-

Loading latest news...

நூறு சாமி' படத்தை காண திரையரங்கத்திற்கு வரலாம்.

 இருக்கும். என்னுடைய இந்த உறுதி மொழியை ஏற்று தாராளமாக அனைவரும் 'நூறு சாமி' படத்தை காண திரையரங்கத்திற்கு வரலாம்.



இந்தப் படத்திற்கு எனக்கு இரண்டு பாஸ் ( Boss) ஒன்று இந்த கதையை நம்பி முதலீடு செய்து தயாரித்த தயாரிப்பாளர் விஜய் ஆண்டனி. இந்த பாஸ்- படத்தை பார்த்துவிட்டு பாராட்டு தெரிவித்தார்.


என்னுடைய இரண்டாவது பாஸ் ரசிகர்கள். அவர்களும் தயாரிப்பாளர் விஜய் ஆண்டனியின் பாராட்டை தான் தெரிவிப்பார்கள் என்று நான் நம்பிக்கையுடன் சொல்கிறேன்.


ரசிகர்களிடம் இந்த திரைப்படம் நல்ல திரைப்படம் என்று ஊடகங்களும் அறிமுகப்படுத்தும் என நம்புகிறேன்.


இந்த கதையை நான் எங்கிருந்து எடுத்தேன் என்றால்... தொலைக்காட்சியில் ஒரு ரியாலிட்டி ஷோ நடைபெறுகிறது. அந்த ஷோவில் ஒரு அம்மாவும், மகனும் கலந்து கொள்கிறார்கள். அவர்கள் பகிர்ந்து கொண்ட விசயத்திலிருந்து தான் இப்படத்தின் கதை உருவானது.


தாயை ஒரு மகன் தெய்வமாகப் பார்த்தான்- அது பிச்சைக்காரன்.


ஒரு மகன், தாயை மனுஷியாக பார்த்தான்- அது நூறு சாமி.


இந்த கதையின் நிஜ நபரான பாஸ்கரை இப்போது மேடைக்கு அழைக்கிறேன். அவருடைய வாழ்வில் நடைபெற்ற விசயங்கள்தான் இப்படத்தின் கதை.


இந்த படத்தைப் பார்த்த பிறகு அனைவரும் தங்களது அம்மாவை மனுஷியாக பார்ப்பார்கள் '' என்றார்.


தயாரிப்பாளர் - நடிகர் விஜய் ஆண்டனி பேசுகையில், '' என்னுடைய வாழ்க்கையில் மூன்று திருப்புமுனைகள். அதில் ஒன்று 'டிஷ்யூம்' படத்தில் இயக்குநர் சசி எனக்கு வழங்கிய வாய்ப்பு.. இரண்டாவது திருப்புமுனை 'பிச்சைக்காரன்'. இந்தப் படம் ரசிகர்களின் மனதில் இன்றும் நிலைத்திருக்கிறது. மூன்றாவது திருப்புமுனை.. இந்தப் படத்தில் என்னை 'லவ்வர் பாய்' ஆக மாற்றியது. இதன் பிறகு எனக்கு லவ்வர் பாய் கேரக்டர்கள் கிடைக்கும் என்று நம்புகிறேன்.


இந்தப் படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் நன்றி. இந்தப் படம் ரசிகர்களாகிய உங்கள் அனைவருக்கும் பிடிக்கும். பெண்களுக்கு மிக மிக அவசியமான படம். சமுதாயத்தில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய படம். உங்களது வீட்டில் அம்மா -அக்கா- தங்கை- என எல்லாருக்குமான மிக முக்கியமான படம். இந்தப் படம் உங்களை ஒருபோதும் ஏமாற்றாது'' என்றார்.

ஆட்டி – திரை விமர்சனம்

 ஆட்டி – திரை விமர்சனம் 



நடிகர்கள் :இசக்கி கார்வண்ணன்,அபி நட்சத்திரா,காதல் சுகுமார், மற்றும் பலர்.


இசை: தீசன்,


ஒளிப்பதிவு : சிபி சதாசிவம்,


இயக்கம்:இசக்கி கார்வண்ணன். பழங்காலத்தில் தமிழ்ப்பெண்களின் நிலை என்னவாக இருந்தது என்கிற ஒப்பீட்டளவில் முக்கியத்துவம் ஏற்படுத்தியிருக்கும் படம்.


 


தமிழகத்தின் பல பகுதிகளிலும் கடும் குற்றவாளிகளை சட்டத்தால் தண்டிக்க.வழியின்றி அவர்களை என்கவுண்டர் செய்து விட்டு, அதன் தண்டனையாக மாற்றல் வாங்கிக் கொண்டிருக்கும் இன்ஸ்பெக்டர் இசக்கி கார்வண்ணன் அதேபோல் மாற்றலாகி ஒருமலைப்பகுதிக்கு வருகிறார். எந்தக் குற்றமும் பதிவாகாத அந்தப் பகுதியில் காவல் நிலையம் இருப்பதே ஆச்சரியமாக இருக்க, அதுவே இசக்கிக்கு ஆர்வத்தைத் தூண்டுகிறது.


1880 களில் வெள்ளையர்கள் காலத்தில் தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் தேயிலை தோட்டத்தில் பணிபுரிய மக்களை வரவழைத்து அங்கே பணி அமர்த்தியதில் அவர்கள் பரம்பரையாக அங்கே வாழ்ந்து வருகிறார்கள். கல்வியறிவு இல்லாத அந்த கிராமத்து மக்களின் அடுத்த.தலைமுறையாவது கல்வி அறிவு.பெற வேண்டும் என்ற அடிப்படையில் அங்கு வரும் என் ஜி ஓ ஆசிரியர்கள் மூலமாக கல்வியறிவு பெற்ற அபி நட்சத்திரா கல்வி பயிற்றுவித்து வருகிறார்.


அப்படி அங்கே புதிதாக வரும் ஒரு என் ஜி ஓ ஆசிரியர் , அபி நட்சத்திராவிடம் அத்து மீறி நடக்க முயல, கொதித்துப்போன அபி அவரை அறைந்து விடுகிறார். அதைத்தொடர்ந்து அந்த ஆசிரியர் மர்மமாக இறந்து போக, இன்ஸ்பெக்டர் இசக்கி கார்வண்ணனுக்கு வேலை வருகிறது.


அவர் துப்புத்துலக்க ஆரம்பிக்க, அந்த கிராமத்தை பற்றிய முன்கதை, அங்கு போலீஸ் ஸ்டேஷன் உருவான வரலாறு என்று எல்லா மர்மங்களும் விலக ஆரம்பிக்கிறது. அது தமிழ் ஆதிக்குடியில் பெண்கள் நிலை எவ்வாறு இருந்தது என்று பெருமைபடச் சொல்லும் கதையாக அமைகிறது

*Prime Video Announces June 18 as the Exclusive Global Streaming Premiere of Drishyam 3*

 *பிரைம் வீடியோ, ஜூன் 18 முதல் உலகளாவிய அளவில் “திரிஷ்யம் 3” திரைப்படத்தின் பிரத்யேக ஸ்ட்ரீமிங் வெளியீட்டை அறிவித்துள்ளது.*



ஜீத்து ஜோசப் எழுதி இயக்கியுள்ள இந்த திரில்லர்-டிராமா திரைப்படம், PEN Studios மற்றும் Panorama Studios வழங்க, ஆண்டனி பெரும்பாவூர் தயாரிப்பில் Aashirvad Cinemas நிறுவனம் மூலம் உருவாகியுள்ளது. மோகன்லால், மீனா மற்றும் சித்திக் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கடந்த கால தவறுகள் மீண்டும் உயிர்ப்பெற்று ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தும் சூழலில், தனது குடும்பத்தை காப்பாற்றும் பாதுகாவலனாக ஜார்ஜ்குட்டி மீண்டும் களமிறங்குகிறார்.


இந்தியாவிலும் உலகம் முழுவதும் 200-க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிராந்தியங்களிலும் உள்ள ப்ரைம் சந்தாதாரர்கள், த்ரிஷ்யம் 3 திரைப்படத்தை மலையாளம், மேலும் தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளில் டப் செய்யப்பட்ட பதிப்புகளுடன், ஜூன் 18 முதல் பிரைம் வீடியோவில் பிரத்யேகமாக காணலாம்.



இந்தியாவின் மிகவும் விரும்பப்படும் பொழுதுபோக்கு தளமான பிரைம் வீடியோ, இந்திய சினிமாவின் மிகவும் கொண்டாடப்படும் திரில்லர்-டிராமா திரைப்படத் தொடர்களில் ஒன்றான த்ரிஷ்யம் திரைப்படத் தொடரின் அடுத்த அத்தியாயமான “திரிஷ்யம் 3” திரைப்படத்தின் உலகளாவிய பிரத்யேக ஸ்ட்ரீமிங் வெளியீட்டை இன்று அறிவித்துள்ளது.


தனித்துவமான திரைக்கதை, எதிர்பாராத திருப்பங்கள் மற்றும் விறுவிறுப்பான நடிப்பால் ரசிகர்களின் மனதில் தனி இடம்பிடித்துள்ள இந்தத் திரைப்படத் தொடர், மொழிகளையும் எல்லைகளையும் தாண்டி பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. ஜீத்து ஜோசப் எழுதி இயக்கியுள்ள இப்படம், Pen Studios மற்றும் Panorama Studios வழங்க, ஆண்டனி பெரும்பாவூர் தயாரிப்பில் Aashirvad Cinemas மூலம் உருவாகியுள்ளது.


மோகன்லால், மீனா மற்றும் சித்திக் மீண்டும் இணைந்து நடித்துள்ள இந்தப் படம், ஜார்ஜ்குட்டி மற்றும் அவரது குடும்பத்தின் வாழ்க்கைக்குள் பார்வையாளர்களை மீண்டும் அழைத்துச் செல்கிறது. திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிய பிறகு, திரிஷ்யம் 3 ஜூன் 18 முதல் பிரைம் வீடியோவில் மலையாளம் மற்றும் தமிழ், தெலுங்கு, கன்னட டப்பிங் பதிப்புகளுடன் உலகம் முழுவதும் வெளியாகிறது.


திரிஷ்யம் 2 சம்பவங்களுக்குப் பிறகு, ஜார்ஜ்குட்டி தனது குடும்பத்திற்கு பாதுகாப்பான எதிர்காலத்தை உருவாக்கியுள்ளார். தனது கடந்தகால அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டு ஒரு வெற்றிகரமான திரைப்படத்தையும் உருவாக்கியுள்ளார். ஆனால் கடந்த காலம் புதைக்கப்பட்ட இடத்திலேயே நிலைத்திருக்க மறுக்கிறது.


அந்தத் திரைப்படத்தின் உண்மைக் கதையை ஆராயத் தொடங்கும் இரு பத்திரிகையாளர்கள் மற்றும் அவரது மகள் அஞ்சுவுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட திருமண முயற்சி, உயிருக்கு ஆபத்தான சதியாக மாறும்போது, ஜார்ஜ்குட்டி தனது வாழ்க்கையின் மிகவும் உணர்ச்சிப்பூர்வமான மற்றும் ஆபத்தான போராட்டத்தில் சிக்கிக்கொள்கிறார்.


பழைய எதிரிகள் புதிய நோக்கத்துடன் மீண்டும் வர, பயம், குற்றவுணர்வு மற்றும் சந்தேகங்கள் அவரைச் சூழ்ந்துகொள்ளும் சூழலில், தனது குடும்பத்தையும் அவர்கள் பகிர்ந்து கொள்ளும் ரகசியங்களையும் காப்பாற்ற ஜார்ஜ்குட்டி மீண்டும் தனது புத்திக்கூர்மையை நம்ப வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.


*பிரைம் வீடியோ இந்தியாவின் Content Licensing பிரிவின் இயக்குநரும் தலைவருமான மனீஷ் மெங்கானி கூறுகையில்..,* 


“இந்திய சினிமாவில் திரிஷ்யம் போன்ற சாதனையை நிகழ்த்திய திரைப்படத் தொடர்கள் மிகக் குறைவு. ஒரு தசாப்தத்திற்கு முன்பு மலையாளத்தில் தொடங்கிய இந்தக் கதை, இன்று மொழிகளையும் நாடுகளையும் தாண்டி கொண்டாடப்படுகிறது. ஜீத்து ஜோசப்பும் மோகன்லாலும் இணைந்து உருவாக்கிய இந்த மூன்று திரைப்படங்கள், நீடித்த கதை சொல்லலின் சிறந்த உதாரணமாகும். ஜார்ஜ்குட்டி இனி ஒரு கதாபாத்திரம் மட்டுமல்ல; இந்திய சினிமாவின் கூட்டு நினைவின் ஒரு பகுதியாக மாறியுள்ளார். இந்தியாவின் மிக வெற்றிகரமான திரைப்படத் தொடர்களில் ஒன்றான திரிஷ்யம் 3-ஐ உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களிடம் கொண்டு செல்லும் வாய்ப்பு கிடைத்ததில் பெருமை கொள்கிறோம்,” என்றார்.




