-

Loading latest news...

DHARMAN Movie Tamil

 *DHARMAN Movie Tamil & English Press Release* 



ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல்

கமல்ஹாசன்

பெருமையுடன் வழங்கும்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும்


"தர்மன்"


இயக்கம்: அஸ்வத் மாரிமுத்து

இசை: அனிருத் ரவிச்சந்தர்

சண்டைப் பயிற்சி: அன்பரிவ்

தயாரிப்பு: கமல்ஹாசன் மற்றும் ஆர். மகேந்திரன்


ஜூன் 24, 2026


ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் (RKFI) தயாரிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் புதிய திரைப்படம் ‘தர்மன்’ படப்பிடிப்பு இன்று தொடங்கியது. படத்தின் தலைப்பும், ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியானது.



கமல்ஹாசன், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இருவருமே கடந்த ஐம்பதாண்டுகளுக்கும் மேல் இந்திய சினிமாவின் உச்ச நட்சத்திரங்களாகத் திகழ்பவர்கள். இந்த இருபெரும் நாயகர்களுக்கு இடையேயான நட்பு அரிதானது. இருவரும் ஒருவர் மீது ஒருவர் வைத்திருக்கும் பிரியமும் மரியாதையும் அபூர்வமானது. கமல்ஹாசன் தயாரிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கதாநாயகனாக நடிக்கும் இந்தத் திரைப்படம் இந்திய சினிமாவே ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்த ஒரு நிகழ்வு.


தரமான திரைப்படங்களை ரசிகர்களுக்குத் தரவேண்டும் என்பதில் 46 ஆண்டுகளாக எவ்வித சமரசமும் இன்றி செயல்பட்டு வரும் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இணைவது இதுவே முதல்முறை.


ஓ மை கடவுளே, டிராகன் போன்ற ப்ளாக் பஸ்டர் ஹிட் படங்களை இயக்கிய, இன்றைய ஜென் Z தலைமுறையால் இளமை இயக்குனர் என்று கொண்டாடப்படும் அஸ்வத் மாரிமுத்து இந்தப் படத்தை இயக்குகிறார். தனது துள்ளல் இசையால் உலகளவில் ரசிகர்களைப் பெற்றிருக்கும் அனிருத் ரவிச்சந்தர் இசையமைக்கிறார்.



தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகை சிம்ரன்; தமிழ், ஹிந்தி, தெலுங்கு உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் தனது சிறந்த நடிப்பால் ரசிகர்களின் வரவேற்பைப் பெற்ற ராஷி கன்னா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.


அதிரடி சண்டைக் காட்சிகளுக்காக தேசிய விருதுகளை வென்ற அன்பரிவ் மாஸ்டர்ஸ், ஒளிப்பதிவாளர் நிகேத் பொம்மிரெட்டி, தயாரிப்பு வடிவமைப்பாளர் கார்த்திக் ராஜ்குமார், எடிட்டர் பிரதீப் ஈ. ராகவ், கலை இயக்குனர் அண்ணாதுரை என இந்திய சினிமாவின் ஈடு இணையற்ற தொழில்நுட்பக் கலைஞர்கள் இந்தப் படத்தில் பங்காற்றுகிறார்கள், மேலும் இணை தயாரிப்பாளராக டிஸ்னி இணைந்து தயாரிக்கிறார்.


ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் மைல்கல் திரைப்படமான ‘தர்மன்’ படத்தின் தொடக்க விழா மற்றும் முதற்கட்ட படப்பிடிப்பு, படக்குழுவினர், தயாரிப்பு குழுவினர் மற்றும் முக்கிய விருந்தினர்கள் முன்னிலையில் இன்று சென்னையில் கோலாகலமாகத் தொடங்கியது.


இந்தத் தொடக்க விழாவில் திரு. கலைப்புலி எஸ். தாணு, திரு. அன்புச்செழியன், திரு. ஆர்.கே. செல்வமணி, திரு. லிங்குசாமி, திரு. கண்ணன் (CTO, சன் நெட்வொர்க்), திரு. செண்பகமூர்த்தி, திரு. தமிழ் குமரன், திரு. கிருஷ்ணன் குட்டி (JIO Star), திரு. பாலசந்திரன் (JIO Star), திரு. பிரதீப் மில்ராய் பீட்டர் (JIO Star), திரு. ஆனந்த் (Saregama) மற்றும் திரு. சரவணன் வினோத் உள்ளிட்ட திரைப்படத் துறையைச் சேர்ந்த பல முக்கியப் பிரமுகர்களும் துறை சார்ந்த தலைவர்களும் கலந்துகொண்டு சிறப்பித்து பெரும் மகிழ்வான நிகழ்வாக அமைந்தது.


English Press Release 


RAAJKAMAL FILMS INTERNATIONAL

KAMAL HAASAN

PROUDLY PRESENTS

SUPERSTAR RAJINIKANTH


“DHARMAN”


DIRECTED BY ASHWATH MARIMUTHU

MUSIC BY ANIRUDH RAVICHANDER

ACTION BY ANBARIV

PRODUCED BY KAMAL HAASAN - R. MAHENDRAN



24, June 2026


RaajKamal Films International (RKFI) today commenced the inaugural shoot of its highly anticipated new production, 'DHARMAN', starring Superstar Rajinikanth. The film's title and first look were unveiled today, offering eager audiences their first glimpse into one of Indian cinema’s most anticipated events in recent years.


Few friendships in world cinema have endured as long, or remained as beloved, as that of Kamal Haasan and Superstar Rajinikanth. After more than five decades at the forefront of Indian cinema, the two icons come together for the first time in a producer-actor collaboration through 'DHARMAN'. Produced under the banner of RaajKamal Films International by Kamal Haasan and R. Mahendran, the film also marks Superstar Rajinikanth's first appearance in an RKFI production, making it a proud moment in the 46-year journey of one of Indian cinema’s most iconic studios.


The film is directed by Ashwath Marimuthu, who has emerged as a distinctive voice in contemporary Indian cinema and is widely regarded as one of the industry's most exciting young directors.


Joining Superstar Rajinikanth on screen are Simran, one of the most celebrated artists in South Indian cinema, and Raashii Khanna, a versatile performer acclaimed for her work across Tamil, Telugu and Hindi films.


The film boasts an exceptional creative team, with music composed by global sensation Anirudh Ravichander. Action choreography will be handled by the National Award-winning duo Anbariv, renowned for crafting some of Indian cinema's most memorable action sequences. The film's visual world will be captured by cinematographer Niketh Bommireddy, with Karthik Rajkumar serving as Production Designer. Pradeep E. Ragav joins as Editor, while Annadurai serves as Art Director and Co-produced by Disney.


Principal photography commenced today in Chennai with the film's inaugural shoot ceremony attended by the cast, crew, production team and distinguished guests.


The launch event was graced by the presence of several eminent members of the film fraternity and industry leaders, including Mr. Kalaipuli S. Dhanu, Mr. Anbuchezhian, Mr. R.K. Selva Mani, Mr. Lingusamy, Mr. Kannan (CTO, Sun Network), Mr. Shenbagamoorthi, Mr. Tamil Kumaran, Mr. Krishnan Kutty (JIO Star), Mr. Balachandran (JIO Star), Mr. Pradeep Milroy Peter (JIO Star), Mr. Anand (Saregama) and Mr. Saravanan Vinoth, making the occasion a memorable celebration of cinema and collaboration.

*சென்னையில் நடைபெற்ற “நாகபந்தம்” திரைப்பட பத்திரிககையாளர் சந்திப்பு !!*

 *சென்னையில் நடைபெற்ற “நாகபந்தம்” திரைப்பட பத்திரிககையாளர் சந்திப்பு !!*



புராணக் கதைகள், மர்மங்கள் மற்றும் பிரம்மாண்டமான ஆக்சன் காட்சிகளின் கலவையாக உருவாகியுள்ள பான்-இந்தியா திரைப்படம் “நாகபந்தம்”. இயக்குநர் அபிஷேக் நாமா இயக்கத்தில், இளம் நடிகர் விராட் கர்ணா கதாநாயகனாக நடிக்கும் இப்படம், இந்திய சினிமாவில் இதுவரை இல்லாத அளவிலான காட்சியமைப்புகள் மற்றும் தொழில்நுட்ப பிரம்மாண்டத்துடன் உருவாகியுள்ளது.


வரும் ஜூலை 3 ஆம் தேதி உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியாகவுள்ள நிலையில், இப்படத்தின் பத்திரிககையாளர் சந்திப்பு இன்று சென்னையில் படக்குழுவினர் மற்றும் பத்திரிககை, ஊடக நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது.


இந்நிகழ்வில் படக்குழுவினர் கலந்து கொண்டு, படத்தை உருவாக்கிய பயணம், பிரம்மாண்டமான தயாரிப்பு அம்சங்கள், மிதாலஜிக்கல் உலகத்தின் தனித்துவம் மற்றும் ரசிகர்களுக்காக காத்திருக்கும் திரை அனுபவம் குறித்து படக்குழு பகிர்ந்து கொண்டனர்.


கலைப்புலி எஸ். தாணு பேசியதாவது…


“நாகபந்தம் படத்தின் காட்சிகளைப் பார்த்தபோது, மிகப்பெரிய பிரம்மாண்டம் கண்ணெதிரே தோன்றியது. படத்தின் ஒவ்வொரு காட்சியும் அதன் உழைப்பையும், தரத்தையும் வெளிப்படுத்துகிறது. இந்த விழாவில் கலந்து கொண்டிருக்கும் பத்திரிககை, ஊடக நண்பர்கள் மற்றும் திரையுலக நண்பர்கள் அனைவருக்கும் எனது அன்பான வணக்கங்கள்.


தயாரிப்பாளர் அபிஷேக் நாமா அவர்கள் இந்தப் படத்தை மிகுந்த அர்ப்பணிப்புடன் உருவாக்கியிருக்கிறார். அவருடன் எனக்கு நீண்டகால நட்பு உள்ளது. அன்பின் காரணமாகவே என் வேலைகளை ஒதுக்கிவிட்டு இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்திருக்கிறேன்.


ஒரு சிறிய சம்பவத்தை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். பல ஆண்டுகளுக்கு முன்பு நான் வெளியிட்ட ‘அமுதவல்லி’ திரைப்படத்தின் விளம்பரத்தில், ஒரு நாகப்பாம்பு, ஒரு குழந்தை மற்றும் ‘பாம்பு குழந்தையை கொஞ்ச வருகிறதா ? கொத்த வருகிறதா ?’ என்ற ஒரு வரி வாசகம் மட்டுமே இடம்பெற்றிருந்தது. அந்த விளம்பரம் மக்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி, படம் மாபெரும் வெற்றியைப் பெற்றது.


நாகம் என்றாலே மக்களிடையே ஒரு தனி ஈர்ப்பும், நம்பிக்கையும், ஆன்மீகத் தொடர்பும் இருக்கிறது. நாகத்தை மையமாக வைத்து உருவான பல படங்கள் மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன. நாகக் கன்னிகை, நாக தேவதை கதைகள் முதல் பல படைப்புகள் வரை, நாகத்தின் மீது மக்களுக்கு எப்போதும் ஒரு தனிப்பட்ட ஈர்ப்பு உள்ளது.


அந்த வகையில், ‘நாகபந்தம்’ திரைப்படமும் மிகப்பெரிய வெற்றியைப் பெறும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. இந்தப் படத்தின் குழுவினருக்கு என் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். படம் மாபெரும் வெற்றியடைய வாழ்த்துகிறேன். நன்றி, வணக்கம்.”


தயாரிப்பாளர் ஏ எம் ரத்னம் பேசியதாவது…


“தொழில்நுட்பம் மாறிக்கொண்டே இருக்கும் நிலையில், சினிமாவும் தொடர்ந்து புதிய பரிமாணங்களை நோக்கி பயணித்து வருகிறது. குறிப்பாக டிஜிட்டல் மீடியாவின் வருகைக்குப் பிறகு, மக்கள் திரையரங்குகளுக்கு வருவது குறைந்துள்ளது. ஆனால் சில திரைப்படங்கள் மட்டுமே ‘இதை கண்டிப்பாக திரையரங்கில் பார்த்தால்தான் முழு அனுபவம் கிடைக்கும்’ என்ற உணர்வை ஏற்படுத்துகின்றன. அந்த வகையில் ‘நாகபந்தம்’ திரைப்படம் நிச்சயமாக இருக்கும்.


இந்தப் படத்தின் காட்சிப் பிரம்மாண்டம் மிகப்பெரியது. இதை சிறிய திரையில் பார்ப்பதை விட, பெரிய திரையில் பார்த்தால்தான் அதன் முழு தாக்கத்தையும் உணர முடியும். ‘நாகபந்தம்’ என்ற தலைப்பைப் பார்த்தவுடனேயே எனக்கு திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோவிலின் மர்ம அறைகள் நினைவுக்கு வந்தன. குறிப்பாக இன்னும் திறக்கப்படாத அந்தப் புகழ்பெற்ற ‘நாகபந்தம்’ அறை குறித்து மக்கள் மத்தியில் எப்போதும் ஒரு ஆவலும் மர்மமும் இருந்து வருகிறது. அந்த பெயரே இந்தப் படத்தின் மீது தனி ஆர்வத்தை உருவாக்குகிறது.


இந்தப் படத்தின் முழுக் கதை எனக்கு தெரியாது. ஆனால் டிரெய்லர் மற்றும் காட்சிகளைப் பார்க்கும்போது, வரலாறு, மர்மம் மற்றும் சாகசம் கலந்த ஒரு பிரம்மாண்டமான திரை அனுபவமாக இது இருக்கும் என்று தோன்றுகிறது.


தாணு சார் சொன்னது போல, நாகத்தை மையமாகக் கொண்ட பல திரைப்படங்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன. நாகம், நாகக் கன்னிகை, நாகபந்தம் போன்ற தலைப்புகளுக்கே ஒரு தனி ஈர்ப்பு இருக்கிறது. அதேபோல் இந்த ‘நாகபந்தம்’ திரைப்படமும் மிகப்பெரிய வெற்றியைப் பெறும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.


இயக்குநர் அபிஷேக் நாமா இந்தப் படத்திற்கு மிகப்பெரிய காட்சிப் பிரம்மாண்டத்தை வழங்கியிருக்கிறார். அவருடைய உழைப்பும் அர்ப்பணிப்பும் திரையில் தெளிவாக தெரிகிறது. இந்தப் படத்தில் பணியாற்றிய ஹீரோ, ஹீரோயின்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் படக்குழுவினர் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள்.


‘நாகபந்தம்’ மிகப்பெரிய வெற்றியைப் பெற வேண்டும், பெறும் என்ற நம்பிக்கையுடன் படக்குழுவினருக்கு என் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். நன்றி.”


நடிகர் அஜய் ரத்னம் பேசியதாவது…


“அனைவருக்கும் வணக்கம். ‘நாகபந்தம்’ திரைப்படத்தின் இந்த நிகழ்வில் கலந்து கொள்வது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்தப் படத்திற்கு தமிழ் சினிமாவின் இரண்டு முக்கிய ஆளுமைகளான கலைப்புலி எஸ். தாணு சார் மற்றும் ஏ எம் ரத்னம் சார் ஆகியோரின் வாழ்த்துகளும் ஆசீர்வாதங்களும் கிடைத்திருப்பது மிகப்பெரிய விஷயம்.


கலைப்புலி தாணு சார் பகிர்ந்த அனுபவங்கள் மிகவும் சுவாரஸ்யமானவை. நாகத்தை மையமாகக் கொண்ட கதைகள் மற்றும் திரைப்படங்கள் எப்போதும் மக்களிடம் தனி வரவேற்பைப் பெற்றுள்ளன. சிவபெருமானுடன் தொடர்புடைய நாகம் என்றாலே மக்களிடம் ஒரு தனி ஈர்ப்பும் நம்பிக்கையும் இருக்கிறது. அந்த வகையில் ‘நாகபந்தம்’ திரைப்படமும் மிகப்பெரிய வெற்றியைப் பெறும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.


இயக்குநர் அபிஷேக் நாமா பற்றி பேச வேண்டும். அவர் வெறும் இயக்குநர் மட்டுமல்ல. சினிமாவிற்கு முதலில் விநியோகஸ்தராக வந்து, பல இந்திய மற்றும் தெலுங்கு திரைப்படங்களை வெளியிட்டவர். ஒரு படம் ஏன் வெற்றி பெறுகிறது, ஏன் தோல்வியடைகிறது என்பதை ஆழமாக ஆராய்ந்த அனுபவம் அவருக்கு இருக்கிறது. அதன் பிறகு தயாரிப்பாளராக பல படங்களை உருவாக்கினார். இன்று இயக்குநராக இந்தப் படத்தை உருவாக்கியுள்ளார். இத்தனை ஆண்டுகளாக அவர் பெற்ற அனுபவத்தின் மொத்த வெளிப்பாடாகவே ‘நாகபந்தம்’ உருவாகியுள்ளது.


நாயகன் விராட் கர்ணா இந்தப் படத்திற்காக மிகுந்த அர்ப்பணிப்புடன் உழைத்திருக்கிறார். அவருடைய கடின உழைப்பும் அர்ப்பணிப்பும் திரையில் தெளிவாக தெரிகிறது. சினிமாவில் உண்மையாக உழைத்தவர்களின் உழைப்பு ஒருபோதும் வீணாகாது. இந்தப் படம் அவருக்கு மிகப்பெரிய வெற்றியைத் தரும் என்று நம்புகிறேன்.


நபா நடேஷ் மிகச் சிறப்பாக நடித்துள்ளார். ஜெகபதி பாபு சார், சரண்யா மேடம் மற்றும் படத்தில் நடித்துள்ள அனைத்து நடிகர்களும் தங்களது கதாபாத்திரங்களுக்கு முழு நியாயம் செய்துள்ளனர். ஒளிப்பதிவாளர் சௌந்தர் ராஜன் உள்ளிட்ட தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவரும் சிறப்பான பங்களிப்பை வழங்கியுள்ளனர்.


இன்று இந்திய சினிமாவில் தமிழ்நாட்டைச் சேர்ந்த பல தொழில்நுட்பக் கலைஞர்கள் முக்கிய பங்களிப்பை வழங்கி வருவது பெருமைக்குரிய விஷயம். இந்திய சினிமாவின் வளர்ச்சியில் தமிழ் சினிமாவின் பங்கு மிகவும் முக்கியமானதாக உள்ளது.


ஒட்டுமொத்தமாக ‘நாகபந்தம்’ ஒரு மிகச் சிறந்த திரைப்படமாக உருவாகியுள்ளது. இந்தப் படத்தின் ஒரு பகுதியாக இருந்தது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. இறைவனின் அருளால், குறிப்பாக முருகப்பெருமானின் அருளால், இந்தப் படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற வேண்டும் என்று மனதார பிரார்த்திக்கிறேன். நன்றி.


நடிகர் ஜான் கொக்கேன் பேசியதாவது…


“அனைவருக்கும் வணக்கம். புராணக் கதைகளை மையமாகக் கொண்ட திரைப்படங்களை நாம் ஏற்கனவே நிறைய பார்த்திருக்கிறோம். ஆனால் மிகப்பெரிய பொருட்செலவில், உலகத் தரத்தில், பான்-இந்தியா அளவில் உருவாகியுள்ள புராணப் பின்னணியிலான திரைப்படமாக ‘நாகபந்தம்’ அமைந்துள்ளது.


இந்தப் படத்தில் எனக்கு ஒரு முக்கியமான கதாபாத்திரத்தை வழங்கிய இயக்குநர் அபிஷேக் நாமா அவர்களுக்கு நான் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். அதேபோல் தயாரிப்பாளர்கள் நிஷிதா மேம் மற்றும் கிஷோர் சார் ஆகியோருக்கும் என் நன்றிகள். குறிப்பாக கிஷோர் சாருக்கு இந்தப் படம் குறித்து மிகப்பெரிய கனவும் தெளிவான பார்வையும் இருந்தது. அந்தப் பார்வையின் வெளிப்பாட்டை நீங்கள் டிரெய்லரிலேயே பார்த்திருப்பீர்கள்.


‘நாகபந்தம்’ ஒரு மிகப்பெரிய காட்சிப் பிரம்மாண்டம் கொண்ட திரைப்படம். தற்போது ஓடிடி காலகட்டமாக இருந்தாலும், இப்படிப்பட்ட திரைப்படங்களை சிறிய திரையில் முழுமையாக ரசிக்க முடியாது. இந்தப் படத்தை கட்டாயம் திரையரங்கின் பெரிய திரையில் பார்த்தால்தான் அதன் உண்மையான அனுபவத்தை உணர முடியும்.


டிரெய்லரில் நீங்கள் பார்த்ததுபோல, நாகபந்தம், பிரம்மகமலம் மற்றும் அதனைச் சுற்றிய மர்மங்கள் கதையின் மையமாக இருக்கின்றன. நாயகன் விராட் கர்ணா அந்த மர்மத்தைத் தேடும் பயணத்தில் செல்லும்போது, பார்வையாளர்களும் அவருடன் இணைந்து அந்தப் பயணத்தை அனுபவிப்பார்கள். படத்தைப் பார்க்கும் ஒவ்வொருவரும் அந்தத் தேடலின் ஒரு பகுதியாக மாறுவார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.


இந்தப் படத்தில் பணியாற்றியது எனக்கு மிகவும் சிறப்பான அனுபவமாக இருந்தது. பிரம்மாண்டமான செட்கள், மிகப்பெரிய தயாரிப்பு மதிப்பு மற்றும் திறமையான கலைஞர்கள் கொண்ட குழுவுடன் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது. நாபா நடேஷ், ஐஸ்வர்யா மேனன், அனசுயா, ஜான் விஜய், சரண்யா மேடம் உள்ளிட்ட அனைவரும் சிறப்பாக நடித்துள்ளனர்.


ஒட்டுமொத்தமாக இது ஒரு அர்ப்பணிப்பான குழுவின் கடின உழைப்பில் உருவான மிகப்பெரிய திரைப்படம். வரும் ஜூலை 3ஆம் தேதி அனைவரும் திரையரங்குகளுக்கு சென்று ‘நாகபந்தம்’ திரைப்படத்தை பார்த்து ஆதரவு அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.


இந்தப் படத்திற்கு தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் பத்திரிக்கை மற்றும் ஊடக நண்பர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.


