-

Loading latest news...

நாகர்கோவிலில் சமூக நலத்திட்ட உதவிகளை வழங்கினார் சௌந்தர்யா ரஜினிகாந்த்*

 *நாகர்கோவிலில் சமூக நலத்திட்ட உதவிகளை வழங்கினார் சௌந்தர்யா ரஜினிகாந்த்*



நாகர்கோவிலில் உள்ள ஆனந்தா திருமண மண்டபத்தில் மே 15-ஆம் தேதி மாற்றுத்திறனாளிகள் மற்றும் பெண்களுக்கான நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. Apex Laboratories நிறுவனத்தின் சமூகப் பொறுப்புணர்வுத் திட்டத்தின் (CSR) கீழ் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, பிரபல இயக்குநரும் தயாரிப்பாளருமான சௌந்தர்யா ரஜினிகாந்த் தலைமை வகித்தார்.


நாகர்கோவில் ரவுண்ட் டேபிள் 176 (Nagercoil Round Table 176) மற்றும் நாகர்கோவில் லேடீஸ் சர்க்கிள் 196 (Nagercoil Ladies Circle 196) ஆகிய அமைப்புகள் இணைந்து இந்நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனர். இதில் சிறப்பு விருந்தினராகத் தயாரிப்பாளர் மகேஷ் ராஜ் பசிலியன் (Magesh Raj Pasilian) கலந்துகொண்டார்.


வழங்கப்பட்ட நலத்திட்டங்கள்:


* செயற்கைக் கால்கள்: 'ஸ்ரீ பாலாஜி ஆர்த்தோடிக்ஸ்' (Sree Balaji Orthotics) நிறுவனம் தயாரித்த 27 செயற்கைக் கால்கள் மாற்றுத்திறனாளிகளுக்கு இலவசமாக வழங்கப்பட்டன.


* மின்சார ஆட்டோக்கள்: பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில், 5 பெண்களுக்கு மின்சார ஆட்டோக்கள் (E-Autos) வழங்கப்பட்டன.


திட்டத்தின் நோக்கம்:


சுமார் ரூ. 30 லட்சம் மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட்ட இத்திட்டம், சமூக நலன் மற்றும் பெண்களின் பொருளாதார முன்னேற்றத்தை முதன்மை நோக்கமாகக் கொண்டு நடத்தப்பட்டது. நிகழ்ச்சியில் சௌந்தர்யா ரஜினிகாந்த் பயனாளிகளுக்கு நேரில் நலத்திட்ட உதவிகளை வழங்கி வாழ்த்தினார்.

Atlee And Priya Atlee Reveal Baby Daughter’s Name ‘Miyou’ In Heartwarming Post*

 *அட்லீ,ப்ரியா அட்லீ தம்பதியின் மகளுக்கு “மியூ” (Miyou) எனப் பெயர் சூட்டியுள்ளார்கள்....*



தமிழ்த் திரைப்பட இயக்குநர் அட்லீ மற்றும் அவரது மனைவி ப்ரியா அட்லீ தங்களது பெண் குழந்தையின் பெயரை சமூக வலைத்தள பதிவின் மூலம் வெளியிட்டுள்ளனர். தங்களது மகளுக்கு “மியூ” (Miyou) என்று பெயர் வைத்துள்ளதாக அவர்கள் அறிவித்துள்ளனர்.


இந்த அறிவிப்பு, குழந்தையின் சிறிய கையை காட்டும் மென்மையான பாஸ்டல் நிற படத்துடன் பகிரப்பட்டுள்ளது. அதில், “எங்கள் இதயத்தில் மிகப்பெரிய இடத்தைப் பிடித்திருக்கும் ஒரு சிறிய உயிர்” என்ற வாசகமும் இடம்பெற்றிருந்தது.


இந்த பதிவை பகிர்ந்த தம்பதியினர்,“எங்கள் காதலின் கலைக்கு இப்போது ஒரு பெயர் வந்துவிட்டது “மியூ” (Miyou) — அழகு, மென்மை மற்றும் அன்பு. அன்புடன், மீர், ப்ரியா & அட்லீ ”என்று குறிப்பிட்டுள்ளனர்.


மேலும், “மியூ” என்ற பெயர் அழகு, மென்மை மற்றும் அன்பை குறிக்கும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.


இந்த பெயர் வெளியானதும், ரசிகர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் சமூக வலைதளங்களில் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். உணர்ச்சிபூர்வமாகவும் எளிமையாகவும் அமைந்த இந்த அறிவிப்பு இணையத்தில் வேகமாக வைரலாகி வருகிறது.


*Atlee And Priya Atlee Reveal Baby Daughter’s Name ‘Miyou’ In Heartwarming Post*


Filmmaker Atlee and wife Priya Atlee have revealed the name of their baby daughter through a social media post. The couple announced that they have named their newborn “Miyou.”


The announcement was shared alongside a soft pastel visual featuring the baby’s tiny hand. The image also carried the text, “A tiny person with the biggest place in our hearts.”


Sharing the post, the couple wrote, “Our art of love now has a name 💕🧿 MIYOU — beauty, gentleness & love. With luv, MEER, PRIYA & ATLEE 💕🧿.” The post highlighted the meaning behind the name, describing Miyou as symbolising beauty, gentleness and love.


Soon after the reveal, fans and members of the film industry flooded social media with congratulatory wishes for the family. The post quickly gained attention online, with many appreciating the emotional yet minimal style of the announcement.



https://www.instagram.com/reel/DYbXHRVisae/?igsh=ajF5eWRtaXJuaTN1

விசாரணை கைதி’ திரைப்பட இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா

 ’விசாரணை கைதி’ திரைப்பட இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா



தைரியத்தின் அடையாளம் கே.ராஜன் சாரின் முடிவு அதிர்ச்சியளிக்கிறது - ‘விசாரணை கைதி’ பட விழாவில் பேரரசு வருத்தம்


’விசாரணை கைதி’ திரைப்பட விழாவில் கே.ராஜன் சாரின் மறைவு பற்றி பேசி கண்கலங்கிய கூல் சுரேஷ்


தற்போதைய காலக்கட்டத்தில் படம் தயாரிப்பது சாதாரண விசயம் அல்ல - ‘விசாரணை கைதி’ பட விழாவில் சேலம் ஆர்.ஆர் தமிழ்ச்செல்வன் பேச்சு


விஜய் சாரின் வெற்றி, அவரது எண்ணத்திற்கான வெற்றி - ‘விசாரணை கைதி’ பட விழாவில் முதல்வர் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்த மாஸ்டர் மகேந்திரன்



‘விசாரணை’, ‘கைதி’ படங்கள் போல் ‘விசாரணை கைதி’ மிகப்பெரிய வெற்றி பெறும் - இயக்குநர் பேரரசு வாழ்த்து



வி.ஜி சினி புரொடக்‌ஷன்ஸ் சார்பில் என்.வெங்கடேஷன் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் எஸ்.ஆர்.மணிகண்டன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘விசாரணை கைதி’. உன்னி கிருஷ்ணன் நாயகனாக நடித்திருக்கும் இப்படத்தில், நாயகியாக ரித்விக்கா ஸ்ரேயா நடித்திருக்கிறார். இவர்களுடன் முன்னணி கலைஞர்கள் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.


சந்திரன் சாமி ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு நரேஷ் மற்றும் விஜய் இசையமைத்துள்ளனர். ராஜேந்திரன் படத்தொகுப்பு செய்ய, அசால்டு மதுரா சண்டைக்காட்சிகளை வடிவமைத்துள்ளார். பவர் சிவா நடனக் காட்சிகளை வடிவமைக்க, கலைக்குமார் மற்றும் ஜி.சரவணன் பாடல்கள் எழுதியுள்ளனர். மக்கள் தொடர்பாளராக விஜய் கார்த்திக் பணியாற்றுகிறார்.


இப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா மே 18 ஆம் தேதி மாலை, சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது. இதில், சிறப்பு விருந்தினர்களாக இயக்குநர்கள் சங்க பொருளாளர் பேரரசு, நடிகர் மாஸ்டர் மகேந்திரன், சேலம் ஆர்.ஆர் பிரியாணி தமிச்செல்வன், நடிகர் கூல் சுரேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 


நிகழ்ச்சியில் தயாரிப்பாளர் என்.வெங்கடேஷன் விருந்தினர்களை வரவேற்று பேசுகையில், “பத்திரிகை, ஊடகத்தினர் மற்றும் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி. நான் பல கதைகள் கேட்டேன், அதில் மணிகண்டன் சொன்ன கதை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. விசாரணை கைதி என்ற தலைப்பை நான் தான் வைத்தேன். படம் சிறப்பாக வந்திருக்கிறது, நிச்சயம் மக்களுக்கு பிடிக்கும். எங்களை வாழ்த்த வந்த அனைவருக்கும் மீண்டும் ஒரு முறை நன்றி தெரிவித்து, வருக வருக என வரவேற்கிறேன்.” என்றார்.


இசையமைப்பாளர் நரேஷ் பேசுகையில், “அனைவருக்கும் வணக்கம், பின்னணி இசை நன்றாக வந்திருக்கிறது. கூடிய விரைவில் திரையில் வெளியாக உள்ளது, நன்றி.” என்றார்.


ஸ்டண்ட் மாஸ்டர் அசால்டு மதுரா பேசுகையில், “மேடையில் அமர்ந்திருக்கும் ஜாம்பவான்களுக்கு நன்றி. இந்த படத்தில் சண்டைக்காட்சிகள் மிக சவாலாக இருந்தது. காமினேஷன் அதிகம் என்பதால் மிகவும் சிரமப்பட்டு செய்திருக்கிறேன். 25 வருடங்களுக்குப் பிறகு கஷ்ட்டப்பட்டு இந்த இடத்திற்கு வந்திருக்கிறேன். இந்த சண்டைக்காட்சிகளைப் பார்த்த பிறகு நான் யார் ? என்பது உங்களுக்கு தெரியும். பேரரசு சார் படத்தில் ஒரு காட்சியில் நடித்திருக்கிறேன். படம் வெளியானால் என் திறமை உங்களுக்கு தெரியும், இந்த 2026 ஆம் ஆண்டு நான் யார் என்பது தெரியும். சண்டைக்காட்சிகளை பாருங்கள், பிடித்திருந்தால் பாராட்டுங்கள், நன்றி.” என்றார்.


படத்தின் கதாநாயகன் உன்னி கிருஷ்ணன் பேசுகையில், “அனைவருக்கும் மாலை வணக்கம், இந்த விழாவுக்கு வந்திருக்கும் பேரரசு சாருக்கு என் மனமார்ந்த நன்றி. திருப்பாச்சி-யில் இருந்து அவரது படங்களை பார்த்து வியந்திருக்கிறேன், அவர் இந்த விழாவுக்கு வந்ததில் எனக்கு சந்தோஷம். சேலம் ஆர்.ஆர் பிரியாணி தமிழ்ச்செல்வன் சாரை பிடிக்கவே ரொம்ப கஷ்ட்டப்பட்டோம், அவர் இங்கு வந்திருப்பது மகிழ்ச்சி. நடிகர் மாஸ்டர் மகேந்திரனுக்கு என் மனமார்ந்த நன்றி. யுடியூபையே கலக்கிக் கொண்டிருக்கும் கூல் சுரேஷ் வந்த உடன் விழா கலைக்கட்டி விட்டது. நம்ம கொடுக்கும் கண்டெண்டை பேச மாட்டார், வேறு ஒரு கண்டெண்டை பேசுவார். அவர் வந்ததும் மகிழ்ச்சி. படத்தின் ஸ்டண்ட் மாஸ்டர் அசால்டு மதுரை சிறப்பாக பணியாற்றியிருக்கிறார். படத்தின் கேமரா பணியும் சிறப்பாக வந்திருக்கிறது. பின்னணி இசையும் சிறப்பாக வந்திருக்கிறது. பாடலாசிரியர்கள் சரவணன் மற்றும் கலைக்குமார் இருவரும் பாடல்களை சிறப்பாக கொடுத்திருக்கிறார்கள். முக்கியமாக சொல்ல வேண்டும் என்றால், இந்த படத்தின் தயாரிப்பாளர் வெங்கடேஷ் சாருக்கு ரொம்ப நன்றி. அவரை நான் பார்த்ததே இல்லை, இன்று தான் பார்க்கிறேன். போனில் மட்டும் தான் பேசுவார். நல்லா பண்ணுங்க, ஒன்று இரண்டு அதிகமானாலும் பரவாயில்லை முடித்துக் கொடுத்துட்டு போங்க, என்று சொல்வார். நாங்களே பல முறை அழைத்தாலும் படப்பிடிப்பு தளத்திற்கு வர மாட்டார். அதற்கு காரணம் இயக்குநர் மணிகண்டன் சார் தான். அவர் மிக சிறப்பாக பணியாற்றினார். இவரைப் போல் அமைதியான இயக்குநரை நான் பார்த்ததே இல்லை. ஒருவரையும் திட்டாமல் வேலை வாங்குவார். எனக்கு அவர் இந்த வாய்ப்பு கொடுத்ததற்கு நன்றி.” என்றார்.


படத்தின் கதாநாயகி ரித்விக்கா ஸ்ரேயா பேசுகையில், “அனைவருக்கும் வணக்கம், தமிழ் அதிகம் பேச மாட்டேன், தவறு இருந்தால் மன்னிக்கவும். எனக்கு இந்த வாய்ப்பளித்த தயாரிப்பாளர் வெங்கடேஷன் சார் மற்றும் இயக்குநர் மணிகண்டன் சாருக்கு நன்றி. உன்னி சொன்னது போல் தான், இயக்குநர் மணிகண்டன் சார் ரொம்பவே அமைதியானவர், யாரையும் திட்ட மாட்டார். யாராவது தவறு செய்தால் கூட பரவாயில்லை, மறுபடியும் பண்ணுங்க பண்ணுங்க, என்று சொல்லி ஊக்கம் கொடுப்பார். எனக்கு இது இரண்டாவது படம், ஸ்டண்ட் வராது ஆனால் என்னை வைத்து சண்டைக்காட்சிகளை ரசிக்கும்படி படமாக்கியிருக்கிறார்கள். நான் பயத்துடன் தான் கிரவுண்டில் நின்றேன், அப்போது மதுரா சார் வந்தார், பயப்படாதீங்க, உங்களால் முடியும், என்று சொல்லி என்னை ஸ்டண்ட் பண்ண வைத்தார். ஸ்டண்ட் காட்சிகள் மிக சிறப்பாக வந்திருக்கிறது. படம் வெளியாகும் போது திரையரங்குகளுக்கு சென்று பாருங்கள், நிச்சயம் உங்களுக்கு பிடிக்கும். கேமரா மேன் சார் என்னை அழகாக காட்டியிருக்கிறார். என்னுடைய ஸ்கிரீன் பிரசன்ஸ் நன்றாக இருக்கிறது, அவருக்கு நன்றி. உன்னி உள்ளிட்ட என் உடன் நடித்த சக நடிகர்களுக்கு நன்றி. தயாரிப்பு குழுவினருக்கும் நன்றி. பத்திரிகை மற்றும் ஊடகத்தினர் எங்களுக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். என்னை இந்த துறைக்கு வர அனுமதித்த என் பெற்றோர்களுக்கு நன்றி. கடவுளுக்கு நன்றி.” என்றார்.


