-


Loading latest news...

“ஹெய் வெசோ” திரைப்படம் பிரம்மாண்டமாக துவங்கியது !!

 சுதீர் ஆனந்த், பிரசன்னா குமார் கோட்டா, சிவா சேர்ரி, ரவிகிரண், வஜ்ர வராஹி சினிமாஸ்  இணையும் புரடக்சன் நம்பர் 1 – “ஹெய் வெசோ”  திரைப்படம் பிரமாண்டமாக துவங்கியது!! VV வினாயக் முதல் காட்சியை  க்ளாப் அடித்து துவக்கி வைத்தார் !!


“ஹெய் வெசோ” திரைப்படம் பிரம்மாண்டமாக துவங்கியது !! 




சின்னத்திரை, வெள்ளித்திரை இரண்டிலும் தன் தனித்த அடையாளத்தை உருவாக்கியிருக்கும் சுதீர் ஆனந்த் (சுடிகாளி சுதீர்) தனது புதிய படத்தை இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். பிரசன்னா குமார் கோட்டா ( Prasanna Kumar Kota) இயக்குநராக  அறிமுகமாகும் , சிவா சேர்ரி – ரவிகிரண் ஆகியோர் வஜ்ர வராஹி சினிமாஸ் (Vajra Varahi Cinema) சார்பில் தங்கள் முதல்  தயாரிப்பாக இப்படத்தை தயாரிக்கிறார்கள்.  இது சுதீர் ஆனந்த் ஹீரோவாக நடிக்கும் ஐந்தாவது படமாகும். “கோர்ட்” படத்தில் வில்லனாக, தனது அழுத்தமான நடிப்பால் அனைவரையும் கவர்ந்த சிவாஜி, இப்புதிய படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.


“ஹெய் வெசோ”  எனும் தலைப்பு, விவசாயிகளிடையே பொதுவாகப் பயன்படுத்தப்படும் ஒரு நாட்டுப்புறச் சொல் என்பதால், படத்திற்கு இயற்கையான மண் மணத்தைக் கொடுக்கிறது. டைட்டில் டிசைன்  வெகு அற்புதமாக கப்பலின் வடிவில், அதில் பெண்ணின் கால் வடிவில் ‘S’ எழுத்தாக அமைந்திருப்பது சிறப்பு. ஆயுதம் ஏந்திய மர்ம மனித உருவமும் அதில் காணப்படுகிறது.


டைட்டில் போஸ்டரில் புராணத்தன்மையும் கிராமிய வட்டார சுவையும் கலந்திருக்கிறது. பொற்காலணியும் விரலணியும் அணிந்த ஒரு தெய்வீக பாதம் பெரிய பச்சை இலையில் பதித்துக் கொண்டிருக்கும் காட்சி அதில் இடம்பெற்றுள்ளது. அந்த இலையில் சடங்கினை குறிக்கும் வகையில் சமைத்த சாதம், ஆடு-கோழி தலைகள், பூக்கள், குங்குமம் வைக்கப்பட்டுள்ளது. இரத்தம் சொட்டும் வாள், கதையின் தீவிரத்தன்மையையும்,  தெய்வீக சக்தியும் இருப்பதை வலியுறுத்துகிறது.


படம் இன்று பிரமாண்ட விழாவுடன் கோலாகலமாக தொடங்கப்பட்டது. ஹீரோ நிகில் டைட்டிலை வெளியிட்டார். பன்னி வாசு (Bunny Vasu)  திரைக்கதைப் பிரதியை வழங்கினார். இயக்குநர்கள் வசிஷ்டா (Vassishta) , சந்தூ மொண்டேட்டி (, Chandoo Mondeti) , மெஹர் ரமேஷ் ( Meher Ramesh )கேமரா ஸ்விட்ச் ஆன் செய்தனர். VV வினாயக் முகூர்த்தக் காட்சிக்கு க்ளாப் அடித்தார். இயக்குநர் பிரசன்னா குமார் முதல் காட்சிக்கு “ஆக்சன்” கூறினார்.


நடாஷா சிங் (Natasha Singh) , நக்‌ஷா சரண் (Naksha Saran) ஆகியோர் ஹீரோயின்களாகவும், பிரபல கன்னட நடிகை அக்‌ஷரா கவுதா (Akshara Gowda)  முக்கிய வேடத்திலும்  நடிக்கிறார்கள். மொட்ட ராஜேந்திரன், கெட்அப் ஸ்ரீனு, பெவரா துஹிதா சரண்யா உள்ளிட்டோரும் இணைந்து  நடிக்கின்றனர்.


இளம் மற்றும் திறமையான தொழில்நுட்பக் குழு இந்த படத்தில் பணியாற்றுகிறது. அனுதீப் தேவ் (Anudeep Dev) இசையமைக்க, சுஜாதா சித்தார்த் ஒளிப்பதிவு செய்கிறார். சோட்டா K பிரசாத் (Chota K Prasad) எடிட்டிங், பிரஹ்மா கடலி ( Brahma Kadali )ஆர்ட் டைரக்சன், சிந்தா ஸ்ரீனிவாஸ் எழுத்து ஆகிய பணிகளை மேற்கொள்கிறார்கள்.


“ஹெய் வெசோ”  படம் தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் ஆகிய தென்னிந்திய மொழிகளில் பிரம்மாண்டமாக வெளியிடப்படவுள்ளது.


நடிகர்கள் : சுதீர் ஆனந்த், சிவாஜி, நடாஷா சிங், நக்‌ஷா சரண், அக்‌ஷரா கவுதா, மொட்ட ராஜேந்திரன், கெட்அப் ஸ்ரீனு, பெவரா துஹிதா சரண்யா மற்றும் பலர்.


தொழில்நுட்பக் குழு:


தயாரிப்பு நிறுவனம்: வஜ்ர வராஹி சினிமாஸ்

தயாரிப்பாளர்கள்: சிவா சேர்ரி – ரவிகிரண்

இயக்குநர்: பிரசன்னா குமார் கோட்டா

இசை: அனுதீப் தேவ்

ஒளிப்பதிவு: சுஜாதா சித்தார்த்

எடிட்டிங்: சோட்டா கே பிரசாத்

தயாரிப்பு வடிவமைப்பாளர்: பிரம்ம கடாலி

பாடல்கள்: ராமஜோகைய்யா சாஸ்த்ரி

எழுத்து: சிந்தா ஸ்ரீனிவாஸ்

உடை வடிவமைப்பு: ரஞ்சிதா குவ்வலா

நடன அமைப்பு: விஜய் போலாகி

ஸ்டண்ட்: ப்ருத்வி

லைன் புரொட்யூசர்: உதய் நந்திபட்டி

மார்க்கெட்டிங்: மனோஜ் வல்லூரி (Hashtag Media)

பிரசாரக் கலை: தானி ஆலே

மக்கள் தொடர்பு: யுவராஜ்



Sudheer Anand, Prasanna Kumar Kota, Siva Cherry, Ravikiran, Vajra Varahi Cinemas Production No 1 Titled Hai Lesso, Launched Grandly Today, VV Vinayak Clapped For Muhurtham Shot


Sudheer Anand, fondly known as Sudigaali Sudheer, continues to make his mark on both the small screen and the silver screen. His new film has been officially announced today. Directed by Prasanna Kumar Kota in his directorial debut, the movie also marks the production debut for Siva Cherry and Ravikiran under the banner Vajra Varahi Cinemas. Touted as Production No. 1 for the banner, this project is the fifth film as a lead actor for Sudheer Anand. Billed to be a rural drama, Shivaji who recently spellbound with his intense performance in Court plays the antagonist in the new movie.


