டார். ஆனால் கதையை முழுமையாகக் கேட்ட பிறகு மிகவும் பிடித்துப்போய், இந்தப் படத்தில் இணைந்தார். அவர் இணைந்த பிறகு, இந்தப் படம் இன்னும் பெரிய உயரத்தை அடைந்தது. என் தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவரும் இந்தப் படத்திற்காக அர்ப்பணிப்புடன் உழைத்தார்கள். நாங்கள் நினைத்தது அனைத்தும் இந்தப் படத்தில் நடந்திருக்கிறது. இந்தப் படம் அடுத்த வாரங்களிலும் இன்னும் சிறப்பாக ஓட வேண்டும். அதற்கு உங்கள் அனைவரின் தொடர்ந்த ஆதரவு வேண்டும். நன்றி.”


தயாரிப்பாளர் அருள் முருகன் பேசியதாவது..,


ஸ்வஸ்திக் விஷன்ஸ் நிறுவனத்தின் முதல் படம் இது. எங்களுடைய ஹீரோ கே.ஜி. சார் வந்திருக்கிறார். எங்களை நம்பி, இந்தப் படத்துக்காக இரண்டு வருடங்கள் உழைத்திருக்கிறார். நான் தயாரிப்பாளராக இருப்பதற்கு முன்பு, அவரிடம் மேனேஜராகத்தான் என்னுடைய கேரியரைத் தொடங்கினேன். இன்று இந்த மேடையில் தயாரிப்பாளராக நிற்கிறேன். அதற்கு ரொம்ப நன்றி சார்.


அடுத்து ஜே.பி. அண்ணா, அதாவது இந்தப் படத்தின் இயக்குநர். முதல் நாளிலிருந்தே இன்று வரை அவருடன் பயணித்துக் கொண்டிருக்கிறோம். அவருடைய எழுத்தையும், அவர் சொல்ல வந்த விஷயங்களையும் படமாக உருவாக்கியிருப்பது எங்களுக்கு மிகவும் பெருமையாக இருக்கிறது. இப்படிப்பட்ட ஒரு படத்தை நாங்கள் எடுத்திருக்கிறோம். எங்கள் தொழில் நுட்ப கலைஞர்கள் பீட்டர் ஹெய்ன் மாஸ்டர், ஜிப்ரான் அண்ணா என ஒளிப்பதிவாளர் அனைவரும் கடுமையான உழைப்பை தந்துள்ளனர். இப்படத்தை எப்படியாவது நீங்கள் மக்களிடம் கொண்டு போய் சேர்க்க வேண்டும். நன்றி.



தயாரிப்பாளர் அஜித் பாஸ்கர் பேசியதவது..,


முதலில் இந்தப் படத்தின் இயக்குநர் தென்பாதியான் (ஜே.பி.) அவர்களுக்கு என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தப் படத்தின் முக்கிய காரணமே அவர்தான். இந்தக் கதைக்காக நிறைய ஆய்வுகள் செய்தார். ஒரு விளையாட்டு வீரரின் வாழ்க்கையைப் புரிந்துகொள்வதற்காக பல இடங்களுக்குப் பயணம் செய்து, மிகுந்த உழைப்பைச் செலவிட்டார்.


அதேபோல் தயாரிப்பாளரும் எங்கள் அண்ணனுமான கே ஜெ ஆர் இந்தப் படத்திற்காக முழு ஆதரவையும் அளித்தார். இந்த மாதிரியான படத்தை உருவாக்குவதற்கு நிறைய காலமும் உழைப்பும் தேவைப்பட்டது. படப்பிடிப்பு தளத்திலும் அனைவரும் மிகவும் அர்ப்பணிப்புடன் பணியாற்றினர். தொழில்நுட்பக் குழு முழு ஆதரவு தந்ததனர்


“அங்கீகாரம்” திரைப்படத்திற்கு ரசிகர்கள் தொடர்ந்து ஆதரவு அளித்து வருவது படக்குழுவினருக்கு மிகுந்த உற்சாகத்தை அளித்துள்ளது. இன்னும் இப்படத்திற்கு முழு ஆதரவு தருமாறு கேட்டுக்கொள்கிறேன் நன்றி.


தயாரிப்பாளர் நடிகர் கே ஜெ ஆர் பேசியதாவது..,


முதலில், மக்கள் டிக்கெட் வாங்கி படம் பார்த்து ஆதரவு அளித்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சி. அதற்கு காரணம் பத்திரிகையாளர்கள் மட்டுமல்ல, யூடியூப் சேனல்கள், ஆன்லைன் ஊடகங்கள் என அனைவரும் இந்தப் படத்திற்கு மிகப்பெரிய ஆதரவு கொடுத்திருக்கிறீர்கள். ஒரு நடிகராக இந்த வரவேற்பு எனக்கு 100 சதவீதம் அல்ல, 1000 சதவீதம் மகிழ்ச்சியை அளிக்கிறது. இந்த விழாவில் ஒரு நடிகராக நிற்பதில் பெருமையாக இருக்கிறது.


இந்தப்படம் பெரிய வெற்றி இல்லை மீடியம் தான். எனக்கு தெரிந்தவர்கள் திரையரங்கு உரிமையாளர்கள் என் காதுபடவே வேறு கதை எடுத்திருக்கலாம் வேறு ஹீரோ நடித்திருக்கலாம் என்றார்கள். ஆனால் இப்போது மக்கள் வரவேற்பு தர ஆரம்பித்து இருக்கிறார்கள். இதற்கு முழு காரணம் என இயக்குநர் தென்பாதியான் தான் அவர் சொன்னதை நான் செய்தேன். தொழில்நுட்பக் குழு அத்தனை பேரும் மிகச்சிறப்பாக உழைத்திருக்கிறார்கள். இந்தப்படம் ஜெயித்தால் தான் இவர்களுக்கு வாழ்க்கை அதனால் இந்தப்படத்திற்கு உங்கள் ஆதரவை தாருங்கள்.



இன்னும் 10 வருடத்தில் நான் கண்டிப்பாக தமிழ் சினிமாவில் முன்னணி நடிகனாக ஜெயிப்பேன் நான் இந்த தயாரிப்பாளர்களை ஜெயிக்க வைப்பேன். கைவிட மாட்டேன். இந்தப்படத்தில் உழைத்த அனைத்து தொழில் நுட்ப கலைஞர்களும் எனக்காக காசு பணம் பார்க்காமல் வேலை செய்தார்கள். பீட்டர் ஹெய்ன் மாஸ்டர், ஜிப்ரான் உட்பட அனைவருக்கும் நன்றி உங்கள் ஆதரவைத் தாருங்கள். நன்றி.


ஸ்வஸ்திக் விஷன்ஸ் தயாரிப்பில், அறிமுக நடிகர் கே.ஜெ.ஆர் கதாநாயகனாக நடித்துள்ள இப்படத்தை பா.ரஞ்சித்தின் முன்னாள் உதவி இயக்குநரான தென்பாதியான் இயக்கியுள்ளார். உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு, அங்கீகாரத்திற்காக போராடும் ஒரு தடகள வீரனின் வாழ்க்கைப் பயணத்தையும், நீதிக்காக அவர் மேற்கொள்ளும் சட்டப் போராட்டத்தையும் மையமாகக் கொண்டு இப்படம் உருவாகியுள்ளது.


விஜி வெங்கடேஷ், அஜித் கோஷி, சிந்தூரி விஸ்வநாத், ரங்கராஜ் பாண்டே, மன்சூர் அலிகான் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜிப்ரான் இசையமைத்துள்ள இப்படத்திற்கு ஏ.விஸ்வநாத் ஒளிப்பதிவு செய்துள்ளார். பீட்டர் ஹெயின் சண்டைக் காட்சிகளை வடிவமைத்துள்ள நிலையில், தினேஷ்குமார் படத்தொகுப்பையும், ராமு தங்கராஜ் கலை இயக்கத்தையும், சம்பத் ஆழ்வார் ஒலி வடிவமைப்பையும், ஷெரீப் நடன அமைப்பையும் கவனித்துள்ளனர்.