பாடலாசிரியர் கலைக்குமார் பேசுகையில், “மேடையில் இருக்கும் சான்றோர்களுக்கும், அரங்கத்தில் இருக்கும் சான்றோர்களுக்கும் மாலை வணக்கம். விசாரணை கைதி படத்தில் இரண்டு பாடல்கள் எழுதியிருக்கிறேன். படத்தில் நான்கு பாடல்கள் இருக்கிறது. நான்கும் வெவ்வேறு ரகங்களில் நன்றாக இருக்கும். ஹீரோ, ஹீரோயின் அனைவரும் நன்றாக பண்ணியிருக்காங்க. இயக்குநருக்கு முதல் படமாக இருந்தாலும், முதல் படம் போல் தெரியாமல் மிக சிறப்பாக பண்ணியிருக்கிறார். இந்த படத்தின் தயாரிப்பாளர் பற்றி சொல்ல வேண்டும் என்றால், அவர் பல படங்கள் தயாரிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். காரணம், வேலை கொடுப்பதற்கு முதல் நாளே ஊதியத்தை கொடுத்து விடுவார். பாடகி அனுராதா ஸ்ரீராம் மேடமை ஒப்பந்தம் செய்த போது, அவர்களுக்கான ஊதியத்தை கொடுத்துவிட்டு மறுநாள் தான் பாட வைத்தார்கள். அவர்களைப் போல் அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் இப்படி தான் செய்தார். இவரை போன்ற தயாரிப்பாளர் தான் வெற்றி பெற வேண்டும். இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற வேண்டும், அதற்கு பத்திரிகை மற்றும் ஊடகத்தினர் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும், என்று கேட்டுக்கொள்கிறேன். நன்றி.” என்றார்.


பாடலாசிரியர் ஜி.சரவணன் பேசுகையில், “இந்த அழகான இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்றிருக்கும் படக்குழுவினர், சிறப்பு விருந்தினர்கள், பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி. நான் இதில் இரண்டு பாடல்கள் எழுதியுள்ளேன். பாடல் எழுதும் போதே ரசிகர்கள் மனதில் வரிகள் நிற்க வேண்டும் என்று நினைத்து எழுதியிருக்கிறேன். இரண்டு பாடல்களும் மிகப்பெரிய வெற்றியடையும், ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெறும். இதற்கு உறுதுணையாக இருந்த அனைவருக்கும் நன்றி. ஊடகத்தினர் எங்கள் படத்திற்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன், நன்றி.” என்றார்.


படத்தில் வில்லனாக நடித்திருக்கும் நடிகர் சேகர் பேசுகையில், “விசாரணை கைதி இசை வெளியீட்டு விழாவுக்கு வந்திருக்கும் அனைவருக்கும் நன்றி. நாட்டாமை படம் அப்போ பாத்திருப்பீர்கள், அந்த படத்தில் குட்டி பையனாக திடீரென்று வந்து சாட்சி சொல்லுவார். யார்டா அந்த குட்டி பையன் என்று நாம் ஆச்சரியப்படுவோம், அவர் இங்கே வந்ததற்கு நன்றி. திருப்பாச்சி, சிவகாசி, திருத்தணி அந்த வரிசையில் நான் பிறந்து வளர்ந்த தர்மபுரி என்ற தலைப்பில் படம் எடுத்த பேரரசு சாருக்கு என் இரண்டாவது நன்றி. சேலம் ஆர்.ஆர் பிரியாணி தமிழ்ச்செல்வன் ஐயாவுக்கு நன்றி. யுடியூப் சூப்பர் ஸ்டார் கூல் சுரேஷுக்கு நன்றி. நம்ம தயாரிப்பாளர் வெங்கடேஷன்ன், எங்க இருக்கிறார் என்று தெரியாது. எங்களை சிறப்பாக பார்த்துக்கொண்ட அவருக்கு நன்றி. இயக்குநர் மணிகண்டனுக்கு நன்றி. பாடலாசிரியர், ஹீரோ அனைவருக்கும் நன்றி. அனைவருக்கும் நன்றி.” என்றார்.


படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ராமச்சந்திரன் பேசுகையில், “நான் அரசு ஊழியர், சுகாதாரத்துறையில் இருந்தேன். மதுரையில் பிறந்தேன். நாடகம், விழிப்புணர்வு படங்களில் நடித்திருக்கிறேன். நடிப்பு மீது ஆர்வம் இருந்ததால் சென்னை வந்து பாரதிராஜா சார் பள்ளியில் பயின்று நடிப்பு கற்றுக்கொண்டேன். அங்கே பேரரசு சார், பாக்யராஜ் சார் வருவாங்க. என்னுடைய எழுத்துகளை பார்த்தார்கள், வேற லெவலில் இருக்கே, முன்னாடியே ஏன் வரல, என்று சொல்வார்கள். பிறகு பாராதிராஜா சார் படத்தில் எப்படியாவது நடிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன், அதே போல் நடித்தேன். செல்லாக்காசு என்ற படத்தில் நடித்தேன், ஒரு பக்கம் காலே இல்லாதது போல் நடித்தேன். மகிழ்ச்சியாக இருந்தது. அவர் படத்தில் நடித்துவிட்டு மற்றொரு இயக்குநரை நான் வியந்து பார்த்தேன் என்றால் அது மணிகண்டன் சார் தான். அவர் திருப்தியே ஆக மாட்டாரு. பொறுமையாக சொல்லிக் கொடுக்கிறார், அவர் நினைத்தது போல் வரவில்லை என்றால் விடவே மாட்டார். அவருக்கு நிறைய விசயங்கள் தெரியும், அவரை ஏமாற்றவே முடியாது. சினிமாவை நேசிப்பவர்கள் நிச்சயம் சாதிப்பார்கள், மணிகண்டன் சாரும் நிச்சயம் சாதிப்பார். படத்தில் ஒரு காட்சி இருக்கிறது, அதை பார்ப்பவர்கள் நிச்சயம் கண்கலங்குவார்கள். இயக்குநர்கள் விக்ரமன், ஆர்.சுந்தராஜன், பாக்யராஜ் ஆகியோர் இந்த படத்திற்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார்கள். படம் நிச்சயம் ஜெயிக்கும். நானும் அரசு பணியில் இருந்து திரையுலகத்திற்கு வருகிறேன், உங்களுடைய ஒத்துழைப்பு மற்றும் வாழ்த்துகள் வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன், நன்றி.” என்றார்.


படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் விகடன் பேசுகையில், “எனக்கு நடிக்க தான் தெரியும் பேச தெரியாது. இருந்தாலும், எங்கள் விழாவுக்கு வந்திருக்கும் ஜாம்பவான்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.” என்றார்.


சேலம் ஆர்.ஆர் பிரியாணி தமிழ்ச்செல்வன் பேசுகையில், “எங்கள் சேலம் ஆர்.ஆர் தொழிலாளர்கள் சார்பிலும், என் சார்பிலும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். என்னுடைய ஹீரோ உன்னி கிருஷ்ணன் என் நெருங்கிய நண்பர். மகேந்திரன், பாடலாசிரியர், தயாரிப்பாளர், இயக்குநர் முக்கியமாக இந்த படத்தை தயாரித்த தயாரிப்பாளர்களுக்கு பெரிய நன்றி. இப்போதைய காலக்கட்டத்தில் ஒரு திரைப்படம் தயாரிப்பது சாதாரண விசயம் இல்லை. கே.ராஜன் சார் இன்று நம்மிடம் இல்லை. அவர் சிறிய படங்களுக்காக நிறைய பேசியிருக்கிறார். தயாரிப்பாளர்களுக்காக குரல் கொடுத்திருக்கிறார். சிறிய படங்களுக்கு தியேட்டர் கிடைக்காது, பெரிய படங்களின் வருகையினால் சிறிய படங்கள் மக்களிடம் சேர முடியாமல் போகிறது. இப்படி ஒரு சூழ்நிலையில் இந்த படத்தை தயாரித்த வெங்கடேஷன் சாருக்கு பாராட்டு. ஹீரோ உன்னி கிருஷ்ணன் சிறப்பாக நடிப்பார். அவர் ஏற்கனவே ஒரு படத்தில் நடித்தார். அவருடைய உழைப்புக்காகவே இந்த படம் வெற்றி பெற வேண்டும். 


விஜய் சார் அரசியலுக்கு போய் விட்டார். அஜித் சார் கார் ஓட்ட போய் விட்டார். இப்படி ஒரு நிலையில், நீங்கள் எல்லாம் திரைப்படத்துறையை தூக்கி நிறுத்த வந்திருக்கிறீர்கள், மகிழ்ச்சியாக இருக்கிறது. பேரரசு சார் எவ்வளவு பெரிய வெற்றிகளை கொடுத்திருக்கிறார். இவர்களை பார்க்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த படக்குழுவினர் கடுமையாக உழைத்திருக்கிறார்கள், அவர்களுக்கு கடவுள் ஆசியால் வெற்றி கிடைக்க வேண்டும்.” என்றார்.


நடிகர் மாஸ்டர் மகேந்திரன் பேசுகையில், “உங்களை பார்க்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது. நீங்கள் சிரித்துக் கொண்டு இருப்பது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. நீங்க இந்த படத்தை சப்போர்ட் பண்ண வந்திருப்பது மகிழ்ச்சி. தமிழ் சினிமாவில் மிக சிறந்த இயக்குநர்களில் பேரரசு சார் ஒருவர். மக்களுக்கான படத்தை கொடுத்தவர், இப்போது பல படங்களுக்கு பெரிய ஒத்துழைப்பு கொடுத்து வருகிறார். அவரை எனக்கு மிகவும் பிடிக்கும். தமிழ் எப்படி அழகாக இருக்கிறதோ அதுபோல் தமிழ்ச்செல்வன் சார் அழகு. பசிக்கும் அனைவருக்கும் அவர் சோரு போட்டு இருக்காரு, அவரை பார்த்தது மகிழ்ச்சி. ஹீரோ உன்னி பிரதர், தன்னம்பிக்கையோடு இருக்கிறார். காவல்துறை உடையில் மிக பொறுத்தமாக இருக்கிறார். அவருக்கு மிகப்பெரிய வாழ்த்துகள். அவர் சினிமாவில் ஜெயிக்க வேண்டும். இயக்குநர் மணிகண்டன் சாருக்கு வாழ்த்துகள். இந்த படத்தில் அவர் நினைத்தது கிடைத்ததா என்றால் அது தெரியாது. ஆனால், எதிர்காலத்தில் அவர் பல பெரிய படங்களை எடுக்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன். கேமரா மேனின் பணி மிக சிறப்பாக இருந்தது. சண்டைக்காட்சிகள் சிறப்பு, ஸ்டண்ட் மாஸ்டர் அண்னாவின் வலி எனக்கு புரியுது, அவரை சினிமா கைவிடாது. தயாரிப்பாளரிடம் பேசிக்கொண்டு இருந்த போது, தம்பி நாம சேர்ந்து ஒரு படம் பண்ட்றோம் என்று சொன்னார், மகிழ்ச்சியாக இருந்தது. அவர் நிச்சயம் ஜெயிக்க வேண்டும். இன்றைய நம்முடைய முதல்வர் பல தயாரிப்பாளர்களை ஜெயிக்க வைத்தவர், எனவே நீங்களும் இந்த சினிமாவில் வெற்றி பெறுவீர்கள்.


திரைத்துறைக்கு ராஜ்மோகன் அண்ணா வந்திருக்கிறார். அவருக்கு என்ன அனுபவம் என்று சொல்கிறார்கள், ஆனால் அவருக்கு நிறைய அனுபவம் உண்டு. சினிமாவுக்கு வருவதற்கு முன்பாகவே அவர் பலரிடம் பேசியிருக்கிறார். பலதரப்பட்ட மக்களை சந்தித்து அவர்களுடன் உரையாடியிருக்கிறார். கஷ்ட்டப்படுபவர்களிடம், எளியவர்களிடம் அதிகம் பழகியிருக்கிறார். அவர் இந்த பொறுப்புக்கு வந்தது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. அவருக்கு என் வாழ்த்துகள். நம்ம சிஎம், நான் பொதுவாக எந்த தேர்தலையும் பெரிதாக பார்த்ததில்லை. ஆனால், இந்த தேர்தலில் அதிகம் கவனம் செலுத்தினேன், அவருக்கு என்ன நடக்கிறது, அவர் என்ன செய்கிறார் என்று பார்த்தேன். இந்த வெற்றி அவருக்கான வெற்றி, அவரது எண்ணத்திற்கான வெற்றி. அவருக்கு என் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.


படத்தில் நடித்தவர்கள் அனைவரும் தன்னம்பிக்கையோடு பேசினார்கள், அவர்களுக்கு என் வாழ்த்துகள். கூல் சுரேஷ் அண்ணாவை எனக்கு ரொம்ப பிடிக்கும். அவர் தைரியமாக பேசுவார், சினிமாவை அதிகம் நேசிப்பார். சின்ன படமோ, பெரிய படமோ அனைத்து படங்களையும் புரோமோட் பண்ணுவார், அவருக்கு வாழ்த்துகள். பி.ஆர்.ஓ கார்த்தி அழைத்து தான் இங்கே வந்தேன், சிறந்த மனிதர், அனைத்து படங்களும் ஓட வேண்டும் என்று நினைப்பவர். இங்கே வந்தது மகிழ்ச்சி, நன்றி.” என்றார்.


நடிகர் கூல் சுரேஷ் பேசுகையில், “விசாரணை கைதி பாடல்கள் மற்றும் டிரைலரை பார்க்கும் போது அனைவரும் மகிழ்ச்சியடைந்தார்கள். அதிகமாக மகேந்திரன் தான் சந்தோஷப்பட்டார். படத்தின் ஹீரோ உன்னி கிருஷ்ணன், டூயட் , ஆக்‌ஷன் பண்ணதை விட அவரது தாடி தான் எனக்கு பிடித்திருக்கிறது. அவருக்கு என் வாழ்த்துகள். ஒவ்வொரு ஹீரோவிடம் ஒரு ஸ்டைல் இருக்கும், அதுபோல் உன்னியிடம் தாடி ஒரு ஸ்டைல். படத்தின் தயாரிப்பாளர் வெங்கடேஷ் சாருக்கு வாழ்த்துகள். அவரை பார்க்கும் போதே தெரிகிறது கல்லம் கபடம் இல்லாதவர் என்று. இயக்குநர் மணிகண்டன் சாருக்கு வாழ்த்துகள். அமைதியாக இருக்கிறார் அதிலே தெரிகிறது, அவரது படம் பேசும் என்று. நாயகி ரித்விக்கா ஸ்ரேயாவுக்கு வாழ்த்துகள். வில்லனாக நடித்தவருக்கு வாழ்த்துகள். இசையமைப்பாளர், எடிட்டர், ஸ்டண்ட் மாஸ்டர் அனைவருக்கும் வாழ்த்துகள். 