Titled impressively Hai Lesso, it is derived from a colloquial expression commonly used in farming communities, giving it an authentic rural touch. The title logo is creatively designed, shaped like a ship with a female leg forming the letter ‘S’. A mysterious figure holding a weapon can also be spotted.


The title poster adds a mythological and rustic tone. It features a regal foot adorned with golden anklets and toe rings, stepping onto a large green leaf. On the leaf lies a traditional offering of cooked rice mixed with hen and goat heads, flowers, and sindoor, representing rituals and sacrifice. A blood-soaked sword heightens the drama, hinting at divine power and conflict. The title poster alone indicates the intense nature of the story.


The film was launched in a grand ceremony today, attended by the core team and several special guests. Hero Nikhil unveiled the title, while Bunny Vasu ceremoniously handed over the script to the makers. Directors Vassishta, Chandoo Mondeti, and Meher Ramesh switched on the camera, and VV Vinayak sounded the clapboard for the muhurtham shot. Director Prasanna Kumar himself called the action for the film’s very first shot.


Natasha Singh and Naksha Saran are the heroines in the movie, while popular Kannada actress Akshara Gowda will be seen in a pivotal role. Motta Rajendran, Getup Srinu, and Bevara Duhitha Saranya are the other prominent cast.


The movie will have a very young and talented team of technicians taking care of different crafts. Anudeep Dev scores the music, while Sujatha Siddarth handles the cinematography. Chota K Prasad takes care of editing, while Brahma Kadali is the production designer. Chintha Srinivas is the writer.


Hai Lesso will have its theatrical release in all south Indian languages- Telugu, Tamil, Kannada, and Malayalam languages.


Cast : Sudheer Anand, Shivaji, Natasha Singh, Naksha Saran, Akshara Gowda, Motta Rajendran, Getup Srinu, Bevara Duhitha Saranya, and others.


Technical Crew:


Banner: Vajra Varahi Cinemas

Producers: Siva Cherry - Ravikiran

Director: Prasanna Kumar Kota

Music Director: Anudeep Dev

DOP: Sujatha Siddarth

Editor: Chota K Prasad

Production Designer: Brahma Kadali

Lyrics: Ramajogaiah Sastry

Writer: Chintha Srinivas

Costume Designer: Ranjitha Guvvala

Choreographer: Vijay Polaki

Stunts: Prudhvi

Line Producer: Uday Nandipati

Marketing: Manoj Valluri (Haashtag Media)

Publicity Designer: Dhani Aley

PRO: Yuvraaj

The RajaSaab Trailer: Prabhas Starrer Horror Fantasy Drama is a Visual Spectacle Blended with Laughter, Drama & Emotions

 The RajaSaab Trailer: Prabhas Starrer Horror Fantasy Drama is a Visual Spectacle Blended with Laughter, Drama & Emotions


Rebel Star Prabhas Returns to Big Screens with The RajaSaab: Trailer Unveiled, Fans in Frenzy


The much-awaited trailer is out, with the film set to release on Jan 9 , 2026


The much-awaited trailer of Rebel Star Prabhas’ Pan-India spectacle The RajaSaab has finally been unveiled, sending fans into a frenzy across the country. Blending supernatural chills with laughter, drama, and heartfelt emotions, the trailer promises an entertainer mounted on a scale rarely seen in Indian cinema.


Touted  as India’s biggest horror fantasy drama, The RajaSaab raises the bar with its sheer scale and grandeur. The film boasts the largest horror set ever built in India, spread across acres and crafted with intricate detail to create an eerie, immersive world. Beyond its haunting spectacle, the film strikes an emotional chord, touching upon themes of love, family, and ancestral legacy—making it both larger-than-life and deeply relatable.


The trailer also marks Prabhas’ return to the big screens after delivering the massive blockbuster Kalki 2898 AD (₹1,200 Cr), and fans are eagerly waiting to see the Rebel Star in a fresh avatar combining charm, heroism, and supernatural intrigue.


In a bold move, the makers have released a 3-minute-plus trailer nearly three months before release, reflecting their confidence in the film’s magnitude. The launch itself was celebrated with mass screenings across 105 theatres in Andhra Pradesh and Telangana, where packed houses of fans cheered and whistled, turning the unveiling into a festive celebration. The trailer simultaneously went live on People Media Factory’s digital platforms, extending the excitement to fans across the globe.


Director Maruthi on The RajaSaab trailer launch:


"With The RajaSaab, we wanted to create a world that’s grand, emotional, and entertaining in every sense. The trailer is just a glimpse of the scale and heart we’ve put into this film. Prabhas garu has brought unmatched energy and charm to the role, and I can’t wait for audiences to experience it on the big screen. Finishing the intro song recently was a special moment for me—whether you take it as a note of love for our darling superstar or the song’s title, the emotion behind it is straight from the heart."


TG Vishwa Prasad, People Media Factory, on the film:


"From building India’s largest horror set to assembling a stellar cast led by Rebel Star Prabhas, our aim has always been to deliver an unforgettable Pan-India spectacle. The overwhelming response to the trailer, both online and in theatres, has strengthened our belief that the film will strike a chord with audiences everywhere. This is just the beginning of the celebration."


Starring Rebel Star Prabhas alongside Sanjay Dutt, Boman Irani, Zarina Wahab, Malavika Mohanan, Nidhhi Agerwal, and Riddhi Kumar, the film promises powerhouse performances in a supernatural setting. Produced by TG Vishwa Prasad and Krithi Prasad under the banner of People Media Factory, The RajaSaab will release in Telugu, Hindi, Tamil, Kannada, and Malayalam. With music by Thaman S and visuals of unprecedented scale, the film blends fantasy, horror, humor, and emotions with Prabhas’ unmatched charisma at its core.


The film set to release on jan 9 , 2026



LINK:  https://www.youtube.com/watch?v=B5fc60iRv2M

ரெபெல் ஸ்டார் பிரபாஸ் நடிப்பில், ஹாரர் ஃபேண்டஸி டிராமா – தி ராஜா சாப் டிரெய்லர், கண்களுக்கு அசத்தலான காட்சி விருந்தாக நகைச்சுவை, டிராமா, உணர்வுகளுடன் ரசிகர்களை ஈர்க்கிறது !!

 ரெபெல் ஸ்டார் பிரபாஸ் நடிப்பில்,  ஹாரர் ஃபேண்டஸி டிராமா – தி ராஜா சாப் டிரெய்லர், கண்களுக்கு அசத்தலான காட்சி விருந்தாக நகைச்சுவை, டிராமா, உணர்வுகளுடன் ரசிகர்களை ஈர்க்கிறது !!



இந்தியாவின் மிகப்பெரிய ஹாரர்-ஃபேண்டஸி திரைப்படம் தி ராஜா சாப் – டிரெய்லர் வெளியானது !!


ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட டிரெய்லர் வெளியாகியுள்ளது, படம்  ஜனவரி 9 , 2026 அன்று திரைக்கு வர உள்ளது


ரெபெல் ஸ்டார் பிரபாஸ் நடித்த பான்-இந்திய பிரம்மாண்ட திரைப்ப்படமான “தி ராஜா சாப்” படத்தின் டிரெய்லர் இறுதியாக வெளியானது. இது ரசிகர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமானுஷ்ய திகில், நகைச்சுவை, டிராமா மற்றும் உணர்வுகளை கலந்து, இந்திய திரையுலகில் அரிதாகக் நிகழும் கலக்கலான எண்டர்டெய்ன்மெண்ட் படைப்பாக இப்படம் இருக்குமென்பதை  டிரெய்லர் உறுதி செய்கிறது.


இந்தியாவின் மிகப்பெரிய ஹாரர்-ஃபேண்டஸி டிராமாவாகக் கருதப்படும் இந்த படம், பெரும் பிரம்மாண்டத்தால் மட்டுமல்லாமல், உணர்ச்சிகரமான கதையினாலும் மனதைத் தொடுகிறது. காதல், குடும்பம், மரபு போன்ற உணர்வுகளால் மனதை தொடும் இந்த கதை, பெரும் கனவுலகப் பிம்பங்களுடன் பார்வையாளர்களின் உள்ளங்களையும் கவரவிருக்கிறது.


₹1,200 கோடி வசூலித்த கல்கி 2898 AD வெற்றிக்குப் பிறகு, பிரபாஸ் புதிய வேடத்தில் திரைக்கு வரும் இந்தப் படத்தின் மீது  குறித்து ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.


படக்குழு மூன்று நிமிடத்திற்கும் அதிகமான டிரெய்லரை, படத்தின் வெளியீட்டிற்கு மூன்று மாதங்களுக்கு முன்பே வெளியிட்டிருப்பது, படத்தின் மீதான அவர்களின் நம்பிக்கையை வெளிப்படுத்துகிறது. ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் 105 தியேட்டர்களில் டிரெய்லர்  மாஸ் ஸ்கிரீனிங்ஸ் செய்யப்பட்டுள்ளது. ரசிகர்கள் ஆரவாரம், விசில் முழக்கங்களுடன் திரையரங்குகளை திருவிழாவாக மாற்றினர். அதேசமயம், பீப்பிள் மீடியா ஃபேக்டரியின் People Media Factory’ன் டிஜிட்டல் தளங்களிலும் டிரெய்லர் வெளியிடப்பட்டது, உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் கொண்டாடும் வகையில் அமைந்தது.


படம்  குறித்து இயக்குநர் மாருதி கூறியதாவது:


“தி ராஜா சாப் மூலம் பெரும் உலகம், உணர்ச்சி, எண்டர்டெய்ன்மென்ட் என அனைத்தையும் ஒருங்கிணைக்கவேண்டுமென விரும்பினோம். டிரெய்லர் என்பது அந்த அளவின் ஒரு சிறு முன்னோட்டமே. பிரபாஸ் அவர்கள் தனது திரை ஆளுமையாலும், தனித்துவ நடிப்புத் திறமையாலும் வேடத்தை சிறப்பாகக் கொண்டுசென்றுள்ளார். சமீபத்தில் முடிந்த இன்ட்ரோ பாடல் எனக்குப் பெரும் அனுபவமாக இருந்தது – அதை  நீங்கள் டார்லிங் ரெபெல் ஸ்டாருக்கான அன்பாகக் கருதினாலும், டைட்டில் பாடலாக கருதினாலும்  அது எங்கள் இதயத்திலிருந்து உருவாகி வந்தது.”


தயாரிப்பாளர் டி.ஜி. விஸ்வ பிரசாத் (People Media Factory) கூறியதாவது..,

 

“இந்தியாவின் மிகப்பெரிய ஹாரர் செட் உருவாக்கியதிலிருந்து, ரெபல் ஸ்டார் பிரபாஸை முன்னணியில் வைத்து சக்திவாய்ந்த நடிகர் பட்டாளத்தை அமைத்தது வரை, எங்கள் குறிக்கோள் மறக்க முடியாத பான்-இந்திய அனுபவத்தை தர வேண்டும் என்பதே. டிரெய்லருக்கான ரசிகர்களின் பெரும் வரவேற்பு, எங்கள் நம்பிக்கையை மேலும் உறுதிப்படுத்தியிருக்கிறது. இது கொண்டாட்டத்தின் தொடக்கம் மட்டுமே.”


பிரபாஸ் உடன் சஞ்சய் தத், பூமன் இரானி, சரினா வாஹாப், மாளவிகா மோகனன், நித்தி அகர்வால், ரித்தி குமார் உள்ளிட்ட பலர்  இணைந்து நடித்துள்ள இந்த படம், சக்திவாய்ந்த நடிப்புத் திறமைகளோடும் அமானுஷ்ய உலகின் களத்தோடும் திரைக்கு வருகிறது. பீப்பிள் மீடியா ஃபேக்டரி People Media Factory நிறுவனத்தின் டி.ஜி. விஸ்வ பிரசாத் மற்றும் கிருத்தி பிரசாத் தயாரித்துள்ள இப்படம், தெலுங்கு, இந்தி, தமிழ், கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது. தமன் எஸ் இசையமைத்து, பிரம்மாண்ட காட்சிகளுடன், ஹாரர், ஃபாண்டஸி, நகைச்சுவை, உணர்ச்சி என அனைத்தையும் இணைக்கும் இந்தப் படம்,  ரசிகர்கள் ஆராதிக்கும் பிரபாஸின் தனித்துவமான திரை ஆளுமையை அசத்தலாக வெளிப்படுத்தும் வகையில் உருவாகியுள்ளது.


ஜனவரி 9 , 2026 அன்று திரைக்கு வர உள்ளது

Yusuf Bhai Brings the Art of Bespoke Fragrance to Chennai

 Yusuf Bhai Brings the Art of Bespoke Fragrance to Chennai 



Chennai, September 27, 2025: Yusuf Bhai has opened his first boutique in Chennai, unveiling a space in Nungambakkam where fragrance is treated not as a product, but as a deeply personal experience.


At Yusuf Bhai, every perfume is created with the wearer at its heart. Clients can design bespoke fragrances by choosing their preferred combinations of notes, inspirations, or even memories they wish to capture. This personalization lies at the core of the brand’s philosophy, making each fragrance unique to the individual. Alongside its custom offerings, the boutique also presents an exclusive in-house collection, crafted to be timeless, versatile, and memorable.


Guiding this vision is Dr. Yusuf Madappan, Chief Visionary Officer (CVO), whose journey with scent began in a coastal town, surrounded by the evocative aromas of the sea and everyday life. Over time, he has transformed that instinctive connection with fragrance into an art form, one that blends authenticity and creativity into every Yusuf Bhai creation.

Speaking on the launch, Dr. Yusuf Madappan, said:

“Chennai has always held a special place in my heart. It is a city of culture, tradition, and diversity, where every street has its own color, character, and scent. Bringing Yusuf Bhai here feels natural, almost like a homecoming. Our vision is to offer Chennaiites the chance to experience fragrance as something deeply personal, created just for them.”


Abdul Jalal Madappen, Founder & Chairman, and Subair Madappan, CEO, have been instrumental in shaping Yusuf Bhai’s identity and growth. Abdul Jalal’s entrepreneurial vision and deep understanding of the fragrance industry have guided the brand’s expansion from its beginnings to an international presence, while Subair, as both a leader and perfumer, drives its creative and strategic growth. Together, their leadership ensures that Yusuf Bhai continues to blend artistry, innovation, and excellence in every fragrance.


