-

Loading latest news...

மலையாள ZEE5, பேட்ரியாட் திரைப்படத்தின் டிஜிட்டல் பிரீமியரை ஜூன் 5 அன்று அறிவித்துள்ளது*

 *மலையாள ZEE5, பேட்ரியாட் திரைப்படத்தின் டிஜிட்டல் பிரீமியரை ஜூன் 5 அன்று அறிவித்துள்ளது*



இந்தியா, 22 மே 2026: மலையாள ZEE5, புகழ்பெற்ற இயக்குநர் மகேஷ் நாராயணன் இயக்கிய பரபரப்பான அரசியல் திரில்லர் திரைப்படமான பேட்ரியாட் -ஐ ஜூன் 5 அன்று வெளியிடத் தயாராக உள்ளது. இப்படம் மலையாளம், இந்தி, தெலுங்கு, தமிழ் மற்றும் கன்னட மொழிகளில் வெளியாகும்.


18 ஆண்டுகளுக்குப் பிறகு மலையாள திரையுலகின் இரு மிகப்பெரிய நட்சத்திரங்களான மம்முட்டி மற்றும் மோகன்லாலை மீண்டும் ஒன்றிணைக்கும் இந்தப் படத்தில், நயன்தாரா, ஃபஹத் ஃபாசில் மற்றும் குஞ்சாக்கோ போபன் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.


உளவு, அரசியல், தொழில்நுட்பம் மற்றும் உணர்ச்சிப்பூர்வமான நாடக அம்சங்களை இணைக்கும் பேட்ரியாட், ரகசியமும் அதிகாரமும் நிறைந்த ஒரு அமைப்பில் கட்டுப்பாடற்ற கண்காணிப்பின் ஆபத்தான விளைவுகளை ஆராய்கிறது.


இந்தக் கதையின் மையத்தில், நாட்டைப் பாதுகாக்கும் என்ற நம்பிக்கையில் ஒரு அதிநவீன அரசு கண்காணிப்பு திட்டத்தை உருவாக்க உதவிய மனிதர் ஒருவர் உள்ளார். ஆனால், அந்த அமைப்பு குற்றமற்ற குடிமக்களுக்கு எதிராக சூழ்ச்சி, மிரட்டல் மற்றும் கட்டுப்பாட்டின் மூலம் ஆயுதமாக பயன்படுத்தப்படுவதை அவர் கண்டறியும் போது, அவர் நம்பிய அனைத்தையும் கேள்வி கேட்கத் தள்ளப்படுகிறார்.


தான் உருவாக்க உதவிய அதே அமைப்புக்கு எதிராக அவர் திரும்பும் போது, பேட்ரியாட், தேசபக்திக்கும் துரோகத்திற்கும் இடையிலான மங்கலான கோட்டைப் பற்றி பேசுவதுடன், உண்மையை வெளிப்படுத்துவது ஒருவரை துரோகியா அல்லது உண்மையான தேசபக்தரா ஆக்குகிறது என்ற கேள்வியையும் எழுப்புகிறது.


இந்திய சமூக-அரசியல் பின்னணியில் அமைந்திருந்தாலும், கண்காணிப்பு மற்றும் தனியுரிமை குறித்த உலகளாவிய கவலைகளை மையமாகக் கொண்ட பேட்ரியாட், மிகப்பெரிய சதித் திட்டத்தை உணர்ச்சிப்பூர்வமான சினிமா அனுபவமாக மாற்றுகிறது.


மகேஷ் நாராயணனின் கூர்மையான கதை சொல்லலும், மம்முட்டி, மோகன்லால், நயன்தாரா, ஃபஹத் ஃபாசில் மற்றும் குஞ்சாக்கோ போபன் ஆகியோரின் சக்திவாய்ந்த திரைநிகழ்வும் இணைந்து, இப்படம் தீவிரமான மற்றும் சிந்திக்க வைக்கும் அனுபவத்தை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இந்தப் படத்தில் ரேவதி, ராஜீவ் மேனன், தர்ஷனா ராஜேந்திரன் மற்றும் ஸரின் ஷிஹாப் உள்ளிட்ட பலரும் முக்கிய துணை வேடங்களில் நடித்துள்ளனர்.


இயக்குநர் மகேஷ் நாராயணன் கூறியதாவது:


“பேட்ரியாட் என்பது நாம் இன்று வாழும் காலத்தின் அச்சங்களை பிரதிபலிக்கும் ஒரு கதை. மக்களை பாதுகாக்க உருவாக்கப்பட்ட தொழில்நுட்பமே, பயமும் கட்டுப்பாடும் ஏற்படுத்தும் கருவியாக மாறும் உலகை இது பேசுகிறது. இந்தக் கதையில் என்னை அதிகமாக ஈர்த்தது அதன் மையத்தில் இருக்கும் உணர்ச்சிப்பூர்வமான மோதல் — ஒருகாலத்தில் முழுமையாக நம்பிய ஒன்றின் விளைவுகளை எதிர்கொள்ள வேண்டிய நிலைக்கு தள்ளப்படும் ஒரு மனிதனின் பயணம். நாடு முழுவதும் உள்ள பார்வையாளர்கள் பேட்ரியாட் திரைப்படத்தை மலையாள ZEE5-ல் அனுபவிப்பதை நான் ஆவலுடன் எதிர்நோக்குகிறேன்.”



மம்முட்டி கூறியதாவது:


“பேட்ரியாட் திரைப்படத்தை வலுவானதாக மாற்றுவது, அதன் பிரம்மாண்ட அளவுக்கும் அரசியல் பதற்றத்திற்கும் அடியில், இது மனசாட்சி, பொறுப்பு மற்றும் தைரியம் பற்றிய மிகவும் ஆழமான மனிதக் கதையாக இருப்பதுதான். இந்தப் படம் கடினமான கேள்விகளை எழுப்புவதோடு உணர்ச்சிப்பூர்வமாகவும் நெருக்கமாகவும் இருக்கும். மலையாள ZEE5-ல் பார்வையாளர்கள் இதைப் பார்க்கவிருப்பதை நான் எதிர்பார்க்கிறேன்.”


மோகன்லால் கூறியதாவது:


“பேட்ரியாட் நாம் இன்று வாழும் உலகைப் பற்றி பேசுகிறது, அங்கு உண்மையும் அதிகாரமும் தொடர்ந்து மோதிக்கொண்டே இருக்கின்றன. சினிமாத்தன்மையும் ஆழமான பொருத்தத்தையும் கொண்ட ஒரு படத்தின் பகுதியாக இருப்பது மிகவும் உற்சாகமாக இருந்தது. பல ஆண்டுகளுக்குப் பிறகு மம்முட்டியுடன் இப்படிப்பட்ட கதைக்காக மீண்டும் இணைந்தது இந்த அனுபவத்தை இன்னும் சிறப்பாக மாற்றியது.”


மலையாளம், இந்தி, தெலுங்கு, தமிழ் மற்றும் கன்னட மொழிகளில் வெளியாகும் பேட்ரியாட் திரைப்படத்தை ஜூன் 5 முதல் மலையாள ZEE5-ல் தவறவிடாமல் பாருங்கள்!


ZEE5 பற்றி


ZEE5 என்பது இந்தியாவின் மிகப்பெரிய உள்நாட்டு வீடியோ ஸ்ட்ரீமிங் தளமாகும். இது கோடிக்கணக்கான பொழுதுபோக்கு ரசிகர்களுக்கான பன்மொழி கதை சொல்லும் தளமாக விளங்குகிறது. உலகளாவிய உள்ளடக்க சக்தியாக விளங்கும் ZEE Entertainment Enterprises Limited நிறுவனத்தின் ஒரு பகுதியாக ZEE5 செயல்படுகிறது.


வீடியோ-ஆன்-டிமாண்ட் தளங்களில் முன்னணி தேர்வாக விளங்கும் ZEE5, 4,071+ திரைப்படங்கள், 1,800+ டிவி நிகழ்ச்சிகள், 422+ வெப் ஒரிஜினல்கள், 4,492+ இசை வீடியோக்கள் மற்றும் 1.35 லட்சம் மணிநேரங்களுக்கு மேற்பட்ட ஆன்-டிமாண்ட் உள்ளடக்கங்களைக் கொண்ட விரிவான நூலகத்தை வழங்குகிறது.


இந்த தளம் இந்தி, தமிழ், தெலுங்கு, பெங்காலி, மலையாளம், கன்னடம், மராத்தி, ஆங்கிலம், ஒடியா, போஜ்புரி, குஜராத்தி மற்றும் பஞ்சாபி உள்ளிட்ட 12 மொழிகளில் 7 தனிப்பயன் மற்றும் ஹைப்பர்-லோக்கல் சந்தா தொகுப்புகளை வழங்குகிறது. இதில் ஒரிஜினல் தொடர்கள், இந்திய மற்றும் சர்வதேச திரைப்படங்கள், டிவி நிகழ்ச்சிகள், குழந்தைகளுக்கான உள்ளடக்கம், செய்திகள் மற்றும் Live TV ஆகியவை அடங்கும்.


உலகளாவிய தொழில்நுட்ப நிறுவனங்களுடன் இணைந்து செயல்படும் வலுவான டீப்-டெக் அமைப்பின் மூலம், ZEE5 பல்வேறு சாதனங்கள், சூழல்கள் மற்றும் இயக்க முறைமைகளில் இடையறாத அனுபவத்தை வழங்குகிறது.


Facebook, Instagram, LinkedIn மற்றும் X தளங்களில் ZEE5-ஐ பின்தொடருங்கள்.

தத் த்வம் அஸி” (2026) படத்தின் படப்பிடிப்பு இனிதே துவங்கியது!!

 *“தத் த்வம் அஸி” (2026) படத்தின் படப்பிடிப்பு இனிதே துவங்கியது!!*



ஆன்மீகம், பக்தி மற்றும் ஆக்சன் கலந்த பிரம்மாண்டமான திரைப்படமாக உருவாகும் “தத் த்வம் அஸி” (2026) படத்தின் படப்பிடிப்பு நேற்று (மே 26) இனிதே துவங்கியுள்ளது. தந்த்ரா ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகும் இந்த திரைப்படம், அறிவிக்கப்பட்ட தருணத்திலிருந்தே ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது.


இப்படத்தின் முன் தயாரிப்பு பணிகள் கடந்த பிப்ரவரி 26ஆம் தேதி தொடங்கப்பட்ட நிலையில், சரியாக மூன்று மாதங்களுக்குள் அனைத்து திட்டமிடல்களும் நிறைவு செய்யப்பட்டு இன்று படப்பிடிப்பு துவங்கியுள்ளது. திரைப்பட உலகில் இத்தகைய துல்லியமான திட்டமிடல் படக்குழுவின் அர்ப்பணிப்பை வெளிப்படுத்துவதாக பார்க்கப்படுகிறது.


படப்பிடிப்பு துவக்க நிகழ்வில் இயக்குநர் வெங்கட் பிரபு கிளாப் அடிக்க, இயக்குநர் பொன்ராம் கேமராவை ஆன் செய்து படக்குழுவை வாழ்த்தினார். ஆன்மீக சூழலில் நடைபெற்ற இந்த தொடக்க விழா படக்குழுவிற்கு சிறப்பான தொடக்கமாக அமைந்தது.


மலையாளத்தில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற “மாளிகப்புரம்” படத்தின் இயக்குநர் விஷ்ணு சசி சங்கர் இந்த திரைப்படத்தை இயக்குகிறார். ஆன்மீக கதைகளை உணர்வுபூர்வமாக காட்சிப்படுத்தும் அவரது அனுபவம், “தத் த்வம் அஸி” திரைப்படத்திற்கு பெரிய பலமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இந்த படத்தில் வைபவ் மற்றும் மீனாட்சி கோவிந்தராஜன் முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இவர்களுடன் அரவிந்த் ஆகாஷ், ஆடுகளம் நரேன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் இணைந்துள்ளனர்.