*இயக்குநர் ஜீத்து ஜோசப் கூறுகையில்..,*


“திரிஷ்யம் 3 மூலம் கதையைத் தொடர்வது மட்டுமல்ல, ஜார்ஜ்குட்டியின் மனநிலையை இன்னும் ஆழமாக ஆராய வேண்டும் என்பதே என் நோக்கம். குடும்பத்தை காப்பாற்ற எடுத்த முடிவுகளால் உருவான மனிதராக அவர் இருக்கிறார். ஆனால் அவரது மனதின் ஆழத்தில், பயம், நிச்சயமின்மை மற்றும் கடந்த காலத்தின் சுமையுடன் வாழும் ஒரு தந்தை இருக்கிறார். இந்த அத்தியாயம் அந்த மன அழுத்தங்களின் தாக்கத்தை ஆராய்கிறது. அதனால் இது இந்தத் தொடரில் மிகவும் நெருக்கமான மற்றும் உணர்ச்சிப்பூர்வமான படைப்பாக மாறியுள்ளது. உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் இதை பிரைம் வீடியோவில் காணப்போகிறார்கள் என்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்,” என்றார்.




*நடிகர் மோகன்லால் கூறுகையில்..,* 


“ஜார்ஜ்குட்டி என்ற கதாபாத்திரம் பல ஆண்டுகளாக ரசிகர்களுடன் பயணித்து வருகிறது. அவர்கள் அளித்த அன்பை நான் மிகவும் மதிக்கிறேன். திரிஷ்யம் ரசிகர்களுக்கு பிடிக்க காரணம், அதன் மர்மக் கதையைத் தாண்டி குடும்பம், அன்பு மற்றும் உயிர்வாழ்தல் பற்றிய மனிதநேயமான கதையாக இருப்பதுதான். ஜார்ஜ்குட்டிக்கு ரசிகர்கள் அளித்த ஆதரவுக்கு நன்றி. திரிஷ்யம் 3 இப்போது உலகம் முழுவதும் உள்ள பார்வையாளர்களை சென்றடைவதில் மகிழ்ச்சி அடைகிறேன்,” என்றார்.



ஜூன் 18 முதல் “திரிஷ்யம் 3” திரைப்படத்தை ப்ரைம் வீடியோவில் கண்டுகளியுங்கள்.



*Prime Video Announces June 18 as the Exclusive Global Streaming Premiere of Drishyam 3*


Written and directed by Jeethu Joseph, presented by PEN Studios and Panorama Studios and produced by Antony Perumbavoor, Aashirvad Cinemas, the thriller drama stars Mohanlal, Meena, and Siddique in lead roles. George Kutty returns as the protector, once again forced to defend his family when the past resurfaces with deadly consequences


Prime members in India and over 200 countries and territories worldwide can stream Drishyam 3 in Malayalam, with dubbed versions in Telugu, Tamil, and Kannada, exclusively on Prime Video from June 18 


MUMBAI, India—June 13, 2026: Prime Video, India’s most-loved entertainment destination, today announced the exclusive global streaming premiere of Drishyam 3, the highly anticipated next chapter in one of Indian cinema’s most celebrated thriller drama franchises, known for its taut narrative, sharp twists, and gripping performances that have, over the years, garnered a strong and loyal fan base across languages and demographics. Written and directed by Jeethu Joseph, presented by Pen Studios & Panorama Studios and produced by Antony Perumbavoor, Aashirvad Cinemas, the film reunites Mohanlal, Meena, and Siddique, bringing audiences back into the world of George Kutty and his family. Following its successful theatrical run, Drishyam 3 will stream exclusively on Prime Video from June 18 in Malayalam with dubbed versions in Telugu, Tamil, and Kannada for audiences in India and across more than 200 countries and territories worldwide. Drishyam 3 joins Prime Video’s blockbuster lineup for Prime Day. This July, Amazon Prime Day is back in India for its tenth edition. Prime members can look forward to great deals, bigger savings, exciting new launches, blockbuster entertainment, and more.


In the years since Drishyam 2, George Kutty appears to have secured the future he always wanted for his family, he has even adapted his past into a successful film. But the past refuses to stay buried. When two journalists begin investigating the real-life inspirations behind the film, and a carefully orchestrated marriage proposal for his daughter Anju turns out to be a deadly trap, George Kutty finds himself drawn into his most emotionally charged and dangerous battle yet. With old adversaries back with renewed motive, and fear, guilt, and suspicion closing in from every side, George Kutty, the protector, must once again rely on his wits to protect the people he loves, and the secrets that bind them together. 


“Very few franchises in Indian cinema have achieved what Drishyam has, a story that began originally in Malayalam over a decade ago has since been embraced across languages and borders. What Jeethu Joseph and Mohanlal have crafted across three films is a masterclass in sustained storytelling, each chapter deepening the emotional and moral complexity of a family audience that feel they know intimately. George Kutty is no longer just a character; he is part of the collective imagination of Indian cinema,” said Manish Menghani, Director & Head of Content Licensing, Prime Video India. “With Drishyam 3, one of India’s most successful film franchises, we are proud to continue this legacy on Prime Video, taking exemplary stories from India to audiences around the world.”


"With Drishyam 3, my intention was not just to continue the story, but to delve deeper into the mind of George Kutty. Over the years, he has become a man defined by the choices he made to protect his family, but beneath his resilience lies a father who has been forced to live with constant fear, uncertainty, and the weight of his past. This chapter explores the psychological toll of those experiences, making it perhaps the most intimate and emotionally layered film in the franchise. We wanted to examine not only what George Kutty does, but what those decisions have cost him as a person. I am thrilled that audiences across the world will now be able to experience this new chapter on Prime Video,” said writer and director Jeethu Joseph.


“George Kutty is a character who has stayed with audiences for many years, and that love is something I deeply cherish. The reason audiences connect with Drishyam is that, beyond the mystery, it is rooted in a deeply human story about family, love, and survival. I am grateful for the affection audiences have shown George Kutty through the years and thrilled that Drishyam 3 will now reach audiences across the globe on Prime Video,” said Mohanlal.


https://www.instagram.com/p/DZg0FZriF6o/?igsh=MTJqd2VpaWJna3BsZg==

ஹபீபி திரைப்படம் எப்படி இருக்கிறது

 மீரா கதிரவன் இயக்கத்தில் தமிழில் வெளியாகியுள்ள ஹபீபி திரைப்படம் எப்படி இருக்கிறது என்று பார்ப்போம் வாங்க

1980யில் திருநெல்வெலியின் கடையநல்லூரில் யூசுப் (கஸ்தூரி ராஜா) என்ற நபர் கைத்தறி நெசவு தொழில் செய்து வருகிறார். அவருக்கு பிறக்கும் குழந்தைக்கு அபு தாஹிர் (ஈஷா) என்று பெயர் வைக்கிறார்கள்.



இதற்கிடையில், நெசவு செய்து வரும் யூசுப்பின் தம்பிக்கு திருமணம் நடக்கிறது. அதன் பின்னர் அவர் குடும்ப சூழல் காரணமாக வெளிநாட்டிற்கு வேலைக்கு செல்கிறார். அந்த ஊரில் இதே போல் பலரும் தங்கள் தொழிலை கைவிட்டு வெளிநாடு செல்ல, யூசுப் மட்டும் தொழிலில் நட்டம் வந்தாலும் கைத்தறி தொழில்தான் செய்வேன் என்று பிடிவாதமாக இருக்கிறார். இந்த சூழலில் சிறுவயது முதலே அபு தாஹிருக்கு நிலாஃபர் (மாளவிகா மனோஜ்) மீது இருக்கும் ஈர்ப்பு, அவர் பருவ வயதை எட்டியதும் காதலாக மாறுகிறது. எனினும், வசதி வாய்ப்பில் நிலாஃபரின் குடும்பம் தங்களை விட உயர்ந்த நிலையில் இருக்கிறார்கள் என்பதால் அபுதாஹிர் காதலை சொல்ல தயங்குகிறார்.



மறுபுறம் அவரது மாமா அபுவை வெளிநாட்டிற்கு அனுப்பி வைக்க முயற்சிக்க, அதை எப்படியோ தவிர்த்து வருகிறார். பின்னர் அபுதாஹிரும், நிலாஃபரும் சேர்ந்தார்களா? யூசுப் கைத்தறியை விட்டாரா என்பதே மீதிக்கதை. அவள் பெயர் தமிழரசி, விழித்திரு ஆகிய படங்களை கொடுத்த இயக்குநர் மீரா கதிரவன் தான் இப்படத்தை இயக்கியுள்ளார். இஸ்லாமிய சம்பிரதாயங்கள், பழக்க வழக்கங்களை துல்லியமாகவும், நேர்த்தியாகவும் காட்சிப்படுத்தியிருக்கிறார் இயக்குநர் மீரா கதிரவன்.


அதேபோல் கடையநல்லூர் என்ற ஊர் 1980யில் இருந்து 2023 வரை எப்படி மாறியிருக்கிறது என்பதை அவர் காட்டிய விதம், நாமும் அந்த ஊரில் அம்மக்களுடன் வாழ்ந்தது போன்ற உணர்வைத் தருகிறது. அபுதாஹிர் முதன்மை கதாபாத்திரம் என்றாலும், கஸ்தூரி ராஜா உள்ளிட்ட பிற கதாபாத்திரங்களின் வாழ்வைத்தான் முதல் பாதியில் சுவாரஸ்யமாக காட்டப்பட்டுள்ளது. 90களில் கிராமத்து காதலை காட்சிப்படுத்திய விதம் அவ்வளவு சுவாரஸ்யமாக உள்ளது. இஸ்லாமியர்களின் திருமண முறை, சடங்குகள், நெல்லை வட்டார பேச்சு வழக்கு ஆகியவற்றை அழகாக திரையில் கொண்டு வந்துள்ளார் இயக்குநர். நடிகராக அறிமுகமாகியுள்ள கஸ்தூரி ராஜா இப்படத்தில் யூசுப்பா பாயாகவே வாழ்ந்திருக்கிறார் என்றே கூறலாம். கஸ்தூரி ராஜா அவர்களின் நடிப்பு கன கச்சிதம் 



அந்தளவிற்கு யதார்த்த நடிப்பை கொடுத்திருக்கிறார். அபு தாஹிராக நடித்திருக்கும் ஈஷா அமைதியாக உணர்வுகளை வெளிப்படுத்தியுள்ளார். எனக்காக ஏன் பேசல என்று ஒரு கதாபாத்திரம் கேட்கும் இடத்தில் பேச முடியாமல் நிற்பது, காதலியின் பெயரை குறிக்கும் பாடல்களை ஒலிக்க செய்து ரசிப்பது என தன்னால் முடிந்தவரை அபு தாஹிர் கதாபாத்திரத்திற்கு நியாயம் சேர்த்திருக்கிறார் மாளவிகா மனோஜ் நிலாஃபர் கதாபாத்திரத்திற்கு அப்படியே பொருத்தி போகிறார். அவருக்கு வசனங்கள் என்பதே இல்லை என்றாலும் கண்களிலேயே அவற்றை கடத்துகிறார். நடிகர்களின் பங்களிப்பு, காட்சியமைப்புகள், திரைக்கதை செல்லும் விதம், பின்னணி இசை ஆகியவை நேர்த்தியாக அமைந்துள்ளன.


ஆனால், இரண்டாம் வாழ்வியல் உணர்வைத் தருவதை தவிர்க்க முடியவில்லை. சாம் சி.எஸ் பின்னணி இசை மற்றும் பாடல்களில் விளையாடியிருக்கிறார். மகேஷ் முத்துசுவாமியின் ஒளிப்பதிவு, மொஹம்மது அமீனின் எழுத்து மற்றும் மதியின் படத்தொகுப்பு சிறப்பு. மொத்தத்தில் இந்த ஹபீபி ஒரு நேர்த்தியான படைப்பு. அனைத்து சமூகத்தினரும் கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம்.