Abdul Jalal Madappen, Founder & Chairman, shared:

“From the very beginning, our mission has been to create a brand that merges authenticity with innovation. Seeing Yusuf Bhai expand from a single store into an international fragrance house has been both humbling and inspiring.”


Subair Madappan, CEO, commented:

“Our entry into Chennai marks an important milestone in Yusuf Bhai’s journey. It reflects our commitment to bringing the brand experience to new audiences while preserving the artistry and individuality that define us.”

 

 

 

 

With its Chennai debut, Yusuf Bhai invites the city to experience perfumery as an intimate form of self-expression, where each bottle reflects individuality and imagination. Having grown into an established brand with boutiques across the UAE and one in Hyderabad, Yusuf Bhai brings its signature fragrances and expertise to the city.

The Yusuf Bhai Chennai boutique is located at 3, 312, Gee Gee Emerald Towers, G 2, Valluvar Kottam High Road, Seetha Nagar, Nungambakkam, Chennai, Tamil Nadu 600034. The brand’s creations are also available online at www.yusufbhaifragrances.in

ரைட்’ திரைப்பட விமர்சனம்

ரைட்’ திரைப்பட விமர்சனம் 


  Casting : Natty Subramaniam, Arun Pandian, Akshara Reddy, Munnar Ramesh, Vinodhini Vaidynathan, Aditya Shivakumar, Yuvina Parthavi

Directed By : Subramanian RameshKumar

Music By : Guna Balasubramanian

Produced By : RTS Film Factory - Thirumal Lakshmanan & T. Siyamala

 

போலீஸ் இன்ஸ்பெக்டரான நாயகன் நட்டி, பிரதமர் பாதுகாப்பிற்காக சென்ற  நிலையில், அவரது காவல் நிலையத்தை மர்ம நபர் ஒருவர், எங்கோ இருந்து தொழில்நுட்ப ரீதியாக தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதோடு, காவல் நிலையம் மற்றும் அதனை சுற்றி வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாகவும், காவல் நிலையத்தில் இருப்பவர்கள் வெளியே சென்றால் அந்த வெடிகுண்டுகள் தானாகவே வெடிக்கும் என்றும் மிரட்டுகிறார்.  தன் மகன் காணவில்லை என்று புகார் அளிக்க வந்த அருண் பாண்டியன், திருமண அழைப்பிதழ் கொடுக்க வந்த பெண் சப்-இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட சில காவலர்கள், இரண்டு கைதிகள் காவல் நிலையத்திற்குள் சிக்கிக் கொள்கிறார்கள். பிரதமர் நிகழ்ச்சி நடக்கும் போது விசயம் கசிந்தால் பதற்றம் அடிகரிக்கும் என்பதால், வெளியே  தெரியாத வகையில், பிரச்சனையை சமாளிக்க காவல்துறை முயற்சிக்க, மர்ம நபர் தனது தேவையை தெரியப்படுத்துகிறார். அது என்ன ?, அவர் யார் ? என்பதை காவல்துறை கண்டுபிடித்து, காவல் நிலையத்தில் சிக்கியிருப்பவர்களை மீட்டதா? இல்லையா ? என்பதே ‘ரைட்’ கதை.

 

கதையின் நாயகன் என்ற அடையாளம் இருந்தாலும், ஒரு கதாபாத்திரமாக கதைக்கு ஏற்ப நட்டி நடித்திருக்கிறார். படம் முழுவதும் அவர் இடம்பெறவில்லை என்றாலும், படத்தின் இறுதிக்காட்சியின் போது திடீரென்று எண்ட்ரி கொடுத்து, அனைத்து முடிச்சுகளையும் அவிழ்த்து தன்னை கதையின் நாயகனாக நிலைநிறுத்திக் கொள்கிறார்.

 

முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அருண் பாண்டியன், மகன் காணவில்லை என்ற பரிதவிப்பையும், அவருக்கு என்ன ஆனது என்ற கவலையையும் தன் நடிப்பில் நேர்த்தியாக வெளிப்படுத்தியிருக்கிறார். மகன் பற்றிய புகாரை சரியாக விசாரிக்காத காவலர்கள் மீது கோபம் கொள்வதும், வெடிகுண்டு வைக்கப்பட்ட காவல் நிலையத்தில் சிக்கிக்கொள்வதும், திடீரென்று அவர் மீது எழும் சந்தேகம் என்று திரைக்கதைக்கு பெரும் பலம் சேர்த்திருக்கிறார்.

 

பெண் சப் இன்ஸ்பெக்டர் வேடத்தில் நடித்திருக்கும் அக்‌ஷரா ரெட்டி, சூழ்நிலையை புரிந்துக்கொண்டு செயல்படுவது, பிரச்சனையை சமாளிக்க முயற்சிப்பது என்று அசல் காவல்துறை அதிகாரி போல் அதிரடியாக நடித்து அசத்தியிருக்கிறார்.

 

கான்ஸ்டபிளாக நடித்திருக்கும் மூணார் ரவி, எதார்த்தமான நடிப்பின் மூலம் பலம் வாய்ந்த கதாபாத்திரத்தை சர்வசாதாரணமாக கையாண்டிருக்கிறார். குறிப்பாக வெடிகுண்டுக்கு அடியில் உட்கார்ந்து படத்தின் இறுதி வரை உட்கார்ந்தபடியே தன்னுள் இருக்கும் பீதியையும், பதற்றத்தையும் சிறப்பாக வெளிப்படுத்தி பாராட்டு பெறுகிறார்.  

நீதிபதியாக நடித்திருக்கும் வினோதினி, இளம் ஜோடியாக நடித்திருக்கும் ஆதித்யா சிவகுமார் மற்றும் யுவினா, கைதியாக நடித்திருக்கும் தங்கதுரை, பெண் காவலராக நடித்திருக்கும் நடிகை என அனைவரும் கதாபாத்திரங்களுக்கு பொருத்தமான தேர்வாக இருக்கிறார்கள். இசையமைப்பாளர் குணா பாலசுப்பிரமணியனின் இசையில் பாடல்கள் பெரிதாக எடுபடவில்லை என்றாலும், பின்னணி இசை காட்சிகளில் இருக்கும் பதற்றம், கதாபாத்திரங்களிடம் இருக்கும் பயம், திரைக்கதையின் வேகம் ஆகியவற்றுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாத வகையில் மிக கச்சிதமாக பயணித்திருக்கிறது.

 

முழுக்க முழுக்க காவல் நிலையத்தில் நடக்கும் கதை என்பதால், காவல் நிலையத்தை தனது வசதிக்கு ஏற்ப வடிவமைத்துக் கொண்டு படப்பிடிப்பு நடத்தியிருக்கும் ஒளிப்பதிவாளர் எம்.பத்மேஷ், ஒரே இடத்தில் கேமரா பயணிக்கும் உணர்வே ஏற்படாத வகையில் காட்சிகளை படமாக்கியிருக்கிறார். 

 

படத்தொகுப்பாளர் நாகூரான் ராமச்சந்திரன் மற்றும் கலை இயக்குநர் தாமு ஆகியோரது பணி படத்திற்கு பெரிதும் கைகொடுத்திருக்கிறது.