பக்தி, நம்பிக்கை மற்றும் ஆன்மீக உணர்வுகளை மையமாகக் கொண்டு, அதனுடன் ஆக்சன் மற்றும் உணர்ச்சி கலந்த பொழுதுபோக்கு அம்சங்களையும் சேர்த்து இந்த திரைப்படம் உருவாக்கப்படவுள்ளது. குடும்ப ரசிகர்களையும் இளைஞர்களையும் ஒருசேர கவரும் வகையில் இப்படத்தின் திரைக்கதை வடிவமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.


இந்த திரைப்படத்தை JK சரவணா மற்றும் JK சதீஷ் தயாரிக்கின்றனர். இசையை பிரேம் ஜி அமரன் அமைக்கிறார். ஒளிப்பதிவை யுவன் செல்வா கவனிக்க, படத்தொகுப்பை பிரவீன் KL மேற்கொள்கிறார். கலை இயக்குநராக சூர்யா ராஜிவன் பணியாற்றுகிறார். சண்டைக் காட்சிகளை சக்தி சரவணன் வடிவமைக்கிறார்.


எழுத்தாளர்களாக ஆதித்யா தங்கீராலா, நந்தகுமார் தமிழ்செல்வன் மற்றும் ப்ருத்வி ஆதித்யா இணைந்துள்ளனர்.


மேலும், தந்த்ரா ஃபிலிம்ஸ் நிறுவனம் அறிவித்துள்ள மற்றொரு முக்கியமான திரைப்படமான “ஆர்ய கேரள வர்மன்” படமும் வரலாறு மற்றும் ஆன்மீக பின்னணியில் உருவாகி வருவது குறிப்பிடத்தக்கது.


இந்த வருடம் ஐயப்ப மண்டல காலத்தை முன்னிட்டு “தத் த்வம் அஸி” திரைப்படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆன்மீக உணர்வுகளுடன் மாஸ் அம்சங்களும் கலந்த இந்த படம் ரசிகர்களிடம் பெரிய வரவேற்பைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

*ரோமியோ பிக்சர்ஸ் தயாரிப்பில் ஆகாஷ் முரளி நடிக்கும் புதிய திரைப்படம் பூஜையுடன் இனிதே துவக்கம்

 *ரோமியோ பிக்சர்ஸ் தயாரிப்பில் ஆகாஷ் முரளி நடிக்கும் புதிய திரைப்படம் பூஜையுடன் இனிதே துவக்கம்!* 



*தமிழக பள்ளிக்கல்வித் துறை,

தமிழ் வளர்ச்சித் துறை, 

செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் ராஜ் மோகன் துவங்கி வைத்த ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனத்தின் புதிய படம் !!*


தமிழ் சினிமாவில் தரமான மற்றும் வெற்றிப் படைப்புகளை தொடர்ந்து வழங்கி வரும் ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனத்தின் அடுத்த பிரம்மாண்ட தயாரிப்பு சிறப்பான பூஜையுடன் துவங்கியது. ரோமியோ பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் ராகுல் தயாரிக்கும் இப்படத்தில் நடிகர் ஆகாஷ் முரளி கதாநாயகனாக நடிக்கிறார். அறிமுக இயக்குநர் ஹர்ஷவரதன் இப்படத்தை இயக்குகிறார்.


இப்படத்தின் துவக்க விழாவில் தமிழக பள்ளிக்கல்வித் துறை, தமிழ் வளர்ச்சித் துறை, செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் ராஜ் மோகன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு படக்குழுவினருக்கு தனது வாழ்த்துகளைத் தெரிவித்ததுடன், படத்தை அதிகாரப்பூர்வமாக துவக்கி வைத்தார். குறிப்பிடத்தக்க வகையில், அமைச்சர் ராஜ் மோகன் தனது முதல் இயக்குநர் முயற்சியான “பாபா பிளாக் ஷீப்” திரைப்படத்தை ரோமியோ பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்கியிருந்தார். தற்போது அமைச்சராக பொறுப்பேற்றுள்ள அவர், அதே நிறுவனத்தின் புதிய திரைப்படத்தை துவக்கி வைத்தது நிகழ்வுக்கு மேலும் சிறப்புச் சேர்த்தது.


மேலும், முன்னணி இயக்குநர் ஹெச். வினோத் மற்றும் நடிகர் ரவி மோகன் ஆகியோர் விழாவில் கலந்துகொண்டு படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.



இயக்குநர் ஹெச். வினோத் அவர்களிடம் இணை இயக்குநராக பணியாற்றிய ஹர்ஷவரதன், இந்த திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.


1970-களின் தொடக்க காலத்தை பின்னணியாகக் கொண்டு உருவாகும் இப்படம், குதிரைப் பந்தய உலகை மையமாகக் கொண்டு நேர்மையும் உயர்ந்த லட்சியங்களும் கொண்ட ஒரு இளைஞனின் போராட்டம், கனவுகள் மற்றும் வெற்றிப் பயணத்தை சுவாரஸ்யமாகச் சொல்லும் கதையாக உருவாகவுள்ளது.


1970-களின் சென்னையை திரையில் உயிர்ப்பிக்க, படக்குழு தற்போது தீவிரமான முன்தயாரிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகிறது. அந்தக் காலகட்டத்தின் வாழ்க்கை முறை, கலாச்சாரம் மற்றும் நகரின் தனித்துவமான சூழலை மிக நுணுக்கமாக திரையில் பதிவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.


தமிழ் சினிமாவில் மாறுபட்ட கதைக்களங்களையும், வணிக ரீதியான வெற்றிகளையும் தொடர்ந்து வழங்கி வரும் ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம், இந்த திரைப்படத்தையும் மிகப்பெரிய பொருட்செலவில் பிரம்மாண்டமாக தயாரிக்கிறது.


இப்படத்தில் நடிக்கவுள்ள மற்ற நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.

சென்னையில் கோலாகலமாக நடைபெற்ற ‘பெத்தி’ திரைப்பட பத்திரிகையாளர் சந்திப்பு*

 *சென்னையில் கோலாகலமாக நடைபெற்ற ‘பெத்தி’ திரைப்பட பத்திரிகையாளர் சந்திப்பு 



மெகா பவர் ஸ்டார் ராம் சரண் நடிப்பில் உருவாகியுள்ள பிரம்மாண்ட கிராமத்து விளையாட்டு திரைப்படமான ‘பெத்தி’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.


இயக்குநர் புச்சி பாபு சனா இயக்கத்தில், வெங்கட சதீஷ் கிலாரு தயாரிப்பில் உருவாகியுள்ள ‘பெத்தி’, ஒரு கிராஸ்ஓவர் தடகள வீரரின் ஊக்கமூட்டும் மற்றும் உணர்ச்சிப்பூர்வமான பயணத்தை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளது. கிராமத்து விளையாட்டு பின்னணியுடன் ஆக்ஷன், உணர்வுகள் மற்றும் வெற்றிக்கான போராட்டத்தை இணைத்து உருவாக்கப்பட்டுள்ள இப்படம், ரசிகர்களிடையே ஏற்கனவே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.


பான்-இந்தியா அளவில் உருவாகியுள்ள ‘பெத்தி’ திரைப்படம், தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி உள்ளிட்ட மொழிகளில் வரும் ஜூன் 4ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதனை முன்னிட்டு தயாரிப்பாளர் வெங்கட சதீஷ் கிலாரு தலைமையிலான படக்குழு நாடு முழுவதும் தீவிரமான புரமோஷன் பணிகளை மேற்கொண்டு வருகிறது.


இதன் ஒரு பகுதியாக சென்னையில் நடைபெற்ற சந்திப்பில், படக்குழுவினர் கலந்து கொண்டு, திரைப்படம் குறித்த பல சுவாரஸ்ய தகவல்கள் பகிர்ந்து கொண்டனர்.


இந்நிகழ்வினில்… ஒளிப்பதிவாளர் ஆர். ரத்னவேலு பேசியதாவது..,


“நீண்ட நாட்களுக்குப் பிறகு உங்களைச் சந்திப்பதில் மிகவும் மகிழ்ச்சி. சேது, வாரணம் ஆயிரம், எந்திரன் போன்ற படங்கள் எனது திரைப்பயணத்தில் முக்கிய மைல்கற்களாக அமைந்தது போல, பெத்தி திரைப்படமும் எனக்கு மிகவும் முக்கியமான படமாக இருக்கும்.


இயக்குநர் புச்சி பாபு இந்தப் படத்திற்காக அற்புதமான திரைக்கதையை எழுதியிருக்கிறார். ஒரு திரைப்படம் காகிதத்தில் எழுதப்படலாம். ஆனால் அதற்கு உயிர் கொடுப்பது இசை, காட்சியமைப்பு மற்றும் சிறந்த நடிப்புதான். பெத்தி படத்தில் இவை அனைத்தும் மிகச் சிறப்பாக ஒன்றிணைந்துள்ளன. இந்தப் படம் நிச்சயமாக ரசிகர்களிடம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.


இது வெறும் படம் பார்த்து வெளியே வரும் அனுபவமாக இருக்காது. திரையரங்கில் முழுமையாக மூழ்கடிக்கும் அனுபவமாக இருக்கும். அதே நேரத்தில், படத்தில் ஒரு வலுவான கருத்தும் இருக்கிறது. படம் முடிந்து வெளியே வந்த பிறகும் அதன் தாக்கம் நீண்ட நாட்கள் உங்கள் மனதில் இருக்கும்.


சிவராஜ் குமார் சார் இந்தப் படத்தில் அற்புதமான நடிப்பை வழங்கியிருக்கிறார். ஒரு குரு என்ற கதாபாத்திரத்திற்கு அவர் அளித்திருக்கும் வலிமை மிகவும் சிறப்பானது. திவ்யேந்துவும் தனது அனுபவத்தையும் திறமையையும் வெளிப்படுத்தியிருக்கிறார். அவரின் நடிப்பை படம்பிடிக்கும்போது சரியான கோணத்தைத் தேர்வு செய்யவே கேமரா தேடியது என்று சொல்லலாம்.


இந்தப் படத்தின் வெற்றிக்காக எனது உதவி இயக்குநர்கள் முதல் ஒவ்வொரு தொழில்நுட்பக் கலைஞரும் தங்களது முழு பங்களிப்பையும் வழங்கியுள்ளனர்.


ராம் சரண் பற்றி குறிப்பாக சொல்ல வேண்டும். இந்தப் படத்திற்காக அவர் முழுமையாக தன்னை அர்ப்பணித்திருக்கிறார். ஒரு தோற்றத்திலிருந்து மற்றொரு தோற்றத்திற்கு மாறுவது என்பது வெறும் உடை மாற்றம் அல்ல. முழுமையான உடல் மாற்றம். கிரிக்கெட் வீரராகத் தோன்ற வேண்டிய கட்டத்தில் இருந்து, பின்னர் மண்ணின் மணம் வீசும் ஒரு கிராமத்து இளைஞனாகவும், அதன் பிறகு உடற்கட்டுடன் கூடிய வேறொரு பரிமாணத்திலும் அவர் தன்னை மாற்றிக் கொண்டார். அதற்காக தினமும் பல மணி நேரங்கள் கடுமையாக பயிற்சி செய்து உழைத்தார். இன்று அனைவரும் அவரது தோற்றத்தைப் பாராட்டுகிறார்கள் என்றால், அதன் பின்னால் மிகப்பெரிய அர்ப்பணிப்பும் ஒழுக்கமும் இருக்கிறது. பின்னர் கதையின் மற்றொரு கட்டத்தில் அவரது வாழ்க்கை கீழிறங்கும் தருணங்களிலும், அதற்கேற்றவாறு தனது தோற்றத்தையும் நடிப்பையும் முழுமையாக மாற்றியுள்ளார். இது ராம் சரணின் மிகச் சிறந்த கதாபாத்திரங்களில் ஒன்றாக இருக்கும் என்று நான் நம்புகிறேன். ஒவ்வொரு விளையாட்டையும் கற்றுக்கொண்டு, அதற்கான ஒழுக்கத்தைப் பின்பற்றி அவர் இந்தக் கதாபாத்திரத்தை உருவாக்கியுள்ளார்.