ராஜன் சார் உங்களுக்காக, வீரமான மனிதர். அவருக்கு என்ன கஷ்ட்டம். அவரது மகன் வதந்திகளை கிளப்பாதீங்க என்று சொன்னார். இந்த ஒவ்வொரு மேடையிலும் தயாரிப்பாளர்களுக்கு நீங்க தான் குரல் கொடுப்பீங்க. அவர் அனைவரையும் திட்டுவார் என்று சொல்வார்கள். அது திட்டுவது அல்ல ஆசிரியர் இடத்தில் இருந்து அறிவுரை சொல்வார். சிறிய தயாரிப்பாளர்களை யாரும் ஏமாற்றி விட கூடாது என்று குரல் கொடுப்பார். 85 வயதில் நான் இருப்பேனா என்று தெரியவில்லை, ஆனால் அவர் அந்த வயதிலும் கம்பீரமாக இருப்பார். வெள்ளை சட்டை அவரது அடையாளம், அவரது உடலும் வெள்ளை. உங்களுக்கு அப்படி என்ன சார் பிரச்சனை. உங்களது வலதுகரமாக பேரரசு சார், உதயகுமார் சார் இருந்தார்கள், அவர்களிடமாவது சொல்லி இருக்கலாம். வயது ஆக ஆக அவர்களது மனநிலை எப்படி மாறும் என்பது எனக்கு தெரியும். காசு பணம் இருந்தாலும், உடன் யாரும் இல்லை என்றால் அவர்களது நிலை என்னவாகும் என்று தெரியும். இன்று விஜய் சார் சிஎம் ஆகியிருக்கிறார். அவரது அம்மா, அப்பா ஆகியோரை விட கே.ராஜன் சார் தான் அவர் வெற்றி பெற வேண்டும் என்று ஆசைப்பட்டார். என்னிடம் பல முறை சொல்லியிருக்கிறார். தயாரிப்பாளர்களின் வலியை உணர்ந்து அடிக்கடி சொல்வார், என்னுடைய தயாரிப்பாளர்களின் நிலை மாற, மாற்று அரசியல் வந்திருக்கிறது. அதை பார்ப்பதற்குள் இப்படி அவசப்பட்டுடீங்களே. அவரால் தான் நான் பிரபலமானேன், பல இடங்களில் எனக்கு புத்திமதி சொல்லியிருக்கிறார். அதன் பிறகு தான் நான் வாலை சுருட்டிக் கொண்டு, நேர்மையாக பயணித்து வருகிறேன். 


ரவி மோகன் சாரின் கதறலை பார்த்தேன். எல்லோருடைய குடும்பத்திலும் பிரச்சனை இருக்கும், யார் குடும்பத்தில் தான் பிரச்சனை இல்லை. இதேபோல் பிரஷாந்த் சார், ரஜினிக்குப் பிறகு அவர் தான். ஆனால், குடும்ப பிரச்சனையால் அவர் அந்த இடத்தை கைவிட்டுவிட்டார். எனவே ரவி மோகன் சார், பெரியவர்கள் மூலம் பேசி பிரச்சனையை தீர்த்துக்கொள்ளுங்கள். அவருக்கு கவுன்சிலிங் கொடுத்து பிரச்சனையை தீர்க்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். அதேபோல் இப்போது எந்த வீடியோவை பார்த்தாலும் டாஸ்மாக் பற்றி தான் வருகிறது. பத்து ரூபாய் அதிகமாக கேட்டு விட்டால், எங்கள் விஜய் அண்ணா வாங்க கூடாதுனு சொல்றாரு, நீங்க ஏன் வாங்குறீங்க என்று கேட்டு வீடியோ எடுக்கிறார்கள். அதற்காகவே பலர் டாஸ்மாக் சென்று வீடியோ எடுத்து போடுகிறார்கள். குழந்தைகள் அந்த வீடியோவை பார்த்தால் என்னவாகும். சுய ஒழுக்கம் வேண்டாமா. முன்பு திமுக மீது குற்றம் சொன்னீர்கள், இப்போது யார் மீது சொல்வீர்கள். மது குடிப்பது கெட்டப் பழக்கம் என்று தெரிந்தும், அதை ஏன் செய்கிறீர்கள். தயவு செய்து டாஸ்மாக் பற்றி வீடியோ போடுவதை நிறுத்துங்கள். நல்லதே நடக்கும் வெற்றி நிச்சயம், நன்றி.” என்றார்.


இயக்குநர் பேரரசு பேசுகையில், “விசாரணை கைதி நல்ல தலைப்பு. இத்தனை நாட்கள் இதை எப்படி விட்டு வைத்தார்கள் என்று தெரியவில்லை. விசாரணை, கைதி என இரண்டு படங்களும் பெரிய வெற்றி பெற்றது. அதுபோல் இந்த ‘விசாரணை கைதி’ படமும் பெரிய வெற்றி பெறும்.


சேலம் ஆர்.ஆர் பிரியாணி தமிழ்ச்செல்வன் நல்ல மனசுக்காரர். சினிமாவை மட்டும் அல்ல சினிமாக்காரர்களையும் அதிகம் நேசிக்க கூடியவர். பாரதிராஜா சாரின் மகன் மனோஜ் இறப்பில் அவர் எந்த அளவுக்கு சினிமாவையும், சினிமாக்காரர்களையும் நேசிக்கிறார் என்பதை நான் உடன் இருந்து பார்த்தேன். அந்த இறப்பில், பத்திரிகையாளர்கள், பொதுமக்கள், காவல்துறையினர் என அனவைருக்கும் தனி ஒருவராக தண்ணீர், டீ, காபி, உணவு என அனைத்தையும் ஏற்பாடு செய்து கடைசி வரை அங்கே இருந்தார். அவருக்கு என் நன்றி. மாஸ்டர் மகேந்திரன் என்று சிறு வயதில் அழைத்தார்கள், வளர்ந்த பிறகும் அப்படி அழைக்க கூடிய வாய்ப்பு அவருக்கு அமைந்தது. மாஸ்டர் படத்தில் பின்னிட்டார். வெற்றியடைவது மட்டும் வெற்றி அல்ல, வெற்றிக்காக தொடர்ந்து போராடுவது தான் வெற்றி. அதற்காக தனி தைரியம் வேண்டும். அந்த தைரியத்துடன் தொடர்ந்து சினிமாவில் பயணிக்கும் மகேந்திரன் நிச்சயம் பெரிய இடத்துக்கு செல்வார். நடிகர் உன்னி கிருஷ்ணன், அடுத்த போராளி. அவரும் எதாவது ஒரு படத்தில் நடித்து, எதாவது பெயர் வாங்கிட மாட்டோமா என்று தொடர்ந்து முயற்சித்துக் கொண்டிருக்கிறார். அவர் நடிக்கும் படங்களில், தயாரிப்பாளர்களுக்கு பக்கபலமாக இருப்பார். எந்த படமாக இருந்தாலும், அதை வெளிக்கொண்டு வருவதற்காக ஒத்துழைப்பார். அசால்டு மதுரா மதுரா என்றாலே அசால்டு தான். நீங்க அசால்டா ஜெயிச்சிடுவீங்க. 2026 சொன்னீங்களே உங்களுக்கும் நிச்சயம் கைகொடுக்கும். கவிஞர்கள் கலைக்குமார், சரவணன் இருவருக்கும் வாழ்த்துகள். படத்தின் தயாரிப்பாளரை பார்க்கும் போது தயாரிப்பாளர் போலவே தெரியல, வாய்ப்பு கேட்டு வந்தவர் போல இருக்கிறார். நான் இப்போது மதிப்பது பெரிய தயாரிப்பாளர்களை அல்ல சிறிய தயாரிப்பாளர்களை தான். காரணம், பெரிய தயாரிப்பாளர்கள் பெரிய பெரிய கலைஞர்களை தான் போடுகிறார்கள். ஆனால், இவரைப்போன்று சிறிய தயாரிப்பாளர்கள் தான் வளரும் கலைஞர்களையும், தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் வாய்ப்பு கொடுக்கிறார்கள். இவர்களை போன்ற சிறு முதலீட்டு தயாரிப்பாளர்களால் தான் சினிமா வாழ்கிறது. இபோதைக்கு இவர்கள் தான் பெரிய தயாரிப்பாளர்கள். இருப்பவர்களுக்கு கொடுக்கிறவர்களை விட, இல்லாதவர்களுக்கு கொடுப்பவர்கள் தான் மனிதர்கள். இயக்குநர் மணிகண்டன் இந்த படத்திற்கும் அவருக்கும் சம்மந்தம் இல்லாதது போல் அமைதியாக இருக்கிறார். நானும் அவரைப் போல் தான் இருப்பேன், என்னை பார்ப்பது போல தான் இருக்கிறது. அவர் தேர்வு செய்த தலைப்பே சிறப்பாக இருக்கிறது. படமும் நிச்சயம் நன்றாக இருக்கும் என்று நம்புகிறேன். அவருக்கு என் வாழ்த்துகள். இந்த படத்தின் பி.ஆர்.ஓ கார்த்திகிற்கு நன்றி. தொகுப்பாளினி, கதாநாயகி காயத்ரிக்கு நன்றி. 


பிரசாத் லேப், இந்த மேடையில் அதிக நேரங்கள் நாங்கள் செலவிட்ட மேடை. அதிகம் நேரம் நான், இன்னும் பலர் ஒருவருடன் நேரம் செலவிட்டோம். பல தருணங்களில் ஒன்றாக பயணித்தோம். எங்க ஹீரோ தயாரிப்பாளர் கே.ராஜன் என்ற இரும்புக்கரங்கள் பல இசைத்தகடுகளை வெளியிட்டு இருக்கிறோம். இப்போ கூட நம்ப முடியவில்லை. யாரோ ஒருவர் என்று சொன்னால் நம்பி விடுவோம். பல வருடங்களுக்கு முன்பு ஜி.வெங்கடேசன் என்ற தயாரிப்பாளர் தற்கொலை செய்துகொண்டார். அதற்கு காரணம் தெரிந்தது, அனுதாபம் பட்டோம். கே.ராஜன் சார், தைரியத்தின் அடையாளம், துணிச்சலின் அடையாளம். அவர் தயாரிப்பாளர், இயக்குநர், நடிகர் என்பதை எல்லாம் தாண்டி சினிமா மீது அக்கறை உள்ள மனிதர். அவருக்கு எப்படி இந்த எண்ணம் வந்தது. 85 வயது, இன்னும் 5 வருடங்கள் கடந்தால் இயற்கையே அழைத்துச் சென்றிருக்கோம். 85 வயதில் ஒருவர் தற்கொலை செய்துகொள்கிறார் என்றால் அது எவ்வளவு பெரிய கொடுமை. அந்த மனசு எவ்வளவு வேதனை பட்டிருக்கோம். திருட்டு விசிடியை ஒழிக்க தனி நபராக அடித்து நொறுக்கினீங்களே அந்த கே.ராஜன் சார் எங்கே சார். சினிமாவை காப்பாற்ற குரல் கொடுத்தீங்களே, இப்படி ஆற்றில் விழுந்துட்டீங்களே. தைரியமானவர்களாக இருப்பவர்களுக்கும் இப்படி ஒரு நிலை என்றால், அங்கேயும் விதி விளையாடுகிறது. அவர் என்னிடம் பல முறை சொன்னது, பலருக்கு கோடி கணக்கில் கடன் கொடுத்து இருக்கிறேன், அதை திரும்ப வாங்க முடியவில்லை என்பது தான். கடன் வாங்கியவர்களிடம் கேட்டால் தருவதில்லை, என்று வருத்தத்தோடு சொல்வார். ஆனால், இது அவரது மரணத்திற்கு காரணமாக இருக்குமா என்றால் அது எனக்கு தெரியவில்லை. அவரது ஆத்மா சாந்தியடைய வேண்டும்.


புதிய தயாரிப்பாளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். புதியவர்கள் தொடர்ந்து படம் தயாரித்தால் தான் திரைப்படத்துறை வாழும். எனவே, சினிமாவை பற்றி தெரியாமல் படம் தயாரிக்க வருபவர்கள், அனுபவம் உள்ள தயாரிப்பாளர்களிடமோ அல்லது தயாரிப்பாளர்கள் சங்கத்தில் அறிவுரை பெற்று படம் தயாரிப்பது நல்லது. விசாரணை கைதி திரைப்படம் வெற்றி பெற வாழ்த்துகிறேன்.” என்றார்.


இறுதியாக இயக்குநர் மணிகண்டன் நன்றி தெரிவித்து பேசுகையில், “பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி நண்பர்களுக்கு நன்றி. பேரரசு சார், தமிழ்ச்செல்வன் சார், மகேந்திரன் சார், கூல் சுரேஷ் சார் அனைவருக்கும் நன்றி. தயாரிப்பாளர் சாருக்கு நன்றி, காலம் முழுவதும் அவருக்கு நன்றி கடன் பட்டிருக்கிறேன். நாயகன் உன்னி கிருஷ்ணன் அவர்களுக்கும் நன்றி.” என்றார்.


******************************************************

ஆக்ஷன் கிங்' அர்ஜுன் நடிக்கும் 'பிளாஸ்ட்' படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு*

ஆக்ஷன் கிங்' அர்ஜுன் நடிக்கும் 'பிளாஸ்ட்' படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு*



ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில், 'ஆக்ஷன் கிங்' அர்ஜுன், அபிராமி, ப்ரீத்தி முகுந்தன் ஆகியோரின் நடிப்பில், அறிமுக இயக்குநர் சுபாஷ் கே. ராஜ் இயக்கத்தில் உருவாகி, வரும் 28ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ள 'பிளாஸ்ட்' திரைப்படத்தினை விளம்பரப்படுத்தும் வகையில் சென்னையில் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது.


'பிளாஸ்ட்' படத்தில் ஜான் கொக்கன், அர்ஜுன் சிதம்பரம், பவன், பாலா ஹாசன், வினோத் சாகர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். அருண் ராதாகிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ரவி பஸ்ரூர் இசையமைத்திருக்கிறார். கலை இயக்கத்தை வீரமணி கணேசன் கவனித்திருக்கிறார். ஃபேமிலி ஆக்ஷன் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஏ ஜி எஸ் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் சார்பில் கல்பாத்தி எஸ். அகோரம், கல்பாத்தி எஸ். கணேஷ், கல்பாத்தி எஸ். சுரேஷ் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். இந்த படத்திற்கு அர்ச்சனா கல்பாத்தி கிரியேட்டிவ் புரொடியூசராகவும், ஐஸ்வர்யா கல்பாத்தி அசோசியேட் கிரியேட்டிவ் புரொடியுசராகவும் பங்காற்றியுள்ளனர்.


