-

Loading latest news...

வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் (Vels Film International) தயாரிப்பில் பிரேம்குமார் இயக்கும் புதிய படம் கோலகல ஆரம்பம் !!*

 *வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் (Vels Film International) தயாரிப்பில் பிரேம்குமார் இயக்கும் புதிய படம் கோலகல ஆரம்பம் !!*



*இயக்குநர் பிரேம்குமார், பகத் பாசில் இணையும் புதிய படம் பூஜையுடன் துவங்கியது !!*


வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் தயாரிப்பில் “96, மெய்யழகன்" படங்களின் வெற்றிக்குப் பிறகு இயக்குநர் C. பிரேம்குமார் இயக்கத்தில் முன்னணி நடிகர் பகத் பாசில் நாயகனாக நடிக்கும் புதிய திரைப்படத்தின் பூஜை இன்று கோலாகலமாக நடைபெற்றது.


வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் தயாரிக்கும் இந்த புதிய படம், ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், ஐசரி K. கணேஷ் அவர்களின் வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் 32வது தயாரிப்பாக இப்படம் உருவாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


மலையாள திரையுலகின் முன்னணி நடிகரான பகத் பாசில் இப்படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். தனித்துவமான கதைகளையும், உணர்ச்சிப்பூர்வமான திரைக்கதைகளையும் தேர்ந்தெடுத்து வெற்றிபெறும் பகத் பாசில் மற்றும் மனதை தொடும் படைப்புகளால் ரசிகர்களை கவர்ந்த இயக்குநர் பிரேம்குமார் இணையும் இந்த புதிய கூட்டணி, திரையுலகில் மிகுந்த கவனத்தை பெற்றுள்ளது.


தமிழ் சினிமாவில் தரமான மற்றும் வெற்றிப்படங்களை தொடர்ந்து வழங்கி வரும் வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல், பல்வேறு முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து வித்தியாசமான கதைக்களங்களை கொண்ட திரைப்படங்களை தயாரித்து வருகிறது. வணிக ரீதியிலும், உள்ளடக்க ரீதியிலும் வெற்றிபெற்ற பல படங்களை வழங்கியுள்ள இந்த நிறுவனம், தற்போது இந்த புதிய முயற்சியின் மூலம் மீண்டும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.


இயக்குநர் C. பிரேம்குமார், “96” மற்றும் “மெய்யழகன்” போன்ற உணர்வுப்பூர்வமான திரைப்படங்கள் மூலம் தனக்கென ஒரு தனி ரசிகர் வட்டத்தை உருவாக்கியவர். எளிமையான காட்சியமைப்புகள், மனதை வருடும் கதாபாத்திரங்கள் மற்றும் இயல்பான திரைக்கதைகளால் பாராட்டப்பட்ட அவர், இந்த புதிய படத்திலும் ரசிகர்களை கவரும் விதமான ஒரு வித்தியாசமான அனுபவத்தை வழங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.


இயக்குநர் பிரேம் குமாரின் முந்தைய படங்களுக்கு இசையமைத்த கோவிந்த் வசந்தா இப்படத்திற்கு இசையமைக்கிறார்.


இப்படத்தின் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது. புதிய கூட்டணியால் உருவாகும் இந்த படம், ரசிகர்களிடையே தற்போது பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது

எக்ஸாம்’ இணையத் தொடர் விமர்சனம்

 எக்ஸாம்’ இணையத் தொடர் விமர்சனம்


போலீஸ் டி.எஸ்.பியான அதிதி பாலன், தனது பணி மாறுதலை தொடர்ந்து புதிய இடத்திற்கு பொறுப்பேற்க செல்லும் போது, துஷாரா விஜயனால் கடத்தப்பட்டு அடைத்து வைக்கப்படுகிறார். பிறகு அதிதி பாலன் பெயரில் துஷாரா விஜயன், டி.எஸ்.பியாக பதவி ஏற்றுக்கொள்வதோடு, அந்த இடத்தில் நடக்க இருக்கும் அரசு தேர்வு மோசடியை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபடுகிறார்.


அதிதி பாலன் மூலமாக அந்த மோசடி நடக்க இருப்பதாக நினைத்து அவரை கடத்தி அடைத்து வைக்கும் துஷாரா விஜயனுக்கு, அவருக்கும் மேலே ஒருவர் இருப்பதும், கண்ணுக்கு தெரியாத அந்த நபர் மூலம், காவல்துறை அதிகாரிகள் மற்றும் அரசு அதிகாரிகள் பகடைக்காய்களாக பயனபடுத்தப்பட்டு, அவர்கள் மூலம் மோசடி நடக்க இருப்பதும் தெரிய வருகிறது.அந்த கண்ணுக்கு தெரியாத நபர் யார் ?, அவர் மூலம் நடக்க இருக்கும் மோசடியையும், அதன் பின்னணியையும் துஷரா விஜயன், கண்டுபிடித்தாரா? இல்லையா ? என்பதை இதுவரை திரையில் சொல்லப்படாத உண்மைகளை வெளிச்சத்திற்கு கொண்டு வரும் நோக்கில் சொல்வதே ‘எக்ஸாம்’.


நடுத்தர மனிதர்களின் வாழ்க்கை தரத்தை மாற்றவும், சமூகத்தில் தங்களுக்கான அங்கீகாரத்தை பெறவும் அரசு பதவிகளும், பணியும் மிக முக்கியமானது. அதற்காக கடுமையாக உழைக்கும் அவர்களது உழைப்பு பதவி ஆசைக்காகவும், அதிகார போதைக்காகவும் பணம் படைத்தவர்களுக்காக, எப்படி திருடப்படுகிறது என்பதை அரசு தேர்வுகளில் நடக்கும் பெரும் மோசடிகள் மூலம் உணர்வுப்பூர்வமாக சொல்லியிருக்கிறார் இயக்குநர் சற்குணம்.இணையத் தொடர்கள் என்றாலே, கிரைம் சஸ்பென்ஸ் திரில்லர் மற்றும் திகில் பாணியிலான கதைகளை மட்டுமே விறுவிறுப்பாக நகர்த்திச் செல்ல முடியும், என்ற கண்ணோட்டத்தை உடைத்து, சமூகப் பிரச்சனைகளை பேசும் கதைகளை கூட விறுவிறுப்பான இணையத் தொடராக கொடுக்க முடியும், என்பதை நிரூபித்திருக்கும் இயக்குநர் சற்குணம், பல உண்மை சம்பவங்களை மிக தைரியமாக காட்சிப்படுத்தி அரசு எந்திரத்தின் கோளாறுகளை மிக நுணுக்கமாக சுட்டிக்காட்டியிருக்கிறார் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் துஷாரா விஜயன் மற்றும் அதிதி பாலன் இருவரும் தங்களது வேலையை மிக சரியாக செய்திருக்கிறார்கள். துஷாரா விஜயனின் அழுத்தமான நடிப்பு, அரசு பணிக்காக கடுமையாக படித்தும் பலன் பெறாமல், பணம் மற்றும் அதிகாரத்திற்கு முன்பு தோற்றுப்போகும் ஏழை மக்களை பிரதிபலித்திருக்கிறது.