மேலும், இசைப்புயல் A. R. ரஹ்மான் சார் எங்களுடன் மீண்டும் இணைந்திருப்பது மிகுந்த மகிழ்ச்சி. எந்திரன் படத்திற்குப் பிறகு இந்தக் கூட்டணி மீண்டும் உருவாகியுள்ளது. அவரது இசையும் இந்தப் படத்தின் மிகப்பெரிய பலமாக இருக்கும்.இந்தப் படத்தை அனைவரும் திரையரங்கில் கண்டு ரசிப்பீர்கள் என்று நம்புகிறேன். நன்றி.


நடிகர் திவ்யேந்து சர்மா பேசியதாவது..,


“இங்கு இருப்பதில் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. குறிப்பாக, பெத்தி திரைப்படத்தின் மூலம் தெலுங்கு சினிமாவில் நான் அறிமுகமாக இருப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியையும் பெருமையையும் அளிக்கிறது.


ஒரு நடிகராக என் கம்ஃபர்ட் ஜோனை விட்டு வெளியே வந்து, புதிதாக ஏதாவது முயற்சி செய்வதற்கான அருமையான வாய்ப்பாக இந்த படம் அமைந்தது. ஒவ்வொரு கலைஞரும் தங்களிடம் இருக்கும் திறமைகளை முழுமையாக வெளிப்படுத்தும் ஒரு வாய்ப்பை கனவு காண்பார்கள். அந்த வாய்ப்பை எனக்கு வழங்கிய படம் தான் பெத்தி.


இந்த பயணம் இயக்குநர் புச்சி பாபு சாருடன் தொடங்கியது. அவர் ஒரு சிறந்த மனிதர், சிறந்த இயக்குநர், அதைவிட சிறந்த நண்பர். இந்த வாய்ப்பை எனக்கு வழங்கியதற்கும், கதாபாத்திரத்தை என் பாணியில் வெளிப்படுத்துவதற்கான சுதந்திரத்தை அளித்ததற்கும் அவருக்கு மனமார்ந்த நன்றி. அவருடன் பணியாற்றியது மிகவும் அழகான அனுபவமாக இருந்தது.


ராம் சரண் சார், உங்களுக்கு நன்றி சொல்ல வார்த்தைகளே இல்லை. முதல் நாளிலிருந்தே நீங்கள் காட்டிய அன்பும் அரவணைப்பும் என்னை மிகவும் சுதந்திரமாக உணர வைத்தது. அந்த நினைவுகளை நான் எப்போதும் மனதில் வைத்திருப்பேன். ஒரு அற்புதமான மனிதராகவும், இணை நடிகராகவும் இருந்ததற்கு நன்றி.


இசைப்புயல் A. R. ரஹ்மான் சார் குறித்து என்ன சொல்வது? நீங்கள் ஒரு ஜாம்பவான். நீங்கள் இடம்பெற்றுள்ள ஒரு படத்தில் நானும் ஒரு பகுதியாக இருப்பது எனக்கு மிகப்பெரிய கௌரவம். என் பெயர் உங்கள் பெயருடன் இணைக்கப்படுவது கூட பெருமையான விஷயமாக கருதுகிறேன்.


மேலும், சிவராஜ்குமார் சாரின் முன்னிலையில் நிற்பதே எனக்கு பெருமையாக இருக்கிறது. அவருடன் காட்சிகளில் இணைந்து நடிக்கவில்லை என்றாலும், அவரது சாதனைகள் மற்றும் ஆளுமை குறித்து நன்கு அறிந்திருக்கிறேன். அவரின் முன்னிலையில் இருப்பது கூட ஒரு கௌரவம்.


ஒளிப்பதிவாளர் ஆர். ரத்னவேலு சார் எனக்கு மிகவும் பிடித்தவர். இதை நான் பல பேட்டிகளிலும் கூறியிருக்கிறேன். ஒரு நடிகராக எனக்கு அவர் கொடுத்த நம்பிக்கையும், சுதந்திரமும் அளவிட முடியாதவை. இவ்வளவு அனுபவம் மிக்க ஒளிப்பதிவாளர் ஒருவருடன் இவ்வளவு எளிதாக பணியாற்ற முடியும் என்று நான் நினைத்ததே இல்லை.


நான் ஏதாவது புதிதாக செய்ய விரும்பினால், அதை எப்படி இன்னும் சிறப்பாக காட்சிப்படுத்தலாம் என்று அவர் யோசிப்பார். ‘இதை இப்படிப் படம்பிடிப்போம், இன்னொரு க்ளோஸ் ஷாட் எடுப்போம்’ என்று அவர் கொடுத்த ஒத்துழைப்பு எனக்கு மிகப்பெரிய ஊக்கமாக இருந்தது. அந்த அனுபவம் எப்போதும் எனக்கு மறக்க முடியாததாக இருக்கும்.


இந்தப் படத்தின் ஒரு பகுதியாக இருப்பதில் மிகவும் மகிழ்ச்சியும் பெருமையும் அடைகிறேன். அனைவருக்கும் நன்றி.”


இயக்குநர் புச்சி பாபு பேசியதாவது..,


எனக்கு சென்னை என்றால் மிகவும் பிடிக்கும். ஏனென்றால் எனக்கு மிகவும் பிடித்த பல கலைஞர்கள் இங்குதான் இருக்கிறார்கள். ஏ.ஆர். ரஹ்மான் சார், ரத்னவேலு சார், தேவி ஸ்ரீ பிரசாத் சார் என நான் மதிக்கும் பலர் சென்னையில் இருக்கிறார்கள். சென்னை என்பது வெறும் ஒரு நகரம் அல்ல, இங்கே சினிமாவே வாழ்கிறது. மக்கள் சினிமாவை நேசிக்கிறார்கள், சினிமா கலைஞர்களை மதிக்கிறார்கள்.


எனக்கு பிடித்த மூத்த ஆளுமைகள் அனைவரும் சென்னை பற்றிப் பெருமையாகப் பேசுவார்கள். அப்போது எனக்கு அதன் மகத்துவம் முழுமையாகப் புரியவில்லை. ஆனால் இப்போது இங்கு வரும்போதெல்லாம் ஒரு புனிதமான இடத்திற்குச் செல்வது போன்ற உணர்வு வருகிறது.


எனக்கு மிகவும் பிடித்த நடிகர்களில் ஒருவரான விஜய் சேதுபதி சாரும் இங்கே இருக்கிறார். என்னுடைய முதல் திரைப்படத்தில் அவர் நடித்திருந்தார். எப்போதும் எனக்கு ஆதரவாக இருப்பதற்கும், சென்னை வரும்போதெல்லாம் அன்புடன் வரவேற்பதற்கும் அவருக்கு நன்றி.


பெத்தி பற்றி சொல்ல வேண்டுமென்றால், இது மிகவும் உணர்வுப்பூர்வமான படம். பார்வையாளர்களை முழுமையாக ஈர்த்துக் கொள்ளும் ஒரு அனுபவமாக இருக்கும். குறிப்பாக இரண்டாம் பாதியில் ராம் சரண் சார் கொடுத்திருக்கும் நடிப்பு மற்றும் அர்ப்பணிப்பை பார்த்தால் யாராலும் எளிதில் மறக்க முடியாது.


கடந்த சில நாட்களாக நான் சென்னையில் இருந்து படத்தை மீண்டும் மீண்டும் பார்த்து வருகிறேன். அதே நேரத்தில் ஹைதராபாத்திலும் சிறப்புக் காட்சிகள் நடக்கின்றன. படம் பார்த்த அனைவரும் தொலைபேசியில் அழைத்து பாராட்டி வருகிறார்கள். ‘மிகச் சிறந்த படம்’, ‘மிக அழகாக உருவாக்கியிருக்கிறீர்கள்’ என்று கூறுகிறார்கள். அது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது.


இந்தப் படத்தின் வெற்றிக்கு மிகப்பெரிய காரணம் ராம் சரண் சார் தான். பெத்தி என்றாலே எனக்கு ராம் சரண் தான் நினைவுக்கு வருகிறார். அவர் இந்தக் கதாபாத்திரத்திற்காக கொடுத்த உழைப்பு அளவிட முடியாதது. என்னை நம்பி இந்த வாய்ப்பை வழங்கியதற்காக அவருக்கு மனமார்ந்த நன்றி.


திவ்யேந்து சாரின் நடிப்பைப் பார்த்தபோது, விஜய் சேதுபதி சாரை நினைவுபடுத்தியது. சிறிய சிறிய விஷயங்களில்கூட அவர் காட்டிய நுணுக்கமான நடிப்பு என்னை மிகவும் கவர்ந்தது. இந்தப் படத்தில் இணைந்ததற்காக அவருக்கு நன்றி.


இசைப்புயல் A. R. ரஹ்மான் சார் பற்றி பேச வேண்டுமென்றால், அவரைப் பற்றி ஒரு புத்தகமே எழுதலாம். சிறுவயதிலிருந்தே அவருடைய இசைக்கு நான் மிகப்பெரிய ரசிகன். ஒருநாள் அவருடன் சேர்ந்து பணியாற்றுவேன் என்று கனவிலும் நினைத்ததில்லை. ஆனால் இன்று அது நனவாகியுள்ளது. இந்தப் படத்தின் பாடல்களும் பின்னணி இசையும் அற்புதமாக வந்துள்ளன.


ரத்னவேலு சார் இந்தப் படத்தை உலகத் தரத்தில் காட்சிப்படுத்தியிருக்கிறார். நான் எழுதிய ஒவ்வொரு காட்சிக்கும் அவர் உயிர் கொடுத்துள்ளார். அவரது ஒளிப்பதிவு இல்லாமல் இந்தப் படம் இப்படியாக உருவாகியிருக்காது.


மேலும், சிவராஜ்குமார் சார் இந்தப் படத்தில் ஒரு உண்மையான குருவாகத் தோன்றுகிறார். குரு-சிஷ்யன் உறவு எப்படி இருக்க வேண்டும் என்பதை இந்தப் படம் அழகாக வெளிப்படுத்துகிறது. அந்தக் கதாபாத்திரத்திற்கு அவர் அளித்திருக்கும் மதிப்பும், கம்பீரமும் படத்தின் முக்கிய பலமாக இருக்கும்.


இந்தப் படத்தை ரசிகர்கள் அனைவரும் திரையரங்கில் பார்த்து கொண்டாடுவார்கள் என்று நம்புகிறேன். அனைவருக்கும் நன்றி.”


 நடிகர் சிவராஜ்குமார் பேசியதாவது..,


முதலில் இயக்குநர் புச்சி பாபுவுக்கு நன்றி. இந்தப் படத்தில் குரு கதாபாத்திரம் பற்றி அவர் என்னிடம் கூறியபோது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. அதைவிட, ராம் சரணுடன் இணைந்து நடிக்கப் போகிறேன் என்ற செய்தி எனக்கு இன்னும் மகிழ்ச்சியை அளித்தது.


ராம் சரணையும், அவருடைய குடும்பத்தையும் எனக்கு மிகவும் பிடிக்கும். அவர் மீது எனக்கு எப்போதும் ஒரு தனிப்பட்ட அன்பும் மரியாதையும் இருக்கிறது. அதனால் இந்தப் படத்தில் நடிக்க வேண்டும் என்ற ஆர்வம் உடனே வந்தது. புச்சி பாபு கதையைச் சொன்னவுடன் எனக்கு மிகவும் பிடித்துவிட்டது. உடனே ஒப்புக்கொண்டேன்.