இப்படம் மக்களின் பேராதரவில் அரங்கு நிறைந்த காட்சிகளாக வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

மக்கள் நாயகன் என்.டி.ஆர் – இயக்குநர் திரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் மீண்டும் இணையும் பிரம்மாண்ட தெய்வீக திரைப்படம்!*

 *மக்கள் நாயகன் என்.டி.ஆர் – இயக்குநர் திரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் மீண்டும் இணையும் பிரம்மாண்ட தெய்வீக திரைப்படம்!*



பல ஆண்டுகளாக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்த கூட்டணி மீண்டும் இணையவுள்ளனர். மக்கள் நாயகன் என்.டி.ஆர் மற்றும் மாஸ் இயக்குநர் திரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் இணையும் புதிய திரைப்படம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவர்களின் முந்தைய வெற்றிப்படமான Aravinda Sametha Veera Raghava (அரவிந்த சமேத வீரராகவா)-க்கு பிறகு இந்த கூட்டணி மீண்டும் உருவாகுவது இந்திய சினிமாவின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட நிகழ்வுகளில் ஒன்றாக பார்க்கப்படுகிறது.


இந்த படத்தைப் பற்றி என்.டி.ஆர் தனது X சமூக வலைதளப் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். படத்தின் அறிவிப்பு போஸ்டரில் திரிசூலம் மற்றும் வேல் ஒன்றிணைவதுடன் DNA வடிவமைப்பும் இடம்பெற்றுள்ளது. மேலும், “ஒரே வேல்… ஒரே நோக்கம்… ஒரே தெய்வீக தீர்ப்பு” (One Spear, One Purpose… One Divine Reckoning) என்ற டேக்லைன் ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.


புராணக் கதைகளின் தாக்கத்துடன், தெய்வீக கருவை மையமாகக் கொண்டு உருவாகும் இந்த திரைப்படம், வலுவான கதைக்களம், ஆழமான உணர்வுகள், அதிரடி காட்சிகள் மற்றும் பிரம்மாண்டமான உலகக் கட்டமைப்புடன் உருவாகவுள்ளது.


இப்படத்திற்கு இசையமைப்பாளராக அனிருத் ரவிச்சந்தர் இணைந்துள்ளார். அவரது இசை இந்த பிரம்மாண்ட படைப்புக்கு மேலும் ஒரு சிறப்பை சேர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இந்த திரைப்படத்தை ஹாரிகா & ஹாசினி கிரியேஷன்ஸ் சார்பில் எஸ். ராதாகிருஷ்ணா (சின்ன பாபு) மற்றும் என்.டி.ஆர் ஆர்ட்ஸ் சார்பில் நந்தமூரி கல்யாண் ராம் இணைந்து தயாரிக்கின்றனர். தெலுங்கு சினிமாவின் வெற்றிகரமான நடிகர்–இயக்குநர் கூட்டணியும், இரண்டு முன்னணி தயாரிப்பு நிறுவனங்களும் இணைவதால், இந்திய சினிமாவின் மிகப் பிரம்மாண்டமான திரைப்படங்களில் ஒன்றாக இது அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.


படத்தின் மற்ற நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் படப்பிடிப்பு அட்டவணை குறித்த தகவல்கள் விரைவில் வெளியாகும்.


நடிகர்

என்.டி.ஆர்


தொழில்நுட்பக் குழு


தயாரிப்பு நிறுவனங்கள்: ஹாரிகா & ஹாசினி கிரியேஷன்ஸ், என்.டி.ஆர் ஆர்ட்ஸ்

தயாரிப்பாளர்கள்: எஸ். ராதாகிருஷ்ணா (சின்ன பாபு), நந்தமூரி கல்யாண் ராம்

கதை, திரைக்கதை, இயக்கம்: திரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ்

இசை: அனிருத் ரவிச்சந்தர்


*Man of Masses NTR & Visionary Filmmaker Trivikram Srinivas Reunite for a Grand Divine Cinematic Spectacle Produced by Haarika & Hassine Creations & NTR Arts*


The wait is finally over. After years of anticipation and countless conversations among fans, Man of Masses NTR and visionary filmmaker Trivikram Srinivas officially reunite for one of the most awaited films in Indian cinema. Following the blockbuster success of Aravinda Sametha Veera Raghava, the celebrated actor-director duo is set to embark on an extraordinary cinematic journey.


The project was officially announced by NTR through X platform. Featuring a trident and spear merging alongside a DNA motif, the poster carries the intriguing tagline, "One Spear, One Purpose... One Divine Reckoning." The makers have positioned the film as a grand mythological spectacle, promising a divine cinematic experience inspired by mythology and rooted in powerful storytelling.


Conceived on a grand scale and rooted in divinity, the film promises a powerful blend of mythology-inspired storytelling, intense emotions, breathtaking action and spectacular world building. The project brings together an exceptional creative team. Acclaimed Music composer Anirudh Ravichander comes on board to create a massive musical experience adding another exciting dimension to this magnum opus.


The film will be jointly produced by S. Radha Krishna (China Babu) under the prestigious Haarika & Hassine Creations banner and Nandamuri Kalyan Ram under NTR Arts. With one of Telugu cinema's most successful actor-director collaborations joining hands once again backed by two powerhouse production houses, the film is set to become one of the biggest cinematic spectacles ever mounted.


Further details regarding the cast, technical crew and production schedule will be announced soon.


Cast: Man of Masses NTR


Technical Crew:


Banner: Haarika & Hassine Creations, NTR Arts

Producers: S. Radha Krishna (China Babu), Nandamuri Kalyan Ram

Written & Directed by : Trivikram Srinivas

Music: Anirudh Ravichander

ஷாங்காய் சர்வதேச திரைப்பட விழாவில் ‘காளிதாஸ் 2’ - தமிழ் சினிமாவுக்கு மேலும் ஒரு பெருமை !*

 *ஷாங்காய் சர்வதேச திரைப்பட விழாவில் ‘காளிதாஸ் 2’ - தமிழ் சினிமாவுக்கு மேலும் ஒரு பெருமை !*



*ஆசியாவின் மிகப்பெரிய திரைப்பட விழாவில் முத்திரை பதித்த ‘காளிதாஸ் 2’…*


தமிழ் சினிமாவின் தரமான திரில்லர் படைப்புகளில் ஒன்றாகப் பாராட்டப்பட்ட ‘காளிதாஸ்’ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து உருவான ‘காளிதாஸ் 2’, தற்போது சர்வதேச அளவில் மேலும் ஒரு முக்கிய அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது. ஆசியாவின் மிகப்பெரிய திரைப்பட விழாவாக கருதப்படும் 28-வது ஷாங்காய் சர்வதேச திரைப்பட விழா (Shanghai International Film Festival - SIFF 2026)-வில் திரையிடப்பட்ட ஏழு இந்திய திரைப்படங்களில் ஒன்றாக ‘காளிதாஸ் 2’ தேர்வாகியுள்ளது.


சீனாவின் ஷாங்காயில் ஜூன் 12 முதல் 21 வரை நடைபெற்ற இந்த திரைப்பட விழாவின் சிறப்பு திரையிடல்கள் ஜூன் 28 வரை நகரின் பல்வேறு திரையரங்குகளில் நடைபெற்றன. உலகம் முழுவதிலிருந்தும் திரைப்பட இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், விமர்சகர்கள் மற்றும் சினிமா ஆர்வலர்கள் பங்கேற்கும் இந்த விழாவில், இந்தியாவிலிருந்து சாதனை அளவில் ஏழு திரைப்படங்கள் திரையிடப்பட்டன. அவற்றில் தென்னிந்தியாவிலிருந்து ஒரே ஒரு திரைப்படமாக ‘காளிதாஸ் 2’ இடம்பெற்றிருப்பது, படக்குழுவிற்கும் தமிழ்த் திரைப்பட உலகிற்கும் பெருமை சேர்த்துள்ளது.


காளிதாஸ் திரைப்படத்தின் முதல் மற்றும் இரண்டாம் பாகத்தை ஸ்ரீ செந்தில் இயக்கியுள்ளார். பரத் கதாநாயகனாக நடித்துள்ள இப்படத்தில், அஜய் கார்த்தி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும், சங்கீதா, பவானி ஸ்ரீ, அபர்ணிதி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.