விநியோகஸ்தர் சிவ பிரசாத் பேசியதாவது…


“அனைவருக்கும் எனது வணக்கங்கள். நேரில் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியாததற்கு மன்னிக்கவும். பயணக் காரணங்களால் வர இயலவில்லை. இருப்பினும், என் மனம் முழுவதும் இந்த நிகழ்வுடனும், ‘நாகபந்தம்’ படக்குழுவுடனும் இருக்கிறது.


‘நாகபந்தம்’ திரைப்படம் உங்களுக்கெல்லாம் மகிழ்ச்சியையும், மறக்க முடியாத திரையரங்கு அனுபவத்தையும் தரும் என்ற முழு நம்பிக்கை எனக்கு உள்ளது. இந்தப் படத்தின் ஒவ்வொரு காட்சியிலும், ஒவ்வொரு ஃப்ரேமிலும் எங்கள் குழுவின் கடின உழைப்பும், அர்ப்பணிப்பும், அன்பும் நிறைந்திருக்கிறது.


இந்தப் படத்தை உருவாக்கிய அனைத்து நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் படக்குழுவினருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள். அதேபோல் எப்போதும் ஆதரவளித்து வரும் ஊடக நண்பர்களுக்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.


‘நாகபந்தம்’ திரைப்படத்திற்கு உங்கள் அன்பும் ஆதரவும் கிடைக்க வேண்டும் என்று விரும்புகிறேன். படக்குழுவினர் அனைவருக்கும் எனது வாழ்த்துகள்.


நடிகை நபா நடேஷ் பேசியதாவது…


“அனைவருக்கும் வணக்கம். முதலில் கலைப்புலி எஸ். தாணு சார் மற்றும் ஏ எம் ரத்னம் சார் ஆகியோருக்கு எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். உங்கள் வாழ்த்துகளும் ஆசீர்வாதங்களும் எங்களுக்கு மிகவும் முக்கியமானவை.


‘நாகபந்தம்’ திரைப்படம் வரும் ஜூலை 3 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. இது சாதாரணமான திரைப்படம் அல்ல. நமது வரலாறு, மர்மம், சாகசம், ஆக்சன், திரில்லர் மற்றும் உணர்வுப்பூர்வமான தருணங்கள் அனைத்தும் இணைந்த ஒரு பிரம்மாண்டமான திரை அனுபவம்.


இந்தப் படத்தில் பணியாற்றியது எனக்கு மிகவும் சிறப்பான அனுபவமாக இருந்தது. படத்தின் கதையும், உருவாக்கப்பட்ட உலகமும் பார்வையாளர்களுக்கு புதுமையான அனுபவத்தை வழங்கும். டிரெய்லருக்கு நீங்கள் அளித்த வரவேற்பைப் பார்த்து நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ளோம்.


டிரெய்லர் உங்களுக்கு பிடித்திருக்கிறதா? அதேபோல் படம் முழுவதும் உங்களை கவரும் என்று நம்புகிறேன். அனைவரும் குடும்பத்துடன் திரையரங்குகளுக்கு வந்து ‘நாகபந்தம்’ திரைப்படத்தை பார்த்து ஆதரவு அளிக்க வேண்டும். உங்கள் அனைவரையும் திரையரங்குகளில் சந்திக்க ஆவலுடன் காத்திருக்கிறேன். நன்றி.”




நடிகர் விராட் கர்ணா பேசியதாவது…


“அனைவருக்கும் வணக்கம். இன்று ‘நாகபந்தம்’ திரைப்படத்தின் புரமோஷனுக்காக இங்கு வந்திருப்பதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள ஊடக நண்பர்கள், படக்குழுவினர் மற்றும் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.


இந்த நிகழ்வில் கலந்து கொண்டுள்ள அனைவருக்கும் நன்றி. குறிப்பாக எங்கள் தயாரிப்பாளர்கள் மற்றும் இந்தப் படத்தை உருவாக்கிய அனைவருக்கும் என் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.


இன்றைய காலகட்டத்தில் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை ஆன்மிகம் மற்றும் பக்தி சார்ந்த விஷயங்களில் அதிகமாக ஈடுபட ஊக்குவித்து வருகிறார்கள். ஏனெனில் அது மனதிற்கும் உடலுக்கும் அமைதியையும் சக்தியையும் அளிக்கிறது. ‘நாகபந்தம்’ திரைப்படத்தில் பணியாற்றிய அனுபவமும் எனக்குள் பல மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் படத்தை முடித்த பிறகு நான் ஆன்மிக ரீதியாகவும், மனதளவிலும் மிகவும் வலிமையாக உணர்கிறேன்.


இந்தப் படம் இந்திய கலாச்சாரம், பாரம்பரியம், தைரியம், கோவில்களின் மரபு மற்றும் நமது தொன்மையான நாகரீகத்தின் பல அம்சங்களை பேசுகிறது. நம் நாட்டின் வரலாறு மற்றும் ஆன்மிக மரபுகளை புதிய தலைமுறைக்கு கொண்டு செல்லும் ஒரு முயற்சியாக இந்தப் படம் இருக்கும்.


‘நாகபந்தம்’ திரைப்படத்தில் நான் ‘ருத்ரா’ என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். ஒரு அறிமுக நடிகராக இந்த வாய்ப்பு எனக்கு மிகவும் முக்கியமானது. இந்தக் கதாபாத்திரத்திற்காக நான் முழு அர்ப்பணிப்புடன் உழைத்துள்ளேன். டிரெய்லருக்கு நீங்கள் அளித்த வரவேற்பு எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்துள்ளது.


வரும் ஜூலை 3 ஆம் தேதி திரைப்படம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. டிரெய்லருக்கு நீங்கள் கொடுத்த அதே அன்பையும் ஆதரவையும் படத்திற்கும் வழங்குவீர்கள் என்று நம்புகிறேன்.


நான் கொஞ்சம் பதட்டமாக இருப்பதால் ஏதாவது தவறாக பேசியிருந்தால் மன்னித்துக் கொள்ளுங்கள். சென்னை மக்களின் அன்பிற்கும் ஆதரவிற்கும் என் மனமார்ந்த நன்றிகள்.


தமிழக விநியோகஸ்தர் முருகன் பேசியதாவது..,


“கலைஞர்கள், பத்திரிக்கை மற்றும் ஊடக நண்பர்கள், திரையுலக பிரபலங்கள், ரசிகர்கள் என இந்த நிகழ்வில் கலந்து கொண்ட அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.


எங்கள் ‘நாகபந்தம்’ திரைப்படத்திற்கு நீங்கள் தொடர்ந்து அளித்து வரும் அன்பும் ஆதரவும் எங்களுக்கு மிகப்பெரிய உற்சாகத்தை அளிக்கிறது. இந்த நிகழ்வில் பங்கேற்று சிறப்பித்த அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை நன்றி, நன்றி, நன்றி.



இப்படத்தில் நாபா நடேஷ், ஐஸ்வர்யா மேனன் ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். மேலும் ஜெகபதி பாபு, ஜெயபிரகாஷ், முரளி சர்மா, பி.எஸ். அவினாஷ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.



சௌந்தர் ராஜன் எஸ் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு அபே இசையமைத்துள்ளார். கல்யாண் சக்ரவர்த்தி வசனம் எழுதியுள்ள நிலையில், சந்தோஷ் காமிரெட்டி படத்தொகுப்புப் பணிகளை மேற்கொண்டுள்ளார். கலை இயக்குநர் அசோக் குமார் பிரம்மாண்டமான செட் வடிவமைப்புகளை உருவாக்கியுள்ளார். மேலும் தாய்லாந்தைச் சேர்ந்த பிரபல ஸ்டண்ட் மாஸ்டர் கெச்சா காம்பக்டீ ஆக்சன் காட்சிகளை வடிவமைத்துள்ளார்.


கிஷோர் அன்னபுரெட்டி மற்றும் நிஷிதா நாகிரெட்டி தயாரிப்பில் உருவாகியுள்ள “நாகபந்தம்” திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் பான்-இந்தியா திரைப்படமாக வெளியாகவுள்ளது.


இப்படம் வரும் ஜூலை 3 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளொல் வெளியாகிறது.

சாம் சி எஸ் இசையில் ரசிகர்களை முணுமுணுக்க வைக்கும் “லவ் யூ லவ் யூ காட்டேரி” பாடல் வெளியீடு!*


 *சாம் சி எஸ் இசையில் ரசிகர்களை முணுமுணுக்க வைக்கும் “லவ் யூ லவ் யூ காட்டேரி” பாடல் வெளியீடு!*


இசையமைப்பாளர் Sam C. S. தொடர்ந்து வித்தியாசமான இசை அனுபவங்களை வழங்கி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வரும் நிலையில், தற்போது AK Film Factory சார்பில் Arunkumar Dhanasekaran தயாரிப்பில், ஜிவி பிரகாஷ், கயாடு லோஹர் நடிப்பில், அறிமுக இயக்குநர் மாரியப்பன் சின்னா இயக்கத்தில் உருவாகும் 'இம்மார்டல்' (Immortal) திரைப்படத்திலிருந்து வெளியாகியுள்ள “லவ் யூ லவ் யூ காட்டேரி” பாடல் இசை ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.


ஃபேண்டஸி திரில்லர் ஜானரில் உருவாகி வரும் இப்படத்திற்கு இசையமைத்துள்ள சாம் சி எஸ், இந்தப் பாடலில் தனது தனித்துவமான இசை பாணியை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளார். கேட்டவுடன் மனதில் பதியும் மெலடி, டார்க் தீமில் வடிவமைக்கப்பட்ட இசை அமைப்பு மற்றும் புதுமையான சவுண்ட் டிசைன் ஆகியவை பாடலுக்கு தனி அடையாளத்தை வழங்குகின்றன.


இந்தப் பாடலை சாம் சி எஸ் மற்றும் Reshma Shyam இணைந்து பாடியுள்ளனர். பாடல் வரிகளை Shali C எழுதியுள்ளார். காதலியை ஒரு “காட்டேரி”யாக கற்பனை செய்து வர்ணிக்கும் இந்தப் பாடல், வழக்கமான காதல் பாடல்களிலிருந்து முற்றிலும் மாறுபட்ட அனுபவத்தை வழங்குகிறது.


சிவப்பு நிற பின்னணியில், டார்க் விஷுவல் டோனில், அழகான நடன அசைவுகளுடன் பாடல் படமாக்கப்பட்டுள்ளது. இசை, காட்சிகள், நடனம் ஆகிய மூன்றும் ஒன்றோடொன்று கலந்த விதம் பாடலின் ஈர்ப்பை மேலும் அதிகரிக்கிறது. குறிப்பாக இளைஞர்களை கவரும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்தப் பாடல், வெளியான குறுகிய நேரத்திலேயே சமூக வலைதளங்களில் கவனம் பெற்று வருகிறது.


இசை என்பது கதையின் உணர்வுகளை ரசிகர்களிடம் கொண்டு சேர்க்கும் மொழி என்பதை பலமுறை நிரூபித்துள்ள சாம் சி எஸ், இந்தப் பாடலிலும் புதுமையான மெலடி மற்றும் நவீன இசை அமைப்பின் மூலம் ரசிகர்களை கவர்ந்துள்ளார். பாடல் முடிந்த பிறகும் அதன் தாளம் மற்றும் மெலடி மனதில் நீடிக்கும் வகையில் அமைந்துள்ளது.


🔗https://youtu.be/-vlnhbtkyhw?si=X-_vwXntJsEkWFP5

டன்ஸ்டன் இண்டர்நேஷ்னல் நடத்திய குறும்பட போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு விருது வழங்கும் விழா! - திரையுலக பிரபலங்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது

 டன்ஸ்டன் இண்டர்நேஷ்னல் நடத்திய குறும்பட போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு விருது வழங்கும் விழா! - திரையுலக பிரபலங்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது



திரையரங்க கேண்டீனில் தின்பண்டங்களை அதிக விலைக்கு விற்பதை கட்டுப்படுத்த வேண்டும் - முதல்வர் விஜய்க்கு கோரிக்கை வைத்த இயக்குநர் பேரரசு


சினிமா போல் சிறந்த தொழில் எதுவும் இல்லை - டன்ஸ்டன் குறும்பட போட்டி விருது வழங்கும் விழாவில் இயக்குநர் பேரரசு பேச்சு


குறும்படங்கள் எடுப்பது சாதாரண விசயம் இல்லை - டன்ஸ்டன் குறும்பட போட்டி விருது வழங்கும் விழாவில் ஆர்.கே.செல்வமணி பேச்சு


துஷாந் தன் பிறந்தநாளை குறும்பட தினமாக கொண்டா வேண்டும் - டன்ஸ்டன் குறும்பட போட்டி விருது வழங்கும் விழாவில் இயக்குநர் சுப்பிரமணிய சிவா வலியுறுத்தல்


குறும்பட இயக்குநர்களின் முன்னோடி, குரு என்றால் அது ஆர்.கே.செல்வமணி சார் தான் - டன்ஸ்டன் குறும்பட போட்டி விருது வழங்கும் விழாவில் இயக்குநர் பாண்டிராஜ் பேச்சு


தயாரிப்பாளர் சங்கமும், பெப்ஸியும் இணைந்து பல நல்ல திட்டங்களை உருவாக்கி வருகிறது - டன்ஸ்டன் குறும்பட போட்டி விழாவில் ஜி.கே.எம். தமிழ் குமரன் தகவல்



டன்ஸ்டன் இண்டர்நேஷ்னல் நிறுவனத்தின் தலைவர், தயாரிப்பாளர் மற்றும் நடிகருமான துஷாந் குறும்பட போட்டி ஒன்றை நடத்தினார். சுமார் 500-க்கும் மேற்பட்ட குறும்படங்கள் பங்கேற்ற இதில், சிறந்த 10 குறும்படங்கள் தேர்வு செய்யப்பட்டு, அதில் மூன்று பேருக்கு முதல் மூன்று பரிசு மற்றும் காசோலை வழங்கப்பட்டது. மேலும், ஒளிப்பதிவு, இசை, நடிப்பு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் சிறப்பாக செயல்பட்டவர்களுக்கு விருது வழங்கப்பட்டது.


குறும்பட போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்ற மற்றும் சிறப்பு பிரிவில் தேர்வு பெற்ற அனைவருக்கும் சான்றிதழ், நினைவு பரிசு, பதக்கம் ஆகியவை வழங்கி கெளரவிக்கப்பட்டது. 


இந்த நிகழ்வில் பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி, திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் ஜி.கே.எம்.தமிழ் குமரன், இயக்குநர்கள் பேரரசு, சுப்பிரமணிய சிவா, பாண்டிராஜ், கணேஷன், நடிகைகள் அஸ்மிதா, ஷியமளா, ஸ்டண்ட் யூனியன் தலைவர் டான் அசோக் உள்ளிட்ட ஏராளமான திரையுலக பிரபலங்கள் கலந்து கொண்டு குறும்பட இயக்குநர்களுக்கு விருது வழங்கி கெளரவித்தனர்.


நிகழ்ச்சியில் வரவேற்புரை நிகழ்த்திய துஷாந், “இந்த குறும்பட போட்டி விருது வழங்கும் விழாவுக்கு வந்திருக்கும் திரையுலக பிரபலங்கள் மற்றும் பத்திரிகையாளர்களுக்கு நன்றி. உங்களை வருக வருக என்று வரவேற்கிறேன்.” என்றார்.


இயக்குநரும், தயாரிப்பாளருமான கணேஷன் பேசுகையில், “நான் திரைப்படத்துறையில் 35 ஆண்டுகளாக இருக்கிறேன். ‘தர்பார்’ வெற்றி விழாவில் பாராட்டு தெரிவிப்பதற்காக என்னை அழைத்த போது, அந்த நிகழ்ச்சியில் லைகா நிறுவனர் சுபாஷ்கரனிடம் கோரிக்கை ஒன்றை வைத்தேன். அதாவது, ரூ.100 கோடி, 200 கோடி என்று பெரிய பட்ஜெட்டில் படம் தயாரிக்கும் நீங்கள் ரூ.3 கோடி, ரூ.5 கோடியிலும் படம் தயாரிக்க வேண்டும், அப்படி தயாரித்தால் திறமை மிக்க இளைஞர்கள் மற்றும் புதிய சிந்தனை உள்ளவர்கள் சினிமாவுக்கு வருவார்கள், சினிமாத்துறையும் வளர்ச்சி அடையும் என்றேன். ஆனால், அவர்கள் அதை கேட்காமல், தொடர்ந்து பெரிய பட்ஜெட்டில் தான் படம் தயாரித்தார்கள். அதேபோல், ஈழத்தில் இருந்து பணத்துடன் வருபவர்களை இங்கே சிலர் ஏமாற்றி விடுகிறார்கள். ஒரு சில இயக்குநர்கள் பணத்துடன் வரும் ஈழத் தமிழர்களை ஏமாற்றி, அவர்களை துண்ட காணோம், துனிய காணோம் என்று ஓட வைத்து விடுவார்கள். இப்படி ஒரு சூழ்நிலையில் தம்பி துஷாந் சிறு சிறு அடியாக எடுத்து வைத்து வருகிறார். அவரை நான் பல வருடங்களாக அறிவேன், அவரது இத்தகைய நிதானமான முன்னேற்றம் அவரை மிகப்பெரிய இடத்திற்கு அழைத்துச் செல்லும்.


படம் தயாரிப்பதோடு இல்லாமல் இப்படி ஒரு பிரமாண்டமான குறும்பட போட்டி நடத்தி விருது வழங்கும் விழாவை நடத்தி அனைவரையும் வியக்க வைத்து விட்டார். அவர் இந்த குறும்பட போட்டியை தொடர்ந்து நடத்த வேண்டும், பல படங்களை தயாரிக்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன். மைக்ரோ பட்ஜெட்டில் கதை வைத்திருந்தால் என்னை அனுகலாம் நான் படம் தயாரிக்க தயாராக இருக்கிறேன். அதேபோல், புதிதாக படம் இயக்குபவர்களுக்கு எந்தவித சம்பளமும் இன்றி உதவி இயக்குநராக பணியாற்றவும் தயாராக இருக்கிறேன். சினிமா பற்றிய சந்தேகங்கள் மற்றும் விபரங்கள் தெரிந்துக் கொள்ள வேண்டும் என்றால் என்னை தாராளமாக தொடர்பு கொள்ளும் உங்களுக்கு உதவி செய்ய தயாராக இருக்கிறேன்.” என்றார்.


நடிகர் முருகானந்தம் பேசுகையில், ”இப்படி ஒரு சிறப்பான நிகழ்ச்சி நடக்கும் இந்த நாள் இதன் ஒருங்கிணைப்பாளர் துஷன்ந்தின் பிறந்தநாளாகும். பிறந்தநாளன்று ஆதரவற்றோர் இல்லத்தில் உணவு வழங்குவது, கேக் வெட்டி கொண்டாடுவது என்று அனைவரும் செய்வார்கள். ஆனால், துஷாந் அவரது பிறந்தநாளில் இப்படி ஒரு குறும்பட போட்டியை நடத்தி பலரின் எதிர்காலத்திற்கு உறுதுணையாக இருக்கிறார். இதுபோல் அவரது பிறந்தநாளில் நல்ல விசயங்களை செய்வார் என்றால், ஆண்டுக்கு நான்கு பிறந்தநாள் கூட அவர் கொண்டாடலாம் தவறில்லை. 


பொதுவாக பிள்ளைகள் நல்லவர்களாக இருந்தால் அவர்களது பெற்றோரை பாராட்டுவோம். திருமணத்திற்குப் பிறகு மனைவியை தான் பாராட்ட வேண்டும். அப்படி தான் நான் துஷன்ந்த் மனைவியிடம் உங்கள் கணவரை நன்றாக வளர்த்திருக்கிறீர்கள், என்று கூறினேன். அந்த அளவுக்கு அவர் மிக சிறந்த மனிதராக இருக்கிறார். அவரது இந்த முயற்சி பலரது எதிர்காலத்திற்கு பெரும் உதவியாக இருக்கும். நான் உதவி இயக்குநராக சேருவதற்கு மிகவும் கஷ்ட்டப்பட்டிருக்கிறேன். அப்போது எங்கள் திறமையை வெளிக்காட்டுவதற்கான தளங்கள் இல்லை, மேடை கிடைக்காது. ஆனால், இங்கிருப்பவர்களுக்கு இந்த குறும்பட போட்டி மூலம் சிறப்பான மேடை கிடைத்திருக்கிறது. இதை பயன்படுத்தி நீங்கள் அனைவரும் அடுத்தக் கட்டத்திற்கு செல்ல வேண்டும், என்று வாழ்த்துகிறேன்.” என்றார்.


இயக்குநர் சுஜித் பேசுகையில், “துஷாந் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். அவர் இப்படி ஒரு குறும்பட போட்டி நடத்தியதற்கு பாராட்டுகள். இங்கிருக்கும் இளைஞர்கள் இப்படி ஒரு குறும்பட போட்டியை சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அடுத்த வெற்றி விழாவில் உங்களை மீண்டும் சந்திக்கிறேன், வாழ்த்துகள்.” என்றார்.


நடிகர் திலீபன் பேசுகையில், “துஷாந்தை நான்கு வருடங்களுக்கு முன்பே எனக்கு தெரியும். அவர் ஒரு படம் தயாரித்து, ஹீரோவாக நடித்தார். அந்த படத்தில் நான் நடித்தேன், மிக சிறப்பாக வந்தது. அவர் கதைக்கு எது தேவையோ, எவ்வளவு செலவு செய்ய வேண்டுமோ அதை சரியாக செய்யக்கூடியவர். இலங்கையில் பிறந்து, லண்டனில் பணியாற்றி இப்போது தமிழ் சினிமாவில் நமக்காக வந்திருக்கிறார். தமிழ் சினிமாவுக்கு கிடைத்த சிறந்த தயாரிப்பாளர் அவர். சமீபத்தில் ஒரு மிகப்பெரிய அலுவலகம் போட்டு டன்ஸ்டன் இண்டர்நேஷ்னல் என்ற நிறுவனத்தை தொடங்கினார். அதற்கு என்னை அழைத்த போதே, பெரிய அளவில் ஏதோ செய்யப் போகிறார், என்று நினைத்தேன். அதன்படி, இப்படி ஒரு மிகப்பெரிய குறும்பட போட்டியை நடத்தியிருக்கிறார். இந்த போட்டி பலருக்கு மிகப்பெரிய வாழ்க்கையை தரப்போகிறது என்று தான் சொல்ல வேண்டும்.