ஆனால் அதன் பிறகு எனக்கு புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது. சிகிச்சைக்காக நான் செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டது. அதனால் இந்தப் படம் என்னால் செய்ய முடியாமல் போய்விடுமோ என்று நினைத்தேன். ஆனால் படக்குழுவினர் எனக்காக காத்திருந்தார்கள். அது என்னை மிகவும் நெகிழச் செய்தது. அதற்காக அவர்களுக்கு மனமார்ந்த நன்றி.


இசைப்புயல் A. R. ரஹ்மான் சாரை நான் நீண்ட காலமாக அறிவேன். அவர் பின்னணி கலைஞராக இருந்த காலத்திலிருந்தே எனக்கு தெரியும். பின்னர் இசையமைப்பாளராக அவர் இசையை முற்றிலும் புதிய பரிமாணத்தில் கொண்டு சென்றார். பல சிறந்த இசையமைப்பாளர்கள் இருந்தாலும், ரஹ்மான் சார் தனித்துவமான பாணியில் தனி அடையாளத்தை உருவாக்கினார். ஆஸ்கார் விருதை வென்றது இந்திய இசைக்கே பெருமை சேர்த்த தருணம். அவருடைய இசையில் நான் நடித்திருப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி.


ரத்னவேலு சாருடன் பணியாற்றிய அனுபவமும் சிறப்பானது. படப்பிடிப்பு தளத்தில் அவருடன் தமிழில் பேசிக்கொண்டே இருப்பேன். அவர் காட்டிய அன்பும், மரியாதையும், அர்ப்பணிப்பும் என்னை மிகவும் கவர்ந்தது. எங்களுக்குள் ஒரு சிறப்பு இணைப்பு உருவானது.


தயாரிப்பாளர் மற்றும் முழு படக்குழுவும் மிகச் சிறப்பாக பணியாற்றியுள்ளனர். இந்தப் படத்தைப் பார்த்தால் எங்களுக்குள் இருந்த உறவும், ஒற்றுமையும் உங்களுக்குப் புரியும்.


ராம் சரண் சாரின் உழைப்பைப் பற்றி சொல்லியே ஆக வேண்டும். இந்தக் கதாபாத்திரத்திற்காக அவர் தனது உடலை மாற்றிக்கொண்ட விதம், எடுத்துக்கொண்ட முயற்சி, அர்ப்பணிப்பு அனைத்தும் அசாதாரணமானவை. அவரது நடிப்பும் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தும்.


இந்தப் படத்தை அனைவரும் விரும்புவார்கள் என்று நம்புகிறேன். பெத்தி படக்குழுவினருக்கு எனது வாழ்த்துக்கள். ஜூன் 4-ஆம் தேதி படம் வெளியாக இருக்கிறது. நீங்கள் எவ்வளவு ஆவலுடன் காத்திருக்கிறீர்களோ, நானும் அதே அளவு ஆவலுடன் காத்திருக்கிறேன்.நன்றி. வணக்கம்.


இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் பேசியதாவது..,


சுமார் ஒரு மாதத்திற்கு முன்பு ராம் சரண் எங்கள் வீட்டிற்கு வந்திருந்தார். அப்போது ஒரு விஷயம் எனக்கு மிகவும் தோன்றியது. ஒரு மிகப் பெரிய ஆலமரமான சிரஞ்சீவி சாரின் மகனாக இருந்து, அதே உயரத்தை எட்ட முடியுமா என்று பலர் கேள்வி எழுப்பியிருக்கலாம். ஆனால் ராம் சரண் அதையும் தாண்டி தன்னுடைய தனித்துவமான இடத்தை உருவாக்கியிருக்கிறார். அவர் இன்னொரு ஆலமரமாக வளர்ந்திருக்கிறார். அப்போது என் மகனும் அங்கே இருந்தான். நான் அவனிடம், ‘நீ என்னைவிட பெரியவனாக வரலாம்’ என்று சொன்னேன். அதற்கான உதாரணமாக ராம் சரணைச் சுட்டிக்காட்டினேன். இளம் தலைமுறைக்கு இப்படிப்பட்ட உதாரணங்கள் மிகவும் முக்கியம்.


ஒரு நாள் சுகுமார் சார் என்னைச் சந்திக்க விரும்புவதாகச் சொன்னார்கள். அதன்பிறகு புச்சி பாபுவை அறிமுகப்படுத்தினார்கள். அவர் இந்தக் கதையைப் பற்றி பேசினார். அந்த நேரத்தில் நான் பரிசோதனை முயற்சிகள் நிறைந்த படங்களிலும், வித்தியாசமான படைப்புகளிலும் அதிக கவனம் செலுத்தி வந்தேன். ஆனால் பெத்தி போன்ற ஒரு திரைப்படம் வந்தபோது அதில் இருக்கும் ஆற்றலும், அர்ப்பணிப்பும் என்னை ஈர்த்தது.


இந்த மாதிரியான பெரிய வர்த்தகப் படங்களில் நடிகர்கள் தங்கள் உயிரையே கொடுத்து உழைக்கிறார்கள். நடிப்பிலும், நடனத்திலும், ஒவ்வொரு காட்சியிலும் மிகப்பெரிய அர்ப்பணிப்பு இருக்கிறது. மேலும் இப்படங்கள் பல மொழிகளில் வெளியாகி உலகம் முழுவதும் சென்று சேர்கின்றன. அதனால் அனைவரின் உழைப்பும் மிகப் பெரிய அளவில் மக்களை சென்றடைகிறது.


ராம் சரண் இந்தப் படத்தின் ஒவ்வொரு காட்சியிலும் முழுமையான அர்ப்பணிப்புடன் செயல்பட்டிருக்கிறார். ஒவ்வொரு ஃபிரேமிலும் அவரது உழைப்பு தெரியும். இசையும் காலத்திற்கு ஏற்ப தொடர்ந்து மாறிக்கொண்டே இருக்கிறது. ரோஜா காலத்திலிருந்து இன்று வரை இசை மற்றும் திரைப்படத் துறையில் ஏற்பட்ட மாற்றங்களை நான் நேரில் பார்த்திருக்கிறேன். பலர் என்னிடம் இருந்து ஊக்கமடைந்திருக்கலாம். ஆனால் நானும் பலரிடமிருந்து ஊக்கமடைந்திருக்கிறேன்.


தெலுங்குத் திரைப்படத் துறையில் M. M. கீரவாணி, தேவி ஸ்ரீபிரசாத் , தமன் போன்ற திறமையான இசையமைப்பாளர்கள் இருக்கிறார்கள். தெலுங்கு சினிமா கடந்த சில ஆண்டுகளில் மிகப்பெரிய வளர்ச்சியை அடைந்துள்ளது. அவர்கள் மிகவும் லட்சியத்துடன் செயல்படுகிறார்கள். திரைப்படத் தயாரிப்பின் தரத்தையும் தொடர்ந்து உயர்த்தி வருகிறார்கள். அந்தத் துறையின் ஒரு பகுதியாக இருப்பதில் எனக்கு பெருமை. பெத்தி படத்தில் பணியாற்றிய அனுபவம் எனக்கு முதல் படம் செய்வது போன்ற புதிய உற்சாகத்தை அளித்தது.


இன்றுக் காலைதான் இந்தப் படத்தின் பின்னணி இசைப் பணிகளை முடித்தோம். முடிந்த பிறகும் ‘இதை இன்னும் சிறப்பாக செய்ய முடியுமா?’, ‘இன்னும் ஏதாவது சேர்க்க வேண்டுமா?’ என்ற ஆர்வம் எங்களுக்குள் இருந்தது. அந்த உற்சாகமே இந்தப் படத்தின் சிறப்பு. சிவராஜ்குமார் சாருக்கும், படக்குழுவில் உள்ள அனைவருக்கும் என் நன்றி. இந்தப் படத்தை உருவாக்கிய அனுபவத்தை நாங்கள் அனைவரும் மிகவும் ரசித்தோம். நீங்கள் அனைவரும் இந்தப் படத்தை விரும்புவீர்கள் என்று நம்புகிறேன். நன்றி.”


நடிகர் ராம் சரண் பேசியதாவது..,


“சென்னை பத்திரிகை நண்பர்களுக்கு வணக்கம். உண்மையாகச் சொன்னால், சில நேரங்களில் என்ன பேச வேண்டும் என்று தெரியாமல் போய்விடும். இப்போதும் அந்த மாதிரியான ஒரு தருணத்தில்தான் நான் இருக்கிறேன். சென்னை வந்தாலே எனக்கு எப்போதும் இப்படியான உணர்வு ஏற்படும்.


முதலில், இந்த மேடையில் இத்தனை ஜாம்பவான்கள் இருக்கிறார்கள். அவர்களின் முன்னிலையில் என்ன பேசுவது என்ற எண்ணமே வருகிறது. இருந்தாலும் இங்கு வந்திருக்கும் அனைவருக்கும், குறிப்பாக சென்னை மற்றும் தமிழ்நாடு ஊடக நண்பர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி.


சென்னை எனக்கு எப்போதும் ஒரு சிறப்பான இடம். நான் பிறந்து வளர்ந்த நகரம் இது. அதனால் ஆர்.ஆர்.ஆர்., மகதீரா அல்லது வேறு எந்தப் படமாக இருந்தாலும், சென்னைக்கு வந்து புரமோஷன் செய்யும் போது வீட்டிற்கு வந்த உணர்வே கிடைக்கிறது. மேலும், என் அம்மாவும் இங்கு பிறந்தவர். அதனால் சென்னை எனக்கு என் தாயின் ஊர் என்ற பாசமான உணர்வை அளிக்கிறது.


பெத்தி திரைப்படம் குறித்து படக்குழுவினர் அனைவரும் ஏற்கனவே பேசிவிட்டார்கள். இந்தப் படத்தை முடிக்க எங்களுக்கு சுமார் இரண்டரை ஆண்டுகள் ஆனது. அதில் 285 நாட்களுக்கும் மேலாக நாங்கள் உழைத்தோம். ஆனால் எங்களைவிட அதிகமாக உழைத்தவர் இயக்குநர் புச்சி பாபு. கடந்த ஐந்து அல்லது ஆறு ஆண்டுகளாக அவர் இந்தப் படத்திற்காக உழைத்திருக்கிறார்.


நாங்கள் கஷ்டப்பட்டோம் என்று சொல்லிக் கொண்டிருக்கிறோம். ஆனால் உண்மையில் இப்படிப்பட்ட சிறந்த கலைஞர்கள் ஒரு படத்தில் இருக்கும்போது அந்தப் பயணம் கஷ்டமாகத் தோன்றாது. இந்தக் கதையை எங்களிடம் கொண்டு வந்த சுகுமார் சாருக்கு நான் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்.


இசைப்புயல் A. R. ரஹ்மான் சார் இந்தப் படத்தின் மையத் தூண். நாங்கள் அனைவரும் ஒரு வீட்டைத் தாங்கும் தூண்கள் என்றால், அதன் நடுவில் இருக்கும் மிகப்பெரிய ஆதாரத் தூண் அவர் தான். கடந்த பத்து நாட்களுக்கும் மேலாக அதிகாலை வரை விழித்திருந்து பின்னணி இசைப் பணிகளில் ஈடுபட்டிருக்கிறார். அவரது அர்ப்பணிப்பு எங்களுக்கு எல்லாம் மிகப்பெரிய உத்வேகமாக இருக்கிறது.


சிவராஜ்குமார் சார் திரையில் தோன்றினாலே ஒரு தீப்பொறி போல ஆற்றல் உருவாகும். ஜெயிலர் படத்தில் அவருடைய கதாபாத்திரத்தை நான் பலமுறை பார்த்திருக்கிறேன். காரில் பயணம் செய்யும்போதுகூட அந்த காட்சிகளை மீண்டும் மீண்டும் பார்ப்பேன். குறிப்பாக அவர் மெதுவாக நடந்து வரும் காட்சியும், பீடி பிடிக்கும் அந்த ஸ்டைலும் இன்று ஒரு ஐகானிக் தருணமாக மாறியுள்ளது. அவரது கண்களே ஆயிரம் வார்த்தைகள் பேசும்.


