-

Loading latest news...

பிரேக்ஃபாஸ்ட்’ (BreakFast) திரைப்பட விமர்சனம்

 பிரேக்ஃபாஸ்ட்’ (BreakFast) திரைப்பட விமர்சனம்


ஒவ்வொறு காலக்கட்டத்திற்கு ஏற்ப மாறும் காதலை, தற்போதைய இளைஞர்கள் எப்படி பார்க்கிறார்கள், வேகமான வாழ்க்கைச் சூழல் கொண்ட தற்போதைய காலக்கட்டத்தில் இளைஞர்கள் மனதில் அவசர அவசரமாக தோன்றும் காதல், அவர்கள் தம்பதியான உடன் அதை விட வேகத்தில் எப்படி பிரிவை நோக்கி பயணிக்கிறார்கள், என்பதை உணர்வுப்பூர்வமாக சொல்ல முயற்சித்திருப்பது தான் இப்படத்தின் கதைக்கரு. தொழிலதிபரின் மகளான நாயகி ரோஸ்மின், சரியான வேலையின்றி கஷ்ட்டப்படும் கிராமத்து இளைஞர் நாயகன் ராணவுக்கு தனது நிறுவனத்தில் வேலை கொடுக்கிறார். இவர்களது நட்பு காதலாக மாற, இவர்களது காதலுக்கு நாயகியின் தந்தை எதிர்ப்பு தெரிவிக்கிறார். தந்தையின் எதிர்ப்பை மீறி ராணவை திருமணம் செய்து கொள்ளும் ரோஸ்மின், தனது நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் பதவியை அவருக்கு கொடுத்து, வசதியான வாழ்க்கையை அமைத்து கொடுக்கிறார். ஆனால், இவர்களது மணவாழ்க்கையில் காதலர்களாக இருந்த போது இருந்த மகிழ்ச்சி, அன்பு பரிமாற்றம் மறைந்து, மோதலும், வெறுப்பும் அதிகரிக்கிறது. அதற்கு என்ன காரணம் ?, இப்படி காதலித்த வேகத்தை விட அதீத வேகத்தில் பிரிய வேண்டும், என்ற முடிவு எடுத்த இவர்கள் மீண்டும் சேர்ந்தார்களா ? இல்லையா ? என்பது தான் படத்தின் கதை. நாயகனாக நடித்திருக்கும் பிக் பாஸ் புகழ் ராணவ், முதல் படம் போல் அல்லாமல் நேர்த்தியாக நடித்திருக்கிறார். குடும்பத்திற்காக உழைக்கும் இளைஞர், பெற்றோரை சரியாக கவனித்துக்கொள்ள முடியாமல் கலங்கும் மகன், மனைவியின் பணத்திமிரால் பாதிக்கும் கணவர் என பல்வேறு மன போராட்டங்களை தன் நடிப்பில் சிறப்பாக பிரதிபலித்திருக்கிறார் நாயகியாக நடித்திருக்கும் அறிமுக நடிகை ரோஸ்மின், முதல் படத்திலேயே அழுத்தமான கதாபாத்திரத்தில் அளவாக நடித்து கவனம் ஈர்க்கிறார். பணக்கார பெண்களுக்கு இருக்கும் அதிரடி செயல்களையும், மற்றவர்களை மதிக்காத நடவடிக்கைகளையும் தன் நடிப்பில் சரியாக பிரதிபலித்திருப்பவர், தற்போதைய காலக்கட்டத்தில் மட்டும் அல்ல, எப்போதுமே மனைவி என்பவர் இப்படி தான்...!, என்பதை தனது ஒவ்வொரு அசைவுகளிலும் வெளிக்காட்டி ஆண்களுக்கு அச்சத்தை மூட்டுகிறார் மற்றொரு நாயகன், நாயகியாக நடித்திருக்கும் கிரித்திக் மோகன் - அமிதா ரங்கநாத் ஜோடி, வயதுக்கு ஏற்ப துள்ளல் மற்றும் மோதல் நடிப்பை வெளிப்படுத்தி திரைக்கதைக்கு பலமாக பயணித்திருக்கிறார்கள். நாயகியின் தந்தையாக நடித்திருக்கும் சம்பத் ராஜ், மருத்துவராக நடித்திருக்கும் கஸ்தூரி, நாயகனின் அம்மாவாக நடித்திருக்கும் அர்ச்சனா ஆகியோரது அனுபவம் வாய்ந்த நடிப்பு படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது.


 


எம்.வி.பன்னீர் செல்வத்தின் ஒளிப்பதிவு கலர்புல்லாக, கண்ணுக்கு குளிர்ச்சியளிக்கும் விதத்தில் அமைந்திருக்கிறது. ஜி.வி.பிரகாஷ் குமாரின் இசை என்றால் யாரும் நம்ப மாட்டார்கள், அந்த அளவுக்கு பாடல்களில் அவரது திறன் வெளிப்படவில்லை. பின்னணி இசைக்கும் அதே நிலை தான். எஸ்.பாஸ்கர் மற்றும் சுஜித் ஆகியோரது படத்தொகுப்பு, கதாபாத்திரங்களிடத்தில் இருக்கும் உணர்வுகளை பார்வையாளர்களிடத்தில் கடத்தியிருக்கிறது.

தற்போதைய காலக்கட்டத்தில், சோசியல் மீடியா அறிமுகம், அடுத்த நாளே காதல் பரிமாற்றம், உடனே கல்யாணம் என்று அவசரம் அவசரமாக முடிவு எடுக்கும் இளைஞர்கள், அதை விட அவசரமாக பிரிவு முடிவையும் எடுப்பது ஏன்? என்ற கேள்விக்கு உணர்வுப்பூர்வமாக பதிலளித்திருக்கும் இயக்குநர் ஏ.ஆர்.காந்தி கிருஷ்ணா, தற்போதைய காலக்கட்டத்தில் தம்பதியினர் இடையே ஏற்படும் பிரிவுக்கு காரணமாக, ஆண்டு ஆண்டு காலமாக நடக்கும் பழைய காரணத்தையே சொல்லியிருக்கிறார் தற்போதைய காலக்கட்ட காதல் மற்றும் காதலர்களைப் பற்றி அதிகம் அலசாமல், குடும்ப பிரச்சனை அதன் மூலம் ஏற்படும் பிரிவு ஆகியவற்றை அதிகமாக பேசியிருக்கும் இயக்குநர் ஏ.ஆர்.காந்தி கிருஷ்ணா, அதை கொஞ்சம் பழைய முறையிலேயே பேசியிருப்பது திரைக்கதையின் வேகத்தையும், காதலில் இருக்கும் சுவாரஸ்யத்தையும் குறைத்து விடுகிறது. அதே சமயம், காதலர்களுக்கும், தம்பதிகளுக்கும் அறிவுரை சொல்லும் விதத்தில் அமைக்கப்பட்ட காட்சிகள் மற்றும் வசனங்கள் நிச்சயம் பார்வையாளர்களை யோசிக்க வைக்கும்.