எங்களது காலக்கட்டத்தில் படப்பிடிப்பு தளத்தில் தான் கேமராவையே பார்க்க முடியும், மற்றபடி இப்போது இருப்பது போல் சிறிய அளவிலான கேமராவை பயன்படுத்தி படப்பிடிப்பு நடத்த முடியாது. ஆனால், இப்போது உள்ள தலைமுறையினருக்கு இதுபோன்ற குறும்பட போட்டிகள் அவர்களது திறனை வெளிப்படுத்துவதற்கான தளமாக அமைந்திருக்கிறது. எனவே இதை சரியாக பயன்படுத்தி அடுத்தக்கட்டத்திற்கு செல்ல வேண்டும். இதுபோன்ற போட்டியில் பரிசு பெறுவது வெற்றி அல்ல, பங்கேற்பதே மிகப்பெரிய வெற்றி தான். எனவே, இதில் பங்கேற்ற அனைவரும் நல்ல திரைப்படங்கள் இயக்கி இயக்குநராக வெற்றி பெற வேண்டும், என்று வாழ்த்துகிறேன்.” என்றார்.


விமல் ராம்போ பேசுகையில், “துஷன்ந்த் சாருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். முதல் முறையாக குறும்பட போட்டியில் பங்கேற்றவர்கள், இதை சரியாக பயன்படுத்தி நல்ல நிலைக்கு வர வேண்டும். உங்களது படைப்பின் மூலம் நீங்களும் நன்றாக இருக்க வேண்டும், நாங்களும் நன்றாக இருக்க வேண்டும், நன்றி.” என்றார்.


நடிகர் முல்லை பேசுகையில், “வருங்கால இயக்குநர்கள் அனைவருக்கும் வணக்கம். இந்த குறும்பட போட்டியில் சுமார் 500-க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றுள்ளார்கள், அதில் 10 பேர் தேர்வாகி அவர்களில் மூன்று பேருக்கு பரிசு வழங்கப்பட இருக்கிறது. இருந்தாலும் இங்கிருக்கும் அனைவரும் இயக்குநர்கள் தான், உங்களது படத்தில் எங்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இந்த நிகழ்வை பார்க்கும் போது எனக்கு அப்துல் கலாம் மற்றும் பாரதியார் தான் நினைவுக்கு வருகிறார்கள். அப்துல் கலாம் கனவு காணுங்கள் என்று சொன்னார். நீங்கள் கனவு கண்டுள்ளீர்கள். பாரதியார் கனவு மெய்ப்பட வேண்டும் என்று சொன்னார். உங்களது கனவை இந்த குறும்பட போட்டி மூலம் துஷாந் சார் மெய்ப்பட வைத்திருக்கிறார். சினிமா தான் மதம் உள்ளிட்ட எந்தவித வேற்றுமையும் பார்க்காது, அப்படி இங்கு அனைவரும் ஒன்றாக கூடியிருக்கிறோம், நிச்சயம் நீங்கள் இந்த குறும்பட போட்டி மூலம் நல்ல இடத்திற்கு செல்வீர்கள், வாழ்த்துகள்.” என்று கூறி ஒரு பாடலையும் பாடினார்.


நடிகை அஸ்மிதா பேசுகையில், “துஷாந் சாருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். இந்த குறும்பட போட்டியில் பங்கேற்றவர்களுக்கும், விருது பெற்றவர்களுக்கும் வாழ்த்துகள். மிக சிறப்பான நிகழ்ச்சி, இதற்காக கடினமாக உழைத்த அனைவரையும் கைதட்டி பாராட்ட வேண்டும், என்று கேட்டுக்கொள்கிறேன்.” என்றார்.


நடிகை ஷியமளா தத்தராஜ் பேசுகையில், “துஷாந் சாருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். நான் ஐந்து தமிழ்ப் படங்களில் நடித்திருக்கிறேன். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கும் வாய்ப்பளித்ததற்கு நன்றி. இந்த குறும்பட போட்டியில் பங்கேற்ற மற்றும் வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துகள். இவ்வளவு பெரிய நிகழ்ச்சியை வெற்றிகரமாக நடத்திய அனைவருக்கும் வாழ்த்துகள். இந்த நிகழ்ச்சியின் மூலம் துஷன்ந்த் சார் மிகப்பெரிய வெற்றி பெற வேண்டும், அவரது வெற்றி தொடர வேண்டும், என்று வாழ்த்துகிறேன்.” என்றார்.


இயக்குநரும் நடிகருமான பேரரசு பேசுகையில், “இன்று ஒரு முக்கியமான நாள், எங்கள் விஜய், உங்கள் விஜய்க்கு பிறந்தநாள். நடிகராக அவர் பல பிறந்தநாளை கொண்டாடியிருக்கிறார். ஆனால், முதல்வராக கொண்டாடும் முதல் பிறந்தநாள் இது. இன்றைய நாளில் துஷாந்தும் பிறந்தநாள் கொண்டாடுவது சிறப்பு. விஜய் தனது ஒவ்வொரு பிறந்தநாளிலும் அவர் பிறந்த மருத்துவமனைக்கு சென்று, அன்றைய தினம் பிறந்த குழந்தைகளுக்கு மோதிரம் பரிசு வழங்குவார். எனவே இன்று பிறந்தநாள் காணும் துஷன்ந்துக்கு இந்த குறும்பட விழா மோதிரமாக அமைந்திருக்கிறது. விஜயிடம் கதை சொல்லி ஓகே ஆகிவிட்டால், மூன்று கண்டிஷன் போடுவார். ஒன்று, ஞாயிற்றுக்கிழமையில் படப்பிடிப்பு வைக்க கூடாது, இரண்டு மாலை 6 மணிக்கு மேல் படப்பிடிப்பு இருக்க கூடாது, அப்படி இரவு படப்பிடிப்பு இருந்தால் மறுநாள் படப்பிடிப்பு வைக்க கூடாது, மூன்று என் பிறந்தநாளில் படப்பிடிப்பு இருக்க கூடாது, என்பார். காரணம், ஒவ்வொரு பிறந்தநாளிலும் தன் ரசிகர்களை சந்திக்க வேண்டும் என்பதற்காக தான் அவர் இந்த கண்டிஷனை போடுவார். அவர்களால் தான் இந்த நிலையில் நான் இருக்கிறேன், எனவே அவர்களை மறக்க கூடாது என்பதால் அவர்களுக்காக என் பிறந்தநாளை ஒதுக்கி வைக்க வேண்டும் என்ற அவரது அந்த எண்ணம் தான் இன்று தமிழக முதல்வர் சிம்மாசனத்தில் உட்கார வைத்திருக்கிறது.


இப்படி ஒரு குறும்பட போட்டியை நடத்தி பலருக்கு வாய்ப்பு ஏற்படுத்தி கொடுத்திருக்கும் துஷாந்துக்கு என் பாராட்டுகளும், நன்றியும். எங்கள் காலத்தில் ஒரு தயாரிப்பாளரிடம் கதை சொல்ல நேரம் வாங்குவதே பெரிய விசயமாக இருக்கும். இங்கு பேசியவர்கள் உதவி இயக்குநராக இருக்கும் போது எதிர்கொள்ளும் கஷ்ட்டங்களை சொன்னார்கள், நான் சொன்னால் அதற்கே பத்து நாட்கள் ஆகும். கஷ்ட்டங்களை தாண்டி நிறைய அவமானங்களை சந்திக்க வேண்டி இருக்கும். கதை சொல்ல நேரம் தர மாட்டார்கள், அப்படியே தந்தாலும் மதிக்க மாட்டார்கள், நிற்க வைத்து கதை கேட்பார்கள். நான் அப்படி பல சூழ்நிலைகளை சந்தித்திருக்கிறேன். ஆனால், உங்களுக்கு அப்படி இல்லை, துஷாந் ஏற்படுத்திய இந்த மேடை மூலம் நீங்கள் எதிர்காலத்தில் நல்ல இயக்குநராகவோ, உதவி இயக்குநராகவோ பயணிக்க போகிறீர்கள். எனவே துஷன்ந்தின் இந்த முயற்சி வரவேற்க வேண்டியது, இது தொடர்ந்து நடக்க வேண்டும்.


துஷாந் தங்க முட்டை போடும் வாத்து, அவர் வயிற்றை கிழிப்பது போன்ற சம்பவங்கள் இங்கு நடக்க கூடாது. அவர் கொஞ்சம் உஷாராக தான் இருக்கிறார், மிக தெளிவாக இருக்கிறார். அதனால் தான் தன்னிடம் கதை சொல்ல வருபவர்களிடம், இது தான் பட்ஜெட் என்று முதலிலேயே சொல்லி, அதற்கு ஏற்றவாறு கதை இருந்தால் சொல்லுங்கள் என்று சொல்கிறார். அப்படி குறிப்பிட்ட ஒரு பட்ஜெட்டில் எடுத்தால் அதை எப்படியாவது வியாபரமாக்கி போட்ட பணத்தை எடுத்து விடலாம். அப்படியே எதாவது நடந்தால் மூழ்கிவிடாமல் சமாளித்துக் கொள்ள முடியும். இந்த தெளிவு துதுஷாந்திடம் இருப்பதால் அவரை யாரும் ஏமாற்ற முடியாது. சினிமா போல் ஒரு சிறந்த தொழில் எதுவுமில்லை. இங்கு இயக்குநர்கள், மேனேஜர்கள், திரையரங்க உரிமையாளர்கள், திரையரங்க டிக்கெட் கிழிப்பவர்கள் என பலர் நேர்மையாக இருந்தால் எந்த தயாரிப்பாளருக்கும் நஷ்ட்டம் என்பதே வராது. நூறு பேர் நேர்மை இல்லாதவர்களாக இருப்பதால் தான் தயாரிப்பாளர்கல் பலர் நஷ்ட்டமடைகிறார்கள். புதிதாக வரும் தயாரிப்பாளர்கள் படம் தயாரிக்கும் போது எதுவும் தெரியாமல் வருகிறார்கள், படம் முடியும் போது தான் சினிமா பற்றி தெரிந்துக் கொள்கிறார்கள். இப்படிப்பட்ட தயாரிப்பாளர்கள் நஷ்ட்டம் அடைவதோடு, மன உளைச்சலுக்கும் ஆளாகி அவதிப்படுகிறார்கள். துஷாந் அப்படி இல்லாமல் மிக தெளிவான முறையில் படங்களை தயாரிக்க திட்டமிட்டிருக்கிறார், அவர் மூலம் பலருக்கு வாய்ப்பு கிடைக்கும். இந்த குறும்பட மேடையில் இருப்பவர்களை பார்க்கும் போது பெருமையாக இருக்கிறது, நிச்சயம் இவர்கள் எதிர்காலத்தில் நல்ல இயக்குநர்களாக வருவார்கள், வாழ்த்துகிறேன்.


இந்த மேடையில் முதல்வர் விஜய்க்கு ஒரு கோரிக்கை வைக்கிறேன். இன்று கோவில்களில் விற்கப்படும் தின்பண்டங்களில் அச்சிடப்பட்ட விலைக்கு தான் விற்பனை செய்ய வேண்டும், கூடுதல் விலைக்கு விற்க கூடாது என்று அரசு உத்தரவிட்டிருக்கிறது. அதுபோல் திரையரங்கு கேண்டீன்களிலும் தின்பண்டங்கள் விற்பனையில் கட்டுப்பாடு போட வேண்டும். நிர்ணயிக்கப்பட்ட விலையை விட 20 ரூபாய் கூடுதலாக விற்கலாம், 50 ரூபாய் பொருளை 70 ரூபாய்க்கு விற்கலாம், ஆனால் 250 ரூபாய்க்கு விற்பது சரியில்லை. இதனால் தான் மக்கள் குடும்பத்துடன் திரையரங்கிற்கு வர பயப்படுகிறார்கள். டிக்கெட் விலை சரியாக தான் இருக்கிறது, ஆனால் திரையரங்கில் விற்கப்படும் உணவு வகைகளின் விலை தான் அதிர்ச்சியளிக்கும் வகையில் இருக்கிறது. கோவில்களுக்கு கட்டுப்பாடு விதித்தது போல், திரையரங்க கேண்டீன் உணவு விற்பனைக்கும் முதல் விஜய் தலைமையிலான தமிழக அரசு கட்டுப்பாடு விதிக்க வேண்டும். கோவில்கள் மட்டும் உங்கள் ஆட்சிக்கு உட்பட்டது இல்லை, திரையரங்குகளும் உங்கள் ஆட்சிக்கு உட்பட்டது தான். எனவே, இந்த விவகாரத்தில் முதல்வர் விஜய் தலையிட்டு சரி செய்தால், சினிமா தொழில் வளரும், சிறிய முதலீட்டு படங்களும், அதன் தயாரிப்பாளர்களும் வெற்றி பெறுவார்கள். விஜயும் ஆரம்பத்தில் சிறு சிறு படங்களில் நடித்து வந்தவர் தான், அதனால் அவருக்கு சிறு முதலீட்டு தயாரிப்பாளர்களின் கஷ்ட்டம் புரியும். எனவே, இந்த பிரச்சனைக்கு முதல்வர் விஜய் விரைவில் நல்ல முடிவு எடுக்க வேண்டும், என்று கேட்டுக்கொள்கிறேன்.


இந்த நிகழ்ச்சியில் தேர்வான சில குறும்படங்களை பார்த்தேன், மிக சிறப்பாக இருந்தது. பிள்ளைகள் ஒழுக்கமாக வளர வேண்டும் என்றால் தந்தை என்ன செய்ய வேண்டும், என்ற விசயத்தை அருமையாக ஒரு படத்தில் சொல்லியிருந்தார்கள். இப்படி பல குறும்படங்கள் என்னை ஆச்சரியப்படுத்தியது. குறும்படங்கள் சாதாரணமானது அல்ல, நெருப்பு போன்றது அதை வைத்து சமூகத்திற்கு பல நல்ல விசயங்களை சொல்லலாம். எனவே, இந்த நிகழ்வில் பங்கேற்றுள்ளவர்கள் எதிர்காலத்தில் பல நல்ல படங்களை இயக்குவார்கள் என்ற நம்பிக்கை இருகிறது. துஷாந் இவர்களின் திறமையை வெளிப்படுத்த மேடை அமைத்துக் கொடுத்ததோடு, இவர்களில் நல்ல கதை வைத்திருப்பவர்களுக்கு படம் இயக்க வாய்ப்பும் கொடுக்க இருக்கிறார். அவர் ஆர்.பி.செளத்ரி சார் போல் பல புதிய இயக்குநர்களை அறிமுகப்படுத்தி, தமிழ் சினிமாவில் பெரிய தயாரிப்பாளராக வளர வேண்டும், இந்த குறும்பட போட்டியும் ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக நடைபெற வேண்டும், என்று வாழ்த்துகிறேன்.” என்றார்.


இயக்குநரும் நடிகருமான சுப்பிரமணிய சிவா பேசுகையில், “துஷாந் அவரது பிறந்தநாளில் மிக சிறந்த விசயத்தை செய்திருக்கிறார். இந்த குறும்பட போட்டி பலரது கனவை நிறைவேற்றப் போகிறது. இந்த நிகழ்ச்சியை துஷன்ந்த் ஒவ்வொரு ஆண்டும் செய்து, அவரது பிறந்தநாளை குறும்பட தினமாகவே கொண்டாட வேண்டும், அப்படி செய்தால் நல்லது தான், பலருக்கு வாய்ப்பு கிடைக்கும். வைரமுத்து சார் ஒரு நிகழ்ச்சியில் பேசும் போது, “கண்ணே கொஞ்ச மறைமுகம் தேவை, கப்பல் ஒதுங்க துறைமுகம் தேவை, வாழ்க்கையில் முன்னேற நல்ல மனிதர்களின் அறிமுகம் தேவை” என்று சொன்னார். அதுபோல், உங்களுக்கு துஷாந் என்ற நல்ல மனிதரின் அறிமுகம் கிடைத்திருக்கிறது. அவர் மூலம் இந்த போட்டியில் பங்கேற்ற அனைவரும் நல்ல நிலைக்கு செல்ல உள்ளீர்கள். சினிமா என்பது சாதாரண விசயம் இல்லை, கலையின் உச்சம். இப்படிப்பட்ட சினிமாவில் பயணிப்பவர்கள் கொடுத்து வைத்தவர்கள் என்று தான் சொல்ல வேண்டும். எதிர்காலத்தில் நீங்கள் உங்களது வாய்ப்புகளை பயன்படுத்தி, சமுதாயத்திற்கு நல்ல விசயங்களை சொல்லும் படங்கள் எடுக்க வேண்டும், என்று கேட்டுக்கொள்கிறேன்.” என்றார்.


பெப்ஸி தலைவர் ஆர்.கே.செல்வமணி பேசுகையில், “இதுபோன்ற குறும்பட நிகழ்ச்சிகளில் பங்கேற்பதில் நான் அதிகம் ஆர்வம் காட்டுவேன். காரணம், இதுபோன்ற ஒரு குறும்படம் மூலம் தான் நானே இயக்குநராக உங்கள் முன்பு நிற்கிறேன். நான் திரைப்படக் கல்லூரியில் படித்துக்கொண்டு இருக்கும் போதே, மணிவண்ணன் சாரிடம் உதவி இயக்குநராக பணியாற்றினேன். அப்போது ராவுத்தர் சார், விஜயகாந்த் சார் எல்லாம் பழக்கம். திரைப்படக் கல்லூரியில் படித்து முத்த உடனேயே கதை சொல்ல முயற்சித்தேன் . அப்போது ராவுத்தர் சாரை பார்த்து விஜயகாந்த் சாரிடம் கதை சொல்ல நேரம் கேட்கும் போது, அவர் இரண்டு ஆண்டுகள் கழித்து பார்க்கலாம் என்பார். பிறகு மறுபடியும் இரண்டு ஆண்டுகள் கழித்து சென்றால், அப்போது தம்பி அண்ணன் தேதி இல்லை, பிஸியாக இருக்கிறார் இரண்டு ஆண்டுகள் போகட்டும் என்பார். இப்படியே பல வருடங்கள் போய் விட்டது. இன்னும் 20 வருடங்கள் ஆனாலும் ராவுத்தர் இதை தான் சொல்வார், என்பது தெரிந்து விட்டது. உடனே நான் ஒரு குறும்படம் இயக்கிவிட்டு, அவரை சந்திக்க சென்றேன். அப்போதும், தம்பி தேதி இல்லை, என்று சொன்னார். தேதி கேட்பதற்காக வரவில்லை, குறும்படம் ஒன்று இயக்கியிருக்கிறேன், அதை பார்க்க வேண்டும் என்று சொன்னேன். அவரும் சரி என்று அந்த குறும்படத்தை பார்த்தார். பார்த்துவிட்டு மறுநாளே தம்பி அண்ணனை வைத்து ஒரு படம் பண்ணலாம், இப்பவே தொடங்கிடு என்று சொல்லி பூஜை போட்டு விட்டார். இரண்டு வருடங்களுக்கு தேதி இல்லை என்று சொன்னவர், என்னுடைய குறும்படத்தை பார்த்துவிட்டு இரண்டு வாரங்களிலேயே படத்தை தொடங்க சொல்லி விட்டார். அந்த அளவுக்கு ஒரு குறும்படம் எனக்கான அடையாளத்தையும், அங்கீகாரத்தையும் கொடுத்தது. அதனால் தான் இதுபோன்ற நிகழ்வுகளில் நான் தொடர்ந்து பங்கேற்று வருகிறேன்.


குறும்படங்கள் எடுப்பது சாதாரண விசயம் இல்லை. முழுநீள படங்கள் எடுக்கும் போது எதாவது ஒரு காட்சியை சுவாரஸ்யமாக சொன்னால் போதும். ஆனால், குறும்படங்கள் எடுக்கும் போது ஒவ்வொரு நிமிடமும் சுவாரஸ்யம் இருக்க வேண்டும். விளம்பர படங்கள் எடுக்கும் போது ஒவ்வொரு பிரேமிலும் கதை சொல்ல வேண்டும். எனவே இதுபோன்ற குறும்படங்களை சிறப்பாக எடுப்பவர்கள் நிச்சயம் நல்ல திரைப்படங்களை எடுப்பார்கள். இதில் பங்கேற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்.” என்றார்.


இயக்குநர் பாண்டிராஜ் பேசுகையில், “செல்வமணி சார் சொன்னது போல் குறும்படங்கள் எடுப்பது சாதாரண விசயம் இல்லை. முழுநீள படங்கள் எடுக்கும் போது நமக்கான நேரம் அதிகமாக இருக்கும், ஆனால் குறும்படங்களில் குறுகிய நேரத்தில் கதை சொல்ல வேண்டும் என்பது சவாலான விசயம். செல்வமணி சார் 30 ஆண்டுகளுக்கு முன்பே குறும்படம் எடுத்து அதன் மூலம் வாய்ப்பு பெற்றது ஆச்சரியமாக இருக்கிறது. பத்து ஆண்டுகளுக்கு முன்பு தான் குறும்பட கலாச்சாரம் வந்திருக்கும் என்று நினைத்தேன், ஆனால் அவர் அப்போதே அதை செய்திருக்கிறார்கள் என்றால், இப்போது குறும்படம் எடுக்கும் அனைவருக்கும் அவர் தான் முன்னோடி, அவர் தான் குரு.


நான் பல குறும்பட போட்டிகளில் நடுவராக கலந்து கொண்டிருக்கிறேன், அப்போது அங்கு பார்த்த படங்கள் என்னை ஆச்சரியப்படுத்தும். சில நிமிடங்களில் ஒரு முழுநீள படத்திற்கான கதையை சிறப்பாக சொல்வார்கள். நீங்களும் அப்படி தான் உங்களது குறும்படங்களை சிறப்பாக இயக்கியிருக்கிறீர்கள், உங்களுக்கு என் வாழ்த்துகள். இங்கு வெற்றி பெற்றவர்கள், தோல்வியடைந்தவர்கள் என்றெல்லாம் இல்லை. இங்கு ஒரு நடுவருக்கு பிடிக்காத குறும்படம், மற்றொரு போட்டியில் உள்ள நடுவருக்கு பிடிக்கும். இது அவர்களது தனிப்பட்ட தேர்வு தான். எனவே வெற்றி, தோல்வி பற்றி யோசிக்க கூடாது, இந்த போட்டியில் பங்கேற்றதே பெரிய வெற்றியாக பார்க்க வேண்டும். நிச்சயம் உங்களுக்கு சினிமாவில் நல்ல எதிர்காலம் இருக்கிறது, வாழ்த்துகள்.” என்றார்.