இப்படத்தின் டீசர், டிரைலர் ஆகியவை வெளியாகி பெரும் வரவேற்பை பெற்று வரும் நிலையில், படத்தை மேலும் விளம்பரப்படுத்தும் வகையில் சென்னையில் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் படக்குழுவினர் கலந்து கொண்டனர்.



இந்நிகழ்வில் இயக்குநர் சுபாஷ் கே ராஜ் பேசுகையில், ''இது என்னுடைய முதல் மேடை. என் மீது நம்பிக்கை வைத்து திரையுலகில் பணியாற்ற அனுமதித்த பெற்றோர்களுக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் நன்றி. இயக்குநர் பிரதீப் ரங்கநாதனுக்கு என்னுடைய சிறப்பு நன்றி. அவர்தான் என்னுடைய திரையுலக குரு. அவருடைய 'லவ் டுடே' படத்தில் பணியாற்றினேன். அதன் பிறகு.. கதை எழுதி அவரிடம் சொன்ன போது, அவர்தான் ஏஜிஎஸ் நிறுவனத்தில் கதை சொல்வதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தார். ஐஸ்வர்யா கல்பாத்தி- அர்ச்சனா கல்பாத்தி- அதனைத் தொடர்ந்து தயாரிப்பாளர் அகோரம் சாரிடம் கதையை சொன்னேன். கதையை சொல்லி முடித்ததும், இந்த படத்தை நிச்சயமாக தயாரிக்கிறோம் என்றார். அந்தத் தருணம் என்னால் மறக்க முடியாது. இதற்காக ஏஜிஎஸ் நிறுவனத்திற்கு நன்றி.


இந்தப் படத்தை எந்த இடத்திலும் சமரசம் எல்லாம் முழு சுதந்திரத்துடன் உருவாக்கியிருக்கிறேன். இதற்காக மீண்டும் ஒருமுறை ஏஜிஎஸ் நிறுவனத்திற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். என்னுடைய முதல் படத்தில் ஆக்ஷன் கிங் அர்ஜுன் கதாநாயகனாக நடித்திருக்கிறார். இதற்காகவே நான் பெருமிதம் அடைகிறேன். அவருக்கு நன்றி. அபிராமி- ப்ரீத்தி முகுந்தன் உள்ளிட்ட ஒவ்வொரு நட்சத்திரங்களும் இந்த படத்தில் தங்களுடைய முழுமையான ஒத்துழைப்பை வழங்கினர். ஒளிப்பதிவாளர் - இசையமைப்பாளர்- பட தொகுப்பாளர் -சண்டை பயிற்சி இயக்குநர் - என ஒவ்வொருவரும் தங்களுடைய அர்ப்பணிப்புடன் கூடிய உழைப்பை புதுமுக இயக்குநரான எனக்கு வழங்கியதற்கு நன்றி.


'பிளாஸ்ட்' ஆக்ஷன் படம் தான். ஆனால் குடும்பத்துடன் அனைவரும் பார்த்து மகிழும் வகையில் இருக்கும். படத்தை பார்க்கும் போது எல்லா அப்பாக்களும் படத்துடன் தங்களை தொடர்பு படுத்திக் கொள்வார்கள். படத்தை பார்க்கும் ஒவ்வொருவரும் தங்களுடன் படத்தை தொடர்பு படுத்திக் கொள்வார்கள். நம் குடும்பம் என்பதை உணர்வீர்கள். சமூகத்திற்கு தேவையான பல விஷயங்களை சொல்லி இருக்கிறோம். ஆனால் அதனை பிரச்சாரமாக சொல்லாமல் கதையுடன் சுவாரசியமாக சொல்லி இருக்கிறோம். அனைவரும் மே 28ம் தேதி அன்று திரையரங்கத்திற்கு வருகை தந்து இந்த படத்தை பார்த்து ஆதரவு தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்,'' என்றார்.


இசையமைப்பாளர் ரவி பஸ்ரூர் பேசுகையில், ''தமிழ் படங்களில் பணியாற்றுவதற்காக நிறைய கதைகளை கேட்டிருக்கிறேன். ஏதாவது சுவாரசியமான விசயங்கள் இருந்தால்.. அதில் தான் பணியாற்ற வேண்டும் என்று எண்ணிக் கொண்டிருந்தேன். தமிழ் திரை உலகிற்கு வரும் போது முன் தயாரிப்புடன் தான் வருகை தர வேண்டும். ஏனென்றால் தமிழ் சினிமா என்பது கடல் போன்றது. இயக்குநர் சுபாஷ் கதை சொன்னார். அந்த கதையைக் கேட்ட போது இன்ட்ரஸ்டிங்காக இருந்தது. கதையை மிகவும் விரிவாகவும் டீடெய்லாகவும் அதிலும் ஆக்ஷன் காட்சிகள் இப்படித்தான் வரும் என்ற விளக்கத்துடனும் சுபாஷ் கதையை சொன்னார். அதை கேட்டதும் உற்சாகமாகி, இப்படத்தில் பணியாற்ற வேண்டும் என தீர்மானித்தேன்.


புதுமுக இயக்குநர் என்பதால் நானும் ஏதாவது புதிதாக செய்ய வேண்டும் என்பதால் இதற்கு முன் நான் செய்த பணிகளை எல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு, புதிதாக இதில் பல விஷயங்களை முயற்சி செய்து இருக்கிறேன். படமாக்கப்பட்ட காட்சிகளை எனக்கு இயக்குநர் அனுப்பினார். அதை பார்த்தவுடன் இவர் புது முகமாக இருந்தாலும் வேலை வாங்குவதில் தேர்ச்சி பெற்றவர் என்பதை தெரிந்து கொண்டேன். முழு படத்தையும் பார்த்த பிறகு எனக்கு நம்பிக்கை ஏற்பட்டது. அவர் கதையை விட்டு எங்கும் செல்லாமல் அந்தக் கதையை நேர்த்தியாக உருவாக்கியிருக்கிறார். ஒவ்வொரு கலைஞரிடமிருந்து தனக்கு தேவையானதை வாங்கி அற்புதமாக படத்தை உருவாக்கியிருக்கிறார். முதல் படத்திலேயே சுபாஷ் இப்படி கடுமையாக உழைத்து இருப்பதை பார்த்து வியந்தேன். அவர் மீது நம்பிக்கை வைத்து ஒத்துழைப்பை வழங்கிய அனைவருக்கும் நன்றி.


ஒவ்வொருவரிடத்திலும் தனித்திறமை இருக்கும். ஒரு எறும்பிடம் கூட திறமை இருக்கும். அதை நேஷனல் ஜியோகிராபிக் சேனலின் ஒளிப்பதிவாளர் 'ஜூம்' செய்து மக்களுக்கு காண்பித்தால்தான் அதன் திறமை மக்களுக்கு தெரிய வரும். அந்த வகையில் சுபாஷின் திறமையை 'ஜூம்' செய்து பார்த்து வாய்ப்பளித்த ஏஜிஎஸ் நிறுவனத்திற்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.


'கே ஜி எஃப்' படத்திலிருந்து என் மீது அன்பு வைத்து தொடர்ந்து ஆதரவு அளித்து வருகிறீர்கள். அந்த வகையில் புதுமுக இயக்குநர் சுபாஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள 'பிளாஸ்ட்' படத்திற்கும் ஆதரவு தாருங்கள். இந்தப் படத்தை திரையரங்கத்திற்கு வருகை தந்து பாருங்கள். அப்போதுதான் இதன் சிறப்பம்சம் உங்களுக்கு பிடிக்கும். இது தியேட்டரிக்கல் சப்ஜெக்ட். இந்த படத்தில் பல சர்வதேச அளவிலான இசைக் கலைஞர்கள் பங்களிப்பினை வழங்கியுள்ளனர். இது என்னுடைய திரை இசைப் பயணத்தில் சிறந்த படம் என்று சொல்வேன்,'' என்றார்.


நடிகை பிரீத்தி முகுந்தன் பேசுகையில், '' என்னுடைய திரையுலக பயணத்தில் இந்தப் படம் சிறந்த வாய்ப்பாக அமைந்துள்ளது. இது போன்றதொரு கதையை தேர்வு செய்து அதற்கு என்னைப் போன்ற வளரும் கலைஞர்களுக்கு வாய்ப்பை வழங்கி படத்தை தயாரித்த ஏஜிஎஸ் நிறுவனத்திற்கு நன்றி.


நிலா கதாபாத்திரத்திற்கு இவர் பொருத்தமாக இருப்பார் என்று என் மீது நம்பிக்கை வைத்து வாய்ப்பளித்த இயக்குநர் சுபாஷிற்கு நன்றி. பொதுவாக பெண்களுக்கு இதுபோன்ற பவர்ஃபுல்லான ஆக்ஷன் கேரக்டர்கள் எழுதப்படுவதில்லை. அதனால் தான் கதையை சொல்லும் போதே இதில் நடிக்க விரும்பினேன். அதிலும் இது போன்ற கதாபாத்திரங்கள் அரிதாகவே என்னை போன்ற வளரும் கலைஞர்களுக்கு கிடைக்கும். இது போன்றதொரு கதாபாத்திரத்தை எழுதி அதனை காட்சிப்படுத்தி கூடுதல் முக்கியத்துவம் வழங்கியதற்காக இயக்குநருக்கு மீண்டும் ஒருமுறை நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.


அர்ஜுன், அபிராமி ஆகியோருடன் திரையை பகிர்ந்து கொண்ட அனுபவம் மறக்க முடியாதது. இவர்களிடமிருந்து படப்பிடிப்பு தளத்தில் நிறைய விஷயங்களை கற்றுக் கொண்டேன்.


ஆக்ஷன் காட்சிகளில் நடிக்கும் போது பொறுமையாக விளக்கமளித்து என்னிடம் இருந்து ஆக்ஷன் கலந்த நடிப்பை வரவழைத்ததற்காக சண்டை பயிற்சி இயக்குநர் பீனிக்ஸ் பிரபுவுக்கு இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்,'' என்றார்.


நடிகை அபிராமி பேசுகையில், ''இந்த மேடையில் நிற்பதற்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. இந்த ஆண்டில் என்னுடைய நடிப்பில் வெளியாகும் முதல் படம் இது. ஆக்ஷன் கிங் அர்ஜுனுடன் 25 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இணைந்து நடித்திருக்கிறேன். இதுவும் மறக்க முடியாத தருணம். அதனால் அவருக்கு என் நன்றி. எங்கள் இருவரையும் மீண்டும் இணைந்து நடிக்க வைப்பதற்கு ஏன் 25 ஆண்டுகள் ஆனது என்று தெரியவில்லை.


ப்ரீத்தியுடன் இணைந்து பணியாற்றும்போது மகிழ்ச்சியாக இருந்தது. எங்கள் இருவருக்கும் ஒரே வகையான வேவ் லென்த் இருந்தது. அதனால் படப்பிடிப்பு தளத்தில் நாங்கள் இருவரும் உற்சாகமாக இருந்தோம். பொதுவாக பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து கதாபாத்திரங்களும், கதையும் எழுதுவது குறைவு. இந்த படத்தில் எங்கள் இருவருக்கும் கூடுதலாக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது. இதற்காக படக்குழுவினருக்கு நன்றி.


பெண்கள் தலைமை ஏற்று நடத்தும் எந்த நிறுவனமும், நிர்வாகமும் நன்றாக இருக்கும் என்பதற்கு ஏஜிஎஸ் நிறுவனம் சிறந்த சான்று. அர்ச்சனா கல்பாத்தியும், ஐஸ்வர்யா கல்பாத்தியும் ஒவ்வொரு விஷயத்தையும் நேர்த்தியாக கையாள்கிறார்கள். அவர்களுக்கு என் நன்றி.


நான் வாழ்க்கையில் ஒருவரையும் கை நீட்டி அடித்ததில்லை. எனக்கும் வன்முறைக்கும் சம்பந்தமே இல்லை. ஆனால் இந்தப் படத்தில் என்னை வயலன்ட்டாகவும், டெரராகவும் காட்சிப்படுத்தியதற்காக சண்டை பயிற்சி இயக்குநர் பீனிக்ஸ் பிரபுவிற்கு நன்றி. அவருக்கு மட்டுமல்ல அவருடைய குழுவின் பணியாற்றிய அனைத்து சண்டைக் கலைஞர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி.


நான் சினிமாவில் காமெடி- ஹாரர்- ரொமாண்டிக் -என பல ஜானரில் நடித்திருக்கிறேன். ஆனால் முதன் முறையாக ஆக்ஷனில் நடித்திருக்கிறேன். இப்படியும் என்னால் நடிக்க முடியும் என்று என் மீது எனக்கே நம்பிக்கையை வரவழைத்த சண்டை பயிற்சி இயக்குநருக்கும், அவருடைய குழுவினருக்கும் நன்றி.‌


இந்தப் படத்தில் இசை மிக முக்கிய பங்கு வகிக்கிறது .இதற்காக இசையமைப்பாளர் ரவி பஸ்ரூருக்கும் நன்றி.


இயக்குநர் சுபாஷ் எனக்கு தம்பி மாதிரி. இந்தப் படம் வெற்றி பெறும் என்று எனக்குத் தெரியும். அதனால் அவருடைய வெற்றியில் நானும் சிறிய பங்காக இருந்ததற்காக மகிழ்ச்சியடைகிறேன். அவருடைய எழுத்து அழுத்தமாகவும், நேர்த்தியாகவும் இருந்தது . இந்த படத்தில் என்னுடைய கதாபாத்திரத்திற்கு அவருடைய அம்மா தான் இன்ஸ்பிரேஷன். அவருடைய அம்மாவும் கராத்தேவில் பிளாக் பெல்ட் வாங்கியவர். அதனால் இந்த கதாபாத்திரத்தை ஏற்று நடிப்பது எனக்கு தான் பெருமை. அதை வழங்கியதற்காக இயக்குநருக்கு மீண்டும் ஒரு முறை நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.


இந்தப் படம் தியேட்டரிக்கல் எக்ஸ்பீரியன்ஸ்க்கான எல்லா எலிமெண்ட்ஸும் கொண்ட படம். சின்ன திரைகளில் பார்த்தால் இதன் முழுமையான அனுபவம் உங்களுக்கு கிடைக்காது. மியூசிக் -ஆக்ஷன்- கேமரா- என எல்லா விஷயங்களையும் பெரிய திரையில் பார்த்து அனுபவியுங்கள். எல்லோருக்கும் பிடித்த படமாக இது இருக்கும்,'' என்றார்.