மொத்தத்தில், ‘பிரேக்ஃபாஸ்ட்’ பிரிவு எண்ணத்தை பின்னுக்கு தள்ளிவிடும்.

பேட்டில்’ (Battle) திரைப்பட விமர்சனம்

 பேட்டில்’ (Battle) திரைப்பட விமர்சனம்


ராப் பாடகாராக சாதிக்க வேண்டும் என்ற லட்சியத்தோடு வாழும் நாயகன் அர்ஜுன் பிரபாகரனும், தனியார் பள்ளி ஆசிரியையான நாயகி ஆராத்யாவும் காதலிக்கிறார்கள். அர்ஜுன் பிரபாகரனின் லட்சியம் நிறைவேறுவதற்கான வாய்ப்பு கிடைக்க, அதை சரியாக பயன்படுத்தி பெரிய ராப் பாடகராக உருவெடுக்கிறார். அவருக்கு வாய்ப்பு கொடுத்தவர்களுக்கும், அவர் மூலம் வெளிநாட்டில் இசை நிகழ்ச்சி நடத்துவதற்கான மிகப்பெரிய வாய்ப்பு கிடைக்கிறது இந்த நிலையில், ஆராத்யா பணிபுரியும் பள்ளியில் நடக்கும் மோசடியால் மாணவர்களும், ஆசிரியர்களும் பெரிதும் பாதிக்கப்படுவதோடு, மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொள்கிறார். பள்ளியில் நடக்கும் மோசடியை ராப் பாடல் மூலம் உலகிற்கு தெரியப்படுத்தி இந்த பிரச்சனைக்கு தீர்வுகாண வேண்டும் என்ற ஆராத்யாவின் விருப்பத்தை அர்ஜுன் பிரபாகரன் நிறைவேற்ற முடிவு செய்கிறார். ஆனால், அவரது இந்த முயற்சி தங்களது வளர்ச்சியை பாதிக்கும் என்று நினைக்கும் இசை நிறுவனம் அதற்கு முட்டுக்கட்டை போடுவதோடு, அவரை மிரட்டவும் செய்கிறது. மறுபக்கம் தனியார் பள்ளி தலைவர் சுப்பிரமணிய சிவா, ஆராத்யாவை கொலை செய்ய முயற்சி செய்கிறார். இவர்களையும், இவர்கள் மூலம் வரும் பிரச்சனைகளையும் சமாளித்து, தாங்கள் நினைத்ததை காதல் ஜோடி வெற்றிகரமாக செய்து முடித்ததா? இல்லையா?, என்பதே படத்தின் மீதிக்கதை. நாயகனாக நடித்திருக்கும் அறிமுக நடிகர் அர்ஜுன் பிரபாகரன், கதாபாத்திரத்திற்கு பொறுத்தமான தேர்வாக இருந்தாலும் நடிப்பில் தடுமாறுகிறார். ராப் பாடல் பாடும் போது, தனது நடிப்பு மற்றும் உடல் மொழியில் புத்துணர்ச்சியை வெளிப்படுத்த தவறியிருப்பதால், அவரது நடிப்பும், ராப் பாடலும் எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை நாயகி ஆரத்யா, அழகு மற்றும் அளவான நடிப்பு என கவர்கிறார். தனது வேலையை குறையின்றி செய்து படத்திற்கு பலமாக பயணித்திருக்கிறார். வில்லனாக நடித்திருக்கும் சுப்பிரமணிய சிவா, வழக்கம் போல் தனது கதாபாத்திரத்திற்கு நியாயம் சேர்த்திருக்கிறார். காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கும் சரவண சுப்பையா, அரசியல்வாதியாக நடித்திருக்கும் முனிஷ்காந்த், சுருளி, காயத்ரி உள்ளிட்ட அனைத்து நடிகர்களும் தங்கள் வேலையை சரியாக செய்திருக்கிறார்கள் ஒளிப்பதிவாளர் யுவராஜ்.ஆர், பொருளாதார கட்டுப்பாட்டினால் காட்சிகளை மிக எளிமையாக படமாக்கியிருந்தாலும், நேரடி லொக்கேஷன்களில் படமாக்கி காட்சிகளின் இயல்பு தன்மையை அதிகரித்திருக்கிறார் இசைக்கு முக்கியத்துவம் உள்ள திரைக்கதை என்பதை மறந்து இசையமைத்திருக்கும் ஜீவா, பாடல்களை தனித்துவம் இன்றி கொடுத்திருக்கிறார். ராப் பாடல்களும், அதன் சூழல்களும் தான் கதைக்களம் என்றாலும், இசையில் பார்வையாளர்களை கவரக்கூடிய அம்சங்கள் மிக மிக குறைவாகவே இருக்கிறது. குறிப்பாக ராப் பாடல்களுக்கான இசை பார்வையாளர்களை எந்தவிதத்திலும் பாதிக்காதது படத்திற்கு பலவீனம். படத்தொகுப்பாளர் காமேஷ்.கே மற்றும் கலை இயக்குநர் இளஞ்செழியன் ஆகியோரது பணி பரவாயில்லை ரகம். கல்வி வியாபரமாக்கப்பட்டாலும், கட்டணத்திற்கு ஏற்ப கல்வியும், மாணவர்களுக்கான வசதியும் இருந்தது. ஆனால், தற்போதைய காலக்கட்டத்தில் கல்வி வியாபாரத்தில் முழுக்க முழுக்க வியாபாரத்தை மட்டுமே பார்க்கும் சில தனியார் பள்ளிகளினால் மாணவர்கள் எதிர்காலம் எப்படி பாழாகிறது என்பதையும், அதில் பணியாற்றும் ஆசிரியர்கள் எப்படி கொத்தடிமைகள் போல் நடத்தப்படுகிறார்கள், என்பதையும் தைரியமாக பேசியிருக்கும் இயக்குநர் நாராயணன்.பி.ஏ, இத்தகை சமூகப் பிரச்சனைகளுக்கு கலை என்ற அரசியல் ஆயுதம் மூலம் தீர்வு காண முடியும் என்பதை அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார் இயக்குநர் நாராயணன்.பி.ஏ, எடுத்துக்கொண்ட கதைக்களம் மற்றும் கலையாலும், கலைஞர்களாலும் பெரும் புரட்ச்சியை ஏற்படுத்தி சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்ற விழிப்புணர்வு பிரசாரம், ஆகியவை பாராட்டும்படி இருந்தாலும், அதை ஒரு சுவாரஸ்யம் மிக்க திரைப்படமாக கொடுக்க தவறியிருக்கிறார். மொத்தத்தில், ‘பேட்டில்’ (Battle) போராட்ட உணர்வை விதைக்கும் 

