மம்மட்டியான் ஸ்டார்ஸ்’ இணையத் தொடர் விமர்சனம்
’மம்மட்டியான் ஸ்டார்ஸ்’ இணையத் தொடர் விமர்சனம்
வைபவ் முருகேசன், வெங்கட பாலமுரளி மற்றும் ஜகபர் சாதிக் மூன்று பேரும் நண்பர்கள் மட்டும் இன்றி, இந்திய நட்சத்திர கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.வீர் சிங் (எம்.எஸ்.டோனி)-ன் தீவிர ரசிகர்களாகவும் இருக்கிறார்கள். இவர்கள் மூன்று பேரும் கேப்டனாக இருந்து ‘மம்மட்டியான் ஸ்டார்ஸ்’ என்ற கிரிக்கெட் அணியை வழி நடத்துவதோடு, பல்வேறு போட்டிகளில் பங்கேற்று விளையாடி வருகிறார்கள். அதன்படி, தங்களது கிராமத்தில் நடத்தப்படும் கிரிக்கெட் போட்டியில் இவர்களது அணி பங்கேற்று விளையாடி வரும் நிலையில், கிரிக்கெட் வீரர் வீர் சிங் விளையாடும் கடைசி கிரிக்கெட் போட்டியை நேரில் பார்க்க வேண்டும் என்று முடிவு செய்கிறார்கள்.
கிரிக்கெட் போட்டியின் இறுதிப் போட்டியில் வெற்றி பெற்று பரிசுத் தொகை ரூ.50 ஆயிரத்தை வென்று, அதன் மூலம் சென்னையில் நடக்கும் கிரிக்கெட் போட்டியை பார்க்கலாம் என்று திட்டம் போட, ஊர் தலைவரின் திடீர் மரணத்தால் இறுதிப் போட்டி நடத்தப்படாமல் நின்று விடுகிறது. இதனால், ஊர் தலைவரின் அலுவலகத்தில் வைக்கப்பட்டிருக்கும் கிரிக்கெட் போட்டியின் ரன்னர் பரிசுத் தொகையை திருடி, அதை கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட் வாங்க அனுப்பிவிடுகிறார்கள். டிக்கெட் கிடைத்த மகிழ்ச்சியில் மூன்று நண்பர்களும் சென்னைக்கு செல்ல, அவர்களுடன் வைபவ் முருகேசனின் முன்னாள் காதலியான லாவண்யா அன்பழகனும் செல்கிறார்.
தங்களது தல விளையாடும் போட்டியை நேரில் பார்க்கப் போகிறோம் என்ற மகிழ்ச்சியில் இருப்பவர்கள், தங்களிடம் இருக்கும் டிக்கெட் போலி என்று தெரிந்ததும் பேரதிர்ச்சியடைகிறார்கள். இருந்தாலும், எப்படியாவது தல விளையாடும் போட்டியை நேரில் பார்த்துவிட்டு தான் ஊருக்கு திரும்ப வேண்டும் என்று முடிவு எடுக்கும் நண்பர்கள், அடுத்த போட்டி நடப்பதற்குள் அதற்கான பணத்தை தயார் செய்யும் முயற்சியில் இறங்க, அதனால் பல்வேறு பிரச்சனையில் சிக்கிக் கொள்கிறார்கள். அந்த பிரச்சனைகளில் இருந்து மீண்டு, அவர்கள் நினைத்தது போல், அவர்களது தல விளையாடும் போட்டியை நேரில் பார்த்தார்களா ? இல்லையா ? என்பதை 6 அத்தியாயங்களாக சொல்வதே ‘மம்மட்டியான் பாய்ஸ்’.
கிரிக்கெட் வீரர்களாக இருந்தாலும் சரி, சினிமா நட்சத்திரங்களாக