ஒளிப்பதிவாளர் ஆர். ரத்னவேலு சார் பற்றி என்ன சொல்வது? அவருடன் நான் நான்கு திரைப்படங்களில் பணியாற்றியிருக்கிறேன். இரண்டு படங்களை நான் தயாரித்தபோதும் அவர் உடன் இருந்தார். அவர் ஒரு உண்மையான ஜாம்பவான். எந்திரன் படத்தில் அவர் உருவாக்கிய காட்சிகள், குறிப்பாக பிரம்மாண்ட பாடல் காட்சிகள், என்னை மிகவும் கவர்ந்தவை. ‘அந்த மாதிரியான ஒரு காட்சியை எனக்கும் கொடுங்கள் சார்’ என்று நான் எப்போதும் அவரிடம் கேட்பேன்.


ரஜினி சார், கமல் சார், ஷங்கர் சார் போன்ற மகத்தான கலைஞர்களுடன் பணியாற்றிய அனுபவம் அவருக்கு இருக்கிறது. ஆனால் அந்த அனுபவத்தின் பெருமையை அவர் ஒருபோதும் வெளிக்காட்ட மாட்டார். அதுவே அவரது சிறப்பு.


என்னைப்போலவே திவ்யேந்து இந்தப் படத்தில் மிகப்பெரிய உழைப்பை தந்துள்ளார் அவரது காட்சிகளை ரசிகர்கள் கொண்டாடுவார்கள்.


இந்தப் படத்தை நான் வெறும் ஒரு நடிகராக செய்யவில்லை. மனதார காதலித்து செய்தேன். ஒவ்வொரு நாள் படப்பிடிப்பு முடிந்து வீட்டிற்கு வந்ததும், என் நண்பர்களிடமும், அம்மாவிடமும், அந்த நாள் ஷூட்டிங் அனுபவங்களைப் பற்றியே தொடர்ந்து பேசிக்கொண்டிருப்பேன். ‘போதும், நிறுத்து… நாள் முழுவதும் இதைப் பற்றியே பேசிக்கொண்டிருக்கிறாய்’ என்று அவர்கள் சொல்லும் அளவுக்கு பெத்தி படம் என் மனதில் ஆழமாக பதிந்திருந்தது.


என் வீட்டில் எப்போதும் ஒரு விஷயம் சொல்வார்கள். ‘ஒரு படத்தைப் பற்றி நீ வீட்டிற்கு வந்த பிறகும் தொடர்ந்து பேசினால், அந்த படம் கண்டிப்பாக பெரிய வெற்றி பெறும்’ என்று. ஆர்.ஆர்.ஆர்., ரங்கஸ்தலம், மகதீரா போன்ற படங்களைப் பற்றியும் நான் அப்படித்தான் பேசினேன். நீண்ட நாட்களுக்குப் பிறகு மீண்டும் பெத்தி படத்தைப் பற்றியே வீட்டில் தொடர்ந்து பேசிக் கொண்டிருக்கிறேன். அதுவே இந்தப் படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமையும் என்பதற்கான என் நம்பிக்கை. குடும்பத்தோடு, குறிப்பாக குழந்தைகளோடு வந்து பார்க்க வேண்டிய படம் இது. மிகவும் ஊக்கமளிக்கும், மனதைத் தொடும் திரைப்படமாக இருக்கும்.


என் வாழ்நாள் முழுவதும் நினைவில் நிற்கும் ஒரு படத்தை இயக்குநர் புச்சி பாபுவும், சுகுமார் சாரும் எனக்கு கொடுத்திருக்கிறார்கள். அதற்காக அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.


இறுதியாக, முதல்வர் விஜய் அவர்களுக்கு என் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். உச்சநிலையிலிருந்த ஒரு திரைப்பட வாழ்க்கையையும், மிகப் பெரிய நட்சத்திர அந்தஸ்தையும் விட்டு விட்டு பொதுச் சேவைக்காக வந்திருப்பது பாராட்டத்தக்க விஷயம். திரைப்படத் துறையைச் சேர்ந்த ஒருவராக நான் மிகவும் பெருமைப்படுகிறேன். அவருக்கும், தமிழ்நாடு மக்களுக்கும் என் வாழ்த்துகள்.


இந்தப் படம் எங்கள் அனைவரின் உழைப்பு . ஜூன் 4-ஆம் தேதி ரசிகர்கள் திரையரங்கில் இந்த அனுபவத்தை கொண்டாடுவார்கள் என்று நம்புகிறேன். உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி.”


ராம் சரண், ஜான்வி கபூர், சிவ ராஜ்குமார், ஜகபதி பாபு மற்றும் திவ்யேந்து சர்மா உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ள இப்படம், இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. சென்னை பத்திரிகையாளர் சந்திப்பும் ரசிகர்களிடையே படத்தின் மீதான ஆர்வத்தை மேலும் உயர்த்தியுள்ளது.


ஏற்கனவே ஆஸ்கர் விருது பெற்ற இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்த பாடல்கள் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளன. மேலும், சமீபத்தில் வெளியான டிரெய்லர், ஒரு கிராஸ்ஓவர் தடகள வீரரின் ஊக்கமூட்டும் மற்றும் உணர்ச்சிப்பூர்வமான பயணத்தை வலுவாக வெளிப்படுத்தி, படத்தின் மீதான எதிர்பார்ப்பை உச்சத்துக்கு கொண்டு சென்றுள்ளது.


இப்படம் வரும் ஜூன் 4ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.

தயாரிப்பாளர் வெங்கட சதீஷ் கிலாரு மற்றும் அவரது குழு, இந்தியா முழுவதும் தீவிரமான புரமோஷன் திட்டங்களை மேற்கொண்டு, படத்தின் எதிர்பார்ப்பை மேலும் உயர்த்த திட்டமிட்டுள்ளனர்.


நடிகர்கள் :

மெகா பவர் ஸ்டார் ராம் சரண், ஜான்வி கபூர், சிவ ராஜ்குமார், ஜகபதி பாபு, திவ்யேந்து சர்மா


தொழில்நுட்பக் குழு :

இயக்கம், திரைக்கதை: புச்சி பாபு சனா

வழங்குபவர்கள் : மைத்ரி மூவி மேக்கர்ஸ், சுகுமார் ரைட்டிங்ஸ்

தயாரிப்பு நிறுவனம்: விருத்தி சினிமாஸ்

தயாரிப்பாளர்: வெங்கட சதீஷ் கிலாரு

இணை தயாரிப்பாளர்: ஈஷான் சக்சேனா

இசை: A.R. ரஹ்மான்

ஒளிப்பதிவு: R. ரத்னவேலு

தயாரிப்பு வடிவமைப்பாளர் : அவினாஷ் கொல்லா

படத்தொகுப்பு: நவீன் நூலி

நிர்வாக தயாரிப்பாளர்: V.Y. பிரவீன் குமார்

மார்க்கெட்டிங்: ஃபர்ஸ்ட் ஷோ

மக்கள் தொடர்பு : யுவராஜ்

பிளாஸ்ட்’ திரைப்பட விமர்சனம்

பிளாஸ்ட்’ திரைப்பட விமர்சனம்


  கராத்தே பயிற்சி ஆசிரியரான அர்ஜுன், சிறு வயது முதலே தனது மகளுக்கு கராத்தே பயிற்சி அளிப்பதோடு, எங்கு தப்பு நடந்தாலும், யாருக்கு நடந்தாலும் தட்டிகேட்க வேண்டும் என்று சொல்லி வளர்க்கிறார். அதன்படி, அவரது மகள் ப்ரீத்தி முகுந்தனும், எங்கு தப்பு நடந்தாலும் அதை அதிரடியாக தட்டி கேட்கிறார். இதனால் அவருக்கு சிறு சிறு பிரச்சனைகள் ஏற்பட, அம்மா அபிராமியின் அறிவுரையின்படி அமைதியாக இருக்க பழகுகிறார். இந்த நேரத்தில், அவரது தங்க சங்கிலியை பறிக்க ஒருவர் முயற்சிக்க, வழக்கம் போல் தனது அதிரடியால் அவரை மிரள வைத்து போலீஸில் பிடித்து கொடுக்கிறார்.சிறிய திருட்டு என்று நினைத்து அர்ஜுனும், ப்ரீத்தி முகுந்தனும் காவல் நிலையத்தில் புகார் கொடுக்க முடிவு செய்யும் போது, அது மிகப்பெரிய பிரச்சனையின் தொடக்கப் புள்ளி என்று தெரிய வருகிறது. அதனால், அர்ஜுன் குடும்பத்தினர் உயிருக்கே பேராபத்து ஏற்பட, அந்த ஆபத்தில் இருந்து தங்களை காத்துக் கொள்வதற்காக அமைதியாக இருக்க வேண்டும் என்று மகளுக்கு அறிவுரை சொன்ன அம்மா அபிராமியும் அதிரடியில் இறங்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது. ஒரு கட்டத்தில் இது தனது குடும்பத்திற்கான பிரச்சனை மட்டும் இல்லை, ஆயிரக்கணக்கான குடும்பங்களின் உயிர் பிரச்சனை என்பதை புரிந்துக் கொள்ளும் அர்ஜுன் குடும்பத்தினர், அந்த குடும்பங்களை காப்பாற்ற என்ன செய்தார்கள் ?, அந்த பிரச்சனை என்ன ? என்பதை முழுக்க முழுக்க ஆக்‌ஷன் மூலமாகவே சொல்லியிருப்பது தான் ‘பிளாஸ்ட்’. எந்தவிதமான லாஜிக்கும் பார்க்காமல் இரண்டு மணி நேரம் போனதே தெரியாமல் இருக்க வேண்டும், என்றால் நிச்சயம் அதற்கு இந்த படம் சரியான தேர்வு. அதே சமயம், ஹீரோக்களின் ஆக்‌ஷன் காட்சிகளை பார்த்து வியந்த ரசிகர்களுக்கு ஹீரோவின் மகள், மனைவி என்று ஒட்டுமொத்த குடும்பமே இணைந்து நடத்தும் அதிரடி ஆக்‌ஷன் காட்சிகள் மிகப்பெரிய ஆக்‌ஷன் விருந்தாக, வியக்க வைக்கும் என்பது உறுதி. கராத்தே மாஸ்டராக நடித்திருக்கும் அர்ஜுன், இந்த வயதிலும் இப்படி பிட்டாக இருப்பது எப்படி ? என்று யோசிக்க வைப்பதோடு, தனது ஸ்டைலிஷான ஆக்‌ஷன் காட்சிகள் மூலம், தமிழ் சினிமாவில் இவரது இடத்தை நிறப்ப மற்றொருவர் வருவது கடினம் என்பதை நிரூபித்திருக்கிறார். ஆக்‌ஷன் மட்டும் இன்றி, சிறு வயது முதலே தனது மகளுக்கு தைரியம், நம்பிக்கை ஆகியவற்றை சொல்லிக் கொடுத்து வளர்ப்பவர், ஒரு சிறந்த தந்தையாகவும் பார்வையாளர்கள் மனதில் பதிந்து விடுகிறார். அர்ஜுனின் மனைவியாக நடித்திருக்கும் அபிராமி, அமைதி மற்றும் பொறுப்பான அம்மாவாக அறிமுகமாகி திடீரென்று அதிரடியில் இறங்குவது திரையரங்கையே அதிர வைக்கிறது.