Dhee – இலங்கையிலிருந்து உலக அரங்கம் வரை – எல்லைகளை கடக்கும் ஒரு குரல்*

Dhee – இலங்கையிலிருந்து உலக அரங்கம் வரை – எல்லைகளை கடக்கும் ஒரு குரல்*



*பின்னணி பாடகி Dhee – ‘VARI VARI’ இசை ஆல்பம் வெளியீட்டிற்காக கொழும்பு வருகை.*


*பின்னணி பாடகி Dhee – ‘VARI VARI’ இசை ஆல்பம் ஏப்ரல் 24 ஆம் தேதி கொழும்புவில் வெளியீடு*


இலங்கையிலிருந்து வந்தும், தமிழர் பண்பாட்டு வேர்களை கொண்ட Dhee, தனது தலைமுறையின் மிகவும் தனித்துவமான மற்றும் உலகளவில் கொண்டாடப்படும் குரல்களில் ஒன்றாக உருவெடுத்துள்ளார்.


இலங்கையிலிருந்து ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரின் படைப்பாற்றல் மிக்க கலைச் சூழலுக்கு சென்ற அவரது பயணம், மரபும் உலகளாவிய தாக்கமும் இணைந்த ஒரு வலிமையான இசை அடையாளத்தை உருவாக்கியுள்ளது.


‘என்ஜாய் என்ஜாமி (Enjoy Enjaami)’ என்ற பண்பாட்டு கீதத்தின் மூலம் Dhee அபாரமான புகழைப் பெற்றார். உலகளவில் பெரும் வரவேற்பைப் பெற்ற இந்தப் பாடல் ஐந்து கோடிக்கும் அதிகமான பார்வைகளை கடந்ததுடன், வேர்கள் மற்றும் அடையாளத்தை கொண்டாடும் அதன் உணர்வால் ரசிகர்களின் மனதில் ஆழமாக பதிந்தது. இந்தப் பாடல் இந்திய சுயாதீன இசையை புதிய பரிமாணத்திற்கு கொண்டு சென்றதோடு, Dhee-யை உலக இசை வரைபடத்தில் உறுதியாக நிலைநிறுத்தியது.


அவரது கலைத்திறன் பரவலாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. ஃபிலிம் ஃபேர் விருதுகள் உள்ளிட்ட பல மதிப்புமிக்க கௌரவங்களை பெற்றுள்ள அவர், சமகால இசை உலகில் முன்னோடி கலைஞராக தனது நிலையை வலுப்படுத்தியுள்ளார்.


மேலும், ‘I Wear My Roots Like A Medal’ மற்றும் ‘Can’t You Stay A Little Longer’ போன்ற சுயாதீன பாடல்கள் மூலம் Dhee தனது கலை ஆழத்தை தொடர்ந்து விரிவுபடுத்தி வருகிறார். இந்தப் பாடல்கள் உணர்வு, அடையாளம் மற்றும் பரிசோதனையான இசை வடிவங்களை ஒருங்கிணைக்கும் அவரது தனித்துவமான திறனை வெளிப்படுத்துகின்றன.


இந்தியா முழுவதும் பெரிதும் விரும்பப்படுவதுடன், உலகளாவிய ரசிகர்களாலும் அதிக அளவில் கொண்டாடப்படும் Dhee, எல்லைகளையும் இசை வகைகளையும் கடந்து நிற்கும் புதிய தலைமுறை கலைஞர்களின் பிரதிநிதியாக திகழ்கிறார்.


தற்போது, தனது சமீபத்திய சுயாதீன பாடலான ‘VARI VARI’ வெளியீட்டிற்காக அவர் கொழும்புக்கு வருகை தந்துள்ளார். எதிர்வரும் 24 ஆம் தேதியன்று கொழும்புவில் இந்த இசை ஆல்ப வெளியீட்டு விழா நடைபெறுகிறது. இந்த வெளியீடு அவரது தொடர்ந்து வளர்ந்து வரும் இசைப் பயணத்தில் மேலும் ஒரு முக்கியமான அத்தியாயமாக அமைகிறது. மேலும், அவரது கதை தொடங்கிய இலங்கை மண்ணுடன் மீண்டும் இணையும் ஒரு சிறப்பு தருணமாகவும் இது விளங்குகிறது.

ஜிவி பிரகாஷ் குரலில், நயன்தாரா – கவின் இணையும் “ஹாய்” பட ஃபர்ஸ்ட் சிங்கிள்*

 *ஜிவி பிரகாஷ் குரலில், நயன்தாரா – கவின் இணையும் “ஹாய்” பட ஃபர்ஸ்ட் சிங்கிள்*



*' கன்னக்குழியா ' வைரலாகிவரும் “ஹாய்” படத்தின் முதல் சிங்கிள் !*


நயன்தாரா – கவின் இணையும் “ஹாய்” திரைப்படம் வெளியீட்டுக்கு முன்பே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், தற்போது இப்படத்தின் முதல் சிங்கிள் பாடல் வெளியாகி ரசிகர்களின் மனதை கவர்ந்து வருகிறது.