 

எழுதி இயக்கியிருக்கும் சுப்பிரமணியன் ரமேஷ்குமார், பெண்களுக்கு எதிராக நடக்கும் குற்றம் மற்றும் பழிவாங்கும் கதையை புதிய வடிவில் கொடுக்க முயற்சித்து அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார். குறிப்பாக காவல் நிலையத்தில் நடக்கும் கதையை எந்தவித தொய்வும் இன்றி விறுவிறுப்பாக நகர்த்தி செல்கிறார்.

 

கதையின் நாயகனாக நடித்திருக்கும் நட்டி, படத்தின் ஆரம்பத்தில் காவல் நிலையத்தில் எண்ட்ரி கொடுத்த சில நிமிடங்களிலேயே எக்ஸிட் ஆகிவிட, அதன் பிறகு தொடங்கும் கதைக்கும் அவருக்கும் சம்மந்தமே இல்லாத வகையில் திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கும் போதே, அவருக்கும் காவல் நிலையத்தில் நடக்கும் மர்ம சம்பவங்களுக்கும் ஏதோ தொடர்பு இருக்கிறது, என்று யூகித்து விட முடிகிறது. இருந்தாலும், அந்த யூகங்களை மறந்து படத்துடன் பார்வையாளர்கள் பயணிக்கும் வகையில், சில கதாபாத்திரங்கள் மற்றும் திருப்பங்களை புத்திசாலித்தனமாக கையாண்டு  படத்தை ரசிக்க வைத்து விடுகிறார் இயக்குநர் சுப்பிரமணியன் ரமேஷ்குமார்.

 

மொத்தத்தில், ‘ரைட்’ தேர்ச்சி பெறும். 

குற்றம் தவிர்’ திரைப்பட விமர்சனம்

 குற்றம் தவிர்’ திரைப்பட விமர்சனம்   


 Casting : Rishi Rithvik, Aradhya, Vinodhini Vaidhyanathan, P.Pandurangan, Saravanan, Sai Dheena, Kamaraj, Sendrayan

Directed By : M.Gajendran

Music By : Srikanth Deva

Produced By : Sri Sai Saindhavi Creation - P.Pandurangan   நாயகன் ரிஷி ரித்விக்கை அவரது அக்கா வினோதினி நன்றாக படிக்க வைத்து காவல்துரை அதிகாரியாக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார். ரிஷி ரித்விக்கும் அக்காவின் ஆசையை நிறைவேற்றுவதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். இதற்கிடையே, மருத்துவ மோசடி ஒன்றின் மூலம் ரிஷி ரித்விக்கின் அக்கா உயிரிழக்க, அதற்கு காரணமானவர்களை அழிக்க ரிஷி ரித்விக் களம் இறங்குகிறார். அதன் பிறகு என்ன நடந்தது?, அவரது அக்கா ஆசைப்பட்டது போல் அவர் காவல்துறை அதிகாரியானரா? இல்லையா ? என்பது தான் ‘குற்றம் தவிர்’ படத்தின் கதை. அட்டு’ படத்தில் லோக்கல் ரவுடி கதாபாத்திரத்தில் நடித்து கவனம் ஈர்த்த ரிஷி ரித்விக், இதில் காவல்துறை அதிகாரியாகும் முயற்சியில் ஈடுபடும் இளைஞர் கதாபாத்திரத்தில் நடித்து கவனம் ஈர்த்திருக்கிறார். அக்காவின் ஆசையை நிறைவேற்றுவத்ற்காக கடுமையாக உழைப்பவர், அக்காவின் நிலையை எண்ணி வருந்துவது, அவரது மரணத்திற்கு காரணமானவர்களை எதிர்த்து போராடுவது என்று அனைத்து ஏரியாவிலும் கச்சிதமாக நடித்திருப்பவர்,  காதல் மற்றும் நடனக் காட்சிகளிலும் அசத்தியிருக்கிறார்.

 

நாயகியாக நடித்திருக்கும் ஆராத்யா அழகாக இருக்கிறார். நடிப்பு, நடனம் என அனைத்திலும் நிறைவாக நடித்து பாராட்டு பெறுகிறார்.

 

நாயகனின் அக்காவாக நடித்திருக்கும் வினோதினி வைத்தியநாதன், தனது அனுபவமான நடிப்பு மூலம் தனது கதாபாத்திரத்திற்கு பலம் சேர்த்திருக்கிறார்.

 

வில்லனாக நடித்திருக்கும் சரவணன், அவரது உதவியாளராக நடித்திருக்கும் தயாரிப்பாளர் பாண்டுரங்கன், மருத்துவராக நடித்திருக்கும் ஆனந்த் பாபு, சாய் தீனா, காமராஜ், செண்ட்ராயன் என மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்களில் பலர் புதுமுகங்களாக இருந்தாலும் கதாபாத்திரத்திற்கு பொருத்தமான தேர்வாக இருகிறார்கள். 

 

ஸ்ரீகாந்த் தேவா இசையில் அனைத்து பாடல்களும் ஆட்டம் போட வைக்கிறது. பின்னணி இசை ஆக்‌ஷன் காட்சிகளில் இருக்கும் ஆக்ரோஷத்தை பல மடங்கு உயர்த்தியிருக்கிறது.

 

ஒளிப்பதிவாளர் ரோவின் பாஸ்கர், கமர்ஷியல் அம்சங்களோடு காட்சிகளை படமாக்கியிருக்கிறார். பாடல் காட்சிகளை கலர்புல்லாகவும், பார்வையாளர்களை கவர்ந்திழுக்கும் வகையிலும் காட்சிப்படுத்தியிருக்கிறார்.

 

மருத்துவ காப்பீட்டு திட்டம் மூலம் மருத்துவத்துறையில் நடக்கும் மோசடிகளை அம்பலப்படுத்தும் வகையில் பி.பாண்டுரங்கன் எழுதியிருக்கும் கதையை, கமர்ஷியல் ஆக்‌ஷன் படமாக இயக்குநர் எம்.கஜேந்திரன் இயக்கியிருக்கிறார்.

 

சஸ்பென்ஸ், காமெடி, காதல், ஆக்‌ஷன், திருப்பங்கள் என அனைத்து அம்சங்களையும் அளவாக பயன்படுத்தி  முழுமையான பொழுதுபோக்கு திரைப்படமாக கொடுத்திருக்கும் இயக்குநர் எம்.கஜேந்திரன், சில கதாபாத்திரங்களுக்கு கொடுத்திருக்கும் தேவையில்லாத பில்டப்புகளை தவிர்த்திருந்தால், படம் நிச்சயம் மிகப்பெரிய வெற்றி பெற்றிருக்கும்.

 

மொத்தத்தில், ‘குற்றம் தவிர்’ சிலவற்றை தவிர்த்திருந்தால் நிச்சயம் தவிர்க்க முடியாத படமாகியிருக்கும்.