FIFA World Cup 2026-க்கான இந்தியாவின் இலக்கான ZEE5, கால்பந்து ஜாம்பவான் பாய்சுங் பூட்டியாவை இணைத்துள்ளது*

 *FIFA World Cup 2026-க்கான இந்தியாவின் இலக்கான ZEE5, கால்பந்து ஜாம்பவான் பாய்சுங் பூட்டியாவை இணைத்துள்ளது*



தனது தளத்தில் தடையற்ற, உயர்தர ஸ்ட்ரீமிங் மூலம் FIFA போட்டிகளின் பரபரப்பை கோடிக்கணக்கான ரசிகர்களிடம் கொண்டு சென்று, கால்பந்து பார்வை அனுபவத்தை மேலும் உயர்த்த ZEE5 தயாராக உள்ளது. பரந்த அளவிலான அணுகல் மற்றும் அதிநவீன டிஜிட்டல் திறன்களுடன், ஜூன் 11 முதல் ZEE5 நேரலைப் போட்டிகள், ஹைலைட்ஸ் மற்றும் பிரத்யேக உள்ளடக்கங்களை வழங்கவுள்ளது. இதன் மூலம் பல்வேறு சாதனங்களில் உள்ள பார்வையாளர்கள் உலக கால்பந்து திருவிழாவின் ஒவ்வொரு தருணத்துடனும் தொடர்ந்து இணைந்திருக்க முடியும். இந்த கூட்டாண்மை, FIFA தொடர்களின் பரவலான அளவுக்கும் ரசிகர்களின் ஆர்வத்திற்கும் ஏற்றவாறு, ஆழமான, எளிதில் அணுகக்கூடிய மற்றும் பிரீமியம் பொழுதுபோக்கு அனுபவத்தை வழங்குவதோடு, தனது விளையாட்டு உள்ளடக்கப் பட்டியலை வலுப்படுத்தும் ZEE5-இன் உறுதிப்பாட்டையும் வெளிப்படுத்துகிறது.


பார்வை அனுபவத்திற்கு மேலும் உற்சாகம் சேர்க்கும் வகையில், இந்திய கால்பந்து ஜாம்பவான் பாய்சுங் பூட்டியா, FIFA World Cup 2026-க்கான ZEE5-இன் நிபுணர் குழுவில் இணைகிறார். இந்தியாவின் மிகச் சிறந்த கால்பந்து வீரர்களில் ஒருவராக பரவலாக மதிக்கப்படும் பூட்டியா, தனது சிறப்பான விளையாட்டு வாழ்க்கை, தலைமைத்துவம் மற்றும் இந்திய கால்பந்திற்கான பங்களிப்புகள் மூலம் நாட்டில் இந்த விளையாட்டை பிரபலப்படுத்துவதில் முக்கிய பங்காற்றியவர். விளையாட்டைப் பற்றிய அவரது ஆழமான புரிதலும், மிகுந்த அனுபவமும், தொடரைப் பற்றி ஆழமான பார்வைகளைப் பெற விரும்பும் ரசிகர்களுக்கு அவரை மதிப்புமிக்க குரலாக மாற்றுகின்றன.


நிபுணர் குழுவின் ஒரு பகுதியாக இணைவது குறித்து பாய்சுங் பூட்டியா கூறியதாவது:


"இந்தியாவில் பல தலைமுறை கால்பந்து ரசிகர்களுக்கு FIFA World Cup என்பது உத்வேகம், உயர்வான கனவுகள் மற்றும் மறக்க முடியாத நினைவுகளின் ஆதாரமாக இருந்து வருகிறது. இது விளையாட்டைத் தாண்டி மக்களை ஒரே ஆர்வத்தின் மூலம் ஒன்றிணைக்கும் ஒரு தொடர். நிபுணர் குழுவின் ஒரு பகுதியாக ZEE5 மற்றும் Unite8 Sports உடன் இணைவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். உலகக் கோப்பையை மிகவும் சிறப்பாக்கும் கதைகள், போட்டி உணர்வுகள் மற்றும் மறக்க முடியாத தருணங்களுடன் ரசிகர்களை மேலும் நெருக்கமாக இணைக்க பங்களிப்பதில் பெருமைப்படுகிறேன். இந்தியா முழுவதும் கால்பந்து ரசிகர்கள் தொடர்ந்து அதிகரித்து வரும் இந்த நேரத்தில், விளையாட்டிற்கும் அதன் ரசிகர்களுக்கும் இடையிலான பிணைப்பை மேலும் வலுப்படுத்த இது ஒரு சிறந்த வாய்ப்பாகும்."


FIFA World Cup 2026 போட்டிகளை ஜூன் 11 முதல் ZEE5-ல் மட்டும் நேரலையில் காணத் தவறாதீர்கள்!


ZEE5 மற்றும் Unite8-ல் FIFA World Cup 2026 பற்றி


FIFA World Cup 2026™️, இந்தியா முழுவதும் உள்ள பார்வையாளர்களுக்கு உலகின் மிகப் புகழ்பெற்ற கால்பந்து தொடர்களை கொண்டு வருவதற்காக, 2034 வரை நீளும் Zee Entertainment மற்றும் FIFA இடையிலான முக்கியமான நீண்டகால கூட்டாண்மையின் தொடக்கமாக அமைகிறது. தனது இரண்டு தளங்களான ZEE5 மற்றும் Unite8-ஐ பயன்படுத்தி, Zee Entertainment ஒப்பற்ற பார்வை அனுபவத்தை வழங்கவுள்ளது. FIFA World Cup 2026™️ போட்டிகளின் முழுமையான ஒளிபரப்பை ஆங்கிலம், இந்தி, பெங்காலி மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் வழங்குவதன் மூலம், ரசிகர்கள் தங்களுக்கு விருப்பமான மொழியில் போட்டியின் ஒவ்வொரு தருணத்தையும் அனுபவிக்க முடியும்.


இந்த கூட்டாண்மை, FIFA World Cup 2030™️, FIFA Women’s World Cup 2027™️ உள்ளிட்ட பல முக்கிய FIFA தொடர்களையும், பிற முன்னணி சர்வதேச போட்டிகளையும் உள்ளடக்கிய விரிவான உரிமைப் பட்டியலை கொண்டுள்ளது. உயர்தர ஸ்ட்ரீமிங், வளமான பிராந்திய மொழி சேவைகள் மற்றும் ரசிகர்களை மையமாகக் கொண்ட ஆழமான அனுபவங்கள் மூலம், ZEE5 மற்றும் Unite8 உலக கால்பந்தை கோடிக்கணக்கான இந்திய பார்வையாளர்களுக்கு மேலும் நெருக்கமாக கொண்டு வருவதையும், நாட்டில் கால்பந்து ரசிகர் வட்டாரத்தின் வளர்ச்சியை வேகப்படுத்துவதிலும் முக்கிய பங்காற்றுவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளன.

ஸ்லம் டாக் 33 டெம்பிள் ரோட்” திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு !!*

 *“ஸ்லம் டாக் 33 டெம்பிள் ரோட்” திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு !!*



Puri Connects மற்றும் JB Motion Pictures நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள, மக்கள் செல்வன் விஜய் சேதுபதி முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் பான்-இந்தியா ஆக்சன் திரைப்படம் “ஸ்லம் டாக்”. பிரபல இயக்குநர் பூரி ஜெகன்நாத் இயக்கியுள்ள இந்த திரைப்படம் ஆரம்பம் முதலே ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.


இப்படத்தின் பிரம்மாண்ட டீசர் வெளியீட்டு விழா சென்னை நகரில் உற்சாகமாக நடைபெற்றது. இதில் படக்குழுவினர், ஊடகத்தினர் மற்றும் திரையுலக பிரபலங்கள் பலர் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.


நிகழ்வில் இயக்குநர் பூரி ஜெகன்நாத், தயாரிப்பாளர் சார்மி கௌர், நடிகர் விஜய் சேதுபதி, உள்ளிட்ட படக்குழுவினர் பங்கேற்று ஊடகங்களையும் ரசிகர்களையும் சந்தித்தனர்.


டைட்டில் அறிவிப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரிலிருந்தே பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ள “ஸ்லம் டாக்” திரைப்படம் குறித்து நிகழ்வில் பல சுவாரஸ்யமான தகவல்கள் பகிரப்பட்டன.


இந்நிகழ்வினில் தயாரிப்பாளர் JB நாராயண் ராவ் கொண்ட்ரோலா பேசியதாவது:


ஊடக மற்றும் பத்திரிகை நண்பர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த வணக்கங்கள். இந்த நிகழ்வில் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி.


இது தயாரிப்பாளராக எனது முதல் திரைப்படம். இயக்குநர் பூரி ஜெகன்நாத் சார் மற்றும் சார்மி மேடம் ஆகியோருடன் இணைந்து இந்த படத்தை தயாரித்தது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. மேலும், மக்கள் செல்வன் விஜய் சேதுபதி போன்ற சிறந்த நடிகருடன் எனது முதல் திரைப்படத்தை தொடங்கியிருப்பது மிகவும் பெருமையாகவும், மகிழ்ச்சியாகவும் உள்ளது.


கதாநாயகி சம்யுக்தா, தபு மேடம், துனியா விஜய் சார் உள்ளிட்ட அனைத்து நடிகர், நடிகைகளுக்கும் எனது நன்றிகள். விஷ்வா, விடிவி கணேஷ், பிரம்மாஜி மற்றும் இந்த படத்தில் பணியாற்றிய அனைத்து தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.


இந்த திரைப்படத்தை ரசிகர்களிடம் கொண்டு சேர்க்கும் மிகப்பெரிய பொறுப்பு ஊடகங்கள் மற்றும் பத்திரிகை நண்பர்களின் கைகளில் உள்ளது. எங்களது படைப்பை மக்களிடம் கொண்டு செல்ல நீங்கள் வழங்கும் ஆதரவுக்கு முன்கூட்டியே நன்றி தெரிவிக்கிறேன். மீண்டும் ஒருமுறை அனைவருக்கும் என் நன்றிகள். நன்றி.” என்றார்.


தயாரிப்பாளர் சார்மி கௌர் பேசியதாவது:


“இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை ஊடக நண்பர்கள் அனைவரையும் மீண்டும் சந்திப்பதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். அதே இடம், அதே முகங்கள், அதே புன்னகைகள். 2002-ஆம் ஆண்டு ‘காதல் அழிவதில்லை’ படத்தின் மூலம் முதன்முதலாக சென்னை வந்த நாட்கள் இன்னும் நினைவில் இருக்கின்றன. அப்போது ஊடக நண்பர்களை சந்தித்தேன். அதன் பிறகு பல படங்களில் நடித்தேன். உங்கள் அனைவரிடமிருந்தும் நிறைய அன்பைப் பெற்றேன். இன்றும் உங்களை சந்தித்து பேசும்போது, அந்த பாசமும், நெருக்கமும் இன்னும் மாறாமல் இருப்பதை உணர்கிறேன்.”


”‘ஸ்லம் டாக்’ திரைப்படத்தின் மூலம் மீண்டும் சென்னை வந்துள்ளேன். ஆனால் இந்த முறை நடிகையாக அல்ல, தயாரிப்பாளராக. எங்கள் Puri Connects நிறுவனத்தின் சார்பில் பல வெற்றிப் படங்களை தயாரித்துள்ளோம். ஆனால் நேரடி தமிழ் திரைப்படமாக இது எங்களின் முதல் முயற்சி. அதனால் இந்தப் படம் எனக்கு மிகவும் சிறப்பானது.”


”‘ஸ்லம் டாக்’ ஒரு ஆக்சன் மற்றும் உணர்வுகளின் கலவையாக உருவாகியுள்ளது. இதில் நீங்கள் மிகவும் இயல்பான, நிஜத்தன்மை கொண்ட ஆக்சன் காட்சிகளையும், மனிதர்களின் வாழ்க்கையோடு நெருக்கமாக இணைந்த உணர்வுகளையும் காண்பீர்கள். பூரி ஜெகன்நாத் சாரின் திரைக்கதை சொல்லும் விதமும், விஜய் சேதுபதி சாரின் நடிப்பும் இணைந்து இந்தப் படத்தை மேலும் சிறப்பாக்கியுள்ளன.”


“விஜய் சேதுபதி சார் முதலில் ஒரு சிறந்த நடிகர். அதே நேரத்தில் மிகப்பெரிய நட்சத்திரமும் கூட. ஒரு திரைப்படத்திற்கு நடிப்பு திறமையும், வணிக ரீதியான மதிப்பும் ஒருசேர தேவைப்படும் போது, அந்த இரண்டையும் சமநிலைப்படுத்தும் நடிகர் அவர். இந்தப் படத்தில் இணைந்ததற்காக அவருக்கு என் மனமார்ந்த நன்றிகள். உலகம் முழுவதும் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் சிறந்த முறையில் இந்தப் படத்தை வெளியிடுவோம் என்று உறுதியளிக்கிறேன்.”


“தபு மேடத்தைப் பற்றி சொல்ல வேண்டுமென்றால், இந்தக் கதாபாத்திரத்திற்கு ஆரம்பத்திலிருந்தே அவரைத்தான் நினைத்திருந்தோம். கதையை கேட்டவுடனேயே அவர் சம்மதித்தார். தனது கதாபாத்திரம் மட்டுமல்லாமல், முழுக் கதையையும் பாராட்டி எங்களுக்கு நம்பிக்கையளித்தார். இன்றுவரை எங்களுக்கு உறுதுணையாக இருந்து வருகிறார்.”