இசையமைப்பாளர் தினா பேசுகையில், “துஷாந்துக்கு பிறந்தநாள் வாழ்த்துகள், இந்த நாளில் இப்படி ஒரு சிறப்பான நிகழ்ச்சியை ஏற்பாடு செய்ததற்கு பாராட்டுகள். நானும் இதுபோன்ற குறும்படங்கள் மூலமாகத்தான் சினிமா வாய்ப்பு பெற்றேன். ராதிகா, விக்ரம் நடித்த டெலிபிலிம் ஒன்றுக்கு முதன் முதலில் இசையமைத்தேன். அதன் பிறகு சித்தி சீரியலில் டைடில் பாடல் போட்டேன். அதன் பிறகு தான் எனக்கு சினிமா வாய்ப்பு கிடைத்தது. எனவே நானும் உங்களைப் போல் டெலிபிலிம், சீரியல் ஆகியவற்றில் பயணித்தப் பிறகே சினிமா வாய்ப்பு பெற்றதால், நிச்சயம் இந்த குறும்படங்கள் சினிமாவில் உங்களுக்கான இடத்தை பெற்றுக் கொடுக்கும் என்று வாழ்த்துகிறேன்.” என்றார்.


தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் ஜி.கே.எம்.தமிழ் குமரன் பேசுகையில், “நண்பர் துஷாந்துக்கு பிறந்தநாள் வாழ்த்துகள், இப்படி ஒரு சிறப்பான நிகழ்ச்சியை ஏற்பாடு செய்ததற்கு பாராட்டுகள். செல்வமணி அண்ணன் சினிமா தொடர்பாக எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும் சரி, எந்த பிரச்சனையாக இருந்தாலும் சரி முதல் ஆளாக வந்து நிற்பார், நாங்களும் அப்படி தான் சினிமாவுக்காக பல நல்ல விசயங்களை செய்துக் கொண்டிருக்கிறோம். தயாரிப்பாளர்கள் சங்கமும், பெப்ஸியும் இணைந்து பல நல்ல திட்டங்களை உருவாக்கி வருகிறது. இன்னும் மூன்று ஆண்டுகளில் தமிழ் சினிமாவில் பல நல்ல திட்டங்கள் அறிமுகமாகும், அதற்காக நாங்கள் தினமும் பல்வேறு ஆலோசனை கூட்டங்களை நடத்தி வருகிறோம். தமிழ் சினிமாவில் இசையமைப்பாளர்கள், இயக்குநர்கள், என பல புதியவர்கள் அறிமுகமாக வேண்டும். அதற்கான ஒரு வழிகாட்டுதலாக இப்படி ஒரு குறும்பட போட்டியை நடத்திய துஷாந்துக்கு வாழ்த்துகள். இதை அவர் தொடர்ந்து செய்ய வேண்டும், என்று கூறி வாழ்த்துகிறேன்.” என்றார்.


************************************

ROCKING STAR YASH’S TOXIC BRINGS RAYA AND TICKET TO THE FORE IN NEW POSTER; LOCKS WEDNESDAY, 26 AUGUST 2026 WORLDWIDE RELEASE*

 *“டாக்ஸிக்” திரைப்படம் உலகளவில் ஆகஸ்ட் 26, 2026 வெளியாகிறது !!*



ராகிங் ஸ்டார் யாஷின் ‘டாக்ஸிக்’ திரைப்படம், உலகளவில் ஆகஸ்ட் 26, 2026 வெளியீடு புதிய போஸ்டருடன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு !


ராகிங் ஸ்டார் யாஷ் நடிப்பில் இந்த ஆண்டின் மிகப்பெரிய திரை அனுபவங்களில் ஒன்றாக உருவாகி வரும் ‘Toxic: A Fairy Tale for Grown-Ups’ திரைப்படம், உலகம் முழுவதும் 2026 ஆகஸ்ட் 26, புதன்கிழமை வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.


இந்த அறிவிப்புடன் வெளியிடப்பட்டுள்ள புதிய போஸ்டர், யாஷ்ஷின் இரட்டை அவதாரங்களான ராயா (Raya) மற்றும் டிக்கெட் (Ticket) ஆகிய கதாபாத்திரங்களை முன்னிறுத்தி, படத்தின் இருண்ட, ஆழமான மற்றும் பல அடுக்குகள் கொண்ட உலகத்தை ரசிகர்களுக்கு மீண்டும் ஒரு முறை அறிமுகப்படுத்துகிறது.


வழக்கமான தந்தை-மகன் உறவை கொண்டாடும் போஸ்டராக இல்லாமல், இந்த போஸ்டர் பதற்றம், அதிகாரம் மற்றும் உணர்ச்சி ரீதியான சிக்கல்களால் நிரம்பிய ஒரு உறவை சுட்டிக்காட்டுகிறது. சாதாரண ரிலீஸ் தேதி அறிவிப்பாக இல்லாமல், முரண்பட்ட உணர்வுகள், மறைந்திருக்கும் ரகசியங்கள் மற்றும் ‘டாக்ஸிக்’ உருவாக்கி வரும் பிரம்மாண்டமான உலகத்தை இது உணர்த்துகிறது. இதனால், ஏற்கனவே மிகுந்த எதிர்பார்ப்பில் இருக்கும் இந்த திரைப்படம் குறித்த ஆர்வம் மேலும் அதிகரித்துள்ளது.


2026 ஆம் ஆண்டின் முக்கிய பண்டிகைக் காலத்தை குறிவைத்து டாக்ஸிக் திரைப்படம் வெளியிடப்படுகிறது. வரமகாலட்சுமி விரதம், ஓணம், ஈத் மற்றும் ரக்ஷா பந்தன் ஆகிய பண்டிகைகளை உள்ளடக்கிய நீண்ட விடுமுறை காலத்தில் படம் வெளியாக இருப்பதால், இந்தியா மற்றும் வெளிநாட்டு சந்தைகளில் மிகப்பெரிய வரவேற்பைப் பெறும் வாய்ப்பு உருவாகியுள்ளது.


புதன்கிழமை வெளியீடு என்பதால், நீண்ட விடுமுறை வாரத்தை முழுமையாக பயன்படுத்தி, அனைத்து தரப்பு ரசிகர்களையும் சென்றடையும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. பல்வேறு மொழிகள், பிராந்தியங்கள் மற்றும் அனைத்து தரப்பினரையும் கவரும் வகையில் இந்த வெளியீடு அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இதுவரை வெளியிடப்பட்ட ஒவ்வொரு அப்டேட்டும், டாக்ஸிக் திரைப்படம் மிகப்பெரிய கனவு, பிரம்மாண்டம் மற்றும் தனித்துவமான படைப்பாற்றலுடன் உருவாகி வருவதை உறுதிப்படுத்தியுள்ளது.


இந்த திரைப்படம், தேசிய மற்றும் சர்வதேச அளவில் பாராட்டப்பட்ட இயக்குநர் கீது மோகன்தாஸ் மற்றும் ராகிங் ஸ்டார் யஷ் ஆகியோரின் முதல் கூட்டணியாகும். KVN Productions மற்றும் யாஷின் Monster Mind Creations இணைந்து தயாரிக்கும் இந்த திரைப்படம், இந்திய சினிமாவின் மிகவும் பிரம்மாண்டமான முயற்சிகளில் ஒன்றாக பார்க்கப்படுகிறது.


கன்னடம் மற்றும் ஆங்கிலத்தில் ஒரே நேரத்தில் படமாக்கப்பட்டுள்ள டாக்ஸிக், இந்திய சினிமாவுக்கு புதிய தரத்தை அமைக்கும் நோக்கத்துடன் உருவாகியுள்ளது. மேலும், கன்னடம், இந்தி, ஆங்கிலம், தெலுங்கு, தமிழ் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் திரைப்படம் வெளியாகிறது.


இந்த பிரம்மாண்ட முயற்சிக்கு மேலும் வலுசேர்க்கும் வகையில், நயன்தாரா, கியாரா அத்வானி, ஹூமா குரேஷி, ருக்மிணி வசந்த் மற்றும் தாரா சுதாரியா உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.


வெளியீட்டு கவுண்ட்டவுன் தொடங்கியுள்ள நிலையில், தற்போது அனைவரது கவனமும் டாக்ஸிக் திரைப்படத்தின் மீதும் அதன் உலகளாவிய திரையரங்கு வெளியீட்டு திட்டத்தின் மீதும் திரும்பியுள்ளது. பண்டிகை காலத்தை குறிவைத்த வெளியீடு, நாடு முழுவதும் ரசிகர்களை கவரும் வலிமை, சர்வதேச அளவில் அதிகரித்து வரும் ஆர்வம் மற்றும் ஒவ்வொரு அறிவிப்பின் மூலமும் விரிவடைந்து வரும் படத்தின் உலகம் ஆகியவை டாக்ஸிக் திரைப்படத்தை 2026 ஆம் ஆண்டின் மிக முக்கியமான திரையரங்கு வெளியீடுகளில் ஒன்றாக மாற்றியுள்ளது.


KVN Productions மற்றும் Monster Mind Creations தயாரிப்பில் உருவாகும் 'டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் கிரோன்-அப்ஸ்' ( ‘Toxic: A Fairy Tale for Grown-Ups’ ) திரைப்படம், 2026 ஆகஸ்ட் 26, புதன்கிழமை உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது


*ROCKING STAR YASH’S TOXIC BRINGS RAYA AND TICKET TO THE FORE IN NEW POSTER; LOCKS WEDNESDAY, 26 AUGUST 2026 WORLDWIDE RELEASE*


Rocking Star Yash is set to headline one of the biggest cinematic events of the year with Toxic: A Fairy Tale for Grown-Ups, as the makers officially announce the film’s worldwide theatrical release date of Wednesday, 26th August 2026. Accompanying the announcement is a striking new poster featuring Yash’s dual avatars, Raya and Ticket, offering audiences a fresh glimpse into the film’s dark, immersive and layered world. Far removed from a conventional celebration of fatherhood, the poster hints at a relationship steeped in tension, power and emotional complexity. Rather than a standard release-date reveal, it teases a story driven by conflicting emotions, hidden dynamics and the larger-than-life world that Toxic continues to build, further fuelling anticipation around one of the most awaited films of the year.


The release strategically positions Toxic in a strong festive corridor in 2026. Arriving on Wednesday, 26th August 2026, the film is poised to capitalise on an extended holiday window that encompasses Varamahalakshmi, Onam, Eid and Raksha Bandhan. The mid-week release allows Toxic to maximise its opening run across the festive period, benefiting from heightened audience engagement in both domestic and international markets. The timing creates an ideal launch pad for a large-scale cinematic event, enabling the film to reach audiences across regions, languages and demographics.


With every asset unveiled so far, Toxic has continued to establish itself as a project driven by ambition, scale and a distinctive creative vision. The film marks the first collaboration between highly acclaimed filmmaker Geetu Mohandas and Rocking Star Yash, bringing together two powerful creative forces, backed by KVN Productions and Yash’s Monster Mind Creations, in what promises to be one of Indian cinema’s most ambitious ventures. Shot simultaneously in Kannada and English, Toxic underscores its aspirations to set a new benchmark for Indian cinema while being designed for audiences across markets. The film will release in Kannada, Hindi, English, Telugu, Tamil and Malayalam, further amplifying its reach. Complementing this vision is a formidable ensemble cast featuring Nayanthara, Kiara Advani, Huma Qureshi, Rukmini Vasanth and Tara Sutaria.


As the countdown to release begins, all eyes are now on Toxic and the scale of its theatrical rollout. With a strategic festive release corridor, a mid-week launch designed to maximise the holiday period, strong pan-India appeal, growing international interest and a world-building exercise that continues to intrigue audiences with every reveal, the film is poised to emerge as one of the most significant theatrical releases of 2026.


Produced by KVN Productions and Monster Mind Creations, Toxic: A Fairy Tale for Grown-Ups is set for a worldwide theatrical release on Wednesday, 26th August 2026.

இரண்டு மணி நேரம் குடும்பத்துடன் ஜாலியாக ரசிக்கலாம்; கான் சிட்டி அப்படிப்பட்ட படம்” – அர்ஜுன் தாஸ்*

 *இரண்டு மணி நேரம் குடும்பத்துடன் ஜாலியாக ரசிக்கலாம்; கான் சிட்டி அப்படிப்பட்ட படம்” – அர்ஜுன் தாஸ்*



*குடும்ப ரசிகர்களுக்காகத்தான் இப்போது படங்கள் தேர்வு செய்கிறேன்” – அர்ஜுன் தாஸ்*


*நல்ல நெகட்டிவ் ரோல் வந்தால் மீண்டும் செய்வேன்” – அர்ஜுன் தாஸ் பேட்டி*


ஹீத் லெட்ஜரின் ஜோக்கர் என் ஃபேவரைட் வில்லன்” – அர்ஜுன் தாஸ்



தமிழ் சினிமாவின் தனித்துவமான குரலாலும், வித்தியாசமான கதாபாத்திரத் தேர்வுகளாலும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வரும் நடிகர் அர்ஜுன் தாஸ், தற்போது தனது புதிய திரைப்படமான “கான் சிட்டி” மூலம் ரசிகர்களை சந்திக்கத் தயாராகியுள்ளார்.



ஆக்‌ஷன், திரில்லர் மற்றும் உணர்வுபூர்வமான அம்சங்கள் கலந்த படைப்பாக உருவாகியுள்ள கான் சிட்டி, அர்ஜுன் தாஸின் திரைப்பயணத்தில் மேலும் ஒரு முக்கியமான படமாக பார்க்கப்படுகிறது. படத்தின் வெளியீட்டை முன்னிட்டு, அவர் சென்னையில் பத்திரிகையாளர்களை சந்தித்து, கான் சிட்டி திரைப்படம் குறித்த சுவாரஸ்யமான தகவல்களையும், தனது திரையுலக அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டார்.


சினிமாவுக்குள் நுழைந்த ஆரம்ப காலப் போராட்டங்கள் முதல், ரசிகர்கள் அளித்த அன்பு, தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கிய பயணம் மற்றும் எதிர்கால திட்டங்கள் வரை பல்வேறு கேள்விகளுக்கு அவர் மனம் திறந்து பதிலளித்தார். அந்த சந்திப்பின் முக்கிய அம்சங்கள் இங்கே…


“நான் நடித்த ஒவ்வொரு படமும் முடிந்த பிறகும் பத்திரிக்கையாளர்கள்  பலர் தனிப்பட்ட முறையில் வந்து தங்களது கருத்துகளையும், விமர்சனங்களையும் பகிர்ந்து கொள்வார்கள். அந்த கருத்துக்கள் எனது அடுத்தடுத்த படத் தேர்வுகளிலும், நடிப்பிலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றன. என்ன மாதிரியான கதைகளில் நடிக்க வேண்டும், எந்த மாதிரியான நடிப்பை ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள் என்பதை உங்கள் கருத்துகள் மூலமாகவே புரிந்துகொண்டேன்,” என்று அவர் கூறினார்.


மேலும், தனது பெற்றோர்களும் படம் வெளியான பிறகு ஊடகங்கள் என்ன கூறுகின்றன என்பதை ஆர்வமாகக் கேட்பார்கள் என்றும், ரசிகர்கள் மற்றும் ஊடகங்கள் வழங்கிய நேர்மறையான கருத்துகளை அவர்களிடம் பகிர்ந்து வந்ததாகவும் தெரிவித்தார்.


அதனைத் தொடர்ந்து, தனது புதிய படமான கான் சிட்டி குறித்து பேசிய அவர், “இது குடும்பத்தோடு அமர்ந்து ரசிக்கக்கூடிய அழகான, மகிழ்ச்சியான திரைப்படம். கதையைப் பற்றி அதிகம் சொல்ல விரும்பவில்லை. ஆனால் ஒரு குடும்பம், அவர்களது வாழ்க்கை, அதில் நடைபெறும் உணர்வுபூர்வமான தருணங்கள், நகைச்சுவை மற்றும் சந்தோஷமான அனுபவங்கள் ஆகியவற்றை மையமாகக் கொண்டு படம் உருவாகியுள்ளது. இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக குடும்பத்துடன் மகிழ்ச்சியாக ரசிக்கக்கூடிய படமாக இது இருக்கும்,” என்றார்.



தனது கதாபாத்திரம் குறித்தும் அர்ஜுன் தாஸ் சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்தார். “இந்தப் படத்தில் நான் ஏற்றிருக்கும் கதாபாத்திரம் மிகவும் சாதாரணமான, நம்மைச் சுற்றி வாழும் இளைஞனைப் போன்றது. கடன்கள், குடும்பப் பொறுப்புகள், வாழ்க்கைச் சவால்கள் என பலரும் தொடர்புபடுத்திக் கொள்ளக்கூடிய ஒரு கதாபாத்திரம். அதனால் இந்த வேடம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது,” என்று அவர் கூறினார்.


தொடர்ந்து தனது திரைப்பயணம் குறித்து பேசிய அவர், தற்போது பல்வேறு வகையான கதைகளிலும், கதாபாத்திரங்களிலும் நடித்து வருவதாக தெரிவித்தார். “நெகட்டிவ் கதாபாத்திரங்கள் மட்டுமல்லாமல், நகைச்சுவை, குடும்பம், உணர்வுபூர்வம் என பல விதமான கதைகளில் நடிக்க வாய்ப்புகள் கிடைக்கின்றன. புதிய இயக்குநர்களுடன் பணியாற்றுவது புதிய அனுபவங்களைத் தருகிறது. அதனால் இந்தப் பயணம் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது,” என்றார்.


சமீபத்தில் சமூக வலைதளங்களில் பரவிய தனது திருமணச் செய்திகள் குறித்த கேள்விக்கும் அவர் விளக்கம் அளித்தார். “எங்கிருந்து அந்த செய்தி வந்தது என்று எனக்கே தெரியவில்லை. வீட்டிலிருந்தும், உறவினர்களிடமிருந்தும் தொடர்ந்து அதைப் பற்றி கேட்க ஆரம்பித்துவிட்டார்கள். ஆனால் உண்மையில் நிச்சயதார்த்தமோ, திருமண ஏற்பாடுகளோ எதுவும் இல்லை,” என்று சிரித்தபடி மறுத்தார்.


ரசிகர்கள் தன்னிடம் அதிகமாக கேட்கும் விஷயம் என்ன என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், “திரையரங்குகளுக்கு சென்று நேரடியாக ரசிகர்களை சந்திக்கும் போது குறிப்பாக குடும்ப ரசிகர்களும், மூத்த பெண்களும் குடும்பத்தோடு பார்க்கக்கூடிய படங்களில் அதிகம் நடிக்க வேண்டும் என்று கூறுவார்கள். அதனால்தான் தற்போது குடும்ப ரசிகர்களை மகிழ்விக்கும் வகையிலான கதைகளையும் அதிகமாகத் தேர்வு செய்து வருகிறேன்,” என்றார்.


கான் சிட்டி படத்தில் தன்னுடன் நடித்த கலைஞர்களைப் பற்றியும் அவர் பாராட்டிப் பேசினார். “படத்தில் நடித்திருக்கும் ஒவ்வொரு கலைஞரிடமிருந்தும் ஏதாவது ஒன்றைக் கற்றுக்கொள்ள முடிகிறது. அவர்களுடைய அர்ப்பணிப்பு, ஒழுக்கம், காட்சிகளுக்கான தயாரிப்பு ஆகியவை எனக்கு புதிய பாடங்களைக் கற்றுக் கொடுத்தன. அதுவே ஒரு நடிகராக என்னை தொடர்ந்து வளர்ச்சியடையச் செய்கிறது,” என்று கூறினார்.


குறிப்பாக வில்லன் கதாபாத்திரங்கள் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், இதுவரை தான் நடித்த எதிர்மறை வேடங்கள் அனைத்தும் பார்வையாளர்களால் விரும்பப்பட்டதற்கு முக்கியமான காரணம் அவற்றின் பின்னணியில் இருந்த உணர்வுப்பூர்வமான காரணங்கள்தான் என்றார்.


“நான் நடித்த பல நெகட்டிவ் கதாபாத்திரங்களைப் பார்த்தால், அவர்கள் செய்த செயல்கள் தவறாக இருந்தாலும் அதற்குப் பின்னால் ஒரு காரணம் இருக்கும். ஒருவன் தன் சகோதரனுக்காகச் செய்கிறான், இன்னொருவன் தனது கடந்தகால காயங்களால் அந்த பாதையைத் தேர்ந்தெடுக்கிறான். அதனால் பார்வையாளர்கள் அந்தக் கதாபாத்திரங்களை வெறுப்பதைவிட புரிந்துகொள்ள முயற்சிக்கிறார்கள். அதுவே அவர்களுடன் ஒரு இணைப்பை உருவாக்குகிறது,” என்று அவர் கூறினார்.


எதிர்காலத்திலும் வில்லன் கதாபாத்திரங்களில் நடிப்பீர்களா என்ற கேள்விக்கு, “ஒரு நல்ல எதிர்மறை கதாபாத்திரம் வந்தால் கண்டிப்பாக செய்வேன். ஆனால் தற்போது அப்படிப்பட்ட எந்த திட்டமும் கைவசம் இல்லை. கதையும், கதாபாத்திரத்தின் ஆழமும் முக்கியம்,” என்று தெரிவித்தார்.


தனக்கு மிகவும் பிடித்த திரை வில்லன்கள் குறித்து பேசிய அவர், உலக சினிமாவில் ஹீத் லெட்ஜர் நடித்த ஜோக்கர் கதாபாத்திரம் மிகவும் பிடித்தமானது என்றார். தமிழ் சினிமாவில் தனி ஒருவன் படத்தில் அரவிந்த் சுவாமி ஏற்றிருந்த சித்தார்த் அபிமன்யு கதாபாத்திரம் மிகவும் சிறப்பாக வடிவமைக்கப்பட்ட வில்லன் வேடமாக தன்னை கவர்ந்ததாகவும் கூறினார்.


“ஒரு வில்லன் கதாபாத்திரத்திற்கும் ஒரு வலுவான பின்னணிக் கதை இருக்க வேண்டும். ஏன் அவர் அப்படி நடந்துகொள்கிறார் என்பதை ரசிகர்கள் புரிந்துகொள்ளும் வகையில் எழுதப்பட்டால் மட்டுமே அந்தக் கதாபாத்திரம் மனதில் நிற்கும். முழுக்க முழுக்க இருண்ட கதாபாத்திரமாக இருந்தாலும், அது கதைக்குள் சரியாக பொருந்த வேண்டும்,” என்று அவர் விளக்கினார்.