கிரியேட்டிவ் புரொடியுசர் அர்ச்சனா கல்பாத்தி பேசுகையில், ''ஏஜிஎஸ் நிறுவனத்தின் 20வது ஆண்டு இது. நீங்கள் அளித்து வரும் தொடர் ஆதரவின் காரணமாக நாங்கள் ஏராளமான திறமைமிக்க புது முகங்களை அறிமுகப்படுத்துகிறோம். எங்களுக்கு இத்தகைய தைரியத்தை வழங்கியதற்காக உங்கள் அனைவருக்கும் எங்களுடைய நன்றி.


எல்லோரும் அடுத்த தலைமுறை எப்படி இருக்கும் என்று யோசித்துக் கொண்டிருப்போம். இது ஜென் ஸீ யின் படம். இது பெண்களை உலக அளவில் பெருமை படுத்துகிற படைப்பு. இப்படி ஒரு படைப்பை தயாரித்ததற்காக நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம். இதை போல் பெண்களை திரையில் காட்சிப்படுத்துவதை வரவேற்கிறேன். இத்தகைய பெண் கதாபாத்திரங்களை எழுதியதற்காக இயக்குநர் சுபாஷுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அவர் தொடர்ந்து பெண் கதாபாத்திரங்களை இதே போன்று வடிவமைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.‌


இந்தப் படம் ஒரு பெண் குழந்தையை எப்படி வளர்க்க வேண்டும் என்பதை பற்றி பேசுகிறது. தற்போது இந்த சமூகத்தில் பெண்களுக்கு போதிய பாதுகாப்பு இல்லை என்ற எண்ணம் தான் அதிகம் இருக்கிறது. ஆனால் இந்த சமூகத்தில் உள்ள ஒரு பெண் தற்காப்பு கலையை கற்றுக் கொண்டால் அவள் எப்படி பாதுகாப்பாக இருக்க முடியும் என்பதையும் இந்தப் படம் சொல்கிறது. அதுதான் இந்த 'பிளாஸ்ட்' திரைப்படம். இந்த கருத்திற்காகவே இந்த படத்தை நாங்கள் தயாரிக்க வேண்டும் என தீர்மானித்தோம்


இதை உருவாக்க வேண்டும் என்றால் அப்பா கதாபாத்திரத்தில் எங்களுக்கு நடிகர் அர்ஜுனை தவிர வேறு யாரும் சிந்தனைக்கு வரவில்லை. ஏனெனில் அவருக்கும் இரண்டு மகள்கள் உள்ளனர். இந்த விஷயத்தை அவர் சொன்னால் ரசிகர்களுக்கு பொருத்தமாக இருக்கும் என்று நினைத்தோம். எங்களது விருப்பத்தை ஏற்றுக் கொண்டு இப்படத்தில் நடித்த ஆக்ஷன் கிங் அர்ஜுனுக்கு நன்றி.


இந்தக் கதையில் எல்லோருக்கும் முக்கியத்துவம் உண்டு. அபிராமி, ப்ரீத்தி முகுந்தன் ஆகியோருக்கும் நன்றி. அவர்கள் இந்த படத்திற்காக அதிலும் குறிப்பாக சண்டைக் காட்சிகளில் நடிப்பதற்காக தங்களுடைய முழுமையான அர்ப்பணிப்பை வழங்கினர். 


இப்படத்தில் நடித்த அனைத்து நடிகர்களுக்கும் நடிகைகளுக்கும் பணியாற்றிய தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவருக்கும் இத்தருணத்தில் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.


இசையமைப்பாளர் ரவி பஸ்ரூரை தமிழில் அறிமுகப்படுத்துவதை ஏஜிஎஸ் நிறுவனம் பெருமிதம் கொள்கிறது. அவருடைய ரசிகர்கள் நாங்கள். இந்த படத்திற்கு மிகப்பெரும் பங்களிப்பை அவர் வழங்கி இருக்கிறார். இந்தப் படத்திற்கு அவர் ஒரு ஜீவன். இந்த படத்திற்காக அவரின் இசைக் கோர்வை நிச்சயம் பேசப்படும்.


இந்த திரைப்படம் ஒரு கூட்டு முயற்சி. தமிழ் சினிமாவிற்கு புது முகங்களுடன் ஒரு புதிய முயற்சியையும் முன்னெடுத்து இருக்கிறோம். இதற்கு நீங்கள் அனைவரும் ஆதரவு வழங்குவீர்கள் என்று நம்புகிறேன்,'' என்றார்.


நடிகர் அர்ஜுன் பேசுகையில், ''வரலாறு காணாத ஒரு வெற்றியுடன் சாதனையாளர்கள் பட்டியலில் இடம் பிடித்த என் நண்பர் மாண்புமிகு தமிழக முதல்வர் விஜய் அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள்.


'பிளாஸ்ட்' திரைப்படம் ரியலி ஒரு பிளாஸ்ட் தான். நான் எத்தனையோ திரைப்படங்களில் நடித்திருந்தாலும் கராத்தே மாஸ்டர் கதாபாத்திரத்தை நான் இப்போதுதான் முதன்முறையாக ஏற்று நடித்திருக்கிறேன். இதற்காக இயக்குநர் சுபாஷிற்கு முதல் நன்றி.


படப்பிடிப்பு தளத்தில் இயக்குநரின் தன்னம்பிக்கையை நான் பார்த்தேன். ஒவ்வொரு இயக்குநருக்கும் நம்பிக்கை மிக முக்கியம். நான் ஏராளமான புது முக இயக்குநர்களுடன் பணியாற்றி இருக்கிறேன். அதில் இயக்குநர் சுபாஷ் கே ராஜ் சாதுரியமானவர். தனக்கு தேவையானதை நேர்த்தியாக கலைஞர்களிடமிருந்து வாங்கி விடுகிறார். இந்தப் படத்தில் பணியாற்றிய இளம் திறமைசாலிகளிடமிருந்து நான் நிறைய புது விஷயங்களை கற்றுக் கொண்டேன்.


இசையமைப்பாளர் ரவி பஸ்ரூர் குறிப்பிட்டது போல் ஏஜிஎஸ் நிறுவனம் ஒவ்வொரு திறமைசாலிகளையும் ஜும் செய்து பார்த்து தேர்வு செய்கிறார்கள். ஆனால் என் மீது அவர்கள் இதுவரை ஜும் செய்யவில்லை. இப்போதுதான் இந்த நிறுவனத்துடன் நான் முதன் முதலாக இணைந்து பணியாற்றுகிறேன். அவர்களுடைய தொழில் நேர்த்தி, அணுகுமுறை, எல்லாம் சிறப்பான அர்ப்பணிப்புடன் இருக்கிறது. ஐஸ்வர்யா கல்பாத்தி இரவு இரண்டு மணி அளவில் படப்பிடிப்பு தளத்திற்கு வருகை தந்தார். அதை பார்த்ததும் எனக்கு வியப்பாகவும் , இருந்தது மகிழ்ச்சியாகவும் இருந்தது.


நடிகை அபிராமி உடன் நான் முதன் முதலாக நடிக்கும் போது அவர் மலையாளத்தை மட்டும்தான் பேசுவார். உடைந்த தமிழில் தான் அப்போது பேசுவார். ஆனால் இப்போது தமிழில் பேசி அசத்துகிறார். அதே சமயத்தில் நடிகையாக பல சாதனைகளை படைத்திருக்கிறார். அவர் நடிகை மட்டுமல்ல பாடகியும் கூட. இந்தப் படத்தில் அவர் மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார். கடினமாக உழைத்து அர்ப்பணிப்புடன் இந்த படத்தில் அற்புதமாக நடித்திருக்கிறார். அதை நீங்கள் படத்தைப் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.


அதே போல் நடிகை ப்ரீத்தி முகுந்தனை பார்த்து வியக்கிறேன். படப்பிடிப்பு தளத்தில் எப்போது பார்த்தாலும் பயிற்சி செய்து கொண்டிருப்பார். அவர் அடிப்படையில் நல்லதொரு நடன கலைஞர். ஆக்ஷன் காட்சிகளில் அவருடைய கால் அனாசயமான உயரத்திற்கு சென்றதை பார்த்தேன், வியந்தேன். தொடர்ந்து அவர் இது போன்ற ஆக்ஷன் கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.


இசையமைப்பாளர் ரவி பஸ்ரூர், ஒளிப்பதிவாளர் அருண், சண்டை பயிற்சி இயக்குநர் பிரபு, கலை இயக்குநர் வீரமணி என ஒவ்வொரு கலைஞர்களும் டீம் ஒர்க் ஆக பணியாற்றினர்,'' என்றார்.


***

ஹபீபி’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா!*

 *’ஹபீபி’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா!* 



நேசம் எண்டர்டெயின்மெண்ட், ஜிகேஎஸ் ப்ரோஸ் புரொடக்‌ஷன்ஸ் & ரோமியோ பிக்சர்ஸ் தயாரிப்பில், மீரா கதிரவன் இயக்கத்தில் கஸ்தூரி ராஜா, மாளவிகா மனோஜ் மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஹபீபி’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது.


நடிகர் பார்த்திபன் பேசியதாவது, "'அன்பின் வழியது உயிர்நிலை' என்ற அழகான வசனமே இந்தப் படம் எப்படியானது என்பதை உணர்த்துகிறது. எவ்வளவு விலை கொடுத்தாலும் வாங்க முடியாதது அன்பு. நாங்கள் அனைவரும் இங்கு வந்திருப்பது மீரா கதிரவன் மீது வைத்திருக்கும் அன்பு தான். நல்ல படங்களை நல்ல இடத்திற்கு கொண்டு போய் சேர்க்க வேண்டும் என்று ஆர்வமுடையவர் இயக்குநர் ராம். அவர்தான் 'ஹபீபி' திரைப்படத்தை என்னை கட்டாயம் பார்க்க வேண்டும் என்று வலியுறுத்தினார். காசு, பணம் சம்பாதிக்க வேண்டும் என்பதைத் தாண்டி நல்ல கதைகளை கொடுக்க வேண்டும் என்று யோசிக்கும் வெகு சிலரில் மீரா கதிரவனும் ஒருவர். மிக இயல்பாக படமெடுப்பவர். இன்று தயாரிப்பாளர் ராஜன் தற்கொலை செய்து கொண்டார் என்பதை கேள்விப்பட்டு மிகவும் வருந்தினேன். தயாரிப்பாளர் தேனப்பனிடம் கேட்டபோது அவருக்கு வசதி வாய்ப்புகள் குறைவில்லை. ஆனால், தனிமையில் இருப்பார் என்று சொன்னார். ஒரு குறிப்பிட்ட வயதிற்கு மேலே நம்மிடம் அன்பாக பேச ஒருவர் தேவை. அப்படி நம் எல்லோரிடமும் அன்பு செலுத்தும் படமாக 'ஹபீபி' இருக்கும். தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவரும் சிறப்பாக பணியாற்றியுள்ளனர். எனக்கு 'ஆயிரத்தில் ஒருவன்' படம் கிடைக்க காரணமானவர் கஸ்தூரி ராஜா. இயல்பான நடிப்பை இந்த படத்தில் கொடுத்திருக்கிறார். இந்த தருணத்தில் மாண்புமிகு தமிழக முதல்வர் விஜய் அவர்களுக்கும் வாழ்த்துக்களை சொல்லிக் கொள்கிறேன். தனி மனிதருடைய நம்பிக்கை தான் ஜெயித்து இந்த பதவியில் அவரை அமர வைத்திருக்கிறது. நிச்ச்யம் சினிமாவுக்கு அவர் நல்லது செய்வார். மீரா கதிரவனுக்கும் படத்திற்கும் வாழ்த்துக்கள் ". 


நடிகர் சமுத்திரக்கனி, " இப்படியான படம் எடுத்து வெளிக்கொண்டு வருவது என்பது சாதாரண விஷயம் அல்ல. இத்தனை பேர் இங்கு கூடி இருப்பது மீரா கதிரவனுக்காக தான். இந்த படம் அவருக்கு வெற்றி தேடி தரட்டும். படம் நிச்சயம் உணர்வுபூர்வமானதாக இருக்கும். இன்றைய காலகட்டத்திற்கு ஏற்ற அனைத்து விஷயங்களும் இந்த படத்தில் அமைந்திருக்கிறது. நிச்சயமாக பாருங்கள்".



இயக்குநர் மகிழ் திருமேனி, "'ஹபீபி' திரைப்படத்தை நான் பார்த்து விட்டேன். படக்குழுவினருக்கு வாழ்த்துக்கள். இன்றைய ட்ரெண்ட், சமூக சூழ்நிலைக்கு ஏற்ப என திரைத்துறையில் காலத்திற்கு ஏற்றவாறு ஓட வேண்டிய கட்டாயமும் நெருக்கடியும் உள்ளது. ஆனால், வேறு சில படங்கள் உள்ளது. அவை நம் வாழ்க்கைக்கு மிக நெருக்கமானவை. அப்படியான படம் தான் 'ஹபீபி'. இதை என் நண்பர் மீரா கதிரவன் எழுதியிருக்கிறார் என்பது பெருமை. வாழ்வாதாரத்திற்காக நாடு விட்டு நாடு செல்லும் ஆண்கள், அவர்களை பிரிந்து தவிக்கும் குடும்பத்தினர், இயந்திரமயமாக்கல் காரணமாக தொழில் பாதிக்கும் கைத்தறி நெசவாளர்கள், கூட்டுக் குடும்ப சிதைவு என பல விஷயங்கள் இதில் பேசப்பட்டு இருக்கிறது. தமிழ் சமூகத்தினருக்கான படம் இது. ஒரு காலக்கட்டத்தை, வாழ்வியலை, பண்பாட்டை இந்தப் படம் ஆவணப்படுத்தியிருக்கிறது. தன் சார்ந்த முடிவுகளை தானே முடிவெடுக்கும் ஹிஜாப் அணிந்த தற்சார்பு பெண்ணின் கதாபாத்திரம் இந்தப் படத்தில் உண்டு. மீரா கதிரவன், தாமிரா, லெனின் பாரதி போன்றோர் தொடர்ந்து படங்கள் எடுக்கும் வாய்ப்பை தமிழ் சினிமா உருவாக்கி தர வேண்டும் கஸ்தூரி ராஜா அவர்களிடம் நான் உதவியாளராக பணியாற்றேன். அவருடன் பணிபுரிந்த காலம் என் வாழ்வின் பொக்கிஷம். ராகுல் இந்த படத்தை வெளியிடுவது இதன் மிகப்பெரிய பலம். அனைவருக்கும் வாழ்த்துக்கள்".