Balti Review

 Balti Review Cast : Shane Nigam Shanthnu Selvaraghavan Alphonse Puthren Preethi Asrani CREW Director: Unni Sivalingam Producers: Santosh T. Kuruvilla & Binu George Alexander Co-producer - Sherin Rachel Santhosh Written By : Unni Sivalingam Banner: STK Frames Editor : Shivkumar V. Panicker Music: Sai Abhyankkar Dop : Alex J. Pulickal Art Director: Ashik S. Dialogues : T. D. Ramakrishnan Executive Producer: Sandeep Narayan Tamil Nadu Distribution : Future up & AGS Audio Label: Think Music Production Designer – Viyaaki / Vivaki, Antony Stephen PRO:Yuvraaj

பல்டி’ திரைப்பட விமர்சனம் 

கபடி விளையாட்டு வீரர்களான ஷேன் நிகம், சாந்தனு மற்றும் அவர்களது நண்பர்கள் விளையாட்டு மூலம் வாழ்க்கையில் முன்னேற நினைக்கிறார்கள். ஆனால், அவர்களுக்கு பண ஆசைக்காட்டி தன் பக்கம் இழுக்கும் கந்து வட்டி மாஃபியா செல்வராகவன், கபடி களத்தை மறக்கடித்து, தனது கந்து வட்டி களத்தில் பயணிக்க வைக்கிறார். இதனால், நண்பர்களின் வாழ்க்கை திசை மாறி பல்வேறு சிக்கல்களை எதிர்கொள்ள, அதில் இருந்து மீண்டார்களா ? இல்லையா ? என்பதை ஆக்‌ஷன் பாணியில் சொல்வதே ‘பல்டி’

 

நாயகனாக நடித்திருக்கும் ஷேன் நிகம், கபடி வீரருக்கான அத்தனை உடல்மொழியையும் அசால்டாக வெளிப்படுத்தி நடித்திருக்கிறார். சூழ்நிலைக்கு ஏற்ப தனது நடிப்பில் வித்தியாசத்தை வெளிப்படுத்தும் ஷேன் நிகம், கபடி போட்டியிலும் சரி, சண்டைக்காட்சிகளிலும் சரி, வேகமாக செயல்பட்டு வியக்க வைக்கிறார். ஷேன் நிகமின் நண்பராக மற்றொரு நாயகனாக நடித்திருக்கும் சாந்தனு, அழுத்தமான கதாபாத்திரத்தில் அமர்க்களமாக நடித்து அசத்தியிருக்கிறார்.  நல்லவரா அல்லது கெட்டவரா என்று புரிந்துக்கொள்ள முடியாத கதாபாத்திறத்திற்கு தனது நடிப்பு மூலம் பலம் சேர்த்திருக்கிறார்.

 

வில்லனாக நடித்திருக்கும் இயக்குநர் செல்வராகவன், அன்பாக பேசி வில்லத்தனத்தை வெளிப்படுத்தும் விதம் படத்திற்கு கூடுதல் சிறப்பு சேர்த்திருக்கிறது.

 

மற்றொரு வில்லனாக நடித்திருக்கும் இயக்குநர் அல்போன்ஸ் புத்திரனின் திரை இருப்பு கவனம் ஈர்த்தாலும், அவருக்கான முக்கியத்தும் மிக குறைவாகவே உள்ளது.

 

நாயகியாக நடித்திருக்கும் ப்ரீத்தி அஸ்ரானி, கொடுத்த வேலையை நிறைவாக செய்திருக்கிறார்.

 

இசையமைப்பாளர் சாய் அபயங்கரின் பாடல்கள் இனிமையாக இருக்கிறது. பின்னணி இசை காட்சிகளுக்கு கூடுதல் வலிமை சேர்த்திருக்கிறது. குறிப்பாக ஆக்‌ஷன் காட்சிகளின் வேகத்திற்கு ஈடுகொடுக்கும் வகையில் பயணித்திருக்கும் பீஜியம்கள் கவனம் ஈர்க்கின்றன. அதே சமயம், அனிருத் இசையை கேட்டது போலவும் இருக்கிறது. ஒளிப்பதிவாளர் அலெக்ஸ் ஜெ.புலிக்கல் எத்தனை கேமராக்கள் பயன்படுத்தினார் என்பது தெரியவில்லை, ஆனால் காட்சிகளை மிரட்டலாக படமாக்கியிருக்கிறார். கபடி போட்டிகள் மற்றும் சண்டைக்காட்சிகளை படமாக்கிய விதம் பிரமிக்க வைக்கிறது.

 

படத்தொகுப்பாளர் சிவகுமார் வி.பனிக்கரின் கடின உழைப்பு திரையில் தெரிகிறது. காட்சிகளை தொகுத்த விதம் மிக கூர்மையாக இருந்தாலும், அதில் இருக்கும் உணர்வுகளை பார்வையாளர்களிடம் நேர்த்தியாக கடத்தியிருக்கிறார். செல்வராகவன் மீது அடி விழும் காட்சி உள்ளிட்ட பல காட்சிகளில் தனது கத்திரி மூலம் தனி கதை சொல்லியிருக்கும் படத்தொகுப்பாளர் தனது அசத்தலான கட் மூலம் சண்டைக்காட்சிகளை ரசிக்க வைத்தாலும், அதன் நீளத்தின் மூலம் சற்று சோர்வடைய செய்துவிடுவதையும் மறுக்க முடியாது.

 

எழுதி இயக்கியிருக்கும் உன்னி சிவலிங்கம், பல்வேறு திரைப்படங்களின் பாதிப்பாக இப்படத்தை இயக்கியிருந்தாலும், ஆரம்பம் முதல் முடிவு வரை வேகமாகவும், விறுவிறுப்பாகவும் படத்தை நகர்த்தி ரசிக்க வைத்து விடுகிறார்.

 

கந்து வட்டி மாஃபியாக்களுக்கு இடையிலான தொழில் போட்டி, அதில் சிக்கும் சில அப்பாவி இளைஞர்களின் சீரழியும் வாழ்க்கை, என்ற கதைக்கருவை வைத்துக்கொண்டு இயக்குநர் உன்னி சிவலிங்கம் அமைத்திருக்கும் திரைக்கதை, மற்றும் காட்சிகள் பார்வையாளர்களை படத்துடன் ஒன்றிவிட செய்கிறது. சண்டைக்காட்சிகளின் நீளம் சற்று தொய்வடைய செய்தாலும், சண்டைக்காட்சிகளில் பயன்படுத்தியிருக்கும் புதிய யுத்திகள் அந்த குறையை மறந்து ரசிக்க வைக்கிறது.  

வித்தியாசமாகவும், புதிதாகவும் எதுவும் இல்லை என்றாலும், கதாபாத்திரங்களை வடிவமைத்த விதம், காட்சிகள் மற்றும் திரைக்கதையை வேகமாக நகர்த்தி சென்றது என்று முழுமையான கமர்ஷியல் ஆக்‌ஷன் படத்தை கொடுத்திருக்கும் இயக்குநர் உன்னி சிவலிங்கம், கபடி அணிகளுக்கு பஞ்சமி, பொற்றாமரை என்று பெயர் வைத்ததோடு, உதயசூரியன் என்ற மலையாளப் பாடல் மூலமாக மறைமுகமாக அரசியல் பேசி அமர்களப்படுத்தியிருக்கிறார்.

 

மொத்தத்தில், ‘பல்டி’ சாம்பியன்ஸ். 

அறுவடை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி பரபரப்பு கிளப்பி உள்ளது.

 அறுவடை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி பரபரப்பு கிளப்பி உள்ளது.