“கன்னக்குழியா புதைகுழியா குழப்புறயே” என தொடங்கும் இந்த கலக்கலான காதல் மெலடி, இசையமைப்பாளர் ஜென் மார்டின் இசையில் உருவாகி, ஜிவி பிரகாஷின் இனிமையான குரலில் உயிர் பெற்றுள்ளது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு மனதை வருடும் ஒரு மென்மையான காதல் பாடலாக இது உருவாகியுள்ளது. கேட்கக் கேட்க இதமாக மனசை தொடும் இந்த பாடல், அதன் கவித்துவமான வரிகளாலும், துள்ளலான மெலடியாலும் ரசிகர்களை உடனே கவர்ந்து விடுகிறது.


காட்சியமைப்பிலும் பாடல் தனி மெருகை பெற்றுள்ளது. முதன்முறையாக திரையில் இணையும் நயன்தாரா – கவின் ஜோடி, இந்த பாடலில் கண்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது. இருவரின் ரசனையான கெமிஸ்ட்ரி (chemistry) பாடலின் காதல் உணர்வை மேலும் உயர்த்துகிறது. பாடலின் ஒவ்வொரு ஃப்ரேமும் அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளதால், இது இசையுடன் சேர்ந்து ஒரு முழுமையான காதல் அனுபவமாக மாறியுள்ளது.


Z ஸ்டூடியோஸ், தி ரவுடி பிக்சர்ஸ் மற்றும் 7 ஸ்க்ரீன் ஸ்டுடியோ ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் “ஹாய்” படத்தை விஷ்ணு எடவன் எழுதி இயக்குகிறார். இயக்குனர் லோகேஷ் கனகராஜுடன் “கைதி”, “மாஸ்டர்”, “விக்ரம்” போன்ற படங்களில் பணியாற்றிய அனுபவம் கொண்ட விஷ்ணு எடவன், இந்த படத்தின் மூலம் தனித்துவமான காதல் மற்றும் குடும்ப கதையை கொண்டு வருகிறார்.


இந்தப் படத்தில் நயன்தாரா, கவின் ஆகியோருடன் கே.பாக்யராஜ், பிரபு, ராதிகா, சத்யன், ஆதித்யா கதிர், குரேஷி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.


இப்படம் முழுக்க முழுக்க பொழுதுபோக்கான குடும்ப கதையில் உண்மையான காதலை சொல்லும் வகையில் உருவாகி வருகிறது. முதல் சிங்கிள் மூலம் ரசிகர்களின் மனதை கவர்ந்துள்ள “ஹாய்” படம், அடுத்தடுத்த அப்டேட்களால் மேலும் எதிர்பார்ப்பை கூட்டி வருகிறது. நயன்தாரா – கவின் காம்பொ ஜென் மார்டின் இசை, மற்றும் விஷ்ணு எடவனின் புதிய கதை சொல்லும் முறையுடன், இந்த படம் ஒரு உணர்ச்சி மிக்க காதல் அனுபவமாக மாறும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.


LINK : https://youtu.be/XXo-VzYUIjo

சாம் சி.எஸ். இசையில் உருவாகும் “மகா அவதார் பரசுராம்” – புதிய சினிமா அனுபவம்!*

 *ஹாலிவுட் தரத்தில் சாம் CS இசை – “மகா அவதார் பரசுராம்” மீது உச்ச எதிர்பார்ப்பு!*



*250+ கலைஞர்களுடன் உலகத் தர இசை – சாம் CS அவர்களின் புதிய முயற்சி !!*


*சாம் சி.எஸ். இசையில் உருவாகும் “மகா அவதார் பரசுராம்” – புதிய சினிமா அனுபவம்!*


இந்திய சினிமாவில் தனித்துவமான பின்னணி இசை மற்றும் சவுண்ட் டிசைன் மூலம் தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கியுள்ள இசையமைப்பாளர் சாம் CS தற்போது “மகா அவதார் பரசுராம்” படத்தின் மூலம் மீண்டும் இசை ரசிகர்களுடைய கவனத்தின் மையமாகியுள்ளார்.


“மகாவாதார் நரசிம்மா” படத்தின் மிகப்பெரிய கமர்ஷியல் மற்றும் விமர்சன வெற்றிக்குப் பிறகு, அதன் யூனிவர்ஸை விரிவுபடுத்தும் இந்த புதிய படத்தில் அவர் தொடர்ந்து பணியாற்றுவது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.


இந்த படத்தின் மிகப்பெரிய சிறப்பு என்னவெனில், சாம் CS வழக்கமான முறையை மாற்றி, கதைக்கு முன்கூட்டியே இசையமைத்து முடித்துள்ளார். பொதுவாக காட்சிகள் தயாரான பிறகே இசை அமைப்பது வழக்கம் என்றாலும், இங்கு அதற்கு மாறாக இசையே முதலில் உருவாக்கப்பட்டு, அதனை அடிப்படையாகக் கொண்டு அனிமேஷன் மற்றும் காட்சிகள் வடிவமைக்கப்படுகின்றன. இந்த “music-first” அணுகுமுறை இந்திய சினிமாவில் அரிதாக காணப்படும் ஒன்றாகும். இதனால், இந்த படத்தின் இசை வெறும் பின்னணி இசையாக இல்லாமல், முழுக் கதையின் ஓட்டத்தையும் உணர்வையும் வழிநடத்தும் மைய சக்தியாக மாறியுள்ளது.


மேலும், இந்த படத்தின் தொழில்நுட்ப தரம் மிகப்பெரிய அளவில் உயர்த்தப்பட்டுள்ளது. உலகத் தரத்தில் பணியாற்றிய அனுபவமுள்ள ஹாலிவுட் இசைக் கலைஞர்கள் உட்பட 250-க்கும் மேற்பட்ட சர்வதேச தொழில்நுட்ப நிபுணர்கள் இதில் இணைந்துள்ளனர். இத்தகைய பிரம்மாண்டமான அணியில் சாம் CS தனது இசையை உலகத் தரத்தில் வடிவமைத்து வருகிறார். மிகப்பெரிய ஆர்கெஸ்ட்ரேஷன், ஆழமான சவுண்ட் லேயரிங் மற்றும் விஷுவலுடன் நேரடியாக இணையும் இசை அமைப்பு ஆகியவை இந்த படத்தின் முக்கிய பலங்களாக இருக்கின்றன.