இயக்குநர் கணேஷ் கே பாபு, " முதல் படத்திற்கு பிறகு இரண்டாவது படம் இயக்கும் நம் மீது அதிக அழுத்தம் இருக்கும். அப்படி இருக்கும் பொழுது இந்த படத்தின் டிரைய்லர் பார்க்கும் பொழுது வியப்பாக இருந்தது. நல்ல படங்கள் கொடுக்க வேண்டும் என்று தம்மை வருத்திக் கொண்டிருக்கும் இயக்குநர்கள் இருக்கும் இந்த மேடையில் நானும் இருப்பது மகிழ்ச்சி. இன்றைய சூழலில் 'ஹபீபி' திரைப்படம் வெளியாக வேண்டிய அவசியம் உள்ளது. இஸ்லாமிய சமூகத்திற்கான படங்கள் தமிழில் அதிகம் வருவதில்லை. இந்தப் படம் பார்க்கும்போது தொடர்புபடுத்தி கொள்ள முடிகிறது. படக்குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துக்கள்". 


இயக்குநர் ஹரிஹரன் ராம், "நான் பார்த்து ரசித்த இயக்குநர்களுடன் இந்த மேடையில் இருப்பது சந்தோஷம். மாளவிகாவுக்கு உண்மையிலேயே இதுதான் அறிமுகப்படம். மீரா கதிரவன் படங்களுக்கு நான் ரசிகன். படக்குழுவினருக்கு வாழ்த்துக்கள்".


இயக்குநர் தினகரன் சிவலிங்கம், "மீரா கதிரவன் தோழருக்கு வாழ்த்துக்கள். என் குடும்பமும் கைத்தறி தொழில் சம்பந்தப்பட்டது தான். அந்த வாழ்க்கையை இந்த படம் நுணுக்கமாக காட்டி இருக்கிறது. அடுத்தடுத்து வரும் இயக்குநர்கள் தங்கள் வாழ்க்கையை, பின்புலத்தை எந்த மனத்தடையும் இல்லாமல் காட்டுவதற்கு இந்த படம் உத்வேகம் கொடுத்திருக்கிறது. கமர்ஷியலாகவும் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெறும். மிக முக்கியமான படம் இது". 


இயக்குநர் அவிநாஷ், " இந்தப் படத்தை ஸ்பெஷல் ஷோவில் பார்த்த பொழுது ஈரானிய படத்தில் தமிழ் பேசிக்கொண்டு இருக்கிறார்கள். என்பது போன்ற உணர்வு ஏற்பட்டது. எந்த பின்புலமும் இல்லாமல் புதியவர்களை இந்த படத்தில் இயக்குநர் நடிக்க வைத்திருப்பது சிறப்பு. நிச்சயம் ரசிகர்களுக்கும் பிடிக்கும் என நம்புகிறேன்". 


இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரி, "தமிழில் இஸ்லாமிய சகோதரர்களை பற்றிய இந்த படம் சிறப்பாக வந்துள்ளது. திரையரங்குகளில் இந்தப் படம் வெளியாவது முக்கியம். இயக்குநர் மீரா கதிரவனுக்கும் படக்கிழுவினருக்கும் வாழ்த்துக்கள்". 


தயாரிப்பாளர் தேனப்பன், "இந்த படம் பார்த்த அனைவரும் சிறப்பாக வந்துள்ளது என்று சொல்லி இருக்கிறார்கள். நிச்சயம் அந்த நம்பிக்கையை இயக்குநர் மீரா கதிரவன் காப்பாற்றுவார். படக்குழுவினருக்கு வாழ்த்துக்கள்". 


இயக்குநர் சேரன், "இந்த படம் பார்த்து விட்டேன். இதில் நானும் ஒரு கதாபாத்திரமாக தான் உணர்ந்தேன். இப்படியான நல்ல படம் எடுக்க தான் ஒவ்வொரு இயக்குநரும் சென்னையை நோக்கி வரவேண்டும். படத்தின் ஒவ்வொரு ஃபிரேமிலும் சிறப்பாக உழைத்திருக்கும் இயக்குநர் மீரா கதிரவனுக்கு வாழ்த்துக்கள். இந்தப் படமே ஒரு நாவல் போல உள்ளது. அடுத்த காட்சி என்ன என்பதை யாராலும் கணிக்க முடியாது. வாழ்வியலை, சமூக மாற்றத்தை காட்டியிருக்கும் இந்த மாதிரியான திரைப்படங்கள் தான் நம்மை ஒழுங்குபடுத்தும், உணர வைக்கும். தொழில்நுட்ப குழுவினர் அனைவரும் சிறப்பாக பணியாற்றியுள்ளனர். விமர்சகர்கள் அனைவரும் நியாயமான விமர்சனம் கொடுக்க வேண்டும். வாழ்த்துக்கள்". 


இயக்குநர் ஜகாரியா முகமது, "நிறைய தமிழ் படங்களை நான் பார்த்திருக்கிறேன். இது போன்ற படங்கள் வருவது மகிழ்ச்சி. நான் பார்த்து வியந்த பல இயக்குநர்களோடு இந்த மேடையில் இருப்பது பெருமையான தருணம். கேரள திரையரங்குகளிலும் இந்த படம் வெளியாக வேண்டும். நிச்சயமாக எங்கள் ஆதரவு உண்டு. படக்குழுவினருக்கு வாழ்த்துக்கள்".


இயக்குநர் சுசீந்திரன், " எனக்கு இஸ்லாமிய நண்பர்கள் கிடையாது. 'ஹபீபி' படத்தில் காட்டியுள்ள வாழ்வியலை பார்க்கும் பொழுது பிரம்மிப்பாக இருந்தது. மீரா கதிரவனுக்கும், கஸ்தூரிராஜா அவர்களுக்கும் படக் குழுவினருக்கும் வாழ்த்துக்கள். அனைத்து சமூகத்தினருக்கும் ஏற்ற படமாக இது வந்துள்ளது. வாழ்த்துக்கள்". 


இயக்குநர் லீனா மணிமேகலை, "மீரா கதிரவனின் பலவருட உழைப்பு தற்போது நனவாவதை பார்க்கும் பொழுது மகிழ்ச்சியாக உள்ளது. இந்தப் படம் வீரியமான பண்பாட்டு அசைவு. இது தமிழ் சினிமாவில் நடக்க பல வருடங்கள் ஆகி இருக்கிறது. இது ஒரு இஸ்லாமிய படம் என்பதை விட மூன்று தலைமுறை பெண்களை பற்றிய படம் என சொல்லலாம். அதில் எனக்கு மனநிறைவு. பொருளாதார ரீதியாகவும் இந்த படம் வெற்றியடைய வாழ்த்துக்கள்".


இயக்குநர் வெற்றிமாறன், "'ஹபீபி' எனக்கும் முக்கியமான படம். இஸ்லாமிய சமூகத்தினரின் வாழ்வியல், கனவுகள், இழப்புகள், வலிகளை பேசுகிறது. பீரியட் படமாக இருந்தாலும் இப்போதும் பொருத்தி பார்க்க முடிகிறது. அனைத்து நடிகர்களும் கதையில் வாழ்ந்திருக்கிறார்கள். வாழ்த்துக்கள்".


நடிகர் நாசர், "'ஹபீபி' படம் பார்த்த பாதிப்பில் இருந்து இன்னும் வெளிவரவில்லை. எல்லோருக்கும் பிடித்த கதையாக இது இருக்கும்".


இயக்குநர் துரை, "இந்த படத்திற்காக இத்தனை பேர் ஒன்று கூடி இருப்பது மகிழ்ச்சி. இஸ்லாமியர்களுடைய வாழ்க்கையை இத்தனை நுணுக்கமாக எந்த படமும் காட்டியது இல்லை. இந்த படத்தை நல்லபடியாக கொண்டு போய் சேர்க்க வேண்டும். அதற்கு உங்கள் ஆதரவும் தேவை. சாம் சி எஸ் இசை படத்திற்கு மிகப்பெரிய பலம். படக்குழுவினருக்கு வாழ்த்துக்கள்".


தவெக எம்எல்ஏ முஸ்தபா, "இந்தப் படம் வெற்றியடைய வாழ்த்துக்கள். 2007 ஆம் ஆண்டிற்கு பிறகு நான் படங்கள் பார்க்கவில்லை. ஆனால், 'ஹபீபி' நிச்சயம் பார்ப்பேன். முதல்வர் விஜய்யும் நிச்சயம் பார்ப்பார்".


பாடகர் சத்யன், "இயக்குநர் மீரா கதிரவனின் அவள் பெயர் தமிழரசி படம் எனக்கு மிகவும் பிடிக்கும். படத்தின் போஸ்டரே படம் மிகப்பெரிய வெற்றி அடையும் என்பதை சொல்கிறது. படக்குழுவினருக்கு வாழ்த்துக்கள்".


இயக்குநர் பாண்டிராஜ், "நானும் மீராவும் தங்கர்பச்சான் சாரிடம் வேலை பார்த்தோம். அதனால், நாங்கள் இருவரும் நெருங்கிய நண்பர்கள். இந்தப் படம் கமர்ஷியலாகவும் வெற்றி பெற வேண்டும்". 


இயக்குநர் அமீர், " பொதுவாக இஸ்லாமிய சமூகம் திரைப்படங்களை ஒதுக்கி வைக்கும். அப்படியான ஒரு சமூகத்தை பற்றிய படமாக இது வந்திருக்கிறது என்பதை தாண்டி அந்த சமூகத்தை சேர்ந்தவர்களும் நிறைய பேர் இன்று இந்த விழாவில் பங்கெடுத்திருக்கிறார்கள். ஹபீபி என்றால் அன்பு, காதல் என்று அர்த்தம். அப்படியான வாழ்க்கையை வாழ்ந்தவர்களால்தான் இந்தப் படத்தை எடுக்க முடியும். இஸ்லாமிய சமூகத்தை சேர்ந்த படம் என இதை சுருக்குவதில் எனக்கு உடன்பாடு இல்லை. தமிழ் சமூகம் எடுக்க மறந்த ஒரு சமூகத்தை சேர்ந்த படம். இந்திய அரசியலில் இஸ்லாமியர்கள் என்றாலே தீவிரவாதிகள் தான். 'வாழை' திரைப்படத்திற்கு அடுது நான் இத்தனை இயக்குநர்களை சந்தித்திருப்பது இங்குதான். இஸ்லாமிய சமூகத்திற்கான படம் இது என்பதைத் தாண்டி இது தமிழ் சமூகத்திற்கான படம். படம் வெற்றி பெற வாழ்த்துக்கள் ". 


இயக்குநர் மிஷ்கின், " இது இஸ்லாமியர்கள் படம் என்று சுருக்குவதில் எனக்கு விருப்பம் இல்லை. எது நல்ல படம், எது கமர்ஷியல் படம், எது பார்க்க வேண்டிய படம் என்ற கேள்வி எனக்கு உண்டு. கருப்பு படம் இப்போது வெளியாகி ஹிட் ஆனது. மகிழ்ச்சி! 'ஹபீபி' ஹிட் ஆக வேண்டிய படம். நீண்ட நாள் கழித்து ஒரு நல்ல காதல் படம் பார்த்து அழுதேன். இந்தப் படத்தை மீரா கதிரவன் தனது தாய் தந்தைக்காக எடுத்திருக்கிறார். யார் என்று தெரியாதவனை நேசிப்பது தான் கருணை. அதை இந்த படம் சொல்லிக் கொடுத்தது. கஸ்தூரி ராஜா சார் தனுஷைவிட மூன்று மடங்கு நன்றாக நடித்திருக்கிறார். தேர்ந்தெடுத்து பார்க்க வேண்டிய படம் இது. அனைத்து கடவுள்களும் இந்தப் படத்தை லேசாக்கி தரட்டும்".


இயக்குநர் கஸ்தூரி ராஜா, "மீரா கதிரவன் மீது எனக்கு அளவு கடந்த அன்பு உண்டு. அவரை போல ஒரு இயக்குநரை உழைப்பாளியை படைப்பாளியை பார்த்து விடலாம். ஆனால், அவரை போன்ற ஒரு மனிதரை பார்ப்பது அரிது. நான் இதுவரை நடித்ததில்லை. ஆனால் என் மீது மீரா கதிரவன் நம்பிக்கை வைத்தார். நான் ஆயிரம் சதவீதம் இந்து. அப்படி இருந்த என்னை இஸ்லாமியராக மீரா கதிரவன் கதை மாற்றியது. இந்த நிகழ்வு எனக்கு மறுபிறவி போலதான். இந்த படத்தை நான் இன்னும் பார்க்கவில்லை. ஏனெனில் என்னை நான் இன்னும் ஒரு நடிகனாக அங்கீகரிக்கவில்லை. அதனால் திரையரங்குகளுக்கு சென்று மக்களோடு மக்களாக தான் பார்க்க வேண்டும். இந்த படம் மீரா கதிரவனின் போராட்டத்திற்கு நல்ல விளைச்சல் கொடுக்கும். என் கரியாரில் நான் உயிருள்ளவரை சினிமாவில் இருப்பேன் என்ற நம்பிக்கையை இந்தப் படம் கொடுத்துள்ளது. மண்ணில் பிறந்த அனைவருக்கும் மனிதன் என்ற பெயரே உண்மை. மற்றதெல்லாம் பொய்".


இயக்குநர் ரஞ்சித், "நம் சமூகத்திற்கு பல முகங்கள் உண்டு. ஆனால், யாரைப் பற்றியும் நம் சரியாக புரிந்து கொள்வதில்லை. இங்கு பெரும்பான்மையாக இருப்பவர்களைப் பற்றி நிறைய படங்கள் வந்திருக்கிறது. இலக்கியங்கள் மூலமாகவும் மலையாள சினிமா மூலமாகவும் இஸ்லாமியர்களின் வாழ்க்கை பற்றி ஓரளவுக்கு தெரிந்திருக்கிறேன். தமிழ் சினிமாவில் இது முக்கியமான படம். தமிழ் சினிமா ரசிகர்களுக்கும் நிச்சயம் பிடிக்கும்". 


நடிகர் ஈஷா, " விழாவிற்கு வந்திருக்கும் அனைத்து இயக்குநர்களுக்கும் நன்றி. வாய்ப்பு கொடுத்த தயாரிப்பாளர், இயக்குநர் மீரா கதிரவனுக்கும் நன்றி. என் அப்பா மீதான மரியாதையை கஸ்தூரிராஜா சார் மீதும் வைத்திருக்கிறேன். படத்திற்கு உங்கள் ஆதரவு தேவை".


நடிகை மாளவிகா மனோஜ், "தமிழில் எனக்கு இதுதான் முதல் படம். படக்குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துக்கள்".