“துனியா விஜய் சார் இந்தப் படத்தின் முக்கிய வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கதையை கேட்டவுடனேயே உடனடியாக ஒப்புக்கொண்டார். தனது படப்பிடிப்பு தேதிகளையும் எங்களுக்காக மாற்றி அமைத்துக் கொடுத்தார். அவருடைய ஒத்துழைப்பிற்கும், அன்பிற்கும் எப்போதும் நன்றிக்கடன்பட்டிருப்போம்.”


“சம்யுக்தாவை முதன்முதலில் சந்தித்த தருணம் இன்னும் நினைவில் இருக்கிறது. கதாபாத்திரத்திற்கு மிகவும் இயல்பான தோற்றமும், நடிப்புத் திறமையும் கொண்ட நடிகை தேவைப்பட்டது. சம்யுக்தா அந்த கதாபாத்திரத்தை மிக அழகாக உயிர்ப்பித்தார். அவருடைய இயல்பான நடிப்பும், எளிமையான தோற்றமும் ரசிகர்களை நிச்சயம் கவரும்.”


“விடிவி கணேஷ் சார் பற்றி சொல்ல வேண்டுமென்றால், சமூக வலைதளங்களில் அவருடைய வீடியோக்களை பார்த்தாலே சிரிப்பு வந்துவிடும். இந்தக் கதாபாத்திரத்திற்கு அவரைத்தான் தேர்வு செய்ய வேண்டும் என்று நினைத்தோம். படத்தில் அவர் வரும் ஒவ்வொரு காட்சியும் ரசிகர்களுக்கு புத்துணர்ச்சியை அளிக்கும்.”


“இந்தப் படத்தில் பிரம்மாஜியும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவருடைய பங்களிப்பும் குறிப்பிடத்தக்கது.”


“எங்கள் நிறுவனத்தின் CEO விஷு ரெட்டிக்கு சிறப்பு நன்றி. படப்பிடிப்பு தளத்தில் இயக்குநருக்கு எந்தவிதமான அழுத்தமும் வராமல் பார்த்துக் கொண்டவர் அவர். தயாரிப்பு, மார்க்கெட்டிங், விற்பனை, விளம்பரம் என அனைத்து துறைகளையும் ஒரே நேரத்தில் கவனித்து இந்தப் படத்தை சிறப்பாக உருவாக்க உதவியுள்ளார். அவருடைய உழைப்பிற்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் அது போதாது.”


“இந்தப் படத்தை ஆதரித்த ஜேபி மோஷன் பிக்சர்ஸ் மற்றும் முழு படக்குழுவிற்கும் என் நன்றிகள். ‘ஸ்லம் டாக் – 33 டெம்பிள் ரோடு’ ரசிகர்களை பெரிதும் கவரும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது. இந்தப் படத்தின் மூலம் உங்களை பெருமைப்படுத்துவோம்.” என்றார்.


இசையமைப்பாளர் ஹர்ஷவர்தன் ராமேஷ்வர் பேசியதாவது..,


“இந்த நிகழ்வில் கலந்து கொள்வதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். முதலில் இயக்குநர் பூரி ஜெகன்நாத் சாருக்கு என் மனமார்ந்த நன்றி. இந்த வாய்ப்பை எனக்கு வழங்கியவர் அவர்தான். அவர் ஒரு மிகப்பெரிய லெஜெண்ட். ஆரம்பத்தில் அவருடன் பணியாற்றுவது எனக்கு சற்று பயமாகவும், பதட்டமாகவும் இருந்தது. ஆனால் அவருடன் இணைந்து பணியாற்றியபோது அது மிகவும் மகிழ்ச்சியான அனுபவமாக மாறியது. இந்த வாய்ப்பிற்காக அவருக்கு மீண்டும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.


அதேபோல் சார்மி மேடத்திற்கும் நன்றி. அவர் அனைவரையும் மிகவும் அன்பாகவும், எளிமையாகவும் கவனித்துக் கொண்டார். விஜய் சேதுபதி சாருக்கும், சுமிதா மேடத்திற்கும் என் நன்றிகள்.


இந்த படத்தில் மொத்தம் ஆறு பாடல்கள் இடம்பெற்றுள்ளன. ஒவ்வொரு பாடலும் வித்தியாசமான அனுபவத்தை தரக்கூடிய வகையில் உருவாகியுள்ளது. ரசிகர்களுக்கு இது ஒரு இனிய ஆச்சரியமாக இருக்கும். பாடல்கள் மட்டுமின்றி, பின்னணி இசையிலும் நிறைய புதுமைகளை கொண்டு வர முயற்சித்துள்ளோம். அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.”.


நடிகர் விடிவி கணேஷ் பேசியதாவது:


“இந்த படத்தில் நடிக்கும் வாய்ப்பு திடீரென வந்தது. ஒரு நாள் பூரி ஜெகன்நாத் சார் அழைத்தார். உடனே எனக்கு நினைவுக்கு வந்தது ‘போக்கிரி’. இன்றைய தமிழக முதலமைச்சர் நடித்த அந்த பிரம்மாண்ட வெற்றிப் படத்தின் ஒரிஜினலை இயக்கியவர் அவர்தான். அதோடு பல மாஸ் ஹிட் படங்களை கொடுத்த மிகப்பெரிய இயக்குநர். என் மேனேஜரும் அவரைப் பற்றி நிறைய சொல்லியிருந்தார். அதனால் அவரை சந்திக்கும்போது ஒரு விதமான எதிர்பார்ப்பு இருந்தது.


ஆனால் நேரில் சந்தித்தபோது, அவ்வளவு பெரிய வெற்றிகளைப் பெற்ற இயக்குநர் என்ற எந்த பந்தாவும் இல்லாமல், மிகவும் எளிமையான, மென்மையான மனிதராக அவரை பார்த்தேன். அவருடன் அமர்ந்து பேசியதும், ஒன்றாக உணவருந்தியதும் மிகவும் மகிழ்ச்சியான அனுபவமாக இருந்தது.


இந்தப் படத்தில் நான் இதுவரை நடித்திராத ஒரு வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். அந்த கதாபாத்திரம் பற்றிய விவரங்களை இப்போது சொல்ல முடியாது. ஆனால் அதை நடித்தபோதே மிகவும் ரசித்தேன். பூரி சார் நடிகர்களுக்கு முழு சுதந்திரம் கொடுத்து வேலை வாங்கும் விதம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது.


“தபு மேடம் ரசிகன் நான் அவருடைய அன்பையும் அவர் குழுவினரின் அன்பை நான் மறக்க முடியாது. குறிப்பாக ஹைதராபாத்தில் படப்பிடிப்பு நடந்தபோது, தினமும் எங்களுக்கு அவர் அனுப்பிய உணவுகள் மிகவும் பிரமாண்டமாக இருக்கும். மட்டன், சிக்கன், புலாவ் என பல வகையான உணவுகளை நிறைய அளவில் அனுப்புவார் அவர் கூட நடித்த அனுபவம் மறக்க முடியாதது. அந்த அன்பும், உபசரிப்பும் என்னை மிகவும் கவர்ந்தது. படப்பிடிப்பு அனுபவத்தை இன்னும் இனிமையாக்கிய விஷயங்களில் இதுவும் ஒன்று.”


“படப்பிடிப்பின் முதல் நாளிலேயே விஜய் சேதுபதி சாரின் அர்ப்பணிப்பை பார்த்து ஆச்சரியப்பட்டேன். தெலுங்கு டயலாக்குகளை எழுதி வைத்து மனப்பாடம் செய்வார். கேரவனில் உட்கார்ந்து ஓய்வெடுப்பதை விட, வெளியிலேயே அமர்ந்து தொடர்ந்து தனது வேலையில் முழு கவனத்துடன் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அந்த அர்ப்பணிப்பைப் பார்த்தபோது, நான் முன்பு பணியாற்றிய இன்றைய தமிழக முதலமைச்சரின் உழைப்பும், அர்ப்பணிப்பும் நினைவுக்கு வந்தது. அதே அளவிலான ஈடுபாட்டையும், உழைப்பையும் விஜய் சேதுபதி சாரிடமும் பார்த்தேன்.


அதனால்தான் இன்று அவர் இந்திய அளவில் ஒரு வெற்றிகரமான நடிகராக திகழ்கிறார். இந்த உயரத்தை அடைவதற்கு திறமை மட்டுமல்ல, கடின உழைப்பும், பொறுமையும் அவசியம். சரியான நேரம் வரும்வரை காத்திருந்து தொடர்ந்து உழைத்தால் மட்டுமே வெற்றி கிடைக்கும் என்பதற்கு அவர் ஒரு சிறந்த உதாரணம்.


இந்தப் படம் வெளியான பிறகு, குறிப்பாக தெலுங்கு ரசிகர்களும் அவருடைய நடிப்பை கொண்டாடுவார்கள் என்று நம்புகிறேன். தமிழ், தெலுங்கு என எந்த மொழியாக இருந்தாலும் அவர் அந்த கதாபாத்திரமாகவே மாறிவிடுகிறார். அவருடைய திறமையை முழுமையாக பயன்படுத்திக் கொள்ளும் வகையில் பூரி சார் இந்தப் படத்தை உருவாக்கியிருக்கிறார்.


நடிகர்கள் அனைவரிடமிருந்தும் சிறந்த நடிப்பை வாங்கிக் கொள்ளும் திறமை பூரி சாருக்கு இருக்கிறது. அதே நேரத்தில் படப்பிடிப்பு தளத்தில் மிகவும் ஒழுக்கமாகவும், நேர்த்தியாகவும் செயல்படுவார். கலைஞர்களை சரியான நேரத்தில் அழைத்து, திட்டமிட்டபடி பணிகளை முடித்து விடுவார். அந்த தொழில்முறை அணுகுமுறையே அவரை இந்த உயரத்தில் நிலைநிறுத்தியுள்ளது.


இந்தப் படத்தில் நான் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும், மிகவும் மகிழ்ச்சியுடன் நடித்தேன். படக்குழுவில் இருந்த உதவி இயக்குநர்கள் முதல் தொழில்நுட்பக் கலைஞர்கள் வரை அனைவரும் அர்ப்பணிப்புடன் உழைத்துள்ளனர். இந்தப் படத்திற்காக மிகப்பெரிய அளவில் முதலீடு செய்யப்பட்டிருக்கிறது. டீசரிலேயே அதன் தரம் தெரிகிறது.


‘ஸ்லம் டாக்’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற வேண்டும் என்று மனதார வாழ்த்துகிறேன். இந்தப் படத்திற்காக உழைத்த ஒவ்வொருவருக்கும் எனது பாராட்டுகள் அனைவருக்கும் நன்றி.” என்றார்.


நடிகை சம்யுக்தா பேசியதாவது..,


“பூரி ஜெகன்நாத் சாருடன் பணியாற்றியது ஒரு தனித்துவமான அனுபவமாக இருந்தது. ஒரு காட்சியை மிகவும் எளிமையாகவும், அதே நேரத்தில் ஸ்டைலாகவும் இயக்கக்கூடியவர் அவர். இயக்கம் என்பது ஒரு கலை. அதை அவர் மிகவும் இயல்பாக கையாள்கிறார். சரியான நேரத்தில் படப்பிடிப்பை முடித்து, கலைஞர்களிடம் இருந்து சிறந்த நடிப்பை வெளிக்கொணரும் திறமை அவருக்கு இருக்கிறது.


இந்த படத்தில் விஜய் சேதுபதி சாருடன் இணைந்து நடித்தது மிகவும் மகிழ்ச்சியான அனுபவம்.அவரின் ரசிகை நான், ரசிகர்கள் திரையில் ஒரு கதாபாத்திரத்தை மட்டுமே பார்க்கிறார்கள். ஆனால் ஒரு இணை நடிகையாக, ஒரு நடிகர் கதாபாத்திரமாக மாறும் அந்த அற்புதமான பயணத்தை நேரில் பார்த்திருக்கிறேன். விஜய் சேதுபதி சார் அந்த மாற்றத்தை மிக அழகாக வெளிப்படுத்துகிறார். அவருடன் பணியாற்றியது எனக்கு மறக்க முடியாத அனுபவம். அவர் மிகவும் அன்பானவர், எளிமையானவர்.


இசையமைப்பாளர் ஹர்ஷவர்தன் ரமேஷ்வர் பற்றி சொல்ல வேண்டுமென்றால், அவர் உருவாக்கியுள்ள பாடல்கள் அனைத்தும் அற்புதமாக இருக்கின்றன. இதுவரை நான் கேட்ட பாடல்களே மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. முழு ஆல்பத்தையும் ரசிகர்கள் கொண்டாடுவார்கள் என்று நம்புகிறேன்.