“மகா அவதார் பரசுராம்” படத்தில் முந்தைய பகுதிகளை விட முழுக்க புதிய விஷுவல் மாடல்கள் மற்றும் மேம்பட்ட கிராஃபிக்ஸ் தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படுகின்றன. அதற்கேற்ப, சாம் CS ன் இசையும் புதிய பரிமாணத்தில் உருவாகி வருகிறது.


இப்படத்தில் சாம் CS ஒரு சாதாரண இசையமைப்பாளராக அல்லாமல், கதையின் உணர்வுகளை முன்கூட்டியே வடிவமைக்கும் முக்கிய படைப்பாளராக செயல்படுகிறார். இசையை மையமாகக் கொண்டு உருவாகும் இந்த திரைப்படம், இந்திய சினிமாவில் புதிய முயற்சியாகவும், இசை மற்றும் அனிமேஷன் இணையும் ஒரு வித்தியாசமான அனுபவமாகவும் அமையும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.


சமீபமாக பின்னணி இசைக்கு பெயர் பெற்ற சாம் CS பாடல்களிலும் கலக்கி வருகிறார். அவரது இசையில் சமீபத்தில் வெளியான பாடல்கள் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. தனித்துவமான இசை மற்றும் உணர்வுகளை நுட்பமாக வெளிப்படுத்தும் மெலடிகள் மூலம் தமிழ் மட்டுமல்லாது இந்தியாவின் பல மொழி ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்து வருகிறார். பாலிவுட் தொடங்கி பல மொழிகளில் உருவாகும் திரைப்படங்கள் மற்றும் வெப் சீரிஸ்களில் தற்போது அவர் தீவிரமாக பணியாற்றி வருகிறார்.


அதில் முக்கியமாக புஷ்கர் காயத்ரி இயக்கும் அடுத்த திரைப்படம், ரவிமோகனின் "கராத்தே பாபு", கார்த்தியின் "சர்தார் 2" படங்களில் பணியாற்றி வருகிறார். மேலும் இயக்குநர் H. வினோத் மற்றும் நடிகர் தனுஷுடன் பணியாற்றவுள்ளார். மேலும் பாலிவுட், தெலுங்கு, கன்னட மொழிகளிலும் பல புதிய அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

காந்தி கிருஷ்ணாவின் படங்கள் நாவலை படிப்பது போன்ற அனுபவத்தை பெரிய திரையில் தரும்... ‘பிரேக்ஃபாஸ்ட்’ திரைப்படம் அதுபோன்ற ஒரு பயணம்” – ஜி.வி. பிரகாஷ் குமார்!*

 *“காந்தி கிருஷ்ணாவின் படங்கள் நாவலை படிப்பது போன்ற அனுபவத்தை பெரிய திரையில் தரும்... ‘பிரேக்ஃபாஸ்ட்’ திரைப்படம் அதுபோன்ற ஒரு பயணம்” – ஜி.வி. பிரகாஷ் குமார்!*



பன்முகத் திறமையும் தொடர் வெற்றிகளும்தான் திரைத்துறையில் ஒருவர் நீடித்து நிலைக்க முக்கிய காரணம். அந்த வகையில் இசையமைப்பாளர், நடிகர் என இரண்டு துறைகளிலும் வெற்றிகரமாக வலம் வருபவர் ஜிவி பிரகாஷ். பல மொழிகளிலும் பல்வேறு வகை படங்களிலும் தொடர்ந்து பிஸியாக இருக்கும் ஜிவி பிரகாஷ், இயக்குநர் காந்தி கிருஷ்ணாவுடன் மீண்டும் ‘பிரேக்ஃபாஸ்ட்’ படத்தில் இணைந்திருக்கிறார். இதற்கு முன்பு இவர்கள் இணைந்து பணிபுரிந்த ‘ஆனந்த தாண்டவம்’ படத்திற்குப் பிறகு தற்போது இவர்கள் இணைந்திருக்கும் ‘பிரேக்ஃபாஸ்ட்’ திரைப்படம் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. இப்படம் ஏப்ரல் 24ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. 


படத்தில் பணிபுரிந்த அனுபவம் குறித்து ஜிவி பிரகாஷ் குமார் பகிர்ந்து கொண்டதாவது, “காந்தி கிருஷ்ணா சாருடன் மீண்டும் இணைந்து பணிபுரிந்தது ஸ்பெஷலான அனுபவம். ’ஆனந்த தாண்டவம்’ என் வாழ்க்கையில் முக்கியமான கட்டத்தில் வந்த படம். அந்தப் படத்தில் என்னை நம்பி, ரசிகர்களை சென்றடைந்த இசையை உருவாக்க வாய்ப்பு கொடுத்த காந்தி கிருஷ்ணா சாருக்கு நன்றி. இசையமைப்பாளராக ஒரு வலுவான அடித்தளத்தை எனக்கு அமைத்து கொடுத்த படங்களில் அது முக்கியமானது. மனித உறவுகளை அவர் படங்களில் அணுகும் விதம் எனக்கு மிகவும் பிடிக்கும். ஆழமும், நுணுக்கமும், நேர்மையும் கலந்த அந்த அணுகுமுறையால் அவரது படங்களை ஒரு நாவலை திரையில் காண்பது போல உணர வைக்கும். 


ஒவ்வொரு கதாபாத்திரமும் சொல்லாத ஒரு கதையை பல உணர்வுகளுடன் தன்னுள்ளே மறைத்து வைத்திருக்கும். ‘பிரேக்ஃபாஸ்ட்’ அப்படியான ஒரு படம். இன்றைய காலத்தில் உறவுகளின் சிக்கல்களையும், மனிதர்களின் உணர்வுகளை பற்றியும் இந்தப் படம் திரையில் பேசும். இந்தப் படத்திற்கு இசை அமைக்கும் போது, கதை ஓட்டத்துடன் இயல்பாக கலந்து செல்லும் வகையில் இருக்க வேண்டும் என்று நினைத்தேன். அது காட்சிகளை மீறி ஒலிக்காமல், கதாபாத்திரங்களுடன் சேர்ந்து பயணித்து, அவர்களின் உணர்வுகளை உயர்த்த வேண்டும் என்பதே என் நோக்கம். இந்தப் படத்தின் பாடல்கள் திரையைத் தாண்டியும் ரசிகர்களிடம் நீண்டநாள் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நம்புகிறேன். படத்தை பெரிய திரையில் ரசிகர்களுடன் காண ஆவலாக உள்ளேன்” என்றார். 