அதிதி பாலன், பணம் இருந்தால் எதையும் குறுக்கு வழியில் சாதிக்க முடியும், என்ற எண்ணத்தில் வாழும் மேல்தட்டு மக்களின் மனநிலையை தன் நடிப்பில் சிறப்பாக வெளிக்காட்டியிருக்கிறார்.அரசு தேர்வு மற்றும் காவல்துறையை சார்ந்த கதை என்பதால், காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவலர்களாக பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். அவர்களில் பெரும்பாலனவர்கள் அதிகம் பரிட்சயம் இல்லாதவர்களாக இருந்தாலும் அவர்களது நடிப்பு கதாபாத்திரத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது. சப் இன்ஸ்பெக்டர் செழியன் வேடத்தில் நடித்திருக்கும் பப்ளிக் ஸ்டார் துரை சுதாகர், வழக்கம் போல் தனது எதார்த்தமான நடிப்பின் மூலம் கவனம் ஈர்க்கிறார். கதையின் மிக முக்கியமான கதாபாத்திரமாகவும், திரைக்கதையின் திருப்பமாகவும் பயணப்பட்டிருக்கும் பப்ளிக் ஸ்டார் துரை சுதாகர், ஆரம்பத்தில் ஏதோ செய்யப் போகிறார், என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தி திடீரென்று காணாமல் போனாலும், கிளைமாக்ஸில் தனது இருப்பை அழுத்தமாக பதிவு செய்து பாராட்டு பெற்று விடுகிறார்.இசை, ஒளிப்பதிவு, படத்தொகுப்பு என அனைத்தும் மிக நேர்த்தியாக இருக்கிறது. கதை முழுவதும் மலைப்பிரதேசத்தில் நடப்பதால் காட்சிகள் கண்களுக்கு விருந்து படைத்திருக்கிக்கிறது. பின்னணி இசை காட்சிகளின் வேகத்திற்கும், விறுவிறுப்புக்கும் முக்கியத்துவம் கொடுப்பதை விட கதாபாத்திரங்களின் உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து பயணித்திருக்கிறது. படத்தொகுப்பும் திரைக்கதையை தொய்வின்றி நகர்த்தி செல்கிறது எழுதி இயக்கியிருக்கும் சற்குணம், தமிழ்நாட்டில் நடைபெற்ற அரசு தேர்வு மோசடிகளையும், அதன் பின்னணியையும் உண்மைக்கு நெருக்கமாக சொல்லியிருக்கிறார். இத்தகைய மோசடிகள் எப்படி நடக்கிறது ?, யார் மூலமாக நடக்கிறது ?, என்பதை மிக விரிவாக காட்சிப்படுத்தியிருக்கும் இயக்குநர் சற்குணம், இத்தகைய மோசடிகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கான தீர்வை சொல்லவில்லை என்றாலும், இதனால் நடுத்தர மக்கள் எப்படி பாதிக்கப்படுகிறார்கள் என்பதை மனதுக்கு நெருக்கமாக பதிவு செய்திருக்கிறார். முதல் மூன்று அத்தியாயசங்கள் நம் கவனத்தை முழுமையாக ஈர்த்து விடுவது போல், அடுத்தடுத்த அத்தியாயங்கள் இல்லாதது சிறு குறையாக இருந்தாலும், இதுவரை சொல்லப்படாத மற்றும் சொல்ல வேண்டிய மிக முக்கியமான பிரச்சனைனையை எந்தவித சமரசமும் இன்றி சொல்லியிருக்கும் இயக்குநர் சற்குணம், அதை ஒரு சுவாரஸ்யமான இணையத் தொடராக கொடுத்து வெற்றி பெற்றிருக்கிறார்.


மொத்தத்தில், ‘எக்ஸாம்’ குழுவினர் அதிக மதிப்பெண்ணில் தேர்ச்சி பெற்று விட்டனர்.

சட்டென்று மாறுது வானிலை’ திரைப்பட விமர்சனம்

 சட்டென்று மாறுது வானிலை’ திரைப்பட விமர்சனம்


ஐடி ஊழியரான ஜெய், மீனாட்சியை பார்த்ததும் காதல் வயப்படுகிறார். மறுநாளே தன் காதலை சொல்லி அவரை திருமணம் செய்து கொள்கிறார். தேன்நிலவுக்காக கொடைக்கானல் செல்லும் ஜெய் – மீனாட்சி தம்பதி, கருடா ராம் நடத்தும் சொகுசு விடுதியில் தங்குகிறார்கள். அங்கு அவர்களுக்கு ஒரு சிக்கல் ஏற்படுகிறது. மறுபக்கம், ஜெய் – மீனாட்சி தம்பதியை பிரித்து, மீனாட்சிக்கு மறுமணம் செய்து வைக்க அவரது அமைச்சர் தந்தை முயற்சிக்கிறார்.சொகுசு விடுதியின் சிக்கல் மற்றும் மனைவியை தன்னிடம் இருந்து பிரிக்க நடக்கும் சதி ஆகியவற்றில் ஜெய் சிக்கி தவிக்க, திடீரென்று மீனாட்சி காணாமல் போய் விடுகிறார். அதற்கு ஜெய் தான் காரணம் என்று சந்தேகிக்கும் போலீஸ் அவரை கைது செய்கிறது. மகிழ்ச்சியாக தொடங்கிய திருமண வாழ்க்கை, சட்டென்று உருவெடுத்த பல சிக்கல்களில் சிக்கிக்கொள்ள, அத்தனை சிக்கல்களையும் ஜெய் தீர்த்து மீண்டும் தன் மனைவியுடன் சேர்ந்தாரா? இல்லையா ? என்பது தான் படத்தின் மீதிக்கதை.நாயகனாக நடித்திருக்கும் ஜெய், வழக்கம் போல் தன் துள்ளல் நடிப்பை வெளிப்படுத்தியிருந்தாலும், விஜய் ரசிகர் என்ற அடையாளத்துடன், விஜய் போல் வெளிப்படையாக நடித்திருக்கிறார். அது சில காட்சிகளில் அவருக்கு கை கொடுத்தாலும், பல காட்சிகளில் அவரை பலவீனப்படுத்தியிருக்கிறது. காதல் காட்சிகளிலும், கண்கலங்கும் காட்சிகளிலும் முதிர்ச்சியான நடிப்பை வெளிப்படுத்தி அசத்தியிருக்கிறார்.


நாயகியாக நடித்திருக்கும் மீனாட்சி கோவிந்தராஜன் அழகிலும், நடிப்பிலும் கவர்கிறார். தந்தை மீதான கோபம், நண்பர் மீதான வெறுப்பு, கணவர் மீதான காதல் என்று பல்வேறு உணர்வுகளை அளவாக கையாண்டு பாராட்டு பெறுகிறார்.ஜெயின் நண்பராக நடித்திருக்கும் யோகி பாபு, வழக்கமான தனது டைமிங் வசனங்கள் மூலம் சிரிக்க வைக்க முயற்சித்திருப்பதோடு, இரட்டை அர்த்த வசனங்களையும் வாரி வழங்கியிருக்கிறார். ஆனால், அவரது எந்த முயற்சியும் பார்வையாளர்களை சிரிக்க வைக்கவில்லை. கவுண்டமணிக்கு செந்தில் போல், யோகி பாபுவிடம் அடி வாங்கும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஆதித்யா கதிர் சில இடங்களில் சிரிக்க வைக்கிறார்.வில்லனாக நடித்திருக்கும் கருடா ராம், சத்யன், ஸ்ரீமன், சரவண சுப்பையா என மற்ற கதாபாத்திரங்களில் நடித்திருப்பவர்கள் தங்களது வேலையை சரியாக செய்திருக்கிறார்கள்.