இப்படத்திற்கு சாம் சி.எஸ். இசையமைத்துள்ளார். சுரேஷ் பாலா ஒளிப்பதிவு செய்துள்ள நிலையில், புவன் ஸ்ரீனிவாசன் படத்தொகுப்பை கவனித்துள்ளார். மேலும் அரவிந்த் ஆனந்த் கூடுதல் திரைக்கதை எழுதியுள்ளார்.


இந்த திரைப்படத்தை ஸ்கை பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் விநியோகஸ்தரும் தயாரிப்பாளருமான ஃபைவ் ஸ்டார் செந்தில் மற்றும் டாக்டர் என். யோகேஸ்வரன் இணைந்து தயாரித்துள்ளனர். ‘காளிதாஸ் 2’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடம் பெரும் பாராட்டைப் பெற்றது.


தற்போது சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டிருப்பது, ‘காளிதாஸ் 2’ திரைப்படத்தின் கலைத்திறன் மற்றும் தொழில்நுட்ப தரத்திற்கு கிடைத்த முக்கிய அங்கீகாரமாகப் பார்க்கப்படுகிறது. உலக திரைப்பட ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ள இந்த சாதனை, தமிழ்ச் சினிமாவின் உலகளாவிய பயணத்தில் மேலும் ஒரு முக்கிய மைல்கல்லாக அமைந்துள்ளது.

‘ஹார்ட்டின்’ திரைப்பட விமர்சனம்

ஹார்ட்டின்’ திரைப்பட விமர்சனம்

ஜெய்ப்பூரில் உள்ள தனது நண்பரின் உணவகத்தில் பணியாற்றும் நாயகன் சனத்தும், ஐடி துறையில் பணியாற்றும் தமிழ் பெண்ணான இமயாவும் நண்பர்களாக பழகுகிறார்கள். சனத் மீது இமயாவுக்கு காதல் மலர்கிறது. ஆனால், அவரது காதலை சனத் ஏற்க மறுக்கிறார். அதற்கான காரணமாக தனது முதல் காதல் பிரிவால் ஏற்பட்ட வலியை மீண்டும் அனுபவிக்கும் சக்தி தனக்கு இல்லை என்கிறார். அவரது முன்னாள் காதல் பற்றி அறிந்துக் கொண்ட பிறகும் அவர் மீது காதலோடு இருக்கும் இமயாவை சனத்தும் காதலிக்கிறார்.


இமயாவின் காதல் மூலம் மீண்டும் தனது மகிழ்ச்சிகரமான வாழ்க்கைக்கு திரும்பிய சனத், விபத்து ஒன்றின் மூலம் தலையில் அடிபட்டு, தனது 6 வருட நினைவுகளை இழந்து விடுகிறார். இதனால், இமயா மற்றும் அவரது காதலை மறந்துவிடுவதோடு, காதலை முறித்துகொண்டு தன்னைவிட்டு பிரிந்து சென்ற முன்னாள் காதலியின் பிரிவு சம்பவத்தையும் மறந்துவிடுபவர், பழைய நினைவுகளோடு தனது முன்னாள் காதலி மரோனா செபாஸ்டியனை சந்திக்க செல்கிறார்.


மறந்த நினைவுகள் திரும்பவும் வந்தவுடன், அனைத்தும் சரியாகிவிடும் என்ற நம்பிக்கையில் அவருடன் பயணிக்கும் இமயாவின் காதல் வெற்றி பெற்றதா? அல்லது முதல் காதல் முறிவு பற்றி தெரியாமல் பிரிந்து சென்ற காதலியை தேடிச் செல்லும் சனத்தின் காதல் வெற்றி பெற்றதா? என்பதே படத்தின் மீதிக்கதை.


நாயகனாக நடித்திருக்கும் சனத், இரண்டு நாயகிகள் இருந்தாலும் டூயட் மற்றும் ரொமான்ஸ் காட்சிகள் இன்றி, ஒரு கதாபாத்திரமாகவே வலம் வந்திருக்கிறார். முதல் காதலியை உருகி உருகி காதலிப்பவர், அவரது பிரிவால் இறுக்கமான மனநிலையில் இருப்பதும், இமயா உடனான காதலுக்குப் பிறகு மகிழ்ச்சியான மனநிலைக்கு மாறுவது என்று நடிப்பில் ஸ்கோர் செய்திருக்கிறார்.


அறிமுக நடிகை இமயா, புதுமுகம் என்ற அடையாளமே தெரியாதபடி தைரியமாகவும், தன்னம்பிக்கையுடனும் நடித்திருக்கிறார். அவரது திரை இருப்பு மற்றும் நடிப்பு அவரது கதாபாத்திரத்திற்கு பெரும் பலம் சேர்த்திருக்கிறது.


மடோனா செபாஸ்டியன், காதலருக்கு இணையாக தன்னால் காதலில் நேர்மையாக இருக்க முடியாத நிலையை எண்ணி வருந்தும் காட்சியிலும், தான் நிராகரித்த காதல் மீண்டும் தன்னை தேடி வரும்போது, தடுமாறும் காட்சியிலும் எதார்த்தமாக நடித்து கவனம் ஈர்க்கிறார்.


நாயகனின் நண்பராக நடித்திருக்கும் வாட்ஸ்-அப் மணி குணச்சித்திர வேடத்துடன் நகைச்சுவையாகவும் நடித்து சில காட்சிகளில் சிரிக்க வைக்கிறார். அவரது மனைவியாக நடித்திருக்கும் டெப்னிதா கொடுத்த வேலையை சரியாக செய்திருக்கிறார்.


ஒளிப்பதிவாளர் முகேஷ்வரன்.வி, ஜெய்ப்பூர் மற்றும் ஊட்டியை அழகியலோடு காட்சிப்படுத்தி கண்களுக்கு காட்சி விருந்து படைத்திருக்கிறார்.


ராஜேஷ் முருகேசனின் இசையில் பாடல்கள் அனைத்தும் திரும்ப திரும்ப கேட்கும் மெலோடி ரகம். பின்னணி இசை அளவு.


நினைவுகளை இழப்பதும், அதனால் ஏற்படும் விளைவுகளுமே திரைக்கதையில் ஆதிக்கம் செலுத்துவதால், காதலர்களின் உணர்வுகளும், அவர்களது வலியும் எந்த ஒரு காட்சியிலும் பிரதிபலிக்காதது, படத்தொகுப்பிலும் தெரிகிறது. எனவே இயக்குநர் சொன்னதை மட்டுமே செய்திருக்கிறார் படத்தொகுப்பாளர் பரத் விகரமன்.


எழுதி இயக்கியிருக்கும் கிஷோர் குமார், காதல் கதை மூலமாக பார்வையாளர்களை உருக வைப்பதற்கு பதிலாக, நினைவுகளை இழந்த நாயகனின் காதல் கதைகளை காமெடியாக சொல்லி ரசிக்க வைக்க முயற்சித்திருக்கிறார்.


பார்வையாளர்களை கவர்வதோடு, அவர்களது ஆழ் மனதில் இருக்கும் காதல் நினைவுகளை தட்டி எழுப்புவதற்கு காதலர்களின் உணர்வுப்பூர்வமான காட்சிகளே போதுமானது. ஆனால், இயக்குநர் கிஷோர் குமார், ஞாபக மறதி அல்லது நினைவுகள் இழப்பு என்ற பின்னணியோடு காதல் உணர்வுகளை வெளிப்படுத்த முயற்சித்திருப்பது, எந்தவிதத்திலும் பார்வையாளர்களை பாதிக்கவில்லை.


முன்னாள் காதல் மற்றும் இன்னாள் காதல் என்று ஒரே நேரத்தில் இரண்டு காதலிகளுடன் பயணிக்கும் நாயகனின் செயலும், இறுதியில் யாருடன் அவர் இணைவார் ? என்ற கேள்வியும் படத்தை சற்று சுவாரஸ்யமாக நகர்த்தி சென்றாலும், மூன்று முதன்மை கதாபாத்திரங்களுக்கான கெமிஸ்ட்ரியில் இயக்குநர் கூடுதல் கவனம் செலுத்தியிருந்தால் தமிழ் சினிமாவில் தாக்கத்தை ஏற்படுத்திய காதல் படங்களின் வரிசையில் இந்த படத்திற்கும் இடம் கிடைத்திருக்கும்.