எங்கள் தயாரிப்பாளர்களுக்கு சார்மி மேடமுக்கு எனது மனமார்ந்த நன்றிகள். அவர்கள் இந்த படத்தில் பணத்தை மட்டும் முதலீடு செய்யவில்லை; தங்களது நேரம், உணர்வுகள் மற்றும் முழு அர்ப்பணிப்பையும் முதலீடு செய்துள்ளனர். குறிப்பாக சார்மி மேம், படத்தின் ஒவ்வொரு விஷயத்திலும் நேரடியாக ஈடுபட்டு பணியாற்றியுள்ளார். படப்பிடிப்பு தளத்தில் அனைவரும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பதில் அவர் எப்போதும் அக்கறை கொண்டிருந்தார். அவரது விருந்தோம்பலும், அன்பான அணுகுமுறையும் அனைவரையும் கவர்ந்தது.


ஜேபி சாருக்கும், முழு தயாரிப்புக் குழுவிற்கும் எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த படம் ரசிகர்களுக்கு மிகவும் பிடிக்கும் என்று நான் நம்புகிறேன். நானும் இப்போதுதான் டீசரை பார்த்தேன். முழு படத்தையும் பார்க்க ஆவலாக இருக்கிறேன்.


மேலும் பூரி ஜெகன்நாத் சாருக்கென்று ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருப்பதை நான் நேரில் பார்த்திருக்கிறேன். படப்பிடிப்பு முடிந்த பிறகு அவருடன் புகைப்படம் எடுக்க மக்கள் காத்திருப்பார்கள். அவரது பெயரையே கொண்டாடும் ரசிகர்களை நான் பார்த்திருக்கிறேன். ஒரு இயக்குநராக அவர் உருவாக்கியிருக்கும் அந்த பிராண்ட் மதிப்பே அவருடைய வெற்றிக்கு சான்று. முழு படத்தையும் திரையில் பார்க்க மிகவும் ஆவலாக இருக்கிறேன். அனைவருக்கும் நன்றி.” என்றார்.


இயக்குநர் பூரி ஜெகன்நாத் பேசியதாவது..,


“தமிழ் ஊடக நண்பர்களை சந்திப்பதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். ‘ஸ்லம் டாக் – 33 டெம்பிள் ரோடு’ திரைப்படம் எனது முதல் நேரடி தமிழ் திரைப்படம். இந்த வாய்ப்பை அளித்த விஜய் சேதுபதி சாருக்கு முதலில் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்.


ஒரு இயக்குநராக, விஜய் சேதுபதி போன்ற திறமையான நடிகர் என் மீது நம்பிக்கை வைத்து இந்த படத்தில் இணைந்தது எனக்கு மிகவும் பெருமையான விஷயம். அவரைப் பற்றி என்னை மிகவும் கவர்ந்தது அவரது எளிமை. எப்போதும் மிகவும் இயல்பாகவும், எளிமையான மனிதராகவும் இருக்கிறார். படப்பிடிப்பு தளத்திற்கு வரும் ஒவ்வொரு நாளும் ஒரு புதுமுக நடிகரைப் போலவே உற்சாகத்துடன் வருவார். அவரது நடிப்பில் ஒரு துளி கர்வத்தைக் கூட பார்க்க முடியாது. அந்த குணங்கள் என்னை மிகவும் ஈர்த்தன. இந்த படத்தில் ரசிகர்கள் இதுவரை பார்த்திராத ஒரு வித்தியாசமான, சக்திவாய்ந்த விஜய் சேதுபதியை காண்பார்கள்.


சம்யுக்தாவுடன் முதல் முறையாக பணியாற்றினேன். அவர் மிகவும் உற்சாகமானவர். இந்த படத்தில் அவர் ஏற்றுள்ள கதாபாத்திரம் ரசிகர்களுக்கு மிகவும் பிடிக்கும். அதேபோல் விடிவி கணேஷ் சார் எப்போதும் படப்பிடிப்பு தளத்தை உற்சாகமாக வைத்திருப்பார். அவர் இருக்கும் இடத்தில் அனைவரின் முகத்திலும் சிரிப்பு இருக்கும். மிகவும் பாஸிடிவான மனிதர்.


கன்னட திரையுலகின் முன்னணி நட்சத்திரமான துனியா விஜய் இந்த படத்தில் முக்கியமான வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவருடைய பங்களிப்பு படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளது. அதேபோல் ஜரீனா வஹாப் அம்மாவாக முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சில காட்சிகளில் அவருடைய நடிப்பைப் பார்த்தபோது என் கண்களில் கண்ணீர் வந்தது.


பிரம்மாஜி, ரோஹன் உள்ளிட்ட அனைத்து நடிகர்களும் தங்களுடைய கதாபாத்திரங்களுக்கு முழு நியாயம் செய்துள்ளனர். இந்த படத்தின் நடிகர் தேர்வுக்கான பெருமை முழுவதும் சார்மி கௌருக்கே சேரும். இந்த படத்திற்காக மிகச் சிறந்த நடிகர் பட்டாளத்தை அவர் ஒருங்கிணைத்துள்ளார்.


தயாரிப்பாளர்களான ஜேபி நாராயண ராவ் மற்றும் மகேந்திர ராவ் ஆகியோருக்கு எனது நன்றிகள். அவர்கள் திரைப்படத் துறையில் புதியவர்களாக இருந்தாலும், இந்த படத்திற்காக மிகுந்த அர்ப்பணிப்புடன் செயல்பட்டுள்ளனர். மேலும், இசையமைப்பாளர் ஹர்ஷவர்தன் ரமேஷ்வர் அற்புதமான பாடல்களையும் பின்னணி இசையையும் வழங்கியுள்ளார். பாடல்கள் மட்டுமல்ல, பின்னணி இசையும் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தும்.


‘ஸ்லம் டாக்’ திரைப்படத்தின் கதை இரண்டு உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. நம் அன்றாட வாழ்க்கையில் நாம் பல பிச்சைக்காரர்களைக் கடந்து செல்கிறோம். ஆனால் அவர்களின் பின்னால் இருக்கும் வாழ்க்கை, உணர்வுகள் மற்றும் கதைகளை நாம் பெரும்பாலும் அறிந்திருக்க மாட்டோம். அந்த மனிதர்களின் உலகத்தை மையமாகக் கொண்ட உணர்வுப்பூர்வமான கதையாக இந்த படம் உருவாகியுள்ளது.


இது ஒரு ஆக்ஷன் திரைப்படம் மட்டுமல்ல; வலுவான உணர்வுகளையும் கொண்ட திரைப்படம். குறிப்பாக இன்றைய இளைஞர்கள் மற்றும் குடும்ப ரசிகர்களுக்காக இந்த படத்தை உருவாக்கியுள்ளோம். அனைவரும் குடும்பத்துடன் திரையரங்கில் வந்து இந்த படத்தை பார்க்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். நன்றி.” என்றார்.


நடிகர் விஜய் சேதுபதி பேசியதாவது..,


“இங்கு வந்திருக்கும் ஊடக நண்பர்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி. இந்த படக்குழுவில் உள்ள அனைவரும் படத்தைப் பற்றியும், தங்களது அனுபவங்களைப் பற்றியும் மிகவும் அழகாக பகிர்ந்து கொண்டார்கள். அதை கேட்பது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.


முதலில் துனியா விஜய் சாரைப் பற்றி சொல்ல வேண்டும். அவர் இந்த படத்தில் வில்லனாக நடித்திருக்கிறார் என்றபோது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. அவரை நான் நீண்ட காலமாக கவனித்து வருகிறேன். கன்னடத்தில் அவர் ஒரு மிகப்பெரிய நட்சத்திரம். ஆனால் படப்பிடிப்பு தளத்தில் பார்த்தபோது, மிகவும் ஒழுக்கமான, அர்ப்பணிப்பான நடிகராக இருந்தார். இயக்குநர் சொல்வதை முழுமையாகக் கேட்டு, அந்த கதாபாத்திரத்திற்காக தன்னை முழுமையாக தயார் செய்து கொள்வார். அவர் ஒரு சிறந்த மனிதர், அற்புதமான நடிகர். அவருடன் பணியாற்றியது எனக்கு பெருமையாக இருக்கிறது.


விடிவி கணேஷ் சாருக்கு என் நன்றிகள். அவரைப் பற்றி எனக்கு இருந்த எண்ணம் வேறு, ஆனால் அவருடன் இணைந்து நடித்த பிறகு அவருடைய நடிப்பு திறமையை இன்னும் நெருக்கமாக புரிந்து கொள்ள முடிந்தது. ஒரு காட்சியை எப்படி இன்னும் சிறப்பாக மாற்றலாம் என்பதில் எப்போதும் ஆர்வமாக இருப்பார். படப்பிடிப்பு தளத்திலும், திரையிலும் அனைவரையும் மகிழ்விக்கக் கூடிய ஒரு அற்புதமான கலைஞர். அவர் இருக்கும் இடத்தில் எப்போதும் உற்சாகம் இருக்கும்.


சம்யுக்தாவுக்கு நன்றி. மிகவும் திறமையான மற்றும் புத்திசாலித்தனமான நடிகை. ஒரு கதாபாத்திரத்தை விரைவாகப் புரிந்து கொண்டு, அதை மிக இயல்பாக வெளிப்படுத்தும் திறமை அவருக்கு இருக்கிறது. படத்திற்காக அவர் எடுத்த முயற்சியும், அர்ப்பணிப்பும் பாராட்டத்தக்கது. இன்று இந்த மேடையில் அவர் பேசிய விதமும் மிகவும் அழகாக இருந்தது.


இசையமைப்பாளர் ஹர்ஷவர்தன் ரமேஷ்வரின் இசை இந்த படத்திற்கு மிகப்பெரிய பலமாக இருக்கும். நான் தற்போது டீசர் இசையை மட்டுமே கேட்டிருக்கிறேன். அது மிகவும் சிறப்பாக இருந்தது. படத்தின் முழு இசை ரசிகர்களை வெகுவாக கவரும் என்று நம்புகிறேன்.


“முதலில் சார்மி மேடத்திற்கு என் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவிக்க விரும்புகிறேன். படப்பிடிப்பு தளத்தில் எவ்வளவு பெரிய சவால்கள் இருந்தாலும், அதை மிகுந்த அமைதியுடனும் உறுதியுடனும் கையாண்டார். ஒரு தயாரிப்பாளராக மட்டுமல்லாமல், முழு படத்தின் மீது மிகுந்த அக்கறை கொண்டவராக செயல்பட்டார். இயக்குநருக்கு என்ன தேவை, அதை எப்படி சிறப்பாக செய்து முடிக்க வேண்டும் என்பதில் மட்டுமே அவர் கவனம் செலுத்துவார். இன்று நீங்கள் திரையில் பார்க்கப் போகும் இந்தப் படத்தின் தரத்தில் அவருடைய பங்கு மிகப்பெரியது. அவருடைய மன உறுதியையும், அர்ப்பணிப்பையும் நான் மிகவும் மதிக்கிறேன்.”


“பூரி ஜெகன்நாத் சார் ஒரு வரலாறு. அவருடைய சினிமா பயணமும், வாழ்க்கை அனுபவங்களும் மிகவும் ஊக்கமளிப்பவை. பல ஆண்டுகளாக தொடர்ந்து எழுதிக் கொண்டே இருக்கிறார். ஒரு கதையை முடித்தவுடன் அடுத்த கதையைப் பற்றி யோசிக்கத் தொடங்கிவிடுவார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு காலத்திலும் அவர் பல கதைகளை என்னிடம் பகிர்ந்திருக்கிறார். ஒவ்வொரு கதையும் தனித்துவமாகவும், சுவாரஸ்யமாகவும் இருந்தது.”


“ஒரு காட்சியை உருவாக்குவதிலும், அதை திரையில் வெளிப்படுத்துவதிலும் அவருக்கு இருக்கும் தெளிவு அபாரமானது. அவருக்கு என்ன வேண்டும், ஒரு ஃபிரேமில் என்ன இருக்க வேண்டும், எந்த அளவுக்கு இருக்க வேண்டும் என்பதில் மிகுந்த தெளிவு இருக்கும். அப்படிப்பட்ட இயக்குநருடன் பணியாற்றும்போது ஒரு நடிகராக நமக்கு மிகுந்த நம்பிக்கையும், பாதுகாப்பான உணர்வும் கிடைக்கும். ‘நீங்கள் பாதுகாப்பான கைகளில் இருக்கிறீர்கள்’ என்ற நம்பிக்கையை அவர் எப்போதும் கொடுப்பார்.”