ஒளிப்பதிவாளர் ரிச்சர்ட் எம்.நாதன், படத்தை கலர்புல்லாக காட்சிப்படுத்தியிருக்கிறார். நாயகன், நாயகி இருவரையும் அழகாக காட்டியிருப்பவர், காட்சிகளை தரமாக படமாக்கி ரசிக்க வைத்திருக்கிறார் கிரிஷ் கோபாலகிருஷ்ணனின் இசையில் பாடல்கள் அனைத்தும் துள்ளல் ரகம். இரைச்சல் இல்லாத பின்னணி இசை காட்சிகளின் விறுவிறுப்புக்கும், திரைக்கதை வேகத்திற்கும் கைகொடுத்திருக்கிறது.


படத்தொகுப்பாளர் டார்லிங் ரிச்சர்ட்சன், காட்சிகளை தொகுத்ததிலும், கதை நகர்த்தலிலும் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம்.


எழுதி இயக்கியிருக்கும் பாபு விஜய், தொழில்நுட்பம் மற்றும் இணையம் மூலம் மனிதர்களின் அந்தரங்கங்கள் எப்படி திருடப்படுகிறது, என்ற உண்மையை கமர்ஷியலாக சொல்லியிருக்கிறார்.இளமை ததும்பும் காதல், திருப்பங்கள் நிறைந்த திரைக்கதை, அதிர்ச்சிகரமான சம்பவங்கள் ஆகியவற்றின் மூலம் பார்வையாளர்களை படத்துடன் ஒன்றிவிட செய்யும் இயக்குநர் பாபு விஜய், கதை சொல்லலில் கூடுதல் கவனம் செலுத்தியிருந்தால் படம் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியிருக்கும்.


மொத்தத்தில் ’சட்டென்று மாறுது வானிலை’ வெற்றி பெறும்

கருப்பு’ திரைப்பட விமர்சனம்

 கருப்பு’ திரைப்பட விமர்சனம் 


கடவுளே வந்தாலும் அதை மாற்ற முடியாது” என்று சாதாரணமாக சொல்வோம், அப்படி ஒரு பிரச்சனைக்கு தீர்வு காண கடவுளே, சராசரி மனிதராக முயற்சிக்கிறார். அது அவரால் முடிந்ததா? இல்லையா? என்பது தான் படத்தின் மையக்கரு.


பிரபலமான வழக்கறிஞராக இருக்கும் ஆர்.ஜே.பாலாஜி, லஞ்சம் கொடுத்து தன் வழக்குகளில் வெற்றி பெறுவதோடு, நீதிமன்றத்தை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார். அங்கு கட்டப்பஞ்சாயத்து உள்ளிட்ட அனைத்து சட்டவிரோதமான வேலைகளையும் செய்யும் ஆர்.ஜே.பாலாஜி, தன்னை மீறி நீதிமன்றத்தில் எதுவும் செய்ய முடியாது, என்ற கட்டமைப்பை உருவாக்குகிறார். இதனால், நீதிக்காக போராடுபவர்களின் போராட்டம் தொடர்ந்து கொண்டே இருக்க, அவர்களின் அழுகுரல் கேட்டு அந்த நீதிமன்றத்தில் இருக்கும் கருப்புசாமி சூர்யா, நேரில் வந்து ஆர்.ஜே.பாலாஜியை வெளுக்கிறார்.  வந்திருப்பது கடவுள் என்று தெரிந்தாலும், இங்கே எல்லாமே இப்படி தான், இதை யாராலும் மாற்ற முடியாது. முடிந்தால் நீங்க கடவுளாக அல்லாமல் சராசரி மனிதராக மாற்றிக் காட்டுங்கள், என்று கருப்புசாமி சூர்யாவிடம், ஆர்.ஜே.பாலாஜி சவால் விடுகிறார். அவரது சவாலை ஏற்றுக்கொள்ளும் கருப்புசாமி சராசரி மனிதராக, நீதித்துறையின் அவலநிலையை மாற்ற முயற்சிக்கிறார். அது அவரால் முடிந்ததா ? இல்லையா ? என்பது தான் படத்தின் மீதிக்கதை.


படத்தில் நாயகன் ஆர்.ஜே.பாலாஜியா அல்லது சூர்யாவா என்று தெரியவில்லை. சூர்யாவை விட ஆர்.ஜே.பாலாஜி தான் அதிக காட்சிகளில் வருகிறார். ஜெய்பீம்’ படத்தில் நீதிக்காக போராடும் ஒரு நேர்மையான வழக்கறிஞராக நடித்த சூர்யா, அதே நீதித்துறையில் நடக்கும் அநீதிகளையும், அநீதி இழைப்பவர்களையும் அழிக்கும் கருப்புசாமியாக ஆக்ரோஷமாக நடித்திருப்பதோடு, மதுரை வழக்கறிஞர் சரவணன் கதாபாத்திரத்தில் உணர்ச்சிகரமாகவும் நடித்திருக்கிறார் பேபி கண்ணன் என்ற கதாபாத்திரத்தில் வழக்கறிஞராக நடித்திருக்கும் ஆர்.ஜே.பாலாஜி, மாஸாக அறிமுகமாகி, மிரட்டலான வில்லத்தனத்தை வெளிப்படுத்தி அமர்க்களப்படுத்தியிருக்கிறார்.


வழக்கறிஞராக நடித்திருக்கும் திரிஷா, சில காட்சிகளில் வாதாடுகிறார். பாடல் காட்சியில் ஆட்டம் போடுகிறார். கடவுளிடம் வரம் கேட்டு நீதித்துறையை மாற்ற முயற்சிக்கிறார். இப்படி பல வேலைகள் செய்தாலும், திரைக்கதையோடு ஒட்டாமல் பயணித்திருக்கிறார். நீதிபதியாக நடித்திருக்கும் நட்டி, திருட்டு போன தன் தங்க நகைகளை மீட்க போராடும் கேரளத்தவராக நடித்திருக்கும் இந்திரன்ஸ், சுவாசிகா, சிவதா ஆகியோர் தங்களது அனுபவமான நடிப்பின் மூலம் கதாபாத்திரங்களுக்கு பலம் சேர்த்திருக்கிறார்கள்.


ஒளிப்பதிவாளர் ஜி.கே.விஷ்ணு, காட்சிகளை பிரமாண்டமாக படமாக்கியிருந்தாலும், பல இடங்களில் அதிகப்படியான ஒளிகள் மூலம் கண்களை சோர்வடைய செய்து விடுகிறார். கருப்புசாமி என்பதால் பல காட்சிகளில் சிவப்பு நிறம் அதிகமாக இடம்பெறுவதும், சண்டை காட்சிகளை அதிகப்படியான கிராபிக்ஸோடு வடிவமைத்ததும் உறுத்தலாக இருக்கிறது. சாய் அபயங்கரின் இசையில் பாடல்கள் அனைத்தும் இன்ஸ்டா ரீல்ஸுக்கான இசையாகவே இருக்கிறது. குறிப்பாக வார்த்தைகள் புரியாதபடி, இசையின் சத்தத்திற்கு முக்கியத்துவம் கொடுத்திருப்பவர், கருப்புசாமி பாடலை கூட கலாச்சாரத்திற்கு ஏற்ற குரலை பயன்படுத்தாமல் தொழில்நுட்பத்திற்கு முக்கியத்துவம் கொடுத்திருப்பதும், அதிகப்படியான சத்தத்துடன் கூடிய பின்னணி இசையும் படத்திற்கு பலவீனமாக அமைந்திருக்கிறது.


படத்தொகுப்பாளர் கலைவாணன், இயக்குநர் சொன்ன கதையை முடிந்தவரை சுவாரஸ்யமாக கொடுக்க முயற்சித்திருக்கிறார்.எழுதி இயக்கியிருக்கும் ஆர்.ஜே.பாலாஜி, நீதித்துறையில் நடக்கும் அநீதிகளுக்கு கருப்புசாமி மூலம் சாட்டையடி கொடுக்க முயற்சித்திருக்கிறார்.