மொத்தத்தில் ‘ஹார்ட்டின்’ பொழுதுபோக்கு படமாக பார்வையாளர்களை திருப்திப்படுத்தினாலும், இதயத்தை தொடவில்லை.

மம்மட்டியான் ஸ்டார்ஸ்’ இணையத் தொடர் விமர்சனம்

மம்மட்டியான் ஸ்டார்ஸ்’ இணையத் தொடர் விமர்சனம்


’மம்மட்டியான் ஸ்டார்ஸ்’ இணையத் தொடர் விமர்சனம்


வைபவ் முருகேசன், வெங்கட பாலமுரளி மற்றும் ஜகபர் சாதிக் மூன்று பேரும் நண்பர்கள் மட்டும் இன்றி, இந்திய நட்சத்திர கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.வீர் சிங் (எம்.எஸ்.டோனி)-ன் தீவிர ரசிகர்களாகவும் இருக்கிறார்கள். இவர்கள் மூன்று பேரும் கேப்டனாக இருந்து ‘மம்மட்டியான் ஸ்டார்ஸ்’ என்ற கிரிக்கெட் அணியை வழி நடத்துவதோடு, பல்வேறு போட்டிகளில் பங்கேற்று விளையாடி வருகிறார்கள். அதன்படி, தங்களது கிராமத்தில் நடத்தப்படும் கிரிக்கெட் போட்டியில் இவர்களது அணி பங்கேற்று விளையாடி வரும் நிலையில், கிரிக்கெட் வீரர் வீர் சிங் விளையாடும் கடைசி கிரிக்கெட் போட்டியை நேரில் பார்க்க வேண்டும் என்று முடிவு செய்கிறார்கள்.


கிரிக்கெட் போட்டியின் இறுதிப் போட்டியில் வெற்றி பெற்று பரிசுத் தொகை ரூ.50 ஆயிரத்தை வென்று, அதன் மூலம் சென்னையில் நடக்கும் கிரிக்கெட் போட்டியை பார்க்கலாம் என்று திட்டம் போட, ஊர் தலைவரின் திடீர் மரணத்தால் இறுதிப் போட்டி நடத்தப்படாமல் நின்று விடுகிறது. இதனால், ஊர் தலைவரின் அலுவலகத்தில் வைக்கப்பட்டிருக்கும் கிரிக்கெட் போட்டியின் ரன்னர் பரிசுத் தொகையை திருடி, அதை கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட் வாங்க அனுப்பிவிடுகிறார்கள். டிக்கெட் கிடைத்த மகிழ்ச்சியில் மூன்று நண்பர்களும் சென்னைக்கு செல்ல, அவர்களுடன் வைபவ் முருகேசனின் முன்னாள் காதலியான லாவண்யா அன்பழகனும் செல்கிறார்.


தங்களது தல விளையாடும் போட்டியை நேரில் பார்க்கப் போகிறோம் என்ற மகிழ்ச்சியில் இருப்பவர்கள், தங்களிடம் இருக்கும் டிக்கெட் போலி என்று தெரிந்ததும் பேரதிர்ச்சியடைகிறார்கள். இருந்தாலும், எப்படியாவது தல விளையாடும் போட்டியை நேரில் பார்த்துவிட்டு தான் ஊருக்கு திரும்ப வேண்டும் என்று முடிவு எடுக்கும் நண்பர்கள், அடுத்த போட்டி நடப்பதற்குள் அதற்கான பணத்தை தயார் செய்யும் முயற்சியில் இறங்க, அதனால் பல்வேறு பிரச்சனையில் சிக்கிக் கொள்கிறார்கள். அந்த பிரச்சனைகளில் இருந்து மீண்டு, அவர்கள் நினைத்தது போல், அவர்களது தல விளையாடும் போட்டியை நேரில் பார்த்தார்களா ? இல்லையா ? என்பதை 6 அத்தியாயங்களாக சொல்வதே ‘மம்மட்டியான் பாய்ஸ்’.


கிரிக்கெட் வீரர்களாக இருந்தாலும் சரி, சினிமா நட்சத்திரங்களாக

Hombale Films’ S-48: ‘The One’ Suriya and Director T.J. Gnanavel Join Forces for a Powerful New Film

ஹொம்பாலே பிலிம்ஸ் ( Hombale Films) – ‘The one’ சூர்யா - இயக்குநர் த.செ.ஞானவேல் வலிமையான கூட்டணியில் S-48 திரைப்படம் உருவாகிறது



மக்களின் பேராதரவும், ’அன்பான ஃபேன்ஸ்’ படையின் அன்பும் பெற்ற நடிகர் சூர்யா நடிப்பில், எல்லா தரப்பு சினிமா ரசிகர்களும் ரசிக்கும் விதமாக அழுத்தமான கதைகளை திரையில் படைக்கும் இயக்குநர் த .செ. ஞானவேல் இயக்கத்தில், இந்திய சினிமா ரசிகர்களுக்கு பிரம்மாண்டமான திரை அனுபவத்தை வழங்கிவரும் ஹொம்பாலே பிலிம்ஸ் நிறுவத்தின் தயாரிப்பாளர் விஜய் கிரகந்தூர் தயாரிப்பில், S-48 திரைப்படம் உருவாகிறது.


ஸ்டாராவும், சிறந்த நடிகராகவும் விளங்கும் சூர்யாவுடன் இணைந்து இந்திய அளவில் தாக்கத்தை உருவாக்கிய ‘ஜெய்பீம்’ படத்தைக் கொடுத்தவர் இயக்குநர் த.செ. ஞானவேல். எல்லா தரப்பு சினிமா ரசிகர்களின்  கவனத்தையும் பெற்று ஆச்சர்யப்பட வைத்த இவர்கள் மீண்டும் இணையும் திரைப்படத்தை, கே.ஜி.எஃப், காந்தாரா, சலார் போன்ற பிளாக் பஸ்டர் ஹிட் வெற்றி படங்களைத் தருவதில் புதிய சாதனைகளைப் படைத்து வரும், இந்தியாவின் முன்னணி திரைப்பட தயாரிப்பு நிறுவனமான ஹொம்பாலே பிலிம்ஸ் தயாரிக்கும் செய்தி, இந்திய அளவில் அதிக எதிர்பார்ப்பை உருவாக்கி இருக்கிறது.


வெற்றித்திரைப்படங்களின் முகவரியாக விளங்கும் ஹொம்பாலே பிலிம்ஸ் நிறுவனர் தயாரிப்பாளர் விஜய் கிரகந்தூர் இத்திரைப்படம் பற்றி கூறும்போது, ’’தமிழ்நாடு, தென்னிந்தியா கடந்து இந்திய சினிமாவின் சிறந்த நட்சத்திர நடிகராக விளங்கும் சூர்யாவை, முப்பது ஆண்டுகளுக்கு மேல் மக்கள் கொண்டாடி வருகின்றனர். வணிக வெற்றியையும், விமர்களின் பாராட்டையும் ஒருசேர பெறுவதில் தனித்து விளங்கும் சூர்யா அவர்களுடன் ஹொம்பாலே பிலிம்ஸ் இணைவதில் பெருமிதமும் பெருமகிழ்ச்சியும் அடைகிறது.


இந்தியா கடந்து உலக அளவில் கவனம் ஈர்த்த ஜெய்பீம் திரைப்படத்தை இயக்கிய த.செ. ஞானவேல் அவர்கள், அழுத்தமான கதைகளத்தில் நட்சத்திர நடிகர்களை வெற்றிகரமாக கையாண்டு வெற்றிகளைத் தரக்கூடியவர். மொழி மற்றும் கலாச்சார எல்லைகளை கடந்து செல்லும் சிறந்த வெற்றி திரைப்படங்களை உருவாக்குவதில் ஹொம்பாலே பிலிம்ஸ் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறது. இந்திய அளவில் பெரும் வெற்றியையும், கவனத்தையும் பெறப்போகும் திரைப்படத்தை தயாரிப்பதில் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம். The one சூர்யா அவர்களையும், இயக்குநர் த.செ. ஞானவேல் அவர்களையும் ஹொம்பாலே பிலிம்ஸ் குடும்பத்தில் இணைய மகிழ்ச்சியுடன் வரவேற்கிறோம்.