படம் மிகவும் வலுவான கதையுடன் உருவாகியுள்ளது. ஆக்சன், உணர்வுகள், மனித உறவுகள் என அனைத்தும் இதில் இருக்கின்றன. பூரி ஜெகன்நாத் சாரின் சிறந்த படங்களில் ஒன்றாக ‘ஸ்லம் டாக்’ இருக்கும் என்று நான் நம்புகிறேன். இந்தப் படத்தில் அவருடைய ஈடுபாடும், நம்பிக்கையும், உழைப்பும் மிகத் தெளிவாக தெரிகிறது.”*


“இந்தப் படத்தில் நடித்த அனுபவத்தை நான் மிகவும் ரசித்தேன். இயக்குநர் மற்றும் நடிகர் இடையே உருவாகும் அந்த நம்பிக்கையும், புரிதலும் இந்தப் படத்தில் மிகவும் அழகாக அமைந்தது. பூரி சார் மீது எனக்கு மிகுந்த மரியாதையும், அன்பும் இருக்கிறது. அவருடன் பணியாற்றியது மறக்க முடியாத அனுபவம்.”


”‘ஸ்லம் டாக்’ திரைப்படம் அனைத்து மொழி ரசிகர்களையும் கவரும் என்று உறுதியாக நம்புகிறேன். இந்த படத்திற்காக உழைத்த இயக்குநர் பூரி ஜெகன்நாத் சார், தயாரிப்பாளர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் நடிகர்கள் அனைவருக்கும் என் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். என்றார்‘


விஜய் சேதுபதியுடன் கதாநாயகியாக சம்யுக்தா நடித்துள்ள நிலையில், முக்கிய கதாபாத்திரங்களில் நடிகை தபு மற்றும் கன்னட நட்சத்திரம் துனியா விஜய் நடித்துள்ளனர். மேலும் பிரம்மாஜி, விடிவி கணேஷ் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.


தேசிய விருது பெற்ற இசையமைப்பாளர் ஹர்ஷவர்தன் ராமேஷ்வர் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.


பூரி ஜெகன்நாத் மற்றும் சார்மி கௌர் ஆகியோர் Puri Connects நிறுவனத்தின் சார்பில் தயாரித்துள்ள இந்த திரைப்படம், JB Motion Pictures நிறுவனத்துடன் இணைந்து உருவாகியுள்ளது.


“ஸ்லம் டாக்” திரைப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய ஐந்து மொழிகளில் பான்-இந்தியா அளவில் வெளியாக உள்ளது



https://www.youtube.com/watch?v=AIVtStHolxs

நிகழ்வில் வேல்ஸ் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் தலைவர் டாக்டர் ஐசரி கே. கணேஷ் பேசுகையில்,

நிகழ்வில் வேல்ஸ் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் தலைவர் டாக்டர் ஐசரி கே. கணேஷ் பேசுகையில்,



“தயாரிப்பாளர் கே. ராஜன் மாமா அவர்களின் எதிர்பாராத மறைவு ஒட்டுமொத்த தமிழ் திரையுலகிற்கும், குறிப்பாக எங்கள் குடும்பத்திற்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு.


நிறைய பேர் அவரைப் பற்றி பேசினார்கள். அவருடைய மகள் பேசும்போது எனக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது. என்ன பேசுவது என்றே தெரியவில்லை. இருந்தாலும் நான் பேசியாக வேண்டும். ஏனெனில், எனக்கும் மாமாவுக்கும் இருந்த நட்பு சாதாரணமானது அல்ல.


என்னுடைய மறைந்த தந்தை ஐசரி வேலன் இறந்து கிட்டத்தட்ட 39 ஆண்டுகள் ஆகிறது. அவரும் கே. ராஜன் மாமாவும் வடசென்னையில் சர் தியாகராயா பள்ளியில் ஒன்றாகப் படித்த பள்ளித் தோழர்கள். நாடகங்களில் சேர்ந்து நடித்தார்கள். பள்ளிப் பருவத்திலேயே கதை எழுதுவார்கள், இயக்குவார்கள், நடிப்பார்கள் — எதைச் செய்தாலும் இருவரும் ஒன்றாகச் செய்வார்கள்.


மாமா வடசென்னையில் காமராஜ் மெட்ரிகுலேஷன் பள்ளியை நடத்தி வந்தார். இப்போது அதை அவரது மகளும் மகனும் கவனித்து வருகின்றனர். அந்தப் பள்ளிக்கே என் தந்தை சென்று அவருடன் அமர்ந்து பேசுவார்.



அப்போது ‘என்னைப் போல ஒரு பள்ளியை நீயும் ஆரம்பி’ என்று என் தந்தையிடம் ராஜன் மாமா கூறியிருக்கிறார். அதை மனதில் வைத்துக்கொண்ட என் தந்தை, பின்னர் அதை என்னிடம் கூறினார். அதையே நான் மனதில் வைத்து, அவர் மறைந்த பிறகு அவரது பெயரில் ஒரு கல்லூரியைத் தொடங்கினேன்.


இன்று 54 கல்வி நிறுவனங்களை நடத்தி வருகிறேன். 50,000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி கற்கிறார்கள்; 8,000-க்கும் மேற்பட்டோர் பணியாற்றுகிறார்கள். இதற்கெல்லாம் விதை போட்டவர் கே. ராஜன் மாமாதான் என்று நான் சொல்லுவேன்.


நான் 19 வயதில் இருக்கும்போதே அப்பா இறந்துவிட்டார். அதன் பிறகு நான் அவரை என் அப்பாவாகத்தான் பார்த்தேன். அவர் எதை கேட்டாலும் நான் செய்து கொடுப்பேன். வசதி இருந்தாலும், கஷ்டம் இருந்தாலும், அவரிடம் ‘இல்லை’ என்று நான் சொன்னதே இல்லை.


அவர் தேர்தலில் நிற்பார். ‘வேண்டாம் மாமா, எதற்கு நிற்கிறீர்கள்?’ என்று நான் கேட்பேன். ‘இல்லடா, நான் ஜெயிச்சிருவேன்டா’ என்பார். ‘ஜெயித்தால் சந்தோஷம்; தோற்கக்கூடாது’ என்று சொல்லி அதற்கும் உதவி செய்வேன். சில தேர்தல்களில் வென்றிருக்கிறார்; சிலவற்றில் தோற்றிருக்கிறார். ஆனால் கடைசிவரை தலைவராக இருந்தபடியே அவர் மறைந்தது ஒரு மனநிறைவைத் தருகிறது.


ஆனால் அவர் இப்படி மறைந்திருக்கக் கூடாது. அவரைப் போல தைரியமான ஒருவரை நான் பார்த்ததில்லை. அவரைப் பார்த்து எனக்கும் நிறைய தைரியம் வந்திருக்கிறது. எத்தனையோ பெரிய அறுவைச் சிகிச்சைகளை தைரியமாக எதிர்கொண்டவர், ஒரு சிறிய பேஸ்மேக்கர் அறுவைச் சிகிச்சைக்குப் பிறகு இப்படி ஒரு முடிவை எடுப்பார் என்று நான் நினைத்ததே இல்லை.


இருந்தாலும், இன்று அவர் எப்போதும் எங்களோடு வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்று நான் நம்புகிறேன்.


கே. ராஜன் மாமா, சிறு பட்ஜெட் தயாரிப்பாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்களின் நிதிப் பாதுகாப்பு குறித்து தொடர்ந்து குரல் கொடுத்து வந்தவர். தமிழ் சினிமாவின் நலனுக்காக, நேர்மையுடனும், துணிச்சலுடனும், அலாதியான அர்ப்பணிப்புடனும் இறுதிவரை போராடிய மாமனிதர்.


எந்த மேடையிலும் உண்மையை உரக்கப் பேசும் அவரது குணம், தமிழ் சினிமா வர்த்தக வரலாற்றிலும், சுயாதீனப் படைப்பாளர்களின் வரலாற்றிலும் என்றும் நிலைத்திருக்கும்.


இன்று இந்த சங்கத்தில் அவரது திருவுருவப் படத்தைத் திறந்து வைத்துள்ளீர்கள். அவர் இல்லாவிட்டாலும், அவர் இருந்தால் என்ன செய்திருப்பாரோ அதை நான் நிச்சயமாக செய்வேன் என்பதை இந்த சங்கத்திற்கு உறுதியளிக்கிறேன்.


எனக்கு இந்த வாய்ப்பை வழங்கிய அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக்கொண்டு, அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், ஒட்டுமொத்தத் திரையுலகினருக்கும் என் மனமார்ந்த ஆறுதலையும் பிரார்த்தனைகளையும் தெரிவித்துக்கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்” என்று உருக்கமாகப் பேசினார்.

சிங் கீதம்' படத்தின் முன் வெளியீட்டு விழா*

 *'சிங் கீதம்' படத்தின் முன் வெளியீட்டு விழா*



'சிங் கீதம்' நான் தயாரிக்க விரும்பிய படம்!


* சிங்கிதம் சார் இப்போதும் ஜென் -ஜி (GenZ) விட முன்னணியில் இருக்கிறார் ஜென் -ஜி

- உலகநாயகன் கமல்ஹாசன்


"சிங் கீதம் மூலம் எனது 40 வருடக் கனவு நனவாகியுள்ளது. இந்தப் படத்தின் முழுப் பெருமையும் நாக் அஸ்வினையே சாரும். வைஜயந்தி மூவிஸும் நாக் அஸ்வினும் என் மீது மிகுந்த அன்பையும் பாசத்தையும் காட்டியுள்ளனர்"

- பழம்பெரும் இயக்குனர் சிங்கிதம் சீனிவாச ராவ்


சிங்கீதம் அவர்களின் பாராட்டு ஒரு ஆஸ்கர் விருது பெற்றது போல் உணர்கிறேன்

- தேவி ஸ்ரீ பிரசாத்


பழம்பெரும் இயக்குனர் சிங்கிதம் சீனிவாச ராவ் தனது மிகவும் லட்சிய படைப்பான 'சிங் கீதம்' படத்துடன் ரசிகர்கள் முன் வருகிறார். நாக் அஸ்வின், வைஜயந்தி மூவிஸ் மற்றும் ஸ்வப்னா சினிமா இப்படத்தை தயாரித்தார். அயன், அஹல்யா பம்ரு மற்றும் ஷாலினி கொண்டேபுடி ஆகியோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தனர். "ராக் ஸ்டார்" தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். ஏற்கனவே வெளியிடப்பட்ட 'சிங் கீதம்' படத்தின் டீசர் மற்றும் பாடல்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.


'சிங் கீதம்' திரைப்படம் ஜூன் 11 அன்று உலகெங்கிலும் உள்ள திரையரங்குகளில் வெளியாகிறது. இதையொட்டி, படக்குழுவினர் சென்னையில் PreRelease நிகழ்ச்சி நடந்தது. உலகநாயகன் கமல்ஹாசன் இதில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். இந்த நிகழ்ச்சி மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்றது.