*நடிகர்கள்:* ராணவ், ரோஸ்மின், சம்பத் ராஜ், கஸ்தூரி, கிருத்திக் மோகன், அமிதா ரங்கநாத் மற்றும் பலர்.


*தொழில்நுட்பக்குழு விவரம்:*


தயாரிப்பாளர்: கிரிஜா வரதராஜ்,

இயக்குநர்: காந்தி கிருஷ்ணா,

இசை: ஜி.வி. பிரகாஷ் குமார்,

பாடல் வரிகள்: வைரமுத்து மற்றும் விவேக்,

தமிழ்நாடு திரையரங்க விநியோகஸ்தர்: குகன்


உலகம் முழுவதும் ஏப்ரல் 24 அன்று 'பிரேக்ஃபாஸ்ட்' திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகிறது.

உப்பு புளி காரம்' ஹிட் சீரிஸ்

 *'உப்பு புளி காரம்' ஹிட் சீரிஸ் தயாரிப்பு குழுவின் அடுத்த படைப்பாக, புதிய குடும்ப கதையான 'பிரதர்ஸ் அண்ட் சிஸ்டர்ஸ்' தொடரை அறிவித்தது ஜியோஹாட்ஸ்டார்!


*


மே மாதம் ஜியோஹாட்ஸ்டாரில் ப்ரீமியர் ஆகவுள்ள புதிய ஃபேமிலி வெப் சீரிஸான ‘பிரதர்ஸ் அண்ட் சிஸ்டர்ஸ்’ குறித்தான அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. 


ஜியோஹாட்ஸ்டாரில் இதற்கு முன்பு வெளியாகி வரவேற்பு பெற்ற ‘உப்பு புளி காரம்’ தொடரின் தயாரிப்பு குழுவிடமிருந்து வரும் இந்த புதிய தொடர், நவீன குடும்ப உறவுகளை புதுமையாகவும் ஈர்க்கக்கூடிய வகையிலும் சொல்லியிருக்கிறது. நகைச்சுவை, உணர்வுப்பூர்வமான தருணங்கள் மற்றும் அன்றாட வாழ்க்கையின் நெருக்கத்தை இணைக்கும் இந்தக் கதையில் நான்கு உடன்பிறந்தவர்களின் தனித்தனி தொழில், குணநலன் மற்றும் வாழ்க்கைத் தேர்வுகளை சமாளிக்கும் விதத்தையும், குடும்ப பிணைப்பால் ஒன்றிணைந்திருக்கும் உறவுகளையும் மையமாகக் கொண்டுள்ளது.


இந்தத் தொடரில் போஸ் வெங்கட் மற்றும் காயத்ரி சாஸ்த்ரி முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். டெக்ஸ்டைல்ஸ் ஷோரூம் நடத்தி வரும் போஸ் வெங்கட் கட்டுப்பாடான குடும்ப தலைவர். குடும்பத்தை ஒருங்கிணைத்து வைத்திருக்கும் அமைதியான இல்லத்தரசியாக காயத்ரி சாஸ்த்ரி நடித்துள்ளார். மேலும் ராஜ் அய்யப்பா, நிகிலா சங்கர், லூதுஃப், கிஷோர், ஷ்ரவ்னிதா, புரமோதினி உள்ளிட்ட பலரும் இந்தத் தொடரில் நடித்துள்ளனர்.


100 அத்தியாயங்களைக் கொண்ட இந்த வெப்சீரிஸை 'உப்பு புளி காரம்', 'போலீஸ் போலீஸ்' போன்ற தொடர்களை இயக்கிய சிதம்பரம் மணிவண்ணன் இயக்கியுள்ளார். மென்மையான உணர்வுகள், நகைச்சுவை என அனைத்து தரப்பினரும் தொடர்புபடுத்திக் கொள்ளும்படி இந்த தொடர் எடுக்கப்பட்டுள்ளது. 


ஒவ்வொரு வாரமும் ‘பிரதர்ஸ் அண்ட் சிஸ்டர்ஸ்' தொடரின் எபிசோட் வெளியாகும். குடும்ப மதிப்புகள் மற்றும் சமகால வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட இத்தொடர், பார்வையாளர்களுக்கு ஆழமான மற்றும் விறுவிறுப்பான கதையை வழங்க இருக்கிறது.  


தொடரின் கதாபாத்திரங்கள், ஈர்க்கக்கூடிய கதை சொல்லல் என ‘பிரதர்ஸ் அண்ட் சிஸ்டர்ஸ்’ தொடர் ஜியோஹாட்ஸ்டாரின் அசல் உள்ளடக்கங்களில் மற்றுமொரு புதிய வரவு. 


இந்த வருடம், மே மாதம் முதல் 'பிரதர்ஸ் அண்ட் சிஸ்டர்ஸ்' தொடர் ஜியோஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகும்.


*ஜியோஹாட்ஸ்டார் பற்றி:*


ஜியோஹாட்ஸ்டார் இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளங்களில் ஒன்று. இது ஜியோசினிமா மற்றும் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் ஆகியவற்றின் இணைப்பின் மூலம் உருவாக்கப்பட்டது. சிறப்பான கதைக்களங்கள், புதுமையான தொழில்நுட்பத்துடன் ஜியோஹாட்ஸ்டார் இந்தியா முழுவதும் உள்ள அனைவருக்கும் பொழுதுபோக்கை மறுவரையறை செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

இன்றைய தலைமுறையின் உணர்வுகளை பிரதிபலிக்கும் வகையில் காதல் மற்றும் உறவுகளை ‘பிரேக்ஃபாஸ்ட்’ படம் பேசும்”- விநியோகஸ்தர் எஸ். குகன்!*

 *“இன்றைய தலைமுறையின் உணர்வுகளை பிரதிபலிக்கும் வகையில் காதல் மற்றும் உறவுகளை ‘பிரேக்ஃபாஸ்ட்’ படம் பேசும்”- விநியோகஸ்தர் எஸ். குகன்!*