ஹொம்பாலே பிலிம்ஸ் மக்களின் எதிர்பார்ப்புகளை புரிந்துகொண்டு சிறந்தப்படங்களை தயாரிப்பதிலும், அதை மிகப்பெரிய அளவில் பிரம்மாண்ட வெற்றியடை செய்வதில் ஆர்வமும் கவனமும் செலுத்துகிறது. இந்த  தொலைநோக்கு சிந்தனையோடு உள்ள நடிகர்களையும், இயக்குனர்களையும், தொழில்நுட்ப கலைஞர்களையும் இணைப்பதில் எப்போதும் தீவிரம் காட்டி வருகிறது. அதே தொலைநோக்கு சிந்தனை கொண்ட நட்சத்திர நடிகர் சூர்யா அவர்களோடும், இயக்குநர் த.செ. ஞானவேல் அவர்களோடும் ஹொம்பாலே பிலிம்ஸ் இணைவதில் எதிர்பாராததை எதிர்பாருங்கள்’ என்கிறார் தயாரிப்பாளர் விஜய் கிரகந்தூர்.


S-48 திரைப்படத்திற்கு, இளைஞர்களின் இசை ரசனையை தற்போது ஆட்சி செய்கிற சாய் அபயங்கர் இசையமைக்கிறார். தமிழ், தெலுங்கு, மலையாளம் என எல்லா மொழிகளிலும் மிகவும் கவனம் ஈர்த்த கயாது லோகர் கதாநாயகியாக நடிக்கிறார். மிக முக்கியமான கதாபாத்திரத்தில் பிரகாஷ்ராஜ், யோகிபாபு, குமரவேல் போன்ற சிறந்த கலைஞர்கள் நடிக்கிறார்கள்.


எஸ். ஆர். கதிர் ஒளிப்பதிவு செய்ய, கே. கதிர் தயாரிப்பு வடிவமைப்பிலும், ஃபிலோமின் ராஜ் படத்தொகுப்பிலும், பா. கிருத்திகா திரைக்கதையிலும் பங்களிப்பு செய்கிறார்கள். விரைவில் இத்திரைப்படத்தின் இதர தொழில்நுட்ப கலைஞர்கள் விவரங்கள் விரைவில் வெளியாகியுள்ளன. ஜூலை மாதம் 22-ம் தேதி முதல் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்குகிறது.


English Press Release 


*Hombale Films’ S-48: ‘The One’ Suriya and Director T.J. Gnanavel Join Forces for a Powerful New Film*



Actor Suriya, who is immensely loved and supported by the masses and his devoted fans, is set to star in S-48, directed by filmmaker T.J. Gnanavel, known for crafting impactful stories that resonate with audiences across all sections. The film is being produced by Vijay Kiragandur under the banner of Hombale Films, the production house that has consistently delivered grand cinematic experiences to Indian audiences.


Director T.J. Gnanavel and Suriya previously collaborated on the critically acclaimed Jai Bhim, a film that created a significant impact across India. The reunion of this successful duo has already generated tremendous anticipation among cinema lovers, and the excitement has been elevated further with the project being backed by Hombale Films, one of India’s leading production houses behind blockbuster successes such as KGF, Kantara, and Salaar.


Speaking about the project, producer Vijay Kiragandur said:


“Suriya has been celebrated by audiences for over three decades and stands as one of Indian cinema’s finest stars. Hombale Films is proud and delighted to collaborate with an actor who has consistently balanced commercial success with critical acclaim.


Director T.J. Gnanavel, who helmed the globally acclaimed Jai Bhim, has proven his ability to present powerful stories and deliver impactful cinema with star actors. At Hombale Films, we remain committed to creating films that transcend linguistic and cultural boundaries and connect with audiences across the world. We are thrilled to produce a film that is poised to receive immense appreciation and success across India. We warmly welcome Suriya and T.J. Gnanavel to the Hombale Films family.


Hombale Films has always focused on understanding audience expectations and delivering quality cinema on a grand scale. We are constantly looking to collaborate with actors, directors, and technicians who share our vision. The one Suriya and T.J. Gnanavel coming together with us, expect the unexpected.”


For S-48, music will be composed by Sai Abhyankkar, the young sensation currently ruling the hearts of music lovers. Actress Kayadu Lohar, who has garnered attention across Tamil, Telugu, and Malayalam cinema, plays the female lead.


The film also features an impressive supporting cast, including Prakash Raj, Yogi Babu, and Kumarevel in pivotal roles.


S.R. Kathir handles cinematography, K. Kadhir serves as the production designer, Philomin Raj takes care of editing, and B.Krithika contributes to the screenplay.


The film’s shoot set to commence on July 22 2026.

நோவா’ படத்தில் ராணுவ அதிகாரியாக தமிழில் அறிமுகமாகும் அத்விதி ஷெட்டி*

 *‘நோவா’ படத்தில் ராணுவ அதிகாரியாக தமிழில் அறிமுகமாகும் அத்விதி ஷெட்டி*



ராயல் ஃபார்ச்சுனா கிரியேஷன்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘நோவா’ ; பேஸ் ஒன் - தி அரைவல்’ (NOVA) ; Phase One – The Arrival). இயக்குநர் மைலோ இப்படத்தை இயக்குவதன் மூலம் முதன்முறையாக வெள்ளித்திரையில் எடுத்து வைக்கிறார். ஹாரர் சயின்ஸ் பிக்சன் சூப்பர் நேச்சுரல் ஃபேண்டஸி திரில்லர் படமாக இது உருவாகி உள்ளது .


கதையின் நாயகியாக பிக்பாஸ் புகழ் ரைசா வில்சன் நடிக்கிறார்.. இன்னொரு கதாநாயகியாக, கன்னடத்தை சேர்ந்த அத்விதி ஷெட்டி நடித்துள்ளார். மேலும் ‘ஆண்மை தவறேல்’ துருவா, பெங்காலி நடிகையான கிருத்திகா பிஸ்வாஸ், மலையாள நடிகர் ஜோ ஜான் சாக்கோ, சென்ராயன், யூட்யூப் புகழ் ஃபைனலி ஸ்வாதிகா மற்றும் ஃபைனலி கிருஷ்ணா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.


விரைவில் திரைக்கு வரும் விதமாக இப்படத்தின் போஸ்ட் புரொடக்சன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.


படத்தின் கதாநாயகியான அத்விதி ஷெட்டி கடந்த 11 ஆண்டுகளாக கன்னடத் திரைப்படத் துறையில் பணியாற்றி வருபவர். பல விருது பெற்ற படங்களிலும், வணிக ரீதியாக வெற்றி பெற்ற படங்களிலும் நடித்துள்ள இவர். சமீபத்தில் நடித்து வெளியான இரண்டு படங்களில், துளு மொழிப் படம் 100 நாட்கள் ஓடி மிகப்பெரிய வெற்றி பெற்றது..


அதுமட்டுமல்ல இவர் அடிப்படையில் ஒரு நடனக் கலைஞரும் கூட.. கன்னடம், இந்தி மற்றும் தெலுங்கில் சுமார் ஐந்து நடன ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ள இவர் தற்போது ‘நோவா’ படத்தின் மூலம் தமிழில் அடியெடுத்து வைத்துள்ளார்.


‘நோவா’ படத்தில் நடித்த அனுபவம் குறித்து அத்விதி ஷெட்டி கூறும்போது, “இதில் “வல்லபி. ராணுவ அதிகாரி என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன்.. இதுவரையிலான திரைப்பயணத்தில் மிகவும் வித்தியாசமான மற்றும் சவாலான கதாபாத்திரம் இதுதான். இந்தக் கதாபாத்திரத்திற்கு அதிக முக்கியத்துவமும், வலுவான நடிப்பு வாய்ப்பும், நிறைய வசனங்களும் உள்ளன.. 

இது ஒரு அறிவியல் புனைகதை திரைப்படம். அதோடு நிறைய சஸ்பென்ஸும் இருக்கிறது.