புதிய முயற்சிகள் மற்றும் எதிர்கால வாய்ப்புகள் குறித்து பேசும்போது, நல்ல கதைகள் மற்றும் சவாலான கதாபாத்திரங்கள் வந்தால் எந்த வகை வேடமாக இருந்தாலும் ஏற்கத் தயாராக இருப்பதாக அர்ஜுன் தாஸ் தெரிவித்தார்.


மேலும், தற்போது உருவாகி வரும் ஒன்ஸ் மோர் திரைப்படத்தின் தலைப்பு குறித்தும் அவர் சுவாரஸ்யமான குறிப்பை பகிர்ந்தார். “படத்திற்கு அந்தத் தலைப்பு வைக்கப்பட்டதற்குப் பின்னால் ஒரு முக்கியமான காரணம் இருக்கிறது. அதை இப்போது சொல்ல முடியாது. படம் வெளியாகும்போது ரசிகர்களுக்கே அதற்கான பதில் கிடைக்கும்,” என்று மர்மம் கலந்த புன்னகையுடன் கூறினார்.


எதிர்காலத் திட்டங்கள் குறித்து பேசும்போது, பல புதிய இயக்குநர்களுடன் இணைந்து பணியாற்றி வருவதாகவும், அடுத்தடுத்த காலங்களில் வித்தியாசமான கதைகளுடன் ரசிகர்களை சந்திக்கவுள்ளதாகவும் அர்ஜுன் தாஸ் தெரிவித்தார்.


பவர் ஹவுஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் ஹரிஷ் துரைராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள “கான் சிட்டி” திரைப்படத்தில் அர்ஜூன் தாஸ் உடன் இணைந்து, அன்னா பென், யோகி பாபு, வடிவுக்கரசி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். திரைப்படத்தின் டிரெய்லர் மற்றும் பாடல்கள் ஏற்கனவே ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், வரும் ஜூன் 26ஆம் தேதி உலகம் முழுவதும் திரைப்படம் வெளியாக உள்ளது.

கான் சிட்டி’ திரைப்பட டிரெய்லர் வெளியீடு மற்றும் பத்திரிகையாளர் சந்திப்பு*

 *‘கான் சிட்டி’ திரைப்பட டிரெய்லர் வெளியீடு மற்றும் பத்திரிகையாளர் சந்திப்பு*



பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள “கான் சிட்டி” திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது. இந்நிகழ்வினில் படத்தின் டிரெய்லர் பத்திரிகை ஊடக நண்பர்களுக்கு பிரத்யேகமாக திரையிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து படக்குழுவினர் திரைப்படம் குறித்த பல்வேறு சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டனர்.


இந்நிகழ்வினில்  


நடிகர் மதன்  பேசியதாவது..,


 “வணக்கம் நண்பர்களே. ஒரு சில வார்த்தைகள் பேச விரும்புகிறேன். மேடைக்கு வருவதற்கு முன்பே எனக்கு நிறைய பில்ட்அப் கொடுக்கப்பட்டது. ஆனால் அந்த பில்ட்அப் எல்லாமே இந்தப் படத்திற்குத் தகுதியானதுதான். ஏனென்றால் இது அப்படியொரு நல்ல திரைப்படம்.

இந்தப் படத்தின் கதையிலும், அதில் சொல்லப்படும் கருத்துகளிலும் நிறைய புத்திசாலித்தனமான விஷயங்கள் இருக்கின்றன. டிரைலரையே நீங்கள் பார்த்திருப்பீர்கள். அது எவ்வளவு நகைச்சுவையாகவும் ரசிக்கும்படியாகவும் இருக்கிறது என்பதை அனைவரும் அறிவீர்கள். ஆனால் படம் அதைவிட இன்னும் சிறப்பாகவும், ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தமானதாகவும் இருக்கும். சுமாரான படங்களுக்குக் கூட பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடக நண்பர்கள் நல்ல ஆதரவு கொடுத்து மக்களிடம் கொண்டு சேர்க்கிறீர்கள். இது மிகவும் சிறப்பான திரைப்படம். இந்தப் படத்தையும் மக்களிடம் இன்னும் பிரமாண்டமாக கொண்டு சேர்ப்பீர்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது. அனைவருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். நன்றி  


நடிகர் லல்லு பேசியதாவது.., 


“இதுபோன்ற தருணங்கள் எப்போதும் மனதில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தும். இயக்குநர் ஹரிஷை இன்று இந்த மேடையில் பார்க்கும்போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. ஒரு புதிய இயக்குநராக சினிமாவில் சாதிக்க வேண்டும் என்ற கனவுடன் பயணத்தைத் தொடங்கியவர். அந்தக் கனவை நனவாக்குவதற்காக அவர் பல ஆண்டுகள் கடினமாக உழைத்துள்ளார். இன்று அவரது இயக்கத்தில் உருவாகியுள்ள ‘கான் சிட்டி’ திரைப்படம் வெளியாகவிருப்பது மிகவும் மகிழ்ச்சியான விஷயம்.அர்ஜூன் தாஸ் ஏற்கனவே ‘கைதி’, ‘மாஸ்டர்’ போன்ற முக்கியமான படங்கள் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். அவருடன் இணைந்து பயணித்த அனுபவமும் சிறப்பானது. இந்தப் படம் அவருக்கு மிகப்பெரிய திரையரங்கு வெற்றியாக அமையும் என்று நம்புகிறேன்.படத்தின் டிரைலர் மற்றும் பாடல்களைப் பார்த்தபோது மிகவும் பாஸிடிவான உணர்வு ஏற்பட்டது. குறிப்பாக இது ஒரு சிறந்த குடும்ப பொழுதுபோக்கு திரைப்படமாக உருவாகியுள்ளது. இயக்குநர் ஹரிஷ் மிகவும் சுவாரஸ்யமான மற்றும் ரசிக்கக்கூடிய திரைக்கதையை அமைத்திருக்கிறார். பாடல்களும் ஒவ்வொன்றும் தனித்துவமான பாணியில் அமைந்து மனதில் நிற்கின்றன.குடும்பத்துடன் திரையரங்கிற்கு வந்து ரசித்து பார்க்கக்கூடிய திரைப்படமாக ‘கான் சிட்டி’ இருக்கும். எனவே ரசிகர்கள் அனைவரும் திரையரங்குகளில் வந்து படத்தை ஆதரித்து, மிகப்பெரிய தொடக்கத்தையும் வெற்றியையும் கொடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.



கலை இயக்குநர் ராஜ்கமல் பேசியதாவது:


“வணக்கம். முதலில் இந்தப் படத்தில் பணியாற்றும் வாய்ப்பை எனக்கு வழங்கிய இயக்குநர் ஹரிஷுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.‘கான் சிட்டி’ திரைப்படத்தின் உலகத்தை உருவாக்குவதற்காக நாங்களும் எங்கள் குழுவினரும் மிகுந்த உழைப்பை செலுத்தியுள்ளோம். குறிப்பாக இந்தப் படத்தில் செட் அமைப்புகள் அதிகமாக இருந்ததால், அதற்காக பெரிய அளவில் திட்டமிட்டு வேலை செய்ய வேண்டியிருந்தது. என்னுடைய குழுவினர் அனைவரும் அர்ப்பணிப்புடனும் கடின உழைப்புடனும் பணியாற்றினர். அவர்களுக்கு எனது சிறப்பு நன்றிகள்.இந்தப் படத்தின் தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவருமே எனக்கு நண்பர்களைப் போன்றவர்கள். ஒவ்வொருவரும் தங்களுடைய துறையில் முழு ஈடுபாட்டுடன் செயல்பட்டனர். அதனால் வேலை மிகவும் சுவாரஸ்யமாகவும் மகிழ்ச்சியாகவும் அமைந்தது. படப்பிடிப்பு காலம் முழுவதும் நாங்கள் ஒரு குடும்பமாக இணைந்து பணியாற்றினோம். ‘கான் சிட்டி’ படத்தில் நாங்கள் உருவாக்கியுள்ள உலகத்தையும், காட்சியமைப்புகளையும் ரசிகர்கள் திரையரங்குகளில் ரசிப்பார்கள் என்று நம்புகிறேன். படத்திற்கு உங்கள் ஆதரவையும் வாழ்த்துகளையும் வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன். நன்றி.”


உடை வடிவமைப்பாளர் நவா பேசியதாவது..,  


“அனைவருக்கும் வணக்கம். முதலில் இந்தப் படத்தில் பணியாற்றும் வாய்ப்பை எனக்கு வழங்கிய தயாரிப்பாளருக்கும், இயக்குநர் ஹரிஷுக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இன்று இந்த மேடையில் நிற்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் இருக்கிறது. இந்த வாய்ப்பிற்காகவும், தொடர்ந்து எனக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி.


அர்ஜூன் தாஸ் அண்ணாவுடன் மீண்டும் பணியாற்றியது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. அவர் முழுமையான ஒத்துழைப்பை வழங்கினார். அதற்காக அவருக்கு எனது சிறப்பு நன்றிகள். அதேபோல் வடிவுக்கரசி அம்மாவுடன் பணியாற்றியது இந்தப் படத்தில் எனக்கு மிகவும் சிறப்பான அனுபவமாக அமைந்தது. அவருடன் பணியாற்றிய தருணங்கள் மறக்க முடியாதவை. இந்தப் படத்தில் நடித்துள்ள அனைத்து கலைஞர்களுடனும் இணைந்து பணியாற்றியதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். பல்வேறு கதாபாத்திரங்களுக்கு ஏற்றவாறு நிறைய உடை வடிவமைப்புகள் மற்றும் பல்வேறு தோற்றங்களை உருவாக்கியுள்ளோம். ரசிகர்கள் அதை திரையரங்குகளில் பார்த்து ரசிப்பார்கள் என்று நம்புகிறேன்.என்னுடைய முழு காஸ்ட்யூம் குழுவும் எனக்கு ஒரு குடும்பம் போன்றது. பல ஆண்டுகளாக என்னுடன் பயணித்து வரும் அவர்களின் உழைப்பும் அர்ப்பணிப்பும் இந்தப் படத்தில் பிரதிபலித்திருக்கிறது. அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.இப்படத்தின் தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவரும் மிகச் சிறப்பாக பணியாற்றியுள்ளனர். இசையமைப்பாளர் ஷான் ரோல்டன், கலை இயக்குநர் ராஜ்கமல், ஒளிப்பதிவாளர் அரவிந்த், ஸ்டண்ட் மாஸ்டர் சந்தோஷ் உள்ளிட்ட ஒவ்வொருவரும் தங்களது சிறந்த பங்களிப்பை வழங்கியுள்ளனர். படக்குழுவின் சார்பாக ரசிகர்கள் மற்றும் ஊடக நண்பர்கள் அனைவரிடமும் ஒரு வேண்டுகோள். திரையரங்குகளுக்கு வந்து ‘கான் சிட்டி’ திரைப்படத்தைப் பார்த்து உங்கள் ஆதரவையும் ஆசீர்வாதத்தையும் வழங்குங்கள்.


இறுதியாக, என்னுடைய உதவியாளர்கள் மற்றும் காஸ்ட்யூம் குழுவினருக்கு சிறப்பு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர்களின் ஆதரவு இல்லாமல் இந்தப் பயணம் சாத்தியமாகியிருக்காது. அனைவருக்கும் நன்றி.”


நடன இயக்குநர் சந்தோஷ் பேசியதாவது:


“அனைவருக்கும் வணக்கம். ‘கான் சிட்டி’ திரைப்படத்தில் பணியாற்றிய அனுபவம் மிகவும் சிறப்பானதாக இருந்தது. சமீபத்தில் வெளியான பாடல்களை நீங்கள் அனைவரும் பார்த்திருப்பீர்கள். அந்தப் பாடல்களின் காட்சியமைப்புகள் மற்றும் நடன வடிவமைப்புகள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

இயக்குநர் ஹரிஷ் ஒவ்வொரு பாடலுக்கும் தனித்துவமான ஐடியாக்களை பகிர்ந்து கொண்டார். அவர் கூறிய அணுகுமுறை மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது. அதனை அடிப்படையாகக் கொண்டு பாடல்களை உருவாக்கிய அனுபவம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது.


இந்தப் படத்தின் பாடல்களில் ஏராளமான நடனக் கலைஞர்கள் பங்கேற்றனர். அவர்களுடன் இணைந்து பணியாற்றியது மறக்க முடியாத அனுபவமாக இருந்தது. படப்பிடிப்பு தளத்தில் அனைவரும் மிகுந்த அர்ப்பணிப்புடன் உழைத்தனர்.


இயக்குநர் ஹரிஷின் மிகப்பெரிய பலம் அவரது பாஸிடிவான அணுகுமுறை. அவர் எப்போதும் உற்சாகத்துடனும் தெளிவான பார்வையுடனும் செயல்படுவார். படத்திற்கு என்ன தேவை என்பதை மிகவும் தெளிவாக அறிந்து அதற்கேற்ப குழுவை வழிநடத்தினார். அந்த நம்பிக்கையும் ஆற்றலும் முழுக் குழுவுக்கும் உற்சாகத்தை அளித்தது.


அர்ஜூன் தாஸ் உள்ளிட்ட அனைத்து கலைஞர்களும் மிகுந்த உழைப்பை தந்தனர். படப்பிடிப்பின் போது சோர்வு இருந்தாலும், ஒவ்வொருவரும் தங்களுடைய சிறந்த பங்களிப்பை வழங்கினர். இயக்குநர் குழு, ஒளிப்பதிவுக் குழு உள்ளிட்ட அனைவரும் மிகவும் ஒத்துழைப்புடன் செயல்பட்டனர்.


வடிவுக்கரசி அம்மாவுடன் பணியாற்றிய அனுபவமும் மிகவும் இனிமையானது. அவருடைய அனுபவமும் அர்ப்பணிப்பும் அனைவருக்கும் ஒரு ஊக்கமாக இருந்தது. குறிப்பாக பாடல்களில் வரும் சிறிய அசைவுகள் மற்றும் லிப்-சிங்க் காட்சிகளைக் கூட மிகவும் துல்லியமாகச் செய்தது அவரது அனுபவத்தை வெளிப்படுத்தியது.


இந்தப் படத்தின் அனைத்து பாடல்களும் தனித்தனி பாணியில் உருவாகியுள்ளன. ஒவ்வொரு பாடலிலும் ஒரு புதிய அனுபவமும் வித்தியாசமான உணர்வும் இருக்கும். ரசிகர்கள் திரையரங்குகளில் அதை ரசிப்பார்கள் என்று நம்புகிறேன்.


இந்த வாய்ப்பை வழங்கிய இயக்குநர் ஹரிஷ், தயாரிப்பாளர் மற்றும் படக்குழுவினருக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். அனைவருக்கும் நன்றி.”

எடிட்டர் அருள் மோசஸ் பேசியதாவது:


“அனைவருக்கும் வணக்கம். முதலில் இந்த வாய்ப்பை எனக்கு வழங்கிய இயக்குநர் ஹரிஷ் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.


‘கான் சிட்டி’ திரைப்படம் அனைவரின் வாழ்க்கையுடனும் எளிதாக தொடர்புபடுத்திக்கொள்ளக்கூடிய ஒரு கதையை பேசுகிறது. அதனால்தான் இந்தப் படம் அனைத்து தரப்பு ரசிகர்களிடமும் நல்ல வரவேற்பைப் பெறும் என்று நம்புகிறேன்.


இந்தப் படத்தில் பணியாற்றும் வாய்ப்பு எனக்கு கிடைத்ததற்கு முக்கிய காரணமாக இருந்த விஜய் அண்ணாவுக்கு நன்றி சொல்ல வேண்டும். அவருடைய நம்பிக்கையும் ஆதரவும்தான் என்னை இந்தப் பயணத்திற்கு அழைத்து வந்தது.


அதேபோல் என்னுடைய முக்கியமான வழிகாட்டியும், மென்டருமான செல்வா அண்ணாவையும் இந்த நேரத்தில் நினைவுகூர விரும்புகிறேன். இன்று நான் இந்த மேடையில் நிற்பதற்கும், இந்தப் படத்தில் பணியாற்றியதற்கும் அவருடைய பங்கு மிகவும் முக்கியமானது.இந்தப் படம் திரையரங்கில் வெளியாகும் என்னுடைய முதல் படைப்பாக இருப்பதால், இது எனக்கு மிகவும் சிறப்பானதாகும். படக்குழுவினர் அனைவரும் மிகுந்த அர்ப்பணிப்புடன் உழைத்திருக்கிறார்கள். ரசிகர்கள் அனைவரும் திரையரங்குகளில் படம் பார்த்து உங்கள் கருத்துகளையும் விமர்சனங்களையும் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். உங்கள் ஆதரவும் அன்பும் எங்களுக்கு மிகவும் முக்கியமானது. அனைவருக்கும் நன்றி.”


ஒளிப்பதிவாளர் அரவிந்த் விஸ்வநாதன் பேசியதாவது:


“அனைவருக்கும் வணக்கம். இந்த மேடையில் நிற்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. முதலில் இந்த வாய்ப்பை எனக்கு வழங்கிய இயக்குநர் ஹரிஷ் அண்ணாவுக்கு மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.


நம்மைப் போன்ற மிடில் கிளாஸ் பின்னணியில் இருந்து வந்து, இன்று ஒரு இயக்குநராகவும் தயாரிப்பாளராகவும் ஹரிஷ் அண்ணா இந்த நிலையை அடைந்திருப்பதை பார்க்கும்போது மிகவும் பெருமையாக இருக்கிறது. அவருடைய பயணத்தை நெருக்கமாக பார்த்தவன் என்பதால், இந்தப் படம் எனக்கு மிகவும் தனிப்பட்ட மற்றும் உணர்வுபூர்வமான படைப்பாக இருக்கிறது.


இந்தப் படத்தின் மூலம் அர்ஜூன் தாஸ், யோகி பாபு, அன்னா பென் உள்ளிட்ட திறமையான கலைஞர்களுடன் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது. அவர்களுடன் இணைந்து வேலை செய்த அனுபவம் மிகவும் சிறப்பானது.


இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் சார் படத்திற்கு அற்புதமான இசையை வழங்கியுள்ளார். சமீபத்தில் வெளியான பாடல்கள் மற்றும் இசைத்துணுக்குகளைப் பார்த்தபோது, படத்தின் உலகம் இன்னும் அழகாக உயிர்பெற்றிருப்பதை உணர முடிந்தது.படத்தின் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவரும் ஒரே குடும்பமாக இணைந்து பணியாற்றினோம். கலை இயக்குநர் ராஜ்கமல், உடை வடிவமைப்பாளர் நவா, எடிட்டர் அருள் மோசஸ், நடன இயக்குநர் சந்தோஷ் உள்ளிட்ட அனைவரின் பங்களிப்பும் படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளது.


குறிப்பாக உதவி இயக்குநர்கள், கேமரா குழுவினர் மற்றும் பின்னணியில் உழைத்த அனைத்து தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். பல மணி நேரங்கள் இடைவிடாமல் உழைத்து இந்தப் படத்தை சிறப்பாக உருவாக்கியுள்ளனர்.


‘கான் சிட்டி’ திரைப்படம் எங்கள் அனைவரின் உழைப்பின் வெளிப்பாடு. ரசிகர்கள் அனைவரும் திரையரங்குகளில் வந்து படத்தைப் பார்த்து ஆதரவு அளிக்க வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். நன்றி.”


பாடலாசிரியர் மோகன் ராஜன் பேசியதாவது..,


“அனைவருக்கும் வணக்கம். குறிப்பாக பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடக நண்பர்கள் அனைவருக்கும் எனது வணக்கங்கள். இந்தப் படம் எனக்கு மிகவும் முக்கியமானது. இந்தப் படத்தின் வெற்றிக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன். அதற்கான முக்கிய காரணம் இயக்குநர் ஹரிஷ்.


ஹரிஷ் முதன்முதலில் இந்தக் கதையை என்னிடம் கூறிய தருணத்திலிருந்தே அந்தக் கதையுடன் நான் பயணிக்கத் தொடங்கிவிட்டேன். ஒரு தேநீர் கடை பெஞ்சில் அமர்ந்து, இந்தப் படத்தில் யார் யார் நடிக்கப் போகிறார்கள், எப்படி உருவாகப் போகிறது என்று கனவுகளோடு பேசிய நாட்கள் இன்று நினைவுக்கு வருகின்றன.


அர்ஜூன் தாஸ் சார், நீங்கள் இந்தக் கதையைக் கேட்டவுடன் சொன்ன முதல் ‘ஓகே’தான் இன்று இந்தப் படம் இந்த மேடையில் நிற்பதற்குக் காரணம். அதற்காக உங்களுக்கு மனமார்ந்த நன்றி. ஹரிஷ் சார்பாகவும் ஒரு பெரிய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தக் கதையை எழுதிய நாள் முதல், இந்தக் கதாபாத்திரத்திற்கு அவர் நினைத்த ஒரே நடிகர் நீங்கள் மட்டும்தான். அந்த அளவுக்கு உங்கள் மீது அவருக்கு நம்பிக்கை இருந்தது.

இந்தப் படம் உங்களுக்கு ஒரு கதாநாயகனாக மிகப்பெரிய வெற்றியைத் தரும் என்று நம்புகிறேன். நான் இந்தப் படத்தை பல முறை பார்த்திருக்கிறேன். ஒவ்வொரு முறையும் புதிதாக ஏதோ ஒரு ஆச்சரியத்தை அளித்திருக்கிறது.


யோகி பாபு அண்ணா இந்தப் படத்தில் அசத்தலான நடிப்பை வழங்கியிருக்கிறார். அவருடைய கதாபாத்திரம் ரசிகர்களிடம் பெரிய வரவேற்பைப் பெறும். ஷான் ரோல்டன் எனக்கு மிகவும் சிறப்பானவர். அவருடன் இணைந்து பணியாற்றிய பிறகுதான் ஒரு பாடலாசிரியராக எனது பெயர் பரவலாக கவனிக்கப்பட்டது என்று நான் நம்புகிறேன். எங்களது கூட்டணியில் உருவான பல பாடல்கள் மற்றும் படைப்புகள் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன.