மக்களின் கடைசி நம்பிக்கையாகவும், ஜனநாயகத்தின் முக்கியத் தூணாகவும் விளங்கும் நீதிமன்றங்கள், மக்களின் அடிப்படை உரிமைகளைப் பாதுகாப்பதிலும், சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டுவதிலும் எப்படி செயல்படுகிறது என்பதையும், நீதித்துறையில் நிலவும் ஊழல் மற்றும் விலைபோகும் நீதியரசர்கள், நீதிமன்றத்தின் எழுதப்படாத விதிமுறைகள் அதனால் பாதிக்கப்படும் சாமானிய மக்கள் என்று பல விசயங்களை மிக தைரியமாக சொல்லியிருக்கும் இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி, அதை கடவுள் பின்னனி இல்லாமல், சராசரி மனிதனின் தொடர் முயற்சி மற்றும் போராட்டம் மூலம் சொல்லியிருந்தால் படம் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறார்.


மொத்தத்தில், ‘கருப்பு’ லஞ்சம் நிறைந்த நீதித்துறைக்கு சாட்டையடி *KARUPPU - Movie Cast & Crew list :*


Cast details:


1. SURIYA AS SARAVANAN

2. TRISHA AS PREETHI

3. RJ BALAJI AS BABY KANNAN

4. INDRANS AS

5. NATTY AS

6. SWASIKA AS

7. SSHIVADHA AS

8. ANAGHA MAYA RAVI AS

9. SUPREETH REDDY AS


crew details:


1. PRODUCTION HOUSE : DREAM WARRIOR PICTURES

2. PRODUCED BY - SR PRAKASH BABU & SR PRABU

3. WRITTEN & DIRECTED BY - RJ BALAJI

4. DOP - GK VISHNU

5. EDITOR - R KALAIVANAN

6. ART - ARUN VENGARAMOODU

7. MUSIC - SAI ABYANKKAR

8. LYRICS - PA.VIJAY, VIVEK, VISHNU EDAVAN, ASAL KOLAAR, ADESH KRISHNA, ARUN SRINIVASAN

9. STUNTS - VIKRAM MOR

10. CHOREOGRAPHER - SHOBI PAULRAJ, SANDY, ANUSHA VISWANANTHAN

11. COSTUMER - PERUMAL SELVAM

12. COSTUME DESIGNER - PRAVEEN RAJA, EKA LAKHANI, DIVYA NAGARAJAN

13. SOUND DESIGNS - ARUN S MANI (OLI SOUND LAB)

14. SOUND MIX - VINAY SRIDHAR

15. VFX SUPERVISOR - LOGARAJ

16. DI - RED CHILLIES.COLOR

17. MAKEUP - VINOTH SUKUMARAN

18. CO-DIRECTOR - RAHUL RAJ

19. CHIEF ASSOCIATE - STEPHEN RANGARAJ, ANDREWS, SA MANIKANDAN, JAYASURIYA, ARUN SRINIVASAVN, RS VIGNESH

20. PRODUCTION CONTROLLER - PS RAJENDRAN 

21. STILLS - D. NARENDRAN

22. PRO - SATHISH S2 MEDIA

23. PUBLICITY DESIGNS - KABILAN 

24. EXECUTIVE PRODUCER - ARAVENDRAJ BASKARAN


TAMILNADU THEATRICAL RELEASE - SAKTHI FILM FACTORY

கங்கணம்' பட பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட தயாரிப்பாளர் கலைப்புலி தாணு*

 *'கங்கணம்' பட பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட தயாரிப்பாளர் கலைப்புலி தாணு* 



கல்யாணி இ என்டர்பிரைஸ் சார்பில் கல்யாணி கே மற்றும் சிரஞ்சன் கே.ஜி. தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘கங்கணம்’. அ.இசையரசன் இதன் கதை எழுதி இயக்கியுள்ளார். தேசிய நாடகப்ப பயற்சிப்பள்ளி மற்றும் தென்னகப் பண்பாட்டு மையம் பயிற்சி பெற்ற இவர், ‘என் கண்ணே’ என்கிற குறும்படத்தை இயக்கி ஐந்து விருதுகளையும் பெற்றவர்.


இப்படத்தில் கதாநாயகனாக கூத்துப்பட்டறை சௌந்தர் நடிக்க, கதாநாயகிகளாக அஸ்வினி சந்திரசேகர், பிராணா ஆகியோர் நடிக்கின்றனர்.. முக்கிய வேடத்தில் பருத்திவீரன் சரவணன் நடிக்கிறார். பான் இந்தியா நடிகர் சம்பத்ராம் வில்லனாக நடித்துள்ளார். இவர்கள் தவிர விஜய் டிவி ராமர், சேதுபதி, ஜெயச்சந்திரன், கயல் மணி, KM..பாரி வள்ளல், ராட்சசன் யாசர், அர்ச்சனா மாரியப்பன், ஸ்ரீ மகேஷ் மற்றும் சிரஞ்சன் கே.ஜி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.


இப்படத்தின் பாடல்களை யுகபாரதி எழுத, செல்வா இசையமைத்துள்ளார். பின்னணி இசையை தமீம் அன்சாரி அமைத்துள்ளார். ஒளிப்பதிவை G.A.சிவசுந்தர் கவனிக்க, படத்தொகுப்பை ஜோ.ஜெயபாலன் மேற்கொண்டுள்ளார். நடனத்தை தினா மற்றும் ஜாய் மதி கவனித்துள்ளனர்.

.

படம் குறித்து இயக்குநர் இசையரசன் கூறும்போது, “தன் குடும்பத்தில் வில்லனால் ஏற்பட்ட கொடூரத்திற்காக கதாநாயகனும்,தனக்கு வில்லனால் ஏற்பட்ட உச்சகட்ட அவமானத்திற்காக சரவணனும், தன் மக்களுக்கு நிகழும் அடக்குமுறைக்கும் வன்கொடுமைக்காகவும் தலித் இளைஞர்கள் ஒரு குழுவாகவும். மூன்று துருவங்களாக பழி தீர்க்க முயற்சிப்பதை சமூக சிந்தனையோடு உருவாக்கப்பட்டுள்ளது” என்றார்.. 


இதன் படப்பிடிப்பு மேலூர், தேனி, அதிராம்பட்டினம், புதுக்கோட்டை மற்றும் சென்னை ஆகிய இடங்களில் கிட்டத்தட்ட 56 நாட்கள் நடைபெற்றுள்ளது. இப்படத்தில் நாடக கலைஞர்கள் பூமி ராஜன், பந்தா பசுபதி ஆகியோரை பயன்படுத்தியுள்ளோம்.. விரைவில் இப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்து அறிவிப்பு வெளியாகும்” என்றார்.


தற்போது ‘கங்கணம்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு வெளியிட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து இயக்குநர் அமீர், நடிகர் சத்யராஜ், நடிகை ரோகிணி மற்றும் தஞ்சாவூர் மகாராஜா ரெடிமேட்ஸ் உரிமையாளர் டாக்டர் S ஆசிப் அலி ஆகியோர் அடுத்தடுத்து ‘கங்கணம்’ படத்தின் போஸ்டர்களை வெளியிட இருக்கின்றனர்.

.

*நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் விவரம்*


*நடிகர்கள்* : கூத்துப்பட்டறை சௌந்தர், அஸ்வினி சந்திரசேகர், பிராணா, பருத்திவீரன் சரவணன், சம்பத் ராம், விஜய் டிவி ராமர், சேதுபதி, ஜெயச்சந்திரன், கயல் மணி, K.M பாரி வள்ளல், ராட்சசன் யாசர், அர்ச்சனா மாரியப்பன், ஸ்ரீ மகேஷ், சிரஞ்சன் கே.ஜி.


*தொழில்நுட்ப கலைஞர்கள்*


இயக்குநர் : அ.இசையரசன்

ஒளிப்பதிவு ;: G.A சிவசுந்தர்

இசை : செல்வா

இசை (பின்னணி ): தமீம் அன்சாரி

பாடல்கள் : யுகபாரதி

படத்தொகுப்பு : ஜோ.ஜெயபாலன்

தயாரிப்பு மேலாளர் : ஏ.ஆர். கார்த்திகேயன்

பாடகர்கள் : தெருக்குரல் அறிவு, ஸ்ரீ நிஷா, வி.எம்.மகாலிங்கம், கயல் கோபு

நடனம் : தினா, ஜாய் மதி

கலை இயக்குனர் : கல்லை தேவா

சண்டைக்காட்சி : மிரட்டல் செல்வா

ஒப்பனை ; இதயா ஜேம்ஸ் 

ஸ்டில்ஸ் ; ரங்காராவ் 

மக்கள் தொடர்பு : A. ஜான்

இயக்குநராக அறிமுகமாகும் நடிகர் ராம் போதினேனி !!

 *இயக்குநராக அறிமுகமாகும் நடிகர் ராம் போதினேனி !!*



எனர்ஜிடிக் ஸ்டார் ராம் போதினேனி திரையுலகையும், சினிமா ரசிகர்களையும் ஆச்சரியப்படுத்தும் வகையில், தனது #RAPO23 படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். கிருஷ்ணா போதினேனி தயாரிப்பில், Rapo Cinematics பேனரில் உருவாகும் இப்படத்தில் ‘வீரா’ கதாபாத்திரத்தை அறிமுகப்படுத்தும் ஸ்டைலிஷ் போஸ்டர் வெளியாகியுள்ளது.


பல்வேறு விதமான கதாபாத்திரங்களின் மூலம் தனது திறமையை தொடர்ந்து நிரூபித்து வரும் ராம் போதினேனி, தற்போது தனது கலைப்பயணத்தில் இன்னொரு துணிச்சலான அடியை எடுத்து வைத்துள்ளார். அவரது முந்தைய படமான ஆந்திரா கிங் தாலுகா படத்தில் பாடல் வரிகளை எழுதி பாராட்டைப் பெற்றதுடன், முதன்முறையாக பின்னணிப் பாடகராகவும் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தினார். இப்போது தனது 23வது படமான #RAPO23 மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.


ராமின் பிறந்தநாளை முன்னிட்டு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள #RAPO23, திரைப்படம், ஸ்டைலிஷ் சைக்கலாஜிக்கல் ஆக்ஷன் த்ரில்லராக உருவாக உள்ளது. தெலுங்கு சினிமாவில் அரிதாக முயற்சிக்கப்படும் இந்த ஜானர், ரசிகர்களிடையே ஏற்கனவே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.


இந்த படத்தை, புதியதாக தொடங்கப்பட்டுள்ள Rapo Cinematics நிறுவனத்தின் சார்பில் கிருஷ்ணா போதினேனி தயாரிக்கிறார். மேலும் இந்த முயற்சியின் மூலம், நடிகர்-இயக்குநர்களான N. T. ராமா ராவ், கிருஷ்ணா மற்றும் பவன் கல்யாண் ஆகியோரின் வரிசையில் ராம் போதினேனியும் இணைகிறார்.


படக்குழு வெளியிட்டுள்ள பிறந்தநாள் ஸ்பெஷல் போஸ்டர், ராம் போதினேனியின் ‘வீரா’ கதாபாத்திரத்தை அறிமுகப்படுத்துகிறது. லெதர் ஜாக்கெட்டுடன் பின்னால் இருந்து நிற்கும் ராமின் தோற்றம், படத்தின் டார்க், இன்டென்ஸ் மற்றும் தனித்துவமான மனநிலையை வெளிப்படுத்துகிறது. அவரது V-cut ஹேர் ஸ்டைல், கதாபாத்திரத்தின் அட்டகாசமான அணுகுமுறையை மேலும் வலுப்படுத்துகிறது.


போஸ்டரின் பின்னணியில் இடம் பெற்றுள்ள பிரம்மாண்டமான சிவப்பு நிற “V”, ‘வீரா’ என்பதையும், போராட்டம், ஆபத்து மற்றும் ஆதிக்கத்தையும் குறிக்கிறது. இருபுறமும் மங்கலாக தெரியும் உயரமான கட்டிடங்கள், குற்றச்செயல்கள் நிறைந்த குளிர்ச்சியான நகரத்தை நினைவூட்டுகின்றன. “The Story of a Lone Wolf” என்ற டேக் லைன், தனிமை, மனதின் அடி அழ உணர்வுகள் மற்றும் சிக்கலான உளவியல் பின்னணியுடன் நகரும் கதாநாயகனை சுட்டிக்காட்டுகிறது.


ராம் போதினேனி இயக்குநராக அறிமுகமாகும் #RAPO23, அவர் தானே உருவாக்கிய சக்திவாய்ந்த மற்றும் புதுமையான கதைக்களத்தை மையமாகக் கொண்டதாக இருக்கும் என கூறப்படுகிறது. மேலும், ‘வீரா’வாக இதுவரை இல்லாத புதிய அவதாரத்தில் ராம் நடிக்க உள்ளார். அந்த மாற்றம் ஏற்கனவே போஸ்டரின் ஸ்டைல் மற்றும் மூடில் தெளிவாக தெரிகிறது.


படத்தின் ஷூட்டிங் ஜூன் மாதத்தில் தொடங்கவுள்ளது. இந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளனர். நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் குழுவினரின் விவரங்கள் விரைவில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


நடிப்பு: ராம் போதினேனி


தொழில்நுட்பக் குழு:

எழுத்து & இயக்கம் : ராம் போதினேனி

தயாரிப்பு: கிருஷ்ணா போதினேனி

பேனர்: Rapo Cinematics

மக்கள் தொடர்பு - யுவராஜ்


*Energetic Star Ram Pothineni surprises the industry & cinema lovers by turning Director with #RAPO23, Introducing Veera through a Strikingly Stylish Poster- Produced by Krishna Pothineni on Rapo Cinematics.*


Energetic Star Ram Pothineni, a multi-faceted performer who has consistently showcased his versatility on screen, takes a Bold new step.After turning lyricist with his previous film Andhra King Taluka- a feat that earned him wide appreciation, he also surprised audiences by lending his vocals for the first time. Now, the talented star is ready to take a giant leap. With his 23rd film, #RAPO23, Ram steps into the director’s chair, marking his debut as a filmmaker. The project, formally announced on the occasion of his birthday, is set to be a stylish Psychological Action Thriller. A genre that is barely explored in Telugu cinema.


#RAPO23 will be produced by Krishna Pothineni under the newly formed Rapo Cinematics banner. Interestingly with this move, Ram joins the elite league of Stars-turned-Directors such as Sr. NTR, Krishna, and Pawan Kalyan.


The makers have also unveiled a striking birthday special poster that introduces Ram Pothineni’s character, Veera. The poster radiates a dark, intense, and gritty tone featuring Ram from behind, clad in a leather jacket. His sharp, V-cut hairstyle amplifies the raw attitude of the character. Dominating the backdrop is a bold red “V”, symbolizing both Veera and a sense of rebellion, danger, and dominance. The faint outlines of towering skyscrapers on either side evoke a cold, crime-infested cityscape. Adding to the mystery, the tagline “The Story of a Lone Wolf” hints at a protagonist driven by solitude, instinct, and a complex psychological landscape.