எனக்கு இது ஒரு பெரிய சவாலாக இருந்தது. எனக்கு தமிழ் புரியும்.. தமிழ் படங்களையும் விரும்பிப் பார்ப்பேன். ஆனால் தமிழ் பேசும் நண்பர்கள் இல்லாததால் பேசும் வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனாலும் படப்பிடிப்பில் நான் வசனங்களை மிக விரைவாக கற்றுக்கொண்டதாகவும் என் லிப்-சிங்க் மற்றும் நடிப்பு மிகவும் நன்றாக இருந்ததாகவும் பாராட்டினார்கள். ஒரு உணர்ச்சிப்பூர்வமான காட்சியில் நான் கிளிசரின் பயன்படுத்தாமல் நடித்ததை கண்டு மொத்த படக்குழுவிடமிருந்தும் கைதட்டல் கிடைத்தது.. பொதுவாகவே அழுகைக் காட்சிகளில் நான் கிளிசரின் பயன்படுத்துவதில்லை.


படப்பிடிப்பின் நடுவில் என் பாட்டி காலமானார். அவருடன் நான் மிகவும் நெருக்கமாக இருந்தேன். நான் படப்பிடிப்புத் தளத்தில் இருந்தபோது தான் வீட்டிலிருந்து அந்த செய்தி வந்தது. அதேசமயம் முக்கியமான காட்சியில் நடிக்கவேண்டி இருந்ததால் முதலில் அந்தக் காட்சியை முடித்தேன். அதன் பிறகு மங்களூருக்குச் சென்றேன். அதிலும் மூணாரில் இருந்து சரியான் போக்குவரத்து வசதி இல்லாததால் கொச்சி, பெங்களூரு வழியாக பயணம் செய்ய வேண்டியிருந்தது. இதனால் இறுதியாக என் பாட்டியின் முகத்தை கூட என்னால் பார்க்க முடியவில்லை. அடுத்த நாளே மீண்டும் படப்பிடிப்பிற்கு திரும்பி வந்தேன். மனதளவில் அது மிகவும் கடினமான காலம். என்றாலும் என் குடும்பத்தினர், "உன் குழுவிற்கு நீ தேவைப்படுகிறாய்; திரும்பிச் செல்" என்று ஊக்கமளித்ததை தொடர்ந்து மீண்டும் படப்பிடிப்பிற்கு திரும்பினேன். 


பெரும்பாலும் நாங்கள் மலைப்பகுதி மற்று காடுகளின் உள்ளார்ந்த பகுதிகளில் படப்பிடிப்பு நடத்தியதால் எங்களுக்கான காரவன்கள் தூரத்திலேயே நிறுத்தப்பட்டிருந்தன. கழிப்பறைக்குச் செல்லவும் நீண்ட தூரம் நடக்க வேண்டியிருந்தது. மேலும் நான் ராணுவ அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்ததால் கனமான ராணுவ பூட்ஸ்களை அணிய வேண்டியிருந்தது. அவற்றை அணிந்து நடப்பதே மிகவும் கடினமாக இருந்தது. அந்த சமயத்தில் இருந்துதான் நமது நாட்டைக் காக்கும் ராணுவ வீரர்களின் அர்ப்பணிப்பை இன்னும் அதிகமாக மதிக்கத் தொடங்கினேன். 


படத்தில் என் அறிமுகக் காட்சியே மழைக் காட்சியாக இருந்தது. நள்ளிரவு நேரத்தில் மூணாரின் கடும் குளிரில் டேங்கர் தண்ணீரை எங்கள் மீது ஊற்றி படமாக்கினர். 24 மணி நேரம் தொடர்ந்து படப்பிடிப்பு நடந்தது. அது மிகவும் சவாலான அனுபவமாக இருந்தது 


இயக்குநர் மைலோவின் சினிமா பார்வை மிகவும் வித்தியாசமானது. பார்வையாளர்களுக்கு புதுமையான அறிவியல் புனைகதை திரைப்படத்தை வழங்க வேண்டும் என்பதே அவரது நோக்கம். "நோவா" அதற்கான ஒரு சிறந்த முயற்சியாக இருக்கும் என்று நம்புகிறேன்


படப்பிடிப்பில் அனைவரும் மிகவும் உதவியாக இருந்தனர். தமிழ் உச்சரிப்பு, வசனங்கள் போன்றவற்றில் எனக்கு உதவினர். என். குடும்பத்திலிருந்து தூரமாக இருந்ததால் படக்குழுவே எனக்கு ஒரு குடும்பமாக மாறிவிட்டது. நோவா" வெளியான பிறகு தமிழில் மேலும் பல படங்களில் நடிக்க விரும்புகிறேன்” என்று கூறினார்..

சிங் கீதம்’ திரைப்பட விமர்சனம்

 சிங் கீதம்’ திரைப்பட விமர்சனம்

ஜெய்ப்பூரில் உள்ள தனது நண்பரின் உணவகத்தில் பணியாற்றும் நாயகன் சனத்தும், ஐடி துறையில் பணியாற்றும் தமிழ் பெண்ணான இமயாவும் நண்பர்களாக பழகுகிறார்கள். சனத் மீது இமயாவுக்கு காதல் மலர்கிறது. ஆனால், அவரது காதலை சனத் ஏற்க மறுக்கிறார். அதற்கான காரணமாக தனது முதல் காதல் பிரிவால் ஏற்பட்ட வலியை மீண்டும் அனுபவிக்கும் சக்தி தனக்கு இல்லை என்கிறார். அவரது முன்னாள் காதல் பற்றி அறிந்துக் கொண்ட பிறகும் அவர் மீது காதலோடு இருக்கும் இமயாவை சனத்தும் காதலிக்கிறார்.


இமயாவின் காதல் மூலம் மீண்டும் தனது மகிழ்ச்சிகரமான வாழ்க்கைக்கு திரும்பிய சனத், விபத்து ஒன்றின் மூலம் தலையில் அடிபட்டு, தனது 6 வருட நினைவுகளை இழந்து விடுகிறார். இதனால், இமயா மற்றும் அவரது காதலை மறந்துவிடுவதோடு, காதலை முறித்துகொண்டு தன்னைவிட்டு பிரிந்து சென்ற முன்னாள் காதலியின் பிரிவு சம்பவத்தையும் மறந்துவிடுபவர், பழைய நினைவுகளோடு தனது முன்னாள் காதலி மரோனா செபாஸ்டியனை சந்திக்க செல்கிறார்.


மறந்த நினைவுகள் திரும்பவும் வந்தவுடன், அனைத்தும் சரியாகிவிடும் என்ற நம்பிக்கையில் அவருடன் பயணிக்கும் இமயாவின் காதல் வெற்றி பெற்றதா? அல்லது முதல் காதல் முறிவு பற்றி தெரியாமல் பிரிந்து சென்ற காதலியை தேடிச் செல்லும் சனத்தின் காதல் வெற்றி பெற்றதா? என்பதே படத்தின் மீதிக்கதை.


நாயகனாக நடித்திருக்கும் சனத், இரண்டு நாயகிகள் இருந்தாலும் டூயட் மற்றும் ரொமான்ஸ் காட்சிகள் இன்றி, ஒரு கதாபாத்திரமாகவே வலம் வந்திருக்கிறார். முதல் காதலியை உருகி உருகி காதலிப்பவர், அவரது பிரிவால் இறுக்கமான மனநிலையில் இருப்பதும், இமயா உடனான காதலுக்குப் பிறகு மகிழ்ச்சியான மனநிலைக்கு மாறுவது என்று நடிப்பில் ஸ்கோர் செய்திருக்கிறார்.


அறிமுக நடிகை இமயா, புதுமுகம் என்ற அடையாளமே தெரியாதபடி தைரியமாகவும், தன்னம்பிக்கையுடனும் நடித்திருக்கிறார். அவரது திரை இருப்பு மற்றும் நடிப்பு அவரது கதாபாத்திரத்திற்கு பெரும் பலம் சேர்த்திருக்கிறது.


மடோனா செபாஸ்டியன், காதலருக்கு இணையாக தன்னால் காதலில் நேர்மையாக இருக்க முடியாத நிலையை எண்ணி வருந்தும் காட்சியிலும், தான் நிராகரித்த காதல் மீண்டும் தன்னை தேடி வரும்போது, தடுமாறும் காட்சியிலும் எதார்த்தமாக நடித்து கவனம் ஈர்க்கிறார்.