‘கான் சிட்டி’ திரைப்படத்தில் மொத்தம் ஏழு பாடல்கள் உள்ளன. அவை கதையோடு இயல்பாக இணைந்து பயணிக்கும். குறிப்பாக சில பாடல்களை பழைய தமிழ் தத்துவப் பாடல்களின் உணர்வில் உருவாக்கியுள்ளோம். அதற்கான ஐடியாவை வழங்கிய ஹரிஷுக்கு நன்றி. அவர் மிகவும் நம்பிக்கையுடன் செயல்படும் படைப்பாளி. அவருடைய அடுத்தடுத்த படங்களிலும் தொடர்ந்து இணைந்து பணியாற்ற வேண்டும் என்பது என்னுடைய விருப்பம்.

வடிவுக்கரசி அம்மாவும், யோகி பாபு அண்ணாவும் இணைந்த காட்சிகள் ரசிகர்களை மிகவும் கவரும். வடிவுக்கரசி அம்மாவின் நடிப்பு எங்களை ஆச்சரியப்படுத்தியது. ஏற்கனவே அவருடைய ரசிகனாக இருந்த நான், இந்தப் படத்திற்குப் பிறகு இன்னும் பெரிய ரசிகனாக மாறிவிட்டேன்.இந்தப் படத்தின் அனைத்து தொழில்நுட்பக் கலைஞர்களும் மிகச் சிறப்பாக உழைத்துள்ளனர். எங்கள் முழு குழுவும் ஒரு குடும்பம் போல இணைந்து பணியாற்றியது இந்தப் படத்தின் மிகப்பெரிய பலம். இந்தப் படம் வெற்றி பெற்று, ஹரிஷின் முகத்தில் அந்த மகிழ்ச்சியைப் பார்ப்பதற்காக காத்திருக்கிறேன். ஒரு அண்ணன் தனது தம்பி வெற்றி பெறுவதைப் பார்ப்பது போல அந்த மகிழ்ச்சி இருக்கும்.அனைவருக்கும் எனது நன்றிகள். இந்தப் படம் வெற்றி பெற்று, வெற்றி விழாவில் மீண்டும் அனைவரையும் சந்திப்போம் என்ற நம்பிக்கையுடன் விடைபெறுகிறேன். நன்றி.”



நடிகர் VTV கணேஷ் பேசியதாவது..,  


“அனைவருக்கும் வணக்கம். குறிப்பாக பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடக நண்பர்களுக்கு என் அன்பான வணக்கங்கள்.‘கான் சிட்டி’ எனக்கு மிகவும் வித்தியாசமான அனுபவமாக அமைந்த படம். இதற்கு முன்பு இதுபோன்ற கதைக்களத்தில் நான் நடித்ததில்லை. இயக்குநர் ஹரிஷ் என்னை அணுகிய விதமே மிகவும் தனித்துவமாக இருந்தது. பொதுவாக புதிய இயக்குநர்களுக்கு நான் எப்போதும் முன்னுரிமை கொடுப்பேன். ஏனெனில் அவர்களிடம் புதிய சிந்தனைகளும் புதிய பார்வைகளும் இருக்கும்.


ஹரிஷ் கதையை சொல்ல வந்தபோது, முதலில் நான் கேட்டது ‘தயாரிப்பாளர் யார்?’ என்பதுதான். இன்று ஒரு படத்தை ஆரம்பிப்பது எளிது. ஆனால் அதை முடித்து, திரையரங்குகளுக்கு கொண்டு வந்து சேர்ப்பது மிகப் பெரிய விஷயம். அந்த நம்பிக்கை இருக்கிறதா என்பதுதான் முக்கியம். ஹரிஷ் அந்த நம்பிக்கையையும் தைரியத்தையும் எனக்கு கொடுத்தார்.


அர்ஜூன் தாஸ், யோகி பாபு உள்ளிட்ட பல திறமையான கலைஞர்கள் படத்தில் இருப்பதாக சொன்னபோது மேலும் நம்பிக்கை ஏற்பட்டது. படத்தின் தயாரிப்பிலும், திட்டமிடலிலும் எந்த சமரசமும் இல்லாமல் செயல்பட்டார்கள். அதுவே என்னை இந்தப் படத்தில் இணைத்தது.


இந்தப் படத்தின் மிகப்பெரிய பலம் ஹரிஷின் தெளிவான பார்வை. அவருக்கு என்ன வேண்டும் என்பது தெளிவாக தெரியும். தேவையில்லாத விஷயங்களைச் செய்யாமல், காட்சிகளைத் துல்லியமாக திட்டமிட்டு எடுத்தார். ஒரு நாள் முன்னதாகவே என் பணிகளை முடித்து அனுப்பிய அளவுக்கு திட்டமிடல் இருந்தது.


படத்தில் உருவாக்கப்பட்டுள்ள ‘கான் சிட்டி’ உலகம் மிகவும் சுவாரஸ்யமானது. அது சாதாரண நகரம் அல்ல. அதன் உள்ளே என்ன நடக்கிறது, அங்கே இருக்கும் மனிதர்கள் எப்படி வாழ்கிறார்கள் என்பதைக் கற்பனை மற்றும் நகைச்சுவையுடன் சொல்லியிருக்கிறார் இயக்குநர். சில உண்மை சம்பவங்களையும் அடிப்படையாகக் கொண்டு அந்த உலகத்தை உருவாக்கியிருக்கிறார்.


ஒளிப்பதிவாளர் அரவிந்த் விஸ்வநாதனின் பணியை நான் குறிப்பாக பாராட்ட விரும்புகிறேன். அவருடைய அணுகுமுறை, காட்சிகளைப் பார்க்கும் விதம் மற்றும் படத்தின் தோற்றத்தை உருவாக்கிய விதம் மிகவும் சிறப்பாக இருந்தது. இன்றைய தலைமுறையின் திறமையான ஒளிப்பதிவாளர்களில் ஒருவராக அவர் வளர்வார் என்று நம்புகிறேன்.

அதேபோல் எடிட்டர் அருள் மோசஸ் முதல் படமென்று சொல்ல முடியாத அளவுக்கு அற்புதமாக பணியாற்றியிருக்கிறார். அவரது படத்தொகுப்பு மிகுந்த தரத்துடன் உள்ளது. படத்தின் வேகத்தையும், சுவாரஸ்யத்தையும் அவர் சிறப்பாக கையாண்டிருக்கிறார்.


அர்ஜூன் தாஸ் ஒரு நடிகராக தொடர்ந்து புதிய உயரங்களை அடைந்து வருகிறார். இந்தப் படம் அவருக்கு மிகப்பெரிய வெற்றியைத் தரும். யோகி பாபு, வடிவுக்கரசி அம்மா மற்றும் மற்ற அனைத்து நடிகர்களும் தங்களுடைய கதாபாத்திரங்களை சிறப்பாக உயிர்ப்பித்துள்ளனர்.

இன்று ஒரு திரைப்படத்தை உருவாக்குவதைக் காட்டிலும் அதை திரையரங்குகளில் வெளியிடுவது மிகப்பெரிய சவாலாக உள்ளது. அந்த சவாலை வென்று ‘கான் சிட்டி’ இன்று ரசிகர்களை சந்திக்க வருகிறது. அதற்காக ஹரிஷையும் படக்குழுவினரையும் மனதார பாராட்டுகிறேன்.


இந்தப் படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்று, படக்குழுவினரின் உழைப்புக்கு உரிய அங்கீகாரம் கிடைக்க வேண்டும். ரசிகர்கள் அனைவரும் திரையரங்குகளில் வந்து படம் பார்த்து ஆதரவு அளிக்க வேண்டும். அனைவருக்கும் நன்றி.”


நடிகர் அருள்தாஸ் பேசியதாவது:


“அனைவருக்கும் வணக்கம். ‘கான் சிட்டி’ படக்குழுவுடன் பணியாற்றிய அனுபவம் எனக்கு மிகவும் மகிழ்ச்சியானதாக இருந்தது. இந்தக் குழுவில் பெரும்பாலானோர் இளம் தலைமுறையைச் சேர்ந்தவர்கள். வெளியிலிருந்து பார்க்கும்போது ஒரு கல்லூரி ஆண்டு விழா குழுவைப் போல தோன்றலாம். ஆனால் அவர்கள் அனைவரும் அனுபவம் மிக்க, திறமையான தொழில்முறை கலைஞர்கள். அதுதான் இந்தக் குழுவின் மிகப்பெரிய பலம்.

இயக்குநர் ஹரிஷைப் பற்றி சொல்ல வேண்டுமென்றால், அவருக்கு என்ன தேவை என்பது மிகவும் தெளிவாகத் தெரியும். தேவையற்ற காட்சிகளை எடுக்காமல், கதைக்கு அவசியமானவற்றை மட்டும் துல்லியமாக படமாக்குவார். அதனால் படப்பிடிப்பு மிகவும் சீராகவும், கலைஞர்களுக்கு சோர்வில்லாமலும் நடைபெற்றது.


இன்றைய டிஜிட்டல் காலத்தில் ஒரே காட்சியை பல கோணங்களில் படமாக்குவது வழக்கமாகிவிட்டது. ஆனால் ஹரிஷ் அப்படியில்லை. கதைக்குத் தேவையானதை மட்டும் எடுத்து, நேரத்தை வீணாக்காமல் பணியாற்றினார். அதுதான் அவருடைய பலம்.

ஒளிப்பதிவாளர் அரவிந்த் விஸ்வநாதன், உடை வடிவமைப்பாளர் நவா மற்றும் மற்ற தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவரும் தங்களது பணியை மிகச் சிறப்பாகச் செய்துள்ளனர். ஒவ்வொருவரும் படத்தின் தரத்தை உயர்த்தியுள்ளனர்.


அர்ஜூன் தாஸுடன் இது எனது முதல் படம் அல்ல. ஏற்கனவே அவருடன் பணியாற்றிய அனுபவம் உள்ளது. இந்தப் படத்திலும் அவர் மிகுந்த அர்ப்பணிப்புடன் நடித்திருக்கிறார். ஹரிஷ் பல நல்ல திரைப்படங்களில் பணியாற்றி அனுபவம் பெற்றவர். அந்த அனுபவம் இந்தப் படத்தில் தெளிவாக வெளிப்பட்டிருக்கிறது.படப்பிடிப்பு மிகவும் ஒழுங்காக நடந்தது. திட்டமிட்ட காலக்கெடுவிற்குள் அனைத்து பணிகளும் முடிக்கப்பட்டன. டப்பிங் உள்ளிட்ட பணிகளும் விரைவாக நிறைவடைந்தன. படத்தைப் பார்த்தபோது எனக்கு முழுமையான திருப்தி கிடைத்தது.நான் எந்தப் படத்தில் நடித்தாலும், கதாபாத்திரம் பெரியதா, சிறியதா என்பதைப் பார்ப்பதில்லை. அந்தக் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் இருக்கிறதா என்பதைத்தான் பார்க்கிறேன். இந்தப் படத்தில் நான் ஒரு மின்வாரிய அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். அது மிகவும் சுவாரஸ்யமான மற்றும் கதைக்கு முக்கியத்துவம் வாய்ந்த பாத்திரமாக அமைந்துள்ளது.இந்தக் குழு தமிழ் சினிமாவின் எதிர்காலத்தில் முக்கியமான இடத்தைப் பிடிக்கும் என்று நம்புகிறேன். புதிய படைப்பாளிகளும், புதிய தொழில்நுட்பக் கலைஞர்களும் தொடர்ந்து வருவதால்தான் நம் சினிமா வளர்கிறது. ‘கான் சிட்டி’ திரைப்படம் அந்த வகையில் பல திறமைகளை வெளிக்கொண்டு வரும்.ஷான் ரோல்டன் மற்றும் மோகன் ராஜன் ஆகியோரின் கூட்டணி தொடர்ந்து சிறந்த படைப்புகளை வழங்கி வருகிறது. இந்தப் படத்திலும் அவர்கள் மிகச் சிறப்பாகப் பணியாற்றியுள்ளனர்.இந்தப் படம் மிகப்பெரிய வெற்றி பெற்று, இயக்குநர் ஹரிஷுக்கு தமிழ் சினிமாவில் ஒரு சிறந்த இயக்குநராகவும், தயாரிப்பாளராகவும் பெரிய அங்கீகாரத்தை பெற்றுத் தர வேண்டும் என்று மனதார வாழ்த்துகிறேன். அனைவருக்கும் நன்றி.”


இமான் அண்ணாச்சி பேசியதாவது:


“அனைவருக்கும் என்னுடைய அன்பான வணக்கங்கள். ‘கான் சிட்டி’ திரைப்படத்தில் நானும் ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். அந்தக் கதாபாத்திரத்திற்கு என்னைத் தேர்வு செய்த இயக்குநர் ஹரிஷுக்கு முதலில் என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.


படப்பிடிப்பு தளத்திற்கு முதன்முதலில் வந்தபோது, இளம் தலைமுறையினரின் ஆற்றல் நிறைந்த ஒரு சூழல் அங்கே இருந்தது. கேமராமேன் முதல் உதவி இயக்குநர்கள் வரை அனைவரும் மிகுந்த உற்சாகத்துடனும் அர்ப்பணிப்புடனும் பணியாற்றிக் கொண்டிருந்தார்கள். அந்த சூழலைப் பார்த்தபோது, ஒரு கல்லூரி வளாகத்தில் இருப்பது போன்ற உணர்வு ஏற்பட்டது.


ஒரு கட்டத்தில் இயக்குநரிடமே நான் கேட்டேன், ‘இந்தக் கதாபாத்திரத்திற்கு என்னைத் தேர்வு செய்தது சரியான முடிவா?’ என்று. அதற்கு அவர், ‘இந்தக் கதாபாத்திரத்தை எழுதும்போதே உங்களை மனதில் வைத்துத்தான் எழுதியிருக்கிறேன்’ என்று சொன்னார். அந்த வார்த்தை எனக்கு மிகுந்த மகிழ்ச்சியையும் நம்பிக்கையையும் அளித்தது.


அர்ஜூன் தாஸ் இந்தப் படத்திற்காக மிகுந்த அர்ப்பணிப்புடன் உழைத்திருக்கிறார். குறிப்பிட்ட சில காட்சிகளுக்காக அவர் எடுத்துக்கொண்ட முயற்சியும் பொறுமையும் பாராட்டத்தக்கது. எந்தவொரு தோற்றத்தையும், எந்தவொரு கதாபாத்திரத்தையும் முழுமையாக ஏற்று நடிப்பவர். இந்தப் படம் அவருக்கு மிகப்பெரிய வெற்றியைத் தரும் என்று நம்புகிறேன்.


வடிவுக்கரசி அம்மா, யோகி பாபு மற்றும் மற்ற அனைத்து நடிகர்களுடனும் இணைந்து பணியாற்றிய அனுபவம் மிகவும் மகிழ்ச்சியானது. படப்பிடிப்பு தளத்தில் எப்போதும் ஒரு குடும்ப உணர்வு இருந்தது.


இந்தப் படத்தின் தொழில்நுட்பக் குழுவினர் அனைவரும் கடினமாக உழைத்துள்ளனர். அவர்களின் உழைப்பும் அர்ப்பணிப்பும் படத்தின் ஒவ்வொரு காட்சியிலும் தெரியும். குறிப்பாக இயக்குநர் ஹரிஷின் முயற்சியும், இந்தப் படத்தை உருவாக்க அவர் எடுத்த உழைப்பும் பாராட்டப்பட வேண்டிய ஒன்று.


‘கான் சிட்டி’ திரைப்படம் ஒரு பவர்ஃபுல் எண்டர்டெயினராக ரசிகர்களை கவரும். மக்கள் அனைவரும் திரையரங்குகளுக்கு வந்து படத்தைப் பார்த்து ஆதரவு அளிக்க வேண்டும். இந்தப் படம் மிகப்பெரிய வெற்றி பெற்று, படக்குழுவினரின் உழைப்புக்கு உரிய பலனைப் பெற்றுத்தர வேண்டும் என்று மனதார வாழ்த்துகிறேன். அனைவருக்கும் நன்றி.”


நடிகர் சதானந்த் பேசியதாவது..,


“அனைவருக்கும் மாலை வணக்கம். என் பெயர் சதானந்த். இது எனது முதல் திரைப்படம், முதல் மேடை அனுபவம். முதலில் டிரைலரைப் பார்த்து ஆதரவு அளித்த அனைவருக்கும் நன்றி.


இந்த வாய்ப்புக்காக நான் முதலில் நன்றி சொல்ல வேண்டியவர் இயக்குநர் ஹரிஷ். கடந்த மூன்றரை ஆண்டுகளாக அவரை எனக்குத் தெரியும். இந்தக் கதையின் பயணமும் ஆரம்பத்திலிருந்தே அவருடன் இருந்திருக்கிறது. ஒரு நாள் திடீரென்று என்னை அழைத்து, ‘இந்த ஸ்கிரிப்ட்டில் ஒரு கதாபாத்திரம் இருக்கிறது, நீ நடிக்கிறாயா?’ என்று கேட்டார். நான் உடனே சம்மதித்தேன். அப்படித்தான் இந்தப் படத்தில் என் பயணம் தொடங்கியது.


நடிப்பில் எனக்கு உதவியாக ஒரு தனிப்பட்ட பயிற்சியாளர் இருந்தார். படப்பிடிப்புக்கு முன்பு ஒரு வார காலம் வசனங்களைப் பயிற்சி செய்து, மனப்பாடம் செய்து தயாரானேன். ஆனால் படப்பிடிப்பு தளத்தில் சில நேரங்களில் புதிதாக வசனங்கள் கொடுக்கப்பட்டன. சில நிமிடங்களிலேயே அதை மனப்பாடம் செய்து நடிக்க வேண்டிய சூழல் இருந்தது. அது எனக்கு சவாலாக இருந்தாலும், மிகச் சிறந்த அனுபவமாக அமைந்தது.


அர்ஜூன் தாஸ் சார் என்னுடன் நடித்தபோது மிகவும் ஆதரவாக இருந்தார். ஒரு புதிய நடிகராக நான் வசதியாக உணரும்படி சூழலை உருவாக்கிக் கொடுத்தார். அதற்காக அவருக்கு என் நன்றிகள்.


இமான் அண்ணாச்சி சார், யோகி பாபு அண்ணா உள்ளிட்ட மூத்த கலைஞர்களுடன் இணைந்து பணியாற்றியதும் மறக்க முடியாத அனுபவமாக இருந்தது. யோகி பாபு அண்ணா எப்போதும் அன்பாகவும் ஊக்கமாகவும் பழகினார். அது எனக்கு தன்னம்பிக்கையை அதிகரித்தது.


இந்தப் படத்தில் பணியாற்றிய ஒவ்வொரு நாளும் எனக்கு ஒரு புதிய பாடமாக இருந்தது. இந்த வாய்ப்பை வழங்கிய இயக்குநர் ஹரிஷ் மற்றும் முழு படக்குழுவினருக்கும் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.


டிரைலருக்கு நீங்கள் கொடுத்த ஆதரவைப் போலவே, திரைப்படத்தையும் திரையரங்குகளில் பார்த்து ஆதரவு அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். பத்திரிகையாளர்கள், ஊடக நண்பர்கள் மற்றும் ரசிகர்கள் அனைவருக்கும் என் நன்றிகள். நன்றி.”


குழந்தை நட்சத்திரம் அகிலன் பேசியதாவது:


“அனைவருக்கும் வணக்கம். என் பெயர் அகிலன். ‘கான் சிட்டி’ திரைப்படத்தில் நான் ஒரு மிகவும் சுவாரஸ்யமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். அந்தக் கதாபாத்திரம் உங்களுக்கு பிடிக்கும் என்று நம்புகிறேன். படத்தைப் பார்த்துவிட்டு உங்கள் கருத்துகளை சொல்லுங்கள்.


இந்த வாய்ப்பை எனக்கு வழங்கிய இயக்குநர் ஹரிஷ் அங்கிளுக்கு என் மனமார்ந்த நன்றிகள். அதேபோல் இந்தப் படத்தில் நடித்த அனைத்து நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். படத்தை திரையரங்குகளில் பார்த்து ஆதரவு அளிக்குமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன். நன்றி.”


Maali & Manvi Movie Makers  தயாரிப்பாளர் சித்து நாயர் பேசியதாவது.., 


“அனைவருக்கும் இனிய மாலை வணக்கம். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடக நண்பர்கள் அனைவருக்கும் முதலில் எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.


இன்று பலரும் இந்தப் படம் தங்களுடைய முதல் அனுபவம் என்று கூறினார்கள். அதுபோல, ஒரு இணைத் தயாரிப்பாளராக இது எனக்கும் முதல் திரைப்பட அனுபவம். எங்கள் நிறுவனம் திரைப்படத் துறையில் இருந்தாலும், ஒரு திரைப்படத்தின் திரைக்கதையை நேரடியாகக் கேட்டு அதில் முதலீடு செய்வது எனக்கு இதுவே முதல் முறை.


ஒரு நாள் எனது குழுவினர் மூலமாக இயக்குநர் ஹரிஷைப் பற்றி கேள்விப்பட்டேன். அவர் ஒரு திரைப்படம் உருவாக்கிக் கொண்டிருக்கிறார், ஒரு இணைத் தயாரிப்பாளரைத் தேடுகிறார் என்று கூறினார்கள். அதன்பிறகு அவரைச் சந்திக்கச் சென்றேன். வாழ்க்கையில் முதல் முறையாக ஒரு திரைக்கதையை முழுமையாகக் கேட்கப் போகிறேன் என்ற அனுபவம் அது.


இரவு நேரத்தில் அவரது அலுவலகத்திற்கு சென்றோம். ஹரிஷ் கதையை விவரிக்கத் தொடங்கினார். முதல் பாதி கதையைச் சொல்லவே சுமார் 45 நிமிடங்கள் எடுத்துக்கொண்டார். நான் அப்போது அவரிடம், ‘பட்ஜெட் மற்றும் நிதி விஷயங்களைப் பற்றி பேசலாமா?’ என்று கேட்டேன். ஆனால் அவர், ‘இன்னும் இரண்டாம் பாதி இருக்கிறது. அதையும் கேட்ட பிறகு பேசலாம்’ என்றார்.


பொதுவாக பேச்சுவார்த்தைகளில் ஒருவருடைய ஆர்வத்தை வெளிப்படுத்தக்கூடாது என்று சொல்வார்கள். ஆனால் அந்தக் கதையை கேட்டபோது நான் மிகவும் ஈர்க்கப்பட்டேன். அது எனது முதல் திரைக்கதை அனுபவமாக இருந்தாலும், அந்தக் கதையில் இருந்த ஆழத்தை என்னால் உணர முடிந்தது. ஹரிஷின் சிந்தனையின் தெளிவும், கதையின் மீதான நம்பிக்கையும் என்னை மிகவும் கவர்ந்தது.