இசையமைப்பாளர் சாம் சி எஸ், "வன்முறை நிறைந்த படங்களுக்கு இடையில் மனதை மயிலிறகால் வருடும் இந்த கதைக்கு இசையமைக்கும் வாய்ப்பு கிடைத்தது. நானும் மீராவும் நிறைய சண்டை போட்டிருக்கிறோம். ஆனால், இப்போது இருவரும் நல்ல நண்பர்கள். இந்தப் படத்துக்கு பணிபுரிய வாய்ப்பு கொடுத்ததற்கு மீரா கதிரவனுக்கு நன்றி. படக்குழுவினர் அனைவரும் சிறப்பாக பணியாற்றியுள்ளனர். கஸ்தூரி ராஜாவின் நடிப்பிறகு பெரிய விருது காத்திருக்கிறது"


இயக்குநர் ராம், "பல இஸ்லாமிய பெயர்களை ஒரே தமிழ் படத்தில் நீங்கள் பார்க்க இருப்பது இதுதான் முதல்முறை என நினைக்கிறேன். பச்சைத் தாயத்து இல்லாத, கசாப்பு கடைக்க போகாத, பிரியாணி செய்வது போல காட்டாத ஒரு முஸ்லிம் படம் இது. இஸ்லாமிய சமூகத்தினரை பற்றி நாம் கட்டமைத்து வைத்திருக்கும் பிம்பத்தை எல்லாம் மாற்றக்கூடிய படம்தான் இது. தமிழில் வெளியாக இருக்கும் முதல் அசல் தமிழ் இஸ்லாமிய சினிமா இது. படம் வெற்றியடைய துவா செய்கிறேன்"


இயக்குநர் மீரா கதிரவன், "படத்தில் உழைத்த தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவருக்கும் நன்றி. படத்தில் கஸ்தூரி ராஜா சார் நடித்திருக்கிறார் என்று சொன்னதும் பலரும் கேட்டது இஸ்லாமியர்களின் என்றால் சிவப்பாக தானே இருப்பார்கள் என்று. இதுபோன்ற பல பிம்பங்களை இந்த படம் மாற்றும். இந்தப் படத்தை நான் இயக்கவில்லை. அதை சஸ்பென்ஸாக வைத்திருக்கிறேன். அதைப் போல இந்த படத்திற்கு இன்னொருவரும் முக்கியமானவர். சினிமாவிற்கு வந்து என் உண்மையான பெயரை மாற்றி மீரா கதிரவன் என வைத்தபோது பல கேள்விகள் எழுந்தது. என் தாயின் பெயர் தான் மீரா. தமிழ் அடையாளம் வேண்டும் என்பதால் கதிரவன் என வைத்தேன். அக்ரஹாரத்தில் ஐயங்கார் ஒருவர் முகமது யூசுப் கதைக்காக வீடு கொடுத்தார். மதம், சாதியை கடந்து அன்பும் மனிதமும் தான் எல்லாவற்றிற்கும் அப்பாற்பட்டது. அப்படியான அன்பை பேசக்கூடிய படம்தான் 'ஹபீபி'. இந்தப் படம்தான் என்னை இயக்கியது. கஸ்தூரி ராஜா சார் சிறப்பான ஒத்துழைப்பு கொடுத்து நடித்தார். படக்குழுவினர் அனைவரும் சிறப்பாக நடித்துள்ளனர். படம் பார்த்துவிட்டு ஆதரவு கொடுங்கள்".

உலகை உலுக்கிய இசையின் அரை நூற்றாண்டு : கனெக்ட் மீடியா, மெர்குரி மூவீஸ் மற்றும் WPP புரொடக்ஷன் இணைந்து இளையராஜாவின் திரையுலக 50 ஆண்டுகளை கௌரவிக்கும் வகையில் இசை அஞ்சலியை உருவாக்கியுள்ளன !!*

 *உலகை உலுக்கிய இசையின் அரை நூற்றாண்டு : கனெக்ட் மீடியா, மெர்குரி மூவீஸ் மற்றும் WPP புரொடக்ஷன் இணைந்து இளையராஜாவின் திரையுலக 50 ஆண்டுகளை கௌரவிக்கும் வகையில் இசை அஞ்சலியை உருவாக்கியுள்ளன !!* 



சென்னை, மே 16, 2026 — கலாசாரம், சினிமா மற்றும் தொழில்நுட்பம் ஆகியவை ஒன்றிணைந்து, முன்னெப்போதும் இல்லாத முயற்சியாக, இசைஞானி இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு படத்தை தயாரித்து வரும் கனெக்ட் மீடியா மற்றும் மெர்குரி மூவீஸ் நிறுவனங்கள், WPP புரொடக்ஷனுடன் இணைந்து, இந்திய திரையுலகில் இளையராஜாவின் 50வது ஆண்டு திரையுலக பயணத்தின் நினைவாக ஒரு பிரம்மாண்டமான சினிமா அஞ்சலியை உருவாக்கியுள்ளன.


1976 மே 14ஆம் தேதி வெளியான அன்னக்கிளி திரைப்படம், இந்திய சினிமாவின் ஆன்மாவையே மாற்றியமைத்த இசையை உலகிற்கு அறிமுகப்படுத்தியது. ஐம்பது ஆண்டுகள் கடந்தும், 09 மொழிகளில் 1,500க்கும் மேற்பட்ட படங்களுக்கும், 9,000க்கும் அதிகமான பாடல்களுக்கும் இசையமைத்துள்ள இளையராஜாவின் படைப்புகள், உலக சினிமா வரலாற்றில் மிக ஆழமான உணர்வுகளையும் கலாச்சார தாக்கத்தையும் ஏற்படுத்திய இசையாகத் திகழ்கின்றன. இந்த விழா ஒரு சாதாரண மைல்கல் அல்ல; மனிதகுலத்திற்கு ஒரே ஒருவரால் வழங்கப்பட்ட அசாதாரண பரிசை கொண்டாடும் தருணமாகும்.


“இளையராஜா சார் இசை என்பது வெறும் பின்னணி இசை அல்ல; அது தலைமுறைகளின் உணர்ச்சி நினைவகம்,” என்று கனெக்ட் மீடியா நிறுவனத்தின் நிறுவனர் வருண் மாதூர் தெரிவித்தார். “அவர் திரையுலகில் 50 அசாதாரண ஆண்டுகளை நிறைவு செய்யும் இந்த நேரத்தில், உலகத் தரத்துக்கு இணையான ஒரு படைப்பை உருவாக்க வேண்டும் என்பதே எங்கள் நோக்கம். அவரது இசை ஒவ்வொரு படத்திலும் சாதித்ததுபோல, இந்த முயற்சியும் உலகத் தரத்திலான படைப்பாற்றலையும் தொழில்நுட்பத்தையும் ஒன்றிணைக்கிறது என்றார்.”


இந்த அஞ்சலி, தொழில்துறையில் முன்னணியில் உள்ள AI தொழில்நுட்பங்களும், அடுத்த தலைமுறை திரைப்பட உருவாக்க முறைகளும் பயன்படுத்தப்பட்டு, உருவாக்கப்பட்ட ஒரு உணர்ச்சி மற்றும் காட்சியமைப்பு நிறைந்த சினிமா அனுபவமாக இருக்கும். உணர்வுகள், சினிமா கதை சொல்லல் மற்றும் காட்சித் தொழில்நுட்ப புதுமைகள் ஆகியவற்றின் மூலம், இளையராஜாவின் ஐம்பது ஆண்டு கால தாக்கத்தை இன்றைய தலைமுறைக்கும் அதே வலிமையுடன் கொண்டு சேர்க்கும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.


“இளையராஜாவின் பாரம்பரியம் என்பது ஒரு இசையமைப்பாளரின் சாதனை மட்டும் அல்ல; அது அரை நூற்றாண்டாக கோடிக்கணக்கான மக்களின் இதயங்களில் வாழும் உணர்வு,” என்று மெர்குரி குழுமத்தின் நிர்வாக இயக்குநரும் குழும தலைமை செயல் அதிகாரியுமான ஸ்ரீராம் பக்திசரண் கூறினார். 


“அந்த பாரம்பரியத்தை கொண்டாடுவதற்காக நாளைய தொழில்நுட்பங்களை பயன்படுத்துவது எங்களுக்கு ஒரு பெருமையும் பொறுப்பும் ஆகும். AI தொழில்நுட்பம் அனைவருக்கும் திறந்துவிடப்பட்டுள்ள இந்த காலத்தில், இந்த முயற்சி திரைப்படத் துறையில் புதிய ஆர்வத்தை உருவாக்கும். அதே நேரத்தில், படைப்பாற்றல் கொண்ட கலைஞர்களை புறக்கணிக்காமல், தயாரிப்பு செலவுகளை குறிப்பிடத்தக்க அளவில் குறைக்கும் வாய்ப்பையும் இது வழங்கும்.”


இந்த முயற்சியில் தனது AI மற்றும் படைப்பாற்றல் நிபுணத்துவத்தை வழங்கியுள்ள WPP புரொடக்ஷன், கலாச்சாரத்திற்கும் தொழில்நுட்பத்திற்கும் இடையிலான புதிய ஒற்றுமையின் அடையாளமாக இதை பார்க்கிறது.


“நிலைத்திருக்கும் சிறந்த படைப்புகள் அனைத்தும் உணர்வு, கலாசாரம் மற்றும் புதுமை ஆகியவற்றின் சந்திப்பில் உருவாகின்றன,” என்று WPP புரொடக்ஷன் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி கார்த்திக் நாகராஜன் கூறினார். 


“இந்த அஞ்சலி அதற்கான சிறந்த உதாரணம். இங்கு மிக முன்னேறிய AI தொழில்நுட்பங்கள் வெறும் காட்சிச்சிறப்புக்காக பயன்படுத்தப்படவில்லை; தலைமுறைகள் கடந்து பலரின் வாழ்க்கையின் பின்னணி இசையாக இருந்த ராஜா சார் இசையை கௌரவிக்கவே பயன்படுத்தப்படுகின்றன.”என்றார்.


🔗 https://www.youtube.com/watch?v=yomruKvYrWc

The Commencement of a Grand Journey

 ஒரு மகத்தான பயணத்தின் தொடக்கம்...



‘சேயோன்’ - சிவகார்த்திகேயன், சக்திவாய்ந்த ஒரு புதிய கதாபாத்திரத்தில் நடிப்பதோடு, அவருடன் பாக்யஸ்ரீ போர்ஸ் இணைந்து நடிக்கும், இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு 18 மே 2026 அன்று மதுரையில் தொடங்கியுள்ளதாக ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் டர்மெரிக் மீடியா நிறுவனங்கள் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளன.


சிவக்குமார் முருகேசன் இயக்கத்தில் உருவாகும் ‘சேயோன்’ திரைப்படம், அதிரடி, உணர்வுபூர்வமான தருணங்கள் மற்றும் குடும்பம் சார்ந்த கதைக்களத்தோடு, கிராமியப் பின்னணியில் ஒரு சிறப்பான பொழுதுபோக்குத் திரைப்படமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.


திரு.கமல்ஹாசன் நேரில் கலந்துகொண்டு படப்பிடிப்பை தொடங்கி வைத்து, அனைவருக்கும் தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார். படத்தின் நடிகர்கள், படக்குழுவினர், தயாரிப்பாளர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் கலந்துகொண்ட ஒரு பிரம்மாண்டமான தொடக்க விழாவாக இது அமைந்தது.


அமரன் திரைப்படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு, சிவகார்த்திகேயன் மீண்டும் ஒருமுறை ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்துடன் கைகோர்ப்பது ஒரு குறிப்பிடத்தக்க மறுஇணைவாக அமைகிறது. கமல்ஹாசன் மற்றும் ஆர்.மகேந்திரன் ஆகியோரால் தயாரிக்கப்படும் இத்திரைப்படம், ஒரு வலிமையான படைப்புக் குழுவையும், ஈர்க்கக்கூடிய ஒரு கலைப்பார்வையையும் ஒன்றிணைக்கிறது.


சிவகார்த்திகேயன் மற்றும் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் முதல் முறையாக, ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் கீழ் இணையும் படைப்பாக ‘சேயோன்’ திரைப்படம் அமைந்துள்ளதால், இத்திரைப்படத்தின் இசைக்கும், மொத்த திரைப்பட அனுபவத்திற்கும் பெரும் ஆவல் உள்ளதுடன், 2026-ஆம் ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும் திரையரங்கு வெளியீடுகளில் ஒன்றாகத் திகழ உள்ளது.  The Commencement of a Grand Journey


RaajKamal Films International and Turmeric Media officially announce that the shoot of SEYON, starring Sivakarthikeyan in a powerful new role, co-starring Bhagyashri Borse has commenced today, May 18, 2026, in Madurai.


Directed by Sivakumar Murugesan, SEYON is envisioned as a grand rural commercial entertainer that blends action, emotion and family-centric storytelling on a spectacular scale.


The shooting commenced with a grand inaugural ceremony attended by the film’s cast, crew, producers and technicians. Thiru. Kamal Haasan graced the occasion and officially inaugurated the shoot, extending his wishes to the entire team as the cameras started rolling on this ambitious cinematic venture.


Marking a significant reunion, Sivakarthikeyan join hands once again with RaajKamal Films International after the blockbuster success of Amaran. Produced by Kamal Haasan and R. Mahendran, the film brings together a powerful creative team and a compelling cinematic vision.


SEYON also marks the first-ever collaboration between Sivakarthikeyan and acclaimed composer Santhosh Narayanan under the banner of RaajKamal Films International, creating immense anticipation for the film’s music and overall cinematic experience.


SEYON is set to be one of the most anticipated theatrical releases of 2026.

வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் (Vels Film International) தயாரிப்பில் பிரேம்குமார் இயக்கும் புதிய படம் கோலகல ஆரம்பம் !!*

 *வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் (Vels Film International) தயாரிப்பில் பிரேம்குமார் இயக்கும் புதிய படம் கோலகல ஆரம்பம் !!*



*இயக்குநர் பிரேம்குமார், பகத் பாசில் இணையும் புதிய படம் பூஜையுடன் துவங்கியது !!*


வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் தயாரிப்பில் “96, மெய்யழகன்" படங்களின் வெற்றிக்குப் பிறகு இயக்குநர் C. பிரேம்குமார் இயக்கத்தில் முன்னணி நடிகர் பகத் பாசில் நாயகனாக நடிக்கும் புதிய திரைப்படத்தின் பூஜை இன்று கோலாகலமாக நடைபெற்றது.


வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் தயாரிக்கும் இந்த புதிய படம், ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், ஐசரி K. கணேஷ் அவர்களின் வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் 32வது தயாரிப்பாக இப்படம் உருவாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


மலையாள திரையுலகின் முன்னணி நடிகரான பகத் பாசில் இப்படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். தனித்துவமான கதைகளையும், உணர்ச்சிப்பூர்வமான திரைக்கதைகளையும் தேர்ந்தெடுத்து வெற்றிபெறும் பகத் பாசில் மற்றும் மனதை தொடும் படைப்புகளால் ரசிகர்களை கவர்ந்த இயக்குநர் பிரேம்குமார் இணையும் இந்த புதிய கூட்டணி, திரையுலகில் மிகுந்த கவனத்தை பெற்றுள்ளது.