நாயகனின் நண்பராக நடித்திருக்கும் வாட்ஸ்-அப் மணி குணச்சித்திர வேடத்துடன் நகைச்சுவையாகவும் நடித்து சில காட்சிகளில் சிரிக்க வைக்கிறார். அவரது மனைவியாக நடித்திருக்கும் டெப்னிதா கொடுத்த வேலையை சரியாக செய்திருக்கிறார்.


ஒளிப்பதிவாளர் முகேஷ்வரன்.வி, ஜெய்ப்பூர் மற்றும் ஊட்டியை அழகியலோடு காட்சிப்படுத்தி கண்களுக்கு காட்சி விருந்து படைத்திருக்கிறார்.


ராஜேஷ் முருகேசனின் இசையில் பாடல்கள் அனைத்தும் திரும்ப திரும்ப கேட்கும் மெலோடி ரகம். பின்னணி இசை அளவு.


நினைவுகளை இழப்பதும், அதனால் ஏற்படும் விளைவுகளுமே திரைக்கதையில் ஆதிக்கம் செலுத்துவதால், காதலர்களின் உணர்வுகளும், அவர்களது வலியும் எந்த ஒரு காட்சியிலும் பிரதிபலிக்காதது, படத்தொகுப்பிலும் தெரிகிறது. எனவே இயக்குநர் சொன்னதை மட்டுமே செய்திருக்கிறார் படத்தொகுப்பாளர் பரத் விகரமன்.


எழுதி இயக்கியிருக்கும் கிஷோர் குமார், காதல் கதை மூலமாக பார்வையாளர்களை உருக வைப்பதற்கு பதிலாக, நினைவுகளை இழந்த நாயகனின் காதல் கதைகளை காமெடியாக சொல்லி ரசிக்க வைக்க முயற்சித்திருக்கிறார்.


பார்வையாளர்களை கவர்வதோடு, அவர்களது ஆழ் மனதில் இருக்கும் காதல் நினைவுகளை தட்டி எழுப்புவதற்கு காதலர்களின் உணர்வுப்பூர்வமான காட்சிகளே போதுமானது. ஆனால், இயக்குநர் கிஷோர் குமார், ஞாபக மறதி அல்லது நினைவுகள் இழப்பு என்ற பின்னணியோடு காதல் உணர்வுகளை வெளிப்படுத்த முயற்சித்திருப்பது, எந்தவிதத்திலும் பார்வையாளர்களை பாதிக்கவில்லை.


முன்னாள் காதல் மற்றும் இன்னாள் காதல் என்று ஒரே நேரத்தில் இரண்டு காதலிகளுடன் பயணிக்கும் நாயகனின் செயலும், இறுதியில் யாருடன் அவர் இணைவார் ? என்ற கேள்வியும் படத்தை சற்று சுவாரஸ்யமாக நகர்த்தி சென்றாலும், மூன்று முதன்மை கதாபாத்திரங்களுக்கான கெமிஸ்ட்ரியில் இயக்குநர் கூடுதல் கவனம் செலுத்தியிருந்தால் தமிழ் சினிமாவில் தாக்கத்தை ஏற்படுத்திய காதல் படங்களின் வரிசையில் இந்த படத்திற்கும் இடம் கிடைத்திருக்கும்.


மொத்தத்தில் ‘ஹார்ட்டின்’ பொழுதுபோக்கு படமாக பார்வையாளர்களை திருப்திப்படுத்தினாலும், இதயத்தை தொடவில்லை.

அந்தரன்’ திரைப்பட விமர்சனம்

 அந்தரன்’ திரைப்பட விமர்சனம்

நாயகி இவானா வருணை காதலிக்கும் நபர் கொடூரமாக கொலை செய்யப்படுகிறார். சில மாதங்களுக்குப் பிறகு பெற்றோர்களின் வற்புறுத்தலால் அவருக்கு திருமண ஏற்பாடு செய்யப்படுகிறது. நிச்சயம் முடிந்த நிலையில் இவானாவின் வருங்கால கணவர் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொள்கிறார். அவரை தொடர்ந்து இவானா வருணுக்கு மீண்டும் திருமண ஏற்பாடு நடக்க, அவரும் விபத்தில் சிக்கி உயிரிழக்கிறார்.


இந்த தொடர் மரணங்கள் எதேச்சையாக நடப்பவை என்று இவானா குடும்பத்தார் நினைக்கும் போது, காவல்துறையின் விசாரணையில் இவை அனைத்தும் யாரோ திட்டமிட்டு செய்யும் கொலைகள் என தெரிய வருகிறது. இருப்பினும், குற்றவாளி குறித்தோ அல்லது மரணங்களின் மர்மம் குறித்தோ எந்தவிதமான தடயங்களும் கிடைக்காமல் போக, இந்த வழக்கு காவல்துறை அதிகாரியான நாயகன் பிரஜினிடம் ஒப்படைக்கப்படுகிறது.


இவானா வருணிடம் இருந்து தனது விசாரணையை தொடங்கும் பிரஜின், நாளடைவில் அவர் மீது காதல் கொண்டு, அவரை திருமணம் செய்துகொள்ள முடிவு செய்கிறார். இவானா வருணை திருமணம் செய்ய நினைப்பவர்களுக்கு ஏற்பட்ட நிலை பிரஜினுக்கும் ஏற்பட்டதா ? அல்லது கொலைகளின் பின்னணியில் இருக்கும் மர்மத்தையும், கொலையாளியையும் அவர் கண்டுபிடித்தாரா ? என்பதை பல திடுக்கிடும் திருப்பங்களோடு சொல்வதே ‘அந்தரன்’.


காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கும் பிரஜின், கம்பீரமான நடிப்பின் மூலம் தனது கதாபாத்திரத்திற்கு நியாயம் சேர்த்திருக்கிறார். காவல்துறை அதிகாரியாகவும், காதலராகவும் தனது உணர்வுப்பூர்வமான நடிப்பை கச்சிதமாக வெளிப்படுத்தி படத்திற்கு பலமாக பயணித்திருக்கிறார்.


கதாநாயகியாக நடித்திருக்கும் இவானா வருண், பலம் வாய்ந்த கதாபாத்திரத்தை தன்னால் முடிந்தவரை குறையில்லாமல் கையாண்டு கவனம் ஈர்க்கிறார்.


நாயகியின் தந்தையாக நடித்திருக்கும் எம்.கே.சாம்பசிவம், அம்மாவாக நடித்திருக்கும் செந்தி குமாரி, அனுபமா குமார், அதிரன், ரமேஷ்பாபு கீதா, பத்மன், பிரியங்கா செல்வி, ஐஸ்வர்யா கண்ணன் என மற்ற கதாபாத்திரங்களில் நடித்திருப்பவர்கள் தங்களது பணியை சரியாக செய்திருக்கிறார்கள்.


ஒளிப்பதிவாளர் கிஷோர் ராமச்சந்திரன், கிரைம் சஸ்பென்ஸ் திரில்லருக்கான பரபரப்புடன் காட்சிகளை படமாக்கினாலும், காதல் காட்சிகள் மற்றும் பாடல் காட்சிகளை கலர்புல்லாக காட்சிப்படுத்தி ரசிக்க வைத்திருக்கிறார்.


ஹரி.எஸ்.ஆர் இசையமைப்பில் காதல் பாடல்கள் நெஞ்சை வருடும் விதத்தில் அமைந்திருக்கிறது. பின்னணி இசை காட்சிகளின் விறுவிறுப்பை அதிகரிக்கச் செய்கிறது.


படத்தொகுப்பாளர்கள் இக்னேஷியஸ் அஸ்வின் மற்றுய்ம் சதீஷ் குரோசாவா, காட்சிகளை நேர்த்தியாக தொகுத்து படத்தை தொய்வின்றி நகர்த்தி சென்றிருக்கிறார்கள்.


எழுதி இயக்கியிருக்கும் சந்தோஷ் ராவணன், தொடர் கொலைகள் என்ற வழக்கமான கிரைம் சஸ்பென்ஸ் திரில்லர் பாணியிலான கதைக்கருவுக்கு, மிக சுவாரஸ்யமான திரைக்கதை அமைத்து, யூகிக்க முடியாத திருப்பங்கள் மூலம் படத்தை பரபரப்பாக நகர்த்தி செல்கிறார்.