அர்ஜுன் – அபிராமி தம்பதியின் மகளாக கதையின் நாயகியாக நடித்திருக்கும் ப்ரீத்தி முகுந்தன், உண்மையான கராத்தே வீராங்கனை போன்று சண்டைக்காட்சிகளில் நடித்திருக்கிறார். அவரது ஒவ்வொரு அடியும் எதிராளிகள் மீது இடியாக விழுவது திரையில் தெரிவதோடு, கராத்தே பாணியிலான சண்டைக்காட்சிகள் ரசிக்கும்படி இருக்கிறது. ப்ரீத்தி முகந்தன் முழுமையான ஆக்‌ஷன் மற்றும் சாசக திரைப்படங்களுக்கான நாயகிக்கான சரியான தேர்வு. நிச்சயம் கதாநாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த படங்களை தேர்வு செய்தால் இவருக்கான தனி இடம் உறுதி. வில்லன்களாக நடித்திருக்கும் ஜான் கொக்கேன், அர்ஜுன் சிதம்பரம், பவன், பாலா ஹாசன், வினோத் சாகர் மற்றும் அர்ஜுன் தம்பியாக நடித்திருக்கும் விவேக் பிரசன்னா ஆகியோரது கதாபாத்திர வடிவமைப்பு மற்றும் அவர்களது திரை இருப்பு திரைக்கதைக்கு பலம் சேர்த்திருப்பதோடு, காட்சிகளின் விறுவிறுப்பை அதிகரிக்கச் செய்திருக்கிறது.

ஒளிப்பதிவாளர் அருண் ராதாகிருஷ்ணன் மற்றும் அவரது குழுவினரின் உழைப்பு திரையில் தெரிகிறது. படம் முழுவதும் ஆக்‌ஷன் காட்சிகள் இருந்தாலும் அதை பல கோணங்களில் படமாக்கி, ஒவ்வொரு ஆக்‌ஷன் காட்சியையும் ரசிக்க வைத்திருக்கிறார்கள்.


இசையமைப்பாளர் ரவி பஸ்ரூரின் பின்னணி இசை திரைக்கதையின் வேகம் மற்றும் காட்சிகளின் விறுவிறுப்புக்கு எக்ஸ்ட்ரா கியரை போட்டு அதிவேகத்தில் நகர்த்தியிருப்பதோடு, மென்மையான இசை மூலம் சண்டைக்காட்சிகளை ரசிக்க வைத்திருக்கிறார். சண்டைக்காட்சிகள் என்றாலே காதை கிழிக்கும் சத்தம் அதிகம் இருக்க வேண்டும் என்ற பழைய பாணியை மாற்றி, மெலோடி கலந்த பின்னணி இசை மூலம் சண்டைக்காட்சிகளையும் காதல் காட்சிகள் போல் கவித்துவமாய் காட்டியிருக்கிறார். இயக்குநர் கற்பனை செய்த காட்சிகளுக்கு உயீர் கொடுத்தவர்களின் முக்கியமானவர் சண்டைப்பயிற்சி இயக்குநர் பீனிக்ஸ் பிரபு. அர்ஹுனின் அறிமுக சண்டைக்காட்சி முதல், ஒட்டுமொத்த குடும்பமே இணைந்து மேற்கொள்ளும் ஆக்‌ஷன் வரை படத்தில் இடம்பெறும் அனைத்து ஆக்‌ஷன் காட்சிகளையும் மிரட்டலாக மட்டும் இன்றி வியக்க வைக்கும் விதத்தில் வடிவமைத்திருக்கிறார். குறிப்பாக ப்ரீத்தி முகுந்தன் மற்றும் அபிராமி ஆகியோரை பயன்படுத்திய விதம், அவர்களுக்கான சண்டைக்காட்சிகளை வடிவமைத்த விதம் பாராட்டுக்குரியது. இருவரும் நிஜமாகவே கராத்தே பயிற்சி பெற்றிருப்பார்களோ…!, என்று ஆச்சரியப்படும் அளவுக்கு அவர்களது சண்டைக்காட்சிகள் வியக்க வைக்கிறது படத்தொகுப்பாளர் பிரதீப் ஈ.ராகவ், வேகமான காட்சிகளை அதிவேகமாக நகர்த்தும்படி காட்சிகளை தொகுத்திருந்தாலும், அனைத்தையும் ரசிக்க வைக்கிறார். சண்டைக்காட்சிகள் தான் படத்தின் முக்கிய பலம் என்பதை உணர்ந்து பணியாற்றியிருப்பவர், தனது நுணுக்கமான படத்தொகுப்பின் மூலம் சண்டைக்காட்சிகளை ஒரு கதாபாத்திரமாகவே வலம் வர செய்திருக்கிறார்.


எழுதி இயக்கியிருக்கும் சுபாஷ் கே.ராஜ், கமர்ஷியல் படம் என்றாலும் அதை பெண்களுக்கு நம்பிக்கையும், தைரியமும் கொடுக்கும் ஒரு படைப்பாக கொடுத்திருக்கிறார். அம்மா, அப்பா உட்பட யாரின் நிழலிலும் இருக்காமல் பெண்கள் தனித்து நிற்க வேண்டும், எந்த பிரச்சனையாக இருந்தாலும் அதை தனித்து சமாளிக்க வேண்டும் என்ற அவரது அறிவுரைக்காகவே தனியாக பாராட்டலாம்.


குடும்ப திரைப்படத்திற்குள் ஒரு அதிரடி ஆக்‌ஷன் திரைப்படம் என்று சொல்லும் அளவுக்கு, அதிரடியான ஆக்‌ஷன் காட்சிகளோடு முழு படத்தையும் ரசிக்க வைத்திருக்கும் இயக்குநர் சுபாஷ் கே.ராஜ், தொய்வில்லாத திரைக்கதை, விறுவிறுப்பான காட்சிகள் மூலம் இரண்டு மணி நேரம் எப்படி போனது, என்று தெரியாதவாறு பார்வையாளர்களின் கவனத்தை கட்டிப்போட்டு விடுகிறார்.


வியக்க வைக்கும் ஆக்‌ஷன் காட்சிகள், எதிர்பார்க்காத திருப்பங்கள் என முதல் பாதி படம் விறுவிறுப்பாக பயணித்தாலும், இரண்டாம் பாதி கொஞ்சம் லாஜிக் மீறலோடு பயணிப்பது படத்தின் சிறு குறையாக தெரிந்தாலும், அது படத்தை எந்தவிதத்திலும் பாதிக்காதவாறும், அதை மறந்தும் பார்வையாளர்கள் படத்தை கொண்டாட வைப்பது படத்தின் ஆக்‌ஷன் காட்சிகளும், அதை திரைக்கதையோடு இணத்து சொன்ன இயக்குநரின் புத்திசாலித்தனமும் தான்.


மொத்தத்தில், ‘பிளாஸ்ட்’ மாபெரும் வெற்றி உறுதி

காட்டாளன்’ திரைப்பட விமர்சனம்

 காட்டாளன்’ திரைப்பட விமர்சனம்


வரை தெரிகிறது. அதிலும், இப்படி ஒரு உலகத்தை உருவாக்கி தொடர்ந்து அதே பாணியிலான படங்களை இயக்கி வரும் ஒரு தமிழ் சினிமா இயக்குநரையே சிறப்பு தோற்றத்தில் தோன்ற வைத்து, அவர் மூலம் இரண்டாம் பாகம் இருக்கு, என்று சொல்லியிருக்கிறார்.


யானை தந்தம் கடத்தல் மற்றும் அதன் பின்னனியை கருவாக எடுத்துக் கொண்ட இயக்குநர் பவுல் ஜார்ஜ், அதைப் பற்றியும், அதனை சார்ந்த மக்களைப் பற்றியும் அழுத்தமாக பேசாமல், ஆக்‌ஷன் காட்சிகளையும், கதாபாத்திரங்களை ஸ்லோமோஷனில் நடக்க விட்டும் காட்சிகளை படமாக்கியிருப்பது படத்திற்கு எந்தவிதத்திலும் கைகொடுக்கவில்லை. இத்தகைய மேக்கிங்கை பார்வையாளர்கள் ஏற்கனவே பலமுறை பார்த்திருப்பதால், இவை அனைத்தும் பார்வையாளர்களை சலிப்படைய செய்கிறதே தவிர கவர வில்லை.


மொத்தத்தில், ‘காட்டாளன்’ கடுப்பேற்றுகிறான்.

எல்லோரையும் நம்பாதே" என்பது ரவி மோகன் தனது இளம் பருவ ரவி மோகனுக்கு அளிக்கும் அறிவுரை.

 "எல்லோரையும் நம்பாதே" என்பது ரவி மோகன் தனது இளம் பருவ ரவி மோகனுக்கு அளிக்கும் அறிவுரை.




SUN NXT டிஜிட்டல் தளத்தில் ஒளிபரப்பாகும் 'ஜாலி ஓ ஜிம்கானா' நிகழ்ச்சியின் ஐந்தாவது எபிஸோடில் அனைவரும் ரவி மோகனின் தன்மையான மற்றும் இனிமையான பழகும் இயல்பைக் கண்டு வியந்தனர், மேலும் ரவி மோகன் அந்த அரங்கில் இருந்த அனைவரின் இதயத்தையும் வென்றுவிட்டார் என்றே சொல்லலாம்.


எம்.குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி முதல் பொன்னியின் செல்வன் வரை, ரவி மோகன் பல வேடங்களில் நடித்திருக்கிறார், இப்போது அவர் திரைப்படத் தயாரிப்பாளராகவும் புதிய அவதாரம் எடுத்திருக்கிறார். ஆனால், மனதளவில் தான் எப்போதும் கற்றுக்கொண்டே இருக்கும் ஒரு திரைப்பட மாணவர் என்றே அவர் குறிப்பிடுகிறார். பள்ளிக்காலத்தில் அவர் முன்வரிசை மாணவராக இருந்திருக்காவிட்டாலும், கல்லூரிக்காலம் முற்றிலும் மாறுபட்டதாக அமைந்தது. "எனக்கு எதன் மீது உண்மையான ஆர்வம் இருக்கிறதோ, அதற்காக நான் எனது முழு உழைப்பையும் அர்ப்பணிப்பேன்; எனக்கு அந்த விஷயம் 'சினிமா'தான்," என்று, தன்னைத் தொடர்ந்து இயங்க வைக்கும் உந்துசக்தி குறித்துப் தொகுப்பாளர் ஜகனிடம் பகிர்ந்துகொண்டார்,


மேலும், திரையுலகில் தனது பயணம் ஒரு ஸ்பாட் பாயாக (spot boy) எவ்வாறு தொடங்கியது என்பதைப் பற்றி ஜெகனிடம் அவர் மனம் திறந்து பேசினார், அத்துடன் தான் வளரக் காரணமான சினிமாவுக்கு ஒரு நெகிழ்ச்சியான அஞ்சலியையும் செலுத்தினார். "என் தந்தை திரைப்படங்களை அவற்றின் சுவையை வைத்தே அடையாளம் காண்பார்," என்று ரவி மோகன் அன்போடு நினைவுகூர்ந்தார். ரவி மோகன் குறித்து இணையத்தில் எப்போதும் பலவிதமான கருத்துகள் பேசப்பட்டு வருகின்றன. அதிலிருந்து சில கமெண்டுகளுக்கு அவர் அளித்த பதில்கள் அனைவரையும் ஆச்சரியத்தில் வாயடைக்க வைத்தது என்றே கூறலாம். அதில் ஒரு கமெண்டுக்கு, "அவனை கொஞ்சம் இங்க வர சொல்லு'' என்று ரவி மோகன் கலகலப்பாக கூறினார்.