குறிப்பாக, இயக்குநராக மட்டுமல்லாமல் தயாரிப்பாளராகவும் அவர் இந்தப் படத்தில் ஈடுபட்டிருந்தது, தனது படைப்பின் மீது அவருக்கு இருந்த நம்பிக்கையை வெளிப்படுத்தியது. அதுவே எனக்கும் தைரியம் கொடுத்தது. அந்த இரவு நாங்கள் கைகுலுக்கி, இந்தப் பயணத்தை ஒன்றாகத் தொடங்க முடிவு செய்தோம்.


அதன்பிறகு ஒரு கேள்வி எனக்குள் இருந்தது. ‘கதையை இவ்வளவு நன்றாகச் சொல்கிறார். ஆனால் அதையே திரையில் வெற்றிகரமாக கொண்டு வர முடியுமா?’ என்பதுதான் அது. ஆனால் படப்பிடிப்பு தளத்திற்கு சென்றபோது அந்த சந்தேகம் முற்றிலும் நீங்கிவிட்டது. அங்கே இருந்த ஆற்றல், ஒழுங்கு, அர்ப்பணிப்பு மற்றும் தொழில்முறை அணுகுமுறை எனக்கு மிகுந்த நம்பிக்கையை அளித்தது.


அந்த தருணத்திலேயே இந்தப் படம் வெற்றி பெறும் என்று உறுதியாக நம்பினேன். பின்னர் படத்தின் முன்னோட்ட காட்சியை பார்த்தபோது நான் உண்மையிலேயே ஆச்சரியமடைந்தேன். படம் என்னுடைய எதிர்பார்ப்புகளைத் தாண்டி இருந்தது.


இந்தப் படம் ஒரு சிறந்த உள்ளடக்கத்துடன் உருவாகியிருக்கிறது. இதுபோன்ற திரைப்படங்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடக நண்பர்களின் பங்கு மிகவும் முக்கியமானது. ஒரு திரைப்படத்தின் எதிர்காலத்தை தீர்மானிப்பதில் நீங்கள் மிகப்பெரிய சக்தியாக இருக்கிறீர்கள். எனவே இந்தப் படத்தைப் பார்த்து, அதன் தரத்தை மக்களிடம் கொண்டு சேர்க்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். ரசிகர்கள் அனைவரும் இந்தப் படத்தை திரையரங்குகளில் பார்த்து மகிழ்வார்கள் என்று உறுதியாக நம்புகிறேன். மீண்டும் ஒருமுறை அனைவருக்கும் என் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். நன்றி.”


Klout Studios தயாரிப்பாளர் அருண் பிரஜித் மனோகரன்  பேசியதாவது:


“அனைவருக்கும் வணக்கம். பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடக நண்பர்கள் பலருக்கும் என்னை ஏற்கனவே தெரியும். கடந்த பல ஆண்டுகளாக திரைப்படங்களில் Executive Producer ஆகவும், தயாரிப்பு நிர்வாகப் பொறுப்புகளிலும் பணியாற்றி வருகிறேன். நடிகர்கள் மற்றும் தயாரிப்பு தொடர்பான பல பணிகளில் இருந்த அனுபவம் எனக்கு உள்ளது.


நீண்ட நாட்களாக ஒரு திரைப்படத்தைத் தயாரிக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. அப்படியொரு நேரத்தில் ஒரு நாள் இரவு ஹரிஷ் என்னை தொடர்புகொண்டு சந்திக்க வேண்டும் என்றார். முதலில் கதை கேட்கும் மனநிலையில் நான் இல்லை. ‘நான் கதை கேட்க மாட்டேன், கதையை மட்டும் படிக்க கொடு’ என்று சொன்னேன். ஆனால் அந்த சந்திப்பே இந்தப் படத்தின் தொடக்கமாக மாறியது.


ஹரிஷ் கதையை முழுமையாகச் சொன்ன பிறகு, நான் திட்டமிட்டு வைத்திருந்த பல விஷயங்களை மறந்துவிட்டு உடனடியாக ‘நான் இந்தப் படத்தில் இருக்கிறேன்’ என்று கூறிவிட்டேன். அந்த அளவுக்கு அந்தக் கதை என்னை ஈர்த்தது.


இந்தக் கதையின் மிகப்பெரிய பலம், அது அனைவருடைய வாழ்க்கையுடனும் தொடர்புபடுத்திக்கொள்ளக்கூடியதாக இருப்பதுதான். பணம் என்ற விஷயம் மனித வாழ்க்கையில் தவிர்க்க முடியாத ஒன்று. அதைப் பற்றியே படம் மிகவும் சுவாரஸ்யமாக பேசுகிறது. அதனால் இந்தக் கதை அனைவரையும் எளிதில் சென்றடையும் என்று நம்புகிறேன்.


படப்பிடிப்பு காலத்தில் நான் அடிக்கடி செட்டுக்குச் செல்லவே இல்லை. ஹரிஷ் மீது எனக்கு அந்த அளவுக்கு நம்பிக்கை இருந்தது. படத்தின் முன்னோட்டக் காட்சியை பார்த்த பிறகு அந்த நம்பிக்கை இன்னும் பல மடங்கு அதிகரித்தது. இந்தப் படம் நிச்சயமாக பெரிய வெற்றி பெறும் என்ற உறுதி எனக்கு ஏற்பட்டது.


அர்ஜூன் தாஸும் நானும் சுமார் பன்னிரண்டு ஆண்டுகளாக நண்பர்கள். கைதி படத்திற்கு முன்பே நாங்கள் சந்தித்து, நல்ல படங்கள் செய்ய வேண்டும் என்று கனவு கண்டவர்கள். அந்தப் பயணத்தில் இன்று ‘கான் சிட்டி’ போன்ற ஒரு படத்தில் இணைந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்தப் படம் அர்ஜூன் தாஸின் திரைப்பயணத்தில் மிக முக்கியமான மைல்கல்லாக இருக்கும். இதுவரை பார்த்திராத ஒரு புதிய அர்ஜூன் தாஸை ரசிகர்கள் இதில் காண்பார்கள். இந்தப் படம் அவருக்கு ஒரு மிகப்பெரிய வெற்றியைத் தரும் என்று நம்புகிறேன்.


வடிவுக்கரசி அம்மா, அகிலன், அருள்தாஸ், சதானந்த் மற்றும் மற்ற அனைத்து நடிகர்களும் அசத்தலான நடிப்பை வழங்கியுள்ளனர். ஒளிப்பதிவாளர் அரவிந்த் விஸ்வநாதன், கலை இயக்குநர் ராஜ்கமல், எடிட்டர் அருள் மோசஸ் உள்ளிட்ட தொழில்நுட்பக் குழுவினரின் உழைப்பு படத்தின் தரத்தை மேலும் உயர்த்தியுள்ளது.


இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் மற்றும் பாடலாசிரியர் மோகன் ராஜன் இணைந்து அற்புதமான பாடல்களை வழங்கியுள்ளனர். ஒவ்வொரு பாடலும் தனித்துவமாகவும் மனதில் நிற்கக்கூடிய வகையிலும் அமைந்துள்ளது.


‘கான் சிட்டி’ ஒரு குடும்பத்தோடு அமர்ந்து ரசிக்கக்கூடிய பொழுதுபோக்கு திரைப்படம். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ரசிக்கக்கூடிய அம்சங்கள் இதில் இருக்கின்றன. மேலும், இன்றைய சமூகத்தில் நடக்கும் பல விஷயங்களோடு இந்தக் கதை மக்களை எளிதில் இணைத்துக்கொள்ளும்.


நல்ல உள்ளடக்கம் கொண்ட படங்களுக்கு நீங்கள் எப்போதும் ஆதரவு அளித்து வருகிறீர்கள். அதேபோல் இந்தப் படத்தையும் மக்களிடம் கொண்டு சேர்ப்பீர்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது. ஜூன் 26ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் ‘கான் சிட்டி’ திரைப்படத்தை அனைவரும் ஆதரிக்க வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். அனைவருக்கும் நன்றி.”


டெல்டா ஸ்டுடியோஸ் முத்துக்குமார் ஐயப்பன் பேசியதாவது:


“அனைவருக்கும் வணக்கம். முதலில் இயக்குநர் ஹரிஷுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். படத்தைப் பார்த்த பிறகு எங்களுக்கு மிகவும் நம்பிக்கை ஏற்பட்டது. குறிப்பாக பிரிவியூ காட்சி பார்த்த மறுநாள் காலையிலேயே இந்தப் படத்தின் மீது முழு நம்பிக்கை உறுதியானது.


ஹரிஷின் உழைப்பும், படத்தின் தரமும் எங்களை மிகவும் கவர்ந்தது. இந்தப் படத்திற்கு அனைவரும் ஆதரவு அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். நன்றி.”


இது இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் பேசிய உரை.


இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் பேசியதாவது:


அனைவருக்கும் வணக்கம். பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடக நண்பர்கள் அனைவரையும் சந்திப்பதில் மிகுந்த மகிழ்ச்சி. ‘கான் சிட்டி’ பற்றி பேசுவதற்கு முன், முதலில் இயக்குநர் ஹரிஷைப் பற்றி பேச வேண்டும் என்று நினைக்கிறேன்.


பொதுவாக நான் மிகவும் டென்ஷன் ஆகும் மனிதன். ஒரு படத்தின் வெளியீடு என்றாலே எனக்கு அதிகமான பதற்றம் இருக்கும். ஆனால் ‘கான் சிட்டி’ குறித்து ஹரிஷ் முதன் முதலில் என்னிடம் பேசியபோது, எல்லோருக்கும் இருந்த சந்தேகங்களே எனக்கும் இருந்தன. ‘இதை உண்மையில் செய்ய முடியுமா? இவ்வளவு பெரிய கனவை நிறைவேற்ற முடியுமா?’ என்ற கேள்விகள் இருந்தன.


ஆனால் நான் வாழ்க்கையில் முதல் முறையாக ஒரு இயக்குநரை சந்தித்தேன்; அவர் கதை சொன்னபோது எந்த அளவுக்கு நம்பிக்கையுடன் பேசினாரோ, இறுதியில் படத்தைப் பார்த்தபோது அதே விஷயம் ஒரு அங்குலம் கூட மாறாமல் திரையில் இருந்தது. அவர் சொன்னதை அப்படியே நிறைவேற்றியிருந்தார். அதற்காக ஹரிஷை நான் மனதார பாராட்டுகிறேன்.


இயக்குநராக மட்டுமல்ல, தனது சொந்த கனவுக்காக தனது சொந்த முதலீட்டுடன் களம் இறங்கியவர் ஹரிஷ். ஒரு கனவு காண்பது எளிது. ஆனால் அந்தக் கனவுக்காக தனது பணத்தையும், வாழ்க்கையையும், நேரத்தையும் பணயம் வைத்து போராடுவது மிகவும் கடினம். அந்த தைரியம் எனக்கு மிகவும் ஊக்கமளித்தது. ஹரிஷ் எனக்கு ஒரு நண்பரைத் தாண்டி ஒரு இன்ஸ்பிரேஷன்.


இந்தப் படத்தின் பயணத்தை ஆரம்பம் முதல் பார்த்திருக்கிறேன். இந்த மேடையில் நிற்கும்போது, டிரைலரைப் பார்க்கும்போது கூட எனக்கு உணர்ச்சிவசப்பட வைத்தது. ஏனெனில் அந்த சிரிப்பின் பின்னால் எத்தனை தூக்கமில்லா இரவுகள், எத்தனை போராட்டங்கள் இருக்கின்றன என்பது எனக்கு தெரியும்.


இந்தப் படம் இந்த அளவுக்கு உருவாகியதற்கு அர்ஜூன் தாஸ் மிக முக்கிய காரணம். இந்தக் கதைக்கு தேவையான பாரமும், ஆளுமையும் அவரிடம் இயல்பாகவே இருக்கிறது. நான் அவருடன் பணியாற்றியபோது ஒரு விஷயத்தை உணர்ந்தேன். இந்தத் துறையில் திறமைசாலிகள் பலர் இருக்கிறார்கள். ஆனால் சிலருக்கே ஒரு தனி இடம் கிடைக்கிறது. அதற்கு காரணம் அவர்களுடைய மனசாட்சியும் நேர்மையும். அர்ஜூனிடம் அந்தத் தூய்மை இருக்கிறது. இந்தப் படம் அவருக்கான அந்த அடுத்த கட்டத்தை உறுதிப்படுத்தும் என்று நம்புகிறேன்.


அன்னா பென் ஒரு அற்புதமான கலைஞர். வடிவுக்கரசி அம்மா ஒரு லெஜண்ட். 80களின் தமிழ் சினிமாவை நேசிக்கும் ஒருவராக, அவருடன் பணியாற்றியது எனக்கு மிகப்பெரிய மகிழ்ச்சி. திரையில் அவர் தோன்றும் ஒவ்வொரு காட்சிக்கும் ஒரு தனி எடை இருக்கிறது.


யோகி பாபு பற்றி சொல்ல வேண்டுமென்றால், அவரிடம் ஒரு தெய்வீகமான வரம் இருக்கிறது என்று நான் நம்புகிறேன். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை, யார் அவரைப் பார்த்தாலும் முகத்தில் சிரிப்பு வந்து விடுகிறது. அது சாதாரண விஷயம் அல்ல. அவர் இந்த இடத்தை அடைய எவ்வளவு கஷ்டப்பட்டார் என்பதை அவரிடமிருந்தே கேட்டிருக்கிறேன். அந்தப் பயணம் மிகவும் ஊக்கமளிக்கிறது.


இந்தப் படத்தில் நடித்த ஒவ்வொருவரும், சிறிய குழந்தை முதல் அருள்தாஸ் சார், இமான் அண்ணாச்சி, சதானந்த் என அனைவரும் தங்களுடைய முழு ஆற்றலையும் கொடுத்திருக்கிறார்கள். அந்த அர்ப்பணிப்பால்தான் இந்த இசையும், இந்த உலகமும் உயிர் பெற்றிருக்கிறது.


பாடலாசிரியர் மோகன் ராஜனுடன் சேர்ந்து இந்தப் படத்தில் பணியாற்றியது மிகப்பெரிய அனுபவம். இன்னும் வெளியாகாத இரண்டு பாடல்கள் இருக்கின்றன. அவற்றைப் பற்றி நான் மிகவும் பெருமைப்படுகிறேன். பழைய தமிழ் சினிமாவின் தத்துவப் பாடல்களின் ஆன்மாவை மீண்டும் கொண்டு வர வேண்டும் என்ற ஆசை எங்களுக்குள் இருந்தது. அந்த எண்ணத்தை ஹரிஷ் முன்வைத்தார். அதன் அடிப்படையில் உருவான அந்த இரண்டு பாடல்கள் எனது இசைப் பயணத்தில் மிகவும் முக்கியமானவை.


பதின்மூன்று ஆண்டுகளாக நான் தமிழ் சினிமாவில் இசையமைத்து வருகிறேன். ஆனால் இந்த இரண்டு பாடல்கள் குறித்து எனக்கு ஒரு தனிப்பட்ட பெருமை இருக்கிறது. அந்த பெருமையில் பாதி பங்கு மோகன் ராஜனுக்கும், பாதி பங்கு ஹரிஷுக்கும் சொந்தமானது.



“விஜய் பற்றி குறிப்பாக சொல்ல வேண்டும். அவர் ஒரு தனித்துவமான மனிதர். தனக்காக செய்யக்கூடிய விஷயங்களைத் தாண்டி, இன்று முழு சினிமா துறைக்காகவே பல நல்ல விஷயங்களைச் செய்ய முன்வந்திருக்கிறார். அவர் எங்கு இருந்தாலும் மகிழ்ச்சியையும் நேர்மறை எண்ணங்களையும் பரப்பக்கூடியவர். மிகவும் தூய்மையான மனம் கொண்டவர். நல்ல நோக்கங்களோடு செயல்படுபவர். அவருடன் இணைந்து பணியாற்றியது எனக்கு மகிழ்ச்சியான அனுபவம். மீண்டும் அவருடன் பணியாற்றப் போவதிலும் சந்தோஷமாக இருக்கிறேன்.


‘கான் சிட்டி’ ரசிகர்களுக்கு சிரிப்பையும், மகிழ்ச்சியையும், திருப்தியையும் தரும். அதே நேரத்தில் நாம் வாழும் சமூகத்தைப் பற்றியும் ஒரு சிந்தனையை ஏற்படுத்தும். பொழுதுபோக்குடன் ஒரு கருத்தையும் சொல்லக்கூடிய திரைப்படமாக இது இருக்கும்.  ‘கான் சிட்டி’ ஒரு சாதாரண திரைப்படம் அல்ல. இது பலருடைய கனவுகள், உழைப்பு, நம்பிக்கை ஆகியவற்றின் விளைவு. ஜூன் 26ஆம் தேதி திரையரங்குகளில் படம் வெளியாகிறது. அனைவரும் குடும்பத்துடன் வந்து படத்தைப் பார்த்து ஆதரவு அளிக்க வேண்டும். நன்றி.”


நடிகை வடிவுக்கரசி பேசியதாவது..,


“பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடக நண்பர்கள் அனைவருக்கும் என் வணக்கங்கள். நீங்கள் அனைவரும் இந்தப் படத்திற்காக இங்கே வந்திருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. ‘கான் சிட்டி’ என்ற விளக்கை ஏற்றி வைத்திருப்பது படக்குழு என்றால், அதை மக்களிடம் பிரகாசமாக கொண்டு சேர்க்கும் பொறுப்பு ஊடகங்களுக்கே சொந்தமானது. அந்தப் பொறுப்பை நீங்கள் சிறப்பாக செய்வீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.


இந்தப் படத்தில் நடிக்க என்னை அணுகியபோது இயக்குநர் ஹரிஷ் மிகவும் நேர்மையாகப் பேசினார். ‘இந்தக் கதாபாத்திரத்தை உங்களை மனதில் வைத்து எழுதவில்லை, ஆனால் இப்போது நீங்கள் இதைச் செய்தால் மிகவும் பொருத்தமாக இருக்கும் என்று நினைக்கிறேன்’ என்று வெளிப்படையாகச் சொன்னார். அந்த நேர்மை எனக்கு மிகவும் பிடித்தது.


அதன்பிறகு அவரது அலுவலகத்தில் அமர்ந்து முழுக் கதையையும் கேட்டேன். சுமார் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக அவர் மிகுந்த ஆர்வத்துடனும் உணர்வுடனும் கதையை விவரித்தார். கதையை கேட்டவுடன் இந்தப் படத்தில் கண்டிப்பாக நடிக்க வேண்டும் என்று முடிவு செய்தேன்.


படப்பிடிப்பு தளத்தில் இருந்த அனைவரும் இளம் தலைமுறையைச் சேர்ந்தவர்கள். ஆனால் அவர்கள் அனைவரிடமும் ஒரு அர்ப்பணிப்பும் தொழில்முறை அணுகுமுறையும் இருந்தது. அதனால் படப்பிடிப்பு மிகவும் மகிழ்ச்சியாக நடந்தது. புதிய தலைமுறை திரைப்படக் கலைஞர்களுடன் இணைந்து பணியாற்றிய அனுபவம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது.


யோகி பாபு, அர்ஜூன் தாஸ் உள்ளிட்ட அனைவருடனும் பணியாற்றியது மறக்க முடியாத அனுபவம். குறிப்பாக அர்ஜூன் தாஸின் அர்ப்பணிப்பும் உழைப்பும் என்னை மிகவும் கவர்ந்தது. அவர் இந்தப் படத்தின் மூலம் இன்னும் பெரிய உயரத்தை அடைவார் என்று நம்புகிறேன்.


இயக்குநர் ஹரிஷ் படப்பிடிப்பு முழுவதும் மிகவும் தெளிவாகவும் திட்டமிட்டும் செயல்பட்டார். அவருடைய நம்பிக்கையும் உறுதியும் இந்தப் படத்தின் மிகப்பெரிய பலம். இந்தப் படத்தில் பணியாற்றிய ஒவ்வொரு நாளும் எனக்கு ஒரு இனிய அனுபவமாக இருந்தது. முழுக் குழுவும் ஒரு குடும்பம் போல இணைந்து உழைத்தது. அதனால்தான் இந்தப் படம் இவ்வளவு சிறப்பாக வந்திருக்கிறது என்று நான் நம்புகிறேன்.


எனக்கு உடல்நலப் பிரச்சினைகள் இருந்தபோதும் இந்தப் படத்தில் நடித்தேன். படப்பிடிப்பு முடிந்த மறுநாளே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டிய நிலை ஏற்பட்டது. ஆனால் அந்தக் காலகட்டத்திலும் படக்குழுவினர் என்மீது காட்டிய அக்கறையை நான் மறக்க முடியாது.


அர்ஜூன் தாஸ், யோகி பாபு மற்றும் படக்குழுவில் இருந்த இளம் கலைஞர்கள் அனைவரும் மிகவும் அன்பாகவும் மரியாதையுடனும் நடந்துகொண்டார்கள். குறிப்பாக அர்ஜூன் தாஸ் எப்போதும் எனக்கு தேவையான உதவிகளை செய்து, மிகவும் அக்கறையுடன் பார்த்துக் கொண்டார்.


இந்தப் படத்தில் நடித்த ஒவ்வொருவரும் கடினமாக உழைத்திருக்கிறார்கள். வெளியில் இருந்து பார்க்கும்போது எல்லாமே எளிதாகத் தோன்றலாம். ஆனால் திரைக்குப் பின்னால் நிறைய உழைப்பும் அர்ப்பணிப்பும் இருக்கிறது. அந்த உழைப்பின் பலனை ரசிகர்கள் திரையில் பார்க்கப் போகிறார்கள்.


இயக்குநர் ஹரிஷ் மற்றும் அவரது சகோதரர் பரத் இருவரும் பல வருட அனுபவத்தை கொண்டவர்கள். பல்வேறு தயாரிப்பு நிறுவனங்களில் பணியாற்றி கற்றுக்கொண்ட அனுபவத்தை இந்தப் படத்தில் முழுமையாக பயன்படுத்தியிருக்கிறார்கள். அதனால்தான் படம் மிகவும் திட்டமிட்ட முறையில் உருவாகியுள்ளது.