பார்வையாளர்களுக்கு சில கதாபாத்திரங்கள் மீது சந்தேகம் ஏற்படும் வகையில் காட்சிகளை வடிவமைத்திருக்கும் இயக்குநர் சந்தோஷ் ராவணன், கிளைமாக்ஸ் நெருங்கும் போது, எதிர்பார்க்காத திருப்பம் மூலம் யூகங்களை உடைத்தெறிந்து வியக்க வைக்கிறார்.


நாயகியின் வீட்டில் இருக்கும் இளைஞர் யார் ? என்பதை விவரிக்காதது லாஜிக் மீறலாக இருந்தாலும், படத்தின் ஆரம்பத்திலேயே பார்வையாளர்களை கதைக்குள் இழுத்துவிடும் இயக்குநர் சந்தோஷ் ராவணன், கிளைமாக்ஸ் வரை அடுத்தது என்ன நடக்கும் ? என்ற எதிர்பார்ப்புடனும், விறுவிறுப்புடனும் படத்தை நகர்த்தி சென்று, கிரைம் சஸ்பென்ஸ் திரில்லர் பட விரும்பிகளை முழுமையாக திருப்திப்படுத்தியிருக்கிறார்.


மொத்தத்தில், ‘அந்தரன்’ அமர்க்களமான கிரைம் சஸ்பென்ஸ் திரில்லர்.

கான் சிட்டி’ திரைப்பட விமர்சனம்

 கான் சிட்டி’ திரைப்பட விமர்சனம்

அர்ஜுன் தாஸ், அன்ன பென் மற்றும் வடிவுக்கரசியும், அவரது மகனான யோகி பாபு ஆகியோருக்கு எந்தவித தொடர்பும் இல்லை என்றாலும் அனைவரும் பொருளாதார பிரச்சனையில் சிக்கி தவிக்கிறார்கள். அவர்களது நிலையை மாற்றுவதற்காக கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்தி மோசடி மூலம் பணம் சம்பாதிக்க தொடங்குகிறார்கள். அந்த பணத்தை வைத்து குறுகிய காலத்தில் அதிக வருமானம் ஈட்டும் முயற்சியில் ஈடுபடும் போது அவர்கள் அனைவரும் ஏமாற்றப்படுகிறார்கள். தங்களது பணத்துடன், மக்களின் பணத்தையும் இழந்து விட்ட அவர்களை போலீஸ் கைது செய்ய, அங்கிருந்து தப்பித்துச் செல்பவர்கள் ஒன்றாக சேர்ந்து ஒரு குடும்பமாக தலைமறைவு வாழ்க்கை வாழ்கிறார்கள்.


இதற்கிடையே அவர்கள் இருக்கும் இடத்தை கண்டிபிடிக்கும் ஓய்வு பெற்ற போலீஸ் இன்ஸ்பெக்டர், அவர்களை வைத்து கோடிக்கணக்கில் பணம் சம்பாதிக்க திட்டம் போடுகிறார். அவரது மிரட்டலுக்கு அடிபணிபவர்கள், மீண்டும் சென்னைக்கு திரும்பி பெரும் மோசடி மூலம் பணம் சம்பாதிக்க திட்டம் போடுகிறார்கள். அவர்களின் திட்டம் வெற்றி பெற்றதா ?, இல்லையா ?, என்பதை மக்களின் பேராசையை வைத்து நடத்தப்படும் மோசடிகளை, நகைச்சுவை பின்னணியோடு சொல்ல முயற்சித்திருப்பது தான் ‘கான் சிட்டி’.


நாயகனாக நடித்திருக்கும் அர்ஜுன் தாஸ், தனது இறுக்கமான கதாபாத்திர கட்டமைப்பில் இருந்து விலகி கொஞ்சம் ரிலாக்ஸ் செய்யும் விதத்திலான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். நகைச்சுவைக்கு முக்கியத்துவம் உள்ள கதைக்களம் என்றாலும், அதற்கான முழுமையான வாய்ப்பு அர்ஜுன் தாஸுக்கு கிடைக்கவில்லை என்பதே உண்மை. இருந்தாலும் தனக்கு கிடைத்த வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தி, தன்னால் கமர்ஷியல் நாயகனாகவும் பயணிக்க முடியும் என்பதை படம் முழுவதும் நிரூபித்திருக்கிறார்.


மோசடியால் ஏமாற்றப்பட்டு, அதே மோசடி மூலம் தனது நிலையை மாற்றும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அன்னா பென், அளவான நடிப்பின் மூலம் தனது கதாபாத்திரத்திற்கு பலம் சேர்த்திருக்கிறார்.


நகைச்சுவைக்கு முக்கியத்துவம் உள்ள படம் என்றாலும், யோகி பாபு தனது பாணியை கைவிட்டுவிட்டு புதிதாக ஏதோ செய்ய முயற்சித்திருக்கிறார். தனது வழக்கமான உடல்கேலி வசனங்களை முற்றிலும் தவிர்த்திருப்பவர், தனது சோகமான முகம் மற்றும் நடிப்பு மூலம் பார்வையாளர்களை சிரிக்க வைக்க முயற்சித்திருக்கிறார். ஆனால், அது முடியாமல் போக, தனது வழக்கமான பாணியை அளவாக கையாண்டு சில இடங்களில் லேசாக சிரிக்க வைக்கிறார்.


யோகி பாபுவின் அம்மாவாக நடித்திருக்கும் வடிவுக்கரசி, பிளாக் காமெடி காட்சிகளுக்கு ஏற்ப கச்சிதமான எக்ஸ்பிரஷனோடு சிரிக்க வைக்கிறார். குறிப்பாக யோகி பாபு உடனான அவரது காட்சிகளும், அதில் அவர் வெளிப்படுத்திய நடிப்பும் அவருக்கு புதிய அடையாளத்தை கொடுப்பதோடு, பார்வையாளர்களை சிரிக்கவும் வைக்கிறது.


அகிலன், நந்தகோபால், விடிவி கணேஷ், தீப ராமானுஜம், ராதாரவி, அருள்தாஸ், ஷாஜி சென், தம்பி ராமையா, ரமேஷ் திலக், பரத்வாஜ் ரங்கன், இமான் அண்ணாச்சி, பொன்வண்ணன், ராகு எசக்கி, சதானந்த் ஆகியோர் கொடுத்த வேலையை குறையின்றி செய்திருக்கிறார்கள்.


ஷான் ரோல்டன் இசையில் பாடல்கள் கேட்கும்படி உள்ளது. பின்னணி இசை காட்சிகளின் விறுவிறுப்பை அதிகரிக்க செய்யும் விதத்தில் பயணித்திருக்கிறது.


ஒளிப்பதிவாளர் அரவிந்த் விஸ்வநாத் காட்சிகளை தரமாக படமாக்கியிருந்தாலும், தலைப்புக்கு ஏற்ப காட்சியை காட்ட வேண்டும் என்பதற்காக நகரத்தை அடிக்கடி பருந்து பார்வையில் காட்டுவதை தவிர்த்திருக்கலாம்.


படத்தொகுப்பாளர் அருள் மோசஸ்.ஏ, திரைக்கதை தொய்வின்றி நகர்வதற்கு தன்னால் முடிந்த முயற்சியை செய்தாலும், இறுதியில் என்ன நடக்கப் போகிறது என்ற பார்வையாளர்களின் யூகங்களுக்கு ஏற்ப படத்தை நகர்த்திச் சென்றிருக்கிறார்.


எழுதி இயக்கியிருக்கும் ஹரிஸ் துரைராஜ், புத்திசாலித்தனம் அல்லது தந்திரமான திட்டங்கள் மூலம் நடத்தப்படும் மோசடிகளை, நகைச்சுவை பின்னணியோடு சொல்ல முயற்சித்திருக்கிறார்.


முதன்மை கதாபாத்திரங்களின் முகத்தில் சிரிப்பை வெளிக்காட்டாமல் காட்சிகளை கையாண்டிருப்பது புதிதாக இருக்கிறது. அதே சமயம், திரைக்கதை மற்றும் காட்சிகள் நாம் ஏற்கனவே பல படங்களில் பார்த்த உணர்வை கொடுப்பதால், படம் சுவாரஸ்யம் இல்லாமல் நகர்கிறது.


மொத்தத்தில், ‘கான் சிட்டி’ ஏற்கனவே பார்த்த உணர்வை கொடுக்கிறது.