#RAPO23 promises a powerful and groundbreaking narrative conceived by Ram Pothineni himself for his directorial debut. He is set to portray Veera in a completely new, never-before-seen avatar, and the transformation is already evident in the announcement poster’s styling and mood.


The film’s regular shoot is set to begin in June, with the makers eyeing a December release this year. Further details about the cast and technical crew will be revealed in the coming days, building anticipation around what is poised to be one of Ram Pothineni’s most ambitious ventures yet.


Cast: Ram Pothineni


Technical Crew:

Writer, Director: Ram Pothineni

Producer: Krishna Pothineni

Banner: Rapo Cinematics

PRO: Yuvraaj

மர்மம், கொலை, கிராமத்து ரகசியங்கள் — ZEE5-ல் ‘கொலை சேவல்’*

 *மர்மம், கொலை, கிராமத்து ரகசியங்கள் — ZEE5-ல் ‘கொலை சேவல்’*



இந்தியா, 15 மே 2026: ZEE5 தமிழ் ZEE5, பரபரப்பூட்டும் கிராமப்புற திரில்லர் திரைப்படமான கொலை சேவல் தற்போது தங்களது தளத்தில் ஸ்ட்ரீமிங் ஆகி வருவதாக அறிவித்துள்ளது. சஸ்பென்ஸ், உணர்ச்சிகள் மற்றும் தீவிரமான கிராமத்து நாடக அம்சங்களை இணைக்கும் இப்படம், பேராசை, துரோகம் மற்றும் மனித உறவுகளின் இருண்ட பக்கங்களை ஒரு நாட்டுப்புற பின்னணியில் ஆழமாக ஆராயும் வலுவான கதையை கொண்டுள்ளது.


தனித்துவமான தலைப்பும், இயல்பான கதை சொல்லும் முறையும் கொண்ட கொலை சேவல், அதன் யதார்த்தமான அணுகுமுறை மற்றும் சூழல்மிக்க காட்சிப்படுத்தலால் ஏற்கனவே பார்வையாளர்களிடையே பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. மறைக்கப்பட்ட நோக்கங்கள் மற்றும் நீண்டகாலமாக புதைந்திருந்த ரகசியங்கள் மெல்ல வெளிப்படுகின்ற ஒரு பதற்றமான விசாரணையை மையமாகக் கொண்ட இப்படம், இறுதி வரை பார்வையாளர்களை ஈர்க்கும் வகையில் நகர்கிறது.


சந்தேகமும் பதற்றமும் நிறைந்த கிராமப்புற பின்னணியில் அமைந்துள்ள கொலை சேவல், ஒரு மர்மமான கொலை சம்பவம் முழு சமூகத்தையும் அதிர்ச்சிக்குள்ளாக்குவதைப் பின்தொடர்கிறது. விசாரணை முன்னேறும் போது, ஒவ்வொரு கதாபாத்திரமும் சந்தேக நபராக மாற, உடைந்து போகும் உறவுகள், தனிப்பட்ட பகைகள் மற்றும் அன்றாட வாழ்க்கையின் பின்னால் மறைந்திருக்கும் அதிர்ச்சிகரமான உண்மைகள் வெளிச்சத்துக்கு வருகின்றன.


இந்தப் படத்தில் இடம்பெறும் திறமையான நட்சத்திரக் குழு, கதைக்கு உண்மைத் தன்மையும் உணர்ச்சி ஆழமும் சேர்க்கும் வலுவான நடிப்பை வழங்கியுள்ளது. யதார்த்தமான அணுகுமுறை, சுவாரஸ்யமான திரைக்கதை மற்றும் வலுவான உள்ளூர் மண்வாசனையுடன், கொலை சேவல் நாட்டுப்புற கலாசாரம் மற்றும் உணர்வுகளை மையமாகக் கொண்ட சஸ்பென்ஸ் நாடகங்களை விரும்பும் பார்வையாளர்களிடம் நல்ல வரவேற்பைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.


OTT வெளியீட்டை குறித்து பேசிய படக்குழு, “இந்தப் படத்தை மேலும் பரந்த பார்வையாளர்கள் ZEE5 மூலம் கண்டறிந்து, தங்கள் வீடுகளிலிருந்தபடியே அதன் பல அடுக்குகளைக் கொண்ட கதை சொல்லலும் நுனிக்கூர்மையான சஸ்பென்ஸையும் அனுபவிப்பார்கள் என்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்” என்று தெரிவித்துள்ளது.


கொலை சேவல் மூலம், தமிழ் ZEE5 தனது பிராந்திய உள்ளடக்கத் தொகுப்பை மேலும் வலுப்படுத்தி, உண்மையான கதை சொல்லலை கொண்டாடும் அதே நேரத்தில் புதிய மற்றும் சுவாரஸ்யமான கதைகளை நாடும் பார்வையாளர்களின் எதிர்பார்ப்புகளையும் பூர்த்தி செய்து வருகிறது.


கொலை சேவல் தற்போது ZEE5 தளத்தில் மட்டுமே ஸ்ட்ரீமிங் ஆகி வருகிறது.


ZEE5 பற்றி:


ZEE5 என்பது இந்தியாவின் மிகப்பெரிய உள்நாட்டு வீடியோ ஸ்ட்ரீமிங் தளமாகவும், கோடிக்கணக்கான பொழுதுபோக்கு ரசிகர்களுக்கான பல்மொழி கதை சொல்லியாகவும் திகழ்கிறது. உலகளாவிய உள்ளடக்க முன்னணி நிறுவனமான ZEE Entertainment Enterprises Limited நிறுவனத்தின் கீழ் செயல்படும் ZEE5, வீடியோ ஆன் டிமாண்ட் தளங்களில் முன்னணி தேர்வாக உள்ளது. ஆயிரக்கணக்கான திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், ஒரிஜினல் உள்ளடக்கங்கள், இசை வீடியோக்கள் மற்றும் 1.35 லட்சம் மணிநேரத்திற்கும் அதிகமான ஆன் டிமாண்ட் உள்ளடக்கங்களை பல இந்திய மொழிகளில் வழங்கும் விரிவான மற்றும் பல்வகை நூலகத்தை இது கொண்டுள்ளது.

ஆடம்பரத்தை தவிர்த்து, தொழிலாளர்களை காக்கவும் - கமல்ஹாசன் அறிக்கை*

ஆடம்பரத்தை தவிர்த்து, தொழிலாளர்களை காக்கவும் - கமல்ஹாசன் அறிக்கை*



கமல்ஹாசன் அறிக்கையின் சாராம்சம்:


என் அன்புக்குரிய திரைத்துறை உறுப்பினர்களே,


மேற்கு ஆசியாவில் நீடித்து வரும் போரினால் உலகம் முழுக்க நெருக்கடி நிலைமை ஏற்பட்டுள்ளது. எரிசக்தி, வணிகம், போக்குவரத்து, ஏற்றுமதி இறக்குமதி ஆகியவற்றின் மீது அழுத்தம் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இதன் தாக்கத்தை இந்தியாவும் எதிர்கொண்டு வருகிறது.