     நிகழ்ச்சியில் உலக நாயகன் கமல்ஹாசன் கூறியதாவது... அனைவருக்கும் வணக்கம். மாயாபஜார் முதல் தற்போதைய "சிங் கீதம்" வரை, சிங்கிதம் சீனிவாச ராவ் அவர்களிடம் எந்த மாற்றமும் இல்லை. சினிமா அவரிடமே உள்ளது. இது மிகவும் அரிதாக நடக்கும் ஒரு விஷயம். எனக்கு 20 வயதாக இருந்தபோதே அவருடன் பணியாற்றத் தொடங்கினேன். அவருடைய படங்களில் தயாரிப்பாளராகவும், உதவி இயக்குநராகவும் பணியாற்றியுள்ளேன். அவருடன் பணியாற்ற வேண்டும் என்பதே என் நோக்கம். பல ஆண்டுகளுக்கு முன்பு, அவர் என்னிடம் இரண்டு கதைகளைச் சொன்னார். அவற்றில் ஒன்று 'புஷ்பக விமானம்' என்ற திரைப்படமாக வெளியானது. இப்போது இரண்டாவது கதை 'சிங் கீதம்' என்ற திரைப்படமாக வெளியாகப் போகிறது. எனக்கு 20 வயதாக இருந்தபோது அந்தக் கதையைக் கேட்டேன். இப்போது எனக்கு 70 வயதாகிறது. இப்போது நான் அந்தப் படத்தைப் பார்க்கப் போகிறேன். சில யோசனைகள், சில கதைகள் காலத்தால் அழியாதவை. சிங்கிதம் சாரின் கதைகளும் அப்படித்தான். அவை காலத்தால் அழியாதவை. பலர் சிங்கிதம் சாரின் பெயரை 'சங்கீதம்' என்று உச்சரிக்கிறார்கள். ஆனால் இந்தப் படத்தின் மூலம், அந்தக் குழப்பம் இருக்காது. இனி எல்லோரும் அவரை ' சிங்கீதம் ' என்றே அழைப்பார்கள். இசை அவர் பெயரில்தான் இருக்கிறது. 'கல்கி' படத்தை ஒரு சூடான ஸ்டுடியோவில் படமாக்கினோம். ஆனால் 'புஷ்பக விமானம்' ஒரு ஃபைவ் ஸ்டார் ஹோட்டலில் உள்ள ஏசி அறையில் படமாக்கப்பட்டது. 'முழுப் படத்தையும் நாங்கள் ஏர் கண்டிஷனிங்கில் படமாக்கினோம்' என்று பெருமையுடன் சொல்லிக்கொள்வோம். அதேபோல், அவருடன் நாங்கள் செய்த 'மும்பை எக்ஸ்பிரஸ்' திரைப்படத்தை மிகவும் ரசித்தோம். சிங்கிதம் சார் இப்போதும் GenZ விட முன்னணியில் இருக்கிறார். இன்று அவரைக் கொண்டாடுவது பெரும் மகிழ்ச்சி. நான் இப்போதும் அவருடைய உதவி இயக்குநராக இருக்க விரும்புகிறேன். சினிமா என்பது பேரார்வத்துடன் செய்யப்பட வேண்டிய ஒரு படைப்பு. அவர்கள் இந்தப் படத்தை அத்தகைய பேரார்வத்துடன் பார்வையாளர்களுக்கு கொண்டு வருகிறார்கள். ஒரு படம் பேரார்வத்துடன் உருவாக்கப்பட்டால், அது எதிர்பாராத வெற்றியைத் தரும். புஷ்பக விமானம் அதற்கு ஒரு நல்ல உதாரணம். அந்தப் பேரார்வத்தை நாம் சிங்கிதம் சாரிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டும். ஒரு படம் வெற்றி பெறுமா இல்லையா என்பதை யாராலும் முன்கூட்டியே சொல்ல முடியாது. ஆனால் படம் முடிந்த பிறகுதான் நாம் மகிழ்ச்சியாக இருக்கிறோமா இல்லையா என்பது நமக்குத் தெரியும். புஷ்பக விமானம், மும்பை எக்ஸ்பிரஸ், அபூர்வ சகோதரர்கள் போன்ற படங்கள் ஒரு நல்ல உணர்வுடன் உருவாக்கப்பட்டன. அத்தகைய உணர்வுடன் வரும் படம் சிங் கீதம். இந்தப் படத்தை நானே தயாரித்தது போல் உணர்கிறேன். நான் ஒரு இணைத் தயாரிப்பாளர் போல் உணர்கிறேன். அது நாகிக்குத் (நாக் அஸ்வின்) தெரியும். சிங்கிதம் சார் மீது எனக்கு எப்போதும் மரியாதை இருக்கும். இந்தப் படத்தை ராஜ் கமல் பிலிம்ஸ் தயாரித்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும் என்று நான் உணர்கிறேன். இந்த நிகழ்ச்சிக்கு வந்திருப்பதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி. மூன்று மாதங்களுக்கு முன்பு நீங்கள் சொல்லியிருந்தால், நானும் படக்குழுவில் ஒரு பகுதியாக இருந்திருப்பேன். அந்த வாய்ப்பை நான் தவறவிட்டுவிட்டேன். ஆனால், சிங்கிதம் சார் மீது எனக்கு முழு நம்பிக்கை உள்ளது. அவருடன் பணிபுரிய மற்றொரு வாய்ப்பு நிச்சயம் வரும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். உங்கள் அனைவருக்கும் நன்றி.”


இயக்குநர் சிங்கிதம் சீனிவாச ராவ் பேசும்போது... அனைவருக்கும் வணக்கம். இந்தப் படம் எனது 40 வருடக் கனவு. வார்த்தைகளே பாடல்கள் என்றால், இந்தக் கதையை நான் பலரிடம் சொல்லியிருக்கிறேன் என்ற எண்ணத்தில்தான் இந்தக் கதை பிறந்தது. ஆனால், தெய்வீக அருளால், நாக் அஸ்வின் தயாரிப்பில் வைஜயந்தி மூவிஸ் இறுதியாக இந்தப் படத்தை உருவாக்கும் வாய்ப்பு கிடைத்ததை நான் பாக்கியமாகக் கருதுகிறேன். இந்தப் படத்தை ஆரம்பம் முதல் இறுதி வரை நான் இயக்கினேன். ஆனால், வைஜயந்தி மூவிஸ் மற்றும் நாக் அஸ்வின் ஆகியோர் படத்தின் தயாரிப்பு தொடர்பான அனைத்துப் பொறுப்புகளையும் மிகுந்த அன்புடன் ஏற்றுக்கொண்டனர். நாக் அஸ்வின் ஒரு உலகப் புகழ்பெற்ற இயக்குநர். இந்தப் படத்தைத் தயாரிக்க அவர் முன்வந்தது எனக்குப் பெரும் மகிழ்ச்சியை அளித்தது. அவர் படத்தை விட என்னை அதிகமாக நேசித்தார். அவர் இந்தப் படத்தை மிகுந்த மரியாதையுடன் போற்றுதலுடனும் தயாரித்தார். இந்தப் படத்தின் பெருமை நாக் அஸ்வினையே சாரும். தேவி ஸ்ரீ பிரசாத் இந்தக் கதையை அற்புதமாக புரிந்துகொண்டார். அவரைத் தவிர வேறு யாராலும் இந்தப் படத்திற்கு இத்தகைய அற்புதமான இசையை வழங்கி இருக்க முடியாது என்று நான் நம்புகிறேன். நாக் அஸ்வின் எனக்கு மிகுந்த மரியாதை கொடுத்தார். அவர் என்னை ஒரு தந்தையைப் போல நடத்தினார். அவர் காட்டிய அன்பு, பாசம் மற்றும் ஆதரவுக்கு என் மனமார்ந்த நன்றிகள். அஸ்வினி தத் சார், நாக் அஸ்வின், தேவி ஸ்ரீ பிரசாத் மற்றும் என் அன்புக்குரிய கமல்ஹாசன் ஆகியோருக்கு என் சிறப்பு நன்றிகள். கமல்ஹாசன் இந்த விழாவிற்கு வருவது எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. அவருடன் எனக்கு மிகவும் நெருக்கமான ஒரு பிணைப்பு உள்ளது. இந்த நிகழ்ச்சிக்கு வந்த அவருக்கு என் சிறப்பு நன்றிகள்.


தேவி ஸ்ரீ பிரசாத் பேசும்போது... அனைவருக்கும் வணக்கம். கமல்ஹாசன் சார், சிங்கிதம் சார் மற்றும் இங்கு வந்துள்ள அனைவருக்கும் நன்றி. இன்று கமல்ஹாசன் சார் தனது வாழ்க்கை அனுபவங்களை எங்களுடன் பகிர்ந்து கொண்டது பெரும் மகிழ்ச்சி அளித்தது. இது ஒரு மைல்கல் அனுபவம். பேரார்வம் பற்றி அவர் கூறியது மிகவும் ஊக்கமளிப்பதாக இருந்தது. அஸ்வினி தத் சார் அற்புதமான திரைப்படங்களை உருவாக்கியுள்ளார். அவரை ஒரே வார்த்தையில் விவரிப்பது மிகவும் கடினம். இருப்பினும், அவரைப் பற்றிப் பேச, 'ஜகதேக வீரடு அதிலோக சுந்தரி' என்ற ஒரு திரைப்படம் போதுமானது. அதேபோல், சிங்கிதம் சாரைப் பற்றிப் பேச "புஷ்பக விமானம்" என்ற வார்த்தையே போதும். இந்த மூவருக்கும் ஒரு பொதுவான குணம் உண்டு. அவர்கள் எப்போதும் இசைக்குத்தான் முதலிடம் கொடுப்பார்கள். 'சிங் கீதம்' படத்திற்கு நான் இசையமைப்பது ஒரு வரம் என்று உணர்கிறேன். இந்தப் படத்தில் ஒரு சிறந்த எழுத்துக் குழு உள்ளது. சிங்கிதம் சாருடன் இந்தக் கதையைப் பற்றி விவாதித்தபோது நாங்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தோம். சிங்கிதம் சார் இதுவரை செய்துள்ள சோதனைகளை வேறு யாரும் செய்ததில்லை. அவர் இன்னும் ஒரு சிறு குழந்தையைப் போலவே பேசுகிறார். அதுதான் அவரிடம் உள்ள சிறந்த குணம். நான் எப்போதும் இது போன்ற ஒரு படத்தை உருவாக்க விரும்பினேன். சிங்கிதம் சாரால் இந்தப் படத்தின் மூலம் அந்த ஆசை நிறைவேறியது. சிறுவயதிலிருந்தே, செய்தித்தாள் கட்டுரைகளை இசையாக மாற்றும் பழக்கம் எனக்கு உண்டு. அந்தப் பழக்கம் இந்தப் படத்திற்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது. இது போன்ற வாய்ப்புகள் வாழ்நாளில் ஒருமுறைதான் வரும். ஒரு படத்தில் உள்ள ஒவ்வொரு வார்த்தையையும் ஒரு பாடல் போல ஒலிக்கச் செய்வது மிகவும் சவாலானதாகத் தோன்றியது. அந்த வார்த்தை இன்று ஒரு பாடலாக மாறியுள்ளது. அதுதான் எங்கள் உற்சாகத்திற்குக் காரணம். நான் குறிப்பிட்ட அனைத்து விசித்திரமான யோசனைகளுக்கும் எனக்குப் பெரிதும் ஆதரவளித்த நாகி சாருக்கு நன்றி. மேலும், இந்தப் படத்தில் பணியாற்றிய ஒவ்வொரு தொழில்நுட்பக் கலைஞருக்கும் நன்றி. அனைத்து நடிகர்களும் அற்புதமாக நடித்துள்ளனர். குறிப்பாக, இந்தப் படத்தில் நடித்த அனைவரும் தங்களது சொந்தக் குரலில் பாடியுள்ளனர். எங்கள் குழுவினர் அனைவரும் இந்தப் படத்திற்காக மிகவும் கடினமாக உழைத்துள்ளனர். அவர்கள் அனைவருக்கும் சிறப்பு நன்றி. இந்தப் படம் பார்வையாளர்களுக்கு நிச்சயம் ஒரு புதிய மற்றும் வித்தியாசமான அனுபவத்தை வழங்கும்.


அயன் கூறியதாவது... அனைவருக்கும் வணக்கம். இந்தப் படத்தில் பிரதாப் கதாபாத்திரத்திற்கு என்னைத் தேர்ந்தெடுத்த சிங்கிதம் சார், விஜயந்தி மூவிஸ் மற்றும் நாக் அஸ்வின் சார் ஆகியோருக்கு நன்றி. சிங் கீதம் போன்ற ஒரு சிறந்த பரிசை எங்களுக்கு வழங்கிய சிங்கிதம் சாருக்கு சிறப்பு நன்றி. என் வாழ்நாள் முழுவதும் என்னை சிங்கிதம் சீனிவாச ராவ் அவர்களின் நாயகன் என்று அழைத்துக்கொள்வதில் பெருமைப்படுவேன். கமல்ஹாசன் சார் ஒரு ஜாம்பவான். அவர்தான் எங்களுக்கு உத்வேகம். தேவி ஸ்ரீ பிரசாத் சார் எங்கள் படத்திற்கு இசையமைத்திருப்பது எனக்கு மிகவும் பாக்கியமாக உணர்கிறேன். அவர் இந்தப் படத்திற்கு மிகவும் புதிய வகையான இசையை வழங்கியுள்ளார். இந்த நல்வாய்ப்பில், அனைவரின் பெயரையும் குறிப்பிட்டு நன்றி கூறுகிறேன்.


அஹல்யா பம்ரு கூறியதாவது ... அனைவருக்கும் வணக்கம். இத்தனை ஜாம்பவான்களுடன் இந்தப் படத்தில் நடிப்பது பெரும் மகிழ்ச்சி. சிங்கிதம் சாருடன் பணிபுரியும் வாய்ப்பு எனக்குக் கிடைக்கும் என்று நான் ஒருபோதும் கற்பனை செய்ததில்லை. கமல்ஹாசன் சார் கலந்துகொள்ளும் இந்தக் கொண்டாட்டத்தில் ஒரு பகுதியாக இருப்பதில் நான் பெருமைப்படுகிறேன். நாக் அஸ்வின் அவர்கள் முன்வந்து, எங்களைப் போன்ற புதுமுகங்களுக்கு வாய்ப்பளித்திருப்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. ஸ்வப்னா சினிமா மற்றும் விஜயந்தி மூவிஸ் நிறுவனங்களுக்கு நன்றி. அவர்களால்தான் எங்கள் கனவு நனவானது. இந்த விழாவில் படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர்.


'சிங் கீதம்' திரைப்படம் ஜூன் 11 அன்று உலகெங்கிலும் உள்ள திரையரங்குகளில் வெளியாகிறது.