'லாரா திரைப்படத்தின் 


தயாரிப்பாளர் இயக்குநர் அவதாரம் எடுக்கும் புதிய படம் 'அறுவடை' !


அண்மையில் வெளிவந்த 'லாரா' திரைப்படம் உருவாக்கப்பட்ட விதம் ஊடகங்களால்  பாராட்டப்பட்டது.பட்ஜெட் படங்களில் எதிர்பாராத வகையில் சிறு ஆச்சரியம் அளித்த படம் என்று பத்திரிகைகள் எழுதின.

 வணிக ரீதியாகவும் அந்த படம் வெற்றி பெற்றது.  வசூல் செய்ததால்தான் அதே தயாரிப்பாளர் அடுத்த படத்தைத் தொடங்குகிறார்.'அறுவடை' என்கிற பெயரில் புதிய படம் உருவாகிறது.


இப்படத்தில் 'லாரா' தயாரிப்பாளர் கார்த்திகேசன்  இயக்குநராக அவதாரம் எடுத்திருக்கிறார். அவர் தயாரித்து இயக்குவதுடன் படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்திலும் நடிக்கிறார். ஏற்கெனவே

'லாரா' படத்தில் ஒரு பாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


இந்தப் படத்தின் தொடக்க விழா அண்மையில் கோவையில் நடைபெற்றதுடன் படப்பிடிப்பும் தொடங்கிவிட்டது.


கோவை, கோபிசெட்டிபபாளையம், பவானி ,பொள்ளாச்சி, பகுதிகளில் முதல் கட்டப் படப்பிடிப்பு நடக்க உள்ளது.

'அறுவடை' திரைப்படத்தில் கதாநாயகியாக சிம்ரன் ராஜ் நடிக்கிறார். முக்கிய கதாபாத்திரத்தில் பருத்திவீரன் சரவணன் நடிக்கிறார் .மேலும் ராஜசிம்மன், கஜராஜ், அனுபராமி கவிதா, தீபா பாஸ்கர், நடிக்கிறார்கள்.

ஆனந்த் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றுகிறார். ரகு ஸ்ரவண் குமார் இசையமைக்கிறார். படத்தொகுப்பு கே .கே . விக்னேஷ், பாடல்கள் - கார்த்திக் நேத்தா, கார்த்திகேசன், கானா சக்தி, சண்டைப் பயிற்சி - TK , நடனம் - ஏ. எம். ஜே. முருகன் என்று புதியபடக் குழு உருவாக்கப்பட்டு படப்பிடிப்பு நடந்து வருகிறது.


'அறுவடை' முழுக்க முழுக்க கிராமத்துப் பின்னணியில் கிராமத்து மண்ணையும், மனிதர்களையும், அவர்களது வாழ்வியலையும், பல விதப்பட்ட மனிதஉணர்வுகளையும் பதிவு செய்யும் படமாக உருவாகி வருகிறது.

நாட்டார் கதையை அடிப்படையாக வைத்து உருவாக்கியிருக்கும் க்ரைம் த்ரில்லர் திரைப்படம் 'தி டார்க் ஹெவன்'

 நாட்டார் கதையை அடிப்படையாக வைத்து உருவாக்கியிருக்கும் க்ரைம் த்ரில்லர்  திரைப்படம் 'தி டார்க் ஹெவன்'



கதாநாயகன் நகுலை மாற்றியது ஏன்? -' தி டார்க் ஹெவன்: இயக்குநர் பாலாஜி பதில்!


 மக்களிடம் பரவியுள்ள தொன்மங்கள், இதிகாசங்கள்,பழைய மரபுக் கதைகள் போன்றவற்றை அடிப்படையாக வைத்து திரைப்படங்கள் வருவது ஹாலிவுட்டில் வழக்கமாகிவிட்ட ஒன்று. இப்போது இது இந்தியாவிலும் தொடங்கி தொடர்ந்து வருகிறது. மக்களிடம் நிலவும் நம்பிக்கைகள் திரை வடிவம் பெறும் போது அப்படைப்பு வழக்கமான வணிக முயற்சிகளில் இருந்து மாறுபட்டு வேறு ஒரு தோற்றம் கொள்கிறது.இவ்வகையில் வெளிவந்த காந்தாரா, கல்கி போன்ற படங்களின் வெற்றி மக்களின் ஆதரவுக்கு சாட்சியமாகியுள்ளது.

எனவே திரைத் துறையில் இந்த முயற்சியில் தொடர்ந்து ஈடுபடுகிறார்கள் .அப்படி தமிழ்நாட்டு நாட்டார் கதையை மையமாக வைத்து 'தி டார்க் ஹெவன்' என்கிற பெயரில் ஒரு படம் உருவாகி வருகிறது.


இப்படத்தையை 'டி3' படத்தை இயக்கிய பாலாஜி.இயக்கி வருகிறார்.


படத்தைப் பற்றி இயக்குநர் பாலாஜி பேசும்போது,


"என் முதல் படம் 'டி3 ' ஐ நானே இயக்கித் தயாரித்தேன். இரண்டாவது படமான இந்த 'தி டார்க் ஹெவன்' திரைப்படத்தையும்  நானே இயக்கித் தயாரிக்கிறேன்.

முதல் படத்தைப் போல இதிலும் ஆங்கிலத் தலைப்பு உள்ளதே என்று சிலர் கேட்கக்கூடும். இதற்குப் பொருத்தமாகத் தோன்றியதால் வைத்திருக்கிறேன். மற்றபடி ஆங்கிலத்தில் தான் வைக்க வேண்டும் என்கிற எந்த உள்நோக்கமும் கிடையாது.இது ஒரு க்ரைம் திரில்லர் ரகத்திலான படமாக உருவாகி வருகிறது.அதற்குப் பொருத்தமாக இருக்கும் என்றுதான் இந்தத் தலைப்பை வைத்தேன். அதை ஒரு நாட்டார் கதையை மையப்படுத்தி உருவாக்கிவருகிறேன்.

இது போலீஸ் பற்றிய கதையாக இருக்கிறது.

இந்தப் படம் ஒரு கிராமத்தில் நடக்கும் தொடர் கொலைகளை விசாரிக்கும் ஒரு போலீஸ்காரரைப் பற்றியதாக உள்ளது.அந்த ஊரில் சில ஆண்கள் குறிப்பிட்ட சீரான கால இடைவெளியில் அதாவது ஏழாண்டுகளுக்கு ஒரு முறை மர்மமான முறையில் இறக்கிறார்கள். இந்த மரணத்திற்குப் பின்னால் உள்ள ரகசியங்களை காவல்துறையைச் சேர்ந்த கதாநாயகன் எப்படி வெளிக்கொண்டு வருகிறார் என்று கதை செல்கிறது.


போலீஸ் என்கிற போது அதுவும் க்ரைம் தில்லர் என்கிற போது கதையை சுவாரசியமாகவும் அடுத்து என்ன என்று யோசிக்கும் வகையிலும் பார்வையாளர்களின் கவனத்தைக் கட்டுக்குள் வைக்கும் படியான பரபரப்பைப் பராமரிக்க முடியும்.ஆக்சன் காட்சிகளுக்கும் இடம் கொடுக்க முடியும்.அந்த பாணி வணிகப்படத்திற்கு மிகவும் உதவிகரமாக இருக்கும்.அடுத்தது என்ன என்கிற ஆவலைத் தூண்டும் இவ்வகைப் படங்கள் எனக்குத் தனிப்பட்ட முறையிலும் பிடிக்கும். எனவே அப்படிப்பட்ட ஒரு படமாக இதை இயக்கி வருகிறேன். கோதை என்டர்டெயின்மென்ட் சார்பில் இந்தப் படத்தைத் தயாரிக்கிறேன்.