அதிகரித்து வரும் தயாரிப்புச் செலவுகள், நிச்சயமற்ற வருமானம் என இந்தியத் திரைப்படத்துறை ஏற்கனவே தத்தளித்துக்கொண்டிருக்கையில் இப்படியொரு சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. பொருளாதார மந்த நிலையும், பண வீக்கமும், வேலை இழப்புகளும் உருவாக்கும் அழுத்தங்கள் காரணமாக வரவிருக்கும் மாதங்களில் மக்கள் பொழுதுபோக்குக்காகச் செலவிடும் விதங்களும் மாறக்கூடும்.


இந்தச் சுமை தயாரிப்பாளர்கள், திரையரங்குகள், வினியோகஸ்தர்கள், பைனான்சியர்கள், திரைக்கலைஞர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள், தொழிலாளர்கள் என ஒட்டுமொத்தத் திரையுலகின் மீது விழும்.


சினிமா தொடர்ந்து வளர வேண்டுமானால், செலவழிக்கப்படும் ஒவ்வொரு ரூபாயும் திரைப்படத்திற்கு முறையாகப் பயன்படுத்தப்படுவதை நாம் உறுதி செய்ய வேண்டும்; வெறும் பிரம்மாண்டமான தோற்றத்துக்காக மட்டும் அது இருக்கக்கூடாது.


சினிமா பொருளாதாரத்தில் செய்யப்படும் எந்தவொரு சீர்திருத்தமும் தொழிலாளர்களின் ஊதியம், பாதுகாப்பு, கண்ணியம், உணவு, போக்குவரத்து, தங்குமிடம், மனிதாபிமானமிக்க பணிச் சூழல் ஆகியவற்றைப் பாதிக்கும் வகையில் அமையவே கூடாது. கடினமாக உழைப்பவர்களின் மேல் கூடுதல் சுமை விழுந்து விடக்கூடாது.


நாம் செய்ய வேண்டிய உண்மையான சீர்திருத்தங்கள் வேறு இடங்களில் உள்ளது. மோசமான திட்டமிடல், தவிர்க்க சாத்தியமுள்ள வீணடிப்புகள், ஆரவாரமான ஆடம்பரங்கள், தேவையற்ற வெளிநாட்டுப் பயணங்கள், தயாரிப்புத் தாமதங்கள் மற்றும் செலவு செய்வதற்கும் அதன் நோக்கத்திற்கும் இடையே அதிகரித்து வரும் இடைவெளி ஆகியவற்றில் தான் சீர்திருத்தங்கள் தேவை.


ஒவ்வொரு காதல் கதையும் பாரிஸில் தான் மலர வேண்டுமா? ஒவ்வொரு தேனிலவும் சுவிட்சர்லாந்தில் தான் முடிய வேண்டுமா? அதிர்ஷ்டவசமாக, காதலுக்கு அந்நியச் செலாவணி தேவையில்லை. இந்திய சினிமாவும், இந்தியர்களும் தம்மீதும் நமது அழகான நாட்டின் மீதும் இன்னும் சற்றே கூடுதல் நம்பிக்கை வைக்க தகுதியானவர்கள்.


இந்தியத் திரைப்படத்துறை முழுவதும் உள்ள சிந்தனையாளர்கள் ஒன்றிணைவதற்கான சரியான தருணம் இதுவென நான் நம்புகிறேன். வரவிருக்கும் பொருளாதாரச் சவால்களை நாம் எவ்வாறு கூட்டு முயற்சியுடன் எதிர்கொள்வது என்பது குறித்த ஒரு விரிவான விவாதத்திற்காக தயாரிப்பாளர்கள், நடிகர்கள், இயக்குநர்கள், தொழிற்சங்கங்கள், ஸ்டூடியோக்கள், திரையரங்கு உரிமையாளர்கள், விநியோகஸ்தர்கள், OTT தளங்கள் மற்றும் கூட்டமைப்புகளுக்கு இடையிலான ஒரு மனம் திறந்த உரையாடலுக்கு நான் அழைப்பு விடுக்கிறேன்.


திறமையான திரைப்படத் தயாரிப்புக்கான நடைமுறைகள் மற்றும் நிலையான செயல்பாட்டு முறைகளை நாம் இணைந்து உருவாக்க வேண்டும். கவனமான படப்பிடிப்பு, நேர்த்தியான கால அட்டவணைகள், ஆடம்பரம் மற்றும் பரிவாரங்களுக்கான செலவுகளைக் குறைத்தல், பொருத்தமான உள்ளூர் மாற்றுகள் இருக்கும்போது தவிர்க்கக்கூடிய வெளிநாட்டுப் பயணங்களைக் கட்டுப்படுத்துதல், படப்பிடிப்புத் தளங்கள் மற்றும் ஸ்டுடியோக்களில் ஆற்றலைச் (energy) சேமித்தல் அத்துடன் செட் கட்டுமானங்களின் பயன்படுத்திய பொருட்களை மறுபயன்பாடு செய்வதை ஊக்குவித்தல் போன்றவற்றில் கவனம் செலுத்தப்பட வேண்டும்.


ஆடம்பரமாகச் செய்யப்படுவதுதான் பிரமாண்டம் என தவறாகப் புரிந்து கொள்ளப்படுகிறது. ஆனால் நமது மிகச்சிறந்த திரைப்படங்கள் ஆடம்பரத்தால் ஆனவை அல்ல. மாறாக தெளிவான திட்டமிடல், நேர்த்தியான செயலாக்கம் மற்றும் உறுதியான நம்பிக்கையுடனே அவை உருவாக்கப்பட்டன.


உலக அளவில் நிச்சயமற்ற சூழ்நிலை நிலவும் காலத்தில் ஒவ்வொரு துறையும் தொலைநோக்குப் பார்வையுடனும் கட்டுப்பாட்டுடனும் செயல்பட வேண்டும் என்பதை, பொறுப்பான நுகர்வு மற்றும் கூட்டு ஒழுக்கத்திற்கான தேசிய அளவிலான அழைப்பு நமக்கு சரியான நேரத்தில் நினைவூட்டுகிறது. இந்தியத் திரைப்படத்துறையும் இந்தச் சூழலுக்கு ஏற்ப தன் பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும்.


தனிப்பட்ட நலனை விட தேசிய நலனுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டிய தருணம் இது. நமது சினிமாத் துறை ஒவ்வொரு நாளும் கோடிக்கணக்கான மக்களைச் சென்றடைகிறது; கலாச்சாரத்தை வடிவமைப்பதிலும், சிந்தனையைத் தூண்டுவதிலும் பெரும் பங்களிப்பாற்றுகிறது. சினிமா என்பது வெறும் பொழுதுபோக்கையும் தாண்டிய பொறுப்புகளைக் கொண்டுள்ளது.


இந்தத் துறையிலிருந்து அதிகம் பெற்றுக் கொண்டவர்கள் தான் முதலில் முன்மாதிரியாகத் திகழ வேண்டும். இன்று நாம் சினிமாவின் பொருளாதாரத்தைப் பாதுகாத்தால், நாளை சினிமாவின் எதிர்காலத்தைப் பாதுகாக்க முடியும்.


மரியாதையுடனும் பொறுப்புணர்வுடனும்,


கமல் ஹாசன்.

Hombale Films Announces Its First-Ever Overseas Distribution Venture with PEDDI

 *மெகா ஸ்டார் ராம்சரணின் “பெத்தி” படம் மூலம் வெளிநாட்டு விநியோகத்தில் களமிறங்கும் ஹொம்பாலே ஃபிலிம்ஸ்!*



இந்தியாவின் மிகவும் பிரபலமான தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ஹொம்பாலே ஃபிலிம்ஸ் (Hombale Films) தனது முதல் வெளிநாட்டு விநியோக முயற்சியாக “பெத்தி” திரைப்படத்தை அறிவித்துள்ளது. சமீபத்தில் வெளிநாட்டு விநியோகத் துறையில் விரிவாக்கம் செய்வதாக அறிவித்திருந்த ஹொம்பாலே ஃபிலிம்ஸ், மெகா பவர் ஸ்டார் ராம் சரண் நடிக்கும் “பெத்தி” திரைப்படத்தின் மூலம் தனது சர்வதேச விநியோக பயணத்தை தொடங்குகிறது.