பின்னர் நிகழ்ச்சியின் ஸ்பைஸியான 'காரசாரம் சேலஞ்ச்' செக்மென்ட் வந்தது. அதில் ரவி மோகன் எந்தவித தயக்கமும் இல்லாமல் கலந்துகொண்டது மட்டுமல்லாமல், "எனக்கே கார சாப்பாடா?" என்று குறும்பாக கேட்ட விதம், உனக்கும் எனக்கும் திரைப்படத்தில் அவரது கதாபாத்திரத்தின் நினைவுகூறலாக அமைந்தது. ஆனால் அந்த எபிஸோட், ரவி மோகனால் மட்டுமே பதிலளிக்கக்கூடிய கேள்விகள் பலவற்றால் நிறைந்திருந்தது. 'தனி ஒருவன்' படத்தின் இரண்டாம் பாகத்தை (sequel) அவர் ஒருபோதும் உருவாக்காததற்கான ஒரே காரணம் என்ன? தன் படங்களில், இதில் ஏன் நடித்தோம் என்று அவர் வருந்தும் ஒரே படம் எது? மேலும், தான் ஒருபோதும் இணைந்து நடிக்கவே கூடாது என்று அவர் எண்ணும் ஒரே நடிகர் யார்? போன்ற சிக்கவைக்கும் பல கேள்விகளுக்கான பதில்களை அறிய, நீங்கள் அந்த அவசியம் இந்த எபிஸோடைப் பார்த்தே ஆக வேண்டும்.


இறுதியாக, மிகவும் சுவாரஸ்யமான ஒரு விஷயத்தைப் பகிர்ந்துகொண்டார்: எந்த ஒரு நடிகரின் நடிப்புத் திறன் அவருக்கு மகிழ்ச்சியையும், அதே சமயம் சற்றும் பொறாமையையும் ஏற்படுத்தும் என்ற கேள்விக்கு , ரவி மோகன் ஒரு கணம் கூடத் தயங்காமல் பதிலளித்தார். அந்த நடிகர் வேறு யாருமல்ல; அவருடைய மகனான ஆரவ் ரவிதான். திரையுலகைச் சேர்ந்த நண்பர்களில், அவர் முழுமையாக நம்பும் நண்பர் யார் என்ற கேள்வி எழுந்தபோது, அதற்கான பதிலும் அவரிடம் இருந்து மிக இயல்பாகவே வெளிவந்தது, அவர் வேறு யாருமல்ல, கார்த்திதான். "மேலும், என்னைப் பற்றியும் அவரும் இதே கருத்தைத்தான் கூறுவார் என்று நான் நம்புகிறேன்," என்று அவர் புன்னகையுடன் கூறினார்.


இரண்டு பதில்கள், அவை இரண்டும் அவர் மனதில் இருந்து வந்தவை, அப்படியே அவர் அந்த அறையில் இருந்த அனைவரின் இதயத்தையும் மீண்டும் ஒருமுறை உருக வைத்தார். தனது பிரபலமான ஹிப்-ஹாப் பாடலான 'மக்கமிஷி'யை ஒரு முழுமையான பரதநாட்டிய பெர்பாமென்ஸாக மாற்றி, பின்னர் தொகுப்பாளர் ஜெகனுக்கு அதே ஸ்டெப்களை பொறுமையாகக் கற்றுக் கொடுத்ததோடு, அந்த எபிஸோட் ஒரு இனிமையான தருணத்துடன் நிறைவடைந்தது. இது ரவி மோகனால் மட்டுமே சாத்தியம்.


உங்களுக்குப் பிடித்தமான பிரபலங்களான ரவி மோகன், மிர்ச்சி சிவா, பிரேம்ஜி, ஹரிஷ் கல்யாண், ஐஸ்வர்யா ராஜேஷ், டிஎஸ்பி ஆகியோரை SUN NXT-ல் பிரத்தியேகமாக ஒளிபரப்பாகும் 'ஜாலி ஓ ஜிம்கானா' எபிஸோட்களில் காணுங்கள். ஒவ்வொரு வியாழக்கிழமையும், SUN NXTஇல் மட்டும் இதன் புதிய எபிஸோட்கள் வெளியாகின்றன.


SUN NXT பற்றி...


SUN NXT என்பது நாடு முழுவதும் உள்ள பார்வையாளர்களின் விருப்பத்திற்குரிய பொழுதுபோக்கு தளவாகும். இது ஏழுக்கும் மேற்பட்ட மொழிகளில் நாலாயிரத்திற்கும் அதிகமான திரைப்படங்களையும், 44க்கும் மேற்பட்ட லைவ் டிவி சேனல்களையும் வழங்குகிறது. திரைப்படங்கள், தொலைக்காட்சித் தொடர்கள், லைவ் டிவி மற்றும் டிவிக்கு முன்பே பார்க்கும் வசதி கொண்ட நிகழ்ச்சிகள் என பல்வேறு வகையான உள்ளடக்கங்களைக் கொண்டுள்ள SUN NXT, உயர்தரமான தென்னிந்திய பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளின் தாயகமாக திகழ்கிறது.

*Peddi is an inspiring tale about rural empowerment and represents the True Indian Spirit on a grand canvas - Ram Charan at Peddi Delhi Press Conference*

 *இந்திய கிராமங்களின் ஆன்மாவை கொண்டாடும் படம் “பெத்தி” - ராம் சரண் !!*



இந்திய கிராமங்களின் திறமைகளையும், உண்மையான இந்திய ஆன்மாவையும் மிகப்பெரிய திரையில் கொண்டாடும் படம் தான் ‘பெத்தி’ - டெல்லி பத்திரிகையாளர் சந்திப்பில் ராம் சரண் பேச்சு


மெகா பவர் ஸ்டார் ராம் சரண் நடித்துள்ள கிராமத்து விளையாட்டு பின்னணியிலான பிரம்மாண்ட திரைப்படம் ‘பெத்தி’ நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. புச்சி பாபு சனா இயக்கத்தில், வெங்கட சதீஷ் கிலாரு மிகப்பெரிய பொருட்செலவில் தயாரித்துள்ள இப்படம் வரும் ஜூன் 4ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.


ஆஸ்கர் விருது பெற்ற இசையமைப்பாளர் ஏ. ஆர். ரஹ்மான் இசையமைத்த பாடல்கள் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளன. மேலும், சமீபத்தில் வெளியான டிரெய்லர், ஒரு கிராஸ் ஓவர் தடகள வீரரின் ஊக்கமூட்டும் மற்றும் உணர்ச்சிப்பூர்வமான பயணத்தை வலுவாக வெளிப்படுத்தி, படத்தின் மீதான எதிர்பார்ப்பை உச்சத்துக்கு கொண்டு சென்றுள்ளது.


இப்படத்தில் ஜான்வி கபூர் நாயகியாக நடித்துள்ளதுடன், கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார், திவ்யேந்து சர்மா, ஜகபதி பாபு மற்றும் போமன் இரானி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.


படத்தின் வெளியீட்டை முன்னிட்டு ‘பெத்தி’ படக்குழு நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ரசிகர்களை சந்தித்து வருகிறது. போபாலில் நடைபெற்ற மிகப்பெரிய விழாவிற்கு பிறகு, தற்போது டெல்லியில் பத்திரிகையாளர்களை சந்தித்து படத்தை பற்றி பகிர்ந்து கொண்டனர்.


நிகழ்ச்சியில் பேசிய போமன் இரானி, “இந்திய கிராமங்களில் மறைந்து கிடக்கும் உண்மையான திறமைகளை வெளிச்சத்திற்கு கொண்டு வரும் படம் தான் ‘பெத்தி’. இந்த படத்தை பார்த்த பிறகு ஒவ்வொரு இளைஞரும் ‘பெத்தி’ போல ஆக வேண்டும் என்ற ஊக்கத்தை பெறுவார்கள். இந்திய விளையாட்டுத் துறையில் மறைந்து கிடக்கும் திறமைகளுக்கு சரியான வாய்ப்புகள், பயிற்சி மற்றும் வழிகாட்டுதல் கிடைக்க வேண்டும் என்ற எண்ணத்தை இந்த படம் உருவாக்கும்,” என்றார். மேலும், இந்த படம் இந்திய சினிமா வரலாற்றில் இடம்பிடிக்கும் என்றும் கூறினார்.


திவ்யேந்து சர்மா பேசுகையில், “இவ்வளவு திறமையான கலைஞர்களுடன் ஒரே படத்தில் இணைந்து நடித்தது மகிழ்ச்சி அளிக்கிறது. ராம் சரண் உடன் பணியாற்றிய அனுபவம் மறக்க முடியாதது. ‘பெத்தி’ என்பது அடையாளத்திற்கான போராட்டத்தை சொல்லும் உயிர்ப்புடன் கூடிய ஒரு சர்வைவல் கதையாக இருக்கும்,” என்றார்.


தயாரிப்பாளர் வெங்கட சதீஷ் கிலாரு, “என் முதல் தயாரிப்பாக இப்படம் உருவாகுவது பெருமையாக உள்ளது. இந்திய கலாச்சார வேர்களை கொண்ட ஒரு உணர்ச்சிப்பூர்வமான மற்றும் அதேசமயம் விறுவிறுப்பான கதையாக ‘பெத்தி’ இருக்கும். குடும்பத்துடன் குழந்தைகளையும் திரையரங்கிற்கு அழைத்து வந்து இந்த படத்தை பார்க்க வேண்டும்,” என்று தெரிவித்தார்.


நாயகி ஜான்வி கபூர், டெல்லியின் வெப்பத்தை பற்றி நகைச்சுவையாக பேசிக்கொண்டே, தனது கதாபாத்திரம் இயக்குநர் புச்சி பாபு சனாவின் தனித்துவமான அணுகுமுறையால் ஈர்க்கப்பட்டதாக கூறினார். ராம் சரண் இன் அர்ப்பணிப்பு குறித்து பேசுகையில், “கேமரா ஆஃப் ஆனதும் அமைதியாக இருப்பார். ஆனால் ஷாட் ஆரம்பித்தவுடன் திரையே வெடிக்கும் அளவிற்கு ஆற்றலை வெளிப்படுத்துவார்,” என்று பாராட்டினார்.


மேலும், “இந்த படம் இந்தியாவின் புறக்கணிக்கப்பட்ட மக்களின் அடையாளப் போராட்டத்தை பேசும் ஒரு மாஸ் என்டர்டெய்னர். இந்த படம் உண்மையான உழைப்பு, அர்ப்பணிப்பு மற்றும் நல்ல நோக்கத்துடன் உருவாக்கப்பட்டுள்ளது,” என்றும் கூறினார்.


ராம் சரண் பேசுகையில், “கடந்த இரண்டரை ஆண்டுகளாக நாங்கள் இந்த படத்திற்காக உண்மையுடன் உழைத்துள்ளோம். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை திரையரங்கிற்கு அழைத்து வந்து இந்த படத்தை பார்க்க வேண்டும். இந்திய மண்ணின் வாசனையுடன் உருவாகும் கதைகளே உலகளவில் கொண்டாடப்படுகின்றன. ‘பெத்தி’ அப்படிப்பட்ட ஒரு கதை,” என்றார்.


மேலும், பிரதமர் நரேந்திர மோடி யை சந்தித்த அனுபவத்தையும் அவர் பகிர்ந்துகொண்டார். மேற்கு வங்கத்தை சேர்ந்த முகம்மது என்ற இளைஞர், தனது கிராமத்திலிருந்து மேலும் 80 பேரை இந்தியாவுக்காக விளையாட ஊக்குவித்த சம்பவத்தை பிரதமர் கூறியதாக தெரிவித்தார். “அப்படிப்பட்ட உண்மையான இந்திய ஆன்மாவையும், கிராமத்து மக்களின் உறுதியையும் ‘பெத்தி’ படம் கொண்டாடுகிறது,” என்றார்.


தனது மாறுபட்ட தோற்றங்கள் குறித்து பேசுகையில், “ஒவ்வொரு கதாபாத்திர மாற்றமும் சவாலானதே. குறிப்பாக மல்யுத்த வீரர் தோற்றம் மிகவும் கடினமாக இருந்தது. ஆனால் நான் கதையின் தேவையை மட்டுமே பின்பற்றினேன்,” என்றார்.