ரசிகர்களின் மனநிலையைப் புரிந்து அர்த்தமுள்ள கதைகளை திரைப்படங்களாக விநியோகம் செய்வதில் விநியோகஸ்தர்களின் பங்கு முக்கியமானது. அந்த வரிசையில், தமிழ்நாட்டின் விநியோக துறையில் குறிப்பிடத்தக்க நபராக விளங்கும் எஸ். குகன், ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் பிரைவேட் லிமிட்டெட் மூலம் மாநிலம் முழுவதும் 56க்கும் மேற்பட்ட படங்களை வெற்றிகரமாக வெளியிட்டுள்ளார். அவரது சொந்தத் தயாரிப்பு நிறுவனத்தின் கீழ் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடத் திரையுலகிலும் அவர் தடம் பதித்திருக்கிறார். 'காந்தாரா', 'கே.ஜி.எஃப் அத்தியாயம் 2', 'குருப்', 'நண்பகல் நேரத்து மயக்கம்', மற்றும் ‘இறுகப்பற்று' போன்ற வெற்றிப் படங்களை தந்ததன் மூலம் அவரது திரை ரசனையை எளிதில் புரிந்து கொள்ளலாம். தற்போது, இயக்குநர் காந்தி கிருஷ்ணாவின் 'பிரேக்ஃபாஸ்ட்' திரைப்படத்தை நாளை (ஏப்ரல் 24) தமிழகம் முழுவதும் வெளியிட எஸ். குகன் தயாராக உள்ளார்.


படம் குறித்து எஸ். குகன் பகிர்ந்து கொண்டதாவது, “‘பிரேக்ஃபாஸ்ட்’ திரைப்படத்தைப் பார்க்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. கதையின் நேர்மை உடனடியாக என்னை ஈர்த்தது. இந்தப் படம், தற்போதைய தலைமுறையின் உணர்வுகளை உண்மையாக பிரதிபலிப்பதுடன், நவீன காதல் மற்றும் உறவுகளை பற்றி நுட்பமாகவும் ஆழமாகவும் பேசுகிறது. உறவுகளை மையமாகக் கொண்ட கதைகளை நுட்பமாக சொல்வதில் தேர்ந்தவர் காந்தி கிருஷ்ணா. அதை ‘பிரேக்ஃபாஸ்ட்’ திரைப்படம் மீண்டும் உறுதி செய்திருக்கிறது. படத்தின் இளம் நடிகர்கள் திறமையாக தங்கள் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஜி.வி. பிரகாஷ் குமாரின் மனதை வருடும் இசை கதைக்கு மேலும் வலு சேர்க்கிறது. உண்மையான, மனதைத் தொடும் திரைப்படங்களைத் தேடும் பர்வையாளர்களுடன் ‘பிரேக்ஃபாஸ்ட்’ ஆழமாக இணையும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்” என்றார்.


*நடிகர்கள்:* ராணவ், ரோஸ்மின், சம்பத் ராஜ், கஸ்தூரி, கிருத்திக் மோகன், அமிதா ரங்கநாத் மற்றும் பலர்.


*தொழில்நுட்பக்குழு விவரம்:*


தயாரிப்பாளர்: கிரிஜா வரதராஜ்,

இயக்குநர்: காந்தி கிருஷ்ணா,

இசை: ஜி.வி. பிரகாஷ் குமார்,

பாடல் வரிகள்: வைரமுத்து மற்றும் விவேக்,


உலகம் முழுவதும் ஏப்ரல் 24 அன்று 'பிரேக்ஃபாஸ்ட்' திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகிறது.

Netflix's 'Made in Korea' movie marks milestone at Rashtrapati Bhavan!*

 *Netflix's 'Made in Korea' movie marks milestone at Rashtrapati Bhavan!*



Amid its global success, Netflix’s Made In Korea, directed by Ra.Karthik and produced by Rise East Entertainment, marks another milestone as lead actor Priyanka Mohan attends the Rashtrapati Bhavan banquet hosted by President Droupadi Murmu in honour of South Korean President Lee Jae Myung.*ராஷ்டிரபதி பவனில் 'மேட் இன் கொரியா' திரைப்படத்திற்கு கிடைத்த அங்கீகாரம்!*


ரா.  கார்த்திக் இயக்கத்தில், ரைஸ் ஈஸ்ட் என்டர்டெயின்மென்ட் தயாரித்த நெட்ஃபிலிக்ஸின் 'மேட் இன் கொரியா' திரைப்படம் உலகளவில் ரசிகர்கள் இடையே வரவேற்பு பெற்றது. படத்தின் வெற்றியை தொடர்ந்து, தென்கொரிய அதிபர் லீ ஜே மியுங்கிற்கு மரியாதை செலுத்தும் விதமாக இந்திய குடியரசு தலைவர் திரௌபதி முர்மு ஏற்பாடு செய்திருந்த ராஷ்டிரபதி பவன் விருந்தில் படத்தின் கதாநாயகி பிரியங்கா மோகன் கலந்துகொண்டதன் மூலம் இந்தப் படம் மற்றொரு மைல்கல்லை எட்டியுள்ளது.

துல்கர் சல்மானின் “ஐ அம் கேம்” (I Am Game ) – படப்பிடிப்பு நிறைவு, ஆகஸ்ட் 2026 உலகமெங்கும் வெளியாகிறது

 *துல்கர் சல்மானின் “ஐ அம் கேம்” (I Am Game ) – படப்பிடிப்பு நிறைவு, ஆகஸ்ட் 2026 உலகமெங்கும்  வெளியாகிறது


!!*


துல்கர் சல்மான் நடித்துள்ள “ஐ ஆம் கேம்” திரைப்படத்தின் படப்பிடிப்பு வெற்றிகரமாக முடிவடைந்துள்ளது. இந்த படம் சுமார் 11 மாதங்கள் நீளமாக, மொத்தம் 156 நாட்கள் படமாக்கப்பட்டுள்ளது. தென்னிந்தியாவின் 100க்கும் மேற்பட்ட இடங்களில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. நஹாஸ் ஹிதாயத் ( Nahas Hidayath )  இயக்கத்தில் உருவாகும் இந்த பெரிய பட்ஜெட் ஆக்ஷன் த்ரில்லர் திரைப்படம், 2026 ஆகஸ்ட் மாதத்தில் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. 