கேஜிஎஃப், காந்தாரா, சலார் போன்ற மாபெரும் வெற்றி திரைப்படங்கள் மூலம் இந்திய சினிமாவின் அளவுகோலை மாற்றிய ஹொம்பாலே ஃபிலிம்ஸ், தற்போது 2026 ஆம் ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும் பான்-இந்திய திரைப்படங்களில் ஒன்றான “பெத்தி” மூலம் சர்வதேச விநியோகத்தில் முக்கியமான முன்னேற்றத்தை எடுத்துள்ளது.


பல ஆண்டுகளாக, மண் மணம் சார்ந்த கதையையும் பிரம்மாண்டமான திரையரங்கு அனுபவத்தையும் இணைத்து சினிமா ரசிகர்களுக்கு விருந்தளித்து வரும் ஹொம்பாலே ஃபிலிம்ஸ், இந்தியாவைத் தாண்டியும் உலகளாவிய ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளது.


“பெத்தி” திரைப்படத்தின் மூலம், ஹொம்பாலே ஃபிலிம்ஸ் தனது சர்வதேச தடத்தை நேரடியாக வலுப்படுத்துகிறது. இது அந்த நிறுவனத்தின் முதல் அதிகாரப்பூர்வ வெளிநாட்டு விநியோக முயற்சியாக கருதப்படுகிறது. இந்த அறிவிப்பு திரைப்படத்தின் உலகளாவிய வெளியீட்டிற்கான எதிர்பார்ப்பை மேலும் உயர்த்தியுள்ளது.


புகழ்பெற்ற இயக்குநர் புச்சி பாபு சனா இயக்கும் “பெத்தி” திரைப்படம், அதன் அதிரடியான ஆக்ஷன் பின்னணி, சக்திவாய்ந்த கதைக்களம் மற்றும் ராம் சரணின் தீவிரமான உருமாற்றத்தால் ஏற்கனவே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. மேலும், ஆஸ்கர் விருது பெற்ற இசையமைப்பாளர் A. R. ரஹ்மான் இசையமைப்பது இந்த படத்துக்கு கூடுதல் பலத்தை வழங்குகியுள்ளது.


ஹொம்பாலே ஃபிலிம்ஸ் “பெத்தி” படத்தை விநியோகம் செய்வது, ரசிகர்கள் மற்றும் திரை வர்த்தக வட்டாரங்களில் மிகப்பெரிய உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. முக்கிய சர்வதேச பகுதிகளில் மிகப்பெரிய அளவில் வெளிநாட்டு வெளியீடு நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.


“பெத்தி” திரைப்படம் ஜூன் 4 ஆம் தேதி உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக திரையரங்குகளில் வெளியாக உள்ளது.


*Hombale Films Announces Its First-Ever Overseas Distribution Venture with PEDDI*


One of India’s most celebrated production house, Recently, Hombale Films had announced their expansion into the overseas distribution space, and PEDDI becomes the prestigious banner’s first international distribution venture, starring Mega Powerstar Ram Charan.


After redefining the scale of Indian cinema with blockbusters like KGF, Kantara, and Salaar, Hombale Films has now taken a significant step forward by venturing into international distribution beginning with one of the most anticipated pan-Indian films of 2026, PEDDI.


Over the years, Hombale Films has built a strong reputation for delivering cinematic spectacles that combine rooted storytelling with massive theatrical appeal. Their films have consistently crossed language and regional barriers, creating a loyal audience base not just in India, but across global markets.


With PEDDI, Hombale Films is set to directly strengthen its international footprint, marking this as the banner’s first official overseas distribution acquisition. The move is already being seen as a major boost for the film’s worldwide release prospects.


Directed by acclaimed filmmaker Buchi Babu Sana, PEDDI has generated tremendous buzz for its raw action-packed backdrop, powerful visuals, and Ram Charan’s intense transformation. Adding further weight to the project is music by Oscar-winning composer A. R. Rahman.


The association of Hombale Films with PEDDI has significantly amplified excitement in trade and fan circles, with expectations of a massive overseas rollout across key international territories.


PEDDI is slated for a grand worldwide theatrical release on June 4th

மீரா கதிரவனின் 'ஹபீபி' திரைப்படத்திற்கு 'யூ' சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது!*

 *திரையரங்குகளில் குடும்பங்கள் பார்த்து ரசிக்க இருக்கும் மீரா கதிரவனின் 'ஹபீபி' திரைப்படத்திற்கு 'யூ' சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது!*



நல்ல கதையம்சத்துடன் கூடிய எண்டர்டெயின்மெண்ட் படங்களை மகிழ்வோடும் கொண்டாட்டத்துடனும் குடும்ப பார்வையாளர்கள் வரவேற்பார்கள். மனித உறவுகளை அடிப்படையாகக் கொண்ட உணர்வுப்பூர்வமான கதைகள் தலைமுறைகள் தாண்டியும் ஸ்பெஷலான பிணைப்பை உருவாக்கும். அப்படியான நல்ல சினிமா அனுபவத்தை தர இருக்கும் படம்தான் 'ஹபீபி'. 


மண் சார்ந்த நல்ல கதையம்சம் கொண்ட உணர்வுப்பூர்வமான இந்தப் படத்தை மீரா கதிரவன் இயக்கியுள்ளார். இப்படம் தற்போது சென்சார் பணிகளை வெற்றிகரமாக நிறைவு செய்து, சென்சார் வாரியத்தினரிடமிருந்து 'யூ’ சான்றிதழைப் பெற்றுள்ளது. மேலும், நல்லுணர்வுகளும் நேர்மறை மதிப்புகளும் நிறைந்த குடும்பத்துடன் பார்க்கக்கூடிய தரமான படைப்பாக இப்படத்தை உருவாக்கியதற்காக படக்குழுவினரை அதிகாரிகள் பாராட்டியுள்ளனர்.


தரமான படங்களை தேர்ந்தெடுத்து ரசிகர்களிடம் கொண்டுபோய் சேர்க்கும் ரோமியோ பிக்சர்ஸ் ராகுல், உலகம் முழுவதும் ‘ஹபீபி’ திரைப்படத்தை வெளியிட முன்வந்துள்ளது வணிக வட்டாரங்களிலும் ரசிகர்களிடையிலும் இந்தப் படத்திற்கான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. 


புதிய திறமையாளர்களுடன் நடிகர் கஸ்தூரி ராஜா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இந்தப் படத்திற்கு, இசையமைப்பாளர் சாம் சி.எஸ். உணர்வுகளை ஆழமாகத் தொட்டுச் செல்லும் இசையை கொடுத்துள்ளார். குறிப்பாக, 'வல்லோனே...' பாடலுக்காக மறைந்த புகழ்பெற்ற பாடகர் நாகூர் இ.எம். ஹனிபாவின் குரலை செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் மூலம் மீண்டும் உருவாக்கியிருப்பது கவனம் ஈர்த்தது.


இப்படத்திற்கான நேர்மறையான எதிர்பார்ப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், தயாரிப்பாளர்கள் விரைவில் அதிகாரப்பூர்வ வெளியீட்டு தேதியை அறிவிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.