இறுதியாக, “உண்மையான இந்திய ஆன்மாவையும், போராட்ட மனப்பாங்கையும் கொண்ட ‘பெத்தி’ படத்தை உலகம் முழுவதும் ரசிகர்கள் திரையரங்குகளில் பார்த்து அனுபவிக்க வேண்டும்,” என்று ராம் சரண் அழைப்பு விடுத்தார்.


“பெத்தி” படம் வரும் ஜூன் 4ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் ரசிகர்களை மகிழ்விக்க வருகிறது


*Peddi is an inspiring tale about rural empowerment and represents the True Indian Spirit on a grand canvas - Ram Charan at Peddi Delhi Press Conference*


Mega Power Star Ram Charan is creating a huge wave of anticipation across Pan-India with his rural sports epic, Peddi. The movie, directed by Buchi Babu Sana and produced on a massive scale by Venkata Satish Kilaru, is set for a grand worldwide release on June 4th. Already, the movie’s songs composed by Oscar-winning composer AR Rahman have become huge chartbusters, while the trailer has pushed the buzz to sky-high levels by showcasing an immersive and inspiring journey of a crossover athlete. Janhvi Kapoor plays the leading lady, with Kannada superstar Shiva Rajkumar, Divyenndu Sharma, Jagapathi Babu, and Boman Irani in prominent roles.


The Peddi team has been travelling across the nation to further build excitement ahead of the release. After a hugely successful, record-breaking event in Bhopal that drew the attention of the national media towards Ram Charan’s craze in North India, the team interacted with the press in Delhi.


At the event, Boman Irani stated that Peddi is about the true talent found in the villages of India that often does not get opportunities to shine. He said every athlete would feel inspired to become like Peddi after watching the film and wished for the movie to become a grand success that sparks a movement in Indian sports, helping hidden talents receive proper platforms, guidance, and coaching to shine on the world stage. He added that the film would be etched in the history of Indian cinema.


Divyenndu Sharma echoed the same sentiment and said he was thrilled to share screen space with so many talented individuals in one film. He mentioned that his association with Ram Charan is memorable and that he would always cherish the memories of shooting for Peddi. He described the movie as a “survival tale of identity.”


Producer Venkata Satish Kilaru expressed that he is proud to be debuting with such a grand and culturally rooted film. He thanked the entire cast and crew for their fantastic work and cooperation. He described the movie as an emotional and highly entertaining story set in its own unique universe. Finally, he strongly insisted that audiences should take their children to watch the film, as it offers a great cinematic experience along with meaningful takeaways for families.


Leading lady Janhvi Kapoor joked about the heat in Delhi before explaining that she modelled her bold and “rowdy” character based on director Buchi Babu Sana’s unique attitude. She shared her amazement at working with Ram Charan, noting how he calmly conserved his energy off-camera only to deliver explosive energy during takes. She proudly described the movie as a mass entertainer that tells the story of overlooked Indians and their struggles for identity. She also shared a funny bonding moment with co-star Divyenndu Sharma during a turbulent flight and expressed her deep admiration for Boman Irani. She promised audiences that the film is inspiring and made with sincerity, hard work, commitment, and pure intentions.


Mega Power Star Ram Charan thanked the Delhi press for coming and supporting the team. He stated that they have worked sincerely over the past two and a half years to entertain and inspire audiences. He urged parents to bring their children to theatres to watch Peddi. He described the movie as a powerful and uplifting entertainer that brings the journeys of rooted individuals from Indian villages to the forefront. He noted that Indian cinema is celebrated for telling stories connected to the soil, and Peddi is one such story mounted on a grand canvas.


He also shared an anecdote about his meeting with Prime Minister Narendra Modi, revealing that he was thrilled to learn about Mohammad from West Bengal, who inspired 80 more athletes from his village to represent India. He wished for Peddi to become a grand success that would remain in the hearts of audiences for years to come. He dismissed the high praise for his efforts, stating that he simply followed the script’s demands, and described every transformation as challenging, with the wrestler role being the toughest. He concluded by inviting audiences across the globe to experience the True Indian Spirit and resilience in theatres.

பிரபல கேமராமேனும் தயாரிப்பாளருமான ரவியாதவ் பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாடிய "ரஞ்சன்" படக்குழு

 பிரபல கேமராமேனும் தயாரிப்பாளருமான ரவியாதவ் பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாடிய "ரஞ்சன்" படக்குழு.



இயக்குனர் தயாரிப்பாளர் நடிகர் தியாகராஜன் இயக்கத்தில் டாப் ஸ்டார் பிரஷாந்த் நடிப்பில் "ரஞ்சன்" படத்தின் படப்பிடிப்பு பரபரப்பாக நடைபெற்று வருகிறது.


இந்த படத்தில் சத்யராஜ், தேவயானி, ஆர்.கே.சுரேஷ், மோகன்ராம், ஆதிரா, மானஸ்வி, ஆதேஷ்பாலா, சந்தோஷ்பிரபாகர்,மோகன்லால் உட்பட பலர் நடிக்கிறார்கள்.


பிரபல தயாரிப்பாளர் கதிரேசன் மகன் ஹரியும், நடிகை தேவயானி மகள் பிரியங்காவும் இளம் ஜோடியாக அறிமுகம் ஆகிறார்கள்.


இளைஞர்களுக்கு போக்சோ சட்டத்தின் வீரியத்தை சொல்லும் விதமாக பரபரப்பாக கோர்ட் ஷூட்டிங் நடக்கும் போது கேமராமேன் ரவியாதவ் பிறந்த நாள் சர்ப்ரைஸ் நிகழ்வு நடைபெற்றது.


திடீரென செட்டுக்கு பெரிய கேக் வரவழைக்கப்பட்டு அனைத்து நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞ்ர்கள் முன்னிலையில் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. 


பரபரப்பாக நடைபெறும் இந்த படத்தில் சொல்லப்படும் கருத்து சமூகத்தில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Vishwanath & Sons Set For Grand Worldwide Release On August 14th

 *சூர்யாவின் ‘விஸ்வநாத் & சன்ஸ்’ ஆகஸ்ட் 14ஆம் தேதி உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியாகிறது !!*



சூர்யா மற்றும் வெங்கி அட்லூரி ( Venky Atluri) கூட்டணியில் உருவாகியுள்ள ‘விஸ்வநாத் & சன்ஸ்’ திரைப்படம் வரும் ஆகஸ்ட் 14ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாகிறது. குடும்ப உணர்வுகள், நகைச்சுவை மற்றும் மனதை வருடும் தருணங்கள் நிறைந்த முழுமையான ஃபேமிலி என்டர்டெய்னராக இப்படம் உருவாகியுள்ளது.


பிளாக்பஸ்டர் இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கியுள்ள இப்படத்தை சூர்யதேவர நாக வம்ஷீ மற்றும் சாயி சௌஜன்யா தயாரித்துள்ளனர். டீசர் மற்றும் டைட்டில் அறிவிப்பு வெளியான தருணத்திலிருந்தே ரசிகர்கள் மத்தியில் படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.


குறிப்பாக, சூர்யா ஒரு குழந்தையுடன் இடம்பெற்றிருந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள், நடிகர் சூர்யாவின் பழைய வசீகரமிக்க நடிப்பு பாணியை மீண்டும் நினைவூட்டியதுடன் குடும்ப ரசிகர்களிடையே உடனடி வரவேற்பைப் பெற்றது.


‘வாத்தி’, ‘லக்கி பாஸ்கர்’ போன்ற வெற்றி படங்களை தொடர்ந்து இயக்குநர் வெங்கி அட்லூரி, இந்தப் படத்தின் மூலம் குடும்ப உறவுகள், உணர்ச்சி மிக்க கதை சொல்லல் மற்றும் மனதை கவரும் தருணங்களுடன் ஒரு ஃபீல் குட் எண்டர்டெய்னரை வழங்க உள்ளார்.


இப்படத்தில் மமிதா பைஜு, ராதிகா சரத்குமார், ரவீனா டாண்டன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைக்க, நிமிஷ் ரவி ஒளிப்பதிவு செய்துள்ளார். நவீன் நூலி படத்தொகுப்பு பணிகளை கவனித்துள்ள நிலையில், பங்களன் தயாரிப்பு வடிவமைப்பாளராக பணியாற்றியுள்ளார்.


இந்த ஆண்டின் மிகவும் நேசிக்கப்படும் குடும்ப பொழுதுபோக்கு திரைப்படங்களில் ஒன்றாக ‘விஸ்வநாத் & சன்ஸ்’ உருவாகும் என எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.


தமிழ்நாட்டில் இப்படத்தை திங்க் ஸ்டூடியோஸ் நிறுவனம் வெளியிடுகிறது. இதன் மூலம் மாநிலம் முழுவதும் படத்திற்கு வலுவான திரையரங்கு வெளியீடு கிடைக்க உள்ளது.


சூர்யாவின் ‘விஸ்வநாத் & சன்ஸ்’ படத்தை ஆகஸ்ட் 14ஆம் தேதி திரையரங்குகளில் கொண்டாடலாம்.


*தொழில்நுட்பக் குழு:*


எழுத்து & இயக்கம் : வெங்கி அட்லூரி

தயாரிப்பாளர்கள் : சூர்யதேவர நாக வம்ஷீ & சாயி சௌஜன்யா

இசை : ஜி.வி. பிரகாஷ் குமார்

ஒளிப்பதிவு : நிமிஷ் ரவி

படத்தொகுப்பு : நவீன் நூலி

தயாரிப்பு வடிவமைப்பாளர் : பங்களன்

நிர்வாக தயாரிப்பாளர் : யலமஞ்சிலி கோபால கிருஷ்ணா (நானி)

சண்டை பயிற்சி : V. வெங்கட்

தயாரிப்பு நிறுவனங்கள் : சிதாரா எண்டர்டெயின்மெண்ட்ஸ் & ஃபார்ச்சூன் ஃபோர் சினிமாஸ்

வழங்குபவர் : ஸ்ரீகரா ஸ்டூடியோஸ்


*‘Vishwanath & Sons Set For Grand Worldwide Release On August 14th*


Suriya & Venky Atluri’s ‘Vishwanath & Sons’ Gears Up To Deliver a Perfect Family Entertainer This Independence Day Weekend.


Suriya’s much-awaited family drama Vishwanath & Sons is officially set for a grand worldwide theatrical release on August 14th. Directed by blockbuster filmmaker Venky Atluri and produced by Suryadevara Naga Vamsi & Sai Soujanya, the film is expected to offer audiences a wholesome entertainer packed with emotions, humour and heartwarming family moments.


Ever since the teaser & title announcement, the film has created tremendous excitement among audiences. The first look posters featuring Suriya alongside a child brought back the actor’s vintage charm and instantly connected with family audiences.


After delivering back-to-back successful films like Vaathi and Lucky Baskhar, director Venky Atluri once again promises a feel-good emotional entertainer with strong family values and memorable storytelling.


The film stars Mamitha Baiju, Radhika Sarathkumar, Raveena Tandon and others in key roles. Music is composed by G. V. Prakash Kumar, cinematography is by Nimish Ravi, editing by Navin Nooli and production design by Banglan.


The expectations are soaring high for Vishwanth & Sons to emerge as one of the most loved family entertainers of the year.


The film will be distributed in Tamil Nadu by Think Studios, ensuring a strong theatrical release across the state.


*Crew:*


Written and Directed by Venky Atluri

Producers: Suryadevara Naga Vamsi & Sai Soujanya

Music: G.V. Prakash Kumar

Director of Photography: Nimish Ravi

Editor: Navin Nooli

Production Designer: Banglan

Executive Producer: Yalamanchili Gopala Krishna (Nani)

Fight Master: VVenkat

Banners: Sithara Entertainments & Fortune Four Cinemas

Presenter: Srikara Studios