“ஐ ஆம் கேம்” படம், துல்கர் சல்மானின் திரையுலக வாழ்க்கையில் மிகப் பெரிய படமாக உருவாகியுள்ளது. கடந்த ஆண்டு வெற்றி பெற்ற “லோகா” படத்திற்குப் பிறகு Wayfarer Films நிறுவனம் வழங்கும் அடுத்த முக்கிய படமாககும்.  இந்தப் படத்தை துல்கர் சல்மான் மற்றும் ஜோம் வர்கீஸ் இணைந்து தயாரித்துள்ளனர். கதையை ஷஹாபாஸ் ரஷீத் மற்றும் ஆதர்ஷ் சுகுமாரன் இணைந்து எழுதியுள்ளனர்.


இந்த படம் துல்கரின் திரை வாழ்க்கையில் மட்டுமல்லாமல், மலையாள சினிமாவிலேயே மிகப்பெரிய தயாரிப்புகளில் ஒன்றாக உருவாகி வருகிறது. மேலும், இது மிகப்பெரிய வெளியீடாகவும் அமைவயவுள்ளது. இந்த படத்தில் துல்கர் சல்மான் ஸ்டைலிஷான  மாஸ் தோற்றத்தில் காட்சியளிக்கிறார். “RDX” என்ற பிளாக்பஸ்டர் படத்தை இயக்கிய பிறகு, நஹாஸ் ஹிதாயத் இயக்கும் இந்தப் படம், துல்கர் சல்மானின் 40வது திரைப்படமாகும்.


இந்த படத்தில் ஆண்டனி வர்கீஸ், தமிழ் நடிகரும் இயக்குனருமான மிஷ்கின், கயாது லோஹர், கதிர், பார்த் திவாரி மற்றும் சம்யுக்தா விஸ்வநாதன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஜேக்ஸ் பிஜாய் இசையமைக்கிறார். ஆக்ஷன் காட்சிகளை அன்பறிவ் மாஸ்டர்கள் வடிவமைத்துள்ளனர். 


படத்தின் முதல் மற்றும் இரண்டாம் லுக் போஸ்டர்கள் முன்பே வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. “ஐ அம் கேம்” திரைப்படம் தமிழ்,  மலையாளம், தெலுங்கு, இந்தி மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் பான்-இந்தியா அளவில் வெளியாக உள்ளது.


தொழில்நுட்ப குழு விவரங்கள்:


லைன் தயாரிப்பாளர்: பிபின் பெரும்பில்லி

ஒளிப்பதிவு: ஜிம்ஷி காலித்

இசை: ஜேக்ஸ் பிஜாய்

எடிட்டிங்: சமன் சாக்கோ

தயாரிப்பு நிர்வாகிகள் : சுஜோய் ஜேம்ஸ், தேவதேவன்

தயாரிப்பு வடிவமைப்பு: அஜயன் சாலிசேரி

மேக்கப்: ரோனெக்ஸ் சேவியர்

உடை வடிவமைப்பு: மஷார் ஹம்சா

தயாரிப்பு ஒருங்கிணைப்பு : தீபக் பரமேஸ்வரன்

உதவி இயக்குநர் : ரோஹித் சந்திரசேகர்

பாடல்வரிகள் : மனு மஞ்சித், விநாயக் சசிகுமார்

VFX   : தௌஃபீக் (எக்வொயிட்)   (Eggwhite)

போஸ்டர் வடிவமைப்பு: டென் பாயிண்ட்

ஒலி வடிவமைப்பு: சிங்க் சினிமா

சவுண்ட்  மிக்ஸ்: கண்ணன் கணபதி

ஸ்டில்ஸ்: எஸ்.பி.கே

மார்க்கெட்டிங் தலைவர் : விஜீத் விஸ்வநாதன்

மக்கள் தொடர்பு : யுவராஜ்


*Dulquer Salmaan’s “I Am Game” Wraps Shoot; Set for August 2026 Release*


The shooting of Dulquer Salmaan’s film “I Am Game” has been completed. The film was shot over a span of 11 months, covering around 156 days. It was filmed across more than 100 locations in South India. Directed by Nahas Hidayath, this big-budget action thriller is slated for a worldwide theatrical release in August 2026. “I Am Game” is being touted as the biggest film in Dulquer Salmaan’s career and its next big thing from Wayfarer Films after the massive success of "Lokah" last year. The film is produced by Dulquer Salmaan and Jom Varghese under the banner of Wayfarer Films. The script is jointly written by Shahabas Rasheed and Adarsh Sukumaran.


Not just the biggest in Dulquer’s career, the film is also being mounted as one of the biggest productions in Malayalam cinema and is gearing up to be one of the largest releases in the industry. Dulquer Salmaan will be seen in a stylish and mass avatar in the film. “I Am Game” is directed by Nahas Hidayath after the blockbuster RDX, and marks Dulquer Salmaan’s 40th film.


The film features a stellar cast including Antony Varghese, Tamil actor-director Mysskin, Kayadu Lohar, Kathir, Parth Tiwari, and Tamil actress Samyuktha Viswanathan. The music is composed by Jakes Bejoy, while action choreography is handled by Anbariv Masters. The first look and second look posters of the film were released earlier and received massive attention from audiences. The film will have a pan-Indian theatrical release in Malayalam, Tamil, Telugu, Hindi, and Kannada.


Line Producer: Bibin Perumbilly, Cinematography: Jimshi Khalid, Music: Jakes Bejoy, Editing: Chaman Chacko, Production Heads: Sujoy James, Devadevan, Production Designer: Ajayan Chalissery, Makeup: Ronex Xavier, Costume: Mashar Hamsa, Production Controller: Deepak Parameswaran, Associate Director: Rohith Chandrasekhar, Lyrics: Manu Manjith, Vinayak Sasikumar, VFX: Thoufeeq (Eggwhite), Poster Design: Ten Point, Sound Design: Sync Cinema, Sound Mix: Kannan Ganapathy, Stills: SBK, Marketing Head: Vijeeth Viswanathan. Pro : Yuvraaj