தமிழ் சினிமாவில் தரமான மற்றும் வெற்றிப்படங்களை தொடர்ந்து வழங்கி வரும் வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல், பல்வேறு முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து வித்தியாசமான கதைக்களங்களை கொண்ட திரைப்படங்களை தயாரித்து வருகிறது. வணிக ரீதியிலும், உள்ளடக்க ரீதியிலும் வெற்றிபெற்ற பல படங்களை வழங்கியுள்ள இந்த நிறுவனம், தற்போது இந்த புதிய முயற்சியின் மூலம் மீண்டும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.


இயக்குநர் C. பிரேம்குமார், “96” மற்றும் “மெய்யழகன்” போன்ற உணர்வுப்பூர்வமான திரைப்படங்கள் மூலம் தனக்கென ஒரு தனி ரசிகர் வட்டத்தை உருவாக்கியவர். எளிமையான காட்சியமைப்புகள், மனதை வருடும் கதாபாத்திரங்கள் மற்றும் இயல்பான திரைக்கதைகளால் பாராட்டப்பட்ட அவர், இந்த புதிய படத்திலும் ரசிகர்களை கவரும் விதமான ஒரு வித்தியாசமான அனுபவத்தை வழங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.


இயக்குநர் பிரேம் குமாரின் முந்தைய படங்களுக்கு இசையமைத்த கோவிந்த் வசந்தா இப்படத்திற்கு இசையமைக்கிறார்.


இப்படத்தின் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது. புதிய கூட்டணியால் உருவாகும் இந்த படம், ரசிகர்களிடையே தற்போது பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது

எக்ஸாம்’ இணையத் தொடர் விமர்சனம்

 எக்ஸாம்’ இணையத் தொடர் விமர்சனம்


போலீஸ் டி.எஸ்.பியான அதிதி பாலன், தனது பணி மாறுதலை தொடர்ந்து புதிய இடத்திற்கு பொறுப்பேற்க செல்லும் போது, துஷாரா விஜயனால் கடத்தப்பட்டு அடைத்து வைக்கப்படுகிறார். பிறகு அதிதி பாலன் பெயரில் துஷாரா விஜயன், டி.எஸ்.பியாக பதவி ஏற்றுக்கொள்வதோடு, அந்த இடத்தில் நடக்க இருக்கும் அரசு தேர்வு மோசடியை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபடுகிறார்.


அதிதி பாலன் மூலமாக அந்த மோசடி நடக்க இருப்பதாக நினைத்து அவரை கடத்தி அடைத்து வைக்கும் துஷாரா விஜயனுக்கு, அவருக்கும் மேலே ஒருவர் இருப்பதும், கண்ணுக்கு தெரியாத அந்த நபர் மூலம், காவல்துறை அதிகாரிகள் மற்றும் அரசு அதிகாரிகள் பகடைக்காய்களாக பயனபடுத்தப்பட்டு, அவர்கள் மூலம் மோசடி நடக்க இருப்பதும் தெரிய வருகிறது.அந்த கண்ணுக்கு தெரியாத நபர் யார் ?, அவர் மூலம் நடக்க இருக்கும் மோசடியையும், அதன் பின்னணியையும் துஷரா விஜயன், கண்டுபிடித்தாரா? இல்லையா ? என்பதை இதுவரை திரையில் சொல்லப்படாத உண்மைகளை வெளிச்சத்திற்கு கொண்டு வரும் நோக்கில் சொல்வதே ‘எக்ஸாம்’.


நடுத்தர மனிதர்களின் வாழ்க்கை தரத்தை மாற்றவும், சமூகத்தில் தங்களுக்கான அங்கீகாரத்தை பெறவும் அரசு பதவிகளும், பணியும் மிக முக்கியமானது. அதற்காக கடுமையாக உழைக்கும் அவர்களது உழைப்பு பதவி ஆசைக்காகவும், அதிகார போதைக்காகவும் பணம் படைத்தவர்களுக்காக, எப்படி திருடப்படுகிறது என்பதை அரசு தேர்வுகளில் நடக்கும் பெரும் மோசடிகள் மூலம் உணர்வுப்பூர்வமாக சொல்லியிருக்கிறார் இயக்குநர் சற்குணம்.இணையத் தொடர்கள் என்றாலே, கிரைம் சஸ்பென்ஸ் திரில்லர் மற்றும் திகில் பாணியிலான கதைகளை மட்டுமே விறுவிறுப்பாக நகர்த்திச் செல்ல முடியும், என்ற கண்ணோட்டத்தை உடைத்து, சமூகப் பிரச்சனைகளை பேசும் கதைகளை கூட விறுவிறுப்பான இணையத் தொடராக கொடுக்க முடியும், என்பதை நிரூபித்திருக்கும் இயக்குநர் சற்குணம், பல உண்மை சம்பவங்களை மிக தைரியமாக காட்சிப்படுத்தி அரசு எந்திரத்தின் கோளாறுகளை மிக நுணுக்கமாக சுட்டிக்காட்டியிருக்கிறார் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் துஷாரா விஜயன் மற்றும் அதிதி பாலன் இருவரும் தங்களது வேலையை மிக சரியாக செய்திருக்கிறார்கள். துஷாரா விஜயனின் அழுத்தமான நடிப்பு, அரசு பணிக்காக கடுமையாக படித்தும் பலன் பெறாமல், பணம் மற்றும் அதிகாரத்திற்கு முன்பு தோற்றுப்போகும் ஏழை மக்களை பிரதிபலித்திருக்கிறது.


அதிதி பாலன், பணம் இருந்தால் எதையும் குறுக்கு வழியில் சாதிக்க முடியும், என்ற எண்ணத்தில் வாழும் மேல்தட்டு மக்களின் மனநிலையை தன் நடிப்பில் சிறப்பாக வெளிக்காட்டியிருக்கிறார்.அரசு தேர்வு மற்றும் காவல்துறையை சார்ந்த கதை என்பதால், காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவலர்களாக பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். அவர்களில் பெரும்பாலனவர்கள் அதிகம் பரிட்சயம் இல்லாதவர்களாக இருந்தாலும் அவர்களது நடிப்பு கதாபாத்திரத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது. சப் இன்ஸ்பெக்டர் செழியன் வேடத்தில் நடித்திருக்கும் பப்ளிக் ஸ்டார் துரை சுதாகர், வழக்கம் போல் தனது எதார்த்தமான நடிப்பின் மூலம் கவனம் ஈர்க்கிறார். கதையின் மிக முக்கியமான கதாபாத்திரமாகவும், திரைக்கதையின் திருப்பமாகவும் பயணப்பட்டிருக்கும் பப்ளிக் ஸ்டார் துரை சுதாகர், ஆரம்பத்தில் ஏதோ செய்யப் போகிறார், என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தி திடீரென்று காணாமல் போனாலும், கிளைமாக்ஸில் தனது இருப்பை அழுத்தமாக பதிவு செய்து பாராட்டு பெற்று விடுகிறார்.இசை, ஒளிப்பதிவு, படத்தொகுப்பு என அனைத்தும் மிக நேர்த்தியாக இருக்கிறது. கதை முழுவதும் மலைப்பிரதேசத்தில் நடப்பதால் காட்சிகள் கண்களுக்கு விருந்து படைத்திருக்கிக்கிறது. பின்னணி இசை காட்சிகளின் வேகத்திற்கும், விறுவிறுப்புக்கும் முக்கியத்துவம் கொடுப்பதை விட கதாபாத்திரங்களின் உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து பயணித்திருக்கிறது. படத்தொகுப்பும் திரைக்கதையை தொய்வின்றி நகர்த்தி செல்கிறது எழுதி இயக்கியிருக்கும் சற்குணம், தமிழ்நாட்டில் நடைபெற்ற அரசு தேர்வு மோசடிகளையும், அதன் பின்னணியையும் உண்மைக்கு நெருக்கமாக சொல்லியிருக்கிறார். இத்தகைய மோசடிகள் எப்படி நடக்கிறது ?, யார் மூலமாக நடக்கிறது ?, என்பதை மிக விரிவாக காட்சிப்படுத்தியிருக்கும் இயக்குநர் சற்குணம், இத்தகைய மோசடிகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கான தீர்வை சொல்லவில்லை என்றாலும், இதனால் நடுத்தர மக்கள் எப்படி பாதிக்கப்படுகிறார்கள் என்பதை மனதுக்கு நெருக்கமாக பதிவு செய்திருக்கிறார். முதல் மூன்று அத்தியாயசங்கள் நம் கவனத்தை முழுமையாக ஈர்த்து விடுவது போல், அடுத்தடுத்த அத்தியாயங்கள் இல்லாதது சிறு குறையாக இருந்தாலும், இதுவரை சொல்லப்படாத மற்றும் சொல்ல வேண்டிய மிக முக்கியமான பிரச்சனைனையை எந்தவித சமரசமும் இன்றி சொல்லியிருக்கும் இயக்குநர் சற்குணம், அதை ஒரு சுவாரஸ்யமான இணையத் தொடராக கொடுத்து வெற்றி பெற்றிருக்கிறார்.


மொத்தத்தில், ‘எக்ஸாம்’ குழுவினர் அதிக மதிப்பெண்ணில் தேர்ச்சி பெற்று விட்டனர்.

சட்டென்று மாறுது வானிலை’ திரைப்பட விமர்சனம்

 சட்டென்று மாறுது வானிலை’ திரைப்பட விமர்சனம்


ஐடி ஊழியரான ஜெய், மீனாட்சியை பார்த்ததும் காதல் வயப்படுகிறார். மறுநாளே தன் காதலை சொல்லி அவரை திருமணம் செய்து கொள்கிறார். தேன்நிலவுக்காக கொடைக்கானல் செல்லும் ஜெய் – மீனாட்சி தம்பதி, கருடா ராம் நடத்தும் சொகுசு விடுதியில் தங்குகிறார்கள். அங்கு அவர்களுக்கு ஒரு சிக்கல் ஏற்படுகிறது. மறுபக்கம், ஜெய் – மீனாட்சி தம்பதியை பிரித்து, மீனாட்சிக்கு மறுமணம் செய்து வைக்க அவரது அமைச்சர் தந்தை முயற்சிக்கிறார்.சொகுசு விடுதியின் சிக்கல் மற்றும் மனைவியை தன்னிடம் இருந்து பிரிக்க நடக்கும் சதி ஆகியவற்றில் ஜெய் சிக்கி தவிக்க, திடீரென்று மீனாட்சி காணாமல் போய் விடுகிறார். அதற்கு ஜெய் தான் காரணம் என்று சந்தேகிக்கும் போலீஸ் அவரை கைது செய்கிறது. மகிழ்ச்சியாக தொடங்கிய திருமண வாழ்க்கை, சட்டென்று உருவெடுத்த பல சிக்கல்களில் சிக்கிக்கொள்ள, அத்தனை சிக்கல்களையும் ஜெய் தீர்த்து மீண்டும் தன் மனைவியுடன் சேர்ந்தாரா? இல்லையா ? என்பது தான் படத்தின் மீதிக்கதை.நாயகனாக நடித்திருக்கும் ஜெய், வழக்கம் போல் தன் துள்ளல் நடிப்பை வெளிப்படுத்தியிருந்தாலும், விஜய் ரசிகர் என்ற அடையாளத்துடன், விஜய் போல் வெளிப்படையாக நடித்திருக்கிறார். அது சில காட்சிகளில் அவருக்கு கை கொடுத்தாலும், பல காட்சிகளில் அவரை பலவீனப்படுத்தியிருக்கிறது. காதல் காட்சிகளிலும், கண்கலங்கும் காட்சிகளிலும் முதிர்ச்சியான நடிப்பை வெளிப்படுத்தி அசத்தியிருக்கிறார்.


நாயகியாக நடித்திருக்கும் மீனாட்சி கோவிந்தராஜன் அழகிலும், நடிப்பிலும் கவர்கிறார். தந்தை மீதான கோபம், நண்பர் மீதான வெறுப்பு, கணவர் மீதான காதல் என்று பல்வேறு உணர்வுகளை அளவாக கையாண்டு பாராட்டு பெறுகிறார்.ஜெயின் நண்பராக நடித்திருக்கும் யோகி பாபு, வழக்கமான தனது டைமிங் வசனங்கள் மூலம் சிரிக்க வைக்க முயற்சித்திருப்பதோடு, இரட்டை அர்த்த வசனங்களையும் வாரி வழங்கியிருக்கிறார். ஆனால், அவரது எந்த முயற்சியும் பார்வையாளர்களை சிரிக்க வைக்கவில்லை. கவுண்டமணிக்கு செந்தில் போல், யோகி பாபுவிடம் அடி வாங்கும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஆதித்யா கதிர் சில இடங்களில் சிரிக்க வைக்கிறார்.வில்லனாக நடித்திருக்கும் கருடா ராம், சத்யன், ஸ்ரீமன், சரவண சுப்பையா என மற்ற கதாபாத்திரங்களில் நடித்திருப்பவர்கள் தங்களது வேலையை சரியாக செய்திருக்கிறார்கள்.


ஒளிப்பதிவாளர் ரிச்சர்ட் எம்.நாதன், படத்தை கலர்புல்லாக காட்சிப்படுத்தியிருக்கிறார். நாயகன், நாயகி இருவரையும் அழகாக காட்டியிருப்பவர், காட்சிகளை தரமாக படமாக்கி ரசிக்க வைத்திருக்கிறார் கிரிஷ் கோபாலகிருஷ்ணனின் இசையில் பாடல்கள் அனைத்தும் துள்ளல் ரகம். இரைச்சல் இல்லாத பின்னணி இசை காட்சிகளின் விறுவிறுப்புக்கும், திரைக்கதை வேகத்திற்கும் கைகொடுத்திருக்கிறது.


படத்தொகுப்பாளர் டார்லிங் ரிச்சர்ட்சன், காட்சிகளை தொகுத்ததிலும், கதை நகர்த்தலிலும் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம்.


எழுதி இயக்கியிருக்கும் பாபு விஜய், தொழில்நுட்பம் மற்றும் இணையம் மூலம் மனிதர்களின் அந்தரங்கங்கள் எப்படி திருடப்படுகிறது, என்ற உண்மையை கமர்ஷியலாக சொல்லியிருக்கிறார்.இளமை ததும்பும் காதல், திருப்பங்கள் நிறைந்த திரைக்கதை, அதிர்ச்சிகரமான சம்பவங்கள் ஆகியவற்றின் மூலம் பார்வையாளர்களை படத்துடன் ஒன்றிவிட செய்யும் இயக்குநர் பாபு விஜய், கதை சொல்லலில் கூடுதல் கவனம் செலுத்தியிருந்தால் படம் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியிருக்கும்.


மொத்தத்தில் ’சட்டென்று மாறுது வானிலை’ வெற்றி பெறும்