கதை கேட்ட நாளிலிருந்தே இந்தப் படம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அந்த இரண்டு மணி நேரக் கதை சொல்லும் அனுபவமே என்னை முழுவதுமாக ஈர்த்துவிட்டது. அதே உணர்வை ரசிகர்களும் திரையரங்குகளில் அனுபவிப்பார்கள் என்று நம்புகிறேன்.


‘கான் சிட்டி’ வெறும் பொழுதுபோக்கு திரைப்படம் மட்டுமல்ல. மக்களை சிரிக்கவும் மகிழ்ச்சியாக இருக்கவும் வைக்கும் அதே நேரத்தில் ஒரு நல்ல கருத்தையும், சமூக விழிப்புணர்வையும் சொல்லும் படம். வாழ்க்கையில் பணம், ஆசை, முடிவுகள் ஆகியவற்றைப் பற்றி சிந்திக்க வைக்கும் அம்சங்களும் இதில் உள்ளன.


இந்தப் படத்தைப் பார்த்து ரசிகர்கள் இரண்டு மணி நேரம் தங்களுடைய கவலைகளை மறந்து மகிழ்ச்சியாக இருப்பார்கள். அதே சமயம் ஒரு நல்ல செய்தியையும் எடுத்துச் செல்வார்கள். இயக்குநர் ஹரிஷ் மற்றும் முழுப் படக்குழுவினரின் உழைப்புக்கு இந்தப் படம் மிகப்பெரிய வெற்றியைத் தர வேண்டும் என்று மனதார வாழ்த்துகிறேன். நன்றி.”


நடிகர் யோகி பாபு பேசியதாவது..,


“அனைவருக்கும் வணக்கம். இந்தப் படத்தில் நடிக்க வாய்ப்பு அளித்த இயக்குநர் ஹரிஷ், தயாரிப்பாளர்கள் மற்றும் முழுப் படக்குழுவினருக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.


அர்ஜூன் தாஸுடன் எனக்கு நல்ல நட்பு இருக்கிறது. தொடர்ந்து அவருடன் படங்களில் பணியாற்றி வருகிறேன். ஒரு ஹீரோவுக்கு நல்ல நண்பன் இருந்தாலே போதும், ஹீரோயின் கூட தேவையில்லை என்று நான் அடிக்கடி நகைச்சுவையாக சொல்வேன். அந்த அளவுக்கு எங்களுடைய நட்பு நெருக்கமானது.


ஹரிஷை நான் இன்றல்ல, பல வருடங்களாக அறிவேன். பல படங்களில் பணியாற்றிய காலத்திலிருந்தே அவருடைய உழைப்பையும், சினிமா மீதான அர்ப்பணிப்பையும் பார்த்திருக்கிறேன். அவர் இயக்குநராக வேண்டும் என்ற ஆசையை பல ஆண்டுகளாகவே வெளிப்படுத்தியிருந்தார். அப்போது கூட நான் அவரிடம், ‘நீ கண்டிப்பாக இயக்குநராக வேண்டும்’ என்று சொன்னவன்.


இன்று அவர் இயக்குநராக உருவாகி, அவரைப் பற்றி அனைவரும் இவ்வளவு பாராட்டிப் பேசுவதைப் பார்க்கும்போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இது ஆரம்பம் மட்டுமே. இதைத் தொடர்ந்து பெரிய நடிகர்களுடன், பெரிய படங்களை இயக்கி இன்னும் உயரங்களுக்கு செல்ல வேண்டும் என்று மனதார வாழ்த்துகிறேன்.


அர்ஜூன் தாஸ் இந்தப் படத்திற்காக மிகுந்த உழைப்பை செலுத்தியிருக்கிறார். அவரது அர்ப்பணிப்பும், தொழில்முறை அணுகுமுறையும் எப்போதும் என்னை கவர்கிறது. அவருடன் மீண்டும் இணைந்து பணியாற்றியது மகிழ்ச்சியான அனுபவம்.


இந்தப் படத்தின் முழுக் குழுவும் ஒரு குடும்பம் போல இணைந்து பணியாற்றியது. படப்பிடிப்பு தளத்தில் அனைவரும் ஒருவருக்கொருவர் உதவி செய்து, படம் சிறப்பாக வர வேண்டும் என்பதற்காக கடினமாக உழைத்தனர். அந்த ஒற்றுமை இந்தப் படத்தின் மிகப்பெரிய பலம்.


ஒளிப்பதிவாளர், இசையமைப்பாளர், கலை இயக்குநர், உடை வடிவமைப்பாளர், உதவி இயக்குநர்கள் என அனைவரும் தங்களுடைய சிறந்த பங்களிப்பை வழங்கியுள்ளனர். அவர்களுடைய உழைப்பின் பலன் திரையில் தெளிவாகத் தெரியும்.


இந்தப் படம் வெற்றி பெற வேண்டும் என்று நான் மனதார வேண்டிக்கொள்கிறேன். ‘கான் சிட்டி’ திரைப்படம் ரசிகர்களை மகிழ்விக்கும், குடும்பத்தோடு ரசிக்கக்கூடிய ஒரு சிறந்த பொழுதுபோக்கு படமாக இருக்கும். அனைவரும் திரையரங்குகளில் வந்து ஆதரவு அளிக்க வேண்டும்.


இந்தப் படத்திற்காக உழைத்த அனைத்து கலைஞர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள், தயாரிப்பாளர்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடக நண்பர்கள் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை நன்றி. ‘கான் சிட்டி’ மிகப்பெரிய வெற்றி பெற வேண்டும் என்று வாழ்த்துகிறேன். நன்றி.”


நடிகை அன்னா பென் பேசியதாவது.., 


“அனைவருக்கும் வணக்கம். நான் தமிழ் பேச முயற்சி செய்கிறேன். ஏதேனும் தவறு இருந்தால் மன்னித்துக் கொள்ளுங்கள். முதலில் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, ‘கான் சிட்டி’ திரைப்படத்திற்கு ஆதரவு அளிக்கும் பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடக நண்பர்கள் அனைவருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.


இது எனது இரண்டாவது தமிழ் திரைப்படம். ‘கொட்டுக்காளி’ படத்தில் மீனா என்ற கதாபாத்திரத்தில் நடித்தபோது நீங்கள் கொடுத்த அன்பும் பாராட்டும் எனக்கு மிகப்பெரிய ஊக்கமாக இருந்தது. அந்த மீனா கதாபாத்திரத்திற்கு முற்றிலும் எதிர்மாறான ஒரு வேடத்தில் தான் ‘கான் சிட்டி’ படத்தில் நடித்திருக்கிறேன்.


இயக்குநர் ஹரிஷ் முதன்முதலில் இந்தக் கதாபாத்திரத்தை என்னிடம் கூறியபோது எனக்கு மிகவும் பதற்றமாக இருந்தது. இதுவரை நான் நடித்திராத ஒரு புதிய பரிமாணத்தில் இருக்கும் கதாபாத்திரம் அது. நடிப்பு பாணியும், வெளிப்பாடும், கதாபாத்திரத்தின் அளவும் முற்றிலும் வித்தியாசமாக இருந்தது. அதனால் அது எனக்கு ஒரு பெரிய சவாலாக இருந்தது.


பல கமர்ஷியல் கதைகளை நான் இதற்கு முன் கேட்டிருந்தாலும், அந்த உலகத்தில் நான் எப்படி பொருந்துவேன் என்ற தயக்கம் இருந்தது. ஆனால் ஹரிஷ் என்மீது முழு நம்பிக்கை வைத்தார். ‘நீங்கள் இதைச் செய்ய முடியும். இது வித்தியாசமாகவும், யாரும் எதிர்பார்க்காத வகையிலும் இருக்கும்’ என்று தொடர்ந்து ஊக்கப்படுத்தினார். அந்த நம்பிக்கையே இந்தக் கதாபாத்திரத்தை செய்ய எனக்கு தைரியம் கொடுத்தது.


ஹரிஷிடம் நான் மிகவும் ரசித்த விஷயம் அவரது உறுதியான நம்பிக்கை. படப்பிடிப்பு தளத்தில் எந்த சவால் வந்தாலும், எந்த சந்தேகம் எழுந்தாலும், அவர் எப்போதும் அமைதியாகவும் நம்பிக்கையுடனும் அதை எதிர்கொண்டார். சினிமா மீதான அவரது காதலும் அர்ப்பணிப்பும் என்னை மிகவும் கவர்ந்தது.


இந்தப் படத்தை உருவாக்க அவர் எடுத்த உழைப்பு அளவிட முடியாதது. படம் தொடங்கிய நாளிலிருந்து ஜூன் 26 வெளியீடு வரை, ஒவ்வொரு கட்டத்திலும் சிறந்ததை கொடுக்க வேண்டும் என்பதில் அவர் உறுதியாக இருந்தார். பாடல்கள், விளம்பரங்கள், புரமோஷன்கள், வெளியீடு என அனைத்திலும் அவர் முழு ஈடுபாட்டுடன் செயல்பட்டார். அதற்காக அவருக்கு என் மனமார்ந்த வாழ்த்துகளும் நன்றிகளும்.


அர்ஜூன் தாஸுடன் பலமுறை இணைந்து பணியாற்ற முயற்சி செய்திருந்தேன். இந்தப் படத்தின் மூலம் அது நிறைவேறியுள்ளது. ஒரு நடிகராக அவர் திறமையானவர் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் ஒரு மனிதராகவும் அவர் மிகவும் எளிமையானவர், அன்பானவர். படப்பிடிப்பு தளத்தில் அனைவரையும் சமமாக மதித்து, மிகவும் ஒத்துழைப்புடன் பணியாற்றினார்.


வடிவுக்கரசி மேம் ஒரு லெஜெண்ட். அவருடன் பணியாற்றியது எனக்கு ஒரு கனவு நிறைவேறிய அனுபவம். மூத்த கலைஞர்களுடன் பணியாற்றும்போது அவர்கள் பகிரும் அனுபவங்கள் எனக்கு எப்போதும் மிகப்பெரிய பாடமாக இருக்கும். இந்தப் படப்பிடிப்பின் போது அவர் என்னுடன் நிறைய நேரம் செலவிட்டு, தனது அனுபவங்களை பகிர்ந்து கொண்டார். தமிழ் வசனங்களைப் பேசுவதில் எனக்கு ஆரம்பத்தில் இருந்த பயத்தை போக்கவும் உதவினார்.


யோகி பாபு சார் பற்றி சொல்ல வேண்டுமென்றால், அவர் என்னுடைய ஆயுளை பத்து வருடம் அதிகரித்திருப்பார் என்று நினைக்கிறேன். ஏனெனில் அவர் எப்போதும் அனைவரையும் சிரிக்க வைத்துக் கொண்டே இருப்பார். காட்சிக்கு நடுவிலும், கேமரா பின்னாலும் அவர் சொல்வதெல்லாம் நம்மை சிரிக்க வைக்கும். அவருடன் பணியாற்றியது மிகவும் மகிழ்ச்சியான அனுபவம்.


அகிலன் திரையில்  எனது மகன். மிகவும் திறமையான மற்றும் அன்பான சிறுவன். ஃபாக்ஸி மற்றும் மற்ற கலைஞர்களுடன் பணியாற்றிய அனுபவமும் மிகவும் இனிமையானது. இந்தப் படத்தில் பணியாற்றிய ஒவ்வொருவரும் எனக்கு மிகுந்த ஆதரவாக இருந்தனர்.


இசையமைப்பாளர் ஷான் ரோல்டனின் இசை இந்தப் படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளது. மேலும், இந்தப் படத்தில்தான் நான் முதன்முறையாக நடனமாடியிருக்கிறேன். அதற்காக சந்தோஷ் மாஸ்டருக்கு சிறப்பு நன்றி. சவாலான நடன அசைவுகளை நம்பிக்கையுடன் கற்றுக்கொடுத்து என்னை ஊக்கப்படுத்தினார்.


‘கான் சிட்டி’ திரைப்படத்தை அனைவரும் திரையரங்குகளில் பார்த்து ஆதரவு அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இந்த நிகழ்ச்சிக்கு வந்ததற்கும், தொடர்ந்து ஆதரவு அளிப்பதற்கும் அனைவருக்கும் நன்றி.”


நடிகர் அர்ஜூன் தாஸ் பேசியதாவது.., 


“அனைவருக்கும் வணக்கம். முதலில் இயக்குநர் ஹரிஷுக்கு என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஆரம்பத்திலிருந்தே மிகத் தெளிவான திட்டமிடலுடன், முழு நம்பிக்கையுடனும், உறுதியுடனும் இந்தப் படத்தை முன்னெடுத்து வந்திருக்கிறார். ஒரு இயக்குநராக அவர் காட்டிய அர்ப்பணிப்பும், உழைப்பும், தன்னம்பிக்கையும் மிகவும் பாராட்டத்தக்கது.


இந்தப் படத்தை இவ்வளவு பெரிய அளவில் மக்களிடம் கொண்டு சேர்க்க தயாரிப்பாளர்கள் எடுத்த முயற்சி மிகப் பெரியது. நகரம் முழுவதும் போஸ்டர்கள், பேனர்கள், விளம்பரங்கள் என இப்படத்திற்காக அவர்கள் செய்துள்ள புரமோஷன் என்னை மிகவும் மகிழ்ச்சியடைய வைத்துள்ளது. அதற்காக அனைத்து தயாரிப்பாளர்களுக்கும் எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.


அதேபோல் வெளியீட்டில் இணைந்துள்ள அபிஹிம்சா பிலிம்ஸ், டெல்டா ஸ்டுடியோஸ் மற்றும் படத்திற்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி. படத்தைப் பார்த்து பாராட்டியவர்களுக்கும் எனது நன்றிகள்.


‘கான் சிட்டி’ ஒரு குடும்பத்துடன், நண்பர்களுடன், உறவினர்களுடன் சேர்ந்து ரசிக்கக்கூடிய திரைப்படம். இதில் உணர்ச்சிகளும் இருக்கின்றன, நகைச்சுவையும் இருக்கிறது, அதே நேரத்தில் மனதைத் தொடும் ஒரு அழகான கதையும் இருக்கிறது.


இந்தப் படத்தில் நடித்துள்ள ஒவ்வொரு நடிகரும் தங்களது சிறந்த நடிப்பை வழங்கியிருக்கிறார்கள். அன்னா பென், வடிவுக்கரசி அம்மா, யோகி பாபு, அருள்தாஸ் மற்றும் மற்ற அனைத்து கலைஞர்களின் பங்களிப்பும் படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளது.


இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் அற்புதமான இசையை வழங்கியுள்ளார். தொழில்நுட்பக் குழுவின் உழைப்பும் படத்தின் தரத்தை உயர்த்தியுள்ளது.


இந்தப் படம் அனைவருக்கும் பிடிக்கும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. நம்பிக்கையுடன் திரையரங்குகளுக்கு வாருங்கள். படம் பார்த்துவிட்டு மகிழ்ச்சியுடன் வீடு திரும்புவீர்கள் என்று உறுதியாக நம்புகிறேன்.இந்தப் படத்தில் என்னுடன் இணைந்து பணியாற்றிய அனைத்து மூத்த கலைஞர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் முழு படக்குழுவினருக்கும் மீண்டும் ஒருமுறை என் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.


‘கான் சிட்டி’ திரைப்படத்திற்கு உங்கள் ஆதரவைத் தொடர்ந்து வழங்குங்கள். அனைவருக்கும் நன்றி.”


இயக்குநர் ஹரிஷ் துரைராஜ் பேசியதாவது..,


“அனைவருக்கும் வணக்கம். முதலில் இந்த மேடையில் நான் நன்றி சொல்ல வேண்டிய மிக முக்கியமான இரண்டு பேர் உள்ளனர். குனா ப்ரோ போஸ்ட் ஆபீஸ் மற்றும் விஜய் ப்ரோ (சில்வர் ட்ரீ ஸ்டுடியோஸ்). இவர்கள் இருவரும் இல்லையென்றால் ‘பவர்ஹவுஸ் பிக்சர்ஸ்’ என்ற நிறுவனமும், ‘கான் சிட்டி’ திரைப்படமும் உருவாகியிருக்காது. ஆரம்பம் முதல் இன்று வரை என்னுடன் நின்று உறுதுணையாக இருந்திருக்கிறார்கள்.


சினிமாவில் நான் எப்போதும் கடவுளிடம் வேண்டுவது நல்ல மனிதர்கள் என்னுடன் இருக்க வேண்டும் என்பதைத்தான். அந்த வகையில் எனது தயாரிப்பாளர்கள், பங்குதாரர்கள், நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.


இந்தப் படத்தின் இணைத் தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், ஆடியோ உரிமையை பெற்றவர்கள், ஓடிடி உரிமையாளர்கள் என அனைவரும் இந்தப் படத்தின் மீது மிகப்பெரிய நம்பிக்கை வைத்துள்ளனர். அவர்களின் ஆதரவு இல்லாமல் இந்தப் பயணம் சாத்தியமாகியிருக்காது.


என்னுடைய தொழில்நுட்பக் குழுவுக்கு நான் தனிப்பட்ட முறையில் நன்றி சொல்ல வேண்டும். ஒளிப்பதிவாளர் ஃபாக்ஸி, எடிட்டர் அருள் மோசஸ், கலை இயக்குநர் ராஜ், இசையமைப்பாளர் ஷான் ரோல்டன், நடன இயக்குநர் சந்தோஷ் மற்றும் முழு தொழில்நுட்பக் குழுவும் இந்தப் படத்தின் முதுகெலும்பாக இருந்துள்ளனர். வெறும் 55 நாட்களில் இந்தப் படத்தை முடிக்க அவர்களின் உழைப்பே காரணம்.


பாடலாசிரியர் மோகன் ராஜன் மற்றும் இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் ஆகியோரின் கூட்டணி இந்தப் படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளது. படத்தில் இடம்பெற்றுள்ள ஏழு பாடல்களும் எனக்கு மிகவும் சிறப்பானவை. குறிப்பாக இன்னும் வெளியாகாத பாடல்களையும் ரசிகர்கள் ரசிப்பார்கள் என்று நம்புகிறேன்.


நடிகர், நடிகைகள் பற்றி பேச வேண்டுமென்றால், ஒவ்வொருவரும் தங்களின் சிறந்த பங்களிப்பை அளித்துள்ளனர். வடிவுக்கரசி அம்மாவின் நடிப்பு படம் பார்த்த அனைவராலும் பாராட்டப்படுகிறது. இந்தக் கதாபாத்திரத்தில் அவரை தேர்வு செய்தது எனது வாழ்க்கையின் மிகச் சரியான முடிவுகளில் ஒன்று என்று சொல்லலாம்.


அன்னா பென் இந்தப் படத்தில் மிகச்சிறந்த நடிப்பை வழங்கியிருக்கிறார். அவருடைய கதாபாத்திரம் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தும். அதேபோல் யோகி பாபு அண்ணா எனக்கு மிகவும் தனிப்பட்ட ஆதரவாக இருந்துள்ளார். கடந்த ஐந்து ஆண்டுகளாக நான் படம் இயக்க வேண்டும் என்று தொடர்ந்து ஊக்கப்படுத்தியவர் அவர்தான். இந்தப் படத்திற்காக அவர் அளித்த ஒத்துழைப்பை நான் வாழ்நாள் முழுவதும் மறக்க மாட்டேன்.


அதேபோல் அர்ஜுன் தாஸ் சார் இந்தப் படத்திற்கு சம்மதம் சொல்லவில்லை என்றால் ‘கான் சிட்டி’ உருவாகியிருக்காது. மிகுந்த அர்ப்பணிப்புடனும் நேர்த்தியுடனும் நடித்துள்ளார். இந்தப் படம் அவரது திரைப்பயணத்தில் ஒரு முக்கியமான மைல்கல்லாக அமையும் என்று நான் நம்புகிறேன்.


இறுதியாக என் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் நன்றி. குறிப்பாக என் மனைவிக்கு நான் சிறப்பு நன்றி சொல்ல வேண்டும். நான் மாதம் பத்தாயிரம் ரூபாய் சம்பளம் வாங்கிய காலத்திலேயே என்னை நம்பி திருமணம் செய்து கொண்டார். கடந்த ஐந்து ஆண்டுகளாக என்னுடைய கனவுக்காக என்னுடன் இருந்து அனைத்து கஷ்டங்களையும் தாங்கி வந்திருக்கிறார். இன்று இந்த மேடையில் நான் நிற்பதற்கு அவருடைய ஆதரவும் ஒரு முக்கிய காரணம்.


ஜூன் 26ஆம் தேதி ‘கான் சிட்டி’ திரைப்படம் வெளியாகிறது. இந்தப் படத்தை குடும்பத்துடன் திரையரங்குகளில் பார்த்து ஆதரிக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். அனைவருக்கும் நன்றி.”


பவர் ஹவுஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் ஹரிஷ் துரைராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தில் அர்ஜூன் தாஸ், அன்னா பென், யோகி பாபு, வடிவுக்கரசி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 


கடனில் சிக்கித் தவிக்கும் ஒரு குடும்பத்தின் வாழ்க்கையில் எதிர்பாராத விதமாக ஒரு பணம் அச்சிடும் மெஷின் கிடைப்பதை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படம், அதன்பிறகு நடக்கும் சம்பவங்களை நகைச்சுவை மற்றும் பரபரப்புடன் சொல்லும் படமாக அமைந்துள்ளது.


மங்களூர், சென்னை, மும்பை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் படமாக்கப்பட்டுள்ள இந்த திரைப்படத்தின் டிஜிட்டல் உரிமையை Netflix நிறுவனம் கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.


படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்து வரும் நிலையில், ஜூன் 26ஆம் தேதி வெளியாகும் “கான் சிட்டி” திரைப்படத்தை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர்.


தொழில்நுட்ப குழு:


இயக்கம்: ஹரிஷ் துரைராஜ்

தயாரிப்பு: Power House Pictures

நடிப்பு: அர்ஜூன் தாஸ், அன்னா பென், யோகி பாபு, வடிவுக்கரசி

ஒளிப்பதிவு: அரவிந்த் விஸ்வநாதன்

எடிட்டிங்: அருள் மோசஸ்

இசை: ஷான் ரோல்டன்

கலை இயக்கம்: ராஜ் கமல்

உடை வடிவமைப்பு: நவா ராம்போ ராஜ்குமார்

ஸ்டண்ட்: ஆக்ஷன் சந்தோஷ்

மக்கள் தொடர்பு: யுவராஜ்