படம் முழுக்க மலைப்பகுதிகளில் நடப்பதால் குறைந்தபட்ச வசதிகள் கூட இல்லாமல் மூன்று நான்கு கிலோமீட்டர் நடந்து சென்று படப்பிடிப்பை நடத்த வேண்டும். .ஏற்காட்டில் உள்ள ஒரு பழைய சர்ச்சில் படமெடுத்திருக்கிறோம்.மேல்கரை என்றோர் மலைப்பகுதி இருக்கிறது. அங்கே கார் எதுவும் போகாது. 3 கிமீ  போல நடந்துதான் செல்ல வேண்டும். அங்கே சிரமப்பட்டு படம் எடுத்தோம்.படப்பிடிப்பிடங்கள் எல்லாமே சவாலாகத்தான் இருந்தன.


இந்தப் படத்தில் நாயகனாக நகுல் தேர்வு செய்யப்பட்டு சில நாட்கள் படபிடிப்பும் நடந்தது. ஆனால் தவிர்க்க முடியாத காரணங்களால்  தொடர முடியவில்லை.


நான் பதினாறு மணி நேரம் உழைக்கக் கூடியவன் .என் வேகத்திற்கு அவரால் வர முடியவில்லை. ஒரு படப்பிடிப்பில் கதாநாயகன் கட் சொல்வது அவ்வளவு சரியாக இருக்காது. ஆனால் அவர் சொன்னார் .இப்படி பல்வேறு அசௌகரியங்கள்  ஏற்பட்டன. நானே தயாரிப்பாளராக இருப்பதால் ஒரு கட்டத்தில் நான் ஒரு பாதுகாப்பின்மையை உணர்ந்தேன். எனவே 60% படப்பிடிப்பு முடிக்கப்பட்ட படத்துக்கு நான் கதாநாயகனை மாற்றினேன். அது ஒரு கண்மூடித்தனமான முடிவாக இருக்கலாம்.என் பட்ஜெட் எனக்கு அச்சமூட்டியது. ஆனால் எனக்கு வேறு வழியில்லை.மாற்ற வேண்டிய நிலைக்கு ஆளானேன். அதன் பிறகுதான்  'ராஜா ராணி 2'-ல் நடித்த சித்துவை  கதாநாயகன் ஆக்கி படப்பிடிப்பு நடந்து வருகிறது.என்னைப் பொறுத்தவரை கதாநாயகன் மாற்றியதைப் பற்றி நான் நினைப்பது ,அந்த இளம்பாரி என்கிற கதாபாத்திரம் எப்படி வரவேண்டும் என்பதைப் பற்றித்தான் உள்ளது. 

அதில் யார் நடித்தாலும் எப்படிப் பொருந்துவார்கள் என்பதை மட்டும் நான் பார்க்கிறேன்.

யார் நடித்தாலும் அந்தப் பாத்திரத்திற்கு எவ்வளவு நியாயம் செய்கிறார்கள் என்பதை மட்டும் பார்க்கிறேன்.


எனவே நாயகனை மாற்றியதால் எனக்கு எந்தப் பின்னடையும் கிடையாது.

பிக் பாஸ் தர்ஷிகா கதாநாயகியாக நடிக்கிறார்.வேலராமமூர்த்தி, ரித்திகா, அருள் ஜோதி, பிரதீப், ஜெயகுமார் ஜானகிராமன்,

அஜித் கோஷி போன்றவர்களும் நடிக்கிறார்கள். இதுவரை நகைச்சுவைப் பாத்திரங்களில் நடித்து வந்த சாப்ளின் பாலு  இதில் புதுவிதமான பாத்திரத்தில் நடிக்கிறார்.


தொழில்நுட்பக் கலைஞர்கள் என்று எடுத்துக் கொண்டால்

எனது முதல் படத்தில் பணியாற்றிய மணிகண்டன் பிகே இதிலும் ஒளிப்பதிவாளராகப் பணிபுரிகிறார். அதே போல் எடிட்டிங் ராஜா ஆறுமுகம்.இசையமைப்பாளராக :உடன்பால்' படத்தில் பணியாற்றிய சக்தி பாலாஜி பணிபுரிகிறார்.

 இன்னும் பத்து நாட்களே படப்பிடிப்பு பாக்கி உள்ளது. டிசம்பரில் வெளியிடும் வேகத்தில் பணியாற்றி வருகிறோம்" என்கிறார்.

பாண்டிச்சேரி முதல்வர் ரங்கசாமி, தக்‌ஷன் விஜய் நடிக்கும் "சினிமா கிறுக்கன்" படத்தை பூஜையோடு, தொடங்கி வைத்தார்.

 தக்‌ஷன் விஜய் நடிக்கும் புதிய படம், முதல்வர் முன்னிலையில் தொடங்கியது.



பாண்டிச்சேரி முதல்வர் ரங்கசாமி, தக்‌ஷன் விஜய் நடிக்கும் "சினிமா கிறுக்கன்" படத்தை பூஜையோடு, தொடங்கி வைத்தார்.


தக்‌ஷன் விஜய் முதன்முதலாக கதை, திரைக்கதை, வசனம் எழுதி, நடிக்கிறார்.


மகிழ் புரொடக்சன்ஸ் சார்பில், சி.பியூலா தயாரிப்பில், தக்‌ஷன் விஜய் எழுத்தில் உருவாகும் "சினிமா கிறுக்கன்" படத்தை, சமூக விரோதி, பொதுநலன் கருதி ஆகிய படங்களை இயக்கிய சீயோன் ராஜா இயக்குகிறார்.


கதாநாயகன் தக்‌ஷன் விஜயின் அப்பாவாக பிரபல இயக்குனர் ஜி.ம்.குமார் நடிக்கிறார். அம்மாவாக தனுஷின் அம்மாவாக கர்ணன் படத்தில் நடித்த வாழை ஜானகி நடிக்கிறார். விஜய் டிவி அமுதவாணன், லொள்ளுசபா ஜீவா, சாகிதா சுகன்யா, விதுஷ்னியா, கஞ்சா கருப்பு, இமான் அண்ணாச்சி மற்றும் பலர் நடிக்கிறார்கள்.


கதை, திரைக்கதை, வசனத்தை தக்‌ஷன் விஜய் எழுதுகிறார். இயக்கம் சீயோன் ராஜா. ஒளிப்பதிவு வினு பெருமாள், இசை ஷ்யாம், மக்கள் தொடர்பு கோவிந்தராஜ், தயாரிப்பு சி.பியூலா.


தக்‌ஷன் விஜய் இந்தப் படத்திற்காக தாடி வளர்த்து, புதிய தோற்றத்தில், புதிய பரிமாணத்தில் நடிக்கிறார்.


படப்பிடிப்பு பாண்டிச்சேரி மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் நடைபெறுகிறது.


மகிழ் புரொடக்சன்ஸ் சார்பில், சி.பியூலா பிரமாண்டமாக தயாரித்து வருகிறார்!


@GovindarajPro