Geetu Mohandas in Action: Team Toxic Celebrates Its Captain with Special BTS Footage

 *கீது மோகன் தாஸ் பிறந்தநாள் கொண்டாட்டம் :  பிரத்யேக BTS காணொலியை வெளியிட்ட ‘டாக்ஸிக்’ படக்குழு*



நடிகையும், இயக்குநருமான கீது மோகன்தாஸின் பிறந்த நாளை முன்னிட்டு, 'டாக்ஸிக்' படக் குழுவினர் ஒரு பிரத்யேக படப்பிடிப்பு தள காணொலியை பகிர்ந்துள்ளனர். இது அந்த திரைப்பட இயக்குநரின் படைப்பு சார்ந்த செயலாக்கத்தையும்... ஆளுமை மிக்க அவரது இருப்பையும்... காண்பதற்கு பார்வையாளர்களுக்கு ஒரு அரிய வாய்ப்பாக அமைந்திருக்கிறது. 


இந்த பிறந்த நாளுக்கான சிறப்பு காணொலியில் கீது மோகன்தாஸ் - தனது இயல்பான பாணியில் செயலாற்றுவதை காட்சிப்படுத்துகிறது. காட்சிகளை தீர்மானிப்பது - பிரம்மாண்டமான சண்டைக் காட்சிகளை ஒருங்கிணைப்பது - நடிப்பை வழி நடத்துவது மற்றும் ஒரு மிகப்பெரிய படக்குழுவினை நம்பிக்கையுடனும் துல்லிய தன்மையுடனும் வழிநடத்துவது- என பல விசயங்களையும் காணலாம் .


''வித்தியாசமாகத் தாக்கிய ஒவ்வொரு காட்சியின் பின்னாலும்.. வசனங்களை விட.. உரையாடலை விட அதிகமாகப் பேசிய ஒவ்வொரு மௌனத்திலும், அவர் இருந்தார்! இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் கீது மோகன்தாஸ்'' என்ற செய்தியுடன் வெளியிடப்பட்டுள்ள இந்த காணொலி-  இந்திய திரையுலகில் உருவாக்கப்பட்ட மிகவும் பிரம்மாண்டமான படங்களில் ஒன்றான 'டாக்ஸிக்' படத்திற்கு உயிர் கொடுத்த அந்த திரைப்பட இயக்குநரையும்.. அவரது ஆளுமை மிக்க நேரடியான கள அணுகுமுறையையும் கொண்டாடுகிறது.‌


ஒரு சாதாரணமான படப்பிடிப்பு தள காட்சியை விட ..மேலான இந்த காணொலி- கீது மோகன் தாஸின் அசத்தலான செயல்பாட்டினை பிரதிபலிப்பதுடன்... படத்தின் பிரம்மாண்டத்தையும் வெளிச்சம் போட்டு காட்டுகிறது. இந்தியாவில் இவ்வளவு பெரிய மற்றும் உலகளாவிய அளவிலான ஒரு திரைப்படத்தை இயக்கிய மிக சில பெண் திரைப்பட இயக்குநர்களில் ஒருவராக... அவர் ஒரு பிரம்மாண்டமான தயாரிப்பின் மையத்தில் நின்று.. நம்பிக்கையுடன் முன் நின்று வழிநடத்தி திரைப்பட தயாரிப்பு செயல்முறையில் ஒவ்வொரு அம்சத்தையும் விரிவாக திட்டமிட்டு செயல்படுத்தி இயக்குகிறார். பரந்து விரிந்த அரங்கங்கள்- சிக்கலான நுட்பமான சண்டைக் காட்சிகள் மற்றும் சர்வதேச அளவிலான தயாரிப்பு மதிப்பு ஆகியவற்றை கையாளும்போது படைப்பின் தொலைநோக்குப் பார்வையையும்... செயல்பாட்டு கட்டுப்பாட்டையும்.. சமநிலைப்படுத்தி, ஒவ்வொரு விசயத்திலும் ஆழ்ந்து கவனம் செலுத்தும் ஒரு இயக்குநரின் செயல்பாடுகளை... இந்த காணொலியில் உள்ள காட்சிகள் பறைசாற்றுகின்றன. 


கீது மோகன்தாஸ் இயக்கிய 'டாக்ஸிக் : எ ஃபேரிடேல் ஃபார்  கிரோன்  -அப்ஸ் ' (( Toxic: A Fairy Tale for Grownups )திரைப்படத்தில் யாஷ் உடன் நயன்தாரா, கியாரா அத்வானி, ஹுமா குரேஷி,  , ருக்மணி வசந்த் , தாரா சுதாரியா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கே. வி. என் புரொடக்ஷன்ஸ் (KVN Productions )  மற்றும் மான்ஸ்டர் மைண்ட் கிரியேசன்ஸ் ( Monster Mind Creations )  ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள 'டாக்ஸிக்' திரைப்படம்-  அதன் பிரம்மாண்டம்... தனித்துவம்... ஆகிய காரணங்களால் தொடர்ந்து தலைப்பு செய்திகளில் இடம் பிடித்து வருகிறது. இந்திய திரையுலகில் மிகவும் எதிர்பார்க்கப்படும் இந்த சினிமாவை ரசிகர்கள் திரையரங்குகளில் கண்டு ரசித்து கொண்டாட ஆவலுடன் காத்திருக்கிறார்கள். இந்நிலையில் இப்படம் விரைவில் உலகெங்கிலும் வெளியாக உள்ளது.


https://www.youtube.com/watch?v=bQvuGRMWWVQ


*Geetu Mohandas in Action: Team Toxic Celebrates Its Captain with Special BTS Footage*


On the occasion of director Geetu Mohandas’ birthday, the team of Toxic shared a special behind-the-scenes video from the film's set, offering audiences a rare glimpse into the filmmaker’s creative process and commanding presence.


The birthday special showcases Geetu in her element — calling the shots, orchestrating large-scale action sequences, guiding performances and leading a massive crew with confidence and precision. Accompanied by the message, “Behind every shot that hit different, every silence that said more than dialogue ever could, there she was! Happy birthday @geetu_mohandas,” the video celebrates the filmmaker and her commanding, hands-on approach to bringing Toxic to life, one of the most ambitious films mounted in Indian cinema.


Far more than a behind-the-scenes peek, the footage highlights the scale of the film while showcasing Geetu in action. As one of the very few female filmmakers in India to helm a project of this magnitude and global ambition, she stands at the centre of a massive production, confidently leading from the front and steering every aspect of the filmmaking process. The visuals capture a director deeply involved in every detail, balancing creative vision with operational command while navigating expansive sets, intricate action sequences, and a large-scale international production.


Directed by Geetu Mohandas, Toxic: A Fairytale for Grown-Ups stars Yash alongside Nayanthara, Kiara Advani, Huma Qureshi, Rukmini Vasanth and Tara Sutaria. Produced by KVN Productions and Monster Mind Creations, Toxic continues to make headlines for its scale, ambition, and unique creative vision. The film is set to release worldwide soon, with audiences eagerly awaiting one of the most anticipated cinematic events in Indian cinema.


https://youtu.be/bQvuGRMWWVQ?si=tmN3K2pdrYy9sT-V

Vijay Sethupathi, Puri Jagannadh’s Highly Anticipated Action-Drama Slum Dog Teaser Launching On June 8th*

 *விஜய் சேதுபதி - பூரி ஜெகன்நாத் கூட்டணியின் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் “ஸ்லம் டாக்” படத்தின் டீசர் ஜூன் 8-ஆம் தேதி வெளியாகிறது!*



வித்தியாசமான கதைக்களங்களையும், மாஸ் ஆக்ஷன் படங்களையும் வழங்கி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வரும் இயக்குநர் பூரி ஜெகன்நாத் மற்றும் பல்வேறு கதாபாத்திரங்களில் அசத்தி வரும் நடிகர் விஜய் சேதுபதி ஆகியோர் முதன்முறையாக இணைந்துள்ள பான்-இந்தியா ஆக்சன் திரைப்படம் “ஸ்லம் டாக்”. இந்த படத்திற்கு “33 Temple Road” என்ற துணைத் தலைப்பும் வழங்கப்பட்டுள்ளது.


படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துள்ள நிலையில், அனைத்து மொழிகளிலும் போஸ்ட் புரடக்சன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. டைட்டில் அறிவிப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரிலிருந்தே ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ள இந்த படத்தின் அடுத்தகட்ட புரமோஷன் பணிகளை படக்குழு தொடங்கியுள்ளது.


அதன் ஒரு பகுதியாக, படத்தின் டீசர் வரும் ஜூன் 8-ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை முன்னிட்டு வெளியிடப்பட்டுள்ள புதிய போஸ்டர் ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளது. கண்கள் கட்டப்பட்ட நிலையில் நிற்கும் ஒருவரின் கழுத்தில் ரத்தக்கறை படிந்த அரிவாள் வைக்கப்பட்டிருக்கும் காட்சி, படத்தின் இருண்ட மற்றும் கொடூரமான உலகத்தை உணர்த்துகிறது. இந்த போஸ்டர் படத்தின் மீது மேலும் ஆர்வத்தை தூண்டுகிறது.


விஜய் சேதுபதியுடன் கதாநாயகியாக சம்யுக்தா நடித்துள்ள நிலையில், முக்கிய கதாபாத்திரங்களில் நடிகை தபு மற்றும் கன்னட நட்சத்திரம் துனியா விஜய் நடித்துள்ளனர். மேலும் பிரம்மாஜி, விடிவி கணேஷ் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.


தேசிய விருது பெற்ற இசையமைப்பாளர் ஹர்ஷவர்தன் ரமேஷ்வர், “அர்ஜுன் ரெட்டி”, “அனிமல்” போன்ற படங்களில் தனது அதிரடியான இசையால் பாராட்டுகளை பெற்றவர், இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.


பூரி ஜெகன்நாத் மற்றும் சார்மி கௌர் ஆகியோர் Puri Connects நிறுவனத்தின் சார்பில் தயாரித்துள்ள இந்த திரைப்படம், JB நாராயண் ராவ் கொண்ட்ரோலாவின் JB Motion Pictures நிறுவனத்துடன் இணைந்து உருவாகியுள்ளது.


“ஸ்லம் டாக்” திரைப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய ஐந்து மொழிகளில் பான்-இந்தியா அளவில் வெளியாக உள்ளது.


நடிகர்கள் : விஜய் சேதுபதி, சம்யுக்தா, தபு, துனியா விஜய் குமார்


தொழில்நுட்பக் குழு:

எழுத்து, இயக்குநர் : பூரி ஜெகன்நாத்

தயாரிப்பாளர்கள்: பூரி ஜெகன்நாத்,சார்மி கௌர் , JB நாராயண் ராவ் கொண்ட்ரோலா

வழங்குபவர் : சார்மி கௌர்

தயாரிப்பு நிறுவனங்கள்: Puri Connects, JB Motion Pictures

CEO : விசு ரெட்டி

மக்கள் தொடர்பு : யுவராஜ்

மார்க்கெடிங் : ஹேஷ்டேக் மீடியா


*Vijay Sethupathi, Puri Jagannadh’s Highly Anticipated Action-Drama Slum Dog Teaser Launching On June 8th*


One of the most intriguing collaborations in recent times, Slum Dog brings together dashing director Puri Jagannadh and versatile actor Vijay Sethupathi for a gritty pan-India action drama. The film has successfully completed production, with post-production activities progressing rapidly across all language versions. Backed by the intriguing subtitle 33 Temple Road, the project has managed to spark curiosity ever since its title announcement and striking first-look reveal. Slum Dog is produced by Puri Jagannadh and Charmme Kaur under the Puri Connects banner, in collaboration with JB Narayan Rao Kondrolla's JB Motion Pictures. With anticipation steadily building, the makers are now gearing up for the next phase of promotions.


The makers have announced that the film’s teaser will be launched on June 8th. The teaser poster paints a grim picture. A blindfolded figure stands still as a blood-stained machete is held across his neck, creating a striking image that feels both menacing and symbolic. The dark, moody image hints at a brutal and unforgiving world.


Leading the cast alongside Vijay Sethupathi is Samyuktha, while Tabu and Kannada star Duniya Vijay take on crucial characters that are expected to add significant weight to the narrative. The ensemble also features Brahmaji and VTV Ganesh in key supporting roles.


National Award-winning music director Harshavardhan Rameshwar, whose work in films like Arjun Reddy and Animal earned widespread acclaim for its raw intensity and emotional depth, is scoring the music for the movie.


Slum Dog will have a Pan India release in Telugu, Tamil, Kannada, Malayalam, and Hindi languages.


Cast: Vijay Sethupathi, Samyuktha, Tabu, Duniya Vijay Kumar


Technical Crew:

Writer, Director: Puri Jagannadh

Producers: Puri Jagannadh, Charmme Kaur, JB Narayan Rao Kondrolla

Presents: Charmme Kaur

Banner: Puri Connects

CEO: Vishu Reddy

Music: Harshavardhan Rameshwar

PRO: Yuvraaj

Marketing: Haashtag Media